யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

6/12/18

கைகண்டஅனுபவமருத்துவம்!----உடல்நலம் மருத்துவம்,




கீழ்கண்ட மருத்துவக் குறிப்புகள் எல்லாம் மலைவாழ்மக்கள் பயன்படுத்தும் மருத்துவக் குறிப்புகள்.கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காதது.அனைவருக்கும் பயன்படவேண்டி தேடிப்பிடித்து பகிர்கிறேன்.பாதுகாப்பாக இதனை எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.உங்களுக்கும்/நண்பர்களுக்கும் பயன்படும்.-

கைகண்ட [அனுபவ] மருத்துவம் !!

நாடோடி மக்களின் பழக்கவழக்கங்களை நன்கு அறிந்து, அதன் பயனாகப் பல மூலிகைகளின் சிறப்பை உணர்ந்து, சித்த வைத்தியத்திலும் தேர்ந்தவர் பிலோஇருதயநாத்.

அவரின் கைகண்ட அனுபவம் மருத்துவம் இவை."

சில எளிய மருத்துவம்: !!!

வயிற்றுவலிக்கு: முருங்கைக் கீரையை ஒரு கைப்பிடி எடுத்துச் சுத்தமான தண்ணீரில் கழுவி, உரலில் போட்டு நன்றாக இடித்துச் சாறு பிழிந்துகொண்டு, காலை, பகல், மாலையில் கொஞ்சம் சர்க்கரையுடன் அதைக் கலந்து உணவுக்குமுன் 1/4 ஆழாக்குச் சாப்பிட்டு வந்தால் வயிற்றுவலி குணமாகும்.

இடுப்பில் வரும் வண்ணார் புண்: இது சாதாரணமாய் எங்கே வாழ்ந்தாலும் சரி, சிலருக்கு உண்டாகும். இந்தப் புண் இருப்பவர்கள் இடுப்பைச் சுத்தமாகக் கழுவிக்கொண்ட பின், வாழைப் பழத்தோலின் உள் பக்கத்தைப் புண்ணின்மேல் வைத்து கட்டிக் கொள்ள வேண்டும். அப்பொழுது தாங்க முடியாத எரிச்சல் உண்டாகும். சில நாட்களில் முற்றும் குணம் அடைந்து விடும்.

கண்நோய்: கடுமையான கண் நோய் இருப்பவரகளுக்கு நீலகிரியில் வாழும் ஆதிவாசிகள், வெங்காயத்தை வெள்ளைத் துணியில் மூட்டை கட்டிப் பிறகு நசுக்கிக் கண்ணில் பிறிவார்கள். சில மணி நேரங்களில் நோய் குணமாகிறது.

டான்சில்ஸ்: சுத்தமான குங்குமப் பூவை இரண்டு கீற்று எடுத்து வெற்றிலையில் வைத்து வியாதியுள்ளவர்களுக்கு காலை, மாலை கொடுக்க, இரண்டே நாட்களில் குணம் காணலாம்.

தேள் கொட்டினால்: கேரள நாட்டு ஆதிவாசிகள் தேள் கொட்டினால் உடலின் எந்தப் பக்கத்தில் கொட்டுகிறதோ. அதற்கு எதிர்ப்பக்கத்துக் கண்ணில் ஒரு சொட்டு சுத்தமான உப்புத் தண்ணீரை விடுகிறார்கள். உப்பு நீரால் தேள் கொட்டிய இடத்தில் கீழ்பக்கமாக உருவிக் கழுவ வேண்டும். 5 நிமிடத்தில் விஷம் இறங்கி விடுகிறது.

வயிற்றில் உள்ள நாக்குபூச்சி போக: வயிற்றில் நாக்குப் பூச்சி இருப்போர் கண்ட மருந்தும் சாப்பிடக்கூடாது. வயதுக்குத் தகுந்தாற்போல் நல்ல சிற்றாமணக்கெண்ணெய் ஒரு கிண்ணத்தில் ஊற்றி, அதே எண்ணெயின் அளவுக்கு நாட்டுச் சர்க்கரையைப் போட்டு நன்றாகக் கலக்கிய பிறகு அதிகாலையில் சுமார் ஆறு மணிக்குக் குடித்துவிட வேண்டும். வயிற்றில் இருக்கும் பூச்சிகள் இந்த வெல்லத்தைச் சாப்பிட வரும். அந்த வேகத்தில் பேதியுடன் கலந்து பூச்சிகள் வெளியில் வந்து விடும். அன்று மிளகு ரசம் மட்டுமே சாப்பிட வேண்டும். குளிக்கக்கூடாது..பப்பாளிப் பாலுடன் சுத்தமான தேன் கலந்து சாப்பிட்டாலும் வயிற்றிலுள்ள நாக்குப் பூச்சி இறந்துவிடும். பிறகு கொஞ்சம் ஆமணக்கு எண்ணெய் சாப்பிட்டால் பூச்சிகள் வெளியே வந்துவிடும். வயதுக்குத் தக்கபடி அளவுகள் வைத்துக் கொள்ள வேண்டும்.

தொண்டைக் கம்மலுக்கு: சித்தரத்தை, அதிமதுரம், அரிசித்திப்பிலி வாங்கி ஒன்றாக இடித்து, அதை இரு பாகமாக்கி ஒரு பாகத்தில் எண்ணூறு மில்லியளவுத் தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைக்க வேண்டும். அந்த கஷாயம் இருநூறு மில்லியளவுத் தண்ணீராகச் சுண்டியதும், அதை ஒரு நாளைக்கு மூன்று வேளையாகப் பிரித்துச் சாப்பிட வேண்டும். மீதிப் பாதி மருந்தை மறு நாளைக்கு அதைப்போலவே செய்து மூன்று வேளை சாப்பிட வேண்டும். இதைப்போல் நான்கு நாட்களுக்கு சாப்பிட்டால் தொண்டைக் கம்மல் குணமாகும்.

ஒற்றைத் தலைவலி : மருதோன்றி (மருதாணி)யை அழவான இலைஎன்றும் சொல்வார்கள். அந்த இலையை அரைத்து எந்தப் பக்கத்தில் தலைவலி இருக்கிறதோ, அந்தப் பக்கத்துக் காலின் அடிப்பாகத்தில், பாதத்தில் புதிய பத்துக் காசு அளவு வட்டமாக வைத்து, துணியால் கட்டிக் கொண்டு இரவில் படுத்துவிட வேண்டும். ஒரு தடவை செய்தால் போதும். உடனே ஒற்றைத் தலைவலி நின்றுவிடும். மறுபடி தலைவலி வரும்போது இப்படிச் செய்யலாம்.
அஜீரணம்: அடிக்கடி அஜீரணத்தால் துன்பப்படும் நண்பர்கள் தினமும் பப்பாளிப் பழத்தை ஒரு துண்டு சாப்பிட்டு வந்தால் எப்படிப்பட்ட அஜீரணமும் போகும்.

கல்லீரல் வீக்கம்: கல்லீரல் வீக்கமும் காய்ச்சல் கட்டியும் உள்ள குழந்தைகளுக்குப் பப்பாளிப் பழத்தைச் சாப்பிடக் கொடுத்தால் சில நாட்களில் கட்டாயம் குணமாகும். பழத்தை அல்வா, ஜாம் முதலியவை செய்தும் சாப்பிடலாம்.

கக்குவான் இருமல்: அதிமதுர வேரை வாயில் அடக்கி வைத்துக் கொண்டு அதன் நீரை விழுங்கும்படி செய்யலாம். மக்காச் சோளக் கதிர்த் தண்டைக் கஷாயம் வைத்துச் சாப்பிடலாம்.இவற்றைக் கொடுத்தால் கக்குவான் இருமல் அடியோடு நீங்கி விடும் என்று நினைக்க வேண்டாம். கொஞ்சம் குறையும். குழந்தைகளுக்கு வாந்தி அதிகம் இராது. எப்படியும் மூன்று மாதம் இருந்த பின்தான் இருமல் போகும“.

குடல் வாதம்: முள்ளங்கியின் விதையைக் கஷாயமிட்டுச் சாப்பிடக் குடல் வாதம் அறவே நீங்கும்.

தாது விருத்தியாக: முள்ளங்கி விதையையும், முள்ளங்கிக் கிழங்கையும் அதிகமாக உடயோகித்து வந்தால் தாகு விருத்தியாகும்.

ஜலதோஷம்: பகலில் சாப்பாட்டின் போது ஒரு பச்சை வெங்காயத்தைத் துண்டு துண்டாக்கி உணவுடன் மூன்று வேளை சாப்பிட்டால் ஜலதோஷம் நீங்கும்.

வயிற்றில் கட்டி: வெள்ளை முள்ளங்கியின் சாற்றை எடுத்து அரை அவுன்சு வீதம் 90 நாட்கள் சாப்பிட வேண்டும். 91ம் நாள் குணம் தெரியும். காலையில் ஆகாரத்துக்கு முன் சாப்பிட வேண்டும். அரை மணிக்குப் பிறகு எதையும் சாப்பிடலாம்.

தலையில் புழு வெட்டு : 1. ஆற்றுத் தும்மட்டிக்காயை நான்காக வெட்டி அதில் ஒரு பகுதியைத் தலையில் தேய்க்க வேண்டும். இதன் கசப்புத் தன்மையைத் தாங்காத பூச்சி, உடலில் இறங்கி ரத்தத்தின் வேகத்தில் இறந்துவிடும். தும்மட்டிக்காயைச் சுமார் 90 நாட்கள் தேய்க்க வேண்டும். 2. வெங்காயத்தையும் மூக்குப் பொடியையும் ஒன்றாக இடித்துத் தலையில் எப்பகுதியில் சொட்டை இருக்கிறதோ, அப்பகுதியில் எரிச்சலைப் பாராமல் சுமார் 15 நாட்கள் தேய்க்க வேண்டும்.

பாதத்தில் பித்த வெடிப்பு: ஐந்து நாட்களுக்கு விடாமல் வேப்ப எண்ணெயைத் தடவினால் பித்த வெடிப்பு மறைந்துவிடும். ஆறு மாதத்துக்கு இந்தத் தொல்லை இராது.

வெண்குஷ்டம் : மருதாணி வேர். அதாவது அழவான இøல் செடிவேர் சிறிது எடுத்து உலர்த்தி வைத்துக் கொள்ளவும். அதில் கொஞ்சம் எடுத்துப் பசும்பால் விட்டு நன்றாக அரைத்துக் கொண்டு வெண்மையாக இருக்கும் தோலின்மேல் பூசவும். நாளடைவில் தோலின் வெண்ணிறம் மாறிவிடும்.

காலராவைத் தடுக்க: காலை, மாலை ஒரு தேக்கரண்டி தேன் குடித்தால் வாந்திபேதி வராமல் தடுத்துக் கொள்ளலாம்.
மூலம், வாய்ப்புண், வயிற்றுப்புண்: இந்த வியாதிகளுக்குத் துத்தி இலைக் கீரையைச் சமைத்துச் சாப்பிட வேண்டும். புளி ஊற்றக் கூடாது. பகல் உணவுடன் ஒரு வேளை மட்டும் சாப்பிட வேண்டும். இந்தக் கீரை சாப்பிடும்போது மற்றக் கீரைகளை உண்ணக்கூடாது.

கடுமையான சுளுக்கு: சுளுக்குப் பிடித்த இடத்தில் துத்தி இலையை மெதுவாகத் தேய்த்துவிட வேண்டும். மேலிருந்து கீழ்நோக்கிக் காலையில் தேய்த்த ஒரு மணி நேரத்துக்குப்பின், தாங்கக்கூடிய சூட்டில் வெந்நீரை ஐந்து நாட்களுக்கு விட வேண்டும். பிறகு குணமாகும்.

காதில் சீழ் வடிதல்: எட்டிக் கொட்டையை வேப்பெண்ணெயில் ஒரு வாரம் ஊற வைக்க வேண்டும். ஒரு வாரம் கழித்து ஒரு கோணி ஊசியில் குத்திக் கொள்ள வேண்டும். எட்டிக் கொட்டையைக் கொளுத்தியதும் கொட்டையிலிருந்து எண்ணெய் சொட்டும். அதுதான் எட்டித் தைலம். மூன்று சொட்டு ஆற வைத்து, காதில் விட வேண்டும். சீழ் குணமாகும். (5 வயதுக்குள் இருக்கும் குழந்தைகளுக்கு இதைத் தரக்கூடாது)

காலில் ஆணி: ஊறுகாய்க்கு ஊற்றும் காடியைப் பஞ்சில் எடுத்துக் கொண்டு அணி இருக்கும் காலில் ஒரு நாளைக்குப் பலமுறை தடவிக் கொண்டே வரவேண்டும். 45 நாட்களில் குணம் தெரியும் ஆணி மறைந்துவிடும்.

பல்வலி : 1. கீழாநெல்லி இலையைக் காலையில் நன்றாக மென்று அப்படியே பல் துலக்க வேண்டும். மூன்று நாட்களுக்குப் பல் துலக்கினால் போதும். குணம் தெரியும். 2. தென்னை மரத்தின் வேரை நன்றாக மென்று மூன்று நாட்களுக்குப் பல் துலக்க வேண்டும். குணம் தெரியும்.

வழுக்கைத் தலையில் முடி வளர: காலையிலும், இரவிலும் சாதாரண வெங்காயத்தைத் தலை நிறையத் தேய்த்து வந்தால் இரண்டு மூன்று மாதங்களில் கருகருவென்று முடி வளர்ந்துவிடும்.

நாட்டுப்புற மருந்துகள்

நாட்டுப்புற மருத்துவத்தில் ஆடவர், பெண்டிர், குழந்தைகள் போன்றோர்களின் பல்வேறு வகை நோய்களுக்கான மருந்துகளும் அவற்றைப் பயன்படுத்தும் முறைகளும் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றை இனிக் காணலாம்.

தொப்பையை குறைக்க ஒரு அற்புதமான இயற்கை மருந்து ஓமம்!!
சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயிற்றுப் பொருமல், வயிற்று வலி, அஜீரணக் கோளாறு உள்ளவர்கள் 100 கிராம் ஓமத்தை 1 லிட்டர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து அது பாதியாக வந்தவுடன் எடுத்து அருந்தினால் மேற்கண்ட அனைத்தும் தீரும்.

மகளிர் மருத்துவம்
********

திருமணமான - திருமணமாகாத பெண்களுக்குப் பொதுவாக வரும் நோய்களும் அவற்றிற்கான மருந்துகளும் கீழ்வருமாறு :

1. வெள்ளைபடுதல் - அசோகப் பட்டையைக் காய்ச்சி வடித்த நீரை அளவுடன் பருகி வர நிற்கும்.

2. பிறப்புறுப்பில் புண் - மாசிக்காயை அரைத்துத் தடவிவர ஆறும்.

3. சீரற்ற மாதவிலக்கு - அரிநெல்லிக்காயைப் பச்சையாகச் சாப்பிட்டு வரச் சீர்பெறும்.

4. மாதவிலக்குக் கால வயிற்றுவலி - முருங்கை இலைச்சாற்றை வெறும் வயிற்றில் குடித்து வர நிற்கும்.

5. உடல் நாற்றம் - ஆவாரந் தழையுடன் கஸ்தூரி மஞ்சளைச் சேர்த்து அரைத்துக் குளித்து வர நீங்குவதுடன் மேனியும் அழகு பெறும்.

திருமணத்துக்குப் பின்பு வரும் சில நோய்கள், அவற்றிற்கான மருந்துகளை இனிக் காணலாம்.

1. கர்ப்பகால வாந்தி - அரிநெல்லிக்காயை உண்டு வர நிற்கும்.

2. பிரசவ காலத்தில் ஏற்படும் வயிற்றுப்புண் - வேப்பந்தழையுடன் சிறிது மஞ்சள் சேர்த்து உண்டு வரப் புண் ஆறி வயிற்றிலுள்ள பூச்சிகள் நீங்கிப் பிரசவித்த பெண்கள் நலம் பெறுவர்.

3. பிரசவத்திற்குப் பின் உடல் மெலிவு - சீரகம், பூண்டு, குறுமிளகு சேர்த்துச் சமைத்த வெள்ளாட்டுக் கறியை உண்டு வர உடல் வலுப்பெற்று நலம் திரும்பும்.

4. தாய்ப்பால் பற்றாக்குறை - பேய் அத்திப்பழத்தை உண்டுவரப் பெருகும்.

ஆடவர் மருத்துவம்
*******

ஆண்களுக்கென்று உள்ள தனிநோய்களும் அவற்றைப் போக்குவதற்கான மருந்துகளும் பின்வருமாறு :

1. நீர் பிரிதலில் சிக்கல் - தாமரைப் பூவைப் பச்சையாகச் சிறிதளவு உண்டு வரத் தாராளமாய் நீர் பிரியும்.

2. மூத்திர எரிச்சல் - கரிசலாங்கண்ணி எனும் கீரையின் சாற்றை அளவுடன் குடித்து வரத் தீரும்.

3. விந்து வெளியேறல் - ஒரு குவளை பசும்பாலுடன் பேரிச்சம்பழங்கள் சிலவற்றைப் போட்டுச் சாப்பிட்டு வர குணமாகும்.

4. ஆண்மைக் குறைவு - இலுப்பைப் பூவை அரைத்துப் பசும்பாலில் கலந்து குடித்து வர ஆண்மைத் தன்மை பெருகும்.

5. வெள்ளைபடுதல் - பழம்பாசி இலைகளைப் பசும்பாலில் விட்டு அரைத்துத் தொடர்ந்து இரண்டு வேளை காலையில் அளவாகப் பருகி வர நோய் விலகும்.

குழந்தையர் மருத்துவம்
**********

அனைத்து நோய்களும் குழந்தைகளைத் தாக்கவல்லன என்றாலும் அவற்றுள் சிலவும் அவற்றிற்கான மருந்துகளையும் கீழே காணலாம்.

1. வயிற்றுப்போக்கு - வசம்பை உரசிக் காலை மாலை கொடுத்து வரக் கட்டுப்படும்.

2. சளி - துளசிஇலைச் சாற்றில் மூன்று, நான்கு துளிகள் தாய்ப்பாலைக் கலந்து கொடுக்க விலகும்.

3. கக்குவான் - பனங்கற்கண்டுடன் சிறிதளவு மிளகைச் சேர்த்துக் கொடுத்து வந்தால் விலகும்.

4. சாதாரணக் காய்ச்சல் - தாய்ப்பாலை ஒரு துணியில் நனைத்துக் குழந்தையின் நெற்றியைச் சுற்றி ஒத்தடம் கொடுத்து வரத் தீரும்.

5. உடம்பு வலி - சிறிய வெங்காயத்தைத் தட்டி இதன் சாற்றைக் கைகால்களில் தேய்த்துவிட வலி குறையும்.

பொது மருத்துவம்
*******

ஆண், பெண், குழந்தை எனும் பாகுபாடில்லாமல் மனிதர்களைத் தாக்கும் பொதுவான நோய்கள் இப்பிரிவில் அடங்குகின்றன. அந்நோய்கள் பலவாகும். அவற்றுள் சிலவற்றிற்கான மருந்துகள் வருமாறு :

1. காய்ச்சல் - திராட்சை ரசத்தில் வெந்நீர் கலந்து உண்ண மட்டுப்படும்.

2. பொடுகுத் தொல்லை - வெள்ளை முள்ளங்கிச் சாற்றைத் தலைக்குத் தேய்த்துக் குளித்து வர நீங்கும்.

3. பேன் - துளசிச் சாற்றைத் தலையில் தேய்த்து வரப் பேன் தங்காது.

4. வெட்டுக்காயம் - மஞ்சளைப் பொடி செய்து வெட்டுக்காயத்தில் வைத்துக் கட்டலாம்.

5. முகப்பரு - பூண்டை உரித்து அதன் சதைப் பகுதியை முகத்தில் தேய்த்து வர மறையும்.

கால்நடை மருத்துவம்
*********

கால்நடைகளுக்கு உண்டாகும் நோய்களுள் சிலவற்றையும் அவற்றைப் போக்குவதற்கான மருந்துகளையும் கீழே காண்க.

1. புண் புழு - சந்தனத்தையும் சிறிய வெங்காயத்தையும் அரைத்து மாட்டின் புண்ணில் விடப் புழு வெளியேறிப் புண் ஆறும்.

2. ஆட்டிற்கு வயிற்றுப் போக்கு - தேங்காய் எண்ணெய் சிறிதளவைச் சங்கில் எடுத்து ஆட்டுக்குட்டிக்குப் புகட்ட வயிற்றுப் போக்கு நிற்கும்.

3. கோழிகளுக்கு வயிற்றுப்போக்கு - கோழிகளுக்கு விளக்கெண்ணெயைச் சிறிதளவு கொடுக்கச் கழிச்சல் நிற்கும்.

நாட்டுப்புற மருத்துவத்தின் சிறப்புகள்

பக்க விளைவுகள் இல்லாதது. எளிய முறையில் அமைவது. அதிகப் பொருட் செலவில்லாதது. ஆங்கில மருத்துவத்தில் குணப்படுத்த முடியாத பல நோய்களுக்குக் குணம் தரக்கூடியது. அனுபவ முறையில் பெறப்படுவது. பெரும்பாலும் இயற்கையாகக் கிடைக்கும் பொருள்களை மருந்துகளாகக் கொண்டுள்ளது. சற்று மெதுவாகச் செயல்பட்டாலும் நோய் முழுமையாகக் குணமடைவது. எளிய முறையில் மக்களுக்குப் புரிய வைப்பதால் நோயாளிகள் நோயின் ஆரம்ப கட்டத்திலேயே தடுப்பு முயற்சிகள் செய்துகொள்ள ஏதுவாகிறது. நாட்டு மருத்துவத்தை அறியக் கல்வியறிவு தேவையில்லை, பாமரரும் பின்பற்றலாம். பெரும்பாலும் பரம்பரை பரம்பரையாகப் பின்பற்றப்பட்டு வருவதால் மருத்துவர்கள் நோயைக் கண்டறிவது மிக எளிதாகின்றது.
உலக நாடுகளில் நாட்டுப்புற மருத்துவமே நவீன மருத்துவத்துக்கு அடிப்படையான உந்துதலாக அமைந்துள்ளது.
உடல் ரீதியாக மட்டும் அணுகாமல் உளரீதியாகவும் அணுகுவதால் நாட்டுப்புற மருத்துவம் சிறப்பானதாக ஆகின்றது.

TNPSC - ஏழு தேர்வுகளுக்கான 'ரிசல்ட்' தேதி அறிவிப்பு :

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., சார்பில் நடத்தப்படும், போட்டி தேர்வுகளின் முடிவுகளை, திட்டமிட்ட தேதியில் வெளியிட, முடிவு செய்யப்பட்டது. குரூப் - 1 பதவியில், 85 பணியிடங்களுக்கான தேர்வின் முடிவு, இந்த மாத இறுதியில் வெளியாகிறது. வனத்துறை காவலர் பணி தேர்வு, குரூப் - 4 பதவியில், 12 ஆயிரம் காலியிடங்களுக்கான தேர்வு உட்பட, ஏழு தேர்வுகளுக்கான முடிவு தேதி, www.tnpsc.gov.in என்ற, இணையதளத்தில் வெளியிடப்பட்டுஉள்ளது.தொழில் மற்றும் வணிக துறையில், விலை நிர்ணய உதவியாளர் என்ற, 'காஸ்ட் அசிஸ்டென்ட்' பதவியில், ஒரு காலியிடத்துக்கு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., சார்பில் தேர்வு நடத்தப்படுகிறது.மார்ச், 2ல் நடக்கும் இந்த தேர்வுக்கு, ஆன்லைன் விண்ணப்ப பதிவு துவங்கியுள்ளது. ஜன., 2 வரை விண்ணப்பங்களை பதிவு செய்யலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

நீட்' தேர்வுக்கான பதிவு நாளை மறுநாள் நிறைவு :

பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், மருத்துவ படிப்புகளில் சேர, 'நீட்' நுழைவு தேர்வில், கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். நடப்பு கல்வி ஆண்டு மாணவர்களுக்கான, நீட் தேர்வு, மே, 6ல் நடக்கிறது. இந்த தேர்வுக்கு, நவ., 1ல் விண்ணப்ப பதிவு துவங்கியது. ஆன்லைன் வழியில், நவ., 30ல் விண்ணப்ப பதிவு முடியும் என, அறிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில், பொது பிரிவினரில், 25 வயதுக்கு அதிகமானவர்களும், நீட் தேர்வில் பங்கேற்கலாம் என, சமீபத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, நீட் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு, ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டது. அந்த கூடுதல் அவகாசம், நாளை மறுநாள் முடிகிறது.மாணவர்கள் முன்கூட்டியே திட்டமிட்டு, விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ளுமாறு, மாணவர்களுக்கு நீட் தேர்வை நடத்தும், தேசிய தேர்வு முகமை அறிவுறுத்தியுள்ளது.

சட்டக் கல்லூரி பேராசிரியர் பணியிட தேர்வு- விடைக் குறிப்புகள் வெளியீடு :

ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) சார்பில் நடத்தப்பட்ட அரசு சட்டக் கல்லூரி பேராசிரியர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வுகளுக்கான விடைக் குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
இவற்றின் மீதான ஆட்சேபனைகளை தேர்வர்கள் வரும் 10-ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாம் எனவும் டி.ஆர்.பி. தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக டி.ஆர்.பி. சார்பில் செவ்வாய்க்கிழமை வெளியிட்டப்பட்ட செய்திக்குறிப்பு-
அரசு சட்டக் கல்லூரிகளில் பேராசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப கடந்த அக்டோபர் 13-ஆம் தேதி எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வுக்கான தற்காலிக தேர்வுக்குறிப்புகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இவற்றின் மீது ஆட்சேபனை தெரிவிக்க விரும்பும் தேர்வர்கள் வரும்10- ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள், ஆசிரியர் தேர்வு வாரிய தகவல் மையத்தில் உள்ள பெட்டியிலோ அல்லது தபால் மூலமாகவோ ஒவ்வொரு விடைக்கும் தனித்தனி படிவத்தில் உரிய ஆதாரங்களுடன் அனுப்பவேண்டும்

ஆசிரியர் நியமனத்தில் 'வெயிட்டேஜ்' மதிப்பெண் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனு தாக்கல்:

ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்கள் நேர்காணலுக்கு பிறகு 'வெயிட்டேஜ்' மதிப்பெண் அடிப்படையில் நியமனம் செய்ய தமிழக அரசு புதிய அரசாணையை வெளியிட்டது.
இதனால் ஏற்கனவே தேர்வில் வெற்றி பெற்றும் பணி நியமனம் கிடைக்காதவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று தாக்கல் செய்த அந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதனை தொடர்ந்து தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனுவும் சுப்ரீம் கோர்ட்டால் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த தீர்ப்பில் திருத்தம் கோரி தமிழகத்தை சேர்ந்த 481 பேர் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று மனுதாக்கல் செய்யப்பட்டது.

மழை பெய்தால் உடனே பள்ளிகளுக்கு விடுமுறை விடக்கூடாது. பள்ளிக்கல்வித்துறை செயலர் சுற்றறிக்கை!

மழை பெய்தால் உடனே பள்ளிகளுக்கு விடுமுறை விடக்கூடாது. பள்ளிக்கல்வித்துறை செயலர் சுற்றறிக்கை! மழைக்காலத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை விடுவதற்கு பள்ளிக்கல்வித்துறை புதிய கட்டுப்பாடுகளை விதித்தது.  மழை பெய்தால் உடனே பள்ளிக்கு விடுமுறை விடக்கூடாது என்று தெரிவித்த பள்ளிக்கல்வித்துறை செயலர் பிரதீப் யாதவ் , மழையால் வெள்ளம் ஏற்படும் சூழல் ஏற்பட்டால் மட்டுமே பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று கூறினார்.  மழைக்கு பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது தொடர்பாக புதிய விதிகளை அமல்படுத்துமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை செயலர் பிரதீப் யாதவ் சுற்றறிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் மாணவர்களின் திறமையை வளர்த்தெடுக்க புதிய திட்டம்: பள்ளிக் கல்வித்துறை அமல் :

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் அரசுப் பள்ளி களில் மாணவர்களின் திறமையை வளர்த்தெடுக்க புதிய செயல் திட்டத்தை பள்ளி கல்வித்துறை செயல்படுத்தியிருக்கிறது.
தேசிய கலைத்திட்ட வடி வமைப்பு- 2005 கல்வியை தேர்வுச் சுமையிலிருந்து விடுவிக்க வேண்டும் என்றும், அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் எளிதாக கிடைக்கும் வகையில் கல்வி பரவலாக்கப்பட வேண்டும் என்றும் இலக்கு நிர்ணயித்திருக்கிறது. அதன் அடிப்படையில் கற்றல், கற்பித்தல் நிகழ்வுகளை வகுப் பறையில் மட்டும் அடக்கிவிடாமல், அதன் வேறு பரிமாணங்களையும் நடைமுறைப்படுத்த வேண்டும்.குழு மனப்பான்மை, எண்ணங்களை வெளிப்படுத்தும் திறன், சமுதாயத்திலிருந்து தனக்கு வேண்டியதை பெறும் திறன், அறிவியல் பூர்வமாக முடி வெடுக்கும் ஆற்றல், சிந்திக்கும் திறன், வினா எழுப்பும் ஆற்றல், விசாரித்து அறிதல், பகுத்தாய்ந்து முடிவெடுத்தல், பிரச்சினைகளை அறிவு பூர்வ மாக அணுகுதல் போன்ற திறன்களை மாணவர்களிடையே வளர்த்தெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பள்ளி கல்வித்துறை இடைநிலை கல்வியில் பல்வேறு செயல் திட்டங்களை வடி வமைத்துள்ளது.
புதிய திட்டம் வடிவமைப்பு
தற்போது , வகுப்பறை பங்கேற்றலை உயர்த்துதல் (IMPART- Improving Participation) என்ற செயல் திட்டத்தை தமிழ கத்தில் அனைத்து மாவட்டங்க ளிலும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்ககம் செயல்படுத்தியிருக்கிறது. சுற்றுப்புறம், மக்களின் வாழ்க்கை முறை, நில அமைப்புகள், இயற்கை வளங்கள், பண்பாட்டுச் சின்னங்கள், சமுதாய அமைப்பு கள், மொழி, கலாச்சாரம், வளங்க ளின் பயன்பாட்டு முறைகள் போன்றவற்றை மாணவ, மாணவி யர் கூர்ந்து ஆராய்ந்து அறியும் வண்ணம் கற்பித்தல் முறைகள் உதவும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
எம்.பில், பிஎச்டி போன்ற ஆராய்ச்சி படிப்புகளில் மாண வர்கள் நேரடியாக ஆய்வுகளை மேற்கொண்டு அறிக்கைகளை சமர்ப்பிப்பதுபோல், பள்ளிப் பரு வத்திலேயே மாணவர்களை ஆய்வுதளத்தில் ஈடுபடுத்தவும், அவர்களிடம் உள்ள திறமைகளை வளர்த்தெடுக்கவும் வேண்டும் என்ற நோக்கத்தில் அனைவருக் கும் இடைநிலை கல்வி திட்டத்தின் (RMSA) மூலம் கடந்த 2016-2017-ம் கல்வி யாண்டில் திருவாரூர் மாவட்டத்தில் முன்னோடி சிறப்பு செயல்திட்டமாக இது செயல்படுத்தப்பட்டது.
இதை தொடர்ந்து 2017-18-ம் கல்வியாண்டில் இத்திட்டம் கல்வியில் பின்தங்கிய நாகப்பட்டி னம், கடலூர், விழுப்புரம், பெரம்பலூர், காஞ்சிபுரம், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டது.
இம்மாவட்டங்களில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டதையடுத்து நடப்பு கல்வியாண்டில் (2018-19) தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் இந்த செயல் திட்டம் (IMPART) நடை முறைப்படுத்தப்பட்டி ருக்கிறது.

செயல்வழி திட்ட கற்றல்
செயல் திட்ட வழி கற்றல் எனப்படும் (Project Based Learning) முறையை அடிப்படையாக கொண்ட இத்திட்டத்துக்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் 100 பள்ளிகளை தேர்வு செய்துள்ள னர். ஒவ்வொரு பள்ளிக்கும் 5 ஆய்வு கள் வீதம் 500 ஆய்வுகள் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் மேற்கொள்ளப்பட வுள்ளன. 9-ம் வகுப்பு மாணவர்கள் இந்த செயல்வழி திட்ட முறை கற்றலில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். ஒவ்வொரு ஆய்விலும் 4 மாணவர்கள் வீதம் மாவட்டத்தில் 2 ஆயிரம் மாணவர்கள் இதில் பங்கேற்பார்கள். இதற்காக 100 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் வழிகாட்டியாக செயல்படுவார்கள்.
மாணவ, மாணவியர் மேற்கொள்ளும் ஆய்வுக்குப்பின் வட்டார அளவில் சிறந்த ஆய்வுக் கட்டுரைகள் ஒவ்வொரு பாடத்திலும் தேர்வு செய்யப்பட்டு, அவை மாவட்ட அளவில் சமர்ப்பிக்கப்படும். சிறந்த ஆய்வு கட்டுரைகளுக்கு பரிசுகள் வழங்கவும் திட்ட மிடப்பட்டிருக்கிறது.
இடைநிற்றல் இல்லாத நிலையை உருவாக்கும்
மாவட்டத் திட்ட உதவி ஒருங்கிணைப்பாளர் த.தனசிங் கூறியதாவது:
இத்திட்டம் தொடர்பாக இதுவரை பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் 100 பட்டதாரி ஆசிரியர்களுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில் செயல் திட்டங்களை எவ்வாறு வடிவமைப்பது?, மாணவர் குழுக்களை எவ்வாறு தேர்வு செய்வது?, செயல் திட்டத்தின் படிநிலைகள், செயல் திட்டத்தை செயல்படுத்துதல், தகவல் சேகரிப்பு, பகுப்பாய்வு பிரச்சினைகளை அடையாளம் கண்டு, தீர்வை செயல்படுத்துதல் உள்ளிட்டவை தொடர்பாக பயிற்சிகள் அளிக்கப்பட்டிருக்கின்றன.
அடுத்த வாரத்தில் ஒவ்வொரு பாடத்துக்கும் 100 ஆசிரியர்கள் வீதம் 400 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இதை தொடர்ந்து மாணவர் குழுக்கள் மூலம் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளது. அனைத்து தரப்பு மாணவர்களையும் கற்றல் நிகழ்வுகளில் ஆர்வமுடன் பங்கேற்கச் செய்து, பள்ளிகளில் இடைநிற்றல் இல்லாத நிலையை உருவாக்க இச்செயல் திட்டம் நிச்சயம் ஒரு தூண்டுகோலாக அமையும் என்றார்.
- அ.அருள்தாசன்

ஜாக்டோ ஜியோ போராட்டம் 10ஆம் தேதி மதுரையில் முடிவு :-மாநில ஒருங்கிணைப்பாளர் பேட்டி!

வருவாய் மாவட்ட அளவிலான புதிர் போட்டியில் முதலிடம் பிடித்த எண்ணை ஆதிதிராவிட நல அரசு உயர்நிலைப்பள்ளி அணியினருக்கு பாராட்டு.

வருவாய் மாவட்ட அளவிலான புதிர் போட்டியில் முதலிடம் பிடித்த எண்ணை ஆதிதிராவிட நல அரசு உயர்நிலைப்பள்ளி அணியினருக்கு பாராட்டு.

புதுக்கோட்டை,டிச.4: புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் வருவாய் மாவட்ட அளவிலான போட்டிகள் பிரகதம்பாள் அரசினர் மேல்நிலைப்பள்ளிக் கூட வளாகத்தில் உள்ள தேர்வுக் கூட அரங்கில் நடைபெற்றது.

இதில் கல்வி மாவட்ட அளவில் வெற்றி பெற்ற அணிகளான செம்பாட்டூர் அரசு உயர்நிலைப்பள்ளி,அமரடக்கி அரசு உயர்நிலைப்பள்ளி,எண்ணை ஆதிதிராவின நல அரசு உயர்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளின் அணிகள் கலந்து கொண்டன.அவற்றுள் எண்ணை ஆதிதிராவிட நல அரசு உயர்நிலைப் பள்ளி அணியினர் முதலிடத்தையும்,அமரடக்கி அரசு உயர்நிலைப்பள்ளி அணியினர் இரண்டாமிடத்தையும் பெற்றனர்.


போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு புதுக்கோட்டை மாவட்ட  முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கிப் பாராட்டிப் பேசினார்.புதுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் அண்ணாமலை ரஞ்சன் வாழ்த்திப் பேசினார்.போட்டியின் நடுவர்களாக கீழையூர் அரசு உயர்நிலைப்பள்ளி கணித பட்டதாரி ஆசிரியர் சரவணப்பெருமாள்,காயாம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி அறிவியல் பட்டதாரி ஆசிரியர் செந்தில்குமார் ஆகியோர் செயல்பட்டனர்.

போட்டிகளை காந்திநகர் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ராஜீ ஒருங்கிணைத்தார்..போட்டிகளுக்கான ஏற்பாடுகளை மாவட்ட உதவித் திட்ட ஒருங்கிணைப்பாளர் பழனிவேலு தலைமையில் புதுக்கோட்டை கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பன்னீர்ச்செல்வம்,அறந்தாங்கி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜா ஆகியோர் செய்திருந்தனர்.

5/12/18

நீதிக்கதை---சிந்தனை கதைகள்,

ஒரு அறிஞர் ஆராய்ச்சி நூல் ஒன்று எழுதுவதற்காக அமைதியான இடத்தைத் தேடிக் கொண்டிருந்தார். அவர் அறியாமல், அரக்கர்கள் இருந்த பள்ளத்தாக்கை தன் இடமாகத் தேர்ந்தெடுத்தார். கோபமடைந்த ஒரு அரக்கன் அவரைப் பார்த்துக் கேட்டான்.

“”யார் நீ? இந்த அமைதியான பள்ளத்தாக்கை கெடுக்க வந்தாயா?” என்றான்.


“”தயவு செய்து என்னை மன்னித்து விடு. நான் ஒரு அறிஞன். அமைதியான இடத்தைத் தேடிக் கொண்டிருந்தேன். அதனால், இங்கு வந்தேன்!” என்றார்.

“”இதற்கு ஒரு விலை நீ கொடுக்க வேண்டும். நான் உன்னைக் குரங்காக மாற்றி விடுவேன். அதுதான் உனக்குத் தண்டனை!” என்று அந்த அரக்கன் கூறினான்.

அடுத்த கணம், அந்தக் அறிஞர் குரங்காக மாறிவிட்டார். அவர் விம்மி விம்மி அழுதார். ஒரு மரத்திலிருந்து மற்றொரு மரத்திற்குத் தாவிக் கொண்டிருந்தார். குரங்குகளைப் போல் பழங்களைத் தின்று வந்தார்.

அவர் நகரத்தை அடைந்தார். அங்கு ஒரு கப்பல் பாக்தாத் பட்டணத்திற்குப் புறப்பட இருந்தது. அவர் அதில் தாவி ஏறினார். அதிலிருந்த பயணிகள் கூச்சலிட ஆரம்பித்தனர்.

“”குரங்கை வெளியே அனுப்புங்கள்; கொன்றுவிடுங்கள்!” என்று கத்தினர்.
கப்பலின் தலைவன் அந்த விலங்கிற்காக வருத்தப்பட்டுச் சொன்னார்.

“”வேண்டாம். அதுவும் நம்முடன் வரட்டும். யாருக்கும் அது தொந்தரவு தராதவாறு நான் பார்த்துக் கொள்கிறேன்!”

அந்தக் குரங்கு கப்பல் தலைவனுக்கு நன்றி உடையவனாய் இருந்தது. பாக்தாத்தில் ஒரு செய்தி பரவி இருந்தது. அரசருக்கு ஆலோசனை கூறுபவர் இறந்துவிட்டதாகவும், அரசர் அந்த இடத்திற்குத் தகுந்த ஆளைத் தேர்ந்தெடுக்க விரும்புவதாகவும் அறிவித்திருந்தார். இப்பதவியை விரும்புவோர் ஏதேனும் ஒரு செய்தியைத் தகுந்த முறையில் எழுதி அனுப்பலாம். அவற்றுள் எது மிகவும் நன்றாக உள்ளதோ, அதை எழுதியவர் ஆலோசகராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டது.

அந்தக் குரங்கு அறிஞரும் செய்தியை எழுதினார். அரசருடைய சேவகர்களும், மற்றவர்களும் நகைத்தனர். “”இங்கே வேடிக்கையைப் பார். இந்தக் குரங்கு அரசருக்கு ஆலோசகராகப் போகிறதாம்!” என்று கேலி செய்தனர். ஆனால், எல்லாச் செய்திகளும் அரசரிடம் எடுத்துச் செல்லப்பட்டன. அரசர் எல்லாவற்றையும் படித்தார். அந்தக் குரங்கின் செய்தி மிகவும் நன்றாக இருந்தது.

அந்தக் குரங்கை நேர்முகத் தேர்விற்காக அரசர் வரச் சொன்னார். அக்குரங்கு நல்ல கம்பீரமாக உடையணிந்து குதிரைமேல் ஏறி, பாக்தாத் தெருக்களில் ஊர்வலமாக வந்து அரசரைச் சந்தித்தது. அரசவையில் அதனிடம் நிறைய கேள்விகள் கேட்கப்பட்டன. அது எல்லாக் கேள்விகளுக்கும் அறிவுப்பூர்வமான சரியான விடைகளைக் கூறியது. அரசருக்கு அதை மிகவும் பிடித்து விட்டது. ஆனால், மந்திரிகள் தடுத்தனர்.

“”எப்போதும் அதனால் பேச முடியாது. எப்படி ஒரு குரங்கு தலைமை ஆலோசகர் ஆகமுடியும்?” என்றனர்.

அரசர் தீர்மானமாக இருந்ததால் அவர் குரங்கையே தலைமை ஆலோசகராக நியமித்தார். அவருடைய புதல்வி, இளவரசி இந்தக் குரங்கு உண்மையில் குரங்கு அன்று. ஏதோ அரக்கர்களின் மாயத்தால் இவ்வாறு மாற்றப்பட்டுள்ளது என்பதை அறிந்தாள். அரக்கர்கள், அவர்களின் மந்திர வித்தைகள் போன்றவற்றை அவள் படித்துள்ளாள். அந்த மந்திரத்தால் குரங்குத்தன்மை மாறும்படி செய்தாள். அறிஞர் தன் பழைய நிலையை அடைந்தார்.

அவர் இளவரசிக்கு நன்றி கூறினார். பல ஆண்டுகள் அங்குத் தங்கி நன்றியறிதலோடு அரசருக்குத் தகுந்த ஆலோசனைகளை வழங்கினார்.

*நீதி*: அறிவுடையோர் எவ்வுருவில் இருந்தாலும் மதிக்கப்படுவர்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட, ஐந்து பிள்ளைகளால் கைவிடப்பட்டு தனித்து வாழ்ந்த மூதாட்டியைத் தனது தாயாகத் தத்தெடுத்து, நெகிழ வைத்திருக்கிறார் அரசுப் பள்ளி ஆசிரியர்

நான்தான் உனக்குப் புள்ள...மாசம் ரூ.2,500 அனுப்புறேன்!"- தவித்த மூதாட்டியைத் தத்தெடுத்து, நெகிழ வைத்த அரசுப் பள்ளி ஆசிரியர்

 கஜா புயலால் பாதிக்கப்பட்ட,  ஐந்து  பிள்ளைகளால் கைவிடப்பட்டு தனித்து வாழ்ந்த மூதாட்டியைத் தனது தாயாகத் தத்தெடுத்து, நெகிழ வைத்திருக்கிறார் அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர்.

கரூர் மாவட்டம், குளித்தலை அருகில் உள்ள பொய்யாமணி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றி வருபவர், பூபதி. 13 லட்சம் வரை ஸ்பான்ஸர் பிடித்து, தான் பணிபுரியும் அரசுப் பள்ளியைத் தனியார் பள்ளிகளைவிட அதிக வசதிகளைக் கொண்ட பள்ளியாக மாற்றியிருக்கிறார்.

இவரது செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு, இவரின் நண்பரானவர் திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையை அடுத்துள்ள மருதவனம் கிராமத்தில் ஆசிரியையாகப் பணிபுரியும் அமுதா. சமீபத்தில் இந்தப் பகுதியை கஜா புயல் சிதைத்துப்போட, புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ நினைத்திருக்கிறார் பூபதி.

அமுதாவிடம் பேசி, 'புயலால் பாதிக்கப்பட்ட எல்லோருக்கும் என்னால் உதவ முடியாது. யாராவது முதியவர் பாதிக்கப்பட்டிருந்தால் சொல்லுங்கள், அவருக்கு நிரந்தரமாக உதவுவோம்' என்று சொல்லியிருக்கிறார். அதன்படி, ஆசிரியை அமுதா மருதவனத்தில் தான் பெற்ற ஐந்து பிள்ளைகளால் கைவிடப்பட்டுத் தனித்து வாழ்ந்த பாக்கியம் பாட்டியைப் பற்றிச் சொல்லியிருக்கிறார்.

அவர் வசித்துவந்த ஒட்டுக் குடிசையையும் பழைய பாத்திரங்களையும், பழைய நைய்ந்த சேலைகளையும் கஜா புயல் சிதைத்துப் போட, பக்கத்து வீட்டில் தற்காலிகமாக வசித்துவந்திருக்கிறார். அவரது கதையைக் கேட்டு இதயம் கசிந்த பூபதியும், அவரது ஆசிரியை மனைவியான பிருந்தாவும், மளிகை சாமான்கள், 50 புடவைகள், சமையல் செய்யப் பயன்படுத்தும் சாமான்கள் சகிதமாகப் போய் இறங்கி இருக்கிறார். பாக்கியம் பாட்டி கையைப் பிடித்து,'என்னை மகனா நினைத்துக்கொண்டு இத வச்சிக்க.' என்று சொல்ல, கரகரவென கண்ணீர் சிந்தியிருக்கிறார்.

'கொள்ளு விரையாட்டம் அஞ்சு பிள்ளைகளைப் பெத்தேன். ஆனா, ஆளானதும் என்னை அம்போன்னு தவிக்கவிட்டுட்டு, தனியா போய்ட்டாங்க. என்னை சீந்தக்கூட நாதியில்லை. மாட்டுக்கொட்டகையைவிட கேவலமான குடிசையில் உசுரக் கையில புடிச்சுக்கிட்டு வாழ்ந்துகிட்டிருக்கேன். 75 வயசாயிட்டு.

முன்னமாதிரி பொழப்புதழப்புக்கும் போக முடியலை. அரசாங்கம் தர்ற 1000 ரூபா முதியோர் உதவித்தொகையில சீவனம் நடந்துச்சு. இலவச ரேஷன் அரிசி வாங்கி திங்கக்கூட வழியில்லாம ரேஷன் கார்டைகூட பாவி புள்ளைங்க தூக்கிட்டுப் போயிட்டுங்க. இந்த நிலையில புயல் வந்து, என்னோட வீட்டையும், சாமான்களையும் சேதம் பண்ணிட்டு. வாழ்க்கையே இருண்டுகிடக்கு தம்பி' என்று நெக்குருகிச் சொல்லியிருக்கிறார்.

அதைக் கேட்டு கண் கலங்கிய பூபதி, "உன்னை என் தாயா தத்தெடுத்துட்டேன். உன் கடைசி காலம் வரைக்கும் நான்தான் உனக்குப் புள்ள. குடிசைபோட எவ்வளவு செலவாகும்' என்று கேட்டிருக்கிறார். 'ஐயாயிரம் வரை செலவாகும்' என்று சொல்லியிருக்கிறார். 'அதை அமைச்சுத் தர்றேன்' என்றதோடு, கையில் இரண்டாயிரம் பணத்தைக் கொடுத்துவிட்டு, "உன் கடைசி காலம் வரை உனக்கு மாசாமாசம் 2,500 ரூபாய் அனுப்புகிறேன்" என்று சொல்ல, உணர்ச்சிப் பெருக்கில் வார்த்தைகள் வராமல் பாக்கியம் பாட்டி நா தழுதழுத்திருக்கிறார்.

பூபதியிடமே பேசினோம். "அந்த அம்மாவின் கதையைக் கேட்டதும் மனசு நொறுங்கிப் போயிடுச்சு. கஜா புயலில் மருதவனம் கடுமையா பாதிக்கப்பட்டிருக்கு. ஆனா, தனது அம்மா கதி என்னன்னு ஒரு பிள்ளையும் வந்து அவரை பார்க்கலை. அது புயல் செய்த கொடுமையைவிட அவலம். அதனால், நானும் என் மனைவியும் அந்த மூதாட்டியைத் தாயாகத் தத்தெடுப்பதுனு முடிவுபண்ணி மாசாமாசம் 2,500 ரூபாய் அனுப்புறதா சொல்லியிருக்கிறோம்.

அதோட, மாசம் ஒரு தடவை போய் அவரைப் பார்த்து, அவருக்கு வேண்டிய உதவிகளைச் செய்றதா இருக்கோம்.  அவருக்குப் புயல் பாதித்த அல்லலைவிட, தன் பிள்ளைகள் தன்னை வந்து பார்க்கலையேங்கிற மனக்குமுறல்தான் அதிகம். அந்தக் குறையை நானும் என் மனைவியும் ஆசிரியை அமுதா உதவியோடு போக்கியிருக்கிறோம்" என்றார் அழுத்தமாக

வங்கக்கடலில் உருவாகுது புது புயல்.. இன்னும் ஒரு வாரத்திற்கு தமிழகத்தில் மழைதான்

வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, தமிழகத்தில், அடுத்த 24 மணி நேரத்துக்கு மழை நீடிக்கும் என்றும், காற்றழுத்த தாழ்வு பகுதியாக இது வலுப்பெறும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென் மேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் கடலோர பகுதிகளில் நேற்று முதல் மழை பெய்து வருகிறது.

சென்னையில் நேற்று மாலை முதல் விட்டுவிட்டு மழை பெய்கிறது. இதற்கெல்லாம் காரணம், காற்றழுத்த தாழ்வு நிலைதான் என்றாலும், இது வலுவடைந்து அடுத்த சில நாட்களில் புயலாக மாறவும் வாய்ப்பு உள்ளது. இன்று காலையிலும் மழை வெளுத்து வாங்கியது. காரைக்கால் மற்றும் டெல்டா மாவட்டங்களிலும், புதுக்கோட்டை மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்து வருவதால், 3 மாவட்டங்களில் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும், 24 மணி நேரத்துக்கு மழை நீடிக்கும் என்றும் அடுத்த 2 நாட்களுக்கு சென்னை மற்றும் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் பரவலாக மிதமான மழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. நாளையும், நாளை மறுநாளும் சென்னையில் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தனியார் வானிலை ஆய்வாளர்களும் எச்சரித்துள்ளனர்.

இதனிடையே, வங்கக்கடலில் நிலவும், காற்றழுத்த தாழ்வு நிலை, 6ம் தேதிவாக்கில், காற்றழுத்த தாழ்வு பகுதியாக தீவிரம் அடைகிறது. இதன் காரணமாக வட தமிழகத்தில் மிதமான மழையும், தென் தமிழகத்தில் ஒருசில இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.

காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிய பிறகு அது மேலும் தீவிரம் அடைந்து அடுத்த 4 நாட்களில் அதாவது டிசம்பர் 10ம் தேதி வாக்கில், புயல் சின்னமாக மாறும் வாய்ப்பு இருப்பதாகவும் தனியார் வானிலை ஆய்வர்கள் தெரிவித்துள்ளனர்.

சிபில் ஸ்கோர் பற்றிய அடிப்படை விஷயங்களை அறிந்து கொள்ளுங்கள்

கடன் சம்பந்தப்பட்ட விஷயமென்றால் முதலில் நம் காதில் விழுவது: “எல்லாம் ஓகே சார். சிபில் ஸ்கோர்ல ஒரு சின்ன பிரச்னை. பார்த்துக்கலாம் சார்”. சரி, அது என்ன சிபில்? அதன் அடிப்படை விஷயங்களைக் கொஞ்சம் பார்ப்போமா?

*CIBIL என்றால் என்ன?*

Credit Information Bureau (India) Limited. இது, கடன் பெறுவோர் பற்றிய இந்தியாவின் முதல் தகவல் நிறுவனம். வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள், தங்களிடம் கடம் பெறுவோர் பற்றிய விவரங்களை ஒவ்வொரு மாதமும் ( சில வங்கிகள் 60 நாட்களுக்கொரு முறை ) சிபில் நிறுவனத்தில் அப்டேட் செய்யும். சிபில் போன்று மேலும் சில அமைப்புகள் இருந்தாலும், வங்கிகள் சிபில் ரேட்டிங்கிற்கே முக்கியத்துவம் தருகின்றன.

*யாருடைய விவரங்கள் சிபிலில் இருக்கும்?*

க்ரெடிட் கார்ட், பர்சனல் லோன், கார் லோன், வீட்டுக் கடன் அல்லது வேறு எந்த வகைக் கடனாவது வங்கிகளிலிலோ அல்லது வங்கி சாராத தனியார் நிதி நிறுவனங்களிலோ பெற்றுள்ள ஒவ்வொருவர் பற்றியும், சிபில் நிறுவனத்தில் தகவல் இருக்கும்.

*இதனால் என்ன பயன்?*

நீங்கள் க்ரெடிட் கார்ட் அல்லது வேறு வகைக் கடன்களுக்கு விண்ணப்பிக்கும்போது அந்த வங்கி அல்லது நிதி நிறுவனம் உங்கள் விவரங்களை வைத்து சிபில் பதிவுகளை சோதிக்கும். சிபிலில் உங்கள் ஸ்கோர் எவ்வளவு, உங்களின் கடன் விவரங்கள், அவற்றை திருப்பி செலுத்தி இருக்கும் விதம் ஆகியவற்றை பார்த்துவிட்டு உங்களுக்கு க்ரெடிட் கார்ட் அல்லது கடன் கொடுக்கலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்யும். இதன் மூலம் குறிப்பிட்ட நபர்களுக்கு கடன் கொடுத்து, அதை வசூலிக்கும் பிரச்சனையை வங்கிகள் தவிர்க்க முடியும்.

*கடன் பெறுவோர் விவரங்களை சிபில் எப்படிப் பெறுகிறது?*

ரிசர்வ் வங்கி உத்தரவுப்படி, வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள் தங்களிடம் கடன் பெறுவோர் குறித்த விவரங்களை தானாகவே சிபில் நிறுவனத்திற்கு அளிக்கும்.

*என்னென்ன தகவல்கள் இடம் பெறும்?*

க்ரெடிட் கார்ட் அல்லது மற்ற வகைக் கடன் பெறுவோரின் தனிப்பட்ட தகவல்கள், கடன் வகை, கடன் தொகை, கடன் செலுத்த வேண்டிய காலம், ஒவ்வொரு மாதமும் சரியாக கடன் செலுத்தி இருக்கிறார்களா அல்லது எத்தனை நாள் தாமதமாக செலுத்தி இருக்கிறார்கள் ஆகிய விவரங்களுடன் கடனை கட்டி முடித்து விட்டார்களா அல்லது செட்டில்மெண்ட் அல்லது வராக்கடன் ஆகியவை பற்றிய தகவல்களுல் இடம் பெறும்.

*ஸ்கோர் எவ்வளவு இருந்தால் கடன் கிடைக்கும்?*

சிபில் ஸ்கோர் 300 முதல் 900 வரை இருக்கும். பொதுவாக 750க்கும் மேல் சிபில் ஸ்கோர் இருப்பவர்களுக்கு எளிதில் கடன் கிடைக்கும். வட்டியும் குறைவாக இருக்கும். 750க்கும் கீழ் ஸ்கோர் இருப்பவர்களுக்கு கடன் கிடைப்பது கடினம். மேலும் அப்படியே கொடுத்தாலும் வட்டி அதிக அளவில் இருக்கும். 

*சிபில் ஸ்கோர் தெரிந்துக் கொள்வது எப்படி?*

இணையதளத்திற்கு சென்று தெரிந்துக் கொள்ளலாம். ஆண்டிற்கு ஒரு முறை இலவசமாக பார்த்துக் கொள்ளலாம். மேலும் பார்க்க ஒவ்வொரு முறையும் ரூ.550 செலுத்த வேண்டியிருக்கும். எத்தனை முறை வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளலாம். இதில் உங்கள் கடன் பற்றிய அனைத்து விவரங்களையும் தெரிந்துக் கொள்ளலாம். விவரங்கள் சரியாக இருக்கின்றனவா என்றும் பார்த்துக் கொள்ளலாம்.

*தவறான விவரங்கள் இருந்தால் எப்படி சரி செய்வது?*

சிபில் நிறுவனம் உங்கள் விவரங்களில் எந்த மாறுதலையும் செய்யாது. முறையான ஆவணங்களுடன் நீங்கள் கடன் பெற்றிருக்கும் வங்கி அல்லது நிதி நிறுவனத்தை அணுகி சரி செய்துக் கொள்ளலாம். உங்கள் வங்கி, சிபில் ரிப்போர்ட்டில் தவறுகளை சரி செய்துவிடும்.

*சிபில் ஸ்கோர் குறைவதற்கான காரணங்கள் என்ன?*

க்ரெடிட் கார்ட் அல்லது பிற வகைக் கடன்களுக்கான தவணைத் தொகையை சரியான நேரத்தில் முழுமையாக செலுத்தாமல் இருப்பது, கடன் அட்டையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் க்ரெடிட் லிமிட்டில் 50 சதவிகிதத்திற்கும் மேல் பயன்படுத்துவது, வங்கிகளில் கடன் கேட்டு அடிக்கடி விண்ணப்பிப்பது, சரியாக கடனை திருப்பிச் செலுத்தாதவருக்கு ஜாமீன் கையெழுத்துப் போடுவது ஆகியவை உங்கள் சிபில் ஸ்கோரை குறைத்துவிடும்.

*கடன் கேட்டு விண்ணப்பிப்பது கூட ஸ்கோரை குறைக்குமா?*

ஆமாம். நீங்கள் ஒவ்வொருமுறை க்ரெடிட் கார்ட் அல்லது கடனிற்கு விண்ணப்பிக்கும் போதும், சிபிலில் உங்களைப் பற்றிய விவரங்கள் அந்த வங்கியால் பார்க்கப்படும். அப்படி அடிக்கடி பார்க்கப்படுவது எதிர்மறையாக கருதப்படும். ஆண்டிற்கு 2 முறைக்கும் மேல் கடனிற்காக விண்ணப்பிக்க வேண்டாம். ஒவ்வொரு முறை உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்படும் போதும் அடுத்த வங்கி உங்களுக்கு கடன் கொடுக்க தயங்கும்.

*சிபில் ஸ்கோர் உயர்த்துவது எப்படி?*

இதுவரை கடன் பெறாதவர் என்றால், உங்கள் வருமானத்தின் அடிப்படையில் க்ரெடிட் கார்ட் அல்லது சிறிய தொகையில் கடன் பெற்று அதைச் சரியாக திருப்பிச் செலுத்துங்கள்.

ஏற்கனவே வாங்கிய கடன்களில் நிலுவைத் தொகை இருந்தால் அதை முழுமையாக செலுத்தி விடுங்கள். குறைவான சிபில் ஸ்கோர் இருப்பவர்களுக்கும் சில தனியார் நிதி நிறுவங்கள் சிறிய அளவில் கடன் கொடுக்கின்றன. வட்டி சற்றுக் கூடுதலாகத்தான் இருக்கும். அவர்களிடம் கடன் பெற்று தாமதமில்லாமல் சரியாக மாதத் தவணையைக் கட்ட வேண்டும். நகைக்கடன் போன்றவையும் இதற்கு பயனுள்ளதாக இருக்கும்.

பெரும்பாலான வங்கிகள், தங்களிடம் பிக்சட் டெபாசிட் வைத்திருப்பவர்களுக்கு, அதை உத்தரவாதமாக வைத்துக் கொண்டு பிக்சட் டெபாசிட் தொகையில் 70 சதவிகிதம் வரை க்ரெடிட் லிமிட் வைத்து க்ரெடிட்க் கார்டுகளை தருகின்றன. ஒவ்வொரு மாதமும் மிகக் குறைந்த அளவு செலவளித்து அதை சரியாக திருப்பிச் செலுத்துவதன் மூலம் சிபில் ஸ்கோரை உயர்த்தலாம். எந்தக் காரணம் கொண்டும் இதிலும் தாமதமாக மாதத் தவணைக் கட்டக்கூடாது.

அடமானக் கடன் மற்றும் அடமானமற்றக் கடன் என்ற கலவையில் கடன் பெற்று அதை முறையாக திருப்பிச் செலுத்துவதன் மூலமும் சிபில் ஸ்கோரை எளிதில் அதிகரிக்கலாம்.

*நம் சிபில் ஸ்கோரை நாம் அடிக்கடிப் பார்ப்பதால் ஸ்கோர் குறையுமா?*

குறையாது. அவ்வப்போது சிபில் ஸ்கோர் பார்த்துவிடுவது நல்ல பழக்கமே. அப்போதுதான் தவறுகள் ஏதும் இருந்தால் அதை வங்கியில் சொல்லி திருத்திக் கொள்ளலாம். சில நேரங்களில் அடுத்தவர் கடனெல்லாம் நம் கணக்கில் வைத்துவிடுவார்கள். அது, நம் க்ரெடிட் ஸ்கோரை வெகுவாக பாதிக்கலாம்.

சில வங்கிகள், சிபில் ஸ்கோர் அடிப்படையில் வீட்டுக் கடன் போன்ற கடனுக்கான வட்டியை நிர்ணயிக்கின்றன. எனவே உங்கள் சிபில் ஸ்கோர் குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள்

ஜாக்டோ-ஜியோ போராட்டம் நடக்கும்போது பகுதி நேர ஆசிரியர்களும் போராட்டத்தில் பங்கேற்பார்கள்: பகுதிநேர சிறப்பாசிரியர் சங்கம் அறிவிப்பு

தமிழக பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை:. கடந்த 2012ம் ஆண்டு முதல் அரசுப் பள்ளிகளில் பகுதி நேர ஆசிரியர்களாக பணியாற்றி வரும் எங்களுக்கு மாத ஊதியம் ₹7700 அரசு வழங்கி வருகிறது.
பகுதி நேர ஆசிரியர்களாகவே பணியாற்றி வரும் நாங்கள்  வாழ்வாதாரத்துக்கு தேவையான ஊதியம் இல்லாமல் முடங்கியுள்ளோம்.

அதனால் அரசை கண்டித்து பல முறை போராட்டங்கள் நடத்தியுள்ளோம். பணி நிரந்தரம் கேட்டும் கோரிக்கை வைத்துவிட்டோம்.கால முறை ஊதியம் வழங்க வேண்டும் என்றும் கேட்டுவிட்டோம். ஆனால் அரசு எங்கள் கோரிக்கை மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில், ஜாக்டோ-ஜியோ நடத்தும் வேலை நிறுத்தப் போராட்ட காலத்தில்  பள்ளிக்கு சென்று வகுப்பு நடத்த இயலாது. எனவே, எங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கேட்டு ஜாக்டோ-ஜியோவுடன் இணைந்து தமிழக பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சங்கம், பங்கேற்று பள்ளிகளை புறக்கணித்து  போராட்டத்தில் கலந்து கொள்ளும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

6-8 வகுப்புகளுக்கு ஒரே மாதிரியான பருவத்தேர்வுகள் நடத்துதல் குறித்து முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்!!! & தேர்வுகளுக்கான அட்டவணை வெளியீடு!!!



பள்ளிகளில் இனிமேல் வருகைப்பதிவேடு தேவையில்லை!

பயோமெட்ரிக் முறையில், பள்ளிக்குள் மாணவன் நுழைந்ததும், பெற்றோருக்கு குறுஞ்செய்தி சென்றுவிடும். பள்ளிகளில் இனிமேல் வருகைப்பதிவேடு தேவையில்லை,'' என, பள்ளிக்கல்வி துறை அமைச்சர், செங்கோட்டையன் பேசினார்.

ஈரோடு மாவட்டம், கோபி மற்றும் நம்பியூரில், நான்கு பள்ளிகளில், பிளஸ் 1 வகுப்பினர், 1,303 பேருக்கு, இலவச சைக்கிள்களை வழங்கி, அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:ஜன., மாதம் முதல் வாரத்தில், மாணவர்களுக்கு, ஸ்மார்ட் கார்டு வழங்க வாய்ப்புள்ளது. புதிய ஸ்மார்ட் கார்டு மூலம், நீங்கள் இந்தியாவில் எந்த பகுதியில் இருந்தாலும், அதன் மூலம், பள்ளி மாற்று சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம். ஸ்மார்ட் கார்டில் உள்ள சிம்கார்டை உபயோகித்தால், மாணவனின் சரித்திரமே, அந்த பள்ளிக்கு தெரிய வரும்.பயோ மெட்ரிக் முறையாக, பள்ளிக்குள் மாணவன் நுழைந்ததும், அதுகுறித்து பெற்றோருக்கு, குறுஞ்செய்தி சென்றுவிடும். பள்ளிகளில் இனிமேல் வருகைப்பதிவேடு தேவையில்லை. 'உள்ளேன் ஐயா' என்பதே, வகுப்பறையில் இனி தேவைஇல்லை. மாணவன் பள்ளிக்குள் நுழையும் போதே, அனைத்து விபரங்களும் பதிவாகி விடும். எங்களுக்கும், லேப் டாப் வேண்டும் என ஆசிரியர்கள் கேட்கின்றனர்.


இதுகுறித்து, மத்திய அரசிடம் பேசி வருகிறோம். ஆசிரியர்களுக்கும், லேப் டாப் கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.ஆறு முதல், எட்டாம் வகுப்பினருக்கு டேப் வழங்கப்படும். இதன் மூலம், இரு மொழிகளில் கற்றுத்தரப்படும். கம்ப்யூட்டர் ஆசிரியர்களில், 7,500 பேரில், 800 பேரை நியமிக்க, அரசு ஆணை பிறப்பித்துள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.

பின், நிருபர்களிடம், அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:பொதுத்தேர்வுக்கான மையங்கள் குறித்து நாளை அறிவிக்கப்படும். 'கஜா' புயலால் பாதித்த மாவட்டங்களில், நடத்தப்படும் தேர்வை, மாற்றி அமைப்பதில், சிரமம் இருப்பதாக துறையினர் தெரிவித்துள்ளனர். இருந்தாலும், அதையும் அரசு பரிசீலித்து வருகிறது. 10 முதல், பிளஸ் 2 வகுப்பு வரை, பொதுத்தேர்வு உள்ளது. இதில் எந்த மாற்றமும் இல்லை. ஆசிரியர் போராட்டம் குறித்து முதல்வரிடம் பேசி, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

பிஎச்.டி.,க்கு விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை பொறுப்பு பதிவாளர் தியாகராஜன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:யு.ஜி.சி.,யின் அனுமதியுடன், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில், முழு நேர, பகுதிநேர பிஎச்.டி., ஆய்வு படிப்பு நேரடி முறையில் நடத்தப்படுகிறது.

இதில், 2019க்கான சேர்க்கைக்கு விண்ணப்ப பதிவு துவங்கியுள்ளது.

தமிழ், ஆங்கிலம், மேலாண்மை, கல்வியியல், இயற்பியல், வேதியியல், விலங்கியல், குற்றவியல், மின்னணு ஊடகவியல், புவியியல், கணினி அறிவியல், பண்டைய வரலாறு மற்றும் தொல்பொருளியல் பாடங்களுக்கு வரும் 29க்குள் விண்ணப்பிக்கலாம்.விபரங்களை www.tnou.ac.in ல் தெரிந்து கொள்ளலாம்.

பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் அடுத்த அதிரடி! மெட்ரிக்குலேசன் பள்ளிக்கு இணையான கல்வி!

அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் ஆங்கில திறனை மேம்படுத்திக்கொள்ளும் வகையில் ஐக்கிய நாடுகளில் இருந்து 600 பயிற்சியாளர்களை கொண்டு பயிற்சி அளிக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் இந்தாண்டு நீட் தேர்வுக்கு 26,000 மாணவி-மாணவிகள் விண்ணப்பித்துள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார்.

கோபிசெட்டிப்பாளையத்தில் மாணவி-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அமைச்சர் செங்கோட்டையன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பல்வேறு சிறப்பு திட்டங்களை அறிவித்து வருகிறது. மேலும் பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரவும் திட்டமிடப்பட்டுள்ளது. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடியும்போதே அவர்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கும் வகையில் பல்வேறு புதிய பாடத்திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.


இந்த மாத இறுதிக்குள் அனைத்து மாணவ-மாணவிகளுக்கு இலவச மடிகணினி வழங்கப்படும் என செங்கோட்டையன் கூறியுள்ளார். ஆசிரியர்கள் இடமாற்றத்தில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக ஆதாரத்துடன் தெரிவித்தால் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.  இந்தாண்டு நீட் தேர்வுக்கு 26 ஆயிரம் மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளதாக கூறிய அவர், கஜா புயலால் நீட் தேர்வை ஒத்திவைக்க கோரிக்கை வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் ஆங்கில திறனை மேம்படுத்திக்கொள்ளும் வகையில் ஐக்கிய நாடுகளில் இருந்து 600 பயிற்சியாளர்களை கொண்டு பயிற்சி அளிக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அமைச்சர்களின் துறையின் செயல்பாடுகள் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இல்லை. அனைத்து துறையிகளிலும் ஊழல் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. ஆனால் கல்வித்துறை அமைச்சராக செங்கோட்டையன் பதவியேற்றதிலிருந்து அவர் பணியை திறம்பட செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

8 மாவட்டங்களில் கன மழை எச்சரிக்கை

சென்னை உட்பட, எட்டு கடலோர மாவட்டங்களுக்கு, இன்று கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது:வங்கக்கடலின் தென்மேற்கு பகுதியில், காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால், இன்று முதல் மூன்று நாட்களுக்கு, பரவலாக மழை பெய்யும்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், நாகை, திருவாரூர், தஞ்சாவூர், ராமநாதபுரம், துாத்துக்குடி மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களில், இன்று சில இடங்களில் கன மழை பெய்யலாம்.நாளை, சில இடங்களில், லேசானது முதல், மிதமானது வரை மழை பெய்யும். நாளை மறுநாள், திருநெல்வேலி, கன்னியாகுமரி, துாத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில், சில இடங்களில் கன மழை பெய்யும். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில், நேற்று லேசான மழை பெய்தது. மாலை முதல் அதிகாலை வரை, மலைப்பகுதி மாவட்டங்களில் பனி மூட்டம் காணப்பட்டது.இவ்வாறு வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

முதுகலை ஆசிரியர் கலந்தாய்வு: இந்தாண்டு நடத்தப்படுமா

முதுகலை ஆசிரியர் கலந்தாய்வு:
இந்தாண்டு நடத்தப்படுமா
நான்கு ஆண்டுகளாக நடத்தப்படாத முதுகலை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு, இந்தாண்டு நடத்தப்படுமா என, ஆசிரியர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழகத்தில் 2 ஆயிரத்து 488 அரசு மேல்நிலை பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளுக்கு கலை பிரிவை அடிப்படையாக கொண்டு 9 ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
ஆண்டுதோறும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வின் மூலம் 50 சதவீமும், நேரடி நியமனத்தில் 50 சதவீதமும் முதுகலை ஆசிரியர் பணியிடம் நிரப்பப்படுகிறது.கடந்த 4 ஆண்டுகளாக வரலாற்று ஆசிரியர்களுக்கான முதுகலை ஆசிரியர் பணியிடம் பதவி உயர்வின் மூலம் வழங்கப்படவில்லை.அரசு சார்பில் 1:3 என்ற விகிதப்படி முதுகலை ஆசிரியர் பணியிடம் நிரப்பப்பட்டு வந்த நிலையில், சில ஆசிரியர்கள் தனிப்பட்ட முறையில் விகிதாசாரத்தை மாற்றி அமைக்க கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
1:1 விகித முறையில் பணியிடம் நிரப்ப வேண்டும்' என்றார்

அரசு ஊழியர்கள் ஊதிய உயர்வு கேட்டவுடன் 40k வாங்கும் அவர்களுக்கு இன்னும் உயர்வா??என துடித்து எழும் நம் தோழர்களுக்கு இந்த பதிவு::-

