யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

19/2/18

துப்பாக்கிச் சூடு: மாணவர்களைக் காப்பாற்றிய தமிழ்ப் பெண்!

                                 

அமெரிக்காவில் சில தினங்களுக்கு முன்பு பள்ளி ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மாணவர்களைக் காப்பாற்றிய தமிழ்ப் பெண்ணுக்குப் பாராட்டுகள் குவிந்துவருகின்றன.

ஃப்ளோரிடா மாகாணத்திலுள்ள மார்ஜரி ஸ்டோன்மேன் டக்ளஸ் உயர்நிலைப் பள்ளியில் பிப்ரவரி 14ஆம் தேதி திடீரென நுழைந்த முன்னாள் மாணவர் நிக்கோலஸ் க்ரூஸ் அங்கிருந்தவர்களை நோக்கி வெறித்தனமாகத் துப்பாக்கிச் சூடு நடத்தினார்.

இதனால் மாணவர்கள், ஆசிரியர்கள் என அனைவரும் அலறியடித்து ஓடினர். இந்தச் சம்பவத்தில் மாணவர்கள் உட்பட 17 போ் உயிரிழந்தனர். 50 போ் காயடைந்தனா். இந்தச் சம்பவம் ஃப்ளோரிடாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அப்பள்ளியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சாந்தி விஸ்வநாதன் என்ற ஆசிரியை 2ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அல்ஜீப்ரா பாடம் எடுத்துவருகிறார். சம்பவத்தன்று பாடம் எடுத்துக்கொண்டிருந்த சாந்தி சுதாரித்துக்கொண்டு, தனது வகுப்பறையின் கதவு, ஜன்னல்களை மூடி, மாணவர்களை பெஞ்சிக்கு கீழே அமைதியாக அமருமாறு கட்டளையிட்டார். ஆசிரியர் சொன்னபடி மாணவர்களும் பெஞ்சுக்குக் கீழே அமர்ந்தனர்.

அப்போது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு அந்த வகுப்பறை வழியே நிக்கோலஸ் க்ரூஸ் சென்றுள்ளார். கதவுகள் அடைக்கப்பட்டு அமைதியாக இருந்ததால் கண்டுகொள்ளாமல் வகுப்பறையைத் தாண்டிச் சென்றுள்ளார். இதனால் அங்கிருந்த இரண்டாம் வகுப்பு மாணவர்கள் தப்பினர்.

இந்நிலையில், பள்ளிக்கு வந்த அதிரடிப்படை போலீசார் மாணவர்கள் பதுங்கியிருந்த கதவைத் திறக்கக் கூறியுள்ளனர். கதவைத் திறக்க மறுத்த ஆசிரியர் முடிந்தால் கதவை உடைத்து உள்ளே வாருங்கள் என்று கூறியுள்ளார்.

பின்னர் கதவை உடைத்து உள்ளே சென்ற போலீசார் மாணவர்களை மீட்டு வெளியே அனுப்பினர்.

துப்பாக்கிச் சூடு நடக்கும்போது அனைவரும் அலறியடித்து ஓடிய நிலையில் வகுப்பறையைப் பூட்டி மாணவர்களின் உயிரைக் காப்பாற்றிய ஆசிரியருக்குப் பெற்றோர்களும் ஆசிரியர்களும் பாராட்டுகள் தெரிவித்தனர். சமூக வலைதளங்களிலும் பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிந்தவண்ணம் உள்ளன. உயிரிழந்த மாணவர்களுக்கும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

12 லட்சம் இளைஞர்களுக்குப் பயிற்சி!

திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் அடுத்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 12 லட்சம் கிராமப்புற இளைஞர்களுக்கு தொழில்நுட்பப் பயிற்சியளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஐந்து ஆண்டுகளுக்கான இத்திட்டத்தின் முதல் ஆண்டில் 60,000 பேருக்கும், இரண்டாம் ஆண்டில் 1.5 லட்சம் இளைஞர்களுக்கும் முதற்கட்டமாகப் பயிற்சி வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழக இளைஞர்களில் சுமார் 59 சதவிகிதத்தினர் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்களாக இருப்பதால் கிராமப்புற இளைஞர்களை மையமாக வைத்து இந்தத் திறன் மேம்பாட்டுப் பயிற்சித் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் ஆண்டு ஒன்றுக்கு ரூ.800 கோடி வரையில் செலவிடப்படும் எனவும், இதற்கான நிதி மத்திய அரசு மற்றும் உலக வங்கி உள்ளிட்ட நிதி நிறுவனங்களிடமிருந்தும் பெறப்படும் என்று கூறப்படுகிறது.


இதுகுறித்து தமிழக மாநில தொழிலாளர் துறைச் செயலாளரான மங்கத் ராம் சர்மா கூறுகையில், “திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்கான மிகப்பெரிய திட்டம் ஒன்றை நாங்கள் செயல்படுத்துகிறோம். இப்பிரிவில் தமிழகம் எப்போதுமே முன்னிலையில் இருக்கிறது. இத்திட்டத்திற்கு மத்திய அரசிடமிருந்து கிடைக்கும் நிதியுதவி ஆண்டுக்கு ரூ.150 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்தத் திறன் மேம்பாட்டுப் பயிற்சித் திட்டத்திற்கான செலவில் மத்திய அரசின் பங்கு 25 சதவிகிதமாக இருக்கிறது. மேலும், மாநில அரசின் சார்பாக இத்திட்டத்தில் செலவிடப்படும் தொகை குறித்த விவரங்கள் வரவிருக்கும் மாநில பட்ஜெட்டில் வெளியிடப்படும்” என்றார்.

லோக்சபா தேர்தலுக்கு தயாராகி வீட்டீர்களா?.பிரதமர் மோடியிடம் கேள்வி கேட்ட பள்ளி மாணவன்

மாணவர்களின் தேர்வு அச்சத்தை நீக்கி ஊக்குவிக்கும் வகையில் டில்லியில் சிறப்பு நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இதில் பள்ளி மாணவ மாணவிகள் பலர் கலந்துகொண்டனர். பிரதமர் நரேந்திர மோடி இதில் கலந்தகொண்டு மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடினார். மாணவர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.
அப்போது, பிளஸ் 1 மாணவர் கிரிஷ் சிங் பிரதமர் மோடியை நோக்கி ஒரு கேள்வி எழுப்பி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். ''பள்ளி மாணவனாகிய எனக்கு பொதுத் தேர்வு நடைபெறவுள்ளது. அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தல் நடக்கவுள்ளது. அதற்கு நீங்கள் தயாராகி விட்டீர்களா?' என கேள்வி எழுப்பினான்.
இதற்கு மோடி பதில் கூறுகையில், '' நான் தாமதமாகவே அரசியலுக்குள் நுழைந்தேன். அரசியல் சூழ்நிலையில் நான் இருந்தாலும் இயல்பாக நான் அரசியல்வாதி கிடையாது. அரசியலில் நான் அந்நியனாகவே உணர்கிறேன்.
1.25 கோடி மக்களின் ஆதரவு எனக்கு உள்ளது. எனது ஆற்றலை மக்களுக்கு செலவு செய்ய வேண்டும். உங்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை தான் பொதுத்தேர்வு. எனக்கோ 24 மணி நேரமும் தேர்வு தான்'' என்றார்.

கரும்பலகைக்கு டாட்டா ... கம்ப்யூட்டர் வழி கல்வியில் அசத்தும் அரசு பள்ளி

கரும்பலகையில் சொல்லி கொடுப்பதற்கு பதில் கம்ப்யூட்டரில் பாடம் நடத்தி வரும் நெல்லை அரசு பள்ளியை பொது மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
நெல்லை மாவட்டத்தில் பல்வேறு தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை ஏற்படுத்தப்பட்டு மாணவ, மாணவிகளுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் செல்கோ இந்தியா சோலார் நிறுவனத்தின் சார்பில் பாலமடை ஊராட்சி ஓன்றிய நடுநிலைப்பள்ளி, ராதாபுரம் ஒன்றியம் சிலந்திகுளம் நடுநிலைப்பள்ளிகளிலும் இலவசமாக சோலார் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டன.
பாலமடை ஊராட்சி ஓன்றிய பள்ளியில் நடந்த விழாவில் ஆட்சியர் சந்தீப் தந்தூரி இந்த வகுப்பறைகளை திறந்து வைத்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், சமச்சீர் பாடத்திட்டம் வகையில் மாணவ, மாணவிகளுக்கு கம்ப்யூட்டர் மூலம் கற்று கொடுக்கப்படுகிறது. இதற்கான மின்சாரம் சோலார் மூலம் கிடைக்கிறது. பாடங்கள் படங்கள் மூலம் நடத்தப்படுவதால் மனதில் எளிதாக பதியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சந்திரசேகரன் கூறுகையில், நெல்லை மாவட்டத்தில் ஸ்மார்ட் வகுப்பறை வசதி சில பள்ளிகளில் இருந்தாலும் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை இந்த பள்ளியில் முதன் முறையாக தொடங்கப்பட்டுள்ளது.
அதுவும் சோலார் வகுப்பறை இந்தப் பள்ளியில்தான் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்களுக்கு எந்த நேரமும் கல்வி கற்பிக்க முடியும். மாணவர்கள் விரும்பிய பாடங்களை மின்சாரம் உபயோகிக்காமல் படிக்கலாம். இதனால் அவர்களின் கற்கும் திறன் அதிகரிக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

999/-க்கு ஒரு வருடம் அளவில்லா INTERNET - 181 நாட்களுக்கு அளவில்லா அழைப்புகள் - BSNL அதிரடி அறிவிப்பு

பிஎஸ்என்எல் நிறுவனம் தனது ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு ரூ.999 என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.இதன்படி, ஓராண்டுக்கு அளவில்லா டேட்டா சேவையும், 181 நாட்களுக்கு அளவில்லா அழைப்புகளையும்
மேற்கொள்ள முடியும்.
தனியார் நிறுவனங்களின் போட்டியை சமாளிக்கும் வகையில், அரசு துறையைச் சேர்ந்த பிஎஸ்என்எல் நிறுவனமும் தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளைத் தொடர்ந்து வழங்கி வருகிறது.அந்த வகையில், பிஎஸ்என்எல் நிறுவனம் தனது ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு ரூ.999 என்ற திட்டத்தை அறிவித்துள்ளது.

இதன்படி, ஓராண்டுக்கு அளவில்லா டேட்டா சேவையும், 181 நாட்களுக்கு அளவில்லா உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளையும் (லோக்கல், எஸ்டிடி) மேற்கொள்ள முடியும். 181 நாட்கள் முடிந்தபிறகு ஒவ்வொரு வாய்ஸ் கால் அழைப்புகளுக்கும் நிமிடத்துக்கு 60 பைசா கட்டணமாக வசூலிக்கப்படும.பிஎஸ்என்எல் நிறுவனம் அண்மையில் ரூ.1,099 என்ற திட்டத்தை அறிவித்தது. இதில், 84 நாட்களுக்கு அளவில்லா டேட்டா சேவையும், அளவில்லா அழைப்புகளையும் மேற்கொள்ள முடியும் என்று அறிவித்திருந்தது குறிப்பிடத் தக்கது.

18/2/18

பட்டதாரி ஆசிரியர்களை +2 பொதுத்தேர்வில் பணியமர்த்தக் கூடாது!!!

தமிழக அரசு ஊழியர்கள் ஆசிரியர்களை தொடர்ந்து வஞ்சிக்கும் தமிழக அரசு CPS வல்லுநர் குழுவிற்கு மீண்டும் மீண்டும் மீண்டும் கால நீட்டிப்பு

ஜாக்டோ ஜியோ நடத்திய வீரஞ்செறிந்த போராட்டத்தின் விளைவாக நியாமான கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தியதால் நமது போராட்டத்தில் நீதிமன்றம் தலையிட்டு ஏழாவது ஊதியக் குழுவினை அமல்படுத்துவதற்கு தமிழக அரசிற்கு ஆணையிட்டது.  இருந்தாலும் 1.10.2017 முதல்தான் ஊதியக் குழுவின் பரிந்துரைகள் அமல்படுத்துப்பட்டதால், 1.1.2016 முதல் கிடைக்க வேண்டிய ஊதியத்தினை இழந்து, 21 மாத கால ஊதியக் குழுவினை நிலுவைத் தொகையினை தமிழக அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் இன்றும் பெற இயலாமல் உள்ளனர்.

ஜாக்டோ ஜியோ காலவரையற்ற போராட்டம் தொடர்பான வழக்கு, சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, நேரில் வழக்கில் ஆஜரான அரசின் தலைமைச் செயலாளர் அவர்கள், மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் அவர்களின் சட்டமன்ற 110 விதியின்கீழ் 1.4.2003்க்கு்ப பிறகு அரசுப் பணியில் சேர்ந்த அனைவருக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தினையே தொடர்வதற்காக அமைக்கப்பட்ட வல்லுநர் குழு தனது அறிக்கையினை 30.11.2017க்குள் அளிக்கும் என்றும் அதன்மீது தமிழக அரசு மேல் நடவடிக்கையினை மேற்கொள்ளும் என்று எழுத்துப்பூர்வமாகவும் நீதிமன்றத்தில் விசாரணையின்போது நீதியரசர்கள் முன்பாகவும் தெரிவித்தார்.  ஆனால், இதுவரை நடந்து கொண்டிருப்பது என்ன?  தொடர்ந்து அந்த CPS வல்லுநர் குழுவிற்கு கால நீட்டிப்பு என்பது அளிக்கப்பட்டு வருகிறது.  தமிழக அரசு நீதிமன்றத்தில் தான் அளித்த வாக்குறுதியினைக் கூட மதிக்காமல் நீதிமன்றத்தினையே அவமதித்து வருகிறது. 

30.11.2017க்குப் பிறகு CPS வல்லுநர் குழுவிற்கு இருமுறை ஒரு மாதம் ஒரு மாதம் என்று நீட்டிப்பு வழங்கிய அரசு, இன்றைய தினம் இரண்டு மாதங்களுக்கு அந்த வல்லுநர் குழுவிற்கு, அதாவது 31.03.2018 வரை நீட்டிப்பு வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளது  (அரசாணை எண் 51, நிதித் துறை, நாள் 15.02.2018), 

ஆனால் இந்த வல்லுநர் குழுவின் தலைவர் அவர்கள், குழுவின் அறிக்கை விரைவில் அரசிடம் தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்ததாக கடந்த வாரத்தில் இந்து தமிழ் நாளிதழில் செய்தி வெளியாகி இருந்தது.  தொடர்ந்து இந்த CPS வல்லுநர் குழுவிற்கு கால நீட்டிப்பு வழங்கி அரசு நம்மை வஞ்சித்து வருகிறது.

தோழர்களே நாம் இன்னும் பொறுமையாக இருந்தால், இந்த வல்லுநர் குழு என்பது எக்காலத்திலும் தமிழக அரசிடம் அறிக்கையினை தாக்கல் செய்யாமல் போய்விடக் கூடிய நிலை உருவாகும்.  இதனால்தான் ஜாக்டோ ஜியோ 6.9.2017 அன்றைய தினமே ஈரோட்டில் முடிவெடுத்து, அரசு எந்த கால அவகாசம் கொடுத்தாலும் நமது கோரிக்கைகளை நிறைவேற்றாது என்பதானல்தான், 7.9.2017 முதல் காலவரையற்ற போராட்டத்தினை மேற்கொள்வது என்று ஒருமித்த முடிவினை எடுத்து களம் கண்டோம்.  நமது போராட்டத்தினால் நீதிமன்றமே நமது கோரிக்கைகளுக்கான தலைமைச் செயலாளரை நேரில் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, காலக்கெடுவினை விதித்து, ஊதியக் குழுவினைப் பெற்றோம்.

நமது வாழ்வாதாரக் கோரிக்கையான அனைவருக்கும் பழைய ஓய்வூதியத் திட்டம் என்ற இலக்கினை நோக்கி ஜாக்டோ ஜியோ என்ற கூட்டமைப்போடு இணைந்து தமிழகத்திலுள்ள அனைத்து அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் ஓரணியில் மீண்டும் போராட்ட களம் காண முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் முடிவின் அடிப்படையில், நமது கோரிக்கைகளை வென்றெடுப்பதற்காக வரும் 21.02.2018 முதல் சென்னையில் தொடர் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.  நமது கோரிக்கைகளை வென்றெடுக்கும் வரை தொடர் மறியலில் இருந்து மீளப் போவதில்லை என்ற நெஞ்சுறுதியோடு சபதம் மேற்கொண்டு, தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் சென்னையில் வரும் 21.02.2018 முதல் நடைபெறவுள்ள தொடர் மறியலுக்கான ஆயத்தப் பணிகளை முழு வீச்சில் மேற்கொண்டு வருகின்றனர். 

தோழர்களே, நமது வாழ்வாதாரக் கோரிக்கையினை வென்றெடுக்க தமிழகத்தின் அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களின் நம்பிக்கைக் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோவோடு இணைந்து நாமும் களம் காணத் தயாராவோம்.  இந்த வாய்ப்பினை நழுவ விட்டால் வரலாறு நம்மை மன்னிக்காது-அனைவருக்கும் பழைய ஓய்வூதியத் திட்டம் என்ற கனி எட்டாமல் போய்விடும்.

எனவே, தோழர்களே இந்த இறுதி வாய்ப்பினைப் பயன்படுத்தி ஜாக்டோ ஜியோ சார்பாக வரும் 21.02.2018 முதல் சென்னையில் நடைபெறவுள்ள தொடர் மறியல் போராட்டத்தில் நாமும் சங்கமிப்போம்.  கோரிக்கைகளை வென்றெடுப்போம்.

பிஎஸ்என்எல் ரூ.999 ப்ரீ பெய்டு திட்டம் அறிமுகம்

பிஎஸ்என்எல் நிறுவனம் தனது ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு ரூ.999 என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.இதன்படி, ஓராண்டுக்கு அளவில்லா டேட்டா சேவையும், 181 நாட்களுக்கு அளவில்லா அழைப்புகளையும் மேற்கொள்ள முடியும்.
தனியார் நிறுவனங்களின் போட்டியை சமாளிக்கும் வகையில், அரசு துறையைச் சேர்ந்த பிஎஸ்என்எல் நிறுவனமும் தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளைத் தொடர்ந்து வழங்கி வருகிறது.அந்த வகையில், பிஎஸ்என்எல் நிறுவனம் தனது ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு ரூ.999 என்ற திட்டத்தை அறிவித்துள்ளது.
இதன்படி, ஓராண்டுக்கு அளவில்லா டேட்டா சேவையும், 181 நாட்களுக்கு அளவில்லா உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளையும் (லோக்கல், எஸ்டிடி) மேற்கொள்ள முடியும். 181 நாட்கள் முடிந்தபிறகு ஒவ்வொரு வாய்ஸ் கால் அழைப்புகளுக்கும் நிமிடத்துக்கு 60 பைசா கட்டணமாக வசூலிக்கப்படும.பிஎஸ்என்எல் நிறுவனம் அண்மையில் ரூ.1,099 என்ற திட்டத்தை அறிவித்தது. இதில், 84 நாட்களுக்கு அளவில்லா டேட்டா சேவையும், அளவில்லா அழைப்புகளையும் மேற்கொள்ள முடியும் என்று அறிவித்திருந்தது குறிப்பிடத் தக்கது.

இடைநிலை ஆசிரியர் பயிற்சி மாணவர்கள்விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்யலாம்: அரசு தேர்வுத் துறை அறிவிப்பு

கடந்த ஜூன் மாதம் தேர்வெழுதிய இடைநிலை ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் விடைத்தாள் நகலை இன்று (வெள்ளிக்கிழமை) முதல் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யலாம் என அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் வசுந்தராதேவி, வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் தேர்வெழுதி, விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த இடைநிலை ஆசிரியர் பயிற்சி மாணவர்கள், தனித்தேர்வர்கள் விடைத்தாள் நகலை scan.tndge.in என்ற இணையதளத்தில் 16-ம் தேதி (இன்று) முதல் 20-ம் தேதி வரை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.அதைத்தொடர்ந்து, விரும்பினால் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டுக்கு பிப்ரவரி 21 முதல் 23-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மறுகூட்டலுக்கு கட்டணம் ஒரு பாடத்துக்கு ரூ.205. மறுமதிப்பீட்டுக்கு ஒரு பாடத்துக்கு ரூ.505 செலுத்த வேண்டும்.

இதற்கான விண்ணப்பத்தை மேலே குறிப்பிடப்பட்ட இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டணத்தை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சிநிறுவனத்தில் நேரடியாக செலுத்தி ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டும். இவ் வாறு அவர் தெரிவித்துள்ளார்..

சிறப்பு ரயில் பெட்டிகள், சிறப்பு ரயில்களை இனி இணையதளத்திலேயே பதிவு செய்யலாம்♨

சிறப்பு ரயில்பெட்டிகளையோ, சிறப்பு ரயில்களையோ இனி இணையதளத்திலேயே பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
▪திருமணக் குழுக்களுக்கோ, ஆன்மீகச் சுற்றுலாவுக்கோ ஒரு குழுவினரோ தனி மனிதர்களோ ஒட்டுமொத்தமாக ஒரு ரயில்பெட்டியையோ அல்லது அமைப்புகள் சார்பில் சிறப்பு ரயில்களையோ பதிவு செய்ய ரயில் நிலைய முன்பதிவுக் கண்காணிப்பாளரை அணுகி பயணவிவரங்கள் உள்ளிட்டவற்றை குறிப்பிட்டு எழுத்துபூர்வமாக விண்ணப்பிக்க வேண்டியிருந்தது. இந்நிலையில் ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் மூலம் ஒற்றைச் சாளர முறையில் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

மார்ச் 15க்குள் 72 ஆயிரம் மாணவர்களுக்கு மடிக்கணினி – அமைச்சர் செங்கோட்டையன்♨

மார்ச் 15ஆம் தேதிக்குள் 72 ஆயிரம் மாணவர்களுக்கு மடிக்கணிணிகள் வழங்கி அனைத்து பாடங்களும் அதில் இணைக்கப்பட இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
🎯நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக மாணவர்கள் எந்தவிதமான தேர்வுகளையும் எதிர்கொள்ளத் தயாராகி வருவதாகத் தெரிவித்தார்

டி.எம்.சி” என்றால் என்ன தெரியுமா??

Thousand Million Cubic[TMC] ஆயிரம் மில்லியன் கன அடி என்று பொருள்.
ஒரு டிஎம்சி கணக்கெடுப்பு - 1 பில்லியன் கன அடி ஆகும்.
கன அளவு : ஒரு பொருள் எவ்வளவு இடத்தை எடுக்கின்றது என்பதைக் குறிக்கும் ஒரு கணித அளவாகும். 
அப்படியெனில் ஒரு கன அடி என்பது 28.3 லிட்டர் நீருக்கு சமம்.
டிஎம்சி அளவிடும் முறை :
கால்வாயின் குறுக்கே ஒரு சிறிய தடுப்பணையை கட்டி அதில் ஒரு மீட்டருக்கு ஒரு மீட்டர் என்ற அளவில் ஒரு மதகு மட்டும் இருக்கும், மதகை திறப்பதன் மூலம் ஒரு வினாடியில் வெளியேறும் நீரின் அளவை கணக்கிட்டால் போதும். ஒரு மணி நேரத்தில் எத்தனை லிட்டர் நீர் வெளியேறியது என்பதை கணக்கிடலாம்.
டிஎம்சியின் கணக்கீடு மற்றும் அவற்றின் பயன்பாடுகள் :

ஒரு டிஎம்சி எவ்வளவு லிட்டர் - 1 பில்லியன்(100 கோடி) கன அடி.
கடந்த முறை மற்றும் இம்முறை வழங்கப்பட்ட நீரின் அளவு என்ன? மற்றும் அவற்றின் நன்மை தீமைகள் :

கடந்த முறை வழங்கிய டிஎம்சி யின் அளவு - 192 டிஎம்சி.

இம்முறை வழங்கிய டிஎம்சி யின் அளவு  177.25 டிஎம்சி.

கடந்த முறையை விட குறைக்கப்பட்ட 14.75 டிஎம்சி நீரால் தமிழகத்திற்கு 41,767,34,87,232 (சுமார் 41,767 கோடியே 34 லட்சம்) லிட்டர் நீர் இழப்பு ஏற்படும்.

தமிழ் நாட்டின் மொத்த விவசாய விளை பரப்பளவு :
தமிழகத்தில் மொத்தம் 22.3 லட்சம் ஹெக்டேர் பாழ்பட்ட நிலம் இருப்பது வேளாண் பல்கலைக்கழக ஆய்வில் தெரியவந்துள்ளது.

காவிரி நீரால் தமிழ்நாட்டில் பாசனம் பெறும் நிலப்பரப்பு 44,000 சதுர கி.மீ.

காவிரி நீரால் கர்நாடகாவில் பாசனம் பெறும் நிலப்பரப்பு 34,000சதுர கி.மீ.

காவிரி நீரால் புதுச்சேரி பாசனம் பெறும் நிலப்பரப்பு 148 சதுர கி.மீ.

காவிரி கேரளாவில் பாசனம் பெறும் நிலப்பரப்பு 2,800 சதுர கி.மீ.

நெல் பயிர் சாகுபடிக்கு இரண்டிலிருந்து மூன்று நாட்களுக்கு ஒரு முறை ஒரு ஏக்கருக்கு 20,000 முதல் 40,000 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகின்றது.

காவிரி நீரை பகிர்ந்து கொள்வது தொடர்பான இறுதித் தீர்ப்பில் தமிழகத்திற்கு வழங்கும் நீரின் அளவு 14 டிஎம்சி அளவிற்கு குறைக்கப்பட்டுள்ளதால் 1 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான விவசாயம் பாதிக்கும் என்று காவிரி டெல்டா விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

பிளஸ்2 படித்தவுடன் வேலை! : அமைச்சர் செங்கோட்டையன்!

புதிதாகத் தொடங்கப்படவுள்ள பாடத்திட்டங்களினால், பிளஸ்2 முடித்தவுடன்மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் நிலைமை உண்டாகும் எனத் தெரிவித்துள்ளார் தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன்.
தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், இன்று (பிப்ரவரி 17) ஈரோடு மற்றும் திருப்பூரில் நடந்த சில நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். திருப்பூரில் உள்ள பள்ளியொன்றில் அமைக்கப்பட்ட ஆய்வகத்தை, அவர் இன்று திறந்துவைத்தார். அங்கு பயிலும் மாணவர்களுக்கு விருதுகள் வழங்கியதோடு, அப்பள்ளி நூலகத்திற்காக புத்தகங்களையும் அளித்தார். அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய செங்கோட்டையன்,இன்னும் நான்கு மாதத்தில் தமிழகக் கல்வித்துறையில் மாற்றம் உண்டாகும் என்று தெரிவித்தார்.”உலகத் தரத்தில் தமிழகப் பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படவுள்ளது.

 சீருடைகளும் மாறவுள்ளது. அதன்பின், தனியார் பள்ளி மாணவர்களும் அரசுப்பள்ளிகளில் தேடி வந்து சேரும் நிலை உண்டாகும்” என்றார்.இந்த நிகழ்வுக்குப் பிறகு, ஈரோடு மாவட்டம் சித்தோட்டில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் செங்கோட்டையன் கலந்துகொண்டார். அப்போது, பிப்ரவரி 19ஆம் தேதி முதல் பள்ளி மாணவர்களின் மன அழுத்தத்தைப் போக்க 24 மணி நேரமும் செயல்படும் ஹெல்ப் லைன் திட்டம் தொடங்கப்படும் என்று அறிவித்தார். மேலும், புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ள பாடத்திட்டங்களினால், பிளஸ்2 முடித்தவுடன் வேலைவாய்ப்பு கிடைக்கும் நிலைமை உண்டாகும் எனத் தெரிவித்தார்.

மேலும், தமிழக பள்ளிக்கல்வித் துறையில் மாற்றம் செய்து, புதிதாக 72 பாடத்திட்டங்கள் கொண்டுவரப்படும் என்றார் செங்கோட்டையன்.

அரசுப்பள்ளியின் இன்றைய நிலை பற்றி ஒரு கவிதை - வினோதன்

நீர் குடிக்கப் பயமா ?
ஆம், குடித்தால்
சிறுநீரகத் தொட்டி
கொள்ளளவு எட்டியதும்
விடுதலை கேட்கும்
மூத்திரத்திற்கு
விடையென்ன சொல்வேன் ?



ஆணைப் போல
அவசரத்திற்கு
திறந்துவிடப்படமுடியாத
உடல் வாகைவிட
நின்று சீறுநீர் கழித்தால்
ஒருத்தியை சமூகம்
எப்படி எடைபோடும்
என நினைக்கும்போதே
அடைத்துக் கொள்கிறது
அத்தனை துவாரங்களும் !

கழிவறைகள் ?

நீங்கள்
அரசுப் பள்ளி
பெண்கள் கழிப்பறையை
கண்டிருக்க வாய்ப்பில்லை,
கண்டபின் இப்படிக் கேட்கவும் தான் !

ஒரு ஆணின் சிறுநீரகத்தைவிட
ஒரு பெண்ணின் சிறுநீரகத்தில்
ஒரு பேக்டீரியப் படையெடுப்பு
எத்தனை இலகுவானதும்
இரக்கமற்றதும் தெரியுமா ?

நீவிர் கண்டறிந்த
எந்த மருந்தையும்
மயிருக்கும் மதிக்காத
எத்தனை பேக்டீரியாக்கள்
ஜனித்திருக்கின்றன தெரியுமா ?

ஒரு முறை தொற்றினால்
வலியென்ற சொல்லின்
உச்சபட்ச அர்த்தத்தை
நொடிக்கொரு முறை
நினைவூட்டிக் கொல்லும்,
மீண்டுவரத் தயங்காமல் !

சரி தீர்வு ?

நுழையும் படியான
ஒரு கழிவறை ?!

அன்றி
சிறுநீர்த் தொட்டியின்
கொள்ளளவு கூட்டல்
சாத்யமில்லை என்பதால்
அருந்தப் பயந்து சாதல் !

நீரின்றி‌ அமையுமாம்
அரசுப்பள்ளி
மாணவியின் உலகம் !

- வினோதன்

இணைய வழி பத்திரப் பதிவுக்கு அமோக வரவேற்பு

தமிழக அரசின் இணைய வழி பத்திரப் பதிவுக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை முதல் (பிப்.13) இணைய வழி மூலம் பத்திரப் பதிவு நடைபெற்று வருகிறது. வியாழக்கிழமை வரை (பிப்.15), 24,819 பயனாளிகள் இணையத்தை பயன்படுத்தி உள்ளதுடன், 48,422 வரைவு ஆவணங்களைத் தயாரித்துள்ளனர். இதில், 13,557 ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு சார் பதிவாளர்களுக்கு முன் சரிபார்ப்புக்காக அனுப்பப்பட்டு, 11, 680 ஆவணங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன. 7,875 ஆவணங்கள் அச்சுப் பிரதி எடுக்கப்பட்டு பதிவு தாக்கல் செய்யப்பட்டன என்று பதிவுத் துறை தலைவர் குமரகுருபரன் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளார்.

வீட்டில் இருந்தே வாக்காளர் அடையாள அட்டையில் திருத்தம் செய்யலாம்: ஜூன் மாதம் வருகிறது புதிய செயலி

புது தில்லி: வாக்காளர்கள் வீட்டில் இருந்தபடியே தங்களது வாக்காளர் அடையாள அட்டையில் மாற்றம் செய்யும் வகையில் புதிய செயலியை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்ய உள்ளது.
டிஜிட்டல் மயத்தை நோக்கி முன்னேறும் வகையில் தேர்தல் ஆணையம் இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளது.
இணையதளம் மூலம் செயல்படும் வகையில் இந்த செயலியை உருவாக்கவும், இதன் மூலம் ஒரு வாக்காளர் மாநிலம் விட்டு வேறு மாநிலம் சென்றால் கூட தேர்தல் அலுவலகம் அல்லது வாக்கு மையத்துக்குச் செல்லாமலேயே தனது வாக்காளர் அட்டையில் திருத்தம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
'எலக்டோரல் ரோல்ஸ் சர்வீசஸ் நெட்' (ERONET - Electoral Rolls Services NeT) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த செயலி மூலமாக எந்த நேரத்திலும் வாக்காளர் அடையாள அட்டையில் திருத்தம் செய்து கொள்ளலாம். இதுவரை 22 மாநிலங்கள் இந்த செயலியில் இணைக்கப்பட்டிருப்பதாக தலைமைத் தேர்தல் ஆணையர் ஓ.பி. ராவத் கூறியுள்ளார்.
தேர்தல் நடைபெறும் அல்லது நடைபெற்று முடிந்த குஜராத், இமாச்சலப் பிரதேசம் போன்ற மாநிலங்கள் இந்த திட்டத்தில் இதுவரை இணைக்கப்படவில்லை.
அனைத்து மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் இந்த திட்டத்துக்குள் கொண்டு வரப்பட்டு வரும் ஜூன் மாதத்தில் இந்த செயலி பயன்பாட்டுக்கு வரும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த செயலியின் மூலம் வாக்காளர் அடையாள அட்டையில் மாற்றம் செய்ய, வாக்காளரின் செல்போன் எண்ணுக்கு ஒரு ஓடிபி எண் வரும். அதைப் பயன்படுத்தி திருத்தங்களை செய்து கொள்ளலாம்.

புதிய முகவரியை பதிவு செய்ததும், தானாகவே பழைய முகவரி அழிக்கப்பட்டு, புதிய முகவரி பதிவேற்றம் செய்யப்படும். இவை அனைத்தும் வீட்டில் இருந்தபடியே செய்யலாம்.

17/2/18

அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு இரண்டாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை EMIS வலைதளத்தில் பதிவேற்றம் செய்யாத அதாவது நேரடி சேர்க்கை மாணவர்களை இன்று முதல் EMIS ல் சேர்க்கை செய்ய அனுமதி வழங்கப்பட உள்ளது.

அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு
இரண்டாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை EMIS வலைதளத்தில் பதிவேற்றம் செய்யாத அதாவது நேரடி சேர்க்கை மாணவர்களை இன்று முதல் EMIS ல் சேர்க்கை செய்ய அனுமதி வழங்கப்பட உள்ளது.
அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களும் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டு பணியினை சிறப்பாக விரைந்து முடிக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.*EMIS பதிவேற்றம், புதிய சேர்க்கை மற்றும் ஆதார் எண் இணைத்தல் போன்ற அனைத்து பணிகளையும் இன்னும் ஐந்து நாட்களுக்குள் முடிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.*

பிப்ரவரி 21 முதல் சென்னையில் ஜாக்டோ ஜியோ மறியல் போராட்டம் போஸ்டர் மற்றும் ஜாக்டோ ஜியோ வின் மனு

தேர்வுப்பணிகளுக்கான கையேடு-மார்ச்/ஏப்ரல் 2018-வழித்தட அலுவலர்களுக்கான கடமைகள்!!!

யாரையும் நம்பி கையேழுத்து போடாதீங்க-உதவித் தொடக்கக்கல்வி அலுவலர் சங்கம் கதறல்.(பத்திரிக்கைச் செய்தி)

பள்ளிகளில் அனைத்து வகுப்புகளுக்கும் புதிய பாடதிட்டம்-அமைச்சர் செங்கோட்டையன் தகவல்!!!

விரைவில் 5ஜி நெட்வொர்க் சேவை!

5ஜி நெட்வொர்க் சேவைக்கான அரசின் செயல்திட்டங்கள் ஜூன் மாதத்துக்குள்
வெளியிடப்படும் என்று மத்திய தொலைத் தொடர்புத் துறை அறிவித்துள்ளது.

இதுபற்றி அசோசெம் கூட்டமைப்பு சார்பாக பிப்ரவரி 16ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசிய மத்திய தொலைத் தொடர்புத் துறைச் செயலாளரான அருணா சுந்தரராஜன், “இந்தியாவின் 5ஜி நெட்வொர்க் சேவை தொடர்பான அரசின் செயல் திட்டங்கள் ஜூன் மாதத்துக்குள் வெளியிடப்படும். சர்வதேச அளவில் 5ஜி சேவைக்கு இந்தியாவைத் தயார்படுத்தும் விதமாக அதிசிறந்த ஆலோசனைக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு 5ஜி தொழில்நுட்ப சேவையை மக்களிடம் எடுத்துச் செல்வது, 5ஜி சேவைக்கான இலக்குகளை நிர்ணயிப்பது ஆகியவை குறித்து விரிவாக ஆலோசிக்கும்.

இதன்மூலம், 2020ஆம்ஆண்டுக்குள் உலகம் முழுவதும் 5ஜி சேவை அமலாகும்போது இந்தியாவும் 5ஜி தொழில்நுட்பத்தை மக்களுக்கு வழங்குவதில் சிறந்து விளங்கும். 5ஜி சேவையில் இயந்திர வழி தொலைத் தொடர்புக்காக புதிய எண் வரிசைகள் அறிமுகப்படுத்தப்படும். 5ஜி தொழில்நுட்பம் வாயிலாகக் கார்களில் சென்சார் உதவியுடன் விபத்துகளைத் தடுக்க முடியும்” என்றார். 5ஜி தொழில்நுட்பம் தொடர்பான ஆய்வுப் பணிகளுக்காக ரூ.500 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சேலம் விநாயகா மிஷன் நிகர்நிலை பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி பட்டங்கள் தமிழக கல்வித்துறையில் ஊக்க ஊதிய உயர்விற்கு தகுதியற்றது . முதல்வர் தனிப்பிரிவில் பதில் !!!

ENTRANCE EXAMINATION -2018

RMSA PROCEEDING-தேர்வு பற்றிய மனஅழுத்தம்,பயம்,மனவெழுச்சிகளை களைதல் தொடர்பான RMSA மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள்,



கோடை விடுப்பில் ஆசிரியர்களுக்கு புதிய பாடத்திட்டம் குறித்து பயிற்சி!!!

வரும் கல்வியாண்டில், புதிய பாடத்திட்டம் அமலுக்கு வருவதால்,
அதனடிப்படையில்

பாடம் நடத்த, 10 ஆயிரம் ஆசிரியர்களுக்கு, ஏப்ரலில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
தமிழகத்தில், ஒன்று முதல், 10ம் வகுப்பு வரை, சமச்சீர் கல்வி பாடத்திட்டம், ஏழு ஆண்டுகளாக அமலில் உள்ளது. பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, 13 ஆண்டுகளாக, ஒரே பாடத்திட்டத்தில் தான் பாடம் நடத்தப்படுகிறது. இந்நிலையில், 10 ஆண்டுகளாக தொழில்நுட்ப வளர்ச்சியை உள்ளடக்கிய, புதிய பாடத்திட்டம் கொண்டு வர, கல்வியாளர்கள் வலியுறுத்தினர்.அதன்படி, பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவின்படி, செயலர் உதயசந்திரன் தலைமையில், புதிய பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது. வரும் கல்வி ஆண்டில், ஜூன் மாதம் பள்ளிகள் திறந்ததும், முதற்கட்டமாக, ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 பாடங்களுக்கு, புதிய பாடத்திட்டம் அமலாக உள்ளது. புதிய பாடத்திட்ட இறுதி அறிக்கைக்கு, முதல்வர் ஒப்புதல் கிடைத்ததும், பாட புத்தகம் அச்சிடும் பணியை துவங்க, அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர். இதற்கிடையில், புதிய பாடத்திட்டத்தை மாணவர்களுக்கு பயிற்றுவிக்க, ஆசிரியர்களுக்கு முன்கூட்டியே, கல்லுாரி பேராசிரியர்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும், என்.ஜி.ஓ,,க்கள் வழியாக சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.அதற்காக, ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்பு ஆசிரியர்களுக்கு விடுமுறை நாட்களை குறைத்து, ஏப்ரலில் புதிய பாடத்திட்ட பயிற்சி அளிக்க, அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். முதற்கட்டமாக, ஒவ்வொரு பாடத்திலும், 10 ஆயிரம் ஆசிரியர்களை தேர்வு செய்து, பயிற்சி தரப்பட உள்ளது.

அரசு போட்டித்தேர்வு நடைமுறைகள் இனி தனியாருக்கு வழங்கப்படாது – உயர்நீதிமன்றத்தில் TRB விளக்கம்

அரசுபோட்டித்தேர்வு நடைமுறைகள் இனி தனியாருக்கு வழங்கப்படாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

போட்டித் தேர்வு முறைகேடுகளுக்கு எதிரான வழக்கில் தவறான முறையில் மதிப்பெண்களை பெறுபவர்கள் தகுதியுடையவர்களின் இடங்களை பறித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. போட்டித்தேர்வுகளை முறைப்படுத்தி முறைகேடுகளை தடுக்கக் கோரப்பட்டிருந்தது.

தொடர்புடையவர்கள் மீது விசாரணைக்குழு அமைக்கவோ, விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றவோ கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கில் இன்று அரசு போட்டித்தேர்வு நடைமுறைகள் இனி தனியாருக்கு வழங்கப்படாது என டி.ஆர்.பி. தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

டி.ஆர்.பி. அலுவலகத்திற்குள் நுழைவது பயோமெட்ரிக் முறையில் மேம்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டது. இதையடுத்து டி.என்.பி.எஸ்.சி. பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், மார்ச் 9-க்கு விசாரணையை ஒத்திவைத்தனர்

வேலைவாய்ப்பு: மின்சார வாரியத்தில் பணி!

                                         

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் நிரப்பப்படவுள்ள உதவி பொறியாளர்
பணியிடங்களுக்கான அறிவிப்பை மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடங்கள்: 325

பணியின் தன்மை: உதவி பொறியாளர்

சம்பளம்: மாதம் ரூ.10,100 - 34,800 + தர ஊதியம் ரூ.5,100

தகுதி: பொறியியல் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

கடைசி தேதி: 28.02.2018

மேலும் விவரங்களுக்கு https://www.tangedco.gov.in/linkpdf/AE%20NOTIFICATION%20.pdf என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

90,000 பணிகளுக்கு ஆட்கள் தேர்வு-உலகில் மிகப்பெரிய வேலைவாய்ப்பு அறிவிப்பு!!

பள்ளிகளில் யோகா பயிற்சி வகுப்பு பள்ளிக்கல்வி அமைச்சர் அறிவிப்பு!!!(பத்திரிகை செய்தி)

மின்வாரிய ஊழியர்கள் வேலைநிறுத்தத்துக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் முறையீடு!!!

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய ஊழியர்களின் இன்று முதல் தொடர்
வேலைநிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு மின்வாரிய ஊழியர்கள் வேலைநிறுத்தத்துக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. மனுவாக தாக்கல் செய்தால் விசாரிக்கப்படும் என்று உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.*

இணையதளம் வாயிலாக வாக்காளர் பெயர் சேர்ப்பு!!!

பத்தாம் வகுப்பு அறிவியல் பாடம்... செய்ய வேண்டிய, செய்யக்கூடாத விஷயங்கள்..

மருத்துவம் படிக்க வேண்டும்; பொறியியல் படிக்க வேண்டும் என்று 
ஆசைப்படும் மாணவர்கள், சென்டம் ஸ்கோருடன் தாண்டவேண்டிய முதல் படி, பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்வு.

1. ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கு சாய்ஸ் கிடையாது என்பதால், எல்லாப் பாடங்களின் புக் பேக் ஒரு மதிப்பெண் கேள்விகளுடன், பாடங்களின் உள்ளே இருக்கும் ஒன் வேர்டுகளையும் படியுங்கள்.

2. இரண்டு மதிப்பெண் கேள்விகள் 32 கொடுத்து, இருபதுக்கு மட்டும்தான் பதில் கேட்பார்கள். ஸோ, தெரியாத கேள்விகளை ஸ்கிப் செய்வதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன.

3. 5 மதிப்பெண் வினாக்களைப் பொறுத்தவரை, ஜோடி ஜோடியாக, அதாவது 2 மற்றும் 3-ம் பாடங்களிலிருந்து தலா ஒன்றும், 4 மற்றும் 7-ம் பாடங்களிலிருந்து தலா ஒன்றும், 10 மற்றும் 13-ம் பாடங்களிலிருந்து தலா ஒன்றும், 15 மற்றும் 17-ம் பாடங்களிலிருந்து தலா ஒன்றும் கேட்கப்படும். அதனால், 2, 4, 10, 15 ஆகிய பாடங்களிலிருந்தோ அல்லது 3, 7, 13, 17 ஆகிய பாடங்களிலிருந்தோ ஏதேனும் நான்குப் பாடங்களின் புக் பேக் கேள்விகளோடு, பாடங்களுக்குள்ளே இருக்கும் 5 மதிப்பெண் கேள்விகளையும் நன்குப் படியுங்க.
4. கணக்குகள் சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு விடை எழுதும்போது, அதற்கான அலகு போட மறந்துவிடாதீர்கள். மறந்தால், மதிப்பெண் குறைந்துவிடும்.

5. சரியா, தவறா? தவறாக இருந்தால் திருத்தி எழுதுக, அல்லது காரணம் கூறு என்று கேட்கப்படுகிற வினாக்களுக்கு, விடை எழுதும்போது சரி/ தவறு என்று குறிப்பிட்டுவிட்டே, கேள்விக்கான பதிலை எழுதவும்.

6. பெரிய கேள்விகளில், உப கேள்விகளாக அ அல்லது ஆ, i அல்லது ii என்று கேட்டிருந்தால், கேள்விகளுக்கான நம்பரை போட்டுவிட்டு, பதில் எழுதுங்கள். கேள்விக்கான நம்பரை போடாமல் இருப்பதோ, அல்லது தவறாகப் போடுவதோ உங்கள் மதிப்பெண் குறைய காரணமாகிவிடும்.

7. பத்தாம் வகுப்பு மாணவர்கள் முதல்முறையாக பொதுத் தேர்வு எழுதுவதால், இன்னொரு தவறையும் செய்து, நேரத்தையும் மதிப்பெண்ணையும் வீணடிக்கிறார்கள். அதாவது, கேள்வி 'அ' அல்லது 'ஆ', 'இ' அல்லது 'ஈ' என எழுத வேண்டும் என்கிற பகுதியில் அவர்களுக்கு 'அ' மற்றும் 'ஆ' தெரிந்திருக்கும். 'இ' மற்றும் 'ஈ' தெரிந்திருக்காது. உடனே, மாணவர்கள் 'அ' மற்றும் 'ஆ'வை எழுதிவிடுகிறார்கள். இதில், ஒரு கேள்விக்கு மட்டும்தான் மதிப்பெண் கிடைக்கும்.

8. ஒரு படத்தை வரையச்சொல்லி, அதன் பாகங்கள் இரண்டைக் குறி என்று கேட்டால், மூன்று, நான்கு பாகங்கள்கூட குறிக்கலாம் தவறில்லை. அதேபோல, ஒரு தனிமத்தின் பயன்கள் இரண்டினைக் கூறு என்கிற கேள்விக்கும் மூன்று, நான்கு பயன்களைக் கூறலாம்.

9. ஒரு மதிப்பெண் கேள்விகளில் வரும் 'பொருத்துக' பகுதிக்கு, வெறுமனே பதிலை மட்டும் எழுதாமல், இரு பக்கத்தையும் சேர்த்தே எழுதுங்கள்.

10. பாடங்களின் உள்ளே வருகிற அறிந்துகொள்வோம், செயல், அறிஞர்களின் குறிப்புகள், சிந்திக்க படிக்க பின்னர் அறிக போன்ற பகுதிகளைக் கட்டாயம் படியுங்கள்.

11. எல்லாப் பாடங்களிலும் உள்ள கணக்குகள், அட்டவணைகள், வேறுபாடுகள், பயன்கள், சிறப்பியல்புகள். விதிகள் மற்றும் வகைகளை நன்றாகப் படித்துவிடுங்கள், சிறு வினாக்களில் ஆரம்பித்து, பெருவினாக்கள் வரை இவை உதவியாக இருக்கும்.


சி.பி.எஸ்.சி.க்கான டிப்ஸ்...

1. அறிவியல் கேள்விகளை பொறுத்தவரை மேம்போக்காக படிக்காதீர்கள் மாணவர்களே... ஒரு மார்க் கேள்விகளிலும் லேசாக டிவிஸ்ட் வைத்துதான் கேள்வித்தாளை செட் செய்திருப்பார்கள்.  ஸோ, முதல் 15 நிமிடங்கள் கேள்விகளை கவனமாகப் படியுங்கள்.

2. வேதியியல் ஈக்குவேஷன்களில் எதையும் மிஸ் பண்ணாதீர்கள்.

3. இயற்பியல் பாடத்தில் டயகிராம் வரையும்போது நீட்டாக வரையுங்கள்.

4. உயிரியல் பாடத்தின் டயகிராம்களை வீட்டில் வரைந்து பிராக்டிஸ் செய்திருப்பதே நல்லது. திடீரென்று எக்ஸாம் ஹாலில் ஒரு படம் வரைய வேண்டுமென்றால், பதட்டமாகி விடுவீர்கள்.

5. முந்தைய வருட பப்ளிக் எக்ஸாம் கேள்வித்தாள்களை கட்டாயம் ரிவிஷன் செய்யுங்கள். அதிலும் திரும்பத்திரும்ப கேட்கப்படுகிற கேள்விகளை படிக்கத் தவறாதீர்கள்.

6. இயற்பியல், வேதியியல், உயிரியல் என அனைத்துப் பாடங்களிலும் உள்ள டெஃபனிஷன்களை மறக்காமல் படித்துவிடுங்கள்.

அரசு போட்டித்தேர்வு நடைமுறைகள் இனி தனியாருக்கு வழங்கப்படாது – உயர்நீதிமன்றத்தில் TRB விளக்கம்

அரசு போட்டித்தேர்வு நடைமுறைகள் இனி தனியாருக்கு வழங்கப்படாது என்று உயர்நீதிமன்ற
மதுரை கிளையில் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

▪போட்டித் தேர்வு முறைகேடுகளுக்கு எதிரான வழக்கில் தவறான முறையில் மதிப்பெண்களை பெறுபவர்கள் தகுதியுடையவர்களின் இடங்களை பறித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. போட்டித்தேர்வுகளை முறைப்படுத்தி முறைகேடுகளை தடுக்கக் கோரப்பட்டிருந்தது.

▪தொடர்புடையவர்கள் மீது விசாரணைக்குழு அமைக்கவோ, விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றவோ கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கில் இன்று அரசு போட்டித்தேர்வு நடைமுறைகள் இனி தனியாருக்கு வழங்கப்படாது என டி.ஆர்.பி. தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

▪டி.ஆர்.பி. அலுவலகத்திற்குள் நுழைவது பயோமெட்ரிக் முறையில் மேம்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டது. இதையடுத்து டி.என்.பி.எஸ்.சி. பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், மார்ச் 9-க்கு விசாரணையை ஒத்திவைத்தனர்

துனிச்சலான மாணவர் வழக்கு கல்லூரிக்கு 55 ஆயிரம் அபராதம்!!!

ABACUS பயிற்சியில் கலந்து கொள்ள ஏதுவாக ஆசிரியர்களை விடுவிக்கும் பொருட்டு அனைத்து உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அவர்களின் சுற்றறிக்கையும் ஆசிரியர்கள் பட்டியலும்!!!



தேசிய கீதம்: மாணவிகளுக்குத் தண்டனை!

                                                    
ராஜஸ்தானில் தேசிய கீதத்தை மெதுவாக பாடியதாக ஒன்பதாம் வகுப்பு 
மாணவிகளைத் தலைமை ஆசிரியர் தோப்புக்கரணம் போட வைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம், சிகார் மாவட்டத்தில் உள்ள சபல்பூரா கிராமத்தில் ராஜ்கியா ஆதர்ஷ் மத்யமிக் வித்யாலயா அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் நேற்று காலை (பிப்ரவரி 15) தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது, ஒன்பதாம் வகுப்பு மாணவிகள் நான்கு பேர் தேசிய கீதத்தை மெதுவாகப் பாடியுள்ளனர். அப்போது அதைப் பார்த்த பள்ளியின் தலைமை ஆசிரியர் அவர்களை ஒரு மணி நேரம் தோப்புக்கரணம் பொடவைத்துள்ளார். பின்னர் அவர்களை அடித்துள்ளார். இந்தத் தண்டனையால் மாணவிகளுக்குக் கால்களில் வீக்கம் ஏற்பட்டது. சில மாணவிகள் மயங்கி விழுந்துள்ளனர்.

அதைத் தொடர்ந்து, மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மாணவிகளில் பெற்றோர் பள்ளியின் முன்பு திரண்டு பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிப் போராட்டம் நடத்தினர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக மாணவிகளின் பெற்றோர்களும், மாணவிகளும் புகார் அளிக்கவில்லை. புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளனர்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் விடுதிகளில் உள்ள மாணவர்கள் கட்டாயமாக தேசிய கீதம் பாடவேண்டும் என ராஜஸ்தான் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல், பண மதிப்பழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நவம்பர் 8ஆம் தேதியை கறுப்பு தினமாக கடைப்பிடிக்க எதிர்க்கட்சிகள் முடிவு செய்தபோது, ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் 50,000 பேர் ஒன்று கூடி தேசிய கீதம் பாடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

டிஆர்பி அலுவலகத்தில் பயோமெட்ரிக் முறை!

                                        

அரசு போட்டித் தேர்வுகளில் முறைகேடு நடைபெறுவதாக உயர் நீதிமன்ற 
மதுரைக் கிளை தாமாக எடுத்துக்கொண்ட வழக்கில், ஆசிரியர் தேர்வு வாரியப் பணிகள் இனி தனியாருக்கு வழங்கப்படாது என உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

“போட்டித் தேர்வுகளில் நடக்கும் முறைகேடுகளினால் தவறான முறையில் மதிப்பெண்களைப் பெறுபவர்கள், தகுதியுடையவர்களின் பணியைப் பறித்துவிடுகின்றனர். அதனால், போட்டித் தேர்வுகளில் நடக்கும் முறைகேடுகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனுடன் தொடர்புடையவர்கள் மீது விசாரணைக் குழு அமைக்கவோ அல்லது விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றவோ செய்ய வேண்டும்” என்று பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனு மீதான விசாரணையில் இன்று (பிப்ரவரி 16) சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில், “அரசு போட்டித் தேர்வு நடைமுறைகள் தனியாருக்கு வழங்கப்டாது என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்தில் பயோமெட்ரிக் முறையைக் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டது.

தற்போது கடைபிடிக்கப்படும் தேர்வு மற்றும் பாதுகாப்பு முறைகள் குறித்து டி.என்.பி.எஸ்.சி மார்ச் 9ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

ENTRANCE EXAMINATION -2018

பட்டதாரி ஆசிரியர்களை +2 பொதுத்தேர்வில் பணியமர்த்தக் கூடாது!!!

16/2/18

INCOME TAX FILE











சேலம் விநாயகா மிஷன் நிகர்நிலை பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி பட்டங்கள் தமிழக கல்வித்துறையில் ஊக்க ஊதிய உயர்விற்கு தகுதியற்றது . முதல்வர் தனிப்பிரிவில் பதில் .

15/2/18

நீட்' தேர்வுக்கு இலவச, 'ஆன்லைன்' வசதி : அரசு பள்ளி மாணவர்கள் எதிர்பார்ப்பு!!!

மருத்துவ படிப்புக்கான, 'நீட்' நுழைவு தேர்வுக்கு, அரசு பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்க வசதியாக,
அரசு சார்பில், இலவச, 'ஆன்லைன்' வசதி செய்து தர வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்து உள்ளது. பிளஸ் 2 முடிக்கும் அறிவியல் பிரிவு மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில் சேர, மத்திய அரசின், நீட் நுழைவு தேர்வில், கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும்.

கட்சிகளால் குழப்பம் : நடப்பாண்டு, 2017 - 18 வரை, நீட் தேர்வு குறித்து, அரசியல் கட்சிகள், மாணவர்களை குழப்பி விட்டதால், பெரும்பாலான மாணவர்கள், நீட் தேர்வை எழுத முடியவில்லை. இந்த ஆண்டு மருத்துவ படிப்பில் சேர, நீட் தேர்வு கட்டாயம் என்பது, எந்த குழப்பமும் இன்றி, துவக்கத்திலேயே உறுதியாகி விட்டது. அதனால், தமிழக பாடத்திட்டத்தில், பிளஸ் 2 அறிவியல் பிரிவில் படிக்கும், இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், நீட் நுழைவு தேர்வு எழுத உள்ளனர். அவற்றில், அரசு பள்ளிகளில் படிக்கும், 70 ஆயிரம் மாணவர்களுக்கு, அரசின் சார்பில், நீட் நுழைவு தேர்வு பயிற்சி இலவசமாக வழங்கப்படுகிறது.நீட் தேர்வு, மே, 6ல் நடக்கும் என, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது. இதற்கான ஆன்லைன் பதிவு, கடந்த, 9ல் துவங்கியது. தனியார் பள்ளிகளும், பயிற்சி மையங்கள், தங்களிடம் படிக்கும் மாணவர்களுக்கும், விண்ணப்ப பதிவுகளை செய்து தருகின்றன. ஆனால், நீட் தேர்வு குறித்த அறிக்கை மற்றும் தகவல் கையேடு ஆங்கிலத்தில் உள்ளதால், அரசு பள்ளி மாணவர்களால், அவற்றை முழுவதுமாக படித்து, வழிகாட்டுதல் பெற முடியாத நிலை உள்ளது.
கிராமப்புற மாணவர்கள் : சென்னை போன்ற மாநகரங்கள் முதல், குக்கிராமங்கள் வரையுள்ள, பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள், நீட் தேர்வுக்கு, ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதிகள் இன்றி தவிக்கின்றனர். எனவே, தமிழக அரசு தலையிட்டு, பள்ளிக்கல்வித் துறை அல்லது சுகாதாரத் துறை சார்பில், நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க, இலவச ஆன்லைன் வசதி செய்து தரவேண்டும் என்ற, கோரிக்கை எழுந்து உள்ளது.

குரூப் 4 தேர்வு : விண்ணப்பித்த பிஎச்டி பட்டதாரிகள்!

கடந்த ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 11)நடைபெற்ற குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பித்த
சுமார் 20 லட்சம் பேரில் 992 பேர் பிஎச்டி பட்டம் பெற்றவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

தமிழக அரசுப்பணிகளில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், நில அளவையர், கிராம நிர்வாக அதிகாரி உள்ளிட்ட 9,351 பணியிடங்களை நிரப்ப பிப்ரவரி 11ஆம் தேதி நடைபெற்றது. இத்தேர்வுக்கு சுமார் 20 லட்சத்து 83 ஆயிரத்து 152 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 20 லட்சத்து 69 ஆயிரத்து 274 பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

இந்நிலையில், பத்தாம் வகுப்பு தேர்ச்சியை மட்டுமே தகுதியாகக் கொண்ட குரூப் 4தேர்வுக்கு பிஎச்டி பட்டதாரிகள் 992 பேர் விண்ணப்பித்திருந்ததாகவும், எம்ஃபில். பட்டதாரிகள் 23 ஆயிரம் பேர் தேர்வு எழுதியதாகவும் தேர்வாணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குரூப் 4 தேர்வில் முதன்முறையாகத் தேர்வர்கள் ஒவ்வொருவருக்கும் அவர்களின் பெயர், படம், பதிவெண் உள்ளிட்ட விவரங்கள் அச்சிடப்பட்ட தனித்துவமான விடைத்தாள்கள் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டாயத் தேர்ச்சி முறையை மறுஆய்வு செய்ய வேண்டும்: நாடாளுமன்றக் குழு பரிந்துரை!!!

பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு கட்டாயத் தேர்ச்சி அளிக்கும்
நடைமுறையை மறுஆய்வு செய்யுமாறு பெரும்பாலான மாநில அரசுகள் வலியுறுத்தியுள்ளதாக நாடாளுமன்ற நிலைக் குழு தெரிவித்துள்ளது.
ஆண்டுதோறும் தேர்வுகள் நடத்தி மாணவர்களைத் திறனை மதிப்பிட்டால்தான் அவர்களது கல்வியறிவு மேம்படும் என்றும் அக்குழு கூறியுள்ளது.
ஒன்றிலிருந்து எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அனைவருக்கும் கல்வி சட்டத்தின் கீழ் கட்டாயத் தேர்ச்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பான சட்டத் திருத்தம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
எதிர்க்கட்சிகளின் வலியுறுத்தலின்படி, அந்த மசோதா மனிதவள மேம்பாட்டுத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது
. பாஜக எம்.பி. சத்தியநாராயணன் ஜாட்டியா தலைமையிலான அக்குழு கடந்த சில மாதங்களை அதனை ஆய்வு செய்தது. இந்நிலையில், நாடாளுமன்றத்தில் தனது ஆய்வறிக்கையை அக்குழு சமர்ப்பித்துள்ளது.
 அதுதொடர்பான விவரங்கள் மாநிலங்களவைச் செயலர் அலுவலகத்தில் இருந்து திங்கள்கிழமை வெளியாகியுள்ளன
.அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
எட்டாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு கட்டாயத் தேர்ச்சியளிக்கும் நடைமுறை தொடர வேண்டும் என்று 6 மாநிலங்கள் மட்டுமே விருப்பம் தெரிவித்துள்ளன.
 மீதமுள்ள மாநிலங்கள் அனைத்தும் அதில் சில திருத்தங்கள் செய்ய வேண்டும் என்றும் மறுஆய்வு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளன.
அதன் அடிப்படையில் பார்க்கும்போது கட்டாயத் தேர்ச்சி முறையை மாற்றியமைப்பதே சரியான நடவடிக்கையாக இருக்கும் எனத் தோன்றுகிறது. ஆண்டுதோறும் மாணவர்களுக்குத் தேர்வுகள் நடத்தி அவர்களது திறனை மதிப்பிடுவது அவசியம்.
 அதில் தோல்வியடைபவர்களுக்கு மறு வாய்ப்பு அளிக்கலாம். அதன் மூலம் அவர்கள் கல்வியறிவு செழுமையடையும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

கல்லூரி தரவரிசை : யு.ஜி.சி., உத்தரவு

பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி., மற்றும் தேசிய தர அங்கீகார அமைப்பான, 'நாக்' சார்பில், உயர் கல்வி நிறுவனங்களுக்கு, தரவரிசை அந்தஸ்து வழங்கப்படுகிறது.
எட்டு வகை, 'கிரேடு'களில், தரவரிசை தரப்படுகிறது. ஒவ்வொரு பல்கலையும், கல்லுாரியும், நாக் தரவரிசையை கட்டாயம் பெற வேண்டும். மாணவர் சேர்க்கையின் போது, தங்கள் கல்வி நிறுவனங்களின் தரவரிசை குறித்து, சில கல்லுாரிகள், மாணவர்களுக்கு தவறான தகவலை தருவதாக, புகார்கள் எழுந்துள்ளன. இதை தடுக்கும் வகையில், கல்லுாரிகளும், பல்கலைகளும், தாங்கள் பெற்ற, தரவரிசை குறித்த விபரத்தை, தங்கள் நிறுவன இணையதளத்தில் வெளியிட வேண்டும் என, யு.ஜி.சி., அறிவுறுத்தியுள்ளது.

பாலிடெக்னிக் விவகாரம்:ஆசிரியர் தேர்வு வாரியம் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு ::

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ரத்துக்கு எதிரான வழக்கில் 22-ம் தேதிக்குள் பதில் தர வேண்டும் என்று  பள்ளிக் கல்வித்துறை செயலர், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவருக்கும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 200 பேருக்காக அனைவரையும் தண்டிப்பது ஏற்கக் கூடியதல்ல என சிவங்கை இளமதி வழக்கு தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது. 

தமிழக அரசில் வேலைவாய்ப்பு: 10ம் வகுப்பு படித்த இளைஞர்களுக்கு 1573 உதவியாளர் வேலை!

தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்புத்துறையில் காலியாக உள்ள 1573 உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு மாவட்ட வாரியாக வெளியிடப்பட்டு வருகிறது.
தற்போது தஞ்சாவூர், கரூர், திருவண்ணாமலை, வேலூர், கன்னியாகுமாரி, நீலகிரி, ராமநாதபுரம், தேனி, திருநெல்வேலி, விருதுநகர், திருவாரூர் போன்ற மாவடங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே, விழுப்புரம், சேலம், திருப்பூர் மாவடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டங்களிலும் உள்ள காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தனித்தனியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: உதவியாளர்
மாவட்ட வாரியான காலியிடங்கள் மற்றும் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:
* தஞ்சாவூர் - 201
கடைசி தேதி: 26.02.2018
* கரூர் - 24
கடைசி தேதி: 22.02.2018
* திருவண்ணாமலை - 57
கடைசி தேதி: 26.02.2018
* வேலூர் - 67
கடைசி தேதி: 22.02.2018
* கன்னியாகுமாரி - 48
கடைசி தேதி: 26.02.2018
* நீலகிரி - 17
கடைசி தேதி: 21.02.2018
* ராமநாதபுரம் - 18
கடைசி தேதி: 21.02.2018
* தேனி - 34
கடைசி தேதி: 22.02.2018
* திருநெல்வேலி - 62
கடைசி தேதி: 23.02.2018
* விருதுநகர் - 43
கடைசி தேதி: 26.02.2018
* திருவாரூர் - 43
கடைசி தேதி: 27.02.2018
தகுதி:பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும் மற்றும் கால்நடைகளை கையாள தெரிந்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு:01.07.2015 தேதியின்படி 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். அதிகபட்சம் அருந்தியர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் வகுப்பினர் 35க்குள்ளும், மிகவும் பிறப்டுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர்(முஸ்லீம்) 32க்குள்ளும், பொதுபிரிவினருக்கு 30க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் விண்ணப்பதாரர்களின் சான்று சரிபார்க்கப்பட்டு இனசுழற்சி அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சம்மந்தப்பட்ட மாவட்டத்தின் மண்டல இணை இயக்குநர், கால்நடை பராமரிப்புத்துறை அலுலவலகத்துக்கு அஞ்சலில் அனுப்பி வைக்கவேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் ரூ.5க்கான அஞ்சல் வில்லை ஒட்டிய விண்ணப்பதாரரின் தற்போதைய இருப்பிட முழு முகவரியுடன் கூடிய அஞ்சல் உறையை (Envelope) இணைத்து அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்களை சம்மந்தப்பட்ட மாவட்டத்தின் இணையதளங்களில் கட்டணமின்றி பதிவிறக்கம் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்கள் அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாக மட்டுமே இருக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்கள் அறிய தஞ்சாவூர் மாவட்டம் http://www.thanjavur.nic.in/pdf/AHA.pdf, கரூர் மாவட்டம் http://karur.tn.nic.in/departments/AH_Application.pdf, திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் http://www.tiruvannamalai.tn.nic.in/aha.pdf, வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் http://vellore.nic.in/edocs/Ah-asst%20Vacancy.pdf, கன்னியாகுமார் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் http://www.kanyakumari.tn.nic.in/AH%20assistant.pdf, நீலகிரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் http://nilgiris.nic.in/images/ah.pdf, ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் http://www.ramnad.tn.nic.in/pdf/animal_husbandry.pdf, தேனி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் http://www.theni.tn.nic.in/pdfs/ahasst1.pdf, திருநெல்வேலி மாவட்டத்தை தேர்ந்தவர்கள் http://www.nellai.tn.nic.in/pdf/animhustnv.pdf, திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் http://www.tiruvarur.tn.nic.in/documents/animal2018.pdf, http://virudhunagar.tn.nic.in/ என்ற அதிகார்ப்பூர்வ இணையதள லிங்கில் சென்று தெரிந்துகொள்ளலாம்.
இதற்கான விண்ணப்பங்களை சம்மந்தப்பட்ட மாவட்டத்தின் இணையதளங்களில் கட்டணமின்றி பதிவிறக்கம் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.

குருப் நான்கு 2018 தேர்வு சொல்வது என்ன ? சிவ ஆனந்த கிருஷ்ணனின் அலசல்

1. 20.80 லட்சம் பேர் விண்ணபித்து 17 லட்சம் பேர் எழுதியது பற்றி ?
எனக்கு தெரிஞ்சு அதிக மக்கள் தொகை கொண்ட உத்திர பிரதேசம்ல கூட இப்படி நடந்தது இல்ல.. காரணம் இளைஞர்கள் படிப்பறிவு விகிதம் கம்மி.. அதுவே கேரளால இந்த மாறி நடக்கும்... இப்ப எல்லாம் படிக்றதுக்கும் வேலைக்கும் சம்பந்தமே இல்லை.. அப்டியே படிச்சாலும் வேலை கிடைக்கிறது இல்ல.. அதற்கான தகுதிகளை இன்றைய இளைஞர்கள் தகுதிகளை வளர்த்துக் கொள்வதும் இல்லை. பக்கோடா விற்பதே வேலைவாய்ப்பு என்ற நிலைமைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளதால் இது போன்ற போட்டித் தேர்வுகள் இத்தனை பேர் விண்ணப்பிப்பது அதிசயம் இல்லை... அதைவிட முன் எப்போதும் இல்லாததை விட அதிக விழிப்புணர்வு கூடிருக்கு போட்டி தேர்வை பற்றி .... எத்தனை பேர் எழுதினாலும் முழுமையாக முயற்சி கொண்ட முழுமையாக அர்பணித்துக் கொண்ட தேர்வு அன்று முழுமையாக திறனை வெளிபடுத்திய நபருக்கு கண்டிப்பாக வெற்றி கிடைத்தே தீரும் ....

2. இந்த தேர்வில் வட மாநில இளைஞர்கள் இங்கே எழுதியதாகவும் அதனால் பாதி வேலையே அவங்களே பறிச்சிட்டு போயிருவாங்க போலன்னு சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டதே ?
பொதுவா நம்ம தமிழ்நாட விட வட மாநில இளைஞர்களுக்கு கொஞ்சம் கூடுதலாவே போட்டி தேர்வு பற்றிய விழிப்புணர்வு இருக்கும்... யாரோ 5 பேரு நேரம் போகல போல.. இதுக்கு விண்ணப்பித்து எழுதி இருக்காங்க.. 5 வருஷம் உக்காந்து படிச்சவனே இங்க தள்ளாடுறான்.. இவங்க தமிழும் ஒன்னும் தெரியாம எப்படி பாஸ் பண்ண முடியும்.. ஒரு வேலை இங்கயே அவங்க குடும்பம் முன்னாடியே செட்டில் ஆயிருக்கலாம்... ஊடகம் எப்பவே இப்டித்தான் கிளப்பி விடும்... ஏய் இந்தா பாருடா தமிழ ஒழிக்க வந்துட்டாங்க ன்னு ... .. இது எப்டின்னா சீட்டு கட்டுல ஒரு சீட்டு ஜோக்கர் வந்தா எல்லாமே ஜோக்கரா மாறிரும் ன்னு சொல்ற மாறி இருக்கு .... சும்மா பீதிய கிளப்பி விடறதே இவங்க தான் ... அப்டியே அவங்க பாஸ் பண்ணாலும் தமிழ் எழுத படிக்க தெரியலன்னா பணி நீக்கம் செய்யபடுவார்கள்.. பொறுப்புள்ள ஊடகம் இந்த மாதிரி செய்திலாம் வெளியிடுவது வருத்ததற்குரியது.
3. கேள்வித் தாளில் ஓர் நகரத் தன்மை தெரிகிறதே,வாழ்வியல் குறித்த கேள்விகள் இடம்பெறவில்லை என்று ஒரு நாளிதழ் வெளியிட்டதே ?
கேள்வித்தாளில் என்னங்க நகரத் தன்மை ஊரகத் தன்மை ன்னு ... ? ஊரகத் தன்மை ன்னா ஜல்லிக்கட்டு எந்த விலங்கை கொண்டு விளையாடபடுகிறது னு கேக்கணுமா? இல்ல இந்தியா சுதந்திரம் பெற்றது எப்போது னு கேக்கணுமா ? போட்டித் தேர்வு என்பது ஒருவரை ஒருவர் முந்திக் கொள்வதற்கான தேர்வு.. இங்கே முந்துபவர் வெற்றி பெற்று வேலை பெறுகிறார்... பிந்துபவர் வாய்ப்பை இழக்கிறார்.. விழுமியங்கள் குறித்த கேள்விகள் இடம்பெற வில்லை என்ற கட்டுரையாளரின் ஆதங்கம் நியாயமாகவே இருந்தாலும் இதைதான் கேட்க வேண்டும் இதைத் தான் கேட்க கூடாது என்று பணியாளர் தேர்வாணையத்திற்கு ஒவ்வொருவரும் ஒரு ஆலோசனை வழங்கினால் கேள்விகள் எல்லா பாடத்தில் இருந்து சரி சமமாக இடம் பெற வாய்ப்பே இல்லை... மேலும் ஆணையம் ஒரு பாடத் திட்டத்தை மையமாக கொண்டு வினாத்தாள் வடிவமைக்குமே தவிர எதை வேண்டுமானாலும் கேட்கலாம் என்று கேட்பதில்லை.. நடப்பு நிகழ்வுகள் பகுதி கேள்விகள் என்பது நாம் அன்றாடம் செய்தித்தாள் மற்றும் செய்திகளில் இருந்து இடம்பெறுவது.. இதில் ஒன்றும் வியப்பான வினாக்கள் கேட்கவில்லை... சாமானிய மனிதனுக்கு இதுவியப்பை தரலாம் .. ஆனால் முழுமையாக தயார் ஆகும் ஒரு தேர்வர் இதை எல்லாம் படித்தால் தான் தேர்வு பெற முடியும்... தகவல் நிறைந்த கேள்விகள் தான் எல்லா போட்டித் தேர்வுகளிலும் கேட்கப்படுகின்றன.. இங்கே விழுமியங்கள்,வாழ்வியல் பாடங்களை கேள்விகளாக வைக்க வேண்டும் என்றால் உயர் பதவிகளுக்கு உள்ள தேர்வான குருப் 1 தேர்விற்கு அது பொருந்தும்.. மற்றபடி குருப் நான்கு தேர்விற்கு அதை படிக்கும் அளவுக்கு யாருக்கும் வாய்ப்பும் இல்லை..அப்படிப்பட்ட கல்வி முறையும் இங்கே கற்பிக்கப்படவில்லை.... எனவே வயிற்றுபிழைப்பா வாழ்வியலா என்று தேர்வரிடம் கேட்டால் இன்றைய சூழ்நிலையில் எதை தேர்ந்தெடுப்பார்கள் என்று நான் கூற வேண்டுமா என்ன ? எனவே ஆணையத்தின் கேள்வித்தாள் தரத்தில் எந்த தவறும் இருப்பதாக எனக்கு புலப்படவில்லை
4. கேள்வித் தாளில் பிழை இருக்கிறதே ?
பிழையை தவிர்ப்பது தான் முக்கிய கூறாக இருந்திருக்க வேண்டும்... அனால் எப்படியும் எல்லா தேர்விலும் பிழையுள்ள வினாக்கள் தவிர்க்க முடியாததாக ஆகி விடுகிறது.. அது டைப் பன்னவரின் வேலையா கூட இருக்கலாம் ? இல்ல அச்சின் பிழையா இருக்கலாம்.. இல்ல எடுக்கும்போதே பிழையோடு இருந்திருக்கலாம்.. அதற்கு தேர்வாணையம் கண்டிப்பாக மதிப்பெண் வழங்கும்.. இந்த பிழையுள்ள கேள்விகளால் தேர்வாணையத்தின் தரமே போச்சு ன்னு சிலர் எழுதறப்ப தான் சிரிப்பு வருது... நீங்களே 200 கேள்விகள் எடுத்து பாருங்க.. ஒட்டு மொத்தமா வரும்போது ஒரு சில கேள்விகளில் நம்மளே தப்பு விட்டு இருப்போம்.. ஆணையம் இதை கொஞ்சம் கவனித்து இருக்கலாம் என்பதில் மாற்று கருத்து இல்லை
5. இறுதியாக இந்த தேர்வை பற்றி ?
ஒவ்வொரு வருஷமும் புது வண்டி மார்கெட்ல வந்துட்டே இருக்கு.. நீங்க ஆரம்பிக்கும்போது உங்க திறன் ஒரு டி வி எஸ் 50 அளவுக்கு இருந்து இருக்கலாம்... இன்னைக்கு பல்சர் ,KTM ன்னுகூடுதல் திறன் கொண்ட அதிக புதுபிக்கபட்ட வாகனங்கள் வந்தாகி விட்டது.. நீங்க அதே TVS50 வச்சிக்கிட்டு அடுத்த தேர்வையும் எதிர் கொண்டா அடுத்த வருஷம் குள்ள வேற ஒரு கூடுதல் திறன் கொண்ட ஒரு புது வண்டி முந்தி போயிட்டேஇருக்கும்.. ஆமா இது ஒரு ரேஸ்..ரேஸ் க்கு எவ்ளோ பிரயத்தனம் வேணும்.. வண்டிய எப்படி பராமரிக்கணும் ? எப்படி ஓட்டனும் ? கூட வரவங்களாம் என்ன மாதிரி வண்டி வச்சி ஓட்டறாங்கன்னு ளாம் பாக்கணும்.. அதனால அடுத்த பந்தயத்தில் வெற்றி பெற வேண்டுமெனில் உங்கள் நீங்களே திறன் கூட்டிய ஒரு நபரா மாறி தயாரா இருங்க... திருக்குற திருக்குல மத்தவங்க எல்லாத்தையும் தூக்கி வீசிட்டு முன்னாடி போய் நிக்கணும்...
அன்புடன்
வெ.சிவ ஆனந்த கிருஷ்ணன்
ஒலிபரப்பு பொறுப்பாளர்
அகில இந்திய வானொலி

9/2/18

அண்ணாமலை பல்கலை ஊழியர்கள் 20 பேர் அண்ணா பல்கலைக்கு மாற்றம்

அண்ணாமலை பல்கலையில் உபரி இடங்களில் பணியாற்றிய, 20 ஊழியர்கள், அண்ணா பல்கலைக்கு, அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். அண்ணாமலை பல்கலையில், தற்போதுள்ள பணி தேவைகளை விட, 3,000க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் உட்பட, 10 ஆயிரம் பேர் உபரியாக இருப்பதாக, தமிழக அரசு கணக்கெடுத்துள்ளது.
பல்வேறு பிரிவு : இவர்களுக்கு, பல கோடி ரூபாய் சம்பளம் வழங்க வேண்டியுள்ளதால், ஆண்டுக்கு, 50 கோடி ரூபாய் வரை, கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது.தமிழக அரசின் தற்போதைய நிதி நிலைமை மிக மோசமாக உள்ளதால், அண்ணாமலை பல்கலையின் நஷ்டத்தை சரிக்கட்ட, தணிக்கை ஆய்வில் ஆலோசனை தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, அண்ணாமலை பல்கலையில், உபரியாக உள்ளவர்களை, பல்வேறு அரசு பல்கலை மற்றும் கல்லுாரி களுக்கு மாற்றும் நடவடிக்கையில், தமிழக அரசு, தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், அண்ணாமலை பல்கலையில் பணியாற்றும், 20 ஊழியர்கள் நேற்று, அண்ணா பல்கலைக்கு அதிரடியாக இடம் மாற்றப்பட்டு, சென்னை அலுவலகத்தில், பல்வேறு பிரிவுகளில் நியமிக்கப்பட்டனர். இந்த நியமனங்களால், அண்ணா பல்கலை உட்பட உயர்கல்வித் துறையின் பணியாளர்கள் சங்கத்தினர் அதிர்ச்சி அடைந்துஉள்ளனர்.
முக்கிய முடிவு : இதுகுறித்து, அண்ணா பல்கலை ஊழியர் ஒருவர் கூறியதாவது:அண்ணா பல்கலையில், 100க்கும் மேற்பட்டோர், தற்காலிக பணியாளர்களாக, 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகின்றனர். அவர்களை பணி நிரந்தரம் செய்யாமல், மற்ற பல்கலைகளில் இருந்து ஆட்களை தேர்வு செய்து, அண்ணா பல்கலைக்கு இடமாற்றம் செய்துள்ளனர். இதுகுறித்து, சங்கங்கள் கூடி, முக்கிய முடிவு எடுக்கும்.இவ்வாறு அவர் கூறினார்

விரைவில் டிஜிட்டல் சான்றிதழ்கள்!!

உயர்கல்வி நிறுவனங்களில் முதல் முறையாக, டிஜிட்டல் தொழில்நுட்ப வடிவிலான கல்வி சான்றிதழை மாணவர்களுக்கு வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
சோதனை முயற்சியாக 2019ம் கல்வியாண்டு முதல் இத்தகைய சான்றிதழை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக மும்பை ஐஐடி., டில்லி பல்கலை., கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் வழங்கப்பட உள்ளது. 
நிதி ஆயோக்கின் கண்காணிப்பில் பேரில் இந்த சோதனை பணிகள் நடத்தப்பட உள்ளது. இத்தகைய டிஜிட்டல் சான்றிதழ்கள் உறுதித்தன்மை வாய்ந்தாகவும், இந்தியாவை இணைக்கும் சங்கிலியாகவும் இருக்கும் வகையில் உருவாக்கப்பட உள்ளது. சோதனை செயல்பாடு வெற்றி பெற்றால், நாடு முழுவதும் டிஜிட்டல் சான்றிதழ் வழங்கும் முறை அமல்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கல்வி நிறுவனங்களுக்கு ஏற்கனவே இமெயில்கள் மூலம் தகவல் அனுப்பப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது.
கல்வித்துறை ஏற்கனவே டிஜிட்டல் முறைக்கு மாற்றப்படுவதால், அதில் இம்முறை அமல்படுத்துவது சிக்கலாக இருக்காது. கல்வி துறையை தொடர்ந்து நில பட்டாக்கள் தொடர்பான ஆவணங்களும் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. பல மாநிலங்கள் இன்னும் டிஜிட்டல் முறைக்கு மாறாமல் இருப்பதால் , இதனை நடைமுறைபடுத்த பல காலம் ஆகும் என்றே கூறப்படுகிறது.

2016-17 ஆம் கல்வியாண்டில் விடுப்பு எடுக்காமல் தொடர்ந்து பணிபுரிந்த ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் சிறந்த பள்ளிகளுக்கான சுழற்கேடயம் வழங்குதல்

DEE PROCEEDINGS-தொடக்கக்கல்வி இயக்ககத்தின் கட்டுபாட்டில் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில் 2016-17 ஆம் கல்வியாண்டில் விடுப்பு எடுக்காமல் தொடர்ந்து பணிபுரிந்த ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் சிறந்த பள்ளிகளுக்கான சுழற்கேடயம் வழங்குதல் ஆகியவை 12.02.18 திங்கள் அன்று சென்னையில் அறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நடைபெறும் விழாவில் வழங்குவது குறித்து தொடக்கக்கல்வி இயக்குநர் செயல்முறைகள்

சென்னையில் சி.இ.ஓ.,க்கள் கூட்டம்

பொதுத் தேர்வுகளை தில்லுமுல்லு இல்லாமல் நடத்துவது குறித்து, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளான, சி.இ.ஓ.,க் களுக்கு, இன்று வழிகாட்டுதல் கூட்டம், சென்னையில் நடத்தப்படுகிறது. தமிழகத்தில், 10ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, பொதுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. பொதுத் தேர்வுகளை சுமுகமாக நடத்தி முடிக்க, தேர்வுத் துறை சார்பில் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. 

இது குறித்து, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, இன்று காலை, சென்னை, அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தில், வழிகாட்டுதல் கூட்டம் நடக்கிறது. இதில், பள்ளிக் கல்வி அமைச்சர், செங்கோட்டையன், முதன்மை செயலர், பிரதீப் யாதவ், இயக்குனர்கள், இளங்கோவன், வசுந்தராதேவி மற்றும் இணை இயக்குனர்கள் பங்கேற்கின்றனர்.

வருங்கால வைப்பு நிதி கையாடல் : தொடக்கக்கல்வி அலுவலர், 'சஸ்பெண்ட்'

ஓசூர்: சூளகிரி ஒன்றியத்தில் பணியாற்றிய போது, வருங்கால வைப்பு நிதியில் கையாடல் செய்ததாக, ஓசூர் உதவி தொடக்கக்கல்வி அலுவலர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.கணக்கு சரிபார்ப்புஓசூர், உதவி தொடக்கக்கல்வி அலுவலர், பிரேம் ஆனந்த், 58. இவர், சூளகிரி ஒன்றியத்தில், மூன்று ஆண்டுகள் பணியாற்றிய போது, ஆசிரியர்களுக்கான வருங்கால வைப்பு நிதியை கையாடல் செய்ததாக புகார் வந்தது.
இதையடுத்து, சூளகிரி உதவி தொடக்கக்கல்வி அலுவலராக உள்ள சுதா, மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் நடராஜனுக்கு தகவல் தெரிவித்தார். அதிகாரிகள் முன்னிலையில் கணக்குகளை சரிபார்த்தனர். ஆசிரியர்களிடம் இருந்து பிடித்தம் செய்த, 29 லட்சம் ரூபாயை போலி ஆவணங்கள் தயாரித்து, சூளகிரி உதவி தொடக்கக் கல்வி அலுவலக இளநிலை உதவியாளர் பாலமுரளி என்பவரது வங்கி கணக்கில் செலுத்தியிருப்பதும் தெரிந்தது.
பணி ஓய்வுஇது தொடர்பான விரிவான அறிக்கை, சென்னை தொடக்கக்கல்வி இயக்குனர் கருப்புசாமிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன் அடிப்படையில், ஓசூர் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் பிரேம் ஆனந்த் மற்றும் இளநிலை உதவியாளர் பாலமுரளி, நேற்று, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.துறை ரீதியான விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. சஸ்பெண்ட் செய்யப்பட்ட பிரேம் ஆனந்த், வரும், ஜூன் மாதம் பணி ஓய்வு பெற இருந்தார்.

வாகன ஓட்டுநர் உரிமத்துடன் ஆதாரை இணைக்க மத்திய அரசு முடிவு

வாகன ஓட்டுநர் உரிமத்துடன் ஆதாரை இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மோடி தலைமையிலான மத்திய அரசு, பல்வேறு நல திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. இவற்றின் பலனைப் பெறுவதற்கு ஆதார் எண்களை இணைப்பதை கட்டாயமாக்கி உள்ளது. முறைகேடுகளை தடுப்பதற்காக இப்படி செய்யப்படுவதாக அரசு சார்பில் கூறப்படுகிறது. 
வங்கிக்கணக்கு, பான் கார்டு, இன்சூரன்ஸ் பாலிசி, மியூச்சுவல் பண்ட், தபால் துறை திட்டங்கள், அலைபேசி எண் உள்ளிட்ட பல்வேறு அடையாள ஆவணங்களுடன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில், வாகன ஓட்டுநர் உரிமத்துடன் ஆதார் எண்ணை இணைக்க தற்போது மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் போலி ஓட்டுநர் உரிமம் பிரச்னையை தீர்க்க முடியும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

முறைகேடுகளில் ஈடுபட்ட தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு தேர்வு பணிகள் வழங்க தடை தேர்வுத்துறை அதிரடி நடவடிக்கை

தேர்வு முறைகேடுகளில் ஈடுபட்ட தனியார் பள்ளி ஆசிரியர்களை தேர்வு பணிகளில் ஈடுபடுத்தக்கூடாது என்று தேர்வுத்துறை வாரியம் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறது.

பிளஸ்–2 பொதுத்தேர்வு அடுத்த மாதம் தொடங்குகிறது. அதனைத்தொடர்ந்து பிளஸ்–1 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுகளும் நடைபெற இருக்கிறது. இதற்கான ஆயத்த பணிகளில் அரசு தேர்வுகள் இயக்ககம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.


இந்த நிலையில் கடந்த பொதுத்தேர்வுகளில் நாமக்கல், கிருஷ்ணகிரி, ஈரோடு உள்பட சில மாவட்டங்களில் உள்ள தனியார் பள்ளிகளின் ஆசிரியர்கள் தேர்வு முறைகேடுகளில் ஈடுபட்டதாக தகவல் வெளியானது. இதுதொடர்பாக நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக தற்போது தேர்வுத்துறை அது போன்ற பள்ளிகளின் பட்டியலை தயார் செய்து அந்த பள்ளிகளின் ஆசிரியர்களை தேர்வு பணிகளில் ஈடுபடுத்த கூடாது என்று அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி இருக்கின்றனர்.

தேர்வுத்துறை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ‘கடந்த காலங்களில் பொதுத்தேர்வில் முறைகேடு செய்த தனியார் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு தேர்வு பணிகளோ, விடைத்தாள் திருத்தும் பணிகளோ கொடுக்கக்கூடாது’ என்று குறிப்பிட்டுள்ளது.

அதேபோல், தேர்வு பணிகளில் எவ்வளவு ஆசிரியர்கள் ஈடுபட போகிறார்கள் என்பது குறித்து உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, ‘இன்னும் பள்ளிக்கல்வி துறையில் இருந்து எத்தனை மாணவர்கள் தேர்வு எழுத இருக்கிறார்கள் என்ற முழுவிவரம் கிடைக்கப்பெறவில்லை. அது வந்ததும், அந்த எண்ணிக்கையை, 20 ஆல் வகுத்தால்(ஒரு அறைக்கு 20 மாணவர்கள் என்பதை வைத்து) எவ்வளவு ஆசிரியர்கள் தேர்வு பணியில் ஈடுபடுவார்கள் என்பது தெரியும்’ என்றார்.

குறைந்த மதிப்பெண் பெறுவோருக்கு மனஅழுத்தம் ஏற்படுவதை தடுக்க ரேங்க் பட்டியல் வெளியிடாமல் புதிய முறையில் கடந்த ஆண்டு தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு மேலும் ஒரு புதிய முறையை அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிக்க இருக்கிறது.

அதாவது, தேர்வு முடிவு வெளியாகும் முதல் நாள் அன்று அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளின் மதிப்பெண்களின் பட்டியலும் அனுப்பி வைக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு முதல் அப்படி கிடையாது. மாறாக தேர்வு முடிவு அறிவிக்கப்பட்ட பிறகு, அந்தந்த மாவட்டங்களில் உள்ள பள்ளிகளின் மதிப்பெண்களை ஆன்–லைனில் பார்த்து தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட இருக்கிறது. இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.

இதற்கிடையில் தேர்வு பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் சென்னையில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் இன்று(வியாழக்கிழமை) நடைபெற இருக்கிறது. இதில் தேர்வுத்துறை மற்றும் பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் பலர் கலந்து கொள்கின்றனர். இந்த கூட்டத்தில் முக்கியமான முடிவுகள் பல எடுக்கப்பட இருக்கின்றன.

