யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

23/9/16

ஏழாவது ஊதியக்குழு பரிந்துரை அமல் ஆசிரியர் கூட்டமைப்பு முதல்வருக்கு நன்றி

புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, புதிய சம்பளம் வழங்கப்படும் என அறிவித்த முதல்வருக்கு, புதுச்சேரி யூனியன் பிரதேச பள்ளி ஆசிரியர்கள்கூட்டமைப்பு நன்றி தெரிவித்துள்ளது.கூட்டமைப்பு தலைவர் துளசி வெளியிட்டுள்ள அறிக்கை:மத்திய அரசு ஊழியர்களுக்கு, ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைத்தசம்பளம் கடந்த மாதம் அமல்படுத்தப்பட்டது. 
புதுச்சேரியில் நிதி நிலைமை சீரமைத்த பிறகு ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துரை அமல்படுத்தப்படும் என முதல்வர் அறிவித்திருந்தார்.இந்நிலையில், ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை சிறப்பு அறிவிப்பு மூலம், பட்ஜெட் கூட்டம் முடிவதற்குள் சட்டசபையில்அறிவிக்க வேண்டும் என, புதுச்சேரி யூனியன் பிரதேச பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு கேட்டுக்கொண்டது. அதனை ஏற்ற முதல்வர் நாராயணசாமி, அனைத்து அரசு ஊழியர்களுக்கும் செப்., மாதத்தில் பதிய சம்பளம் வழங்கப்படும் என அறிவித்தார்.இதற்காக, கூட்டமைப்பு சார்பில், கவர்னர் மற்றும் முதல்வர் நாராயணசாமி, கல்வி அமைச்சர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

NMMS தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விபரங்களை 27-9-16 குள் Off line ல் பூர்த்தி செய்ய திண்டுக்கல் CEO அவர்கள் செயல்முறைகள்

3 வயதுக்கு உட்பட்ட காதுகேளாத குழந்தைகளை பேச வைக்கலாம்: சென்னை பாலவித்யாலயா பள்ளியில் இலவச பயிற்சி.

மூன்று வயதுக்கு உட்பட்ட காதுகேளாத குழந்தைகளைப் பேச வைப்பதற்கான சிறப்புப் பயிற்சி சென்னையில் உள்ள பாலவித்யா லயா காதுகேளாதோர் பள்ளியில் இலவசமாக அளிக்கப்படுகிறது.சென்னை அடையாறு சாஸ்திரி நகரில் இயங்குகிறது பாலவித் யாலயா காது கேளாதோர் பள்ளி. இங்கு, காதுகேளாத குழந்தைகள்சேர்க்கப்பட்டு அவர்களுக்குச் சிறப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து அப்பள்ளியின் கவுரவ இயக்குநர் சரஸ்வதி நாராயணசாமி, முதல்வர் வள்ளி அண்ணாமலை, துணை முதல்வர் மீரா சுரேஷ் ஆகியோர் கூறிய தாவது:

பெரும்பாலும் குழந்தைகள் 3-வது மாதம் முதல் 4-வது மாதத்தில் குப்புறப் படுக்க ஆரம் பிக்கும். தலையைத் தூக்கி இங்கும் அங்கும் பார்க்கும். எப்போது நாம் அதன் பெயரை அழைக்கிறோமோ அப்போது அது ஆசையுடன் சத்தம் வரும் திசையை நோக்கி எட்டிப் பார்க்கும். முதலில் சத்தத்தை உணர்ந்து கொள்ள முயற்சிக்கும். அதன்பிறகு அந்தச் சத்தம்எங் கிருந்து வருகிறது என்பதைக் கண்டுபிடிக்கும்.பின்னர் சத்தத்தை வேறுபடுத்திப் பார்த்து, அதில் இருந்து ஓர் அர்த்தத்தைப் புரிந்துகொள்ளும். அதைத்தொடர்ந்து தானாக பேசும் கலையை குழந்தையே வளர்த்துக் கொள்ளும்.

ஆனால் இந்த திறமை அனைத்துக் குழந்தைகளுக்கும் கிடைப்பதில்லை. பிறக்கும் ஆயிரம் குழந்தைகளில் ஒரு குழந்தை காதுகேளாக் குறைபாடுடன் பிறக் கிறது. காது கேளாத காரணத் தால் பேசும் திறன் அந்தக் குழந் தைக்கு இருக்காது. இதை நாம் சிறுவயதிலேயே கண்டுபிடிக்க முடியும். குழந்தைப் பிறந்த உடன் பரிசோதித்துப் பார்க்கும்போது காது கேட்கிறதா என்பதை கண்டு பிடிக்கலாம். மேலும், போலியோ சொட்டு மருந்து கொடுக்கும்போதும் தெளிவாக உணர முடியும்.குழந்தைக்குக் காது கேட்கவில்லை என்பதை நாம் உணர்ந்த வுடன் கேட்கும் திறனைப் பரிசோதிக் கும் ஆடியோ வல்லுநர்களிடம் பரிசோதனைக்குக் கொண்டு செல்லவேண்டும்.

குழந்தைப் பிறந்து 3 முதல் 4 மாதங்களில் ஒரு தாய் தனது குழந்தையைக் கூப்பிடும்போது அது சத்தம் வரும் திசையை நோக்கி பார்க்கிறதா? அல்லது பார்க்காமல் இருக்கிறதா? என்பதை எளிதாக கண்டுபிடிக்க முடியும். அப்படி பார்க்கவில்லை என்றால் உடனடியாக குழந்தையை காது மூக்கு தொண்டை மருத்துவர் அல்லது ஆடியோ நிபுணர்களிடம் கொண்டு செல்லவேண்டும். 3 வயதுக்குள் கண்டுபிடித்துவிட்டால் குழந்தை மிக விரைவிலேயே பேசும் திறனையும் கேட்கும் திறனையும் கற்றுக்கொண்டு மற்ற குழந்தை கள் போன்று இயல்புநிலையை அடைந்து இதர குழந்தைகளுடன் சேர்ந்துகொள்ளும்.காதுகேளாத குழந்தைக்கு காது கேட்கும் கருவியை பொருத்துவது மூலமாக அது சத்தத்தை உணர்ந்து கொள்ளும். ஆனால், குழந்தை தானாக பேசுவதற்குக் கற்றுக் கொள்ள தனியாக பயிற்சி அளிக்க வேண்டும்.

இந்தச் சிறப்புப் பயிற்சியால், காதுகேளாத குழந்தை மற்றவர்கள் பேசுவதைப் போல் பேச கற்றுக்கொள்ளும். எங்கள் பள்ளியில் காதுகேளாத குழந்தைகளுக்குத் தேவையான அனைத்துப் பயிற்சிகளையும் இலவசமாக அளிக்கிறோம். பொது வாக, காதுகேளாத குழந்தை களுக்குப் பயிற்சி அளிக்கும் அனைத்துப் பள்ளிகளும் 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளைத்தான் சேர்த்துக்கொள்கின்றன. ஆனால் எங்கள் பள்ளியில், பிறந்தது முதல் 3 வயதுக்குட்பட்ட குழந்தைகள் வரை சேர்த்துக் கொள்கிறோம். இங்கு சேர குழந்தைகளுக்குக் குறைந்தபட்ச வயது வரம்பு ஏதும் கிடையாது. பிறந்த சில நாட்களே ஆன குழந்தைகள் கூட சேர்த்துக் கொள்கிறோம்.

பெரியவர்கள் பேசுவதைக் கேட்கவும் பின்னர் அதற்கு ஏற்ப பதில் அளிக்கவும் இளம் பரு வத்தில் இருந்தே இந்தக் குழந்தை களுக்குப் பயிற்சி அளிக்க ‘தவானி’ என்ற முறையைப்பின் பற்றுகிறோம். இங்கு 3 முதல் 4 ஆண்டுகள் அளிக்கப்படும் சிறப்புப் பயிற்சிகள் மூலம் குழந் தைகள் வாசிக்கவும் எழுதவும் எண்கள் அடங்கிய கணக்குகளைப் போடவும் கற்றுக் கொள்கிறார்கள். இதனால் அவர்கள் 5 முதல்6 வயதுக்குள் இந்தப் பள்ளியில் இருந்து வெளியே வந்து பொது வான பள்ளிகளில் சேர்ந்துவிடலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

தமிழக அரசில் துணை ஆய்வாளர், ஃபோர்மேன் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

அரசின் மீன்வளத்துறையில் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ள துணை ஆய்வாளர், ஃபோர்மேன் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: துணை ஆய்வாளர் (Fisheries Department)
காலியிடங்கள்: 12
தகுதி: Fishery Science  படிப்பில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும் அல்லது விலங்கியல் படிப்பை முக்கியப் பாடமாகக் கொண்ட பட்டப்படிப்பை படித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 வயதிலிருந்து 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.3,900-34,800
பணி: ஃபோர்மேன்
காலியிடங்கள்: 04
தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல் பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 வயதிலிருந்து 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.3,900-34,800
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்க்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் இதர பிரிவினர் ரூ.100 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்சி,எஸ்டி,மாற்றுத் திறனாளிகள், கணவரை இழந்த ஆதரவற்ற பெண்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை:http://tnpscexams.net என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 06.10.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறியhttp://www.tnpsc.gov.in/notifications/2016_18_not_eng_si_of_fisheries.pdfஎன்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

TNTET:தகுதித்தேர்வு குழப்பத்தால் தமிழகத்தில் 3 ஆயிரம் ஆசிரியர்கள் வேலையை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மட்டுமின்றி தனியார் பள்ளிகளில் ஆசிரியர் பணி மேற்கொள்ள வேண்டுமானால் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் என்ற திட்டத்தை தமிழக அரசு 2011-ம் ஆண்டு கொண்டு வந்தது.இதன் அடிப்படையில் தகுதித் தேர்வும் 3 முறை நடத்தப்பட்டு ஆசிரியர்கள் பணியில் நியமிக்கப்பட்டனர். 
தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் வேலையில் நியமிக்கப்பட்டனர்.ஆசிரியர்கள் தகுதித் தேர்வை அரசு உதவி பள்ளியில் பணியாற்றக் கூடியவர்களும் எழுத வேண்டிய நிலை ஏற்பட்டது. 2010-ம் ஆகஸ்டு மாதம் 23-ந்தேதிக்கு பிறகு அரசு உதவி பெறும் பள்ளிகளில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் தகுதித் தேர்வை 5 ஆண்டுகளுக்குள் எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்று அரசு ஆணை வெளியிட்டு இருந்தது.இதனால் தமிழகம் முழுவதும் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் தகுதி தேர்வு எழுத வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.                                                                                           இந்த நிலையில் தகுதித் தேர்வு எழுதுவதற்கு அரசு அளித்த 5 ஆண்டு காலம் நவம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. ஆனால் தேர்வு எழுத முடியாமல் சுமார் 3 ஆயிரம் ஆசிரியர்கள் இருப்பதாக ஆசிரியர் சங்கம் தெரிவிக்கிறது. தகுதித் தேர்வு நடைபெறாமல்இருப்பதாலும் குறிப்பிட்ட காலம் முடிவடைவதாலும் தங்களது ஆசிரியர் பணிக்கு ஆபத்து வருமோ என்று அஞ்சுகிறார்கள்.இதற்கிடையில் தகுதித் தேர்வு தொடர்பாக 2 வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகின்றன. இதனால்தான் தேர்வு நடத்த முடியாத நிலை ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.                                                                               இது குறித்து தமிழ்நாடு ஆசிரியர் சங்க தலைவர் இளமாறன் கூறுகையில், தகுதித் தேர்வு எழுதுவதற்கானவாய்ப்பை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு செய்து தரவேண்டும். ஏற்கனவே பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு தேர்வு எழுத விலக்கு அளிக்க வேண்டும் என்றார்.

B.LIT பெற்று நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்றபின் B.ED தேர்ச்சிக்கு ஊக்க ஊதியம் (INCENTIVE) அளிக்க கூடாது - தொடக்கக்கல்வி இயக்குனர் தெளிவுரை


22/9/16

ஒரே Click-ல் நீங்களே கல்விச் சேவை யின் Whatsapp group-ல் இணைந்து தகவல் பெறும் புதிய வசதி அறிமுகம்...

  கல்விச் சேவை யில் Whatsapp group  புதிய வசதி 
 தொடர்ந்து பல்வேறு கல்விச் சேவை வாசக நண்பர்களில் கோரிக்கையினால் நமது கல்விச்செய்தியில் Whatsapp group மூலமாக கல்வி தொடர்பான தகவல்களை விரைவாக பெறும் புதிய வசதி அறிமுகம் செய்யப்படுகிறது.

 
தமிழகத்தில் உள்ள அனைத்து கல்விச் சேவை வாசகர்களையும் ஒன்றாக Whatsapp செயலி மூலமாக இணைக்கும் புதிய முயற்சி இது.

 கல்விச் சேவை Whatsapp Group ல் எவ்வாறு இணைவது?

 
முதலில் Google chrome, Firefox போன்ற Browser -ல் உங்களது Mobile -ல் இருந்நது நமது கல்விச்செய்தியின் இந்த பதிவினை Open செய்து கொள்ளவும்.

கீழே வகைப்படுத்தப்பட்டுள்ள Whatsapp Groupல் எந்த நிலையில் வருவீர்கள் என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

ஆசிரியர் கல்விச் சேவை


https://chat.whatsapp.com/3KviyyfTsvRAWuckAuO7go

கல்விச் சேவை  3


கல்வி சேவை 4



 
இவற்றில் உங்களது சரியான குழுவினை தேர்வு செய்து Click செய்தவுடன் இந்த Link -ஐ உங்களது Whatsapp செயலியில் Open செய்து Join group என்பதை தேர்வு செய்து இணைந்து கொள்ளவும்.

*
ஒரு குழுவில் 256 நபர்கள் மட்டுமே இணையமுடியும் என்பதால் குழு 1,2,3... என்று பிரிக்கப்பட்டுள்ளது.

*
மற்ற குழுக்களும் தேவைக்கேற்ப விரிவுபடுத்தப்படும்.

குறிப்பு:

 *
குழுவில் கல்வி தொடர்பான செய்திகளை மட்டுமே வெளியிடவும்,பகிரவும் செய்ய வேண்டும்.
*
நாகரிகமற்ற கருத்துக்கள்,செய்தி,படங்கள் வெளியிடுவோர் குழுவில் இருந்து நீக்கப்படுவர்.
*
உங்களது பலரின் பல நல்ல கருத்துகள்,செய்திகளை அனைவருக்கும் பயன் படும் என்ற நோக்கிலேயே இந்த குழுவானது பலவாக பிரிக்கப்பட்டுள்ளது.எனவே இந்த முயற்சிக்கு அனைவரும் சரியான முறையில் ஒத்துழைப்போம்.
நாம் அறிந்ததை உலகறியச்செய்வோம்.
                                                                                                          
நன்றி...

                                                                                                        -
அன்புடன்

                                                                                                       கல்விச் சேவை

JACTTA NEWS-Cps. வல்லுந‌ர் குழு ஜாக்டா விற்கு அழைப்பு :

மேல்நிலை துணைத் தேர்வு அனுமதிச் சீட்டுகளை இணையத்தில் இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்.

செப்டம்பர், அக்டோபர் 2016-க்கான மேல்நிலை துணைத்தேர்வு எழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் தேர்வுக் கூட அனுமதிச் சீட்டுகளை(ஹால் டிக்கெட்) இணையதளத்தில் புதன்கிழமை (செப். 21) பிற்பகல் 2
மணி முதல் பதிவிறக்கம்செய்து கொள்ளலாம்.

www.tngdc.gov.in என்றஇணையதளத்தில் DEPARTMENT OF EXAMINATION என்பதை கிளிக் செய்து தோன்றும்பக்கத்தில் HSC September/October 2016 Hall Ticket Download என்பதனைகிளிக் செய்து விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றை பதிவுசெய்தால் அனுமதி சீட்டு கிடைக்கும்.

செய்முறைத்தேர்வு: செய்முறைத் தேர்வில் 40 மதிப்பெண்களுக்கும் குறைவாகப் பெற்று தேர்ச்சி அடையாதவர்கள்கட்டாயம் செய்முறைத் தேர்வினை மீண்டும் செய்வதோடு எழுத்துத் தேர்வுக்கும் வருகை புரிய வேண்டும். அதிகபட்ச மதிப்பெண் 200 கொண்ட செய்முறை மட்டும்உள்ள பாடத்தில் தேர்ச்சி பெறாதவர்கள் மீண்டும் செய்முறைத் தேர்வுக்கு வருகை தர வேண்டும். அதோடு, மொழிப்பாடங்களில் கேட்டல், பேசுதல் திறன் தேர்வு, சிறப்பு மொழி(தமிழ்) பாடத்தில்கேட்டல், பேசுதல் திறன் தேர்வு, செய்முறை தேர்வு தேதி குறித்தவிவரங்களை தனித்தேர்வர்கள் தாம் தேர்வு எழுதும்மையத்தின் முதன்மைக் கண்காணிப்பாளரை அணுகி அறிந்து கொள்ளலாம். குறிப்பாக எக்காரணம் கொண்டும் உரிய தேர்வுக் கூடஅனுமதிச் சீட்டின்றி தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள் என அரசு தேர்வுகள்இயக்குநர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

வாக்குச்சாவடி அலுவலர் நியமனம் : ஒரே துறை பணியாளர்களுக்கு தடை

ஒரே வாக்குச்சாவடியில், ஒரே துறையைச் சேர்ந்தபணியாளர்களை வாக்குச்சாவடி அலுவலர்களாக நியமிக்ககூடாது என, மாநில தேர்தல்ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த உள்ளாட்சித் தேர்தலில்வாக்குச்சாவடி அலுவலர்கள் நியமனத்தில் குழப்பம் ஏற்பட்டது. இதனை
தவிர்க்கும் வகையில்சில விதிமுறைகளை கடைபிடிக்க மாநில தேர்தல் ஆணையம்உத்தரவிட்டது.
அதன்படிவாக்குச்சாவடி தலைமை அலுவலர், வாக்குப்பதிவுஅலுவலர் நிலை 1 ல் மாநிலஅரசு பணியில் உதவியாளர் தகுதிஅல்லது அவர்கள் சம்பள விகிதத்திற்குகுறையாத பணியாளர்களை நியமிக்க வேண்டும்.வாக்குப்பதிவு அலுவலர் நிலை 2,6ல்அலுவலக உதவியாளர் தகுதி அல்லது அவர்கள்சம்பள விகிதத்திற்கு குறையாத பணியாளர்கள், வாக்குப்பதிவுஅலுவலர் நிலை 3,4,5ல் இளநிலை உதவியாளர்தகுதி அல்லது அவர்கள் சம்பளவிகிதத்திற்கு குறையாத பணியாளர்களை நியமிக்கவேண்டும். போலீஸ், மருத்துவம், மின்சாரம், குடிநீர் வழங்கல், பால்பண்ணை போன்ற துறை பணியாளர்களைநியமிக்க கூடாது.

அரசியல்சார்புடையவர் என அறியப்பட்டவர், முந்தையதேர்தல்களில் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்பட்டவர், வேட்பாளரின் உறவினர் ஆகியோரை பணியமர்த்தகூடாது. அதிக வாக்காளர்கள் அல்லதுபர்தா அணிந்த இஸ்லாமிய பெண்கள்நிறைந்த பெண் வாக்குச்சாவடிகளில், அடையாளம்காண்பதற்காக ஒன்று அல்லது 2 பெண்வாக்குப்பதிவு அலுவலர்களை நியமிக்க வேண்டும். மேலும் ஒரே வாக்குச்சாவடியில்ஒரே துறைச் சேர்ந்த பணியாளர்கள்நியமித்தால் கூட்டுச் சேர வாய்ப்புள்ளது. இதனால்வெவ்வேறு துறை பணியாளர்களை மட்டுமேநியமிக்க வேண்டும். இவ்வாறு மாநில தேர்தல்ஆணையம் தெரிவித்துள்ளது

அனைத்துத் துறை கர்ப்பிணி பெண்களுக்கு 6 மாதம் விடுப்பு: ராஜ்யசபாவில் மகப்பேறு மசோதா நிறைவேற்றம் !

   அனைத்துத் துறைகளிலும் பணியாற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு 6 மாதம் விடுப்பளிக்க வகைசெய்யும் மகப்பேறு மசோதா இன்று
ராஜ்யசபாவில்ஒருமனதாக நிறைவேறியது.

  தனியார் நிறுவனங்கள் உள்படஅனைத்துத் துறைகளிலும்  பணியாற்றும்பெண்களுக்கு அளிக்கப்பட்டு வரும் 3 மாத மகப்பேறுவிடுப்பை 6 மாதங்களாக அதிகரிக்க வகை செய்யும் மகப்பேறுஆதாய சட்டத் திருத்த மசோதாஇன்று ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டது.
இதன்படி,அனைத்துத்துறையில் பணிபுரியும் கர்ப்பிணி பெண்களுக்கு 6 மாதம் மகப்பேறு காலவிடுப்பு கிடைக்கும்
50க்கும்மேற்பட்ட ஊழியர் பணியாற்றும் நிறுவனத்தில்குழந்தைகள் காப்பகம் அமைக்க வேண்டும்பச்சிளம்குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கும் தாய்மார்களுக்கு 3 மாதம் விடுப்பு கிடைக்கும்

மசோதா நிறைவேறியதால் 10.80 லட்சம் பேர் பயன்பெறுவர்.

வாட்ஸப்புக்கு போட்டியாக வரும் கூகுளின் 'அல்லோ'!!

 பிரபல இணைய தேடுபொறிநிறுவனமான கூகுள் 'அல்லோ என்றபெயரில் புதிய செய்தி பரிமாற்றசெயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.

          கூகுள் நிறுவனம் இந்தஆண்டு மே மாதம் 'டியூ' எனப்படும் காணொளி அழைப்பு சேவைவசதி செயலி மற்றும் 'அல்லோ' எனப்படும்
செய்தி பரிமாற்ற செயலிஆகியவற்றை கொண்டுவர இருப்பதாக அறிவிப்பு செய்தது.  

அதைத் தொடர்ந்து கடந்த மாதம்  'டியூ' சேவை முறைப்படிஅறிமுகம் செய்யப்பட்டது. ஒரு மாதத்திற்குள் பத்துலட்சம் பேர் அதனை தங்கள்அலைபேசிகளில்  பதிவிறக்கம்செய்தனர். அதனைத் தொடர்ந்து கூகுள்தற்போது 'அல்லோ செய்தி பரிமாற்றசெயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த 'அல்லோ செய்தி பரிமாற்றசெயலியானது உள்ளிணைந்த கூகுள் தேடுபொறி வசதியுடன்வெளிவருகிறது. இதன் காரணமாக ஏதாவதுஒரு விஷயத்தை இணையத்தில் தேடுவதற்காக உரையாடல் செயலியிலிருந்து வெளியில் செல்ல வேண்டிய அவசியம்இல்லை. கூகுள் உதவு ஒருங்கிணைப்புவசதியும் இதில் இடம் பெற்றுள்ளது. மேலும் பயனாளர்கள் தங்கள் கூகுள்  கணக்கை இத்துடன் இணைத்துக்கொள்ளலாம்.
இத்துடன்இதில் பல்வேறு தரப்பினரும் பயன்படுத்துவதற்குஏதுவான 'எமோஜிகள் . மற்றும் 'ஸ்டிக்கர்களும்' இடம் பெற்றுள்ளன.
ஆனால் வாட்சப்பில் இடம் பெற்றுள்ள கோப்புகள்  பரிமாற்றம்மற்றும் குரல்வழி  அழைப்புவசதி போன்ற வசதிகள் தற்போதுஇந்த செயலியில் இடம் பெறவில்லை. ஆனால்வெகுவிரைவில் குரல்வழி  அழைப்புவசதி 'அல்லோ ' செயலியில் இடம்பெறுமென்று கூகுள் நிறுவன அதிகாரிகள்தெரிவித்துள்ளனர்.


நன்றி: தினமணி

பள்ளிகளுக்கு2ம் பருவ பாடப் புத்தகம் அக்.3ல் வழங்க வேண்டும்: கல்வித்துறை உத்தரவு

கடந்த 5 ஆண்டுகளில் பள்ளிக்கல்வித்துறை அடைந்துள்ள வளர்ச்சி குறித்த ஆய்வுக் கூட்டம்நேற்று நடந்தது.

சென்னை கல்லூரிச் சாலையில்உள்ள தமிழ்நாடு பாடநூல் கழக கட்டிடத்தில்நடந்த இந்த ஆய்வுக் கூட்டத்தில்அனைத்து மாவட்ட
முதன்மைக் கல்விஅலுவலர்கள் கலந்து கொண்டனர். பள்ளிக்கல்வி செயலாளர் சபீதா தலைமை தாங்கினார். பள்ளிக் கல்வி இயக்குநர், தொடக்ககல்வி இயக்குநர், மாநில கல்வி ஆராய்ச்சிமற்றும் பயிற்சி இயக்குநர், தேர்வுத்துறைஇயக்குநர் மற்றும் இணை இயக்குநர்கள்கலந்து கொண்டனர். 


நடப்புகல்வி ஆண்டில் பள்ளிக் கல்வித்துறையில்செய்ய வேண்டிய திட்டங்கள் குறித்துசெயலாளர் சபிதா விளக்கினார். மேலும், தற்போது நடக்கும் காலாண்டுத் தேர்வுகள் முடிந்த பின் அறிவிக்கப்படும்விடுமுறைக்கு பிறகு அக்டோபர் 3ம்தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.

பள்ளி திறக்கும் நாளில் அனைத்து மாணவமாணவியருக்கும் இரண்டாம் பருவ பாடப்புத்தகங்களை கண்டிப்பாகவழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். அத்துடன்நாபார்டு திட்டத்தின் மூலம் அனைத்து மாவட்டத்திலும்கூடுதல் வகுப்பறைகள், ஆய்வகங்கள் கட்டும் பணியை துரிதப்படுத்தவும்உத்தரவிட்டார்.

பிறந்த குழந்தைக்கும் இனி ஆதார் அட்டை!

அரசு ஊழியர்களின் கடித எண்கள்

அரசூழியர்களைப்பொறுத்தவரை, மத்திய அரசு மற்றும்மாநில அரசு ஊழியர்களென இரண்டுவகையினர் இருக்கிறார்கள். ஆகையால், இவ்விரண்டு வகையினருக்கும் கடிதவெண்கள் மாறுபடும். நம்மைப் பொறுத்தவரை மாநிலஅரசு ஊழியர்களின் கடித எண்கள் மிகமுக்கியமானவைஎன்பதால், அதுகுறித்து முதலில் தெரிந்து கொள்வதுகட்டாயமாகும்.
ந.க எண் = நடப்புக்கணக்கு எண்

ஓ.மு. எண் = ஓராண்டுமுடிவு எண்
மூ.மு எண் = மூன்றாண்டுமுடிவு எண்
நி.மு. எண் = நிரந்தரமுடிவு எண்
ப.மு. எண் = பத்தாண்டுமுடிவு எண்
தொ.மு எண் = தொகுப்புமுடிவு எண்
ப.வெ எண் = பருவவெளியீடு எண்
நே.மு.க எண்= நேர்முகக் கடித எண்
இதில் நடப்புக் கணக்கு எண் மட்டுமேஅதிகப் பயன்பாட்டில் இருக்கும். நேர்முகக் கடிதம் என்பது, கீழ்மட்டஊழியருக்கு, மேல்மட்ட ஊழியர் எழுதும் கடிதம். அதாவது, நேரடியாகப் பேசியதற்குச் சமம் என்பதால், அதற்கானபதிலை விரைந்து சொல்லவேண்டும்.

இவ்வெண்களில்எதுவொன்றும் இல்லாமல் எந்தவொரு கடிதம் யாருக்கு வந்தாலும், தனிப்பட்ட முறையில் தங்களைப் பாதிக்கும் என்பதால், சட்டத்துக்குப் புறம்பாகத் தங்களின் ஊழியப்பதிவேட்டில் பதியாமல் அரசூழியர்கள் அனுப்பிய கடிதம் என்றே பொருள். இதுவே, அவ்வூழியர் தனது ஊழியத்தில் கடமைதவறியுள்ளார் என்பதை நிரூபிக்கப் போதுமானது.

21/9/16

IAS தேர்வு என்றால் என்ன ?



IAS மற்றும் IPS உள்ளிட்ட 
24 பணிகளுக்காக 
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணயத்தினால்(UPSC) ஆண்டிற்கு ஒருமுறை நடத்தப்படும் குடிமைப்பணித் தேர்வே(CIVIL SERVICE EXAM) மிகவும் பிரபலமாக IAS தேர்வு என்று அழைக்கப்படுகிறது.

F.A.Q
IAS தேர்வு எழுதுவதற்கான கல்வித் தகுதி என்ன ?
ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பு தகுதி பெற்றிருக்க வேண்டும்.

IAS தேர்விற்கான வயது வரம்பு என்ன ?
குறைந்தபட்ச வயது : 
21 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்
அதிகபட்ச வயது : பொதுப்பிரிவினர் 
(GENERAL) : 32
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்(OBC) :35
ஆதிதிராவிடர்c/பழங்குடியினர்(SC/ST) : 37.

ஒருவர் IAS தேர்வை எத்தனை முறை எழுத முடியும் ?
பொதுப்பிரிவினர் (GENERAL) : 6 முறை
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்(OBC) : 9 முறை
ஆதிதிராவிடர்/பழங்குடியினர்(SC/ST) : எண்ணிக்கை இல்லை(Unlimited)

ஏன் IAS தேர்வு எழுத வேண்டும் ?
சமூகம் மற்றும் நாட்டிற்கு நேரடியாக சேவை செய்யும் வாய்ப்பு
ஆளுமை அதிகாரம்
பெருமதிப்பிற்குரிய பணி
சமூகத்தில் மிகவும் அதிகமான மரியாதை
மேலும் பல…..

IAS தேர்வு எழுதுவதற்கு ஆங்கிலத்தில் நல்ல புலமை பெற்றிருக்க வேண்டுமா ?
இல்லை. அடிப்படை ஆங்கில அறிவு மட்டுமே போதுமானது.

IAS தேர்வை தமிழில் எழுதமுடியுமா ?
முடியும்.IAS முதன்மைத் தேர்வை தமிழில் எழுதலாம்.

IAS தேர்வு எழுத வேண்டுமென்றால் ஒரு நாளைக்கு 20 மணி நேரம் வீதம் 365 நாட்கள் படிக்க வேண்டுமா ?
இல்லை.
ஒரு நாளைக்கு 4 முதல் 8 மணிநேரம் படித்தால் மட்டுமே போதுமானது.

IAS தேர்வை ஒரு வருடத்திற்கு இலட்சக்கணக்கானோர் எழுதுகின்றனர்.
ஆனால் சிலரே தேர்வில் வெற்றியடைகின்றனர்.
என்னால் முடியுமா ?
கண்டிப்பாக முடியும்.
இலட்சக்கணக்கானோர் விண்ணப்பிக்கவும்,தேர்வு எழுதவும் செய்கின்றனர்.
ஆனால் உண்மையான போட்டியாளர்கள் 2000 முதல் 3000 மட்டுமே.
உண்மையான போட்டியாளர்கள் 
என்பவர்கள் சரியான திட்டமிடுதலுடன்,
தொடர்ச்சியாக பயிற்சி செய்பவர்களே..

IAS தேர்வு என்பது மிகப்பெரும் கடல் போன்றது என்பது உண்மைதானா ?
தேர்விற்கு அதிக புத்தகங்கள் படிக்க வேண்டுமா ?
இல்லை.
IAS தேர்வில் இடம்பெறும் வினாக்கள் அனைத்தும் தேர்வாணையத்தால் கொடுக்கப்பட்ட பாடத்திட்டத்தின் படியே இருக்கும்.
அந்தப்பாடத்திட்டத்தின்படி தேர்வுக்கு தயார் செய்தாலே எளிதில் வெற்றி பெறலாம்.

IAS தேர்வு எழுத வேண்டுமென்றால் எவ்வளவு காலம் படிக்க வேண்டும் ?
முறையான வழிகாட்டுதல் இருந்தால் IAS முதல்நிலை தேர்விற்கு 3 மாத காலம் போதுமானது.

IAS தேர்விற்கு எப்போதிலிருந்து தயாராக வேண்டும் ?
IAS தேர்வு என்பது பொதுத் தேர்வல்ல.
அது ஓர் போட்டித் தேர்வு.
ஆகவே இன்றிலிருந்தே தயாராவது அவசியம்.

IAS தேர்வில் நகர்புற மாணவர்களே எளிதில் வெற்றி பெற முடியும். கிராமப்புற மாணவர்கள் வெற்றி பெறுவது கடினம் என்ற கருத்து உண்மைதானா ?
முற்றிலும் தவறான கருத்து.
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமானது எந்தப் பாகுபாடுமின்றி அனைத்துப் பகுதி மாணவர்களும் பங்குபெறும் வகையில் தான் வினாத்தாளை அமைக்கிறது.

IAS தேர்விற்கு படிக்க வேண்டுமென்றால் டெல்லி மற்றும் முக்கிய நகரங்களுக்குச் சென்று பயிற்சி பெற வேண்டுமா ?
இல்லை.
அப்படி எதுவும் இல்லை.. 
நீங்கள் வீட்டிலிருந்தே படித்து வெற்றி பெறலாம்.
அவ்வாறு வெற்றிபெற கீழ்வருபவை அனைத்தும் அவசியம்
தேர்வுமுறை பற்றி அறிந்து கொள்ளுதல்
வினா அமைப்பு முறை பற்றி அறிந்து கொள்ளுதல்
சரியான திட்டமிடல்
திட்டமிட்டதை தொடர்ச்சியாக செயல்படுத்துதல்
மாதிரித் தேர்வுகள் எழுதுதல்
சரியான வழிகாட்டல்
இறுதியாக முழு நம்பிக்கையோடுj இருத்தல்
இவை அனைத்தும் இருந்தால் நீங்களும் 
ஒரு IAS, IPS அதிகாரி ஆவது நிச்சயம்..I
தேர்வில் வெற்றிபெற வாழ்த்துக்கள்
இளைஞர்களுக்கு உற்சாகப் படுத்துங்கள். 
நமது ஊரில் IAS. IPS. போன்ற வேலைக்கு நமது சமுதாய இளைய தலைமுறை ஆர்வம் கொள்ள செய்வோம்.

சத்துணவுக்கான பயறு வகைகள் தரமானதாக வழங்க கோரிக்கை

தரமான பயறு வகைகளை, வாணிபக் கழகம் சப்ளை செய்ய வேண்டும்' என, சத்துணவு மைய ஊழியர்கள் வலியுறுத்தி உள்ளனர். தமிழக பள்ளிகளில் உள்ள சத்துணவு மையங்களில், மாணவர்களுக்கு வாரத்தில் ஒருநாள், வேக வைத்த கருப்பு கொண்டை கடலை அல்லது பச்சை பயறு வழங்கப்படுகிறது.
இதற்காக, ஏழு கோடி ரூபாய்க்கு, 700 டன் கருப்பு கொண்டை கடலை; மூன்று கோடி ரூபாய்க்கு, 400 டன் பச்சை பயறு வாங்க, வாணிபக் கழகம் முடிவு செய்துள்ளது. அதை, தரமானதாக வாங்க வேண்டும் என, வலியுறுத்தப்பட்டு உள்ளது.

இதுகுறித்து, சத்துணவு மைய ஊழியர்கள் கூறியதாவது: மாணவர்களுக்கு ஊட்டச்சத்து கிடைக்க, வேக வைத்த பயறு வகைகளை வழங்க வேண்டும்; இதற்காக, அரசு வழங்கும் பயறு வகைகளின் தரம் மோசமாக உள்ளது. வாணிபக் கழக அதிகாரிகளிடம், பலமுறை தெரிவித்தும், தீர்வு கிடைக்கவில்லை. இந்த முறையாவது, தரமான பயறு வாங்கி சப்ளை செய்ய, புதிதாக பொறுப்பேற்றுள்ள, வாணிபக் கழக நிர்வாக இயக்குனர் கோபால், நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

எம்.பி.பி.எஸ்., 'அட்மிஷன்:' யு.ஜி.சி., எச்சரிக்கை

அனைத்து நிகர்நிலை மருத்துவ பல்கலைகளும், 'நீட்' மதிப்பெண்படியே, மாணவர்களை சேர்க்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டு உள்ளது. இதுகுறித்து, பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., வெளியிட்டுள்ள எச்சரிக்கை: எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மருத்துவ படிப்புக்கு, 'நீட்' எனும் தகுதித்தேர்வு நடத்தப்பட்டு உள்ளது; இதில் எடுத்த மதிப்பெண்படி, மாணவர் சேர்க்கை நடத்த, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நிகர்நிலை மருத்துவ பல்கலைகளும், யு.ஜி.சி., யின் விதிகளை பின்பற்ற வேண்டும். இந்த பல்கலைகள், அந்தந்த மாநில பொது கவுன்சிலிங்கில் பங்கேற்க வேண்டும். பொது கவுன்சிலிங் நடத்தப்படாவிட்டால், 'நீட்' தேர்வு அடிப்படை யில் தான், மாணவர்களை சேர்க்க வேண்டும்; அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு, 'அட்மிஷன்' மறுக்கப்பட்டால், பல்கலை மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

பி.எட்., கல்லூரி சேர்க்கை செப்., 30 வரை அவகாசம்

சென்னை: பி.எட்., கல்லுாரிகளில், மாணவர்களை சேர்க்க, கூடுதலாக, 10 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை கட்டுப்பாட்டில், ஏழு அரசு கல்லுாரிகள், 14 அரசு உதவிபெறும் கல்லுாரிகள் உள்ளன. மாணவர் சேர்க்கையை, செப்., 16ல் முடிக்க, தனியார் கல்லுாரிகளுக்கு, ஆசிரியர் கல்வியியல் பல்கலை உத்தரவிட்டது.

'சேர்க்கையை திடீரென நிறுத்துவதால், பல ஆயிரம் இடங்கள் காலியாகும்' என, கல்லுாரிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதுகுறித்து, நமது நாளிதழில் செய்தி வெளியானது. உயர் கல்வி அதிகாரி கள் அவசர ஆலோசனை நடத்தி, தனியார் கல்லுாரிகளின் மாணவர் சேர்க்கைக்கு, வரும், 30ம் தேதி வரை கூடுதல் அவகாசம் அளித்துள்ளனர்.'செப்., 30க்கு பின், மாணவர்களை சேர்த்தால், அதற்கு அங்கீகாரம் கிடைக்காது' என, பல்கலை பதிவாளர் தெரிவித்து உள்ளார்.

அரசு உதவி பள்ளிகளில் 3,000 உபரி ஆசிரியர்கள்

அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில், 3,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உபரியாக உள்ளனர். தமிழகத்தில் உள்ள, 45 ஆயிரம் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், 31 ஆயிரம் பள்ளிகள், அரசின் கட்டுப்பாட்டில் செயல்படுகின்றன; 6,500 பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள்; மற்றவை தனியார் பள்ளிகள். இதில், அரசு உதவி பெறும் பள்ளிகளில் மட்டும், 11.50 லட்சம் மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இவர்களுக்கு, 36 ஆயிரம் ஆசிரியர்கள் உள்ளனர். ஆனால், மத்திய அரசின் சட்டப்படி, 35 மாணவர்களுக்கு, ஒரு ஆசிரியர் வீதம், 33 ஆயிரம் ஆசிரியர்கள் மட்டுமே பணியில் இருக்க வேண்டும்.
கிட்டத்தட்ட, 3,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் கூடுதலாக பணியாற்றுகின்றனர். அதிலும், குறிப்பிட்ட சில மாவட்ட பள்ளிகளில் மட்டும், இத்தகையை ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகம். அதேநேரத்தில், பல மாவட்டங்களில் உள்ள, அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை உள்ளது.
எனவே, தொடக்கக் கல்வித் துறை அதிகாரிகள், இந்த பள்ளிகளை ஆய்வு செய்து, கூடுதல் ஆசிரியர்களை, தேவைப்படும் மாவட்டங்களுக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

அரசு பள்ளிகளின் கல்வித்தரத்தை உயர்த்த வியூகம்!

மாநில கல்வி இயக்குனரின்,&'ரகசிய கண்காணிப்பு குழு&' அமைக்கும் அறிவிப்பால், ஓபி அடிக்கும் ஆசிரியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். சமவெளி பிரதேசங்களை ஒப்பிடுகையில், நீலகிரியில் உள்ள ஊராட்சி ஒன்றிய, அரசுப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைவு. குறிப்பாக, ஊரகப் பகுதிகளில் செயல்படும் பல ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளில், சொற்ப அளவிலான ஆசிரியர்களே உள்ளனர்.


ஓபி அடிக்கும் ஆசிரியர்கள்

பள்ளிகள் மற்றும் மாணவர்களின் மீது தனி அக்கறை, ஆர்வம், நேரம் கருதாமல் பணியாற்றுவது போன்ற சேவை மனப்பான்மை கொண்ட தலைமையாசிரியர், ஆசிரியர்களால் மட்டுமே, சில ஊராட்சிப் பள்ளிகள் &'பெயர் சொல்லும்&' பள்ளிகளாக உள்ளன. ஆனால், பெரும்பாலான பள்ளிகளில் கணக்கு காண்பிக்கவே, ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வந்து செல்கின்றனர்; வெறுமனே &'ஓபி&' அடித்தும் செல்கின்றனர்.ஊராட்சி ஒன்றிய, அரசு, உதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவியரின் கல்வித் தரம், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்களின் நடவடிக்கைகளை கண்காணிக்கும் பணிகளை உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களே செய்து வரும் நிலையில், அவர்களதுசெயல்பாடுகளிலும் திருப்தியில்லை என்ற புகார், அரசின் கவனத்துக்கு சென்றிருக்கிறது.

வருகிறது கண்காணிப்பு குழு

இதன் விளைவாக, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள், உதவி, கூடுதல் தொடக்கக் கல்வி அலுவலர்கள், நர்சரி தொடக்கக் கல்வி அலுவலர்கள், ஆசிரியப் பயிற்றுனர்களை உள்ளடக்கி குழு அமைக்க, தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.ஒரு குழுவில், இரு உறுப்பினர்கள் உள்ளவாறு பிரித்துக் கொண்டு, முன்னறிவிப்பின்றி, பள்ளிகளை பார்வையிட வேண்டும். தொடர்ந்து புகாருக்கு உள்ளாகும் பள்ளிகள், கல்வித் தரத்தில்பின்தங்கிய பள்ளிகளை கண்காணிப்பதில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என, உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

பணிகள் வரையறை

ஆசிரியர்கள், குறித்த நேரத்திற்கு வந்து, பணி நேரம் முழுக்க பள்ளிகளில் உள்ளனரா என்பதை உறுதி செய்ய வேண்டும். தமிழ், ஆங்கில வாசிப்பு, எழுதும் திறன், கணித அடிப்படை செயல்பாடுகளில் மாணவர்களின் முன்னேற்றம் குறித்து சோதித்தறிய வேண்டும். குறிப்பாக, 6, 8 படிக்கும் மாணவ, மாணவியரின் தமிழ், ஆங்கில, கணக்குப் புலமையை பரிசோதிக்க வேண்டும்.

பள்ளி நுாலக செயல்பாடுகளை கண்காணித்து, மாணவர்களை, துணைப்பாட புத்தகங்களை வாசிக்கச் செய்ய வேண்டும். மாணவர்களுக்கு புத்தகம், நோட்டுப்புத்தகம், காலனி, புத்தகப்பை, கிரையான், கலர் பென்சில், கணக்கு உபகரணப் பெட்டி,கம்பளிச் சட்டை, பஸ் பாஸ் போன்றவை வழங்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்த வேண்டும்.பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள கற்றல், கற்பித்தல் உபகரணங்கள், ஆங்கில உச்சரிப்பு சார்ந்த சிடிக்கள், லேப்டாப் மற்றும் கணக்கு உபகரணப் பெட்டி போன்றவை, முறையாக பயன்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும்.

பள்ளியில் உள்ள கழிப்பறை, தண்ணீர் வசதி; மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு, பராமரிப்பு உள்ளதா என, உறுதி செய்ய வேண்டும் என்பன, போன்ற பணிகள் வரையறுக்கப்பட்டுள்ளன.ஆய்வில் குறை தென்பட்டால், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரின்மூலம், எஸ்.எஸ்.ஏ., முதன்மைக் கல்வி அலுவலரின் கவனத்துக்கு கொண்டு சென்று, நிவர்த்தி செய்ய வேண்டும் எனவும், கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவு மூலம், துவக்கப் பள்ளிகளின் கல்வித் தரம் உயருமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் தஞ்சை, மதுரை, வேலூர், சேலம் நகரங்கள் சேர்ப்பு !

 மூன்றாவது கட்ட ஸ்மார்ட் சிட்டி பட்டியலுக்கு தஞ்சை, மதுரை, வேலூர், சேலம் உள்ளிட்ட நான்கு நகரங்கள் தமிழகத்திலிருந்து தேர்வாகியுள்ளன.
.
பிரதமர் மோடி நாடு முழுவதும் ‘100 ஸ்மார்ட் சிட்டி’க்களை உருவாக்க திட்டமிட்டுள்ளார். நாடு முழுவதுமிருந்து ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள நகரங்களில் உலகத்தரத்திற்கு இணையான உள்கட்டமைப்பு வசதிகள் செய்து தரப்படும். இதற்காக அடுத்த 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசு ரூ.3 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ஏற்கனவே இரண்டு கட்டமாக நாடு முழுவதுமிருந்து 33 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் 3-வது கட்ட ஸ்மார்ட் சிட்டி பட்டியலை நகர்ப்புற மேம்பாட்டு துறை மந்திரி வெங்கையா நாயுடு இன்று வெளியிட்டார்.
இந்த பட்டியல் குறித்து மந்திரி வெங்கையா நாயுடு கூறுகையில் ''3-வது ஸ்மார்ட் சிட்டி பட்டியலுக்கு இந்தியா முழுவதுமிருந்து 63 நகரங்கள் போட்டியிட்டதில் 27 நகரங்கள் தேர்வாகியுள்ளன.
தமிழகத்திலிருந்து வேலூர், மதுரை, சேலம், தஞ்சாவூர் ஆகிய நான்கு நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. 27 நகரங்களை ஸ்மார்ட் சிட்டியாக மாற்ற ரூ.66,833 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது'' என்றார்.
தானே, நாசிக், நாக்பூர், அவுரங்காபாத், ஆக்ரா, அஜ்மீர், அமிர்தசரஸ், மங்களூர், வதோதரா, வாரணாசி, திருப்பதி, மங்களூர், அமிர்தசரஸ் நகரங்களும் ஸ்மார்ட் சிட்டி பட்டியலுக்கு தேர்வாகியுள்ளன.

50 நாட்களில் 6 ஆசிரியர்கள் 'சஸ்பெண்ட்' :தொடக்க கல்வி அலுவலர் நடவடிக்கை

தேனி மாவட்டதொடக்க கல்வி அலுவலர் மொக்கத்துரை, தான் பொறுப்பேற்ற, 50 நாட்களில் புகாரில் சிக்கிய, ஆறு ஆசிரியர்களை, 'சஸ்பெண்ட்' செய்துள்ளார். மேலும் பலருக்கு 'மெமோ' வழங்கியுள்ள இவரின் நடவடிக்கையால் ஆசிரியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.


தேனி மாவட்ட தொடக்க கல்வி அலுவலராக மொக்கத்துரை ஆக., 2ல் பொறுப்பேற்றார். பள்ளிகளுக்கு திடீர்,'விசிட்' செய்வது; ஆசிரியர்கள் குறித்து வரும் புகார்கள் மீது விசாரித்து, 'மெமோ' கொடுப்பது; பாலியல் புகாருக்கு உட்பட்டவர்களை உடனே, 'சஸ்பெண்ட்' செய்வது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

உரிய நேரத்தில் பள்ளிக்கு வராத மேலப்பட்டி ஆசிரியர் ராஜேந்திரன், ஆண்டிபட்டி குமரகுருபரன், கம்பத்தை சேர்ந்த ராஜன்; பாலியல் புகாரில், ஜி.கல்லுப்பட்டி லாசர், கடமலைக்குண்டு கோகுல்பாண்டியன் மற்றும் ரவீந்திரன் என, ஆறு ஆசிரியர்கள் இவரால்,'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர். இது தவிர ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்காக, 13 ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு, 'மெமோ' அனுப்பி உள்ளார்.

அங்கீகாரம் பெறாத 746 பள்ளிகளை மூடக் கோரிய வழக்கு: பள்ளிக்கல்வித் துறையின் முதன்மை செயலர் ஆஜராக உத்தரவு.

அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் 746 பள்ளிகளை மூடக் கோரிய வழக்கில், பள்ளிக் கல்வித் துறை முதன்மை செயலர் நேரில் ஆஜராகுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இதுதொடர்பாக "மாற்றம் இந்தியா' அமைப்பின் இயக்குநர் ஏ.நாராயணன் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
தமிழகத்தில் உள்ள 746 பள்ளிகள் அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச விதிமுறைகளைக் கூட கடைபிடிக்காத நிலையில், 2004-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் தாற்காலிக அங்கீகாரத்தை பள்ளிக் கல்வித்துறை வழங்கி வருகிறது.இதுதொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, மே 31-ஆம் தேதி வரை ஒரே ஒரு முறை என்ற அடிப்படையில் தாற்காலிக அங்கீகாரம்வழங்கப்பட்டுள்ளது என்றும், இனி நிலம் உள்ளிட்ட விதிமுறைகளை பூர்த்தி செய்யாத பள்ளிகளுக்கு அங்கீகாரம் நீட்டிக்கப்படாது என்றும் தமிழக அரசு தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.இந்த நிலையில், தகுதிகளை பூர்த்தி செய்யாமல் உள்ள பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட தாற்காலிக அங்கீகாரத்தை நீட்டிக்காமல் மூடுவதற்கு உத்தரவிட வேண்டும். இந்தப் பள்ளிகள் குறித்து மக்களுக்கு தெரியபடுத்த வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.கே.கௌல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு முன்பு நடைபெற்று வருகிறது.இந்த நிலையில், மீண்டும் அதே அமர்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது பள்ளிக்கல்வித் துறை இணைச் செயலர் கே.ரவிசந்திரன் தாக்கல் செய்த பதில் மனுவில், "சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெற்றதால், இந்த விவகாரத்தில் நிபுணர் குழு அளித்த பரிந்துரைகள் மீது இறுதி முடிவு எடுக்க முடியவில்லை. இறுதி முடிவு எடுக்க மேலும் 2 மாதம் கால அவகாசம் வேண்டும்' என்று தெரிவித்திருந்தார்.

பின்னர்இரு தரப்பு வாதங்களை அடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:-வழக்கில் இதுவரை ஒரு முடிவு எட்டப்படாமல் தொடர்கிறது.அரசு சார்பில் கோரியதால், அக்டோபர் 31-ஆம் தேதி வரை இறுதி கால அவகாசம் அளிக்கப்படுகிறது.அடுத்த விசாரணையின்போது, எடுக்கப்பட்ட நடவடிக்கையை உரிய ஆவணங்களுடன் பள்ளிக்கல்வித் துறையின் முதன்மை செயலாளர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்றனர்.இதையடுத்து, வழக்கின் விசாரணையை நவம்பர் 7-க்கு ஒத்தி வைத்திவைக்கப்பட்டது.

அரசு உதவிபெறும் கல்லூரிகளில் 2,500 பேராசிரியர் இடங்கள் காலி.

அரசு உதவிபெறும் கல்லுாரிகளில், 2,500 பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், பாடம் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டு, வகுப்புகள் முடங்கி உள்ளன. தமிழகத்தில், 80 அரசு கல்லுாரிகளும், 162 அரசு உதவிபெறும் கல்லுாரிகளும், 1,178 சுயநிதி கல்லுாரிகளும் உள்ளன. இவற்றில், இரண்டு லட்சம் பேர் படிக்கின்றனர். 
அரசு உதவிபெறும் கல்லுாரிகளில், 2,500 பேராசிரியர் பணியிடங்கள், இரு ஆண்டுகளுக்கும் மேலாக காலியாக உள்ளன.அரசியல்வாதிகள், உயரதிகாரிகளின் தலையீடுகளால், நேர்மையாக இந்த இடங்களை நிரப்ப முடியவில்லை என, கல்லுாரிகள் தரப்பில் கூறப்படுகின்றன. இதனால், பல கல்லுாரிகளில், பாடம் நடத்த ஆளின்றி வகுப்புகள் முடங்கி, மாணவர்கள் நேரத்தை வீணடிக்கும் நிலை உள்ளது. எனவே, தமிழக உயர் கல்வித் துறை தாமதிக்காமல், பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து, 'நெட், செட்' சங்க தலைவர் தங்கமுனியாண்டி கூறியதாவது: ஒவ்வொரு கல்லுாரியும், அந்தந்த மாவட்டங்களில் அறிவிப்பு செய்து, அந்த மாவட்டத்தைச் சேர்ந்தவரை, பேராசிரியர் பதவியில் நியமிக்க வேண்டும்.பல லட்சம் பேராசிரியர்கள், வேலைவாய்ப்புக்கு பதிவு செய்து காத்திருக்கின்றனர்; அவர்களின் பதிவு மூப்பு அடிப்படையில், பேராசிரியர்களை நேரடி நியமனம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தனியார் பள்ளி துவங்க தடை : அமைச்சரிடம் ஆசிரியர்கள் மனு.

அனைத்து அரசு பள்ளிகளிலும், 'வை - பை' வசதியுடன் கணினி வகுப்புகள் துவங்கப்பட வேண்டும்' என, பள்ளிக் கல்வி அமைச்சர் பாண்டியராஜனிடம், தலைமை ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்சங்கத்தின் சார்பில், அதன் தலைவர், சாமி.சத்தியமூர்த்தி மற்றும் நிர்வாகிகள், நேற்று அமைச்சரை சந்தித்து, மனு அளித்தனர்.மனு விபரம்:

 தமிழக மாணவர்கள், உயர்கல்வியில் அனைத்து வாய்ப்புகளையும் பெற, ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையில், சி.பி.எஸ்.இ.,க்கு இணையான பாடத்திட்டம் கொண்டுவர வேண்டும். அனைத்து மாவட்ட அரசு பள்ளிகளிலும், வகுப்புகள் முறையாக நடக்கிறதா என்பதை, தனி அதிகாரிகள்நியமித்து, கண்காணிக்க வேண்டும். அரசு நலத்திட்ட பணிகளில், ஆசிரியர்கள் அதிக நேரம் செலவிடுவதால், கற்பித்தல் பணிகள் பாதிக்கின்றன. எனவே, 10 பள்ளிகளுக்கு, ஒரு தொடர்பு அலுவலர் நியமித்து, நலத் திட்ட பணிகளை ஒப்படைக்க வேண்டும். இரண்டு ஆண்டுகளாக நிலுவையில் உள்ள, 4,250 ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். கணினி வசதி இல்லாத பள்ளிகளை கண்டறிந்து, வை - பை வசதியுடன் கூடிய கணினி மற்றும் இணையதள வகுப்புகள் துவங்க வேண்டும். அரசு பள்ளிகளை சிறப்பாக செயல்பட வைப்பதுடன், வருங்காலத்தில் புதிதாகதனியார் பள்ளிகள் துவங்க அனுமதிக்கக் கூடாது. இவ்வாறுமனுவில் கூறப்பட்டுள்ளது.

7வது சம்பள கமிஷனில் 'கிராஜுவிட்டி' இரட்டிப்பு.. 10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்வு..!

7வது சம்பள கமிஷனின் பரிந்துறைப்படி தொழிலாளர் கிராஜுவிட்டி ரூ.10 லட்சத்தில் இருந்து 20 லட்சம் ரூபாயாக அரசு உயர்த்தியுள்ளது. இது அரசு ஊழியர்களுக்கு ஒரு இனிப்பான செய்தியாகும்.இது நாம் இந்த கிராஜுவிட்டி மூலம் பெற இருக்கும் தொகையை எங்கு முதலீடு செய்து என்பதைப் பார்க்கும் முன்பு கிராஜுவிட்டி என்றால் என்ன? என்று பார்ப்போம்.
கிராஜுவிட்டி என்றால் ஊழியர்கள் ஒரு நிறுவனத்தில் பணியாற்றிய சேவையைப் பாராட்டும் வகையில் அந்நிறுவனத்தால் பணி ஓய்வின் போது அளிப்பதாகும். ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஏதேனும் காரணங்களுக்காக பணி ஓய்வு பெறலாம். அப்போது அந்த ஊழியர் ஐந்து வருடங்கள் அல்லது அதற்கு மேலாகப் பணி புரிந்திருந்தால் வருமான வரி சட்டத்தின் படி நிறுவனம் கிராஜுவிட்டி அளிக்க வேண்டும்.அரசுத் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்குப் பணி ஓய்வின் போது அல்லது பணியில் இருக்கும் போதே காலமான போது ஊழியர்களுக்கு அவரின் பணியை பாராட்டும் விதமாகஒரு ஒட்டுமொத்த தொகையை கிராஜூவிட்டியாக வழங்கப்படும்.இதுவரை பணி செய்த மொத்த ஆண்டிற்கும் அரை மாத ஊதியம் விதம் எனக் குறைந்தபட்சம் இரண்டரை மாத ஊதியம் முதல் அதிகபட்சமாக பதினாறரை மாத ஊதியம் கிராஜுவிட்டியாக வழங்கப்படும்.

இந்த கிராஜுவிட்டி தொகையின் அதிகபட்ச வரம்பாக ரூ.10லட்சம் என்று இருந்தது. இப்போது 7வது சம்பள கமிஷனின் பரிந்துறைப்படி 20 லட்சம் ரூபாயாக மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

பணியில் சேர்ந்த ஓர் ஆண்டில் காலமான ஊழியர்களுக்குக் குறைந்தபட்ச பணிக்காலம் கணக்கிடப்படாமல் இரண்டு மாத சம்பளமும், ஒன்று முதல் ஐந்து ஆண்டிற்குள் இறந்தால் 6 மாத சம்பளமும், 5 முதல் 20 ஆண்டு பணி செய்து இறந்த ஊழியர்களுக்கு 12 மாத சம்பளமும், 20 வருடத்திற்கும் மேலாகப் பணியில் இருந்த ஊழியர்களுக்கு ஆண்டுக்கு அரை மாத சம்பளமும் கணக்கிடப்பட்டு கிராஜுவிட்டி வழங்க வேண்டும்.இப்போது 7வது சம்பள கமிஷனின் பரிந்துறைப்படி தொழிலாளர் கிராஜுவிட்டி ரூ.10 லட்சத்தில் இருந்து 20 லட்சம் ரூபாயாக அரசு உயர்த்தியுள்ள நிலையில் இந்தத் தொகையை எப்படி முதலீடு செய்து தொடர்ந்து வருமானம் பெறலாம் என்பதை நாம் இங்குப் பார்ப்போம்

B.Ed. படிப்பு: உயர்த்தப்பட்ட கட்டணம் – தவிக்கும் பெற்றோர்!

தனியார் கல்லூரிகளுக்கான பி.எட். படிப்புக்குப் புதிய கல்விக் கட்டணம் மிக அதிக அளவில் நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் மாணவர்களின் பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர். புதிய கட்டண நிர்ணயத்தால் மாணவர்கள் கடந்த ஆண்டு செலுத்தியதைவிட கூடுதல்கட்டணம் செலுத்த வேண்டும்.
பி.எட். கல்லூரிகளுக்கு, கடந்த 2014 - 15 வரை மூன்று கல்வி ஆண்டுகளுக்கும் நீதிபதி பாலசுப்பிரமணியன் குழு சார்பில் கல்விக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.ஆனால், இப்போது இந்தக் கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி பி.எட். படிப்புக்கு, ரூபாய் 37,500 ஆகவும், பி.ஏ. - பி.எட். நான்கு ஆண்டு ஒருங்கிணைந்த படிப்புக்கு ரூபாய் 22,500 ஆகவும், பி.எஸ்சி. - பி.எட். நான்கு ஆண்டு ஒருங்கிணைந்த படிப்புக்கு ரூபாய் 25,000 ஆகவும் மற்றும் எம்.எட். படிப்புக்கு ரூபாய் 38,000 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இவை அனைத்தும் ஓர் ஆண்டுகான கல்விக்கட்டணம். மேலும், கடந்த 2015ஆம் ஆண்டுக்கு முன், பி.எட். படிப்புக்கு ரூபாய் 41,500 ஆக கல்விக் கட்டணம் இருந்தது. அப்போது பி.எட். படிப்பு ஓராண்டாக இருந்தது. எனவே, அந்தக் கட்டணத்தில் படிப்பை முடித்து விடலாம். ஆனால், இப்போது பி.எட். படிப்பு, இரண்டாண்டு படிப்பாக மாற்றப்பட்டுள்ளது.இதனால், 2015 – 16ஆம் ஆண்டு பி.எட். படிப்பில் சேர்ந்தவர்கள் முதலாம் ஆண்டு ரூபாய் 41,500 செலுத்தி உள்ளனர். இந்த ஆண்டு, ரூபாய் 37,500 செலுத்த வேண்டும். இரண்டு ஆண்டு படிப்புக்கு மொத்தமாக ரூபாய் 79,000 செலவிடும் நிலை ஏற்ப்பட்டுள்ளது. மேலும், இந்த ஆண்டு பி.எட். படிப்பில் சேர்பவர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கும் சேர்த்து, ரூபாய் 75,000 செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர, விடுதிக் கட்டணம் தனி என்பதால்ஏழை மாணவ, மாணவிகள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இதுகுறித்து, அரசும் உயர் கல்வித்துறையும் மறுபரீசிலனை செய்ய வேண்டும் என்று மாணவர்களும் பெற்றோரும் எதிர்பார்க்கின்றனர்.

ஊரக உள்ளாட்சி தேர்தல் இரு கட்டமாக நடக்குமா?

வாக்காளர்களுக்கு ஏற்படும் குழப்பத்தை தவிர்க்க, ஊரக உள்ளாட்சி தேர்தலை, இரு கட்டங்களாக நடத்த வேண்டும்' என்ற, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.தமிழகத்தில், அடுத்த மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. ஊரகம், நகர்ப்புறம் என, இரண்டு வகையான உள்ளாட்சி அமைப்பு கள் செயல்படுகின்றன.
ஊரக உள்ளாட்சியில், ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் உள்ளிட்ட பதவிகளுக்கு நேரடி தேர்தல் நடக்கிறது. வாக்காளர்கள் நான்கு ஓட்டுகளை அளித்து, பிரதிநிதிகளை தேர்வுசெய்ய வேண்டும். நகர்ப்புற உள்ளாட்சிகளில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி கவுன்சிலர் பதவிகளுக்கு நேரடி தேர்தல் நடக்கிறது. நகர்ப்புற வாக்காளர்கள், ஒரு ஓட்டு போட்டால் போதும் என்பதால், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில்,ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. ஊரக உள்ளாட்சி தேர்தலில், ஓட்டு சீட்டுகள் பயன்படுத்தப்படும். மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு மட்டுமே, கட்சி ரீதியான தேர்தல் நடக்கும். ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு, சுயேச்சை சின்னங்கள் தான். நான்கு ஓட்டுகளை பதிவு செய்யும் போது, வாக்காளர்களுக்கு குழப்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதைத் தவிர்க்க, ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தலை ஒரு நாளும், ஒன்றிய கவுன்சிலர், மாவட்டகவுன்சிலர் பதவிகளுக் கான தேர்தலை மற்றொரு நாளும் நடத்த வேண்டும் என, சுயேச்சை வேட்பாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இதுகுறித்து, தேர்தலில் போட்டியிட உள்ள சுயேச்சை ஒருவர் கூறியதாவது: உள்ளாட்சி தேர்தலை நடத்த, 183 கோடி ரூபாயை அரசுஒதுக்கி உள்ளது. மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர்களுக்கான நேரடி தேர்தல் ரத்தால், அரசு ஒதுக்கிய நிதி மிச்சமாகும். எஞ்சிய நிதியை பயன்படுத்தி, ஊரக உள்ளாட்சி தேர்தலை இரண்டு கட்டமாக நடத்த வேண்டும்; அப்படி செய்தால், சின்னங்கள் தொடர்பான குழப்பம் குறையும். இவ்வாறு அவர் கூறினார்

’பார்கோடு’ முறை; மாணவர்கள் அதிர்ச்சி!

ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கு பார்கோடு விடைத்தாள் வழங்குவது குறித்த ஆலோசனையை தேர்வுத்துறை துவக்கி உள்ளது.பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வை, ஒவ்வொரு ஆண்டும், 18 லட்சம் மாணவர்கள் எதிர்கொள்கின்றனர். 
ஒரு மதிப்பெண் வினாக்கள் திருத்தும் போது, தவறுகள் ஏற்படுவதாக மாணவர், பெற்றோர் குற்றச்சாட்டுகளை முன் வைத்ததால், பிளஸ் 2 பொதுத்தேர்வு கணிணி அறிவியல் வினாத்தாளின் ஒரு மதிப்பெண் வினாவுக்கு பார்கேடு சீட் வழங்கப்பட்டது.தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்கள் பார்கோடில் விடைகளை எழுத வேண்டும். இதனால், தவறாக எழுதினாலும், திருத்த முடியாத சூழல்ஏற்பட்டது.

இம்முறையில், விடைத்தாளை ஆசிரியர் திருத்த தேவையில்லை என்பதால், நேரம் விரயமாவது தவிர்க்கப்படுகிறது. இதனால், மற்றபாடங்களுக்கும், ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கு, பார்கோடு முறை கொண்டு வருவது குறித்தான, ஆலோசனையை தேர்வுத்துறை துவக்கியுள்ளது.நடப்பு கல்வியாண்டு, பொதுத் தேர்வில், இந்த நடைமுறை அமலுக்குவர உள்ளது. இதனால், பிளஸ் 2 தேர்வை எதிர்கொள்ள உள்ள மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அரசு பள்ளிகளின் கல்வித்தரத்தை உயர்த்த வியூகம்!

மாநில கல்வி இயக்குனரின்,&'ரகசிய கண்காணிப்பு குழு&' அமைக்கும் அறிவிப்பால், ஓபி அடிக்கும் ஆசிரியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். சமவெளி பிரதேசங்களை ஒப்பிடுகையில், நீலகிரியில் உள்ள ஊராட்சி ஒன்றிய, அரசுப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைவு. குறிப்பாக, ஊரகப் பகுதிகளில் செயல்படும் பல ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளில், சொற்ப அளவிலான ஆசிரியர்களே உள்ளனர்.
ஓபி அடிக்கும் ஆசிரியர்கள்

பள்ளிகள் மற்றும் மாணவர்களின் மீது தனி அக்கறை, ஆர்வம், நேரம் கருதாமல் பணியாற்றுவது போன்ற சேவை மனப்பான்மை கொண்ட தலைமையாசிரியர், ஆசிரியர்களால் மட்டுமே, சில ஊராட்சிப் பள்ளிகள் &'பெயர் சொல்லும்&' பள்ளிகளாக உள்ளன. ஆனால், பெரும்பாலான பள்ளிகளில் கணக்கு காண்பிக்கவே, ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வந்து செல்கின்றனர்; வெறுமனே &'ஓபி&' அடித்தும் செல்கின்றனர்.ஊராட்சி ஒன்றிய, அரசு, உதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவியரின் கல்வித் தரம், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்களின் நடவடிக்கைகளை கண்காணிக்கும் பணிகளை உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களே செய்து வரும் நிலையில், அவர்களதுசெயல்பாடுகளிலும் திருப்தியில்லை என்ற புகார், அரசின் கவனத்துக்கு சென்றிருக்கிறது.

வருகிறது கண்காணிப்பு குழு

இதன் விளைவாக, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள், உதவி, கூடுதல் தொடக்கக் கல்வி அலுவலர்கள், நர்சரி தொடக்கக் கல்வி அலுவலர்கள், ஆசிரியப் பயிற்றுனர்களை உள்ளடக்கி குழு அமைக்க, தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.ஒரு குழுவில், இரு உறுப்பினர்கள் உள்ளவாறு பிரித்துக் கொண்டு, முன்னறிவிப்பின்றி, பள்ளிகளை பார்வையிட வேண்டும். தொடர்ந்து புகாருக்கு உள்ளாகும் பள்ளிகள், கல்வித் தரத்தில்பின்தங்கிய பள்ளிகளை கண்காணிப்பதில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என, உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

பணிகள் வரையறை

ஆசிரியர்கள், குறித்த நேரத்திற்கு வந்து, பணி நேரம் முழுக்க பள்ளிகளில் உள்ளனரா என்பதை உறுதி செய்ய வேண்டும். தமிழ், ஆங்கில வாசிப்பு, எழுதும் திறன், கணித அடிப்படை செயல்பாடுகளில் மாணவர்களின் முன்னேற்றம் குறித்து சோதித்தறிய வேண்டும். குறிப்பாக, 6, 8 படிக்கும் மாணவ, மாணவியரின் தமிழ், ஆங்கில, கணக்குப் புலமையை பரிசோதிக்க வேண்டும்.பள்ளி நுாலக செயல்பாடுகளை கண்காணித்து, மாணவர்களை, துணைப்பாட புத்தகங்களை வாசிக்கச் செய்ய வேண்டும். மாணவர்களுக்கு புத்தகம், நோட்டுப்புத்தகம், காலனி, புத்தகப்பை, கிரையான், கலர் பென்சில், கணக்கு உபகரணப் பெட்டி,கம்பளிச் சட்டை, பஸ் பாஸ் போன்றவை வழங்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்த வேண்டும்.பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள கற்றல், கற்பித்தல் உபகரணங்கள், ஆங்கில உச்சரிப்பு சார்ந்த சிடிக்கள், லேப்டாப் மற்றும் கணக்கு உபகரணப் பெட்டி போன்றவை, முறையாக பயன்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும்.பள்ளியில் உள்ள கழிப்பறை, தண்ணீர் வசதி; மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு, பராமரிப்பு உள்ளதா என, உறுதி செய்ய வேண்டும் என்பன, போன்ற பணிகள் வரையறுக்கப்பட்டுள்ளன.ஆய்வில் குறை தென்பட்டால், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரின்மூலம், எஸ்.எஸ்.ஏ., முதன்மைக் கல்வி அலுவலரின் கவனத்துக்கு கொண்டு சென்று, நிவர்த்தி செய்ய வேண்டும் எனவும், கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவு மூலம், துவக்கப் பள்ளிகளின் கல்வித் தரம் உயருமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

விரிவுரையாளர் நியமனம் - மறுதேர்வு நடத்த முடிவு?

விரிவுரையாளர் தேர்வு வினாத்தாள், 'வாட்ஸ் ஆப்' வலைதளத்தில் வெளியானதால், மறுதேர்வு நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான, எஸ்.சி.இ.ஆர்.டி.,யில், ஆசிரியர் பயிற்சி வழங்க, 272 விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்; இதற்கான எழுத்துத்தேர்வு, 17ல் நடந்தது.
மதுரையில், ஒரு தேர்வு மையத்தில், ஆங்கில விரிவுரையாளர் பதவிக்கு தேர்வு எழுதிய, தேனியைச் சேர்ந்த பெண், வினாத்தாளை படம் பிடித்து, 'வாட்ஸ் ஆப் குரூப்'பில் அனுப்பியுள்ளார்; தேர்வு கண்காணிப்பாளரால், அவர் பிடிக்கப்பட்டார்.இதையடுத்து,ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் ராஜராஜேஸ்வரி மற்றும் எஸ்.சி.இ.ஆர்.டி., இணை இயக்குனர் குப்புசாமி ஆகியோர், மற்ற தேர்வு மையங்களில் இதுபோன்ற முறைகேடுகள் நடந்துள்ளதா என, விசாரித்து வருகின்றனர்.மற்ற இடங்களிலும் இதுபோன்ற முறைகேடுகள் நடந்திருந்தால், தேர்வை ரத்து செய்து விட்டு, மறுதேர்வு நடத்த முடிவு செய்துள்ளனர்.

டிசம்பர்-2016 துறை தேர்வுகள் அறிவிப்பு வெளியீடு : ஒரு நினைவூட்டல்.

பட்டதாாி மற்றும் முதுகலை பட்டதாாி ஆசிரியர்கள்

1.Account test for Executive officer(or)
2.Account test for Subordinate off part-Iமற்றும்
3.Tamil Nadu Office Manual


இடைநிலை ஆசிாியா்கள் மேற்கண்டவற்றுடன்

4) Deputy Ins Part-1
5) Deputy Ins Part-II
6) Educational Statistics
ஆகிய தேர்வுகள் எழுதவேண்டும்.

2016 - ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெறவிருக்கும் துறைத்தேர்வுகளுக்கு விண்ணப்பதாரர்களிடமிருந்து இணையதளம்  மூலமாக மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண் 447

அறிவிக்கை நாள் : 01.09.2016

விண்ணபிக்க கடைசி தேதி : 30.09.2016 நேரம் 5.45 பி.ப. வரை

தேர்வு தேதிகள் : 23.12.2016 முதல் 31.12.2016 வரை.

TNPSC:அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை - 7

1. காப்பி, தேநீரில் உள்ள ஊக்கம் தரும் பொருள் - காபின்
2. இதயத்திலிருந்து ரத்தத்தை வெளியே கொண்டு செல்லும் ரத்தக்குழாய்கள் - தமனிகள்
3. இரத்தத்தில் ஹீமோகுளோபின் உருவாக தேவைப்படுவது - இரும்பு
4. மாலுமிகளின் திசைக்காட்டியில் பயன்படுவது - காந்தமாக்கப்பட்ட இரும்பு

5. மிகப் பிரகாசமான கிரகம் - சுக்கிரன் (Venus)
6. நிக்கோடின் என்ற விஷப்பொருள் எதில் உள்ளது - புகையிலை
7. ஹீலியம் - உலோகமற்றப் பொருள்
8. கிட்டப்பார்வையை நிவர்த்தி செய்ய - குழி ஆடி பயன்படுத்தப்படுகிறது.
9. கண்ணுக்குள் செல்லும் ஒளி அளவை ஒழுங்குப்படுத்துவது - ஐரிஸ்
10. இடம் பெயர்தலை (Law of Motion) எத்தனை விதிகளில் நியூட்டன் தந்திருக்கிறார் - மூன்று விதிகளில்
11. ஸ்ட்ரெப்டோமைசினைக் கண்டுபிடித்தவர் - வாக்ஸ்மான்
12. திட கார்பன்-டை-ஆக்சைடு என்பது - உலர்ந்த ஐஸ்
13. பைசென்டினெரி என்பது - 200 ஆண்டு
14. பாம்பிற்கு காணப்படாதது - புற உறுப்புகள்
15. ஒரு குரோஸ் என்பது - 144 எண்ணிக்கை
16. திமிங்கலம் ஒரு - பாலூட்டி
17. டாலமைட் - மக்னீசியத்தின்  தாதுப்பொருள்
18. ஒலியைப் பரப்ப டேப்ரிகார்டரில் பயன்படுவது - மாக்னெடிக் நாடா
19. இரும்பு ஆணி எதில் மிதக்கிறது - பாதரசம்
20. கொய்னா எந்த மரத்திலிருந்து எடுக்கப்படுகிறது - சின்கோனா
21. காற்றில் தீப்பற்றக் கூடிய மூலகப் பொருள் - வெண்பாஸ்பரம்
22. எந்தச் செடி உணவை தண்டில் சேமிக்கிறது - இஞ்சி
23. வண்ணப்படுத்த பயன்படும் அமிலம் - அசிடிக் அமிலம்
24. பட்டுத் துணி எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது - ககூன்
25. இரு ஐஸ் கட்டிகள் ஒன்றோடொன்று அழுத்தப்படும் போது ஐஸில் - ஐஸின் உருகுநிலை அழுத்தம் மாறும்போது குறைகிறது.
26. வீட்டில் பயன்படுத்தப்படும் எலக்ட்ரிக் சக்தியை எப்படி கண்க்கிடப்படுதல் வேண்டும் - கிலோவாட் மணிக்கு
27. வெங்காயத்தில் உண்ணக்கூடிய பகுதி - வேர்
28. வைட்டமின் கண்டுபிடித்தவர் - பங்ஸ் (Funks)
29. உடலில் உஷ்ணம் காண கிளினிகல் தர்மா மீட்டரில் கண்க்கிடுவது - சென்டிகிரேட்
30. காயம் நீல நிறமாக இருக்க காரணம் - காற்றின் மூலக்கூறுகள் சூரிய ஒளியைப் பரப்புகின்றன.
31. நம் கண்கள் - நிறங்களுக்கு மிகவும் நுட்பமாக உணவூட்டத் தக்கது. - சிகப்பு
32. ஒலியின் வேகம் மிக நீளமுடையது - காற்றில்
33. ஒரு லிட்டர் என்பது - 1000 மி.லி
34. ஹார்டுவேர் என்பது - கம்ப்யூட்டருடன் தொடர்புடையது
35. B.C.G எதனைத் தடுக்க உதவுகிறது - காசநோய்
36. மணலின் ரசாயனப் பெயர் - சிலிகன்-டை-ஆக்ஸைட்
37. சோனார் - நீர்மூழ்கிக் கப்பலைக் கண்டறிய பயன்படுகிறது.
38. உடல் வளர்ச்சிக்கு அதிக சக்தியை தருவது - புரதம்
39. பூச்சிகளைத் தின்னும் தாவரம் - ட்ரோசரா
40. பாலூட்டும் பிராணி எது - வெளவால்
41. இசைகள் பசுமையாக இருக்க காரணம் - பச்சையம்
42. வயிற்றில் சுரக்கும் இரப்பை நீரில் அடங்கியது - அமிலம்
43. வளிமண்டல தோற்றத்தைப் பற்றி அறிந்துகொள்ள உதவும் அறிவியலின் பிரிவு - வானிலை ஆராய்ச்சி
44. நரம்பியலைப் பற்றி அறிந்துகொள்ள உதவும் அறிவியல் பிரிவு - நியூராலஜி
45. மிக எளிதில் பற்றாத வாயு - நைட்ரஜன்
46. நிக்ரோமிலும் ஜெர்மன் வெள்ளியிலும் பொதுவாக உள்ள மூலப்பொருள் - குரோமியம்
47. மந்த வாயுக்களை கண்டுபிடித்தவர் - ராம்சே
48. மனித உடலின் சராசரி வெப்பநிலை - 36.9 சி
49. உடல் வெப்பநிலை எதனால் சரி செய்யப்படுகிறது - மூளையின் ஒரு பகுதி.
50. வெடி மருந்தைக் கண்டுபிடித்தவர் - நோபல்

நீங்களும் வங்கி அதிகாரி ஆகலாம், கிராம வங்கிகளில் 16,615 காலிப் பணியிடங்கள்

தற்போது அரசு வங்கிகள், எழுத்தர், அதிகாரி பணியிடங்களுக்குத் தேவைப்படும் பணியாளர்களைப் போட்டிபோட்டுக்கொண்டு தேர்வுசெய்து வருகின்றன. நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி நீங்கலாக மற்ற அனைத்துப் பொதுத்துறை வங்கிகளுக்கும் தேவைப்படும் பணியாளர்களும் அலுவலர்களும் வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம் (Institute of Banking Personnel Selection-IBPS) என்ற தேர்வாணையம் நடத்துகின்ற போட்டித் தேர்வு மூலமாகவே தேர்வு செய்யப்படுகிறார்கள்.
அதேபோல், நாடு முழுவதும் இயங்கி வரும் மண்டலக் கிராம வங்கிகளுக்கான (Regional Rural Banks) பணியாளர்களும் ஐ.பி.பி.எஸ். தேர்வு மூலமாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். தமிழகத்தில் பாண்டியன் கிராம வங்கி, பல்லவன் கிராம வங்கி, புதுச்சேரியில் புதுவை பாரதியார் கிராம வங்கி ஆகியவைகிராம வங்கிகளாகச் செயல்படுகின்றன. கிராமப்புற மக்களின் மேம்பாட்டுக்காக தொடங்கப்பட்டவை இவை. இந்த நிலையில், தற்போது நாடு முழுவதும் உள்ள கிராம வங்கிகளில் அலுவலக உதவியாளர், அதிகாரி, சிறப்பு அதிகாரி நிலைகளில் 16,615 காலிப்பணியிடங்கள் போட்டித்தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.

தேவையான தகுதி

இதற்காக நடத்தப்படும் போட்டித்தேர்வில் முதல்நிலைத்தேர்வு, மெயின் தேர்வு (அதிகாரி பணிக்கு மட்டும் கூடுதலாக நேர்முகத்தேர்வு) என இரு தேர்வுகள்இடம்பெற்றிருக்கும். அலுவலக உதவியாளர் பணிக்கு ஏதேனும் ஒரு பாடத்தில் பட்டம் பெற்றிருந்தால் போதும். அடிப்படைக் கணினி அறிவு இருப்பது விரும்பத்தக்க தகுதி ஆகும். வயது 18 முதல் 28-க்குள்இருக்க வேண்டும். அதிகாரி நிலையிலான பணிகளில் பொதுவான பதவிகளைப் பொருத்தவரையில், பட்டப் படிப்புதான் கல்வித் தகுதி என்ற போதிலும் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண் அவசியம்.தொழில்நுட்பப் பதவிகளான சிறப்பு அதிகாரி பணிகளுக்குப் பணியின் தன்மைக்கேற்பக் கல்வித் தகுதி மாறுபடும். வயது 21 முதல் 40-க்குள் இருக்க வேண்டும். ஒரு சில பணிகளுக்கு வயது வரம்பு 30 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இடஒதுக்கீட்டு விதிமுறைகளின்படி, வயது வரம்பில் எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.

என்ன செய்யலாம்?

உரிய கல்வித்தகுதியும் வயது வரம்புத் தகுதியும் கொண்ட பட்டதாரிகள் ஐ.பி.பி.எஸ். இணையதளத்தைப் (www.ibps.in) பயன்படுத்தி செப்டம்பர் 30-க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் வழியிலான முதல்நிலைத் தேர்வு நவம்பர் மாதத்தில் நடைபெறவுள்ளது. இதற்கான ஹால் டிக்கெட்டை அதிகாரி நிலையிலான தேர்வுக்கு அக்டோபர் மாதத்திலும், அலுவலக உதவியாளர் தேர்வுக்கு நவம்பர் மாதத்திலும் ஐ.பி.பி.எஸ். இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். தேர்வு முறை, பாடத்திட்டம், எந்தெந்த கிராம வங்கிகளில் எவ்வளவு காலியிடங்கள் என்ற விவரம் போன்றவற்றை ஐ.பி.பி.எஸ். இணையதளத்தில் விளக்கமாகத் தெரிந்துகொள்ளலாம்.

சென்டிரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு.

பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான சென்டிரல் பேங்க் ஆப் இந்தியாவில் நிரப்பப்பட உள்ள 61 ஸ்பெஷலிஸ்ட் அதிகாரி தரத்திலான கிரெடிட் ஆபீசர், மற்றும் ரிஸ்க் மேனேஜர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வயதுவரம்பு: 30.09.2016 தேதியின்படி 20 - 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: கிரெடிட் ஆபீசர் பணிக்கும் விண்ணப்பிப்பவர்கள் நிதியியல் துறையில் எம்.பி.ஏ. படிப்புடன் நிதி சார்ந்த டிப்ளமோ மற்றும் சி.ஏ.முடித்திருக்க வேண்டும். பொறியியல் துறையில் பி.டெக், எம்.சி.ஏ, எம்.பி.ஏ.(நிதி), எம்.எஸ்சி. கணிதம், எம்.எஸ்சி. புள்ளியியல் முடித்தவர்கள் ரிஸ்க் மேலாளர் பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. மற்ற அனைத்து பிரிவினருக்கு ரூ.50.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் www:centralbankofindia.co.in  என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.09.2016
ஆன்லைன் தேர்வு நடைபெறும் தேதி: உத்தேசிக்கமாக 04.11.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www:centralbankofindia.co.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

20/9/16

B.Ed, படிப்பு: புதிய கட்டணம் நிர்ணயம்

தனியார் கல்லுாரிகளுக்கான, பி.எட்., படிப்புக்கு, புதிய கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டை விட, மாணவர்கள் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்.ஆசிரியர் கல்வியியல் கல்லுாரிகளுக்கு, 2014 - 15 வரை, மூன்று கல்வி ஆண்டுகளுக்கு, நீதிபதி பாலசுப்பிரமணியன் கமிட்டி சார்பில், புதிய கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.
தற்போது, இந்தக் கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.பி.எட்., படிப்புக்கு, 37 ஆயிரத்து, 500 ரூபாய்; பி.ஏ.,- பி.எட்., நான்கு ஆண்டு ஒருங்கிணைந்த படிப்புக்கு, 22ஆயிரத்து, 500 ரூபாய்; பி.எஸ்சி., - பி.எட்., நான்கு ஆண்டு ஒருங்கிணைந்த படிப்புக்கு, 25 ஆயிரம் ரூபாய் மற்றும் எம்.எட்., படிப்புக்கு, 38 ஆயிரம் ரூபாய் என, புதிய கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது; இது, ஒரு ஆண்டுக்கான கட்டணம்.

கடந்த, 2015க்கு முன் வரை, பி.எட்., படிப்புக்கு, 41 ஆயிரத்து, 500 ரூபாய் கட்டணம் இருந்தது. அப்போது, பி.எட்., படிப்பு ஓராண்டாக இருந்ததால், இந்த கட்டணத்தில் படிப்பை முடித்து விடலாம். தற்போது, பி.எட்., படிப்பு, இரண்டு ஆண்டு படிப்பாக மாற்றப்பட்டுள்ளது.

அதனால், 2015 - 16ல், பி.எட்., படிப்பில் சேர்ந்தோர், முதலாம் ஆண்டில், 41 ஆயிரத்து, 500 ரூபாய் செலுத்தி உள்ளனர்; இந்த ஆண்டுக்கு, 37 ஆயிரத்து, 500 ரூபாய் என, இரண்டு ஆண்டு படிப்புக்கு, 79 ஆயிரம் ரூபாய் செலவிட வேண்டும். இந்த ஆண்டு, பி.எட்., படிப்பில் சேருபவர்களுக்கு, இரண்டு ஆண்டுகளுக்கும் சேர்த்து, 75 ஆயிரம் ரூபாய் செலவாகும்.

B.Ed.: செப். 30-க்கு பின்னர் சேர்க்கை நடத்த அனுமதி இல்லை

இளநிலை ஆசிரியர் கல்வியியல் பட்டப் படிப்பில் (பி.எட்.) அரசு ஒதுக்கீட்டு இடங்கள் சேர்க்கை வெள்ளிக்கிழமையோடு முடிவடைந்தது. இதையடுத்து, தனியார் கல்லூரிகளில் சேர்க்கையை செப். 30-க்கு பின்னர் அனுமதிக்க முடியாது என தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் 21 பி.எட். கல்லூரிகளில் இடம்பெற்றிருக்கும் 1,777 இடங்களுக்கு மட்டும், ஒற்றைச் சாளர கலந்தாய்வு மூலம் ஒவ்வொரு ஆண்டும் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. 650-க்கும் அதிகமான சுயநிதிக் கல்லூரிகளில் இடங்கள்முழுவதையும், அவர்களே நிரப்பிக் கொள்கின்றனர்.இந்த இரண்டு ஆண்டு படிப்பில் 2016-17ஆம் கல்வியாண்டு சேர்க்கை ஆகஸ்ட் மாதம் தொடங்கியது. அரசுசார்பில் நடத்தப்படும் ஒற்றைச் சாளர கலந்தாய்வு சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் ஆகஸ்ட் 22 முதல் ஆகஸ்ட் 30-ஆம் தேதி வரை 7 நாள்கள் நடத்தப்பட்டது.

இதில் மொத்தமுள்ள 1,777 இடங்களில் 1,314 இடங்கள் மட்டும் நிரம்பின. நிரப்பப்படாத 463 இடங்களுக்கான இரண்டாம் கட்டக் கலந்தாய்வு செப்டம்பர் 15, 16ஆம் தேதிகளில் நடத்தப்பட்டது. இதில் 300-க்கும் அதிகமான இடங்கள் நிரப்பப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.செப். 30 வரையே சேர்க்கை அனுமதி: ஒட்டுமொத்த பி.எட். சேர்க்கை நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அனைத்து பி.எட். கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கையை தமிழ்நாடு ஆசிரியர்கல்வியியல் பல்கலைக்கழகம் அனுப்பியுள்ளது.அதில், அரசுக் கலந்தாய்வு வெள்ளிக்கிழமையோடு முடிவடைந்ததைத் தொடர்ந்து, 2016-17ஆம் கல்வியாண்டுக்கான பி.எட். சேர்க்கை அன்றைய தினத்தோடுநிறைவு செய்யப்படுகிறது.

இதனால், கல்லூரிகள், பி.எட். படிப்பில் சேர்க்கப்பட்ட மாணவர்கள் குறித்த விவரங்களை செப்டம்பர் 30-க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அதன் பின்னர் சேர்க்கைநடத்த அனுமதிக்கப்படாது என்றும் தெரிவித்துள்ளது.இதன்படி, தனியார் பி.எட். கல்லூரிகள் 30-ஆம் தேதி வரை சேர்க்கை நடத்திகொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதார் எண் இன்றி பதிவு செய்வது எப்படி? 'கெடு'விதிப்பால் ஆசிரியர்கள் அதிருப்தி.

பள்ளிகளில், ஆதார் முகாமே இன்னும் முடிவடையாத நிலையில், 'நாளைக்குள் மாணவர்களின் ஆதார் எண்ணை பதிவுசெய்ய வேண்டும்' என, பள்ளிக்கல்வித் துறை, கெடு விதித்துள்ளது, ஆசிரியர்களை அதிருப்தி அடையச் செய்துள்ளது. 
மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை, இலவச திட்டங்கள், ஆண்டு இறுதி தேர்வுகள், சான்றிதழ் வழங்குதல் போன்றவற்றுக்கு ஆதார் எண்ணை பயன்படுத்த, மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

பள்ளிகளுக்கு...இதற்கு வசதியாக, மாணவர்களின் ஆதார் எண்ணை கணினியில் பதிவு செய்யுமாறு பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. மின்னணு கல்வி நிர்வாக மேலாண்மை திட்டமான, 'எமிஸ்' திட்டத்திற்கும், ஆதார் எண் பதியப்படுகிறது. 'அனைத்து மாணவர்களின் ஆதார் எண்களையும், நாளைக்குள் பதிவு செய்ய வேண்டும்' என, ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் கெடு விதித்துள்ளனர்.

20 லட்சத்துக்கும் மேலான மாணவர்களுக்கு, இன்னும் ஆதார் எண்ணே கிடைக்கவில்லை.இதற்காக, பள்ளிகளிலேயே ஆதார் முகாமிற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. ஆதார் எண் பணிகளை மேற்கொள்ளும் தனியார் நிறுவனத்தில் ஆள் பற்றாக்குறை உள்ளதால், பல பள்ளிகளில், உரிய நேரத்தில் முகாம்கள் நடத்தப்படவில்லை. பல இடங்களில், முகாம் நடத்துவோர் வராததால், பெற்றோரும், மாணவர்களும், பல மணிநேரம் காத்திருந்து, ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.

முரண்பாடு:இது குறித்து ஆசிரியர்கள் கூறுகையில், 'ஆதார் எண் வழங்கும் முகாமை முறையாக நடத்த சம்பந்தப்பட்ட துறைக்கு கெடு விதிக்க வேண்டும். ஆதார் எண் வழங்கிய பின் பதிவு செய்யும்படி, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு கெடு விதிக்கலாம். ஆதார் முகாம் நடத்த தாமதமாகும் நிலையில், எண்களை பதிவு செய்ய கெடு விதிப்பது முரண்பாடாக உள்ளது'என்றனர்.

வினாத்தாள் முன்பே வழங்கல் ஒப்புக்கு நடக்குதா தேர்வு?

மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி, எட்டாம் வகுப்பு வரை தேர்வே நடத்தாமல், 'ஆல் பாஸ்' திட்டம் நடைமுறையில் உள்ளது. சில பள்ளிகளில் மட்டும்பெயரளவில் பருவத்தேர்வு நடத்தப்படுகிறது. பருவத்தேர்வு வினாத்தாளை அந்தந்த பள்ளிகளே தயாரித்து கொள்கின்றன; சில இடங்களில், உதவி தொடக்கக் கல்வி அலுவலகங்கள் தயாரிக்கின்றன.
கோவை மாவட்டத்தில், சிறுவர் கலா மன்றத்தின் சார்பில்,முதலாம் பருவ தேர்வுக்கான ஐந்தாம் வகுப்பு வினாத்தாள் தயாரிக்கப்பட்டு, பள்ளிகளுக்கு வழங்கப்பட்டது. இந்த வினாத்தாள் தேர்வு நடக்கும் முன், விற்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு கலை ஆசிரியர் நலச் சங்க தலைவர் எஸ்.ஏ.ராஜ்குமார் கூறுகையில், ''வினாத்தாளை வெளியிட்டு தேர்வை நடத்தினால், மாணவர்களின் கல்வித்திறன் வெளியே தெரியாமல் போய்விடும். கடந்த ஆண்டும் இதுபோல தேர்வு நடந்தது. இனிமேலாவது, முறைப்படி வினாத்தாளை பாதுகாத்து தேர்வுகளை நடத்த வேண்டும்,'' என்றார்

TRB : ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வில் முறைகேடு: 'வாட்ஸ் ஆப்'பில் வெளியானது வினாத்தாள்

விரிவுரையாளர் பணிக்கான தேர்வில், 'வாட்ஸ் ஆப்'பில் வினாத்தாள் வெளியானதால், தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பட்டதாரி பெண்

மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான, எஸ்.சி.இ.ஆர்.,டி.,யில், ஆசிரியர்களுக்கும், பட்டதாரிகளுக்கும், ஆசிரியர் பயிற்சி வழங்க, 272 விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கு, டி.ஆர்.பி., சார்பில், நேற்று முன்தினம் எழுத்து தேர்வு நடந்தது.மதுரை தேர்வு மையம் ஒன்றில், ஆங்கில விரிவுரையாளர் பதவிக்கு தேர்வு எழுதிய, தேனியை சேர்ந்த பட்டதாரி பெண், மொபைல் போனை தேர்வு அறைக்குள் கொண்டு வந்து, வினாத்தாளை படம் பிடித்து, 'வாட்ஸ் ஆப் குரூப்'பில் அனுப்பி உள்ளார். பின், பதில் வந்துள்ளதா என, பார்க்க முயன்ற போது, அறை கண்காணிப்பாளரிடம் சிக்கினார்.

இதுகுறித்து, டி.ஆர்.பி., உறுப்பினர் ராஜராஜேஸ்வரி மற்றும் எஸ்.சி.இ.ஆர்.டி., இணை இயக்குனர் குப்புசாமி ஆகியோர், அந்த பெண்ணிடம் விசாரித்து, போலீசில் புகார்அளித்தனர்.ஆசிரியர் பதவிக்கான தேர்வைக்கூட, பள்ளி கல்வித்துறையால், பிரச்னையின்றி நடத்த முடியவில்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அலட்சியம்'

ஆசிரியர்களை நியமிக்கும், டி.ஆர்.பி.,யில், வெளிப்படை தன்மை இல்லை; நியமனங்களில் நேர்மையான விதிகள் கடைபிடிக்கப்படுவது இல்லை' என்றும் குற்றச்சாட்டுகள் உள்ளன. ஆனால், 'டி.ஆர்.பி., அதிகாரிகளின் அலட்சியத்தால் தான், வினாத்தாள் வெளியான மோசமான நிலை ஏற்பட்டுள்ளது' என, பட்டதாரிகளும், ஆசிரியர்களும் குற்றம் சாட்டி உள்ளனர்.

பாதி விடுதலை தலைமை ஆசிரியர்களுக்கு மீதி விடுதலை எப்போ?

பள்ளி மாணவர்களுக்கு எரிசக்தி விழிப்புணர்வு ஓவிய போட்டி : தொடக்க கல்வி இயக்குநர் தகவல்.

தொடக்க கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைத்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:

இந்திய தேசிய எரிசக்தி மேலாண்மை இயக்குநரகம் சார்பில் எரிசக்தியை சேமிப்பதில் தேசிய அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பள்ளிகள் அளவிலான ஓவிய போட்டி, 4, 5 மற்றும் 6ம் வகுப்புக்கு ‘ஏ’ என்ற பிரிவிலும், 7, 8ம் வகுப்பு மாணவர்களுக்கு ‘பி’ என்ற பிரிவிலும் நடத்தப்பட வேண்டும். ‘ஏ’ பிரிவில் ‘ஒரு வாட் மின்சாரத்தை சேமித்து அதிக மின்சாரத்தை சேமிப்போம்’, ‘வாருங்கள் நாம் ஒருங்கிணைந்து மின்சாரத்தை சேமிப்போம், முன்னேற்றத்தின் பங்குதாரர்கள் ஆவோம்’.

 ‘விழிப்புணர்வு கொண்டவர்களாக திகழ்ந்திடுங்கள், எரிசக்தியை மிகவும் கவனமாக உபயோகப்படுத்திடுங்கள்’ என்ற தலைப்பிலும் ஓவிய போட்டி நடத்த வேண்டும்.‘பி’ பிரிவுக்கு ‘எரிசக்தி சேமிப்பு ஸ்மார்ட் நகரங்களை நோக்கி ஒரு ஸ்மார்ட் படி’, ‘கார்பன் தடத்தை குறைத்திடுங்கள்’, ‘போலாரை பாதுகாக்க சோலார் பயன்படுத்துங்கள்’ ஆகிய தலைப்புகளின் கீழ் போட்டிகள் நடத்தப்பட வேண்டும். முதலில் பள்ளி அளவில் நடத்தப்பட்டுபள்ளி அளவில் சிறந்ததாக தேர்ந்தெடுக்கப்படும் இரண்டு படைப்புகளை செப்டம்பர் 30ம் தேதிக்குள் சென்னை, தி.நகரில் உள்ள பவர் கிரிட் கார்பரேசன் ஆப் இந்தியாவின் பொதுமேலாளருக்கு(எச் ஆர்) அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பழங்குடியினர் பள்ளிகள் மற்றும் விடுதிகளில் பயோமெட்ரிக் கருவிகள் மூலம் வருகை பதிவு முறை அறிமுகம்.

பழங்குடியினர் பள்ளி மற்றும் விடுதிகளில் பயோ மெட்ரிக் கருவிகளை கொண்டு வருகை பதிவுமுறை அறிமுகப்படுத்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:
« சேலம் மாவட்டம், கருமந்துறையில் உள்ள பழங்குடியினர் நல உண்டி உறைவிடப் பள்ளிக்கு ரூ.3 கோடி செலவில் தனியே விடுதிக் கட்டிடம், வேலூர் மாவட்டத்தில், ஜவ்வாது மலையில் உள்ள புதூர் நாட்டில் வனத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அரசு பழங்குடியினர் நல மேல்நிலைப் பள்ளியில் ரூ.3 கோடி செலவில் மாணவியர் விடுதி கட்டப்படுகிறது.

« பழங்குடியினர் நல 306 உண்டி உறைவிடப் பள்ளிகள், 42 பழங்குடியினர் விடுதிகள், 2 ஏகலைவா மாதிரி உண்டி உறைவிடப் பள்ளிகள் ஆகியவற்றில் மாணாக்கர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் வருகைப் பதிவேடு கையாள்வதில் தற்போது உள்ள கையெழுத்திடும் நடைமுறையை மாற்றி புதிய தொழில்நுட்ப உத்தியின் அடிப்படையில் பயோ மெட்ரிக் கருவிகளைக் கொண்டு வருகைப் பதிவு முறை அறிமுகப்படுத்த உத்தரவிட்டுள்ளேன். இத்திட்டம் ரூ.1 கோடியே 54 லட்சம் செலவில் செயல்படுத்தப்படும்.

« பழங்குடியினர் உண்டி உறைவிட பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்கள் பயன்பெறும் வகையில், ரூ.1 கோடியே 29 லட்சம் செலவில், 25 பள்ளிகளில் ஓர் அறிவுத் திறன் வகுப்பறை ஏற்படுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஈட்டிய விடுப்பு (EL) பற்றிய முழு விளக்கங்கள்:

தகுதிகாண் பருவத்தில் உள்ளவர்கள்
EL எடுத்தால் probation period தள்ளிப்போகும்.

🍁பணியில் சேர்ந்து ஒரு வருடம் முடிந்ததும் ஈட்டிய விடுப்பினை ஒப்படைத்து பணமாகப்பெறலாம்.
ஆண், பெண் இருவரும். தகுதிகாண் பருவம் முடிக்கும் முன்பு (பணியில் சேர்ந்து 2வருடங்களுக்குள்) மகப்பேறு விடுப்பு எடுத்தால்அந்த வருடத்திற்கான
 EL -ஐஒப்படைக்க முடியாது. ELநாட்கள் மகப்பேறு விடுப்புடன் சேர்த்துக்கொள்ளப்படும்.

(உதாரணமாக - அவரது கணக்கில் 10 நாட்கள் EL உள்ளது என்றால் மகப்பேறு விடுப்பில் அந்த 10 நாட்களை கழித்து விட்டு (180-10=170) மீதம் உள்ள 170 நாட்கள் மட்டுமே வழங்கப்படும்.
எனவே மகப்பேறு விடுப்பு எடுக்கும் முன்பே கணக்கில் உள்ள EL-ஐ எடுத்துவிடுவது பயனளிக்கும்)
🍁வருடத்திற்கு 17 நாட்கள் EL.அதில் 15நாட்களை ஒப்படைத்து பணமாகப்பெறலாம் .
🍁மீதமுள்ள 2 நாட்கள் சேர்ந்து கொண்டே வரும் அதை ஓய்வுபெறும் போது  ஒப்படைத்து பணமாகப்பெறலாம்.
🍁21 நாட்கள் ML எடுத்தால் ஒரு நாள் EL கழிக்கப்படும்.
ஒரு வருடத்திற்கு மொத்தம் 365 நாட்கள்.
இதை 17ஆல் (EL)வகுத்தால் 365/17=21.
🍁 எனவே 21 நாட்கள் MLஎடுத்தால் ஒரு நாள் EL என்ற கணக்கில் கழிக்கப்படுகிறது.
🍁மகப்பேறு விடுப்பு எடுத்த வருடத்தில் ஈட்டிய விடுப்பு ஒப்படைக்கும் பொழுது , மகப்பேறு விடுப்பு எடுத்த 6 மாதங்கள், மற்றும் ML எடுத்த நாட்கள் தவிர்த்து மீதம் வேலை செய்த நாட்களை 21 ஆல் வகுத்து EL கணக்கிடப்படும்.ML & EL எடுத்தது போக மீதம் உள்ள வேலை செய்த நாட்களுக்கு மட்டுமே EL கணக்கிடப்படும்.(CL & RH கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது)
🍁 ஒரு நாள் மட்டும் ELதேவைப்படின் எடுத்துக்கொள்ளலாம்.
🍁 அரசு ஊழியர்களுக்கு மட்டும்வருடத்திற்கு 30 நாட்கள் EL(ஆசிரியர்களுக்கு 17 நாட்கள்மட்டுமே). அதில் 15நாட்களை ஒப்படைக்கலாம்.மீதம் உள்ள 15 நாட்கள் சேர்ந்துகொண்டே வரும்..அதிகபட்சமாக 240 நாட்களைச்சேர்த்து வைத்து ஒப்படைக்கலாம்.அதற்கு மேல் சேருபவை எந்தவிதத்திலும் பயனில்லை.
மாறுதல் / பதவி உயர்வு /பணியிறக்கம் / நிரவல் போன்றநிகழ்வுகளின் போது பழையஇடத்திற்கும் புதியஇடத்திற்குமிடையே குறைந்தது 8கி.மீ (ரேடியஸ்) இருந்தால் அனுபவிக்காத பணியேற்பிடைக்காலம் ELகணக்கில் சேர்த்துக்கொள்ளப்படும். இதற்கு 30நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 90 நாட்களுக்குள் கணக்கில் சேர்க்கப்பட வேண்டும். (குறைந்தது 5நாட்கள்.
 160 கி.மீக்கு மேற்படின்அட்டவணைப்படி நாட்களின்எண்ணிக்கை அதிகரிக்கும்)
🍁ஒருமுறை சரண்டர் செய்த அதே தேதியில் தான் ஆண்டுதோறும் செய்யவேண்டும் என்ற கட்டாயம்இல்லை.
கணக்கீட்டிற்கு வசதியாகஇருக்கவும் Pay Rollல் விவரம் குறிக்க எளிமையாக அமையவும் ஒரே தேதியில் ஆண்டுதோறும் அல்லது இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை சரண்செய்வது சிறந்தது.
எவ்வாறாயினும் ஒரு ஒப்படைப்பு நாளுக்கும் அடுத்த ஒப்படைப்பு நாளுக்குமிடையே 15நாட்கள் ஒப்படைப்பெனில் ஓராண்டு / 30 நாட்கள் ஒப்படைப்பெனில் இரண்டாண்டு இடைவெளி இருக்கவேண்டும்.
🍁ஒப்படைப்பு நாள் தான் முக்கியமே தவிர விண்ணப்பிக்கும் தேதியோ, அலுவலர் சேங்க்ஷன் செய்யும் தேதியோ,
ECS ஆகும்தேதியோ அடுத்த முறை ஒப்படைப்பு செய்யும்போது குறிக்கப்பட வேண்டியதில்லை.
🍁EL ஒப்படைப்பு நாளின்போது குறைந்தஅளவு அகவிலைப்படியும் பின்னர் முன் தேதியிட்டு DAஉயர்த்தப்படும் போது ஒப்படைப்பு நாளில்அதிக அகவிலைப்படியும் இருந்தால் DA நிலுவையுடன் சரண்டருக்குரிய நிலுவையையும் சேர்த்து பெற்றுக் கொள்ளலாம். ஊக்க ஊதியம் முன் தேதியிட்டுப் பெற்றாலும் நிலுவைக் கணக்கீட்டுக் காலத்தில் ஒப்படைப்பு தேதி வந்தால் சரண்டர் நிலுவையும் பெறத்தகுதியுண்டு.
🍁பணிநிறைவு / இறப்பின்போது இருப்பிலுள்ள ELநாட்களுக்குரிய (அதிகபட்சம்240) அப்போதைய சம்பளம் மற்றும் அகவிலைப்படி வீதத்தில் கணக்கிடப்பட்டு திரள்தொகையாக ஒப்பளிக்கப்படும்.

🍁அதிகபட்சம் தொடர்ந்து 180 நாட்கள் ஈட்டிய விடுப்பு எடுக்கலாம். அதனைத் தொடர்ந்து மருத்துவ விடுப்பு எடுக்கலாம்.
180 நாட்களுக்கு மேற்பட்ட விடுப்புக்கு வீட்டு வாடகைப்படி கிடைக்காது.

பள்ளிகளில் 2072 ஆசிரியர் பணியிடங்கள்

பள்ளிகளில் ஆசிரியர் பணி மற்றும் அலுவலக பணிகளுக்கு 2072 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.இது பற்றிய விவரம் வருமாறு:–

மத்திய கல்வி அமைப்புகளில் ஒன்று நவோதயா வித்யாலயா சமிதி. இந்த அமைப்பின் கீழ் செயல்படும் பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்களில் கற்பித்தல் மற்றும் கற்பித்தல் சாராத அலுவலக பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. 
உதவி ஆணையர், பிரின்சிபால், முதுநிலை பட்டதாரி ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் போன்ற பணியிடங்கள் உள்ளன. மொத்தம் 2 ஆயிரத்து 72 பணி யிடங்கள் நிரப்பப்படுகிறது.பணி வாரியாக அசிஸ்டன்ட் கமிஷனர் பணிக்கு 2 பேரும், பிரின்சிபால் பணிக்கு 40 பேரும், முதுநிலை ஆசிரியர் பணிக்கு 880 பேரும், பட்டதாரி ஆசிரியர் பணிக்கு 660பேரும், பட்டதாரி ஆசிரியர் (மூன்றாம் மொழிகள்) 255 பேரும், மிஸ்க் கேட்டகரி டீச்சர் பணிக்கு 235 பேரும்தேர்வு செய்யப்படுகிறார்கள்.இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்...

வயது வரம்பு: உதவி ஆணையர் மற்றும் பிரின்சிபால் பணிக்கு 45 வயதுக்கு உட்பட்டவர்களும், முதுலை ஆசிரியர் பணிக்கு 40 வயதுக்கு உட்பட்டவர்களும், இதர பணிக்கு 35 வயதுக்கு உட்பட்டவர்களும் விண்ணப்பிக்கலாம். 31–7–2016 தேதியை அடிப்படையாகக் கொண்டு வயது வரம்பு கணக்கிடப்படுகிறது. குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வுஅனுமதிக்கப்படுகிறது.

கல்வித்தகுதி: முதுநிலை அறிவியல் மற்றும் கலைப்படிப்புகளுடன், பி.எட். படித்தவர்கள், இளநிலை பட்டிப்படிப்புடன் ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்கு பணிகள் உள்ளன. அந்தந்த பணிக்கான சரியான வயது வரம்பு மற்றும் கல்வித் தகுதியை இணையதளத்தில் பார்க்கலாம்.தேர்வு செய்யும் முறை:எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கட்டணம்: உதவி ஆணையர் மற்றும் பிரின்சிபால் பணி விண்ணப்பதாரர்கள் ரூ.1500–ம், இதர பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் ரூ.1000–ம் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி.,எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், பெண் விண்ணப்பதாரர்கள் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 9–10–2016 வரை விண்ணப்பம் செயல்பாட்டில் இருக்கும். 14–10–2016–ந் தேதிக்குள் கட்டணம் செலுத்த வேண்டும். எழுத்து தேர்வு நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடத்த உத் தேசிக்கப்பட்டு உள்ளது. இறுதியில் பூர்த்தியான விண்ணப்பத்தை கணினிப் பிரதி எடுத்து பிற்கால உபயோகத்திற்காக வைத்துக் கொள்ளவும்.

இது பற்றிய விவரங்களை   www.nvs-hq.org/ www.mecbsegov.in  ஆகிய இணையதளங்களில் பார்க்கலாம்.

RMSA Training 10 Days Training 1st Schedule

*RMSA Training*
10 Days Training[1st Schedule - 5 Days -Tentative Schedule]
*for 9th and 10th handling teachers
*This is Tentative Schedule Only.
*4.10.16 முதல்08.10.16  வரை அறிவியல்.
*13.,14..,15.,17.,18-10-2016  ஆங்கிலம் மற்றும் சமூக அறிவியல்
*19.20,21,22 & 24 -10-16 கணிதம்