யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

21/5/18

JACTO-GEO இன்றைய(19.05.2018) தீர்மானங்கள்...

 1). 8.5.18 ல் முற்றுகை போராட்டத்தில் பங்கேற்ற அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு நன்றி.

🔴 2.)8.5.18 அரசு ஊழியர் ஆசிரியர்கள் போராட்டத்திற்கு முழு ஒத்துழைப்பு அளித்த பத்திரிக்கை & ஊடகங்களுக்கு நன்றி.

🔴 3) 8.5.18 ல் முற்றுகை போராட்டத்தில் கைது, வழக்கு மற்றும் முள்வேலி அமைத்த அரசுக்கு கண்டனம்

🔴 4). 8.5.18 ல் முற்றுகை போராட்டத்தில் பங்கேற்ற அரசு ஊழியர் ஆசிரியர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை கைவிடவேண்டும்

🔴 5). JACTO-GEOவை பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும்


🔴 6). 11.06.18 அன்று சென்னையில் JACTO-GEO‌ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் பங்கேற்கும் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம்

🔴 7). 11.06.18 முதல் உண்ணாவிரதம் முடியும் வரை மாவட்டங்களில் ஆட்சியர் அலுவலகம் முன்பு மாலை நேரத்தில் தொடர் ஆர்பாட்டங்கள்

🔴 8).JACTO-GEO விலிருந்து பிரிந்து சென்ற  அமைப்புகளை வரவேற்றல்...

சிபிஎஸ் ஒழிப்பே முதல் கோரிக்கை, தமிழ்நாட்டில்  சிபிஎஸில் உள்ள 5 லட்சம் அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் பங்கேற்று வெற்றி பெறச்செய்யுங்கள்

போராடப் போக வேண்டாம் என்று தடுக்கும் தலைமை யாராக இருந்தாலும் அவர்களைப் புறந்தள்ளி, போராட்டக்களம் நோக்கி வாருங்கள்.

இவண்

ஜாக்டோ ஜியோ

பள்ளி மாணவர்கள் முதல்வருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம் -காரணம் என்ன ?

தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகள் மற்றும் இடங்களின் எண்ணிக்கை

பிறப்புச் சான்றிதழில் தந்தையின் பெயர் தேவையில்லை!

பிறப்புச் சான்றிதழில் தந்தையின் பெயர் தேவையில்லை எனச் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

சமூகத்தில் ஒரு குழந்தையை அதைப் பெற்ற தாயின் மூலம் அடையாளம் காண்பதில்லை. தந்தையின் பெயரில்தான் எந்தக் குழந்தையும் அடையாளப்படுத்தப்படுகிறது. தாயின் மகத்தான பங்களிப்புக்கு எந்த அங்கீகாரமோ அல்லது மரியாதையோ அளிக்கப்படுவதில்லை. உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு தந்தையின் பெயரில் ஒரு நபரை அல்லது குடிமகனை அடையாளம் காணும் ஆணாதிக்க முறைக்குப் பலத்த அடியை அளித்துள்ளது.
திருச்சியைச் சேர்ந்த மதுமிதா ரமேஷ் என்பவருக்கும் சரண் ராஜ் என்பவருக்கும் திருமணமானது. அவர்கள் சில காலம் கழித்து கருத்து வேறுபாடுகளின் காரணமாக பரஸ்பர சம்மதத்தின்பேரில், விவகாரத்து பெற்றுப் பிரிந்து விட்டனர். இதைத் தொடர்ந்து மதுமிதா ‘இன்ட்ராயுட்டீரைன் பெஃர்ட்டில்லி’ என்ற செயற்கை கருத்தரிப்பு முறையில் விந்து கொடையின் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டார்.

2017 ஏப்ரலில் பிறந்த குழந்தைக்கு தவிசி பெராரா என்று பெயர் சூட்டப்பட்டது. இந்தக் குழந்தைக்கு திருச்சி மாநகராட்சி ஆணையர் அளித்த பிறப்புச் சான்றிதழில் தந்தையின் பெயராக மனிஷ் மதன்பால் என்பவரது பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. மதன்பால் என்பவர் மதுமிதாவின் சிகிச்சைக்கு உதவினார் எனத் தெரிகிறது. இதைத் தொடர்ந்து மதன்பாலின் பெயரை நீக்க வேண்டும் என திருச்சி மாநகராட்சியி்ல் மதுமிதா மனு அளித்திருந்தார். அதற்கு மாநகராட்சி அதிகாரிகள் தந்தையின் பெயரில் திருத்தம்தான் செய்யலாம். ஆனால், நீக்க முடியாது என்று கூறி மறுத்து விட்டனர்.

இதைத் தொடர்ந்து மதுமிதா சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த முதல் வழக்கில் தோல்வியடைந்தார். பின்னர் இரண்டாவது வழக்கில் வெற்றி பெற்றுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள முதல் வழக்கில் வருவாய்த் துறை அதிகாரிகள் பிறப்புச் சான்றிதழில் உள்ள தவற்றைச் சரி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால், வருவாய்த் துறை பிறப்பு இறப்புகளைப் பதிவு செய்யும் பதிவாளர்தான் இது தொடர்பாக முடிவு எடுக்க அதிகாரம் உள்ளவர் என்று நீதிமன்றத்துக்குப் பதில் கூறி விட்டது. பின்னர் மனம் தளராமல் இரண்டாம் முறையாக வழக்கு தொடர்ந்தார் மதுமிதா.

இதற்கிடையில் மதுமிதாவின் முன்னாள் கணவர் சரண் ராஜும் மதன்பாலும் தாங்கள் குழந்தைக்கு எந்தவிதத்திலும் தொடர்புடையவர்கள் அல்ல என்று கூறி தனித்தனியே மனுக்களைத் தாக்கல் செய்தனர்.

வழக்கின் விசாரணை நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பாக நடைபெற்றது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, “மதுமிதா இன்ட்ராயுட்டீரைன் பெஃர்ட்டில்லி என்ற செயற்கை கருத்தரிப்பு முறையில் விந்து கொடை மூலம் குழந்தை பெற்றுள்ளார். எனவே, இந்தக் குழந்தைக்கும் சரண் ராஜுக்கும் மதன்பாலுக்கும் சம்பந்தமில்லை. எனவே, மதுமிதாவே இந்த வழக்கில் வெற்றி பெற்றுள்ளார்.

திருச்சி மாநகராட்சி பிறப்புச் சான்றிதழில் தந்தை என்ற பெயரில் உள்ள மதன்பாலின் பெயரை நீக்க வேண்டும். பிறப்புச் சான்றிதழில் தந்தையின் பெயர் உள்ள இடமானது வெற்றிடமாக இருக்கலாம் என்று மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்படுகிறது.

மாநகராட்சி அதிகாரிகள் குழந்தையின் பிறப்புச் சான்றிதழில் தந்தை பெயர் அவசியம் இருக்க வேண்டும் என்று வற்புறுத்துவதற்குத் தடை விதிக்கப்படுகிறது” எனத் தீர்ப்பளி்த்துள்ளார்.

புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் பள்ளிகளில் 15 நாள் கூடுதல் வகுப்பு: 170 நாளுக்கு பதில் 185 நாள் பாடம் நடத்த உத்தரவு

புதிய  பாடத்திட்டத்தின்படி, கூடுதலாக 15 நாட்கள் பாடம் நடத்த வேண்டி இருப்பதால்  ஜூன் 1ம் தேதியே பள்ளிகள் திறக்கப்படுகிறது.
இந்த கல்வியாண்டில் 170 நாட்களுக்கு பதில் 185 நாள் பாடம் நடத்தப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். தமிழக பள்ளிகளில் பழைய பாடத்திட்டத்தை மாற்ற வேண்டும் எனப் பல்வேறு கல்வி அமைப்புகள் நீண்ட காலமாகக் கோரிக்கை விடுத்து வந்தன. அந்தக் கோரிக்கைக்கு செவி சாய்க்கும் வகையில், அனைத்து வகுப்புகளுக்கும் அடுத்த மூன்று ஆண்டுகளில் புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்படும் என்றும் 1, 6, 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கு இந்த கல்வியாண்டு முதல் புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்படும் என்றும் கடந்த ஆண்டு மே மாதம் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. 

இதற்கான வரைவுப் பாடத்திட்டத்தைக் கடந்த நவம்பர் மாதம் 20-ம் தேதி வெளியிட்டு, பாடத்திட்டம் குறித்த கருத்துகளைத் தெரிவிக்குமாறு பொதுமக்களுக்குத் தமிழக அரசு அறிவுறுத்தியிருந்தது. தற்போது அனைத்து பணிகளும் முடிந்து தயார்நிலையில் உள்ளன. இதுகுறித்து கோபி அருகே உள்ள கொடிவேரியில் பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது: புதிய  பாடத்திட்டம் வருடத்துக்கு 185 நாட்கள் நடத்தும் வகையில்  அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை 170 நாட்கள்தான் பாடம் நடத்தப்பட்டது.  அதனால்தான் ஜூன் 1ம் தேதியே பள்ளிகள் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. புதிய பாடத்திட்டம் மாணவர்கள் ஆர்வத்தை தூண்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி  மாவட்டத்தில் ஒரு பள்ளியில் 29 மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை. இதுபற்றி  விசாரித்தபோது, அங்குள்ள மாணவர்கள் தெலுங்கு மொழி அதிகம் பேசுவதால்தான்  என்பதும், நமது ஆசிரியர்களுக்கு தெலுங்கு மொழி குறித்த பயிற்சி இல்லை  என்பதும் தெரியவந்தது. தெலுங்கு மொழி பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், தகுதி தேர்வில் கலந்து கொண்டால் முன்னுரிமை அளிக்கப்பட்டு பணி நியமனம் செய்யப்படும். 1 முதல் 5, 6 முதல் 8, 9 மற்றும் 10, 11 மற்றும் 12 ஆகிய வகுப்புகளுக்கு நான்கு வகையான சீருடைகள் மாற்றப்பட்டுள்ளது. 

அதேபோன்று க்யூஆர் கோடு மூலம் மாணவர்கள் புத்தகங்களை செல்போனிலேயே டவுன்லோட் செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி முடிந்து, முடிவுகளை வெளியிட தயார் நிலையில் உள்ளது. அரசு பள்ளி மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, செப்டம்பர் மாதம் வரை சேர்க்கை நீட்டிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

பிளஸ் 2க்கும் இனி 600 மதிப்பெண்தான்
பிளஸ் 2 படிப்பில் 6 பாடங்களுக்கு தலா 200 மதிப்பெண்கள் என 1200  மதிப்பெண்கள் என்று மதிப்பிடப்பட்டது. இந்த மதிப்பெண் முறை இந்த ஆண்டுடன்  முடிவுக்கு வருகிறது. வரும் கல்வியாண்டில் பிளஸ் 2வில் உள்ள 6 பாடத்திற்கும் இனிமேல் தலா 100 மதிப்பெண் வீதம் 600 மதிப்பெண் மட்டுமே கணக்கிடப்படும். ஏற்கனவே பிளஸ்1 வகுப்பில் ஒரு பாடத்துக்கு 200  மதிப்பெண்கள் என்பதை மாற்றி 100 மதிப்பெண்கள் வழங்கும் நடைமுறை கடந்த கல்வி  ஆண்டிலேயே அமல்படுத்தப்பட்டது. 

அதேபோல் பிளஸ்2 வகுப்பிலும் 2018-19ம் ஆண்டு முதல் அமல்படுத்தப்பட்ட பள்ளிக்கல்வித்துறை  திட்டமிட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அத்துடன் பிளஸ்2க்கு  மட்டும் தனியாக மதிப்பெண் சான்றிதழ் என்பதை மாற்றி பிளஸ்1க்கு என்று  தனியாகவும், பிளஸ்2க்கு என்று தனியாகவும் மதிப்பெண் சான்றிதழ்  வழங்கப்படும். முடிவில் இரண்டு வகுப்புகளுக்கும் சேர்த்து ஒருங்கிணைந்த சான்றிதழ் வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிளஸ் 2 தேர்வு, 'கட் ஆப்' மதிப்பெண் மவுசு...குறைகிறது! நுழைவு தேர்வுக்கு அதிகரிக்கும் முக்கியத்துவம்   இன்ஜி., படிப்புகளுக்கும் அதிகம் தேவையில்லை

நீட்' போன்ற, தேசிய அளவிலான நுழைவு தேர்வுகள் காரணமாகவும், அவற்றுக்கான முக்கியத்துவம் அதிகரித்துள்ளதாலும், பிளஸ் 2 தேர்வு, 'கட் ஆப்' மதிப்பெண்ணுக்கான மவுசு, குறைந்து வருகிறது. 
இன்ஜி., கல்லுாரிகளிலும், ஏராளமான இடங்கள் இருப்பதால், 'கட் ஆப்' மதிப்பெண்கள் அவசியமற்றதாக மாறி வருகின்றன'

தமிழகத்தில், மருத்துவம் மற்றும் இன்ஜினியரிங் படிப்பில், மாணவர்களை சேர்க்க, 1984ல், நுழைவு தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த தேர்வு, அண்ணா பல்கலை மற்றும் மருத்துவ பல்கலையால் நடத்தப்பட்டது. ஆனால், இந்த தேர்வில், கிராமப்புற மாணவர்களால், பெரிதாக ஜொலிக்க முடியவில்லை. அரசியல் கட்சிகளின் கடும் எதிர்ப்பாலும், உயர் நீதிமன்ற உத்தரவாலும், நுழைவு தேர்வு முறை, 2006ல், ரத்து செய்யப்பட்டது.

நாளுக்கு நாள்
இதையடுத்து, ஒற்றை சாளர கவுன்சிலிங் வழியாக, மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இந்த கவுன்சிலிங் முறைக்கு, பிளஸ் 2 தேர்வில், முக்கிய பாடங்களில், மாணவர்கள் பெறும்மதிப்பெண்களை கணக்கிட்டு, 'கட் ஆப்' மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டது. எனவே, கட் ஆப் மதிப் பெண்ணை கணக்கிட்டு, இடங்கள் ஒதுக்கப் படுகின்றன.


இந்நிலையில், மீண்டும் நுழைவு தேர்வு வந்துள்ள தால், கட் ஆப் மதிப்பெண்ணுக்கான மவுசும், நாளுக்கு நாள் குறைந்தவண்ணம் உள்ளது. மருத்துவ படிப்புக்கான, நீட் தேர்வு அமலுக்கு வந்துள்ளது. நீட் தேர்வை எழுத, பிளஸ் 2 தேர்ச்சி யுடன், இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியலில், பொதுப் பிரிவினர், 50 சதவீதமும், பொதுப்பிரிவு மாற்றுத் திறனாளிகள், 45 சதவீதம், மற்ற இனத்தவர், 40 சதவீதமும் மதிப்பெண் பெற வேண்டும்.


'ரேங்க்' பட்டியல் தயாரிப்பில், பிளஸ் 2 தேர்வின், கட் ஆப் எவ்வளவு என்ற கேள்விக்கே இடமில்லை. நீட் நுழைவு தேர்வு மதிப்பெண் மட்டுமே கணக்கில் எடுக்கப்படுகிறது. இதனால், மருத்துவத்தில், கட் ஆப் தேவை இல்லாமல் போய் விட்டது. அதேநேரம், 'பாரா மெடிக்கல்' என்ற மருத்துவ சார் படிப்புகளுக்கு, கட் ஆப் பார்க்கப்படுகிறது.

இன்ஜினியரிங்
இன்ஜினியரிங் கல்லுாரிகளில் மாணவர்கள் சேர்க் கையை பொறுத்தவரை,மாணவர்களின் எண்ணிக் கையை விட, இரண்டு மடங்கு அதிகமாக, இடங்கள் உள்ளன. தற்போது, இன்ஜினியரிங் படிப்பிற்கு தகுதியான, கணித பாடப் பிரிவில், நான்கு லட்சம் பேர் படித்து, பிளஸ் 2 தேர்ச்சி பெறுகின்றனர். இவர்களில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள், கலை, அறிவியல் கல்லுாரிகளுக்கும், மற்ற படிப்புகளுக்கும்செல்கின்றனர். 1.50 லட்சம் மாணவர்கள், இன்ஜினியரிங் உள்ளிட்ட பல்வேறு படிப்பு களில், தனியார் கல்லுாரிகளில், நிர்வாக ஒதுக்கீட்டில் சேருவர்.
மீதமுள்ள, 1.50 லட்சம் பேர் மட்டுமே, இன்ஜி., கவுன்சிலிங்குக்கு வருகின்றனர். அவர்களுக்கும், தேவையை விட பல மடங்கு அதிகமாக இடங்கள் உள்ளதால், கட் ஆப் இருந்தால் தான், இன்ஜினியரிங் இடம் கிடைக்கும் என்ற, தேவை இல்லாமல் போய்விட்டது.

மொத்தம் உள்ள, 550 கல்லுாரிகளில், முன்ன ணியில் உள்ள, 50 கல்லுாரிகளுக்கு மட்டுமே, கட் ஆப் மதிப்பெண் அதிகமாக தேவைப்படு கிறது. சிலர், கட் ஆப் அதிகம் பெற்றிருந் தாலும், தங்கள் சொந்த மாவட்டம் மற்றும் தங்களுக்கு பிடித்த கல்லுாரியை, ஏற்கனவே முடிவு செய்து, அதில் சேர்ந்து விடுகின்றனர். எனவே, கட் ஆப் மதிப்பெண்ணுக்கான மவுசு குறைந்த வண்ணம் உள்ளது.

அறிவித்தபடி, 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் குறிப்பிட்ட தேதியில் வெளியாகும் அமைச்சர் திட்டவட்டம்

அறிவித்தபடி, 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் குறிப்பிட்ட தேதியில் 
வெளியாகும். இதில் எவ்வித மாற்றமில்லை,'' என, பள்ளிக்கல்வித்துறை 
அமைச்சர், செங்கோட்டையன் கூறினார்.
ஈரோடு மாவட்டம், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை 
சார்பில், கொடிவேரி தடுப்பணை வளாகத்தில், விழிப்புணர்வு மையம் திறப்பு
 விழா நேற்று நடந்தது. மையத்தை திறந்து வைத்த அமைச்சர் 
செங்கோட்டையன், நிருபர்களிடம் கூறியதாவது:தமிழகத்தில், ஜூன், 1ல்
 அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும். ஏனெனில், புதிய பாடத்திட்டத்தின் படி,
 குறைந்தது, 185 நாள், மாணவர்களுக்கு பாடம் நடத்த வேண்டியுள்ளது. 
அதனால், ஜூன், 1ல், பள்ளிகளை திறக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இந்தியாவே வியக்கும் அளவில், பாடத்திட்டம் அமைந்துள்ளது. இதை,
 அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். எழுத்துக்களின் அச்சு 
வடிவங்கள், மல்டி கலரில் படங்கள் என, மாணவர்களிடம் பயிலும் 
ஆர்வத்தை துாண்டும் வகையில், புதிய பாடத்திட்டம் அமைக்கப்
பட்டுள்ளது.சீருடைகளை மாற்றி அமைக்க, அரசு நடவடிக்கை
 மேற்கொண்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களை
 உருவாக்க, அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.பத்தாம் வகுப்பு தேர்வு
 முடிவுகள், குறிப்பிட்ட தேதியில் முறையாக அறிவிக்கப்படும்.இவ்வாறு 
அவர் கூறினார்.வரும், 23ம் தேதி, 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் 
வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதில், மாற்றம் இருக்கும் 
என செய்திகள் வெளியானதால், மாணவர்கள், பெற்றோர் குழப்பம் 
அடைந்தனர். இந்நிலையில், 'திட்டமிட்டபடி வெளியாகும்; மாற்றமில்லை'
 என அமைச்சர் கூறியுள்ளதால், மாணவர், பெற்றோர் நிம்மதி 
அடைந்துள்ளனர்.. 

மருத்துவ மாணவர்கள் சேர்க்கை 2019ல் 'ஆன்லைன் கவுன்சிலிங்'

மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை, அடுத்தாண்டு முதல், 'ஆன்லைன்' முறையில் நடைபெறும்' என, மருத்துவ கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவித்தனர்.'தமிழகத்தில், முதுநிலை மற்றும் இளநிலை
மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சிலிங், ஆன்லைன் முறையில் நடைபெறும்' என, மருத்துவ கல்வி இயக்கக அதிகாரிகள், கடந்தாண்டு அறிவித்திருந்தனர்.ஆனால், வழக்கம் போல், நேர்முக அடிப்படையில் தான், கவுன்சிலில் நடந்து வருகிறது. இதற்கு, தமிழக அரசின் குழப்ப நிலையே காரணம் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.இது குறித்து, மருத்துவ கல்வி இயக்கக அதிகாரிகள் கூறியதாவது:கடந்த ஆண்டே, மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சிலிங்கை, 'ஆன்லைன்' முறையில் நடத்த திட்டமிட்டிருந்தோம்.ஆனால், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்.,படிப்புகளுக்கானமாணவர் சேர்க்கை, 'நீட்' தேர்வா அல்லது பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலா என்ற குழப்பம் இருந்தது.அரசு, 'நீட்' தேர்வில் இருந்து விலக்கு பெறும் நம்பிக்கையில் இருந்ததால், 'ஆன்லைன் கவுன்சிலிங்' முறையில் சிக்கல் இருந்தது.தற்போது, நீட் தேர்வு உறுதியாகி விட்டதால், அடுத்தாண்டு முதல், ஆன்லைன் முறையில், மருத்துவ கவுன்சிலிங் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். இதனால், கவுன்சிலிங் நடத்துவதற்கான செலவு குறையும். மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கும் அலைச்சல் இருக்காது.
இவ்வாறு அவர்கள் கூறினர்

18/5/18

அரசுப்பள்ளி மாணவர் நிலை - பெற்றோர் ஒத்துழைப்பு இல்லை - தி ஹிந்து கட்டுரை



பள்ளிகளில் நடைபெறும் சிறப்பு வகுப்புகளுக்குக் கற்றல் திறன் குறைவான மாணவர்கள் அதிகம் பங்கேற்பதில்லை.

தொலைபேசியில் அழைத்தால் சுவிட்ச்ஆப். நேரில் சென்றால் பெற்றோரின் பொறுப்பற்ற பதில். இவற்றையெல்லாம் கடந்து எப்படி ஓர் ஆசிரியரால் முழுமையான தேர்ச்சியைத் தர இயலும்?


அரசு - ஆசிரியர் - மாணவர் - பெற்றோர் ஆகியோரின் கூட்டுச் செயல்பாடே கல்வியும் தேர்ச்சியும். அரசு ஒரு திட்டத்தைச் சொல்கிறது. ஆசிரியர்கள் அதைச் செயல்படுத்துகின்றனர். மாணவர்கள் சிலர் அதில் பங்கேற்கின்றனர். பெற்றோர்? அதுதான் கேள்விக்குறி. 

இத்தனை வருட ஆசிரியர் பணியில், கற்றல் குறைவான மாணவர்களின் பெற்றோர் வந்து ஆசிரியரைச் சந்தித்துத் தன் பிள்ளையின் நிலையைக் குறித்துக் கேட்பது என்பது 205 பள்ளி நாட்களில் ஒன்றிரண்டு முறை மட்டுமே. இது எவ்வளவு பெரிய அவலம்?

அதிகாலையில் தன் பிள்ளையை எழுப்பவும், இரவில் தன் பிள்ளையை விசாரிக்கவும் ஆசிரியர் இருக்கிறார் என்றால் பெற்றோர் எதற்கு? ஒரு பெற்றோர் செய்யவேண்டிய கடமையை, ஏன் ஆசிரியர்கள் தம் பணியாக, சுமையாகக் கருதவேண்டும்? 

சனி, ஞாயிறு சிறப்பு வகுப்பிற்கு உங்கள் பிள்ளை ஏன் வரவில்லை என்று கேட்டால், நான் போகத்தான் சொன்னேன். அவன் போகவில்லை என்கிற அலட்சியமான பதில்தான் பெற்றோரிடமிருந்து வருகிறது. பிள்ளையைப் பெறவது மட்டும்தான் பெற்றோரின் கடமையா? ஓர் ஆசிரியருக்கென்று குடும்பம், பிள்ளைகள் இல்லையா? அவர்களை யார் கவனிப்பார்கள்?

ஒரு பள்ளியில் சமீபத்தில் நடந்த விஷயம். ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு நாட்டாமை வாத்தியார் இருப்பார். அவர்தான் எல்லாமே. அவரிடம் பத்தாம் வகுப்பு மாணவர்கள் போய், ஐயா! வாத்திமார்கள் சிறப்பு வகுப்பு, இரவு வகுப்பு வைத்து டார்ச்சர் செய்கிறார்கள்! என்று சொல்லியிருக்கிறார்கள். அதைக் கேட்ட அவர், உடனடியாக ஆசிரியர்களை அழைத்து மாணவர்களைத் தொந்திரவு செய்யாதீர்கள்.

சனி, ஞாயிறு பள்ளி வைத்தால் பிரச்னை வரும் என்றாராம். அதற்கு அந்த ஆசிரியர்கள், அவன் ஒழுங்கா ஒரு மதிப்பெண், 2 மதிப்பெண் படித்தாலே பாஸ். அவன் படிக்காமல் போனால்தானே இத்தனை சிறப்பு வகுப்புகள். அவன் ஒழுங்காக படித்தால் நாங்கள் ஏன் சிறப்பு வகுப்புகள் வைக்கிறோம்? என்றார்களாம். நாட்டாமை முகத்தில் ஈ ஆடவி்ல்லை. உண்மை அதுதான்.

தேர்ச்சிக்கான 35 மதிப்பெண்களைப் பெற ஒரு மதிப்பெண், 2 மதிப்பெண் வினா பகுதிகள் போதுமானது. இதை வாசிக்க முடியாத மாணவர்களுக்காக அரசும் ஆசிரியர்களும் படாதபாடு படுகிறார்கள். பெற்றோர்கள் வழக்கம்போல் பள்ளியில் பிள்ளைகளுக்கு வரும் உதவித்தொகைக்குக் கையெழுத்து இடுவதற்காகக் காத்திருக்கிறார்கள்.

ஒரு மாணவனின் அலட்சியமான உழைப்பும், பெற்றோரின் பொறுப்பற்ற குணமும்தான் ஆசிரியர்களையும் அரசையும் பாடாய்ப்படுத்துகிறது. அரசுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையே சிக்கிக்கொண்டு திண்டாடுபவர்கள் கல்வி அதிகாரிகள். பாவம் அவர்கள். இதற்கு எல்லாம் யார் காரணம்? கற்க விரும்பாத மாணவனும், அவர்களின் அலட்சிய பெற்றோரும்தான்.

ஒன்றை மட்டும் நினைவுகொள்ளுங்கள். தமிழகத்தில் உள்ள அத்தனை பத்தாம் வகுப்பு ஆசிரியர்களும் உடல்நலத்தில் 100 சதவீதம் சரியானவர்கள் இல்லை. தமிழகத்தில் உள்ள முக்கியமான நோய்கள் அனைத்தும் அவர்களுக்கு உண்டு. சராசரியாக ஒவ்வொரு ஆசிரியருக்கும் ஒவ்வொரு நோயாவது கட்டாயமாக இருக்கிறது. அதைக் கடந்து, மறந்துதான் பாடம் கற்பிக்க வருகிறார்கள்.

பெற்றோர்களுக்கு சில கேள்விகள்:

* அரசும் ஆசிரியர்களும் படாதபாடு படும்போது பெற்றோர்கள் ஏன் சும்மாக இருக்கிறார்கள்?

* மாணவர்கள் வழியாக ஆசிரியர்களுக்கு வரும் மன அழுத்தத்திற்கும், இரத்தக் கொதிப்பிற்கும் அவர்களின் பெற்றோர் என்ன பதில் சொல்லப்போகிறார்கள்?

* கற்றல் திறன் குறைவான மாணவர்களின் பெற்றோர்கள் ஏன் தன் பிள்ளைகளைக் குறித்து அவ்வப்போது ஆசிரியர்களிடம் கேட்க வருவதில்லை?


* பள்ளியில் அறிவை வளர்த்துக்கொள்ள வராமல், கற்றல் திறன் குறைவான மாணவர்களின் பெற்றோர்கள் பிள்ளைகளை ஏன் ஒழுங்குபடுத்துவதில்லை?

* பள்ளியில் தீயப் பழக்கத்துடன் வலம் வரும் கற்றல் திறன் குறைவான மாணவர்களின் பெற்றோர்கள் என்ன அறிவுரை கூறி வளர்க்கிறார்கள்?

* தினமும் பிள்ளையை அருகில் அமரவைத்து. அன்றன்று நடந்த பாடத்தில் உள்ள வினாக்களைப் படிக்கச் சொல்லிக் கேட்டிருக்கிறீர்களா? ஒப்பிக்க வைத்துப் பார்த்திருக்கிறீர்களா?

* பள்ளியில் பாடத்தைக் கற்பிப்பதும் புரியவைப்பதும் பயிற்சி தருவதும் ஆசிரியர் வேலை. வீட்டில் அவனை இரவில் படிக்கவைப்பதும். அதிகாலையில் கோழி கூவுவதற்கு முன்பு எழப்பிவிட்டு வாசிக்கவைப்பதும் பெற்றோரின் வேலை. அதை ஆசிரியர்கள் ஏன் செய்யவேண்டும்? உங்களின் பொறுப்பற்ற செயல்தான் ஆசிரியர்களுக்குத் தேவையற்ற சுமையாகிறது… பொறுப்பாகிறது.

அரசு தன் கடமையைச் சரியாகச் செய்கிறது. பள்ளிக்கும் ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் கோடிக்கணக்காகச் செலவழிக்கிறது. ஒரு பள்ளி தன் பணியைச் சரியாகச் செய்கிறது. ஆசிரியர்கள் நன்றாகத்தான் கற்பிக்கிறார்கள்... பயிற்சி தருகிறார்கள். நீங்களும் உங்கள் பிள்ளைகளும் அரசுக்கும் கல்வித்துறைக்கும் என்ன கைம்மாறு செய்யப்போகிறீர்கள்?

நன்றி

தி ஹிந்து

உயிரியல், பொருளியலில் மதிப்பெண், 'பணால்'

பிளஸ் 2 தேர்வில், பாட வாரியான தேர்ச்சியில், உயிரியல் மற்றும் பொருளியல் பாடங்களில், மதிப்பெண் குறைந்துள்ளது.
பிளஸ் 2 பாடவாரியான தேர்ச்சியில், புவியியல் மற்றும் ஊட்டச்சத்து, உணவு பதப்படுத்துதல் பாடத்தில், அதிகபட்சமாக, 99 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொழி பாடங்கள் மற்றும் ஆங்கிலத்தில், 97 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.இயற்பியல், கணிதம், 96; வேதியியல், 95; உயிரியல், 96.34; தாவரவியல், 94 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். விலங்கியலில், 92 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். விலங்கியலில் வினாத்தாள் மிகவும் கடினமாக இருந்ததாக, நமது நாளிதழில், ஏற்கனவே செய்தி வெளியாகியிருந்தது. உயிரியல் மற்றும் விலங்கியல் தேர்வில் பெரும்பாலான மாணவர்கள், 90 சதவீதத்திற்கு மேல் தேர்ச்சி பெற்றிருந்தாலும், 150 மதிப்பெண் வரை மட்டுமே பெற்றுள்ளனர். பொருளியல் மற்றும் வணிகவியல் பாடங்களிலும், மாணவர்களின் மதிப்பெண்ணும், தேர்ச்சி சதவீதமும் குறைந்துள்ளது. குறைவாக வணிகவியலில், 90; பொருளியலில், 91 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். 

கலை, அறிவியல் கல்லூரிக்கு மவுசு

பிளஸ் 2 தேர்வில், முக்கிய பாடங்களில் மதிப்பெண் குறைந்துள்ளதால், அதிக மாணவர்கள் கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் சேர வாய்ப்புள்ளதாக, கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பிளஸ் 2 தேர்வு முடிவில், 60 சதவீத மாணவர்கள், 800க்கும் குறைவான மதிப்பெண் பெற்றுள்ளனர். இவர்களில், இன்ஜி., கல்லுாரிகளில் சேர்வதற்கு, தகுதியான கணித பாடப்பிரிவில், 4.22 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில், 50 சதவீதம் பேர் மட்டுமே, இன்ஜினியரிங் படிப்பில் சேர வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. மற்றவர்கள், கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் அதிக அளவுக்கு சேர வாய்ப்புள்ளது.
தேர்வு முடிவு குறித்து, கல்வி ஆலோசகர், ஜெயப்பிரகாஷ் காந்தி கூறியதாவது:இந்த ஆண்டு, மாணவர்களின் மதிப்பெண் முறையை பார்க்கும் போது, 60 சதவீதம் பேர், 800 மதிப்பெண்ணுக்கு குறைவாக பெற்றுள்ளனர். எனவே, இன்ஜினியரிங் படிப்புக்கான, கட் - ஆப் மதிப்பெண்ணில், ஐந்து முதல் எட்டு வரை குறைய வாய்ப்புள்ளது. முதல், 10 இடங்களில் உள்ள கல்லுாரிகள் தவிர, மற்ற கல்லுாரிகளில் இடம் பெறுவதில், போட்டிகள் குறையும். கலை மற்றும் அறிவியல் பாடப்பிரிவுகளில், அதிக மாணவர்கள் சேர வாய்ப்புள்ளது. அரசு தேர்வுத்துறை சார்பில், மாணவர்களின், 'சென்டம்' பட்டியல் வெளியிட்டிருந்தால், மாணவர்கள் உயர்கல்விக்கு திட்டமிட உதவியாக இருந்திருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

மருத்துவ படிப்புக்கு கவுன்சிலிங் எப்போது?

சென்னை: ''தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான கவுன்சிலிங், ஜூன், மூன்றாம் வாரம் துவங்கும்,'' என, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
மருத்துவ படிப்புகளுக்கான, 'நீட்' நுழைவு தேர்வு, மே, 6ல், நடந்தது. இதன் முடிவு, ஜூன், 5ல் வெளியாக உள்ளது. பிளஸ் 2 தேர்வு முடிவுகள், நேற்று வெளியாகி உள்ளதால், மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சிலிங் எப்போது துவங்கும் என்ற எதிர்பார்ப்பு, மாணவர்களிடம் எழுந்துள்ளது.

இதுகுறித்து, சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் கூறுகையில், ''எம்.பி.பி.எஸ்., -- பி.டி.எஸ்., மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங், ஜூன் மூன்றாம் வாரத்தில் நடைபெறும்,'' என்றார்.

காமராஜ் பல்கலை தேர்வில் மாற்றம்

மதுரை: மதுரை காமராஜ் பல்கலை தொலைநிலை கல்வி கூடுதல் தேர்வாணையர் ராஜராஜன் தெரிவித்துள்ளதாவது:
ஜூன் 13ல் துவங்க இருந்த எம்.பி.ஏ., எம்.சி.ஏ., அல்பருவ தேர்வுகள் மாணவர் நலன் கருதி ஜூன் 6ல் துவங்குகின்றன. மேலும், மே 25ல் துவங்கும் பி.எட்., மே 31ல் துவங்கும் அனைத்து யு.ஜி., ஜூன் 6ல் துவங்கும் அனைத்து பி.ஜி., ஜூன் 13ல் துவங்கும் பி.ஜி., சான்றிதழ், டிப்ளமா படிப்பு அல்பருவத் தேர்வுக்கு, அபராதத்துடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் நாளைக்குள் (மே 18) சமர்ப்பிக்க வேண்டும். எம்.சி.ஏ., எம்.பி.ஏ.,விற்கு மே 21ல் சமர்ப்பிக்கலாம். தேர்வு கட்டணம் எஸ்.பி.ஐ., ஆன்லைன் பேமென்ட் மூலம் மட்டும் செலுத்த வேண்டும். www.mkudde.org இதற்கான விண்ணப்பம் பெற்று விபரம் அறியலாம், என தெரிவித்துள்ளார்.

ஊதிய முரண்பாடுகள் களையும் குழுவிடம் அறிக்கைகள் தொடர்ந்து அளிப்பு

ஊதிய முரண்பாடுகளைக் களையும் குழுவிடம் அறிக்கைகள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து எழுந்த முரண்பாடுகள் குறித்து அறிக்கைகள், கோரிக்கை மனுக்களை அளிக்கலாம் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது. இதற்காக, நிதித் துறை செயலாளர் (செலவினம்) எம்.ஏ.சித்திக் தலைமையில் ஒருநபர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவிடம் தனிநபர்களும், அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களைச் சேர்ந்தவர்களும் கோரிக்கை மனுக்களை அளித்து வருகின்றனர். மனுக்களை அளிக்க மே 15 கடைசி நாள் என தமிழக அரசு அறிவித்திருந்தாலும் தொடர்ந்து மனுக்களை அளிக்கலாம் எனக் கூறியுள்ளது. மனுக்கள் அளிக்கப்பட்ட பிறகு, ஊழியர் சங்கங்களையும், கோரிக்கை மனுக்களை அளித்த தனிநபர்களையும் அழைத்துப் பேச ஒருநபர் குழு முடிவு செய்துள்ளது. 
பணி வரன்முறைக் குழு: அரசுப் பணியிடங்களை வரன்முறைப்படுத்துவதற்கான குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவானது அனைத்து அரசுத் துறைகளுக்கும் பல்வேறு கேள்விகள் அடங்கிய பட்டியலை அனுப்பி வைத்திருந்தது. இந்தப் பட்டியலை வரும் 21}ஆம் தேதிக்குள் அளிக்க வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளது. அதன்படி, பல்வேறு அரசுத் துறைகளைச் சேர்ந்த தலைவர்களும் கேள்விகளுக்கான பட்டியலில் பதில்களைப் பூர்த்தி செய்து நேரில் அளித்து வருகிறார்கள்.

அரசு பள்ளிகளின் தரம் உயர்த்தப்படும்: செங்கோட்டையன்

சென்னை: ''அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

தமிழகத்தில், 2,627 அரசு மேல்நிலை பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள், பிளஸ் 2 தேர்வு எழுதியுள்ளனர். இதில், விருதுநகர் மாவட்டத்தில், 94 சதவீத மாணவர்கள், தேர்ச்சி பெற்றுள்ளனர்.கன்னியாகுமரி மாவட்டம், 93.98 சதவீதத்துடன் இரண்டாம் இடம் பெற்றுள்ளது.
இது குறித்து, அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது: அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க, தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். ஆசிரியர் காலியிடங்கள், விரைவில் நிரப்பப்படும். கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இலவச கல்வி உரிமை சட்டத்தில், முறையாக மாணவர்களை சேர்க்காத, 12 பள்ளிகளுக்கு, 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளோம். விளக்கம் கிடைத்ததும், நடவடிக்கை எடுப்போம்.இவ்வாறு அவர் கூறினார்

பிளஸ்-2 தேர்வுகளில் கேள்விகள் கடினமாக கேட்கப்பட்டது ஏன்? அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் விளக்கம்

சென்னை,  சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அளித்த பேட்டி வருமாறு:-


கடந்த 1.3.18 முதல் 6.4.18 வரை எழுதப்பட்ட பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதியை ஒரு ஆண்டுக்கு முன்பே அறிவித்திருந்தோம். அதன்படி அதே தேதியில் (நேற்று) தேர்வு முடிவுகளை வெளியிடுகிறோம்.

தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு அரசின் சார்பில் வாழ்த்துகள். அவர்கள் பல்வேறு துறைகளில் சென்று மேல்நிலைக் கல்வி கற்க அரசு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

தோல்வியுற்றவர்கள் யாரும் துவண்டுபோக வேண்டாம். அவர்களுக்காக ஹெல்ப் லைன் என்ற புதிய திட்டம் உள்ளது. 14417 என்ற எண்ணுக்கு தொடர்புகொண்டால், ஆறுதல் பெறக்கூடிய வகையில், மீண்டும் கல்வி கற்பதற்கு ஏற்ற ஆலோசனை வழங்கப்படும்.

ஜூன் 25-ந் தேதி அவர்கள் மீண்டும் தேர்வு எழுதலாம். வெற்றி பெற்ற மாணவர்களுடன் அவர்களும் கல்லூரியில் சேர்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பாடப் பிரிவு வாரியாக மாணவர்களின் தேர்ச்சி வீதத்தை பொறுத்த அளவில், அறிவியல் பாடப்பிரிவில் 92.2 சதவீதம், வணிக பாடப்பிரிவில் 87.4 சதவீதம், கலைப் பாடப் பிரிவுகளில் 79.6, தொழில் பாடப்பிரிவுகள் 80.91 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பாடவாரியாக, இயற்பியல் 96.4 சதவீதம், வேதியியல் 95, உயிரியல் 96.3, கணிதம் 96.1, தாவரவியல் 93.9, விலங்கியல் 91.9, கணினி அறிவியல் 96.1, வணிகவியல் 90.3, கணக்குப் பதிவியலில் 91 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்த முறை கஷ்டமான கேள்விகள் கேட்கப்பட்டு இருந்ததாக மாணவர்கள் தரப்பில் இருந்து கருத்து கூறப்பட்டது. இது எதற்காக என்றால், எதிர்காலத்தில் மாணவர்கள் பல்வேறு பொதுத் தேர்வுகளை சந்திக்க வேண்டியதுள்ளது.

இந்தத் தேர்வில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றவர்கள்கூட அண்ணா பல்கலைக்கழகத்தில் கணிதப் பாடத்தில் 21 சதவீதம் பேர் அரியர்ஸ் வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதுபோன்ற நிலை நீடிக்கக்கூடாது. எனவேதான் கேள்விகள் கடினமாக வைக்கப்பட்டன.

இந்தப் புதிய முறைப்படி எதிர்காலத்தில் பொதுத் தேர்வுகளை இங்குள்ள மாணவர்கள் எளிதாக எதிர்கொள்ள முடியும்.

மாணவர்களை மதிப்பெண் அடிப்படையில் முதல், இரண்டாம் ரேங்க் பற்றி விளம்பரப்படுத்தக் கூடாது என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு மன அழுத்தத்தை தரக்கூடாது என்பதற்காக இந்த முறை கடைப்பிடிக்கப்படுகிறது.

ஒரு மார்க் குறைந்துவிட்டால்கூட, அந்த மாணவனும் அவரது பெற்றோரும் மன அழுத்தத்துக்கு ஆளாகின்றனர். இன்னும் ஒரு மார்க் வாங்கியிருந்தால் ரேங்க் கூடியிருக்குமே என்றெல்லாம் மற்றவர்கள் கூறி மாணவர்களுக்கு கூடுதல் அழுத்தம் கொடுக்கும் நிலை உள்ளது.

இதை நிறுத்தவே ரேங்க் முறையை தவிர்த்திருக்கிறோம். பெற்றோர், கல்வியாளர்கள், மாணவர்கள் இதை பாராட்டியுள்ளனர். எல்லோரையும் சமநிலைப்படுத்தி பாடத்தை கற்றுத் தருவதுதான் அரசின் நோக்கம்.

இதுவரை எந்தப் பள்ளியும் தங்களை முன்னிலைப்படுத்தி விளம்பரம் செய்யவில்லை. விளம்பரம் செய்தால் அந்தப் பள்ளிகளுக்கு அறிவுரை வழங்கப்படும். மீண்டும் அதைச் செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

கல்விக் கட்டணத்தைப் பொறுத்த அளவில் ஒவ்வொரு பள்ளிகளிலும் பெயர்ப் பலகை வைத்து, கல்விக் கட்டணத்தின் அளவு பட்டியலிடப்பட்டுள்ளது. இதற்கும் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுவதை அரசின் கவனத்துக்குக் கொண்டு வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இனி தமிழகத்தில் வட மாவட்டங்களில் ஆசிரியர் பற்றாக்குறை இருக்காது. பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தென்மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பலர் திடீரென்று சொந்த மாவட்டங்களுக்கு பணிமாறுதல் பெற்றுவிட்டதால் வடமாவட்டங்களில் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்டது.

அரசுப் பள்ளிகளில் தேர்ச்சி வீதம், கடந்த ஆண்டைக் காட்டிலும் சிறப்பாக உள்ளது. அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருவதாக கூறுவதை ஒப்புக்கொள்கிறேன். இனி அந்த நிலை நீடிக்கக்கூடாது என்பதற்காக ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கம் ஆகியோருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

ஆங்காங்கே கிராமங்களில் உள்ள மாணவர்களை அரசுப் பள்ளிகளுக்கு அழைத்து வரவேண்டும். இதற்கான காலவரம்பு செப்டம்பர் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்தப் பள்ளியில் பணியாற்ற விரும்பினால் கூடுதலாக மாணவர்களை சேர்க்க வேண்டும் என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

இலவச கல்வி உரிமைச் சட்டத்தின் மூலம் இந்தியா முழுவதும் ஏழை மாணவர்களுக்கு கல்வி வாய்ப்பு வழங்கப்படுகிறது. அதை தமிழக அரசும் மத்திய நிதியைப் பயன்படுத்தி செயல்படுத்தி வருகிறது. அரசுப் பள்ளியில் சேர வருபவர்களை தனியார் பள்ளிக்கு அனுப்பும் நிலை இல்லை.

சில இடங்களில் குறைபாடுகள் இருக்கின்றன. குறிப்பிட்ட சில பள்ளிக்கூடங்களில் அனுமதி வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டுகள் உள்ளன. அதுபோன்ற 12 பள்ளிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக ஆய்வு நடத்தி வருகிறோம். அருகில் வசிக்கும் ஏழை மாணவர்களை ஏன் பள்ளிகளில் சேர்க்கவில்லை என்று அவர்களிடம் கேள்வி எழுப்பி இருக்கிறோம். அவர்களின் பதில் வந்த பிறகுதான் உரிய விவரங்களை சொல்ல முடியும்.

இனிவரும் ஆண்டுகளில் அனைத்துப் பாடத்திட்டங்களையும் மாற்றிய பிறகு, தனியாரே வியக்கும் வகையில் அது இருக்கும். 1, 6, 9, 11 ஆகிய வகுப்புகளுக்கான பாடத் திட்டங்களை மாற்றியதை பார்த்த பிறகு, சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை நடத்தும் தனியார் அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது. அந்தப் பள்ளிகளை மூடும் நிலையை அரசு உருவாக்கி இருக்கிறதா என்றுகூட கேள்வி எழுப்பியுள்ளனர்.

அனைத்து பெற்றோர்களின் ஆசையும், மெட்ரிக், சி.பி.எஸ்.இ. கல்விதான். ஆங்கில அறிவை குழந்தைகள் பெறவேண்டும் என்று அவர்கள் ஆசைப்படுகின்றனர். எனவே அந்தப் பள்ளிகளுக்கு அனுப்புகின்றனர்.

அதிலும் மாற்றத்தைக் கொண்டுவர அரசு ஆலோசித்து வருகிறது. இது அரசின் கொள்கை ரீதியான விஷயம். எனவே முதல்-அமைச்சர், அமைச்சர்களுடன் கலந்து ஆலோசிக்க வேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம் தனியார் பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை குறைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

'சென்டம்' பட்டியல் முறையும் ரத்து

பிளஸ் 2 தேர்வில், 'ரேங்கிங்' முறை ரத்து செய்யப்பட்டது போல், 'சென்டம்' என்ற நுாற்றுக்கு நுாறு பட்டியலும், ரத்து செய்யப்பட்டுள்ளது. 
பிளஸ் 2 பொது தேர்வு முடிவில், இரண்டாம் ஆண்டாக, 'ரேங்கிங்' முறை ரத்து செய்யப்பட்டு உள்ளது. 
புதிய மாற்றம் : எந்த பள்ளியும், தங்கள் பள்ளியின், 'டாப்பர்' அல்லது முதல் மூன்று இடம் என, எந்த தனிப்பட்ட மாணவரையும் குறிப்பிட்டு, விளம்பரம் செய்யக் கூடாது என, தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், மாநில மற்றும் மாவட்ட அளவில், முதல் மூன்று இடங்கள் பெற்ற மாணவர்களின் பட்டியலும் வெளியிடப்படவில்லை. மேலும், இந்த ஆண்டு முதல், மற்றொரு புதிய மாற்றத்தையும், அரசு தேர்வுத் துறை அமல்படுத்தியுள்ளது. இதன்படி, நுாற்றுக்கு நுாறு என்ற, 'சென்டம்' மதிப்பெண் பட்டியல், முதல் முறையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.பத்திரிகைகளுக்கு வழங்கப்பட்ட மதிப்பெண் பகுப்பாய்வு பட்டியலில், சென்டம் எடுத்த மாணவர்கள் எத்தனை பேர் என்ற விபரம் வெளியிடப்படவில்லை. அமைச்சர் செங்கோட்டையன், பள்ளிக்கல்வி முதன்மை செயலர், பிரதீப் யாதவ் உத்தரவின்படி, 'சென்டம்' வழங்கும் முறையும், இந்த ஆண்டு முதல் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
ஏற்கனவே, பள்ளிக்கல்வி செயலராக, சபிதா இருந்த போது, மொழி பாடங்களுக்கு, 'சென்டம்' வழங்கும் முறை ரத்து செய்யப்பட்டது. இந்த ஆண்டு முதல், மற்ற முக்கிய பாடங்களுக்கும், 'சென்டம்' வழங்கும் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஆரோக்கியமற்ற போட்டி : 'தவிர்க்க முடியாத நிலையில், தேர்வில் மிக தெளிவாக விடைகளை எழுதிய மாணவர்களுக்கு மட்டுமே, சென்டம் மதிப்பெண் வழங்க வேண்டும்' என, தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தராதேவி ஏற்கனவே உத்தரவிட்டுள்ளார். இதன்படி, மிக சிலர் மட்டுமே, சென்டம் பெற்றுள்ளதால், சென்டம் பட்டியல் வெளியிடுவதும் நிறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து, அதிகாரிகள் கூறியதாவது: உயர்கல்வியில் மாணவர்கள் சேர, பிளஸ் 2வில், 50 சதவீதத்துக்கு மேல், மதிப்பெண்களை கல்வித் தகுதியாக நிர்ணயிக்கப்படுகிறது; 'டாப்பர்' ஆக வந்தவர் யார்; சென்டம் எடுத்தவர்கள் யார் என, தனியாக கல்வித்தகுதி கிடையாது.'டாப்பர்' மற்றும் சென்டம் முறையால், மாணவர்களிடம் விரக்தி மற்றும் ஆரோக்கியமற்ற போட்டி ஏற்படுகிறது. இதை மாற்றும் வகையில், டாப்பர் மற்றும் சென்டம் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர். 

பிளஸ் 2 மறுகூட்டலுக்கு இன்று முதல் விண்ணப்பம்

பிளஸ் 2 தேர்வில், மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடுக்கு, இன்று(மே-17) முதல், 19ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். 

பிளஸ் 2 தேர்வில், மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு வேண்டும் என, கருதுவோர், தாங்கள் தேர்வு எழுதிய பள்ளி மற்றும் தேர்வு மையத்திற்கு சென்று, இன்று முதல், வரும், 19ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.மறுமதிப்பீடு தேவைப்படுவோர், முதலில், விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.தேர்வு முடிவு நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், மாணவர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை, வரும், 21ம் தேதி முதல், பள்ளிகளில் பெற்று கொள்ளலாம்.மேலும்,www.dge.tn.nic.in என்ற இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்யலாம்.

91.1 சதவீதம் பேர் வெற்றி பெற்றனர், பிளஸ் 2 தேர்ச்சி விகிதம் சர்வு, மாணவிகளே வழக்கம் போல சாதனை


அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க முடிவு அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

அரசு ஊழியர்கள் செல்போன்களில் சர்வீஸ் ரிஜிஸ்டர் பார்க்கலாம்

4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு நாளை (18.05.2018) மாவட்ட தலைநகரங்களில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

17/5/18

ஜீன் மாதம் 4ந் தேதி முதல்ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு துவங்கப்படும்: கல்வி அமைச்சர்

ஆரவாரம், கொண்டாட்டமின்றி வீடு தேடி வந்த, 'ரிசல்ட்'

பொதுதேர்வு முடிவுகளில், பாராட்டு, வாழ்த்து, கேக் ஊட்டுவது என்ற ஆரவாரத்துக்கு, அறவே முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுஉள்ளது.


 பரபரப்பான பொது தேர்வு முடிவுகள், மிகவும் அமைதியாக வெளியிடப்பட்டதால், ஆசிரியர் களும், பெற்றோரும் நிம்மதி அடைந்துள்ளனர்.


பாராட்டு மழை


தமிழகத்தில், 15 ஆண்டுகளுக்கு முன், இன்ஜினியரிங் மற்றும் மருத்துவ படிப்பிற்கு, தமிழக அளவிலான நுழைவு தேர்வு ரத்தான பின், பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே, இன்ஜி., மற்றும் மருத்துவ படிப்பு களுக்கு சேர்க்கை நடந்தது. இதனால், பிளஸ் 2 மதிப்பெண்ணுக்கும், அதன், 'கட் ஆப்' மதிப் பெண்ணுக்கும், அதிக முக்கியத்துவம் ஏற்பட்டது.

மாநில அளவில், எந்த பள்ளி, 'டாப்' மதிப்பெண் பெறுகிறது; பள்ளி அளவில், முதல் மதிப்பெண் பெறும் மாணவ - மாணவியர் யார் என்பதில் கடும் போட்டி ஏற்பட்டது. தேர்வு முடிவை வெளியிடும் போது, மாநில அளவில், 'டாப்பர்' ஆக வரும் மாணவர்கள், சென்னைக்கு அழைத்து வரப்பட்டு, அவர்களுக்கு அமைச்சர் களும், அதிகாரிகளும் பாராட்டு தெரிவித்தனர்.



அவர்கள், 'டாப்பர்' ஆக வர, என்ன முயற்சி எடுத்தனர் என, ஊடகங்களில் பேட்டி எடுக்கப்படும். பெரும்பாலானவர்கள், 'டாக்டர் ஆக வேண்டும்; கிராம மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே லட்சியம்' என, தெரிவிப்பர்.இப்படி கூறிய பல மாணவர்கள், உயர்கல்வியை முடித்ததும், முதல் ஆளாக, வெளிநாடுகளிலும், பெருநகரங்களிலும்

பணியில் சேர்வதோடு, கிராமங்களை கண்டுகொள்வதில்லை. பள்ளி அளவில் முதலிடம் பெறும் மாணவர்களை, மற்ற மாணவர்கள், தோளில் துாக்கி வைத்து கொண்டாடுவர். அவர்களின், ஆசிரியர்கள் மற்றும் நண்பர்கள், கேக் ஊட்டி, போட்டோவுக்கு, 'போஸ் கொடுப்பர்.

இரண்டு ஆண்டுகளாக, 'டாப்பர்' என்ற, 'ரேங்கிங்' முறை ரத்து செய்யப்பட்டுள்ளதால், ஆரோக்கிய மற்ற கொண்டாட்டங்கள் தவிர்க்கப் பட்டுள்ளன. இதே போல, தேர்வு முடிவை, தனியார் இணைய தளங் களில்வெளியிடும் நிலையும் படிப்படியாக மாற்றப் பட்டு, தேர்வுத் துறையே தங்கள் இணைய தளத்தில், நேரடியாக தேர்வு முடிவுகளை வெளியிட துவங்கியது.


புதுமைகள்


இந்தமுறை, மாணவர்களுக்கு எளிதாக இருந்தா லும், கிராமப்புற மாணவர்கள் அல்லது கோடை விடுமுறையில், வெளியூர்களில் உள்ள மாணவர் கள், இணையதள இணைப்பு உள்ள பகுதியை தேடி வந்து, தேர்வு முடிவை பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த அலைச்சலுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மாணவர் களின் மொபைல் போனுக்கு, எஸ்.எம்.எஸ்., ஆக, தேர்வு முடிவை வெளியிடும் முறை, 2017 முதல் அறிமுகம் ஆகியுள்ளது.

இதனால், மாணவர்கள் இருக்கும் இடத்திலேயே, தேர்வு முடிவை, மதிப்பெண்ணுடன் அறியும் வசதி கிடைத்துள்ளது. மொத்தத்தில், மாணவர்கள் மற்றும் பெற்றோரின் மன உளைச்சல் மற்றும் அலைச்சலுக்கு கல்வி துறை முற்றுப்புள்ளி வைத்துள்ளது.




வெறிச்சோடிய தேர்வுத்துறை வளாகம்


மாநில, மாவட்ட அளவில், மூன்று இடங்களை பிடித்த மாணவர்களை தேடிப்பிடித்து, அவர்களிடம் ஊடகத்தினர் பேட்டி எடுப்பர். இதற்கு, இரண்டு ஆண்டுகளாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதேநேரம், தேர்வுமுடிவுகள், தேர்வுத் துறை அலுவலகத்தில் ஊடகத்தினருக்கு வழங்கப்படும். இந்த தகவல்களை பெற, செய்தியாளர்கள், கேமரா, மைக் சகிதமாக, காலை முதல் தேர்வுத்துறை வாயிலில் காத்திருப்பர்.


தேர்வு முடிவு வெளியிடும் நேரத்தில், பட்டியலை பெற்று, முதலில் யார், 'பிரேக்கிங் நியூஸ்' வழங்குவது என, போட்டி ஏற்படும். அதனால், பட்டியல் வினியோகத்தின் போது, தள்ளு முள்ளு ஏற்படும். இதற்கும், இந்த ஆண்டு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதனால், பொது தேர்வு முடிவின் போது, கேமராக்கள் குவிந்திருக்கும், தேர்வுத்துறை அலுவலக வளாகம் நேற்று, ஆள் நடமாட்ட மின்றி வெறிச்சோடி காணப்பட்டது.


மறுகூட்டலுக்கு இன்று முதல் விண்ணப்பம்


பிளஸ் 2 தேர்வில், மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடுக்கு, இன்று முதல், 19ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.பிளஸ் 2 தேர்வில், மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு வேண்டும் என, கருதுவோர், தாங்கள் தேர்வு எழுதிய பள்ளி மற்றும் தேர்வு மையத்திற்கு சென்று, இன்று முதல், வரும், 19ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

மறுமதிப்பீடு தேவைப்படுவோர், முதலில், விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.தேர்வு முடிவு நேற்று அறிவிக்கப் பட்ட நிலையில், மாணவர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை, வரும், 21ம் தேதி முதல், பள்ளிகளில் பெற்று கொள்ளலாம். மேலும்,www.dge.tn.nic.in என்ற இணைய தளத்திலும் பதிவிறக்கம் செய்யலாம்

தாமதமாகும் பணியிட மாறுதல் கலந்தாய்வு

அரசு பள்ளிகள் சார்பில் நடைபெறும் சேர்க்கை விழிப்புணர்வு பேரணியில் மாணவர்களை ஈடுபடுத்தக் கூடாது, தொடக்க கல்வி இயக்குனர் புதிய உத்தரவு

அரசு பள்ளிகள் சார்பில் நடைபெறும் சேர்க்கை விழிப்புணர்வு பேரணியில் மாணவர்களை ஈடுபடுத்தக் கூடாது, தொடக்க கல்வி இயக்குனர் புதிய உத்தரவு

அரசு பள்ளிகள் சார்பில் நடைபெறும் சேர்க்கை விழிப்புணர்வு பேரணியில் மாணவர்களை ஈடுபடுத்தக் கூடாது, தொடக்க கல்வி இயக்குனர் புதிய உத்தரவு

மே 18 தமிழகம் முழுவதும் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்றைய தினமலர் செய்தி

மே 18 தமிழகம் முழுவதும் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்றைய தினமலர் செய்தி

12/5/18

10ம் வகுப்பு, பிளஸ்1, பிளஸ்2 பொதுத் தேர்வு முடிவுகளை பள்ளிகளின் இ-மெயில் முகவரிக்கு அனுப்ப திட்டம் :

தமிழகத்தில் 10ம் வகுப்பு, பிளஸ்1, 2 தேர்வு முடிவுகளை அந்தந்த பள்ளிகளின் இ-மெயில் முகவரிக்கு நோட்டீஸ் போர்டில் ஒட்டுவதற்கான நடைமுறையை பின்பற்ற அரசுத் தேர்வுகள் துறை திட்டமிட்டுள்ளது. 
தமிழகத்தில் பொதுத்தேர்வு முடிவுகளை அரசுத் தேர்வுகள் துறை பள்ளிகளுக்கு சிடி வழங்கி நோட்டீஸ் போர்டில் தேர்வு முடிவுகளை ஒட்டுதல், செய்தித்தாளில் பிரசுரம் செய்தல், இணையதளங்களில் வெளியிடுதல் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் வெளியிட்டு வந்தது.
அதைத்தொடர்ந்து, மாணவர்கள் அளித்துள்ள செல்போன் எண்களுக்கு, தேர்வு முடிவுகளை எஸ்எம்எஸ் மூலம் அனுப்பும் நடைமுறையும் தொடங்கப்பட்டது.
இந்த ஆண்டு தேர்வு முடிவுகளை பள்ளிகளில் ஒட்டும் நடைமுறையையும் இந்த ஆண்டு முதல் பின்பற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி இந்த ஆண்டு இணையதளம், எஸ்எம்எஸ் தவிர இ-மெயில் மூலமாக தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளது. 
தேர்வு முடிவு வெளியாகும் நேரத்தில் ஒவ்வொரு பள்ளிக்கும், அந்த பள்ளியில் படித்து பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் தேர்வு முடிவுகள் இ-மெயில் மூலம் அனுப்பப்படும். அவற்றை பள்ளிகள் நோட்டீஸ் போர்டில் ஒட்ட உத்தரவிட்டு, அதற்கான பணிகள் நடந்து வருகிறது.

1, 6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாட புத்தகங்கள் வரும் 23-ம் தேதி இணையத்தில் வெளியீடு

1, 6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாட புத்தகங்கள், http://www.tnscert.org  என்ற இணையத்தில் வரும் 23-ம் தேதி வெளியிடப்படுகிறது என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
புதிய பாடத்திட்டத்தின்படி 1, 6, 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ள பாடப் புத்தகங்களை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் முன்னிலையில் முதல்வர் கே.பழனிசாமி சென்னையில் கடந்த 4-ம் தேதி வெளியிட்டார்.

சென்னை : 1, 6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாட புத்தகங்கள், http://www.tnscert.org  என்ற இணையத்தில் வரும் 23-ம் தேதி வெளியிடப்படுகிறது என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. புதிய பாடத்திட்டத்தின்படி 1, 6, 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ள பாடப் புத்தகங்களை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் முன்னிலையில் முதல்வர் கே.பழனிசாமி சென்னையில் கடந்த 4-ம் தேதி வெளியிட்டார்..

ANNAMALAI UNIVERSITY-DDE - MAY - 2018 EXAMINATIONS HALL TICKET:

மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் B.Ed (distance Education) 2018-2020 சேர்க்கை!!!

இந்த கல்வியாண்டில் சுமார் 3000 ஆசிரியர் பணியிடங்களை ஒழிக்கும் 25% கட்டாயக்கல்வி சட்டம்!!!

இலவச கட்டாய கல்வி சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25% இலவசகல்வி பயில இன்றுவரை சுமார் 80,000 மாணவர்கள் பதிவு செய்துள்ளதாக மெட்ரிக் பள்ளிகளின் இயக்குநர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்பதால் இந்த கல்வியாண்டில் மட்டும் சுமார் 3000 ஆசிரியர் பணியிடங்களை ஒழிக்கும் என ஆசிரியர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்

11-ம் வகுப்பு புதிய தமிழ் பாடப் புத்தகத்தில் பிழை... இளையராஜா குறித்து தவறான தகவல்!

புதிய தமிழ் பாடப்புத்தகங்களில் இளையராஜா குறித்த பாடத்தில் பிழைகள் இருக்கின்றன. இசைத்தமிழர் இருவர் என்ற பெயரில் இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் குறித்த பாடம் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

இதில் இளையராஜா 1995-ம் ஆண்டில் கேரளம்-நிஷாகந்தி சங்கீத விருது வாங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் உண்மையில் 2013-ம் ஆண்டு முதல் தொடங்கப்பட்ட அந்த விருதை 2016-ம் ஆண்டு இளையராஜா வாங்கியுள்ளார். 1998-ல் லதா மங்கேஷ்கர் வாங்கிய விருது 1988-ம் ஆண்டு வாங்கியதாக பாடப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இளையராஜா தேசிய விருது வாங்கிய ஆண்டுகளிலும் குழப்பங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.பாடப்புத்தகங்கள் பள்ளி மாணவர்கள் மட்டும் இன்றி போட்டி தேர்வுக்கு தயாராகுவோருக்கும் அடிப்படையாக உள்ளது. பல ஆண்டுகளுக்கு பின் மாற்றப்பட்டுள்ள பாடப்புத்தகம், மாணவர்களுக்கு பல வகையில் உதவும் முறையில் உள்ளதாக பல பாராட்டுகளை பெற்று வரும் நிலையில், இதுபோன்ற தவறுகள் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர். பள்ளிகளுக்கு இன்னும் புத்தகம் விநியோகம் செய்யப்படவில்லை. ஆதலால் தவறுகளை திருத்துக் கொண்டு புத்தகங்களை விநியோகம் செய்யுமாறு கூறப்பட்டுள்ளது.

32 அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில், இனி 12 பள்ளிகளில் மட்டுமே மாணவர் சேர்க்கை - அரசாணை வெளியீடு*





*FLASH:*

*32 அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில், இனி 12 பள்ளிகளில் மட்டுமே மாணவர் சேர்க்கை - அரசாணை வெளியீடு*

*20 பள்ளிகளில், பயிற்சி நிலையங்களாக மாற்றம் - மத்திய அரசு வழிகாட்டுதலின்படி, தமிழக அரசு நடவடிக்கை*

*மொத்த மாணவர் சேர்க்கை இடம் 3,000-லிருந்து, 1050 ஆக குறைப்பு - தமிழக அரசு.*

21/4/18

அதிகமான பாடங்களை கற்பிக்க வற்புறுத்தவில்லை: நீதிமன்றத்தில் என்சிஇஆர்டி பதில்

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆர்டி) விநியோகிக்கும் புத்தகங்களை மட்டும் சிபிஎஸ்இ பள்ளிகள் பயன்படுத்த உத்தரவிடக் கோரி தொடரப்பட்டுள்ள வழக்கில், 'ஒருபோதும் அதிகமான பாடங்களை கற்பிக்க வேண்டுமென பள்ளிகளை வற்புறுத்தவில்லை'
என என்சிஇஆர்டி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞர் புருஷோத்தமன் தாக்கல் செய்த மனுவில், 'கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆர்டி) பாடத்திட்டத்தின்படி முதல் வகுப்பில் மூன்று பாடங்கள் மட்டுமே பயிற்றுவிக்கப்படுகிறது. மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) பாடத்திட்டத்தை பின்பற்றும் தனியார் பள்ளிகள் முதல் வகுப்பில் எட்டுப் பாடங்களை பயிற்றுவிக்கின்றன. இதனால் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் 5 முதல் 7 கிலோ எடையுள்ள புத்தகப் பைகளைச் சுமந்து செல்கின்றனர். இதனால் குழந்தைகள் மனதளவில் பாதிக்கப்படுகின்றனர். எனவே, என்சிஇஆர்டி விநியோகிக்கும் புத்தகங்களை மட்டும் சிபிஎஸ்இ பள்ளிகள் பயன்படுத்த சிபிஎஸ்இ நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும்' எனக் கோரியிருந்தார். 
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இந்த மனு தொடர்பாக மத்திய அரசு, என்சிஇஆர்டி மற்றும் சிபிஎஸ்இ பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. 
தரமான புத்தகங்கள்: இதையடுத்து, என்சிஇஆர்டி செயலாளர் மேஜர் ஹர்ஷ் குமார் பதில்மனு தாக்கல் செய்தார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
குழந்தைகள் மத்தியில் எந்தவிதமான கல்வி பாகுபாடும் பார்க்கக் கூடாது. எந்தவொரு குழந்தைக்கும் கல்வி மனஅழுத்தத்தையும் தரக்கூடாது என பள்ளிகளுக்கு அறிவுறுத்தி உள்ளோம். கல்வித் தரத்தை மேம்படுத்தும் வகையில் தலைசிறந்த ஆசிரியர்களைக் கொண்டு பாடப் புத்தகங்களை நாங்களே வடிவமைத்து வழங்கி வருகிறோம். ஆண்டுதோறும் குறைவான கட்டணத்தில் 364 தலைப்புகளில் தரமான புத்தகங்களை வெளியிடுகிறோம். ஒரு குழந்தை எவ்வளவு நேரம் படிக்க வேண்டும், எவ்வளவு நேரம் கற்பிக்க வேண்டும் என்பதை வரையறுத்துதான் பாடத்திட்டம் உருவாக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் ஆரம்ப கல்வியில் இருந்து இரண்டாம் வகுப்பு வரை வீட்டுப் பாடம் கொடுக்கக் கூடாது. 3 -ஆம் வகுப்பிலிருந்து 5-ஆம் வகுப்பு வரை வாரத்துக்கு 2 மணி நேரம் வீட்டுப் பாடம் கொடுக்க வேண்டும். 8 -ஆம் வகுப்பு வரையிலான நடுநிலைப் பள்ளிகளில் தினமும் ஒரு மணி நேரம் வீதம், வாரத்தில் 5 முதல் 6 மணி நேரமும், 9 -ஆம் வகுப்பு முதல் 12 - ஆம் வகுப்பு வரை தினமும் 2 மணி நேரம் வீதம் வாரத்தில் 10 முதல் 12 மணி நேரம் மட்டுமே வீட்டுப்பாடம் கொடுக்கப்பட வேண்டும் என ஏற்கெனவே பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
வற்புறுத்தவில்லை: புத்தகச் சுமையைக் குறைக்க முதல் மற்றும் இரண்டாம் வகுப்புகளுக்கு மொழிப்பாடம், கணிதம் ஆகிய இரண்டு பாடங்களையும், மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை மொழிப்பாடம், சூழ்நிலையியல், கணிதம் ஆகிய 3 பாடங்களை மட்டுமே கற்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இவை தவிர பொது அறிவுப் பாடமும் கொடுக்கப்பட்டுள்ளது. என்சிஇஆர்டி ஒருபோதும் அதிகமான பாடங்களை கற்பிக்க வேண்டுமென வற்புறுத்தவில்லை. அதே போன்று, பள்ளியில் விநியோகிக்கும் புத்தகங்களை வாங்க வேண்டும் என மாணவர்களை ஒருபோதும் நிர்பந்திக்கக் கூடாது. இதுகுறித்து பெற்றோர்களும் பள்ளி நிர்வாகத்துடன் பேச வேண்டும். 
அதே வேளையில் எல்லா பாடங்களையும் ஒரே நாளில் கற்பிக்க வேண்டிய கட்டாயமும் கிடையாது. வாழ்க்கைக்குத் தேவையான அறிவை போதிக்கும் இடமாக திகழ வேண்டிய பள்ளிகள் தரமான கல்வியை மட்டுமே கற்பிக்க வேண்டும். கல்வி ஒருபோதும் சுமையாக இருக்கக்கூடாது என்பதை தாரகமந்திரமாக வைத்து என்சிஇஆர்டி செயல்பட்டு வருகிறது. மேலும் மின்னணு வடிவிலான இ-புத்தக திட்டத்தையும் வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறோம். இதனை கைபேசி செயலி வழியாகவும் பெற முடியும் என அந்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொலைநிலைக் கல்வியிலிருந்து கல்லூரிக்கு மாறும் வசதி: இந்த ஆண்டு முதல் சென்னைப் பல்கலை. அறிமுகம்

தொலைநிலைக் கல்வி முறையிலிருந்து கல்லூரிக்கும், கல்லூரி படிப்பிலிருந்து தொலைநிலைக் கல்வி முறைக்கும் மாணவர்கள் மாறிக் கொள்ளும் வகையில் புதிய வசதியை வரும் கல்வியாண்டு முதல் (2018-19) சென்னைப் பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்த உள்ளது.

பத்தாம் வகுப்பு, பிளஸ்-2 முடித்து தொலைநிலைக் கல்வி அல்லது திறந்தநிலை பல்கலைக்கழகங்களில் பெறப்படும் பட்டங்கள், கல்லூரியில் சேர்ந்து பெறும் பட்டத்துக்கு இணையானது எனவும், அனைத்து வகை வேலைவாய்ப்புகளுக்கும் இந்தப் பட்டப் படிப்புகளையும் தகுதியானதாக கருத வேண்டும் எனவும் யுஜிசி தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. 
யுஜிசி-யின் இந்தக் கருத்தை மேலும் ஒருபடி உயர்த்தி, தொலைநிலைப் பட்டப் படிப்புகளை முழுமையாக, கல்லூரி பட்டப்படிப்புக்கு இணையானதாக மாற்றும் நடவடிக்கையை சென்னைப் பல்கலைக்கழகம் மேற்கொண்டு வருகிறது.
இதுகுறித்து சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் துரைசாமி கூறியதாவது:
சென்னைப் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி நிறுவனப் படிப்புகளின் தரத்தை மேம்படுத்தும் வகையில், இதன் பாடத் திட்டங்கள் அனைத்தும், நேரடி பட்டப் படிப்புக்கு இணையானதாக மாற்றப்பட்டுள்ளன. வருகிற கல்வியாண்டு முதல் இந்தப் புதிய பாடத் திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளது. மேலும் தேர்வு முறையும், பருவத் தேர்வு முறையாக மாற்றப்பட உள்ளது.
இதன் மூலம், தொலைநிலைக் கல்வி மாணவர் இரண்டாம் ஆண்டில் ஏதாவது ஒரு கல்லூரியில் சேர்ந்து படிக்க விரும்பினால், நேரடி இரண்டாம் ஆண்டு சேர்க்கை நடைமுறையின் அடிப்படையில் அவர் கல்லூரியில் சேர்ந்துகொள்ள முடியும்.
அதுபோல, கல்லூரியில் படித்து வரும் மாணவர் அல்லது மாணவி தவிர்க்க முடியாத சூழலில் படிப்பைத் தொடர இயலாமல் போனால், அவர் தொலைநிலைக் கல்வி முறைக்கு மாறிக் கொள்ள முடியும். இந்த வசதி வரும் கல்வியாண்டு (2018-19) முதல் நடைமுறைக்குக் கொண்டுவரப்படும் என்றார் அவர்.

எம்.பி.ஏ., நுழைவு தேர்வு அறிவிப்பு

சென்னை, சென்னை பல்கலையின், எம்.பி.ஏ., மாணவர் சேர்க்கைக்கு, ஜூன், 22ல் நுழைவு தேர்வு நடக்கும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை பல்கலையில், இரண்டு ஆண்டு, எம்.பி.ஏ., எக்ஸ்கியூட்டிவ் படிப்பு நடத்தப்படுகிறது. இதில், மாணவர்கள் சேர, ஜூன், 22ல் நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கான ஆன்லைன் பதிவு, நேற்று முன்தினம் துவங்கியுள்ளது. ஜூன், 18 வரை,www.unom.ac.in என்ற, இணையதளத்தில் பதிவு செய்யலாம் என, பல்கலை அறிவித்துள்ளது

திறந்தநிலை பல்கலைக்கு 2020 வரை யு.ஜி.சி., அனுமதி

சென்னை, மத்திய அரசின், 'நாக்' தரமதிப்பீடு இல்லாமல், 2020 வரை படிப்புகளை நடத்த, அனுமதி கிடைத்து உள்ளதாக, தமிழ்நாடுதிறந்தநிலை பல்கலை அறிவித்துள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு பல்கலையின் பதிவாளர், கே.எம்.சுப்ரமணியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மரபார்ந்த பல்கலைகளுக்கு மட்டுமே, தொலைநிலை படிப்பை நடத்த, நாக் தரமதிப்பீடு கட்டாயம்.ஆனால், திறந்தநிலை பல்கலை போன்றவற்றுக்கு, நாக் தரமதிப்பீடு, இன்னும் கட்டாயம் ஆகவில்லை.எனவே, நாக் தரமதிப்பீடு இல்லாமல், 2020ம் ஆண்டு வரை, திறந்தநிலை பல்கலையில், பட்டப்படிப்பு நடத்த, பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி., அனுமதி அளித்துள்ளது.மேலும், நேரடி,'ரெகுலர்' கல்வி முறையில், பிஎச்.டி., - எம்.பில்., ஆராய்ச்சி படிப்பை நடத்தவும், திறந்தநிலை பல்கலைக்கு,யு.ஜி.சி., அனுமதி வழங்கி உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

உயர் கல்வி செயலரை மாற்ற அரசு திட்டம் நிர்மலாதேவி விவகாரத்தில் நீளும் விசாரணை

தமிழக உயர் கல்வித் துறையில், முறைகேடு கள் அதிகரித்துள்ளதால், உயர் கல்வி செயலரை மாற்ற, தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.


 உயர் கல்வி ,செயலரை, மாற்ற ,அரசு, திட்டம்,  நிர்மலாதேவி விவகாரத்தில், நீளும், விசாரணை


தமிழக உயர் கல்வித்துறை செயலராக, சுனில் பாலிவால், ஓராண்டுக்கு முன் நியமிக்கப் பட்டார். இவர், ஊழல், முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பார் என, எதிர்பார்த்த நிலையில், நிலைமை இன்னும் மோசமாகி யுள்ளது. அருப்புக்கோட்டை பேராசிரியை, நிர்மலாதேவி விவகாரத்தில், ஒரு மாதம் முன்னரே புகார் வந்தும், விசாரணை நடத்தாமல், உயர் கல்வி செயலர், மெத்தன மாக செயல்பட்டதாக கூறப்படுகிறது.


நிர்மலா தேவி, மார்ச், 15ல், மாணவியரிடம் பேசியுள்ளார். மார்ச், 19ல், கல்லுாரி நிர்வாகத் திடம் தகவல் தரப்பட்டுள்ளது. அப்போதே, மதுரை காமராஜர் பல்கலைக்கும், அதை தொடர்ந்து, உயர் கல்வி செயலகத்துக் கும் தகவல்கள் வந்துள்ளன. ஆனால், போலீசில் புகார் அளிக்க, உயர் கல்வி செயலர் அனுமதி அளிக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது.


இதுபற்றி, கவர்னர் அலுவலகத்துக்கும் தகவல் அளிக்கவில்லை. நாளிதழ்களில் செய்தி வெளிவந்த பிறகே, கவர்னர் அலுவலகத்துக்கு 

தெரிய வந்துள்ளது. எனவே, உயர் கல்வி செயலகம் வரை விசாரணை நடத்த, கவர்னர் அலுவலகம் அனுமதி அளித்துள்ளது. மேலும், உயர் கல்வி செயலரை மாற்றவும்,தமிழக அரசு ஆலோசித்து வருவதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.


இதுகுறித்து, உயர் கல்வித்துறை சங்கத்தினர் கூறியதாவது:

மதுரை காமராஜர் பல்கலை அதிகாரிகள் பற்றியும்,கவர்னர் குறித்தும், நிர்மலாதேவி பேசியுள்ளார். இதுகுறித்து, மாணவியர், கல்லுாரியில் புகார் அளித்தபோதே, உயர் கல்வி செயலர் விசாரணை நடத்தியிருக்க வேண்டும். அப்படி நடந்திருந்தால், கவர்னர் மீது, தேவையற்ற பழி சுமத்தப்பட்டிருக்காது. இந்த விவகாரத்தில், உயர் கல்வி செயலர், மவுனமாக இருந்தது ஏன்?

பல பல்கலைகளில், துணைவேந்தர் இல்லாத நேரங்களில், தற்காலிக ஒருங்கிணைப்பு குழுவுக்கு, தன்னையே தலைவராக நியமித்து, பல்கலை நிர்வாகத்தில், ஆதிக்கம் செலுத்துவதையே, உயர் கல்வித்துறை செயலர் அதிகம் விரும்புகிறார். 


சென்னை பல்கலையில், பட்டமளிப்பு சான்றிதழில், துணை வேந்தருக்கு பதில், தன் கையெழுத்து இடம்பெற முயற்சி எடுத்தார். ஆனால், ஆசிரியர் சங்கங்களின் கடும் எதிர்ப்பால், இந்த முடிவு கைவிடப்பட்டது.உயர் கல்வித்துறை பிரச்னைகள் குறித்து, பேராசிரியர் சங்கங்களின் சார்பில், செயலகத்தில் அளித்த புகார்கள் கிடப்பில் போடப் படுகின்றன. உயர் கல்வியில் நடக்கும் ஊழல்களை களைய, உயர் அதிகாரம் உடைய அமைப்பை உருவாக்க வேண்டும் என, பேராசிரியர் சங்க கூட்டமைப்பினர், தீர்மானம் நிறைவேற்றினர். இந்த கோரிக்கையும் கிடப்பில் போடப்பட்டுள்ளது.


சென்னை பல்கலையில், பல்வேறு முறைகேடுகளை, துணை வேந்தர் துரைசாமி கண்டறிந்தார். அவற்றின் மீது, உயர் கல்வி செயலர், எந்த விசாரணையும் நடத்தவில்லை. கோவை பாரதியார் பல்கலையின் முறைகேடு கள் குறித்து, பல்கலையின் இணைப்பு கல்லுாரி நிர்வாகத்தினர், பல முறை முறையிட்டும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இறுதி யாக, லஞ்ச ஒழிப்பு போலீசார் தலையிட்ட பிறகே, ஊழல் அம்பலமானது.


பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் ஏற்பட்ட ஊழல் குறித்தும், தனி விசாரணை நடத்தவில்லை. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடும் தேதியை, பள்ளிக் கல்வித்துறை முன்கூட்டியே அறிவித்து விட்டது. ஆனால், அண்ணா பல்கலையில், இன்ஜினியரிங் படிப் புக்கான, விண்ணப்ப பதிவு தேதியை, முடிவு செய்யாமல், உயர் கல்வி செயலகம் காலம் தாழ்த்துகிறது.அண்ணா பல்கலையில், பேராசிரியர் நியமனத்தில் ஏற்பட்ட முறைகேடு குறித்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதன்பிறகும், பேராசிரியர் நியமனம் குறித்து, உயர் கல்வி செயலர் விசாரணை நடத்தவில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.

நீட் தேர்வுக்கூடங்களை மாற்ற இயலாது: சிபிஎஸ்இ அறிவிப்பு

எம்.பி.பி.எஸ். படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு கூடங்களை மாற்ற இயலாது என்று மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அறிவித்துள்ளது. இதுதொடர்பாக சிபிஎஸ்இ நீட் தேர்வு இயக்குநரகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பு:

நீட் தேர்வுக்கான தேர்வுக்கூட அனுமதிச்சீட்டை பதிவிறக்கம் செய்த பிறகு மாணவர்கள் தரப்பில் இருந்து சில கோரிக்கைகள் வந்துள்ளன. அதன்படி, தாங்கள் முதல் தேர்வாக குறிப்பிட்டிருந்த நகரத்தில் தங்களுக்கு தேர்வுக்கூடம் அளிக்கப்படவில்லை என பலரும், தேர்வு நடைபெறும் நகரத்தை தவறாக தேர்வு செய்துவிட்டதாக பலரும் கூறி, தங்களுக்கு தேர்வு நடைபெறும் நகரங்களை மாற்றித் தரும்படி கோரியுள்ளனர். 
ஏற்கெனவே, தேர்வு அறிவிக்கையில் தெரிவித்த விதிகளின்படி, எந்தக் காரணத்தைக் கொண்டும் தேர்வு நகரங்கள், தேர்வுக் கூடங்கள் மாற்றப்படாது. ஏனென்றால், நீட் தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு விட்டன. 
மேலும், தேர்வு எழுதும் நகரங்கள் கணினி மூலமாகவே ஒதுக்கப்பட்டன. அதில் மனித தலையீடுகள் எதுவும் நிகழவில்லை. எனவே, தேர்வுக்கூடத்தை மாற்ற இயலாது. இதுதொடர்பாக தேர்வர்களின் கோரிக்கைகளுக்கு தனித்தனி பதில்களும் அனுப்பப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கூட்டுறவு சங்கத் தேர்தலை நடத்தலாம்.. தடையை நீக்கி உத்தரவிட்டது சுப்ரீம்கோர்ட்

டெல்லி: தமிழகத்தில் கூட்டுறவு சங்க தேர்தலை நடத்த விதிக்கப்பட்ட தடையை நீக்கி சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.


தமிழகத்தில் கூட்டுறவு சங்க தேர்தல் நடைமுறைகளில் பாரபட்சம் காட்டப்படுவதாக தி.மு.க. எம்.எல்.ஏ. சக்கரபாணி உயர்நீதிமன்ற கிளையில் வழக்கைத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த மதுரை ஹைகோர்ட்டு கிளை, தேர்தல் பணிகளை நிறுத்திவைக்கவும், 3, 4 மற்றும் 5-வது கட்ட தேர்தல்களை நடத்த தடை விதித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. தேர்தல் நடவடிக்கைகளில் ஹைகோர்ட் தலையிட்டு தடை விதிக்க முடியாது என்று கூட்டுறவு சங்க தேர்தல் கமிஷன் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தது.

தமிழக அரசு சார்பிலும் மேல்முறையீடு செய்யப்பட்டது. தமிழக அரசின் மனுவை விசாரித்த சுப்ரீம்கோர்ட், கூட்டுறவு சங்க தேர்தலை நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் நடத்த அனுமதி அளித்த போதிலும், தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது சுப்ரீம் கோர்ட் நிபந்தனை விதித்துள்ளது. தேர்தலை நடத்தி விட்டு மே 3 ஆம் தேதி அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை மாணவர்கள் குறைந்தால் வகுப்புகளை இழுத்து மூடுவதா? வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் குறைவான மாணவர்கள் எண்ணிக்கை உள்ள வகுப்புகளை மூடவேண்டும் என பள்ளிக்கல்வித் துறை  உத்தரவிட்டுள்ளது. 
இது தொடர்பாக, பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நகர்ப்புற அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 30 மாணவர்களுக்குக் குறைவாக உள்ள வகுப்புகளை மூட வேண்டும். கிராமப்புற அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 15 மாணவர்களுக்குக் குறைவாக இருந்தால் வகுப்புகளை மூட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு அ.தி.மு.க. அரசுக்கு ஏன் இந்தக் கேடு கெட்ட புத்தி! 
ராஜகோபாலாச்சாரியாரின் வழியிலே செயல்படத் தொடங்கிவிட்டார்களா? மீண்டும் குலக்கல்வியா?
1937-1939 ஆம் ஆண்டுகளில் ராஜகோபாலாச்சாரியார் சென்னை மாநிலப் பிரதமராக இருந்தபோது 2500 கிராமப் பள்ளிகளை இழுத்து மூடினார். 1952 இல் மறுமுறை ஆட்சிக்கு வந்தபோது 6000 பள்ளிகளை இழுத்து மூடி அரை நேரம் படித்தால் போதும்; மீதி அரை நேரம் அப்பன் தொழிலைப் படித்தால் போதும் என்ற கல்வித் திட்டம் ஒன்றைக் கொண்டு வந்தார்.



ஆச்சாரியாரைப்பற்றி அறிந்தவர் அல்லவா அய்யா தந்தை பெரியார், இது நவீனக் குலக்கல்வித் திட்டம், வருணாசிரமக் கல்வி என்று கூறி, போர்ப்பறை முழங்கினார். 



நாடே தந்தை பெரியார் தலைமையில் கிளர்ந்தெழுந்தது. மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என்று கட்சிகளைக் கடந்து தந்தை பெரியார் தலைமையிலே கனன்று எழுந்தது தமிழ்நாடு.



இந்தக் குலக்கல்வித் திட்டத்தை விலக்கிக் கொள்ளாவிட்டால், கழகத் தோழர்களே! பெட்ரோலும், தீப்பந்தமும் தயாராகட்டும்; நாள் குறிப்பிடுவேன், அக்கிரகாரத்திற்கு நெருப்பு வையுங்கள் என்ற அறிவிப்புக் கொடுத்தார்.



விளைவு ஆச்சாரியார் பதவியை விட்டு விலகி ஓடும்படிச் செய்யப்பட்டது.



65 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த இந்த நிலவரம், அ.தி.மு.க. அரசுக்குத் தெரியாதா? எம்.ஜி.ஆர். அவர்களே வருமான வரம்பு கொண்டு வந்து கையைச் சுட்டுக்கொண்டாரே! மாணவர்கள் குறைந்தால் அதற்கான காரணத்தைக் கண்டறிந்து, சரி செய்ய வேண்டுமே தவிர, குல்லாய்க்கு ஏற்ப தலையைச் சீவக்கூடாது!



இது பணப் பிரச்சினையல்ல - தலைமுறை தலைமுறையாக கல்வி மறுக்கப்பட்ட சமுதாயத்தின் தலையை நிமிர்த்தும் மிகப்பெரும் சமூகப் பிரச்சினை! இதில் வேண்டாம் விஷப் பரீட்சை!

அ.தி.மு.க. அரசு பாம்புப் புற்றுக்குள் கைவிட ஆசைப்படுகிறதா? எரிமலையை எழுப்ப வேண்டாம். சமூகநீதியில் கை வைத்தால், நாடே தீப்பற்றி எரியும் - ஜாக்கிரதை!



பாதிக்கப்படுவோர் யார்?



இன்னும் நூற்றுக்கு நூறு கல்வி என்ற  நிலையை எட்டவில்லை. வகுப்புகளை இழுத்து மூடினால் அந்தப் பிள்ளைகள் எங்கே போய்ப் படிப்பார்கள்? இதில் பாதிக்கப்படுவோர் - உயர்ஜாதியினரோ,  செல்வந்தர்களோ அல்ல; ஒடுக்கப்பட்ட மக்களும், கிராமப்புற மக்களும்தான்

ஏற்கெனவே விவசாயிகள் வெந்து மடிந்து கொண்டுள்ளனர். வேண்டாம் இந்த விபரீதம்! புலிவாலை மிதிக்கவேண்டாம்!

எச்சரிக்கை! எச்சரிக்கை!!
                           கி.வீரமணி,
தலைவர்                                                   திராவிடர் கழகம்.

20-04-2018

தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிக்கான ஆசிரியர் -மாணவர் விகிதம் அட்டவணை ( 18.04/2018-ன் படி )

​ஆசிரியர் பணியிடங்களை நிர்ணயம் செய்தல் சார்ந்த பள்ளிக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண் 055838-நாள்:18.04/2018-ன் படி தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிக்கான ஆசிரியர் -மாணவர் விகிதம் அட்டவணை 

                           

20/4/18

கல்வித்தகுதியை உறுதி செய்யாவிட்டால் தென்மாவட்ட கல்லூரி ஆசிரியர்களில் 30% பேர் வேலையிழக்கும் அபாயம்

நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் 30 சதவீத கல்லூரி ஆசிரியர்கள் தங்கள் தகுதியை நிரூபிக்காவிட்டால் வேலை இழக்கும் வாய்ப்பு உள்ளது என மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை துணைவேந்தர் பாஸ்கர் தெரிவித்தார். 
இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:  கடந்த செமஸ்டர் தேர்வுக்கு விடைத்தாள் திருத்த வராத ஆசிரியர்கள் குறித்து கணக்கெடுத்து அவர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது. நடப்பு கல்வியாண்டில் செமஸ்டர் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிக்கு அழைக்கப்பட்ட ஆசிரியர்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும். இல்லையேல் அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும். 70 முதல் 80% ஆசிரியர்கள் வந்தால் கூட 15 நாட்களில் விடைத்தாள்கள் திருத்தி முடிக்கப்பட்டு ரிசல்ட் வெளியிட முடியும்.
பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களில் உரிய கல்வித்தகுதி இல்லாதவர்கள் இருப்பின் அவர்கள் தங்கள் தகுதியை உறுதி செய்து தெரிவிக்க வேண்டும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த 2 ஆண்டுகளாக இதுகுறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 
அதன் பின்னரும் விரிவுரையாளர்களுக்கான கல்வித்தகுதியை ஏற்படுத்திக் கொள்ளாதவர்கள் மீது வரும் கல்வியாண்டில் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். அவ்வாறு எடுக்கப்படும் போது 30 % ஆசிரியர்களின் பணிக்கு சிக்கல் வரலாம். வரும் கல்வியாண்டு முதல் 5 ஆண்டு படிப்பான ஒருங்கிணைந்த எம்எஸ்சி பயோ - டெக்னாலஜி அறிமுகம் செய்யப்படுகிறது. இதில்30 பேர் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார். .

பள்ளி மாணவர்களுக்கு அஞ்சல் தலை சேகரிப்பு முகாம்

கோடை விடுமுறையை முன்னிட்டு 3 நாள் அஞ்சல் தலை சேகரிக்கும் முகாமை தபால் துறை நடத்த உள்ளது. சென்னை நகர தலைமை போஸ்ட் மாஸ்டர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: 
6ம் வகுப்பு முதல் 11ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஏப்ரல் 25 முதல் 27ம் தேதி வரை, மே 2ம் தேதி முதல் 4ம் தேதி வரை, மே 9ம் தேதி முதல் 11ம் தேதி வரை, 16 முதல் 18 வரை, மே 23ம் தேதி முதல் 25ம் ேததி வரை என 5 பிரிவுகளாக அஞ்சல் தலை சேகரிப்பு முகாம் நடைபெறும். இந்த 3 நாட்களும் மாணவர்களுக்கு அஞ்சல் துறையின் செயல்பாடு, அஞ்சல் தலைகள் பயன்பாடு, அஞ்சல் துறையின் செயல்பாடுகள் தொடர்பாக விளக்கம் அளிக்கப்படும். 


இதற்காக கட்டணம் ரூ.250. அண்ணா சாலை தலைமை தபால் நிலைய வளாகத்தில் இந்த முகாம் நடைபெறும். அண்ணா சாலை தபால் நிலைய வளாகத்தில் இதற்கான விண்ணப்பத்தை பெறலாம். www.chennaipost.gov.in என்ற இணையதளத்தில் மாதிரி விண்ணப்பம் உள்ளது. இவ்வாறு கூறபப்ட்டுள்ளது. 

குழந்தைகளின் தகவல்களை குறிவைக்கும் பிளே ஸ்டோர் ஆண்ட்ராய்டு ஆப்ஸ்.!

தற்சமயம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஸ்மார்ட்போன்களை அதிக நேரம் பயன்படுத்துகின்றனர், குறிப்பாக குழந்தைகள் புத்தகங்களை படிப்பதை விட ஸ்மார்ட்போனில் உள்ள கூகுள் தளத்தில் அதிக நேரம் செலவிடுகின்றனர். 
மேலும் இப்போது புதிய தகவல் வெளிவந்துள்ளது, அதன்படி கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் அதிகமான செயலிகள் குழந்தைகளின் தனியுரிமை மீறுவதாக சமீபத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ஆயிரக்கணக்கான செயலிகள் பெற்றோர்களின் அனுமதியின்றி குழந்தைகளின் தனிப்பட்ட தகவல்களை சேகரித்து இருப்பதாக ஆய்வில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
6000 செயலி
இதுவரை பிளே ஸ்டோரில் இருக்கும் 6000 செயலிகளை ஆய்வு செய்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள், அதில் பெரும்பாலான
செயலிகள் குழந்தைகளின் ஆன்லைன் தனியுரிமை பாதுகாப்பு சட்ட விதியை மீறுவது கண்டறியப்பட்டுள்ளது.
பாதுகாப்பு
குறிப்பாக ஆய்வு செய்யப்பட்டதில் அதிமான செயலிகள் டிராக்கிங் மென்பொருள் தொழில்நுட்பங்களுடன் குழந்தைகளின் தகவலை சேகரித்து இருக்கின்றது. மேலும் 50 சதவீதம் செயலிகள் விதிகளுக்கு உட்பட்ட பாதுகாப்பு முறைகளை பின்பற்றவில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
டிஸ்னி:
மேற்கூறிய படி 6000 செயலிகளில் 5,855 செயலிகள் சுமார் 7.5 லட்சத்திற்கும் அதிகமானோர் இன்ஸ்டால் செய்துள்ளனர், பின்பு

விரைவாக தகவல்களை சேகரிக்கும் தன்மை கொண்டுள்ளது இந்த செயலிகள். மேலும் இது தொடர்பாக டிஸ்னி, டியோலிங்கோ போன்ற நிறுவனங்கள் கருத்து தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
டெவலப்பர்கள்:
டெவலப்பர்கள் சரியான பாதுகாப்பு வசதி மற்றும் சட்ட விதிமுறைகளை பின்பற்றுவதில்லை என ஆராய்ச்சியாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர், மேலும் கூகுள் நிறுவனம் சட்டவிதிமுறைகளை பின்பற்ற வேண்டிய கட்டயாத்தில் உள்ளது.
பேஸ்புக்:
மேலும் பேஸ்புக் போன்று கூகுள் நிறுவனமும் டேட்டா டிராக்கிங் தொழில்நுட்பம் மூலம் அதிக லாபம் பெருகிறது என்று தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது

தமிழக கூட்டுறவு சங்க தேர்தல் தொடர்பான அனைத்து மனுக்கள் மீது ஏப்.20ல் விசாரணை : உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

தமிழக கூட்டுறவு சங்கத்தேர்தல் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து மனுக்கள் மீதும் ஏப்ரல் 20ம் தேதி தலைமை நீதிபதி தீபக்மிஸ்ரா அமர்வில் விசாரணை மேற்கொள்ளப்படும் என உச்ச நீதிமன்றம் நேற்று அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் அறிவிப்பை கடந்த மார்ச் மாதம் 5ம் தேதி மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இந்த தேர்தலுக்கு முதல்வர், துணை முதல்வர் மாநில பொருப்பாளராகவும், அமைச்சர்கள் எம்எல்ஏக்கள், மாவட்ட பொறுப்பாளர்களாகவும் அறிவிக்கப்பட்டன. இதில் 18,435 கூட்டுறவு சங்கங்களுக்கு 5 கட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்ட இந்த தேர்தலில் ஆளும் அதிமுகவினர் அதிகாரத்தை பயன்படுத்தி தங்களுக்கு வேண்டியவர்களை மட்டுமே தேர்ந்தெடுத்ததால் எதிர்க்கட்சியினரின் வேட்பு மனுக்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டன. இதனால் பல இடங்களில் வாக்குப்பதிவு நடத்தாமலேயே சங்க நிர்வாகிகள், உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கப்பட்டது. மேலும் பல இடங்களில் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் தேர்தல்கள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

இதில் முதல் இரு கட்ட தேர்தல்கள் முடிவடைந்த நிலையில், தேர்தல் நடைமுறைகளில் பாரபட்சம் காட்டப்படுவதாக திமுக கொறடா சக்கரபாணி தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை, தேர்தல் பணிகளை நிறுத்தி வைக்கவும், 3, 4, மற்றும் 5 வது கட்ட தேர்தல்களை நடத்த தடை விதித்து உத்தரவிட்டது. இந்நிலையில் உயர்நீதிமன்றத்தின் தடை உத்தரவிற்கு எதிராக தமிழக கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுவும், திமுக தரப்பில் கேவிட் மனுவும் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் உச்சநீதிமன்றம் நேற்று ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில்,”கூட்டுறவு சங்க தேர்தல் விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் அனைத்தையும் வரும் வெள்ளிக்கிழமை அதாவது ஏப்ரல் 20ம் தேதி உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தீபக்மிஸ்ரா அமர்வில் விசாரணை மேற்கொள்ளப்படும் என அறிவித்துள்ளது.

எல்.கே.ஜி., சேர்க்கைக்கு விண்ணப்ப பதிவு துவக்கம்:

இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தில், எல்.கே.ஜி., வகுப்புக்கான மாணவர் சேர்க்கைப்பதிவு, நாளை துவங்குகிறது.இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி,
சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகள், எல்.கே.ஜி., அல்லது ஒன்றாம் வகுப்பில், 25 சதவீத இடங்களில், கல்வி கட்டணமின்றி, மாணவர்களை சேர்க்க வேண்டும். இந்த மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு, 2017 முதல், 'ஆன்லைன்' முறைக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு, நாளை துவங்குகிறது. மே, 18க்குள் விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும். மாணவர்களின் பெற்றோர், அரசு தேர்வுத்துறையின், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், தங்கள் விபரங்களை பதிவு செய்ய, வசதி செய்யப்பட்டுள்ளது.

கிராமப்புற மாணவர்களுக்கு, அந்தந்த பகுதி தனியார் பள்ளிகள், வட்டார வள மையங்கள், கல்வித் துறை அலுவலகங்களில், விண்ணப்பம் பதிவு செய்யும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது என, பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

வேளாண் நுழைவுத்தேர்வு மாத இறுதியில் விண்ணப்பம் :

இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின், அகில இந்திய வேளாண் நுழைவுத்தேர்வுக்கான விண்ணப்பங்கள், இம்மாத இறுதியில் வெளியிடப்படுகின்றன.
ஐ.சி.ஏ.ஆர்., எனப்படும், இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் கீழ் செயல்படும் வேளாண் பல்கலைக்கழகங்கள் மற்றம் நிறுவனங்களில், வேளாண்மை, பொறியியல், தோட்டக்கலை, கால்நடை மற்றும் மீன்வள அறிவியல் போன்ற பல்வேறு படிப்புகள் வழங்கப்படுகின்றன. இளநிலை படிப்பில், 15 சதவீதம், முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளில், 25 சதவீத இடங்கள், ஒதுக்கீட்டு முறையில் நிரப்பப்படுகின்றன.இதற்காக ஒவ்வொரு ஆண்டும், தேசிய அளவில் வேளாண் நுழைவுத் தேர்வை, ஐ.சி.ஏ.ஆர்., நடத்துகிறது.இந்தாண்டுக்கான, இளநிலை படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு, மே, 12; முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளுக்கான தேர்வு, மே, 13 தேதிகளில் நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது, ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.ஐ.சி.ஏ.ஆர்., நிறுவன விஞ்ஞானி ஒருவர் கூறுகையில், 'நிர்வாக காரணங்களால், நுழைவுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. விரைவில்புதிய தேதிகள் அறிவிக்கப்படும்.

 ஏப்ரல் இறுதி வாரத்தில், விண்ணப்பங்கள் வெளியிடப்படும்.'இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின், www.icar.org.in என்ற இணையதளத்தில், தகவல்களை அறிந்துகொள்ளலாம். வேளாண் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள், அரசு உதவித்தொகையுடன் படிக்க, இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்' என்றார்.

விரைவில் பணிநிரவல் ? - 01.08.2017- படி உபரி ஆசிரியர்களில் STATION JUNIOR பட்டியல் கோரி இயக்குனர் உத்தரவு - CEO செயல்முறைகள் :

பள்ளிகளை திறப்பதோ, மூடுவதோ என்பதை அரசு தான் முடிவு செய்யும். பள்ளிக்கல்வி அலுவலர்கள் அதை முடிவு செய்ய முடியாது - அமைச்சர் செங்கோட்டையன்

தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குனர் இளங்கோவன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி இருக்கிறார்.



அதில் அரசு, நிதி உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 1.8.2017 நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் முதுகலை, பட்டதாரி, இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்வது தொடர்பான தகவல்கள் இடம்பெற்று இருந்தன.

மேலும், சுற்றறிக்கையில் மேல்நிலை பிரிவுகளை பொறுத்தவரை பள்ளி அமைந்துள்ள பகுதி நகராட்சி, மாநகராட்சி பகுதியாக இருப்பின் குறைந்தபட்சம் 30 மாணவர்களும், ஏனைய ஊரக பகுதியாக இருப்பின் குறைந்தபட்சம் மாணவர் எண்ணிக்கை 15 ஆக இருத்தல் வேண்டும்.

குறைந்தபட்ச மாணவர்கள் இல்லாமல் நடைபெற்று வரும் பாடப்பிரிவுகளை நீக்கம் செய்துவிட்டு அதில் பயிலும் மாணவர்களை அருகில் உள்ள பள்ளிகளுக்கு மாற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:-

அரசு ஆணை 2010-ன் படி ஒவ்வொரு ஆண்டும் தேர்வு முடிந்த பிறகு, மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்துவதற்காக சில தகவல்கள் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும்.

அந்த அடிப்படையில் தான் இது வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அதில் பள்ளிகள் மூடுவது தொடர்பாக எந்தவித கருத்தும் பதிவிடப்படவில்லை.

ஒரு பள்ளியை மூடுவது என்பதை அரசு ஆராய்ந்து, ஆலோசனை செய்து அதன் பின்னர் தான் முடிவு செய்யும்.

எனவே பள்ளிகளை திறப்பதோ, மூடுவதோ என்பதை அரசு தான் முடிவு செய்யும். பள்ளிக்கல்வி அலுவலர்கள் அதை முடிவு செய்ய முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஸ்மார்ட் வகுப்புக்கு ரூ.463 கோடி ஒதுக்கீடு'

பள்ளி மாணவர்களுக்கு, இணையம் வழியே கல்வி வழங்க, 463 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது,''
என, அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.சென்னை, அம்பத்துார் அருகே, சோழபுரம் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில், புதிய கட்டடத்தை திறந்து வைத்தபின், அவர் கூறியதாவது: 'நீட்' தேர்வை எதிர்கொள்ளும் வகையில், மாணவ - மாணவியருக்கு, சிறந்த ஆசிரியர்களால், சிறப்பான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. எனவே, வரும் நீட் தேர்வில், ஆயிரக்கணக்கான மாணவர்கள் வெற்றி பெறுவர். பள்ளிக் கல்வித் துறையை பொருத்த வரை, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆறாம் வகுப்பில் இருந்து, 3,000 பள்ளிகளில், 'ஸ்மார்ட்' வகுப்புக்களை ஏற்படுத்த, நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதற்காக, 463 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

டான்செட்' தேர்வு தேதி மாற்றம்

அண்ணா பல்கலை அறிவித்த, 'டான்செட்' நுழைவு தேர்வு தேதி, மாற்றப்பட்டு உள்ளது.பி.இ., - பி.டெக்., மற்றும் பி.ஆர்க்., பட்டப்படிப்பு முடித்தவர்கள், முதுநிலை இன்ஜினியரிங் மற்றும், எம்.பி.ஏ., படிப்புகளில் சேர, அண்ணா பல்கலை நடத்தும், டான்செட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
வரும் கல்வி ஆண்டுக்கான, டான்செட் நுழைவு தேர்வு, மே, 20ல் நடத்தப்படும் என, அறிவிக்கப் பட்டிருந்தது.அதே நாளில், அரசுத்துறையில், உதவி இன்ஜினியர் பணியில் காலியிடங்களுக்கு, டி.என்.பி.எஸ்.சி., போட்டி தேர்வு நடத்தப்படும் என, ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. எனவே, இன்ஜினியரிங் பட்டதாரிகள், போட்டி தேர்வை எழுதுவதா, மேல் படிப்புக்கான நுழைவு தேர்வை எழுதுவதா என, குழப்பம் அடைந்தனர்.இது குறித்து, நமது நாளிதழில், ஒரு வாரத்திற்கு முன் செய்தி வெளியானது. இதையடுத்து, டான்செட் தேர்வு தேதியை மாற்றும்படி, தமிழக உயர்கல்வித்துறைக்கு, டி.என்.பி.எஸ்.சி., கடிதம் அனுப்பியது.இதை தொடர்ந்து, டான்செட் தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை, அண்ணா பல்கலை டான்செட் தேர்வு கமிட்டி செயலர், நாகராஜன் நேற்று அறிவித்தார்.புதிய அறிவிப்பின்படி, அண்ணா பல்கலையின் டான்செட் தேர்வு, எம்.இ., - எம்.டெக்., - எம்.ஆர்க்., - எம்.பிளான் மற்றும், எம்.பி.ஏ., படிப்புகளுக்கு, மே, 19ல் தேர்வு நடத்தப்படுகிறது. எம்.சி.ஏ., படிப்புக்கு, மே, 20ல் தேர்வு நடத்தப்படுகிறது

பிளஸ் 1 சேர்க்கை : கல்வித்துறை அதிரடி

பிளஸ் 1ல், ஒவ்வொரு பாடப்பிரிவிலும், கிராமப்புறங்களில், 15 பேர்; நகர்ப்புறங்களில், 30க்கும் மேற்பட்ட மாணவர்களை சேர்க்க வேண்டும்' என, பள்ளிக்கல்வி இயக்குனர், இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார்.  பள்ளிகளில், ஆசிரியர்கள், மாணவர்கள் விகிதத்தை பராமரிப்பது குறித்து, அவரது உத்தரவு:ஒவ்வொரு பள்ளியிலும், பிளஸ் 1 வகுப்பில், மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். நகர்ப்புற பள்ளிகளில், ஒரு பாடப்பிரிவில், குறைந்த பட்சம், 30 பேர்; கிராமப்புறங்களில், 15 பேர் இருக்க வேண்டும். இந்த எண்ணிக்கையை விட, குறைவாக இருக்கும் பாடப்பிரிவுகளை நடத்த முடியாது. குறைந்தபட்ச மாணவர் எண்ணிக்கையை பராமரிக்கும் வகையில், வரும் கல்வி ஆண்டில், அதிக மாணவர்களை சேர்க்க, தலைமை ஆசிரியர்கள், முயற்சி எடுக்க வேண்டும்.ஆக., 1 நிலவரப்படி, இந்த எண்ணிக்கை இல்லாவிட்டால், குறைந்த மாணவர்கள் உள்ள பாடப்பிரிவு கலைக்கப்பட்டு, அருகில் உள்ள பள்ளிகளில், மாணவர்களை சேர்க்க வேண்டும்.இவ்வாறு, இளங்கோவன் உத்தரவிட்டு உள்ளார்.

தவறான தகவல் தந்தால் நடவடிக்கை: வருமான வரித் துறை

வருமான வரி செலுத்துவதில் இருந்து தப்பிக்க, வருமானத்தை குறைத்து அல்லது பிடித்தங்களை உயர்த்தி காட்டும், அரசு மற்றும் தனியார் துறையில் பணியாற்றும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'
என, வருமான வரித் துறை எச்சரித்துள்ளது.கர்நாடக மாநிலத்தில் செயல்படும், ஒரு தகவல் தொழில்நுட்ப துறை நிறுவனத்தின் ஊழியர்கள், வருமான வரி செலுத்துவதில் இருந்து தப்பிக்க, வருமானத்தை குறைத்தும், விலக்குகள் மற்றும் பிடித்தங்களை அதிகரித்து, கணக்கு தாக்கல் செய்திருந்தது, கண்டுபிடிக்கப்பட்டது; அவர்களுக்கு எதிராக, சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்துள்ளது.இந்நிலையில், பெங்களூரில் இயங்கும், வருமான வரித் துறையின், மத்திய செயலாக்க மையம், ஒரு ஆலோசனை குறிப்பை நேற்று வெளியிட்டது; அதில் கூறியிருப்பதாவது:வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோர், சட்டவிரோதமாக, வருமானத்தை குறைத்தும், பிடித்தங்கள் மற்றும் விலக்குகளை அதிகரித்தும் காட்டியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க, அவர்கள் பணிபுரியும் நிறுவனத்திற்கு உத்தரவிடப்படும்.அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் பணியாற்றுவோர். இத்தகைய தவறை செய்திருந்தால், பணியாளர் நடத்தை விதிகளின் கீழ், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, 'விஜிலென்ஸ்' பிரிவுக்கு பரிந்துரைக்கப்படும்.தவறான தகவல் தந்தது கண்டுபிடிக்கப்பட்டால், அது, வருமான வரி சட்டப் பிரிவுகளின் கீழ், தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படுவதுடன், அவர்களுக்கு திரும்பக் கிடைக்க வேண்டிய பணப் பயன்கள் தாமதமாகும்.வருமான வரி படிவங்களில் பொய்யான தகவல்களை தர உதவும், வரி ஆலோசகர்கள் மீது, குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். வரி ஏய்ப்பு செய்பவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க, சி.பி.ஐ., மற்றும் அமலாக்க துறைக்கு பரிந்துரைக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

19/4/18

2018ம் ஆண்டு 'நீட்' ஹால்டிக்கெட் வெளியீடு..கெடுபிடி தொடர்கிறது :

2018ம் ஆண்டிற்கான 'நீட்' ஹால்டிக்கெட் இன்று வெளியிடப்பட்டது. சிபிஎஸ்இ இணைய தளத்தில் இன்று வெளியான ஹால்டிக்கெட்டில் தேர்வு எழுதுவோரின் புகைப்படம், தேர்வு மைய விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு தேர்வு அறைக்குள் அனுமதியில்லாத பொருட்கள் குறித்த விபரம் வெளியிடப்பட்டுள்ளது. அதோடு ஆடை கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளது. முறைகேடு தவிர்க்கும் வகையில் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இத்தகைய கெடுபிடிகளால் மாணவ மாணவிகள் பெரும் தவிப்புக்கு ஆளாகினர்.
தேர்வு எழுதுவோர் இலகு ரக ஆடைகள் தான் அணிய வேண்டும். அறைக் கை சட்டை தான் அணிய வேண்டும். பெரிய அளவில் பட்டன்கள் இருக்க கூடாது. ஆடை ஊசி, பேட்ஜ், பூ அணிய கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ கல்வி மாணவர் சேர்க்கை நீட் கட்டாயம் என்பது கடந்த ஆண்டு முதல் அமல்படுத்தப்பட்டது. தேர்வு மையத்திற்கு சென்ற மாணவ மாணவிகளிடம் அதிகளவில் கெடுபிடிகள் கடந்த ஆண்டு கடைபிடிக்கப்பட்டது.
முழு கை சட்டை அணிந்தவர்கள், ஷூ அணிந்தவர்கள் அனுமதிக்கப்படவில்லை. சாதார செருப்பு, ஹீல்ஸ் குறைவான செருப்புகள், சாண்டல் காலணிகள் போன்றவை மட்டுமே அனுமதிக்கப்பட்டது. உச்சகட்டமாக கேரளாவில் ஒரு பெண் அணிந்திருந்த ப்ரா அகற்றப்பட்டது. வெடிகுண்டு சோதனையின் போது ப்ராவில் இருந்த இரும்பு கொக்கியால் சத்தம் கேட்ட காரணத்தால் அகற்றப்பட்டதாக பின்னர் விளக்கம் அளிக்கப்பட்டது.
ஜீன்ஸ் பேன்ட்களில் இருந்து பாக்கெட்கள், இரும்பு பட்டன்கள் அகற்றப்பட்டது. இது போல் இந்த ஆண்டும் கெடுபிடிகள் அதிகமாக இருக்கும். அதனால் நீட் எழுத செல்லும் மாணவ மாணவிகள் ஆடை, அலங்கார பொருட்கள், காலணிகள் குறித்த விஷயத்தில் முன்னெச்சரிக்கையாக செல்லுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது..

கோடை விடுமுறைக்கு பின் புதிய பாடத்திட்ட பயிற்சி!!

கோடை விடுமுறைக்கு பிறகே, ஆசிரியர்களுக்கு, புதிய பாடத்திட்ட பயிற்சி அளிக்க, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.தமிழகத்தில், 13 ஆண்டுகளுக்கு பின், அனைத்து வகுப்புகளுக்கும் பாடத்திட்டம் மாற்றப்பட்டு உள்ளது. பள்ளிக் கல்வி செயலர், உதயசந்திரன் மேற்பார்வையில், புதிய பாடத்திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. வரும் கல்வி ஆண்டில், 1, 6, 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு, புதிய பாடத்திட்டம் அமலுக்கு வருகிறது.

புதிய பாடத்திட்டப்படி, எப்படி பாடம் நடத்துவது, அதில் உள்ள முக்கிய அம்சங்கள் என்ன என்பது போன்ற பயிற்சிகள், ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட உள்ளன. மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில், இந்த பயிற்சி வழங்கப்பட உள்ளது.பள்ளி துவங்குவதற்கு முன், கோடை விடுமுறையில் பயிற்சி தரலாம் என, முடிவு செய்யப்பட்டுஇருந்தது. ஆனால், 'கோடை விடுமுறையை ரத்து செய்யக் கூடாது' என, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர். இதைத் தொடர்ந்து, கோடை விடுமுறைக்கு பின், புதிய பாடத்திட்டம் குறித்த பயிற்சி அளிக்கலாம் என, பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்து உள்ளது

12 ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிக்கு வராத தனியார் பள்ளி ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்கப்படும் -அமைச்சர் செங்கோட்டையன்

வரும் கல்வியாண்டுக்கான புத்தகங்களை இணையதளம் மூலம் பெறலாம்!!!

வரும் கல்வியாண்டுக்கான (2018-19) பாடநூல்களை இணையதளம் மூலம் பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம் என தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறியது:-
தமிழகத்தில் வரும் கல்வியாண்டுக்கான பாடநூல்களை பள்ளிகள் மொத்தமாக, தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் கழகத்திடமிருந்து கொள்முதல் செய்து விநியோகிக்கின்றன.
நிகழாண்டு புதிய பாடத்திட்டத்தின்படி அச்சிடப்படவுள்ள 1,6,9,11 ஆகிய வகுப்புகளுக்குத் தேவையான நூல்கள் ஜூன் மாதத்தில் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவை தவிர 2,3,4,5,7,8,10, பிளஸ் 2 ஆகிய வகுப்புகளுக்கான பாடநூல்கள், சென்னை நுங்கம்பாக்கம் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மையத்தில் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதேபோன்று, சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தில் அமைக்கப்பட்டுள்ள மையத்திலும் பாடநூல் விற்பனை தொடங்கியுள்ளது.
மேலும் வெளி மாவட்டங்களில் உள்ள மாணவர்கள், பெற்றோர் வசதிக்காக www.textbookcorp.in என்ற இணையதளம் மூலம் பதிவு செய்து பணம் செலுத்தி பாட புத்தகங்களை பெற்றுக்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.
இணையதளத்தில் பதிவு செய்த அடுத்த மூன்று நாள்களுக்குள் பாடநூல்கள் நேரடியாக வீடுகளுக்கே கூரியர் சேவை மூலம் அனுப்பி வைக்கப்படும். பாடநூல்கள் விலை விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் நிறுவனத்தில் ஏற்கெனவே பதிவு செய்த பள்ளிகள், பாடநூல்களை மொத்தமாகப் பெறுவதற்கு இணையதளத்தைத் தொடர்பு கொள்ளலாம் என அவர்கள் தெரிவித்தனர்.

மாதிரி மாணவர் சேர்க்கை விண்ணப்பம் :

தொடக்கக் கல்வித் துறை பள்ளிகளுக்கு கோடை விடுமுறை பற்றிய சரியான தகவல் --- தொடக்கக் கல்வி இயக்குநர் அறிவிப்பு.

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் ஏப்ரல் 21 முதல் பள்ளிகளுக்கு கோடைவிடுமுறை விடப்படுகிறது என தெரிவித்திருந்தார். பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அறிவிப்பால் ஏப்ரல் 19ஆம் தேதியுடன் பள்ளி வேலைநாள்கள் முடிவதாக இருந்த சூழ்நிலை ஏப்ரல் 20ஆம் தேதியும் பள்ளி வேலைநாள் என்ற நிலை உருவானது.

சென்ற ஆண்டு மாறுதல் ஆணை பெற்று விடுவிக்கப்படாமல் (ஈராசிரியர் பள்ளிகளில்) உள்ள ஆசிரியர்களை தற்போது பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் ஆணைக்கிணங்க ஏப்ரல் 18 ஆம் தேதி விடுவித்து ஏப்ரல் 19 ஆம் தேதிக்குள் பணியில் சேர்ந்துகொள்ள குறிப்பாணை வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆணை அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் இ.மெயில் மூலம் அனுப்பப்பட்டுள்ளது.

பள்ளி கோடை விடுமுறை மாற்றம் தொடர்பாக எழுத்து பூர்வமான அறிவிப்புகள் எதுவும் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்படாததால் ஏற்கனவே உள்ள பள்ளி வேலைநாள் கால அட்டவணைப்படி ஏப்ரல் 19 ஆம் தேதிதான் இவ்வாண்டின் கடைசி வேலைநாளாகும். ஏப்ரல் 20 ஆம் தேதி கோடைவிடுமுறை தொடங்குகிறது.

தொடக்கக் கல்வித் துறை பள்ளிகள் 210 பள்ளி வேலைநாள்கள் முடித்திருக்க வேண்டும். பள்ளி வேலைநாள்கள் 210 க்கு குறைவாக உள்ளது எனில் ஏப்ரல் 20 பள்ளி வேலைநாளாக செயல்படலாம். இதில் வேறு எந்தவித குழப்பமும் தேவையில்லை.

விஐபி வரவேற்பில் மாணவியர் பங்கேற்க தடை

அருப்புக்கோட்டையில் உள்ள, தேவாங்கர் கலை கல்லுாரி கணித பேராசிரியை, நிர்மலாதேவி, தன்னிடம் படிக்கும், பி.எஸ்சி., மாணவியரை, தவறான வழிக்கு துாண்டிய விவகாரம், சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக வெளியான, 'ஆடியோ' பதிவில், கல்லுாரி நிகழ்ச்சிகளுக்கு, வி.ஐ.பி.,க்கள் என்ற, முக்கிய பிரமுகர்கள் வருகை தரும்போது, சில விஷயங்கள் தேவைப்படுவதாக, மாணவியரிடம் நிர்மலா தேவி கூறியுள்ளார். இதனால், பெற்றோர்களும், கல்வியாளர்களும், அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதையடுத்து, கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில் நடக்கும் நிகழ்ச்சிகளில், உபசரிப்பு, வரவேற்பு, விருந்து போன்றவற்றில், மாணவியர் மற்றும் பேராசிரியைகளை பங்கேற்க அனுமதிக்க வேண்டாம் என, கல்லுாரி முதல்வர்களுக்கு, உயர் கல்வித் துறை சார்பில், சுற்றறிக்கை அனுப்ப உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

பத்தாம் வகுப்பு அறிவியலில் தேர்ச்சி எளிது : ஆசிரியர், மாணவர்கள் கருத்து

பத்தாம் வகுப்பு அறிவியல் பாடத்தில் தேர்ச்சி பெறுவது எளிது, என ஆசிரியர், மாணவர்கள் தெரிவித்தனர்.
ஆர்.விஷால், சுவார்ட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி: 15 ஒரு மதிப்பெண் வினாக்களில் இரண்டு வினாக்கள் விடை எழுத முடியவில்லை. இரண்டு மதிப்பெண்ணில், 32 கேள்விகளில் 20 கேள்விகள் எழுதவேண்டும். இவை எளிதாக இருந்தன. 5 மதிப்பெண் கேள்விகளில் புத்தகத்தின் உள்ளே இருந்து அதிகம் இடம்பெற்றிருந்தது.
ஜே.லேஷிதா, அரசு உயர்நிலைப்பள்ளி, பேராவூர்: ஒரு மதிப்பெண்ணில் 13, 14 கேள்விகள் பாடத்தின் உள்ளே இருந்து கேட்கப்பட்டதால், விடை அளிக்க முடியவில்லை. ஐந்து மதிப்பெண்ணிலும், அது போல் கேட்கப்பட்டாலும், ஆசிரியர்கள் எங்களுக்கு பயிற்சிஅளித்ததால் எளிதானது.
ஹெப்சி ஜெனிடா ஆக்னஸ், சுவார்ட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ராமநாதபுரம்: ஒன்று, ஐந்து மதிப்பெண் வினாக்கள், புத்தகத்தின் உள்ளே இருந்து கேட்கப்பட்டிருந்தது. கேள்விகளை புரிந்து எழுதினால் அதிக மதிப்பெண் பெறலாம்.
பி.ஆறுமுகம், அறிவியல் பட்டதாரி ஆசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, அழகன்குளம்: முந்தைய தேர்வுகளை காட்டிலும், அறிவியல் தேர்வு எளிமை. அனைவரும் தேர்ச்சி பெறுவது எளிது. இரண்டு ஒரு மதிப்பெண் வினாக்கள் சிந்தித்து எழுதுவதாக இருந்தது.மேலும், இரண்டு மற்றும் ஐந்து மதிப்பெண் கேள்விகளில் 'அ' மற்றும் 'ஆ' என இரண்டு பகுதியிலும் சரியாக எழுதினால் மட்டுமே முழு மதிப்பெண் பெற முடியும்.

தொடக்க, நடுநிலை பள்ளிகளில் டி.சி., வழங்குவதில் குழப்பம்

விடைத்தாள் திருத்தாமல் போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்- உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

திட்டமிட்டபடி +2 தேர்வு முடிவுகள் மே 16-ஆம் தேதி வெளியாகும் என்று தமிழக அரசு உறுதிப்படத் தெரிவித்துள்ளது. மேலும் போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விடைத்தாள் திருத்தும் பணியின் போது, ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட தடை கோரிய வழக்கில் ஆசிரியர் சங்கம் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.