பள்ளியில் கண்டிக்கப்படாத மாணவர்களால் நல்ல சமுதாயம் சாத்தியமில்லை

நல்ல மாணவர் சமுதாயத்தை உருவாக்கும் கடமை ஒவ்வொரு ஆசிரியர்களுக்கும் உண்டு. சுடர்விடும் பல சமுதாய சிற்பிகளை உருவாக்கும் புனித பணியில் உள்ள அவர்களால், சமீப காலமாக பணிச்சுமை, பணி பாதுகாப்பின்மை, மாணவரை நல்வழிப்படுத்த முற்சிக்கும் போது ஏற்படும் எதிர் வினைகளால் மனம் நொந்து,ஆசிரியர் பணியில் ஏன் இருக்க வேண்டும்,' என்ற மனநிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
இதற்கு சிறந்த உதாரணம், வேலுார் மாவட்டம் திருப்பத்துாரில் ஆபாச படம் பார்த்த மாணவர்களை கண்டித்து நல்வழிப்படுத்த நினைத்த தலைமையாசிரியருக்கு கிடைத்த பரிசு, கத்திக்குத்து. எந்த மாணவரை திருத்த நினைத்தாரோ அந்த மாணவரே அவரை குத்தியுள்ளார்.இச்சம்பவத்திற்கு பின் தவறான வழியில் செல்லும் மாணவரை தண்டிக்க எந்த ஆசிரியர்களாவது நினைத்து பார்ப்பார்களா என ஆசிரியர் சமுதாயம் கொதித்துக் கிடக்கிறது. ஒரு காலத்தில், கண்டிப்பு காட்டி, பிரம்பெடுத்த காலத்தில் மாணவர்கள் பணிவுடன் படித்து பிரகாசித்தனர். ஆனால் இன்று குறைந்தபட்சம் சொற்களால் கூட தண்டிக்க ஆசிரியர்களால் முடியவில்லை.அந்த அளவிற்கு மாணவர் - ஆசிரியர் உறவில் இந்த இடைவெளி ஏற்பட யார் காரணம்... கண்முன் தவறான வழியில் பயணிக்கும் மாணவர்களை திருத்துவதற்கு வழி என்ன... 
இது குறித்து ஆசிரியர், பெற்றோர் கூறுவது என்ன...
சீரழிக்கும் சினிமா : சந்திரன், மதுரை மாவட்ட செயலாளர், தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம்: மாணவருக்கு ஒழுக்கத்தை கற்பிக்கும் முதலிடம் வகுப்பறை தான்.தாங்கள் பெற்ற பிள்ளையை போல் மாணவர்களையும் ஆசிரியர் நினைக்கின்றனர். அவர்கள் கெட்ட வழியில் போய் விடக்கூடாது என்பதால் தான் தண்டிக்க நினைக்கின்றனர். இன்றைக்கு சமுதாயம் சீர்கெட்டு போய் கொண்டுள்ளது. கை நுனியில் உள்ள அலைபேசியில் முன்னேற தேவையான நல்ல விஷயங்களும் உள்ளன. கெட்டு குட்டிச்சுவராக போக பல கெட்ட விஷயங்களும் கொட்டிக் கிடக்கின்றன.சினிமாக்கள் வன்முறை களங்களாக காட்டப்படுகின்றன. அரிவாள், துப்பாக்கி எடுப்பவர்களை ஹீரோக்களாகவும், ஆசிரியர், டாக்டர்களை ஜோக்கர்களாகவும் காட்டுகின்றனர். ஒழுக்கம் சார்ந்த கல்வியும், தவறு செய்யும் மாணவர்களை தண்டிக்கும் சுதந்திரத்துடன் பணிப் பாதுகாப்பும் ஆசிரியர்களுக்கு அவசியம்.
கண்டிக்காத பெற்றோர் : நடராஜன், மாநில துணை தலைவர், தமிழ்நாடு மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர் கழகம்: ஆசிரியர்களை மதிக்கும் எண்ணம் மாணவர்களிடம் குறைந்து வருகிறது. இதற்கு சமுதாயம் சார்ந்த பல விஷயங்களை கூறலாம். ஒன்பதாம் வகுப்பு வரை 'ஆல்பாஸ்' என்பதால் மாணவர் பலர் பள்ளிக்கே வருவதில்லை. இதை யாரிடம் நாங்கள் கூறுவது. பெற்றோரிடம் கூறினால் தற்கொலை செய்துகொள்ளுவோம் என எங்களை மாணவர்கள் மிரட்டுகின்றனர். கண்டித்தால் ஆசிரியர்களை தாக்குகின்றனர். பெற்றோரும் கண்டிப்பதில்லை. அப்படியென்றால் மாணவரை எப்படி தான் கண்டித்து திருத்துவது?தேர்ச்சி குறைந்தால் அதிகாரிகளுக்கும் ஆசிரியர்கள் பதில் சொல்ல வேண்டும். மாணவர்களுக்கு பாடங்களுக்கு இணையாக நல்லொழுக்க கல்வி அளிப்பதிலும் அக்கறை காட்டும் வகையில் சமுதாய மாற்றம் ஏற்பட்டால் தான் மாணவர் சமுதாயம் நல்ல நிலைக்கு வரும். எதிர்காலம் சிறக்கும்.
ஆசிரியர்களுக்கு முழு உரிமை : கிறிஸ்டோபர் ஜெயசீலன், தலைமையாசிரியர், மதுரை: மாணவர்களை கண்டிப்பதற்கும், அரவணைக்கவும் ஆசிரியர்களுக்கு முழு உரிமை அளிக்க வேண்டும். தண்டித்தார் என்பதற்காக ஒரு மாணவர் கத்தியால் குத்தும் மனநிலைக்கு ஆளாகிறான் என்றால் எங்கே போகிறது கல்வி முறை என்று தான் வேதனைப்பட வேண்டும். டீன் ஏஜ் மாணவர்களை ஆசிரியர்கள் மிக கவனமாக கையாள வேண்டும். அவர்களுக்கு அனுபவ அறிவை புகட்ட வேண்டும். மேல்நிலைக் கல்வியில் மாணவர், மாணவிகளுக்கு என தனித்தனி உடற்கல்வி இயக்குனர்கள் நியமிக்க வேண்டும். உளவியல் ஆசிரியர் பணியிடம் ஏற்படுத்த வேண்டும். ஆசிரியர் பணிச்சுமையை குறைத்தால் தான் மாணவர் நலனில் அவர்கள் முழு கவனம் செலுத்த முடியும். அவ்வப்போது ஆசிரியர்களை மாணவர்கள் போற்றும் நிகழ்வுகள் நடத்தப்பட வேண்டும். ஒரு சில ஆசிரியரால் ஒட்டுமொத்த ஆசிரியர் சமுதாயத்தையும் குறை சொல்லி விட முடியாது. ஆசிரியர்களால் கண்டிக்கப்படாத மாணவர்கள் சமுதாயம் ஆரோக்கியமானதாக இருக்காது. பெற்றோர் இதை உணர வேண்டும்.
ஆசிரியரை குறை கூறாதீர் : ராஜேஸ்வரி, பெற்றோர், மதுரை: ஆசிரியர்களை நம்பி தான் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புகிறோம். ஒரு சில ஆசிரியர்களை வைத்து ஒட்டுமொத்த ஆசிரியர் சமுதாயத்தையும் குறையாக சொல்லி விட முடியாது.சிறந்த ஆசிரியர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். அதே நேரம் பெற்றோர் பிள்ளைகளுக்கு அதிக சுதந்திரம் கொடுக்கக் கூடாது. ஆசிரியர் தண்டித்தால் பிள்ளையின் எதிர்காலத்திற்கு தான் என நினைக்க வேண்டும். ஏன் தண்டித்தீர்கள் என அவர்களை அழைத்துக்கொண்டு ஆசிரியர்களிடம் சென்று நியாயம் கேட்கக் கூடாது. அப்படி செய்தால் ஆசிரியர்கள் மீது பிள்ளைகளுக்கு பயம் வராது. நல்ல சமுதாயம் உருவாக ஆசிரியர்கள் மீது பெற்றோர் நம்பிக்கை வைக்க வேண்டும். அந்த நம்பிக்கையை ஆசிரியர்களும் கெடுத்து விடக்கூடாது.
பெற்றோர், ஆசிரியர்நட்பு அவசியம் : தீப், மனநல மருத்துவர், மதுரை: சினிமா, 'டிவி'., நிகழ்ச்சிகள் மற்றும் மேற்கத்திய கலாசாரம் சில மாணவரை தவறான பாதைக்கு அழைத்து செல்கிறது. இதை நன்கு உணர்ந்து பெற்றோர், வீட்டிலேயே அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும். அப்போது தான் பள்ளியில் ஆசிரியர் கண்டித்தால், தனது நன்மை, வளர்ச்சிக்காகவே கண்டிக்கிறேன் என்பதை புரிந்து, படிப்பில் அக்கறை செலுத்துவர். மாணவரின் குணத்தை நல்வழிப்படுத்தும் அற்புத பணியில் ஆசிரியர்கள் உள்ளனர். இதை அவர்களும் உணர்ந்து செயலாற்ற வேண்டும். பள்ளியில் நடக்கும் கூட்டங்களில் பெற்றோர் பங்கேற்று மாணவர் செயலை கண்காணித்து, ஆசிரியர்களுக்கு ஒத்துழைப்பு தரவேண்டும். முன்பெல்லாம் ஆசிரியர்கள், தம் வகுப்பில் படிக்கும் மாணவரின் குடும்பத்தோடு பழகி, அவர்களின் ஒழுக்த்தை கண்காணித்து, நல்வழிப்படுத்த பெற்றோருக்கு உதவினர். இன்று அந்நிலை இல்லை. பெற்றோரும் பணம், அந்தஸ்துக்காக இயந்திரம்போல் செயல்படுவதை தவிர்த்து, தம் குழந்தைகளை நல்வழிப்படுத்துவதில் அக்கறை செலுத்த வேண்டும். ஆசிரியர்களும், மாணவரின் மனநிலையறிந்து கவனத்துடன் அவர்களை கையாண்டால் மட்டுமே, ஆசிரியர், மாணவர் இடையேயான மோதல் போக்கு தவிர்க்கப்படும்

தமிழகத்தில் 28 லட்சம் பேர் எழுதும் பொது தேர்வுகள் மார்ச்சில் துவக்கம்!!!

தமிழக பாடத்திட்டத்தில், பிளஸ் 2, பிளஸ் 1 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் 
தேர்வுகள், மார்ச் மாதம் துவங்க உள்ளன. இந்த தேர்வுகளில், 28 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். 3,500 பள்ளிகளில், தேர்வு மையங்கள் அமைக்கப்படுகின்றன.
தமிழக பள்ளிக் கல்வித்துறை பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, பொது தேர்வுகள் நடத்தப்பட்டு வந்தன. இந்த ஆண்டு முதல், பிளஸ் 1க்கும் பொது தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், பிளஸ் 2 மாணவர்களுக்கு, மார்ச், 1ல் பொது தேர்வு துவங்க உள்ளது. இதில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், ஒன்பது லட்சம் பேர் பங்கேற்கின்றனர். அவர்களில், 8.69 லட்சம் பேர், பள்ளிகளில் படிக்கும் மாணவ -- மாணவியர்.
தமிழகத்தில் இருந்து, 6,754 பள்ளிகளைச் சேர்ந்த, 8.52 லட்சம் மாணவ - மாணவியரும், புதுச்சேரியில், 147 பள்ளிகளைச் சேர்ந்த, 15,140 மாணவர்களும், பிளஸ் 2 தேர்வு எழுதுகின்றனர்.இத்தேர்வு எழுதுவோரில், 4.03 லட்சம் பேர் மாணவர்கள்; 4.64 லட்சம் பேர் மாணவியர். 5.48 லட்சம் பேர், அறிவியல் பாடப்பிரிவுகளில் தேர்வு எழுத உள்ளனர். வரலாறு பிரிவில், 14 ஆயிரம்; வணிகவியல், கணக்கு பதிவியல் பிரிவில், 2.42 லட்சம் பேரும் தேர்வு எழுதுகின்றனர். தொழிற்கல்வி பிரிவில் படிக்கும், 62 ஆயிரத்து, 751 பேரும், பிளஸ் 2 தேர்வு எழுதுகின்றனர். அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவை தொடர்ந்து, இந்தாண்டு, 279 தேர்வு மையங்கள் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளன.பிளஸ் 1 மாணவர்களுக்கு, இந்த ஆண்டு முதல், பொது தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது; மார்ச், 7ல் தேர்வுகள் துவங்குகின்றன. பிளஸ் 2 வகுப்புகள் அறிமுகமாகி, 40 ஆண்டு களில், பிளஸ் 1 மாணவர்கள், முதன் முறையாக பொதுத் தேர்வு எழுத உள்ளனர். இந்த ஆண்டு, 8.62 லட்சம் பேர், பிளஸ் 1 தேர்வு எழுத உள்ளனர். இவர்களில், 4.60 லட்சம் மாணவியர் அடங்குவர்.இத்தேர்வுகளுக்காக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 2,790 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மார்ச், 16ல் துவங்கும் 10ம் வகுப்பு தேர்வில், 10.70 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். அவர்களில், 5.10 லட்சம் பேர் மாணவியர்.

அண்ணாமலை பல்கலை ஊழியர்கள் 20 பேர் அண்ணா பல்கலைக்கு மாற்றம்

அண்ணாமலை பல்கலையில் உபரி இடங்களில் பணியாற்றிய, 20 ஊழியர்கள்,
அண்ணா பல்கலைக்கு, அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். அண்ணாமலை பல்கலையில், தற்போதுள்ள பணி தேவைகளை விட, 3,000க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் உட்பட, 10 ஆயிரம் பேர் உபரியாக இருப்பதாக, தமிழக அரசு கணக்கெடுத்துள்ளது.

பல்வேறு பிரிவு : இவர்களுக்கு, பல கோடி ரூபாய் சம்பளம் வழங்க வேண்டியுள்ளதால், ஆண்டுக்கு, 50 கோடி ரூபாய் வரை, கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது.தமிழக அரசின் தற்போதைய நிதி நிலைமை மிக மோசமாக உள்ளதால், அண்ணாமலை பல்கலையின் நஷ்டத்தை சரிக்கட்ட, தணிக்கை ஆய்வில் ஆலோசனை தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, அண்ணாமலை பல்கலையில், உபரியாக உள்ளவர்களை, பல்வேறு அரசு பல்கலை மற்றும் கல்லுாரி களுக்கு மாற்றும் நடவடிக்கையில், தமிழக அரசு, தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், அண்ணாமலை பல்கலையில் பணியாற்றும், 20 ஊழியர்கள் நேற்று, அண்ணா பல்கலைக்கு அதிரடியாக இடம் மாற்றப்பட்டு, சென்னை அலுவலகத்தில், பல்வேறு பிரிவுகளில் நியமிக்கப்பட்டனர். இந்த நியமனங்களால், அண்ணா பல்கலை உட்பட உயர்கல்வித் துறையின் பணியாளர்கள் சங்கத்தினர் அதிர்ச்சி அடைந்துஉள்ளனர்.
முக்கிய முடிவு : இதுகுறித்து, அண்ணா பல்கலை ஊழியர் ஒருவர் கூறியதாவது:அண்ணா பல்கலையில், 100க்கும் மேற்பட்டோர், தற்காலிக பணியாளர்களாக, 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகின்றனர். அவர்களை பணி நிரந்தரம் செய்யாமல், மற்ற பல்கலைகளில் இருந்து ஆட்களை தேர்வு செய்து, அண்ணா பல்கலைக்கு இடமாற்றம் செய்துள்ளனர். இதுகுறித்து, சங்கங்கள் கூடி, முக்கிய முடிவு எடுக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.