யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

4/12/15

சென்னை மழைக்கு பூமி வெப்பம் அடைந்ததே காரணம்: பாரீஸ் மாநாட்டில் நிபுணர்கள் தகவல்:

சென்னை மழைக்கு பூமி வெப்பம் அடைந்ததே காரணம்: பாரீஸ் மாநாட்டில் நிபுணர்கள் தகவல்:
சென்னையில் கடந்த மாதம் தொடர்ந்து 10 நாட்கள் பலத்த மழை கொட்டியது. கடந்த 2 நாட்களாகவும் இதேபோல் சென்னையில் பலத்த பெய்து வருகிறது.
வரலாறு காணாத இந்த மழைக்கு பூமி வெப்பம் அடைந்து வருவதே காரணம் என்று பாரீசில் நடந்து வரும் பருவநிலை மாற்றம் குறித்த உச்சி மாநாட்டில் நிபுணர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
இந்த மாநாட்டில் கலந்துகொண்ட டெல்லி அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் துணை தலைமை இயக்குனர் சந்திரபூஷண் கூறுகையில், சென்னை நகரில் பெய்து வரும் இடைவிடாத பலத்த மழைக்கு இந்த பூமி வெப்பமயமாகி வருவதுதான் காரணம். இத்தனைக்கும் பூமியில் ஒரு செல்சியசுக்கும் குறைவான அளவு வெப்பமே அதிகரித்து இருக்கிறது. அதற்கே இந்த மழை என்றால் 2 செல்சியஸ் வெப்பம் அதிகரித்தால் என்ன நடக்கும் என்பதை சிந்தித்து பாருங்கள்என்றார்.
ஆக்ஷன் எய்ட் அமைப்பின் ஹர்ஜித்சிங் கூறும்போது, “காஷ்மீர் முதல் உத்தரகாண்ட் வரை கடந்த 5 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள நிலைமையை பார்க்கும்போது, இது நிச்சயமாக பூமியின் பருவநிலை மாற்றத்தால்தான் ஏற்பட்டது என்பதை தெளிவாக புரிந்துகொள்ள முடிகிறது என்று குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக