யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

17/8/16

இடமாறுதல் பெற்ற ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு கட்டுப்பாடு.

தொடக்கக்கல்வி ஆசிரியர்களில், ஒன்றியம் விட்டு ஒன்றியம் இடமாறுதல்பெற்றவர்களுக்கு, பணிமூப்பு ஊதிய உயர்வில் மாற்றம்கிடையாது என, அறிவிக்கப்பட்டு உள்ளது.அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு,

ஆக., 3 முதல், கவுன்சிலிங் மூலம்விருப்ப இடமாறுதல் வழங்கப்படுகிறது.

தொடக்கக்கல்வித் துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை என, தனித்தனியாக கவுன்சிலிங்நடக்கிறது. இதில், தொடக்கக் கல்வித்துறையில், எட்டாம்வகுப்பு வரை பணியாற்றும் ஆசிரியர்கள், விருப்ப இடமாறுதலில், ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாறினால், அவர்களுக்கு, பணிமூப்பு ஊதிய உயர்வு தனியாகபராமரிக்கப்படாது.


அதாவது, ஏற்கனவே எந்த ஒன்றியத்தில் பணியாற்றினார்களோ, அந்த ஒன்றியத்தில், மூத்தவர், இளையவர் என்ற அடிப்படையில்தான், ஊதிய முரண்பாடு இருக்கும். மாறாக, புதிதாக சேர்ந்தஒன்றியத்திலுள்ள மூத்தவர், இளையவர் பட்டியலை கணக்கிட்டு, அதன்படி, தமக்கு ஊதிய வேறுபாடுகளையப்பட வேண்டும் என, கேட்கக் கூடாதுஎன, தொடக்கக் கல்வி இயக்குனர் இளங்கோவன்உத்தரவிட்டு உள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக