யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

4/12/15

வண்டலூர் பூங்காவில் பாதிப்பு! வன விலங்குகளால் தொடரும் அச்சம்:

வண்டலூர் பூங்காவில் பாதிப்பு! வன விலங்குகளால் தொடரும் அச்சம்:
சென்னை, வண்டலுார் உயிரியல் பூங்காவில், உடைந்த சுற்றுச்சுவர்களை சரிசெய்யும் பணி பலத்த மழையால் தடைபட்டுள்ளது. அதனால், பாதுகாப்பு கருதி, வனத்துறையினர் ரோந்து பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். 
காஞ்சிபுரம் மாவட்டம், வண்டலுார், அறிஞர் அண்ணா உயிரியல் 
 அந்த பூங்காவின் அமைப்பிடங்களுக்குள், 2,000க்கும் மேற்பட்ட விலங்குகளும், அதைச் சுற்றியுள்ள காப்புக்காட்டு பகுதியில் மான், நரி போன்ற சுதந்திரமாக சுற்றித் திரியும் உயிரினங்களும் வாழ்வதால், அதிகாரிகள் கலக்கம் அடைந்தனர். இதனால், சென்னையில் இருந்து வனத்துறையின் உயர் அதிகாரிகள், போக்குவரத்து தடைகளையும் மீறி அங்கு விரைந்தனர்.
பூங்காவில், வெள்ள நீரின் அளவு அதிகரித்தபடியே இருந்ததை காரணம் காட்டி, பூங்காவுக்கு, நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதைப் பயன்படுத்தி, சுற்றுச்சுவரை சரி செய்ய ஊழியர்கள் முயன்றனர். ஆனால், மழை இடையூறு செய்ததால் அப்பணியை மேற்கொள்ள இயலவில்லை. அதனால், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, உயிரியல் பூங்கா மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில், வனத்துறையினர் ரோந்து பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக