யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

24/8/16

தமிழை எளிதில் கற்க 'வீடியோ' பாடம்:தொடக்க பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சி

தமிழ் பாடத்தை எளிதில் கற்றுக்கொடுக்கும் வகையில், ஒன்று முதல் 5ம்வகுப்பு வரை உள்ள, தமிழ்புத்தக பாடல்களின் வீடியோவை,
இணையதளத்தில் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டு உள்ளது.

தமிழக பள்ளிக் கல்வித்துறையின் ஒருபிரிவாக செயல்படும், மாநில கல்வியியல் ஆராய்ச்சிமற்றும் பயிற்சி நிறுவனமான, எஸ்.சி.இ.ஆர்.டி., மாணவர்களுக்கு கற்றல்சார்ந்த தொழில் நுட்பங்களை அறிமுகப்படுத்திவருகிறது.


செயல்வழிகற்றல், கணினி வழி கற்றல்போன்ற பல திட்டங்களில், மொழியைஎளிதாக கற்று கொடுக்கும் திட்டத்தையும்அறிமுகம் செய்துள்ளது.

முதற்கட்டமாக,10ம் வகுப்பு மற்றும்பிளஸ் 2 மாணவர்கள்,தங்களின் அறிவியல் பாடபடங்க ளை, நான்கு பரிமாணத்தில்பார்த்து படிக்கும், புதிய, 'சிடி' கடந்தமாதம் வெளியானது. இந்த வீடியோ படம், தமிழ்நாடு கல்வித்துறை என்ற பெயரில், 'யூ- டியூப்'பில் இணைக்கப்பட்டு, பலஆயிரம் பேர் பயன்படுத்தி வருகின்றனர். மேலும், 'கூகுள் பிளே ஸ்டோர்ஆப்' மூலம், புதிய அப்ளிகேஷன்வசதியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அடுத்தகட்டமாக, தொடக்கக் கல்வியில், தாய்மொழியை எளிதாக படிக்கும் வகையில், ஒன்று முதல் 5ம் வகுப்புவரை, புத்தகத்தில் உள்ள, 40 பாடல்கள், வீடியோவாக மாணவர்களின் நடனத் துடன் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த வீடியோ பதிவுகள், யூ-டியூப்பில், தமிழ்நாடு எஸ்.சி.இ. ஆர்.டி., சேனல் என்றபிரிவில், 'தாயெனப்படுவது தமிழே' என்ற பெயரில், பதிவு செய்யப்பட்டு உள்ளன.

ஒரு வாரத்தில், அதை, 30 ஆயிரம் பேர்பார்த்துள்ளனர். மேலும், 35 ஆயிரம் தொடக்க பள்ளி

களுக்கு, இலவசமாக இந்த, 'சிடி' அனுப்பப்படஉள்ளதாக, எஸ்.சி.இ.ஆர்.டி., இயக்குனர்ராமேஸ்வர முருகன் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக