யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

23/1/18

கட்டாயக்கல்வி சட்டத்தின்படி இனி 8 ஆம் வகுப்பில் கட்டாய தேர்ச்சி கிடையாது!!!

வரும் கல்வியாண்டில் புதிய முடிவு 
அமலுக்கு வருகிறது - பள்ளி கல்வித் துறை

"கட்டாய கல்வி சட்டத்தின்படி இனி 8ஆம் வகுப்பில் மட்டும் கட்டாய தேர்ச்சி கிடையாது"

* இதுவரை 8ஆம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி முறை அமலில் இருந்து வருகிறது

ரூ 20 லட்சம் டெபாசிட் செய்த 2 லட்சம் பேருக்கு நோட்டீஸ்!!!

பஸ்கட்டண உயர்வு மாணவ -மாணவிகள் போராட்டத்தில் குதித்தனர்.-பஸ் சிறைபிடிப்பு-மறியல்!!!



DSE PROCEEDINGS-EMIS மாணவர்கள் விவரங்களை 29-01-2018 க்குள் பதிவேற்றம் செய்யும் பணியினை நிறைவு செய்தல் குறித்து பள்ளிக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள்




JACTTO GEO - ஆசிரியர்கள் போராட்ட காலத்திற்கு ஈடு செய்யவேண்டிய நாட்கள் - சிவகங்கை மாவட்ட DEEO உத்தரவு!!!

19/1/18

பள்ளி மாணவர்களின் EMIS விவரங்களை பூர்த்தி செய்து தலைமை ஆசிரியர் கூட்டத்தில் சமர்ப்பிக்க வேண்டிய படிவம் : இங்கு கிளிக் செய்யவும்



17.01.2018 ) மாலை 4.00 மணியளவில் மதிப்புமிகு பள்ளிக்கல்வி முதன்மைச்செயலர் அவர்களும் , மதிப்புமிகு அனைவருக்கும் கல்வி இயக்கக திட்ட இயக்குநர் அவர்களும் காணொலிக் காட்சி மூலம் சில தகவல்களை நமக்குத் தந்துள்ளார்கள் அவற்றின் விபரம்..

1, மொபைல் அப்ளிகேசன் மேம்படுத்தப்பட்டு மாணவர் அடையாள அட்டை        (STUDENT SMART CARD ) எளிதில் பதிவேற்றம் செய்ய வழிவகை செய்யப் பட்டுள்ளது.. மேலும் இப்பணியைத் துரிதப்படுத்த மொபைல் அப்ளிகேசனுடன் கணினி மற்றும் லேப்டாப் மூலமும் பதிவேற்றவும் வசதி செய்யப்பட உள்ளது..
2, ஆதார் எண் இணைக்கும் பகுதியில் ஆதார் எண் இல்லாதவர்களுக்கு E I D நம்பர் இணைக்கும் வசதி மொபைல் அப்ளிகேசனில் மட்டும் இருந்தது. தற்போது கணினி மற்றும் மடிக்கணினி மூலமும் E I D நம்பர் இணைக்க வசதி செய்யப்பட உள்ளது..
3, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளின் பொதுக்குழுமத்தில் உள்ள மாணவர்கள் விபரங்கள் எக்செல் வடிவில் நமக்கு நாளை கிடைத்துவிடும் . அதனை வைத்து மாணவர்களை எளிதில் கண்டறிந்து விரைவில் நம் பள்ளிக்கு ஈர்க்க வழிவகை கிட்டும் வகையில் வசதி செய்யப்படும்..

4, ஒரே மாணவனின் ஆதார் எண்ணை பல பள்ளிகளில் இணைப்பதாக எழுந்த புகாரையடுத்து மாநிலம் முழுதும் உள்ள எமிஸ் பதிவுகளில் , கண்டறியப்பட்ட டூப்ளிகேட் ஆதார் எண்கள் திரட்டப்பட்டு , எக்செல் வடிவில் நமக்கு நாளை அனுப்பப்படும், அதனை வைத்து சரியான ஆதார் விபரங்களை உறுதி செய்து மேம்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது..

5, எமிஸ் மாணவர் விபரங்களின் எண்ணிக்கை தற்போதைய வருகைப்பதிவேட்டில் உள்ள எண்ணிக்கைக்குச் சமமாக இருக்குமாறு சரி செய்யவேண்டும்..

6, வேறு ஒன்றியம் , மாவட்டப் பள்ளிகள் அனுப்பாத விபரங்களை எளிதில் ஈர்க்க ஏற்பாடு செய்யப்பட்டுளது ( மேலும் விபரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களை அணுகவும்)

7, எமிஸில் ஆதார் இணைத்தது போக மீதமுள்ளவை ஆதார் புகைப்படம் எடுக்காத மாணவர்கள் விபரங்களாக மட்டுமே இருக்க வேண்டும் என்ற அளவுக்கு பணிகளை முடித்திட வேண்டும்.

6, எல்லாவற்றிற்கும் முதன்மையாக அனைத்துப் பணிகளையும் வரும் 25.01.2018 மாலைக்குள் முடித்திட வேண்டும் என்று மதிப்புமிகு முதன்மைச் செயலர் அவர்கள் கால நிர்ணயம் செய்திருக்கிறார்கள்

01.01.2018 முதல் அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் மற்றும் வட்டி விகிதங்கள் :

நீட் தேர்வில் மாநில பாடத்திட்டத்தையும் பரிசீலித்து வினாத்தாள் தயாரிக்க மத்திய அரசு முடிவு

டெல்லி: நீட் தேர்வில் மாநில பாடத்திட்டத்தையும் பரிசீலித்து வினாத்தாள் தயாரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் தமிழக மாணவர்கள பயனடைவர்  என தகவல்கள் தெரிவிக்கின்றன . நீட் எனப்படும் தேசிய தகுதி காண் தேர்வின் மூலம் நாடு முழுவதும் ஒரே மாதிரியான முறையில் மருத்துவ படிப்புகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல் இந்த தேர்வு நடத்தப்பட்டது. இதனால் ஏழை மாணவர்கள், தமிழ் வழியில் கல்வி பயின்றோர் பாதிக்கப்படுவர் என்று கூறியும் மத்திய அரசு  பரிசீலனை செய்யவில்லை.

இதனால் தமிழகத்தில் போராட்டங்களும், உயிரிழப்புகளும் நடைபெற்றன. அரியலூர் மாணவி அனிதா தற்கொலை விவகாரம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரபப்பை ஏற்படுத்தியது.மேலும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை கொண்டு வினாத்தாள் தயாரிக்கப்படுவதால் மாநில பாடத்திட்ட மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் வரும் மார்ச் மாதம் பிளஸ் 2 பொதுத் தேர்வு நடைபெறவுள்ள நிலையில் இந்தாண்டாவது நீட் தேர்வில் இருந்து விலக்கு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் தமிழக மாணவர்களும் பெற்றோர்களும் உள்ளனர்.

கடந்த முறையே சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை மட்டும் வைத்துக் கொண்டு வினாத்தாளை தயாரிக்காமல் மாநில பாடத்திட்டத்தையும் சேர்க்க வேண்டும் என்று நீதியரசர்கள் யோசனை தெரிவித்தனர். இந்நிலையில் மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சகம் நீட் தேர்வுக்கான வினாத்தாளில் மாநில பாத்திட்டங்களையும் சேர்த்து பரிசீலனை செய்ய முடிவு செய்துள்ளது. மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் தயாரிக்க முடிவு  செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.!

NAS Test 2017 - Rank of District :

இடைநிலை ஆசிரியர்களுக்கான சிறப்பு படி CM cell:

CPS பிடித்தம் உள்ளவர்களுக்கு...! CPS AMOUNT TO INCOM TAX CALCULATION:

இந்த ஆண்டு CPS பிடித்தம் 50,000 க்கு மேலே இருந்தால், உதாரணமாக ரூ. 65,000 என வைத்துக் கொண்டால், ரூ. 50,000 CPS தொகையை80 CCD  ( 1 B )  பிரிவிலும்,மீதித் தொகை ரூ. 15,000/= ஐ80 C ( அதிக பட்ச சேமிப்பு ரூ. 1,50,000 ) பிரிவிலும்கழித்துக் கொள்ளலாம்.CPS பிடித்தம் உள்ளவர்களுக்கு...

INCOME TAX CALCULATION | 2017 - 2018 நிதியாண்டு வருமான வரி செய்திகள்:

ரூ 2,50,000 வரை வரி இல்லை

💥 ரூ 2,50,001 முதல் 5,00,000 வரை - 5%

💥 ரூ 5,00,001 முதல் 10,00,000 வரை - 20%  + ரூ12500

💥 அனைத்து பிரிவுகளில் உள்ள இனங்களை கழித்து பின்னர் வரும் ஆண்டு நிகர வரி வருமானம் (net taxable income) 3,50,000க்கு கீழ் இருந்தால் பிரிவு 87A கீழ் செலுத்த வேண்டிய வரியில் ரூ.2500 கழித்துக் கொள்ளலாம்.

💥 80C+ 80CCC+ 80CCD பிரிவுகளில் ரூ 1,50,000 வரை கழித்துக் கொள்ளலாம்

💥 80CCD (1B) படி CPS ரூ.50,000 வரை தனியாக கழித்துக் கொள்ளலாம்

💥 ( 80C 1,50,000 +CPS 50,000)

💥 1.4.1999,க்கு பிறகு பெறப்பட்ட வீட்டுகடன் வட்டி ரூ 2,00,000 கழித்துக் கொள்ளலாம்.

(18.01.2018 முதல் 25.01.2018 வரை -1 முதல் 8 ஆம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளிலும் புதிதாக மாணவர்களை விவரங்களை பதிவேற்ற இயலும்)


18/1/18

IGNOU -B.ED Entrance Test September 2017 Results published held on 24.09.2017

உயர்கல்விக்கு செல்வோர் எண்ணிக்கை தேசிய அளவைவிட தமிழகத்தில் அதிகம்.!!!

பிச்சைக்காரர்களைப் பிடித்துக் கொடுத்தால் ரூ 500 பரிசு என காவல்துறை அறிவிப்பு,

ஹைதராபாதில் பிச்சைக்காரர்களை அப்புறப்படுத்த தெலுங்கானா அரசு நடவடிக்கை எடுத்துவரும்
நிலையில், பிச்சைக்காரரைப் பிடித்துக் கொடுத்தால் 500 ரூபாய் பரிசு என காவல்துறை அறிவித்தது. 2 ஆயிரத்துக்கும் அதிகமான பிச்சைக்காரர்கள் சிக்கியதால் சன்சல்குடா, சாரபள்ளி சிறைகள் நிரம்பி வழிகின்றன.*

*✍சிறையில் அவர்களை தனித்தனியே அடைத்து வைத்திருப்பதாகவும், பிச்சைக்காரர்களின் குடும்பத்தினர் தலையிட்டு சிலரை விடுவித்துச் சென்றுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.*

*✍இரண்டாவது முறையாக பிச்சைக்காரர்கள் சிக்கினால் அவர்கள் மீது கிரிமினல் வழக்குத் தொடரப்படும் என்று எச்சரித்து போலீசார் பலரை விரட்டி விடுகின்றனர். ஆரோக்கியத்துடன் உள்ள பலருக்கு வேலைவாய்ப்பு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.*

ஆசிரியர்களுக்கு படைப்பாற்றல் கல்வி முறை ஒரு நாள் பயிற்சி!!!

தமிழகத்தில், ஐந்தாம் வகுப்புக்கு, எளிய படைப்பாற்றல்கல்வி முறை, ஆறு முதல், 
எட்டாம் வகுப்பு வரை, படைப்பாற்றல் கல்வி முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதில், பாடங்கள் வரைபடம் வாயிலாக, கற்பிக்கப்படுகிறது. நடப்பு கல்வியாண்டில், படைப்பாற்றல் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு, ஒரு நாள் பயிற்சி வழங்க, அனைவருக்கும் கல்வித்திட்டத்தில் உத்தரவிடப்பட்டுள்ளது. ஐந்தாம் வகுப்பு ஆசிரியர்களுக்கு, ஒரே கட்டமாகவும், ஆறு முதல் எட்டு வரையிலான ஆசிரியர்களுக்கு, இரு கட்டங்களாகவும் பயிற்சி நடத்தப்படுகிறது.

இதை, ஜன., 25க்குள் நடத்தி முடித்து, அறிக்கை தாக்கல் செய்ய, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கல்வி சுற்றுலாவுக்குகட்டுப்பாடு விதிப்பு!!

உயரதிகாரிகளின் முன்அனுமதியின்றி, ஆபத்தான இடங்களுக்கு
மாணவர்களை சுற்றுலாவுக்கு அழைத்து செல்லக்கூடாது; விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்,’ என, தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

நடப்பு கல்வியாண்டில், அரையாண்டு தேர்வுகள் முடிந்த நிலையில், ஆறு முதல் ஒன்பது வகுப்பு மாணவர்களை, கல்வி சுற்றுலாஅழைத்து செல்வது வழக்கம்.ஒவ்வொரு ஆண்டும் இது வழக்கமாக நடைபெறும் என்ற போதும், மாணவர் பாதுகாப்பு கருதி, பல்வேறு உத்தரவுகளை கல்வித்துறை, அவ்வப்போது பிறப்பிக்கும்.சில தினங்களுக்கு முன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், தொடக்க கல்வி அலுவலர் மூலம் தலைமைஆசிரியருக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில்,’பள்ளி மாணவர்களை சுற்றுலா அழைத்து செல்ல வேண்டும் எனில், அந்த இடம், நாட்கள் உள்ளிட்ட விவரங்களை, உயரதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி, அனுமதி பெற வேண்டும்.

குழந்தைகளின் பெற்றோர் மற்றும் பாதுகாவலருக்கும், இடம் பற்றி முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். மாணவியரை, பெண் ஆசிரியர்களுடன் அழைத்து செல்ல வேண்டும். ஆபத்தான, வெள்ள அபாயம் உள்ள பகுதிகளுக்கு சுற்றுலா செல்லக்கூடாது,’ என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 9 துணை கலெக்டர்கள் மாற்றம்!!!

நாடு முழுவதும் வாகனங்களில் ஏப்ரல் 1 முதல் ஜி.பி.எஸ் கட்டாயம் : மத்திய அரசு

டெல்லி : நாடு முழுவதும் பேருந்துகள், வாடகை கார்கள் உள்ளிட்ட
வாகனங்களில் ஏப்ரல் 1 முதல் ஜி.பி.எஸ் கட்டாயம் பொறுத்த வேண்டும் என்று மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த உத்தரவை மாநில அரசுகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைமை தேர்தல் ஆணையர்கள் சம்பளம் இரு மடங்கு உயர்வு!!

*நடந்து முடிந்த பார்லி. குளிர்கால கூட்டத்தொடரில்
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, ஐகோர்ட் நீதிபதிகளின் சம்பளம் உயர்த்துவதற்கான மசோதா லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது. இ்ந்நிலையில் நீதிபதிகளுக்கு இணையாக தலைமை தேர்தல் ஆணையர்களுக்கும் சம்பளம் உயர்த்துவதற்கான மசோதா வரும் 29-ம் தேதி பார்லி. பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கற்றல் குறைபாடுள்ள மாணவர்கள் 10 லட்சம் பேருக்கு சிறப்பு பயிற்சி -அமைச்ர் செங்கோட்டையன் பேட்டி!!!

அலுவலகப் பணிக்கு செல்லும் ஆசிரியர்களால் அரசுப்பள்ளிகளில் கற்பித்தல் பணி பாதிப்பு!!!

ஐடியா - வோடஃபோன் இணைந்து சேவை!!!

ஐடியா மற்றும் வோடஃபோன் நிறுவனங்கள் ஒன்றாக இணைந்து வருகிற 
ஏப்ரல் மாதம் முதல் இந்தியாவில் சேவை வழங்கவுள்ளன.

இந்தியாவின் தொலைத் தொடர்புச் சந்தையில் ஏர்டெலைத் தொடர்ந்து இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் இருக்கும் வோடஃபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள் ஒன்றிணைந்து சேவை வழங்குவதற்கான பேச்சுவார்த்தை நீண்ட காலமாகவே இருந்து வந்த நிலையில், இவ்விரு நிறுவனங்கள் இணைந்து ஏப்ரல் மாதம் முதல் சேவை வழங்கவுள்ளன. இவ்விரு நிறுவனங்கள் இணைந்து புதிதாக உருவாகும் நிறுவனமானது உலகளவில் இரண்டாவது மிகப்பெரிய நெட்வொர்க் நிறுவனமாகவும், இந்திய அளவில் மிகப்பெரிய நெட்வொர்க் நிறுவனமாகவும் திகழும். 4 கோடி வாடிக்கையாளர்களுடன், இந்தியாவின் நெட்வொர்க் வாடிக்கையாளர் சந்தையில் 35 சதவிகிதப் பங்கையும், வருவாய் அடிப்படையில் 41 சதவிகித சந்தைப் பங்கையும் இப்புதிய நிறுவனம் கொண்டிருக்கும்.

இந்த இணைப்பு நடவடிக்கைக்கு ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமும் ஒரு காரணமாகக் கூறப்படுகிறது. 2016 செப்டம்பர் மாதத்தில் முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான ஜியோ நெட்வொர்க் நிறுவனம் இந்தியத் தொலைத் தொடர்புச் சந்தையில் நுழைந்த பிறகு கடுமையான போட்டி நிலவி வருகிறது. துவக்கத்தில் இலவசமாகவும் பின்னர் குறைந்த கட்டணத்திலும் டேட்டா உள்ளிட்ட சலுகைகளை ஜியோ வழங்கி வருவதால் அதைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. ஜியோவுக்குப் போட்டியாகப் பிற நிறுவனங்களும் கட்டணச் சலுகைகளை அறிவித்து வருவதால் அந்நிறுவனங்கள் கடுமையான வருவாய் இழப்பைச் சந்தித்து வருகின்றன. இச்சூழலைச் சமாளிக்கவே ஐடியா மற்றும் வோடஃபோன் நிறுவனங்கள் இணைய முடிவெடுத்தன என்பது நினைவுகூரத்தக்கது.

ராணுவக்கல்லூரியில் சேர மாணவர்களுக்கு வாய்ப்பு; மார்ச் 31-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள இந்திய தேசிய ராணுவ கல்லூரியில் 8-ம் வகுப்பில் சேர்வதற்கு (ஆண்கள் மட்டும்) வருகிற 31-3-2018க்குள் விண்ணப்பிக்கலாம். நுழைவுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 1-1-2019 அன்று 11½ வயதுக்கு குறையாமலும் 13 வயது பூர்த்தியாகாமலும் இருத்தல் வேண்டும். அதாவது 2-1-2006க்கு முன்னரும் 1-7-2007க்கு பின்னரும் பிறந்திருக்கக்கூடாது. மாணவர்கள் 1-1-2019ல் இக்கல்லூரியில் சேரும்போது 7-ம் வகுப்பு படிப்பவராக அல்லது தேர்ச்சி பெற்றவராகவோ இருத்தல் வேண்டும்.


1-6-2018 அன்று காலை 10 மணிமுதல் 12 மணிவரை ஆங்கில தேர்வும், அன்று பிற்பகல் 2 மணிமுதல் 3-30 மணி வரை கணித தேர்வும் நடைபெறும். 2-6-2018 அன்று காலை 10 மணிமுதல் 11 மணிவரை பொது அறிவு தேர்வு நடைபெறும். (மேற்கண்ட கணிதம் மற்றும் பொது அறிவு தேர்வுகளை ஆங்கிலம் அல்லது இந்தியில் எழுதலாம். எழுத்து தேர்வில் தேர்ச்சிபெற்ற மாணவர்களுக்கு நேர்முக தேர்வு 4-10-2018 அன்று நடைபெறும். புதுச்சேரி மாணவர்களுக்கு தேர்வு மையம் குறித்த தகவல் இணை இயக்குனர் அலுவலக தேர்வு பிரிவால் அஞ்சல் வழி மூலம் அறிவிக்கப்படும்.

விண்ணப்பங்களை அஞ்சல் மூலமாகவோ அல்லது www.ri-mc.gov.in என்ற வலைதளத்திலிருந்தும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை புதுவை அண்ணா நகரில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் உள்ள இணை இயக்குனர் அலுவலகத்துக்கு வருகிற மார்ச் மாதம் 31-ந்தேதிக்குள் அனுப்பவேண்டும்.

மேற்கண்ட தகவலை பள்ளிக்கல்வி இயக்குனர் குமார் தெரிவித்துள்ளார்.

DEE - Swatch Bharath Mission - Sanitation - competition -reg Director Proceedings & Govt Letter:

அனைத்து அரசுப் பள்ளிகளும் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் டிஜிட்டல் மயமாக்கப்படும்: அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்:

அனைத்து அரசுப் பள்ளிகளும் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் டிஜிட்டல் மயமாக்கப்படும்: அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்
அனைத்து அரசுப் பள்ளிகளும் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் டிஜிட்டல் மயமாக்கப்படும் என்று மத்திய மனிதவளத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
மத்திய கல்வி ஆலோசனைக் குழு கூட்டத்தில் கலந்துகொண்ட மத்திய அமைச்சர் மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து பள்ளி வகுப்பறைகள் அனைத்தும் தகவல் தொழில்நுட்ப வசதிகள் நிறைந்த நவீன வகுப்பறைகளாக மாற்றியமைக்கப்படும் என்று கூறியுள்ளார்.
முதல் கட்டமாக ஐந்து ஆண்டுகளுக்குள் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் டிஜிட்டல் போர்டு நிறுவப்படும்.

இந்தத் திட்டத்தை மத்திய அரசு, மாநில அரசு, மாநகராட்சி மற்றும் தனியார் நிறுவனங்களின் சமூகநிதிப் பங்களிப்புடன் நிறைவேற்றப்படும் என தெரிவித்துள்ளார்.

மத்திய கல்வி ஆலோசனைக் குழுக் கூட்டத்தில், மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு, பள்ளியின் ஆங்கிலப் பாடப் புத்தகத்தில் சேர்க்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளியில் இடைநிற்றலைத் தடுப்பதற்காக, மாணவர்களுக்கு மதிய உணவு, சீருடைகள், பாடப் புத்தகங்கள், விளையாட்டு உபகரணங்கள் போன்றவை தொடர்ந்து வழங்கப்படும்.

அனைத்துப் பள்ளிகளிலும் பாதுகாப்பான குடிநீர் வசதியும் கழிப்பிட வசதியும் ஏற்படுத்தப்படும்.


அனைத்து மாணவர்களின் வருகையைப் பதிவுசெய்ய, பயோ மெட்ரிக் முறை கொண்டுவர ஆலோசனை நடைபெற்றது.


மாணவர்களின் கற்றல் முறையை எளிமைப்படுத்தவும், செயல்முறைக் கல்வியை ஊக்கப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.


தற்போது 9ம் வகுப்பில் அறிமுகப்படுத்தப்படும் தொழில்சார் கல்வி முறை, இனி ஆரம்பப் பள்ளி வகுப்பிலேயே அறிமுகப்படுத்தப்படும் என கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.


முக்கிய அறிவிப்பாக, அனைத்துப் பள்ளிகளிலும் பாலர் பள்ளி தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இடைநிற்றலைக் குறைக்க அனைத்துப் பள்ளிக் குழந்தைகளுக்கும் விரைவில் ஆதார் கார்டு வழங்கப்படும் என மத்திய கல்வி ஆலோசனைக் குழு அறிவித்துள்ளது.

தொடக்கக் கல்வி - நிதி உதவி பெறும் தொடக்க / நடுநிலைப் பள்ளிகளுக்கு 2017-ம் ஆண்டு இறுதி கற்பிப்பு மான்யம் மற்றும் பராமரிப்பு மான்யம் விடுவித்தல் சார்பான அறிவுரைகள்

தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண். 001062/எப்/ஜி/எச்/17 நாள்: 17.01.2018

இறுதி கற்பிப்பு மான்ய பட்டியல் சரிபார்த்தல்  நடைபெறும் நாட்கள்

23.01.2018 முதல் 25.01.2018 முடிய

29.01.2018 முதல்  31.01.2018 முடிய
மற்றும் 01.02.2018

மொத்தம் 7 நாட்கள்

அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடம் நிரப்புவது பற்றிய பட்டதாரி ஆசிரியர்களின் கூட்டமைப்பினர் கருத்துக்கள் உங்கள் பார்வைக்கு :

ஆ.வ.அண்ணாமலை, மாநில சிறப்புத்தலைவர்,பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகம்,விழுப்புரம் கைபேசி எண், 9443619586.
அன்பார்ந்த பட்டதாரி ஆசிரிய பெருமக்களே வணக்கம். பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டுமே கிடைக்க வேண்டிய உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வினை சார்நிலைப் பணிவிதிகளைப் பின்பற்றாமல் மேல்நிலைப் பணிக்குச் சென்று பணப்பலன் பெற்றுவிட்ட பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை தாரை வார்த்து வழங்கிக்கொண்டு வந்தது. இது சார்நிலைப் பணி விதிகளுக்கு முரணானது என நீதிமன்றத்தின் மூலம் தற்காலிகமாக தற்போது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் கொண்ட சிலர் உண்மைக்கு மாறான செய்திகளை வெளியிடுகின்றனர். அதாவது பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்கள் உ.நி.ப.த.ஆசிரியராக பதவி உயர்வில் சென்றால் தான் பட்டதாரிகளுக்கு மு.க. ஆ. பதவி உயர்வு கிடைக்கும் இல்லையேல் பதவி உயர்வு வாய்ப்பே இல்லை என கூப்பாடு போடுகிறார்கள். உதாரணமாக 500 ப.உ.பெற்ற முதுகலை ஆசிரியர்கள் பணப்பலன் இல்லாத பதவியான  உ.நி. ப.தலைமை ஆசிரியர்களாக  மீண்டும் பணி மாறுதலில்  வருவதால் ஏற்படும் 500 PPG காலிப் பணியிடங்களில்  250  PPgபணியிடங்களில் மட்டும் தான் பட்டதாரி ஆசிரியர்கள் முதுகலை ஆசிரியராக பதவி உயர்வில் செல்ல முடியும்.
மீதியுள்ள 250  Ppg பணியிடங்கள் நேரடி நியமனம்மூலம் தான் நிரப்பமுடியும். எனவே 500 தலைமை ஆசிரியர் பணியிடங்களுக்கும் பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வில் செல்வது சிறந்ததா அல்லது 250 முதுகலை ஆசிரியர் பதவி உயர்வில் செல்வது  சிறந்ததா என்பதை பட்டதாரி ஆசிரியர்களின் சிந்தனைக்கு  விட்டுவிடுகிறேன். பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு வழங்குவதை  யாரும் தடுத்து நிறுத்திவிட முடியாது. பணி விதிகளின்படி தான் முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது.அதை யாராலும் தடுத்து நிறுத்தி விடமுடியாது. உயர்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர் பதவி உயர்வு 100% பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என்ற கோரிக்கையினை அனைத்து பட்டதாரி ஆசிரியர்களும் அவரவர் சார்ந்துள்ள அமைப்பின் மூலம் பள்ளிக்கல்வித் துறையை வலியுறுத்துமாறு பணிவோடு வேண்டுகிறேன்.நன்றி.இவண், ஆ.வ.அண்ணாமலை, மாநில சிறப்புத்தலைவர்,பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகம்,விழுப்புரம் கைபேசி எண், 9443619586

அன்பிற்குரிய நண்பர்களுக்கு வணக்கம். உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டுமே என்பது வெறும் கோரிக்கை மட்டுமல்ல. அது நம்முடைய தார்மீக உரிமை.

நன்றாக சிந்தித்துப் பாருங்கள்... தற்போது வெளியிடப்பட்டுள்ள தேர்ந்தோர் பட்டியலில் 70 சதவீதம் பேர் முதுகலையாசிரியர்களே உள்ளனர். இதே நிலை நீடித்தால் ஆண்டுதோறும் அவர்களுக்கே உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு சென்று கொண்டிருக்கிறது.

பதினைந்து ஆண்டு காலம் பள்ளிக் கல்வித் துறையில் இடைநிலைக் கல்வித் தொகுதியிலேயே 6-10 வகுப்புகளைக் கையாண்டுக் கொண்டு பதவி உயர்வுக்காகக் காத்திருக்கும் பட்டதாரி ஆசிரியரும், இடைநிலைக் கல்வித் தொகுதியில் ஒரு சில ஆண்டுகள் மட்டுமே பணியாற்றி முதுகலையாசிரியராகப் பதவி உயர்வு பெற்று பணப்பலனை அனுபவித்தவரும் ஒன்றாகி விட முடியாது.

முதுகலையாசிரியராகப்  பதவி உயர்வில் சென்றவர்களுக்கு அத்துடன் அவர்களின் வாழ்க்கை முடிந்து விடுவதில்லை. அவர்கள் எந்தத் தேதியில் முதுகலை ஆசிரியராகப் பணியில் சேர்ந்தாரோ, அந்தத் தேதி முதலே அவர் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கும் தகுதியாகிறார்.

தற்போதுள்ள நிலைப்படி ஒரே சமயத்தில் இரண்டு பதவி உயர்வுகளைப் பெறும் அதிர்ஷ்டம் இந்த பதவி உயர்வு பெற்ற முதுகலையாசிரியர்களுக்கு மட்டுமே உண்டு.

இரண்டு பதவி உயர்வில் எது சுலபமானது அல்லது எது இலாபகரமானது என்று ஆராய்ந்து தேர்ந்தெடுக்கும் பாக்கியசாலிகள் இவர்கள் மட்டுமே.....

பதவி உயர்வு பெற்ற முதுகலையாசிரியர்கள் பட்டதாரி ஆசிரியருக்குண்டான உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வினை ஆண்டுதோறும் 70 சதவீதத்திற்கும் மேல் கபளீகரம் செய்வது மட்டுமல்லாமல், பட்டதாரி ஆசிரியர்களுக்கு கீழ்க்கண்ட இழப்புகளை ஏற்படுத்தி வருகின்றனர்.
1. மேல்நிலைக் கல்வித் தொகுதியில் ஒட்டு மொத்தமாக நேரடி நியமனம்  மற்றும் பதவி உயர்வு மூலமாக 24000 முதுகலையாசிரியர்கள் உள்ளார்கள் என்ற புள்ளி விவரம் காண்பிக்கப்பட்டு கருணாகரன் கமிட்டி மூலம் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வில் முதுகலை ஆசிரியர்களுக்கான விகிதாச்சாரத்தை 5ல் இருந்து 7 ஆக உயர்த்தி அரசாணை எண் 720 ஐத் திருத்தம் செய்யப்படக் காரணமாக இருக்கிறார்கள். இவர்கள் நல்லவர்களாக இருந்தால், நாங்கள் முதுகலை ஆசிரியராக வந்தாலும் , உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்குத் தகுதியாகிறோம். எனவே, மேல்நிலைக் கல்வித் தொகுதியில் உள்ள மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு எமக்குத் தேவையில்லை எனக் கூறி கடிதம் கொடுத்திருப்பார்களேயானால், முதுகலையாசிரியர்களின் எண்ணிக்கை பாதியாகக் குறைக்கப்பட்டு அவர்களின் விகிதாச்சாரத்தை 5ல் இருந்து மூன்றாகக் குறைத்திருக்கலாம். ஆனால், இரண்டு வரும்போது எது சிறந்ததோ, அதை எடுத்துக் கொள்ள வசதியாக இரண்டையுமே தக்க வைக்கத்தான் நினைக்கிறார்கள்.

அடுத்ததாக இவர்கள் பதவி உயர்வு மூலம் உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியராகக் கல்வியாண்டின் துவக்கத்திலேயே பதவி உயர்வில் சென்று விடுவதால், அவர்களால் ஏற்படும் காலிப் பணியிடங்கள் பட்டதாரி ஆசிரியர்கள் முதுகலை ஆசிரியராகப் பதவி உயர்வு பெறும் வாய்ப்பு கிடைக்கப் பெறாமல் அனைத்தும் நேரடி நியமனத்திற்கே சென்று விடுவதால் அதிலேயும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது.

ஆக இவர்களால் பட்டதாரி ஆசிரியர்களுக்கு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்விலும், முதுகலையாசிரியர் பதவி உயர்விலும் பெருத்த நஷ்டம் ஏற்படுகிறது.

நண்பர்களே.....இனி வரும் காலங்களில் உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்கள் ஆண்டுக்கு 100 கூட வராது. ஏனெனில், நடுநிலை பள்ளிகளில் போதிய மாணவர் எண்ணிக்கை இல்லாததால் தரம் உயர்த்தப்பட வாய்ப்புகள் மிகக் குறைவு.

ததற்போது உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியராகப் பணியில் சென்றுள்ளவர்களுக்கு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு மிகக் குறவாகவே கிடைக்கும். ஏனெனில் விகிதாச்சாரம் குறைக்கப் பட்டுவிட்டது. ஆக பதவி உயர்வில் அதிகம் பேர் செல்லாமல் அப்படியே இருப்பார்கள். அது மட்டுமல்லாமல் இளம் வயதினர் ஏராளமானோர் பதவி உயர்வு பெற்றுள்ளதால் அவர்கள் மாவட்டக் கல்வி அலுவலர் பதவி உயர்வுக்கு விருப்பக் கடிதம் கொடுத்து விட்டு ஆண்டுக் கணக்கில் காத்திருக்கின்றனர். இதனால் இனி வருங்காலங்களில் உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடம் உருவாவது மிகக் குறைவாக இருக்கும்.

காலியாகும் 100 உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு 30 இடங்களும், முதுகலையாசிரியர் பதவி உயர்வில் ஆண்டுக்கு ஒட்டு மொத்தமாக 500 இடங்களும் கிடைக்கப் பெற்றால், காத்திருக்கும் 65000 க்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்களின் நிலையைப் பற்றி யோசித்துப் பாருங்கள்........

நாம் யாருடைய உரிமையையும் பறிக்கவில்லை. விதிகளுக்குப் புறம்பாக ஒரு கூட்டம் பெரும்பாலானவர்களின் உரிமையை கபளீகரம் செய்வதை எக் காரணம் கொண்டும் அனுமதிக்கக் கூடாது என்பதுதான் எமது நோக்கம்.

மேற்கண்ட நியாயங்களின் அடிப்படையில்தான் ஓர் இயக்கம் போராடி வருகிறது. பெரிய பெரிய பட்டதாரி ஆசிரியர் இயக்கங்கள் இந்த யதார்த்தமான உண்மையைப் புரிந்து கொண்டு  பட்டதாரி ஆசிரியர்களின் உரிமையைக் காக்க வேண்டும் என்பதுதான் நமது நோக்கம்.
பெரிய இயக்கங்கள் இந்த விஷயத்தில் மௌனம் காப்பதும், பட்டதாரி ஆசிரியர் உரிமைக்கு எதிராகச் செயல்படுவதும் வேடிக்கையாக உள்ளது. எனவே இனி வருங்காலங்களிலாவது அவ்வியக்கங்கள் புரிந்து செயல்படவேண்டும் என காத்திருக்கிறோம்.

13/1/18

ஊதிய நிர்ணயம் எந்த தேதிகளில் நிர்ணயம் செய்யலாம் -CM-CELL-REPLY

இனி ஆண்டுதோறும் TET - வெயிட்டேஜ் முறை அடிப்படையிலேயே தொடர்ந்து ஆசிரியர் நியமனம் - கல்வி அமைச்சர் தலைமையில் நடந்த உயர்நிலைக்குழு கூட்டத்தில் முடிவு.

தற்போது பின்பற்றப்பட்டுவரும் வெயிட்டேஜ் முறை அடிப்படையிலேயே பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர் நியமனங்களைத் தொடர்ந்து
மேற்கொள்வது என்றும், ஆண்டுதோறும் தகுதித்தேர்வு நடத்துவது என்றும் பள்ளிக்கல்வி அமைச்சர் தலைமையில் நடந்த உயர்நிலைக்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.


தற்போது அரசு பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களும், இடைநிலை ஆசிரியர்களும் வெயிட்டேஜ் முறையில் தேர்வு செய்யப்படுகிறார்கள். இம்முறையில், தகுதித்தேர்வு, பிளஸ் 2 தேர்வு, பட்டப் படிப்பு, பிஎட் (இடைநிலை ஆசிரியர் எனில் ஆசிரியர் பயிற்சி தேர்வு) ஆகியவற்றுக்கு குறிப்பிட்ட மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டு அதன் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்படும்.கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு படித்து முடித்தவர்கள் வெயிட்டேஜ் முறை நியமனத்தால் பாதிக்கப்படுவதாகவும், எனவே, தகுதித்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறையை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.

இதைத்தொடர்ந்து, இதுகுறித்து ஆராய்வதற்காக பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அதில், ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் பள்ளிக்கல்வி இயக்குநர், தொடக்கக்கல்வி இயக்குநர், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

வெயிட்டேஜ் முறை தொடரும்

இந்தநிலையில், வெயிட்டேஜ் முறையில் தரவரிசை தயாரிப்பது தொடர்பான உயர்நிலைக்குழு கூட்டம் பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமையில் சென்னையில் கடந்த 2-ம் தேதி நடைபெற்றது.

அந்தகூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள்:

* கடந்த 30.5.2014 அன்று வெளியிடப்பட்ட அரசாணையின்படி, வெயிட்டேஜ் முறையையும், 6.2.2014-ல் வெளியிடப்பட்ட அரசாணையின்படி,தகுதித்தேர்வு தேர்ச்சியில் இடஒதுக்கீட்டுபிரிவினருக்கு (எஸ்சி, எஸ்டி, பிசி, எம்பிசி, டிஎன்சி மற்றும் மாற்றுத்திறனாளிகள்) வழங்கப்பட்டு வரும் 5 சதவீத மதிப்பெண் சலுகையை (ஆசிரியர் தகுதித்தேர்வில் 150-க்கு 82 மதிப்பெண் எடுத்தால் தேர்ச்சி) தொடர்ந்து கடைபிடிக்கலாம்.ஆண்டுதோறும் தகுதித் தேர்வு

* கடந்த 15.11.2011 வெளியான அரசாணையின்படி, தகுதித்தேர்வை ஆண்டுதோறும் குறிப்பிட்ட காலவரையறைக்குள் நடத்தப்பட வேண்டும்.

* தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வழங்கப்படும் தேர்ச்சி சான்றிதழ் 7 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்என்பதால் அதன் அடிப்படையிலான தரவரிசைப் பட்டியலில் உள்ள தேர்வர்களின் பெயர் 7 ஆண்டுகளுக்குப் பிறகு நீக்கப்படும்.

* தேர்வர்கள் தங்கள் கல்வித்தகுதியைப் பொறுத்தவரையில் மதிப்பெண்களை உயர்த்திக்கொள்ள வழிவகை இருப்பதால் அதன்படி தரவரிசைப் பட்டியல் மாறுதலுக்கு உட்பட்டது ஆகும்.

மதிப்பெண்ணை உயர்த்தலாம்

* 15.11.2011-ல் வெளியிடப்பட்ட அரசாணையின்படி, தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் மீண்டும் தேர்ச்சி பெறுவதற்கும், அதேபோல், ஏற்கெனவே தேர்ச்சி பெற்றவர்கள் மீண்டும் தேர்வெழுதி மதிப்பெண்களை உயர்த்திக்கொள்வதற்கும் வழிவகை செய்யப்பட்டிருப்பதாலும், ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்படும் தகுதித்தேர்வு முடிவின் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும்.

* வரும் காலத்தில் தேர்வர்களின் விண்ணப்பத்தில் குறிப்பிடப்படும் மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கலாம்.இதனால், அனைவரின் கல்விச்சான்றிதழ்களைத் தரவரிசைப் பட்டியலுக்காக சரிபார்க்கும் அவசியம் எழாது. பணிநியமனத்தின்போது சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும்.

* பள்ளிக்கல்வி இயக்குநரின் கருத்துருவில் தெரிவிக்கப்பட்டுள்ள, தகுதித்தேர்வு தேர்ச்சிக்குப் பிறகு மீண்டும் ஒரு போட்டித்தேர்வு நடத்துவது (ஆந்திராவில் இம்முறை பின்பற்றப்படுகிறது) என்பது அவசியமற்றதாக கருதப்படுகிறது.ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ள அரசாணைகளின்படி, கல்வித்தகுதி, இடஒதுக்கீடு, தகுதித்தேர்வில் தேர்ச்சி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஆசிரியர்களைத் தேர்வுசெய்யலாம்.

* ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதன் அடிப்படையிலோ அல்லது தரவரிசைப்பட்டியலில் தங்கள் பெயர் இடம்பெற்றிருக்கிறது என்ற அடிப்படையிலோ தேர்வர்கள் அரசு வேலைக்கு உரிமை கோர இயலாது.


மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது குறித்து பள்ளிக்கல்வித் துறையின் முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் உயர்நிலைக்குழு உறுப்பினர்களுக்கு தகவல் அனுப்பியுள்ளார்.

நிதி உதவி பெறும் பள்ளிகளின் EMIS மற்றும் மாணவர் வருகையை ஆய்வு செய்ய சிறப்பு குழு -விதிகள் வெளியிட்டு மாவட்ட ஆட்சியர் உத்தரவு

PAY CONTINUATION ORDER FOR 4748 TEACHING & NON TEACHING POSTS

SSA - தொடக்க , உயர் தொடக்க ஆசிரியர்களுக்கு ஒரு நாள் SALM , ALM பயிற்சி

அனைவருக்கும் கல்வி இயக்கம் 2017-18 ம் கல்வி ஆண்டிற்கு தொடக்க மற்றும் உயர் தொடக்க ஆசிரியர்களுக்கான SALM மற்றும் ALM குறித்து மாவட்ட மற்றும் வட்டார அளவில் பயிற்சிகள் வழங்குதல் குறித்து மாநில
திட்ட இயக்குநர் செயல்முறைக் கடிதம் வெளியிட்டுள்ளார்.

2017-18 ஆம் கல்வி ஆண்டில் தொடக்க மற்றும் உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு படைப்பாற்றல் மற்றும் எளிய படைப்பாற்றல் கல்வி பயிற்சிகளை வழங்கிட அனைவருக்கும் கல்வி இயக்ககத்தால் திட்டமிடப்பட்டு மாநில அளவில் கருத்தாளர் பயிற்சி நடத்தப்பட்டன.

 இப்பயிற்சியானது மேலும் மாவட்ட மற்றும் வட்டார அளவில் நடத்துவதற்கு கால அட்டவணை கொடுக்கப்பட்டுள்ளது.

 கால அட்டவணை:
⚡ SALM & ALM - District level & BRC level Training.

⚡ SALM & ALM District level pre plan meeting on 17.01.18

⚡ SALM District level training on 18.01.18

⚡ ALM District level training on 19.01.18

⚡ SALM & ALM Block level pre plan meeting on 20.01.18

⚡ SALM Block level on 22.01.18 for primary 5th standard teachers only

⚡ ALM block level on 23.01.18 for Upper primary Tamil & English 
teachers only

⚡ ALM block level on 24.01.18 for Science & S.Science teachers only


⚡ ALM block level on 25.01.18 for Maths teachers only

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பெயர்ப்பட்டியல் (Nominal roll) திருத்தம் செய்ய செயல்முறை!!!

ஆசிரியர் பயிற்சி தேர்வு முடிவு ஜனவரி17-ல் வெளியீடு!!!

11 மொழிகளில் 'நீட் 'நுழைவு தேர்வு!!!

தமிழ் உட்பட, 11 மொழிகளில், மருத்துவ படிப்புக்கான, 
'நீட்' தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு, இம்மாத இறுதியில் எதிர்பார்க்கப்படுகிறது.
பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், அரசு மற்றும் தனியார் கல்லுாரிகள், பல்கலைகளில், எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்பில் சேர, மத்திய அரசின், 'நீட்' நுழைவு தேர்வில், தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வை நடத்த, தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. ஆனால், மத்திய அரசின் சலுகை கிடைக்காததால், 2017ல், 'நீட்' தேர்வின்படியே, மாணவர் சேர்க்கை நடத்தும் நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், இந்த ஆண்டு, 'நீட்' தேர்வை, தமிழகம் உட்பட எந்த மாநிலமும் எதிர்க்கவில்லை. இந்த தேர்வு, மே மாதம் நடக்க உள்ளது. தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட 11 மொழிகளில், வினாத்தாள் இருக்கும். தேர்வர்கள் விண்ணப்பிக்கும் போது, எந்த மொழி என்பதை குறிப்பிட்டால், அந்த மொழியில் வினாத்தாள் வழங்கப்படும். அதே மொழியில், விடைகளை எழுதலாம். இந்த தேர்வுக்கான அறிவிப்பு, இந்த மாத இறுதியில் வெளியிடப்படும் என, சி.பி.எஸ்.இ., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

ஆதார் அட்டைக்கு மாற்றாக புதிய அடையாள அட்டை அறிமுகம்!!!

மார்ச் 1–ந் தேதி முதல் நடைமுறைக்கு கொண்டு வர தீர்மானிக்கப்பட்டு 
உள்ளது.இந்திய குடிமக்களுக்கு ஆதார் அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளது. அனைத்து மாநிலங்களிலும் கிட்டத்தட்ட எல்லோருக்கும் ஆதார் அட்டை வழங்கப்பட்டுஇருக்கிறது.


ஒவ்வொருவரின் ஆதார் அட்டையிலும் அவரது புகைப்படம், பெயர் விவரம், முகவரி, கண் கருவிழி படலம், கை பெருவிரல் ரேகை போன்ற விவரங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. மேலும் அதில் 12 இலக்கங்கள் கொண்ட எண்ணும் இடம்பெற்று இருக்கிறது.வங்கி கணக்கு தொடங்குவது, செல்போன் இணைப்புக்கான சிம்கார்டு வாங்குவது, சமையல் கியாஸ் இணைப்பு, அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவது போன்றவற்றுக்கு ஆதார் அட்டை கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது.

இதனால் இதுபோன்றவற்றுக்கு ஆதார் அட்டையில் உள்ள விவரங்களை தெரிவிப்பது மிகவும் கட்டாயம் ஆகிறது.இப்படி பல இடங்களிலும் ஆதார் அட்டையை பயன்படுத்தும் போது, அந்த அட்டைதாரரை பற்றிய தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட வாய்ப்பு இருப்பதாக அரசுக்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

குறிப்பாக ஆதார் அட்டையில் உள்ள 12 இலக்க எண் மூலம் வங்கி கணக்குகளில் மோசடி நடைபெற வாய்ப்பு இருப்பதாக அச்சம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.ஆதார் அட்டையில் உள்ள விவரங்கள் திருடப்படுவதை தடுத்து, தனிநபர் ரகசியத்தை பாதுகாக்கும் வகையில், ஆதார் அட்டைக்கு மாற்றாக அதேபோன்ற புதிய அடையாள அட்டைமுறையை (மெய்நிகர் ஆதார் அட்டை) இந்திய தனிநபர் அடையாள ஆணையம் (உதய்) நேற்று முதல் அறிமுகப்படுத்தி உள்ளது.இந்திய தனிநபர் அடையாள ஆணையத்தின் இணையதள முகவரிக்கு சென்று இந்த மெய்நிகர் ஆதார் அட்டையை உருவாக்கி பெற்றுக் கொள்ளலாம். ஏற்கனவே ஆதார் அட்டையில் உள்ள புகைப்படம், பெயர் விவரம் போன்ற அனைத்து விவரங்களும் இப்புதிய அட்டையில் இடம் பெற்று இருக்கும்.ஆனால் ஆதார் அட்டையில் உள்ள 12 இலக்க எண்ணுக்கு பதிலாக இந்த புதிய அடையாள அட்டையில் 16 இலக்க எண் இருக்கும். சம்பந்தப்பட்ட நபரே இந்த எண்ணை தேர்ந்து எடுத்துக் கொள்ளலாம்.

ஒரு குறிப்பிட்ட பணிக்காக அல்லது விரும்பும் குறிப்பிட்ட காலவரை வரை இந்த புதியஅட்டையை பயன்படுத்தலாம். தேவைப்படும் போதெல்லாம் இந்த அடையாள அட்டையில் உள்ள 16 இலக்க எண்ணை மாற்றி புதிய அட்டையை பெற்றுக் கொள்ளலாம். அப்படி புதிய அட்டை பெறும் பட்சத்தில், ஏற்கனவே பெற்று இருந்த மெய்நிகர் ஆதார் அட்டை தானாக ரத்தாகிவிடும்.இதன்மூலம் சம்பந்தப்பட்ட நபரின் உண்மையான ஆதார் எண் மற்ற இடங்களில் பகிர்ந்து கொள்ளப்படுவது தவிர்க்கப்படும்.

முக்கியமாக தனிநபர் ரகசியம் காக்கப்படுவதோடு, தகவல் திருட்டும் தடுத்து நிறுத்தப்படுகிறது.ஆதார் அட்டை எந்தெந்த இடங்களில் எல்லாம் தேவைப்படுமோ,அந்த இடங்களில் இந்த மெய்நிகர் ஆதார் அட்டையை பயன்படுத்தலாம். சம்பந்தப்பட்ட நபரை தவிர வேறு யாரும்இந்த மெய்நிகர் ஆதார் அட்டையை மோசடியாக தயாரிக்க முடியாது.வருகிற மார்ச் 1–ந் தேதி முதல் இந்த மெய்நிகர் ஆதார் அடையாள அட்டையை நடைமுறைக்கு கொண்டு வர இந்திய தனிநபர்அடையாள ஆணையம் தீர்மானித்து உள்ளது.

 மேலும் ஆதார் அட்டை எங்கெங்கெல்லாம் தேவைப்படுகிறதோ அந்த இடங்களில் இந்த மெய்நிகர் ஆதார் அட்டையை ஜூன் 1–ந் தேதி முதல் கண்டிப்பாக ஏற்றுக் கொள்ளும் நடைமுறையை செயல்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டு இருக்கிறது.மேற்கண்ட தகவல்களை இந்திய தனிநபர் அடையாள ஆணையம் தெரிவித்து உள்ளது.

இன்ஜி., கல்லூரி தேர்வு தள்ளி வைப்பு!!!

சென்னை: பொங்கல் பண்டிகைக்காக, பள்ளி, கல்லுாரிகளுக்கு, ஜன., 13 முதல், ஏற்கனவே 
விடுமுறை விடப்பட்டிருந்தது.
இதன் அடிப்படையில், அண்ணா பல்கலை மற்றும் இணைப்பு கல்லுாரிகளில், ஜன.,12 வரை தேர்வு அறிவிக்கப்பட்டது. ஆனால், பஸ் போக்குவரத்து பிரச்னையால், பள்ளி, கல்லுாரிகளுக்கு மட்டும், இன்று முதல் பொங்கல் விடுமுறை விடப்பட்டுள்ளது. மீண்டும், 17ம் தேதி பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்பட உள்ளன.
இதையடுத்து, அண்ணா பல்கலை உட்பட அனைத்து கல்லுாரி, பல்கலைகளிலும், இன்று நடக்கவிருந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுஉள்ளன. 'அண்ணா பல்கலையில், இன்று நடக்கவிருந்த தேர்வுகள், வரும், 22ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளன; 18ம் தேதியில், தேர்வு எதுவும் நடக்காது' என, அண்ணா பல்கலையின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, உமா, அறிவித்துள்ளார்.

பிளஸ்-1 தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டாலும் பிளஸ்-2 செல்லலாம்!!!

பிளஸ்-1 வகுப்புக்கு முதல் முதலாக இந்த ஆண்டு அரசு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது
. இதில் தேர்ச்சி பெறாவிட்டாலும் அவர்கள் பிளஸ்-2 செல்லலாம் என தேர்வுத்துறை அதிகாரி தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வும், பிளஸ்-2 தேர்வும் அரசு பொதுத்தேர்வுகளாக நடத்தப்படுகின்றன. பிளஸ்-1 தேர்வு சாதாரண தேர்வாகத்தான் கடந்த ஆண்டு வரைநடத்தப்பட்டு வந்தது.இதனால் பிளஸ்-1 வகுப்பு பாடங்களை ஆசிரியர்கள் சரிவர நடத்துவதில்லை என்றும், பல தனியார் பள்ளிகளில் பிளஸ்-1 பாடம் அறவே நடத்தப்படுவதில்லை என்றும் புகார்கள் வந்தன. ஆனால் நீட் தேர்வில் பிளஸ்-1 வகுப்பில் உள்ள பாடத்தில் இருந்து நிறைய வினாக்கள் கேட்கப்பட்டு இருந்தன.

இதையடுத்து பிளஸ்-1 வகுப்புக்கும் 2018 மார்ச் மாதம் முதல் அரசு பொதுத்தேர்வு நடத்த தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது. எனவே இந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கு அரசு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது.

இந்நிலையில் பிளஸ்-1 தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றாலும் பிளஸ்-2 வகுப்புக்கு செல்லலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

பிளஸ்-1 பொதுத்தேர்வில் சில பாடங்களில் தோல்வியுறும் மாணவர்கள் ஆண்டு விரயமின்றிபிளஸ்-2 வகுப்புக்கு செல்லவும், தோல்வியுற்ற பாடங்களைஜூன் மாதம் நடைபெறும் உடனடி சிறப்பு தேர்விலோ அல்லது பிளஸ்-2 இறுதி ஆண்டு தேர்வின் போதோ எழுதலாம் எனவும் தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி தெரிவித்தார்.

100வது செயற்கைகோளை விண்ணில் செலுத்தி இஸ்ரோ சாதனை!!!

                                 
சென்னை : 'பி.எஸ்.எல்.வி., - சி 40' ராக்கெட் வெற்றிகரமாக 
விண்ணில் செலுத்தப்பட்டது. தற்போது விண்ணில் செலுத்தப்பட்ட, 'கார்டோசாட் - 2' செயற்கைக்கோள், இந்தியாவின், 100வது செயற்கைக்கோள் ஆகும்.
இந்திய விண்வெளி ஆய்வு மையமான, 'இஸ்ரோ' வர்த்தக ரீதியான ராக்கெட்டுகளை, விண்ணில் செலுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, இஸ்ரோவின் வடிவமைப்பான, கார்டோசாட் - 2 ரக செயற்கைக்கோள், இன்று காலை, 9:28 மணிக்கு, ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள, முதலாவது ஏவுதளத்தில் இருந்து, விண்ணில் செலுத்தப்பட்டது.

இந்த ராக்கெட்டை, விண்ணில் செலுத்துவதற்கான, 28 மணிநேர, கவுன்ட் - டவுன், நேற்று காலை, 5:29 மணிக்கு துவங்கியது.'பி.எஸ்.எல்.வி., - சி 40' ராக்கெட்டில், இந்தியா - 3, அமெரிக்கா, கனடா, பின்லாந்து, பிரான்ஸ், கொரியா மற்றும் பிரிட்டன் நாடுகளின் செயற்கைக்கோள்கள், 28 என, மொத்தம், 31 செயற்கைக்கோள்கள் செலுத்தப்பட்டன.

கார்டோசாட் - 2 செயற்கைக்கோள், இந்தியாவின், 100வது செயற்கைக்கோள். செயற்கைக்கோள் வரிசையில், கார்டோசாட் - 2, ஏழாவது செயற்கைக்கோள்; இதன் எடை, 710 கிலோ. இதில், பூமியின் இயற்கை வளங்களை, பல்வேறு கோணங்களில் படமெடுத்து அனுப்பும் வகையில், சக்தி வாய்ந்த கேமராக்களும், தொலையுணர்வு கருவிகளும் பொருத்தப்பட்டுள்ளன.

ஆறாவது ஊதியக்குழுவில் பெற்று வந்த SPECIAL ALLOWANCE ரூ 500/- ரூ 30,50,60 ஏழாவது ஊதிய குழுவில் தொடர்ந்து பெற்று கொள்ள அனுமதிக்கலாமா ? - RTI


வேலைவாய்ப்பு: என்ஐஆர்டியில் பணி!!!

தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள Project Technician பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை: Project Technician

காலியிடங்கள்: 5

பணியிடம்: சென்னை

வயது வரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை: நேர்முகத் தேர்வு

ஊதியம்: ரூ.18,000/-

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100/- எஸ்சி/எஸ்டி பிரிவினருக்குக் கட்டணத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம், சத்தியமூர்த்தி சாலை, சேத்துப்பட்டு, சென்னை 600 031

கடைசித் தேதி: 1.01.2018

மேலும் விவரங்களுக்கு http://www.nirt.res.in இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

பல்கலைக்கழக 1லட்சம் விடைத்தாள்கள் மாயம்.பேராசிரியர்கள் பகீர் புகார்!!!

போக்குவரத்துத் துறைக்குக் கூடுதலாக ரூ. 2,519 கோடி!

தமிழக அரசின் நிதி நிலை அறிக்கையில் போக்குவரத்துத் துறைக்குக் 
கூடுதலாக ரூ. 2519 கோடி ஒதுக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அரசுப் போக்குவரத்துத் தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 4ஆம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர். 8 நாட்களாக நீடித்து வந்த போராட்டம், நேற்றிரவு வாபஸ் பெறப்பட்டதால் இன்று (ஜனவரி 12) காலை முதல் பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்பட்டுவருகின்றன.

இந்நிலையில் தற்போது தமிழக அரசின் சட்டப்பேரவை கூட்டத் தொடரின் துணை நிதி நிலை அறிக்கையில், ஓய்வூதியப் பலன், தொழிலாளருக்கான நிலுவைத் தொகை, உள்ளிட்டவற்றின் கூடுதல் நிதியாக ரூ. 2519 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

உள்ளூர் மற்றும் வெளியூர் செல்லும் பேருந்துகள் இன்று காலை முதல் வழக்கம்போல் இயக்கப்பட்டுவருவதால் பொதுமக்களின் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். போராட்டம் காரணமாக கடந்த 2 நாட்களாக டிக்கெட் முன்பதிவு மையங்கள் வெறிச்சோடியே காணப்பட்டன. பயணிகளுக்கு உதவுவதற்காக ஆங்காங்கே போக்குவரத்துத் துறை சார்பில் தகவல் மையங்களும், சில இடங்களில் போலீசார் சார்பில் உதவி மையங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சென்னையில் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படும் மாநகரப் பேருந்துகளின் எண்ணிக்கையும் ஓரளவு அதிகரிக்கப்பட்டிருந்தது.

முன்பதிவு செய்யத் தேவையில்லை என்பதால் வழக்கமாக வருவது போலவே பயணிகள் பஸ் நிலையங்களுக்கு வந்து அவரவர் ஊர்களுக்குப் புறப்பட்டுச் சென்றனர். பொங்கல் பண்டிகைக்காக பூந்தமல்லியிலிருந்து தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. வேலூர், கிருஷ்ணகிரி, ஓசூர், தர்மபுரி, ஆரணி, ஆற்காடு உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்பவர்களுக்கு இங்கிருந்து அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

பள்ளி மாணவர்களின் வீடுகளில் கழிவறை உள்ள விவரங்களை கோருதல் சார்ந்து-மாவட்டக் கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள்!!!

12/1/18

ஸ்மார்ட்போன் ஆர்டர் செய்தவருக்கு மாங்காய்கள் டெலிவரி; தில்லுமுல்லு செய்த பிளிப்கார்ட்!

                                            
ஸ்மார்ட்போன் ஆர்டர் செய்தவருக்கு மாம்பழங்கள் டெலிவரி செய்யப்பட்ட
விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர் சூருச்சரண். இவர் ஏசெஸ் ஸென்போன் என்ற ஸ்மார்ட்போனை பிளிப்கார்ட் இணையதளத்தில் ஆர்டர் செய்துள்ளார்.


இதன் விலை ரூ.8.099 ஆகும். இதனை மெகா சேல் நாள் அன்று, ஆர்டர் செய்தார். ஆனால் அவருக்கு பார்சலை பிரித்து பார்த்த போது, அதில் 2 மாங்காய்கள் இருந்துள்ளன.

இதனால் அதிர்ச்சியடைந்த சூருச்சரண், பிளிப்கார்ட் நிறுவனத்தின் கஸ்டமர் சர்வீஸில் புகார் அளித்தார். அவரின் ஆர்டர் நம்பரை உறுதி செய்து கொண்டனர்.

இதையடுத்து 24 மணி நேரத்தில் பணம் திரும்ப அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

ஆனால் திடீரென்று ஆர்டர் கேன்சல் செய்யப்பட்டு விட்டது என்று கூறி, பணம் தர மறுத்துவிட்டனர். இதனால் சூருச்சரண் செய்வதறியாது, மிகுந்த வருத்தத்தில் உள்ளா

ஜனவரி 29-ஆம் தேதி பட்ஜெட் கூட்டத் தொடர்: வருமான வரி விலக்கு உச்சவரம்பு அதிகரிக்கப்பட வாய்ப்பு!!!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 29-ஆம் தேதி தொடங்க உள்ளது.
மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட இருக்கிறது. மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.

அப்போது நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் வருமான வரி விலக்கு உச்சவரம்பு அதிகரிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து நிதியமைச்சக வட்டாரங்கள் கூறுகையில், தற்போது உள்ள உச்சவரம்பானது ரூ.2.5 லட்சத்திலிருந்து ரூ. 3 லட்சமாக உயர்த்தப்பட உள்ளதாகவும், ஐந்து லட்ச ரூபாய் முதல் பத்து லட்ச ரூபாய் வருமானம் உடையவர்களுக்கு 10 சதவீத வரி விதிக்கவும். மேலும், பத்து லட்சம் ரூபாய் முதல் 20 லட்சம் ரூபாய் வருமானம் உடையவர்களுக்கு 20 சதவீத வரியும். 20 லட்ச ரூபாய்க்கு மேல் வருமானம் இருந்தால் 30 சதவீத வரியும் விதிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தில்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் பகுதி ஜனவரி 29 முதல் பிப்ரவரி 9-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. அதைத் தொடர்ந்து மார்ச் 5 முதல் ஏப்ரல் 6-ஆம் தேதி வரை இரண்டாவது பகுதி நடைபெறவுள்ளது

பொதுமக்கள் வசதிக்காக பள்ளி ,கல்லூரி பஸ்கள் ஓட்டப்படும்!-அரசு அதிரடி நடவடிக்கை!!!

400 ஊழியர்கள் பணிநீக்கம்: ஏர் இந்தியா அதிரடி!

ஒப்பந்த அடிப்படையில் பணிக்கு அமர்த்தப்பட்ட 400க்கும் மேற்பட்ட ஊழியர்களை
ஏர் இந்தியா நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது.

ஏர் இந்தியா நிறுவனம் ஆகஸ்ட் மாதம் ஏற்கெனவே இருந்த ஒப்பந்தத் தொழிலாளர்களை நீக்கிவிட்டு, ஓய்வுபெற்ற ஊழியர்களைப் பணியமர்த்த ஒப்பந்தங்களைப் போட்டது. இந்நிலையில் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட 400க்கும் மேற்பட்ட ஊழியர்களை அதிரடியாகப் பணிநீக்கம் செய்துள்ளது. பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் அனைவரும் தொழில்நுட்பப் பிரிவைச் சாராதவர்கள் என ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரான பிரதீப் சிங் கரோலா தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு மத்திய அமைச்சகம் ஏர் இந்தியா நிறுவனத்தில் உள்ள அரசின் பங்குகளை விற்க அனுமதியளித்தது. இதையடுத்து கடந்த ஜனவரி 5ஆம் தேதி ஏர் இந்தியா நிர்வாக இயக்குநரகம், தொழில்நுட்பப் பிரிவு இல்லாத மற்றும் தொழில்நுட்ப பிரிவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஒப்பந்த ஊழியர்களை உடனடியாகப் பணிநீக்கம் செய்தது. இந்தப் பணிநீக்கத்தில் ஏர் இந்தியாவின் துணை நிறுவனங்களான ஏர் இந்தியா, ஏர் திராஸ்போர்ட் சேவைகள், ஏர் இந்தியா சார்ட்டர்ஸ் லிமிடெட், ஏர்லைன் அலைடு சேவைகள் மற்றும் ஏர் இந்தியா என்ஜினீயரிங் லிமிடெட் ஆகிய நிறுவனங்களும் அடங்கும்.

BRC ல் ஆதார் மையம் அமைக்க உத்தரவு!!

வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.5 லட்சம்.-மத்திய அரசு பரிசீலனை.!!

8 வது நாளாக நீடித்த போக்குவரத்து ஸ்டிரைக் வாபஸ்!!!


11/1/18

வருமானவரி பிடித்தம் சார்ந்த சுற்றறிக்கை.!





அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ், அரசாணை வெளியீடு, அதிகாரிகள் அதிர்ச்சி, கருணை தொகைக்கு முற்றுப்புள்ளி

இணையதள வசதிக்கு ரூ.200 ஒதுக்கீடு : தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் அதிருப்தி

மாணவர்களின் விபரங்களை, ஆன்லைனில் பதிவு செய்ய, 200 ரூபாய்
மட்டுமே 
ஒதுக்கியுள்ளதால், தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
தமிழகத்தில், 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துவக்க, நடுநிலைப்பள்ளிகள், 5,500க்கும் மேற்பட்ட உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இவற்றில் படிக்கும் மாணவர்களின் விபரங்கள், கல்வி மேலாண்மை தொகுப்பு எனும், 'எமிஸ்' இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கு, இணையதள செலவாக, துவக்க பள்ளிகளுக்கு, 200 ரூபாய், நடுநிலை பள்ளிகளுக்கு, 400, உயர்நிலை பள்ளிகளுக்கு, 600, மேல்நிலை பள்ளிகளுக்கு, 800 ரூபாய், ஒருமுறை செலவினமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்கள் கூறியதாவது:
தற்போது, அலுவல் தொடர்பாக, அனைத்து விபரங்களை அனுப்புவது, பெறுவது, கணினி மூலம் நடக்கிறது. இதுமட்டுமின்றி, 'எமிஸ்' இணையதளத்தில், மாணவர்களின் விபரங்களை பதிவேற்ற, பல மணி நேரம் பிடிக்கிறது. சர்வர் கோளாறால், பல நாட்களை செலவழிக்க வேண்டியுள்ளது. இதற்கெல்லாம், தலைமையாசிரியர்கள் தங்கள் சொந்தப்பணத்தை செலவழிக்க வேண்டியிருந்தது.
தற்போது, அனைவருக்கும் கல்வி இயக்கத்தில், ஒரு பள்ளிக்கு, 200 ரூபாய் ஒதுக்கியுள்ளனர். ஆண்டு முழுவதும் இணையதள பயன்பாடு தேவைப்படும்போது, 200 ரூபாயை வைத்து என்ன செய்ய முடியும். துவக்கப்பள்ளிகளுக்கு கணினி வசதியும் இல்லை. இதனால், பிரவுசிங் சென்டர்களை நாடிச் செல்ல வேண்டியுள்ளது. அனைத்து பள்ளிகளுக்கும், கணினி, இணையதள வசதி ஏற்படுத்தி தர வேண்டும். உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளுக்கு வழங்குவதுபோல், மாதந்தோறும் இணையதள வசதிக்கு நிதி ஒதுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்

பள்ளி பஸ்கள் தயார்!! பொங்கல் விடுமுறைக்கு சொந்த ஊர் செல்ல அரசு அதிரடி ஏற்பாடு!!!

ஆதார் அட்டைக்கு மாற்றாக புதிய அடையாள அட்டை அறிமுகம்

மார்ச் 1–ந் தேதி முதல் நடைமுறைக்கு கொண்டு வர தீர்மானிக்கப்பட்டு உள்ளது.இந்திய குடிமக்களுக்கு ஆதார் அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளது. அனைத்து மாநிலங்களிலும் கிட்டத்தட்ட எல்லோருக்கும் ஆதார்
அட்டை வழங்கப்பட்டுஇருக்கிறது.
ஒவ்வொருவரின் ஆதார் அட்டையிலும் அவரது புகைப்படம், பெயர் விவரம், முகவரி, கண் கருவிழி படலம், கை பெருவிரல் ரேகை போன்ற விவரங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. மேலும் அதில் 12 இலக்கங்கள் கொண்ட எண்ணும் இடம்பெற்று இருக்கிறது.வங்கி கணக்கு தொடங்குவது, செல்போன் இணைப்புக்கான சிம்கார்டு வாங்குவது, சமையல் கியாஸ் இணைப்பு, அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவது போன்றவற்றுக்கு ஆதார் அட்டை கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது.இதனால் இதுபோன்றவற்றுக்கு ஆதார் அட்டையில் உள்ள விவரங்களை தெரிவிப்பது மிகவும் கட்டாயம் ஆகிறது.இப்படி பல இடங்களிலும் ஆதார் அட்டையை பயன்படுத்தும் போது, அந்த அட்டைதாரரை பற்றிய தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட வாய்ப்பு இருப்பதாக அரசுக்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

குறிப்பாக ஆதார் அட்டையில் உள்ள 12 இலக்க எண் மூலம் வங்கி கணக்குகளில் மோசடி நடைபெற வாய்ப்பு இருப்பதாக அச்சம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.ஆதார் அட்டையில் உள்ள விவரங்கள் திருடப்படுவதை தடுத்து, தனிநபர் ரகசியத்தை பாதுகாக்கும் வகையில், ஆதார் அட்டைக்கு மாற்றாக அதேபோன்ற புதிய அடையாள அட்டைமுறையை (மெய்நிகர் ஆதார் அட்டை) இந்திய தனிநபர் அடையாள ஆணையம் (உதய்) நேற்று முதல் அறிமுகப்படுத்தி உள்ளது.இந்திய தனிநபர் அடையாள ஆணையத்தின் இணையதள முகவரிக்கு சென்று இந்த மெய்நிகர் ஆதார் அட்டையை உருவாக்கி பெற்றுக் கொள்ளலாம். ஏற்கனவே ஆதார் அட்டையில் உள்ள புகைப்படம், பெயர் விவரம் போன்ற அனைத்து விவரங்களும் இப்புதிய அட்டையில் இடம் பெற்று இருக்கும்.ஆனால் ஆதார் அட்டையில் உள்ள 12 இலக்க எண்ணுக்கு பதிலாக இந்த புதிய அடையாள அட்டையில் 16 இலக்க எண் இருக்கும். சம்பந்தப்பட்ட நபரே இந்த எண்ணை தேர்ந்து எடுத்துக் கொள்ளலாம்.

ஒருகுறிப்பிட்ட பணிக்காக அல்லது விரும்பும் குறிப்பிட்ட காலவரை வரை இந்த புதியஅட்டையை பயன்படுத்தலாம். தேவைப்படும் போதெல்லாம் இந்த அடையாள அட்டையில் உள்ள 16 இலக்க எண்ணை மாற்றி புதிய அட்டையை பெற்றுக் கொள்ளலாம். அப்படி புதிய அட்டை பெறும் பட்சத்தில், ஏற்கனவே பெற்று இருந்த மெய்நிகர் ஆதார் அட்டை தானாக ரத்தாகிவிடும்.இதன்மூலம் சம்பந்தப்பட்ட நபரின் உண்மையான ஆதார் எண் மற்ற இடங்களில் பகிர்ந்து கொள்ளப்படுவது தவிர்க்கப்படும்.

முக்கியமாக தனிநபர் ரகசியம் காக்கப்படுவதோடு, தகவல் திருட்டும் தடுத்து நிறுத்தப்படுகிறது.ஆதார் அட்டை எந்தெந்த இடங்களில் எல்லாம் தேவைப்படுமோ,அந்த இடங்களில் இந்த மெய்நிகர் ஆதார் அட்டையை பயன்படுத்தலாம். சம்பந்தப்பட்ட நபரை தவிர வேறு யாரும்இந்த மெய்நிகர் ஆதார் அட்டையை மோசடியாக தயாரிக்க முடியாது.வருகிற மார்ச் 1–ந் தேதி முதல் இந்த மெய்நிகர் ஆதார் அடையாள அட்டையை நடைமுறைக்கு கொண்டு வர இந்திய தனிநபர்அடையாள ஆணையம் தீர்மானித்து உள்ளது.


 மேலும் ஆதார் அட்டை எங்கெங்கெல்லாம் தேவைப்படுகிறதோ அந்த இடங்களில் இந்த மெய்நிகர் ஆதார் அட்டையை ஜூன் 1–ந் தேதி முதல் கண்டிப்பாக ஏற்றுக் கொள்ளும் நடைமுறையை செயல்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டு இருக்கிறது.மேற்கண்ட தகவல்களை இந்திய தனிநபர் அடையாள ஆணையம் தெரிவித்து உள்ளது.

அரசாணை எண் :3-பொங்கலுக்காக ஜனவரி 12ம் தேதி தமிழகத்தின் அனைத்து கல்லூரி, பல்கலைக்கழகங்களுக்கு சிறப்பு விடுமுறை - தமிழக அரசு

TET - ஆசிரியர் பணிக்கு தகுதித் தேர்வு போதுமானது: அரசு உயர்நிலை குழுவில் தீர்மானம்

ஆசிரியர் பணிக்கு தகுதித் தேர்வு போதுமானது எனவும், மீண்டும் போட்டித் தேர்வு நடத்துவது அவசியமில்லை எனவும் தமிழக அரசின் உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

வெயிட்டேஜ் முறையில்தரவரிசை பட்டியல் தயாரிப்பது குறித்து பள்ளிக் கல்வி உயர் நிலை குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.இதற்காக அந்தக் குழுவானது, அண்மையில் கூடியது. பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதன் விவரம்:- ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சியில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு (பி.சி., பிசிஎம்., எம்பிசி., எஸ்.சி., எஸ்.டி.,) வழங்கப்பட்டு வரும் 5 சதவீத மதிப்பெண் சலுகைகளை தொடர்ந்து கடைபிடிக்கலாம். ஆசிரியர் தகுதித் தேர்வானது ஆண்டுதோறும் குறிப்பிட்ட கால வரையறைக்குள் நடத்தப்பட வேண்டும். ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வழங்கப்படுகின்ற சான்றிதழ் ஏழு ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். அதன் அடிப்படையிலான தர வரிசைப் பட்டியலில் உள்ள தேர்வர்களின் பெயர்கள் ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் நீக்கம் செய்யப்படும்.

தேர்வர்கள் தங்களது கல்வித் தகுதியை பொறுத்தவரை மதிப்பெண்கள் உயர்த்திக் கொள்வதற்கு வழிவகை இருப்பதால்அதன்படி தரவரிசைப் பட்டியல் மாறுதலுக்கு உட்பட்டதாகும். ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் அடுத்தடுத்த தேர்வுகளில் மீண்டும் தேர்ச்சி பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே, தேர்வர்கள் தங்களது ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்றுள்ள மதிப்பெண்களை அடுத்த தேர்வுகளில் உயர்த்திக்கொள்ளலாம். ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்படுகின்ற ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவின் அடிப்படையில் வெளியிடப்படுகின்ற தரவரிசைப் பட்டியல் மாறுதலுக்கு உட்பட்டதாகும். தேர்வர்கள் விண்ணப்பிக்கப்படுகின்ற படிவத்தில் குறிப்பிடப்படும் மதிப்பெண்களின் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கலாம்.

இதன்படி, அனைவரின் கல்விச் சான்றிதழ்களை தரவரிசைப் பட்டியலுக்காக சரிபார்க்கும் அவசியம் ஏற்படாது. ஆசிரியர் தகுதித் தேர்வுக்குப் பிறகு மீண்டும் ஒரு போட்டித் தேர்வு நடத்துவது அவசியம் அற்றதாக கருதப்படுகிறது. தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதன் அடிப்படையிலோ அல்லது தரவரிசைப் பட்டியலில் தங்களது பெயர் இடம் பெற்றுள்ளது என்ற அடிப்படையிலோ அரசு வேலைக்கு உரிமை கோர முடியாது என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்தத் தீர்மானங்களின்மீது நடவடிக்கைகள் ஏற்படுவதற்காக, ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு தீர்மான நகலை ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் அனுப்பியுள்ளார்.

இந்தத் தீர்மானங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அதுதொடர்பாக அரசு உத்தரவுகள் பிறப்பிக்கப்படும்.

Paediology method(குழந்தை நேயக் கற்றல் முறை)

Paediology method(குழந்தை நேயக் கற்றல் முறை)

1. ஏணிப்படி,அடைவுத்திறன் அட்டவணை இல்லை

2.ஒன்று முதல் மூன்றாம் வகுப்புகளுக்குரியது

3. நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்புகளுக்கு SALM method


4. முழுமையான பாடம் பல அலகுகளாக(Unit) பிரிக்கப்படுகிறது

5.ஒரு  பாடவேளைக்கு 90 நிமிடங்கள்.காலையில் இரண்டு பாடவேளைகளும்,மதியம் ஒரு பாடவேளையுமாக பிரித்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது

6.அட்டைகளை கற்பித்தல் துணைக்கருவிகளாக பயன்படுத்தலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஒவ்வொரு குழந்தைக்கும் பயிற்சி ஏடுகளின் தொகுப்பாக ஒரு புத்தகம் கொடுக்கப்படும்

7.Low level,கம்பிப் பந்தல்,புத்தகப் பூங்கொத்து,வீட்டுப்பாடம்,காலநிலை அட்டவணை இவைகளில் மாற்றம் இல்லை

8.பொதுவாகக் குழந்தைகள் நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தாலும்,வகுப்பறை நிலைமைக்கேற்ப மெதுவாகக் கற்போருக்காக ஒரு குழு,மீத்திறன் குழந்தைகளுக்காக ஒரு குழு ஆசிரியர் அமைத்துக் கொள்ளலாம்

9.Long leave முடிந்து குழந்தை வரும்போது குழந்தையின் கற்றல் திறனுக்கேற்ப அக்குழந்தையினை பொருத்தமான அலகிலிருந்து தொடங்கச் சொல்லலாம்

10.இரண்டாம் பருவத்திலேயே பரீட்சார்த்த முறையில் சென்னை,காஞ்சிபுரம் மாவட்டத்திற்குட்பட்ட 16 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு நடைமுறையில் உள்ளது

இடியும் நிலையில் உள்ள பள்ளிக்கட்டிடங்களை கணக்கெடுக்க உத்தரவு: அமைச்சர் செங்கோட்டையன்

சென்னை: இடியும் நிலையில் உள்ள பள்ளிக்கட்டிடங்களை கணக்கெடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் எம்எல்ஏ அபுபக்கர் கேள்விக்கு பதிலளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் பழுதடைந்த பள்ளி கட்டிடங்கள் அனைத்தும் விரைவில் சீரமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

சி.பி.எஸ்.இ., தேர்வு மார்ச் 5ல் துவக்கம்

சென்னை: 'சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகள், மார்ச், 5ல் துவங்கும்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., இணைப்பில் உள்ள பள்ளிகளுக்கு, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வு, தேசிய அளவில் நடத்தப்படுகிறது. இந்த தேர்வுக்கான தேதியை, சி.பி.எஸ்.இ., வாரியம், நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தது.

அதன்படி, பிளஸ் 2 தேர்வுகள், மார்ச், 5ல் துவங்கி, ஏப்., 12ல் முடிவடைகின்றன. முதல் தேர்வாக, ஆங்கிலம் நடத்தப்படுகிறது. 10ம் வகுப்புக்கு பள்ளி அளவிலான தேர்வு, ரத்து செய்யப்பட்டு, இந்த ஆண்டு முதல், பொதுத் தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வு, மார்ச், 5ல் துவங்கி, ஏப்., 4ல் முடிவடையும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. முதலில், விருப்ப பாடங்களுக்கு தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்த ஆண்டு, சி.பி.எஸ்.இ., பொதுத் தேர்வில், மொத்தம், 20 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர்.

பாலிடெக்னிக் தேர்வில் தோல்வியுற்றவர்கள் பட்டயத் தேர்வு எழுத மீண்டும் வாய்ப்பு

புதுச்சேரி:பாலிடெக்னிக் தேர்வில், சில பாடங்களில் தோல்வியுற்ற முன்னாள் மாணவர்களுக்கு, பட்டயத் தேர்வு எழுத மீண்டும் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.இது குறித்து மோதிலால் நேரு அரசு தொழில்நுட்பக் கல்லுாரி முதல்வர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பாலிடெக்னிக் தேர்வில் சில பாடங்களில் தேர்ச்சி பெறாத முன்னாள் மாணவர்களுக்கு, தொழில்நுட்ப கல்வித்துறை, வரும் ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதத்தில், பட்டய தேர்வை மீண்டும் எழுத வாய்ப்பு வழங்க முடிவு செய்துள்ளது.இத்திட்டத்தின்படி, இக்கல்லுாரியில் 2010ம் ஆண்டு வரை முழு நேர மூன்று ஆண்டு பட்டயப்படிப்பில் சேர்ந்து படித்த அனைவரும் தேர்வு எழுதலாம்.தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள், ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ.500 தேர்வு கட்டணம், ரூ.30 மதிப்பெண் பட்டியல் கட்டணம், ரூ.25 பதிவு கட்டணமாக இக்கல்லுாரி மூலம் செலுத்த வேண்டும்.அபராதமின்றி கட்டணம் செலுத்த கடைசி நாள் பிப்ரவரி 7ம் தேதி. ரூ.100 அபராதத்துடன் செலுத்த கடைசி நாள் 14ம் தேதி. தட்கல் முறையில் ரூ.500 அபராதத்துடன் கட்டணம் செலுத்த கடைசி நாள் மார்ச் 9ம் தேதி ஆகும்.

நாளை முதல், 'லீவ்' மாணவர்களுக்கு, 'ஜாக்பாட்'

சென்னை : பொங்கல் பண்டிகைக்கு, சொந்த ஊருக்கு செல்ல வசதியாக, பள்ளி, கல்லுாரிகளுக்கு கூடுதலாக, ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

நாளை முதல், 'லீவ்'  மாணவர்களுக்கு, 'ஜாக்பாட்'

பொங்கல் பண்டிகையை ஒட்டி, பொங்கல், மாட்டு பொங்கல் என கூறப்படும், திருவள்ளுவர் தினம் மற்றும் காணும் பொங்கல் என்ற உழவர் திருநாள் என, மூன்று நாட்களுக்கு, பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும்.
இந்த ஆண்டு, 14ல், பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அரசின் விடுமுறை பட்டியலின்படி, ஜன., 14 முதல், 16 வரை, மூன்று நாட்களுக்கு, பள்ளிகள் விடுமுறை என, அறிவிக்கப்பட்டிருந்தது.

சென்னை உள்ளிட்ட நகரங்களில் வசிப்பவர்கள், தங்கள் சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். ஆனால், பஸ் போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்தால், குறித்த நேரத்தில், பொங்கல் 

பண்டிகைக்கு செல்ல முடியுமா என, பலர் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர். எனவே, அவர்கள்முன்கூட்டியே ஊருக்கு செல்லும் வகையில், பள்ளிகளுக்கு, நாளை ஒரு நாள் கூடுதலாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, பள்ளிக்கல்வி முதன்மை செயலர், பிரதீப் யாதவ் பிறப்பித்த உத்தரவில், 'பள்ளி மாணவர்கள், பெற்றோருடன் பொங்கல் பண்டிகை கொண்டாடி, இளம் வயது முதல், தமிழர் கலாசாரத்தையும், பாரம்பரியத்தையும் பேணி காக்கும் வகையில், சிறப்பு நிகழ்வாக, ஜன., 12ல் பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது' என, கூறப்பட்டுள்ளது.

ஜனவரி 29-ஆம் தேதி பட்ஜெட் கூட்டத் தொடர்: வருமான வரி விலக்கு உச்சவரம்பு அதிகரிக்கப்பட வாய்ப்பு

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 29-ஆம் தேதி தொடங்க உள்ளது. மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட இருக்கிறது. மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.


அப்போது நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் வருமான வரி விலக்கு உச்சவரம்பு அதிகரிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து நிதியமைச்சக வட்டாரங்கள் கூறுகையில், தற்போது உள்ள உச்சவரம்பானது ரூ.2.5 லட்சத்திலிருந்து ரூ. 3 லட்சமாக உயர்த்தப்பட உள்ளதாகவும், ஐந்து லட்ச ரூபாய் முதல் பத்து லட்ச ரூபாய் வருமானம் உடையவர்களுக்கு 10 சதவீத வரி விதிக்கவும். மேலும், பத்து லட்சம் ரூபாய் முதல் 20 லட்சம் ரூபாய் வருமானம் உடையவர்களுக்கு 20 சதவீத வரியும். 20 லட்ச ரூபாய்க்கு மேல் வருமானம் இருந்தால் 30 சதவீத வரியும் விதிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தில்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் பகுதி ஜனவரி 29 முதல் பிப்ரவரி 9-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. அதைத் தொடர்ந்து மார்ச் 5 முதல் ஏப்ரல் 6-ஆம் தேதி வரை இரண்டாவது பகுதி நடைபெறவுள்ளது.

6/1/18

சென்னை பள்ளி மாணவர்களுக்கு நீட், ஜெ.இ.இ பயிற்சி வகுப்பு தொடக்கம்

மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு நீட், ஜெ.இ.இ பயிற்சி வகுப்புகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.பெருநகர சென்னை மாநகராட்சி, அண்ணாநகர் மண்டலம், சுப்பராயன் தெரு, சென்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் கோடம்பாக்கம் மண்டலம், 
சைதாப்பேட்டை சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று ஸ்பார்க் ஒருங்கிணைந்த திட்டத்தின் கீழ் சென்னை பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான நீட் பயிற்சி வகுப்புகளை தொடங்கி வைக்கப்பட்டன.பின்னர், சுப்பராயன் தெரு சென்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் சைதாப்பேட்டை சென்னைப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் உள்ள உண்டு உறைவிடப் பள்ளிகளில் நவீன வசதிகளுடன் கூடிய 120 படுக்கைகள் கொண்ட அறைகளும் திறந்து வைக்கப்பட்டன.இது பற்றி சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் கூறியதாவது:''சென்னை பள்ளிகளில் மாணவ, மாணவியர்களின் முன்னேற்றத்தில் குறிப்பிடத்தக்க செயல்பாடாக, சுப்பராயன் தெரு சென்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆண்களுக்கான உண்டு உறைவிடப்பள்ளி, சைதாப்பேட்டை சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பெண்களுக்கானஉண்டு உறைவிடப்பள்ளி என இரண்டு உண்டு உறைவிடப்பள்ளிகள் ஏற்படுத்தப்பட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.அதேபோன்று, சென்ற ஆண்டு ஸ்பார்க் ப்ரோகிராம் என்ற திட்டத்தின் வாயிலாக பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள 70 பள்ளிகளில் இருந்து 25 மாணவர்களும், 45 மாணவிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டு பள்ளிப் பாடத்திலிருந்து அவர்களுக்கு சிறப்புப்பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சியின் வாயிலாக மாணவ, மாணவிகளுடைய ஒட்டுமொத்த அடைவுத்திறன் அதிகரிக்கப்பட்டது.

இக்கல்வியாண்டில் மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளிலும் மற்றும் மருத்துவ கல்லூரிகளிலும் சேரும் விதமாக 60 மாணவர்கள் மற்றும் 60 மாணவியர்கள் திறனறிவுத் தேர்வின் வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இம்மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சியை தமிழ்வழி மற்றும் ஆங்கில வழியில்40 மாணவர்கள் மற்றும் 40 மாணவிகளுக்கு வழங்கப்படுகிறது.மேலும், 20 மாணவர்கள் மற்றும் 20 மாணவிகளுக்கு ’ஜி மெயின் இங்கிலிஷ்’ ஆங்கில வழியில் மட்டும் இரண்டு பயிற்சி மையங்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சியானது காலை 5.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை பல்வேறு செயல்பாடுகளை உள்ளடக்கி திட்டமிட்டு செயல்படுத்தப்படுகிறது.காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை பாடத்திட்டத்திலும், சனி மற்றும் விடுமுறை நாட்களில் நீட் மற்றும் ஜெஈஈக்கு சிறப்புப்பயிற்சியாக புகழ்பெற்ற தனியார் நிறுவனத்தின் வாயிலாகவும், திங்கள் முதல் வெள்ளி வரை முறைப்படுத்தப்பட்ட அட்டவணையின்படி மாஸ்டர் அகாடமி என்ற நிறுவனத்தின் வாயிலாகவும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இரண்டு மையங்களையும் கல்வித்துறையில் உள்ள கல்வி அலுவலர், கூடுதல் கல்வி அலுவலர் மற்றும் அனைத்து உதவிக்கல்வி அலுவலர்களும் சுழற்சி முறையில் மாணவர்களுடைய அடைவுத்திறன் மேம்படவும் மற்றும் சூநுநுகூ,துநுநு போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறவும் மேற்பார்வையிடப்படுகிறது''.இவ்வாறு சென்னை மாநகராட்சி ஆணையார் கார்த்திகேயன் தெரிவித்தார்.

போட்டித் தேர்வுகளில் பங்கேற்போருக்கான அரசு இலவச பயிற்சிமையம் தொடக்கம்: ஆண்டுக்கு 2,000 மாணவர்கள் வீதம் பயிற்றுவிக்கப்படுவார்கள்

மத்திய, மாநில அரசுகள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் பங்கேற்போருக்கான இலவச பயிற்சி மையத்தை தமிழக அரசு சென்னையில் தொடங்கியுள்ளது.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள தியாகராயா கல்லூரி வளாகத்தில் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை சார்பில் போட்டித் தேர்வுகளில் பங்கேற்போருக்கான இலவச பயிற்சி மைய தொடக்க விழா நேற்று நடைபெற்றது.


இந்த விழாவில், பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு போட்டித் தேர்வுகளுக்கான கையேடுகளை வழங்கி மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் பேசியதாவது:ரயில்வே பணியாளர் வாரியம், மத்திய அரசு பணியாளர் தேர்வு வாரியம், மத்திய வங்கி பணியாளர்களுக்கான தேர்வு வாரியம், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆகியவற்றால் நடத்தப்படும் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் ஏழை மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக ரூ.1.53 கோடி செலவில் பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த பயிற்சி மையத்துக்காக ஆண்டுதோறும் ரூ.1.25 கோடியை தமிழக அரசு ஒதுக்கவுள்ளது. 3 மாதங்களுக்கு 500 மாணவர்கள் என்ற அடிப்படையில் இந்த பயிற்சி மையத்தில் ஆண்டுக்கு 2,000 மாணவர்கள் வீதம் பயிற்றுவிக்கப்படுவார்கள். பயிற்சி பெறும் ஒவ்வொருவருக்கும் ரூ.1,000 மதிப்பிலான பயிற்சி கையேடு இலவசமாக வழங்கப்படும். இந்தவாய்ப்பை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் வாங்கிய மதிப்பெண் மற்றும் இடஒதுக்கீடு அடிப்படையில் பயிற்சிக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தற்காலிகமாக தியாகராயா கல்லூரி வளாகத்தில் பயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் நிரந்தர உண்டு, உறைவிட வசதிகளுடன் கூடிய பயிற்சி மைய கட்டிடம் வடசென்னையின் ஒரு இடத்தில் கட்டி முடிக்கப்படும். அடுத்தகட்டமாக கோவை, மதுரை, திருச்சி ஆகிய இடங்களில் இதே போன்று பயிற்சி மையங்களை தொடங்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் பயிற்சித் துறை தலைவர் கே.ஞானதேசிகன், கூடுதல் இயக்குநர் ஏ.சண்முகசுந்தரம், பணியாளர், நிர்வாக சீர்திருத்தத்துறை செயலர் டாக்டர் எஸ்.ஸ்வர்ணா, சர் தியாகராயா கல்லூரியின் தாளாளர் பி.குமாரசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Flash News : போக்குவரத்து ஊழியர்கள் உடனே பணிக்கு திரும்புங்கள் - ஹைகோர்ட் உத்தரவு

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஒழுங்கு நடவடிக்கைகள் உள்ளிட்ட துறை ரீதியான நடவடிக்கையை அரசு எடுக்கலாம் என தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஓட்டுநர், நடத்துனர்கள் உடனடியாக பணிக்கு வராவிட்டால் பணிநீக்கம் உள்ளிட்ட விளைவுகளை சந்திக்க நேரிடும் என தலைமை நீதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஊதியம் திருப்தி இல்லை என்றால் வேறு பணிக்கு செல்லலாம் என உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கூறியுள்ளார். மேலும் வேலைநிறுத்தம் தொடர்பாக தொழிற்சங்கங்கள் பதில் அளிக்கவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜன.8-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்திற்கு எதிரான மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

எகிறியது நீதிபதிகளின் சம்பளம்! - மசோதாவை நிறைவேற்றியது மத்திய அரசு

உச்சநீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு சம்பளம் இருமடங்காக உயர
உள்ளது. இதற்கான மசோதா நேற்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
நீதிபதிகளுக்கான 7 வது சம்பள கமிஷனின் சிபாரிசு இன்னும் அமல்படுத்தப்படவில்லை. 7வது சம்பள கமிஷனை அமல்படுத்தி, நீதிபதிகளுக்கு ஊதிய உயர்வு வழங்குவதற்கான மசோதா, மக்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது. அடுத்து குடியரசுத் தலைவரின் கையெழுத்தைப் பெற்று சட்டமாகிவிடும். இந்த மசோதாவின்படி, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சம்பளம், தற்போதைய ரூ.1,00,000-லிருந்து ரூ.2 ,80,000-மாக உயரும். உச்ச நீதிமன்ற நீதிபதி மற்றும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் சம்பளம் ரூ.90,000-லிருந்து ரூ.2,50,000-மாக உயருகிறது. உயர் நீதிமன்ற நீதிபதிகளின் சம்பளம் ரூ.80,000-லிருந்து ரூ.2.25,000-மாக உயருகிறது.

2016-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் புதிய சம்பள உயர்வு அமலுக்கு வரும். ஓய்வு பெற்ற 2,500 நீதிபதிகளும் சம்பள உயர்வால் பலனடைவார்கள்.

TNPSC- ANNUAL RECRUITMENT PLANNER 2018



EMIS பணிகளை விரைந்து முடிப்பதற்காக (06.01.2018) பள்ளிகளுக்கு வேலை நாள் - CEO உத்தரவு :

PILOT கல்வி முறையில் வண்ணக் குறியீடுகளின் செயல்பாடுகள் :

5/1/18

BIG BREAKING NEWS தடைகளை தகர்த்து 2009&TET போராட்டக்குழு பெற்ற 10.01.2018 பின்பும் நமது பழைய ஊதியத்தினை தொடர்ந்து பெற்று கொள்ளலாம் என நிதித்துறை செயலாளர் ஆணை கடிதம் எண்-58863/CMPC/நாள் -30.12.2017 நகல்.

பள்ளிக்கல்வித்துறை இயக்குநர்.பணியில் சேர ஆணை பிறப்பிப்பு

ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் - மாண்புமிகு நீதியரசர் திரு. கிருபாகரன் அவர்களின் கருத்துக்கு எதிராக செயல்பட்டதாக நீதிமன்ற அவமதிப்பு 
வழக்கில் சம்பந்தப் பட்ட  ஆசிரியர்கள்  அனைவரும் நாளை வெள்ளிக்கிழமை பணியில் சேர பள்ளிக்கல்வித் துறை ஆணை வழங்கியுள்ளது

ஆசிரியர் பயிற்சி முடிக்காதவர்கள் வேலையிழக்கும் அபாயம்!

தொடக்கப் பள்ளிகளில்
பணியாற்றும் ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்சி முடிக்காவிட்டால் வேலையிழக்க
நேரிடும்’ என மத்திய அரசு அறிவித்துள்ளது.

கட்டாயக் கல்வி சட்டம் 2009இன்படி அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றுபவர்கள் இரண்டாண்டு ஆசிரியர் பயிற்சியைக் கட்டாயம் முடிக்க வேண்டும். இரண்டாண்டு டிப்ளோமா ஆசிரியர் (டிஎல்ஈடி) பயிற்சியை முடிக்காதவர்கள் வேலையிழக்க நேரிடும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது.

தேசிய திறந்தநிலைப் பள்ளி மண்டல இயக்குநர் ரவி, “தேசிய திறந்தநிலைப் பள்ளி மூலம் ஆசிரியர் பயிற்சி படிப்புக்கான திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஸ்வயம் பிரபா என்கின்ற சேனல் மூலம் இதற்கான பாடங்களை கற்க முடியும். பணியில் இருந்துகொண்டே ஆசிரியர்கள் பயிற்சிக்கான டிப்ளோமா படிப்பை பயில முடியும். மேலும், மொபைல் ஆப் மூலமாகவும் படிக்க முடியும்” எனக் கூறியுள்ளார்.

நாடுமுழுவதும் 15 லட்சம் ஆசிரியர்களும், தமிழகத்தில் 25,600 பேரும் டிஎல்ஈடி பயிற்சியில் சேர்ந்துள்ளனர். 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இவர்களுக்குத் தேர்வு நடக்க இருக்கிறது. அதில் தேர்ச்சி பெறாதவர்கள் தங்கள் வேலையை இழக்க நேரிடும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

குரூப் - 2 தேர்வு 'ரிசல்ட்' வெளியீடு!!!

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர்
தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., நடத்திய, குரூப் - 2 முதன்மை தேர்வு
முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

டி.என்.பி.எஸ்.சி., செயலர், விஜயகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு: குரூப் - 2ல் அடங்கிய, துணை வணிக வரி அதிகாரி, சார் பதிவாளர் நிலை- - 2, இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி உள்பட, 18 வகை பதவிகளுக்கு, 2016 ஆக., 21ல் முதன்மை தேர்வு நடந்தது.
தமிழகம் முழுவதும், 1,094 காலியிடங்களை நிரப்ப, இந்த தேர்வு நடந்தது. தேர்வில், 9,833 பேர் பங்கேற்றனர். அவர்கள் பெற்றுள்ள மதிப்பெண், இட ஒதுக்கீட்டு விதிபடி, 2,166 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு, ஜன., 22 - பிப்., 19 வரை நேர்காணல் நடக்கும். தேர்வர்களின் விபரங்கள் www.tnpsc.gov.in என்ற, இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

நிர்வாக இடமாறுதல் துவக்கம் : கோட்டையில் ஆசிரியர்கள் முகாம்!!!

அரசுபள்ளிகளின் ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்ட
இடமாறுதல் நடவடிக்கை, மீண்டும் துவங்கிஉள்ளது. தமிழக அரசு பள்ளிகளில்,
ஆண்டு தோறும் மே மாதம், விருப்ப இடமாறுதல் கலந்தாய்வு
நடத்தப்படும். இதில், அனைத்து காலியிடங்களும் அறிவிக்கப்பட்டு, அவற்றில், ஆசிரியர்களின் விருப்பத்துக்கு ஏற்ப, இடமாறுதல் வழங்கப்படும்.
பின், காலியாக உள்ள இடங்களுக்கு, விருப்ப இடமாறுதல் வழங்கப்படுகிறது. நடப்பு கல்வியாண்டில், ஜூன் முதல் செப்., வரை இடமாறுதல் ஜரூராக நடந்தது. பள்ளிகளில் வகுப்புகள் நடக்கும் நிலையில், ஆசிரியர்களை மாற்றுவதால், மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படுவதாக புகார் எழுந்தது. இதனால், இடமாறுதல் நடவடிக்கைகளை நிறுத்துவதாக, பள்ளிக்கல்வி முதன்மை செயலர், பிரதீப் யாதவ் உத்தரவு பிறப்பித்தார். தொடர்ந்து, பருவ தேர்வு விடுமுறையில் மாறுதல் வழங்கி, வகுப்புகள் துவங்கும் போது, ஆசிரியர்களை மாற்ற, அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி, இடமாறுதல் நடவடிக்கை துவங்கி உள்ளது.
இந்தமுறை இடமாறுதல் நடவடிக்கை, நேரடியாக பள்ளிக்கல்வி அமைச்சகம் மற்றும் முதன்மை செயலரின் மேற்பார்வையில் நடப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதனால், இடமாறுதல் பெற விரும்பும் ஆசிரியர்கள், அரசியல்வாதிகள் வழியே, நேரடியாக செயலகத்தில் மனுக்களை குவித்து வருகின்றனர்.

ஆங்கிலம் கற்பித்து அசத்தும் பார்வையற்ற பெண் ஆசிரியை!!!

பெரம்பலுார் : பார்வையற்ற பெண் ஆசிரியை
, அரசு பள்ளி மாணவ - மாணவியருக்கு ஆங்கில பாடம் கற்பித்து அசத்தி
வருகிறார்.


பெரம்பலுார் மாவட்டம், பொம்மனப்பாடி கிராமத்தில் உள்ள யூனியன் நடுநிலைப் பள்ளியில், ஒன்று முதல், 8ம் வகுப்பு வரை, 107 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். தலைமை ஆசிரியை உட்பட, எட்டு ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இங்கு, பாப்பாத்தி, 29, என்பவர், ஆங்கில பட்டதாரி ஆசிரியையாக, 2012 முதல், பணியாற்றி வருகிறார். ஆங்கிலத்தில், எம்.ஏ., - பி.எட்., முடித்துள்ள பாப்பாத்தி, பார்வையற்றவர். துவக்கப் பள்ளி முதல், 'பிரெய்லி' முறையில் படித்தவர். தற்போது, எம்.பில்., பட்டப் படிப்பும் படித்து வருகிறார். ஆறு ஆண்டுகளாக, இங்கேயே பணியாற்றி வருகிறார்.

பாப்பாத்தி, ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை, ஆங்கில பாடம் நடத்துகிறார். மாணவ - மாணவியருக்கு எளிதில் புரியும் படியும், ஆடிப் பாடியும் எளிமையாக பாடம் நடத்துகிறார். ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், உரையாடவும் பயிற்சி அளிக்கிறார்.

'தனியார் பள்ளி மாணவர்களுடன், அரசு பள்ளி மாணவர்கள் போட்டியிடும் வகையில், இவரது ஆங்கிலம் போதிக்கும் திறன் உள்ளது' என, அவருடன் பணியாற்றும் சக ஆசிரியர்களே பெருமிதம் கொள்கின்றனர்.

ஆசிரியை பாப்பாத்தி கூறியதாவது: எனக்கு ஒன்றரை வயதில், மூளைக் காய்ச்சலால் பார்வை பறிபோனது. கலெக்டராக வேண்டும் என்பதே என் ஆசை. பார்வையற்றவர், ஐ.ஏ.எஸ்., ஆக முடியாது என்பதால், என் ஆசிரியை ரூபி என்பவரின் வழிகாட்டுதலின்படி, ஆங்கில பாடப்பிரிவு எடுத்து படித்தேன். பெற்றோர் இறந்து விட்டனர். இரண்டு அண்ணன், அக்கா உள்ளனர். என் முயற்சிக்கு, பெரிய அண்ணன் குடும்பத்தினர், மிகவும் உறுதுணையாக இருந்தனர்.

பாடப் புத்தகங்களை, பிரெய்லி முறையில் தான் வைத்துள்ளேன். ஆங்கிலம் வாசித்தல் மற்றும் உச்சரிப்பு, உரையாட பயிற்சி கொடுக்கிறேன். மதிய உணவு இடைவேளை உட்பட, நேரம் கிடைக்கும் போதெல்லாம், மாணவர்களுக்கு, 'ஸ்போக்கன் இங்கிலீஷ்' வகுப்பும் எடுக்கிறேன். என் ஊரிலிருந்து, 15 கி.மீட்டரில் உள்ள பள்ளிக்கு, பஸ்சில் தனியாகவே வருகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.



பாடம் நடத்துவதில் மட்டுமின்றி, பள்ளிக்கு சரியான நேரத்தில், வந்து செல்வதையும் பாப்பாத்தி வழக்கமாக வைத்து உள்ளார்.

வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் தரும் வகையில் பாடத்திட்டம்! : பள்ளி கல்வி துறை அமைச்சர் உறுதி

வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் தரும் வகையில், தொழில் கல்வியுடன் கூடிய பாடத்திட்டம் கொண்டு வரப்படும்,'' என,பள்ளி கல்வித்துறை அமைச்சர்,
செங்கோட்டையன் தெரிவித்தார்.


 கோவை மாவட்டம், பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் கல்லுாரியில் நடந்த அறிவியல் கண்காட்சியை, பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் துவக்கி வைத்தார். நிருபர்களிடம், அமைச்சர் கூறியதாவது:படித்து முடித்ததும், வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் தரும் வகையில், பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்படுகிறது.மூன்று ஆண்டுகளுக்குள் புதிய பாடத்திட்டம் கொண்டு வரப்படும்.

 இதில், 72 பாடங்கள், தொழில்கல்வி கற்றுத்தரும் வகையில் பாடத்திட்டம் அமைக்கப்படும். இந்த புதிய பாடத்திட்டம், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தைவிட சிறந்ததாக இருக்கும்.அனைவருக்கும் கல்வித் திட்டம் மூலமாக, பகுதி நேர ஆசிரியர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். மத்திய அரசு நிதியிலிருந்து அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது.

பகுதி நேர ஆசிரியர்கள், 16 ஆயிரத்து500 பேர் நிரந்தரம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.பணி நிரந்தரம் என்பது அவ்வளவு சுலபம் அல்ல. அவர்களுக்கு, அரசு உதவி செய்யும் வகையில், பகுதி நேர ஆசிரியர்களை அருகேயுள்ள பள்ளிக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

உயர்நிலை முடித்தவர்கள் மேல்நிலையில் என்ன படிக்கலாம் என்றும், மேல்நிலை முடித்தவர்கள், கல்லுாரியில் என்ன படிக்கலாம் என ஆலோசிக்கும் வகையில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அந்தந்த பள்ளிகளில், 'படிக்காலம் பாடங்களை' என்ற தலைப்பில், 256 பாடங்களை பெயர் பலகையில் எழுதி ஒரு வார காலம் வைக்கப்படும்.


பெற்றோர், மாணவர்கள் கலந்து பேசி படிப்பதில் ஏற்படும்சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள, ஒரு வழிகாட்டியாக இந்த பெயர் பலகை வைக்கப்படும்.மரக்கன்றுகளை நட்டு, ஓராண்டுக்கு பராமரிக்கும் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்பட உள்ளது. இந்த திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்.இவ்வாறு, அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

ஆசிரியர்களை குழப்பும் எமில் (EMIS) செயலி -ஸ்மார்ட் -சோதனையால் தவிப்பு -போட்டோ -ரத்த குரூப் விவரம் மாயம்

2018 ஆம் ஆண்டிற்கான தொடர் விடுமுறை காலண்டர்

ஜனவரி - 2018    (13-16),(26-28)
ஜனவரி 13 - சனி
ஜனவரி 14 - பொங்கல்
ஜனவரி 15 - மாட்டுப்பொங்கல்
ஜனவரி 16 - உழவர் திருநாள்
ஜனவரி 26 - 69 வது குடியரசு தினம்
ஜனவரி 27 - சனி
ஜனவரி 28 - ஞாயிறு

மார்ச் - 2018 (01-04),(29-1)
மார்ச் 01 - ஹோலிப் பண்டிகை
மார்ச் 02 - விடுப்பு எடுக்க வேண்டிய நாள்
மார்ச் 03 - சனி
மார்ச் 04 – ஞாயிறு



மார்ச் 29 - மஹாவீர் ஜெயந்தி
மார்ச் 30 - புனித வெள்ளி
மார்ச் 31 - சனி
ஏப்ரல் 01 - ஞாயிறு

ஏப்ரல் - 2018 (13-25),(28-01)
ஏப்ரல் 13 - விடுப்பு எடுக்க வேண்டிய நாள்
ஏப்ரல் 14 - தமிழ் புத்தாண்டு
ஏப்ரல் 15 – ஞாயிறு

ஏப்ரல் 28 - சனி
ஏப்ரல் 29 - ஞாயிறு
ஏப்ரல் 30 - விடுப்பு எடுக்க வேண்டிய நாள்
மே 01 - மே தினம்

ஜூன் - 2018  (14-17)
ஜூன் 14 - விடுப்பு எடுக்க வேண்டிய நாள்
ஜூன் 15 - ரம்ஜான் பண்டிகை
ஜூன் 16 - சனி
ஜூன் 17 - ஞாயிறு

செப்டம்பர் - 2018 (13-16),(21-23)
செப்டம்பர் 13 - விநாயகர் சதுர்த்தி
செப்டம்பர் 14 - விடுப்பு எடுக்க வேண்டிய நாள்
செப்டம்பர் 15 - சனி
செப்டம்பர் 16 – ஞாயிறு

செப்டம்பர் 21 - முஹரம்
செப்டம்பர் 22 - சனி
செப்டம்பர் 23 - ஞாயிறு

அக்டோபர் - 2018  (SEP29-02) (18-21)
செப்டம்பர் 29 - சனி
செப்டம்பர் 30 - ஞாயிறு
அக்டோபர் 1 - விடுப்பு எடுக்க வேண்டிய நாள்
அக்டோபர் 2 - காந்தி ஜெயந்தி

அக்டோபர் 18 - ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை
அக்டோபர் 19 - விஜயதசமி
அக்டோபர் 20 - சனி
அக்டோபர் 21 - ஞாயிறு

நவம்பர் - 2018  (03-06)
நவம்பர் 03 - சனி
நவம்பர் 04 - ஞாயிறு
நவம்பர் 05 - விடுப்பு எடுக்க வேண்டிய நாள்
நவம்பர் 06 - தீபாவளி                                                                                      

டிசம்பர் - 2018  (22-25)
டிசம்பர் 22 - சனி
டிசம்பர் 23 - ஞாயிறு
டிசம்பர் 24 - விடுப்பு எடுக்க வேண்டிய நாள்
டிசம்பர் 25 - கிறிஸ்துமஸ்

அண்ணாமலைப் பல்கலையில் நிலுவைச் சான்றிதழ் வழங்கும் சிறப்பு முகாம் :