யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

25/10/17

ஏழாவது ஊதியக்குழு பள்ளிக்கல்வித் துறைக்கான Special pay.

                                                    

டிசம்பர் முதல் அனைத்து பள்ளிகளிலும் ஸ்மார்ட் வகுப்பறைகள் : அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

டிசம்பர் முதல் அனைத்து பள்ளிகளிலும் ஸ்மார்ட் வகுப்பறைகள் தொடங்கப்படும் 
என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஜனவரி முதல் ரூ.486 கோடி செலவில் அனைத்து பள்ளிகளும் கணினி மயமாக்கப்படும் என சென்னை அசோக்நகரில் பள்ளி விழா ஒன்றில் அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். நவம்பர் 15-ம் தேதி முதல் பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்படும் என செங்கோட்டையன் கூறியுள்ளார்.*

24/10/17

கட்டமைப்பு வசதி இல்லாத 400 ஐ.டி.ஐ.,களின் அங்கீகாரம் ரத்து!!

புதுடில்லி: கட்டமைப்பு வசதி இல்லாத, 400 ஐ.டி.ஐ.,களின் அங்கீகாரத்தை
, மத்திய அரசு ரத்து செய்துள்ளது.

நாட்டிலுள்ள, 13 ஆயிரம், ஐ.டி.ஐ., எனப்படும், தொழிற் பயிற்சி மையங்களில், 70 லட்சம் மாணவர்கள், பல்வேறு பயிற்சிகளை பெற்று வருகின்றனர். மத்திய அரசின் திறன் வளர்ச்சித் துறையின் கீழ் இயங்கும், என்.சி.வி.டி., எனப்படும், தேசிய தொழிற்பயிற்சி கவுன்சில், தனியார் ஐ.டி.ஐ.,களை ஆய்வு செய்து, அங்கீகாரம் வழங்கி வருகிறது. ஐ.டி.ஐ.,களின் கட்டமைப்பு வசதி, பயிற்சியாளர்கள் தகுதி ஆகியவற்றை ஆய்வு செய்து, தரச் சான்று வழங்கும் முறை, சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.

இதுகுறித்து, மத்திய திறன் வளர்ச்சி மற்றும் தொழில் முனைவோர் துறை அமைச்சகத்தின் இணை செயலாளர், ராஜேஷ் அகர்வால் கூறியதாவது: என்.சி.வி.டி., ஆய்வில், 5,100, ஐ.டி.ஐ.,கள், தரச்சான்று பெற்றுள்ளன. போதுமான, கட்டமைப்பு வசதியும், தகுதியான பயிற்சியாளர்களும் இல்லாத, 400 ஐ.டி.ஐ.,களின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

ரூ.50 ஆயிரத்துக்கு மேல் டெபாசிட் செய்தால் அசல் ஆவணம் கட்டாயம்: வங்கிகளுக்கு மத்திய அரசு உத்தரவு!!

மத்திய அரசு மேற்கொண்டு வரும் கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையில் அடுத்த கட்டமாக வங்கிகளும்,
நிதி நிறுவனங்களும் தங்கள் வாடிக்கையாளர்களின் அசல் அடையாள ஆவணங்களையும் சரிபார்க்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
எனவே, இனி வங்கியில் ரூ.50,000-க்கு மேல் பணத்தை டெபாசிட் செய்வது, புதிதாக வங்கிக் கணக்கு தொடங்குவது, கடன்களைத் திருப்பிச் செலுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளின்போது வாடிக்கையாளர்கள் தங்கள் அடையாள ஆவணத்தின் நகல்களுடன், அதன் அசலையும் எடுத்துச் செல்ல வேண்டும். போலியான அடையாள ஆவணத்தின் மூலம் வங்கிக் கணக்குத் தொடங்குவது, பணப் பரிவர்த்தனைகளில் ஈடுபடுவது உள்ளிட்டவற்றைத் தடுக்கும் நோக்கில் மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இது தொடர்பாக கருப்புப் பணத் தடுப்புச் சட்ட விதிகளில் சில திருத்தங்களைச் செய்து அரசாணை ஒன்றை மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ளது.
வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்கள், நிதி சார்ந்த சேவைகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களிடம் இருந்து அடையாள அட்டை ஆவணங்களின் நகல்களைப் பெறும்போது, அசல் ஆவணத்தையும் பார்த்து உறுதி செய்வதுடன், அந்த ஆவணங்களை முறையாகப் பராமரிக்க வேண்டும். இது தவிர வாடிக்கையாளர்களிடம் பெற்ற தகவல்களை இந்திய நிதிப் புலனாய்வுப் பிரிவுக்கும் அனுப்ப வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
பங்குச் சந்தை முகவர்கள், சீட்டு நிறுவனங்கள், கூட்டுறவு வங்கிகள், வீட்டுக் கடன் நிறுவனங்கள் உள்ளிட்டவற்றுக்கும் இந்த உத்தரவு பொருந்தும்.
புதிதாக வங்கிக் கணக்கு தொடங்குவதற்கும், ரூ.50 ஆயிரத்துக்கு மேற்பட்ட பணப்பரிமாற்றத்துக்கும் ஆதார் உள்ளிட்ட முக்கிய அடையாள ஆவணங்கள் கட்டாயமாகும். வெளிநாட்டு கரன்சிகள் மூலம் ரூ.10 லட்சம் மதிப்புக்கு மேல் ரொக்கப் பரிமாற்றம் இருந்தால் ஆதாரை கண்டிப்பாக சமர்ப்பிக்க வேண்டும்.
மின்னணு முறையில் வெளிநாட்டுக்கு ரூ.5 லட்சத்துக்கு மேல் பணம் அனுப்புவது மற்றும் பெறுவது, பொருள்கள் வாங்குவது மற்றும் விற்பனை செய்வது; ரூ.50 லட்சத்துக்கு மேல் மதிப்புள்ள அசையாத சொத்துகளை வெளிநாட்டில் வாங்குவது ஆகியவற்றுக்கும் இந்த விதிகள் உண்டு.
மேலும், இருப்பிடத்தை உறுதி செய்யும் ஆவணமாக ஏற்றுக் கொள்ளப்படும் மின் கட்டணம், தொலைபேசி கட்டணம், போஸ்ட் பெய்டு செல்லிடப்பேசி கட்டணம், காஸ் இணைப்பு, குடிநீர் இணைப்பு உள்ளிட்டவற்றுக்கான ஆவணங்கள் 2 மாதங்களுக்கு முந்தையதாக இருந்தால் அவை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு !!

ஆர்பிஐ வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . ஆர்பிஐ வங்கியின்
வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்க அறிவிக்கையை பின்ப்பற்ற வேண்டும். ரிசர்வ் வங்கியில் அஸிஸ்டெண்ட்பணியிடங்கள் நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது . ஆர்பிஐ    இந்திய ரிசர்வ் வங்கியில் விண்ணப்பிக்க விண்ணப்ப கட்டணமாக பொது பிரிவினர் ரூபாய் 450 செலுத்த வேண்டும். ஆர்பிஐ வங்கியில் விண்ணப்பிக்க எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூபாய் 50 செலுத்தினால் போதுமானது ஆகும்.ஆர்பிஐ வங்கியில் வேலைவாய்ப்பு பெற 20 வயது முதல் 28 வயது வரை வரம்புகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அந்ந்த பிரிவுகளுக்கு வயது வரம்பு தளர்வுகளும் உண்டு . ஆர்பிஐ வங்கியில் அஸிஸ்டெண்ட் பணிக்கு விண்ணப்பிக்க தொடக்க தேதியானது அக்டோபர் 18 முதல் நவம்பர் 10 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் . ஆர்பிஐ வங்கியின் முதண்மை தேர்வு நவம்பர் 27, 28/2017 ல் நடைபெறுகிறது. ஆர்பிஐ வங்கியின் மெயின்ஸ் தேர்வு என அழைக்கப்படும் முக்கிய தேர்வு டிசம்பர் 20, 2017 ஆம் நாள் நடைபெறுகிறது. ஆர்பிஐ வங்கியின் அறிவிக்கப்பட்ட வேலைவாய்ப்பு அஸிஸ்டெண்ட் பணியிடங்கள் மொத்தம் 632 ஆகும். இந்தியாவில் ஹைதிராபாத், அகமதாபாத், திருவனந்தபுரம் , கொச்சின் போன்ற இடங்களில் பணிவாய்ப்பு இடங்கள் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் சம்பளத்தொகையாக மாதம் ரூபாய் 13150 முதல் 34990 வரை பெறலாம்.   இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பத்தாரர் குறைந்த பட்சம் அங்கிகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் 55% மதிபெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் விண்ணப்பத்தாரர் ஆன்லைனில் முதண்மை தேர்வு மற்றும் முக்கிய தேர்வு அத்துடன் மற்ற  முறைகளின் படி தேர்வு செய்யப்படுவார்கள் , விண்ணப்பிக்க விருப்பமுள்ளோர் நேரடியாக விண்ணப்பிக்கலாம் . அதிகாரபூர்வத்தளத்தின் இணைப்பு கொடுத்துள்ளோம். விண்ணப்பிக்கவும் இணைய இணைப்பு இங்கு இணைத்துள்ளோம். இந்திய ரிசர்வ் வங்கியில் பணியிற்கு விண்ணப்பிக்க அறிவிக்கையையும் இணைத்துள்ளோம் . நவம்பர் 11 விண்ணப்பிக்க இறுதி தேதி ஆகும் .

Read more at: https://tamil.careerindia.com/jobs/job-notification-of-rbi-002821.html

வருமான உச்ச வரம்பு ரூ.8 லட்சமாக உயர்வு!!!

மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில், ஆதி திராவிடர்,
மிக பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதில், எம்.பி.சி., எனப்படும், மிக பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாணவர்களுக்கு, 'கிரீமிலேயர்' என்ற, வருமான உச்சவரம்பு பயன்படுத்தப்படுகிறது.

மாணவர்களின் பெற்றோர், ஆண்டுக்கு, ஆறு லட்ச ரூபாய் என, மூன்று ஆண்டுகளுக்கு மேல் பெற்றால், அவர்கள், 'கிரீமிலேயர்' வரம்பில் வருவர் என்பதால், இட ஒதுக்கீடு வழங்கப்படாது.
இந்நிலையில், தற்போது பொருளாதார முன்னேற்றம், விலைவாசி உயர்வு, தனிநபர் வருமான வரம்பு அதிகரிப்பு போன்றவற்றால், 'கிரீமிலேயர்' வருமான வரம்பை அதிகரிக்க, கோரிக்கைகள் எழுந்தன. இதன்படி, ஆண்டுக்கு, ஆறு லட்ச ரூபாய் என்பது, எட்டு லட்ச ரூபாயாக, வருமான உச்ச வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. வரும் கல்வியாண்டு முதல், இந்த வருமான வரம்பு அடிப்படையில், இட ஒதுக்கீட்டில் மாணவர்கள் சேர்க்கப்பட வேண்டும் என, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.

டூவிலர் பின் இருக்கைக்குத் தடை!!!

கா்நாடகாவில் திறன் குறைந்த இருசக்கர வாகனங்களில் பின்னால் 
உள்ள இருக்கைகளுக்குத் தடை விதிக்க முடிவு செய்துள்ளதாக அம்மாநில அரசு நேற்று (அக்டோபர் 22) அறிவித்துள்ளது.

சாலை விபத்துக்களின்போது, இருசக்கர வாகனங்களை ஓட்டிச் செல்பவரைவிட, பின்னால் இருப்பவரே அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். 100 சி.சிக்கும் குறைவான 25% இருசக்கர வாகனங்களால் விபத்து ஏற்படுகிறது. இதனால், பின் இருக்கைக்குத் தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 100 சி.சிக்கும் குறைவான இருசக்கர வாகனங்களில் பின் இருக்கைகளுக்குத் தடை விதிக்க, கர்நாடக மாநில மோட்டார் வாகனச் சட்டத்தில் கடந்த 1996ஆம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால், அதை நடைமுறைப் படுத்தப்படவில்லை என கர்நாடக மாநிலப் போக்குவரத்து ஆணையர் தயானந்தா தெரிவித்துள்ளார்.

எனினும், இந்த விதி புதிதாக வாங்கப்படும் வாகனங்களுக்குத் தான் பொருந்தும். அதன்படி, இருசக்கர வாகனம் தயாரிக்கும் நிறுவனங்கள் வாகன ஓட்டிகள் மட்டும் அமரும் வகையிலேயே இருக்கையை அமைக்க வேண்டும். பழைய இருசக்கர வாகனங்களுக்கு இந்தப் புதிய விதி பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது

TN 7th PC - ELEMENTARY EDUCATION PAY FIXATION FORM

மத்தியரசு அதிகாரி வேலை!!!

GST world rates

australia ----10%
Bahrain -----5%
Canada -----15%

china---------17%
japan --------8%
Korea ------10%
Kuwait -----5%
Malaysia ----6%
Mauritius -----15%
Mexico ----16%
Myanmar----3%
New Zealand ---15%
Phillipines ---12%
Russian federation--18%
Singapore 7%
South Africa ---14%
Thailand ---7%
UAE-----5%
America (usa). ----7.5%
Vietnam ----10%
Zimbabwe ---15%


Greatest India---28%


(and for petrol &  diesel we are paying separate tax of 33%)
  Forwarded as received

தட்டச்சு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு!!

சென்னை: ஆகஸ்டில் நடந்த தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வு முடிவு, 
இன்று(அக்.,23) வெளியாகிறது.

தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் சார்பில், தொழில்நுட்ப தேர்வுகள், இந்தாண்டு, ஆகஸ்டில் நடத்தப்பட்டன. இதில், தட்டச்சு, சுருக்கெழுத்து மற்றும் கணக்கியல் தேர்வு முடிவு, இன்று வெளியாகிறது. இதை, தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தின், www.tndte.gov.in என்ற இணையதள முகவரியில், பகல், 1:00 மணிக்கு மேல், தெரிந்து கொள்ளலாம் என, தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் அறிவித்து உள்ளது.

TRB - ஆசிரியர் பணிக்கான வினா - விடையில் குளறுபடி!!!

அரசு பள்ளிகளில்,1,325 ஆசிரியர் 
பணியிடங்களுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., நடத்திய போட்டிதேர்வில், தவறுதலாக வினா - விடை தயாரிக்கப்பட்டு உள்ளதாக புகார் எழுந்துள்ளது.

தமிழக அரசு பள்ளிகளில்,ஓவியம், தையல், இசை, உடற்கல்வி என, பல்வேறு சிறப்பு பாடங்களுக்கு, நிரந்தரமாக, ௧,௩௨௫ ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

 இதற்கு, செப்., ௨௩ல், போட்டி தேர்வு நடந்தது; ௩௫ ஆயிரத்து, 781 பேர் பங்கேற்றனர். இந்த தேர்வுக்கான, தற்காலிக விடைக்குறிப்பை, டி.ஆர்.பி., வெளியிட்டது. அதில், வினாவும், விடையும் தவறாக உள்ளதாக, முதல்வருக்கு புகார் அனுப்பப்பட்டு உள்ளது.இதுகுறித்து, தமிழ்நாடு கலை ஆசிரியர் சங்க மாநில தலைவர், எஸ்.ஏ.ராஜ்குமார் அனுப்பிய புகார் வருமாறு: பத்தாம் வகுப்பைத் தேர்ச்சியாக கொண்ட, சிறப்பு ஆசிரியர் பணிக்கு, ஆங்கிலத்தில் மட்டுமே, பாடத்திட்டம் வெளியிடப்பட்டது. தமிழில் வெளியிட கோரியும், டி.ஆர்.பி., கண்டு கொள்ளவில்லை. இந்த தேர்வில், கவின் கலை கல்லுாரி பாடங்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்து, வினாக்கள் இடம் பெற்றன. அதனால், ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள், அதிர்ச்சியில் உள்ளனர்.வினாத்தாளில், கிடைமட்டக்கோடு என்பதற்கு, தவறான பதில் குறிப்பு தரப்பட்டுள்ளது. 'அஜந்தாவில், புத்தரின் ஓவியம் தீட்டப்பட்ட குகை எண் என்ன...' என்ற கேள்வியில், சரியான பதில் குறிப்பு தரவில்லை. 'இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பைன் ஆர்ட்ஸ்' என்பதற்கு பதில், 'இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பைன் ஆர்ட்ஸ்' அமைந்துள்ள இடம் என, தவறாக கேட்கப்பட்டுள்ளது.

தந்த சிற்பக்கலை யாருடைய காலத்தில் சிறப்பு பெற்றது என்ற வினாவுக்கு, நாயக்க மன்னர்கள் காலம் என, பள்ளிக்கல்வி, பிளஸ் ௨ தமிழ் புத்தகத்தில் பதில் உள்ளது. ஆனால், விஜயநகர மன்னர்கள் காலம் என, வரலாற்றையே மாற்றி, டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது. இப்படி பல்வேறு வினாக்களும், பதில் குறிப்புகளும் தவறுதலாக உள்ளதால், அவற்றுக்கு போனஸ் மதிப்பெண் வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொழிலாளர்கள் ஓய்வூதியத்தை ரூ. 5 ஆயிரமாக உயர்த்த வேண்டும்

தொழிலாளர்கள் ஓய்வூதியத்தை ரூ. 5 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என்றார் தமிழ்நாடு விவசாயிகள்
தொழிலாளர்கள் கட்சியின் மாநிலத் தலைவர் பொன். குமார்.
பெரம்பலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் மாநிலப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
டெங்கு காய்ச்சலால் மாவட்டம்தோறும் சிறுவர்களும், பெரியவர்களும் அதிகளவு உயிரிழக்கின்றனர். மணல் கிடைக்கவில்லை, கட்டுமானப் பொருள்கள் தட்டுப்பாட்டால் கட்டட வேலைகள் தடைபட்டு கிடக்கின்றன. இதனால், 50 லட்சம் கட்டுமான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர்.


நலவாரியப் பணிகள் நடைபெறவில்லை. ஓய்வூதியம் கேட்டு விண்ணப்பித்தவர்களில், 3 ஆண்டுகளாகக் காத்திருந்த பலர் உயிரிழந்துவிட்டனர். இயற்கை இறப்பு நிதி கொடுக்கவில்லை. நலவாரியமே முடங்கிக் கிடக்கிறது. தமிழகத்தில் முழு அதிகாரம் கொண்ட, செயல்படக்கூடிய ஆட்சி அமைய வேண்டும். தொழிலாளர்கள் ஓய்வூதியத்தை ரூ. 5 ஆயிரமாக உயர்த்த வேண்டும். இயற்கை மரணம் அடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் நிதி வழங்க வேண்டும். தட்டுப்பாடின்றி மணல் கிடைக்க வேண்டும் என்றார் அவர்.

வாட்ஸ்அப் கொண்டுவந்திருக்கும் புதிய அதிரடி மாற்றங்கள்..

                                           
வாட்ஸ்அப் குரூப் அட்மின்களுக்கு புதிய சேவை ஒன்றை அந்த நிறுவனம் 
அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது உள்ள வசதிப்படி வாட்ஸ்அப் குழுக்களில் அட்மின் உட்பட யார் வேண்டுமானாலும் குரூப் ஐகான் மற்றும் பெயர்களை மாற்றவோ அல்லது முற்றிலுமாக நீக்கவோ முடியும். ஆனால், இனி வரப்போகும் வாட்ஸ்அப் அப்டேட்டில் குழுவின் அட்மின், படங்கள், பெயர்கள் மற்றும் ஐகான்களைக் குறிப்பிட்ட நபர் மட்டுமே மாற்றும் வகையில் வசதிக்கேற்ப அமைத்துக் கொள்ளலாம். புதிய வாட்ஸ்அப் அப்டேட், வாட்ஸ்அப் ரசிகர்களின் கருத்துகளைக் கேட்டு தரப்படுகிறது. இந்த அப்டேட்களை பீட்டா வெர்ஷன் 2.17.387 மூலம் செயல்படுத்தப் போகிறது.
வாட்ஸ்அப் குழுக்களில் ஒன்றுக்கு மேற்பட்ட அட்மின்கள் இருக்கும்போது, ஒரு அட்மினை மற்றொரு அட்மின் நீக்கம் செய்ய முடியாது. அவ்வாறு அட்மினை நீக்கம் செய்ய முற்படும்போது அதனைத் தடுக்கும் புதிய வசதியும் சேர்க்கப்பட்டுள்ளது.
ஒரு சோதனையாளராக நீங்கள் புதிய வாட்ஸ்அப் மெசஞ்சர் அப்ளிகேஷனைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்தச் சோதனைப் பதிவுகளில் சில குறைகள் இருக்கலாம். ஆனால், இப்போது அதற்கான செயல்பாடுகள் அனைத்தும் முடக்கி வைக்கப்பட்டுள்ளன. விரைவில் அப்டேட்டுகளுன் புதிய வசதிகள் வெளியாகும்போது வாட்ஸ்அப் வாடிக்கையாளர்கள் உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.

இன்ஸ்டன்ட் மெசேஜிங் ஆப்ஸ்களில் அதிகமானோர் பயன்படுத்துவது வாட்ஸ்அப்பைத்தான். இதில் பல புதிய வசதிகளை வாட்ஸ்அப் நிறுவனம் அளிக்கும் முயற்சியில் இருக்கிறது. அதில் முக்கியமானது அனுப்பிய மெசேஜ்களை அழிக்கும் வசதி. நாம் ஒரு நபருக்கோ அல்லது வாட்ஸ்அப் குரூப்களிலோ ஒரு மெசேஜை தவறாக அனுப்பி விட்டால் அதை ஒன்றும் செய்ய முடியாது. இதற்காக வாட்ஸ்அப்பில் “Delete for Everyone” என்ற சேவை அறிமுகமாக உள்ளது. ஆனால் ஏற்கெனவே இதுபோன்ற வசதி டெலிகிராம், வைபர் போன்ற பிற இன்ஸ்டன்ட் மெசேஜிங் ஆப்ஸ்களில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வசதி தற்போது ஆராய்ச்சிக் கட்டத்தில் இருக்கிறது. பரிசோதனை முயற்சியில் இருக்கும் இந்த வசதியைப் பற்றிய தகவல்கள் வெளியாகி வாட்ஸ்அப் பயனாளர்களிடையே பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. இவ்வசதி மூலமாக அனுப்பிய மெசேஜ்களை எதிரில் இருப்பவர் படிப்பதற்கு முன்பாக அழித்து விட முடியும். இந்த மெசேஜ்களில் புகைப்படங்கள், வீடியோக்கள் என அனைத்து வகையான மெசேஜ்களையும் அனுப்பிய ஐந்து நிமிடங்களுக்கு உள்ளாக திரும்பப் பெற முடியும்.
மேலும், யூ.பி.ஐ மூலம் பணப்பறிமாற்றத்திற்கும் வாட்ஸ்அப்பில் புதிய வசதி தொடங்கப்பட்டுள்ளது.



இதன்படி யூ.பி.ஐ மூலம் ஒரு வங்கியிலிருந்து மற்றொரு வங்கிக்கு பணப்பறிமாற்றம் செய்யும் வகையில் வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷனில் அப்டேட்கள் தரப்படும். இந்த புதிய வசதியினை 'WhatsApp 2.17.295' என்ற பீட்டா வெர்ஷனை டவுன்லோட் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு புதிய வசதிகளை அப்டேட் செய்யும் வாட்ஸ்அப்பின் மொத்த பயனாளர்கள் 1.2 பில்லியன் பேரும் ஒரே நேரத்தில் பயன்படுத்திக் கொள்ள முடியும். உலகம் முழுவதும் 50-க்கும் மேற்பட்ட வெவ்வேறு மொழிகளிலும், 10 இந்திய மொழிகளிலும் வாட்ஸ்அப் கிடைப்பது குறிப்பிடத்தக்கது.

பத்து ரூபாய்க்கு மருத்துவம் பார்க்கும் மனிதநேய மருத்துவர்!!!

                                                
தென்காசி (மெர்சல் டாக்டர் 10 rs) நாயகன்

சினிமாவில் பார்த்தால் மட்டும் கை தட்டி பாராட்டும் நாம் நேரில் கை கொட்டி சிரிப்பதா?

தென்காசி ரியல் ஹீரோ டாக்டர் இராமசாமி ஐயா..
10 ரூபாய்க்கு மருத்துவம்: ஆச்சர்யமூட்டும் மருத்துவர் ராமசாமி!
''சாப்பாட்டுக்குகூட வழியில்லாத சாதாரணக் குடும்பத்தைச் சேர்ந்தவன் நான். ரொம்பக் கஷ்டப்பட்டுத் தான் வளர்ந்தேன். என்னைப்போல இருக்குறவங்களுக்கு உதவனும்னு நினைசேன். 10 ரூபாயே அதிகம் தான். 1, 2, 5 ரூபாய்கூட வாங்கிட்டு இருந்தேன். நான் இலவச மருத்துவம் பார்க்கவும் தயார். ஆனால், எனக்குக் கீழே வேலை பார்க்கிறவங்களையும், அப்படி இருக்கச் சொல்ல முடியாதே. கட்டட வாடகை, மின்சாரக் கட்டணம், எனக்கு உதவியா இருக்கிறவங்களுக்குச் சம்பளம்னு எல்லாவற்றையும் சமாளிக்கவேண்டி இருக்கறதால 10 ரூபாய் வாங்கறேன். ஒரு மருத்துவமனை கட்டி அதுல 1 ரூபாய்க்கு மருத்துவம் பார்க்கனும், மருந்தெல்லாம் நியாயமான விலையில் கொடுக்கனும்னு ஆசை. அது முடியாத காரியங்கிறதால, என்னால முடிஞ்சதை பண்ணிட்டு இருக்கேன். நிறைய நல்ல மனிதர்களைச் சம்பாதிச்சிருக்கேன். ரொம்பத் திருப்தியா சந்தோஷமா இருக்கேன்''.. (Dr.இராமசாமி)

DEPARTMENTAL EXAM DEC 2017 - NEW SYLLABUS PAPERS LIST FOR TEACHERS

TNPSC: DEC-2017 துறை தேர்வு விண்ணப்பங்கள்  வரவேற்க்கப் பட்டுள்ளன*
விளம்பர எண்: 480
விளம்பர நாள்:23.9.17

*இடைநிலை ஆசிரியர்கள்*

1. 065- Tamil Nadu School Education Department Administrative Test – Paper - I -
 Higher Secondary / Secondary / Teacher Training and Special School
2. 072-Tamil Nadu School Education Department Administrative Test – Paper - II -  Elementary / Middle and Special Schools
3.  124 - Account Test for Subordinate Officers - Part I .
(or)
4.152-The Account Test for Executive Officers
5.172 - The Tamil Nadu Government Office Manual Test

*பட்டதாரி ஆசிரியர்கள் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள்*

1 . 124 - Account Test for Subordinate Officers - Part I .(or)
152.The Account Test for Executive Officers
2 . 172 - The Tamil Nadu Government Office Manual

துறை தேர்வில்
மற்ற அலுவலர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

1 . 124 - Account Test for Subordinate Officers - Part I .
2 . 172 - The Tamil Nadu Government Office Manual

*Lab Assistant மற்றும் இதர கல்வித்துறை பணியாளா்கள்* எழுத வேண்டிய தாள்கள்

1. 065- Tamil Nadu School Education Department Administrative Test – Paper - I -
 Higher Secondary / Secondary / Teacher Training and Special School
2. 072-Tamil Nadu School Education Department Administrative Test – Paper - II -  Elementary / Middle and Special Schools
3.  124 - Account Test for Subordinate Officers - Part I .
4.137_ The Account Test for subordinate Officers part II
5.172 - The Tamil Nadu Government Office Manual Test

ஒவ்வொரு மாதம் கடைசி வெள்ளிக்கிழமை SMC கூட்டம் நடத்துதல் குறித்து மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள்!!!

                                                   

வேலைவாய்ப்பு பதிவை 2011 ம் ஆண்டிலிருந்து புதுப்பிக்காதவர்களுக்கு வாய்ப்பு* *நவம்பர் 21-க்குள் புதுப்பிக்கலாம்*

                                          
https://tnvelaivaaippu.gov.in/Empower/

22/10/17

JACTTO-GEO வுடன் சமரசம் செய்ய அரசு திட்டம் - பல்வேறு சலுகை திட்டத்தை அறிவிக்க முடிவு.

ஊதிய முரண்பாடுகளை தீர்க்க, புதிய குழு அமைக்க திட்டம் என தகவல் "

ஊதியஉயர்வு அறிவிப்பால் ஏமாற்றம் அடைந்துள்ள, 'ஜாக்டோ - ஜியோ'
அமைப்பினரை சமரசம் செய்ய, தமிழக அரசு அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.


 வரும் 23ம் தேதி, நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரும் முன், பல்வேறு சலுகை திட்டத்தை அறிவிக்கவும், ஊதிய முரண்பாடுகளை நீக்க, புதிய குழு அமைப்பது குறித்தும், அரசு ஆலோசித்து வருகிறது.ஊதிய உயர்வு மற்றும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, ஜாக்டோ - ஜியோ சார்பில், கடந்த மாதம், தொடர் வேலை நிறுத்த போராட்டம் நடந்தது.

இதில், உயர் நீதிமன்ற மதுரை கிளை தலையிட்டு, போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தது. நீதிமன்றத்தில் அளித்த வாக்குறுதிப்படி, ஊதிய உயர்வுக்கான அறிவிப்பை, சமீபத்தில், அரசு வெளியிட்டது. 'ஊதிய உயர்வு, அக்., முதல் அமலாகும்' என, அரசு அறிவித்துள்ளது. ஜனவரியில் முன் தேதியிட்டு அமல்படுத்தப்படும் என்ற எதிர் பார்த்திருந்த, ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், இதனால், ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து, ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பின் உயர் மட்டக்குழு, இம்மாதம்,13ம் தேதி,அவசர ஆலோசனை நடத்தியது.இதில், உயர் நீதிமன்ற மதுரை கிளையில், வழக்கு விசாரணையின்போது, ஊதிய முரண்பாடு குறித்து முறையிடுவது எனவும், அரசு சாதகமான பதில் தராவிட்டால், மீண்டும் போராட்டத்தை துவக்கவும்,முடிவு செய்யப்பட்டு உள்ளது.

மத்திய அரசு பரிந்துரையின் படி, 2016, ஜன., முதல், ஊதிய உயர்வு கணக்கிட வேண்டும். தமிழக அரசு, 21 மாத சம்பள உயர்வுக் கான நிலுவை தொகையை, தர மறுத்துள்ளது.

ஆறாவது ஊதியக்குழு பரிந்துரையை அமல் படுத்தியதில் உள்ள, ஊதிய முரண்பாடுகளை சரி செய்ய வேண்டும் என, ஆறு ஆண்டுகளாக கோரினோம். அதை செய்யாமல், ஏழாவது ஊதியக் குழு பரிந்துரையை அறிவித்ததால், குளறுபடி அதிகரித்துள்ளது.அரசு அறிவித்துள்ள ஊதிய உயர்வு, அடிப்படை ஊழியர்களுக்கு சாதகமாக இல்லை; அதிகாரிகளுக்கே சாதகமாக உள்ளது. எனவே, 20ம் தேதி, மாநிலம் முழுவதும் விளக்க கூட்டம் நடத்த உள்ளோம்.

ஊதியகுளறுபடிகளை, நீதிமன்றத்திலும் தெரிவிக்க உள்ளோம். தீர்வு காணாவிட்டால், அடுத்த கட்ட போராட்டம் குறித்து, முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.இதனிடையே, அரசுக்கு ஆதரவாக, ஜாக்டோ - ஜியோவில் இருந்து பிரிந்து உருவான, ஜாக்டோ - ஜியோ கிராப் நிர்வாகிகளும், முதல்வர், பழனிசாமியை சந்தித்து, மனு அளித்துள்ளனர். அதில், ஊதிய உயர்வு ஏமாற்றம் அளிக்கிறது என, தெரிவித்துள்ளனர்.

அனைத்து தரப்பிலும், அதிருப்தி ஏற்பட்டு உள்ளதால், வரும், 23ம் தேதி, இவ்வழக்கு விசாரணைக்கு வரும் முன், ஜாக்டோ - ஜியோவை சமரசம் செய்யும் முயற்சியை, அரசு துவக்கி உள்ளது. உயர்மட்ட குழுவினரை அழைத்து, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் குழு, பேச்சு நடத்த திட்டமிட்டுள்ளது.அப்போது, சம்பள நிலுவைக்கு பதிலாக, சலுகை திட்டங் களை அறிவிக்கவும், ஊதிய முரண்பாடுகளை தீர்க்க, புதிய குழு அமைப்பதற்கும் அரசு தரப்பு முன்வந்துள்ளதாக தெரிகிறது.


அதேபோல், 'ஸ்டிரைக்' காலத்தில் ஊழியர்கள் எடுத்த விடுமுறையை சரிக்கட்டவும், ஸ்டிரைக்கில் ஈடுபட்டவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கையை கைவிடுவது குறித்தும், அதிகாரிகள் ஆலோசித்து வருவதாக,தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஊதியக்குழுவில் தீர்க்கப்படாத குழப்பங்கள்

1. இடைநிலை ஆசிரியர் 750 PP க்கு increment calculationக்கு சேருமா,சேராதா?

2. சேராது எனில் இடையில் பதவி உயர்வுக்கு அதனை எவ்வாறு சேர்ப்பது.

3) பதவி உயர்வுக்கு எவ்வாறு நி ர்ணயம் செயவது

4.) இடைநிலை ஆசிரியர்கள் பெற்று வரும் special Allowance ரூ .500
என்னானது.

5.) மூத்த ஆசிரியர்கள் பெறும், SA, ரூ.30,50 ஐ என்ன செய்வது.

6) 1.1.2016  ஆண்டு ஊதிய உயர்வு உள்ளவர்கள் 31/12/2015 பெற்ற ஊதியத்தின் அடிப்படையில் ஊதிய நிர்ணயம் செய்யலாமா?

7)ஆப்ஷன் கள் கொடுக்க மூன்று மாத அவகாசம் உள்ள நிலையில் இக்காலத்தில் வரும் பதவி உயர்வில் ஊதிய நிர்ணயம் செய்ய வழி வகை உள்ளதா?

8) தேர்வுநிலை,சிறப்பு நிலை ஊதியத்தில் நிர்ணயம் செய்ய வழிவகை உள்ளதா?

9) 4(3) rule பயன்பாடு உள்ளதா?

போந்றவற்றிற்கான தெளிவான கருத்துக்கள் நிதித்துறை சார்பாக தெளிவுரைகள்  வழங்கப்படும் என எதிபார்க்கப்படுகிறது

வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் இணைப்பு கட்டாயமில்லை'

வங்கிக் கணக்குடன், ஆதார் எண் இணைப்பது கட்டாயமில்லை' என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்களின் கீழ் உதவித்தொகைகள் பெறுவதற்கு, ஆதார் எண்ணை கட்டாயமாக்கி
உத்தரவிடப்பட்டுள்ளது.
வங்கிகளில் கணக்கு வைத்துள்ளவர்களும், புதிதாக கணக்கு துவக்குபவர்களும், டிச., 31க்குள், ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, டில்லியில் செயல்படும், செய்தி இணையதளம் ஒன்று, தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ், ரிசர்வ் வங்கியிடம் விளக்கம் கேட்டது.
ரிசர்வ் வங்கி அளித்துள்ள பதில்:

வாடிக்கையாளர்கள், தங்கள் வங்கிக் கணக்குடன், ஆதார் எண்ணை, கட்டாயம் இணைக்க வேண்டும் என, ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பிக்கவில்லை.சட்ட விரோத பண பரிமாற்றத்தை தடுப்பதற்காக, இந்தாண்டு, ஜூன், 1 ல், மத்திய அரசு, ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், 'வங்கிகளில் கணக்கு வைத்துள்ளவர்கள், புதிதாக கணக்கு துவக்குபவர்கள், தங்கள் ஆதார் எண்ணையும், 'பான்' எனப்படும், நிரந்தர கணக்கு எண்ணையும் வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டிருந்தது.இது தொடர்பாக ரிசர்வ் வங்கி, எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை.இவ்வாறு, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

ஊதிய மாற்றம் என்ற பெயரில் தமிழக அரசு, ஊழியர்களை ஏமாற்றி வருகிறது தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க துணை தலைவர் சுப்ரமணியம்

ஊதியமாற்றம் என்ற பெயரில் தமிழக அரசு, ஊழியர்களை ஏமாற்றி வருகிறது - மதுரையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க துணை தலைவர் சுப்ரமணியம் பேட்டி.

*வரும் 23ம் தேதி, உயர்நீதிமன்றம் வழங்கும் உத்தரவை தொடர்ந்து போராட்டம் குறித்து முடிவெடுக்கப்படும் - சுப்ரமணியம்

3ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ்: ரூ.60 கோடி ஒதுக்கீடு

தமிழகத்தில் 3ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் தொடங்க தமிழக அரசு ரூ.60 கோடி ஒதுக்கியுள்ளது. அடுத்த மாதம் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்
என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 770 பள்ளிகள் மற்றும் 11 வட்டாரங்களில் அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றில் முதற்கட்டமாக கடந்த ஆண்டு மெய்ந்நிகர் வகுப்பறை என்னும் ஸ்மார்ட் கிளாஸ்கள் தொடங்கப்பட்டன.
இவற்றின் மூலம் 770 பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியர் நேரடியாக கற்றல் கற்பித்தல் பெற்றுவருகின்றனர். அதேபோல 30 மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் படிக்கும் ஆசிரிய மாணவர்களும் கற்றல் கற்பித்தலை பெற்று வருகின்றனர். இதையடுத்து, 3 ஆயிரம் பள்ளிகளில் இந்த ஸ்மார்ட் கிளாஸ் தொடங்கப்படும் என்று சட்டப் பேரவையில் அறிவித்ததை அடுத்து தற்போது அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இது குறித்து கடந்த வாரம் பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கூறும் போது ரூ. லட்சம் செலவில் 3 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் தொடங்க ரூ.60 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் கிளாசுக்கு தேவையான உபகரணங்கள் வாங்குவதற்கான பணிகள் நடக்கின்றன. இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் நேற்று பல்வேறு நிறுவனங்கள் தாங்கள் உற்பத்தி செய்துள்ள உபகரணங்களை பள்ளிக் கல்வி அமைச்சரிடம் செயல்படுத்தி காட்டினர். இந்த ்நிகழ்வில் பள்ளிக் கல்வித்துறையின் அனைத்து இயக்குநர்களும் பங்கேற்று ஸ்மார்ட் கிளாஸ் உபகரணங்களை பார்த்தனர். இன்னும் இரண்டு நாட்களுக்கு இந்த உபகரணங்களை அமைச்சர் பார்ப்பார். அதற்கு பிறகு அந்த உபகரணங்கள் வாங்குவது குறித்து முடிவு செய்யப்படும். நவம்பர் மாதம் இறுதிக்குள் 3 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ்கள் தொடங்கும்.

இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதியத்தை மாற்றி முறையான அறிவிப்பு வெளிவராத பட்சத்தில் அடுத்தக்கட்ட போராட்டம் மிக வலுவானதாக அமையும்-ஜாக்டோ ஜியோ அறிவிப்பு .

இடைநிலை ஆசிரியர் ஊதிய நிர்ணயத்தில் பழைய ஊதிய அடுக்கை பின்பற்றியிருப்பது, அடிப்படை சமத்துவக்கொள்கைக்கு முரணானது .10+2 +2
என்பதை பழைய முறையான 10+2 என்று கருதி ஊதிய நிர்ணயத்தை செய்து அதையே நீடித்து வருவது ஒரு சாராரை அரசே ஏமாற்றும் செயல் என்றும் .TET தேர்வு என்பது மத்திய அரசு கொண்டுவந்துள்ள கல்வி உரிமைச்சட்டம் -2009 ன்படி வடிவமைக்கப்பட்டு திறன் அடிப்படையில் பல்வேறு கூறுகளின் அடிப்படையில், மத்திய அரசு நிர்ணயித்துள்ள இடைநிலை ஆசிரியர் நியமனத்திற்கான முழுத்தகுதியினை பெற்ற பிறகு நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு, மத்திய அரசின் இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதியத்தை விட குறைத்து நிரணயிப்பதை மாற்றியமைக்க வேண்டும் என்றும் ,பங்களிப்பு ஓய்வூதியத்திட்டம் ரத்து சார்ந்த முறையான அறிவிப்பு வெளிவராத பட்சத்தில் அடுத்தக்கட்ட போராட்டம் மிக வலுவானதாக அமையும்.

மத்தியரசின் ஊதிய அட்டவணையை பின்பற்றாமல் வேறு அட்டவணையை பின்பற்றுவது வேதனை அளிக்கிறது ஓய்வூ பெற்ற ஊழியர் சங்கம் குற்றச்சாட்டு!!!

தொடக்கப் பள்ளிகளில், மாணவர்கள் இன்றி, உபரியாக இருக்கும் ஆசிரியர்களை கண்டறிவதற்கான ஆலோசனை கூட்டம்

தொடக்கப் பள்ளிகளில், மாணவர்கள் இன்றி, உபரியாக இருக்கும் ஆசிரியர்களை கண்டறிவதற்கான ஆலோசனை கூட்டம், அக்., 23-30 வரை, சென்னையில் நடக்கிறது.
தமிழகத்தில், 24 ஆயிரம் அரசு தொடக்கப் பள்ளிகளில், 63 ஆயிரம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்; 15 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். ௨௩ மாணவர்களுக்கு, ஓர் ஆசிரியர் என, உள்ளனர். ஆனால், மத்திய அரசு விதிகளின்படி, ௩௫ மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என, 43 ஆயிரம் ஆசிரியர்கள் இருந்தால் போதும். தற்போது, இப்பள்ளிகளில் கூடுதலாக, 20 ஆயிரம் ஆசிரியர்கள் உள்ளனர்.
பட்டியல் தயாரிப்பு : பல பள்ளிகளில், ஒரு மாணவர் முதல்,10 மாணவர்கள் வரை உள்ளனர். அவற்றில், இரு ஆசிரியர்கள் உள்ள பள்ளிகளும் உள்ளன. 
எனவே, உபரியாக, 'சும்மா' இருக்கும் ஆசிரியர்களின் பட்டியலை தயாரித்து, அவர்களை, ஆசிரியர்கள் தேவைப்படும் பள்ளிக்கு மாற்றலாமா என, தமிழக பள்ளிக்கல்வித் துறை ஆலோசிக்கிறது. இதற்காக, மாவட்ட வாரியாக, அனைத்து பள்ளிகளிலும், வகுப்பு வாரியாக படிக்கும் மாணவர்களின் சரியான எண்ணிக்கையை, உரிய ஆதாரத்துடன் வழங்க, தொடக்கக் கல்வி இயக்குனர், கார்மேகம் உத்தரவிட்டு உள்ளார். 
அறிவுறுத்தல் : எந்த தில்லுமுல்லும் இன்றி, பட்டியலை தயாரித்து, சென்னையில் நடக்கும் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்க அறிவுறுத்தப் பட்டு உள்ளது.இந்த உபரி ஆசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டம், அக்., 23-30 வரை, மாவட்ட வாரியாக நடக்க உள்ளது. இந்த கூட்டத்திற்கு பின், உபரி ஆசிரியர்கள் பட்டியல் தயாரிக்கப்பட உள்ளது

துளசி சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் அற்புத நன்மைகள்!!!

மூலிகைகளின் ராணியான துளசி, அதன் மருத்துவ குணத்தால், ஆயுர்வேத மருத்துவத்தில் பெரிதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அதிலும் இதன் இலைகள் மட்டுமின்றி, அதன் பூக்களிலும் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. மேலும் பெரும்பாலான தென்னிந்திய வீடுகளில் துளசி கட்டாயம் வளர்க்கப்படும் செடிகளுள் ஒன்று. எனவே உங்கள் வீட்டிலும் துளசி செடி இருந்தால், உங்களுக்கு ஏற்படும் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு வீட்டிலேயே தீர்வு காணலாம்.
காய்ச்சல் :-
காய்ச்சல் இருக்கும் போது, உடனே மாத்திரையை வாங்கிப் போடாமல், துளசி இலையை வாயில் போட்டு மென்று வாருங்கள். இதனால் துளசியானது காய்ச்சலை குறைத்துவிடும்.
தொண்டைப்புண் :-
தொண்டைப் புண் இருக்கும் போது, துளசியை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த நீரால் வாயை கொப்பளித்தால், தொண்டைப்புண் குணமாகும்.
தலை வலி :-
உடலில் வெப்பம் அதிகம் இருந்தால், தலை வலி வரக்கூடும் என்பது தெரியுமா? ஆம், அப்படி வரும் தலை வலிக்கு துளசி மிகவும் சிறப்பான நிவாரணி. அதற்கு துளசியை அரைத்து, அதில் சந்தனப் பொடி சேர்த்து கலந்து, நெற்றியில் பற்று போட்டு வந்தால், நல்ல நிவாரணம் கிடைப்பதோடு, உடல் சூடும் குறையும்.
கண் பிரச்சனைகள் :-
கருப்பு துளசியின் சாறு கண்களில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வைத் தரும். அதிலும் கண்களில் புண் இருந்தால், கடுமையான அரிப்பு, எரிச்சல் ஏற்படும். அப்போது துளசியின் சாற்றினை கண்களில் ஊற்றினால், விரைவில் குணமாகும்.
வாய் பிரச்சனைகள் :-
ஈறுகளில் ஏதேனும் பிரச்சனை இருந்தாலோ அல்லது வாய் துர்நாற்றம் அடித்தாலோ, அப்போது துளசியை உலர வைத்து, பொடி செய்து, அத்துடன் கடுகு எண்ணெய் ஊற்றி பேஸ்ட் செய்து, ஈறுகளில் தடவி தேய்த்து கழுவ வேண்டும். இப்படி செய்தால், வாய் பிரச்சனைகள் அகலும்.
இதய நோய் :-
தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் துளசி இலையை சாப்பிட்டு வந்தால், அவை இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி, இதய நோய் வரும் அபாயத்தைக் குறைக்கும்.
சளி, இருமல் :-
கடுமையான சளி மற்றும் இருமலால் அவஸ்தைப்பட்டால், துளசி இலையை மென்று அதன் சாற்றினை விழுங்கி வாருங்கள். இதனால் அதில் உள்ள மருத்துவ குணத்தால், சளி, இருமல் பறந்தோடிவிடும்.
நீரிழிவு :-
நீரிழிவு நோயாளிகள் துளசி இலையை சாப்பிட்டு வந்தால், அதனால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறைந்து, இன்சுலின் சீராக சுரக்கப்பட்டு, நீரிழிவை கட்டுப்பாட்டுடன் வைக்கும்.
சிறுநீரக கற்கள் :-
துளசி இலையை சாறு எடுத்து, அதில் சிறிது தேன் சேர்த்து கலந்து குடித்து வந்தால், சிறுநீரக கற்கள் மற்றும் சிறுநீரக பாதையில் ஏதேனும் தொற்று இருந்தாலும் குணமாகும்.
மன அழுத்தத்தைக் குறைக்கும் :-
மன அழுத்தம் என்பது தற்போது அதிகம் உள்ளது. உங்களுக்கு மன அழுத்தமில்லாத வாழ்க்கை வாழ ஆசை இருந்தால், துளசி இலையை தினமும் சாப்பிட்டு வாருங்கள். இதனால் அதில் உள்ள அடாப்டோஜென் மன அழுத்தத்தைப் குறைக்கும்.

தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வு முடிவு 23-ல் வெளியீடு :

தமிழ்நாடு மாநில தொழில்நுட்பக் கல்வி ஆணையரும், தொழில்நுட்பத் தேர்வுகள் வாரியத்தின் தலைவருமான ஆர்.பழனிசாமி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற தட்டச்சு, சுருக்கெழுத்து (தமிழ் மற்றும் ஆங்கிலம்), மற்றும் கணக்கியல் தேர்வுகளின் முடிவுகள் 23-ம் தேதி (திங்கள்கிழமை) மதியம் 1 மணிக்கு வெளியிடப்படும். தேர்வர்கள் தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் இணையதளத்தில் (www.tndte.gov.in) தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

JACTTO - GEO உயர்மட்டகுழு சென்னையில் 24ம் தேதி ஆலோசனை :

14/10/17

உரிமைப் போராட்டத்தில் மண்டியிடாத, மான உணர்வுள்ள ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்களின் பரிந்துரையின்படி இன்று நடைபெற்ற உயர்மட்டக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்:



1. 20/10/2017 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகங்கள் முன்பாக ஏழாவது ஊதியக்குழுவில் நமக்கு ஏற்பட்ட குறைபாடுகளை விளக்கி  ஊதிய மாற்றமும் ஏமாற்றமும் என்ற தலைப்பில் விளக்கக்கூட்டம்.
2. 23/10/2017 அன்று நீதிமன்றத்தில் நமது வழக்கறிஞர் மூலமாக நமது குறைபாடுகளை பதிவுசெய்து நீதியரசர் மூலமாக அதற்கு பரிகாரம் தேடுவது.

3. 24/10/2017 மீண்டும் ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்புக்குழு கூடி அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி ஆலோசித்து முடிவெடுப்பது.

எதற்கும் அஞ்சுவதில்லை
எவரிடமும் கெஞ்சுவதில்லை
உரிமைபெறும் வரை ஓய்வதுமில்லை

உணர்வுடன வா...
இடைநிலை ஆசிரியரின்  ஊதியக்குறைப்பாட்டை களைந்திட.. வா

CPS யை அகற்றி, பழைய ஓய்வூதியத்தை அனைவரும் பெற்றிட  போராட...வா..

வெற்றிகிட்டும் வரை ஓயாது நம் போராட்டம்

அடிச்சும் கேப்பாங்க.. அப்பவும் தராதீங்க.. ஒரு உஷார் பதிவு



உங்கள் ஆதார் எண்ணை உங்கள் மொபைல் நம்பரோடு இணைத்து விட்டீர்களா என்ற போர்வையில் ஒரு மாஸ்டர் மைண்ட் மோசடியை நிகழ்த்தி, சுமார் 1.30 லட்சத்தை ஒரு வாலிபரின் ICICI சேலரி அக்கவுண்டில் இருந்து திருடியிருக்கிறார்கள், இதற்கும் அந்த பட்டதாரி வாலிபர் சமீபத்திய பின் நம்பர் கேட்கும் மோசடிகள், க்ரெடிட் கார்டு மோசடிகள் எல்லாவற்றையும் தெரிந்து மிக கவனமாகவே இருந்திருக்கிறார், இருந்தும் இந்த ஆதார் எண் இணைக்க வேண்டி தினசரி வரும் அழைப்புகள் போல இதுவும் இருந்ததால் ஏமாந்துவிட்டார், என்ன நடந்தது ?

“வணக்கம், ஏர்டெல்லில் இருந்து பேசுகிறோம், உங்கள் ஆதார் எண்ணை இணைத்துவிட்டீர்களா ?”

“இல்லைங்க , இன்னும் இல்லை, “

“சார்! அரசு உத்தரவுப்படி இன்னும் சில நாட்களுக்குள் ஆதார் எண்ணை கட்டாயமாக இணைக்க வேண்டும், நீங்கள் விரும்பினால் இந்த அழைப்பின் வழியாகவே உங்கள் ஆதார் எண்ணை இணைக்கலாம், உங்களிடம் ஆதார் எண் இருக்கிறதா ?”

“இருக்கு, சொன்னா போதுங்களா, நீங்களே அப்டேட் பண்ணிடுவீங்களா ?”

“நிச்சயமாக சார், உங்களுக்கு உதவுவதற்க்காவே இந்த வசதி, உங்கள் ஆதார் எண்ணை சொல்லுங்கள்!” (ஆதார் எண்ணை சொல்கிறார்,)

“ஆதார் எண் தந்தத்திற்கு நன்றி, உங்கள் எண் இந்த மொபைல் நம்பருடன் இணைக்கப்பட்டுவிட்டது வாழ்த்துக்கள், இன்னும் நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான், அதை செய்தால் மட்டுமே நீங்கள் தான் இந்த மொபைல் எண் உபயோகிப்பாளர் என எங்களால் உறுதி செய்துகொள்ளமுடியும்,”

"என்ன பண்ணணும்ங்க ?”

“உங்களது சிம் கார்டில் உள்ள 20 இலக்க சிம் எண்னை மெஸேஜில் SIM என டைப் செய்து ஏர்டெல்லின் 121 என்ற வாடிக்கையாளர் சேவை மைய எண்ணுக்கு அனுப்பவும், அனுப்பிய பிறகே உங்கள் எண்ணுடன் ஆதாரை இணைக்கும் பணி முழுமையடையும்,”

(யோசிக்கிறார்) “மேடம் ! சிம்மு போனுக்குள் இருக்குது, அந்த நம்பர் எனக்கு தெரியாதுங்களே”

“கவலை வேண்டாம் சார், உங்கள் சிம் நம்பரை இப்போது உங்களுக்கு மெஸேஜில் அனுப்பியுள்ளேன், அதை அப்படியே 121 என்ற எங்களது சேவை மைய எண்ணிற்கு அனுப்பவும், நன்றி”

“121 க்கு தானுங்க அனுப்பனும், வேற எங்கியும் இல்லீங்களே, ஏன்னா ஊர் பூரா முடிச்சவிக்கு பசங்க புதுபுதுசா ஏமாத்தறானுக, அதான் கேக்குறங்க”

“சார், இது ஏர்டெல்லின் அதிகார பூர்வ அழைப்பு, 121 எங்களது அதிகாரபூர்வ வாடிக்கையாளர் சேவை மையம், அதற்க்கு மட்டுமே அனுப்பினால் போதும். நன்றி"

இப்படி நமக்கு ஒரு போன் வந்தா எத்தனை பேர் 121 க்கு சிம் நம்பர் அனுப்பியிருப்போம், கிட்டத்தட்ட எல்லோருமே, இல்லையா !! அதே போலத்தான் இவரும் அனுப்பியிருக்கிறார், அனுப்பிய சிலமணிநேரங்களில் இவரது அக்கவுண்டில் இருந்து தொடர்ந்து 10000 , 20000 என சரமாரிக்கு பணம் உருவப்பட்டு, இவர் சேர்த்து வைத்திருந்த Fixed Deposits உட்பட 1.30 லட்சங்களை மொத்தமாக 18 மணி நேரத்தில் அபேஸ் பண்ணிவிட்டார்கள், ஐயோ, இதெப்படி சாத்தியம் என்கிறீர்களா, சாத்தியமே !!
உங்கள் வங்கி கணக்குகளின் இணைய சேவை பாஸ்வேர்ட் மாற்றுவது, ஏடிஎம் பின் நம்பர் மாற்றுவது, புதிய அக்கவுண்டகளை இணைத்தல், பண பரிமாற்றம் என எதை இணைத்தாலும், மாற்றினாலும் அவை எல்லாமே ஒன்றே ஒன்றை அடிப்படையாக கொண்டே மாற்ற முடியும், அது உங்கள் மொபைல் எண்ணுக்கு வரும் OTP, அந்த OTP யை பெற்றே மேற்சொன்ன மோசடியை நிகழ்த்தியிருக்கிறார்கள், எப்படி ?

ஏர்டெல் 3G யில் இருந்து 4G சிம்முக்கு உங்கள் எண்னை மாறுங்கள், ப்ரீ ப்ரீ என ஊர் பூரா கூவி கொண்டிருக்கிறது, இதற்காக ஒரு சேவையை தொடங்கியது, வாடிக்கையாளருக்கு இலவசமாக 4G சிம் கார்டுகளை தர தொடங்கியது, அவர்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான், SIM என டைப் செய்து 20 இலக்க புது சிம் எண்னை 121 க்கு அனுப்பிவிட்டால் இரண்டு மணிநேரத்தில் புதிதாக தரப்பட்ட 4G சிம்மில் உங்கள் நம்பர் ஆக்டிவேட் ஆகிவிடும், பழைய சிம்மை தூக்கி போட்டுவிட்டு இதை செருகி 4G தரத்தில் உபோயோகிக்கலாம், இந்த சேவையை தான் இந்த திருடர்கள் உபயோகித்து கொண்டனர், ‘எனக்கு சிம் நம்பர் தெரியாதுங்க’ என்ன சொல்லியதும் அவர்கள் அனுப்பினார்கள் பாருங்கள் ஒரு சிம் நம்பர் , அது உங்கள் போனில் நீங்கள் பேசி கொண்டிருக்கும் சிம்மின் 20 இலக்க எண் அல்ல, அவர்கள் கை வசம் ஆக்டிவேட் ஆக தயார் நிலையில் உள்ள ஒரு 4G சிம். அவர்கள் அனுப்பிய மெஸேஜை 121 க்கு நீங்கள் அனுப்பியதால் சிலமணி நேரங்களில் உங்கள் இணைப்பு துண்டிக்கப்பட்டு அவர்கள் சிம்மில் உங்கள் எண் ஆக்டிவேட் ஆகிவிடும், பிறகு OTP என்ன, உலகமே உங்களிடம் பேச நினைத்தாலும் எல்லா அழைப்புகளும் அவனுக்கு தான் போகும். எவ்வளவு எளிமையாக, நம்ப வைத்து ஏமாற்றுகிறார்கள் பாருங்கள்!

மேற்சொன்ன மோசடியில் முதல் 3000 உருவப்பட்ட போதே ICICI க்கு சொல்லி அக்கவுண்ட்டை தற்காலிகமாக முடக்க சொல்லியிருக்கிறார் இளைஞர், ஆனால் ICICI தேமே என 18 மணிநேரம் தேவுடு காக்க, அதற்குள் மொத்த வைப்பு தொகையையும் சுருட்டிவிட்டார்கள் ,இந்த மாதிரி நூதன, எளிமையான, மிக மிக நம்பிக்கை தரும் வகையில் நீங்களும் ஏமாற்றப்படலாம், எக்காரணம் கொண்டும் OTP எண், PIN நம்பர் போன்றவைகளை யாரிடமும் பகிராதீர்கள், மோசடி பேர்வழிகளிடம் இருந்து,கவனமாக உங்கள் கையிருப்பை காத்திடுங்கள். நன்றி.

நன்றி

டெங்குக் காய்ச்சல்


‘டெங்கு’ (Dengue) எனும் வைரஸ் கிருமியால் ஏற்படும் காய்ச்சல் என்பதால், இதற்கு `டெங்குக் காய்ச்சல்’ என்று பெயர். `டெங்கு' என்ற ஸ்பானிய மொழிச் சொல்லுக்கு, `எலும்பு முறிவுக் காய்ச்சல்’ என்று பொருள். அதாவது இந்தக் காய்ச்சலின்போது, எலும்பு முறிவு ஏற்பட்டதுபோல கடுமையான வலி தோன்றும். அதனால்தான் இப்படி அழைக்கப்படுகிறது.
இந்த வைரஸ் கிருமிகளில் மொத்தம் நான்கு வகைகள் உள்ளன. ஒரு வகை வைரஸால் டெங்கு உண்டாகி குணமான பின்னர், வாழ்நாளில் திரும்பவும் அதே வைரஸால் பாதிப்பு இருக்காது. அதற்கான எதிர்ப்புச் சக்தி உடலில் உருவாகி இருக்கும். அதே நேரத்தில், மற்ற வகை வைரஸ் வகையால் டெங்கு ஏற்படலாம்.
எப்படிப் பரவும்?
கொசுவால் மட்டுமே பரவுகிறது. ‘ஏடிஸ் எஜிப்தி’ ( Aedes  Aegypti)  எனும் கொசுக்கள் நம்மைக் கடிக்கும்போது, டெங்கு உண்டாகிறது. கொசு கடித்த ஒரு வாரத்துக்குள் நோய் ஏற்படும்.
எப்படிப் பரவாது?
இது தண்ணீர், காற்று மூலம் பரவாது. டெங்கு பாதித்த ஒருவரின் இருமல், தும்மல் போன்றவற்றால் மற்றவருக்கும் அது பரவுவதில்லை.


Advertisement


ஏடிஸ் கொசு
ஏடிஸ் கொசு கறுப்பு நிறமுடையது. இதன் சிறகுகளில் வெள்ளை நிறப் புள்ளிகள் காணப்படும். இவற்றில் பெண் கொசு மட்டும்தான் மனிதனுக்கு இந்த நோயை பரப்புகிறது. இனச்சேர்க்கைக்குப் பின்னர், பெண் கொசுவுக்கு முட்டை முதிர்ச்சியடைய மனிதர்களின் ரத்தத்தில் உள்ள புரதச்சத்து தேவைப்படும். இதனால், மனித ரத்தத்தை உறிஞ்சும். இதனால் கொசுவின் வயிற்றில் முட்டைகள் வளர்ச்சியடையும். மூன்றாவது நாளில், நீரில் முட்டையிடும். ஆறாவது நாளில் லார்வா என்ற நிலையை அடையும். 11-வது நாளில் லார்வாவில் இருந்து பூச்சிநிலையை அடையும். 13-வது நாளில் முழுவையான கொசுவாக வளர்ச்சியடையும். இப்படி முதிர்ச்சியடையும் கொசு, வாழும் சூழலுக்கு ஏற்ப இரண்டு முத��
 இரண்டு முதல் நான்கு வாரங்கள் வரை உயிர் வாழும்.
பொதுவாக, கொசுக்கள் என்றாலே சாக்கடை, அசுத்தமான குளம், குட்டை போன்ற நீர்நிலைகள், நீண்டகாலம் தேங்கியிருக்கும் தண்ணீர் போன்றவற்றில் வாழும் என்று அறிந்திருப்போம். ஆனால், டெங்குக் கொசுக்களோ அசுத்தமற்ற நீர்நிலைகளிலும் வளரக்கூடியவை. மற்ற கொசுக்கள் பெரும்பாலும் இரவில்தானே கடிக்கும்? ஆனால், இந்த கொசுக்களோ பெரும்பாலும் மாலை அல்லது பகலில்தான் கடிக்கும்.

யாருக்கு ஆபத்து அதிகம்?
குழந்தைகள், பெரியவர்கள் என அனைத்து வயதினருக்கும் இந்த நோய் வரலாம். குறிப்பாக, குழந்தைகளுக்கும், நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்தவர்களுக்கும் எளிதில் வரும்.
அறிகுறிகள்...
திடீரென கடுமையான காய்ச்சல் (104 டிகிரி ஃபாரன்ஹீட்/ 40 டிகிரி செல்சியஸ்), அதிகமான தலைவலி, கண்களுக்குப் பின்புறம் வலி, கண் விழி சிவந்து, வெளிச்சத்தைப் பார்க்க முடியாமல் கண் கூசுதல், உடலில் சிவப்புப் புள்ளிகளும் தோன்றும். இதோடு, எலும்புகளை முறித்துப்போட்டதைப்போல கடுமையான வலி எல்லா மூட்டுகளிலும் ஏற்படுவது இந்த நோயின் முக்கிய அறிகுறிகள்.
உயிரிழப்பு ஏற்படும் வாய்ப்பு எப்போது?
பெரும்பாலானோருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்ட ஏழு நாள்களில் சரியாகிவிடும். சிலருக்கு மட்டும் டெங்கு வைரஸ் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தலாம். டெங்கு வைரஸ் ரத்தத்தில் உள்ள தட்டணுக்களை (Platelets) அழித்துவிடும். இவை ரத்தம் உறைவதுக்கு உதவக்கூடியவை. ரத்தத் தட்டுக்களின் எண்ணிக்கை குறையும்போது, அது நுரையீரல், வயிறு போன்ற உறுப்புகளிலும் பல் ஈறு, சிறுநீர்ப் பாதையிலும் ரத்தக் கசிவை ஏற்படுத்தக்கூடும். உரிய மருத்துவச் சிகிச்சை கிடைக்கவில்லை என்றால் உயிரிழப்பும் ஏற்படலாம். 
என்னென்ன பரிசோதனைகள்?
ஆரம்ப அறிகுறிகள் வைரஸ் நோய்களில் காணப்படும் பொதுவான குணங்கள் என்பதால், உட��
என்னென்ன பரிசோதனைகள்?
ஆரம்ப அறிகுறிகள் வைரஸ் நோய்களில் காணப்படும் பொதுவான குணங்கள் என்பதால், உடனே டெங்குவை உறுதி செய்ய இயலாது. காய்ச்சல் மூன்று நாள்களுக்கு மேல் நீடித்தால், உடனே மருத்துவமனைக்கு சென்று, என்.எஸ் 1 ஆன்டிஜன் (NS1 Ag) டெங்கு ஐ.ஜி.எம். (Dengue IgM ) அல்லது டெங்கு ஐ.ஜி.ஜி (Dengue IGG) உள்ளிட்ட ரத்தப்பரிசோதனைகளைச் செய்துகொள்ள வேண்டும். பொதுவாக ஒருவருக்கு தட்டணுக்களின் எண்ணிக்கை சுமார் மூன்று லட்சம் வரை இருக்கும். டெங்குக் காய்ச்சல் வந்தவருக்கு தட்டணுக்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்துக்கும் கீழே குறைந்துவிடலாம். எனவே, அதே நாளில் ப்ளேட்லெட் (Platelet) என்னும் ரத்த அணுக்களின் எண்ணிக்கை மற்றும் ரத்தத்தின் நீர்ப்பளவு (Heamatocrit) உள்ளிட்ட பரிசோதனைகளை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் இரண்டு அல்லது மூன்று நாள்கள் தொடர்ந்து செய்துகொள்ள வேண்டும்.
என்ன சிகிச்சை?
டெங்குக் காய்ச்சலுக்கு எனத் தனியாக சிகிச்சை எதுவும் இல்லை. காய்ச்சலைக் கட்டுப்படுத்த பாராசிட்டாமால் ( Paracetomol) மாத்திரையும், உடன் உடல்வலியைப் போக்க உதவும் மருந்துகளும் தரப்படும். சிலருக்கு மட்டுமே அதிர்ச்சிநிலை (Dengue Shock Syndrome) ஏற்படும். அதற்கு குளுக்கோஸ் மற்றும் சலைன் (Dextrose Saline) தேவையான அளவுக்கு ஏற்றப்பட வேண்டும். தட்டணுக்கள் குறைந்தவர்களுக்கு அதை ஈடுகட்ட நரம்பு மூலமாக தட்டணுக்கள் மிகுந்த ரத்தம் செலுத்தப்பட வேண்டும்.
நோயுற்ற காலத்தில்...
காய்ச்சல் பாதித்த காலத்தில் நோயாளி நன்றாக ஓய்வெடுக்க வேண்டும். உடலில் நீரிழப்பு ஏற்படும் என்பதால், அதிக அளவில் நீர்ச்சத்து உணவுகளை உட்கொள்ள வேண்டும். போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். பால், பழச்சாறு, இளநீர், கஞ்சி போன்ற திரவ உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும்
தடுக்க என்ன வழி?
டெங்குவிலிருந்து தற்காத்துகொள்ள தடுப்பூசி எதுவும் இல்லை. கொசுக்களை ஒழிப்பது ஒன்றே வழி. கொசு வளர வாய்ப்பு இல்லாதவாறு வீட்டையும் சுற்றுப்புறத்தையும் சுகாதாரமாகப் பராமரிக்க வேண்டும். குறிப்பாக, வீட்டைச் சுற்றி தண்ணீரைத் தேங்கவிடாதீர்கள். தெருவில் தண்ணீர் தேங்கியிருந்தால், சுகாதார ஊழியர்கள் வந்து அகற்றும் வரை காத்திராமல், நீங்களே தண்ணீரை அகற்றுங்கள். குடிப்பதற்காக குடம், தண்ணீர் தொட்டிகளில் சேமித்துவைக்கும் நீரை நன்றாக கொசு புகாதபடி மூடிவைத்துப் பயன்படுத்த வேண்டும்.
வீட்டுக்குள் கொசு வர முடியாதபடி ஜன்னல்களில் கொசுவலை பொருத்தலாம். கொசு எதிர்ப்புக் களிம்பை உடலில் பூசிக்கொள்ளலாம். கொசு விரட்டி, கொசுவலையைப் பயன்படுத்தி கொசுக்கடியிலிருந்து தப்பிக்கலாம். மனிதனின் உடலில் இருந்து வெளிப்படும் வியர்வை வாசம், சுவாசித்தலின்போது வெளிப்படும் கார்பன் டை ஆக்ஸைடு, உடலின் வெப்பம் ஆகியவை கொசுக்களை ஈர்க்கும். எனவே, கை, கால் முழுக்க மறைக்கும் வகையில் ஆடைகளை அணியலாம்’’ என்கிறார் மருத்துவர் தேவராஜன்.
K. Srikanth Aravinth: 

வணக்கம். இன்றைய ஜேக்டோ ஜியோ கூட்டத்தில் கலந்து கொண்ட SSTA தோழர் ஒருவர் பதிவிட்டது...'



இ.நி.ஆ களின் நிலைபற்றி ஜேக்டோஜியோவின்  நிலைப்பாடு என்ன என்பதை அறிவதற்காக சென்றேன்.உள்ளபடி உரைக்கின்றேன் .

கூட்டம் உணர்வு பூர்வமாகவே இருந்தது. cpsக்கு தரும் முக்கியத்துவம், ஊதிய முரண்பாடுகளுக்கு தரவில்லையே என்ற ஆதங்கத்தை இ.நி.ஆ சார்பாக  உரைப்பதற்குதான் சென்றேன். ஆனால்,அதற்கு வாய்ப்பில்லாமல்  பங்கேற்ற அத்துனை சங்க வாதிகளும்  இடைநிலை ஆசிரியர் களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு மிக கடுமையானது அதை களைந்தே ஆக வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்பதை மிகத் தெளிவாக எடுத்துரைத்தார்கள். 

சங்கங்களின்பால் அவநம்பிக்கையோடு சென்ற எனக்கு  , இன்னும் ஜேக்டோ ஜியோவை நம்பலாம் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. நமக்காக அரசு ஊழியர்களும் , பிறதுறைசார்ந்த சங்க வாதிகளும் நமக்காக குரல் கொடுத்து , இன்னும் மனித நேயம் சாகவில்லை என்பதை அறிய முடிந்தது.

தோழர்கள் தாஸ், பாலசந்தர், அன்பரசு, மாயவன்,மோசஸ், இன்னும் பிற தலைவர்கள் அத்துனைபேருமே வருகின்ற நீதிமன்ற அமர்வில் நமது ஊதிய முரண்பாடு  முக்கிய பிரச்சினையாக விவாதிக்கப்படும் என்பதை தெரிவித்தார்கள். 

நீதிமன்றத்தின் மூலம் நமக்கு முடிவு எட்டப்படவில்லையென்றால்,24/10/2017 அன்று ஜேக்டோ ஜியோ மீண்டும் கூடி அடுத்தகட்ட போராட்டத்தை முன்னெடுப்பதாகவும் கூறியிருக்கிறார்கள்.

23/10/2017 நமக்கானதாக அமைய பிரார்திப்போம்.

ஜாக்டோஜியோவை நம்பி பின்சென்றோம் .
நம்பிக்கை வீணாகவில்லையென'்றே கருதுகின்றேன்.

நன்றி. '
[3:12 AM, 10/14/2017] +91 84897 46426: 

மத்திய அரசில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் ஊதியம் பெறும் அவல நிலையில் தமிழக இடைநிலை ஆசிரியர்கள்




ஜூலை 2009 ல் பணியில் சேர்ந்தஇடைநிலை ஆசிரியர்களுக்கு ஏழாவது ஊதியக்குழுவின் படி எவ்வாறு ஊதிய நிர்ணயம் செய்வது...?

01-01-2016 அன்று
Pay-6890
Grade pay-2800
Personal pay-750
HRA-200
MA-100


பெற்ற இடைநிலை ஆசிரியருக்கு ஊதிய நிர்ணயம்...

Pay-6890+Grade pay-2800=9690

9690×2.57=24903

அரசாணை எண்: 303 நாள்: 11-10-2017ன் பக்கம் 21ல் உள்ள Pay Matrixன் படி,
தர ஊதியம் 2800க்கு கீழ் level 8க்கு நேராக கிடைமட்டமாக உள்ள 24903க்கு அடுத்த ஊதியம் 25300.

ஆகவே புதிய ஊதிய நிர்ணயத்தில், 01-01-2016ல் ஊதியம் 25300+PP 2000= 27300

இவர் ஜீலை 2016 மாத ஆண்டு ஊதிய உயர்வைக் கொண்டிருப்பார்,

01-07-2016ல் கீழ் level 9க்கு நேராக கிடைமட்டமாக உள்ள  அடுத்த ஊதியம் 26100.

01-07-2017ல் கீழ் level 10க்கு நேராக கிடைமட்டமாக உள்ள  அடுத்த ஊதியம் 26900. 

01-10-2017ல் ஊதியம்-26900 தனி ஊதியம்-2000 அகவிலைப்படி(5%)-1445 வீட்டு வாடகைப்படி-400 மருத்துவப்படி-300 மொத்தம் -31045

பணியில் சேர்ந்து 8 ஆண்டுகள் முடித்த ஒரு இடைநிலை ஆசிரியர் புதிதாக பணியில் சேரும் பட்டதாரி ஆசிரியர் பெறும் ஊதியத்தை விட மிகவும் குறைந்த ஊதியம் பெறும் நிலை. ..

இந்த நிலை மாறிட 2009 க்கு பின்னர் பணியில் சேர்ந்த 21000 இடைநிலை ஆசிரியர்கள் ஒன்று சேர்ந்து போராட்டம் நடத்தினால் தான் இழந்த ஊதியத்தை பெற முடியும். 

ஒற்றுமை ஓங்குக.  விரைவில் களப்போராட்டம் மற்றும் சட்ட போராட்டம். 
ஆயத்தமாவோம். .

ஜேக்டோ ஜியோ முடிவுகள்




1)  20/10/2017 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பாக ஊதியக்குழு முரண்பாடுகளை, அரசின் ஏமாற்றுத்தனத்தை கூட்டம்போட்டு விளக்குதல்


2) 23/10/2017 க்குள் இடைநிலைஆசிரியர் உட்பட முரண் நீக்கப்பட்டு 21 மாத நிலுவை வழங்கப்படாவிட்டால் போராட்ட நடவடிக்கைகளை 24/10/2017 அன்று ஜேக்டோ ஜியோ கூடி முடிவெடுக்கும்.

13/10/17

FLASH NEWS-ஓய்வு பெறும் போது வழங்கப்படும் பணிக்கொடைக்கான அதிகபட்சவரம்பு ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னை: தமிழக அரசு ஊழியர்கள் சம்பளம் 2.57 மடங்கு உயர்த்தப்படுவதாக
தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் வெளியிட்ட அறிவிப்பில், அரசு ஊழியர்களின் சம்பளம் 2.57 மடங்கு அதிகரிக்கப்படுகிறது. குறைந்தபட்ச சம்பளம் ரூ.6.100லிருந்து ரூ.15,700 ஆகவும், அதிகபட்ச சம்பளம் ரூ.77 ஆயிரத்திலிருந்து ரூ.2.25 லட்சமாக அதிகரிக்கப்படுகிறது. இந்த சம்பள உயர்வு 2016ம் வருடத்தை கருத்தியலாக,1.10.17 முதல் பண பயனுடன்அமல்படுத்தப்படும்.

பென்சன்தாரர்கள்
பென்சன் மற்றும் குடும்ப பென்சன்தாரர்களுக்கும் 2.57 மடங்கு பென்சன் அதிகரிக்கப்படும். இதன் மூலம் குறைந்தபட்ச பென்சன் ரூ.7,850 ஆகவும், அதிகபட்ச பென்சன் ரூ.1,12,500 மற்றும் குடும்ப பென்சன் 67,500ஆகவும் இருக்கும்.ஓய்வு பெறும் போது வழங்கப்படும் பணிக்கொடைக்கான அதிகபட்சவரம்பு ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

கூடுதல் செலவு

சத்துணவு பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள, கிராம பஞ்சாயத்து செயலர் மற்றும் அனைத்து துறைகளில் பணியாற்றும் சிறப்பு காலமுறை சம்பளம் பெறும் பணியாளர்களுக்கு குறைந்த பட்ச சம்பளம் ரூ. 3 ஆயிரமாகவும், அதிகபட்ச சம்பளம் ரூ.11 ஆயிரமாகவும் திருத்தியமைக்கப்பட்டுள்ளது.தமிழக அரசு தொகுப்பூதியம், நிலையான ஊதியம் மற்றும் மதிப்பூதியத்தில் உள்ள ஊழியர்களின் நலனை கொண்டு அவர்களுக்கு குறைந்தபட்சமாக 30 சதவீத சம்பள உயர்வு வழங்கப்படும்.இதனால், அரசுக்கு ரூ.14,719 கோடி கூடுதல் செலவு ஏற்படும். இதனை அரசே ஏற்று கொள்ளும் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

வீட்டு வாடகை படியும், மருத்துவ படியும் ஏமாற்றம்.

Image may contain: text

ஊதியக்குழு அறிவிப்பு ஏமாற்றம்*

*21 மாதங்களுக்கு நிலுவைத் தொகை இல்லை.

*மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் ரூ 18,000/
என அறிவித்ததை தற்போது 21,000 ஆக உயர்த்தியுள்ளது மத்திய அரசு.
ஆனால் தமிழக அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் ரூ 15700.

Innovations In Educational Administration -என்ற தலைப்பின் -கீழ் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்கள் மற்றும் உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு தேசிய விருது வழங்குவதற்கு பரிந்துரை செய்தல் சார்ந்து இயக்குநரின் செயல்முறைகள்

அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு எவ்வளவு? விரிவான செய்தி தொகுப்பு.

அலுவலர்கள் குழு 2017-ன் பரிந்துரைகளை ஏற்று ஊதிய உயர்வு வழங்க
தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

'மத்திய  ஊதியக் குழு  திருத்திய ஊதிய விகிதங்களை செயல்படுத்தும் போதெல்லாம், தமிழ்நாடு அரசும் அதே ஊதிய விகிதங்களை மாநில அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அறிவித்து வந்துள்ளது. அதேபோல், ஒவ்வொரு முறையும் மத்திய அரசு அகவிலைப்படியை உயர்த்தும்போது, உடனுக்குடன் மாநில அரசும் உயர்த்திய அகவிலைப்படியை  வழங்கி வருகிறது. ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைத்துள்ள ஊதிய விகிதங்களின் அடிப்படையில், மாநில அரசின் அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி நிறுவனங்களில் பணியாற்றும் அலுவலர்களுக்கு ஊதிய விகிதத்தை உயர்த்தி வழங்குவது குறித்து தக்க பரிந்துரைகளை தமிழ்நாடு அரசுக்கு அளித்திட ‘அலுவலர் குழு’ 2017-ஐ அமைத்தது. அதன்படி, அலுவலர் குழு ஆய்வுகள் மேற்கொண்டு தனது பரிந்துரைகளை 27.9.2017 அன்று தமிழ்நாடு அரசுக்கு சமர்ப்பித்தது. இதுவரை தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட அலுவலர் குழுக்கள் எடுத்துக்கொண்ட கால அளவை விட, இம்முறை அமைத்த அலுவலர் குழுதான் மிகக் குறைந்த கால அவகாசத்தில் அறிக்கை அளித்து, ஊதிய விகிதங்களில் மாற்றங்களை விரைவாக கொண்டு வர வழி வகுத்துள்ளது.

இப்பரிந்துரைகளை தமிழ்நாடு அரசு விரிவாக ஆய்வுசெய்து, இன்று எனது தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அதை முழுமையாக ஏற்றுக்கொண்டு, அவற்றை  செயல்படுத்துவதற்கான அரசாணைகளை உடனடியாக பிறப்பிக்க உத்தரவிட்டுள்ளேன்.  தமிழ்நாடு அரசு, மத்திய அரசு பின்பற்றிய அதே 2.57 என்ற பெருக்கல் காரணியால், அனைத்து அரசு அலுவலர், ஆசிரியர்களின் தற்போதைய ஊதியத்தை பெருக்கி, அவற்றை உயர்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது  என தெரிவித்துக்கொள்கிறேன்.

மாநிலத்தின் நிதிநிலையையும், அதே சமயம் அரசின் திட்டங்களையும் பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்கும் அவசியத்தை கருத்தில் கொண்டு, இந்த புதிய ஊதிய உயர்வை 1.1.2016 முதல் கருத்தியலாகவும், 1.10.2017 முதல் பணப்பயனுடனும் அமல்படுத்த ஆணையிட்டுள்ளேன்.  இதன்படி, தற்போது  உள்ள குறைந்தபட்ச ஊதியம் ரூ.6,100  மற்றும் அதிகபட்ச ஊதியம்  ரூ.77,000  என்பது உயர்த்தப்பட்டு, குறைந்தபட்ச ஊதியம் ரூ.15,700 மற்றும்  அதிகபட்ச ஊதியம் ரூ.2,25,000 எனவும்  நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  மேலும், முந்தைய ஊதியக்குழுக்களால் தமிழ்நாடு அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுவாடகைப்படி போன்ற பல்வேறு படிகளுக்கான  உயர்வைவிட இம்முறை அதிகமான உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, அனைத்து தமிழ்நாடு அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும், மத்திய அரசு ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதிய உயர்வுக்கு கடைபிடித்த அதே 2.57 என்ற பெருக்கல் காரணியைப் பின்பற்றி ஓய்வு ஊதிய உயர்வை வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதனால், புதிய உயர்த்தப்பட்ட ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் குறைந்தபட்சம் ரூ.7,850 என்றும், அதிகபட்ச ஓய்வூதியம்,  குடும்ப ஓய்வூதியம் முறையே ரூ.1,12,500 மற்றும் ரூ.67,500 என்றும் உயர்த்தி வழங்கப்படும். மேலும், ஓய்வு பெறும்போது வழங்கப்படும் பணிக்கொடைக்கான அதிகப்பட்ச வரம்பு ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

சத்துணவுப் பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், கிராம பஞ்சாயத்துச் செயலர் மற்றும் அனைத்து துறைகளில் பணியாற்றும் சிறப்பு காலமுறை ஊதியம் பெற்றுவரும் பணியாளர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் 2.57 என்ற காரணியால் பெருக்கி, திருத்திய ஊதியம் நிர்ணயிக்கப்பட்டு அவர்களின்  குறைந்தபட்ச  ஊதியம் ரூ.3000 ஆகவும், அதிகபட்ச ஊதியம் ரூ.11,100 ஆகவும் திருத்தியமைக்கப்பட்டுள்ளது என்றும்  தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ்நாடு அரசு தொகுப்பூதியம்,  நிலையான ஊதியம் மற்றும் மதிப்பூதியத்தில் உள்ள பணியாளர்களின் நலன்களைக் கருத்தில்கொண்டு அவர்களுக்கு குறைந்தபட்சமாக 30 சதவிகித ஊதிய உயர்வு வழங்கப்பட்டு உள்ளதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்தமுடிவுகளின் அடிப்படையில்,  அரசு அலுவலர் மற்றும் ஆசிரியர்களுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.8,016 கோடி கூடுதல் ஊதியமும், ஓய்வு பெற்றோர் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கு ரூ.6,703 கோடி கூடுதல் ஓய்வூதியமும் வழங்கப்படும்.  இதனால் ஆண்டொன்றுக்கு ஏற்படும் மொத்த கூடுதல் செலவான ரூ.14,719 கோடியை தமிழ்நாடு  அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் அவர் தம் குடும்பத்தினரின் நலன் கருதி மாநில அரசே முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.


  இவ்வறிவிப்புகள் மூலம் சுமார் பன்னிரண்டு  லட்சம் அரசு அலுவலர்களும், ஆசிரியர்களும், சுமார் ஏழு லட்சம் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களும் பலனடைவார்கள் என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்' என்று தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் இடைநிலை சாதாரண நிலை ஆசிரியர்களுக்கு 1.1.2006 இல் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கி, பின்னர் புதிய ஊதிய மாற்றம் செய்திட வேண்டி தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு மாவட்டச் செயலாளர் திரு.முருகசெல்வராசன் அவர்களின் விண்ணப்பம்_ 11/10/17.

Image may contain: text

TN-7th PC- HRA SLAB


TN -7th PC- தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலை (3% + 3 %)

TN -7th PC- PAY FIXATION TABLE



TN-7th PC- நகர ஈட்டுப்படி குளிர்கால படி ,மலை வாழ் படி மற்றும் இதர படிகள்



PAY DIFFERENCE FOR NEW & OLD SCALE (6th & 7tH PAY COMMISSION)

அரசாணை எண் 300 நிதித்துறை நாள் 10.10.17- அகவிலைப்படி 3%- 01.07.2017 முதல் உயர்த்தி (136% to 139% ) ஆணை வெளியிடப்படுகிறது


TN-7th PC-இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு களையப்படவில்லை

7th PC-புதிய ஊதிய விகிதம் அமுலுக்கு வரும் நாள் விவரம்

FLASH NEWS-G.O.Ms.No.303, Dated 11th October 2017-ABSTRACT OFFICIAL COMMITTEE, 2017 - Recommendations of the Official Committee, 2017 on revision of pay, allowances, pension and related benefits – Revision of Pay - Orders - Issued - The Tamil Nadu Revised Pay Rules, 2017 - Notified. Posted: 12 Oct 2017 01:00 AM PDT G.O.Ms.No.303, Dated 11th October 2017-ABSTRACT OFFICIAL COMMITTEE, 2017 - Recommendations of the Official Committee, 2017 on revision of pay, allowances, pension and related benefits – Revision of Pay - Orders - Issued - The Tamil Nadu Revised Pay Rules, 2017 - Notified NMMS EXAM | 2017 REG - DIRECTOR PROCEEDINGS! Posted: 11 Oct 2017 08:04 PM PDT JACTTO - GEO அவசரக்கூட்டம் 13.10.17(வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது

ஊதியக்குழு அறிக்கை தொடர்பான முதல்வர் அவர்களின் அறிவிப்பு குறித்து
பரிசீலனை செய்ய ஜாக்டோ-ஜியோ- வின் அவசரக்கூட்டம் 13.10.17(வெள்ளிக்கிழமை) மதியம் சரியாக 2.00 மணிக்கு சென்னை அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் நடைபெற உள்ளது.


 எனவே ஜாக்டோ- ஜியோ உயர்மட்டக்குழவில் இடம் பெற்ற அனைத்து துறைவாரி சங்க தலைவர்கள் (சங்கத்திற்கு ஒருவர் மட்டும்) தவறாது பங்கேற்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
மு.சுப்பிரமணியன்,
மாயவன்,
மீனாட்சி சுந்தரம்,
தாஸ்,
அன்பரசு,
வெங்கடேசன். ஒருங்கிணைப்பாளர்கள்,
மோசஸ்-நிதிக்காப்பாளர்,

தியாகராஜன்- செய்திதொடர்பாளர்.

NMMS EXAM | 2017 REG - DIRECTOR PROCEEDINGS!




FLASH NEWS-G.O.Ms.No.303, Dated 11th October 2017-ABSTRACT OFFICIAL COMMITTEE, 2017 - Recommendations of the Official Committee, 2017 on revision of pay, allowances, pension and related benefits – Revision of Pay - Orders - Issued - The Tamil Nadu Revised Pay Rules, 2017 - Notified.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு: தமிழக அரசு அறிவிப்பு

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், சிறப்பு காலமுறை ஊதியம் பெறுவோருக்கு ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கை வருமாறு: தமிழ்நாடு அரசு, மத்திய அரசின் ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைத்துள்ள ஊதிய விகிதங்களின் அடிப்படையில், மாநில அரசின் அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி நிறுவனங்களில் பணியாற்றும் அலுவலர்களுக்கு ஊதிய விகிதத்தை உயர்த்தி

12/10/17

13-ல் மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆலோசனை கூட்டம்!!!

மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னையில்
வரும் 13, 14 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் இளங்கோவன் மதுரையில் கூறியிருப்பதாவது:
பள்ளிக் கல்வித் துறை முதன்மை செயலர் தலைமையில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் ஆலோசனைக் கூட்டம் அக்.13, 14 தேதிகளில் சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற உள்ளது.

இதில் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையங்களை அமைப்பதற்கான முன்னேற்பாடு பணிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு தொடர் அங்கீகாரம் வழங்குதல் மற்றும் அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் மீது நடவடிக்கைஎடுத்தல், பருவ மழை தொடங்க உள்ளதால் பள்ளிகளில் மேற்கொள்ள உள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பணி நிறைவு பெறும் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு விரைவாக பணப்பலன் வழங்குதல், பள்ளி வளாகங்கள் மற்றும் வீட்டுத் தோட்டங்களில் மாணவர்களை மரக்கன்றுகள் நட ஊக்குவித்தல், பிளஸ் 1 மாதிரி வினாத்தாள் தயாரித்தல் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

டெங்கு குறித்த அச்சம் அதிகரித்து வருவதால், பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும்' என, கோரிக்கை!!!

மாநிலம் முழுவதும், ஒரு லட்சம் மாணவ - மாணவியர், காய்ச்சலால் பாதிக்கப்பட்டு
உள்ளதாக, சுகாதார துறை எடுத்த கணக்கெடுப்பில், தெரிய வந்துள்ளது.தமிழகத்தில், 'டெங்கு' காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், டெங்குவால் பாதிக்கப்பட்டு, லட்சக்கணக்கானோர் சிகிச்சையில் உள்ளனர். அதில், 5௦ சதவீதம் மாணவ - மாணவியர். அதனால், பள்ளிகளில், டெங்கு விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.அப்போது, டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல்களால் பாதிக்கப்பட்டு, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர், பள்ளிக்கு வராமல் இருந்தது தெரிய வந்துள்ளது. ஒரு பள்ளிக்கு சராசரியாக, இரண்டு பேர் வீதம், ஒரு லட்சம் பேர் வரை, காய்ச்சல் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். அதனால், காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பட்டியலை, உள்ளாட்சி அமைப்புகள் சேகரிக்க, மாவட்ட நிர்வாகங்கள் உத்தரவிட்டு உள்ளன. அதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு, மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை :

'டெங்கு குறித்த அச்சம் அதிகரித்து வருவதால், பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும்' என, கோரிக்கை எழுந்துள்ளது.காய்ச்சல் காரணமாக, பள்ளி, கல்லுாரிக்கு வரும் மாணவ - மாணவியரின் எண்ணிக்கை சரிந்துள்ளது. பெரும்பாலான பள்ளிகளில், 10 முதல், 40 சதவீதம் மாணவ - மாணவியரும், கல்லுாரிகளில், 10 முதல், 20 சதவீத மாணவ - மாணவியரும் விடுப்பு எடுத்துள்ளனர்.

அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது: காய்ச்சல் அறிகுறி ஏற்பட்டால், ஒரு வாரம் அல்லது, 10 நாள் வரை, மாணவர்கள் பள்ளிக்கு வருவதில்லை. பள்ளி சென்று, காய்ச்சலுடன் ஓரிரு மாணவர்கள் வீடு திரும்பினால், அக்கம் பக்கத்தில் உள்ளவர்களும், அந்த பயத்தில், தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதில்லை. ஆயினும், பள்ளியில் பாடம் நடத்துவதை தள்ளிப் போட முடியாது. பள்ளிக்கு வராதவர்கள், பாடத்தை கவனிக்க முடியாமல் போகிறது.

இதனால், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.'தமிழகத்தில், டெங்கு காய்ச்சல் தாக்கம் நாளுக்கு நாள்அதிகரித்து வருவதால், பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியரின் நலன் கருதி, விடுமுறை அறிவிக்க அரசு முன்வர வேண்டும்' என, பெற்றோர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இந்திய பொருளாதார மந்தநிலை தெற்காசியா வளர்ச்சியை பாதிக்கும் : உலக வங்கி!!!

ரூபாய் நோட்டு வாபஸ் மற்றும் ஜிஎஸ்டி அமல் போன்ற
நிச்சயமற்ற செயல்பாடுகளால் இந்திய பொருளாதாரம் மந்தமடைந்துள்ளது. இதனால் தெற்காசிய நாடுகளின் வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்படும் என உலக வங்கி தெரிவித்துள்ளது.

இந்திய பொருளாதாரம் மற்றும் தெற்காசிய பொருளாதாரம் குறித்து உலக வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், 2017 ல் 7 சதவீதமாக உள்ள பொருளாதார சரிவு, 2018 ல் 7.3 சதவீதம் வரை இருக்கும். ஆகையால் நீடித்த வளர்ச்சி பெற வறுமை ஒழிப்பு பணிகளில் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும். இந்தியாவின் வளர்ச்சி விகித மந்தநிலை, தெற்காசிய வளர்ச்சி விகிதத்தை பாதிக்கும்.

இதன் விளைவாக பொருளாதார வளர்ச்சியில் தெற்காசியா, கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் நாடுகளை விட இரண்டு இடங்கள் பின்தங்கி உள்ளது. இந்தியாவை பொறுத்தவரை 2016 ல் 7.1 சதவீதமாக இருந்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி குறைவு, 2017 ம் ஆண்டின் முதல் காலாண்டிலேயே 5.7 சதவீதத்தை எட்டி உள்ளது. ஜிஎஸ்டி, 2018 ம் ஆண்டிலேயே இந்தியாவின் பொருளாதாரத்தை வெகுவாக பாதிக்க வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தை திருமணத்தை தடுக்க உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு !!

குழந்தை திருமணத்தை தடுக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கானது இன்று விசாரணைக்கு வந்த போது 15 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட பெண்ணை மணந்து கணவர் பாலியல் உறவு கொண்டால் அது வன்கொடுமையே என்றும், மேலும் திருமணமாகி ஒரு வருடத்திற்குள் அந்த பெண் புகார் 
அளித்தால் அது வன்கொடுமையாக கருதப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

18 வயதுக்குக்குள் உள்ள மனைவியுடன் உறவு கொள்வது சட்ட விரோதம் அல்ல என்ற ஷரத்து நீக்கப்பட்டிருப்பது சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த ஆட்சியை அமைத்தது சசிகலாவா?: பதில் சொல்லாமல் சென்ற ஓபிஎஸ்!

                                                        ஆனால் சசிகலா சிறைக்கு சென்றதும் கட்சியில், காட்சிகள் மாறின. சசிகலா, தினகரன் ஆகியோர் கட்சியில் இருந்து ஒதுக்கப்பட்டனர், ஓபிஎஸ் அணி, எடப்பாடி அணி இணைந்து ஆட்சியை நடத்தி வருகிறது. ஓபிஎஸ் துணை முதல்வரானார்.

இந்நிலையில் ஐந்து நாட்கள் சசிகலா சிறையில்
இருந்து பரோலில் வந்துள்ள நிலையில் அமைச்சர் செல்லூர் ராஜூ சில தினங்களுக்கு முன்னர் செய்தியாளர்களை சந்தித்த போது இந்த ஆட்சி அமைய சசிகலாதான் காரணம் என தனது சசிகலா பாசத்தை வெளிப்படுத்தினார்.

இதனையடுத்து செல்லூர் ராஜூ தினகரனின் ஸ்லீப்பர் செல் என அழைக்கப்பட்டார். உடனடியாக அதற்கு மறுப்பு தெரிவித்த செல்லூர் ராஜூ, தான் எப்போதும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் தலைமையில் நடக்கும் ஆட்சிக்கு ஆதரவு எனவும், தான் ஸ்லீப்பர் செல் இல்லை எனவும் கூறினார்.

இந்நிலையில் பல்வேறு அரசுப் பணிகள் காரணமாக தேனி சென்றிருந்த துணை முதல்வர் ஓபிஎஸ் சென்னை திரும்புவதற்கு முன்னர் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், இந்த ஆட்சி அமைய காரணமாக இருந்தது சசிகலாதான் என்று தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியது தொடர்பாக கேள்வி எழுப்பினர். ஆனால் ஓபிஎஸ் அந்தக் கேள்விக்கு பதிலளிக்காமல் சென்றுவிட்டார்.

SSTA-FLASH அரசு ஊழியர்கள் சம்பளம், மதுபான விலை உயர்கிறது : தமிழக அமைச்சரவை ஒப்புதல்!!!

சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை
கூட்டம் இன்று காலை நடந்தது. இதில் 7 வது ஊதியக்குழு பரிந்துரை, டெங்கு காய்ச்சலை ஒழிப்பது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இன்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் 7 வது ஊதியக்குழு பரிந்துரையை ஏற்க ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது. இதனால் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக தமிழக அரசு ஊழியர்களின் சம்பளத்தை 20 சதவீதம் உயர்த்தி வழங்க ஒப்புதல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் மதுபானங்களின் விலையை உயர்த்தவும் அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்துள்ளது.

மதுபான விலையை உயர்த்தி, தமிழக அரசின் வருவாயை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.5,212 கோடி கூடுதல் வருவாய் வர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதன்படி பீர் விலையில் ரூ.10ம், குவாட்டர் விலையில் ரூ.12 ம் உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.

TNPSC: DEC-2017 துறை தேர்வு விண்ணப்பங்கள் வரவேற்க்கப் பட்டுள்ளன!!!

விளம்பர எண்: 480
விளம்பர நாள்:23.9.17

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் 
தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

*இடைநிலை ஆசிரியர்கள்*

1. 065- Tamil Nadu School Education Department Administrative Test – Paper - I -
 Higher Secondary / Secondary / Teacher Training and Special School

2. 072-Tamil Nadu School Education Department Administrative Test – Paper - II -  Elementary / Middle and Special Schools

3.  124 - Account Test for Subordinate Officers - Part I .

(or)

4.152-The Account Test for Executive Officers

5.172 - The Tamil Nadu Government Office Manual Test

*பட்டதாரி ஆசிரியர்கள் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள்*

1 . 124 - Account Test for Subordinate Officers - Part I .(or)
152.The Account Test for Executive Officers

2 . 172 - The Tamil Nadu Government Office Manual

துறை தேர்வில் *மற்ற அலுவலர்கள்* தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

1 . 124 - Account Test for Subordinate Officers - Part I .

2 . 172 - The Tamil Nadu Government Office Manual


*TNPSC: DEC-2017 துறை தேர்வு வகுப்பு*

*Trichy-ல் வகுப்புகள் துவங்கும் நாள் OCTOBER  21 முதல்*

The classes starts at

*OMEGA COACHING CENTER near SRC College ,*
*Chatram Bus stand TRICHY.*

விண்ணப்பங்கள் மற்றும் வகுப்புகளுக்கு கீழ்கண்ட எண்ணை தொடா்பு கொள்ளவும்

9443503804
8526625242

BIG BREAKING-- வெளியானது 7 வது ஊதியக்குழுவில் உள்ள சாரம்சங்கள் !!!

                                               
தமிழக அரசு ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்துவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை  வெளிட்டார் முதலமைச்சர் பழனிசாமி.*

*தமிழக அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் ரூ.6,100இல் இருந்து 15,700 ஆக உயர்வு.*


*தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் போது வழங்கப்படும் பணிக்கொடைக்கான வரம்பு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்வு*

*7வது ஊதிய குழு பரிந்துரைகள் - 1.10.2017 தேதி முதல் பணப்பயனுடன் அமல்படுத்தப்படும் - முதலமைச்சர் அறிவிப்பு*

தமிழக அரசு ஊழியர்களின் சம்பளம் 2.57 மடங்கு உயர்வு !!

தமிழக அரசு ஊழியர்கள் சம்பளம் 2.57 மடங்கு உயர்த்தப்படுவதாக தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் வெளியிட்ட அறிவிப்பில், அரசு ஊழியர்களின் சம்பளம் 2.57 மடங்கு அதிகரிக்கப்படுகிறது.

குறைந்தபட்ச சம்பளம் ரூ.6.100லிருந்து ரூ.15,700 ஆகவும், அதிகபட்ச சம்பளம் ரூ.77 ஆயிரத்திலிருந்து ரூ.2.25 லட்சமாக அதிகரிக்கப்படுகிறது.

இந்த சம்பள உயர்வு 2016ம் வருடத்தை கருத்தியலாக,1.10.17 முதல் பண பயனுடன்அமல்படுத்தப்படும்.

*பென்சன்தாரர்கள்*

பென்சன் மற்றும் குடும்ப பென்சன்தாரர்களுக்கும் 2.57 மடங்கு பென்சன் அதிகரிக்கப்படும். இதன் மூலம் குறைந்தபட்ச பென்சன் ரூ.7,850 ஆகவும், அதிகபட்ச பென்சன் ரூ.1,12,500 மற்றும் குடும்ப பென்சன் 67,500ஆகவும் இருக்கும்.ஓய்வு பெறும் போது வழங்கப்படும் பணிக்கொடைக்கான அதிகபட்சவரம்பு ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.


*கூடுதல் செலவு*


சத்துணவு பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள, கிராம பஞ்சாயத்து செயலர் மற்றும் அனைத்து துறைகளில் பணியாற்றும் சிறப்பு காலமுறை சம்பளம் பெறும் பணியாளர்களுக்கு குறைந்த பட்ச சம்பளம் ரூ. 3 ஆயிரமாகவும், அதிகபட்ச சம்பளம் ரூ.11 ஆயிரமாகவும் திருத்தியமைக்கப்பட்டுள்ளது.


தமிழக அரசு தொகுப்பூதியம், நிலையான ஊதியம் மற்றும் மதிப்பூதியத்தில் உள்ள ஊழியர்களின் நலனை கொண்டு அவர்களுக்கு குறைந்தபட்சமாக 30 சதவீத சம்பள உயர்வு வழங்கப்படும்.இதனால், அரசுக்கு ரூ.14,719 கோடி கூடுதல் செலவு ஏற்படும். இதனை அரசே ஏற்று கொள்ளும் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மத்திய அரசு பின்பற்றிய அதே 2.57 என்ற பெருக்கல் காரணியால், அனைத்து அரசு அலுவலர், ஆசிரியர்களின் தற்போதைய ஊதியத்தை பெருக்கி, அவற்றை உயர்த்தி வழங்க முடிவு !!

அலுவலர்கள் குழு 2017-ன் பரிந்துரைகளை ஏற்று ஊதிய உயர்வு வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
'மத்திய  ஊதியக் குழு  திருத்திய ஊதிய விகிதங்களை செயல்படுத்தும் போதெல்லாம், தமிழ்நாடு அரசும் அதே ஊதிய விகிதங்களை மாநில அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அறிவித்து வந்துள்ளது. அதேபோல், ஒவ்வொரு முறையும் மத்திய அரசு அகவிலைப்படியை உயர்த்தும்போது, 
உடனுக்குடன் மாநில அரசும் உயர்த்திய அகவிலைப்படியை  வழங்கி வருகிறது. ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைத்துள்ள ஊதிய விகிதங்களின் அடிப்படையில், மாநில அரசின் அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி நிறுவனங்களில் பணியாற்றும் அலுவலர்களுக்கு ஊதிய விகிதத்தை உயர்த்தி வழங்குவது குறித்து தக்க பரிந்துரைகளை தமிழ்நாடு அரசுக்கு அளித்திட ‘அலுவலர் குழு’ 2017-ஐ அமைத்தது. அதன்படி, அலுவலர் குழு ஆய்வுகள் மேற்கொண்டு தனது பரிந்துரைகளை 27.9.2017 அன்று தமிழ்நாடு அரசுக்கு சமர்ப்பித்தது. இதுவரை தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட அலுவலர் குழுக்கள் எடுத்துக்கொண்ட கால அளவை விட, இம்முறை அமைத்த அலுவலர் குழுதான் மிகக் குறைந்த கால அவகாசத்தில் அறிக்கை அளித்து, ஊதிய விகிதங்களில் மாற்றங்களை விரைவாக கொண்டு வர வழி வகுத்துள்ளது.

இப்பரிந்துரைகளை தமிழ்நாடு அரசு விரிவாக ஆய்வுசெய்து, இன்று எனது தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அதை முழுமையாக ஏற்றுக்கொண்டு, அவற்றை  செயல்படுத்துவதற்கான அரசாணைகளை உடனடியாக பிறப்பிக்க உத்தரவிட்டுள்ளேன்.  தமிழ்நாடு அரசு, மத்திய அரசு பின்பற்றிய அதே 2.57 என்ற பெருக்கல் காரணியால், அனைத்து அரசு அலுவலர், ஆசிரியர்களின் தற்போதைய ஊதியத்தை பெருக்கி, அவற்றை உயர்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது  என தெரிவித்துக்கொள்கிறேன்.

மாநிலத்தின் நிதிநிலையையும், அதே சமயம் அரசின் திட்டங்களையும் பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்கும் அவசியத்தை கருத்தில் கொண்டு, இந்த புதிய ஊதிய உயர்வை 1.1.2016 முதல் கருத்தியலாகவும், 1.10.2017 முதல் பணப்பயனுடனும் அமல்படுத்த ஆணையிட்டுள்ளேன்.  இதன்படி, தற்போது  உள்ள குறைந்தபட்ச ஊதியம் ரூ.6,100  மற்றும் அதிகபட்ச ஊதியம்  ரூ.77,000  என்பது உயர்த்தப்பட்டு, குறைந்தபட்ச ஊதியம் ரூ.15,700 மற்றும்  அதிகபட்ச ஊதியம் ரூ.2,25,000 எனவும்  நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  மேலும், முந்தைய ஊதியக்குழுக்களால் தமிழ்நாடு அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுவாடகைப்படி போன்ற பல்வேறு படிகளுக்கான  உயர்வைவிட இம்முறை அதிகமான உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, அனைத்து தமிழ்நாடு அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும், மத்திய அரசு ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதிய உயர்வுக்கு கடைபிடித்த அதே 2.57 என்ற பெருக்கல் காரணியைப் பின்பற்றி ஓய்வு ஊதிய உயர்வை வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதனால், புதிய உயர்த்தப்பட்ட ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் குறைந்தபட்சம் ரூ.7,850 என்றும், அதிகபட்ச ஓய்வூதியம்,  குடும்ப ஓய்வூதியம் முறையே ரூ.1,12,500 மற்றும் ரூ.67,500 என்றும் உயர்த்தி வழங்கப்படும். மேலும், ஓய்வு பெறும்போது வழங்கப்படும் பணிக்கொடைக்கான அதிகப்பட்ச வரம்பு ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

சத்துணவுப் பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், கிராம பஞ்சாயத்துச் செயலர் மற்றும் அனைத்து துறைகளில் பணியாற்றும் சிறப்பு காலமுறை ஊதியம் பெற்றுவரும் பணியாளர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் 2.57 என்ற காரணியால் பெருக்கி, திருத்திய ஊதியம் நிர்ணயிக்கப்பட்டு அவர்களின்  குறைந்தபட்ச  ஊதியம் ரூ.3000 ஆகவும், அதிகபட்ச ஊதியம் ரூ.11,100 ஆகவும் திருத்தியமைக்கப்பட்டுள்ளது என்றும்  தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ்நாடு அரசு தொகுப்பூதியம்,  நிலையான ஊதியம் மற்றும் மதிப்பூதியத்தில் உள்ள பணியாளர்களின் நலன்களைக் கருத்தில்கொண்டு அவர்களுக்கு குறைந்தபட்சமாக 30 சதவிகித ஊதிய உயர்வு வழங்கப்பட்டு உள்ளதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த முடிவுகளின் அடிப்படையில்,  அரசு அலுவலர் மற்றும் ஆசிரியர்களுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.8,016 கோடி கூடுதல் ஊதியமும், ஓய்வு பெற்றோர் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கு ரூ.6,703 கோடி கூடுதல் ஓய்வூதியமும் வழங்கப்படும்.  இதனால் ஆண்டொன்றுக்கு ஏற்படும் மொத்த கூடுதல் செலவான ரூ.14,719 கோடியை தமிழ்நாடு  அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் அவர் தம் குடும்பத்தினரின் நலன் கருதி மாநில அரசே முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

  இவ்வறிவிப்புகள் மூலம் சுமார் பன்னிரண்டு  லட்சம் அரசு அலுவலர்களும், ஆசிரியர்களும், சுமார் ஏழு லட்சம் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களும் பலனடைவார்கள் என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்' என்று தெரிவித்துள்ளார்.

தீபாவளி விடுமுறையில் மாற்றம் வருமா?

தீபாவளி திருநாள் விடுமுறை 17.10.17 மற்றும் 18.10.17 ஆகிய நாட்கள் என மாவட்ட தொ.க.அலுவலர் அளித்துள்ள பட்டியலில்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், 19.10.17 அன்று தான் அமாவாசை வருவதால், அன்று தான் நோன்பு கடைப்பிடிக்க வேண்டியுள்ளதால் 18.10.17 மற்றும் 19.10.17 ஆகிய நாட்களே தீபாவளி விடுமுறையாக விடப்பட வேண்டும் என்று பல்வேறு ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து வேலூர் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினரிடம் கேட்டபோது, இது உடனடியாக மாவட்ட தொ.க.அலுவலர் கவனத்திற்கு எடுத்துச் சென்று உரிய விடுமுறை மாற்றங்கள் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர்.

தமிழக அரசு ஊழியர்களுக்கு 20% ஊதிய உயர்வு.

அரசு ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியம் 20% உயர்வு- அமைச்சரவை ஒப்புதல்

இன்று காலை தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிச்சாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்  தமிழக அரசு ஊழியர்களின் ஊதியத்தை சுமார் 20% உயர்த்த தமிழக அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் 7வது ஊதியக்குழு அளித்த பரிந்துரை அடிப்படையில் தமிழக அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

11/10/17

4ஜி நெட்வொர்க்: ஜியோ முதலிடம்!

நெட்வொர்க் நிறுவனங்களிலேயே 4ஜி பதிவிறக்க வேகத்தில் ரிலையன்ஸ் ஜியோ நெட்வொர்க் முதலிடம் பிடித்திருப்பதாக டிராய் தெரிவித்துள்ளது.
இந்தியத் தொலைத் தொடர்புத் துறை ஒழுங்குமுறை ஆணையமான டிராய் அமைப்பு, செப்டம்பர் மாதத்தில் இந்திய நெட்வொர்க் நிறுவனங்களின் இணைய சேவை வேகம் குறித்து ‘மை ஸ்பீடு ஆப்’ வாயிலாகச் சோதனை மேற்கொண்டது. அதில், செப்டம்பர் மாதத்தில் அதிகபட்சமாக ஜியோவின் சராசரிப் பதிவிறக்க வேகம் 18.43 எம்.பி.பி.எஸ்.ஸாக இருந்துள்ளது. ஜியோவைத் தொடர்ந்து வோடஃபோன் 8.99 எம்.பி.பி.எஸ்., ஐடியா செல்லுலார் 8.74 எம்.பி.பி.எஸ்., ஏர்டெல் 8.55 எம்.பி.பி.எஸ். ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
பதிவேற்ற வேகத்தைப் பொறுத்தவரையில் ஐடியா செல்லுலார் (6.30 எம்.பி.பி.எஸ்.) முதலிடம் பிடித்துள்ளது. அதைத் தொடர்ந்து 5.77 எம்.பி.பி.எஸ். வேகத்துடன் வோடஃபோனும், 4.13 எம்.பி.பி.எஸ். வேகத்துடன் ரிலையன்ஸ் ஜியோவும் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்துள்ளன. ஏர்டெல் (4.08 எம்.பி.பி.எஸ்.) நான்காவது இடத்தில் உள்ளது.
ரிலையன்ஸ் ஜியோவின் அறிமுகத்துக்குப் பிறகு இந்தியாவில் டேட்டா பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கடந்த செப்டம்பரில் தினசரி 20 கோடி ஜி.பி. அளவிலான டேட்டா பயன்படுத்தப்பட்டுவந்தது. இந்த ஆண்டில் தினசரி 150 கோடி ஜி.பி. அளவிலான டேட்டா பயன்படுத்தப்படுகிறது.

ஆங்கிலத்தை புரிந்து படிக்கும் வகையில் புதிய பாடத்திட்டம் !!

ஆங்கிலத்தை புரிந்து படிக்கும் வகையில், புதிய பாடத்திட்டம் கொண்டு வர
வேண்டும்’ என, ஆசிரியர் சங்கத்தினர் வலியுறுத்தினர்.சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள, டி.பி.ஐ., வளாகத்தில், தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டம் மாற்றி அமைப்பது குறித்து, கருத்து கேட்பு கூட்டம், நேற்று முன்தினம் நடந்தது. இதில், 15க்கும் மேற்பட்ட ஆசிரியர் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.கூட்டத்தில், தற்போதுள்ள முப்பருவ முறையில், இரண்டாம் பருவத்திற்கான பாடங்களை குறைத்து, அவற்றை மூன்றாம் பருவத்தில் இணைக்க வேண்டும். ஆசிரியர்களை கல்வி பணிக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும். விவசாயம் மற்றும் அறிவியல் தொடர்பான பாடங்களை புதிதாக அமைப்பதோடு, அறிவியல் ஆய்வுக்கான உபகரணங்களை வழங்கிட வேண்டும்.மாணவர்களுக்கு எழுத்துப் பயிற்சி, வாசிப்பு பயிற்சியுடன், ஆங்கிலத்தை புரிந்து படிப்பதற்கேற்ப பாடத்திட்டம் வகுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை, ஆசிரியர் சங்கத்தினர் வலியுறுத்தினர்

புதிய பாடதிட்டத்தில் விவசாயத்திற்கு முக்கியத்துவம்-பட்டதாரி ஆசிரியர்கள் யோசனை!!

அரசு ஊழியர் ஊதிய உயர்வு : அமைச்சரவை நாளை முடிவு

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, ஊதிய உயர்வு வழங்குவது குறித்து முடிவெடுக்க, தமிழக அமைச்சரவை கூட்டம், நாளை நடைபெற உள்ளது.

மத்திய அரசின், ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, ஊதிய விகிதங்களை மாற்றி அமைக்க, தமிழக அரசு முடிவு செய்தது. 

இதற்கான பரிந்துரைகளை பெறுவதற்காக, 'அலுவலர் குழு' அமைக்கப்பட்டது. இக்குழு, செப்., 27ல், முதல்வர் பழனிசாமியை சந்தித்து, அறிக்கை வழங்கியது. அதன் அடிப்படையில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, எத்தனை சதவீதம் ஊதிய உயர்வு வழங்குவது என்பதை முடிவு செய்வதற்காக, நாளை காலை, 11:15 மணிக்கு, தலைமை செயலகத்தில், அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. முதல்வர் பழனிசாமி தலைமையில் நடக்கும் இந்த கூட்டத்தில், அனைத்து அமைச்சர்களும் பங்கேற்கின்றனர். அமைச்சரவை கூட்டம் முடிந்ததும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான சம்பள உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. 

G.O No. 293 Dt: October 05, 2017 - MEDICAL AID – New Health Insurance Scheme, 2014 for Pensioners (including spouse) / Family Pensioners – List of Approved Hospitals – Addition of Hospitals and inclusion of additional Specialities in the hospitals – Orders – Issued.

பள்ளிக்கல்வி - கணினி ஆசிரியர்கள் காலிப் பணியிடங்கள் கோரி இயக்குனர் உத்தரவு - விரைவில் கணினி ஆசிரியர்கள் பணியமர்த்த வாய்ப்பு - இயக்குனர் செயல்முறைகள்