யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

26/11/16

CCE WORKSHEET TEST - IMPORTANT FORMS

அச்சு பிழையால் 'கலர்' மாறிய புதிய நோட்டு செல்லும்

மும்பை:'புதிதாக வெளியிடப்பட்ட, 500 - 2,000 ரூபாய் நோட்டுகள் சிலவற்றில், அச்சுப் பிழையால் வண்ணம் மாறியுள்ளது; அந்த நோட்டுகள் செல்லும்' என, ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

புழக்கத்தில் இருந்த, பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாதென அறிவித்த மத்திய அரசு, புதிதாக, 500 - 2,000 ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்துள்ளது. இந்த நோட்டுகளில், சிலவற்றில் வண்ணம் மாறியுள்ளது உள்ளிட்ட புகார்கள் எழுந்துள்ளன.

இது குறித்து, ரிசர்வ் வங்கி, நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:
புதிய நோட்டுகள் வெவ்வேறு வண்ணங்களில் வந்துள்ளதாகவும், இதனால் குழப்பம் ஏற்படுவதுடன், கள்ள நோட்டு அச்சடிக்க வாய்ப்பு ஏற்படும் என, பல்வேறு புகார்கள் வந்துள்ளன.

புதிதாக அச்சடிக்கப்பட்டுள்ள நோட்டுகளில், பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இரு வகையான வண்ணங்களில் நோட்டுகளை வெளியிடவில்லை; 10 லட்சம் நோட்டுகளில், ஒரு நோட்டில் இவ்வாறு சில குறைபாடுகள் இருப்பதற்கு வாய்ப்பு உள்ளது. 

அவ்வாறு வெளியான நோட்டுகள் செல்லும்; அவற்றை பொதுமக்கள் பயன்படுத்தலாம். தேவைப்பட்டால், அந்த நோட்டுகளை ரிசர்வ் வங்கியில் செலுத்தி, மாற்று நோட்டுகளை பெற்றுக் கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

நான்கு அச்சகங்கள்

நம் ரூபாய் நோட்டுகள், நாட்டின் நான்கு பகுதிகளில் உள்ள அச்சகங்களில் உருவாகின்றன. மத்திய பிரதேசத்தின், தேவாஸ், மஹாராஷ்டிராவின், நாசிக்கில் உள்ள அச்சகங்கள், மத்திய அரசின் கீழுள்ள பாதுகாப்பு அச்சகம் மற்றும் நாணய வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. 

கர்நாடக மாநிலம் மைசூரு, மேற்கு வங்கத்தின் சல்போனி ஆகியவை, ரிசர்வ் வங்கியின், ரூபாய் அச்சடிப்பு நிறுவன கட்டுப்பாட்டில் உள்ளன.

கறுப்பு பண 'டிபாசிட்டா?': அதிரடிக்கு அரசு தயார்

புதுடில்லி:கறுப்புப் பணத்தை வங்கியில், 'டிபா சிட்' செய்வோருக்கு, 60 சதவீத வரி மற்றும் அபராதம் விதிப்பது குறித்து, மத்திய அமைச்ச ரவை கூட்டத்தில் விவாதிக்கப் பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.


கறுப்புப் பண விவகாரம் தொடர்பாக, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சர வைக் கூட்டம், நேற்று முன்தினம் இரவு நடந்தது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்பட வில்லை.

செல்லாததாக அறிவிக்கப்பட்டுள்ள, 500 - 1,000 நோட்டுகள் அனைத்தையும் திரட்ட, மத்திய அரசு தீவிரமாக உள்ளது. அதிக வரி விதிக்கப்படும் என்ற பயத்தில், அதை அழிப்பதை தடுக்கும் வகையில், தகுந்த வரியை விதிப்பது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட, கறுப்புப் பணத்தை தாமாக முன்வந்து செலுத்தும் திட்டத் தில், 'வரி மற்றும் அபராதமாக, 45 சதவீதம் விதிக் கப்படும்'என, அறிவிக்கப்பட்டது. அந்த வாய்ப்பை பயன்படுத்தாதோர், தங்களிடம் உள்ள கறுப்புப் பணத்தை டிபாசிட் செய்யும் வகையில், புதிய திட்டத்தை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது.

அதன்படி, வரி மற்றும் அபராதமாக, 60 சதவீதம் வசூலிப்பது குறித்து கூட்டத்தில் முடி வெடுக் கப்பட்டதாக தெரிகிறது. இது தொடர்பாக, நடப்பு பார்லி., கூட்டத் தொடரிலேயே, வருமான வரி சட்டத்தில் திருத்தம் செய்வது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிஜிட்டலில்' கட்டணம் ஆராய நிபுணர் குழு

புதுடில்லி: கறுப்பு பணம் மற்றும் ஊழலை ஒழிக்கும் வகையில், அரசுக்கு டிஜிட்டல் முறையில் கட்டணம் செலுத்தும் முறையை அமல்படுத்துவது குறித்து ஆராய, நிபுணர் குழுவை மத்திய அரசு நியமித்துள்ளது.

இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்தி விபரம்: அரசு - மக்கள் இடையிலான பரிவர்த்தனைகளை, டிஜிட்டல் முறையில் மேற்கொள்வது குறித்து ஆராய, நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. 'நிடி ஆயோக்' தலைமை செயலர் அமிதாப் காந்த் தலைமையிலான இந்த நிபுணர் குழு, எந்தெந்த துறைகளில், எந்தெந்த பரிவர்த்தனைகளை, டிஜிட்டல் முறைப்படி செய்ய முடியும் என ஆலோசனை வழங்கும்.இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது

புதிய பாடத்திட்டங்கள் எப்போது அமலாகும்?

பெலகாவி: “பாடப்புத்தகங்கள் மாற்றி அமைக்கும் பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளன; 2018 - 19 கல்வி ஆண்டில் புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்படும்,” என, தொடக்க கல்வி துறை அமைச்சர் தன்வீர் செய்ட் தெரிவித்தார்.மேலவை கேள்வி நேரத்தில், பா.ஜ., உறுப்பினர்கள் அருண் சஹாபுரா, சோமண்ணா பேவினமடா, காங்கிரசின் தர்மசேனா ஆகியோர் கேள்விகளுக்கு பதிலளித்து, அமைச்சர் தன்வீர் செய்ட் கூறியதாவது:மாநிலத்தில், 1ம் வகுப்பிலிருந்து, 10ம் வகுப்பு வரையிலான பாடப்புத்தகங்களை மாற்றி அமைப்பதற்கு, வெவ்வேறு மொழிகளில் வல்லுனர்கள் அடங்கிய கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளன.இது பற்றி, பர்கூரு ராமசந்திரா தலைமையிலான கமிட்டியுடன் விவாதிக்கப்படுகிறது. இக்கமிட்டி, அடுத்த மாதம், 8 அல்லது, 9ம் தேதியில் தாக்கல் செய்யும்.அந்த அறிக்கையை கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கமிட்டி அமைக்கப்பட்டு, இரண்டு ஆண்டாகிறது. இக்கமிட்டி, இதுவரை எந்த இடைக்கால அறிக்கையும் அளிக்கவில்லை. அறிக்கை தயாரிக்கும் பணி, இறுதி கட்டத்தில் உள்ளதாக, தெரிவித்துள்ளனர்.கமிட்டி தலைவர் பர்கூரு ராமசந்திரப்பா, கன்னட இலக்கிய மாநாட்டின் தலைவராகவும் இருப்பதால், அறிக்கை அளிப்பது தாமதமாகிறது.பாடப்புத்தகங்களை அச்சிட ஆறு தொகுப்புகள் கொண்ட ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளதால், அடுத்த கல்வி ஆண்டு புதிய பாடப்புத்தகங்களை கொண்டு வருவது சாத்தியமில்லை.எனவே, 2018 - 19ம் ஆண்டிலிருந்து புதிய பாடப்புத்தகங்கள் செயல்பாட்டுக்கு வரும். மாணவர்களுக்கு தரமான கல்வி அளிக்கும் வகையில், பாடப்புத்தகங்கள் அமைக்கப்படும். வல்லுனர் கமிட்டி, அரசுக்கு அறிக்கை அளித்த பின், ஆசிரியர்கள் தொகுதியின் எம்.எல்.சி.,க்களுடன் கூட்டம் நடத்தி, அவர்களின் கருத்து, ஆலோசனை பெறப்படும்.மாநிலத்தில் எந்த அரசு பள்ளியும் மூடப்படாது. இவ்விஷயத்தில் யாருக்கும் சந்தேகமோ, அச்சமோ வேண்டாம். பெற்றோரும், மாணவர்களும் பயப்பட வேண்டாம்.அரசு பள்ளிகள் அபிவிருத்தி செய்யப்படும். அரசு பள்ளிகளில் கல்வி தரத்தை உயர்த்த, 28 அம்சங்கள் கொண்ட திட்டங்கள் செயல்படுத்தப்படும்.ஏழைகள், வசதியானவர்கள் என்ற பாகுபாடின்றி, அனைவருக்கும் சமமான கல்வி கிடைக்க வேண்டும் என்பது அரசின் நோக்கம். தனியார் பள்ளியில் அதிக கட்டணம் வசூலிப்பதற்கு அரசு கடிவாளம் போடும். தொழில்நுட்பம் அடிப்படையிலான கல்வி கற்பிப்பு திட்டத்தின் கீழ், ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

வீடு ஒப்படைக்க தாமதமா? வருது புதிய கட்டுப்பாடு!

உறுதி அளித்த தேதியில், வீட்டை ஒப்படைக்காவிட்டால், கட்டு மான நிறுவனங்கள், 10.9 சதவீத வட்டியுடன், பணத்தை திருப்பி தர வேண்டும். அதற்கேற்ற வகையில், புதிய ரியல் எஸ்டேட் சட்ட விதிகள், அடுத்த ஆண்டு மே மாதம் அமலுக்கு வருகின்றன.
வீடு, மனை விற்பனையில் நடக்கும் முறைகேடுகளை கட்டுப்படுத்த, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டத்தை, மத்திய அரசு இயற்றியுள்ளது. முதற்கட்டமாக, யூனியன் பிரதேசங்களில், இந்த சட்ட விதிகள் அமலாகியுள்ளன. தமிழகம் உள்ளிட்ட, பிற மாநிலங்களில், 2017 மே முதல், இந்த விதிகள் அமலுக்கு வரவுள்ளன. இவை, நடைமுறைக்கு வந்தால், மத்திய அரசு இறுதி செய்துள்ள வரைவின்படி, விற்பனை பத்திரங்கள் இருக்க வேண்டும்.
விதிமுறைகள் என்ன?
l கட்டுமான நிறுவனம், விற்பனை பத்திரத்தில் குறிப்பிட்ட தேதியில், பணிகளை முடித்து, பணம் செலுத்தியோரிடம், வீட்டை ஒப்படைக்க வேண்டும்l தாமதமானால், வீடு வாங்கியவர் செலுத்திய தொகைக்கு, 10.9 சதவீத வட்டி அளிக்க வேண்டும்l தாமதத்தால் விற்பனை ஒப்பந்தம் ரத்தானால், 45 நாட்களுக்குள், கட்டுமான நிறுவனம் பெற்ற தொகையை திருப்பித்தர வேண்டும்l 'ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டாம்' என, பணம் செலுத்தியவர் விரும்பினாலும், தாமத காலத்திற்கு வட்டி தொகையை பெற, அவர் தகுதி பெறுவார்l மழை, வெள்ளம், புயல் போன்ற இயற்கை காரணங்களால், கட்டுமான பணிகள் தாமதமானால், அத்தகைய சூழலில், பில்டர் அபராதம் செலுத்த வேண்டியதில்லைl வீடு வாங்குவோர், உரிய காலத்தில் தொகையை செலுத்தாவிட்டால், ஒப்பந்தத்தை, பில்டர்கள் ரத்து செய்யலாம் l ஒரு குடியிருப்பு திட்டத்தில் வீடு வாங்குவோருக்கு, அதில், எத்தனை வீடுகள் கட்டப்படுகின்றன, பரப்பளவு, பொது பயன்பாட்டு இடங்கள், வாகன நிறுத்துமிட ஒதுக்கீடு போன்ற விபரங்களை தெரிவிக்க வேண்டும்l புதிய பத்திரத்தை பதிவு செய்யும் போது, இந்த விதிகளை கட்டுமான நிறுவனங்களும், வீடு வாங்குவோரும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.
இந்த விதிகள், பணத்தை வாங்கி, மக்களை அலைக்கழிக்கும் கட்டுமான நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுப்பதாக அமையும்.

தேசிய திறனாய்வு தேர்வு:நவ., 28ல் விடைக்குறிப்பு

சென்னை:'தேசிய திறனாய்வு தேர்வுக்கான விடைக்குறிப்பு, வரும், 28ல் வெளியாகும்' என, அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.நாடு முழுவதும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, மாநில மற்றும் தேசிய அளவில், இரு கட்ட திறனாய்வு தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த ஆண்டு, மாநில அளவிலான தேர்வு, நவ., 5ல் நடந்தது.'தேர்வு வினாத்தாளுக்கு, தற்காலிக விடைக்குறிப்புகள், வரும், 28ல், வெளியாகும். அவற்றை, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

சந்தேகங்கள் இருந்தால், இயக்குனரின், directordge.tn@nic.in என்ற முகவரிக்கு, வரும், 30க்குள் தகவல் அனுப்பலாம்' என, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

பிளஸ் 2 மறுகூட்டல் 'ரிசல்ட்' வெளியீடு

சென்னை: பிளஸ் 2 துணைத் தேர்வு, மறுகூட்டல் முடிவு, நேற்று வெளியிடப்பட்டது.பிளஸ் 2 துணைத் தேர்வுக்கு பின், விடைத்தாள் மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களுக்கான முடிவு, நேற்று வெளியானது.
தேர்வுத் துறை யின், www/tndge.in என்ற இணையதளத்தில் முடிவை தெரிந்து கொள்ளலாம். 'பதிவெண் இல்லாதவர்கள், ஏற்கனவே உள்ள மதிப்பெண்ணில் மாற்றம் இல்லை என, எடுத்துக் கொள்ள வேண்டும். 'மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் தேதி, பின்னர் அறிவிக்கப்படும்' என, தேர்வுத் துறை இயக்ககம் கூறியுள்ளது.

ஜே.இ.இ., நுழைவுத்தேர்வு எழுத டிச., 1 முதல் விண்ணப்பிக்கலாம்

ஐ.ஐ.டி., என்ற உயர்கல்வி தொழில்நுட்ப கல்லுாரிகளில் இன்ஜினியரிங் படிப்பதற்கான, ஜே.இ.இ., மெயின் நுழைவுத் தேர்வுக்கு, டிச., 1 முதல் விண்ணப்பிக்கலாம்.ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., - ஐ.ஐ.டி.எம்., போன்ற உயர்கல்வி நிறுவனங்களில், பி.இ., - பி.டெக்., - பி.ஆர்க்., மற்றும் பி.பிளான் போன்ற படிப்புகளில் சேர, ஜே.இ.இ., மெயின், அட்வான்ஸ் என்ற, இரண்டு கட்ட நுழைவுத் தேர்வு எழுத வேண்டும். வரும் கல்வி ஆண்டுக்கான நுழைவுத் தேர்வு, சி.பி.எஸ்.இ., மூலம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதன்படி, ஏப்., 3ல் எழுத்துத் தேர்வும், ஏப்., 9, 10ல், ஆன்லைன் வழி தேர்வும் நடத்தப்படுகிறது. இதற்கு, டிச., 1 முதல், 31 வரை விண்ணப்பிக்கலாம். தேர்வில் பங்கேற்க, தமிழக அரசு பாடத்திட்டம், சி.பி.எஸ்.இ., உட்பட, 54 பாடத்திட்ட மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை உட்பட நாடு முழுவதும், 132 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்படுகின்றன. வெளிநாட்டில் இருப்போர், ஜே.இ.இ., மெயின் தேர்வை எழுத, துபாய், பக்ரைன், மஸ்கட், ரியாத் மற்றும் ஷார்ஜா ஆகிய நகரங்களில், தேர்வு மையங்கள் அமைக்கப்படுகின்றன.
குஜராத்தியில் எழுதலாம் : ஜே.இ.இ., மெயின் தேர்வை, ஆங்கிலம் அல்லது இந்தி என, ஏதாவது ஒரு மொழியில் எழுத அனுமதி உள்ளது. தமிழிலும், இத்தேர்வை எழுத அனுமதிக்க வேண்டும் என, பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. ஆனாலும், அதற்கு அனுமதி கிடைக்கவில்லை. இந்நிலையில், இந்த ஆண்டு முதல் குஜராத்தியிலும், ஜே.இ.இ., தேர்வை எழுதலாம் என, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது. தமிழகத்தில் சென்னை, கோவை, திருநெல்வேலி, ஈரோடு, திருப்பூர் உட்பட, பல மாவட்டங்களில் குஜராத்தி மொழி பேசுவோர் பரவலாக உள்ளனர். 

10ம் வகுப்பிலும் புது வினாத்தாள் மாதிரி தேர்வு

பள்ளிக்கல்வித் துறை அறிமுகம் செய்துள்ள, போட்டித் தேர்வு வகை வினாத்தாள்படி, 10ம் வகுப்புக்கும், மாதிரி தேர்வு வைக்க, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.அரசு பள்ளி மாணவர்கள், 'நீட், ஜே.இ.இ.,' போன்ற நுழைவுத் தேர்வுகளிலும், தங்கள் திறனை காட்டும் வகையில்,
அவர்களுக்கு புதிய வினாத்தாள் முறையை, கல்வித்துறை அறிமுகம் செய்துள்ளது. தமிழக அரசின் குழந்தைகள் தின விழாவில், இதற்கான அறிவிப்பை, பள்ளிக்கல்வி செயலர் சபிதா வெளியிட்டார். இதன்படி, எட்டாம் வகுப்பு வரை, அனைத்து மாணவர்களுக்கும், புதிய, 'அப்ஜெக்டிவ்' வகை வினாத்தாள் மூலம், பாட வாரியாக மாதிரி தேர்வுகள் நடத்தப்படுகின்றன. வினாத்தாளில் உள்ள நான்கு விடைகளில், சரியானதை தேர்வு செய்வது, மாணவர்களின் தேர்வு பயத்தை போக்குவதோடு, குழப்பமான வினாவுக்கும், விடை கண்டுபிடிக்கும் பக்குவத்தையும் ஏற்படுத்துவது தெரிய வந்துள்ளது. எனவே, இந்த வினாத்தாள் முறைப்படி, 10ம் வகுப்பு பொதுத் தேர்வு மாணவர்களுக்கும், மாதிரி தேர்வு வைக்க, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
வரும் ஆண்டுகளில், பிளஸ் 2 வரையிலும், இந்த முறை தேர்வு அறிமுகம் செய்யப்பட உள்ளது.

செல்லாத ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கியில்... மாற்றலாம்!:டிச., 30 வரை வங்கிகளில் 'டிபாசிட்' செய்யலாம்:பணப்புழக்கத்தை சீராக்க மத்திய அரசு நடவடிக்கை

புதுடில்லி:செல்லாத ரூபாய் நோட்டுகளை, வங்கிகளில் மாற்றுவதற்கான அவகாசம், நேற்று முன்தினம் முடிந்தது. எனினும், 'செல்லாத நோட்டுகளை, ரிசர்வ் வங்கி கவுன்டர்களில் கொடுத்து, பணம் பெற்றுக் கொள்ளலாம்' என, ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அது போல, முன்னரே அறிவிக்கப்பட்ட படி, டிசம்பர், 30 வரை, பழைய நோட்டுகளை வங்கி களில், 'டிபாசிட்' செய்தும், புதிய கரன்சியாக எடுத்துக் கொள்ளலாம்.


கள்ள நோட்டு மற்றும் கறுப்புப் பணத்தை ஒழிக்க, '500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல் லாது' என, பிரதமர் நரேந்திர மோடி, நவ., 8ல் அறிவித்தார். செல்லாத ரூபாய் நோட்டுகளை, நவ., 24ம் தேதி வரை, வங்கிகளில் மாற்றிக் கொள்ள அவகாசம் தரப்பட்டது; டிச., 30 வரை, வங்கிக் கணக்கில், 'டிபாசிட்' செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.

முதலில், 'ஒரு நாளைக்கு, 4,000 ரூபாய் வரை மாற்றலாம்' என, அறிவிக்கப்பட்டது; பின், 2,000 ரூபாயாக குறைக்கப்பட்டது. மேலும், ஒருவர், ஒருமுறை மட்டுமே பணத்தை மாற்றும் வகையில் விரலில் மை வைத்து, விதிமுறை கடுமையாக்கப்பட்டது.


பணப் புழக்கம் குறைவு


வங்கிகளில் இருந்து பணம் எடுக்கவும் கட்டுப் பாடுகள் விதிக்கப்பட்டதால், பணப் புழக்கம் குறைந்தது. செல்லாத ரூபாய் நோட்டுகளை, வங்கிகளில் மாற்றுவதற்கான அவகாசம், நேற்று முன்தினம் முடிந்தது. எனினும் குறிப் பிட்ட சில சேவைகளுக்கு, டிச., 15ம் தேதி வரை, பழைய, 500 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தலாம்என, மத்திய அரசு நேற்று முன்தினம் அறிவித்தது. 


இந்நிலையில், ரிசர்வ் வங்கி நேற்று வெளியிட்ட அறிக்கை:


செல்லாத நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து, பணம் பெறுவதற்கான அவகாசம் முடிந்து விட்டது. இனி, செல்லாத ரூபாய் நோட்டுகளை, டிச., 30 வரை, வங்கி கணக்கில் மட்டுமே செலுத்த முடியும்.


அரசின் நோக்கம்


ஏற்கனவே அறிவித்த படி, செல்லாத ரூபாய் நோட்டுகளை, ரிசர்வ் வங்கி கவுன்டர்களில் கொடுத்து, புதிய ரூபாய் நோட்டுகளாக பெற லாம். ஒருவர், அதிகபட்சமாக, 2,000 ரூபாய் மட்டுமே மாற்ற முடியும். 

பணப் புழக்கத்தை சீராக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. வங்கி கணக்கு இல்லா தோர், இனியா வது வங்கி கணக்கு துவக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் கிளை, மாநில தலைநகரங்களில் மட்டுமே உள்ளது.மற்ற பகுதிகளில் வசிப்போர், தங்களிடம் உள்ள செல்லாத நோட்டு களை, வங்கிக் கணக்கில் டிபாசிட் செய்து, பணமாக மாற்றலாம் என்பது மட்டுமே அவர்களுக்கு உள்ள ஒரே வழி.

டிஜிட்டல் பரிவர்த்தனை

லோக்சபாவில், நிதியமைச்சர் அருண் ஜெட்லி அளித்த பதிலில் கூறியதாவது:கரன்சி பணப் புழக்கத்தை குறைத்து, 'டெபிட், கிரடிட் கார்டு கள்' மூலம் பரிவர்த்தனை செய்வதை ஊக்கு விக்க, அரசு தீவிரம் காட்டுகிறது. கார்டு பணப் பரிவர்த்தனையை ஊக்குவித்தால் தான், கறுப்புப் பணம் கட்டுக்குள் வரும். எல்லா தரப்பு மக்களிடமும் கார்டுகள் மூலம் பணப் பரிவர்த்த னையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே அரசின் நோக்கம். 

ஆன்லைனில், 'ஷாப்பிங்' செய்வதை ஊக்கு விக்க, அரசு விரும்புகிறது. கார்டு மூலம் பணப் பரிவர்த்தனை ஏற்கப்பட்டுவிட்டால் வரி வரு வாயை பெருக்க முடியும். மின் கட்டணம் முதல் ஷாப்பிங் வரை, எல்லா வித பரிவர்த் தனைகளையும், ஒரே ஒரு எண் மூலம் செலுத் தும் ஒருங்கிணைந்த முறையை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

நாட்டில், 80 கோடி டெபிட் கார்டுகள் உள்ளன. இதில், 40 கோடி கார்டுகள், ஏ.டி.எம்.,களில் பணம் எடுக்க அதிகளவில் பயன்படுத்தப் படுகின்றன. கார்டு பரிவர்த்தனை மூலம் கள்ள நோட்டுகளை ஒழிக்க முடியும்; மோசடிகளை யும் தடுக்க முடியும்.இவ்வாறு அவர் பேசினார்.

Directorate of Government Examinations ESLC - Jan 2017 - Private Candidates Time Table

சொந்த அலுவலுக்கான ஈட்டா விடுப்பு - புதிய விதிமுறைகள் அரசு ஊழியர்களுக்கு சிக்கல்....

Students Adhaar format details....

வங்கிகளில் ரூ. 500, 1000 இனி மாற்ற முடியாது. ஆனால் DEPOSIT செய்யலாம்.. டிச. 15 வரை மின், குடிநீர் கட்டணத்திற்கு செலுத்தலாம்

டெல்லி: பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை மின்கட்டணம்உள்ளிட்ட சேவைகளுக்கு டிசம்பர் 15-ம் தேதி வரைபயன்படுத்த மத்திய
அரசு அனுமதிஅளி்த்துள்ளது.

ரூபாய்நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்துபொதுமக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்துவருகின்றனர். எதிர்கட்சிகளும் கடுமையாக சாடி வருகின்றனர். இதனால்நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் முடங்கியுள்ளது. மக்களவை, மாநிலங்களவை அலுவல்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில், வங்கிக் கவுண்டர்களில் 500, 1000 ரூபாய் நோட்டுக்களை இன்றுநள்ளிரவுக்குள் மாற்றிக் கொள்ள வேண்டும் எனமத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்துமத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

குடிநீர்க்கட்டணம், மின்கட்டணம் செலுத்த பழைய ரூபாய்நோட்டுக்களை டிசம்பர் 15 வரை பயன்படுத்தலாம்

500, 1000 ரூபாய்நோட்டுக்களை இன்று நள்ளிரவுக்குள் மாற்றிக்கொள்ள வேண்டும்

நள்ளிரவுக்குமேல் ரூபாய் நோட்டுக்களை மாற்றமுடியாது

நள்ளிரவுக்குமேல் பழைய ரூபாய் நோட்டுக்களைமாற்றுவது நிறுத்தப்படும்

பெட்ரோல், டீசல், எரிவாயு சிலிண்டர்களை பழையரூபாய் நோட்டுக்கள் மூலம் பெறலாம்

500, 1000 ரூபாய்நோட்டுக்களை வங்கிக் கணக்கில் டெபாசிட்செய்யத் தடை இல்லை

மத்திய, மாநில, அரசு பள்ளி, கல்லூரிகளில்ரூ2000 வரை பழைய 500 ரூபாய்நோட்டுகளை பயன்படுத்தி கட்டணம் செலுத்தலாம்

பழைய500 ரூபாய் மூலம் ப்ரீபெய்டு மொபைல்களில்ரூ500 வரை ரீசார்ச் செய்யலாம்

வங்கிகளில்பாஸ்போர்ட்டை காண்பித்து வெளிநாட்டினர் பணம் பெறலாம்

வெளிநாட்டினர்தங்கள் நாட்டு பணத்தை வாரத்திற்குரூ5000 வரை மாற்றிக் கொள்ளலாம்

பழைய நோட்டுகளை பயன்படுத்தி டிச.3 முதல் டிச15 சுங்க கட்டணம் செலுத்தலாம்


கூட்டுறவுஅங்காடிகளில் ஒரு முறை மட்டும்ரூ5000 வரை பொருட்களை வாங்கலாம்

1000 ரூபாய் நோட்டுக்கு 'கோவிந்தா'.. விலக்கு அளிக்கப்பட்ட சேவைகளில் ரூ. 500 மட்டுமே பயன்படுத்தலாம்!

சென்னை: மத்திய நிதியமைச்சகம் இன்று வெளியிட்ட அறிவிப்புகளில்முக்கியமானது இது. அதாவது 1000 ரூபாய்நோட்டு முழுமையாக இன்று
முதல் பயன்பாட்டிலிருந்துவிலக்கப்படுகிறது. விலக்கு அளிக்கப்பட்ட சேவைகளில்500 ரூபாய் நோட்டுக்களை மட்டுமே பயன்படுத்த முடியும்.

டிசம்பர்15ம் தேதி வரை குடிநீர்க்கட்டணம் உள்ளிட்ட சில அத்தியாவசிய சேவைகளுக்கானகட்டணத்தை செலுத்த 500 ரூபாய் நோட்டை அனுமதிப்பதுகுறித்த முடிவை இன்று மாலைநிதியமைச்சகம் அறிவித்தது. அதில் இடம் பெற்றுள்ளமுக்கிய அறிவிப்பு என்னவென்றால், அந்த கட்டணத்தை 500 ரூபாய்நோட்டுக்களை மட்டுமே செலுத்தி சலுகையைபயன்படுத்த முடியும்.


மாறாக. 1000 ரூபாய் நோட்டு வாங்கப்பட மாட்டாதுஎன்று நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் 1000 ரூபாய்நோட்டு இன்று நள்ளிரவோடு முற்றாகவிடைபெறுகிறது. இருப்பினும் வங்கிகளில் தங்களது கணக்குகளில் 1000 ரூபாய்நோட்டுக்களை டெபாசிட் செய்வதற்கு எந்தத் தடையும் இல்லை.

Revision in Interest Rates on Domestic Bulk Term Deposits (Rs.1-10 crs) W.E.F. 24.11.2016

ஒன்றியம் விட்டு ஒன்றிய அரசு பள்ளிகளில் திடீர் ஆய்வு ! - கற்றல் உபகரணங்களை வாங்குவதில் முறைகேடா??

ALL "SLAS" STUDY MATERIALS & OLD QUESTION PAPERS

CCE WORKSHEET TEST - IMPORTANT FORMS

அஞ்சலகங்களில் இனி டெபாசிட் மட்டுமே செய்யலாம்.

செல்லாத பழைய ரூபாய் நோட்டுகளை வெள்ளிக்கிழமை (நவம்பர் 25) முதல் அஞ்சலக சேமிப்பு கணக்கில் டெபாசிட் மட்டுமே செய்யலாம் என அஞ்சல்துறை தெரிவித்துள்ளது.ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்ததால், கடந்த 2 வாரங்களுக்கு மேலாக பொதுமக்கள்பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றி வந்தனர்.

அதன்படி, கோடிக்கணக்கிலான பழைய ரூபாய் நோட்டுகள் பெறப்பட்டு, பொதுமக்களுக்கு ரூ.2000, ரூ.100 உள்ளிட்ட நோட்டுகள் வழங்கப்பட்டன. இதுகுறித்து அஞ்சல்துறை வட்டாரங்கள் கூறியதாவது:அரசு விதித்திருந்த காலக்கெடு நவம்பர் 24 ஆம் தேதியோடு நிறைவடைந்தது. அத்துடன், மை வைக்கும் முறைக்கு பிறகு அஞ்சலகங்களில் பணம் மாற்ற வருவோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருந்தது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை முதல் பழைய ரூபாய் நோட்டுகள் பொதுமக்களிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

சேமிப்பு கணக்குக்கு மட்டும்: ஆனால், அரசு நிர்ணயித்த காலக்கெடு வரை அஞ்சலக சேமிப்பு கணக்கில் பழைய நோட்டுகளை டெபாசிட் செய்யலாம். அதுபோல், சேமிப்பு கணக்கில் செலுத்தப்பட்ட தொகையை நேரடியாகப் பெறலாம்., ஏடிஎம்-களில் போதுமான அளவுக்கு ரூ.100 நோட்டுகள் நிரப்பப்பட்டு வருகின்றன என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

'EMIS' சர்வரை மேம்படுத்த வேண்டும்: தலைமை ஆசிரியர்கள் கோரிக்கை.

கல்வி தகவல் மேலாண்மை முறைக்கான (எமிஸ்) இணையதள சர்வரை மேம்படுத்த வேண்டும் என அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு உயர்நிலை,மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர் சாமி.சத்தியமூர்த்தி கூறியது:
தமிழகத்தில் அரசு, தனியார் பள்ளிகளில் உள்ள மாணவர்களின் விவரங்களை தொகுத்திடும் வகையில், கல்வி தகவல் மேலாண்மை முறை (எமிஸ்) செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின்படி, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்கள் ஒவ்வொருவர் குறித்து 47 வகையான விவரங்கள் குறிப்பிட்ட இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும்.இதில் பல்வேறு குறைபாடுகள் உள்ளன. எமிஸ் சர்வரின் வேகம் மிகக் குறைவாக உள்ளது. மாணவரின் ஜாதி உட்பிரிவுகளைக் குறிப்பிடுவதற்கான வழிகள் இல்லை. மேலும் எடை, உயரம் உள்ளிட்ட மாறுபடக் கூடிய தேவையற்ற விவரங்களையும் தெரிவிக்குமாறு குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்தப் பணியை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்கவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால், தலைமை ஆசிரியர்கள் வழக்கமான கல்வி, பள்ளி நிர்வாகப் பணிகளை கவனிக்க முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகும் நிலை உருவாகியிருக்கிறது. எனவே, இந்த முறையில் தேவையற்ற விவரங்களைக் கேட்பது தவிர்க்கப்படவேண்டும் என்பதோடு, "எமிஸ்' சர்வர் வேகம் மேம்படுத்தப்பட வேண்டும் என்றார் அவர்..

சான்றிதழ் சரிபார்ப்பு பணி 'ஜவ்வு' : 10ம் வகுப்பு தேர்ச்சிக்கு ஆபத்து?

மூன்று ஆண்டுகளாக, சான்றிதழ் சரிபார்க்காமல், அதிகாரிகள் இழுத்தடிப்பதாக, ஆசிரியர் சங்கத்தினர் புகார் தெரிவித்துள்ளனர். மூன்று ஆண்டுகளுக்கு முன், ஆசிரியர் தகுதி தேர்வின் மூலம், நியமிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள், இரண்டு ஆண்டுகள் பயிற்சி காலத்தை முடித்து, ஓர் ஆண்டை தாண்டி விட்டது. 
ஆனால், அவர்களின் சான்றிதழ்கள் உண்மையானதா என்பதை, அதிகாரிகள் சரிபார்த்து முடித்தால்தான், ஆசிரியர்களுக்கு பணி நிரந்தர உத்தரவு கிடைக்கும். பல மாவட்டங்களில், முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்களில், சான்றிதழ்களை ஆய்வு செய்யும் பணிகள், முடியவில்லை. இதனால், திருப்பூர் மாவட்டத்தில், 600 பேர் உட்பட, மாநிலம் முழுவதும், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், பணி நிரந்தரம் ஆகாமல் உள்ளனர். மேலும், விடுப்பு, பணப் பலன்கள் போன்றவை, நிறுத்தப்பட்டுஉள்ளன.

இது குறித்து, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பினர், பள்ளிக்கல்வி இயக்குனரை சந்தித்து, முறையிட்டுள்ளனர். இத்தகையோரிடம், பாடம் நடத்தும் ஆர்வம் குறைந்துள்ளதால், 10ம் வகுப்பில், தேர்ச்சி பாதிக்கும் என, ஆசிரியர்கள் கூறினர்.

நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு விநாடி-வினா போட்டி

தொடக்கக் கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன் வெளியிட்ட சுற்றறிக்கை:

அம்பேத்கரின் 125-வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழு வதும் நடுநிலைப்பள்ளி மாணவர் கள் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை அறிந்துகொள்ளவும், 
அவர்களின் அறிவுக்கூர்மையை மேம்படுத்தவும் அம்பேத்கர் விநாடி-வினா போட்டியை நேரடி யாகவும், ஆன்லைன் வழியாக வும் நடத்தஅனுமதி அளிக்கப் படுகிறது. இப்போட்டிகள் அரை யாண்டு விடுமுறை மற்றும் ஜனவரி மாத விடுமுறை நாட்களில் நடத்தப்படும்.

வேலைவாய்ப்புக்காக காத்திருப்போர் 82.36 லட்சம் தமிழக அரசு தகவல்.

வேலைவாய்ப்புக்காக காத்திருப்போர் 82.36 லட்சம் தமிழக அரசு தகவல் | தமிழகம் முழுவதும் பள்ளிக்கல்வி மற்றும் கல்லூரிக் கல்வியை முடிக்கும் மாணவ, மாணவிகள், அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பெயரை பதிவு செய்து வருகின்றனர்.
கடந்த செப்டம்பர் மாதம் வரை பெயர் பதிவு செய்திருப்போரின் எண்ணிக்கை விவரங்களை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகம் முழுவதும் 82 லட்சத்து 36 ஆயிரத்து 843 பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர். அவர்களில் 42 லட்சத்து 33 ஆயிரத்து 343 பேர் பெண்கள். அந்த பெண்களில் 9 லட்சத்து 6 ஆயிரத்து 962 பேர் தொழில் கல்வியாளர்கள், 10 ஆயிரத்து 970 பேர் விதவைகள், 43 ஆயிரத்து 64 பேர் கலப்புத் திருமணம் செய்தவர்கள், ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 509 பேர் மாற்றுத்திறனாளிகள்.

அரசு பள்ளிக்கூடங்களில் துப்புரவு ஊழியர்கள் நியமனம் அரசாணை வெளியீடு

தமிழ்நாட்டில் மாநகராட்சி, நகராட்சி உள்ள பகுதிகளில் உள்ள அனைத்து அரசு மற்றும் மாநகராட்சி, நகராட்சி தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள், 
மேல்நிலைப்பள்ளிகள் அனைத்திலும் கழிவறைகளை சுத்தம் செய்ய துப்புரவு ஊழியர்களை நியமிக்கப்பட உள்ளனர். இது குறித்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா விதி எண்-110 அறிக்கையில் அறிவித்தார். அந்த அறிவிப்பையொட்டி அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

பிளஸ்-2 மறு மதிப்பீடு மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வர்களுக்கு மறு கூட்டல் மதிப்பெண் இன்று வெளியீடு

தனித்தேர்வர்களுக்காக அக்டோபர் மாதம் நடைபெற்ற பிளஸ்-2 தேர்வு எழுதியவர்களில் மறு கூட்டல், மறு மதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களுக்கு மதிப்பெண் மாற்றம் உள்ளவர்களுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 2 மணிக்கு இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். 
மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். செப்டம்பர் மாதம் நடைபெற்ற பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு எழுதிய மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 27,397 ஆகும். மறுகூட்டலுக்கு விண்ணப்பித்த தேர்வர்களின் எண்ணிக்கை 227 ஆகும். மறுகூட்டல் செய்யப்பட்ட விடைத்தாள்களின் எண்ணிக்கை 455. இதில் மதிப்பெண் மறுகூட்டலில் மாற்றம் உள்ள விடைத்தாள்களின் எண்ணிக்கை 5 ஆகும்.

மேற்படி தேர்வர்களுக்கு மாற்றம் செய்யப்பட்ட மதிப்பெண்களை பதிந்து மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும். மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களது பதிவெண்கள் பட்டியல் www.tnd-ge.in என்ற இணையதளத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு வெளியிடப்படும். மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்து இப்பட்டியலில் இடம்பெறாத பதிவெண்களுக்கான விடைத்தாள்களில் மதிப்பெண்களில் எவ்வித மாற்றமும் இல்லை என அறிவிக்கப்படுகிறது. இந்த தகவலை அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

SLAS Test என்றால் என்ன?

மாணவர் பெறும் மதிப்பெண் ஆசிரியர்களின் திறன் மதிப்பீடுஅரசு பள்ளி ஆசிரியர் முறையாக பாடம் கற்றுக் கொடுத்தாரா என்பதை சோதிக்க,9 மற்றும் 10ம் வகுப்பு  மாணவர்களுக்கு நவம்பர் 30ம் தேதி தேர்வு நடக்கிறது. இந்த தேர்வில், மாணவர் பெறும் மதிப்பெண்ணை வைத்தே ஆசிரியரின் தரம் நிர்ணயம் செய்யப்படுகிறது.
தமிழகத்தில், அனைவருக்கும் கல்வி இயக்ககமான, எஸ்.எஸ்.ஏ., திட்டம் மூலம், மாணவர்களுக்கு செயல் வழி கற்றலும், ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சியும் அளிக்கப்படுகிறது; இதற்காக, மத்திய அரசு சார்பில் பல கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. பயிற்சிக்குவரும் ஆசிரியர்களுக்கு, பயணப்படி, சாப்பாடு போன்ற வசதிகளும் செய்து தரப்படுகின்றன. பயிற்சி பெற்ற ஆசிரியர் ஒழுங்காக பணியாற்றியுள்ளாரா, அவர் கற்றுக் கொடுத்ததால், மாணவர்கள் மேம்பட்டுள்ளனரா என, ஆண்டுதோறும் சோதனை நடத்தப்படும்.மாவட்டம், வட்டம் மற்றும் பள்ளி வாரியாக சில மாணவர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு இந்த தேர்வு நடத்தப்படுகிறது.மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில், சம்பந்தப்பட்ட மாவட்டத்தின் கற்றல் அடைவு திறன் பட்டியல் தயாரிக்கப்படும். இதில், எந்த பகுதியில் மாணவர்கள் பின் தங்கியுள்ளனரோ, அந்த பகுதியில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் தலைமைஆசிரியர்களிடம், எஸ்.எஸ்.ஏ., விளக்கம் கேட்கும்.

ரூ.500 பழைய நோட்டுகளை டிச.15 வரை பயன்படுத்த அனுமதி.

ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பால், நாடு முழுவதும் பணத் தட்டுப்பாடு நிலவுவதைக் கருத்தில் கொண்டு, பழைய ரூ.500 நோட்டுகளை குறிப்பிட்ட சில சேவைகளுக்கு மட்டும் வரும் டிசம்பர் 15-ஆம் தேதி வரை பயன்படுத்துவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. 
அதே நேரத்தில் ரூ.1,000 நோட்டுகளை வங்கிக் கணக்கில் மட்டுமே செலுத்த முடியும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு கடந்த 8-ஆம் தேதி அறிவித்தது. அப்போது, ரூ.1,000, ரூ.500 நோட்டுகளைக் கொடுத்து விட்டு அதற்குப் பதிலாக, ரூ.100, ரூ.50, ரூ.20 என குறைந்த மதிப்புடைய நோட்டுகளை வங்கிகளிலும், அஞ்சலகங்களிலும், நவம்பர் 24-ஆம் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில், பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்வதற்கான அவகாசம், வியாழக்கிழமை (நவ.24) நள்ளிரவுடன் முடிவடைந்த நிலையில், பழைய ரூ.500 நோட்டுகளை மட்டும் சில குறிப்பிட்ட சேவைகளுக்கு டிசம்பர் 15-ஆம் தேதி வரை பயன்படுத்திக் கொள்வதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

மத்திய, மாநில அரசுகள், மாநகராட்சி, நகராட்சியின் கீழ் செயல்படும் பள்ளிகளில் ஒரு மாணவருக்கு ரூ.2,000 வரை கட்டணம் செலுத்துவதற்கு பழைய ரூ.500 நோட்டுகளைப் பயன்படுத்தலாம்.

பெட்ரோல் பங்க்குகளில் எரிபொருள் நிரப்பலாம்

சுங்கக் கட்டணம் செலுத்தலாம்

மத்திய, மாநில அரசுகளின் கூட்டுறவு பண்டக விற்பனை சாலைகளில் ஒரு முறை ரூ.5,000 வரை பொருள்கள் வாங்கலாம்.

குடிநீர் கட்டணம் செலுத்தலாம்

மின் கட்டணம் செலுத்தலாம்

அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கான தொகையை செலுத்தவும், மருந்தகங்களிலும் மருந்துகளை வாங்கலாம்

சமையல் எரிவாயு உருளை வாங்கலாம்

மெட்ரோ, புறநகர் ரயில்களில் டிக்கெட் வாங்குவதற்கும், ரயில் கட்டணம் செலுத்தலாம்

பேருந்து கட்டணம் செலுத்தலாம்

விமானக் கட்டணம் செலுத்தலாம்

ரூ.500 வரையிலான செல்லிடப்பேசி ரீசார்ஜ் செய்வதற்கும் பழைய ரூ.500 நோட்டுகளைப் பயன்படுத்தலாம்.

WIFS(Weekly Iron Folic Acid Supplementation)வாராந்திர போலிக் அமிலம்அடங்கிய இரும்புச்சத்து மாத்திரைகள் வழங்கும் திட்டம் - படிவங்கள்








TET தளர்வு மதிப்பெண் 2012ல் எழுதியோர் எதிர்பார்ப்பு.

'2012ம் ஆண்டில் முதல் முறையாக ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) எழுதியோருக்கும், 5 சதவீத தளர்வு மதிப்பெண் வழங்க வேண்டும்' என எதிர்பார்ப்பு நிலவுகிறது.தமிழகத்தில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனத்திற்காக 2012 மற்றும் 2013ம் ஆண்டுகளில் டி.இ.டி., தேர்வு நடத்தப்பட்டது.
2011ல் தேசிய கல்வி வாரியம் வெளியிட்ட வழிகாட்டுதல் குறிப்பில், 'அந்தந்த மாநிலம் விரும்பினால் இடஒதுக்கீடு பிரிவின் அனைவருக்கும் 5 சதவீதம் தளர்வு மதிப்பெண் வழங்கலாம்' என குறிப்பிடப்பட்டது. இதன் அடிப்படையில், 2013ல் எழுதிய தேர்வர்களுக்கு 5 சதவீத தளர்வு மதிப்பெண் வழங்கி, அரசு உத்தரவிட்டது. இதனால் தகுதி மதிப்பெண் 60 சதவீதம் (90 மதிப்பெண்) என்பதில் இருந்து 55 சதவீதமாக (82 மதிப்பெண்) குறைக்கப்பட்டது.'இது, 2013ம் ஆண்டு தேர்வு எழுதியவருக்கு மட்டும்தான்' என தெரிவிக்கப்பட்டது.

'இச்சலுகையை 20௧௨ல் தேர்வு எழுதியவர்களுக்கும் நீட்டிக்க வேண்டும்' என தேர்வர்கள் எதிர்பார்க்கின்றனர்.டி.இ.டி., தேர்வு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளில், 'அரசின் கொள்கை முடிவுப்படி 2013ல் 5 சதவீதம் தளர்வு மதிப்பெண் வழங்கியது செல்லும்' என உத்தரவிடப்பட்டது. 2012ம் ஆண்டு தேர்வில் வினாக்கள் கடினமாக இருந்தன. அந்த ஆண்டுக்கும் தளர்வு மதிப்பெண் வழங்கினால் பலர் பயன்பெறுவர் .

பள்ளிக் கல்வி - அனைத்து வகை மாணவர்களுக்கு நன்னெறி போதனை வழங்கவும் ஒவ்வொரு பள்ளியிலும் ஆலோசனைப் பெட்டி வைக்கவும் உத்தரவு - செயல்முறைகள்

அண்ணாமலைப் பல்கலைக்கழகம் -பழைய சான்றிதழ் பெற சிறப்பு முகாம்

அண்ணாமலைப் பல்கலைக்கழகம் -பழைய சான்றிதழ் பெற சிறப்பு முகாம்

Directorate of Government Examinations ESLC - Jan 2017 - Private Candidates Time Table

24/11/16

2016 - 2017 ஆம் கல்வியாண்டில் புதிதாக துவக்கப்பட உள்ள 5 துவக்கப்பள்ளிகளின் பட்டியல்

வேலை செய்யாத அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கிடையாது

புதுடில்லி:'சரியாக வேலை செய்யாத மத்திய அரசு ஊழியர்களுக்கு, ஆண்டு சம்பள உயர்வு கிடைக்காது' என, மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

லோக்சபாவில் கேள்வி ஒன்றுக்கு, மத்திய பணியாளர் நலத்துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங், நேற்று அளித்துள்ள பதிலில் கூறியுள்ளதாவது: 


சரியாக வேலை செய்யாத மத்திய அரசு ஊழியர் களுக்கு, ஆண்டு சம்பள உயர்வை நிறுத்தும்படி, ஏழாவது சம்பள கமிஷன் பரிந்துரை செய்துள்ளது; இந்தப் பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுள்ளது.

அதன்படி, மத்திய அரசு ஊழியர்களின் பணித் திறன் கணக்கிடப்படுகிறது. நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டாத ஊழியர்களின் ஆண்டு சம்பள உயர்வு நிறுத்தப்படும்.இவ்வாறு அதில் 
கூறப்பட்டுள்ளது.

ஸ்காலர்ஷிப்' தேர்வு அறிவிப்பு

சென்னை: எட்டாம் வகுப்பு மாணவர்கள், கல்வி உதவித்தொகை பெற, தேர்வு நடத்தப்படுவது வழக்கம். வெற்றி பெறும் மாணவர்களுக்கு, பிளஸ் 2 வரை, மாத உதவித்தொகை, அரசால் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான தேர்வு, 2017 ஜன., 28ல் நடத்தப்படுகிறது. விண்ணப்பங்களை,
வரும், 23 முதல், டிச., 2 வரை, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். டிச., 5க்குள், விண்ணப்பிக்க வேண்டும்..

TNPSC GR1 தேர்வுக்கு டிகிரி மட்டும் படித்திருந்தால் தகுதி அல்ல; பதவி சார்ந்த சிறப்பு படிப்புகளையும் படித்திருக்க வேண்டும்

குருப் 1 தேர்வர்களுக்கு வணக்கம்..

பல வருடங்களாக நடைமுறையில் இருந்த டிஎன்பிஎஸ்சி குருப் 1 தேர்வுகளுக்கான கல்வித்தகுதி டிகிரியாக இருந்ததை எவ்வித அறிவிப்புமின்றி ரத்து செய்துள்ளது. ..
தற்போது அந்தந்த பதவிகளுக்குறிய சிறப்பு படிப்புகளையும் படித்து முடித்திருக்க வேண்டும்.

உதாரணமாக சட்ட அலுவலர் பணிக்கு பிஏ,பிஎல் அல்லது எல்எல்பி முடித்திருக்க வேண்டும். .

விரிவான விளக்கத்திற்கான படம்.

சிறுசேமிப்பு டெபாசிட் செய்ய பழைய நோட்டுக்கு தடை

சிறுசேமிப்புதிட்டங்களில் பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டு டெபாசிட் செய்யக்கூடாது என்று நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்துநிதியமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பழையரூ.500, ரூ.1,000 நோட்டை சிறுசேமிப்பு திட்டங்களில்துவங்கப்பட்ட கணக்குகளில் டெபாசிட் செய்வது தொடர்பாக நிதியமைச்சகம்ஆலோசனை நடத்தியது. இதில், சிறு சேமிப்புதிட்டங்களில் இந்த நோட்டை டெபாசிட்செய்ய அனுமதிக்க தேவையில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளதுஎன்று கூறப்பட்டுள்ளது.

Post Office Savings Accounts are excluded to Deposit of old demonetized notes of Rs. 500 and Rs. 1000 - Finmin Order dtd 23/11/2016

டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 125 ஆவது பிறந்த நாள் விழா 26.11.2016 கொண்டாடுதல் குறித்து கடிதம்




Today All HM"s SSA Training School Entries Website Link....

IGNOU HALL TICKET DOWNLOAD DEC-2016 EXAM

வேலை செய்யாத அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கிடையாது

புதுடில்லி:'சரியாக வேலை செய்யாதமத்திய அரசு ஊழியர்களுக்கு, ஆண்டுசம்பள உயர்வு கிடைக்காது' என, மத்திய அரசு தெரிவித்து
உள்ளது.

லோக்சபாவில் கேள்வி ஒன்றுக்கு, மத்தியபணியாளர் நலத்துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங், நேற்று அளித்துள்ளபதிலில் கூறியுள்ளதாவது:

சரியாகவேலை செய்யாத மத்திய அரசுஊழியர் களுக்கு, ஆண்டு சம்பள உயர்வைநிறுத்தும்படி, ஏழாவது சம்பள கமிஷன்பரிந்துரை செய்துள்ளது; இந்தப் பரிந்துரையை மத்தியஅரசு ஏற்றுள்ளது.

அதன்படி, மத்திய அரசு ஊழியர்களின் பணித்திறன் கணக்கிடப்படுகிறது. நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டாத ஊழியர்களின்ஆண்டு சம்பள உயர்வு நிறுத்தப்படும்.இவ்வாறு அதில்

கூறப்பட்டுள்ளது.

PGTRB:-முதுநிலை ஆசிரியர் நியமனம்: ஒரு வாரத்தில் அறிவிப்பு

தமிழ்நாடுஆசிரியர் கல்வி வாரியமான, டி.ஆர்.பி., மூலம், 1,500 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பு, ஒருவாரத்தில் வெளியாக உள்ளது.தமிழகத்தில், அரசு மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு, பாடம்எடுக்கும், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களில்,
1,500 இடங்கள் காலியாக உள்ளன. 'விரைவில் நேரடி நியமனம் நடக்கும்' என, மார்ச்சில், டி.ஆர்.பி., அறிவித்தது. ஆனால், இதுவரை நியமனபணிகள் துவங்கவில்லை.

இதுகுறித்து, பள்ளிக்கல்வி உயர் அதிகாரிகளிடமிருந்து, டி.ஆர்.பி.,க்கு கடிதம்அனுப்பப்பட்டுள்ளது. இதனால், முதுநிலை ஆசிரியர்நேரடி நியமனத்திற்கான அறிவிப்பை, டி.ஆர்.பி., ஒரு வாரத்தில் வெளியிடும் என, கல்வித்துறை வட்டாரங்கள்தெரிவித்தன.

CCE - SECOND WORK SHEET EVALUVATION - ENGLISH MEDIUM -Maths,Science & Social

ரேஷனில் 'ஆதார்' விபரம் தராதது ஏன் வீடுகளில் ஆய்வு செய்ய அதிகாரிகள் முடிவு


ரேஷன் கடைகளில், ஆதார் விபரம் தராமல்இருப்பதால், வீடுகளில் ஆய்வு செய்ய, உணவுதுறை முடிவு செய்துள்ளது.

தமிழக ரேஷன் கடைகளில், இலவசஅரிசி வழங்கப்படுகிறது. ரேஷனில்
வழங்க, மாதத்துக்கு, 3.25 லட்சம் டன் அரிசி தேவை. இதற்காக, தமிழக அரசு, ஆண்டுக்கு, 3,450 கோடி ரூபாய் செலவு செய்கிறது. கடந்த, 1ல் இருந்து, உணவுபாதுகாப்பு சட்டம் அமலானதால், ஐந்துமற்றும் அதற்கு மேல் உள்ளகுடும்பங்களுக்கு, கூடுதலாக இலவச அரிசி வழங்கப்படுகிறது. இதனால் அரசுக்கு, 1,193 கோடி ரூபாய் கூடுதல்செலவாகும்.


அரிசி கார்டு வைத்துள்ள பலர், ரேஷன் பொருள் வாங்காததால், ஊழியர்கள்முறைகேடு செய்கின்ற னர். இதை தடுக்க,'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு வழங்கப்பட உள்ளது.

அதன் ஒரு பகுதியாக, ரேஷன்கடை களில், 'பாயின்ட் ஆப்சேல்' கருவி வழங்கப்பட்டுள் ளது. அதில், ரேஷன் கார்டுதாரரின், 'ஆதார்' விபரம் பதியப்படுகிறது. பலர், ஆதார் விபரம்தராமல் உள்ளதால், வீடுகளில் ஆய்வு நடத்த, உணவுதுறை முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து, உணவு துறை அதிகாரி ஒருவர்கூறியதாவது:இன்றையநிலவரப்படி, 2.09 கோடி ரேஷன் கார்டுகளில்,7.90 கோடி உறுப்பினர்கள் உள்ளனர்.

அதில், 5.20 கோடி பேர் ஆதார் விபரம்தந்துள் ளனர்; மற்றவர்கள் தரவில்லை. அதாவது, 83 லட்சம் ரேஷன் கார்டுகளுக்குமட்டுமே, ஆதார் விபரம் தரப்பட்டுள்ளது.


இதனால்,ஸ்மார்ட் கார்டு அச்சிடும் பணிதாமத மாகி வருகிறது. ஏன்ஆதார் விபரம் தராமல் உள்ளனர்என்பதை கண்டறிய, டிச., முதல், வீடுகளில்ஆய்வு செய்யப்படும். ரேஷன் கடைக்கு செல்லாமல், டி.என்.இ.பி.டி.எஸ்., என்ற, 'மொபைல் போன் ஆப்' மூலமும், ஆதார் விபரம் பதியலாம். அதை, பலர் பயன்படுத்தா மல் உள்ளனர்.இவ்வாறுஅவர் கூறினார்.

CCE - SECOND WORK SHEET EVALUVATION தேர்வின் MODEL QUESTION PAPER (PRINTABLE COPY WITHOUT WATERMARK)

மீண்டும் போராட்டத்தில் ஆசிரியர் சங்கங்கள்-DINAMALAR

புதிய ஓய்வூதிய திட்டத்தைரத்துசெய்யக்கோரி, ஆசிரியர்சங்கத்தினர்போராட்டங்களைதுவங்கியுள்ளதால், பள்ளிகல்வித்துறைக்கு, மீண்டும்நெருக்கடிஏற்பட்டுள்ளது.

கோரிக்கை : புதியபங்களிப்புஓய்வூதியதிட்டம்ரத்து, அகவிலைப்படி
உயர்வு, ஆசிரியர்கள்பணியிடத்தைநிரப்புதல்உள்ளிட்டகோரிக்கைகளைவலியுறுத்தி, கடந்தஆண்டு, ஆசிரியர்கள்நடத்தியதொடர்போராட்டம், தமிழகஅரசுக்கும், பள்ளிக்கல்வித்துறைக்கும்கடும்நெருக்கடியைஏற்படுத்தியது. சங்கங்களுடன்அரசுபேச்சுநடத்தி, பிரச்னையைதற்காலிகமாகமுடிவுக்குகொண்டுவந்தது. 
இந்நிலையில், ஆசிரியர்சங்கங்கள்மீண்டும்போராட்டத்தைதுவங்கியுள்ளன. தமிழ்நாடுமுதுநிலைபட்டதாரிஆசிரியர்கழகம், இருவாரங்களுக்குமுன், போராட்டத்தைதுவக்கியது. தமிழகஆரம்பபள்ளிஆசிரியர்கூட்டணி, 20ம்தேதி, மாவட்டதலைநகரங்களில், ஆர்ப்பாட்டம்நடத்தியது.

ஆலோசனை : தமிழ்நாடுஉயர்நிலைமற்றும்மேல்நிலைப்பள்ளிபட்டதாரிஆசிரியர்கழகம், வரும், 25ம்தேதியும், தமிழ்நாடுதொடக்கப்பள்ளிஆசிரியர்மன்றம், வரும், 27ம்தேதியும், போராட்டங்களைஅறிவித்துள்ளன. பிறஆசிரியர்சங்கங்களும்போராட்டத்திற்குதயாராகிவருகின்றன. பள்ளிகளில், அரையாண்டுதேர்வுதுவங்கஉள்ளது. இறுதிமற்றும்பொதுத்தேர்வுக்குமாணவர்கள்தயாராகும்நிலையில், ஆசிரியர்சங்கங்கள்மீண்டும், போராட்டத்தில்குதித்துள்ளது, கல்விஅதிகாரிகளைகவலையில்ஆழ்த்தியுள்ளது. இதற்கு, எப்படிதீர்வுகாண்பதுஎன, அவர்கள்ஆலோசித்துவருகின்றனர்.

23/11/16

பள்ளிகள் விளையாட்டு போட்டிக்கு ரூ.10 கோடி

பள்ளிகளுக்குஇடையிலான விளையாட்டு போட்டிகள் நடத்துவதற்கு ரூ.10 கோடியை பள்ளிக்கல்வித்துறைஒதுக்கியுள்ளது. மாநிலத்திலுள்ள 67 கல்வி மாவட்டங்களில் அனைத்துபள்ளிகளிலும் ஆண்டுதோறும்
குறுவட்ட விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
பின் கல்வி மாவட்ட அளவிலும், மண்டல அளவிலும் விளையாட்டு போட்டிகள் நடக்கும். அதில் பங்கேற்று வெற்றிபெரும் மாணவ - மாணவிகள் மாநிலஅளவில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்கின்றனர். நிதிஒதுக்கீடு: குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளுக்குரூ.2 கோடியே 64 லட்சத்து 9 ஆயிரத்து 300ம், கல்வி மாவட்டஅளவிலான விளையாட்டு போட்டிகளுக்கு ரூ.79 லட்சத்து 83 ஆயிரத்து50 ஒதுக்கப்பட்டுள்ளது. மண்டல அளவிலான போட்டிகளைநடத்துவதற்கு ரூ.2 கோடியே 58 லட்சத்து12 ஆயிரத்து 600 ஒதுக்கப்பட்டுள்ளது.

அதேபோல்மாவட்ட குடியரசுதின, பாரதியார் தின குழு விளையாட்டுப்போட்டிகள் நடத்த ரூ.2 கோடி16 லட்சத்து 4 ஆயிரத்து 300 ஒதுக்கப்பட்டுள்ளது. இந்திய பள்ளிகளுக்கான விளையாட்டுகுழுமம் நடத்தும் போட்டிகளில் பங்கேற்கும் செலவினங்களுக்காக ரூ.ஒரு கோடியே96 லட்சத்து 30 ஆயிரத்து 690 என மொத்தம் ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

பள்ளிகள் விளையாட்டு போட்டிக்கு ரூ.10 கோடி

பள்ளிகளுக்குஇடையிலான விளையாட்டு போட்டிகள் நடத்துவதற்கு ரூ.10 கோடியை பள்ளிக்கல்வித்துறைஒதுக்கியுள்ளது. மாநிலத்திலுள்ள 67 கல்வி மாவட்டங்களில் அனைத்துபள்ளிகளிலும் ஆண்டுதோறும்
குறுவட்ட விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
பின் கல்வி மாவட்ட அளவிலும், மண்டல அளவிலும் விளையாட்டு போட்டிகள் நடக்கும். அதில் பங்கேற்று வெற்றிபெரும் மாணவ - மாணவிகள் மாநிலஅளவில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்கின்றனர். நிதிஒதுக்கீடு: குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளுக்குரூ.2 கோடியே 64 லட்சத்து 9 ஆயிரத்து 300ம், கல்வி மாவட்டஅளவிலான விளையாட்டு போட்டிகளுக்கு ரூ.79 லட்சத்து 83 ஆயிரத்து50 ஒதுக்கப்பட்டுள்ளது. மண்டல அளவிலான போட்டிகளைநடத்துவதற்கு ரூ.2 கோடியே 58 லட்சத்து12 ஆயிரத்து 600 ஒதுக்கப்பட்டுள்ளது.

அதேபோல்மாவட்ட குடியரசுதின, பாரதியார் தின குழு விளையாட்டுப்போட்டிகள் நடத்த ரூ.2 கோடி16 லட்சத்து 4 ஆயிரத்து 300 ஒதுக்கப்பட்டுள்ளது. இந்திய பள்ளிகளுக்கான விளையாட்டுகுழுமம் நடத்தும் போட்டிகளில் பங்கேற்கும் செலவினங்களுக்காக ரூ.ஒரு கோடியே96 லட்சத்து 30 ஆயிரத்து 690 என மொத்தம் ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

2.5 லட்சத்திற்கும் மேல் வங்கி கணக்கில் நீங்கள் செலுத்திய பணத்திற்கு நோட்டிஸ் வந்தால் பயப்பட வேண்டாம்

சரியாக வரி செலுத்தி வருகிறீர்கள் மற்றும் கணக்கில் இப்போது பணத்தை செலுத்தி இருக்கிறீர்கள் என்றால் இதைக் கண்டு
அஞ்சத் தேவை இல்லை

மத்தியநேரடி வரிகள் வாரியம்(CBDT)
அன்மையில்வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்ட அளவிற்கு அதிகமாக வங்கி கணக்கில்பணத்தைச் செலுத்துபவர்களின் விவரத்தைப் பெற்று அவர்களுக்கு நோட்டிஸ்அனுப்பி வருகிறது. இதைக் கண்டு பலர்அஞ்சுகின்றனர். ஆனால் நீங்கள் சரியாகவரி செலுத்தி வருகிறீர்கள் மற்றும் கணக்கில் இப்போதுபணத்தை செலுத்தி இருக்கிறீர்கள் என்றால் இதைக் கண்டுஅஞ்சத் தேவை இல்லை.

2.5 லட்சம் மற்றும் 12.5 லட்சம் கணக்கில் செலுத்திய வாடிக்கையாளர்கள்
நவம்பர் 9 ஆம் தேதி முதல் டிசம்பர் 30 ஆம் தேதி வரை வங்கிகளில் 2.5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொகையை வங்கி கணக்கில் செலுத்தியவர்கள் மற்றும் நிரந்தர வைப்பு நிதி கணக்கில் செலுத்தியவர்கள் விவரங்களை மத்திய அரசு பெற்றுள்ளது. இதேப் போன்று நடப்பு கணக்குகளில் 12.5 லட்சத்திற்கும் அதிகமாகக் கணக்கில் செலுத்தியவர்களின் விவரங்களையும் மத்திய அரசு கேட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பான் கட்டாயம்
ஒரே நாளில் 50,000 ரூபாய்க்கும் அதிகமாக பணம் செலுத்துவோர்அனைவருக்கும் பான் எண் கட்டாயம்ஆக்கப்பட்டுள்ளது.

பயப்படவேண்டாம்
அதிக பனத்தை கணக்கில் செலுத்தியதற்காகஉங்களுக்கு நோட்டிஸ் அனுப்பட்டால் நீங்கள் பயப்பட வேண்டாம்என்று கூறுகிறார் அஷோக் மகேஷ்வரி அஸ்சோசியேட்ஸ்நிறுவன கூட்டாளர் அம்ரித் மகேஷ்வரி. இந்தநோட்டிஸ் நீங்கள் வைத்துள்ள பணத்திற்கானவருவாய் எப்படி வந்தது சரியானமுறையில் வரி செலுத்தி உள்ளீர்கள்என்பதைச் சரி பார்க்க மட்ட்மேஎன்றும் அவர் கூறினார். ஒருவேலை உங்களிடம் சரியான் விவரங்கள் இல்லைஎன்றால், அதற்கான வரி செலுத்தப்படவில்லைஎன்றால் அபராதம் போன்றவற்றை செலுத்தநேரிடம் என்று டெலாய்ட் ஹஸ்கின்ஸ்& செல்ஸ் நிறுவன கூட்டாளர் திவ்யாபாவெஜா தெரிவித்துள்ளார்.

ஒரு முறைகூட வருமான வரிசெலுத்தாதவராக இருப்பின்

 இதுவரை ஒரு முறைகூட வருமான வரி செலுத்தாததனிநபராக நீங்கள் இருந்தால் பிரிவு142(1)-இன் கீழ் உங்களுக்கு நோட்டிஸ்அனுப்பப்படும். இதற்கான பணத்திற்கு சரியானஆவணங்களைச் சமர்ப்பித்து நீங்கள் வரி செலுத்தவேண்டி வரும். இதுவே பிரிவு143(2) -இன் கீழ் உங்களுக்கு நோட்டிஸ்அனுப்பப்பட்டால் உங்களது கணக்காளர் அல்லதுவழக்கறிஞரை அனுப்பி விளக்கம் அளிக்கவேண்டும்.

நற்சான்றிதழ்
உங்கள்கணக்கு விவரங்கள் பற்றிய விளக்கங்களுக்கு அலுவலர்திருப்தி அடைந்தால் அவர் நற்சான்றிதழ் வழங்குவார், இல்லை என்றால் தகவல் அளிக்கப்பட்டவருமானம் மற்றும் உன்மையான வருமானத்தில்வித்தியாசம் இருக்கும் நிலையில் வரி செலுத்த வேண்டிப்பிரிவு 156-இன் கீழ் நோட்டிஸ்அனுப்பப்படும்.

அபராதம்
ஒரு வேலை நோட்டிஸ் ஏதும்பெறவில்லை என்றால் வருமான வரிஅலுவலர் தனது சொந்த மதிப்பீட்டைவைத்து வரியைக் கணக்கிட்டு முடிப்பார். ஒரு வேலைப் பிரிவு 142(1)-இன்கீழ் நோட்டிஸ் பெறப்பட்டால் பணம், பொன், ஆபரணங்கள், பிற மதிப்புமிக்க சொத்துக்கள் போன்றவையின் வருமானம் நீங்கள் ஏதேனும் சரியாகசெலுத்தவில்லை என்று அதற்கான வரியைச்செலுத்த கோரிக்கை அனுப்பப்படும். ஒருவேலை வருமான வரித்துறைதனது அதிகாரத்தைப் பயன்படுத்தி சரியான விவரம் அளிக்கப்படாதவருமானத்தை முடக்கவும் வாய்ப்புள்ளதாக எம்டிபி & பார்ட்னர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக கூட்டாளர் நிசித்துருவா தெரிவித்துள்ளார்.

கணக்கில்வைத்துள்ள தொகைக்கும் வருமானத்திற்குத் தொடர்பு இல்லை என்றால்..?
கணக்கில்வைத்துள்ள தொகைக்கும் வருமானத்திற்குத் தொடர்பு இல்லை என்றால்பிரிவு 143(2)-இன் கீழ் னோட்டிஸ்அனுப்பப்படும். இது உங்கள் வருமானவரி தாக்கல் விசாரணைக்கு உட்பட்டதாகஅர்த்தம். இப்படிப்பட்ட சூழலில் மதிப்பிடும் அதிகாரிஉங்கள் வங்கி கணக்கு விவரங்கள்மற்றும் புத்தகங்களை கேட்கக் கூடும். இதன்அடுத்த படியாக நீங்கள் மதிப்பீட்டுஅதிகாரியைத் தொடர்பு கொண்டு சரியானஆதாரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

பறிமுதல்
உங்கள்வருமான வரி கணக்கு மதிப்பீடுசெய்யப்பட்ட பிறகு பிரிவு 148-இன்கீழ் நோட்டிஸ் அனுப்பப்படும். ஒருவரின் வருமானத்தில் மதிப்பீட்டு அலுவலர் ஏதேனும் குற்றம்கண்டறிந்தால் இந்த நோட்டிஸ் அனுப்பப்படும். இதன் கீழ் வராத சொத்துக்கள்அனைத்தும் ஆராய்ந்து பறிமுதல் செய்யப்படும்.

ஆறு வருடத்தில் 1 லட்சத்திற்கும் அதிகமாக வருமானத்தில் காட்டப்படாதபணம் இருப்பதாகக் கண்டறியும்பட்சத்தில் சமந்த பட்ட மதிப்பீட்டுஆண்டில் இருந்து நான்கு வருடத்திற்குள்பிரிவு 148-இன் கீழ் நோட்டிஸ்அனுப்பப்படும். இதுவே இந்தச் சொத்துக்கள்வெளிநாட்டில் இருந்து இருக்கும்பட்சத்தில் 16 வருடங்களுக்குள் நோட்டிஸ்அனுப்பப்படும்.

அபராதத்தில்இருந்து விலக்கு

பணம் மாற்றத்திற்கான அறிவிப்பு வந்ததில் இருந்து சில வரிவல்லுநர்கள் பிரிவு 69(A), 69(B) மற்றும் 69(C)-இன் கீழ் விவரிக்கமுடியாத பண வரவுகள், முதலீடு, செலவு, முதலியனவற்றைத் தானாக முன்வந்து காட்டுவதினால்அபராதத்தில் இருந்து விலக்கு பெறலாம்என்று ஆலோசனை வழங்குகின்றனர். ஆனால் இதற்கு அனைத்து வரிவல்லுநர்களும் ஒப்புக்கொள்வது இல்லை. மதிப்பீட்டு அலுவலர்தான்இதனை முடிவு செய்ய வேண்டும்என்றும் அப்போது தான் சரியானமுறையில் மூலப் பணம், சேவைவரி, வாட் போன்றவை விவரங்கள்பெறப்பட்டு சுமுகமாகச் சிக்கல்கள் தீரும் என்றும் கூறுகின்றனர்.

மத்தியஅரசின் நடவடிக்கை எப்படி இருக்கும்?


மத்தியஅரசு கண்டிப்பாக கருப்புப் பணம் வைத்துள்ளவர்களின் மீதுநடவடிக்கை எடுக்கும் என்றும் சில வழக்குகளில்மட்டும் அபராதம் போன்றவையால் பணமோசடி சட்டம், 2002-இன் கீழ் குறைக்கவழி எடுக்கும் என்று மகேஷ்வரி கூறுகிறார்.

2016 - 2017 ஆம் கல்வியாண்டில் புதிதாக துவக்கப்பட்டுள்ள 5 துவக்கப்பள்ளிகளின் பட்டியல், அதனைச் சார்ந்த செயல்முறைகள்






G.O : 202 - மாண்புமிகு முதலமைச்சரின் அறிவிப்பு - 5 புதிய துவக்கப்பள்ளிகள் மற்றும் அப்பள்ளிகளுக்கான ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவித்தல் - அரசாணை வெளியீடு


CEO-TRANSFER

2016 - 2017 ஆம் கல்வியாண்டில் புதிதாக துவக்கப்பட்டுள்ள 5 துவக்கப்பள்ளிகளின் பட்டியல்-

CCE - SECOND WORK SHEET EVALUVATION - ENGLISH MEDIUM -Maths,Science & Social

CCE - SECOND WORK SHEET EVALUVATION தேர்வின் MODEL QUESTION PAPER (PRINTABLE COPY WITHOUT WATERMARK)

CEO TRANSFER and PROMOTION ORDER



அரசு ஊழியர்களுக்கு மாத சம்பளம் ரொக்கமாக வழங்கப்படாது - சக்தி காந்த தாஸ்

நாடு முழுவதும் மின்னணு பண பரிவர்த்தனையைநடைமுறைப்படுத்துவதே மத்திய அரசின் நோக்கம்என்று
பொருளாதாரவிவகாரங்கள் துறை செயலர் சக்திகாந்த தாஸ்
கூறியுள்ளார்.

டெல்லி: அரசு ஊழியர்களுக்கு மாதச்சம்பளம் ரொக்கமாக வழங்கப்படாது என்று சக்தி காந்ததாஸ் அறிவித்துள்ளார். நாடு முழுவதும் அரசுஅலுவலகங்களில் மின்னணு பண பரிவர்த்தனையைநடைமுறைப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
500 மற்றும்1000 ரூபாய் நோட்டுக்களுக்கு தடை விதிக்கப்பட்டதை அடுத்துநாடுமுழுவதும் சில்லறை ரூபாய் நோட்டுக்களுக்குதட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சிறு வியாபாரிகள், விவசாயிகள், வர்த்தகர்கள், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகிவருகின்றனர். அடுத்த மாதம் சம்பளப்பணத்தைஎப்படி வங்கியில் இருந்து எடுப்பது? ஏடிஎம்கள்செயல்படுமா? என்று கேள்வி எழுந்துள்ளது. எனவே மாத சம்பளத்தை ரொக்கமாகவழங்க வேண்டும் என்று மத்திய, மாநிலஅரசு ஊழியர்கள் வழியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசியசக்தி காந்த தாஸ், ரூபாய்நோட்டு விவகாரம் தொடர்பாக மிக முக்கிய அறிவிப்புகளைவெளியிட்டுள்ளார்.

CCE - MATHS KEY ANSWER -second week (1 to 8)

G.O Ms : 114 - அரசு ஊழியர்கள் மற்றும் குடும்பத்தார் PASSPORT பெற/புதுப்பிக்க துறை அனுமதி பெறவேண்டும் - அரசாணைமற்றும் படிவங்கள் வெளியீடு

10th Std Hon'ble Chief Minister's Study Materials - Tamil Medium / English Medium (Revised)

10th Standard
SubjectTamil
Medium
English
Medium
Tamil
Download
English
Download
Maths
Download

Download
Science
Download

Download
Social Science
Download

Download

உரத்த சிந்தனை

ஒரு ஊருல ஒரு முனிவர் இருந்தாரு

ஒரு தந்தை தனது மகளின் திருமண விழாவில் ஆற்றிய உரையை ஃபேஸ்புக் பகிர்வில் படிக்க நேர்ந்தது

ஒருவர் ஆரோக்யமாக இருக்கின்றாரா?