யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

24/9/17

ஆசிரியர் போராட்டத்தின்போது நீதிபதியை விமர்சித்த அரசு ஊழியருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்!!!

ஆசிரியர் போராட்டத்தின்போது நீதிபதியை விமர்சித்த அரசு ஊழியர் முருகனை 15 நாள்
நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ சார்பில் தமிழகம் முழுவதும் வேலை நிறுத்தப்போராட்டம் நடந்தது.


இதற்கு கண்டனம் சென்னை ஹைகோர்ட் நீதிபதி கண்டனம் தெரிவித்து போராட்டக்காரர்களுக்கு சரமாரி கேள்விகளை முன்வைத்தார். கடந்த 14-ஆம் தேதி நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்தின் போது நீதிபதியை ஊழியர் பாளை பெருமாள்புரம் அரசு வாகனங்கள் பழுது பார்க்கும் பணிமனையில் பணியாற்றும் திருமால் நகரைச் சேர்ந்த முருகன்(47) அவதூறாக பேசினார்.



இதைத் தொடர்ந்து அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸார் அவரை கைது செய்தனர். இந்நிலையில் நெல்லை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முருகனுக்கு 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து அவர் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக