யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

25/1/19

மழலையர் பள்ளிகளில் சிறப்புப் பயிற்சி பெற்ற ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்!

தமிழ்நாட்டில் உள்ள அங்கன்வாடி மையங்களில் மழலையர் வகுப்புகளைத் தொடங்கும் திட்டத்தின்படி, முதற்கட்டமாக 2381 மையங்களில் மழலையர் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. 

எனினும், இப்பள்ளிகளில் பாடம் கற்பிக்க சரியான ஆசிரியர்கள் நியமிக்கப்படாததால், அங்கன்வாடி மையங்களில் மழலையர்  வகுப்புகள் எதற்காக தொடங்கப்பட்டனவோ, அந்த நோக்கம் நிறைவேறாமல் போதும் ஆபத்து உள்ளது.

அரசு பள்ளிகளில் மழலையர் வகுப்புோகளைத் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக எழுப்பப்பட்டு வருகிறது. அண்மைக்காலங்களில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருவதைத் தடுக்கும் வகையிலும், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையிலும் அங்கன்வாடிகளில் மழலையர் பள்ளிகளை தொடங்க தமிழக அரசு தீர்மானித்திருக்கிறது. முதற்கட்டமாக 2381 அங்கன்வாடி மையங்களில் இரு நாட்களுக்கு முன் மழலையர் வகுப்புகள்  தொடங்கப் பட்டுள்ளன. அரசு பள்ளிகளை வலுப்படுத்த உதவும் என்பதால் இந்த முயற்சி வரவேற்கத்தக்கதாகும்.

அதேநேரத்தில், மழலையர் பள்ளிகளின் ஆசிரியர்களாக இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் என்ற அறிவிப்பு தான் கவலையளிக்கிறது. காரணம்.... மழலையர் வகுப்புகளுக்கும், இடைநிலை  வகுப்புகளுக்கும் பாடம் கற்பிக்கும் முறை முற்றிலும் மாறுபட்டதாகும். ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான இடைநிலைப் பள்ளி மாணவர்களுக்கு பாடத்தை மட்டும் கற்பித்தால் போதுமானது. ஆனால், மழலையர் வகுப்புகளை அது போன்று கையாண்டு விட முடியாது. மழலையர் வகுப்புகள் மாண்டிசோரி கல்வி முறையில் நடத்தப்பட வேண்டும். தமிழக அரசும் இதை ஒப்புக்கொண்டு புதிதாக தொடங்கப்பட்டுள்ள மழலையர் வகுப்புகள் மாண்டிசோரி முறையில் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது.

மாண்டிசோரி முறையில் மழலையர் வகுப்புகள் நடத்தப்படும் என்று அரசு அறிவித்து விட்டு, அதற்காக இடைநிலை ஆசிரியர்களை நியமிப்பது பொருத்தமற்றதாகும். இத்தாலியைச் சேர்ந்த மரியா மாண்டிசோரி என்ற மருத்துவர் தான் குழந்தைகள் குறித்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு மாண்டிசோரி கல்வி முறையை உருவாக்கினார். ‘‘கல்வி என்பது, ஒரு தனி மனிதன் தன்னிச்சையாக முன்னெடுக்கும் இயற்கைச் செயல்பாடு. ஐம்புலன்கள் வழியாகவும் சுற்றுச்சூழலை அனுபவமாக உணரும்போதுதான், கற்கும் செயல்பாடு சாத்தியமாகும்’’ என்பது தான் மாண்டிசோரி கல்வி முறையின் அடிப்படை ஆகும்.

பொதுவாகப் பெரியவர்கள் நினைப்பதுபோலக் குழந்தைகள் புதிய விஷயங்களைக் கற்கிறோம் என்று உணர்ந்து கொள்வதில்லை. ‘ஒரு விஷயத்தைக் கற்றுக்கொள்கிறோம்' என்ற உணர்வு இல்லாமல்தான், புதிய புதிய விஷயங்களைக் குழந்தைகள் கற்றுக் கொள்கின்றனர். அவர்களுக்கு கட்டாயப்படுத்தி கல்வி வழங்க முடியாது. ஆடுவது, பாடுவது, திறந்தவெளியில் விளையாடுவது, கருவிகளைக் கொண்டு விளையாடுவது போன்றவற்றின் மூலம் தான் மாண்டிசோரி முறையில் கற்பிக்கப்படுகிறது. வகுப்பறையில் ஒரு குழந்தை தனக்கு விருப்பமானதைத் தேர்ந்தெடுத்து விளையாடலாம். தூங்க நினைத்தால் தூங்கலாம். இந்த தத்துவங்களின் அடிப்படையில் குழந்தைகளை கையாள்வது இடைநிலை ஆசிரியர்களால் சாத்தியமல்ல. மாண்டிசோரி பயிற்சி பெற்ற ஆசிரியர்களால் தான் இது சாத்தியமாகும்.

அதுமட்டுமின்றி, மழலையர் வகுப்புகளுக்கு தாங்கள் மாற்றப்படுவதை இடைநிலை ஆசிரியர்களும்  விரும்பவில்லை. இதுகுறித்த அரசின் முடிவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். இடைநிலை ஆசிரியர்கள் உபரியாக இருக்கிறார்கள் என்பதற்காக அவர்களை மழலையர் வகுப்புகளுக்கு நியமிப்பது சரியான அணுகுமுறையாக இருக்காது. வேண்டுமானால், அவர்களை ஈராசிரியர் பள்ளிகளில் நியமிக்கலாம். மழலையர் வகுப்புகளுக்கு மாண்டிசோரி ஆசிரியர்களை நியமிப்பது தான் பொருத்தமாகும்.

மழலையர் வகுப்புகளை நடத்துவதில் சென்னை மாநாகராட்சி முன்னோடியாக திகழ்கிறது. 1997-98 ஆம் ஆண்டு முதல் சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் படிப்படியாகத் தொடங்கப் பட்டு இப்போது 200-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அந்த வகுப்புகளை நடத்த 160 மாண்டிசோரி ஆசிரியர்களும், 100 உதவியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசின் புதிய ஆணையால், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு, அவர்கள் இடங்களிலும் இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன.

எனவே, மழலையர் வகுப்பு தொடங்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறும் வகையில், அனைத்து மழலையர் வகுப்புகளுக்கும் மாண்டிசோரி பயிற்சி பெற்ற ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். மாநகராட்சிப் பள்ளிகளில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் மாண்டிசோரி ஆசிரியர்களை பணிநிலைப்பு செய்ய வேண்டும்.a

TNPSC Group 2A And RRB Exam Study Plan Day 4

ஊதிய முரண்பாடு, மற்றும் சில துறைகளுக்கான ஊதிய மாற்றம் குறித்து தலைமைச்செயலகத்தில் இன்று மதியம் 1.30 மணிக்கு அவசரக்கூட்டம்

 மதிப்புமிகு M.A.சித்திக் தலைமையிலான ஒருநபர் குழு பரிந்துரையின் பெயரில் இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு, மற்றும் சில துறைகளுக்கான ஊதிய மாற்றம் குறித்து தலைமைச்செயலகத்தில் இன்று மதியம் 1.30 மணிக்கு அவசரக்கூட்டம்.

💢 முதன்மைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் I.A.S மற்றும் 4 துறை அமைச்சர்களுக்கும் அழைப்பு.
💢 போராட்டத்தை இன்றுடன் முடிவுக்கு கொண்டுவர அரசு தீவிர ஆலோசனை.
தலைமைச்செயலக வாயிலில் நிற்கும் ஊடகத்துறையினரின் கேள்விகளுக்கு பதிளிக்கு மறுத்து, போராட்டம் முடித்துவைக்கப்பட்ட பின் பேட்டி தருகிறோம் என்று வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் தகவல்.

அங்கன்வாடி மையத்திற்கு மாறுதல் ஆணை தொடர்பான வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வருகிறது

அங்கன்வாடி மையத்திற்கு மாறுதல் ஆணை தொடர்பான வழக்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பாக இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடி மையத்திற்கு மாறுதல் செய்யபடுவதை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்குவிசாரணை, மீண்டும் இன்று விசாரணைக்கு வருகிறது
24/1/19 அன்று மாறுதல் தொடர்பாக அரசிடம் விளக்கம் கேட்கபட்டது என்பது குறிபிடத்தக்கது.. இன்று சென்னை உயர்நீதிமன்ற 38வது கோர்ட்டில் 2வது லிஸ்டில் 23வது வழக்காக ,வழக்கு எண் 1634/2019 விசாரணைக்கு வருகிறது

வனக் காப்பாளர் பணியிடங்கள்: ஜன.28-இல் சான்றிதழ் சரிபார்ப்பு தொடக்கம்

தமிழக வனத் துறையில் காலியாக உள்ள வனக் காப்பாளர், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக் காப்பாளர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, உடல் தகுதித் தேர்வு ஜனவரி 28 முதல் 30-ஆம் தேதி வரை சென்னையில் நடைபெற உள்ளது.
தமிழக வனத் துறையில் காலியாக உள்ள 300 வனவர், 726 வனக் காப்பாளர்கள், 152 ஓட்டுநர் உரிமத்துடன்கூடிய வனக் காப்பாளர் பணியிடங்களுக்கு கடந்த டிசம்பர் மாதம் எழுத்துத் தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வை மொத்தம் 2.10 லட்சம் பேர் எழுதினர். இதில், வனக் காப்பாளர், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக் காப்பாளர் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வில் தேர்வானவர்களின் விவரங்கள் வனத் துறையின் இணையதளத்தில் கடந்த திங்கள்கிழமை (ஜன. 21) வெளியிடப்பட்டன.
28-இல் சான்றிதழ் சரிபார்ப்பு: தேர்வானவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, உடல் தகுதித் தேர்வு சென்னை கிண்டியில் உள்ள சிறுவர் பூங்காவில் உள்ள ஏவி அரங்கில் ஜனவரி 28-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை 3 நாள்கள் நடைபெற உள்ளது. நாளொன்றுக்கு 4 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு இவை நடத்தப்பட உள்ளன. தேர்வர்கள் தேவையான அனைத்துச் சான்றிதழ்களுடன் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் வர வேண்டும். மேலும், விவரங்கள் www.forests.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளதாக வனத் துறை சீருடைப் பணியாளர்கள் தேர்வுக் குழுமம் தெரிவித்துள்ளது

10/1/19

நாடு முழுவதும் பள்ளிகளில் 8ம் வகுப்பு வரை இந்தி பாடம் கட்டாயமா?

நாடு முழுவதும் பள்ளிகளில் 8ம் வகுப்பு வரை இந்தி பாடத்தை கட்டாயமாக்கும் அம்சம் புதிய கல்வி கொள்கையில் இடம்பெற்றுள்ளதாக
தகவல் வெளியாகி இருந்தது. இந்த தகவலை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மறுத்துள்ளார்.கஸ்தூரி ரங்கன் தலைமையிலான 9 நபர் நிபுணர் குழு புதிய கல்வி கொள்கை குறித்த வரைவு அறிக்கையை மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்திடம் கடந்த மாதம் சமர்ப்பித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.  இந்த கல்வி கொள்கை இந்திய பாரம்பரியத்தையும் அறிவியலையும் மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

HOW TO GET CENTUM MARK | 10TH MATHEMATICS KALVIKURAL CENTUM TEAM:

வருகிற 10-th std கணிதத் தேர்வை எதிர்கொள்வதற்கான வழிகாட்டல்களை மாணவர்களுக்கு வழங்குகிறார்கள் விழுப்புரம் மாவட்டத்தை சார்ந்த கல்விக்குரல் MATHS CENTUM TEAM ஆசிரியர்கள் திரு.பி விஸ்வநாதன் மற்றும் குமார்அவர்களின் வழிகாட்டல்கள்:
மாணவர்கள் தேர்வறைக்குள் நுழைந்ததும் விடைத்தாளை அமைதியாக படிக்கவும். நன்றாகப் படிக்கிற மாணவர்கள் கூட பதற்றத்தில் பிளஸ் குறி போடும் இடத்தில் மைனஸ் குறி போட்டு மொத்த மதிப்பெண்கள் இழந்து போகிற சம்பவங்களும் நடக்கின்றன. பதற்றம் வேண்டவே வேண்டாம்.வினாக்களின் எண்களை மிகச்சரியாக குறிப்பிட்டு விடைகளை எழுத வேண்டும். இல்லையென்றால் மதிப்பெண் இழப்பு ஏற்படும்.கேள்விக்கான விடையை செய்து பார்ப்பதற்கு விடைத்தாளில் ஒரு பகுதியை ஒதுக்குவார்கள். செய்து பார்க்கிற பகுதியில் சரியான விடையை உருவாக்குகிற மாணவர்கள் கூட அந்த விடையை எடுத்து எழுதும்போது தப்பாக எழுதும் விசித்திரமும் நடக்கிறது. கவனம் தேவை. விடைத்தாள் திருத்தும் ஆசிரியர் சரியான விடையை மாணவர் உருவாக்கி உள்ளார். ஆனால் எடுத்து எழுதும்போதுதான் தவறு செய்துள்ளார் என உணர்ந்தாலும் அவரால் மார்க் போட முடியாது.

5/1/19

ஒருங்கிணைந்த பள்ளிகல்வி மூலம் பள்ளி,ஒன்றியம்,மாவட்ட அளவில் பள்ளி மாணவ,மாணவியர்களுக்கான பெண் கல்வியின் முக்கியத்துவம், இலவச கட்டாயக்கல்வி உரிமைச் சட்டம் மற்றும் சுத்தம் சுகாதாரம் குறித்த பேச்சு ,கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகள்...புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா தகவல்....

புதுக்கோட்டை,ஜன.4:
பெண் கல்வியின் முக்கியத்துவம், 
இலவச கட்டாயக்கல்வி உரிமைச் சட்டம் ,மற்றும் சுத்தம் சுகாதாரம் குறித்து பள்ளி,ஒன்றியம்,மாவட்ட அளவில்  நடைபெறும் பேச்சு,கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகளில் மாணவர்கள் பங்கு பெற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்துமாறு புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா கேட்டுக் கொண்டுள்ளார்..
இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
 தமிழகம் முழுவதும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மூலம் 2018-2019 ஆண்டிற்கான சமூக பங்கேற்பு நிகழ்ச்சிகள் வரையறுக்கப்பட்டு ஒவ்வொன்றாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.அதன் முதல் நிகழ்ச்சியாக பெண் கல்வியின் முக்கியத்துவம் ,இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 மற்றும் சுத்தம் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை பள்ளி மாணவர்களிடத்தில்  ஏற்படுத்தும் நோக்கத்தில் அனைத்து அரசு தொடக்க,நடுநிலை,உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் உண்டு உறைவிடப் பள்ளியில் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ,மாணவியர்களிடையே பேச்சுப் போட்டி,கட்டுரைப் போட்டி மற்றும் ஓவியப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது..எனவே அனைத்து பள்ளிகளிலும் உள்ள மாணவர்கள்  இந்த போட்டிகளில் பங்கு பெற்று சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்..அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்கள் மூலமாக மாணவர்கள் போட்டிகளில் பங்குபெற பதிவு செய்ய வேண்டும்.மேலும் பெண்கல்வியின் முக்கியத்துவம்,இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 மற்றும் சுத்தம் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு சார்ந்த தங்களது திறமைகளை மாணவர்கள்  வெளிப்படுத்த வேண்டும்.புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி அளவில் வரும் 7 ஆம் தேதி அன்றும்,பள்ளி அளவில் வெற்றி பெறும் மாணவர்கள் வட்டார அளவில் 11 ஆம் தேதி அன்றும் ,வட்டார அளவில் வெற்றி பெறும் மாணவர்கள் மாவட்ட அளவில் நடைபெறும் போட்டியிலும் பங்கு பெற வேண்டும்.வட்டார அளவில் நடைபெறும் மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழும்,மாவட்ட அளவில் வெற்றி பெறும் முதல் மூன்று இடம் பிடிக்கும்  மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் மூலம் பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட இருக்கிறது.எனவே புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அரசு,தொடக்க நடுநிலை,உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் ,உண்டு உறைவிடப் பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ,மாணவிகள் இப்போட்டிகளில் பங்குபெற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி முறை ரத்து மசோதா நிறைவேறியது:

புதுடில்லி, பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சியளிக்கும் முறையை ரத்து செய்யும் மசோதா பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டது.முதல் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி பெறச் செய்யும் திட்டம் தற்போது நடைமுறையில் உள்ளது.இதற்கு பல்வேறு தரப்பிலும் தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இதனையடுத்துகட்டாய தேர்ச்சி முறையை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்தது.குழந்தைகள் இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு மசோதாவுக்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்த சட்ட திருத்த மசோதா, லோக்சபாவில் கடந்த ஆண்டு ஜூலையில் நிறைவேற்றப்பட்டது.இந்நிலையில் இந்த மசோதா, ராஜ்யசபாவில் நேற்று நிறைவேற்றப்பட்டது. இடதுசாரி கட்சி உறுப்பினர்கள் மட்டும் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.முன்னதாக அமைச்சர் பிரகாஷ் ஜாவேடகர் கூறியதாவது: 'கட்டாய தேர்ச்சி முறையை ரத்து செய்ய வேண்டும்' என, ௨௫ மாநிலங்கள் கோரிக்கை விடுத்தன. கட்டாய தேர்ச்சி முறையை தொடரலாமா, வேண்டாமா என்பதை மாநில அரசுகளே முடிவு செய்யும் அதிகாரம், இந்த மசோதா மூலம் வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

இணையதளத்தை பராமரிக்காமல் அலட்சியம் விளக்கம் கேட்டு, 558 கல்லூரிகளுக்கு, 'நோட்டீஸ்'

சென்னை:ணையதளத்தை பராமரிக்காத, 558 கல்லுாரிகளுக்கு, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை, 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது. அதில், ஒரு வாரத்தில், விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.
ஆசிரியர் பணிக்கான, பி.எட்., - எம்.எட்., படிப்பை நடத்தும் கல்லுாரிகள், மத்திய அரசின் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி கவுன்சிலின் அங்கீகாரம் பெற வேண்டும். மேலும், அந்தந்த மாநில பல்கலைகளில், பாடத் திட்ட இணைப்பு அந்தஸ்து பெற வேண்டும்.தமிழகத்தில், ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் இணைப்பு அந்தஸ்தில், 733 கல்லுாரிகள் செயல்படுகின்றன. 
இந்த கல்லுாரிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் போது, சில விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஒவ்வொரு கல்லுாரியும், நிர்வாகம் சார்ந்த, 11 அம்சங்களை கல்லுாரி இணையதளத்தில் கட்டாயம் பதிய வேண்டும். அவற்றை உரிய நேரத்தில், புதுப்பிக்க வேண்டும் என, எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை, பெரும்பாலான கல்லுாரிகள் பின்பற்றாமல், அலட்சியமாக செயல்பட்டன.
இது குறித்து, தேசிய கல்வியியல் கவுன்சிலுக்கு புகார்கள் வந்தன.அதனால், இணையதளத்தை பராமரிக்காத, 558 கல்லுாரிகளுக்கு, ஆசிரியர் கல்வியியல் பல்கலை நோட்டீஸ் அனுப்பி யுள்ளது. 'பல முறை அறிவுறுத்தியும், இணையதளத்தை பராமரிக்காதது ஏன் என்ற விளக்கத்தை, வரும், 11ம் தேதிக்குள், பல்கலைக்கு அனுப்ப வேண்டும்' என, உத்தரவிட்டுள்ளது.

எந்தெந்த கல்லுாரிகள்?

*சென்னையில், லயோலா, மியாசி, முத்துக்குமரன், ராஜலட்சுமி, டாக்டர் எம்.ஜி.ஆர்., கல்வி ஆராய்ச்சி நிறுவனம், மத்திய அரசின், 'நிப்மெட்' கல்லுாரிகள்; கோவையில், பிஷப் அப்பாசாமி, சி.எம்.எஸ்., ஹிந்துஸ்தான், கலைவாணி, கஸ்துாரி, பி.பி.ஜி., செயின்ட் மார்க் கல்லுாரிகள் இடம் பெற்றுள்ளன 
* கடலுார், மாதா, பிளஸ்ஸி, விருதாம்பிகை, பவானி, ஆற்காட் லுத்ரன் கல்லுாரிகள்; காஞ்சிபுரம், கிறிஸ்ட், முகமது சதக், காஞ்சி, ராஜலட்சுமி, லட்சுமி அம்மாள் கல்லுாரிகள்; மதுரை சி.எஸ்.ஐ., - கே.எஸ்.எம்., - ராயல் கல்லுாரி, அரோபிந்தோ மீரா, ஸ்டீபன், யாதவா, ஆசிபா கல்லுாரிகள்
* திருநெல்வேலி, ஸ்ரீராம் நல்லமணி யாதவ், யு.எஸ்.பி., செயின்ட் ஜான்ஸ், மகாத்மா காந்தி உட்பட, தமிழகம் முழுவதும், 558 கல்லுாரிகள் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

4 பல்கலைகளின் வி.சி., பதவி தேடல் குழுக்கள் அறிவிப்பு:

நான்கு பல்கலைகளுக்கு துணைவேந்தரை தேர்வு செய்ய, தேடல் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை துணைவேந்தர் பாஸ்கர், சென்னையில் உள்ள, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை துணைவேந்தர் பாஸ்கரன். வேலுார் திருவள்ளுவர் பல்கலை துணைவேந்தர் முருகன், சென்னையில் உள்ள ஆசிரியர் கல்வியியல் பல்கலை துணைவேந்தர் தங்கசாமி ஆகியோரின் பதவி காலம், இரண்டு மாதங்களில் முடிவடைய உள்ளது.
அதனால், நான்கு பல்கலைகளுக்கும், புதிய துணைவேந்தர்களை தேர்வு செய்ய, தேடல் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. முன்னாள் தலைவர்திருவள்ளுவர் பல்கலைக்கு, கர்நாடகா பேராசிரியர் மற்றும் தேசிய அங்கீகார அமைப்பான, 'நாக்' இயக்குனர் ஷர்மா தலைமையில், தேடல் குழு அமைக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கு, ரயில்வே இழப்பீட்டு தீர்ப்பாய தலைவர், நீதிபதி கண்ணன் தலைமையில், முன்னாள் கூடுதல் தலைமை செயலர் ஸ்கந்தன், ஒடிசா மாநில திறந்தநிலை பல்கலை துணைவேந்தர், ஸ்ரீகாந்த் மொகபாத்ரா இடம் பெறும் தேடல் குழு அமைக்கப்பட்டு உள்ளது.மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கு, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரியும், தமிழ்நாடு போக்குவரத்து நிதி மேம்பாட்டு கழக முன்னாள் தலைவருமான, எஸ்.பி. இளங்கோவன் தலைமையில், அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர், அனந்தகிருஷ்ணன், யு.ஜி.சி., முன்னாள் தலைவர், வேத் பிரகாஷ் இடம் பெறும், தேடல் குழு அமைக்கப்பட்டு உள்ளது.

அரசாணை

ஆசிரியர் கல்வியியல் பல்கலை துணை வேந்தரை, டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை துணைவேந்தர், ஜெகதீஷ் குமார் தலைமையில், தமிழ்நாடு கடல் வாரிய முன்னாள் தலைவர், ரமேஷ்குமார் கன்னா. சேலம் பெரியார் பல்கலை முன்னாள் துணைவேந்தர் பாலகிருஷ்ணன் இடம் பெற்ற குழு தேர்வு செய்யும் என, தமிழக அரசின் அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

குரூப் - 1' தேர்வு 21ல், 'இன்டர்வியூ'

சென்னை:'குரூப் - 1 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, வரும், 21ல் நேர்முக தேர்வு நடத்தப்படும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., செயலர், நந்தகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
'குரூப் - 1' பதவியில் அடங்கிய, 85 காலியிடங்களை நிரப்ப, 2017 பிப்ரவரியில் முதல்நிலை எழுத்து தேர்வு நடத்தப்பட்டது. அதில், தேர்ச்சி பெற்றவர்களுக்கு, 2017 அக்., 13 முதல், 15 வரை, பிரதான தேர்வு நடந்தது. பிரதான தேர்வில், 176 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அவர்களின் விபரங்கள், 2018 டிச., 31ல், டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன. நேர்முக தேர்வுக்கான பட்டியலில் இடம் பெற்றவர்களுக்கு, வரும், 21 முதல், 25 வரை, சென்னையில் உள்ள, டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில், நேர்முக தேர்வு நடக்க உள்ளது. இதற்கான தகவல்கள், எஸ்.எம்.எஸ்., மற்றும் இ - மெயில் வழியாக, தேர்வர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. மேலும், www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில், அழைப்பு கடிதத்தை பதிவிறக்கம் செய்யலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

10ம் வகுப்பு தனி தேர்வர் விண்ணப்பிக்க அழைப்பு:

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பங்கேற்க உள்ள தனி தேர்வர்கள், வரும், 7ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
அரசு தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:மார்ச்சில் நடக்க உள்ள, 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், பள்ளிகள் வழியாக அல்லாமல், தனி தேர்வராக எழுத விரும்புவோர், ஜன., 7 முதல், 14 வரை, 'ஆன்லைன்' வழியில் விண்ணப்பிக்க வேண்டும். அரசு தேர்வுத்துறையின், சேவை மையங்கள் வழியாக மட்டுமே, ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியும்.
தேர்வில் பங்கேற்பதற்கான தகுதி, நிபந்தனை, தேவைப்படும் சான்றிதழ் மற்றும் சேவை மையங்களின் விபரங்களை, www.dge.tn.gov.in என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும், மாவட்ட கல்வி அலுவலகங்கள், தேர்வுத் துறை உதவி இயக்குனர் அலுவலகங்களிலும், தேர்வு குறித்த விபரங்களை அறியலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

பிளஸ் 1, பிளஸ் 2 பொது தேர்வு புதிய வினாத்தாள் முறை அறிவிப்பு:

பிளஸ் 1, பிளஸ் 2 பொது தேர்வுக்கான, புதிய வினாத்தாள் முறையை, அரசு தேர்வு துறை அறிவித்துள்ளது.பிளஸ் 1 பொது தேர்வு, இந்த ஆண்டு முதல் முறையாக, புதிய பாடத்திட்டத்தில் நடத்தப்படுகிறது. அதேபோல், பிளஸ் 2வுக்கும் புதிய வினாத்தாள் முறையில் தேர்வு நடத்தப்படுகிறது.

சுற்றறிக்கை

இது குறித்து, தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தராதேவி, பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:தமிழ், ஆங்கிலம் மற்றும் சிறுபான்மை மொழி பாடங்களுக்கு, முன்பிருந்த இரண்டு தாள்களுக்கு பதிலாக, ஒரு தாளுக்கு மட்டுமே தேர்வு நடக்கும். வினாத்தாள், 90 மதிப்பெண்ணுக்கு அமைக்கப்படும். செய்முறை தேர்வு அல்லாத, 'தியரி' பாடங்கள் மற்றும் தொழிற்கல்வி, 'தியரி' பாடங்களுக்கும், 90 மதிப்பெண்ணுக்கு வினாத்தாள் அமைக்கப்படும்.
செய்முறை தேர்வுள்ள பாடங்களுக்கு, 70 மதிப்பெண்ணுக்கும், உயிரியல் தேர்வில், தாவரவியல் மற்றும் விலங்கியலுக்கு, தலா, 35 மதிப்பெண் வீதம், 70 மதிப்பெண்ணுக்கும் தேர்வு நடக்கும். மொழி பாடம்: ஒரு மதிப்பெண் வினாக்கள், 14; இரண்டு மதிப்பெண், 12; நான்கு மதிப்பெண், ஏழு; ஆறு மதிப்பெண், மூன்று வினாக்களுக்கு, மாணவர்கள் பதில் அளிக்க வேண்டும்.
ஆங்கிலம்: ஒரு மதிப்பெண், 20; இரண்டு, மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண்ணில் தலா, ஏழு என, 41 கேள்விகளுக்கு, 90 மதிப்பெண்ணுக்கு பதில் அளிக்க வேண்டும்.சிறுபான்மை மொழி: ஒரு மதிப்பெண், 14 கேள்விகள்; இரண்டு மதிப்பெண், 12; நான்கு மதிப்பெண், ஏழு; ஆறு மதிப்பெண், நான்கு கேள்விகள் என, மொத்தம், 37 கேள்விகளுக்கு, மாணவர்கள் பதில் அளிக்க வேண்டும்.
செய்முறை பாடங்கள்: ஒரு மதிப்பெண்ணில், 15; இரண்டு, மூன்று மதிப்பெண்ணில், தலா ஆறு; ஐந்து மதிப்பெண்ணில், ஐந்து என, 32 கேள்விகளுக்கு, மொத்தம், 70 மதிப்பெண்ணுக்கு பதில் அளிக்க வேண்டும்.உயிரியல் பாடத்தில், தாவரவியல் மற்றும் விலங்கியலுக்கு தனித்தனியாக, 35 மதிப்பெண்ணுக்கு வினாத்தாள் இருக்கும். 
ஒவ்வொரு பாடத்திலும், ஒரு மதிப்பெண், எட்டு; இரண்டு மதிப்பெண், நான்கு; மூன்று மதிப்பெண், மூன்று; ஐந்து மதிப்பெண், இரண்டு என, 35 மதிப்பெண்ணுக்கு, 17 கேள்வி களுக்கு பதில் அளிக்க வேண்டும்.செய்முறை தேர்வில்லாத பாடங்கள்: ஒரு மதிப்பெண்ணில், 20; இரண்டு, மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண்ணில், தலா ஏழு கேள்விகள் என, மொத்தம், 41 கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும்.
தொழிற்கல்வி, 'தியரி' தேர்வில், ஒரு மதிப்பெண், 15; மூன்று மதிப்பெண், 10; ஐந்து மதிப்பெண், ஐந்து; 10 மதிப்பெண், இரண்டு என, 32 கேள்விகளுக்கு விடை அளிக்க வேண்டும். இந்த வினாத் தாள் அமைப்பு முறையை, மாணவர்களுக்கு பள்ளிகள் தெளிவாக அறிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புது இன்ஜி., கல்லூரிக்கு இனி அனுமதி இல்லை:

சென்னை : 'புதிய இன்ஜினியரிங் கல்லுாரிகள் துவக்க, அடுத்த ஆண்டு முதல், அனுமதி அளிக்க வேண்டாம்' என, மத்திய அரசுக்கு, நிபுணர் குழு பரிந்துரைந்துள்ளது.

உயர் கல்வியின் தரம் மற்றும் இன்ஜி., கல்லுாரிகளின் நிலை குறித்து ஆராய, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில், நிபுணர் குழு அமைக்கப்பட்டது. ஐதராபாத் ஐ.ஐ.டி.,யின் தலைவர், மோகன் ரெட்டி தலைமையிலான இந்தக் குழு ஆய்வு நடத்தி, அறிக்கை சமர்ப்பித்துள்ளது.


அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., தலைவர் சகஸ்ரபுதே கூறியதாவது: பெரும்பாலான இன்ஜி., கல்லுாரிகளில், இடங்கள் காலியாக உள்ளன. மாணவர் சேர்க்கைக்கு அதிகமாக கல்லுாரிகள் உள்ளன. எனவே, அடுத்த ஆண்டு முதல், புதிய கல்லுாரிகளுக்கு அனுமதி வழங்க வேண்டாம் என, நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது.

வழக்கமான மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் போன்ற பாடங்களுக்கு, மாணவர் இடங்களை அதிகரிக்க வேண்டாம். மாறாக நவீன தொழில்நுட்பத்துக்கு ஏற்ப, முப்பரிமாண தொழில்நுட்பம், ரோபாட்டிக்ஸ், சைபர் செக்யூரிட்டி, செயற்கை நுண்ணறிவு உள்ளிட்டவற்றுக்கு, புதிய பாடங்களை அனுமதிக்கலாம் என்றும், குழு பரிந்துரைத்துள்ளது.இவ்வாறு கூறினார்.

பிப். 20 முதல் காலவரையற்ற ஸ்டிரைக் வருவாய் அலுவலர்கள் பங்கேற்பு:

மாநிலத்தில் காலியான 11ஆயிரத்து 500 பணியிடங்களை நிரப்புவது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்., 20 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட வருவாய்த்துறை அலுவலர்கள் முடிவு செய்துள்ளனர்.
மாநில அரசு திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் வருவாய்த்துறை அலுவலர்கள் முக்கிய பங்காற்றுகின்றனர். மாநிலத்தில் 11 ஆயிரத்து 500 பணியிடங்கள் காலியாகவுள்ளதால் கூடுதல் பணி சுமை ஏற்படுகிறது. காலியிடங்களை நிரப்ப வேண்டும். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அலுவலர்களுக்கு மேம்படுத்தப்பட்ட சம்பளம், தனி சம்பளம் வழங்க வேண்டும். துணை கலெக்டர் பட்டியலை அதிகப்படியான காலியிடங்களுடன் வெளியிட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வருவாய் அலுவலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து அரசு பேச்சுவார்த்தை நடத்தியும் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்காததால் பிப்., 20 முதல் காலவரையற்ற ஸ்டிரைக்கில் ஈடுபட 12 ஆயிரம் வருவாய் அலுவலர்கள் முடிவு செய்துள்ளனர்.
மாநில நிர்வாகிகள் பார்த்திபன், முருகையன் கூறியதாவது: உயரதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை. துணை தாசில்தார்களுக்கு தனி சம்பளம் 500, தாசில்தார்களுக்கு 1000 ரூபாய் தொடர்ந்து வழங்க வேண்டும். இலவச வேட்டி, சேலை திட்டத்தில் நான்காண்டுகளுக்கான நிதியை ஒதுக்க வேண்டும். இவற்றை வலியுறுத்தி ஸ்டிரைக் நடத்தப்படும். 
புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்வது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய அளவில் ஜன., 8, 9 நடக்கும் வேலைநிறுத்தத்திலும் சங்கத்தினர் பங்கேற்பர் என்றனர்.
-நமது சிறப்பு நிருபர்-

பள்ளிக்கல்வி துறை 'டிவி' ஜன.21 முதல் ஒளிபரப்பு:

தமிழக பள்ளி கல்வி துறையின் 'டிவி' சேனல் ஒளிபரப்பு வரும் 21ம் தேதி முதல் துவங்குகிறது.
தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில், கல்வி தொலைக்காட்சி துவங்கப்பட்டு உள்ளது. பள்ளி 
கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவின்படி, பள்ளி கல்வி முதன்மை செயலர் பிரதீப் யாதவ் மேற்பார்வையில், இயக்குனர் ராமேஸ்வர முருகன் தலைமையிலான குழுவினர், 'டிவி' பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
சென்னை, அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தில், தொலைக்காட்சிக்கான, 'ஸ்டுடியோ' அமைக்கப்பட்டுள்ளது. நவீன வகை கேமராக்கள், படப்படிப்பு கருவிகள், ஆளில்லாவிமானம் ஆகிய வசதிகளுடன், படப்பிடிப்புகள் நடத்தப்படுகின்றன.தினமும், 15க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள், எட்டு மணி நேரம் ஒளிபரப்பாகும். தினமும், இரண்டு முறை மறு ஒளிபரப்பு செய்யப்படும். இந்த நிகழ்ச்சிகள், 'யூ டியூப்'பிலும் பதிவேற்றம் செய்யப்பட உள்ளன.
பள்ளிகளின் பராமரிப்பு, சிறந்த உள்கட்டமைப்பு உள்ள பள்ளிகள், அரசு பள்ளிகளில் ஜொலிக்கும் ஆசிரியர்கள், சிறந்த திறன்களை வெளிப்படுத்தும் மாணவர்கள், கல்வி உதவி தொகை விபரம், அரசு திட்டங்கள், கல்வி செய்திகள் என, பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, தமிழக அரசு கேபிள், 'டிவி'யில், 200ம் எண் ஒதுக்கப்பட்டுள்ளது.வரும், 21ம் தேதி முதல் ஒளிபரப்பை துவங்க, பள்ளி கல்வி துறை திட்டமிட்டுஉள்ளது.

தொழிற்கல்விக்கு மாறிய மாணவர்கள் பிளஸ் 2 தேர்வு எழுத வைப்பதில் சிக்கல்:

பிளஸ் 1 தேர்வில் தோல்வி அடைந்த 28 ஆயிரம் பேரில் பலர் பாலிடெக்னிக், ஐ.டி.ஐ.,க்கு மாறியதால், அவர்களை பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வு எழுத வைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
கடந்த ஆண்டு பிளஸ் 1 தேர்வில் தனித்தேர்வர்களை தவிர்த்து 8.47 லட்சம் பேர் பங்கேற்றனர். இதில் 7.74 லட்சம் பேர் தேர்ச்சி, 73 ஆயிரத்து 800 பேர் தோல்வி அடைந்தனர். தோல்வி அடைந்தவர்களும் தொடர்ந்து பிளஸ் 2 படிக்க கல்வித்துறை உத்தரவிட்டது. ஆனால் பல பள்ளிகள் பின்பற்றவில்லை. இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்கள் பட்டியலில் 28 ஆயிரத்து 167 பேர் விடுபட்டனர். அவர்களை பள்ளிகளில் இருந்து கட்டாயப்படுத்தி வெளியேற்றியது தெரிந்தது.
இதையடுத்து, 'அனைவரையும் பள்ளி மாணவர்களாகவே பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வை எழுத வைக்க வேண்டும்' என தேர்வுத்துறை சமீபத்தில் உத்தரவிட்டது. ஆனால் வெளியேறிய மாணவர்களில் சிலர் தனித்தேர்வர்களாகவும் மாறிவிட்டனர். பலர் பாலிடெக்னிக், ஐ.டி.ஐ.,யில் சேர்ந்துள்ளனர். சிலர் வேலை செய்கின்றனர்.
இதில் தனித்தேர்வர்களையும், வேலைக்கு சென்றோரையும் அழைத்து பள்ளிகள் மூலம் தேர்வு எழுத வைக்க கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால் பாலிடெக்னிக், ஐ.டி.ஐ., யில் படிப்போரை தேர்வு எழுது வைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அதிகாரி ஒருவர் கூறுகையில், 'அவர்களை பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வு எழுத வைப்பது குறித்து தேர்வுத்துறைதான் முடிவு செய்ய வேண்டும்' என்றார்.

பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் எப்போது?

இன்று சட்டப்பேரவையில் இன்பசேகரன் எம்எல்ஏ எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் செங்கோட்டையன் நீதிமன்றத்தில் உள்ள வழக்குகள் முடிவடைந்த உடன் பட்டதாரி ஆசிரியர்கள் பணிநியமனம் செய்யப்படுவார்கள் என தெரிவித்தார்.

பள்ளிக் கல்வித் துறை நிர்வாக சீர்திருத்த தகவல்கள் உண்மையா? வதந்தியா?

2019-20 ஆம் கல்வியாண்டு முதல்
தொடக்கக்கல்வித்துறை பள்ளிக்கல்வித்துறையோடு இணைக்கப்படுகிறது.

*3 முதல் 5 கி மீ சுற்றளவில் உள்ள தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் அருகில் உள்ள உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளோடு இணைக்கப்படுகிறது.

*தொடக்க நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலாவதி ஆகின்றன.(DEEO post ஒழிக்கப்பட்டது போல்)

*நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர்களாக பணி மாற்றம் செய்யப்படக் கூடும்.

*படிப்படியாக தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர்களாக் உட்படுத்தப்படுவர்

.*(காலிப்பணியிடத்திற்கு ஏற்ப, பட்டதாரி பணியிடத்திற்கு ஏற்ப தகுதி மற்றும் பதிவு மூப்பு இருப்பின்)

*மீதம் உள்ளவர் நிலை இறக்கம் செய்யப்படலாம்.


*ஆனால் தற்போது பெறும் ஊதியத்தில் மாற்றம் இராது.


*அனைவரின் முன்னுரிமையும் மாநில அளவில் பேணப்பட உள்ளதாக தெரிகிறது.

*BEO க்கள் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக மாற்றப்பட உள்ளனர்.

*BE0 பணியிடங்களில் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கள் நியமிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.

*BEO அலுவலகம் பார்வை மற்றும் ஆய்வு அலுவலகமாக் மாற்றப்படுகிறது.

*தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள் நீக்கப்படக் கூடும்.

*உதவி பெறும் பள்ளிகளுக்கு 150 மாணவர்களுக்கு மேல் இருந்தால் தான், தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடம் வழங்கப்படும் எனத் தெரிகிறது.

தலைமை ஆசிரியர் பதவி

*மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மட்டுமே இருப்பர்.

உதவி ஆசிரியர்கள் வகை:

*இடைநிலை ஆசிரியர், பட்டதாரிஆசிரியர்,முதுகலை ஆசிரியர்
ஆகிய வகைகள் மட்டுமே

அனைத்து ஆசிரியர்களும், அமைச்சுப் பணியாளர்களும் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் கொண்டுவரப்பட உள்ளனர்.


*அனைத்து ஆசிரியர்களுக்கும் இனி சம்பளம் பெற்று வழங்கும் அலுவலர்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மட்டுமே.

*வட்டாரத்தை கவனிக்க BE0

*கல்வி மாவட் டத்தை கவனிக்க DE0

*மாவட்ட கல்வி நிர்வாகத்தை கவனிக்க CEO

*மேற்கண்டோரின் பணியை மேற்பார்வையிட, 1 அல்லது 2 மாவட்டத்திற்கு ஒரு JD

*இதனை கண்காணிக்க, மண்டல வாரியாக (சுமார்5 அல்லது 6 மாவட்டங்கள்) இயக்குநர்

என்ற வகையில் கண்காணிப்பு வளையம் இருக்கும் என கூறப்படுகிறது.

*பள்ளிக் கல்வி இயக்குநர் மட்டுமே, பள்ளிக் கல்வி இயக்குநர் அலுவலக வளாகத்தில் இருப்பார்.

*பிற இயக்குநர்கள் மண்டல இயக்குநர்களாக, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மண்டல அலுவலகத்தில் பணியாற்றுவர் எனவும் கூறப்படுகிறது.

*இவை அனைத்தும் வாட்ஸ் அப் பகிர்வுகளின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டவை. அரசாணை நடைமுறைக்கு வந்தால் தான், உண்மையான மாற்றங்கள் என்னவென்று தெரிய வரும்.

தகுதி தேர்வை முடிக்காத 30 ஆயிரம் ஆசிரியர்களின் வேலைக்கு ஆபத்து... THANKS TO THANTHI TV


Science Fact - இறப்புக்குப் பின்னர் மனிதர்கள் விழிக்கொடை அளிப்பது போன்று குருதிக் கொடை அளிக்க இயலாதது ஏன் ?

மனித உடலிலுள்ள திசுக்களில் (tissues) இறப்பு, நீக்கவியலாத மாற்றங்களைத் தோற்றுவித்து விடுகிறது. இறப்புக்குப் பிந்தைய இம்மாற்றங்களுக்குக் காரணம் உடல் அணுக்களில் பொதிந்துள்ள அழிவு நொதிகள் (destructive enzymes) மற்றும் நுண்ணுயிரிகள் (microbes) ஆற்றும் வினை; அடுத்த காரணம் உயிர்வாழ்வதற்கு முக்கியத் தேவைகளான உயிர்வளி மற்றும் ஊட்டச்சத்துக்கள் ஆகியன நின்றுபோவது. ஆனால் இம்மாற்றங்கள் உடலின் எல்லா உறுப்புகளிலும் ஒரே நேரத்தில் நிகழ்வதில்லை; உறுப்புக்கு உறுப்பு இம்மாற்றங்கள் நிகழ்வதற்கான காலம் வேறுபடும். இறப்புக்குப் பிந்தைய மாற்றங்கள் குருதியில் உடனடியாக உண்டாகின்றன. சாவுக்குப்பின் இதயத்தில் குருதி ஓட்டம் நின்றுபோவதால், இறந்த உடலில் இருந்து வலிந்து குருதியை வெளிக்கொணர வேண்டும். அப்போது நுண்ணுயிரிகளின் (micro organisms) தொடர்பால் குருதி மாசடைந்து போகும். மாசடைந்த குருதியைப் பயன்படுத்த இயலாதல்லவா ? இவையனைத்தையும் விட முக்கியமான காரணம் ஒருவர் உடலில் குருதிக் கொடையளித்த சில நாட்களுக்குள் மீண்டும் புதுக்குருதி ஊறிவிடும். குருதிக் கொடையளிக்கும் நல்ல உள்ளம் கொண்ட பலர் உலகில் உள்ளனர்; எனவே பிணத்தில் இருந்து அதனைப் பெறவேண்டிய கட்டாயம் இல்லை. அடுத்து சிறுநீரகம், இதயம், விழிகள் ஆகிய உறுப்புகளில் இறப்புக்குப் பிந்தைய மாற்றங்கள் சற்று தாமதமாக நிகழும். எனவே இறந்த உடனே அவற்றை எடுத்துத் தகுந்த பாதுகாப்பு முறைகளைக் கையாண்டு பதப்படுத்தி வைத்தால் வேறோர் உடலில் பொருத்திட இயலும். மேலும் உயிரோடிருக்கிற ஒருவர் கண்களைக் கொடுத்தால், அது அவருக்கு நிரந்தர இழப்பாக அமைந்துவிடும். எனவே தான் இறந்தவர் உடலில் இருந்து அதனைப் பெறுகிறோம்.

பணியாளர் கூட்டுறவு கடன் சங்கத்தில் கடன் பெறும் போது இனி 5% பங்குத் தொகை கட்டினால் போதும் என்பதற்கான உத்தரவு...

Flash News : அங்கன்வாடி மையத்துக்கு ஆசிரியர் ஒதுக்கீடு, ஒன்றிய அளவில் இளையவரான ஒருவரை, அல்லது அருகில் உள்ள ஒன்றியத்தில் இருந்து ஒருவரை ஒதுக்க இயக்குநர் பட்டியல் கேட்பு.

4/1/19

நீதிக்கதை---சிந்தனை கதைகள்



ஒரு ஊரில் ஒரு கருமி வாழ்ந்து வந்தார்..

அவர் மிகப்பெரிய பணக்காரர்.. ஆனால் யாருக்கும் உதவ மாட்டார்..

ஆனால், ஒரு ஆசை மட்டும் வெகுநாட்களாக இருந்தது..

தான் உயிருடன் இருக்கும்போதே.. சொர்க்கத்தையும் நரகத்தையும் பார்த்துவிட வேண்டும் என்ற ஆசை தான் அது..

ஒருநாள், அவரது கனவில் ஒரு பெரியவர் தோன்றினார்..

அவரின் ஆசையை நிறைவேற்றுவதாக கூறினார்..
அவரை அழைத்துக் கொண்டு சென்றார்.முதலில் அவரை நரகத்திற்கு கூட்டி சென்றார்.._

அங்கு உணவு நேரத்தில் பெரிய, பெரிய அண்டாக்களில் சாதம்.. குழம்பு.. மற்றும் சுவைமிக்க பதார்த்தங்களும் இருந்தன..
அவரவர்களுக்கு தட்டுகள் கொடுக்கப்பட்டு சுவைமிக்க உணவு பரிமாறப்பட்டது..

எல்லோருக்கும் நாவில் எச்சில் ஊறியது..

ஆனால், அந்தோ பரிதாபம்..

அனைவராலும் கையை நீட்டி உணவுப் பொருளை எடுக்க முடிந்ததே தவிர, கையை மடக்கி வாய்க்கு உணவை கொண்டு செல்ல முடியவில்லை..

எனவே, அறுசுவை உணவு எதிரே இருந்தும் அவர்களால் உண்ண முடியவில்லை.. அவர்களுக்கு பசியோடு ஆத்திரமும் சேர்ந்து கொண்டது.. அனைத்தையும் கீழே தள்ளிவிட்டு.. அவற்றில் உள்ள உணவை கொட்டித் தள்ளினர்.. பின்னர் தாங்க முடியாத பசியினால் அழுது கொண்டே இருந்தனர்.. அது ஒரு போர்க்களம் போல் காட்சியளித்தது..

