யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

24/8/16

மாணவர்களுக்கு விளையாட்டில் ஆர்வம்...குறைகிறது! பள்ளிகளில் ஊக்கமளிக்காததால் விபரீதம்-DINAMALAR

கடலுார்: பள்ளிகளில் மாணவ மாணவியர்களுக்கு வழங்கப்படும்விளையாட்டு நேரம்  வெகுவாககுறைந்துவிட்டதால் போட்டிகளில்
ஜொலிக்க முடியாத நிலைஏற்பட்டுள்ளது.

'மாலை முழுவதும் விளையாட்டு' என்று பாரதி பாடினார். அதன்படிஇன்றைய கல்விக்கொள்கையில் பள்ளிகளில் விளையாட்டை யாரும் கடைபிடிப்பதாக தெரியவில்லை. உலகளவில் மக்கள் தொகையில் இரண்டாவதுஇடத்திலுள்ள இந்தியா ஒலிம்பிக்கில் 2 பதக்கத்துடன்திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது.
விளையாட்டுவீரர்கள், வீராங்கனைகள் அடிப்படையில் பள்ளிகளில் இருந்து தான் உருவாகவேண்டும். காலை, மாலை எனஎந்த நேரமும் படிப்பு, மார்க்என மாணவ மாணவியர்களை கசக்கிபிழியும் கல்வி நிறுவனங்கள் வியாபித்துவிட்டதால்விளையாட்டு என்பது பின்னுக்கு தள்ளப்படும்நிலைதான் தொடர்ந்து நீடிக்கிறது.
அரசு தொடக்கப் பள்ளியில் இருந்து மேல்நிலை பள்ளிகள்வரை பிள்ளைகள் விளையாடி மகிழ விளையாட்டு உபகரணங்களைவாங்க பள்ளிகளுக்கு அரசு நிதி உதவிவழங்குகிறது. இதை தலைமை ஆசிரியர்கள்முறையாக செலவிடுவதில்லை. கல்வியாண்டு துவக்கத்தில் விளையாட்டு பொருட்கள் வாங்கியதாக 'பில்' வைக்கப்படுகிறது. இறுதியாண்டில்பொருட்கள் பழசாகிவிட்டதால் ஏலம் விட்டதாக கணக்கெழுதப்படுகிறது. இதை கல்வி அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை.
இதனால்மாணவர்களுக்கு விளையாட்டு நேரத்தையே குறைத்துவிட்டனர். பெயர் அளவில் நேரம்ஒதுக்கப்பட்டாலும், அந்த பீரியடையும் 'சிலபசை' முடிப்பதற்காக ஆசிரியர்கள் எப்போது கேட்பார்கள் எனஉடற்கல்வி ஆசிரியர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
பி.இ.டி., பீரியடில்மாணவர்களுக்கு விளையாட்டை கற்றுத்தருவதில்லை. தனியார் பள்ளிகளில் விளையாட்டைபற்றி கவலை கொள்ளாமல் மதிப்பெண்ணேபிரதானமாக கொள்ளப்படுகிறது.
இதன் காரணமாக கடலுார் மாவட்டத்தில்அனைத்து வசதிகளுடன் கூடிய மிகப்பெரிய அண்ணாவிளையாட்டு மைதானம் இருந்தும் மாநிலஅளவிலான போட்டிகளில் பெரிய அளவில் வெற்றிபெற முடியாமல் போய்விடுகிறது.
அண்மையில்கடலுாரில் நடந்த தடகளப்போட்டியில் ஒருசிலவற்றில் மட்டும்தான் பரிசு பெற முடிந்தது. பெரிய அளவில் சாதிக்க முடியவில்லை. அதிகமான பரிசுகளை வென்றது காஞ்சிபுரம், சென்னைமாவட்டத்தை சேர்ந்தவர்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேநிலைதான்பிற மாவட்டங்களிலும் உள்ளது. எனவே மாணவமாணவியர்களை பள்ளிகளிலேயே ஊக்கமளித்தால்தான் திறமையானவர்களை கண்டறிய முடியும் என்பதைஆசிரியர்கள் உணர வேண்டும். அப்போதுதான்நாம் உலக அளவில் ஜொலிக்கமுடியும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக