யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

17/8/16

NEET (UG) - 2016 RESULTS | மருத்துவப் படிப்புகளுக்கான 2-ஆம் கட்ட தேசிய தகுதிகாண்பொது நுழைவுத் தேர்வு முடிவுகள் (நீட்) வெளியீடு.

மருத்துவப் படிப்புகளுக்கான 2-ஆம் கட்ட தேசிய தகுதிகாண் பொது நுழைவுத் தேர்வு முடிவுகள் (நீட்) வெளியிடப்பட்டன. எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்களை தேசிய தகுதிகாண் பொது நுழைவுத் தேர்வு மூலம் நிரப்ப, மே 1-இல் முதல்கட்டமாகவும், ஜூலை 24-இல் தேர்வை 2-ஆம்கட்டமாகவும் தேர்வு நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி, மே 1-இல் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) நடத்திய முதல்கட்டத் தேர்வை நாடு முழுவதும் 6 லட்சம் பேர் எழுதினர்.  இந்த நிலையில், தேர்வுக்கு தாற்காலிக தடை விதித்து மத்திய அரசு அவசரச் சட்டம் பிறப்பித்ததால் தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது. ஆனால், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் அனைத்தையும் "நீட்' தேர்வின் மூலம் மட்டுமே நிரப்ப வேண்டும் என்று உச்சநீதிமன்றம்உத்தரவிட்டது.

இந்த நிலையில், 2-ஆம் கட்ட "நீட்' தேர்வை நாடு முழுவதும் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர். தமிழகத்தில் சுமார் 13 ஆயிரம் பேர் இந்தத் தேர்வை எழுதினர். இத்தேர்வுக்கானமுடிவுகள் http://cbseresults.nic.in/neet/neet_2016.htm என்ற இணையதளத்தில் இணையத்தில் தெரிந்துகொள்ளலாம்.

புதிய தலைமுறை வார இதழ்-பெண்களுக்கு உதவும் எண்கள்

பெண்களின் பாதுகாப்பிற்கு சில ஆலோசனைகள்

வளர்த்து விட்ட விடுதலை

சர்வதேச தினங்கள்

சர்வதேச தினங்கள்
================
ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பானது (UNESCO) உலகில் விழிப்புணர்வை உண்டாக்கும் வகையில் சில நாட்களை சிறப்பு தினங்களாக அறிவித்துள்ளது. அத்தகைய சிறப்புவாய்ந்த தினங்களை பலமூலங்களில் இருந்து சேகரித்து இங்கு மாதவாரியாக பட்டியலிடப்பட்டுள்ளது.
ஜனவரி
• 26 - உலக சுங்கத்துறை தினம்
• 30 - உலக தொழுநோய் ஒழிப்பு தினம்
பிப்ரவரி
• 02 - உலக சதுப்பு நில தினம்
• 21 - உலக தாய்மொழிகள் தினம்

மார்ச்
• 06 - உலக புத்தகங்கள் தினம்
• 08 - உலக பெண்கள்கள் தினம்
• 13 - உலக சிறுநீரகநோய்
விழிப்புணர்வு தினம்
• 15 - உலக நுகர்வோர் தினம்
• 21 - உலக வன தினம்
• 21- உலக கவிதைகள் தினம்
• 22 - உலக தண்ணீர் தினம்
• 23 - உலக தட்பவெட்பநிலை தினம்
• 24 - உலக காசநோய் தினம்
ஏப்ரல்
• 02 - உலக சிறுவர்நூல் தினம்
• 07 - உலக சுகாதார தினம்
• 15 - உலக நூலகர்கள் தினம்
• 18 - உலக நினைவுச்சின்னங்கள் தினம்
• 22 - உலக புவி தினம்
• 23 - உலக புத்தகம் மற்றும்
பதிப்புரிமை தினம்
மே
• 01 - உலகத் தொழிலாளர் தினம்
• 03 - உலக சூரிய தினம்
• 03 - உலக ஊடக விடுதலை தினம்
• 04 - உலக தீயணைக்கும் படையினர்
தினம்
• 08 - உலக செஞ்சிலுவை நாள்
• 12 - உலக செவிலியர் நாள்
• 15 - உலக குடும்ப தினம்
• 18 - உலக அருங்காட்சிய தினம்
• 31 - உலக புகையிலை எதிர்ப்பு தினம்
ஜீன்
• 05 - உலக சுற்றுச்சூழல் தினம்
• 08 - உலகக் கடல் தினம்
• 12 - உலக குழந்தை தொழிலார்
ஒழிப்பு தினம்
• 14 - உலக இரத்த தான தினம்
• 14 - உலக வலைப்பதிவர்கள் தினம்
• 20 - உலக அகதிகள் தினம்
• 27 - உலக நீரிழிவுநோய்
எதிர்ப்பு தினம்
ஜீலை
• 11 - உலக மக்கள்தொகை தினம்
• 20 - சதுங்க தினம்
ஆகஸ்ட்
• 01- உலக சாரணர் தினம்
• 12 - உலக இளைஞர் தினம்
செப்டம்பர்
• 08 - உலக எழுத்தறிவு தினம்
• 15 - உலக மக்களாட்சி தினம்
• 21 - உலக அமைதி நாள்
• 27 - உலக சுற்றுலா தினம்
அக்டோபர்
• 01 - சர்வதேச முதியோர் தினம்
• 02 - உலக அகிம்சை தினம்
• 04 - உலக வனவிலங்குகள் தினம்
• 05 - உலக ஆசிரியர்கள் தினம்
• 09 - உலக தபால்கள் தினம்
• 10 - உலக மனநல தினம்
• 16 - உலக உணவு தினம்
• 17 - உலக வறுமை ஒழிப்பு தினம்
• 24 - ஐ.நா தினம்
நவம்பர்
• 17 - உலக மாணவர்கள் தினம்
• 20 - உலக குழந்தைகள் தினம்
• 21 - உலக தொலைக்காட்சி தினம்
டிசம்பர்
• 01 - உலக எயிட்ஸ் தினம்
• 02 - உலக அடிமை ஒழிப்பு தினம்
• 03 - உலக ஊனமுற்றோர் தினம்
• 09 - உலக ஊழல் ஒழிப்பு தினம்
• 10 - உலக மனித உரிமைகள் தினம்.
திரு. சீனிவாசன், ப.ஆ., கிருட்டிணகிரி மாவட்டம்

I.A.Sஐ.ஏ.எஸ். தேர்வு எழுதுவதற்கான வழிமுறைகள்---பொதுஅறிவு

கண் தானம் செய்வது எப்படி?---தகவல் துளிகள்

நவம்பர் 14. குழந்தைகள் தினம்!

இந்தியா விடுதலைப்பெற்ற பின் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக பதவி வகித்த ஜவஹர்லால் நேருவின் பிறந்த தினமான நவ.ம்பர் 14 ம் தேதி நம் நாட்டில் தேசிய குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. ஜவஹர்லால் நேரு குழந்தைகள் மீது அதீத அன்பும், பாசமும் கொண்டிருந்தார். அதே போல் குழந்தைகளும் நேருவின் மீது பற்று வைத்திருந்தனர். குழந்தைகளால் அவர் நேரு மாமா என செல்லமாக அழைக்கப்பட்டார்.
பண்டிட் ஜவஹர்லால் நேரு 1889ம் ஆண்டு உ.பி.,யிலுள்ள அலகாபாத்தில் பிறந்தார் பிறகு இங்கிலாந்தில் உயர் கல்வியை முடித்துவிட்டு சுதந்திர போராட்டத்தில் மகாத்மா காந்தியுடன் துணை நின்றார் இந்தியா சுதந்திரம் பெற்றதும் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஆனார். அவர் குழந்தைகள் மீதும், ரோஜா மலர்கள் மீதும் நேரு அளவு கடந்த பற்றுதலை கொண்டிருந்தார். நேருவின் ஆட்சியில் இந்தியா முழுவதும் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் நலம், அவர்களின் கல்வி, முன்னேற்றம் குறித்து பல்வேறு திட்டங்கள் இவரது ஆட்சியின் போது நிறைவேற்றப்பட்டன. மேலும் தொழிற்நுட்ப கல்லூரிகளும் எய்ம்ஸ் போன்ற சர்வதேச தரத்திலான உயர் கல்வி நிறுவனங்களும் இந்தியாவில் துவக்கப் பட்டன. தனது அலுவலக பணிகளுக்கு மத்தியிலும் குழந்தைகளை சந்தித்து அவர்களுடன் உரையாடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.
ஒவ்வொரு நாட்டின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும் முக்கியமான அடித்தளமாக விளங்குவது குழந்தைகளே என்பதை யாராலும் மறுக்க முடியாது சிறு வயதில் அவர்கள் கற்றுக்கொள்ளும் விஷயங்களை பொறுத்தே அவர்கள் பெரியவர்களானதும் அதன் விளைவுகள் தெரியவரும். எனவே சிறு வயது முதலே அவர்களுக்கு நல்லொழுக்கத்தை கற்றுக்கொடுக்க வேண்டிய பொறுப்பு பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நிறையவே உண்டு. முக்கியமாக பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மை மற்றும் அன்பு செலுத்துதல், சகிப்புத்தனமை மற்றும் பொறுமை போன்ற பல நல்ல பழக்கங்களை தங்களது குழந்தைகளுக்கு நாம் கற்றுக்கொடுக்க வேண்டும்
ஆண்டுதோறும் கொண்டாடப்படும் குழந்தைகள் தினத்தின் போது அனைத்து பள்ளிகளிலும் குழந்தைகளுக்கான சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள் ஆனால் அச்சமயத்தில் ஆதரவற்ற அனாதை குழந்தைகளை எவரும் கண்டுகொள்வதில்லை. இந்நிலை மாறி இந்த குழந்தைகள் அனைவரையும் ஒன்றுதிரட்டி அவர்களுக்கு இத்தினத்தில் சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தி இனிப்புகள் வழங்கி அவர்களை மகிழ்விக்க வேண்டும். இது போன்ற ஆதரவற்ற குழந்தைகளை அரவணைத்து கொண்டாடப்படும் கொண்டாட்டம்தான் நேரு நினைத்த உண்மையான குழந்தைகள் தின கொண்டாட்டமாக இருக்க முடியும்.

கட்டுரைகள் தாய்மொழி பற்று நான் விரும்பும் பாரதியார்

சகோதரர்களே இந்த செய்தியை அதிகம் அதிகம் ஷேர் செய்யுங்க சமையல் எரிவாயு

சுதந்திரதின விழா கவிதைகள்

16/8/16

நம் கல்வி... நம் உரிமை!

ஒரு தேசத்தின் எதிர்காலம் அதன் கல்விச்சாலைகளிலேயே நிர்ணயிக்கப்படுகிறது. ஒரு அரசு முன்வைக்கும் கல்விக் கொள்கையின் மீதே அந்த எதிர்காலம் கட்டமைக்கப்படுகிறது. மோடி அரசு கொண்டுவரவிருக்கும் புதிய கல்விக் கொள்கையின் முக்கியத்துவத்தை முழுமையாக உணர்ந்திருக்கும் ‘தி இந்து’, இது தொடர்பிலான விவாதத்தை நம்முடைய பெற்றோர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் என அனைத்துத் தரப்பினர் மத்தியிலும் கொண்டுசெல்ல வேண்டியதன் பொறுப்பையும் உணர்ந்திருக்கிறது. இதன் நிமித்தம் இந்த வாரம் முழுவதும் நடுப்பக்கத்தில் இது தொடர்பிலான கல்வியாளர்களின் கட்டுரைகள், பேட்டிகள் வெளியாகவிருக்கின்றன. இன்று பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் தொடங்கி நவீன இந்தியாவில் முன்வைக்கப்பட்ட கல்விக் கொள்கைகள், அவற்றின் நோக்கங்கள், தாக்கங்களின் வரலாற்றுப் பின்னணியில் புதிய கல்விக் கொள்கையின் சுருக்கமான அறிமுகம்.

புதிய கல்விக் கொள்கைக்கான வரையறை அறிக்கை எனும் பெயரில் மத்திய அரசு வெளியிட்டிருக்கும் 43 பக்கக் கொள்கைப் பிரகடனம், கல்வியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்வுகளை உருவாக்கியிருக்கிறது. பலரும் சுட்டிக்காட்டும் சம்ஸ்கிருதத் திணிப்பு என்பதையும் தாண்டி, பல்வேறு அபாயங்களை மோடி அரசின் கல்விக் கொள்கை கொண்டிருக்கிறது. புதிய கல்விக் கொள்கையை அலசும் முன்னர், இதற்கு முன்பு உருவாக்கப்பட்ட முக்கியமான கல்விக் குழுக்களைப் பார்த்துவிடலாம்.

மெக்காலேவுக்கு முன்னும் பின்னும்

1813-ல் முதன்முறையாக இந்திய மக்களுக்குக் கல்வி அளிக்கும் பொறுப்பைத் தனது பணியாக ஏற்பதாக பிரிட்டிஷ் அரசு அறிவித்தது. கல்வி சாசனம் எனும் ஆவணத்தையும் வெளியிட்டது. அதற்காக அன்று உடனடியாக ரூ. 1 லட்சம் ஒதுக்கப்பட்டதும், அது கிறித்துவ மிஷனரிகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டதும் வரலாறு. ஆங்கிலக் கல்வியே தனது கல்வி என இந்த ஆவணம் பகிரங்கமாக அறிவித்தது. கிழக்கிந்திய கம்பெனியில் வேலை பார்க்க, இந்திய மக்களுக்குச் சாதி, மதம் உள்ளிட்ட தகுதி தேவையில்லை. பிரிட்டிஷ் கல்வி நிறுவனக் கல்வித் தகுதியின் அடிப்படையில் மட்டுமே வேலை வழங்கப்படும் என அதன் இரண்டாம் ஷரத்து குறிப்பிடுகிறது.

1834-ல் மெக்காலே இந்தியா வந்தார். அவருடன் ஆலோசனை நடத்திய கவர்னர் ஜெனரல் பெண்டிங் பிரபு, இந்தியக் கல்விக்கு - பொதுக் கற்பித்தல் முறை எனப் பெயரிட்டு, அவரையே அதன் தலைவராக்கினார். எண்ணத்திலும் அறிவாற்றலிலும் கலாச்சாரத்திலும் ஆங்கிலேயராகவும் ஆனால், ரத்தத்திலும் நிறத்திலும் இந்தியராகவும் இருக்கும் ஒருவரை உருவாக்குவதே கல்வியின் நோக்கம் என அறிவித்த மெக்காலே, 267 பக்கம் கொண்ட கல்விக் கருத்துருவை அரசுக்குச் சமர்ப்பித்தார்.

ஆங்கிலக் கல்வியை முழுதும் வேலையாள் தகுதி பெறும் கல்வியாக மாற்றினார். பிராந்திய மொழிகளில் புத்தகங்கள் அச்சிடுவதைக்கூடத் தடை செய்தார். “வியாபார, நிர்வாக மொழியாய் ஆங்கிலம்; அதற்காக பிரிட்டிஷ் அரசுக்குத் தேவைப்படும் லட்சக்கணக்கான - கணக்காளர், எழுத்தர் வேலைக்கான கல்வி ஆகியவை போதுமானவை. பெரிய மேதாவிகள், தத்துவ அறிஞர்கள் எல்லாம் நமக்கு எதற்கு?” என அவர் பகிரங்கமாக அறிவித்தார். 1835-ல் வில்லியம் பெண்டிங் பிரபு, மெக்காலே குறிப்புகளை ஏற்று முழுமையாக அமல்படுத்த உத்தரவிட்டார். பிற்காலத்தில், ‘வேலை… கும்பேனி அரசு வேலை, தனியார் ஆலை வேலை எனும் ஈர்ப்பே கல்வியின் அடிநாதமாக்கப்பட்டது. பள்ளி, கல்லூரி தரும் சான்றிதழ், வேலை பெறும் ஒரு அடையாளச் சீட்டாகப் பயனாகிறது’ என்று காந்தி விமர்சித்தது குறிப்பிடத் தக்கது.
[11:24 AM, 8/15/2016] +91 99437 90308: 1853-ல் இங்கிலாந்தின் கல்விக் கட்டுப்பாட்டுக் குழுமத்தின் தலைவராக இருந்த சார்லஸ் வுட் தலைமையில் ஒரு கல்விக் குழு இந்தியா வந்தது. 1854-ல் கர்சன் பிரபுவின் காலத்தில் இதன் அறிக்கை முன்வைக்கப்பட்டது. நமது கல்வி முறையில் இருக்கும் காலாண்டுத் தேர்வு, அரையாண்டுத் தேர்வு, முழு ஆண்டுத் தேர்வு என்பதெல்லாம் இக்குழுவின் கைங்கர்யம்தான். பள்ளிக்கான சீருடை, ஒரு பாடமாகப் பிராந்திய மொழி போன்றவற்றை 1882-ல் வில்லியம் ஹண்டர் தலைமையில் உருவாக்கப்பட்ட இந்திய கல்வி கமிஷன் கொண்டுவந்தது.

டாக்டர் ராதாகிருஷ்ணன் குழு

நாடு சுதந்திரம் அடைந்த அடுத்த ஆண்டே, பல்கலைக்கழகக் கல்வியின் தரத்தை ஆராய, அப்போது ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகப் பேராசிரியராக இருந்த டாக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையில் சுதந்திர இந்தியாவின் முதல் கல்விக் குழுவை நியமித்தார் பிரதமர் நேரு. பிரதான பிரச்சினை பல்கலைக்கழகக் கல்வியல்ல; அனைவருக்குமான ஆரம்பக் கல்விதான் என அம்பேத்கர், மேகநாத் சாஹா, அபுல் கலாம் ஆசாத் போன்றவர்கள் அப்போதே கருத்துத் தெரிவித்தனர். ஆனால், இந்தியப் பல்கலைக்கழக மானியக் குழுவைத் தோற்றுவித்தது உட்பட, உயர் கல்வியை நிறுவனமயமாக்கி, தனியார் கல்லூரிகளை உள்ளூர்க் குழுமங்கள் உருவாக்கி, மானியக் குழுவிடம் பண உதவிபெறலாம் என்றெல்லாம் முன்மொழிந்தது டாக்டர் ராதாகிருஷ்ணன் கல்விக் குழு.

டாக்டர் லட்சுமணசாமி குழு

1952-ல் சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்த டாக்டர் லட்சுமணசாமி முதலியார் தலைமையில் ஒரு கல்விக் குழு அமைக்கப்பட்டது. இதில் தந்தை பெரியார், ஜி.டி.நாயுடு உட்பட பலர் நேரில் ஆஜராகி, கல்வி குறித்து விவாதித்தனர். பெண் கல்வி மேம்பட பெண்களுக்கான கல்வி நிலையங்களைத் தொடங்குதல், தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளைப் பயிற்று மொழியாக்குதல் என இரண்டு முக்கிய மாற்றங்களை இக்குழு முன் மொழிந்தது.

கோத்தாரி கல்விக் குழு

டாக்டர் டி.எஸ்.கோத்தாரி தலைமையில் நேரு உருவாக்கிய இந்தக் குழுவின் அமைப்பே வித்தியாசமாக இருந்தது. பிரிட்டன், அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளைச் சேர்ந்த பேராசிரியர்கள், கல்வியாளர்கள் இக்குழுவில் இடம்பெற்றிருந்தனர். 1964 அக்டோபர் 2-ல் தனது பணியைத் தொடங்கிய இக்குழு, 9,000 பேரிடம் கருத்தறிந்து, 2,400 பக்க அறிக்கையை 1966-ல் வழங்கியது. இந்தியக் கல்விக் குழுக்களிலேயே நமது மண்ணின் ஆதாரக் கல்வி எப்படி இருக்க வேண்டும் என்பதை மிகச் சரியாக முன்வைத்தது கோத்தாரி கல்விக் குழுதான்.

அரசு தனது ஒட்டுமொத்த உற்பத்தியில் 6%ஐக் கல்விக்கு ஒதுக்க வேண்டும் என அக்குழு பரிந்துரை செய்தது (தற்போது மோடி அரசு கல்விக்கு ஒதுக்கியிருப்பது 3.47% மட்டுமே). பொதுப் பள்ளிகளை அக்குழுதான் அறிமுகம் செய்தது. ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு ஆரம்பப் பள்ளி, 2 கிலோ மீட்டருக்கு ஒரு உயர்நிலைப் பள்ளி, 3 கிலோ மீட்டருக்கு ஒரு மேல்நிலைப் பள்ளி என கல்விச் சாலைகளைக் கட்டமைத்தது. தறிப் பயிற்சி, தோட்டக் கலை, குடிமைப் பயிற்சி ஆகியவற்றை அறிமுகம் செய்தது. விளையாட்டு, நாட்டு நலப்பணித் திட்டம் ஆகியவை இக்குழுவின் சாதனைகள். இக்கல்விக் குழுவின் பரிந்துரைகளை அரசுகள் முழுமையாக அமல்படுத்தவில்லை.

தில்லுமுல்லுக்கு இடமின்றி ஆசிரியர் கவுன்சிலிங்:போராட்டம் இல்லாததால் அதிகாரிகள்நிம்மதி:

சிபாரிசுக்கு இடமின்றி, காலியிடங்களை மறைக்காமல் ஆசிரியர் கவுன்சிலிங் நடந்து வருகிறது. போராட்டம், ஆர்ப்பாட்டம் இல்லாததால், அதிகாரிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங், ஆக., 3ல் துவங்கி நடந்து வருகிறது.
தொடக்கக் கல்வித்துறைக்கு தனியாகவும், உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கான பள்ளிக் கல்வித்துறைக்கு தனியாகவும் நடந்து வருகிறது. இந்த ஆண்டு, 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தில்லுமுல்லு, சிபாரிசு கடிதமின்றி கவுன்சிலிங் நடத்துவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.'அமைச்சர் அலுவலகம் துவங்கி, கீழ் நிலையில் உள்ள உதவி தொடக்கக் கல்வி அதிகாரிகள் என, எவ்வித சிபாரிசுக்கும் இடமில்லை; சங்கங்களோ, அதிகாரிகளோ தலையிட்டு, காலியிடங்களை மறைத்து வைத்து, வேண்டியவர்களுக்கு ஒதுக்கக் கூடாது. புகார் வந்தால் சம்பந்தப்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என, கல்வித்துறை உயர் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
கவுன்சிலிங் நடைமுறையில் குழப்பங்கள் இல்லாததால், கடந்த ஆண்டை போல, கல்வித்துறை மாவட்ட அலுவலகங்களில் ஆர்ப்பாட்டம், முற்றுகை, தர்ணா போன்ற போராட்டங்கள் இல்லாததால் அதிகாரிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.ஆசிரியர் இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கவுன்சிலிங்கில், காலி இடங்கள் முழுமையாக காட்டப்பட்டுள்ளன. இதேபோல், காலியாக உள்ள தலைமை ஆசிரியர் இடங்களையும் வெளிப்படையாக நிரப்ப வேண்டும்.சாமி.சத்தியமூர்த்தி, மாநில தலைவர், தமிழ்நாடுஉயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கம்.

10. பி.எப்., பணத்தை அடகு வைத்து வீடு வாங்கும் திட்டம் விரைவில்...

தொழிலாளர்கள், பி.எப்., எனப்படும், வருங்கால வைப்பு நிதியை அடகு வைத்து, குறைந்த விலையில் வீடுகள் வாங்கும் திட்டத்தை, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியம்அறிமுகம் செய்ய உள்ளது.
இத் திட்டத் தால், நான்கு கோடி, பி.எப்., சந்தாதாரர்கள் பயன்பெறுவர்.நாடு முழுவதும் உள்ள பல்வேறு நிறுவனங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களின், சொந்த வீடு கனவை நனவாக்கும் திட்டம் குறித்து, மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான பண்டாரு தத்தாத்ரேயா, சமீபத்தில் லோக்சபாவில் அறிவித்தார்.அப்போது, 'பி.எப்., சந்தாதாரர்களாக உள்ள தொழிலாளர்களுக்கு, குறைந்த விலை வீடு பெற்று தருவதற்கானசாத்தியக்கூறுகள்குறித்து, மத்திய அரசு ஆலோசித்து வருகிறது' என்றார்; தற்போது, அந்த திட்டம் அமலாகும் சூழல் உருவாகி உள்ளது.முன்பணம்:

இதுகுறித்து, மத்திய தொழிலாளர் துறை செயலர் சங்கர் அகர்வால், நேற்று கூறியதாவது:பி.எப்., திட்டத்தில் சேர்ந்துள்ள தொழிலாளர் களுக்கு, வீட்டு வசதித் திட்டத்தை உருவாக்கி வருகிறோம். இத்திட்டப்படி, தொழிலாளர்கள் குறைந்த விலையில் வீடு வாங்க, பி.எப்., கணக்கிலிருந்து முன்பணம் பெறலாம்.மேலும், வருங்காலத்தில், தங்கள் பி.எப்., கணக் கில் சேரப்போகும் தொகையை, வங்கிகளுக்கு செலுத்தப்போகும் மாதத் தவணை களாக அடகு வைத்து,குறைந்த விலை வீடுகளை வாங்கலாம். இதன்படி, பி.எப்., சந்தாதாரர், வங்கி மற்றும் இ.பி.எப்.ஓ., எனப்படும், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியம் ஆகிய மூவர் இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும்.
தலையிடாது:
சந்தாதாரர் கணக்கில், வருங்காலத்தில் மாதந் தோறும் சேரும் தொகை, வீடு வாங்குவதற்கு, வங்கிக் கடனாக அளிக்கும் பணத்துக்கு, மாதத்தவணையாகச்செலுத்தப்படும். பி.எப்.,சந்தாதாரர் வாங்கும் வீடு, கடன் செலுத்தி முடியும் வரை, வங்கியிடம் அடமானமாக இருக்கும்.இந்த திட்டம், அடுத்த மாதம் நடக்கும், இ.பி.எப்.ஓ.,வின் சி.பி.டி., எனப்படும், மத்திய அறக்கட்டளை நிர்வாகிகள் கூட்டத்தில் முன்வைக்கப்படும்; இதில், ஒப்புதல் பெறப்பட்ட பின், நடைமுறைக்கு வரும். தொழிலாளர்கள், தாங்கள் விரும்பும் குறைந்த விலை வீடுகளை, அவர்களே வாங்கலாம்; இதில், இ.பி.எப்.ஓ., தலையிடாது. இவ்வாறு அவர் கூறினார்.
யாருக்காக இது?
தங்கள் சம்பளத்தில், வாழ் நாள் முழுவதும் வீடு வாங்க முடியாத, குறைந்த வருவாய் உள்ள தொழிலாளர்களுக்கென இத்திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது.தொழிலாளர்களின் வருங்கால, பி.எப்., பணத்தில், எந்த அளவுக்கு கடனாக பெறலாம் என்பது குறித்தும், குறைந்த விலை வீடு என்றால் என்ன என்பது குறித்தும், இன்னும் வரையறை செய்யப்படவில்லை. இது பற்றிய விபரங்கள், சி.பி.டி., எனப்படும், மத்திய அறக்கட்டளை நிர்வாகிகள் கூட்டத்தில் இறுதி செய்யப்படும்.

THANEE DISTRICT PG ASSISTANT VACANT LIST 2016:

தேனி மாவட்ட P.G.Vacancies list.
தேனி மாவட்ட P.G.Vacancies list.பொருளியல்
அரசு, மே. நி லைப்பள்ளி  ரெங்கசமுத்திரம்.
உயிரியல்
அரசு மேனிலைப்பள்ளி, தாமரைக்குளம்.
பண்ணைப்புரம்.
 வணிகவியல்
 காமயகவுண்டன் பட்டி.
வேதியியல்
வடுகபட்டி,
இயற்பியல்
பூதிப்புரம்
அல்லிநகரம்
 பெரியகுளம் boys,
 விலங்கியல்
பெரியகுளம் ஆண்கள்.

உத்தமபாளையம்.
சில்லமரத்துப்பட்டி.
கணிதம்
கண்டமனூர்.
புவியியல்
வடுகபட்டி.

MADURAI DISTRICT PG ASSISTANT VACANT LIST 2016:

மதுரை மாவட்டமுதுகலை ஆசிரியர்காலிப்பணியிடங்கள்
TAM
திருமங்கலம் (பெ)
சமயநல்லூர்

ENG
பாலமேடு
பரவை
CHE
கருங்காலகுடி(ஆ)
சோழவந்தான்(பெ)
BIO
பாண்டியராஜபுரம்
ZOO
ம.சத்திரப்பட்டி
திருமங்கலம் (ஆ)
திருவாதவூர்
MAT
திருமங்கலம் (பெ)
அலங்காநல்லூர் (ஆ)

ECO
அம்மாப்பட்டி
சமயநல்லூர்
பாலமேடு
வாடிப்பட்டி (பெ)
GEO
ம.சத்திரப்பட்டி
மேலூர் (ஆ)
HIS
தும்பைப்பட்டி

NAMAKKAL DISTRICT PG ASSISTANT VACANT LIST 2016:

*கோழிக்கால்நத்தம்
*அத்தனூர்ஆங்கிலம்
***********
கந்தம்பாளையம்
நாமக்கல் மகளிர்
(இரண்டு பணியிடம்)
இறைய மங்கலம்
நாமகிரிபேட்டை ஆண்கள்.
கணிதம்
*********
அரியூர் பதுவளவு

இயற்பியல்
************
ஜேடர்பாளையம்
அணியாபுரம்
TNHSPGTA NKL
*****************!
வேதியியல்
*************
இறையமங்கலம்
R.புதுப்பாளையம்
உயிரியல்
***********
பரமத்தி பெண்கள்
வெண்ணந்தூர் பெண்கள்
விலங்கியல்
**************
நாமகிரிபேட்டை ஆண்கள்.
வரலாறு
*********
உலகப்பம்பாளையம்
எளச்சிபாளையம்
எருமைப்பட்டி ஆண்கள்
நாமகிரிபேட்டை ஆண்கள்
பொருளியல்
***************
உடையார்பாளையம்
பரமத்தி ஆண்கள்
வணிகவியல்
**************
ஜேடர்பாளையம்
TNHSPGTA- NAMAKAL

சுதந்திர தினம்.. ---பொதுஅறிவுகட்டுரை,

1947, ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி’ என்பது ஒவ்வொரு இந்தியரின் வாழ்விலும், நினைவிலும் நிற்கும் தினமாகக் கருதப்படுகிறது. அந்நாள், ‘நம்முடைய புதிய தேசத்தின் உதய நாள்’ மற்றும் ‘ஒரு புதிய தொடக்கத்தின் தொடக்க நாள்’ என்று சொன்னால் அது மிகையாகாது. ஏனென்றால், இறையாண்மைக் கொண்ட நாடாகத் திகழும் நமது இந்தியாவின் சுதந்திரம் என்பது, நூற்றுக்கணக்கான ஆன்மாக்கள் மற்றும் ஆயிரக்கணக்கானப் புரட்சியாளர்கள் மற்றும் தலைவர்களின் வெற்றி என்று பெருமையுடன் தலைநிமிர்ந்து சொல்லலாம். நமது தாய்நாடான இந்தியா சுதந்திரமடைந்து, சுமார் அரை நூற்றாண்டுகளையும் கடந்து, நாம் சுதந்திரமாக நமது தாய்மண்ணில் சுதந்திரக் காற்றை சுவாசித்துக் கொண்டிருக்கிறோம் என்றால் அதற்கு முதன்முதல் காரணம், நமது தேசிய தலைவர்களும், போராட்ட வீரர்களுமே! 

தியாகிகள் ஓய்வூதியம் ரூ.12,000 ஆக உயர்வு: சுதந்திர தின உரையில் முதல்வர் அறிவிப்பு.

70-வது சுதந்திர தினத்தையொட்டி சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் தேசியக்கொடியேற்றி முதல்வர் ஜெயலலிதா உரையாற்றினார்.சுதந்திர போராட்ட வீரர்களை நினைத்துப் பார்க்கும் இந்த வேளையில், சுதந்திர போராட்ட தியாகிகளுக்கான ஓய்வூதியம் 11,000 ரூபாயிலிருந்து 12,000 ரூபாயாகவும், அவர்களின்வாரிசுதாரர்களுக்கு வழங்கப்படும், குடும்ப ஓய்வூதியம் 5,500 ரூபாயிலிருந்து 6,000 ரூபாயாகவும் உயர்த்தப்படும் என முதல்வர் அறிவித்தார்.

LIST OF DISTRICT NO SGT VACANT:

இடைநிலை ஆசிரியர் பணியிடம் காலி இல்லாத மாவட்டங்கள் !
*மதுரை மாவட்டத்தில் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடம் இல்லை*விருதுநகர் மாவட்டம், இடைநிலைஆசிரியர் காலிப் பணிஇடம இல்லை
*திருநெல்வேலி இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடம் இல்லை.
*தேனி மாவட்டத்தில் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் இல்லை
*கோவை மாவட்டத்தில் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் இல்லை.

TN TET PAPER – II SOCIAL SCIENCE ANSWER KEY (REVISED) - TENTATIVE - VIDIYAL CENTRE -VELLORE

TN TET PAPER – II MATHS & SCIENCE ANSWER KEY (REVISED) - TENTATIVE-VIDIYAL CENTRE -VELLORE

Success Acadamy Coaching centre-keys Modified TNTET Paper I , Paper II (MS) & (SS) Question and Answer

Vidiyal vellore-TRB TET PAPER - I ANSWER KEYS (REVISED) - TENTATIVE

ஆசிரியர் நியமனத்திற்கு வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடுவது எப்படி?

TET WEIGHTAGE Click here
ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு 60 சதவீத மதிப்பெண் (150–க்கு 90 மதிப்பெண்) எடுக்க வேண்டும்.


இடைநிலை ஆசிரியர்நியமனத்தைப்
பொருத்தவரையில், ஆசிரியர் நியமனம் தொடர்பான சுப்ரீம் கோர்ட்டு வழக்கில் தீர்ப்பு வரும்வரை தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் மாநில அளவிலான பதிவுமூப்பு அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்.

பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு, தகுதி தேர்வு மதிப்பெண், பிளஸ்–2 மதிப்பெண், பட்டப் படிப்பு மற்றும் பி.எட். மதிப்பெண் ஆகியவற்றின் அடிப்படையில் நியமனம் நடைபெறும்.

தகுதித்தேர்வுக்கு 60 மதிப்பெண்ணும், பிளஸ்–2 தேர்வுக்கு 15 மதிப்பெண்ணும், பட்டப் படிப்புக்கு 15 மதிப்பெண்ணும், பி.எட். படிப்புக்கு 15 மதிப்பெண்ணும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. மொத்தம் 100 மதிப்பெண். தகுதித்தேர்வில் ஒருவர் எடுக்கும் மதிப்பெண் 60–க்கு மாற்றப்படும். பிளஸ்–2, டிகிரி, பி.எட். தேர்வில் மதிப்பெண் ஒதுக்கீடு விவரம் பின்வருமாறு:–

12–ம் வகுப்பு

90 சதவீதம் மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் பெற்றிருந்தால் – 10 (அதிகபட்ச முழு மதிப்பெண்)
80 சதவீதம் முதல் 90 சதவீதத்திற்குள் – 8 மதிப்பெண்
70 சதவீதம் முதல் 80 சதவீதத்திற்குள் – 6 மதிப்பெண்
60 சதவீதம் முதல் 70 சதவீதத்திற்குள் – 5 மதிப்பெண்50 சதவீதம் முதல்
60 சதவீதத்திற்குள் – 2 மதிப்பெண்

பட்டப் படிப்பு

70 சதவீதம் மற்றும் அதற்கு மேல் – 15 மதிப்பெண் (முழு மதிப்பெண்)
50 சதவீதம் முதல் 70 சதவீதத்திற்குள் – 12 மதிப்பெண்
50 சதவீதத்திற்கு கீழ் – 10 மதிப்பெண்

பி.எட். படிப்பு

70 சதவீதம் மற்றும் அதற்கு மேல் – 15 மதிப்பெண் (முழு மதிப்பெண்)
50 சதவீதம் முதல் 70 சதவீதத்திற்குள் – 12 மதிப்பெண்

தகுதித்தேர்வு

90 சதவீதம் மற்றும் அதற்கு மேல் – 60 மதிப்பெண் (முழு மதிப்பெண்)
80 சதவீதம் முதல் 90 சதவீதத்திற்குள் – 54 மதிப்பெண்
70 சதவீதம் முதல் 80 சதவீதத்திற்குள் – 48 மதிப்பெண்
60 சதவீதம் முதல் 70 சதவீதத்திற்குள் – 42 மதிப்பெண்

TNTET:Tamil Nadu Teacher Eligibility Test 2013 - to know your Roll Number-Again Now published TRB.

TNTET - WEIGHTAGE - IN DETAIL

TNPSC TET வாக்கிய வகைகள்---TNPSC, TET

TET Online Model TEST (Free) - Key Answer - Click Here

TNPSC Group 2 & Group 4 & VAO Exam Study Materials

tnpsc group-II & VAO Study Materials

பள்ளி கட்டுரைகள் ----பொதுஅறிவுகட்டுரை,

கட்டுரைகள் தாய்மொழி பற்று நான் விரும்பும் பாரதியார்---பொதுஅறிவுகட்டுரை,

பகத் சிங்கின் இறுதி நாள்...

லாகூர் மத்திய சிறைச்சாலையில் மற்ற நாட்களை போல சாதாரணமாகவே விடிந்தது 23, மார்ச், 1931. வழக்கம்போல காலை வேளையில் அரசியல் கைதிகள் தங்களது சிறைக்கூடங்களிலிருந்து வெளியே அனுப்பப்பட்டார்கள். சாதாரணமாக, அவர்கள் பகற்பொழுதுகளில் வெளியே இருப்பார்கள். சூரியன் மறைந்த பிறகு மீண்டும் சிறையறைகளில் அடைக்கப்படுவார்கள். அதனால் அன்று மாலை நான்கு மணிக்கே வார்டன் சரத் சிங் அவர்களிடம் வந்து சிறையறைகளுக்குத் திரும்பச் செல்லும்படி சொன்னபோது, ஆச்சரியப்பட்டார்கள்.

தனியார் பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்க்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்!

பத்தாம் வகுப்புத் தேர்வில் மாநில அளவில் சிறப்பிடம் பிடித்தவர்களில் 99 சதவீதத்தினர் தனியார் பள்ளியில் பயின்றவர்கள். அவர்களின் பெரும்பாலானோரின் பெற்றோர், அரசு பள்ளி ஆசிரியர்கள்! சமீபத்தில் இப்படி ஒரு விமர்சனத்தை எதிர்கொண்டேன். 'அரசுப் பள்ளிகளின் மீது அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கே நம்பிக்கையில்லை!" என்பதே அந்த விமர்சனத்தின் சாரம்.

THIRUKURAL

மாணவர்களின் கடமைகள்---பொதுஅறிவுகட்டுரை,

யாதும் ஊரே;யாவரும் கேளிர்---பொதுஅறிவுகட்டுரை,

15/8/16

நீட்' தேர்வு 'ரிசல்ட்' எப்போது?

எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்புக்கான, 'நீட்' தேர்வு முடிவுகள், அடுத்த வாரம் வெளியாகும் என தெரிகிறது.எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்பில் சேர, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, அனைத்து மாநிலங்களுக்கும் நீட் தேர்வு மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் தனியார் கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில், மருத்துவ படிப்பில் சேரவும், மத்திய அரசின் இட ஒதுக்கீட்டில் அரசு கல்லுாரிகளில் சேரவும், இந்த தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.


மற்ற மாநிலங்களில், அரசு மற்றும் தனியார் என அனைத்து கல்லுாரிகளில் சேரவும், மருத்துவ படிப்பில் சேரவும் நீட் தேர்வு கட்டாயம். மே, 1ல் முதற்கட்டமாகவும்; ஜூலை, 24ல் இரண்டாம் கட்டமாகவும் நீட் தேர்வு நடந்தது. இதில், ஐந்து லட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.
தேர்வுக்கான விடைத்தாள் நகல்கள், இரு தினங்களுக்கு முன், ஆன்லைனில் வெளியிடப்பட்டன. ஒரு வாரத்திற்குள், நீட் தேர்வு முடிவு வெளியாகலாம் என தெரிகிறது

ரூ.5 கோடிக்கு மருந்து பெட்டி

அங்கன்வாடி மையங்களுக்கு, மருந்து பெட்டிகள் வழங்க, ஐந்து கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பெட்டியில், எளிதான முறையில் கையாளக்கூடிய, காய்ச்சல், வயிற்றுப்போக்கு, தோல் தொற்று போன்ற பொதுவான நோய்களுக்கான மருந்துகள் இருக்கும்.

நடப்பாண்டு, அனைத்து அங்கன்வாடி களுக்கும், மருத்துவ சேவைக் கழகம் மூலம் மருந்து பெட்டிகள் வழங்க, ஐந்து கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.-

கல்வி கொள்கை கருத்து தெரிவிக்கசெப்., 15 வரை அவகாசம் நீட்டிப்பு

புதிய கல்விக் கொள்கை அறிக்கை, தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது. கருத்துகளை அனுப்ப, கூடுதலாக ஒரு மாத அவகாசம் தரப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வி தொடர்பான புதிய கல்விக் கொள்கையை, மத்திய அரசு தயாரித்துள்ளது. இந்த கொள்கையின், வரைவு அறிக்கை மத்திய மனிதவள மேம்பாட்டு துறையின் இணையதளத்தில், ஜூலையில் வெளியிடப்பட்டது.


பொதுமக்கள், கல்வியாளர்கள் தங்களின் கருத்துகளை, ஜூலை, 31 வரை தெரிவிக்கலாம் என, அவகாசம் வழங்கப்பட்டது. பின், கல்வியாளர்களின் கோரிக்கையை ஏற்று, ஆக., 16 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், இந்தி, தமிழ், உருது, மலையாளம், தெலுங்கு, மராத்தி உள்ளிட்ட, 12 பிராந்திய மொழிகளில், கல்விக் கொள்கை அறிக்கை மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டு உள்ளது. மேலும், கல்விக் கொள்கை குறித்த கருத்துகளை தெரிவிக்க,
செப்., 15 வரை கூடுதல் அவகாசம் தரப்பட்டு உள்ளது

பி.எப்., பணத்தை அடகு வைத்து வீடு வாங்கும் திட்டம் விரைவில் அறிமுகம்; நான்கு கோடி சந்தாதாரர்கள் நலன் காக்க மத்திய அரசு புது முயற்சி

புதுடில்லி:தொழிலாளர்கள், பி.எப்., எனப்படும், வருங்கால வைப்பு நிதியை அடகு வைத்து, குறைந்த விலையில் வீடுகள் வாங்கும் திட்டத்தை, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியம் அறிமுகம் செய்ய உள்ளது. இத் திட்டத் தால், நான்கு கோடி, பி.எப்., சந்தாதாரர்கள் பயன்பெறுவர். 



நாடு முழுவதும் உள்ள பல்வேறு நிறுவனங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களின், சொந்த வீடு கனவை நனவாக்கும் திட்டம் குறித்து, மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான பண்டாரு தத்தாத்ரேயா, சமீபத்தில் லோக்சபாவில் அறிவித்தார். 

அப்போது, 'பி.எப்., சந்தாதாரர்களாக உள்ள தொழிலாளர்களுக்கு, குறைந்த விலை வீடு பெற்று தருவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து, மத்திய அரசு ஆலோசித்து வருகிறது' என்றார்; தற்போது, அந்த திட்டம் அமலாகும் சூழல் உருவாகி உள்ளது.

முன்பணம்:

இதுகுறித்து, மத்திய தொழிலாளர் துறை செயலர் சங்கர் அகர்வால், நேற்று கூறியதாவது:
பி.எப்., திட்டத்தில் சேர்ந்துள்ள தொழிலாளர் களுக்கு, வீட்டு வசதித் திட்டத்தை உருவாக்கி வருகிறோம். இத்திட்டப்படி, தொழிலாளர்கள் குறைந்த விலையில் வீடு வாங்க, பி.எப்., கணக்கிலிருந்து முன்பணம் பெறலாம். 

மேலும், வருங்காலத்தில், தங்கள் பி.எப்., கணக் கில் சேரப்போகும் தொகையை, வங்கிகளுக்கு செலுத்தப்போகும் மாதத் தவணை களாக அடகு வைத்து,குறைந்த விலை வீடுகளை வாங்க லாம். இதன்படி, பி.எப்., சந்தாதாரர், வங்கி மற்றும் இ.பி.எப்.ஓ., எனப்படும், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியம் ஆகிய மூவர் இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும். 

தலையிடாது:

சந்தாதாரர் கணக்கில், வருங்காலத்தில் மாதந் தோறும் சேரும் தொகை, வீடு வாங்குவதற்கு, வங்கிக் கடனாக அளிக்கும் பணத்துக்கு, மாதத்தவணையாகச்செலுத்தப்படும். பி.எப்., 
சந்தாதாரர் வாங்கும் வீடு, கடன் செலுத்தி முடியும் வரை, வங்கியிடம் அடமானமாக இருக்கும். 

இந்த திட்டம், அடுத்த மாதம் நடக்கும், இ.பி.எப்.ஓ.,வின் சி.பி.டி., எனப்படும், மத்திய அறக்கட்டளை நிர்வாகிகள் கூட்டத்தில் முன்வைக்கப்படும்; இதில், ஒப்புதல் பெறப்பட்ட பின், நடைமுறைக்கு வரும். தொழிலாளர்கள், தாங்கள் விரும்பும் குறைந்த விலை வீடுகளை, அவர்களே வாங்கலாம்; இதில், இ.பி.எப்.ஓ., தலையிடாது. இவ்வாறு அவர் கூறினார்.

யாருக்காக இது? 

தங்கள் சம்பளத்தில், வாழ் நாள் முழுவதும் வீடு வாங்க முடியாத, குறைந்த வருவாய் உள்ள தொழிலாளர்களுக்கென இத்திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது. 

தொழிலாளர்களின் வருங்கால, பி.எப்., பணத்தில், எந்த அளவுக்கு கடனாக பெறலாம் என்பது குறித்தும், குறைந்த விலை வீடு என்றால் என்ன என்பது குறித்தும், இன்னும் வரையறை செய்யப்படவில்லை. இது பற்றிய விபரங்கள், சி.பி.டி., எனப்படும், மத்திய அறக்கட்டளை நிர்வாகிகள் கூட்டத்தில் இறுதி செய்யப்படும் 

தில்லுமுல்லுக்கு இடமின்றி ஆசிரியர் கவுன்சிலிங்:போராட்டம் இல்லாததால் அதிகாரிகள் நிம்மதி

சிபாரிசுக்கு இடமின்றி, காலியிடங்களை மறைக்காமல் ஆசிரியர் கவுன்சிலிங் நடந்து வருகிறது. போராட்டம், ஆர்ப்பாட்டம் இல்லாததால், அதிகாரிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங், ஆக., 3ல் துவங்கி நடந்து வருகிறது. தொடக்கக் கல்வித்துறைக்கு தனியாகவும், உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கான பள்ளிக் கல்வித்துறைக்கு தனியாகவும் நடந்து வருகிறது. இந்த ஆண்டு, 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தில்லுமுல்லு, சிபாரிசு கடிதமின்றி கவுன்சிலிங் நடத்துவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

'அமைச்சர் அலுவலகம் துவங்கி, கீழ் நிலையில் உள்ள உதவி தொடக்கக் கல்வி அதிகாரிகள் என, எவ்வித சிபாரிசுக்கும் இடமில்லை; சங்கங்களோ, அதிகாரிகளோ தலையிட்டு, காலியிடங்களை மறைத்து வைத்து, வேண்டியவர்களுக்கு ஒதுக்கக் கூடாது. புகார் வந்தால் சம்பந்தப்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என, கல்வித்துறை உயர் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

கவுன்சிலிங் நடைமுறையில் குழப்பங்கள் இல்லாததால், கடந்த ஆண்டை போல, கல்வித்துறை மாவட்ட அலுவலகங்களில் ஆர்ப்பாட்டம், முற்றுகை, தர்ணா போன்ற போராட்டங்கள் இல்லாததால் அதிகாரிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.

ஆசிரியர் இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கவுன்சிலிங்கில், காலி இடங்கள் முழுமையாக காட்டப்பட்டுள்ளன. இதேபோல், காலியாக உள்ள தலைமை ஆசிரியர் இடங்களையும் வெளிப்படையாக நிரப்ப வேண்டும்.சாமி.சத்தியமூர்த்தி, மாநில தலைவர், தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கம்.

ஆசிரியையை பலாத்காரம் செய்ய முயற்சி:2 ஆசிரியர்கள் உட்பட 3 பேர் கைது

திருவண்ணாமலை:பெண் ஆசிரியையை பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவத்தில், இரண்டு ஆசிரியர்கள் உட்பட மூன்று பேரை, போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு டவுனை சேர்ந்தவர் சித்ரா, 40; அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியை. இவரது வீட்டுக்குள், கடந்த மாதம், 25ம் தேதி, திடீரென ஒருவன் நுழைந்து, மயக்க மருந்து கைக்குட்டையை முகத்தில் வைத்து அழுத்தினான். இதில், சித்ரா மயங்கினார்.


சிறிது நேரத்தில், அவருக்கு மயக்கம் தெளிந்தது. அப்போது, எதிர் வீட்டில் வசிக்கும் அரசுப் பள்ளி முதுகலை ஆசிரியர் சாண்டில்யன், 41, நின்றிருந்தான். அவனிடம் கேட்ட போது, 'உங்கள் வீட்டில் திருடன் நுழைந்தான். சத்தம் கேட்டு உள்ளே வந்தேன்; என்னை உங்கள் மீது தள்ளிவிட்டு ஓடிவிட்டான்' என, கூறியுள்ளான்.

சாண்டில்யன் மீது சித்ராவுக்கு சந்தேகம் ஏற்பட்டதால், கடந்த, 1ம் தேதி, செய்யாறு அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார், சாண்டில்யனை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை, செய்யாறு பேருந்து நிலையத்தில் இருந்த சாண்டில்யனை போலீசார் கைது செய்தனர். அவன் அளித்த வாக்குமூலம்:ஆசிரியை சித்ராவை அடைய வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. இதை, தனியார் பள்ளி ஆசிரியரான மணி என்ற நண்பரிடம் கூறினேன். அவன், 'குளோரோபார்ம்' எடுத்து வந்தான்.

அதை ஆட்டோ ஓட்டுனர் மோத்தியிடம் கொடுத்து, சித்ராவை மயக்கமடைய செய்யுமாறு கூறினேன்; அவனும் அவ்வாறு செய்தான். பின், சித்ராவை பலாத்காரம் செய்ய வீட்டினுள் நுழைந்த போது மயக்கம் தெளிந்து கூச்சலிட்டார். வெளியே காத்திருந்த மணி, மோத்தி தப்பியோடினர்; நானும் ஓடிவிட்டேன்.இவ்வாறு அவன் தெரிவித்தான்.
இதையடுத்து, சாண்டில்யன், மணி, மோத்தி ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கலந்தாய்வில் தகராறு ஆசிரியர் 'சஸ்பெண்ட்'

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் நடந்த கலந்தாய்வில் உயரதிகாரிகளிடம் தகராறில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியரை தொடக்கக்கல்வி இயக்குனரகம் 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டுள்ளது.
திண்டுக்கல்லில் நேற்று இடைநிலை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடந்தது. பழநி காவலப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர் குணசேகரன், ஒன்றியம் விட்டு ஒன்றியத்திற்கான கலந்தாய்வில் பங்கேற்றார். அவர் விரும்பிய இடம் கிடைக்காததால் ஆவேச மடைந்தார்.

கலந்தாய்வு பணியில் ஈடுபட்டுள்ள உதவி தொடக்ககக்கல்வி அலுவலர்களிடம் வாக்குவாதம் செய்து, தகராறில் ஈடுபட்டார். மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் பாண்டியராஜா அறிவுறுத்தியும் கேட்கவில்லை.
இதையடுத்து இணை இயக்குனர் சுகன்யா பரிந்துரையில் தொடக்கக்கல்வி இயக்குனரகம் ஆசிரியர் குணசேகரனை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது

பணிநிரவல் பெற்ற ஆசிரியர்கள் கலந்தாய்வில் பங்கேற்கலாம்

கோவை : தொடக்கக்கல்வி துறை சார்பில் நடந்த, பணிநிரவல் கலந்தாய்வில் பங்கேற்ற ஆசிரியர்கள், உரிய பணியிடத்தில் சேராமல், மாவட்ட மாறுதலுக்கு விண்ணப்பித்திருந்தால், கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம் என, அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தொடக்க கல்வி இயக்குனரகம் சார்பில் வெளியிட்ட அறிக்கை:
தொடக்க கல்வி ஆசிரியர்களுக்கான, பணிநிரவல் கலந்தாய்வு, நேற்று முன் தினம் நடந்தது. இதில், ஒன்றியத்துக்குள், வேறு ஒன்றியத்துக்கு நிரவல் பெற்ற, பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்கள், பணியில் சேராமல் இருந்தால், பொது மாறுதலில் பங்கேற்கலாம். இதற்கு, பொது மாறுதல் கவுன்சிலிங்கில் கலந்து கொள்ள, ஏற்கனவே முறையாக, விண்ணப்பித்திருக்க வேண்டும்.
இத்தகவலை, பணிநிரவல் பெற்ற ஆசிரியர்களுக்கு, சம்மந்தப்பட்ட மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் தெரியப்படுத்துவது அவசியம்.இவ்வாறு, அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

புதுமை கற்பித்தல் முறை

தேவகோட்டை: ஆசிரியர்களின் கற்பித்தலில் புதுமை செய்வது பற்றி, வித்தியாசமான முறைகளில் கற்பிக்கும் முறை, எளிமையாக புரியும்படி கற்பித்தல் தொடர்பான செய்திப்படத்தை எஸ்சிஇஆர்டி நிறுவனம் தயாரித்தது.

இதில் தேவகோட்டை சேர்மன் மாணிக்கம் வாசகம் நடுநிலைப்பள்ளியில் அனுபவம் புதுமை என்ற பெயரில் சம்பந்தப்பட்ட துறையினர் படம் பிடித்தனர். இது போன்ற பல பள்ளிகளில் திரட்டிய ஆவணப்படத்தை அரசு சில தினங்களுக்கு முன் வெளியிட்டது. பள்ளிகளுக்கு விரைவில் சிடி வழங்க உள்ளனர். இந்நிலையில் யூடியூபில் வெளியிட்டனர். யூடியூபில் வெளியிட்ட படத்தை சேர்மன் மாணிக்கம் வாசகம் பள்ளியில் தலைமையாசிரியர் சொக்கலிங்கம் முன்னிலையில் மாணவர்களுக்கு காண்பிக்கப்பட்டது.

ஆசியர்கள் இடமாறுதல் கலந்தாய்வு அதிகாரிகளிடம் வாக்குவாதம்

சிவகங்கை: சிவகங்கையில் நடந்த இடமாறுதல் கலந்தாய்வு ஆசிரியர்கள், அதிகாரிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இடைநிலை ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு சிவகங்கை மருதுபாண்டியர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது. துணை இயக்குனர் ராஜேந்திரன், முதன்மை கல்வி அலுவலர் செந்திவேல்முருகன், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் பார்த்தசாரதி பங்கேற்றனர். காளையார்கோவில் ஒன்றியம் செவல்புஞ்சை ஆசிரியர் ஜோசப், தனது மனைவி 35 கி.மீ., ல் உள்ள கீழக்கோட்டையில் பணிபுரிவதால் கவுன்சிலிங்கில் முன்னுரிமை தர வேண்டுமென, கேட்டார்.
இதற்கு ஆதாரமாக நெடுஞ்சாலைத்துறை ஆய்வாளரின் சான்றை சமர்ப்பித்தார். இதனை அதிகாரிகள் ஏற்று கொண்டனர்.
சான்றில் தவறான துாரத்தை குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் அவருக்கு முன்னுரிமை அளிக்க கூடாது என கூறி ஆசிரியர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன்பின் அதிகாரிகள் 'கூகுள் மேப்பை' பயன்படுத்தி துாரத்தை கணக்கிட்டனர். அதில் செவல்புஞ்சை, கீழக்கோட்டை இடையே 29 கி.மீ., என, காட்டியது. இதையடுத்து ஜோசப்பிற்கு முன்னுரிமை மறுக்கப்பட்டது. இதையடுத்து ஜோசப் 'தனக்கு இடமாறுதல் வழங்க மறுப்பதற்கான காரணத்தை எழுத்து பூர்வமாக தர வேண்டும்,' என அதிகாரிகளிடம் கேட்டார். அதிகாரிகள் தர மறுத்ததால் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அதன்பின் மற்றவர்களுக்கு கவுன்சிலிங் நடத்தப்பட்டது.
கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “ஒரே ஒன்றியத்திற்குள் கணவர், மனைவி 30 கி.மீ.,க்கு அப்பால் பணிபுரிந்தால் கவுன்சிலிங்கில் முன்னுரிமை தரப்படும். கூகுள் மேப்பில் 29 கி.மீ., கட்டியதால் முன்னுரிமை வழங்கவில்லை,” என்றார்.

இளந்தலைமுறையை நல்வழிப்படுத்த புதிய கல்விக் கொள்கை அவசியம்: கலந்துரையாடலில் பேராசிரியர் கருத்து

இளந்தலைமுறையினரை நல்வழிப்படுத்துவதற்கு புதிய கல்விக் கொள்கை அவசியம் என மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலில் பேராசிரியர்கள் வலியுறுத்தினர்.

மதுரையில் அகில பாரதீய வித்தியார்த்தி பரிஷத் (தேசிய மாணவர் இயக்கம்) மாநில கல்விக்குழு சார்பில் நடைபெற்ற புதிய கல்விக் கொள்கை மேம்பாட்டை நோக்கி எனும் தலைப்பிலான கலந்துரையாடல் நடைபெற்றது.


மதுரை காமராஜர் பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரி (ஆண்டிப்பட்டி) பேராசிரியர் ஏ.கதலி நரசிங்கப்பெருமாள் தலைமை வகித்துப் பேசியது: தரமிக்க கல்வி, தேசப்பற்று, தேச முன்னேற்றம், அனைவருக்கும் சமமான கல்வி என பல சிறப்பு அம்சங்களுடன் புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.

இன்றைய தலைமுறைக்கு கல்வியுடன், தர்மங்களையும், மனிதநேயத்தையும் கற்பிப்பது அவசியம். ஆகவே புதிய கல்வியானது நேயத்தையும், அன்பையும் இளந்தலைமுறையினரிடையே ற்படுத்தும் என்றார்.

 கலந்துரையாடலை தொடங்கிவைத்து திருவேடகம் விவேகானந்தர் கல்லூரி முதல்வர் பி.ராமமூர்த்தி பேசியது: தற்போதைய சூழலில் மாணவர்களுக்கு தேச பக்தியை ஏற்படுத்துவது அவசியம். அறிவும், ஆற்றலும், அன்பும் சேர்ந்த கல்வியே இன்றைய காலகட்டத்துக்குத் தேவையானது.

 சுவாமி விவேகானந்தர் விரும்பிய பாரதத்தை நாம் காணவேண்டும் எனில் இளைஞர்களின் சக்தியை நல்லமுறையில் பயன்படுத்தவேண்டும். இளைஞர்களை நல்வழிப்படுத்தும் வகையிலே புதிய கல்விக் கொள்கை அமைந்துள்ளது.

 நாலந்தா போன்ற பழம் பெருமை மிக்க பல்கலைக்கழகம் இருந்த நமது தேசத்தின் பெருமையை இளைஞர்கள் உணரும் வகையில் புதிய கல்வி அமையும் என்றார்.

 சாஸ்த்ரா பல்கலைக்கழகப் பேராசிரியர் ஆர். ஸ்ரீநிவாசன்: கல்வி கற்கும் குழந்தைகள் இடை நிற்றலை புதிய கல்விக் கொள்கையால் தடுக்கலாம். பெண் கல்வியை உறுதிப்படுத்தும். அறிவுப் பூர்வமான, ஆக்கப்பூர்வமான தலைமுறையை உருவாக்கும் வகையிலே புதிய கல்விக் கொள்கை அமையும்.

கலந்துரையாடலில் சமூக ஆர்வலர் சந்திரன், விவேகானந்தர் கல்லூரி முன்னாள் துணை முதல்வர் ஜெயபால், தமிழ்நாடு தேசிய ஆசிரியர் சங்கம் நிர்வாகி டி.செந்தமிழ்அரசு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

"கற்றலில் குறைபாடுள்ள குழந்தைகளை ஊக்குவிக்க வேண்டும்'

கற்றலில் குறைபாடுள்ள குழந்தைகளை ஓவியம், விளையாட்டு, இசை உள்ளிட்ட துறைகளில் சாதனை படைக்க ஊக்கவிக்க வேண்டும் என மெட்ராஸ் டிஸ்லெக்ஸியா சங்கத்தின் (எம்டிஏ) தலைவர் சந்திரசேகர் வலியுறுத்தினார்.


"மெட்ராஸ் டிஸ்லெக்ஸியா சங்கத்தின் சார்பில் கற்றலில் குறைபாடு விழிப்புணர்வு வார நிகழ்ச்சி சென்னையில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

இதன் முதல் நாளில் நடைபெற்ற ஓவியப் போட்டிகளில் சென்னையின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கற்றல் திறனில் குறைபாடுள்ள மாணவர்கள் பங்கேற்று தங்களது படைப்பாற்றல் திறனை வெளிப்படுத்தினர். இதில் சங்கத்தின் தலைவர் டி.சந்திரசேகர் பேசுகையில், கற்றலில் குறைபாடுள்ள குழந்தைகள் வாசித்தல், எழுதுதல், கணிதம் போன்றவற்றில் பின்தங்கி இருந்தாலும் பிற துறைகளில் அவர்கள் கற்பனைத் திறன் மிகுந்தவர்கள்.

இந்தக் குழந்தைகளால் ஓவியம், இசை, விளையாட்டு போன்ற துறைகளில் சாதனை படைக்க இயலும். அதற்காக அவர்களை ஊக்குவித்து உறுதுணையாக இருப்பது அவசியம். கூட்டு செயல்பாடுகளிலும் உளவியல் திறனிலும் இந்தக் குழந்தைகள் அபார ஆற்றலை வெளிப்படுத்துவர் என்றார் அவர்.

முன்னதாக நிகழ்ச்சியை தென் சென்னை ரோட்டரி சங்கத்தின் தலைவர் ஆஷா மெரீனா தொடக்கி வைத்தார். எம்டிஏ ஒருங்கிணைப்பாளர் வான்கடே ரேஷ்மி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தொடக்கக் கல்வித்துறை அலுவலர்களுடன் தகராறு: இடைநிலை ஆசிரியர் பணியிடை நீக்கம்

பணி மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க வந்த இடைநிலை ஆசிரியர், தொடக்கக் கல்வித்துறை அலுவலர்களுடன் தகராறில் ஈடுபட்டதால் ஞாயிற்றுக்கிழமை தாற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

 திண்டுக்கல் மாவட்ட தொடக்கக் கல்வித்துறையில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெற்றது. மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் கூ.பாண்டியராஜா தலைமையில்,
முற்பகலில் ஒன்றியத்திற்குள்ளும், பிற்பகலில் ஒன்றியம் விட்டு ஒன்றியத்திற்கும் பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு நடைபெற்றது.

 இதில் ஒன்றியத்திற்குள் 43 பேர், ஒன்றியம் விட்டு ஒன்றியம் 24 பேர் என மொத்தம் 67 ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதலுக்கான ஆணை வழங்கப்பட்டது.

தகராறு செய்த ஆசிரியர் பணியிடை நீக்கம்: திண்டுக்கல் மாவட்டம், பழனி புறநகர் ஒன்றியத்திற்குள்பட்ட காவலப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியர் த.குணசேகரன், கலந்தாய்வில் பங்கேற்றார். அப்போது, கலந்தாய்வு பணியில் ஈடுபட்டிருந்த தொடக்கக் கல்வித்துறை அலுவலர்களுடன் தகராறு செய்ததாகவும், மிரட்டல் விடுத்ததாகவும் புகார் எழுந்தது. 

இதனை அடுத்து, விதிமுறைகளை மீறி கலந்தாய்வு மையத்தில் தகராறு செய்த ஆசிரியர் த.குணசேகரனை தாற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் கூ.பாண்டியராஜா உத்தரவிட்டுள்ளார்.

கோட்டையில் இன்று சுதந்திர தின விழா: தேசிய கொடியேற்றி முதல்வர் ஜெயலலிதா உரை

சுதந்திரத் தினத்தையொட்டி, சென்னையில் தலைமைச் செயலகம் அமைந்துள்ள செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை தேசிய கொடியேற்றி வைத்து, சிறப்புரையாற்றுகிறார்.


தமிழக அரசின் சார்பில் சார்பில் நடைபெறும் இந்த விழாவில் பங்கேற்பதற்காக, தனது போயஸ் தோட்ட இல்லத்தில் இருந்து முதல்வர் ஜெயலலிதா காலை 9.10 மணிக்குப் புறப்படுகிறார். காமராஜர் சாலையில் உள்ள போர் நினைவுச் சின்னத்துக்கு அவர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார். அங்கிருந்து போலீஸாரின் மோட்டார் சைக்கிள்கள் அணிவகுப்புடன் கோட்டைக்கு வரும் முதல்வரை தலைமைச் செயலர் ராமமோகன ராவ் மலர்கொத்து கொடுத்து வரவேற்கிறார்.

பின்னர், திறந்த ஜீப்பில் ஏறிச் சென்று, போலீஸாரின் அணிவகுப்பை முதல்வர் பார்வையிட்டு, கோட்டை கொத்தளத்தில் 9.30 மணியளவில் தேசிய கொடியை ஏற்றி வைத்து, கொடி வணக்கம் செய்கிறார். பின்னர், சுதந்திர தின உரை நிகழ்த்துகிறார்.

விருதுகள் அளிப்பு: இதையடுத்து, அப்துல் கலாம், கல்பனா சாவ்லா ஆகியோர் பெயரிலான விருதுகளும், காவல் துறையில் சிறப்பாகப் பணியாற்றியோருக்கும், சிறந்த மின் ஆளுமைக்கான அரசு ஊழியர் - அரசுத் துறையினருக்கும் விருதுகளும், மாற்றுத்திறனாளிகள், மகளிர் நலன் உள்ளிட்ட துறைகளில் சிறப்பான பணி செய்தவர்களுக்கும் விருதுகளும் வழங்கப்படுகின்றன. விழாவில், சட்டப்பேரவைத் தலைவர் ப.தனபால் உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர்.

5 அடுக்குப் பாதுகாப்பு: விழாவில் கோட்டையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் 5 அடுக்கு பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Pudukkottai Dist PG vacany (07.08.2016)



TAMIL :Karampakudi(B),Karur, Kottaipatinam,Athani ,Vettanvituthi,Perumarutoor,Sillatur,Ampalavanental,Gopalapattinam, Malaiyur, Manamelgudi(B), Subiramaniyapuram(B),Valogam,Mandaiyoor,Bragathamnal.
ENGLISH :Kaliyarayanvituthi,Merpanaikadu,Memisal, Kothamangalam(B), Keelakkurichi ,Alangudi(G).

MATHS:Sadayampatti, Kerramangalam(B).

PHYSICS :Perrungalur,Avoor,Keeramagalan(G),Bragathambal, Ranees,Keeranur(B).

CHEMISTRY:Melathaniyam, Kothamangalam(B),Memisal, Ponputhupatti, Andakkulam,Kattumavadi,Kottaipattinam,Manamelgudi(G),Aranthangi(B),Aranthangi (G), Ampalavanental, Vayalogam, Citamparavituthi,Gantharvakottai Boys&Girls,L.N Puram.

BOTANY:Alangudi (G),Model.

ZOOLOGY:Kothamangalam(B),Thirukkokarnam, Kerramangalam(G),

 COMMERCE : Mannavelampatti,Arimalam(G) ,Melasivapuri:          

 POLITICAL SCIENCE: Alangudi(B).     

PG Vacancies in Kanchipuram dist.


Tamil
----------
Otteri,
Peerkankaranai,
Nanganallur(B)&G,
Chengalpet(G)
Pullalur,
Thenneri,
Neyyadupakkam,
Thiruppukuzhi,
Uthiramerur(G)

English
--------------
Madampakkam,
Chrompet(B)&G,
Orathi,
Seyyur(G),
Govindavadi

Commerce
-------------------
Puzhithivakkam,
Tambaram(G),
Selaiur mpl,
Chengalpet mpl,
Sathurangapattinan,
Orathi

Economics
------------------
Semmancheri,
Kelampakkam,
Otteti,
Satras,
Vennangupattu,
Polampakkam,
Seyyur(B),
Koovathur,
Kadapakkam,
Nandhivaram kooduvancheri(G),
Uthiramerur(G)

History
------------
Otteti,
Salavakkam,
Maduramangalam,
Maduranthagam(G),
Uthiramerur(B)

Geography
-------------------
Chinnakanchipuram

Biology
---------------
Maraimalai nager,
Singaperumal kovil,
Paranthur,
Seyyur(G),
Zaminpallavaram

Zoology
-----------
Perunagar,
Seyyir(B),
Uthiramerur(B)

Botany
------------
Nandhivaram
Kooduvancheri(G)

நாமக்கல் மாவட்ட முதுகலை ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள்



தமிழ்
******
*கோழிக்கால்நத்தம்
*அத்தனூர்

ஆங்கிலம்
***********
கந்தம்பாளையம்
நாமக்கல் மகளிர்
(இரண்டு பணியிடம்)
இறைய மங்கலம்
நாமகிரிபேட்டை ஆண்கள்.


கணிதம்
*********
அரியூர் பதுவளவு

இயற்பியல்
************

ஜேடர்பாளையம்
அணியாபுரம்

TNHSPGTA NKL
*****************!

வேதியியல்
*************

இறையமங்கலம்
R.புதுப்பாளையம்

உயிரியல்
***********
பரமத்தி பெண்கள்
வெண்ணந்தூர் பெண்கள்

விலங்கியல்
**************
நாமகிரிபேட்டை ஆண்கள்.

வரலாறு
*********
உலகப்பம்பாளையம்
எளச்சிபாளையம்
எருமைப்பட்டி ஆண்கள்
நாமகிரிபேட்டை ஆண்கள்

பொருளியல்
***************
உடையார்பாளையம்
பரமத்தி ஆண்கள்

வணிகவியல்
**************
ஜேடர்பாளையம்

தேனி மாவட்ட P.G.Vacancies list.


பொருளியல்
அரசு, மே. நி லைப்பள்ளி  ரெங்கசமுத்திரம்.

உயிரியல்
அரசு மேனிலைப்பள்ளி, தாமரைக்குளம்.
பண்ணைப்புரம்.


 வணிகவியல்
 காமயகவுண்டன் பட்டி.

வேதியியல்
வடுகபட்டி,

இயற்பியல்
பூதிப்புரம்
அல்லிநகரம்
 பெரியகுளம் boys,

 விலங்கியல்
பெரியகுளம் ஆண்கள்.
உத்தமபாளையம்.
சில்லமரத்துப்பட்டி.

கணிதம்
கண்டமனூர்.

புவியியல்
வடுகபட்டி.

மதுரை மாவட்ட முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் as on 31.05.2016

மதுரை மாவட்ட
முதுகலை ஆசிரியர்
காலிப்பணியிடங்கள்

TAM
திருமங்கலம் (பெ)
சமயநல்லூர்

ENG
பாலமேடு
பரவை
CHE
கருங்காலகுடி(ஆ)
சோழவந்தான்(பெ)
BIO
பாண்டியராஜபுரம்
ZOO
ம.சத்திரப்பட்டி
திருமங்கலம் (ஆ)
திருவாதவூர்
MAT
திருமங்கலம் (பெ)
அலங்காநல்லூர் (ஆ)
ECO
அம்மாப்பட்டி
சமயநல்லூர்
பாலமேடு
வாடிப்பட்டி (பெ)
GEO
ம.சத்திரப்பட்டி
மேலூர் (ஆ)
HIS
தும்பைப்பட்டி

14/8/16

57 ஆயிரம் மாணவர்கள் 5-ம் வகுப்புடன் கைவிரிப்பு



தமிழகத்தில் 57 ஆயிரம் மாணவர்கள் 5-ம்வகுப்புக்கு பின் பள்ளிப்படிப்பை கைவிட்டுள்ளது தெரிய வந்துள்ளது.நாடு முழுவதும் 14 வயது வரை உள்ள அனைத்து மாணவர்களுக்குமு் கட்டாய கல்வி சட்டம் மூலம் 8-ம்வ குப்பு வரை கல்வி வழங்க மத்திய அரசு திட்டங்களை கொண்டு வந்துள்ளது.

அதே போல் 10-ம் வகுப்பு வரை படிக்க அனைவருக்கும் இடை நிலை கல்வி இயக்ககம் என்ற ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஆனாலும் நாடு முழுவதும் 6 முதல் 12 வயதிற்குட்பட்டோரில் 61 லட்சம் பேர் பள்ளிப்படிப்பை பாதியில் கைவிட்டது தெரிய வந்துள்ளது. இதற்கான அறிக்கையை மத்திய அரசு வெளியிட்டு உள்ளது.இதில் 26.65 லட்சம் பேர், 11 வயது முதல் 13 வயதுக்கு உட்பட்டோர். கடந்த 2014ம் ஆண்டு மத்திய அரசு எடுத்த கணக்கெடுப்பின் படி தமிழகத்தில் 11 வயது முதல் 13 வயதுக்கு உட்பட்ட 57 ஆயிரத்து 229 பேர் 5-ம் வகுப்பிற்கு பின், பள்ளி படிப்பை கைவிட்டுள்ளனர்
தேசியக் கொடி!
கடும் காவி, கடும் பச்சை, மத்தியில் தூய வெண்மை ஆகிய மூன்று நிறங்களும் வரையறுக்கப்பட்ட நீள, அகலங்களும் கொண்ட மூவர்ணக் கொடியே இந்தியாவின் தேசியக் கொடி. வெண்பட்டையின் நடுவே ஓர் அசோகச் சக்கரமும் (கடல் நீல வண்ணம் கொண்டது) அதை சுமந்து 24ஆரக் கால்களும் உள்ளன.
தேசியக் கொடியிலுள்ள காவி நிறம் தைரியம் மற்றும் தியாகத்தையும், வெண்மை நிறம் உண்மை மற்றும் அமைதியையும், பச்சை நிறம் நம்பிக்கையையும், வீரத்தையும் குறிப்பதாக கற்பிக்கப்பட்டது.
ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த “பிங்களி வெங்கைய்யா’ என்பவரே இந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர்.
தேசியக் கொடியின் நீள, அகலம் 3:2 என்ற விகிதத்தில் அமைய வேண்டும்.
மூவர்ணக் கொடியை அரசியல் நிர்ணய சபை 1947 ஜூலை 22இல் ஒருமித்த கருத்துடன் அங்கீகரித்தது.
1947ஆம் ஆண்டு 15ஆம் தேதி இந்தியா சுதந்திரக் காற்றைச் சுவாசித்தபோது ராஷ்டிரபதிபவன் என்று பெயர் சூட்டப்பட்ட தில்லி வைஸ்ராய் ஹவுஸில் 31 குண்டுகள் முழங்க இந்திய தேசியக் கொடி முதல் முதலாகப் பறக்க விடப்பட்டது.
எல்லா வருடமும் ஆகஸ்டு 15ஆம் தேதி தில்லி செங்கோட்டையில் தேசியக் கொடியேற்றும் சடங்கு 1948முதல் துவங்கியது.
இந்திய தேசியக் கொடி முதன்முதலாக விண்வெளிக்கு எடுத்துச் செல்லப்பட்டது 1971இல்! அமெரிக்காவின் அப்பல்லோ-15 என்னும் செயற்கைக் கோள் இதை விண்வெளிக்குச் சுமந்து சென்றது.
01.01.2006 - 31.12.2010க்குள் பதவி உயர்வு பெற்றுள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கான பாதிப்புகள்
ஊதியக்குழு அரசாணை எண்:234ன் படி மிகக்குறைந்த ஊதிய ஏற்றம் 5200-20200 +.2800 நிர்ணயம் செய்யப்பட்டு ஊதியம் பெற்று வரும் இடைநிலை ஆசிரியர்களில் 01.01.2006 முதல் 31.12.2010க்குள் பதவி உயர்வு பெற்றுள்ள
இடைநிலை ஆசிரியர்கள் கவனிக்க வேண்டியவை.

அரசாணை எண் :23ன் படி இடைநிலை ஆசிரியர்களுக்கு 750 ரூபாய் தனி ஊதியமாக 01.01.2011 முதல் வழங்கப்படுகிறது.
01.01.2006 முதல் 31.12.2010 க்குள் பதவி உயர்வு பெற்றுள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை + தர ஊதியத்திலிருந்து பதவி உயர்வுக்கான ஊதிய நிர்ணயம் செய்யப்படும்.

01.01.2011லிருந்து பதவி உயர்வு பெறுபவர்களுக்கு அடிப்படை + தர + தனி ஊதியத்திலிருந்து பதவி உயர்வுக்கான ஊதிய நிர்ணயம் செய்யப்படும்.
எனவே 01.01.2006 - 31.12.2010க்குள் பதவி உயர்வு பெற்றுள்ள இடைநிலை ஆசிரியர்கள் தங்களது ஊதியத்தில் தனி ஊதியம் 750 மற்றும் அதற்கான அகவிலைப்படி சேர்த்து ஒரு வருடத்திற்கு தோராயமாக 15000 ரூபாய் இழந்து வருகிறார்கள்.

ஒன்றியத்திற்கு வருடத்திற்கு சுமார் 10 பேர் பதவி உயர்வு பெற்றிருப்பார்கள்.

தமிழ்நாட்டில் உள்ளது 365 ஒன்றியங்கள்.
2006-2010 வரை உள்ள 5 ஆண்டுகளில் சுமார் 18650 பேர் பாதிக்கப்பட்டு பணியாற்றி வருகிறார்கள்.

இதன் பாதிப்பு அறிந்ததும் அறியாமலும் பணியாற்றுபவர்கள் ஒன்றிணைந்து முயற்சி செய்ய வேண்டும்.

காலாண்டுத்தேர்வு 2016-17


=============================
மேல்நிலை வகுப்பு
======================
🌹12.9.16 - தமிழ் முதற்றாள்

🌹13.9.16 - பக்ரீத் விடுமுறை

🌹14.9.16 - தமிழ் இரண்டு

🌹15.9.16 - ENGLISH I

🌹16.9.16 - ENGLISH II

🌹17.9.16 - COMMERCE

18.9.16 - ஞாயிறு

🌹19.9.16 - MATHS/ZOOLOGY/ACCOUNTANCY &AUDITING THEORY

🌹20.9.16 - PHYSICS
                 ECONOMICS
                 ELECTRICAL
                 MACHINE 
                 & APPLIANCE

🌹21.9.16 - COMPUTER
                 SCIENCE

🌹22.9.16 - CHEMISTRY
                 ACCOUNTANCY 

🌹23.9.16 - BIOLOGY/
                 BOTANY/HISTORY
                 BUSINESS MATHS.

பத்தாம் வகுப்பு
=================
🌹14.9.16 - தமிழ் முதற்றாள்

🌹15.9.16 - தமிழ் இரண்டு

🌹16.9.16 - ENGLISH I

🌹17.9.16 - ENGLISH II

🌹19.9.16 - கணிதம்

🌹21.9.16 - அறிவியல்

🌹22.9.16 - விருப்பஅறிவியல்

🌹23.9.16 - சமூக அறிவியல்.

8822 வங்கி அதிகாரி பணி - ஐபிபிஎஸ் தேர்வு அறிவிப்பு

  இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கனரா வங்கி போன்ற 20 அரசுமயமாக்கப்பட்ட வங்கிகளில் ஏற்பட்டுள்ள பணியிடங்களுக்கான பொது எழுத்துத் தேர்வினை ஐ.பி.பி.எஸ். என்ற நிறுவனம் வருடத்திற்கு இரண்டு முறை நடத்துகிறது.

இந்த நிறுவனம், தற்போது மீண்டும் வேலைவாய்ப்பை எதிர்நோக்கி உள்ள ஆண்கள், பெண்கள் பயன்பெறும் வகையில் வங்கித்துறையில் 2016 - 2017-ஆம் ஆண்டிற்கான 8822 புரொபேஷனரி அதிகாரி, மேலாண்மை டிரெய்னி காலிப் பணியிடங்களுக்கு மனுதாரர்களை தேர்வு செய்வதற்கான போட்டித்தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

வங்கிகள் வாரியான காலியிடங்கள் விவரம்

1. Allahabad Bank - 525
2. Andhra Bank - 300
3. Bank of Baroda - 00
4. Bank of India - 200
5. Bank of Maharashtra - 00
6. Canara Bank - 2200
7. Central Bank of India  - 300
8. Corporation Bank - 00
9. Dena Bank - 00
10. IDBI Bank - 1350
11. Indian Bank - 00
12. Indian Overseas Bank - 00
13. Oriental Bank of Commerce - 500
14. Punjab National Bank - 750
15. Punjab & Sind Bank - 158
16. Syndicate Bank - 400
17. UCO Bank  - 540
18. Union Bank of India - 899
19. United Bank of India - 200
20. Vijaya Bank - 500

வயதுவரம்பு:இதற்கு விண்ணப்பிப்பவர்கள் 20 வயதுக்கு குறையாமலும், 30 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி இடஒதுக்கீடு பிரிவினருக்கு வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

கல்வித் தகுதி:குறைந்தபட்ச கல்வித் தகுதி அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இணையவழியிலான எழுத்துத் தேர்வு அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறும்.

விண்ணப்பக் கட்டணம்:பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. மற்ற அனைத்து பிரிவினருக்கும் ரூ.100. இதனை 26.07.2016 முதல் 13.08.2016 தேதிக்குள் ஆன்லைனில் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை:http://www.ibps.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:13.08.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.ibps.in/wp-content/uploads/Detailed_advertisment_for_CWE_PO_MT_VI.pdf என்ற இணையதள லிங்கை கிளிக் செய்து படித்து அறிந்து கொள்ளலாம்.
சுதந்திர தினத்தை ஒட்டி, 15 வகை கொண்டாட்டங்களுக்கு, கல்லுாரி மற்றும் பல்கலைகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. நாட்டின், 70வது சுதந்திர தினம் வரும், 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, 23ம் தேதி வரை, இரண்டு வார நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யுமாறு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, பள்ளி, கல்லுாரிகளில், நேற்று முன்தினம் முதல், சுதந்திர தின நிகழ்ச்சிகள் துவங்கியுள்ளன.எல்லை பாதுகாப்பு வீரர்களுக்கு, வாழ்த்து அட்டைகளை தபாலில் அனுப்புதல்; மரக்கன்றுகள் நடுதல்; விடுதலை போராட்டத்தை நினைவுகூரும் சொற்பொழிவுகள் நடத்துதல் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.இரண்டு வார நிகழ்ச்சிகளின் நிறைவாக, ஆக., 23ல், நாடு முழுவதும் காலை, 11:00 மணிக்கு, அனைத்து மாணவ, மாணவியரும் தேசிய கீதத்தை வாய் பாட்டாக பாட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது

Employment News : 13rd Aug to 19th - August 2016


JOB HIGHLIGHT

UNION PUBLIC SERVICE COMMISSION, DELHI
Name Of Post : Assistant Directors, Senior Scientific Officers, Assistant Engineers, Senior Lecturers, Specialists Grade III (Medicine),etc
No.of Vacancies : 146
Last Date :01.09.2016

STEEL AUTHORITY OF INDIA LIMITED, KOLKATA
Name Of Post : Medical Officer, Operator-cum-Technician, Mining Foremen, Mining Mate, Junior Assistant, Paramedical Staff, etc
No.of Vacancies : 195
Last Date :31.08.2016

ORDNANCE FACTORY, RAIPUR
Name Of Post : Tradesman (Semi Skilled & Labour)
No.of Vacancies : 138
Last Date :Last Date for Receipt of Application is 21 Days from the Date of

NATIONAL THERMAL POWER CORPORATION LIMITED, DELHI
Name Of Post : Finance Executive, Safety Officer, Mines Surveyor, Medical Specialist etc
No.of Vacancies : 94
Last Date :07.09.2016

BANARAS HINDU UNIVERSITY
Name Of Post : Non-Teaching and School Teaching Various Posts
No.of Vacancies : 290
Last Date :19.08.2016

BANK OF MAHARASHTRA, PUNE
Name Of Post : Gen. Officers MMGS-III-II, Security Officer’s, Clerks
No.of Vacancies : 1315
Last Date :06.09.2016

AIRPORTS AUTHORITY OF INDIA, KOLKATA
Name Of Post : Junior Assistant (Fire Service)
No.of Vacancies : 106
Last Date :05.09.2016

SPACE APPLICATIONS CENTRE, AHMEDABAD
Name Of Post : Scientist/Engineers, Junior Producer, Social research Assistant, Programme Assistant, Tech. Assistant, and Various Posts
No.of Vacancies : 249
Last Date :29.08.2016

Dr. ZAKIR HUSAIN MEM SR. SEC. SCHOOL, DELHI
Name Of Post : PGT Urdu, TGT English, TGT Maths, Asstt. Teacher, etc
No.of Vacancies : 21
Last Date :27.08.2016

Source : http://www.tnguru.com/2016/08/employment-news-13rd-aug-to-19th-august.html

TNPSC:நூலகர் மற்றும் உதவி நூலகர் 29 பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.

The Written Examination for the post of Librarian and Assistant Librarian for 29 vacanciesrelating to in various services was held on 01.08.2015 FN & AN and 02.08.2015 FN. 2352 candidates (Degree Standard-1069, Diploma Standard-740 and Certificate Standard-543) appeared for the said Examination.
Based on the marks obtained in the above said Examination, following the rule of reservation of appointments and as per the other conditions stipulated in the Notification, a list of register numbers of candidates (List-II) have been admitted provisionally for Certificate Verification for Oral Test to the said post and the list showing their Register Numbers is available at the Commission’s Website “www.tnpsc.gov.in”. The Certificate Verification will be held on 30.08.2016 at the Commission’s office. | பல்வேறு பணிகளில் அடங்கிய நூலகர் / உதவி நூலகர் பதவிகளுக்கான 29 காலிப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு 01.08.2015 மு.ப & பி.ப. மற்றும் 02.08.2015 மு.ப ஆகிய நாட்களில் நடத்தப்பட்டது. மேற்காண் தேர்வில் 2352 விண்ணப்பதாரர்கள் (பட்டப்படிப்பு தரம்-1069, பட்டயப்படிப்பு தரம்-740, சான்றிதழ் படிப்பு தரம்-543)கலந்துகொண்டனர். அத்தேர்வில், விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி மற்றும் அப்பதவிக்கானஅறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் நேர்காணல் தேர்விற்கு முன் நடைபெறும் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தற்காலிகமாகத் தெரிவு செய்யப்பட்ட 19 விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் (பட்டியல்-II) தேர்வாணைய வலைதளம் www.tnpsc.gov.in-ல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு 30.08.2016 தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும். வெ. ஷோபனா, இ.ஆ.ப., தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர்
DOWNLOAD தற்காலிகமாகத் தெரிவு செய்யப்பட்ட 19 விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல்

TNPSC ASSISTANT STATISTICAL INVESTIGATORIN - Final Results

TNPSC RESEARCH ASSISTANT IN EVALUATION AND APPLIED RESEARCH-Results

TNPSC RESEARCH ASSISTANT IN EVALUATION AND APPLIED RESEARCH-Results

TNPSC POSTS INCLUDED IN C.S.S.E-II - Written Exam Results

ஒருங்கிணைந்த பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத்திட்ட விண்ணப்ப படிவம்



புதுமையாக கற்பிக்கும் ஆசிரியர்கள் எஸ்.சி.இ.ஆர்.டி. இணையதளத்தில் வீடியோ வெளியீடு.

பொம்மலாட்டம் உள்ளிட்ட புதுமை யான முறையில் மாணவர்களுக்குப் பாடங்களைக் கற்றுத்தரும் ஈரோடு ஆசிரியர்களின் வீடியோ தொகுப் பைத் தமிழ்நாடு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (எஸ்.சி.இ.ஆர்.டி) இணையதளத்தில் வெளியிட்டுள் ளது.
இதன்மூலம் இதர ஆசிரியர்களும் இத்தகைய முறையைப் பின்பற்றி எளிமையான முறையில் பாடங்களைக் கற்பிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.அரசுப் பள்ளிகளில் கற்பிக்கும் முறையை வித்தியாசப்படுத்த வேண்டும் என்பதற்காக ஆசிரியர் களுக்கு பயிற்சி வழங்க பள்ளிக் கல்வித் துறையில், மாநில கல்வியி யல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

தனியார் பள்ளிகளில் கற்பிக்கும் முறையைவிட, அரசுப் பள்ளிகளில் கற்பிக்கும் முறைகளை மேம்படுத்த புதிய முயற்சிகள் பலவற்றை மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. அதன்படி, கற்பித்தலில் புதுமையை புகுத்தும் ஆசிரியர் களின் செயல்பாடுகளை, மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவன இணையதளத்தில் (www.tnscert.org) வீடியோவாக வெளியிட முடிவு செய்யப்பட்டது. இதன் அடுத்தகட்டமாக தமிழகம் முழுவதும் 1,500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், தங்களது கற்பித்தல் முறைகளை விளக்கி, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்துக்கு கடந்த ஆண்டு விண்ணப்பித்தனர். இதில் மிகவும் வித்தியாசமான முறையில் மற்றும் புதுமையாகக் கற்பித்த 100 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களின் வகுப்பறை கற்பித்தல் செயல்பாடுகளை வீடியோவாக எடுக்கும் பணி தமிழகம் முழுவதும் நடைபெற்றது . இதில் 100 ஆசிரியர்களின் புதுமையான கற்பித்தல் முறையை ஆவணப் படம் போல மாநில கல்வி யியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் இணையதளத்தில் வீடி யோவாக பதிவேற்றம் செய்து வருகிறது. இதில் ஈரோடு மாவட் டத்தைச் சேர்ந்த 3 ஆசிரியர்களின் கற்பித்தல் முறை குறித்த வீடியோ இடம்பெற்றுள்ளது. ஈரோடுமாவட்டம் மொடக் குறிச்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நாதகவுண்டன் பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இடை நிலை ஆசிரியர் தே.தாமஸ் ஆண்டனி (பொம்மலாட்டம் மூலம் கல்வி கற்பித்தல்), பவானி ஒன்றியம் சின்னியம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியை எம்.சுதா (பழைய செயல்வழிக் கற்றல் அட்டை மூலம் வகுப்பறையை அழகுபடுத்துதல் மற்றும் கற்றல் பயிற்சியை மேம் படுத்துதல்), பவானி ஒன்றியத்தில் உள்ள ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசி ரியை வாசுகி (வாழ்க்கைக் கல் வியை அனுபவ பயிற்சி மூலம் கற்பித்து மாணவர்களை உணரச் செய்தல்) ஆகியோரின் கல்வி கற் பித்தல் முறை குறித்த வீடியோ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வாறு பதிவேற்றப்படும் வீடியோவால் மற்ற ஆசிரியர்களும் இந்த வீடியோவைப் பார்த்து புதுமையாகவும்எளிமையாகவும் கற்பிப்பார்கள் என்ற நோக்கத்தின் அடிப்படையில் இந்த கற்பித்தல் முறையை அங்கீகரித்து இவ்வாறு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த முயற்சி வரும் கல்வியாண்டி லும் தொடரும் என்றும் இதன் மூலம் புதிய முறையில் வித்தியாசமாக கற்பிக்கும் ஆசிரியர்களின் திறமைகள் இணையதளத்தில் வெளியிடப்படும் எனவும் எஸ்.சி.இ.ஆர்.டி தெரிவித்துள்ளது

தேர்வு கட்டணம் பாக்கி பி.இ., 'ரிசல்ட்' நிறுத்தம்

தேர்வு கட்டண பாக்கியால், ஒன்பது தனியார் இன்ஜி., கல்லுாரிகளின் தேர்வு முடிவுகள் நிறுத்தப்பட்டு உள்ளன. அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, 571 இன்ஜி., கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்புகளுக்கு, ஆக., 4ம் தேதி; எம்.இ., - எம்.டெக்., படிப்புகளுக்கு, 6ம் தேதி, தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. 
இதில், தேர்வு கட்டணம் செலுத்தாத, சில கல்லுாரிகளின் முடிவுகள் மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டன; அந்த கல்லுாரிகளுக்கு, தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகம், 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது. அதில், ஒன்பது கல்லுாரிகள், கட்டணம் செலுத்த அவகாசம் கேட்டுள்ளன. 'பணம் கட்டிய கல்லுாரிகளின் முடிவுகள், திங்கட்கிழமை வெளியாகும்' என, அண்ணா பல்கலை அதிகாரிகள் தெரிவித்தனர்.

வாக்காளர் பட்டியல் திருத்தம் செப்., 1ம் தேதி துவக்கம்

தமிழகத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணியை, செப்., 1 முதல் துவக்க, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. அதன்படி செப்., 1ம் தேதி, மாநிலம் முழுவதும், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். 
சட்டசபை தேர்தல் நடைபெறாமல் உள்ள, கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் தொகுதிகளில் மட்டும், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படாது. வரைவு பட்டியல் வெளியிடப்பட்ட தொகுதிகளில், பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், முகவரி மாற்றம் தொடர்பாக, செப்., 30 வரை, மனு அளிக்கலாம்; செப்., 10 மற்றும், 24ம் தேதி, கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டு, வாக்காளர் பட்டியல் படித்து காட்டப்படும்.வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடர்பாக, செப்., 11 மற்றும், 25ம் தேதி, ஓட்டுச்சாவடி அளவில், விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படும். வரும், 2017 ஜனவரி, 1ம் தேதி, 18 வயது பூர்த்தியாகிறவர்கள், பெயர் சேர்க்க மனு கொடுக்கலாம். வாக்காளர் இறுதி பட்டியல், ஜன., 5ல் வெளியிடப்படும்.

தஞ்சாவூர் மற்றும் அரவக்குறிச்சி தொகுதியில், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடர்பான அறிவிப்பு, பின் வெளியிடப்படும்.

பி.எட்., பயிற்சிக்கு பள்ளிகளில் அனுமதி

அரசு பள்ளி ஆசிரியர்கள், தாங்கள் பணிபுரியும் பள்ளிகளில், பி.எட்., பயிற்சி பெற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அரசு நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள், தொலை நிலையில், ஆசிரியர் கல்வியியல் படிப்பான, பி.எட்., முடித்த பின், பயிற்சி மேற்கொள்ள விரும்பினால், தாங்கள் பணியாற்றும் பள்ளியிலேயே, ஆறு முதல், எட்டாம் வகுப்பு வரை பாடம் நடத்தி, பயிற்சிமேற்கொள்ளலாம். 
அதேநேரம், ஐந்தாம் வகுப்பு வரை, பாடம் எடுக்கும் தொடக்கப் பள்ளி இடைநிலை ஆசிரியர்கள், பல்கலை அனுமதிக்கும் பள்ளியில் பயிற்சி பெறலாம்.'இந்த பயிற்சிக் காலம், பணிக் காலமாக எடுத்துக் கொள்ளப்படாது; எனவே, பணியாற்றிக் கொண்டிருக்கும் ஆசிரியர்கள், விடுப்பு விண்ணப்பம் அளிக்க வேண்டும்' என, தொடக்கக் கல்வித் துறை இயக்குனர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்

TNPSC:குரூப் - 1 நேர்முக தேர்வு பட்டியல் வெளியீடு.

குரூப் - 1 பதவியில், துணை கலெக்டர் உள்ளிட்ட, 79 காலியிடங்களை நிரப்புவதற்கான, நேர்முகத் தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இதற்கான முதன்மை எழுத்துத் தேர்வு, 2015 ஜூன், 5, 6 மற்றும், 7ம் தேதிகளில் நடந்தது; 3,407பேர் பங்கேற்றனர். 
இதையடுத்து, சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து, நேர்முகத் தேர்வுக்கு தகுதியானவர்களின் பட்டியல், நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. தேர்வர்களின் மதிப்பெண், 'கட் - ஆப்' தரவரிசை போன்ற விவரங்கள், பதிவெண்களுடன், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. நேர்முகத் தேர்வு, வரும், 19ம் தேதி முதல் நடக்க உள்ளது

தமிழில் பெயர் 'இனிஷியல்'

அரசு பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள், தமிழில் பெயர் எழுதவேண்டும் என, உத்தரவிடப்பட்டு உள்ளது. துாத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஜெபத்துரை என்ற தமிழ் ஆர்வலர், பள்ளிக் கல்வித் துறைக்கு கடிதம் அனுப்பியிருந்தார். 
அதில், பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்கள் சிலர், தங்கள் பெயரை ஆங்கிலத்திலும், சிலர் முன்னெழுத்தான, 'இனிஷியலை' ஆங்கிலத்தில் எழுதுவதாகவும் கூறியிருந்தார். இதைத்தொடர்ந்து, தொடக்கப் பள்ளி இயக்குனர் இளங்கோவன் அனுப்பிய சுற்றறிக்கையில், 'தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் அதிகாரிகள் முதல், ஊழியர்கள் வரை அனைவரும்,தங்கள் பெயரை தமிழில் எழுதுவதுடன், இனிஷியலையும், தமிழிலேயே எழுத வேண்டும்' என, உத்தரவிட்டுள்ளார். தமிழில் எழுதாதது, அரசு விதிகளுக்கு முரணானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பேராசிரியர் பணி: விண்ணப்பிக்க அழைப்பு

அரசு இன்ஜி., கல்லுாரிகளில் பேராசிரியர் பணிக்கு, செப்., 7 வரை விண்ணப்பிக்கலாம்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.அரசு இன்ஜி., கல்லுாரிகளில், காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணிக்கு நேரடி நியமன எழுத்து தேர்வு, அக்., 11ல் நடக்க உள்ளது.
சென்னை மாவட்டத்தில், இந்த பதவிக்குவிண்ணப்பிக்க விரும்புவோர், சைதாப்பேட்டை பனகல் மாளிகையில் உள்ள, முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில், வரும், 17ம் தேதி முதல் விண்ணப்பங்களை பெற்று, செப்., 7 வரை அனுப்பலாம் என, சென்னை கலெக்டர் அழகுமீனா தெரிவித்துள்ளார்.

01.01.2006 - 31.12.2010க்குள் பதவி உயர்வு பெற்றுள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கான பாதிப்புகள்.

ஊதியக்குழு அரசாணை எண்:234ன் படி மிகக்குறைந்த ஊதிய ஏற்றம் 5200-20200 +.2800 நிர்ணயம் செய்யப்பட்டுஊதியம் பெற்று வரும் இடைநிலை ஆசிரியர்களில் 01.01.2006 முதல் 31.12.2010க்குள் பதவி உயர்வு பெற்றுள்ளஇடைநிலை ஆசிரியர்கள் கவனிக்க வேண்டியவை.
அரசாணை எண் :23ன் படி இடைநிலை ஆசிரியர்களுக்கு 750 ரூபாய் தனி ஊதியமாக 01.01.2011 முதல் வழங்கப்படுகிறது.01.01.2006 முதல் 31.12.2010 க்குள் பதவி உயர்வு பெற்றுள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை + தர ஊதியத்திலிருந்து பதவி உயர்வுக்கான ஊதிய நிர்ணயம் செய்யப்படும்.01.01.2011லிருந்து பதவி உயர்வு பெறுபவர்களுக்கு அடிப்படை + தர + தனி ஊதியத்திலிருந்து பதவி உயர்வுக்கான ஊதிய நிர்ணயம் செய்யப்படும்.

எனவே 01.01.2006 - 31.12.2010க்குள் பதவி உயர்வு பெற்றுள்ள இடைநிலை ஆசிரியர்கள் தங்களது ஊதியத்தில் தனி ஊதியம் 750 மற்றும் அதற்கான அகவிலைப்படி சேர்த்து ஒரு வருடத்திற்கு தோராயமாக 15000 ரூபாய் இழந்து வருகிறார்கள்.ஒன்றியத்திற்கு வருடத்திற்கு சுமார் 10 பேர் பதவி உயர்வு பெற்றிருப்பார்கள்.

தமிழ்நாட்டில் உள்ளது 365 ஒன்றியங்கள்.2006-2010 வரை உள்ள 5 ஆண்டுகளில் சுமார் 18650 பேர் பாதிக்கப்பட்டு பணியாற்றி வருகிறார்கள்.

இதன் பாதிப்பு அறிந்ததும் அறியாமலும் பணியாற்றுபவர்கள் ஒன்றிணைந்து முயற்சி செய்ய வேண்டும்.

கல்வி தொடர்பான அரசமைப்புச் சட்ட விதிகளில் திருத்தம் மேற்கொள்ளவில்லை: மத்திய அரசு விளக்கம்

புதிய கல்வி கொள்கை தொடர்பான சர்ச்சை நீடித்து வரும் நிலையில், இட ஒதுக்கீடு மற்றும் சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்கள் தொடர்பான அரசமைப்புச் சட்ட விதிகளில் திருத்தம் மேற்கொள்ளவில்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.


மாநிலங்களவையில் இதுதொடர்பாக வியாழக்கிழமை நடைபெற்ற விவாதத்தின்போது ஆர்எஸ்எஸ் கோட்பாட்டை கல்வியில் திணிக்க முயற்சிப்பதாக மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

இந்நிலையில் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கையில் மத்திய அரசு இவ்வாறு விளக்கம் அளித்துள்ளது.

மாநிலங்களவையில், இந்த விவகாரம் தொடர்பாக வெள்ளிக்கிழமையும் விவாதம் நடைபெற்றது. அப்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுந்து நின்று, இந்த விவகாரம் குறித்து மத்திய அரசு உடனடியாக பதிலளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதையடுத்து, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகர் விளக்கம் அளித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

இட ஒதுக்கீடு அல்லது சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்கள் தொடர்பான எந்த அரசமைப்புச் சட்ட விதிகளையும் திருத்தம் செய்யும் பணியில் மத்திய அரசு ஈடுபடவில்லை. ஜனநாயகத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு. நமது வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில் கல்வி இருக்க வேண்டும் என்பதை விரும்புகிறோம்.

புதிய கல்விக் கொள்கை தொடர்பான வரைவு குறித்து கருத்துகள் அல்லது ஆலோசனைகளை தெரிவிக்கும்படி மட்டுமே கேட்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக அனைத்து தரப்பினரிடம் இருந்தும் ஆலோசனைகளை அரசு கேட்டுள்ளது. இதற்கான கால அவகாசம் வரும் செப்டம்பர் மாதம் 15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்றார் பிரகாஷ் ஜாவ்டேகர்.

Results of Departmental Examinations - MAY 2016 (Updated on 08 August 2016)

கணினி ஆசிரியர்கள் 39000பேருக்கு தமிழக அரசு புதிய பணியிடஞ்களை உருவாக்கித் தரவேண்டும் -தமிழக அரசுக்கு தங்கம் தென்னரசு வேண்டும்கோள்.

தமிழ்நாட்டில் பி.எட் கணினி அறிவியல் படித்த 39000 பேர்கள் இன்றுவேலையில்லாமல் உள்ளனர் அவர்களுக்கு உடனடியாக வேலை வாய்ப்பு வழங்கும் வகையில்புதிய பணியிடங்களை உருவாக்க வேண்டும்.2011ஆம் கல்வியாண்டில் 6,7,8,9,10 வகுப்புகளுக்கு கணினி அறிவியல் பாடம்அறிமுகப்படுத்தப்பட்டு
 பாடபுத்தகங்களும் அச்சடிக்கப்பட்டு கொஞ்சம்மாணவர்களுக்கு வழங்கியும் கொஞ்சம் மாணவர்களுக்கு வழங்காமல் இருந்ததுஅதற்கக்குள் நான் போக விரும்பவில்லை.
தற்போது தமிழ்நாட்டில் அந்தப்பாடபுத்தகமும்,பாடமும் கைவிடப்பட்டது என்பதை நான் அறிவேன் கைவிடப்பட்ட கணினிஅறிவியல் பாடபுத்தகங்களை மீண்டும் அமல்படுத்தி அதற்கு புதிய கணினி ஆசிரியர்கல்பணியிடங்களை உருவாக்கி தரவேண்டும்.

கழக ஆட்சியில் 1800தோற்றுவிக்கப்பட்ன தொடர்ந்து இந்த ஆட்சியிலும்39000பேர்கள்இன்றைக்கு வேலையினை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர் அவர்களுக்கு வேலைவாய்ப்புவழங்கும் வகையில் புதிய பணியிடங்கள் உருவாக்கி தரவேண்டும் என தமிழகஅரசுக்குவேண்டுகோள் வைக்க விரும்புகிறேன் -தங்கம் தென்னரசு.

பி.எட்., கவுன்சிலிங் 22ம் தேதி துவக்கம்

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லுாரிகளில் பி.எட்., படிப்பிற்கான கவுன்சிலிங் வரும் 22ல் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏழு அரசு கல்லுாரிகள் மற்றும் 14 அரசு உதவி பெறும் கல்லுாரிகளுக்கான பி.எட்., மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கை, சென்னை, லேடி வெலிங்டன் கல்லுாரி
நடத்துகிறது. இந்த ஆண்டு, 1,777 இடங்களில் சேர, 4,002 பேர் விண்ணப்பம் பெற்றனர்; அவர்களில், 3,736 பேர் விண்ணப்பித்துள்ளனர்; இதில், 154 பேர் இன்ஜினியரிங் பட்டதாரிகள்.
மாணவர் சேர்க்கை செயலர் தில்லைநாயகி வெளியிட்ட அறிவிப்பு: பி.எட்., கவுன்சிலிங், வரும், 22 முதல், 30 வரை நடக்க உள்ளது. முதல் நாளில், மாற்று திறனாளிகள் உள்ளிட்டோருக்கு கவுன்சிலிங் நடக்கும். விண்ணப்பதாரர்களின், 'கட் - ஆப்' மதிப்பெண் வரும், 17ம் தேதி, லேடி வெலிங்டன் கல்வியியல் கல்லுாரி இணையதளத்தில், (www.ladywillingdoniase.com) வெளியாகும். விண்ணப்பதாரர்களுக்கு, தபால் மூலமும், மொபைல் போன் எஸ்.எம்.எஸ்., மூலமும், அழைப்பு தகவல் அனுப்பப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கள்ளர் பள்ளி ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு: ஆக.18-க்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தல்

அரசு கள்ளர் பள்ளிகள் மற்றும் விடுதிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் விடுதி காப்பாளர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வுக்கான முன்னுரிமை பட்டியலுக்கு ஆக.18 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து கள்ளர் சீரமைப்பு இணை இயக்குநர் (மதுரை) செல்வக்குமார் தெரிவித்துள்ளது: மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்ட அரசு கள்ளர் பள்ளிகள் மற்றும் விடுதிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் மற்றும் காப்பாளர்களுக்கு 2016- 17 ஆம் கல்வியாண்டில் நடைபெற வேண்டிய பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு ஆக.26 மற்றும் 27 ஆகிய 2 நாள்கள் மதுரை மாவட்டம், செக்கானூரணி, அரசு கள்ளர் மேனிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெறும்.  ஆக.26 ஆம் தேதி, மேனிலைப்பள்ளித் தலைமையாசிரியர், முதுகலைப் பட்டதாரி ஆசிரியர், உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர், நடுநிலைப்பள்ளித் தலைமையாசிரியர் ஆகியோருக்கு மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெறும். ஆக.27 ஆம் தேதி முற்பகல் தமிழாசிரியர் மாறுதல், பட்டதாரி ஆசிரியர், காப்பாளர் மாறுதல், பிற்பகலில் தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியர் மாறுதல் மற்றும் பதவி உயர்வு இடைநிலை ஆசிரியர் (1 முதல் 5 ஆம் வகுப்பு) இடைநிலைக் காப்பாளர் மாறுதல் மற்றும் சிறப்பாசிரியர் மாறுதலும் நடைபெற உள்ளது.

 முன்னுரிமையில் உள்ளவர்கள் உரிய சான்றுகளுடன் ஆக.18 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கும் பட்சத்தில், அதற்குரிய முன்னுரிமை வழங்கப்படும். அதன்பின்னர் வரும் மனுக்கள் நிராகரிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

��சிறப்புச் செய்தி�� பணிநிரவல் மூலம் ஆணை பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் பணியில் சேராமல் ஒன்றியம் விட்டு ஒன்றியம்,மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வு மனு கொடுத்திருந்தால் கலந்துகொள்ளலாம்

காந்தியடிகள்

உடலோம்பலின் இன்றியமையாமை