அதன் பின்னர், அந்த பெரியவர் கருமியை சொர்க்கத்திற்கு அழைத்துச் சென்றார்.. அங்கும், அதே போல.. நிறைய அருமையான சாப்பாடு வைக்கப்பட்டுருந்ததது.. அங்கு இருந்தவர்களுக்கும் கையை நீட்ட முடிந்தது.. ஆனால் தங்கள் வாய்க்கு அருகில் கொண்டு செல்ல கையை மடக்க முடியவில்லை..

ஆனால், அவர்களில் ஒருவர் தனது கையினால் இனிப்பு வகைகளை எடுத்து மற்றொருவர் வாய் அருகே நீட்டினார்..

கையை மடக்கத்தானே முடியாது.. கையை நீட்டி எதிரே இருப்பவரின் வாயில் ஊட்டலாமல்லவா..

இப்படியே அனைவரும் ஒருவருக்கொருவர் ஊட்டி மகிழ்ந்தனர்.. அனைவரின் வயிறும் நிரம்பியது..

கனவில் இருந்து மீண்ட கருமி.. ஒருவருக்கொருவர் உதவி செய்து வாழ்வதே சொர்க்கம் என்பதை புரிந்து கொண்டார்.. தான் மட்டும் சுகமாய் வாழ நினைப்பது நரகம் என்பதை உணர்ந்தார்.. அன்றிலிருந்து அவர் அனைவருக்கும் உதவிகள் பல புரிந்து நல்வாழ்வு வாழ்ந்தார்..

குரூப்-1 பதவிக்கு 21ம் தேதி நேர்காணல்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

துணை கலெக்டர், டிஎஸ்பி உள்ளிட்ட குரூப் 1 பதவிக்கான நேர்காணல் வருகிற 21ம் தேதி தொடங்கும்  என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது


இது குறித்து டி.என்.பிஸ்.சி. நேற்று வெளியிட்ட அறிவிப்பு


 குரூப்-1 முதன்மை எழுத்துத்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான நேர்முகத்தேர்வு சென்னையில் உள்ள  தேர்வாணைய அலுவலகத்தில் வருகிற 21ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடைபெற உள்ளது


இது தொடர்பான தகவல்  விண்ணப்பதாரர்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் (இ-மெயில்) வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது


  மேலும், நேர்முகத்தேர்வுக்கான குறிப்பாணையை www.tnpsc.gov.in என்ற இணையதளத்திலிருந்து  பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்


விண்ணப்பதாரர் அவரவர்களுக்கென ஒதுக்கப்பட்ட நாளில் நேர்காணல் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.  குறிப்பிட்ட நாள் மற்றும் நேரத்தில் கலந்து கொள்ளாத விண்ணப்பதாரர்களுக்கு மறுவாய்ப்பு வழங்கப்படமாட்டாது


 நேர்காணல் தேர்விற்கு அழைக்கப்பட்டதாலேயே அவர்கள் தெரிவு செய்யப்பட்டதாகவும்,  முழுத் தகுதி பெற உறுதி  அளிக்கப்பட்டதாகவும் கருத இயலாது. இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது

ஜனவரி 23, 24ம் தேதிகளில் பத்தாம் வகுப்பு தனி தேர்வர்கள் தட்கலில் விண்ணப்பிக்கலாம்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை தனித் தேர்வர்களாக எழுத விரும்பும் மாணவர்கள் 7ம் தேதி முதல் 14ம் தேதி வரை சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம்


 இந்த தேதிகளில் விண்ணப்பிக்கத் தவறும் மாணவர்கள் 23 மற்றும் 24ம் தேதிகளில் சிறப்பு அனுமதி திட்டத்தின்(தட்கல்) கீழ் விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது


 தமிழகத்தில் மார்ச் மாதம் நடக்க இருக்கும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விரும்பும் தனித் தேர்வர்கள் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வு சேவை மையங்களுக்கு நேரில் சென்று 7ம் தேதி முதல் 14ம் தேதி வரை விண்ணப்பிக்க வேண்டும்


நேரடித் தனித்தேர்வர்கள் அனைவரும் பகுதி 1ல் மொழிப்பாடத்தை தேர்வு செய்யும்போது கண்டிப்பாக தமிழ் மொழியை முதல் மொழிப்பாடமாக எழுத வேண்டும்


முதல் முறையாக விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் 2019 மார்ச் 1ம் தேதி பதினான்கரை வயது பூர்த்தி அடைந்து இருக்க வேண்டும்


 மத்திய, மாநில அரசுப் பள்ளிகளில் 8ம் வகுப்பு தேர்வில் ஆங்கிலத்துடன் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியர், 9ம் வகுப்பு வரை படித்து இடையில் நின்றவர்கள், பிற துறையால் நடத்தப்படும் 8ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்


 பத்தாம் வகுப்பு தேர்வில் அறிவியல் பாடத் தேர்வு இருப்பதால், செய்முறைப் பயிற்சி வகுப்புக்கு விண்ணப்பித்து செய்முறைத் தேர்வு எழுதிய பிறகே அறிவியல் பாடத் தேர்வை எழுத முடியும். செய்முறை பயிற்சி வகுப்பில் சேர கடந்த 8.6.18 முதல் 30.6.2018 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது


மேற்படி தேதிகளில் விண்ணப்பிக்க தவறிய தனித் தேர்வர்கள் தற்போது அறிவிக்கப்படும் தேதியில் பதிவு செய்து 7ம் தேதி முதல் 14ம் தேதி வரை பயிற்சி பெற்று செய்முறைத் தேர்வு எழுத வேண்டும்


ஏற்கெனவே அறிவியல் பாடத் தேர்வில் தோல்வி அடைந்தவர்கள் செய்முறை அல்லது எழுத்து தேர்வு இதில் எந்த பகுதியில் தோல்வி அடைந்தார்களோ அதற்கு மட்டும் விண்ணப்பிக்கலாம்


 தனித் தேர்வர்கள் தங்கள் விண்ணப்பங்களை அந்தந்த மாவட்டத்தில் உள்ள சேவை மையங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். சேவை மையங்கள் குறித்த விவரங்கள் www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்


 பத்தாம் வகுப்புக்கு தனித் தேர்வர்கள் செலுத்த வேண்டிய தேர்வுக் கட்டணம் ₹125, ஆன்லைன் பதிவுக் கட்டணம் ₹50 சேர்த்து செலுத்த வேண்டும். தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்கும் கல்வி மாவட்டத்தில் அமைக்கப்படும் தேர்வு மையங்களில் மட்டுமே தேர்வு எழுத வேண்டும்


 மேற்குறிப்பிட்ட தேதிகளில் விண்ணப்பிக்க தவறுவோர், சிறப்பு அனுமதி திட்டத்தின்(தட்கல்) கீழ் 23ம் தேதி மற்றும் 24ம் தேதிகளில் ஆன்ைலனில் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும்

அண்ணா பல்கலை வினாத்தாள், 'லீக்' : போலீஸ் விசாரணைக்கு முட்டுக்கட்டை

சென்னை: அண்ணா பல்கலையின் வினாத்தாள், 'லீக்' விவகாரத்தில், பேராசிரியர்கள் மற்றும் அதிகாரிகளை விசாரிக்க, போலீசுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலையில், தேர்வுத் துறை முறைகேடு, பேராசிரியர்கள் நியமனம், நிர்வாக பிரச்னை என, பல்வேறு விதிமீறல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்த விவகாரங்கள் தொடர்பாக, லஞ்ச ஒழிப்பு மற்றும் சி.பி., - சி.ஐ.டி., போலீசார், விசாரித்து வருகின்றனர். தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி முதல், தேர்வு துறையின் பெண் ஊழியர் வரை, முறைகேடு விவகாரங்களில் சிக்கியுள்ளனர்.ஏற்கனவே, விடைத்தாள் மறுமதிப்பீட்டில் கூடுதல் மதிப்பெண் வழங்கிய விவகாரம், கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்நிலையில், டிச., 3ல், பருவத் தேர்வுக்கான கணித வினாத்தாள், லீக் ஆன விவகாரம், அண்ணா பல்கலைக்கு, மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.இந்த பிரச்னையில், இன்ஜி., கல்லுாரிகளின் இரண்டு மாணவர்களும், தேர்வு துறை தலைமை அலுவலக ஊழியர் ஒருவரும், சி.பி., - சி.ஐ.டி., போலீசிடம் சிக்கியுள்ளார். அவர்களிடம், போலீசார் நடத்திய விசாரணையில், பல தேர்வுகளுக்கு வினாத்தாள் லீக் ஆனதாக, தகவல் வெளியாகியுள்ளது.முந்தைய தேர்வுகளில் வினாத்தாள் கசிந்தாலும், அவை ரகசியமாக வைக்கப்பட்டதால், ஊழியர்கள் யாரும் சிக்கவில்லை என்றும், இந்த முறை, 'வாட்ஸ் ஆப்'பில் பகிர்ந்ததால் சிக்கியதும், தெரிய வந்துள்ளது. எனவே, இந்த பிரச்னையில், தேர்வுத் துறையின் முக்கிய பதவிகளில் உள்ளவர்கள், பேராசிரியர்கள், அதிகாரிகளுக்கு தொடர்பு இருக்கலாம் என, போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர்.இதுகுறித்து, சந்தேகத்துக்குரிய அதிகாரிகளிடம் விசாரணை நடத்த, முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் பேராசிரியர்களை விசாரிக்க, அண்ணா பல்கலை தரப்பில் ஒப்புதல் அளிக்கவில்லை என, கூறப்படுகிறது.இதனால், வினாத்தாள், லீக் ஆன வழக்கு விசாரணையில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. உண்மையை கண்டறிய, போலீஸ் விசாரணைக்கு, அண்ணா பல்கலை நிர்வாகம் ஒத்துழைக்க வேண்டும் என, மாணவர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துஉள்ளது.

குறைந்த மதிப்பெண் பெற்றுள்ள மாணவர்களை வெளியேற்ற தடை

சென்னை: 'அரையாண்டு தேர்வில், குறைந்த மதிப்பெண் பெற்ற, பிளஸ் 1 மாணவர்களை, பள்ளிகளில் இருந்து வெளியேற்ற முயற்சிக்க கூடாது' என, தனியார் பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

தமிழகம் முழுவதும், பள்ளிக் கல்விப் பாடத் திட்டத்தில், அரையாண்டு தேர்வு முடிந்து, விடுமுறை விடப்பட்டது. நேற்று, மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. ஒன்று முதல், ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, மூன்றாம் பருவ பாடங்கள் துவங்கியுள்ளன. மற்ற வகுப்புகளுக்கு, பொதுத் தேர்வுக்கான ஆயத்த பணிகள் துவங்கியுள்ளன.இந்நிலையில், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 ஆகிய வகுப்பு மாணவர்கள், பொதுத் தேர்வில், 100 சதவீதம் தேர்ச்சி பெற வேண்டும் என, தனியார் பள்ளிகள் இலக்கு நிர்ணயித்துள்ளன. இந்த தேர்ச்சி சதவீதம் அடிப்படையில், வரும் கல்வி ஆண்டில், மாணவர் சேர்க்கையை நடத்தவும், கட்டணம் நிர்ணயிக்கவும், பல பள்ளிகள் முடிவு செய்துள்ளன.எனவே, 100 சதவீத தேர்ச்சி பெற, மதிப்பெண் குறைந்த மாணவர்களுக்கு, சிறப்பு பயிற்சி வழங்கப்படுகிறது. அதேநேரம், அரையாண்டு தேர்வில், மிகக் குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களை, டி.சி., கொடுத்து வெளியேற்ற, சில பள்ளிகள் முயல்வதாக, புகார்கள் எழுந்துள்ளன. அவர்களை, பொதுத் தேர்வு எழுத விடாமல் முடக்கவும், சில பள்ளிகள் முயற்சிக்கின்றன.கடந்த ஆண்டுகளில், பல பள்ளிகளில், குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு, 'ஹால் டிக்கெட்' வழங்கப்படாமல் பிரச்னை ஏற்பட்டது. இந்த ஆண்டு, அது போல பிரச்னை ஏற்படாமல், தனியார் மற்றும் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள், முன் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். எந்த மாணவருக்கும், டி.சி., கொடுத்து, கட்டாயமாக வெளியேற்றக் கூடாது என, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

ஜனவரி 8,9 இருநாட்கள் நடைபெறும் வேலைநிறுத்தப் பேராட்டத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பங்கேற்பு - பொதுச்செயலாளர் தகவல்.

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் 16.12.2018 மாநிலச் செயற்குழு தீர்மானத்தின்படி 2019 ஜனவரி 8,9 இருநாட்கள் நடைபெறும் அகில இந்தியப் பொது வேலைநிறுத்தப் பேராட்டத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பங்கேற்கிறது.
*மேற்படி வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக அனைத்து மாவட்டக் கிளைகளும் துண்டுப்பிரசுரம் மற்றும் வால்போஸ்டர் வெளியிட மாதிரி இத்துடன் அனுப்பப்பட்டுள்ளது.விரைந்து துண்டுப்பிரசுரம்,வால்போஸ்டர் வெளியிட்டு களப்பணியாற்ற அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

*தோழமையுடன்
*ச.மயில்
*பொதுச்செயலாளர்
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி

8,909 அரசுப் பள்ளிகளில் 25-க்கும் குறைவான மாணவர்கள் உள்ளனர் : குறைவான மாணவர்கள் எண்ணிக்கையில் சேலம் மாவட்டம் முதலிடம்

தமிழகத்தில் 8 ஆயிரத்து 909 அரசுப் பள்ளிகளில் 25-க்கும் குறைவான மாணவர்களே படித்து வருகின்றனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதில், மிகக் குறைவான மாணவர்கள் கொண்ட மாவட்டங்களில் சேலம் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.
சத்துணவு சாப்பிடும் 10-ஆம் வகுப்பு வரையிலான அரசுப் பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை குறித்து சமூக நலத்துறை மூலம் அண்மையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், 8 ஆயிரத்து 909 அரசுப் பள்ளிகளில், 25-க்கும் குறைவான மாணவர்கள் படித்து வருவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.

இந்தப் பட்டியலில் சேலம் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. இந்த மாவட்டத்தில் 821 பள்ளிகளில் 25-க்கும் குறைவான மாணவர்கள் படித்து வருகின்றனர். இரண்டாவது இடத்தில் வேலூர் (451), மூன்றாவது இடத்தில் ராமநாதபுரம் (420), நான்காவது இடத்தில் சிவகங்கை (417), ஐந்தாவது இடத்தில் திருப்பூர் (409) ஆகிய மாவட்டங்கள் உள்ளன.
அதேபோன்று ஆறாவது இடத்தில் திண்டுக்கல் (385), ஏழாவது இடத்தில் திருநெல்வேலி (371), எட்டாவது இடத்தில் ஈரோடு (355) ஆகிய மாவட்டங்களும் உள்ளன.
தலைநகரான சென்னையில் மொத்தம் 55 பள்ளிகளில் 25-க்கும் குறைவான மாணவர்கள் படித்து வருகின்றனர். இதேபோன்று தமிழகத்தின் 32 மாவட்டங்களின் விவரங்களும் வெளியாகியுள்ளன. அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து வருவது, மீண்டும் ஒரு முறை சமூகநலத்துறை மேற்கொண்ட ஆய்வின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2, 2ஏ தேர்வு இணைப்பு இல்லை' :

குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகளை இணைக்கும் எவ்வித திட்டமும் இல்லை
இரு தேர்வுகளும் ஒரே மாதத்தில் நடத்த திட்டமிட்டுள்ளோம்,'' என, டி.என்.பி.எஸ்.சி., செயலாளர் நந்தகுமார் தெரிவித்தார்
டி.என்.பி.எஸ்.சி., ஆண்டு தேர்வு திட்ட அட்டவணை, நேற்று முன்தினம் வெளியானது
இதில், குரூப் 1, 2, 2ஏ, 4 உள்ளிட்ட அனைத்து முக்கிய தேர்வுகளும், இந்த ஆண்டுக்கான அட்டவணையில் வந்திருப்பது, தேர்வர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும், குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுகள் ஒரே மாதத்தில் குறிப்பிட்டிருப்பது, தேர்வர்கள் மத்தியில் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது
கடந்தாண்டு, குரூப்4 மற்றும் வி.ஏ.ஓ., தேர்வுகள் ஒருங்கிணைத்து நடத்தியதும், இக்குழப்பத்துக்கு முக்கிய காரணம்
இது தொடர்பாக, சமூகவலைத்தளங்களில், குரூப் 2, 2ஏ தேர்வுகள் இணைக்கப்பட்டு விட்டதாகவும், முதன்மை தேர்வுகளுக்கு பதிலாக இரண்டுக்கும் பொதுவாக முதல்நிலை எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவர் எனவும் தகவல் பரவியுள்ளது
டி.என்.பி.எஸ்.சி., செயலாளர் நந்தகுமாரிடம்கேட்டபோது, ''இரண்டு தேர்வுகளையும் ஒரே மாதத்தில் நடத்த திட்டமிட்டுள்ளோம்
ஆனால், தேர்வுகளை ஒருங்கிணைக்கும் எவ்வித திட்டமும் தற்போது இல்லை. மாற்றம் இருப்பின், முன்கூட்டியே தெரிவிப்போம்,'' என்றார்

53 தலைமையாசிரியர் பணியிடம் கேள்விக்குறி: வருகிறது பள்ளிகள் ஒருங்கிணைப்பு திட்டம் :

கோவையில், 53 பள்ளிகள் ஒரே வளாகத்தில் செயல்படுவதால், அங்குள்ள தொடக்கப்பள்ளி
தலைமையாசிரியரை, கற்பித்தல் பணிகளில் ஈடுபடுத்த கல்வித்துறை திட்டமிட்டுள்ளது
தமிழகம் முழுக்க, ஒரே வளாகத்தில் செயல்படும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளின் பட்டியல் திரட்டப்பட்டுள்ளது
இதில், 3 ஆயிரத்து 133 பள்ளிகள் கண்டறியப்பட்டுள்ளன
இங்கு, தொடக்க வகுப்புகளுக்கு தனியாகவும், உயர்நிலை அல்லது மேல்நிலை வகுப்புக்கு தனியாகவும் என, இரு தலைமையாசிரியர்கள் உள்ளனர்
ஒரே வளாகத்தில் செயல்படும் இரு பள்ளிகளுக்கு, இரு தலைமையாசிரியர்கள் இருப்பதால், நிர்வாக ரீதியாக, சில சிக்கல்கள் இருப்பது தெரியவந்துள்ளது
எனவே, ஒரு தலைமையாசிரியரின் கீழ், அனைத்து வகுப்புகளையும் இணைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது
கோவையில், 53 உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள், ஒரே வளாகத்தில் செயல்படுகின்றன
இங்குள்ள தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்களை, கற்பித்தல் பணிகளில் ஈடுபடுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது
இதோடு, ஒரே தலைமையாசிரியர், உதவி தலைமையாசிரியர் மூலம், நிர்வாக பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது
சி.இ.ஓ.,க்கள் கருத்துசென்னையில் சமீபத்தில் நடந்த, முதன்மை கல்வி அலுவலர்களுக்கான கூட்டத்தில், முதன்மை செயலாளர் பிரதீப்யாதவ் இது குறித்து விவாதித்துள்ளார்
தரம் உயர்த்தப்படும் பள்ளிகளில், இனி ஒரு தலைமையாசிரியர் பணியிடம் மட்டுமே உருவாக்கலாம் என, இக்கூட்டத்தில் சி.இ.ஓ.,க்கள் கருத்து தெரிவித்துள்ளனர்
இதை கல்வித்துறை பின்பற்ற முடிவெடுத்துள்ளது*l
அதிகாரபூர்வ தகவல் வந்தால் தெரியும்
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணனிடம் கேட்டபோது,''கோவையில் 53 பள்ளிகள் ஒரே வளாகத்தில் செயல்படுகின்றன
இதன் பட்டியலை, வட்டார வாரியாக, இயக்குனரகத்துக்கு சமர்ப்பித்துள்ளோம்
தலைமையாசிரியர்களை கற்பித்தல் பணிகளில், ஈடுபடுத்துவது குறித்து, அதிகாரபூர்வ தகவல் வெளியிட்டால் தான் தெரியவரும்,'' என்றார்

கல்வித்துறை உதவியுடன் 27 பள்ளிகளில் மாணவர் காவல் படை துவக்கம்:

திருவள்ளூரில் முதற்கட்டமாக 27 பள்ளிகளில், கல்வித்துறை உதவியுடன்நேற்று மாணவர் காவல் படை துவக்கப்பட்டது. இதனால், சமூகத்தில் நடக்கும் பல சீர்கேடுகள் களையப்பட வாய்ப்பு அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளில், செடிகளை பாதுகாப்பதற்கு பசுமை படை, சுகாதாரம் மேம்பாட்டிற்கு நாட்டு நலப்பணி திட்டம், மருத்துவம் தொடர்பாக ‘’ஜூனியர் ரெட் கிராஸ்’’’’,அறநெறி தொடர்பான விழிப்புணர்விற்கு பாரத சாரண சாரணியர் இயக்கம் போன்ற அமைப்புகள் உள்ளன.

இந்நிலையில், சட்டம் - ஒழுங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு, கல்வித்துறையுடன் சேர்ந்து மாவட்டம் முழுவதும், 132 பள்ளிகளில், மாணவர் காவல் படை துவக்கப்பட உள்ளது. நேற்று திருவள்ளூரில் 27 பள்ளிகளில் மாணவர் காவல் படை துவக்கப்பட்டது. விழாவிற்கு கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமை வகித்தார். ஏடிஎஸ்பி சிலம்பரசன், டிஎஸ்பிக்கள் கங்காதரன், சர்தார், மாவட்ட கல்வி அலுவலர் குமாரசாமி முன்னிலை வகித்தனர். 
இதில், மாவட்ட எஸ்.பி., பொன்னி கலந்துகொண்டு பேசுகையில், ‘’எட்டு மற்றும் ஒன்பதாம் வகுப்பு மாணவ, மாணவியரை ஒரு வகுப்புக்கு தலா 22 மாணவர்கள் வீதம், 44 பேர் தேர்வு செய்யப்பட்டு, சாலை பாதுகாப்பு, சட்டம் - ஒழுங்கு தொடர்பான விழிப்புணர்வு உள்ளிட்ட 15 தலைப்புகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.  இவர்களுக்கு, வாரத்திற்கு ஒரு நாள் சிறப்பு வகுப்பு மூலம், காவல், தீயணைப்பு, மருத்துவம் உள்ளிட்ட பல துறை அதிகாரிகள், சிறப்பு வகுப்பில் பங்கேற்று விழிப்புணர்வு பயிற்சி அளிக்க உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை கல்வித்துறை மேற்கொள்ள உள்ளது’’’’ என்றார். இதில், இன்ஸ்பெக்டர்கள் வெங்கடேசன், தமிழ்வாணன், ரஜினிகாந்த், முருகன், முரளிதரன், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் வேணுகோபால் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
விழிப்புணர்வு பயிற்சிகள்
மாணவர் காவல் படையில் உள்ள மாணவர்களுக்கு குற்றம் தடுப்பு சார்ந்த நற்பண்புகள், சாலை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு, வரதட்சணை, பாலியல் துன்புறுத்தல், ஜாதி வன்கொடுமை உள்ளிட்ட சமுதாயத்திற்கு எதிரான தீய பழக்கங்களை களைதல், நல்ல தொடுதல், தீய தொடுதல் என குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு, நல் ஒழுக்கத்துடன் நற்போதனை, சகிப்பு தன்மை வளர்த்துக் கொள்ளுதல் மற்றும் பிறரிடம் நடந்துக் கொள்ளும் முறை குறித்த விழிப்புணர்வு, மனம் மற்றும் உணர்வுகளை கட்டுப்படுத்தும் முறைகள், பெரியவர்களை மதித்தல் போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.

கோவை: அரசு வேலை வாங்கி தருவதாக, தன்னிடம் படித்த மாணவர் மற்றும் அவரது தந்தை, நான்கு லட்சம் ரூபாய் மோசடி செய்து விட்டதாக, பாதிக்கப்பட்டவர், போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார்:

கோவை: அரசு வேலை வாங்கி தருவதாக, தன்னிடம் படித்த மாணவர் மற்றும் அவரது தந்தை, நான்கு லட்சம் ரூபாய் மோசடி செய்து விட்டதாக, பாதிக்கப்பட்டவர், போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார்.கரூர், சின்னதாராபுரம், நடுப்பாளையத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ், 31. இவர் நேற்று, கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகார்:எங்கள் ஊரில், பைப் கம்பெனி நடத்தி வருகிறேன். 2015ம் ஆண்டு, கோவை, தனியார் இன்ஜி., கல்லுாரியில் பேராசிரியராக பணியாற்றினேன். அப்போது, என்னிடம் கோவைபுதுாரைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன், 50, என்பவரின் மகன் ஹரிநாராயணன், 23, படித்தார்.தன் தந்தை அரசியலில் மேலிட செல்வாக்கு உடையவர் எனவும், பொதுப்பணித் துறையில் வேலை வாங்கி தருவதாகவும், ஹரிநாராயணன் தெரிவித்தார். பின், அவரது தந்தையை அறிமுகம் செய்து வைத்தார். 'அரசு வேலைக்கு, 4 லட்சம் ரூபாய் செலவாகும்; பணம் கொடுத்தால் உடனடியாக பணி வாங்கி தருகிறோம்' என, தெரிவித்தனர்.இதை நம்பி, 4 லட்சம் ரூபாய் கொடுத்தேன். மூன்று ஆண்டுகளாக வேலையும் வாங்கி தராமல், பணத்தையும் திருப்பி தராமல் உள்ளனர். கேட்டால், 'பணத்தை கொடுக்க முடியாது; வெளியே சொன்னால், குடும்பத்துடன் கொலை செய்து விடுவோம்' என, மிரட்டல் விடுக்கின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு, போலீசாருக்கு, மாநகர போலீஸ் கமிஷனர், சுமித்சரண் உத்தரவிட்டுள்ளார்.

பெற்றோர்-மாணவர் குறை தீர்க்க தீர்ப்பாயம் நாடு முழுவதும் ஒரே பாட திட்டம்: அரசு பரிசீலிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு:

பெற்றோர் - மாணவர் குறை தீர்க்க தீர்ப்பாயம் போன்ற அமைப்பை ஏற்படுத்தவும், நாடு முழுவதும் ஒரே பாடதிட்டம் கொண்டுவரவும் அரசு பரிசீலிக்க வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது
*நெல்லை பாளையங்கோட்டையைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணன், மாயமான தனது மகளை ஆஜர்படுத்தக் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்திருந்தார். விசாரணையின் போது, அந்த மாணவி ஆஜர்படுத்தப்பட்டார்
*அப்போது, தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால், தந்தை கண்டிப்பார் என்ற பயத்தில் வீட்டிலிருந்து வெளியேறியதாகக் கூறியுள்ளார்
*இதையடுத்து, ஆட்கொணர்வு மனுவை முடித்து வைத்த நீதிபதிகள், மாணவர்களின் உளவியல் ரீதியான மன அழுத்தத்திற்கு தீர்வு காணவேண்டும்.
எனவே, தொழில்நுட்ப கல்வி இயக்குனர் தலைமையிலான குழுவினர் தற்ேபாதைய கல்வி மற்றும் தேர்வு முறை, பெற்றோர்-ஆசிரியர் உறவு, மாணவர்-ஆசிரியர் சந்திக்கும் சவால்கள் மற்றும் பிரச்னைகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தனர்
இதன்படி, அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, நீதிபதிகள் எஸ்.விமலா, டி.கிருஷ்ணவள்ளி ஆகியோர் அரசு மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு அளித்த உத்தரவு
மாணவர்கள் நல்ல மனநிலையில்தான்  இருக்கிறார்கள் என்பதை உறுதி செய்ய வட்டார அளவில் குழுக்கள் அமைக்க வேண்டும்
பெற்றோர்-ஆசிரியர் கூட்டங்களில் பங்கேற்காதவர்களின் கருத்துக்கள் மற்றும் குறைகளை தொலைபேசியில் தெரிவிக்கும் நடைமுறையை கொண்டு வர வேண்டும். மாணவர்களின் உடல் நலம், கல்வி திறன் உள்ளிட்ட விபரங்களை பதிவேட்டில் அந்தந்த ஆசிரியர்கள் பராமரிக்க வேண்டும்
நாடு முழுவதும் ஒரே பாடதிட்டத்தை கொண்டு வருவது குறித்து அரசு பரிசீலிக்கவேண்டும். மாணவர்களின் கல்வி திறன், மனநிலையை மேம்படுத்த தேவையான வழிகாட்டுதல்களை கையேடாக மாவட்ட நூலகத்தினர் வெளியிட வேண்டும்
மாணவர்களுக்கு தேவையான வழிகாட்டுதல்கள் மற்றும் கல்வி முறையை அவ்வப்போது தெரிந்து கொள்ளும் வகையில் ஆசிரியர்களிடையே வாட்ஸ்அப் குழு ஏற்படுத்த வேண்டும்
மாணவர்களுக்கு ஒழுக்கம், நன்னெறி, வழிகாட்டுதல்கள் வழங்க கருத்தரங்குகளும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட வேண்டும். மேல்படிப்பிற்கு வழிகாட்டும் வகையில் ஆண்டுதோறும் கண்காட்சி நடத்த வேண்டும்
பாடங்கள், அரசு உதவிகள், விண்ணப்பிக்கும் வழிமுறை உள்ளிட்டவற்றை மாணவர்கள் சிரமமின்றி அறிந்து கொள்ள ஒருங்கிணைந்த வெப்சைட் ஏற்படுத்த வேண்டும்
மாணவர்கள், பெற்றோரின் குறைகள், பரிந்துரைகள், கருத்துக்களை தெரிவிக்க தீர்ப்பாயம் போன்ற அமைப்பை ஏற்படுத்த வேண்டும்
எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் மேற்படிப்பிற்கு வழிகாட்டும் பொறுப்பை தலைமை ஆசிரியர்கள் ஏற்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்

மாணவர்களுக்கு குஷியான செய்தி..! சூப்பர் சலுகை அறிவித்து அரசு அதிரடி..!

அரசு பேருந்துகளில் பள்ளி மாணவர்கள் சீருடை அணிந்திருந்தாலே பயணிக்க
அனுமதி அளிக்க வேண்டும் என போக்குவரத்துத்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
மேலும், கல்லூரி மாணவர்களுக்கு அடையாள அட்டையே போதுமானது எனவும்,புதிய பயண அட்டை வழங்கு வரை, இந்த நடைமுறையை பின்பற்றுமாறு ஓட்டுநர், நடத்துனர்களுக்கு போக்குவரத்துத்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

தமிழகத்தில் இதுவரை பள்ளி, கல்லூரி மாணவர்கள் 1.50 லட்சம் பேருக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தகவல் அளித்துள்ளது. மீதமுள்ள மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் விரைவில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதுமட்டுமல்லாமல், ஸ்மார்ட் கார்டு வடிவில் 1,791 பள்ளிகள், கல்லூரிகளை சேர்ந்த 3.10 லட்சம் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

எந்தெந்த உணவுகளை ஃபிரிட்ஜில் வைக்கலாம், என்ன செய்யக் கூடாது?நன்றி விகடன் :

ப்ரிட்ஜ்... அன்றாட வாழ்க்கையில் நம்மோடு இரண்டறக் கலந்துவிட்ட ஒரு வீட்டு உபயோக சாதனம். இப்போதெல்லாம் டி.வி இல்லாத வீட்டை ஆச்சர்யமாகப் பார்ப்ப்பதுபோல, ஃப்ரிட்ஜ் இல்லாத வீடும் பார்க்கப்படுகிறது. இல்லத்தரசிகளுக்கு ஃப்ரிட்ஜில் இட்லி மாவு தொடங்கி உணவுப் பொருள்களைச் சேமித்துவைப்பது அத்தனை எளிதான வேலையாகிவிட்டது. ஆனால் மீதமான உணவை, குளிர்ந்த நிலையில் வைத்திருந்து, அடுத்த வேளைக்குச் சூடுபடுத்திச் சாப்பிடுவது சில நேரங்களில் ஆபத்தில் முடியும். எந்த உணவையெல்லாம் ஃப்ரிட்ஜில் வைக்கலாம், எதை வைக்கக் கூடாது என்பது குறித்து ஊட்டச்சத்து நிபுணர் அனிதா பாலமுரளி விளக்குகிறார்...

ஃப்ரிட்ஜில் வைக்க கூடாத உணவுகள்

* பால்: பாலை வாங்கி சில மணி நேரங்களில் உபயோகித்து விடுவது நல்லது. அதிகபட்சம் ஒரு நாள் வரை பாதுகாத்துவைக்கலாம். அதற்கு மேலும் வைத்திருந்து பயன்படுத்த நினைப்பவர்கள், ஃப்ரிட்ஜில் வைக்கலாம். ஆனாலும் ஓரிரு தினங்களுக்குள் பயன்படுத்திவிட வேண்டும்.
* வெண்ணெய்: அதிகக் கொழுப்புச்சத்து, குறைவான நீர்ச்சத்துக் கொண்டது வெண்ணெய். வெளிச்சம் அதிகம்படும் இடத்திலோ, காற்றோட்டமான இடத்திலோ வெண்ணெயைவைத்திருந்தால் ஓரிரு நாள்களில் கெட்டுப்போய்விடும். எனவே, அதிக நாள் வைத்திருந்து வெண்ணெயைப் பயன்படுத்த விரும்புகிறவர்கள் ஃப்ரிட்ஜில் வைக்கலாம்.
சீஸ்
* சீஸ்: சீஸ் கெடாமல் இருக்க வேண்டுமென்றால், அதற்குக் கண்டிப்பாக ஃப்ரிட்ஜ் தேவை. சீஸை ஃப்ரிட்ஜுக்குள் வைக்கும்போது பிளாஸ்டிக் பையில் சுற்றி, காற்றே புகாமல் அடைத்துவைப்பார்கள் சிலர். அதைவிட கன்டெய்னர், சின்னச் சின்ன பெட்டிகளில் லேசான காற்றோட்டம் இருப்பதுபோல வைத்திருப்பது அதன் ஆயுட்காலத்தை அதிகரிக்கும்.
* இறைச்சி: அதிகக் குளிரான சூழலில், மிக அதிகமான நேரம் எந்த உணவை ஃப்ரிட்ஜில் வைத்திருந்தாலும், உணவு அதன் தன்மையைஅனிதா பாலமுருகன் இழந்துவிடும். குறிப்பாக, இறைச்சி வகைகள். சமைக்கப்படாத இறைச்சித் துண்டுகளை, ஓரிரு நாள்கள் ஃப்ரிட்ஜில் வைத்திருக்கலாம். சமைத்த இறைச்சியை மூன்று நாள்கள் வரை ஃப்ரிட்ஜில் வைத்திருக்கலாம். அதற்கு மேல் வைத்திருந்தால் உணவின் இயல்பான தன்மை போய்விடும். வெளியே எடுக்கும்போது, கறியின் மேற்பரப்பு கடினமாக மாறியிருக்கும். அதைச் சூடுபடுத்திய பின்னரே, உபயோகப்படுத்த வேண்டும். இறைச்சியில் பாக்டீரியா வளர்வது அதிகமாக இருக்கும். எனவே, தனித் தனி அறைகள் கொண்ட ஃப்ரிட்ஜை இறைச்சியை வைக்கப்பயன்படுத்த வேண்டும்.
* தயிர்: இது, உறைவதற்கு, இரண்டு மணி நேரத்துக்கு மேல் எடுத்துக்கொள்ளும். உறையும் வரை, தயிரை வெளியில் வைத்திருப்பதுதான் நல்லது. அதிக வெப்பநிலையில் தயிரை வெகுநேரத்துக்கு வைத்திருந்தால், அது திரிந்துபோய்விடும். எனவே, உறைந்ததும் ஃப்ரிட்ஜில் வைத்துவிட வேண்டும். எவ்வளவு விரைவாகப் பயன்படுத்துகிறோமோ, அந்த அளவுக்கு நல்லது.
* மருந்து, மாத்திரைகள்: ஒவ்வொரு மாத்திரையிலும் சிரப்பிலும் எந்த வெப்பநிலையில் அதை வைத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடப்பட்டிருக்கும். இன்சுலின் போன்ற மருந்துகளை, குளிர்ச்சியான நிலையில்தான் வைத்திருக்க வேண்டும். அப்படிக் குறிப்பிடப்பட்டிருக்கும் மருந்து, மாத்திரைகளை மட்டும் ஃபிரிட்ஜில் வைத்திருக்கலாம்.
உலர் பழங்கள்
* உலர் பழங்கள்: உலர் திராட்சை, பேரீச்சம் பழம், அத்திப்பழம், பாதாம் போன்ற உலர் பழங்களின் ஆயுட்காலம் மாதக்கணக்கில் இருக்கும். இவற்றை எந்தச் சூழலில் சேமித்துவைத்தாலும், குறிப்பிட்ட காலம் வரை கெடாமல் அப்படியே இருக்கும். அவற்றை ஃப்ரெஷ்ஷாக வைத்திருக்க விரும்புபவர்கள், ஃப்ரிட்ஜில் வைத்துப் பாதுகாக்கலாம்.
* கொத்தமல்லி, கறிவேப்பிலை: இரண்டையும் சுத்தப்படுத்தி, காகிதத்தில் சுற்றி, சிறிது மஞ்சள்வைத்து கட்டிவிட வேண்டும். அப்படியே ஃப்ரிட்ஜில் வைத்தால், ஒரு வாரத்துக்கும் மேல் கெடாமல் இருக்கும்.
ஃப்ரிட்ஜ்
* கீரைகள்: கறிவேப்பிலை, கொத்தமல்லியைப்போலவேதான் கீரைகளும். பல வீடுகளில் ஒரு கட்டுக் கீரையை அப்படியே பயன்படுத்துவதற்குப் பதிலாக, பாதிப் பாதியாகப் பயன்படுத்துவார்கள். சில நாள்கள் கழித்து கீரையைச் சமைத்தால், பாக்டீரியா பாதிப்புகள் ஏற்பட்ட வாய்ப்புள்ளது. அதைத் தடுக்க ஃப்ரிட்ஜ் உதவும். மீதமான கீரைகளைச் சுத்தப்படுத்தி, ஒரு காகிதத்தில் சுற்றி, அதில் மஞ்சள் ஒன்றைப் போட்டுவைத்தல் கீரை ஃப்ரெஷ்ஷாக இருக்கும். கீரையையும் இரண்டு நாள்களுக்குள் பயன்படுத்துவது நல்லது. 
* எலுமிச்சை, ஆரஞ்சு: சிட்ரஸ் பழங்களை குளிர்ந்த, இருண்ட இடத்தில் வைத்திருந்தால், அதன் ஆயுட்காலம் அதிகரிக்கும். எலுமிச்சை, திராட்சை, ஆரஞ்சு போன்ற அனைத்தையுமே அப்படிவைத்திருக்கலாம். எலுமிச்சையை இறுகக் கட்டாமல், லேசானக் காற்றோட்டத்தில் ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும். அதேபோல, சமைப்பதற்கு ஓரிரு மணி நேரத்துக்கு முன்னர் அதை வெளியில் எடுத்துவைத்துவிடவேண்டியது அவசியம். 
கேரட்
* கேரட்: கேரட்டை அறையின் வெப்பநிலையில் வெளியில் வைத்திருந்தால் சில தினங்களில் கெட்டுப்போக வாய்ப்புண்டு. ஆனால், ஃப்ரிட்ஜில் வைத்திருந்தால், விரைவில் கெடாமல் பாதுகாக்கலாம். கேரட்டை முதல் ஓரிரு நாள்களுக்குக் காற்றோட்டமாக, வெளியில் வைத்திருக்க வேண்டும். பிறகு ஃபிரிட்ஜில் வைக்கலாம்.  
* ஸ்ப்ரிங் ஆனியன் (Spring onions): வெங்காய வகைகளிலேயே, இது அதிக ஈரப்பதம் கொண்டது. எனவே, இதை இரண்டு நாள்களுக்கு மேல் வெளியில் வைத்திருக்கக் கூடாது. ஒன்றாகச் சேர்த்துக் கட்டி ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டால், சில வாரங்கள் வரை கெடாமல் இருக்கும்.
ஃப்ரிட்ஜ் என்பது, உணவின் வாழ்நாளை நீட்டிக்க உதவும் ஒரு சாதனம். அதற்காக அனைத்து உணவுப் பொருள்களையும் ஃப்ரிட்ஜில் சேமித்துவைத்துப் பயன்படுத்துவது, அதிக நாள்கள் வைத்திருந்து பயன்படுத்துவது தவறு.

PS கணக்கிலிருந்து GPF கணக்கிற்கு பணத்தை மாற்ற கருவூல தலைமை அதிகாரி அனுமதியளித்து ஆணை!

GPF கணக்கு எண் பெற்று பின்னர் CPS ல் பணிபுரிந்து வரும் அரசு பணியாளர்களுக்கு, மீண்டும் CPS கணக்கிலிருந்து GPF கணக்கிற்கு பணத்தை மாற்ற கருவூல தலைமை அதிகாரி அனுமதியளித்து ஆணை வழங்கியுள்ளார்.

Account by Adjustment | Treasuries Principal Secreatry Proceedings Transfer from CPS to GPF Account by Adjustment | Treasuries Principal Secreatry Proceedings
GPF கணக்கு எண் பெற்று பின்னர் CPS ல் பணிபுரிந்து வரும் அரசு பணியாளர்களுக்கு, மீண்டும் CPS கணக்கிலிருந்து GPF கணக்கிற்கு பணத்தை மாற்ற கருவூல தலைமை அதிகாரி அனுமதியளித்து ஆணை வழங்கியுள்ளார்.



தமிழக அரசு சார்பில் கல்வி தொலைக்காட்சி சேனல் :

தமிழக அரசு சார்பில் பள்ளி மாணவர்களுக்காக கல்வி தொலைக்காட்சி சேனல் தொடங்கப்படுகிறது. வருகிற 21-ந்தேதி முதல் கல்வி தொலைக்காட்சி சேனல் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

                   à®¤à®®à®¿à®´à®• அரசு சார்பில் கல்வி தொலைக்காட்சி சேனல்

சென்னை:

தமிழக அரசு சார்பில் பள்ளி மாணவர்களுக்காக கல்வி தொலைக்காட்சி சேனல் தொடங்கப்படுகிறது.

தொலைக்காட்சி சேனல் சேவையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைப்பார் என்று தெரிகிறது. தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி.யில் சேனல் 200-வது நம்பரில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.


பள்ளி மாணவர்களுக்கு பாடம் சம்பந்தமாக பயிற்சி, போட்டித்தேர்வு, கல்வி உதவித் தொகை தகவல் போன்றவைகள் பற்றிய நிகழ்ச்சிகள் நிபுணர்கள் மூலம் வழங்கப்படுகிறது.


மேலும் பள்ளிக்கல்வி துறை சார்பில் நீட் தேர்வு பயிற்சி அளிக்கவும், மாணவர்கள் தங்களது சந்தேகங்களை நேரலை மூலம் நிபுணர்களிடம் கேட்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

சுமார் 50 ஆசிரியர்கள் கல்வி நிகழ்ச்சிகளை தயாரித்து வருகிறார்கள். கல்வி தொலைக்காட்சி சேனலில் எந்தவொரு விளம்பரமும் இல்லாமல் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்யப்படும்.

இதில் 15 விதமான கல்வி தொடர்பான நிகழ்ச்சிகள் 8 மணி நேரம் ஒளிபரப்பப்படும். இந்த நிகழ்ச்சிகள் ஒரே நாளில் இரண்டு முறைக்கு மேல் மறு ஒளிபரப்பு செய்யப்படும்.

இதன் மூலம் நிறைய மாணவர்கள் பள்ளி முடிந்த பிறகு கல்வி நிகழ்ச்சிகளை பார்க்க முடியும். #EducationTVChannel

நீதிக்கதை :


பறக்கும் போட்டி


அழகர் மலை காட்டுப் பகுதியில் புறாக்கள் கூட்டமாக வசித்துவந்தன. அதில் ஜிக், ஜங் என்ற இரண்டு புறாக்கள் நண்பர்களாக இருந்தன. எப்போதும் சந்தோஷமாகச் சுற்றித் திரிந்தன. இரண்டும் அங்குள்ள ‘கூக்கு’ பள்ளியில் படித்துவந்தன.


அந்தப் பள்ளியில் வேடன் வந்தால் எப்படித் தப்பிப்பது, காட்டு விலங்குகளுடன் எப்படிப் பழகுவது, காட்டை எப்படிப் பரமாரிப்பது, எந்தப் பருவத்தில் எந்தப் பக்கம் உணவு கிடைக்கும் போன்ற பாடங்கள் நடத்தப்பட்டன.

வேடனிடம் தப்பிய புறாக்கள்’, ‘எறும்பும் புறாவும்’ போன்ற கதைகள் அவற்றுக்குப் பாடங்களாக இருந்தன. புறாக்கள் பள்ளியில் ஆண்டுக்கு ஒரு முறை பறக்கும் போட்டி நடத்தப்படும். அந்தப் போட்டியில் வெற்றி பெறும் புறாவே, அடுத்த வருடம் பள்ளியின் தலைவராக இருக்க முடியும்.

போட்டியில் கலந்துகொள்ள முடிவெடுத்தது ஜிக்.

“இது என்ன சாதாரணப் போட்டின்னு நினைச்சிட்டியா ஜிக்? பறக்கும் போட்டி. நாங்க ஆறு மாசமா பறந்து பயிற்சி செஞ்சிட்டிருக்கோம். நீ திடீர்னு கலந்துகிட்டு ஜெயிச்சிட முடியுமா?” என்று சிரித்தது மினு.

உடனே மற்ற புறாக்களும் சிரிக்க ஆரம்பித்தன. இதைப் பார்த்து ஜிக்கின் முகம் சுருங்கியது.

“ஏய் ஜிக், எதுக்கு இப்படி வருத்தப்படறே? பறப்பது ஒண்ணும் நமக்குப் புதுசு இல்லை. நீ கலந்துக்கறே. போட்டியில் வென்று தலைவராகா விட்டாலும்கூடப் பரவாயில்லை. கலந்துகொள்ள வேண்டும் என்ற உன் எண்ணம்தான் முக்கியமானது. நானும் உன்னுடன் சேர்ந்து பயிற்சிக்கு வரேன். நீ கலந்துக்கறே” என்றது ஜங்.

“பறக்கும் பயிற்சி மட்டுமில்லை, உணவுக் கட்டுப்பாடும் ரொம்ப முக்கியம். நாங்க ஆசிரியர் சொல்வதைச் சாப்பிட்டோம். நீங்க ரெண்டு பேரும் கண்டதையும் தின்று, உடல் பெருத்துப் போயிருக்கீங்க. இதில் போட்டிக்குப் பறப்பதெல்லாம் முடியாத காரியம்” என்று மீண்டும் சிரித்தது மினு.

“நீ எதையும் கண்டுகொள்ளாதே. இன்றே பயிற்சியை ஆரம்பிப்போம்” என்று ஜிக்கை அழைத்துச் சென்றது ஜங்.

பயிற்சியின்போது திடீரென்று கீழே விழுந்தது ஜிக். வேடனின் அம்பு ஒன்று ஜிக்கின் காலைப் பதம் பார்த்துவிட்டது. உடனே அதை மறைவான இடத்தில் படுக்க வைத்து, பச்சிலையைப் பறித்து காயத்துக்கு மருந்திட்டது ஜங்.


இரண்டு நாட்கள் ஓய்வில் இருந்தது ஜிக். அதனால் பயிற்சி செய்ய முடியவில்லை. மூன்றாவது நாள் பயிற்சிக்கு வந்துவிட்டது. சற்றுத் தூரம்கூடப் பறக்க முடியவில்லை.

“நல்லா இருக்கும்போதே உன்னால் முடியாதுன்னு சொன்னேன். இப்ப காயம் வேற. பேசாமல் ஓய்வெடு. அடுத்த வருஷம் போட்டியில் கலந்துக்க” என்றது மினு.

ஜிக் அதைக் கண்டுகொள்ளவில்லை.

அனைவரும் தீவிரமாகப் பயிற்சியில் ஈடுபட்டனர். போட்டி நடைபெற இன்னும் நான்கே நாட்கள் இருந்தன. அன்று மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தன. காற்று பலமாக வீசியது. திடீரென்று இடி மின்னலுடன் மழை பெய்யத் தொடங்கியது. புறாக்கள் மரங்களில் பதுங்கிக்கொண்டன. ஜிக்கும் ஜங்கும் மழையைப் பார்த்ததும் குஷியாகிவிட்டன. இரண்டும் மழையில் நனைந்தப்படி பறந்தன.

சிறிது தூரம் சென்றதும் போட்டி நினைவுக்கு வரவே, “ஜிக், மழையில் பறக்க வேண்டாம். ஏதாவது ஆகிவிடப் போகிறது” என்று குகையில் ஒதுங்கியது ஜங். ஆனால், ஜிக் வெகுநேரம் மழையில் நனைந்துவிட்டு வீடு சென்றது. மறுநாள் பள்ளிக்கு வரவில்லை. பள்ளி முடிந்ததும் , மாலை ஜிக்கைச் சந்தித்தது ஜங். மழையில் நனைந்ததால் காய்சலில் படுத்திருந்தது ஜிக். இரண்டு நாட்களுக்குப் பிறகு காய்ச்சல் சரியானது.

அன்று மாலை ஜிக்கைச் சந்தித்த ஜங், “நாளை மறுநாள் போட்டி. உனக்குக் களைப்பாக இருந்தால் போட்டியிலிருந்து விலகிவிடு. கலந்துகொள்ள நினைத்தால் நான் உனக்குப் பக்கபலமாக இருப்பேன். முடிவு உன் கையில்” என்றது.

“என்னால் முடியும்னு தோணுது. நான் போட்டியில் பங்கேற்பேன்” என்றது ஜிக்.

“சரி, வா. கொஞ்ச தூரம் பறக்கலாம்” என்று வெளியில் அழைத்துச் சென்றது ஜங்.

கொஞ்சம் தூரம்கூடப் பறக்க முடியவில்லை. ஜிக்கின் உடல் வலித்தது. அப்படியே ஒரு மரக்கிளையில் அமர்ந்துவிட்டது.

“நண்பா, உன்னால் முடியவில்லை என்றால் வேறு எவராலும் முடியாது. இந்த முறை நீதான் வெற்றி பெறப் போகிறாய். இன்னும் கொஞ்சம் பறப்போம்” என்று ஊக்கப்படுத்தியது ஜங்.

நம்பிக்கையோடு பறந்தது ஜிக். மறுநாள் பள்ளிக்குச் சென்றது. சோர்வான உடலைப் பார்த்து தோற்றுவிடும் என்று நினைத்தன சக புறாக்கள். பயிற்சிப் போட்டியில் மூன்றாம் இடம் வந்தது ஜிக்.

“காய்சலில் விழுந்த உன்னால் மூன்றாம் இடம் வர முடிகிறது என்றால், நாளை நடக்கும் போட்டியில் முழு மனதுடன் முயன்றால் நிச்சயம் வெற்றி பெறுவாய். இப்போதே உன்னை வாழ்த்துகிறேன்” என்றது ஜங்.

ஜிக் மனதில் உற்சாகம் பொங்கியது. மறுநாள் போட்டி தொடங்கியது. வெற்றி பெறும் நம்பிக்கையில் பறக்கத் தொடங்கியது. சில நிமிடங்களில் ஜிக்கின் வேகம் குறைந்தது. மற்ற புறாக்கள் வேகமாக அதை முந்திச் சென்றன. அருகே பறந்துவந்த ஜங், உற்சாகம் ஊட்டி வேகத்தை அதிகப்படுத்தியது.

அரை மணி நேரத்துக்குப் பிறகு விழா மேடைக்கு முதல் புறாவாக வந்துசேர்ந்தது ஜிக். அனைத்துப் புறாக்களும் ஆச்சரியத்தில் திகைத்தன. ஜிக்தான் அடுத்த பள்ளி தலைவர் என்று அறிவிக்கப்பட்டது.

மினுவும் சக நண்பர்களும் ஜிக்கிடம் மன்னிப்புக் கேட்டன.

3/1/19

இந்தாண்டு 29 வகை தேர்வுகள்: டி.என்.பி.எஸ்.சி., பட்டியல்

சென்னை: 'குரூப் - 1, குரூப் - 2, வி.ஏ.ஓ., உட்பட, 29 வகை தேர்வுகள், இந்த ஆண்டு நடத்தப்படும்' என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.
தமிழக அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., சார்பில், இந்த ஆண்டு நடத்தப்பட உள்ள போட்டி தேர்வுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம், 4,365 காலியிடங்களை நிரப்பும் வகையில், 29 போட்டி தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.அவற்றில் சில தேர்வுகள்:= துணை கலெக்டர், டி.எஸ்.பி., வணிக வரித்துறை உதவி கமிஷனர் உள்ளிட்ட பதவிகளுக்கான, குரூப் - 1 தேர்வு, சமூக நலத்துறை பள்ளிகளுக்கான, உதவி கண்காணிப்பாளர் தேர்வு. இளநிலை ரசாயன வியல், உதவி ரசாயனவியலாளர் பதவிக்கான தேர்வு என, நான்கு தேர்வுகள், இந்த மாதம் அறிவிக்கப்படும்= மீன்வள துறை ஆய்வக உதவியாளர், வேலைவாய்ப்பு துறையில், சுருக்கெழுத்து உதவி பயிற்சி அதிகாரி, நெடுஞ்சாலை துறை இளநிலை வரைவு அதிகாரி, இன்ஜினியரிங் பணி போன்றவற்றுக்கு, பிப்ரவரியில் தேர்வு அறிவிக்கப்படுகிறது= அண்ணா நுாலக உதவி நுாலகர், அரசு சட்ட கல்லுாரி நுாலகர், மருத்துவ பணிகள் கழகத்தில் மருந்தாய்வாளர், இளநிலை ஆய்வு அலுவலர் பதவிகளுக்கு, மார்ச்சில் தேர்வு அறிவிக்கப்படும்= தலைமை செயலக பணியில், மொழி பெயர்ப்பாளர், இன்ஜினியரிங் பணி. அருங்காட்சியக காப்பாட்சியர், உதவி சுற்றுலா அதிகாரி போன்ற பதவிகளுக்கான தேர்வுகள்,ஏப்ரலிலும் நடக்கும். குரூப் - 2, தடயவியல் துறை இளநிலை அறிவியல் அதிகாரி உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்வுகள், மே மாதமும் அறிவிக்கப்படுகின்றன= கிராம நிர்வாக அலுவல ரான, வி.ஏ.ஓ., உதவி புவியியலாளர், கெமிக்கல் இன்ஜினியர் பதவி களுக்கு, ஜூன் நடக்கும். தமிழக தொழில்துறையில் கண்காணிப்பாளர் பதவிக்கு, ஜூலை; தமிழக சட்ட கல்வி துறையில், உடற்கல்வி இயக்குனர் பதவிக்கு, ஆகஸ்டிலும் தேர்வு அறிவிக்கப்பட உள்ளது= தமிழக கருவூல துறையில் கணக்கு அதிகாரி பதவிக்கு, நவம்பர்; வன துறை உதவி வன காப்பாளர் பதவிக்கு, டிசம்பரிலும் தேர்வுகள்அறிவிக்கப்பட உள்ளன.தேர்வு இணைப்பு இல்லைடி.என்.பி.எஸ்.சி., குரூப் - 2 மற்றும் 2ஏ தேர்வுகள் ஒரே மாதத்தில் குறிப்பிட்டிருப்பது, தேர்வர்கள் மத்தியில் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது. கடந்தாண்டு, குரூப் - 4 மற்றும் வி.ஏ.ஓ., தேர்வுகள் ஒருங்கிணைத்து நடத்தியதும், இக்குழப்பத்துக்கு முக்கிய காரணம்.இது தொடர்பாக, சமூக வலைதளங்களில், குரூப் - 2, 2ஏ தேர்வுகள் இணைக்கப்பட்டு விட்டதாகவும், முதன்மை தேர்வுகளுக்கு பதிலாக இரண்டுக்கும் பொதுவாக முதல்நிலை எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவர் எனவும் தகவல் பரவியுள்ளது.டி.என்.பி.எஸ்.சி., செயலர் நந்தகுமாரிடம் கேட்டபோது, ''இரண்டு தேர்வுகளையும் ஒரே மாதத்தில், நடத்த திட்டமிட்டுள்ளோம். ஆனால், தேர்வுகளை ஒருங்கிணைக்கும் எவ்வித திட்டமும் தற்போது இல்லை. மாற்றம் இருப்பின், முன்கூட்டியே தெரிவிப்போம்,'' என்றார்.

கடுமையாகிறது 'ஆதார்' சட்டம் ரூ. 1 கோடி அபராதம் விதிப்பு?

புதுடில்லி : 'ஆதார்' சட்ட விதிகளை பின்பற்றாத நிறுவனங்களுக்கு, 1 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 


கடுமையாகிறது,ஆதார் சட்டம்,ரூ. 1 கோடி,அபராதம்,விதிப்பு?

ஆதார் தகவல்களை தனியார் நிறுவனங்கள் பயன்படுத்துவதால், தனி நபர் ரகசியம் வெளியாகும் ஆபத்து இருப்பதாக, பலர் கவலை தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து, ஆதார் அடையாள அட்டை வழங்கும், யு.ஐ.டி.ஏ.ஐ., எனப்படும், ஆதார் அடையாள அட்டை ஆணையத்துக்கு, அரசின் பிற கட்டுப்பாட்டு அமைப்புகள் போல், அதிக அதிகாரங்கள் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 


ஆதார் தகவலை தவறாக பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம், தற்போது, ஆதார் ஆணையத்துக்கு வழங்கப்படவில்லை. 

இந்நிலையில், ஆதார் சட்டத்தில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் செய்ய, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, ஆதார் விதிகளை முறையாக பின்பற்றாத நிறுவனங்களுக்கு, 1 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்க முடியும். ஆதார் விதிகளை தொடர்ச்சியாக மீறி வரும் நிறுவனங்களுக்கு, ஒரு நாளைக்கு, 10 லட்சம் ரூபாய் வீதம், கூடுதலாக அபராதம் விதிக்கும் வகையிலும், புதிய விதிகள் வகுக்கப்பட உள்ளன. 

'ஆதார் இல்லை என்பதால், எந்த குழந்தைக்கும், அரசு வழங்கும் பயன்கள், சேவைகள் மறுக்கப்பட கூடாது' என, விதிகளில் மாற்றம் ஏற்படுத்தப்பட உள்ளது. ஆதார் சட்டத்தின் கீழ், யு.ஐ.டி.ஏ.ஐ., நிதியத்தை ஏற்படுத்தவும்,

மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. மேலும், ஆதார் ஆணையத்துக்கு கிடைக்கும் வருவாய்க்கு, வரி விலக்கு அளிக்கவும், சட்டத்தில் திருத்தம் செய்யப்பட உள்ளது. 

ஆதார் சட்ட திருத்த மசோதா, இந்திய டெலிகிராப் மசோதா, சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட திருத்த மசோதா ஆகியவை, லோக்சபாவில், இன்று அறிமுகம் செய்யப்பட உள்ளன

நீதிக்கதை



தொடர்ந்து சில ஆண்டுகளாக மழையே பெய்யவில்லை. அந்த ஊரில் கடும் பஞ்சம் நிலவியது. மக்கள் பசியால் வாடினர். நல்ல உள்ளம் படைத்த செல்வந்தர் ஒருவரிடம் அந்த ஊர் மக்கள் சென்றனர்.
“”ஐயா! பெரியவர்களாகிய நாங்கள் எப்படியோ பசியைப் பொறுத்துக் கொள்கிறோம். சிறுவர், சிறுமியர்கள் என்ன செய்வர்? இந்த நிலையில் நீங்கள் கட்டாயம் உதவி செய்ய வேண்டும்…” என்று வேண்டினர்.

இளகிய உள்ளம் படைத்திருந்த அவர்,”இந்த ஊரில் குழந்தைகள் யாரும் பசியால் வாட வேண்டாம். ஆளுக்கொரு ரொட்டி கிடைக்குமாறு செய்கிறேன். என் வீட்டிற்கு வந்து ரொட்டியை எடுத்துச் செல்லச் சொல்லுங்கள்!” என்றார்.

மாளிகை திரும்பிய அவர், தன் வேலைக்காரனை அழைத்தார். ”இந்த ஊரில் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கையைக் கணக்கெடுத்துக் கொள். ஆளுக்கொரு ரொட்டி கிடைக்க வேண்டும். கூடவும் கூடாது, குறையவும் கூடாது. நாளையிலிருந்து ரொட்டிகளை கூடையில் சரியான எண்ணிக்கையில் வைத்துக்கொண்டு வீட்டிற்கு வெளியே இரு…” என்றார்.

மறுநாள், வேலைக்காரன் ரொட்டிக் கூடையுடன் வெளியே வந்தான். அங்கே காத்திருந்த சிறுவர், சிறுமியர் அவனைச் சூழ்ந்து கொண்டனர். கூடையை அவர்கள் முன் வைத்தான் அவன்.

பெரிய ரொட்டியை எடுப்பதில் ஒவ்வொருவரும் போட்டி போட்டனர். ஆனால், ஒரே ஒரு சிறுமி மட்டும் அமைதியாக இருந்தாள். எல்லோரும் எடுத்துச் சென்றது போக, மிஞ்சி இருந்த சிறிய ரொட்டியை எடுத்துக் கொண்டு அங்கிருந்து மகிழ்ச்சியுடன் சென்றாள் அவள்.

இப்படியே தொடர்ந்து நான்கு நாட்கள் நிகழ்ந்தது. எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்தார் செல்வந்தர். ஐந்தாம் நாளும் அப்படியே நடந்தது. எஞ்சியிருந்த சிறிய ரொட்டியை எடுத்துக் கொண்டு புறப்பட்டாள் அந்த சிறுமி. தன் வீட்டிற்கு வந்தவள், தன் தாயிடம் அதைத் தந்தாள். அந்த ரொட்டியை பிய்த்தாள் தாய். அதற்குள் இருந்து ஒரு தங்கக்காசு கீழே விழுந்தது.

அந்தத் தங்கக் காசை எடுத்துக் கொண்டு செல்வந்தரின் வீட்டிற்கு வந்தாள் சிறுமி. “ஐயா! இது உங்கள் தங்கக் காசு. ரொட்டிக்குள் இருந்தது. பெற்றுக் கொள்ளுங்கள்!” என்றாள். அவள். ”மகளே! உன் பெயர் என்ன என்று கேட்டார் செல்வந்தர். சிறுமி தன் பெயர் கிருசாம்பாள் எனக் கூறினாள். மகளே உன் பொறுமைக்கும், நற்பண்பிற்கும் நான் அளித்த பரிசே இந்தத் தங்கக் காசு. மகிழ்ச்சியுடன் இதை எடுத்துக் கொண்டு வீட்டிற்குச் செல்  என்றார் செல்வர். துள்ளிக் குதித்தபடி ஓடி வந்த அவள், நடந்ததை தன் தாயிடம் சொன்னாள்.

எனவே, நாமும் பொறுமையாகவும், நேர்மையாகவும் இருந்தால் வாழ்வில் பல நன்மைகளை பெறலாம்.

தடைசெய்யப்பட்ட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள்!

பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து பள்ளிகளில் எடுக்கப்பட வேண்டிய உறுதிமொழி!

CCE GRADE SHEET - FA(A), FA(B), SA

Image result for CCE GRADE SHEET - FA(A), FA(B), SA

சிப்' இல்லாத ATM கார்டு மூலம் இனி பணம் எடுக்க முடியாது

சிப்' இல்லாத ஏடிஎம் கார்டு மூலம் இனி பணம் எடுக்கவோ, கடைகளில் பொருட்கள் வாங்கவோ முடியாது . பழைய கார்டுகளை வங்கிகளில் ஒப்படைத்து விட்டு புதிய கார்டுகளை வாங்க வேண்டும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது


மோசடி புகார்கள் அதிகரித்து வந்ததால், சிப், இல்லாத ஏடிஎம் கார்டுகள் ஜனவரி 1ம் தேதி முதல் செல்லாது என ரிசர்வ் வங்கி அறிவித்து இருந்தது. இதனால் பெரும்பாலான வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய ஏடிஎம் கார்டுகளை கொடுத்து , சிப் உள்ள புதிய கார்டுகளை பெற்று விட்டனர். இன்னும் புதிய ஏடிஎம் கார்டுகளை பெறாமல் உள்ளனர். 

அவர்களது டெபிட், கிரிடிட் கார்டுகள் நேற்று முதல் செயல்படவில்லை . குறிப்பாக சென்னையில் பல வாடிக்கையாளர்கள் ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். சிலர் ஷாப்பிங் மால்களில் பொருட்கள், சேவைகள் பெற்று பணம் செலுத்த இயலாத நிலைக்கு தள்ளப்பட்டனர். இதுகுறித்து இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளன பொதுச்செயலாளர் சி.பி.கிருஷ்ணன் கூறியதாவது:- 'சிப்' இல்லாத டெபிட், கிரெடிட் ஏ.டி.எம். கார்டுகள் ஜனவரி 1-ந்தேதி (நேற்று) முதல் வேலை செய்யாது என்பதால் அந்த கார்டுகளை வைத்து ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுக்கவோ, கடைகளில் 'ஸ்வைப்' செய்து பொருட்கள் வாங்கவோ முடியாது. 

எனவே பழைய கார்டுகள் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், அவற்றை வங்கியில் கொடுத்து 'சிப்' வைத்த புதிய ஏ.டி.எம். கார்டுகளை பெற்றுக்கொள்ளலாம். வாடிக்கையாளர் பெயர் இல்லாத ஏ.டி.எம். கார்டுகள் ஒரே நாளிலும், பெயருடன் கூடிய கார்டுகள் 7 நாட்கள் அவகாசத்திலும் வழங்கப்படுகிறது. சாதாரண வகை கார்டுகளை வங்கிகள், வாடிக்கையாளர்களுக்கு பதிவு தபாலில் அனுப்பி வருகிறது. மஞ்சள் நிற மாஸ்டர் கார்டுகளை வாடிக்கையாளர்கள் வங்கிகளில் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம். இந்த உத்தரவு அனைத்து சர்வதேச, உள்நாட்டு வங்கிகளின் டெபிட், கிரெடிட் கார்டுகளுக்கும் பொருந்தும் இவ்வாறு அவர் கூறினார்.

தமிழகத்தில் 8,909 அரசு பள்ளிகளில் 25க்கும் குறைவான மாணவர்கள்" - ஆய்வில் அதிர்ச்சி தகவல்

தமிழக அரசு பள்ளிகளில், பத்தாம் வகுப்பு வரையில்,   சத்துணவு சாப்பிடும் மாணவர்களின் எண்ணிக்கை குறித்து  சமூக நலத்துறை ஆய்வு நடத்தியுள்ளது.
ஆய்வின் முடிவில் 8 ஆயிரத்து 909 அரசுப் பள்ளிகளில், இருபத்து ஐந்துக்கும் குறைவான மாணவர்களே படித்து வருவது தெரியவந்துள்ளது.


* குறைவான மாணவர்கள் உள்ள அரசுப்பள்ளிகள் அதிகம் உள்ள மாவட்டங்களின் பட்டியலில், முதலமைச்சரின் சொந்த மாவட்டமான சேலம் முதலிடத்தில் உள்ளது. இந்த மாவட்டத்தில் 821 பள்ளிகளில் 25-க்கும் குறைவான மாணவர்கள்  படித்து வருகின்றனர்.


* இந்தப்பட்டியலின் இரண்டாவது இடத்தில் வேலூர் மாவட்டமும், மூன்றாவது இடத்தில் ராமநாதபுரம் மாவட்டமும் உள்ளன. சிவகங்கை, திருப்பூர், திண்டுக்கல், நெல்லை மாவட்டங்கள் பட்டியலில் அடுத்தடுத்து உள்ளன. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனின் தொகுதி அமைந்துள்ள ஈரோடு மாவட்டம், எட்டாவது இடத்தில் உள்ளது. இந்த மாவட்டத்தில் 355 அரசு பள்ளிகள் குறைவான மாணவர்களைக் கொண்டு இயங்கி வருகிறது.


* சென்னையில், 55 பள்ளிகளில் குறைவான மாணவர்கள் உள்ளனர்.  இந்த முடிவுகள் அனைத்தும் சமூகநலத்துறை மேற்கொண்ட ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.

வடலூர் தைப்பூச ஜோதி தரிசனத்தை முன்னிட்டு கடலூர் மாவட்டத்திற்கு வரும் 21ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது*

கடலூர் மாவட்டம் வடலூர் திருஅருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலைய தைப்பூச ஜோதி தரிசனம் 21.01.2019 திங்கட்கிழமை அன்று நடைபெறவுள்ளது.*

*அன்று கடலூர் மாவட்டத்திலுள்ள தமிழ்நாடு அரசு அலுவலகங்களுக்கும் , பள்ளிகளுக்கும் உள்ளூர் விடுமுறையாக அறிவித்து மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் உத்தரவு.*

*அவ்விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 02.02.2019 சனிக்கிழமை அன்று வேலை நாளாக செயல்படும்.*

Attendance app இல் தாமத வருகை மற்றும் Absconded பதியும் முறைகள்

காலை 9.30 மணிக்குள் வருகையைப் பதிவு செய்யவும்.


வருகைப்பதிவு செய்தபின் மாணவர் எவரேனும் வருகை புரிந்தால் மீண்டும் app ஐ Open செய்து குறிப்பிட்ட மாணவருக்கு பதிந்துள்ள A என்பதை மாற்றி P என சமர்ப்பிக்கவும்.

குறிப்பிட்ட அந்த மாணவர் தாமத வருகை என்று பதிவாகிவிடும்.

அவ்வாறே பள்ளிக்கு வந்த மாணவன் app இல் P பதிவு செய்தபின் ஏதேனும் காரணத்தால் வீட்டிற்குச் சென்று விட்டால்,P என்பதை மாற்றி A எனப் பதியவும்.இது Absconded என பதிவாகும்.

*தாமத வருகை மற்றும்*
*Absconded இவற்றை நாம் app இல் பார்க்க இயலாது*

இவற்றை அங்கீகரம் பெற்ற அதிகாரிகளின் Login இல்  மட்டுமே காண இயலும்.

53 தலைமையாசிரியர் பணியிடம் கேள்விக்குறி: வருகிறது பள்ளிகள் ஒருங்கிணைப்பு திட்டம்

கோவையில், 53 பள்ளிகள் ஒரே வளாகத்தில் செயல்படுவதால், அங்குள்ள தொடக்கப்பள்ளி தலைமையாசிரியரை, கற்பித்தல் பணிகளில் ஈடுபடுத்த கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
தமிழகம் முழுக்க, ஒரே வளாகத்தில் செயல்படும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளின் பட்டியல் திரட்டப்பட்டுள்ளது.

இதில், 3 ஆயிரத்து 133 பள்ளிகள் கண்டறியப்பட்டுள்ளன.இங்கு, தொடக்க வகுப்புகளுக்கு தனியாகவும், உயர்நிலை அல்லது மேல்நிலை வகுப்புக்கு தனியாகவும் என, இரு தலைமையாசிரியர்கள் உள்ளனர்.ஒரே வளாகத்தில் செயல்படும் இரு பள்ளிகளுக்கு, இரு தலைமையாசிரியர்கள் இருப்பதால், நிர்வாக ரீதியாக, சில சிக்கல்கள் இருப்பது தெரியவந்துள்ளது.

எனவே, ஒரு தலைமையாசிரியரின் கீழ், அனைத்து வகுப்புகளையும் இணைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. கோவையில், 53 உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள், ஒரே வளாகத்தில் செயல்படுகின்றன.

இங்குள்ள தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்களை, கற்பித்தல் பணிகளில் ஈடுபடுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதோடு, ஒரே தலைமையாசிரியர், உதவி தலைமையாசிரியர் மூலம், நிர்வாக பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

சி.இ.ஓ.,க்கள் கருத்துசென்னையில் சமீபத்தில் நடந்த, முதன்மை கல்வி அலுவலர்களுக்கான கூட்டத்தில், முதன்மை செயலாளர் பிரதீப்யாதவ் இது குறித்து விவாதித்துள்ளார்.தரம் உயர்த்தப்படும் பள்ளிகளில், இனி ஒரு தலைமையாசிரியர் பணியிடம் மட்டுமே உருவாக்கலாம் என, இக்கூட்டத்தில் சி.இ.ஓ.,க்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதை கல்வித்துறை பின்பற்ற முடிவெடுத்துள்ளது.

அதிகாரபூர்வ தகவல் வந்தால் தெரியும்'மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணனிடம் கேட்டபோது,''கோவையில் 53 பள்ளிகள் ஒரே வளாகத்தில் செயல்படுகின்றன. இதன் பட்டியலை, வட்டார வாரியாக, இயக்குனரகத்துக்கு சமர்ப்பித்துள்ளோம். தலைமையாசிரியர்களை கற்பித்தல் பணிகளில், ஈடுபடுத்துவது குறித்து, அதிகாரபூர்வ தகவல் வெளியிட்டால் தான் தெரியவரும்,'' என்றார்.

நீதிக்கதை :



நட்புக்கு ஏங்கிய புலி!


மேற்குத் தொடர்ச்சி மலையின் தென் பகுதியில் உள்ள ஓர் அடர்த்தியான காடு. அங்கே பெரிய மரங்களும் குகைகளும் பசுமையான புல்வெளிகளும் நிறைந்து இருந்தன.

பறவைகள் அங்கும் இங்கும் பறந்துகொண்டு கத்தும் சத்தம், விலங்குகள் குதித்தும் ஓடும் ஓசை, அருவியில் தண்ணீர் விழும் சத்தம் எல்லாம் சேர்ந்து ரம்மியமானா சூழலை உருவாக்கியிருந்தது.

மலை உச்சியில் ஒரு குகை. அந்தக் குகையில் புலி ஒன்று தனியே வசித்துவந்தது. அதுக்கு நண்பர்கள் என்று யாரும் கிடையாது. அதைப் பார்த்தாலே காட்டில் உள்ள விலங்குகள் எல்லாம் சிதறி ஓடிவிடும். அதனால் யாரிடமும் சிரித்துப் பேசச்கூட முடியவில்லை. இதை நினைத்து புலி மிகவும் வருந்தியது. தனக்கு யாரும் நண்பராக வர மாட்டார்களா என்று ஏங்கியது.

அன்று வேட்டையாடச் செல்லும் வழியில், வேடன்  வைத்த பொறியில் மான் ஒன்று சிக்கியிருப்பதைப் பார்த்தது புலி.  உடனே அதைக் காப்பாற்ற முடிவெடுத்தது. புலி அருகில் வருவதைக் கண்ட மான், பயத்தில் நடுங்கியது. அருகில் சென்ற புலி, பொறியை ஒரே அடியில் அடித்து உடைத்தது. மான் வெளியே வந்தது. நிம்மதியாகச் சென்றுவிட்டது புலி.

மான் தன் தவறான எண்ணத்தை நினைத்து வருந்தியது. புலியிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று முடிவு செய்தது. மறுநாள் புலியின் குகைக்குச் சென்றது.

மானைக் கண்டதும் புலிக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அருகில் சென்றால் பயப்படும் என்பதால், உள்ளே அமர்ந்தபடியே வந்த காரணத்தைக் கேட்டது.

“நேற்று உன்னைத் தவறாக நினைத்துவிட்டேன். அதற்கு மன்னிப்பும் என்னைக் காப்பாற்றியதற்கு நன்றியும் சொல்ல வந்தேன்” என்றது மான்.

“நன்றி எல்லாம் எனக்கு வேண்டாம். என்னை நண்பனாக ஏற்றுக்கொண்டால் போதும்” என்றது புலி.

மானுக்குத் திக்கென்றது.

“உனக்கு நம்பிக்கை வரும்போது என்னை நண்பனாக ஏற்றுக்கொண்டால் போதும். நீ கிளம்பு” என்றது புலி.

“இல்லை, இப்போதே உன்னை நண்பனாக ஏற்றுக்கொள்கிறேன். நான் சாப்பிடப் போகிறேன். நீயும் வருகிறாயா?” என்று கேட்டது மான்.


புலியின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. உடனே மானுடன் கிளம்பியது. இதைப் பார்த்த சில விலங்குகள் ஆச்சரியமடைந்தன. சில விலங்குகள் மானை எச்சரித்தன. இன்னும் சில விலங்குகள் மானுக்கு மரியாதை அளித்தன.

நாட்கள் சென்றன. அன்று மான் காட்டில் தனியாக மேய்ந்துகொண்டிருந்தது. அந்தப் பக்கம் வந்த சிங்கம், நல்ல வேட்டை என்று நினைத்தது. மெதுவாக மானை நோக்கிச் சென்றது. அப்போது மானைத் தேடிக்கொண்டு வந்த புலி, சிங்கத்தைப் பார்த்துவிட்டது. மானைக் காப்பாற்றும் அவசரத்தில் பாய்ந்துவந்தது.

சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்த மான், புலிதான் தன்னைத் தாக்க வருகிறது என்று எண்ணியது. சட்டென்று தாவிக் குதித்து ஓடியது.

மானைத் தப்பிக்க விட்ட புலி மீது சிங்கத்துக்குக் கோபம் வந்தது. உடனே சண்டைக்கு வந்தது. புலியும் சிங்கமும் சண்டையிடுவதைப் பார்த்து மற்ற விலங்குகள் ஆச்சரியமடைந்தன.

“நண்பனுக்காகப் புலி எப்படிச் சண்டை போடுகிறது!” என்றது குரங்கு.

“நண்பன் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். இதை உணராத மான் பயந்து ஓடிவிட்டது” என்றது யானை.

நீண்ட நேரச் சண்டையில் சிங்கம் காயமடைந்து, களைப்புற்றது.

“என் நண்பன் என்று தெரிந்தும் இப்படி ஒரு காரியத்தைச் செய்ய நினைத்த உனக்கு, இனி இந்தக் காட்டில் இடமில்லை. இப்பொழுதே ஓடிவிடு” என்று கோபத்துடன் கூறியது புலி.

விட்டால் போதும் என்று சிங்கமும் ஓடிவிட்டது.

நடந்ததை அறியாத மான் தன் கூட்டத்தினரிடம் சென்று,  புலியைத் திட்டித் தீர்த்தது.

“நடந்தது என்ன என்பதை அங்கே இருந்து பார்த்திருந்தால் உனக்குத் தெரிந்திருக்கும். நட்புக்காகச் சிங்கத்திடம் சண்டையிட்டது. புலிக்கும் காயம் அதிகம். பாவம் குகையில் தனியாக வலியோடு போராடிக்கொண்டிருக்கும்” என்றது ஒரு புள்ளிமான்.

“ஐயோ… தவறாக நினைத்துவிட்டேனே. இதோ மூலிகையை எடுத்துக்கொண்டு, புலியைச் சந்திக்கிறேன்” என்று கிளம்பியது மான்.

புலி வலியில் துடித்துக் கொண்டிருந்தது. மருந்திட்ட மான், “என்னை மன்னித்துவிடு. வேகமாக நீ வருவதைப் பார்த்தவுடன், நீ என் நண்பன் என்பதை மறந்து ஓடிவிட்டேன். இனி இப்படி நடக்க மாட்டேன்” என்றது மான்.

“நான் உயிரினங்களைக் கொன்று திங்கும் இனத்தைச் சேர்ந்தவன்தான். அதற்காக நண்பனைக் கொல்வேனா? உன்னோடு நட்பு உருவான நாளில் இருந்து இன்றுவரை உன்னை மட்டுமில்லை, மான்கள் இனத்தையே நான் கொல்வதில்லை. நட்பு என்ற பெயரில் கேடு நினைக்க என்னால் முடியாது. என்னுடன் சண்டையிட்டு நீ சென்றாலும் கூட உன்னையோ, உன் இனத்தையோ நான் வேட்டையாட மாட்டேன். அதனால் என் மீது எப்போதும் உனக்குச் சந்தேகம் வேண்டாம்” என்றது புலி.


மானும் புலியும் மீண்டும் ஒன்றாகச் சுற்ற ஆரம்பித்தன.