மின்னணு முறையில் வரித்தாக்கல் செய்வோர் தங்கள் சுயவிவரங்களைப் புதுப்பிக்க வேண்டும் என்று
வருமான வரித்துறை ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த ஆணையம் நேற்று (22.09.2017) தெரிவித்துள்ளதாவது: ‘ஐ.டி.ஆர்.எஸ். மற்றும் ஐ.டி. போன்றவற்றை ஆன்லைனில் வரித்தாக்கல் செய்பவர்கள் தங்களுடைய சுயவிவரங்கள் மற்றும் முக்கிய விவரங்களைப் புதுப்பிக்க வேண்டும். இதனால் தொடர்பு வசதியை எளிதாக்கலாம். இதன்படி அனைவரும் தங்களுடைய முதன்மை அல்லது, இரண்டாம் நிலை மின்னஞ்சல் முகவரி, செல்போன் எண், முகவரி, வங்கிக் கணக்கு எண் போன்ற தகவல்களை தங்களுடைய சுயவிவரங்களில் அளிக்க வேண்டும். இந்தத் தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்ட பின்பு வரி செலுத்துவோருக்கு ஒருமுறை மட்டுமே செயல்படும் கடவு எண் (ஓ.டி.பி.) அவர்கள் அளித்த மின்னஞ்சல் மற்றும் மொபைல் எண்ணுக்குக் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். அதைக்கொண்டு அவர்கள் புதிய கடவு எண்ணை உருவாக்கிக் கொள்ளலாம்.’
எந்தவிதமான தொழில் செய்பவர்களும் தங்களுடைய மின்னணு தாக்கல் கணக்கைப் புதுப்பித்த பிறகே பயன்படுத்த முடியும் என்று வருமான வரித்துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். வரிச் செலுத்துவோர் மின்னணு தாக்கல் கணக்கைப் புதுப்பிக்கவும், இயக்கவும் e-Filing என்ற இணையப் பக்கத்தை அணுகலாம்.
வருமான வரித்துறை ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த ஆணையம் நேற்று (22.09.2017) தெரிவித்துள்ளதாவது: ‘ஐ.டி.ஆர்.எஸ். மற்றும் ஐ.டி. போன்றவற்றை ஆன்லைனில் வரித்தாக்கல் செய்பவர்கள் தங்களுடைய சுயவிவரங்கள் மற்றும் முக்கிய விவரங்களைப் புதுப்பிக்க வேண்டும். இதனால் தொடர்பு வசதியை எளிதாக்கலாம். இதன்படி அனைவரும் தங்களுடைய முதன்மை அல்லது, இரண்டாம் நிலை மின்னஞ்சல் முகவரி, செல்போன் எண், முகவரி, வங்கிக் கணக்கு எண் போன்ற தகவல்களை தங்களுடைய சுயவிவரங்களில் அளிக்க வேண்டும். இந்தத் தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்ட பின்பு வரி செலுத்துவோருக்கு ஒருமுறை மட்டுமே செயல்படும் கடவு எண் (ஓ.டி.பி.) அவர்கள் அளித்த மின்னஞ்சல் மற்றும் மொபைல் எண்ணுக்குக் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். அதைக்கொண்டு அவர்கள் புதிய கடவு எண்ணை உருவாக்கிக் கொள்ளலாம்.’
எந்தவிதமான தொழில் செய்பவர்களும் தங்களுடைய மின்னணு தாக்கல் கணக்கைப் புதுப்பித்த பிறகே பயன்படுத்த முடியும் என்று வருமான வரித்துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். வரிச் செலுத்துவோர் மின்னணு தாக்கல் கணக்கைப் புதுப்பிக்கவும், இயக்கவும் e-Filing என்ற இணையப் பக்கத்தை அணுகலாம்.