யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

24/9/17

போலி செய்திகளுக்கு எதிராக ஃபேஸ்புக்!!!

சமூக வலைதளங்களில் வலம்வரும் போலி செய்திகளைக் கட்டுப்படுத்தும் விதமான 
பிரசாரத்தை ஃபேஸ்புக் தொடங்கியுள்ளது.

உலகளவில் ஃபேஸ்புக் பயனாளர்கள் அதிகமுள்ள நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. இதுபோல் ஃபேஸ்புக் நிறுவனத்தின் அங்கமான வாட்ஸ்அப் பயன்பாட்டிலும் இந்தியா முதலிடத்தில் உள்ளது. தினமும் கோடிக்கணக்கான மக்கள் இந்த வலைதளங்களைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், சமீப காலமாக ஃபேஸ்புக்கில் அதிகளவு போலி செய்தி பகிரப்பட்டு வருகிறது. இதனால் போலி செய்தி பரப்பப்படுவதற்கான ஊடகமாக ஃபேஸ்புக் உள்ளது என்று பல்வேறு தரப்பினரும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

எனவே, போலி செய்திகளைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஃபேஸ்புக் இறங்கியுள்ளது. போலி செய்திகளைக் கண்டுபிடிப்பதற்கான 10 வழிகளை பயனாளர்களுக்கு அது வழங்கியுள்ளது. இது தொடர்பாக முக்கிய செய்தித்தாள்களில் விளம்பரமும் அளித்துள்ளது. அந்த விளம்பரத்தில், ‘நாம் ஒன்றாக இருப்பதன் மூலம் தவறான செய்தி பரவுவதைக் குறைக்க முடியும்’ என்ற வாசகத்தைப் பயன்படுத்தியுள்ளது.

மேலும், ‘செய்திகளின் தலைப்புகளைச் சந்தேகியுங்கள். இணையப்பக்கத்தின் யு.ஆர்.எல்லைக் கவனியுங்கள். செய்தியின் உண்மைத் தன்மையை ஆராயுங்கள். செய்திக்கும் புகைப்படத்துக்குத் தொடர்பு உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். நம்பகமான செய்தியாக இருந்தால் மட்டும் சமூக வலைதளத்தில் பகிருங்கள்’ என்றும் ஃபேஸ்புக் தனது பயனாளர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக