யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

24/8/16

பள்ளிகளில் அமலாகிறது 'பயோ மெட்ரிக்' வருகை பதிவு

அரசு பள்ளிகளில், 'பயோ மெட்ரிக்' வருகைப்பதிவுதிட்டத்தை, தமிழக அரசு அறிமுகப்படுத்தஉள்ளது அரசு பள்ளி ஆசிரியர்களுக்குகிடுக்குப்பிடி போட முடிவு செய்துவிட்டதுதமிழக அரசு. அதற்கான அறிவிப்பையும் நேற்று  110 விதியின் கீழ் வெளியிட்டுள்ளார் முதல்வர்.தமிழகத்தில்ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசுஉதவிபெறும் பள்ளிகள் உள்ளன. தமிழகத்தில் பேருந்துபோகாத பல கிராமங்களில் கூடஅனைவருக்கும் கல்வி என்ற நோக்கத்தோடுஅரசு
துவக்கப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. தொடக்கப் பள்ளிகளுக்கு இடைநிலை ஆசிரியர்களும், நடுநிலைப்பள்ளிகளுக்குபட்டதாரி ஆசியர்களும் தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அரசுப்பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்றி வரும் பலர் நகர்ப்புறபகுதிகளில்தான் வசித்து வருகின்றனர். பெரும்பாலானதுவக்கப்பள்ளிகள் கிராமப்பகுதிகளில் இருக்கும் நிலையில், நகர் பகுதியில் இருந்துஆசிரியர்கள் தாங்கள் பணியாற்றும் பள்ளிக்குச்சென்று வருவதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள்உள்ளன. பல கிராமங்களில் இருக்கும்தொடக்கப்பள்ளிகள் ஓர் ஆசிரியர் பள்ளிகளாகதான் இருக்கின்றன. இது பல ஆசிரியர்களுக்குவசதியாகிவிட்டது. காலை ஓன்பது மணிக்குபள்ளியில் இருக்கவேண்டிய ஆசிரியர்கள், பதினோரு மணிக்கு பள்ளிக்குவரும் அவல நிலைகள் தமிழககிராமங்களில் இன்றும் நிலவி வருகிறது.

அதே போல் இரண்டு ஆசிரியர்பணிபுரியும் பள்ளிகளிலும் இதே நிலை தான்உள்ளது. பெண்கள் ஆசிரியர்களாக இருந்தால், இந்த நிலை இன்னும் மோசமாகஉள்ளது. குறித்த நேரத்திற்கு பள்ளிக்குவருவது என்பது பல அரசுஆசிரியர்களிடம் வழக்கொழிந்த விஷயமாக மாறிவிட்டது. ஏற்கனவேஅரசு பள்ளிகள் மீது மக்களுக்கு இருக்கும், அவநம்பிக்கையை இது மேலும் அதிகரிப்பதாகஉள்ளது. தென் மாவட்டத்தில் கடைக்கோடியில்இருக்கும் பள்ளி ஒன்றிற்கு பாடவேளைதுவங்குவதே காலை பன்னிரெண்டு மணிக்குதான். காரணம் அந்த பள்ளியில் ஆசிரியர்களாகஇருக்கும் இரண்டு ஆசிரியர்களும் அருகில்இருக்கும் நகரத்தில் இருந்து வருகிறார்கள். அந்தகிராமத்திற்கு இரண்டு பேருந்துகள் மட்டுமேஉள்ளன.

அதில் ஒரு பேருந்து அவர்கள்வசிக்கும் நகரில் எட்டு மணிக்குபுறப்பட்டு ஒன்பது மணிக்கு அந்தகிராமத்திற்கு வந்தடையும். அதை தவிர்த்து விட்டுபத்து மணி பேருந்தில் தான், இவர்கள் பள்ளிக்கு வருகின்றார்கள். இதனால் இந்த பள்ளியின்வேலை நேரம் பதினோரு மணிக்கு  மேல்தான் ஆரம்பிக்கிறது. ஆனால் தங்களது வருகைபதிவேட்டில் இவர்கள் ஒன்பது மணிக்குவந்துவிட்டதாக கையெழுத்திடுகின்றார்கள். இதே நிலைதான் தமிழகத்தின்பல கிராமங்களில் உள்ள அரசு பள்ளிகளின்நிலையாக உள்ளது. பல கிராமங்களில்ஆசிரியர்கள் பள்ளிக்கே வருவதை தவிரத்துவிட்டு, அந்தகிராமத்தில் பட்டப்படிப்பு படித்தவர்களை இவர்கள் குறைந்த ஊதியம்கொடுத்து ஆசிரியர்களாக இவர்களே நியமிக்கும் கொடுமைகள்எல்லாம் தமிழகத்தில் நடந்தேறி வருகிறது.

அரசுப்பள்ளிகளில் அதிகாரிகள் ஆய்வுகள் குறைந்து இருப்பதும், மாணவர்கள் குறைவாக இருப்பதும் இதுபோன்றகாலம்தாழ்த்தி வரும் ஆசிரியர்களுக்கு வசதியாகிவிட்டது. இது குறித்து தொடர்ந்து கல்வித் துறைக்கு புகார்கள்வந்தவண்ணம் இருந்தால், இதற்கு மாற்றுத் தீர்வுகாண அதிரடி உத்தரவை தமிழகஅரசு பிறப்பித்துள்ளது. இன்று முதல்வர் உயர்கல்வி, மற்றும் பள்ளி கல்வி துறைகுறித்து 110 விதியின் கீழ் இருபத்தி நான்குஅறிவிப்புகளை வெளியிட்டார். அதில் ஒரு அறிவிப்பில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகைப்பதிவேட்டை கையாளுவதில் தற்போது உள்ள கையெழுத்திடும்முறையை மாற்றி, பயோமெட்ரிக் முறையில்வருகைபதிவு செய்யும் புதிய முறை கொண்டுவரப்படஉள்ளது. இதற்காக 45.57 கோடி ஒதுக்கபடுவதாக அறிவித்துள்ளார்.

பயோமெட்ரிக்முறையில் வருகையை பதிவு செய்யும்போது, குறித்த நேரத்தில் பள்ளிக்குவரவேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதே போல் பள்ளிமுடிந்து செல்லும்போது கைரேகையை வைத்து பதிவு செய்யும்நிலை இருப்பதால், நினைத்த நேரத்திற்கு பள்ளியைவிட்டு கிளம்பவும் முடியாது. மேலும் வருகைநேரத்தை தாண்டிவருகைப்பதிவேட்டில்  பதிவுசெய்தால், அவர்களது ஊதியம் குறையும் வாய்ப்புஇருப்பதால், கால தாமதத்தை இனிதொடர முடியாத நிலைக்கு ஆசிரியர்கள்தள்ளப்பட்டுள்ளனர்.


கிராமத்துதொடக்கப் பள்ளிகளிலும், இனி ஒன்பது மணிக்கேஆசிரியர்கள், ஆஜர் ஆகிவிடுவார்கள்  என எதிர்பார்க்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக