யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

1/2/18

தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு நுழைவுதேர்வு கட்டாயம்; சுப்ரீம் கோர்ட்

தனியார் மருத்துவக் கல்லுாரிகளுக்கான மாணவர் சேர்க்கையை, தேசிய அளவிலான பொது நுழைவுத் தேர்வு மூலம் மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என, சுப்ரீம் கோர்ட் திட்டவட்டமாக கூறியுள்ளது. அதே நேரத்தில் பொது நுழைவுத் தேர்வில் இருந்து தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு விலக்கு அளிப்பது குறித்து, மத்திய அரசின் கருத்தை சுப்ரீம் கோர்ட் கேட்டுள்ளது.


நாடு முழுவதும் உள்ள, 400க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கையை, தேசிய அளவிலான பொது நுழைவுத் தேர்வு மூலமே நடத்த வேண்டுமென, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்திருந்தது.

இந்த நுழைவுத் தேர்வை இந்த ஆண்டே நடத்த உத்தரவிட வேண்டும் என, தொடரப்பட்ட வழக்கில், மே, 1 மற்றும் ஜூலை, 24ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேசிய அளவிலான பொது நுழைவுத் தேர்வு நடத்த வேண்டும், என, சுப்ரீம் கோர்ட் உத்தர விட்டது.

இதனிடையில், ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, மஹாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்கள், இந்த ஆண்டு மாநில அளவிலான நுழைவுத் தேர்வுகள் மூலமே மாணவர் சேர்க்கையை நடத்துவதற்கு அனுமதி கோரி மனு தாக்கல் செய்தன.

தமிழகத்தில் நுழைவுத் தேர்வு முறை ரத்து செய்யப்பட்டு, பிளஸ் 2 தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடக்கிறது. அந்த முறையிலேயே மாணவர் சேர்க்கை நடத்த அனுமதிக்க வேண்டுமென, தமிழக அரசும் மனு தாக்கல் செய்தது.இந்த மனுக்கள் மீது, நீதிபதிகள், ஏ.ஆர்.தவே, சிவகீர்த்தி சிங், ஏ.கே.கோயல் ஆகியோர் அடங்கிய சுப்ரீம் கோர்ட் அமர்வு விசாரித்து வருகிறது.

நேற்று நடந்த விசாரணைக்குப் பின், சுப்ரீம் கோர்ட் அமர்வு பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ள தாவது: தனியார் மற்றும் நிகர்நிலை மருத்துவக் கல்லுாரிகளுக்கான மாணவர் சேர்க்கை, தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு மூலமே நடத்தப்படவேண்டும்.

குறிப்பிட்ட சில மாநிலங்களில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள முறைகளிலேயே மாணவர் சேர்க்கை நடத்திக் கொள்வது குறித்து, மத்திய அரசு தன் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும். மே, 1ல், நடந்த முதல்கட்ட தேர்வை எழுதியவர்கள், ஜூலை, 24ல் நடக்கும் இரண்டாம் கட்டத் தேர்வையும் எழுத அனுமதிப்பது குறித்தும் விளக்க வேண்டும். இவ்வாறு சுப்ரீம் கோர்ட் அமர்வு தன் உத்தரவில் கூறியுள்ளது. வழக்கு விசாரணை, 9ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தொடரும் குழப்பம்: 

அரசு மருத்துவக் கல்லுாரி களில், 15 சதவீத இடங்களுக்காக, இதுவரை, அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு நடந்து வந்தது.

தமிழகத்தில், பொது நுழைவுத் தேர்வு முறை ரத்து செய்யப்பட்டு, பிளஸ் 2 தேர்வில், மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில், தரவரிசை தயாரிக்கப்பட்டு, அதனடிப்படையில் மாணவர் சேர்க்கை நடந்து வந்தது தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு முறை நடத்துவதற்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதால், மருத்துவக் கல்லுாரிகளில் சேர்வதற்கு நுழைவுத் தேர்வு எழுத வேண்டிய நிலைக்கு தமிழக மாணவர்கள்தள்ளப்பட்டிருந்தனர்.

தற்போது, இதற்கு விலக்கு அளிக்க சுப்ரீம் கோர்ட் முன்வந்துள்ளது. அதே நேரத்தில் தனியார் கல்லுாரிகளில் சேர்வதற்கு, நுழைவுத் தேர்வை எழுதியாக வேண்டிய நிலையில் மாணவர்கள் உள்ளனர். போதிய கால அவகாசம் இல்லாததால், தமிழக மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர். 

சுப்ரீம் கோர்ட்டில் நேற்று நடந்த விசாரணையின்போது வழக்கறிஞர்களின் வாதம்:

மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவான்: தனியார் மருத்துவக் கல்லுாரிகளுக்கு தேசிய பொது நுழைவுத் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தினால், 50 சதவீத இடங்களை அரசுக்கு ஒதுக்க வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு இல்லை. இது, மேலும் குழப்பத்தை ஏற்படுத்தும்.

சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமார்: மருத்துவ நுழைவுத் தேர்வு பிரச்னை தொடர்பாக, இதில் தொடர்புடைய அனைத்து தரப்பினருடன் கலந்தாலோசிக்க, மத்திய அரசு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில், எடுக்கப்படும் முடிவுகளின் அடிப்படையில் தீர்ப்பு அளிக்க வேண்டும். இதன் மூலம் சிக்கல் ஏற்படுவதை தவிர்க்கலாம்.

சி.பி.எஸ்.இ., சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பிங்கி ஆனந்த்: முதல் கட்ட நுழைவுத் தேர்வை எழுதியவர்கள், இரண்டாம் கட்டத் தேர்வையும் எழுத அனுமதித்தால், 9.50 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதும் நிலை ஏற்படும்.

அதே நேரத்தில், முதல் கட்டத் தேர்வுக்கு விண்ணப்பித்து, தேர்வு எழுதாத, 40 ஆயிரம் மாணவர்களை மட்டும், இரண்டாம் கட்டத் தேர்வை எழுத அனுமதிக்கலாம். இதனால், நுழைவுத் தேர்வு எழுதுவதற்கு போதிய மையங்கள் ஏற்பாடு செய்ய முடியும்.

தேர்வு முடிவில் தாமதம்; ஆசிரியர்கள், பெற்றோர் அதிருப்தி

பிளஸ் 2 தேர்வு முடிவை மே, 17ம் தேதி வெளியிடப்போவதாக தேர்வுத்துறை அறிவித்துள்ளது. தேர்ச்சி முடிவில் ஏற்பட்ட தாமதத்தால், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரிடையே அதிருப்தி நிலவுகிறது. 


தமிழகத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் மே முதல் வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சட்டசபை தேர்தலுக்கு பின், மே, 17ம் தேதி வெளியாகும் என, அரசு அறிவித்துள்ளது. தேர்வு முடிவுகள் தயார் நிலையில் இருந்தும், தாமதமாக வெளியிட, அரசு எடுத்துள்ள முடிவு, ஆசிரியர்களையும், பெற்றோரையும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியதாவது: 

பொதுவாக, மே முதல் வாரத்தில் தேர்வு முடிவுகள் வெளியானால், அதன் தொடர்ச்சியான பணிகள், ஒரு வாரம் வரை பள்ளிகளில் நீடிக்கும். அவற்றை முடித்துவிட்டு, கோடை விடுமுறையில், குடும்பத்துடன் வெளியூர் செல்ல திட்டமிடுவது ஆசிரியர்கள் வழக்கம். 

இந்த முறை மே, 16ம் தேதி வரை தேர்தல் பணிகள், 17ம் தேதிக்கு பின் பிளஸ் 2 தேர்வு முடிவு, அதன்பின், 25ம் தேதி, 10ம் வகுப்பு தேர்வு முடிவு, அதன் தொடர்ச்சியான பணிகள் என பார்த்து முடிப்பதற்குள், அடுத்த கல்வியாண்டுக்கான வகுப்புகள் துவங்கிவிடும். 

மதிப்பீடு அனைத்தும் முடிவடைந்து, தயார் நிலையில் இருந்தும், தேர்வு முடிவு வெளியிட தாமதிப்பது ஏன் என தெரியவில்லை. ஏற்கனவே, இன்ஜினியரிங் மற்றும் கலைக்கல்லூரி விண்ணப்பங்கள் வழங்கப்படும் நிலையில், தேர்வு முடிவு வெளியீடு தாமதம், பெற்றோரையும் ஏமாற்றியுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

தமிழகத்தில் கவுன்சிலிங் முறையில் மாணவர் சேர்க்கை

தமிழகத்தில் 2016-2017ம் ஆண்டிற்கான மருத்துவப் படிப்புக்கு மாணவர் சேர்க்கையை கலந்தாய்வு மூலம் நடத்த அனுமதிக்கலாம் என்று இந்திய மருத்துவ கவுன்சில் ஆக்கப்பூர்வமாக அறிவித்துள்ளது.


தேசிய நுழைவுத் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில், நுழைவுத்தேர்வு இல்லாமல் கலந்தாய்வு முறையில் மாணவர் சேர்க்கையை மேற்கொள்வதற்கு மாநில சட்டப்பேரவையில் தனிச்சட்டம் நிறைவேற்றப்பட்டிருப்பது சுட்டிக்காட்டப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் தேசிய நுழைவுத் தேர்வுக்கு தடை விதிக்க முடியாது என்றும், தனியார் மருத்துவக் கல்லூரிகள் தனியாக நுழைவுத் தேர்வு நடத்த அனுமதிக்க முடியாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்தனர். மேலும் மருத்துவ மாணவர் சேர்க்கை தொடர்பாக மாநில அரசுகள் நிறைவேற்றியுள்ள சட்டத்தின்படி மாணவர் சேர்க்கையை நடத்த இந்த ஆண்டு மட்டும் அனுமதிக்கலாமா என்பது குறித்து மத்திய அரசு 6-ம் தேதிக்குள் (இன்று) பதிலளிக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

அதன்படி இன்று இவ்வழக்கு மீண்டும் விசாணைக்கு வந்தது. அப்போது தமிழகத்தில் இந்த ஆண்டு கலந்தாய்வு மூலம் மருத்துவப் படிப்புக்கு மாணவர்களை சேர்க்கலாம் என்றும், நடப்பாண்டில் பிற மாநில அரசு கல்லூரிகளுக்கு அந்தந்த மாநிலங்கள் நுழைவுத் தேர்வை நடத்தலாம் என்று இந்திய மருத்துவ கவுன்சில் பரிந்துரை செய்தது.

மேலும், தனியார் மருத்துவ கல்லூரிகள் தேர்வு நடத்த அனுமதிக்கக்கூடாது. அனைத்து மாணவர்களையும் இரண்டாம் கட்ட நுழைவுத் தேர்வுக்கு அனுமதிக்க முடியாது. மாநில அரசு கல்லூரிகள் தவிர அனைத்து கல்லூரிகளும் தேர்வை எதிர்கொள்ள வேண்டும் என்றும் மருத்துவ கவுன்சில் வழக்கறிஞர் தெரிவித்தார்.

விரைவில் அனைத்து பள்ளிகளிலும் யோகா கட்டாயமாகிறது

அனைத்து மாநிலங்களில் உள்ள பள்ளிகளிலும் யோகா கட்டாயமாக்கப்பட வேண்டும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளதாகவும், இந்த உத்தரவு வரும் கல்வி ஆண்டிலிருந்து அமலுக்கு வர உள்ளதாகவும் மத்திய இணையமைச்சர் ஸ்ரீபத் யாசோ நாயக் தெரிவித்துள்ளார்.


லோக்சபாவில் கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த நாயக் கூறுகையில், அனைதஅது பள்ளிகளிலும் யோகா கட்டாயமாக்கப்பட வேண்டும் என அனைத்து மாநிலங்களுக்கும் சமீபத்தில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளது. 

வரும் கல்வி ஆண்டு முதலே இந்த புதிய உத்தரவு நடைமுறைக்கு வரலாம். அதே சமயம் யோகா கட்டாயமாக கற்பிக்கப்படாது. மாணவர்கள் விரும்பினால் அதை கற்றுக் கொள்ளலாம். இல்லாவிட்டால், அந்த சமயத்தில் உடற்பயிற்சிகள் அவர்களுக்கு அளிக்கப்படும்.


போலீசார் அனைவருக்கும் யோகா கட்டாயமாக்கப்பட உள்ளது. பாதுகாப்புத்துறை வீரர்களுக்கும் இது கட்டாயமாக்கப்படுவது குறித்த திட்டம் பரிசீலனையில் உள்ளது. போலீஸ் படையினருக்கு வழங்கப்படும் யோகா பயிற்சிக்கு, போலீஸ் யோகா பயிற்சி என பெயரிடப்பட உள்ளது. கடந்த ஆண்டு ஜூன் 21ம் தேதி முதலாவது சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. 

இந்தியா மட்டுமின்றி 192 நாடுகளிலும் இது கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டு ஜூன் 21ம் தேதியன்று 2வது சர்வதேச யோகா தினத்தை கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன என்றார்.

பள்ளி வாகனங்களுக்கு அதிகாரிகள் நோட்டீஸ்

தாராபுரத்தில் நேற்று நடந்த, பள்ளி வாகனங்களுக்கான சோதனை முகாமில், தகுதியற்ற நிலையில் இருந்த, 21 வாகனங்களின் குறைபாடுகளை சரிசெய்ய, நோட்டீஸ் அனுப்பப்பட்டது.


தாராபுரம் வட்டார போக்குவரத்து கழகம் மூலமாக, தாராபுரம், மூலனூர் சுற்றுப்பகுதியில் உள்ள, பள்ளி வாகனங்களுக்கான தகுதி தணிக்கை சோதனை முகாம் நேற்று நடந்தது. மகாராஜா கல்லூரி வளாகத்தில் நடந்த இம்முகாமில், வட்டார போக்குவரத்து அலுவலர் சுப்ரமணி தலைமையிலான குழுவினர், வாகன தணிக்கை மேற்கொண்டனர்.

மொத்தம், 74 வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டதில், 21 வாகனங்களில் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது. அவற்றை சரி செய்ய அறிவுறுத்தி, நோட்டீஸ் வழங்கப்பட்டது. மீதியுள்ள, 53 வாகனங்களுக்கு, தகுதிச்சான்று வழங்கப்பட்டது. பள்ளி வாகன சோதனை பணியை, கலெக்டர் ஜெயந்தி ஆய்வு செய்தார். தேர்தல் பார்வையாளர் நித்யானந்த மண்டல், ஆர்.டி.ஓ., சரவணமூர்த்தி உடனிருந்தனர்.

ஐ.சி.எஸ்.இ., தேர்வு முடிவுகள் 100 சதவீத தேர்ச்சி

கோவை மாவட்டத்தில், ஐ.சி.எஸ்.இ., பாடத்திட்டத்தின் கீழ் தேர்வில் பங்கேற்ற பள்ளிகள் நடப்பு கல்வியாண்டில், 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளது.


ஐ.சி.எஸ்.இ., பாடத்திட்டத்தின் கீழ், 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் கடந்த பிப்., - மார்ச் மாதங்களில் நடந்தது. இதற்கான தேர்வு முடிவுகள், நேற்று மதியம், 3:00 மணியளவில் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. கோவை மாவட்டத்தில், ஈஷா மற்றும் ஸ்டேன்ஸ் பள்ளிகளை சேர்ந்த 90 மாணவர்கள் மட்டுமே தேர்வில் பங்கேற்றனர்.

அவிநாசி ரோட்டில் அமைந்துள்ள ஸ்டேன்ஸ் பள்ளி, இரண்டாவது ஆண்டாக, பத்தாம் வகுப்பு தேர்வை சந்தித்துள்ளது. இதில், 55 மாணவர்களுடன், 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளது. ஈஷா பள்ளியில், பத்தாம் வகுப்பு, பிளஸ்2 இருபிரிவு மாணவர்களும், 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தனியார் பள்ளியில் 'சீட்' பெற இரவு முழுவதும் காத்திருப்பு

புதிய கல்வியாண்டு துவங்கும் நிலையில், தனியார் பள்ளிகளில், சீட் பெறுவதற்கு, இரவு முழுவதும் கண்விழித்து, பள்ளி வாசலில் தவம் கிடந்து விண்ணப்பம் பெறும் படலம் காஞ்சிபுரத்திலும் துவங்கி உள்ளது.


தமிழகத்தில், 2015 - 16ம் கல்வியாண்டு முடிந்து, அரசு, தனியார் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இலவச கட்டாயக்கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளிலும், 25 சதவீதம் ஏழை குழந்தைகளுக்கு, சீட் வழங்கப்படும். இதற்காக, விண்ணப்பங்களை அந்தந்த பள்ளிகளில் பெறலாம் என, மாவட்ட நிர்வாகங்கள் அறிவித்துள்ளன. 

இந்நிலையில், பிரபல தனியார் பள்ளிகளில், தங்கள் குழந்தைகளுக்கு, சீட் வாங்க, இரவு, பகலாக பெற்றோர் காத்திருக்கும் அவல நிலை, காஞ்சிபுரத்தில் காணப்படுகிறது. காஞ்சிபுரம், மாமல்லன் நகரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில், நேற்று காலை, 8:00 மணிக்கு, எல்.கே.ஜி.,க்கான விண்ணப்பங்கள் வழங்கப்படும் என, தெரிவிக்கப்பட்டதால், நேற்று முன்தினம் இரவே, பள்ளி முன் பெற்றோர் குவிந்தனர். 

இரவு முழுவதும், பள்ளி வாசலில், வரிசை கட்டி அமர்ந்து, நேற்று விண்ணப்பங்களை பெற்றனர். சென்னை மற்றும் சில நகரங்களில், இதுபோன்ற செய்திகள் கேள்விப்பட்ட நிலையில், காஞ்சிபுரத்திலும் நடந்துள்ளது ஆச்சர்யத்தையும், பெற்றோரின் ஆவலையும் வெளிப்படுத்துகிறது.

31/1/18

மாதவாரியான ஊதிய விபரங்களைக் குறித்து வைக்கத் தவறியோர் வருமானவரிப் படிவத்தினை நிரப்பிட ஏதுவாகத் தங்களின், ஆண்டு வருமான அறிக்கை (Annual Income Statement)பெற:

வருமானவரிப் படிவம் நிரப்பல் ,மாத ஊதிய பட்டியல்
( pay slip ) நகல் எடுக்க!!

மாதவாரியான ஊதிய விபரங்களைக் குறித்து வைக்கத் தவறியோர்

வருமானவரிப் படிவத்தினை நிரப்பிட ஏதுவாகத் தங்களின்


*ஊதியப்பட்டியல் (Pay Slip)

*ஆண்டு வருமான அறிக்கை (Annual Income Statement)

உள்ளிட்ட விபரங்களைப் பின்வரும் இணைய முகவரியில் இருந்து  
தரவிறக்கம்செய்து கொள்ளலாம்


இதற்கான உள்நுழைவுச் சொற்களாகத் தங்களின் *Tpf கணக்கு எண் &  
பிறந்ததேதி*யைக் குறிப்பிட வேண்டும்.

கல்வித்துறையில் பழைய ஓய்வூதியத் திட்டத்தினருக்கு PTPF-ம்
Cps தன்பங்கேற்பு ஓய்வூதியத்தினருக்கு EDN-ம் பின்னிணைப்புச் சொல்(SUFFIX) ஆகும்மற்ற துறையினருக்கு அவர்கள் துறையின் பெயர் சார்ந்தசுருக்கச் சொற்களை இடவும்தொடக்க கல்வி துறை 
 PTPF என இடவும்

```🔹Pay Slip🔹```

*தாங்கள் சார்ந்த ஊதிய அலுவலகத்தால் கருவூலகச் செலுத்து எண்ணின்  
வழியேதரவேற்றம் செய்திருந்தால் மட்டுமே தங்களின் ஊதியப் பட்டியலைத்  
தரவிறக்கஇயலும்.

```🔹Annual income statement🔹```

*இதில்கூட்டுறவு & காப்பீட்டுப் பிடித்தங்கள் இருக்காதுஆனால் 
 ஊதியப்பட்டியலில் முழு விபரங்களும் இருக்கும்.

*ஒரு சில நேரங்களில் ஊதிய / பஞ்சப்படி நிலுவைஒப்படைப்பு ஊதியம் 
உள்ளிட்டவை 
OFF-LINE மென்பொருளில் ஏற்றப்பட்டிருப்பின்அவ்விபரங்களை மேற்கண்ட 
 இணைப்பில் காண இயலாது.

எனவேஅதுபோன்ற விடுபட்ட விபரங்களைக் காண பின்வரும்  
இணையஇணைப்பில் சென்று கேட்கப்படும் தாங்கள் சார்ந்த விபரங்களை  
உள்ளீடுசெய்துதங்களின் நிகர ஊதியத் தொகையை அறியலாம்.

ஊக்க ஊதிய உயர்வு -M.Phil உயர் கல்வி தகுதிக்கு பட்டதாரி ஆசிரியர் (தமிழ் ) இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வு வழங்குதல் குறித்த தெளிவுரை!



BREAKING NEWS: நீதிபதிகளுக்கு 200% ஊதிய ஊயர்வு: மத்திய அரசு அறிவிப்பு: தலைமை நீதிபதிக்கு மாத ஊதியம் ரூ.2 லட்சத்து 80 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

நீதிபதிகளுக்கு 200% ஊதிய ஊயர்வு அளித்து மத்திய அரசு அறிவிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மாத ஊதியம் ரூ.2 லட்சத்து 80 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
நீதிபதிகளுக்கு 200% ஊதிய உயர்வு அளித்து மத்திய அரசு அறிவிப்பாணை வெளியீடு
உச்சநீதிமன்ற நீதிபதிகளின் மாத சம்பளம் ரூ 1 லட்சத்திலிருந்து ரூ 2.80 லட்சமாக உயர்வு.
உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு ரூ 90 ஆயிரத்திலிருந்து ரூ 2.50 லட்சமாக உயர்வு - மத்திய அரசு.

ஏ .டி .எம் இயந்திரத்தில் தவறுதலாக வந்த பணத்தை வங்கி மேலாளரிடம் ஒப்படைத்த அரசு பள்ளி மாணவர் -கல்விக்குரல் மனதார வாழ்த்துகிறது:

கணினி ஆசிரியர் கனவை நனவாக்குமா இந்த கல்வி மானியக் கோரிக்கை??

அரசு பள்ளிகளில் எப்படியேனும் கணினி ஆசிரியர் ஆகிவிடலாம் என்ற கனவுகளுடன்தான் நாங்கள் பி.எட்., படித்தோம். ஆனால், இன்று நாங்கள் படித்த பி.எட்., படிப்பு எந்தவொரு பயனும் இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். 2011-ல் சமச்சீர் கல்வியில் 6 முதல் 10 வகுப்புகளி ல் கணினி அறிவியல் பாடம் ஒரு தனிப்பாடமாகக் கொண்டுவரப்பட்டது. இதனை நம்பி பெரும்பாலானோர் பி.எட்., படித்தோம்.

            ஆனால், ஆட்சி மாற்றத்தினால் இந்த மகத்தான திட்டம் கொண்டுவரப்பட்ட வேகத்திலேயே கைவிடப்பட்டது. இதற்காக ரூ.300 கோடி செலவில் கணினி அறிவியல் பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டன. இவைகள் மாணவர்களிடம் முழுமையாகச் சென்றடையவில்லை. மேலும், பெரும்பாலான கணினி அறிவியல் பாடப்புத்தகங்கள் இன்றுவரையில் குடோனிலேயே அடுக்கிவைக்கப்பட்டுள்ளன.

            தமிழக அரசு பள்ளிகளில் கணினி அறிவியலின் மேம்பாட்டுக்காக, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் கீழ் ரூ.900 கோடி நிதியானது ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், இந்த நிதிப்பணமும் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை. இதனால் 90,00,000 அரசு பள்ளி மாணவ-மாணவியரின் கணினிக்கல்வியும், 50,000-க்கும் மேற்பட்ட கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

            அரசு பள்ளிகளில் தான் எந்தவொரு பணி வாய்ப்பும் இல்லையென்றால், தனியார் பள்ளிகளிலும் கூட எங்களுக்கென பணி வாய்ப்புகள் இல்லை. தனியார் பள்ளிகளில் பணிபுரிய கணினி ஆசிரியர்களுக்கென உரிய பணிவிதி மற்றும் பணி வரன்முறையை உருவாக்கித் தருமாறு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சரிடம் பலமுறை மனு அளித்தோம். ஆனால், இதுபற்றி அரசு செவி சாய்க்கவில்லை.

            அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் பாடம் விரைவில் வந்துவிடும், அரசு பள்ளிகளில் விரைவில் கணினி ஆசிரியர் ஆகிவிடலாம் என்ற கனவுகளுடன் காத்திருந்து, காத்திருந்து மிஞ்சியது ஏமாற்றமே. கணினி ஆசிரியர் வேலையை நம்பி பல இளைஞர்கள் திருமண வயதைக் கடந்துவிட்டனர். அரசு வேலை விரைவில் கிடைத்துவிடும் என நம்பியே பல யுவதிகள் முதிர்கன்னிகளாகவே வாழ்ந்துகொண்டிருக்கும் அவலம் கணினி ஆசிரியர்களுக்கு மட்டுமே கிடைத்த சாபம்.

            அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆ ந்திரா மற்றும் புதுச்சேரி போன்றவற்றின் அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் இன்று ஒரு முக்கியப் பாடமாக உள்ளது. தமிழகத்திற்குப் பிறகுதான் கேரளாவில் “கணினி அறிவியல்” பாடம் கொண்டுவரப்பட்டது. ஆனால், இன்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் கணினி அறிவியலுக்கும் மற்ற பாடங்களைப் போல் கட்டாயத் தேர்ச்சி முறை வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

            தமிழகத்தில் கணினி அறிவியலில் பி.எட்., படித்து முடித்துவிட்டு சுமார் 50,000-க்கும் மேற்பட்டோர் அரசு பள்ளி ஆசிரியர் பணிக்காக காத்திருக்கின்றனர். படித்தது முதல் இன்றுவரையில் இவர்கள் சொல்லவண்ணா துயரங்களை அடைந்துள்ளார்கள். கசாப்புக் கடை முதல் கரும்பு வெட்டும் தொழிலாளி வரை கணினி ஆசிரியர்களின் துயரச் சித்திரம் நீண்டுகொண்டேதான் செல்கிறது. எங்களுக்கான விடியல் என்றுதான் கிடைக்கும்..??

            தமிழக அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு 2011-லிருந்து மடிக்கணினிகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் 2011-லிருந்து 2017-வரை 6 00 கணினி ஆசிரியர்கள் மட்டுமே அரசு தரப்பிலிருந்து நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கணினி ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை; ஆனால், இலட்சக்கணக்கான மடிக்கணினிகள் கொடுத்து என்ன பயன்?? தற்போது பள்ளி மாணவர்களுக்கு பாடக்குறிப்புகள் உள்ளீடு செய்யப்பட்ட விரலியை (Pendirve)  தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளார்.

            மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் மடிக்கணினியும், விரலியும் கணினி ஆசிரியர்களின்றி எவ்வாறு முழு பயனை அளிக்கும்..?? கணினி ஆசிரியர்களை அரசு பள்ளிகளில் நியமனம் செய்ய தமிழக அரசு தயக்கம் காட்டுவது ஏன்..??

            எட்டு வருடங்களுக்கும் மேலாக, கணினி அறிவியலின் முன்னேற்றத்திற்காக கணினி ஆசிரியர்கள் தமிழக அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், தமிழக அரசு கணினி ஆசிரியர்களுக்கென எந்தவொரு திட்டத்தையும் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை.

கணினி அறிவியலின் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி பலமுறை போராட்டங்களும் செய்யப்பட்டன...
வரும் கல்வியாண்டிலாவது விடியல் கிடைக்குமா என்ற ஏக்கத்துடன் கணினி ஆசிரியர்கள் காத்துள்ளனர்...
2018 பிப்ரவரி மாதம் நடைபெறும் சட்டமன்ற கூட்டத்தொடரில் கணினி ஆசிரியர்களுக்கு ஒரு நல்ல முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது...
கல்வி மானியக் கோரிக்கையில் கணினி ஆசிரியர் கனவை நனவாக்குமா தமிழக அரசு??                                                                                                                         
G. RAJKUMAR, MCA., BEd.,
96983 39298
மாநில இணைய ஆசிரியர்
தமிழ்நாடு பி.எட்., கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் 
பதிவு எண் ® 655/2014.

குரூப் 4 தேர்வு எப்போது? ஹால் டிக்கெட் கிடைக்காதவர்கள் செய்ய வேண்டியது என்ன?

                                                       



தமிழக அரசு சமீபத்தில் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் - IV (தொகுதி-IV) ல் 
அடங்கிய பணிகளுக்கு 9351 காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அறிவிக்கை எண் 23/2017ஐ, 14.11.2017 அன்று வெளியிட்டது. இந்த பதவிக்கான எழுத்துத் தேர்வு வரும் 11.02.2018 அன்று தமிழகத்தின் 301 தாலுக்கா மையங்களிலும் நடைபெறவுள்ளது.


சுமார் 20.8 லட்சம் பேர் எழுதவுள்ள இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை தேர்வாணையத்தின் அதிகாரபூர்வ இணையதளமான www.tnpscexams.net மற்றும் www.tnpscexams.in-ல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்ப பதிவு எண்/பயனாளர் குறியீடு (Registration ID/Login ID) மற்றும் பிறந்த தேதியினை குறிப்பிட்டு ஹால் டிக்கெட்டை டவுன்லோடு செய்து கொள்ளலாம். அல்லது தங்களுடைய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்தை தெரிந்து கொள்ளலாம்

மேலும் விண்ணப்ப கட்டணம் கிடைக்க பெறாதவர்கள் தேர்வுக்கட்டணம் செலுத்திய லானுடன் contacttnpsc@gmail.com என்ற தேர்வாணையத்தின் இமெயில் முகவரிக்கு 06.02.2018 தேதிக்குள் அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

இவ்வாறு தமிழக அரசின் தேர்வுத்துறை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

20 லட்சம் மாணவர்களுக்கு தொழிற்கல்வி பாடம் : 15 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பயிற்சி துவக்கம்

                                             

சென்னை: தமிழகம் முழுவதும், பள்ளி மாணவர்கள், 20 லட்சம்
பேருக்கு, வேலை வாய்ப்புக்கான தொழிற்கல்வி கிடைக்கும் வகையில், புதிய திட்டத்தை பள்ளிக்கல்வித் துறை அறிமுகம் செய்துள்ளது.


20 லட்சம் மாணவர்களுக்கு தொழிற்கல்வி பாடம் : 15 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பயிற்சி துவக்கம்

மாணவர்களை தயார்படுத்துவதற்காக, 15 ஆயிரம் ஆசிரியர்களுக்கு, தொழிற்கல்வி பயிற்சி நேற்று துவங்கியது. தமிழகத்தில், பள்ளிக்கல்வியின் தரத்தை உயர்த்தும் வகையில், அமைச்சர் செங்கோட்டையன் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இதன்படி, பிளஸ் 2 முடித்ததும், அரசு பள்ளி மாணவர்கள், வேலைவாய்ப்புக்கு தகுதி பெறும் வகையில், தொழிற்கல்வி பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்காக, மாணவர்களை தயார்படுத்தும்,

ஆசிரியர்களுக்கான பயிற்சி நேற்று துவங்கியது.

தொழிற்கல்வி பயிற்சி



'லெண்ட் அஹேண்ட் இந்தியா' என்ற, பிரபல தனியார் நிறுவனத்தினர், ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கின்றனர். பயிற்சியைதுவக்கி வைத்து அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:
பள்ளி மாணவர்கள், படிப்பை முடிக்கும் போது, வேலை வாய்ப்புக்கு தகுதி பெறும் வகையில், 20 லட்சம் மாணவர்களுக்கு, தொழிற்கல்வி பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்கு, மாணவர்களை தயார்படுத்த வசதியாக, ஒன்பது முதல், பிளஸ் 2 வரை பாடம் நடத்தும், 15 ஆயிரம் ஆசிரியர்களுக்கான பயிற்சி தரப்படுகிறது.

260க்கும் மேற்பட்ட தொழிற்கல்வி


வேலைவாய்ப்புக்கான தொழிற்கல்வி பயிற்சியில், விருப்பமுள்ள மாணவர்கள் பங்கேற்கலாம்; கட்டாயமில்லை. வேளாண்மை, உணவு பதப்படுத்துதல், சிறு வணிகம், ஆட்டோ மொபைல்ஸ், அழகு, உடல்நல பராமரிப்பு கலை என, 260க்கும் மேற்பட்ட தொழிற்கல்விகளில்


Advertisement
ஒன்றை, மாணவர்கள் தேர்வு செய்யலாம்.
இந்த திட்டத்துக்கு, மத்திய அரசிடம் இருந்து, மூன்று கோடி ரூபாய் நிதி உதவி கிடைக்கிறது. மேலும், 30 கோடி ரூபாய் வரை நிதி எதிர்பார்க்கப்பட்டுள்ளது. மருத்துவ படிப்பிற்கான, 'நீட்' தேர்வு எழுத, அரசு பள்ளி மாணவர்கள், 2,000 பேருக்கு, சென்னையில் உள்ள கல்லுாரிகளில், சிறப்பு பயிற்சி தரப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், பள்ளிக்கல்வி முதன்மை செயலர், பிரதீப் யாதவ், பள்ளிக்கல்வி இயக்குனர், இளங்கோவன், மத்திய அரசின் அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தின் மாநில இயக்குனர், ராமேஸ்வர முருகன், இணை இயக்குனர், நாகராஜ முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முத்தான 'மூன்று' நிலா! வானில் ஒரு அதிசயம்

                                                     


சந்திரகிரகணத்து அன்று பெரிய நிலா, ரத்த நிலா, நீலநிற நிலா என மூன்றுவித
நிலாவும் வானில் தோன்றும் அதிசயம்நாளை (ஜன., 31), அரங்கேற உள்ளது.ஆண்டுதோறும் அல்லது குறிப்பிட்ட இடைவெளியில் சூப்பர் மூன்(பெரிய நிலா) ஏற்படுவது வழக்கம்.
நாளைய சிறப்பம்சம் என்னவெனில், சந்திரகிரகணத்துடன் ரத்த நிலா மற்றும் நீலநிற நிலாவும் தோன்ற உள்ளது.

சூப்பர் மூன்

பூமிக்கும் நிலவுக்கும் இடையேயான சராசரி தொலைவை விட, குறைவாக இருக்கும் போது 'சூப்பர் மூன்' தோன்றுகிறது. அப்போது சாதாரணமாக தெரியும் நிலவை விட 14 சதவீதம் பெரியதாகவும், 30 சதவீதம் கூடுதல் ஒளியுடனும் தெரியும்.* பூமிக்கும் - நிலவுக்குமான சராசரி துாரம் 3,84,400 கி.மீ. 'சூப்பர் மூன்' அன்று, இதைவிட குறைவான துாரத்தில் நிலா இருக்கும்.* சூரியனை பூமி சுற்றி வர 365.26 நாட்கள் ஆகிறது. அதே போல நிலவு, பூமியைச் சுற்ற 29.32 நாள் ஆகும். இந்தக் கணக்கீட்டு முறையில் பூமியின் ஒருபக்கம் சூரியனும், மறுபக்கம் நிலாவும் ஒரே நேர்கோட்டில் வரும்போது 'சூப்பர் மூன்' நிகழ்வு ஏற்படுகிறது.

சந்திர கிரகணம்

நிலவுக்கு தானாக ஒளி வெளியிடும் சக்தி கிடையாது. சூரிய ஒளியைத் தான் அது பிரதிபலிக்கிறது. சந்திர கிரகணம் என்பது, சூரியனுக்கும் நிலவுக்கும் இடையே பூமி வரும் போது ஏற்படுகிறது. இதனால் சூரிய ஒளி, நிலவில் படுவதை பூமி மறைத்து விடுகிறது. பூமியின் நிழல் தான், நிலவில் படுகிறது.


ரத்த நிலா


சந்திர கிரகணத்தன்று 'சூப்பர் மூன்' ஏற்படும் போது, நிலா, பூமிக்கு அருகில் வருகிறது. இதனால் சூரிய ஒளி, பூமியின் காற்று மண்டலத்தில் பட்டுச் சிதறுவதால், அதிக அலை நீளமுள்ள சிவப்பு நிறம், நிலவின் மேற்பரப்பில் பட்டுப் பிரதிபலிக்கும். அதனால் 'ஆரஞ்சு' நிறத்திலிருந்து ரத்தச் சிவப்பு வரையிலான நிறங்களில் நிலா தெரியும். இது 'ரத்த நிலா' என அழைக்கப்படுகிறது.


நீலநிற நிலா


மாதம் தோறும் ஏற்படும் இரண்டாவது பவுர்ணமி, 'நீலநிற நிலா' என அழைக்கப்படுகிறது. இது நீல நிறத்தில் தெரிவதில்லை. அறிவியல் வரலாற்று ரீதியாக இதற்கு இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது.

32
சுமார் 152 ஆண்டுகளுக்குப்பின் இந்நிகழ்வு நடக்கிறது என கூறப்படுகிறது. இது அமெரிக்காவுக்கு மட்டுமே பொருந்தும். உலகம் முழுவதற்குமானது அல்ல. ஆசியாவில் கடைசியாக இந்நிகழ்வு 1982 டிச., 30ல் ஏற்பட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் 32 ஆண்டுகளுக்குப்பின் இந்நிகழ்வு நடக்கிறது.எங்கு தெரியும்இந்தியாவில் நாளை(ஜன.31) மாலை 5 : 18 மணிக்கு சந்திர கிரகணம் தொடங்குகிறது. 6:21 முதல் இரவு 7:37 வரை முழு கிரகணம் இருக்கும்.இரவு 7:37 மணி முதல் நிழல் விலக ஆரம்பித்து 8: 41 மணிக்கு முழுமையாக விலகி விடும். இரவு 9:38 மணிக்குப்பின் நிலவு அதன் முழு ஒளியுடன் ஜொலிக்கும்.

எப்படி பார்ப்பது

இதற்குப் பாதுகாப்புக் கண்ணாடிகள் அணியவேண்டிய அவசியம் இல்லை. வெறும் கண்களால் பார்க்கலாம்.

சந்திர கிரகணம் பரிகாரம் யாருக்கு

நாளை (ஜன., 31) சந்திரகிரகணம் நிகழ்கிறது. இதையொட்டி யார் யாருக்கு பரிகாரம் செய்ய வேண்டும் என்பது குறித்து பஞ்சாங்கங்களில் சொல்லப்பட்டுள்ளது. கிரகணம் முடிந்த பின் பரிகார பூஜை செய்யப்பட்டு கோயில்களில் நடை திறக்கப்படும். நாளை மாலை 5:16 மணிக்கு ஏற்படும் இந்த கிரகணம் இரவு 8:40 மணி வரை நீடிக்கிறது. கிரகணம் முடிந்த பின் நீராடி சந்திரனை தரிசனம் செய்வது நன்மையளிக்கும்.புதன் கிழமையில் பிறந்தவர்களும், புனர்பூசம், பூசம், ஆயில்யம், விசாகம், கேட்டை, பூரட்டாதி, அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் பரிகார அர்ச்சனை செய்ய வேண்டும்.

வேலைவாய்ப்பு: மத்திய நீர் ஆணையத்தில் பணி!

                                            
                                             

மத்திய நீர் ஆணையத்தில் காலியாக உள்ள ஸ்கில்டு வொர்க் அசிஸ்டன்ட்
பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை: Skilled Work Assistant.

காலியிடங்கள்: 21

ஊதியம்: ரூ.18,000.

வயது வரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி / ஐடிஐ.

கடைசித் தேதி ; 23.2.2018

மேலும் விவரங்களுக்கு http://www.cwc.nic.in/என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

TNOU-BEd ADMISSION -NO ENTRANCE EXAM-NEW METHOD FOR The Selection of candidates will be on the basis of the marks secured in the qualifying UG / PG Degree examination.

தமிழக பள்ளிகளில் அட்டெண்டன்ஸ் முறையில் புதுமை!!!

பள்ளிகளில், மாணவர்களுக்கான, 'அட்டெண்டன்ஸ்' முறையில், தமிழக அரசு, புதுமையை புகுத்த உள்ளது. 
'பேஸ் பயோமெட்ரிக்' முறைப்படி, பள்ளி வாசலில் உள்ள, கேமராவில் பதிவாகும் முகத்தால், 'பிரசென்ட்' பதிவாகி விடும். 'உள்ளேன் அய்யா'வுக்கு பதிலாக, கம்ப்யூட்டரில் பதிவாகும் இந்த வசதி, முதற்கட்டமாக, சென்னை அரசு பள்ளியில் அறிமுகம் செய்யப்படுகிறது.

 *தமிழக பள்ளிகளின், 'அட்டெண்டன்ஸ்' முறையில்..  புதுமை!*

கல்வி நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில், ஊழியர்கள் வருகைப் பதிவில் முறைகேடுகளை தடுக்கவும், நிர்வாக வசதிக்காகவும், 'பயோமெட்ரிக்' வருகைப்பதிவு பின்பற்றப்படுகிறது. 'கார்ப்பரேட்' நிறுவனங்களில் மட்டுமின்றி, சிறிய கடைகளிலும், இந்த முறை பயன்பாட்டில் உள்ளது. ஊழியர்களின் விரல் ரேகை அடிப்படையில், வருகை விபரம் பதிவு செய்யப்படுகிறது.இந்த பயோமெட்ரிக் வருகைப்பதிவு திட்டம், விழுப்புரம் மாவட்டத்திலும், மற்ற மாவட்டங்களில் சில பள்ளிகளிலும் நடைமுறையில் உள்ளது. இந்த
திட்டம் அமலானதால், அரசின் நலத் திட்டங்களை தவறாகக் கணக்கிடுவது, மாணவர்களின் எண்ணிக்கையில் போலிகளை சேர்த்து, ஆசிரியர்கள் நியமனத்தை தக்க வைப்பது, ஆசிரியர்களின்காலதாமதமான வருகை போன்ற பிரச்னைகளுக்கு, முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

சோதனை முறையில்
இந்நிலையில், தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால், சமீபகாலமாக, முகத்தை படம் பிடித்து, வருகையை பதிவு செய்யும் முறை அறிமுகம் ஆகியுள்ளது.பேஸ் பயோமெட்ரிக் என்ற, இந்த நவீன முறையில், விரல் ரேகைக்கு பதில், முகத்தை படம் பிடித்து, வருகைப் பதிவு செய்யப்படும்.
பல நவீன மொபைல் போன்களிலும், வெளிநாட்டு, 'சாப்ட்வேர்' நிறுவனங்களிலும், இந்த தொழில்நுட்பம், தற்போது அறிமுகமாகிஉள்ளது.இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த தொழில்நுட்ப நிறுவன உதவியுடன், பேஸ் பயோமெட்ரிக் தொழில்நுட்பம், தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளிலும் சோதனை முறையில் அறிமுகமாகிறது. முதற்கட்டமாக, சென்னை அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், இந்த திட்டம் சோதனை முறையில் அமலாகிறது; 600 மாணவியருக்கு, பேஸ் பயோமெட்ரிக் முறை
பயன்படுத்தப்படும்.

திட்டத்தின் செயல்பாடுகளுக்கு ஏற்ப, மற்ற பள்ளிகளுக்கும், பேஸ் பயோமெட்ரிக் வருகைப் பதிவை விரிவுபடுத்த, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். தனியார் பள்ளிகளில் இன்னும் அறிமுகமாகாத, நவீன தொழில்நுட்ப திட்டம், தமிழக அரசு பள்ளிகளில் அமலாவது,
மாணவர்களையும், பெற்றோரையும் மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.

*வருகைப்பதிவு எப்படி?*


புதிய வருகைப்பதிவு திட்டத்தின்படி, ஒவ்வொரு மாணவியின் புகைப்படமும், கணினியில் ஏற்றப்படும். பள்ளியின் நுழைவாயில் அருகே, மாணவியர் வரும் வழியில், மின்னணு நுழைவாயில் வைக்கப்படும். அதை படம் பிடிக்கும் வகையில், உயர்தர கேமரா வைக்கப்படும்.இந்த கேமரா, நுழைவாயிலில் வரும், அனைத்து மாணவியரின் முகங்களையும் படம் பிடிக்கும். அந்த முகங்கள், ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட மாணவியரின் முகத்துடன்,
ஒரே வினாடியில் கணினியில் தானாக சரிபார்க்கப்பட்டு, வருகைப்பதிவாக மாறும்.எனவே, எந்த மாணவி எப்போது வந்தார்; அவருடன் வந்த மற்ற மாணவியர் யார் என்பது போன்ற விபரங்கள், கணினியில் பதிவாகும். இந்த விபரங்களை, பள்ளி தலைமை ஆசிரியை, தன் கணினியில் நேரடியாக பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

ஞாபகம் இருக்கிறதா?? தேர்வின் பெயர்களும் தேதிகளும்...

அரசு உதவி பெரும் பள்ளியில் ஒரு ஆசிரியர் பணிபுரிந்து பணிதுறப்பு (Resign ) செய்து மற்றொரு அரசு உதவி பெரும் பள்ளியில் பணிமுறிவின்றி சேர்ந்தால் முன்னர் பணிபுரிந்த பள்ளியில்பெற்ற ஊதியத்தையே தொடர்ந்து பெறலாம் -என்பதற்கான அரசாணை!!!

FLASH NEWS - SSA - NEW PEDAGOGY METHOD IMPLEMENT REG SCHOOL TEAM VISIT & DISTRICT WISE SCHOOL LIST PUBLISHED...

30/1/18

ஸ்டார்ட்அப் திட்டத்தில் 60,000 கிராமங்கள்!

ஸ்டார்ட்அப் இந்தியா திட்டத்தில் 60,000 கிராமங்களை 
இணைக்க உத்தரப்பிரதேச அரசு முடிவெடுத்துள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் உள்ள கான்பூர் ஐ.ஐ.டியில் நடந்த ஸ்டார்ட்அப் மாஸ்டர் கிளாஸ் திட்டம் குறித்த நிகழ்வில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்துகொண்டு பேசியதாக பிடிஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “உத்தரப்பிரதேசத்தில் உள்ள 60,000 கிராமங்களை ஸ்டார்ட்அப் இந்தியா திட்டத்துடன் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் கிராமங்களில் தொழில்நுட்ப வளர்ச்சியைக் கொண்டு செல்லும். மேலும், கிராமப்புற மக்களுக்கு வீடுகளிலிருந்தே வேலை செய்யும் வகையிலான வாய்ப்புகளை இத்திட்டம் ஏற்படுத்தித் தரும். தொழில்நுட்ப வளர்ச்சிகளை மேம்படுத்தும் வகையிலான பல்வேறு நலத்திட்டங்களை இத்திட்டத்தின் மூலம் செயல்படுத்தவுள்ளோம். ஐஐடியில் பயிலும் மாணவர்கள் வெளிநாடு செல்லாமல் உள்நாட்டிலேயே தங்கி நம்நாட்டு மேம்பாட்டுக்குப் பணிபுரிய வேண்டும் என்று கூறினார்” எனத் தெரிவித்துள்ளது.

மேலும், இந்நிகழ்ச்சியில் கங்கா நதியின் மாசுபாடு குறித்து பேசிய அவர், “கங்கா நதி நம் மாநிலத்தின் வழியாக அலகாபாத்தின் பிரயக்ராஜ்ஜை அடைகிறது. இந்த நதி மிகவும் மாசடைந்துள்ளது. ஐஐடி மாணவர்கள் பங்களிப்பு அளித்தால் நதியைத் தூய்மையாக்கலாம்” என்றார். ரூ.7,876.17ஞஞ கோடி செலவில் அங்கு நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்டு இவ்வாறு பேசினார்.

சிபிஎஸ்இ மாணவர்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புகள்!

மாணவர்களுக்குத் தேவைப்பட்டால், சிபிஎஸ்இ வாரியம் அவர்களுடன் 
தொடர்புகொள்ள வரவேற்கிறது.

தேர்வு முடிந்தபின் வெளியே வரும் மாணவர்கள் கூட்டமாக ஒன்றாக கூடி வினாத்தாள் குறித்து விவாதிப்பார்கள். அதில், சில கேள்விகள் கடினமானதாகவும் சில எளிமையானதாகவும் இருக்கும். குறிப்பாக, ஒன்று அல்லது இரண்டு கேள்விகள் பரிந்துரைக்கப்பட்ட பாடத் திட்டத்துக்கு வெளியே இருந்து கேட்கப்பட்டவையாக இருக்கும். இப்படி, தங்களுக்குள்ளே பேசி குழப்பம் அடையாமல், சிபிஎஸ்இ மாணவர்கள் தற்போது அதுகுறித்து சிபிஎஸ்இ வாரியத்திடம் கருத்து கேட்கலாம்.

பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் தங்களது கேள்வித்தாளில் ஏதேனும் பிரச்னைகள் இருப்பின் அதுகுறித்த கருத்துகளை அனுப்ப அனுமதிப்பதற்கான கண்காணிப்பு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தேர்வு எழுதிய 24 மணி நேரத்துக்குள் தங்களது கருத்துகளை அனுப்பலாம்.

இதுகுறித்து சிபிஎஸ்இ வாரியம் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், மாணவர்களுக்கு வழிக்காட்டுதல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆசிரியர்கள் மற்றும் மதிப்பீட்டுத் திட்டங்களைப் பற்றி பிற முக்கிய வழிகாட்டுதல்களையும் கோடிட்டுக்காட்டுகிறது. சுற்றறிக்கையின்படி, மதிப்பீட்டுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் ஆசிரியர் அதற்கு செல்லவில்லை என்றால், அந்தப் பள்ளிக்கூடம் தகுதி நீக்கம் செய்ய வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாரியத்தால் எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கைக்கு மாணவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பத்தாம் வகுப்பு மாணவன் ஸ்நிக்தா ராணி பத்ரா கூறுகையில், “இதற்கு முன்பு, வினாத்தாளில் இருக்கும் பிரச்னை அல்லது பிழைகள் குறித்து தெரிவிப்பதற்கு எந்தவொரு வழிமுறையும் இல்லை. தற்போது, கொண்டுவரப்பட்டுள்ள இந்த நடவடிக்கையின் மூலம் எளிதாக நாங்கள் வாரியத்தை அணுக முடியும். விடைத்தாளின் மதிப்பீட்டின்போது அவர்கள் இந்த விஷயத்தை கவனத்தில் கொள்வார்கள் என்று நம்புகிறேன். அதனால் மாணவர்களில் யாரும் பாதிக்கப்பட வாய்ப்பில்லை” எனக் கூறினார்.

கழிவறை: பெட்ரோல் பங்குகளுக்கு சென்னை மாநகராட்சி உத்தரவு!

சென்னையில் உள்ள அனைத்து பெட்ரோல் பங்குகளிலும் உள்ள கழிவறைகளைப்
பொதுமக்கள் இலவசமாகப் பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவில் 2014ஆம் ஆண்டில் தூய்மை இந்தியா இயக்கம் தொடங்கப்பட்டது. கடந்த இரு ஆண்டுகளாக தூய்மை நகரங்கள் குறித்த கணக்கெடுப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு, தூய்மை நகரங்களின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு பங்கேற்ற 434 நகரங்களில் சென்னை மாநகரத்துக்கு 235ஆவது இடம் கிடைத்தது. இந்தாண்டு தூய்மை நகர கணக்கெடுப்பு தொடங்கியிருக்கிறது. இது மார்ச் 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்தக் கணக்கெடுப்பில், நகர உள்ளாட்சி அமைப்புகள், மத்திய அரசின் நேரடி கள ஆய்வு, பொதுமக்கள் தெரிவிக்கும் கருத்து ஆகியவற்றின் அடிப்படையில்தான் தூய்மை நகரம் தெரிந்தெடுக்கப்படும். இதற்கு மொத்தம் நான்காயிரம் மதிப்பெண்.

இந்த நிலையில், அனைத்து பெட்ரோல் பங்குகளிலும் உள்ள கழிவறைகளை மக்கள் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் தோராயமாக 400 பெட்ரோல் பங்குகள் உள்ளன. இந்த உத்தரவு குறித்து பெட்ரோல் பங்க் உரிமையாளர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான பணிகள் அடுத்த மாதம் முதல் தொடங்கும். இது மக்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். மத்திய அரசின் அறிவுரையின்படியே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழக வருவாய்த் துறை செயலாளர் பதிலளிக்க உத்தரவு!

அரியலூரில் கிராம நிர்வாக உதவியாளர் பணியிடங்களை 
நிரப்புவதில் முறைகேடு நடந்துள்ளது எனத் தொடரப்பட்ட வழக்கில் வருவாய்த் துறை நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உடையார்பாளையம் தாலுகாவைச் சேர்ந்த முருகானந்தம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‘அரியலூர் மாவட்டத்தில் 24 கிராம உதவியாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. கிராம உதவியாளர்கள் பணி நியமனத்தில் முறைகேடு நடந்துள்ளது. ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. ராஜேந்திரனுக்கு வேண்டப்பட்டவர்கள் பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், 4 முதல் 5 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் கேட்டனர்’ எனக் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி டி.ராஜா முன்பு விசாரணைக்கு வந்தது.

இதுகுறித்து தமிழக வருவாய்த் துறை செயலாளர், அரியலூர் மாவட்ட ஆட்சியர், ஜெயங்கொண்டம் மற்றும் உடையார்பாளையம் தாலுகா தாசில்தார்கள் ஆகியோர் நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை நான்கு வாரத்துக்குத் தள்ளிவைத்தார் நீதிபதி.

வேலைவாய்ப்பு: தாதுவள மேம்பாட்டுக் கழகத்தில் பணி!!!

                                    
தேசிய தாதுவள மேம்பாட்டுக் கழக நிறுவனத்தில் காலியாக உள்ள பராமரிப்பு உதவியாளர் 
பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை: பராமரிப்பு உதவியாளர்

பணியிடங்கள்: 44

வயது வரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்

கல்வித் தகுதி: ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

கடைசி தேதி: 12.02.2018

மேலும் விவரங்களுக்கு www.nmdc.co.in என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

மார்ச் 17ல் தீக்குளிப்பு :ஆசிரியர்கள் அதிரடி!!!

திருச்சி:'தமிழக அரசின், எட்டாவது ஊதியக்குழுவில், முதுநிலை ஆசிரியர்களுக்கு 
இழைக்கப்பட்ட அநீதியை கண்டித்து, மார்ச், 17ம் தேதி, தீக்குளிப்பு போராட்டம் நடத்தப்படும்' என, தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானங்கள் விபரம்:தமிழக அரசின், எட்டாவது ஊதியக்குழுவின், 21 மாத நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். தமிழக அரசின், எட்டாவது ஊதியக் குழுவிலும், முதுகலை ஆசிரியர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை கண்டித்து, மாநில தலைவர் மணிவாசகன் தலைமையில், மார்ச், 17ம் தேதி, 1,000 ஆசிரியர்கள் சென்னையில் தீக்குளிப்பு போராட்டம் நடத்துவர்.மேலும், பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வு பணிகள் புறக்கணிக்கப்படும். மேல்நிலை கல்விக்கென தனி இயக்குனரகம் அமைக்க வேண்டும்.இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பஸ் கட்டண குறைப்பு தமிழகம் முழுவதும் இன்று அமல்!!!

சென்னை: பஸ் கட்டண கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், தமிழக அரசு, கட்டணத்தை 
கொஞ்சம் குறைத்துள்ளது.
உயர்வுக்கு, பல தரப்பிலும்
இதன்படி, கி.மீ.,க்கு, சாதா பஸ்களில், இரண்டு பைசா; விரைவு மற்றும் சொகுசு பஸ்களில், ஐந்து பைசா, அதிநவீன சொகுசு பஸ்களில், 10 பைசா, விரைவு, 'ஏசி' பஸ்களில், 10 பைசா என்ற அளவில், கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குறைந்தபட்ச கட்டணம், ஐந்திலிருந்து நான்கு ரூபாயாகிறது. இந்த கட்டண குறைப்பு, மாநிலம் முழுவதும் இன்று(ஜன.,29) முதல் அமலுக்கு வருகிறது.

டாட்டூ' இருந்தால் வேலை கிடையாது! இந்திய விமானப் படை உத்தரவு

புதுடில்லி: 'பச்சை குத்துவது போல் உடலில், '
டாட்டூ' வரைந்திருந்தால் வேலை கிடையாது என, இந்திய விமானப் படை உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதற்கிடையே, விமானப் படையில் வேலையில் சேருவதற்காக தேர்வு எழுதி, மருத்துவப் பரிசோதனை முடித்த ஒருவர், பணியில் சேரும்போது, அவரது உடலில் டாட்டூ வரையப்பட்டிருந்ததால், பணி நியமன உத்தரவு ரத்து செய்யப்பட்டது. இதை எதிர்த்து அவர், டில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதை விசாரித்த, உயர் நீதிமன்றம், 'விமானப் படையின் உத்தரவு செல்லும். வேலைக்காக பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்தபோது, டாட்டூ வரைந்திருந்தால், வேலை கிடையாது என கூறப்பட்டுள்ளது. அதனால், வேலை நியமனத்தை ரத்து செய்தது செல்லுபடியாகும்' என, தீர்ப்பு அளித்துள்ளது.

சமூகதளத்தில் போட்டோ போடாதீங்க! விவாகரத்து வழக்கில் உத்தரவு!!!

புதுடில்லி: மஹாராஷ்டிராவில், கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்த, 
கணவன், மனைவிக்கு, விவாகரத்து வழங்கிய உச்ச நீதிமன்றம், எதிர்காலத்தில், தங்களுக்கு இடையிலான புகைப்படங்களை, சமூக வலைதளம் உட்பட எங்கும் வெளியிடக்கூடாது என உத்தரவிட்டுள்ளது.

மஹாராஷ்டிராவை சேர்ந்த ஒரு இன்ஜினியருக்கும், அவர் மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து இருவரும் பிரிந்தனர். இருவரும், ஒருவர் மீது ஒருவர், விவாகரத்து உட்பட பல்வேறு வழக்குகளை தொடுத்தனர். இறுதியில், இவர்களின் விவாகரத்து வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு விசாரித்தது.

இரு தரப்பு வாதங்களை முழுமையாக கேட்ட பின், நேற்று தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள், இருவருக்கும் விவாகரத்து வழங்கி உத்தரவிட்டனர். மேலும், மனைவியின் பராமரிப்பு செலவுக்காக, இரண்டு மாதங்களில், 37 லட்சம் ரூபாயை, கணவர் வழங்க வேண்டும் எனக்கூறிய நீதிபதிகள், எதிர்காலத்தில், தங்களுக்கு இடையிலான புகைப்படங்களை, சமூக வலைதளம் உட்பட எந்த இடத்திலும் வெளியிடக்கூடாது என உத்தரவு பிறப்பித்தனர். இருவரும், பரஸ்பரம் தாக்கல் செய்த புகார் மனுக்கள் அனைத்தையும், நீதிபதிகள் ரத்து செய்து உள்ளனர்.

முறைகேடு பிரச்னையால் டி.ஆர்.பி., திணறல்; புதிய தேர்வுகள் தள்ளிவைப்பு!!!

பாலிடெக்னிக் தேர்வு முறைகேடு பிரச்னை யால், பேராசிரியர் நியமனத்திற்கான 
தேர்வு நடத்துவதும், சிறப்பு ஆசிரியர் தேர்வு முடிவு களை வெளியிடுவதும் நிறுத்தப்பட்டு உள்ளது.

அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில், 1,058 பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., சார்பில், செப்டம்பரில், எழுத்து தேர்வு நடத்தப்பட்டது; இதில், 1.33 லட்சம் பேர் பங்கேற்றனர். தேர்வு முடிவுகள், நவம்பரில் வெளியிடப்பட்டு, சான்றிதழ் சரிபார்ப்பும் அறிவிக்கப்பட்டது. ஆனால், தேர்வில் பலர் முறைகேடாக மதிப்பெண் பெற்றிருப்பதாக, டி.ஆர்.பி.,க்கு
கடிதங்கள் வந்தன. இதுகுறித்து, டி.ஆர்.பி., உறுப்பினர் செயலர், உமா விசாரணை நடத்தினார். அதில், பல தேர்வர்கள் முறைகேடு செய்து, மதிப்பெண்பெற்றது கண்டுபிடிக்கப்பட்டது.


இதையடுத்து, தேர்வு முடிவுகளை ரத்து செய்து, டி.ஆர்.பி.,யின் பொறுப்பு தலைவர், ஜெகனாதன் உத்தரவிட்டார். தொடர்ந்து, அனைத்து தேர்வர் களின் விடைத்தாள் நகல்களும், விடைக்குறிப்பு களும் இணையதளத்தில் வெளியிட பட்டன. முடிவில், தேர்வர்கள் தங்கள் விடைத் தாள்களை... தாங்களே மதிப்பிட்டு பார்த்ததில், 200 பேருக்கு, அவர்களின் விடைத் தாளில் உள்ளதை விட, பட்டிய லில் அதிக மதிப்பெண் பெற்றது தெரிய வந்தது.


இதுகுறித்து, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலக, குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து, அரசு பள்ளி ஆசிரியர், தனியார் தேர்வு பணி நிறுவன ஊழியர் உட்பட, ஐந்து பேரை கைது செய்து உள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. துறை ரீதியாக விசாரணை நடத்த, டி.ஆர்.பி.,
தலைவர் பதவியில், சீனிவாசன் என்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.


இந்நிலையில், பாலிடெக்னிக் தேர்வு ஊழல் பிரச்னை முடியாததால், அரசு கல்லுாரிகளில், உதவி பேராசிரியர் பணியில், 1,883 இடங்கள் மற்றும் வேளாண் பயிற்றுனர் பணியிடங் களுக்கான தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டு உள்ளன. அரசு பள்ளி சிறப்பு ஆசிரியர் பணியிடத்துக்கு நடந்த தேர்வின் முடிவுகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

வேலைவாய்ப்பு: திருவண்ணாமலை நீதிமன்றத்தில் பணி!

திருவண்ணாமலை நீதிமன்றத்தில் காலியாக உள்ள அலுவலக 
உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 10

பணியின் தன்மை: அலுவலக உதவியாளர், காவலர்

வயது வரம்பு: 18 – 30க்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: எட்டாம் வகுப்புத் தேர்ச்சி

கடைசித் தேதி: 09.02.2018

மேலும் விவரங்களுக்கு http://ecourts.gov.in/sites/default/files/OA.pdf என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு, 'நீட்' மாதிரி நுழைவு தேர்வு!!!

பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு, நீட், ஜே.இ.இ., நுழைவு தேர்வுக்கு, மாதிரி தேர்வு

நடத்த, தலைமை ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர்.பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், தேசிய உயர்கல்வி நிறுவனங்களில், இன்ஜினியரிங் சேரவும், அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிக்கவும், நுழைவு தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டும்

.
சிறப்பு பயிற்சி

தனியார் பள்ளிகளில், நுழைவு தேர்வுக்கு, ஒன்பதாம் வகுப்பு முதல், மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் தரப்படுகின்றன. ஆனால், அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் கிடைப்பது இல்லை. இதையடுத்து, தமிழக அரசின் சார்பில், 412 மையங் களில், இலவச நீட் பயிற்சி அறிவிக்கப்பட்டது; 100 மையங்களில் மட்டுமே, பயிற்சி அளிக்கப்படுகிறது.

வினாத்தாள்

எனவே, மற்ற பள்ளிகளின் மாணவர்கள் மருத்துவம் மற்றும் இன்ஜினியரிங்கில் சேர வசதியாக, அவர்களுக்கு பள்ளி ஆசிரியர்கள் இணைந்து, சிறப்பு பயிற்சி அளிக்க முடிவு செய்துள்ளனர். தனியார் பயிற்சி நிறுவனங் களிடம், மாதிரி வினாத்தாள்களை பெற்று, தங்கள் பள்ளி மாணவர்களுக்கு, பயிற்சி தேர்வுகள் நடத்த, நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ஆதார் எண் பெற சிறப்பு முகாம்

பள்ளி மாணவர்களுக்கு ஆதார் எண் பெற, சான்றிதழ் விபரங்களை பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், போலி மாணவர்கள் பட்டியலை தடுப்பது, நலத்திட்டங்களை உரிய மாணவர்களுக்கு வழங்குவது, மாணவர், ஆசிரியர் விகிதாச்சாரத்தை சரியாக நிர்ணயிப்பது போன்றவற்றுக்கு, ஆதார் எண்ணை பயன்படுத்த வேண்டும் என, ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்காக, அனைத்து மாணவர்களின் ஆதார் எண்களை சேகரிக்கும் பணி நடந்து வருகிறது.இந்நிலையில், ஆதார் எண் இல்லாத மாணவர்கள், ஆதார் பதிவு செய்ய, இன்று முதல் சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பங்கேற்கும் மாணவர்கள், வீட்டு முகவரியுடன் கூடிய பள்ளி அடையாள அட்டை, பள்ளிகள் வழங்கிய அங்கீகார சான்றிதழ், பிறப்பு சான்றிதழ், ரேஷன் அட்டை, பாஸ்போர்ட் மற்றும் வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றில், ஏதேனும் ஒன்றை ஆவணமாக பயன்படுத்தலாம் என, வழிகாட்டுதல் தரப்பட்டுள்ளது.



போலியை நீக்க உத்தரவு

பள்ளிகளில், மாற்று சான்றிதழ் பெற்ற மாணவர்களின் விபரங்களை, 'எமிஸ்' இணையதளத்தில் இருந்து நீக்கும்படி, தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் சரியான விபரங்களை சேகரிக்க, அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கும், பள்ளிக்கல்வி மற்றும் தொடக்க கல்வி இயக்குனரகங்கள் உத்தரவிட்டுள்ளன.

இதன்படி, மாணவர்களின் பெயர், ஆதார் எண், பெற்றோர் பெயர், மாணவர்களின் மொபைல் எண், ரத்தப்பிரிவு உள்ளிட்ட விபரங்களை, கல்வி மேலாண்மை தகவல் தொகுப்பான, 'எமிஸ்' இணையதள தொகுப்பில் சேகரிக்கும்படி, தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

இதையடுத்து, அனைத்து மாணவர்களின் விபரங்களை, எமிஸ் இணையதளத்தில் சேகரித்து வருகின்றனர். இந்த தகவல் தொகுப்பில், பல பள்ளிகளில், மாற்று சான்றிதழ் வாங்கி சென்ற மாணவர்களின் விபரங்கள், போலியாக இடம் பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது.எனவே, அனைத்து பள்ளிகளும், எமிஸ் விபரங்களை சரிபார்த்து, பள்ளிகளில் இருந்து வேறு இடங்களுக்கு சென்ற, மாணவர் விபரங்களை உடனே நீக்கும்படி, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

தேசிய மாணவ விச்ஞானிகளாக அரசு பள்ளி மாணவர்கள் தேர்வு!!!

                                     

ஆதார் அடையாள ஆவணம் மட்டுமே: ஆதார் ஆணையம்!!!

புதுடில்லி: ஆதார் அடையாள ஆவணம் மட்டுமே
என ஆதார் ஆணையம், விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து இந்திய பிரத்யேக அடையாள ஆணையத்தின் (யு.ஐ.டி.ஏ.ஐ.,) சி.இ.ஓ., அஜய் பூஷன் பாண்டே டுவிட்டரில் அளித்த பதிலில் தெரிவித்ததாவது: ஆதார் விவரங்களில் கை ரேகை பதிவு, கண் விழி படலம் மற்றும் புகைப்படம் மட்டுமே பதிவுசெய்யப்படுகிறது. இதன்மூலம் போலி அடையாள ஆவணம் உருவாக்கப்படுவது தடுக்கப்படும்.

வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்தால் கணக்கு விவரங்களை யு.ஐ.டி.ஏ.ஐ.,யால் பார்க்க முடியாது. ஆதார் அடையாள ஆவணம் மட்டுமே. வங்கி கணக்கை மத்திய அரசு முடக்கும் என்ற அச்சம் மக்களுக்கு வேண்டாம். ஆதார் தகவல்கள் எதுவும் கசியவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

February 2018 Calendar

                                                             

களமிறங்கிய பிஎஸ்என்எல்: 8 அதிரடி திருத்தங்கள்....

                                                                               
 பிஎஸ்என்எல் நிறுவனம் சில கால இடைவெளியில் சலுகைகள் வழங்காமல்
இருந்து வந்த நிலையில், தற்போது தனது 8 ரீசார்ஜ் திட்டங்களில் அதிரடி திருத்தங்களை மேற்கொண்டுள்ளது.

பிஎஸ்என்எல் ரூ.109 திட்டம்:
ரூ.109 ரீசார்ஜ் மொத்தம் 25 நாட்களுக்கு செல்லுபடியாகும். 1536 எம்பி அளவிலான 3ஜி டேட்டா வழங்கப்படுகிறது.


பிஎஸ்என்எல் ரூ.198 திட்டம்:
ரூ.198 ரீசார்ஜ் 1 ஜிபி தினசரி டேட்டா, 24 நாட்களுக்கு செல்லுபடியாகும் விதத்தில் வழங்கப்படுகிறது.

பிஎஸ்என்எல் ரூ.291 திட்டம்:
ரூ.291 ரீசார்ஜ் நாள் ஒன்றிற்கு 1.5 ஜிபி அளவிலான டேட்டாவை 25 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்குகிறது.

பிஎஸ்என்எல் ரூ.333 திட்டம்:
ட்ரிபிள் ஏஸ் திட்டம் என்று அழைக்கப்படும் இது தினசரி 1.5 ஜிபி அளவிலான அதிவேக டேட்டாவை வழங்குகிறது. இது 41 நாட்கள் செல்லுபடியாகும்.

பிஎஸ்என்எல் ரூ.444 திட்டம்:
ரூ.444 என்கிற டேட்டா ரீசார்ஜ் திட்டமானது வரம்பற்ற இணைய தரவை 60 நாட்களுக்கு வழங்குகிறது. இந்த திட்டம் தினசரி 1.5 ஜிபி அதிவேக இண்டர்நெட் வரம்பை கொண்டுள்ளது.

பிஎஸ்என்எல் ரூ.549 திட்டம்:
ரூ.549 ப்ரீபெய்ட் திட்டம், 60 நாட்களுக்கு செல்லுபடியகும். நாள் ஒன்றிற்கு 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகின்றது.

பிஎஸ்என்எல் ரூ.561 திட்டம்:
ரூ.561 ரீசார்ஜ், தினசரி 1ஜிபி அளவிலான 3ஜி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டம் 80 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது.

பிஎஸ்என்எல் ரூ.821 திட்டம்:
ரூ.821 திட்டம் மொத்தம் 120 நாட்களுக்கு செல்லுபடியாகும். நாள் ஒன்றிற்கு 1ஜிபி அளவிலான டேட்டா வழங்கப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
இலவச சேவைகளை நிறுத்திய பிஎஸ்என்எல்: காரணம் என்ன??
ரூ.200-க்கும் குறைவான விலையில் சிறந்த ரிசார்ஜ் ப்ளான் எது?
பிஎஸ்என்எல் டாப் டக்கர் ரீசார்ஜ் திட்டங்கள்: விவரங்கள் உள்ளே!!
ஃபேஸ்புக் மூலம் இலவச இணைப்பு; பி.எஸ்.என்.எல் அறிவிப்பு
பி.எஸ்.என்.எல் சேவையால் நாட்டிற்கே ஆபத்தா? அதிர்ச்சி தகவல்

அரசை நம்பும் மக்கள்: இந்தியா 3ஆவது இடம்!!!

அரசு மீது அதிகம் நம்பிக்கை உடைய மக்களைக் கொண்ட நாடுகளின்

பட்டியலில் இந்தியா 3ஆவது இடத்தில் உள்ளதாக உலக நம்பிக்கைக் கழகம் வெளியிட்ட அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது. முதலிடத்திலிருந்து தற்போது மூன்றாவது இடத்திற்கு இந்தியா சரிந்துள்ளது.

உலக நம்பிக்கைக் கழகம் சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வில் இந்த விவரங்கள் தெரியவந்துள்ளன. 74 புள்ளிகளுடன் சீனா முதலிடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு 67 புள்ளிகளுடன் 3ஆவது இடத்தில் இருந்த சீனா தற்போது முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்தோனேசியா 71 புள்ளிகளுடன் 2ஆவது இடத்திலும், இந்தியா 68 புள்ளிகளுடன் 3ஆவது இடத்திலும் உள்ளது. கடந்த ஆண்டு இந்தியா 72 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.,

இந்தியாவைத் தொடர்ந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 66 புள்ளிகளுடன் 4ஆவது இடத்திலும் , சிங்கப்பூர் 58 புள்ளிகளுடன் 5ஆவது இடத்திலும் உள்ளன.

பணமதிப்பழிப்பு, மானியம் ரத்து, ஆதார் கட்டாயம், ஜிஎஸ்டி என போன்ற கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டபோதிலும் அரசு மீது அதிகம் நம்பிக்கையுடைய மக்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

பிறப்பு, இறப்பு சான்றிதழுக்கு கட்டணம் உயர்வு!

தமிழ்நாட்டில் பொதுமக்களின் பிறப்பு, இறப்புகளைப் 
பதிவு செய்வது இலவசமாகச் செய்யப்பட்டும், சில சேவைகளுக்கு மட்டும் கட்டணம் வசூலிக்கப்பட்டும்வருகிறது. இந்நிலையில் தற்போது பிறப்பு, இறப்புகளைப் பதிவு செய்வதில் கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பதாகச் சுகாதாரத் துறை இயக்குனர் குழந்தைச்சாமி தெரிவித்துள்ளார்.

"தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றில் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் இலவசமாக வழங்கப்பட்டுவருகிறது. மேலும் ஆன்லைனிலும் பதிவு செய்யக் கட்டணம் கிடையாது.

மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகள் நலம்பெற்று வீட்டிற்குச் செல்லும்போது பிறப்புச் சான்றிதழ் இலவசமாக வழங்கப்படுகிறது. இதனால் ஏழை மக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை. ஒரு மாதம் வரைக்கும் பிறப்பு, இறப்புகளைப் பதிவு செய்யாமல் அதன் பிறகு பதிவு செய்பவர்களுக்கு கட்டணம் ரூ.2இல் இருந்து ரூ.100 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது.

30 நாட்களுக்கு மேல் ஒரு வருடம் வரை பதியாமல் இருப்பவர்களுக்கு ரூ.5இல் இருந்து ரூ.200 ஆகவும், ஒரு வருடத்திற்கு மேல் பதியாமல் இருப்பவர்களுக்கு ரூ.10இல் இருந்து ரூ. 500 ஆகவும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் குழந்தை பிறந்து ஒரு வருடத்திற்கு மேல் பெயரைப் பதிவு செய்யாமல் இருப்பவர்களுக்கான கட்டணம் ரூ.5இல் இருந்து ரூ.200 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது.

சிலர் பிறந்த தேதியை மாற்றிப் பதிவு செய்வதாலும், பிறப்பு, இறப்புகளைப் பதிவு செய்யும்போது, முறைகேடுகளில் ஈடுபடுவதாலும் கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது.

மத்திய அரசு ஒப்புதலுடன் கடந்த அக்டோபர் மாதம் முதல் கட்டண உயர்வு நடைமுறையில் இருக்கிறது. அடுத்த மாதம் (பிப்ரவரி) முதல் உலகில் எந்தப் பகுதியில் இருந்தாலும் பிறப்பு, இறப்பு சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்தக் கட்டண உயர்வு ஏழை எளிய மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாது" என்று குழந்தைச்சாமி தெரிவித்துள்ளார்.

TNPSC CCSE-4 HALL TICKET PUBLISHED


Click here
https://www.tnpsconline.com/tnpscadmitcarden232017live/FrmLogin232017.aspx

+2 மாணவர்களுக்கு இரண்டு கட்டமாக செய்முறைத் தேர்வு-கல்வித்துறை!!!

SSA - PINDICS & QMT Regarding SPD Proceedings..



24/1/18

அரசுப் பள்ளிகளில் பழுதடைந்த பொருள்கள்: மாதஇறுதிக்குள் புதுப்பிக்க அறிவுறுத்தல்

அரசுப் பள்ளிகளில் பழுதடைந்து பயன்பாட்டில் இல்லாத நாற்காலி, மேசை, 'பெஞ்ச்-டெஸ்க்' போன்ற பொருள்களை இந்த மாத இறுதிக்குள் பழுது நீக்கிப் பயன்படுத்த வேண்டும்என பள்ளிக் கல்வி இயக்குநர் ரெ.இளங்கோவன் அறிவுறுத்தியுள்ளார்.இது குறித்து அவர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் நாற்காலி, மேசை, பெஞ்ச், 'டெஸ்க்' போன்றவை உபரியாக இருந்தால், அவற்றை தலைமையாசிரியரின் ஒப்புதலுடன் தேவைப்படும் வேறு அரசுப் பள்ளிகளுக்கு மாற்றி வழங்குதல் வேண்டும்; இது தொடர்பாக இருப்புப் பதிவேட்டில் இரண்டு பள்ளிகளுமே பதிவு மேற்கொள்ள வேண்டும்.

இதற்கான உத்தரவினை முதன்மைக் கல்வி அலுவலர்களே வழங்கலாம். பயன்பாட்டில் இல்லாமல் பழுதடைந்த நிலையில் உள்ள மேசை-நாற்காலி, மாணவர்கள் அமரும் 'பெஞ்ச்- டெஸ்க்' உள்ளிட்ட பொருள்களை பழுது நீக்கம் செய்து பயன்படுத்தலாம். இதற்கான செலவினத்தை பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக நிதி அல்லது அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் பள்ளி மானிய நிதியிலிருந்து (நஸ்ரீட்ர்ர்ப் எழ்ஹய்ற்) மேற்கொள்ளலாம்.

ஏலம் மூலம் விற்பனை செய்யலாம்: முற்றிலும் பழுது நீக்கம் செய்தாலும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள பொருள்களைப் பிரித்தெடுத்து பள்ளித் தலைமை ஆசிரியர், உதவித் தலைமை ஆசிரியர் அல்லது மூத்த ஆசிரியர் கொண்ட குழு ஒன்றை அமைத்து அந்தப் பொருள்களைஅரசு விதிகளின்படி குறைந்தபட்ச விற்பனை மதிப்பை நிர்ணயம் செய்து அதற்கு குறையாத வகையில் ஏல முறையில்விற்பனை செய்து அரசுக் கணக்கில் செலுத்தலாம்.

இந்த நடைமுறையைப் பின்பற்றி பள்ளியில் வகுப்பறை, வளாகத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். அனைத்து அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளிலும் இந்தப் பணியினை ஜனவரி மாதத்துக்குள் முடிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டும் என அதில் கூறியுள்ளார்.

சர்வர் பழுதால் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் பதிவெண் திருத்த ஒரு வாரம் கெடு நீட்டிப்பு

INSPIRE AWARD 2017 - 18 Selected Students List Published ( All District )

அரசுப்பள்ளியில் பயிலும் கிராமப்புற ஏழை எளிய மாணவர்களும் பயன்பெறும் வகையில் கணினி கல்வியை இலவசமாக கற்று கொடுக்க முதல்வர் தனிபிரிவுக்கு- மனு!!!

அரசு அலுவலகங்களில் பொது மக்கள் கொடுக்கும் தபாலுக்கு கீழ்கண்டவாறு ஒப்புதல் அளிக்க வேண்டும்!!!

மண்டல அளவிலான உண்ணாவிரதப் போராட்டம்!!!

ALM-படைப்பாற்றல் கற்றல் நிலைகள் பாடவாரியாக ஒப்பீட்டு படிவம்!!!

13 ஆயிரியர்கள் விரைவில் நியமனம்!!!(பத்திரிகை செய்தி)