யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

15/10/15

பூட்டை உடைத்து கோபாலபுரம் பள்ளி திறப்பு: போலீசார் துணையுடன் அதிகாரிகள் நடவடிக்கை

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே பள்ளிக்கு தலைமை ஆசிரியையால் போடப்பட்ட பூட்டை போலீசார் துணையுடன் அதிகாரிகள் உடைத்து திறந்தனர்.
அருப்புக்கோட்டை அருகே கோபாலபுரத்தில் அரசு உதவி பெறும் இந்து ரெட்டி துவக்க பள்ளி உள்ளது. இங்கு, காலாண்டு விடுமுறைக்கு பின் பள்ளி தொடர்ந்து மூடப்பட்டிருந்தது. 

மாணவர்கள் பள்ளிக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பினர். தலைமை ஆசிரியை பள்ளியை பூட்டி சாவியை எடுத்து சென்று விட்டதாக கல்வி அதிகாரிகள் காரணம் கூறினர். 
இதை தொடர்ந்து மாணவர்களுக்கு வேறு பள்ளி ஆசிரியர் மூலம் பள்ளி வராண்டாவில் பாடம் நடத்தப்பட்டது.பூட்டு உடைப்பு: இது தொடர்பான செய்தி நேற்று ' தினமலர் 'நாளிதழில் வெளியானது. இதையடுத்து, நேற்று காலை அந்த பள்ளிக்கு மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் 
முருகேசன், அருப்புக்கோட்டை கல்வி மாவட்ட அலுவலர் சங்கரநாராயணன் உடன் வந்த போலீசார், பள்ளி நிர்வாக கமிட்டியினர், ஊர்பெரியவர்கள், ஊராட்சி துணை தலைவர் திருவேங்கடம், வி.ஏ.ஒ., அழகர் முன்னிலையில், போலீஸ் பாதுகாப்புடன் பள்ளியின் பூட்டைஉடைத்து திறக்கப்பட்டது. இதன் பின் மாணவர்கள் பள்ளி வகுப்பறையில் அமர வைக்கப்பட்டனர். மாற்று பணி ஆசிரியர் ஜெயசுந்தர் மாணவர்களுக்கு பாடம் நடத்தினார்.

அகவிலைப்படி உயர்வை அறிவிப்பதில் ஏன் தாமதம்?.. எதிர்பார்ப்பில் அரசு ஊழியர்கள்

சென்னை: மத்திய அரசு அகவிலைப்படி உயர்வை அறிவித்து நாட்களாகி விட்ட போதும் தமிழக அரசு அதுகுறித்து வாயே திறக்காமல் இருப்பது தமிழக அரசு ஊழியர்களை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கான 6 சதவீத அகவிலைப்படி உயர்வு கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. இதன்படி 113 சதவீதத்தில் இருந்து 119 சதவீதமாக அகவிலைப்படி உயர்ந்தது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு எப்போதெல்லாம் அறிவிக்கப்படுகிறதோ அதை பின்பற்றி தமிழக அரசும் உடனடியாக அகவிலைப்படி உயர்வை தனது ஊழியர்களுக்கு அறிவிக்கும். ஆனால் மத்திய அரசு அகவிலைப்படி உயர்வை அறிவித்து பல வாரங்களாகி விட்ட நிலையில் தமிழக அரசு அதுகுறித்து வாயே திறக்காமல் அமைதி காத்து வருகிறது. இது அரசு ஊழியர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிருப்தியும் வெளிக் கிளம்பியுள்ளது. இருப்பினும் இன்னும் ஓரிரு நாட்களில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின்ஊதிய முரண்பாடுகள்: விபரங்களை நவ.,31 க்குள் அனுப்பி வைக்க அரசு உத்தரவு

அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கான 7 வது ஊதிய மாற்றத்தை 2006 ஜன., 1 முதல் தமிழக அரசு செயல்படுத்தியது. இதில் முரண்பாடு இருப்பதாகவும், அவற்றை களைய வலியுறுத்தியும், அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்கள் போராடி வருகின்றன.
மேலும் பல்வேறு சங்கங்கள் மற்றும் தனிநபர்கள் சார்பிலும் நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டுள்ளன.ஊதிய முரண்பாடுகளை ஆராய அரசு நிதிச்செயலர் அனைத்து துறை செயலர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் 7 வது ஊதிய மாற்றத்திற்கு முன் மற்றும் பின் ஒவ்வொரு பதவிகளின் ஊதியகட்டு விபரம், துறை வாரியாக ஊழியர்களின் எண்ணிக்கை, அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள், காலியிடங்கள், அதிகாரத்திற்கு உட்பட்ட பதவி, பணியாளர்களின் கல்வித்தகுதி, பணி தன்மை உள்ளிட்ட விபரங்களை நவ.,31 க்குள் அனுப்பி வைக்க வேண்டுமென, தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாலை பாதுகாப்பு விதிமுறை உறுதிமொழி எடுக்க உத்தரவு

பள்ளியில் நடக்கும் பிரார்த்தனைக் கூட்டத்தில், போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து, மாணவர்கள் உறுதிமொழி எடுக்க வேண்டும் என, பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.போக்குவரத்து விதிமுறை மீறல், வாகனங்கள் பழுது, அதிக மாணவர்களை ஏற்றிச் செல்லுதல், பராமரிப்பு குறைவு போன்ற காரணங்களால், பள்ளி வாகனங்கள் அடிக்கடி விபத்துக்கு உள்ளாகின்றன. இந்நிலையில், மாணவர்களுக்கு போக்குவரத்து விதிமுறைகளை கற்றுத்தர, கல்வித் துறை இயக்குனர் உத்தரவிட்டு உள்ளார்.
அதன் விவரம்:
தேசிய குற்றவியல் அறிக்கைப்படி, ஆண்டுதோறும், 1.4 லட்சம் பேர் சாலை விபத்தில் மரணமடைகின்றனர். இதற்கு முக்கியக் காரணம், சாலை விதிமுறைகளை மீறுவது தான். எனவே, பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து, மாணவ, மாணவியரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும். அனைத்துப் பள்ளிகளிலும், சாலை பாதுகாப்பு உறுதிமொழி எடுக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். பள்ளியில் நடக்கும் காலை நேர பிரார்த்தனைக் கூட்டத்தில், வாரத்தில் ஒரு நாளாவது, இந்தஉறுதிமொழி எடுக்கப்பட வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மற்றும் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் ஒப்பந்தம்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுக்கு குறைந்த செலவில் பொது சேவை மையங்கள் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று டி.என்.பி.எஸ்.சி. புதிய தலைவர் க.அருள்மொழி கூறினார்.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் சி.பாலசுப்பிரமணியன் அரசு பணியாளர் தேர்வாணைய தலைவராக (பொறுப்பு) ஆக இருந்து வந்தார். இந்த நிலையில் புதிய தலைவராக க.அருள்மொழி என்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியை அரசு நியமித்தது. இதையொட்டி க.அருள்மொழி டி.என்.பி.எஸ்.சி. தலைவராக பதவி ஏற்றார். பின்னர் அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:–இணையதள சேவை
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் இணையவழி சேவை அனைத்தும் மிக குறைந்த செலவில் விண்ணப்பதாரர்களுக்கு கிடைக்க தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தனது இணையவழி விண்ணப்ப சேவையை, தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தால், அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள், சென்னை மாநகராட்சி தலைமையிடம் மற்றும் 15 மண்டல அலுவலகங்கள் என 280 இடங்களில் நடத்தப்படும் ‘‘இ–சேவை மையங்களுக்கு’’ (பொது சேவை மையங்கள்) வழங்கியுள்ளது. முதல்கட்டமாக, நிரந்தரப்பதிவு செய்தல், தேர்வுகளுக்கு விண்ணப்பித்தல், விண்ணப்பங்களில் மாறுதல் செய்தல், விண்ணப்பத்தின் நகல் பெறுதல் ஆகிய சேவைகளுக்கு விண்ணப்பதாரர்கள் மேற்கூறிய 280 இ–சேவை மையங்களை அணுகலாம். மேற்படி சேவைகளைப் பெற இ–சேவை மையங்களுக்கு செலுத்த வேண்டிய கட்டணங்கள் பின்வருமாறு:–நிரந்தர பதிவு கட்டணம்
1. நிரந்தர பதிவு செய்ய ரூ.502. தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கரூ.303. விண்ணப்பங்களில் மாறுதல் செய்ய ரூ.54. விண்ணப்பங்களில் மாறுதல் செய்து விண்ணப்பத்தின் நகல் பெற ரூ.20விண்ணப்பதாரர்கள் தேர்வாணையத்திற்கு செலுத்த வேண்டிய நிரந்தர பதிவு கட்டணமான ரூபாய் 50 மற்றும் நிர்ணயிக்கப்பட்ட தேர்வு கட்டணம் ஆகியவற்றையும் இ–சேவை மையங்களிலேயே செலுத்தும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. பணம் செலுத்தியதற்கான ஒப்புகை சீட்டினையும் பெற்றுக்கொள்ளலாம்.வெளிப்படையாக நடத்தப்படும்
மேற்படி சேவைகள் எல்காட் நிறுவனத்தால் நடத்தப்படும் இ–சேவை மையங்களுக்கும் விரைவில் விரிவுபடுத்தப்படவுள்ளது. எனவே விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் இந்த சேவையைப் பயன்படுத்தி குறைந்த செலவில் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.தேர்வுகள் வெளிப்படையாகவும், நம்பகத்தன்மையுடனும் நடத்தப்படும். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நண்பனாக செயல்படும். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளின் முடிவு காலதாமதமாக வராது. காலதாமதத்தை தவிர்க்க அனைத்து நடவடிக்கை எடுக்கப்படும்.கிராம நிர்வாக அலுவலர்களை நியமிக்க நடத்தப்படும் தேர்வுக்கான அறிவிப்பு, குரூப்–4 தேர்வு நடத்துவதற்கான அறிவிப்பு ஆகியவை பின்னர் அறிவிக்கப்படும்.இவ்வாறு க.அருள்மொழி தெரிவித்தார்.பேட்டியின்போது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய செயலாளர் விஜயகுமார், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெ.ஷோபனா, செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனர் மற்றும் அரசு கேபிள் டி.வி. நிர்வாக இயக்குனர் குமரகுருபரன் ஆகியோர் இருந்தனர்.

50 Information about Abdul Kalam:

அப்துல் கலாம் பற்றி 50 தகவல்கள்: 
1. தாய்மொழியான தமிழ் வழியில் கல்வி பயின்று, அறிவியல் துறையில் உலக சாதனைகள் செய்தவர் அப்துல் கலாம்.
2. இந்திய ஜனாதிபதிகளில் மிக, மிக எளிமையாக இருந்தவர் இவர் ஒருவரே. ஜனாதிபதி மாளிகையில் சைவ உணவுகள் மட்டுமே சாப்பிட்ட ஒரே ஜனாதிபதி இவர்தான்.

3. நாடெங்கும் பட்டி தொட்டிகளில் படிக்கும் மாணவ – மாணவிகளிடம் கூட நாட்டின் மீது தேசப்பற்று ஏற்பட செய்தவர். ஒரு அரசாங்கம் செய்ய வேண்டிய பணியை ‘‘மாணவர்களே கனவு காணுங்கள்’’ என்று சொல்லி மாணவர்கள் மத்தியில் புரட்சியை ஏற்படுத்தியவர்.
4. நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காக பெருந்தலைவர் காமராஜர் திருமணம் செய்து கொள்ள மறுத்தார். அதுபோல திருமணம் செய்தால் அறிவியல் வளர்ச்சிப் பணிகளில் முழுமையாக ஈடுபட முடியாது என்று திருமணம் செய்ய மறுத்தார் அப்துல் கலாம்.
5. இவரது வாழ்க்கையின் ஒவ்வொரு வினாடியும் காந்திய கொள்கைகளை பிரதிபலித்தது.
6. மாணவ, மாணவிகளைப் பார்த்ததும் அவர் பூரித்துப் போவார். அவர்கள் அருகில் சென்று பேசாமல் இருக்க மாட்டார்.
7. ஜனாதிபதியாக இருப்பவர்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எழுதப்படாத சில மரபுகள் இருந்தன. பதவியேற்ற முதல் நாளே அந்த மரபுகளை உடைத்தவர் அப்துல் கலாம்.
8. ‘‘அக்னிச் சிறகுகள்’’ எனும் நூல் அப்துல் கலாமின் சுய சரிதையாக வெளி வந்துள்ளது.
9. அப்துல் கலாம் நிறைய கவிதைகள் எழுதியுள்ளார். அந்த கவிதைகளின் வரிகள் ஒவ்வொன்றும் வாழ்க்கைக்கு வழிகாட்டும் வார்த்தைகளாக உள்ளன.
10. அப்துல் கலாம் தன்னடகத்தின் உச்சமாக திகழ்ந்தவர். அவரைப் போன்று பணிவான மனிதர்களை காண்பது அரிது என்று உலக தலைவர்களே வியந்துள்ளனர்.
11. நான் என்ற அகந்தை எண்ணம் அவரிடம் துளி அளவு கூட இருந்ததில்லை. சிறு வயது முதல் வாழ்நாளின் இறுதி வரை அமைதியானவர், அன்பானவர் என்ற பாதையில் இருந்து அவர் விலகாமலே இருந்தார்.
12. ‘‘நான் யார் தெரியுமா’’ என்ற ரீதியில் அவர் ஒரு நாள் கூட செயல்பட்டதில்லை. ஒரு தடவை அவர் வெளிநாடு சென்றிருந்த போது விமான நிலைய அதிகாரிகள் அவர் அணிந்திருந்த கால் ஷூ–வை அகற்றி சோதித்த போது, சிரித்துக் கொண்டே முழு ஒத்துழைப்புக் கொடுத்தார்.
13. எந்த ஒரு இடத்திலும் தன்னை முன்னிலைப்படுத்தி பரபரப்பு ஏற்படுவதை அவர் ஒரு போதும் விரும்பமாட்டார். ஜனாதிபதியாக இருந்த போது ஒரு நாள் டெல்லி ஜும்மா மசூதிக்கு தொழ சென்ற அவர் இடம் நெருக்கடி காரணமாக கடைசி வரிசையில் கூட்டத்தோடு கூட்டமாக நின்று இறைவனை தொழுதது குறிப்பிடத்தக்கது.
14. எந்த அளவுக்கு அவர் தன்னடக்கம் கொண்டிருந்தாரோ, அதே அளவுக்கு அவர் தன்னம்பிக்கையிலும் உச்சத்தில் இருந்தார். ‘‘நீ முயன்றால் நட்சத்திரங்களையும் பறிக்கலாம்’’ என்று அடிக்கடி கூறுவார்.
15. இந்திய அரசியல்வாதிகளிடம் இவர் அடிக்கடி உதிர்த்த வார்த்தை – ‘‘தொழில் நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள். அது தான் நம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும்’’
16. உலகத் தலைவர்களில் அப்துல் கலாம் அளவுக்கு இளைய சமுதாயம் எழுப்பிய கேள்விகளுக்கு இதுவரை யாருமே உன்னதமான பதில்களை அளித்ததில்லை.
17. அப்துல் கலாமிடம் ஒரு தடவை ஒரு மாணவி ‘‘நல்ல நாள், கெட்ட நாள் எது?’’ என்று கேட்டாள். அதற்கு அப்துல் கலாம், ‘‘பூமி மீது சூரிய ஒளிபட்டால் அது பகல். படா விட்டால் இரவு. இதில் நல்லது கெட்டது என்று எதுவும் இல்லை’’ என்றார்.
18. அப்துல் கலாம் மிகப்பெரிய உறவு, நட்பு வட்டாரத்தைக் கொண்டவர். ஆனால் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி அவர் யார் ஒருவருக்கும், எதற்கும் சிபாரிசு செய்ததே இல்லை. 
19. ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் கூட, அந்த மாத சம்பளத்தை வாங்கி அதில் ஒரு பகுதியை தன் குடும்பத்துக்கு அனுப்புவதை அப்துல் கலாம் வழக்கத்தில் வைத்திருந்தார்.
20. அப்துல் கலாமின் நெருங்கிய உறவினர்கள் எல்லாம் இன்றும் நடுத்தர வர்க்க வாசிகளாகவே உள்ளனர். அப்துல் கலாமின் கறை படாத நேர்மைக்கு இது ஒன்றே சிறந்த எடுத்துக்காட்டு.
21. அப்துல் கலாம் எந்த ஒரு காலக்கட்டத்திலும், எந்த ஒரு பதவியையும் எதிர்பார்க்காதவர். ஜனாதிபதி வேட்பாளராக அவர் பெயர் அறிவிக்கப்படுவதற்கு சற்று முன்பு வரை அவர் தன் விரிவுரையாளர் பணியில் சுறுசுறுப்பாக இருந்தார்.
22. அப்துல் கலாம் இளம் வயதில் விமானி ஆக வேண்டும் என்று ஆசைப்பாட்டார். அது கிடைக்காததால் பாதுகாப்புத்துறை தொழில் நுட்ப படிப்பைத் தேர்வு செய்தார்.
23. அனைத்து வளங்களும் நிறைந்த இந்தியா 2020–ம் ஆண்டில் உலகின் வளர்ந்த 5 நாடுகளில் ஒன்றாக திகழும் என்று பல ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி இந்தியர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தினார்.
24. திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் 1954–ம் ஆண்டு பி.எஸ்.சி படித்த அப்துல் கலாம் அந்த பட்டத்தை வாங்காமல் விட்டு விட்டார். 48 ஆண்டுகளுக்கு பிறகு அதை கேட்டுப் பெற்றார்.
25. யாழ்ப்பாணத்தை சேர்ந்த கனகசுந்தரம் என்ற சன்னியாசியிடம் அப்துல் கலாம் ஆங்கிலம் கற்றுக் கொண்டார்.
26. ராமேசுவரம் மாவட்ட கல்விக் கழக பள்ளி அறிவியல் ஆசிரியர் சிதம்பரம் சுப்பிரமணியத்திடம் இருந்துதான் அறிவியல் ஆர்வத்தை கலாம் பெற்றார்.
27. அப்துல் கலாமின் நீண்ட நாள் காலை உணவு ஒரே ஒரு ஆப்பம். ஒரு தம்ளர் பால். வேறு எதையும் சாப்பிட மாட்டார்.
28. அப்துல் கலாமிடம் ஒரு பழமையான வீணை உண்டு. எப்போதாவது நேரம் கிடைத்தால் அந்த வீணையை வாசிப்பார்.
29. சிறு வயதில் கிணற்றுக்குள் கலாம் கல்லைத் தூக்கிப் போட்டார். அதில் இருந்து குமிழ், குமிழாக வந்தது. அது ஏன் வருகிறது என்று அப்துல் கலாம் கேட்டார். அவர் கேட்ட முதல் அறிவியல் கேள்வி இது தான்.
30. ராமேஸ்வரத்தில் உள்ள லட்சுமணத் தீர்த்தத்தில் தை மாதம் விழா நடத்தும் போது அப்துல் கலாம் குடும்பத்தினருக்கு ‘‘சந்தனப்பாடி’’ என்று ஒரு மரியாதை கொடுத்தனர். அந்த அளவுக்கு அப்துல் கலாம் குடும்பத்தினருக்கும் இந்துக்களுக்கும் நெருக்கம் இருந்தது.
31. அப்துல் கலாமுக்கு மிகுந்த இசை ஞானம் உண்டு. தியாகராஜ கீர்த்தனைகளில் சில கிருதிகளை அவர் தெரிந்து வைத்திருந்தார்.
32. 1950–களில் திருச்சி ஜோசப் கல்லூரியில் படித்த போது அசைவம் சாப்பிட்டால் அதிகம் செலவாகிறது என்று அசைவம் சாப்பிடுவதை நிறுத்தினார். பிறகு அதுவே நிரந்தரமாகிப் போனது.
33. 1998–ம் ஆண்டு மே மாதம் 11–ந் தேதி பொக்ரானில் இந்தியா அணுகுண்டு சோதனை நடத்தி உலக அரங்கில் தன்னை வல்லரசாக அறிவித்தது. இதற்கு அடித்தளம் அமைத்தவர் அப்துல் கலாம்தான்.
34. 1958–ல் மத்திய அரசின் பாதுகாப்புத் துறையில் அப்துல்கலாம் வேலைக்கு சேர்ந்த போது அவருக்கு மாத சம்பளமாக ரூ.250 வழங்கப்பட்டது.
35. இந்திய ராணுவத்தில் உள்ள திரிசூல், அக்னி, பிருத்வி, நாக், ஆகாஷ் அகிய ஏவுகணைகள் அப்துல் கலாம் திட்ட இயக்குனராக இருந்த போது வடிவமைக்கப்பட்டு வந்தவையாகும்.
36. இந்தியாவுக்காக இவர் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை உருவாக்கிய போது அமெரிக்கா உள்பட பல நாடுகள் இவரை ஆச்சரியத்துடனும், மிரட்சியுடனும் பார்த்தன.
37. போலியோ நோயாளிகளுக்கான எடை குறைந்த ஊன்றுகோல் மற்றும் இருதய நோயாளிகளுக்கான எடை குறைந்த ஸ்டெண்ட் கருவி ஆகியவை இவர் கண்டு பிடித்தவையாகும். அந்த ஸ்டெண்டுக்கு ‘‘கலாம் ஸ்டெண்டு’’ என்றே பெயராகும்.
38. தமிழ் இலக்கியங்கள் அனைத்தையும் அப்துல் கலாம் படித்துள்ளார். குறிப்பாக திருக்குறளை கரைத்து குடித்திருந்தார் என்றே சொல்லலாம்.
39. இவர் எழுதிய ‘‘எனது பயணம்’’ என்ற கவிதை நூல் ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
40. எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பது இவரது பழக்கம். ஒரு நாளைக்கு 18 மணி நேரம் கூட உழைப்பதற்கு தயங்க மாட்டார்.
41. குடிப்பழக்கம், ஊழல், வரதட்சணை போன்ற 5 தீய பழக்கங்களை கைவிட நாம் ஒவ்வொருவரும் சபதம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று டெல்லி காந்தி சமாதியில் எழுதி வைக்க அப்துல் கலாம் அறிவுறுத்தி அதை அமல்படுத்தினார்.
42. இந்திய பாதுகாப்புத்துறையின் ஆய்வுக்கு முதலில் வெளிநாட்டு கருவிகள், பொருட்கள் பயன்படுத்தப்பட்டன. அவற்றை நிறுத்தி விட்டு முழுக்க, முழுக்க உள்நாட்டு பொருட்கள் மூலம் ஆய்வு பணிகளை அப்துல் கலாம் செய்ய வைத்தார்.
43. அப்துல் கலாம் ஒரு போதும் நன்றி மறக்காதவர். தனது ஆசிரியர்கள், நண்பர்கள், உதவி செய்தவர்கள் என அனைவரையும் அடிக்கடி நினைவுப்படுத்தி பேசுவார்.
44. அப்துல் கலாமிடம் நகைச்சுவை உணர்வு அதிகம் உண்டு. நெருக்கடியான சமயங்களில் கூட அவர் நகைக்சுவையை வெளிப்படுத்த தயங்கியதில்லை.
45. இளைஞர்கள் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்று அப்துல் கலாம் மிகவும் விரும்பினார். ஒரு தடவை மைசூரில் நடந்த விழாவில் அவர் பேசுகையில், ‘‘இந்தியாவில் உள்ள ஒவ்வொரு இளைஞனுக்கும் கட்டாயம் 2 ஆண்டுகள் ராணுவ பயிற்சி அளிக்க வேண்டும்’’ என்றார்.
46. பணம், வயது, சாதி, இனம், மதம், மொழி என்பன போன்றவற்றில் கலாம் வேறுபாடு பார்த்ததே இல்லை. இந்த அரிய குணத்தை அவர் தம் தந்தையிடம் இருந்து பழக்கத்தில் பெற்றார்.
47. அப்துல் கலாம் தினமும் திருக்குரான் படிக்கத் தவறியதில்லை. அதில் அவருக்கு பிடித்த வரிகள் எவை தெரியுமா?. ‘‘இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகிறோம். உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்’’ எனும் வரிகளாகும்.
இந்த வரிகள், என்னுடைய எல்லா சோதனை நாட்களிலும் என்னை கரை சேர்த்த வைர வரிகள் என்று அப்துல் கலாம் குறிப்பிட்டுள்ளார்.
48. சென்னை மூர் மார்க்கெட்டில் உள்ள ஒரு பழைய புத்தகக் கடைகளில் 1950–களில் அப்துல் கலாம், ‘‘த லைட் பிரம் மெனி லேம்பஸ்’’ என்ற புத்தகத்தை வாங்கினார். கடந்த 60 ஆண்டுக்கும் மேலாக அதை அவர் பொக்கிஷமாக வைத்திருந்தார்.
49. அறிவியல் தொழில் நுட்பத்துக்கு மிகவும் உதவும் பெரிலியம் தாது பொருளை வெளிநாடுகள் இந்தியாவுக்கு தர மறுத்தன. உடனே இதுபற்றி கலாம் ஆய்வு செய்தார். இந்தியாவின் பல பகுதிகளில் பெரிலியம் மண்ணில் அதிக அளவில் கலந்து இருப்பதை கண்டுபிடித்தார். 
இதைத் தொடர்ந்து பெரிலியம் மணல் கலவையை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை தடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த உலக நாடுகள் பிறகு போட்டி போட்டு இந்தியாவுக்கு பெரிலியம் கொடுத்தன. 
50. ஒரு தடவை காந்தி சமாதிக்கு சென்ற அப்துல் கலாம், ‘‘காந்தியின் வாழ்க்கை அனுபவங்களை குழந்தைகளிடம் பரப்ப நான் சபதம் ஏற்கிறேன் என்று குறிப்பு எழுதினார். அதன்படி ஜனாதிபதி பதவி காலம் முடிந்த பிறகும் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று பேசிவந்தார். நேற்று அவர் கடைசி மூச்சும், இந்த பணியில்தான் நிறைவடைந்தது.

வாரத்தில் ஒருநாள் இறைவழிபாட்டில் மாணவர்கள் சாலை பாதுகாப்பு உறுதிமொழி எடுக்க இயக்குநர் உத்தரவு



அண்ணா பல்கலையின் இறுதியாண்டு இன்ஜி கேம்பஸ் இன்டர்வியூல் 1,200 பேருக்கு வேலை

அண்ணா பல்கலையின் இறுதியாண்டு இன்ஜி.மாணவர்கள், 1,200 பேருக்குகேம்பஸ் இன்டர்வியூ என்ற வளாக நேர்காணல் மூலம்ஐ.டி.நிறுவனங்களில் வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.

 முதற்கட்ட நேர்காணல்கடந்த மாதம் நடந்தது. இதில், 400 பேருக்குஆண்டுக்கு, 4.5 லட்சம் ரூபாய் முதல், 25 லட்சம் ரூபாய் வரையிலான சம்பளத்துடன் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது. இரண்டாம் கட்ட நேர்காணல், 1ம் தேதி முதல், 12ம் தேதி வரை நடந்தது. அசெஞ்சர்காக்னிசன்ட்ஐ.பி.எம்.,இன்போசிஸ்டி.சி.எஸ்.ஆகிய நிறுவனங்கள் பங்கேற்றன. மொத்தம், 2,122 காலியிடங்களுக்கு நடந்த நேர்காணலுக்கு, 1,500 பேர் அழைக்கப்பட்டு இருந்தனர். 1,200 பேருக்குஆண்டுக்கு, 3.5 லட்சம் ரூபாய் சம்பளத்தில் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது.

இதுகுறித்துபல்கலை துணைவேந்தர் ராஜாராம் கூறுகையில்பெரிய நிறுவனங்கள் மூலம் தமிழகம் முழுவதுமுள்ள அண்ணா பல்கலையின் இணைப்பு கல்லுாரிகளில்டிசம்பரில்கேம்பஸ் இன்டர்வியூ நடத்த திட்டமிட்டு இருக்கிறோம்என்றார்.


பல்கலை மற்றும் தொழில் நிறுவன இணைப்பு மைய இயக்குனர் பேராசிரியர் தியாகராஜன் கூறுகையில்மூன்றாம் கட்ட நேர்காணல்விரைவில் நடத்தப்படும். இதில், 500 பேருக்கு வேலை கிடைக்கும்,என்றார். வேலைக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்குபல்கலை மூலம் நியமன கடிதம் வழங்கப்படும். படிப்பு முடிந்ததும்மாணவர்கள் நேர்முகத் தேர்வுக்கு காத்திருக்காமல்நேரடியாக வேலையில் சேரலாம்.

மாநில அரசு ஊழியர்களுக்கு ஓரிரு நாள்களில் அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு?

மத்திய அரசு ஊழியர்களைப் போன்றேமாநில அரசுஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வுக்கான அறிவிப்பு ஓரிருநாளில் வெளியாகலாம்
என்று எதிர்பார்க்கப்படுகிறது.மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீதஅகவிலைப்படி உயர்வுகடந்த மாதம் அறிவிக்கப்பட்டது.

 அதன்படி, 113 சதவீதத்தில் இருந்து 119 சதவீதமாக அகவிலைப்படிஉயர்ந்தது. மத்திய அரசு ஊழியர்களுக்கு எப்போதெல்லாம்அகவிலைப்படி உயர்த்தப்படுகிறதோஅப்போதெல்லாம் தமிழக அரசுஊழியர்களுக்கும் உயர்வு அளிக்கப்படும்.



அதன்படிமத்திய அரசின் அறிவிப்பைத் தொடர்ந்துதமிழக அரசுஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட உள்ளது.இதற்கான கோப்புகளில் முதல்வர் ஜெயலலிதாகையெழுத்திட்டுள்ளதாகவும்அதற்கான அறிவிப்பு ஓரிரு நாள்களில்வெளியாகும் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

அப்துல் கலாமின் 10 அம்ச உறுதிமொழி

 1.எனது கல்வி அல்லது பணியை அர்ப்பணிப்பு உணர்வோடு தொடர்வேன்,அத்துடன் அதில் சிறப்பாவும் செயலாற்றுவேன்.

2.எழுத படிக்க தெரியாத பத்து பேருக்கு இன்று முதல் எழுத படிக்க கற்று
தருவேன். 3.குறைந்தது பத்து மரக்கன்றுகளை நட்டு அவை கண்ணும் கருத்துமாக வளர கவனம் செலுத்துவேன்.


4.கிராமங்களுக்கு சென்று மதுபானங்களுக்கும்,சூதாட்டத்திற்கும் அடிமையாகி உள்ள ஐந்து பேரை அதிலிருந்து விடுவிப்பேன்.

5.கஷ்டப்படும் என் சகோதரர்களின் இன்னல்களை தீர்க்க தொடர்ந்து பாடுபடுவேன். 6.ஜாதி,மதம்,மொழி பாகுபாடிற்கு ஆதரவு அளிக்க மாட்டேன்.

7.நானும் நேர்மையாக இருந்து ஊழலற்ற சமுதாயம் உருவாக பாடுபடுவேன். 8.விழிப்புணர்வு உள்ள குடிமகனாக உருவாகுவதற்கு உழைப்பேன்,எனது குடும்பம் நியாயமாக இருக்கவும் பாடுபடுவேன்.

9.உடல் ஊனமுற்றவர்களுக்கு எப்போதும் நண்பனாய் இருப்பதுடன் அவர்கள் நம்மைப்போல் இயல்பாக இருக்கும் உணர்வை ஏற்பாடுத்த உழைப்பேன்.


10.நாட்டின் வெற்றியையும்,மக்களின் வெற்றியையும் நான் பெருமிதத்துடன் கொண்டாடுவேன்!!

TET தேர்வு முடிவு: மதிப்பெண் தளர்வுடன் தேர்ச்சி பெற்ற 211 பேர் முடிவுகள் வெளியீடு.

புதுச்சேரி தொடக்கப்பள்ளி ஆசிரியர் பணியிடங்கள் தொடர்பாக ஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண் தளர்வுபெற்று தேர்ச்சி பெற்ற 211 பேரின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன என கல்வித்துறை இயக்குநர் ல.குமார் தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பள்ளிக் கல்வித்
துறை சார்பில் கடந்த 26.5.15ஆம் ஆண்டில் 425 தொடக்கப் பள்ளி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில் பிற்பட்டோர்தாழ்த்தப்பட்டோர்,மாற்றுத்திறனாளிகளுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண் தளர்வு அளிக்கப்பட்டது.இதை எதிர்த்து உயர்நீதிமன்றம்மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தில்சிலர் வழக்கு தொடர்ந்தனர்.
இந்நிலையில் கடந்த 10.7.15-ல் ஆசிரியர் தகுதி தேர்வில் மதிப்பெண் தளர்வு பெற்றவர்களை நிலுவையில் வைக்க உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.இதன் பின்னர் அறிவிக்கப்பட்ட தேர்வு முடிவின்படி தேர்ச்சிப் பட்டியல் தயாரிக்கப்பட்டு அதில் ஆசிரியர் தகுதித் தேர்வில் 90மதிப்பெண்கள் மற்றும் அதற்கு மேலும் பெற்ற 214 பேரின் முடிவுகள் கடந்த 25.9.15-ல் வெளியிடப்பட்டன.இதனிடையே கடந்த 9.10.15-ல் சென்னை உயர்நீதிமன்றம் தான் பிறப்பித்த இடைக்கால உத்தரவை நீக்கியது.இதனால் ஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண் தளர்வு பெற்று தேர்ச்சிப் பட்டியலில் இடம் பெற்றிருந்த 211 பேரின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இம்முடிவுகளை இணையதளத்தில் காணலாம்.மேலும் 211 பேரின் சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 19.10.15, 20.10.15 தேதிகளில் இணையதளத்தில் வெளியிட்டுள்ள அட்டவணைப்படி நடைபெறும் என்றார் குமார்.

14/10/15

விவிஐபிக்கள் வரவேற்பில் மாணவர்களை ஈடுபடுத்தக்கூடாது: நீதிமன்றம் உத்தரவு!

மதுரை: வி.வி.ஐ.பி.க்களுக்கு கொடுக்கப்படும்வரவேற்பு நிகழ்ச்சியில்மாணவர்களை ஈடுபடுத்தக்கூடாதுஎன உயர்நீதிமன்றமதுரைக் கிளை
உத்தரவிட்டுள்ளது.
மதுரையை சேர்ந்த விஜயகுமார்என்பவர் உயர்நீதிமன்றமதுரை கிளையில்மனு ஒன்றைதாக்கல் செய்திருந்தார். அதில், ''மதுரைகாமராஜ் பல்கலைக்கழகத்தில்துணைவேந்தராக பதவி வகித்தவர் கல்யாணி. இவரதுபணி நியமனம்செயல்லாது எனஉயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. அதற்குஉச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
இந்நிலையில், கடந்த ஆண்டுஜூலை 7ஆம்தேதி பல்கலைக்கழகவளாகத்தில் கல்யாணிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதற்காகபல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளபள்ளிகளில் படித்து வரும் 50 மாணவர்களை வெளியிலில்காத்திருந்து, கல்யாணி வந்ததும், அவர் மீதுமலர் தூவிவரவேற்பு அளிக்கவைத்தனர்.
இந்த செயல் குழந்தைகளின்உரிமைகளுக்கு எதிரானது. எனவே, தமிழகத்திலுள்ள அனைத்துபள்ளிகளிலும் படித்து வரும் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை, பொது நிகழ்ச்சிகள்மற்றும் வி.வி.ஐ.பி.க்கள்வரவேற்பில் பங்கத்தடை விதிக்குமாறு, பள்ளிக் கல்வித்துறைசெயலாளருக்கு உத்தரவிட வேண்டும்'' எனக் கூறியிருந்தார்.

இந்த மனு இன்று(13ஆம் தேதி) விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த நீதிபதிகள்ஆர்.சுதாகர், வி.எம்.வேலுமணி ஆகியோர்கொண்ட அமர்வு, ''பொது நிகழ்ச்சிகள்மற்றும் வி.வி.ஐ.பி.க்கள்வரவேற்பில் மாணவர்களை ஈடுபடுத்தக்கூடாதுஎன தனதுகட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பவேண்டும்'' என மதுரை முதன்மைக் கல்விஅலுவலருக்கு உத்தரவிட்டனர். மேலும், அந்த நகலைநாளை (14ஆம்தேதி) நீதிமன்றத்தில்சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

கல்வி உரிமைச் சட்டம்: ஆசிரியர்களின் புகார்களுக்கு 15 நாள்களுக்குள் தீர்வு காண வேண்டும்: விதிகளில் திருத்தம் செய்து அறிவிப்பாணை வெளியீடு

அரசுப் பள்ளிகளில் உள்ளபள்ளி மேலாண்மைக்குழுக்களில் ஆசிரியர்கள் புகார் தெரிவித்த 15 நாள்களுக்குள்அவற்றுக்குத் தீர்வு காண
வேண்டும் என, இலவச கட்டாயக்கல்வி உரிமைச்சட்ட விதிகளில்திருத்தம் செய்துமத்திய அரசுஅறிவிப்பாணையை வெளியிட்டுள்ளது.
பணியிடங்களில் துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண் ஆசிரியர்களின் புகார்களுக்குமுன்னுரிமை வழங்கி இந்தக் குழுக்கள் விசாரிக்கவேண்டும் என்றும்தெரிவிக்கப்பட்டுள்ளது. இலவச கட்டாயக்கல்வி உரிமைச்சட்ட விதிகளில், பள்ளி அளவிலானகுறைபாடுகளைக் களைய பள்ளி மேலாண்மைக் குழுக்களைஅமைக்க வேண்டும்என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆசிரியர்கள் தங்களது குறைகளை இந்தக் குழுக்களில்தெரிவிக்க வேண்டும். வட்டார, மாவட்ட, மாநில அளவிலானகுறைதீர் குழுக்களையும்மாநில அரசுஅமைக்க வேண்டும்என விதிகளில்பொதுவாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இப்போது ஒவ்வொருகுழுக்களும் எத்தனை நாள்களில் புகார்களுக்கு தீர்வுகாண வேண்டும், இந்தக் குழுக்களில்யார் இடம்பெறவேண்டும் உள்ளிட்டவைதொடர்பாக மத்தியஅரசு இந்தச்சட்டத்தில் திருத்தம் செய்துள்ளது.
அதேநேரத்தில், பணி தொடர்பானவிவகாரங்கள், கல்வித் துறையால் தாற்காலிகப் பணியிடைநீக்கம், ஒழுங்குநடவடிக்கைக்கு ஆளான விவகாரங்களை இந்தக் குழுக்கள்விசாரிக்கக் கூடாது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாகமத்திய அரசுவெளியிட்டுள்ள அறிவிப்பாணையின் விவரம்: பள்ளி மேலாண்மைக்குழுக்கள் பள்ளிகள்அளவிலான முதல்குறைதீர் அமைப்பாகசெயல்படும். அரசுப் பள்ளிகளின் ஆசிரியர்கள் தங்களதுபுகார்களை இந்தக்குழுவின் அமைப்பாளர்அல்லது உறுப்பினர்செயலரிடம் தெரிவிக்கவேண்டும். ஆசிரியர்களிடமிருந்துஎழுத்துப்பூர்வமாக புகார் பெறப்பட்ட15 நாள்களுக்குள் அதற்குத் தீர்வு காண வேண்டும். இந்தப் புகார்மீது நடவடிக்கைஇல்லையென்றாலோ அல்லது அதற்கான பதில் திருப்தியளிக்கவில்லைஎன்றாலோ வட்டாரஅளவிலான குறைதீர்குழுவிடம் ஆசிரியர்கள்புகார் தெரிவிக்கலாம்.
அரசுப் பள்ளி ஆசிரியர்களின்குறைகளைத் தீர்ப்பதற்காகவட்டார வளர்ச்சிஅலுவலர் தலைமையிலானவட்டார குறைதீர்குழு அமைக்கப்படவேண்டும். வட்டாரகல்வி அதிகாரிஇந்தக் குழுவின்அமைப்பாளர் அல்லது உறுப்பினர் செயலராகச் செயல்படுவார். புகார் பெற்ற30 நாள்களுக்குள் இந்தக் குழு அதற்குத் தீர்வுகாண வேண்டும். இந்தக் குழுதேவையின் அடிப்படையில்கூட வேண்டும். குறைந்தபட்சம் 3 மாதங்களுக்கு ஒருமுறையாவது கூட வேண்டும். மாவட்ட அளவிலானகுழு: மாவட்டஅளவிலான குறைதீர்குழுவின் தலைவராகமாவட்ட ஆட்சியரும், மாவட்ட கல்விஅதிகாரி அமைப்பாளராகவும், உறுப்பினர் செயலராகவும் இருப்பார். நகராட்சிகளின் மூத்தஉறுப்பினர்களும் இந்தக் குழுவில் இடம்பெற வேண்டும். இந்தக் குழு3 மாதங்களுக்குள் அந்தப் புகாருக்கு தீர்வு காணவேண்டும்.

மாநில அளவிலான குழு: மாவட்ட அளவிலானகுழுவில் திருப்தியில்லைஎன்றால் ஆசிரியர்கள்மாநில அளவிலானகுறைதீர் குழுவிடம்முறையிடலாம். இந்தக் குழுவுக்கு தொடக்கக் கல்விஇயக்குநர் தலைவராகவும், பள்ளிக் கல்வித்துறைச் செயலர்பரிந்துரை செய்யும்2 பேர் உறுப்பினர்களாகவும்இருப்பர். இந்தக்குழு 90 நாள்களுக்குள்புகார்களுக்குத் தீர்வு காண வேண்டும். குறைந்தது6 மாதங்களுக்கு ஒருமுறையாவது கூட வேண்டும் எனஅதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக நிதித்துறை செயலரது கடித விபரம்:கடித எண்;55891/நிதித்துறை/நாள்;08/10/2015

தமிழக நிதித்துறை செயலரதுகடித விபரம்:---கடித எண்;55891/நிதித்துறை/நாள்;08/10/2015.

அரசு ஊழியர்கள் & ஆசிரியர்களுக்குஊதியக்குழு வழங்கிய ஊதிய விகிதத்தை மீண்டும்திருத்தியமைக்க தனிநபராகவும், சங்கங்கள்
மூலமாகவும் பல்வேறுவழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளதால்-

'ஊதிய முரண்பாடுகள் ஆராய(Examining the Pay anamolies) - ஊதியக்குழுவிற்குமுன்னர் மற்றும்பின்னர் ஊழியர்கள்உள்ள ஊதியக்கட்டுவிவரங்கள்,
குறிப்பிட்ட ஊதியக்கட்டில் துறைவாரியாக உள்ளஊழியர்களது மொத்த எண்ணிக்கை, நிரப்பப்பட்ட இடங்கள், காலியிடங்கள், யார் அதிகார வரம்பிற்குட்பட்ட பதவி, கல்வித்தகுதி, பணி விபரங்கள்& பொறுப்புகள்' கோரி தமிழகநிதித்துறை செயலர் அனைத்து துறை அரசுசெயலர்களுக்கும் - கடிதம் (08.10.2015) எழுதியுள்ளார்.


விரிவான துறை சார்ந்தஊதியக்கட்டு (PAY BAND) தகவல்கள் - '30.11.2015 அல்லது அதற்கு முன்பாகவே (on or before 30.11.2015)' துறை சார்ந்தசெயலர்கள் தவறாதுதொகுத்து அனுப்பிவைக்க கடிதத்தில்கோரப்பட்டுள்ளது.

அப்துல் கலாமின் 10 அம்ச உறுதிமொழி

1.எனது கல்வி அல்லதுபணியை அர்ப்பணிப்புஉணர்வோடு தொடர்வேன்,அத்துடன்அதில்சிறப்பாவும் செயலாற்றுவேன்.

2.எழுத படிக்க தெரியாதபத்து பேருக்குஇன்று முதல்எழுத படிக்ககற்று
தருவேன். 3.குறைந்தது பத்து மரக்கன்றுகளை நட்டு அவைகண்ணும் கருத்துமாகவளரகவனம்செலுத்துவேன்.

4.கிராமங்களுக்கு சென்று மதுபானங்களுக்கும்,சூதாட்டத்திற்கும் அடிமையாகி உள்ள ஐந்துபேரைஅதிலிருந்து விடுவிப்பேன்.

5.கஷ்டப்படும் என் சகோதரர்களின்இன்னல்களை தீர்க்கதொடர்ந்து பாடுபடுவேன். 6.ஜாதி,மதம்,மொழி பாகுபாடிற்குஆதரவு அளிக்கமாட்டேன்.

7.நானும் நேர்மையாக இருந்துஊழலற்ற சமுதாயம்உருவாக பாடுபடுவேன். 8.விழிப்புணர்வுஉள்ள குடிமகனாக உருவாகுவதற்கு உழைப்பேன்,எனது குடும்பம்நியாயமாகஇருக்கவும்பாடுபடுவேன்.

9.உடல் ஊனமுற்றவர்களுக்கு எப்போதும் நண்பனாய் இருப்பதுடன் அவர்கள்நம்மைப்போல்இயல்பாக இருக்கும் உணர்வை ஏற்பாடுத்தஉழைப்பேன்.

10.நாட்டின் வெற்றியையும்,மக்களின்வெற்றியையும் நான் பெருமிதத்துடன் கொண்டாடுவேன்!!

மாநில அரசு ஊழியர்களுக்கு ஓரிரு நாள்களில் அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு?

மத்திய அரசு ஊழியர்களைப்போன்றே, மாநிலஅரசு ஊழியர்களுக்கும்அகவிலைப்படி உயர்வுக்கான அறிவிப்பு ஓரிரு நாளில்வெளியாகலாம்
என்று எதிர்பார்க்கப்படுகிறது.மத்திய அரசுஊழியர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படி உயர்வு, கடந்தமாதம் அறிவிக்கப்பட்டது.


அதன்படி, 113 சதவீதத்தில் இருந்து119 சதவீதமாக அகவிலைப்படி உயர்ந்தது. மத்திய அரசுஊழியர்களுக்கு எப்போதெல்லாம் அகவிலைப்படி உயர்த்தப்படுகிறதோ, அப்போதெல்லாம் தமிழக அரசு ஊழியர்களுக்கும்உயர்வு அளிக்கப்படும்.


அதன்படி, மத்திய அரசின்அறிவிப்பைத் தொடர்ந்து, தமிழக அரசு ஊழியர்களுக்கும்அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட உள்ளது. இதற்கானகோப்புகளில் முதல்வர் ஜெயலலிதா கையெழுத்திட்டுள்ளதாகவும், அதற்கான அறிவிப்புஓரிரு நாள்களில்வெளியாகும் என தலைமைச் செயலக வட்டாரங்கள்தெரிவித்தன.

அரசுக் கல்லூரி ஆசிரியர்கள் ஓய்வு வயதை 60-ஆக உயர்த்த வேண்டும்: சென்னை கருத்தரங்கில் தீர்மானம்

பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு உள்ளதுபோல், அரசுக் கல்லூரிஆசிரியர்களின் ஓய்வு வயதையும் 60-ஆக உயர்த்தவேண்டும் என
சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் தீர்மானம்நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு அரசுக் கல்லூரிஆசிரியர் கழகம்சார்பில் "அனைவருக்கும் உயர்கல்வி' என்ற தலைப்பிலானகருத்தரங்கம் சென்னைப் பல்கலைக்கழக வளாகத்தில் திங்கள்கிழமைநடத்தப்பட்டது. கருத்தரங்கை உயர் கல்வித் துறைஅமைச்சர் பி. பழனியப்பன் தொடக்கி வைத்தார்.

கருத்தரங்கில், தமிழக அரசுபல்கலைக்கழகங்களில் உள்ளதுபோல் அரசுக்கல்லூரி ஆசிரியர்களின்ஓய்வு வயதையும்60-ஆக உயர்த்தவேண்டும்.

புதிய பங்களிப்பு ஓய்வூதியத்திட்டத்தை ரத்துசெய்து, பழையஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

ஏழை மாணவர்கள் பயன்பெறும்வகையில் பல்கலைக்கழகஉறுப்புக் கல்லூரிகள்அனைத்தையும் அரசுக் கல்லூரிகளாக மாற்ற வேண்டும்.

அரசுக் கல்லூரிகளில் உள்ளஅனைத்து காலிப்பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும் என்பனஉள்ளிட்ட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
.

இது குறித்து அரசுக்கல்லூரி ஆசிரியர்கழகத் தலைவர்வெங்கடாச்சலம் கூறியது:கருத்தரங்கில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், கோரிக்கைகளாக உயர் கல்வித் துறை அமைச்சரிடம்வழங்கப்பட்டது. அப்போது, அவற்றை பரிசீலித்து அரசுடன்ஆலோசித்து உரியநடவடிக்கை எடுக்கப்படும்என அமைச்சர்உறுதியளித்தார்.கருத்தரங்கில் "அனைவருக்கும்உயர்கல்வி' என்ற தலைப்பில் 50-க்கும் மேற்பட்டகட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன என்றார்அவர்

நடுநிலைப் பள்ளியில் கலை வழிக் கற்றல் பயற்சி பட்டறை

தேவகோட்டை-சிவகங்கை மாவட்டம்தேவகோட்டை சேர்மன்மாணிக்க வாசகம்நடுநிலைப் பள்ளியில்கலை வழிக்கற்றல் பயற்சிப்
பட்டறை நடைபெற்றது.

நிகழ்வுக்கு வந்திருந்தோரை ஆசிரியைமுத்து மீனாள்வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார்.தேவகோட்டை உதவிதொடக்க கல்விஅலுவலர் லெட்சுமிதேவி தலைமைஏற்று மாணவர்களுக்குஅறிவுரைகள் வழங்கினார்.நிகழ்ச்சியில் உதவி தொடக்ககல்வி அலுவலர்மாணவ ,மாணவிகளுக்குபல்வேறு போட்டிகளில்வெற்றி பெற்றதற்காகபரிசுகளையும்,சான்றிதழ்களையும் வழங்கினார்.கலைவழிக் கற்றலைநடத்தக் கூடியதிருவண்ணாமலை பாஸ்கர் ஆறுமுகம் ,அபிலாஸ் ,பிரவின்ஆகியோர் கொண்டகுழு மாணவர்களுக்குபயற்சி அளித்தனர்.முதலில் பள்ளிமாணவர்களுக்கு கதைகள் கூறினர்.பாடல்கள்,டாகுமெண்டரிபடங்கள் போட்டுகாண்பித்தனர்.பிறகு மாணவர்களை மூன்று குழுக்களாகபிரித்து மாணவர்களுக்குதகுந்தாற்போல் கதைகள் சொல்லி ,பொம்மைகள் செய்யவைத்து,பொம்மலாட்டம்மூலம் அவர்களைகதை சொல்லவைத்தனர். மாணவர்களையேகதை எழுதவைத்தும்,ஓவியம்வரைய வைத்தும்சொல்லி கொடுத்தனர். மாணவர்களுக்கு நாடகம் முதலியவற்றை சொல்லி கொடுத்ததும்அவர்களாகவே நாடகங்களை தயாரித்தும்,பொம்மைகளை தானாகவேசெய்து பொம்மைகள்மூலம் நாடகத்தைசெய்து காண்பிக்கும்வண்ணம் கற்றுக்கொடுத்தனர்.மாணவர்களை குழுக்களாக அமரவைத்து அவர்களிடம்குழு மனப்பான்மையைவளர்க்கும் வண்ணம் மிக அழகாக கற்றுகொடுத்தனர்.

கலை வழிக் கற்றல்நிகழ்ச்சி நடத்திவரும் திருவண்ணாமலைபாஸ்கர் கூறுகையில்,எங்கள் குழுகடந்த ஒன்றரைஆண்டுகளாக தமிழகம்முழுவதும் உள்ளபள்ளிகளில் பயிற்சி அளித்து வருகிறோம்.ஒருநாள்,இரண்டுநாள் எனகால அவகாசம்எடுத்து மாணவர்களுக்குமுற்றிலுமாக எளிய வகையில் புரியும் வண்ணம்நிகழ்ச்சியை நடத்தி காண்பிக்கின்றோம்.எங்கள் பய்ர்சியின்மூலம் மாணவர்களிடையேநாள் குழுமனப்பான்மை ஏற்படுகிறது.கல்லூரியில் மட்டுமே குழுமனப்பான்மை உள்ளது.அதனை ஆரம்ப மற்றும்நடுநிலைப் பள்ளிஅளவிலும் கொண்டுவருவதேஎங்கள் நோக்கமாகும்.எங்கள் பயிற்சியின்மூலம் மேடையில்பேச தயங்கும்குழந்தை கூடகூட்சதை போக்கிவிட்டு நன்றாகபேசும்.அவ்வாறுபேச வைப்பதேஎங்கள் வெற்றி.கேள்வி அறிவைஉருவாக்கி வருகிறோம்.

அரசு பள்ளிகளை மட்டுமேநாங்கள் நோக்கிபோகிறோம்.எங்கள்குழுவின் நோக்கம்இவை அனைத்தையும்இலவசமாக வழங்குவதேஆகும்.என்னுடன்திருவண்ணாமலை பிரவின்,அபிலாஷ்,செய்யாறில் ஆனந்த்,திண்டுக்கல் நவீன்என குழுவினர்தொடர்ந்து பள்ளிகளுக்குசென்று பயற்சிஅளித்து வருகிறோம்.நாங்கள் எங்கள்போக்குவரத்துக்கு மற்ற செலவுகளுக்கு மண் மனம்என்ற சிறுதான்யங்களை உற்பத்தி செய்து விற்பனை செய்யும்கம்பெனி நடத்திவருகிறோம்.அதில்இருந்து கிடைக்கும்வருவாயின் மூலம்பள்ளிகளுக்கு இலவசமாக பயற்சிக்கு செல்கிறோம்.நாங்கள்வகுப்பறை ஜனநாயகத்தைகுறிக்கோளாக கொண்டிருக்கிறோம்.சிவகங்கை,ராமநாதபுரம்,புதுகோட்டை,விருதுநகர்,திருநெல்வேலி,கன்னியாகுமரி உட்பட பல்வேறு மாவட்டங்களுக்கு தேவகோட்டைசேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப்பள்ளியில்தான் முதலில் செய்கிறோம்.இப்பள்ளி மாணவர்கள்மிக அருமையாகதங்கள் தகவல்களைஎடுத்து கூறுகின்றனர்.அவர்களுக்கும்,ஆசிரியர்களுக்கும்,தலைமை ஆசிரியர்க்கும்எனது பாராட்டுக்கள்.எங்கள் குழுவைதொடர்பு கொள்ள99442036236,99944 23012 என்ற என்னை தொடர்புகொள்ளலாம்.பள்ளிகளுக்குசென்று பயற்சிஅளிக்க தயாராகஇருக்கிறோம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மாணவர்கள் ஐயப்பன்,ரஞ்சித்,வசந்தகுமார்,மாணவிகள்ராஜேஸ்வரி,தனம்,திவ்ய தர்சினிஉட்பட பலமாணவர்கள் நாடகங்களைநடித்து காண்பித்துகைதட்டு வாங்கினர். ஆசிரியை முத்துலெட்சுமி நன்றிகூறினார்.மாணவ,மாணவியர் ஆர்வமுடன்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தங்களது திறமைகளைவெளிபடுத்தினார்.சிவகங்கை,ராமநாதபுரம்,புதுகோட்டை உட்படதென் தமிழகத்தின்பல்வேறு மாவட்டங்களில்முதன் முறையாகஇந்த நிகழ்ச்சிஇப்பள்ளியில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.இந்த நிகழ்ச்சிக்கானஏற்பாடுகளை ஆசிரியை சாந்தி செய்து இருந்தார்.

பட விளக்கம் : சிவகங்கைமாவட்டம் தேவகோட்டைசேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப்பள்ளியில் கலைவழிக் கற்றல்பயற்சிப் பட்டறைநடைபெற்றபோது தேவகோட்டை உதவி தொடக்க கல்விஅலுவலர் லெட்சுமிதேவி பேசினார்.பள்ளி தலைமைஆசிரியர் லெ.சொக்கலிங்கம்.

13/10/15

வட்டார வளமையங்களுக்கு ஆள்தேடும் கல்வித்துறை: ஆசிரிய பயிற்றுனர்கள் எதிர்ப்பு

அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வளமைய காலிப்பணியிடங்களில் பணிபுரிய, பள்ளி ஆசிரியர்களிடம் கல்வித்துறை விருப்பம் கேட்டுள்ளது. இதற்கு ஆசிரிய பயிற்றுனர்கள் எதிரிப்பு தெரிவித்துள்ளனர்.கோயம்புத்துார், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 12 மாவட்ட வட்டார வளமையங்களில் தமிழ், ஆங்கிலம், அறிவியல் பாடங்களுக்கு, ஆசிரியர் பயிற்றுனர் பணியிடங்கள் காலியாக உள்ளன. 

இப்பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்ப வேண்டும்.விருப்பம் உண்டா?: ஆனால் ஏற்கனவே பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களை பணி மாறுதல் செய்ய, அனைவருக்கும் கல்வி இயக்கம் முடிவு செய்துள்ளது. இதற்காக 2006 ஜன.,1 க்கு பின் நியமிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களிடம், கல்வித்துறை விருப்பம் கேட்டுள்ளது. 'இந்த பணியிடத்தில் தொடர்ந்து 3 ஆண்டுகள் பணிபுரிய வேண்டும்' என தெரிவிக்கப்பட்டு உள்ளது.முரண்பாடு: ஏற்கனவே, ஆசிரியர் பயிற்றுனர்களாக பணிபுரிவோர், பட்டதாரி ஆசிரியர்களாக பணிமாறுதல் செய்ய போராடி வருகின்றனர். 

இந்நிலையில், கல்வித்துறையின் நடவடிக்கையால் ஆசிரிய பயிற்றுனர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.அனைத்து வளமைய பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்டத்தலைவர் ராஜ்குமார் கூறியதாவது: 'வட்டார வளமையங்களில் காலிப்பணியிடங்கள் இல்லை' என, எங்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வு நடத்தவில்லை. தற்போது காலிப்பணியிடங்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. கல்வித்துறையின் முரண்பாட்டால் எங்களுக்கு பட்டதாரி ஆசிரியர் பணிமாறுதல் கிடைக்காமல் போய்விடும், என்றார்.

தமிழக அரசு ஊழியர் / ஆசிரியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வுக்கான அறிவிப்பு இன்று வெளியாக வாய்ப்பு

தமிழக அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு 6% அகவிலைப்படி ஜுலை'15 முதல் உயர்த்தி வழங்குவதற்கான அறிவிப்பு இன்று வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுசார்பான கோப்பில் இன்று காலை மாண்புமிகு தமிழக முதல்வர் கையெழுத்திட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

7/10/15

ஸ்மார்ட் கார்டு திட்டம்: பள்ளி மாணவர்களுக்கு நடைமுறைக்கு வருமா?

பள்ளி மாணவர்களுக்கான ஸ்மார்ட் கார்டு திட்டம் நான்கு ஆண்டுகளாகசெயல்படுத்தப்படாமல் நிலுவையில் இருப்பதால்திட்டம் நடைமுறைக்கு வருவதில்சாத்தியமில்லாத சூழல் உருவாகியுள்ளது.


          பல்வேறு காரணங்களால்பள்ளிகளில் ஏற்படும் இடைநிற்றலை தவிர்க்கமாணவர்களின் ஒட்டுமொத்த விவரங்களை உள்ளடக்கிய ஸ்மார்ட் கார்டு வழங்கும் திட்டத்தை, 2011ம் ஆண்டு மாநில அரசு கல்வித்துறை மூலம் அறிமுகப்படுத்தியது.

இஎம்ஐஎஸ் (பள்ளி கல்வி இணையதளம்) என்ற திட்டத்தின் கீழ்இவ்வாறு மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்குவதும் ஒன்றாகும். இதில்மாணவர்களின் பெயர்முகவரிரத்த வகைஎடைஉயரம்,தொடர்பு எண் எனஒவ்வொரு தகவல்களாக ஆண்டுதோறும் பதிவு செய்யும் பணியும் நடக்கிறது. ஒவ்வொரு கல்வியாண்டு துவக்கத்திலும்இந்த விவரங்களை பதிவு செய்வது பள்ளி நிர்வாகத்துக்கு ஒரு பிரச்னையாகவே உள்ளது.


காரணம்பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ், 2 வகுப்புகளை முடித்து செல்லும் மாணவர்களின் விவரங்களை விடுத்துமீண்டும் புதிதாக மாணவர்களின் விவரங்களை சேர்க்கும் பணிகளால்தான். தவிரவிவரங்களை பதிவு செய்ய சர்வர் எல்லா நேரத்திலும்பயன்பாட்டில் இருப்பதில்லை. சில நேரங்களில்இரவு நேரத்தில் சர்வர் பயன்பாட்டுக்கு வருகிறது.

கல்வித்துறை குறிப்பிட்ட காலத்திற்குள் விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்துவதால்,வேறுவழியின்றி எந்நேரத்திலும் விவரங்களை பதிவு செய்யவே காத்திருக்க வேண்டியுள்ளது. இணையதள வசதியில்லாத பள்ளிகளின் நிலை மேலும் மோசம். அவ்வாறுள்ள பள்ளிகள்அருகிலுள்ள பள்ளிகளிலும்கம்ப்யூட்டர் சென்டர்களிலும் அணுகி இப்பணிகளை செய்கின்றனர்.

ஸ்மார்ட் கார்டு மட்டுமின்றிஆசிரியர்களின் புதுமையான கற்பித்தல் வழிமுறைகள்,மாணவர்களுக்கான புத்தக தொகுப்புகள் உட்பட அனைத்திற்குமான பதிவேற்றங்களும் நடக்கின்றன. ஸ்மார்ட் கார்டுகளில் குறிப்பிட்டிருக்கும், 16 இலக்க எண்ணைக் கொண்டு அந்த இணையதளத்தில் மாணவர்களின் விவரங்கள் அறியப்படும்.

பள்ளி மாணவர்களுக்கான இத்திட்டத்தின் நோக்கம் பயனுள்ளதாக இருப்பினும்தற்போது இவை செயல்படுத்தப்படுமா என்பதே கேள்விக்குறியாக மாறியுள்ளது. இதில்கடந்த கல்வியாண்டு முதல் புதிதாக ஆதார் எண் இணைக்கும் பணிகளும் துவங்கியுள்ளன. பெரும்பான்மையான குழந்தைகளுக்கு,பெற்றோரின் ஆதார் அட்டையே பயன்படுத்தப்பட்டு வருகிறது.

சில நேரத்தில் குழந்தைகளின் ஆதார் எண் கட்டாயம் தேவைசில நேரத்தில் பெற்றோரின் ஆதார் எண் போதுமானதுமற்றொரு நேரத்தில் ஆதார் எண்கள் கட்டாயமில்லைஆதார் முகாம் நடத்தப்படும் என பல்வேறு அறிவிப்புகள் ஒன்றன்பின் ஒன்றாக பள்ளிகளுக்கு அனுப்பப்படுவதால்தற்போது என்ன செய்வதென்றே தெரியாத நிலைக்கு பள்ளி நிர்வாகத்தினர் தள்ளப்பட்டுள்ளனர். இரண்டாசிரியர்கள் மற்றும் ஆசிரியர் பற்றாக்குறை உள்ள பள்ளிகளில்இப்பணிகளால்பாடம் நடத்துவதும் பாதிக்கப்பட்டுள்ளது.


திட்டம் அறிவிக்கப்பட்ட காலத்தில் கேட்கப்பட்ட விவரங்களேதற்போது வரை மீண்டும் மீண்டும் கேட்கப்படுகிறது. இருப்பினும்இத்திட்டத்திற்கான பணிகளில் முன்னேற்றம் இல்லை. எந்நிலையில் உள்ளதென்பதற்கான அறிவிப்புகளும் இல்லாததால்திட்டம் நடைமுறைக்கு வருமா என்பதே தெரியாமல்பள்ளி நிர்வாகத்தினர் செயல்படுகின்றனர்.

அக்.14 முதல் பி.எட். சேர்க்கைக்கு இரண்டாம் கட்ட கலந்தாய்வு

இளநிலை ஆசிரியர் கல்வியியல் பட்டப் படிப்பான பி.எட். மாணவர் சேர்க்கைக்கான முதல் கட்டக் கலந்தாய்வு திங்கள்கிழமையுடன் நிறைவு பெற்றது.கலந்தாய்வு முடிவில் 700-க்கும் அதிகமான இடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான இரண்டாம் கட்டக் கலந்தாய்வு அக். 14, 15, 16 ஆகிய தேதிகளில் நடத்தப்பட உள்ளது.



           முழுவதும் 21 அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் உள்ள 1,777இடங்களில் 2015-16 கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் நடத்துகிறது.முதல் கட்டக் கலந்தாய்வு கடந்த செப்டம்பர் 28-ஆம் தேதி தொடங்கிஅக்டோபர் 5-ஆம் தேதி வரை 6 நாள்கள் நடத்தப்பட்டது. இதுகுறித்து பி.எட். சேர்க்கை செயலர் பாரதி கூறியது:

கலந்தாய்வு முடிவில் 1,000 இடங்கள் நிரம்பியிருக்கின்றன. மீதமுள்ள 777 இடங்களுக்கு அக்டோபர் 14, 15, 16 தேதிகளில் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.

இந்த இரண்டாம் கட்ட கலந்தாய்வுக்கு 1,600 பேர் வரை அழைக்கத் திட்டமிட்டுள்ளோம் என்றார்.குறைந்தது சேர்க்கை: கடந்த ஆண்டுகளோடு ஒப்பிடும்போதுநிகழாண்டில் பி.எட். மாணவர் சேர்க்கை வெகுவாகக் குறைந்துள்ளதாக கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.வழக்கமாக 300 முதல் 400இடங்கள் வரை மட்டுமே காலியாக இருக்கும். ஆனால்நிகழாண்டில் பி.எட். படிப்புக் காலம் இரண்டு ஆண்டுகளாக உயர்த்தப்பட்டதே அரசுக் கல்லூரிகளில் மட்டுமல்லாமல்தனியார் சுயநிதி பி.எட். கல்லூரிகளிலும் சேர்க்கை குறைந்திருப்பதற்கான முக்கியக் காரணம் என்கின்றனர் கல்வியாளர்கள்.

1 கோடி ஆசிரியர்கள் தேவை

சர்வதேச ஆசிரியர் தினம் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 05ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. யுனெஸ்கோ அமைப்புஇந்தாண்டை. குழந்தை பருவ கல்வி ஆண்டாக கொண்டாட தீர்மானித்துள்ளது.சர்வதேச அளவில் உள்ள நாடுகளில் குழந்தைகள் ஆரம்ப கல்வி பெறாமல் அதிக அவதிப்படுகின்றனர். இதனால் அவர்களின் வாழ்க்கைத்தரம் மட்டுமல்லாது அவர்களது எதிர்காலமே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.


            குறைந்த பயிற்சிகுறைவான ஊழியர்கள் மற்றும் அதற்கேற்ற நிதி ஒதுக்கீடு செய்யாததன் காரணத்தினாலேயே குழந்தைகளுக்கு ஆரம்ப கல்வி கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.2020ம் ஆண்டிற்குள் அனைத்து குழந்தைகளுக்கும் ஆரம்ப கல்வி கிடைக்க வேண்டுமென்றால்10.9 மில்லியன் (1 கோடியே 10 லட்சம்) ஆசிரியர்கள் தேவைப்படுவதாக யுனெஸ்கோ அமைப்பு தெரிவித்துள்ளது.