உங்களுக்கு தெரியுமா? இந்த 40000 அவர்கள் எ ப்படி வாங்கினார்கள் என்று???? சிம்பிள்! ஆண்டாண்டு காலமாக இப்படி அழுது உண்ணாவிரதம் இருந்து சிறைக்கு சென்று ! வேலை நீக்கம் அடைந்து என படி படியாக ஆயிரம் ஐநூறு என சிறுக சிறுக வந்துதான் இன்று உங்கள் கண்களுக்கு விரியும் 40kஆனது! சரி உங்கள் பக்கத்து வீட்டிலோ தெரு விலோ ஒரு பண்ணை வீடு ! லக்சுரி கார் ! விலையுயர்ந்த எலக்ட்ரானிக் பொருட்கள் என இருப்பவர்கள் யார் என பாருங்கள், அரசியல் வாதியோ தொழிலதிபரோ இருப்பார் ஆசிரியரோ வங்கி ஊழியரோ கிளார்க் கோ இருக்க மாட்டார் வருமான வரியை நாமெல்லாம் எவ்வளவு கட்டவேண்டும் என்று ஆடிட்டருடன் பேசி முடிவு 
செய்வோம் இவர்களுக்கு பிடித்து கொண்டு மீதியை கொடுக்கும் ! இன்று நாம் பாராட்டும் காவல் துறை அதிகாரிக்கு பொன்மாணிக்கவேல் அரசு அலுவலர் தான் டெல்லியில் சிறந்த அரசு அதிகாரி என பரிசு வாங்கிய சகாயம் ஐயா அரசு அதிகாரி தான்! இவர்கள் கேட்கும் ஆயிரம் ஐநூறு உங்கள் பாக்கெட்டுகளில் இருந்து பிடுங்குவது போல கோபமாக எதிர்க்கும் நீஙீகள்...கோடி கணக்கில் நம் வரிப்பணத்தில் கொள்ளையடிக்கும் அரசையோ அரசு காண்ட்ராக்ட்டர்களையோ ஏன் எதற்க்கு என கேட்க முடியாது! சரி இவர்களை வீட்டுக்கு அனுப்பி விடுவோம் உங்களில் வேலை இல்லாத நண்பருக்கு அந்த வேலையை தருவோம்! யாராவது அரசுக்கு உதவ தயாரா? சம்பளம் கேட்காத, உயர்வு கேட்காத, விடுமுறை கேட்காத,  லோன் கேட்காத, அந்த நல்லவர்கள் யார் யார்??  அது சரி நாங்கள் வேலை இல்லாமல் இருக்கோம் இவர்களுக்கு சம்பள உயர்வா என கேட்கும் சகோதரர்கள் அரசு வேலைக்கான தரம் அறியும்  தேர்வில் ஏன் வெற்றி பெறவில்லை???  இன்று இவர்கள் ஸ்ட்ரைக் செய்தால் நம்ம தினசரி வாழ்க்கை பாதிக்கும் என நினைக்கும் நாம் அரசு நடத்தவேண்டிய பஞ்சாயத்து எலக்ஷனை நடத்தி ஊருக்கு ஒரு தலைவரை போடலைன்னு கொதிக்கலையே ஏன்? 19தொகுதில  MLAஇல்லையே அதனால் அந்த தொகுதி நல்லது கெட்டத எடுத்து சொல்லி கேட்டு பெற MLA வேண்டும்னு கதறலயே ஏன்? கஜா புயல் சுஜா புயல்னு வந்தா நாமெல்லாம் டிவி ல பார்த்து உச்ச கொட்டும் போது மழையில் மிண் கம்பத்தில் உட்கார்ந்து கொண்டு இறங்கிவந்து உணவருந்த நேரமின்றி கம்பியில் அமர்ந்து உணவருந்தும் மின் ஊழியரை பாராட்டினோம் ஆனால் ஊதிய உயர்வுன்னதும் நம்ம பீரோவில யாரோ கை விடாடார்போல துடிக்கிறமே எப்படி???? கல் குவாரியை தோண்டும் போது இரவாகி விட்டதால் அங்கேயே படுத்து கொண்டிருந்த அரசு அதிகாரியை பாராட்டினோமே இப்ப அவர் ஊதிய உயர்வு கேட்டதும் உட்காற்ற இடத்தில் சூடு வைத்த மாதிரி எரிகிறோமே அது ஏன்? பொண்டாட்டி புள்ளியை சென்னைல விட்டுட்டு போலீஸ் அதிகாரி எவன் வீட்டு நகையையோ பணத்தையோ மீட்க மொழி தெரியாத வட இந்தியாவில் சுடப்பட்டு இறந்தபோது அய்யோ பாவம் என்றோமே! அவரின் சக ஊழியர் ஆயிரம் ரூபாய் உயர்வு கேட்டதும் நம் அப்பா எழுதி வைத்த சொத்து பத்திரத்தை பிடுங்கியது போல பதறுகிறோமே ஏன்? ஒரு ஆக்ஸிடென்ட் கொலை என்றதும் பார்த்துவிட்டு பரிதாபப்பட்டு வீட்டில போய் படுத்துக் கொள்வோம்,  ஆனால் அந்த இடத்திலேயே அன்றைய இரவைக் கழிக்கும் காவலர் ஆகட்டும் தாசில்தார் மருத்துவ ஊழியர்கள் சாலை பணியாளர் போன்ற அனைவரும் அரசு ஊழியர்கள் என்பதை நாம் ஏன் சிந்திக்க மறுக்கிறோம்! 12 மாதங்களில் ஒரு மாதம் பள்ளி விடுமுறை விடுகிறார்கள் அந்த ஒரு மாதம் கூட நாம் நம் குழந்தைகளை வீட்டில் வைத்துக் கொள்ளாமல் எங்காவது ஊருக்கு  அனுப்பலாமா விடுமுறை பள்ளியில் சேர்க்கலாமா என்று யோசிக்கிறோம் அந்தப் பதினொரு மாதங்கள் இந்த குழந்தைகளுக்காக வேலை செய்யும் அந்த ஆசிரியர்களை பற்றி நாம் என்றாவது சிந்தித்திருக்கிறோமா?? அவர்கள் ஊதிய உயர்வு கேட்டதும் நம் வீட்டில் பாதியை பிரித்துக்கொடுக்க கேட்டது போல் துடிக்கிறோமே ஏன்? இன்று நமது மாநில அரசும் மத்திய அரசும் உலக வங்கி அந்த வங்கி இந்த வங்கிகளிடம் கடன் வாங்கி நாட்டின் கடன் எத்தனை ஆயிரம் கோடி என்று கூறுகிறார்களே அதில் எத்தனை ஆயிரம் கோடியை இந்த அரசு ஊழியர்களிடம் கொடுத்து விட்டார்கள் என்று என்றாவது நீங்கள் கேட்டதுண்டா? அதனால் நாம் அவர்களுக்கு உதவி  செய்ய தேவை இல்லை அவசியமின்றி அவர்களை உதாசீனப்படுத்த வேண்டாம் என்பது எனது அன்பான வேண்டுகோள் , நம் குடும்பத்திலும் யாரோ ஒரு அரசு ஊழியர் இருப்பார்,  இல்லை நாளை வருவார் என்பதை மனதில் வைத்து நாம் நமது வேலையை பார்ப்போம்! அவர்கள் அவர்கள்  வேலையை பார்க்கட்டும் நன்றி  

District level training schedule for Teachers on new Text Book TNSCERT Proceedings



2019 ஆம் ஆண்டு வரையறுக்கப்பட்ட விடுப்பு.

(1) சனவரி****                          -14 திங்கள்-    போகிப் பண்டிகை            21- திங்கள் -தைப்பூசம்         
(2)      பிப்ரவரி- ***            19- செவ்வாய்- மாசி மகம்                    
(3) மார்ச் - ***                    4- திங்கள்- மகாசிவராத்திரி.   6 புதன் -சாம்பல் புதன்                   
(4) ஏப்ரல்-***             3- புதன் -ஷாபே மேராஜ் 14- ஞாயிறு- அம்பேத்கர் பிறந்த நாள்.                    18- வியாழன்- பெரிய வியாழன்             19- வெள்ளி- சித்திரை பௌர்ணமி         20- சனி -ஷாபே பராஅத்                21- ஞாயிறு- ஈஸ்டர்                 
(5) மே - ***                        7- செவ்வாய்- ரம்ஜான் முதல் நாள்                      18- சனி- புத்தர் ஜெயந்தி                  
(6) ஜுன் - ***           1- சனி- ஷாபே காதர்     
(7) ஜூலை ***   விடுப்பு இல்லை.             
(8)  ஆகஸ்ட்-***          3- சனி- ஆடிப்பெருக்கு      9- வெள்ளி- வரலெட்சுமி விரதம்.                 11- ஞாயிறு- அர்ஃபா                15- வியாழன்- ருக்உபகர்மா.      16- வெள்ளி- காயத்ரி ஜபம்    
(9) செப்டம்பர். ***      1- ஞாயிறு- ஹிஜ்ரி வருடம்                    2- திங்கள்- சாம உபகர்மா             11- புதன்- ஓணம் பண்டிகை.           28- சனி- சர்வ மஹாளய அமாவாசை     
(10) அக்டோபர்***    -28 திங்கள்- தீபாவளி நோன்பு
(11)  நவம்பர்.***        2- சனி- கல்லறை திருநாள்              12- செவ்வாய்- குருநானக் ஜெயந்தி.
 (12)  டிசம்பர்***          8- ஞாயிறு- கார்வீன் முகைதீன்           10- செவ்வாய்- கார்த்திகை தீபம் 24- செவ்வாய்- கிருஸ்துமஸ் ஈவ் 31- செவ்வாய்- நியூ இயர் ஈவ்

FLASH NEWS:பெற்றோர் ஆசிரியர்கள் கழகத்தின் வாயிலாக 800 கணினி ஆசிரியர்கள் நியமனம்:மாண்புமிகு கல்வி அமைச்சர்:

பள்ளிகளில் இனிமேல் வருகைப்பதிவேடு தேவையில்லை: பள்ளிக்கல்வி துறை அமைச்சர், செங்கோட்டையன்
பயோமெட்ரிக் முறையில், பள்ளிக்குள் மாணவன் நுழைந்ததும்,பெற்றோருக்கு குறுஞ்செய்தி சென்றுவிடும் பள்ளிகளில் இனிமேல் வருகைப்பதிவேடு தேவையில்லை,'' என, பள்ளிக்கல்வி துறை அமைச்சர், செங்கோட்டையன் பேசினார்.


                                 


ஈரோடு மாவட்டம், கோபி மற்றும் நம்பியூரில், நான்கு பள்ளிகளில், பிளஸ் 1 வகுப்பினர் 1,303 பேருக்கு, இலவச சைக்கிள்களை வழங்கி, அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது*

ஜன., மாதம் முதல் வாரத்தில், மாணவர்களுக்கு, ஸ்மார்ட் கார்டு வழங்க வாய்ப்புள்ளது. புதிய ஸ்மார்ட் கார்டு மூலம், நீங்கள் இந்தியாவில் எந்த பகுதியில் இருந்தாலும், அதன் மூலம், பள்ளி மாற்று சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம்

ஸ்மார்ட் கார்டில் உள்ள சிம்கார்டை உபயோகித்தால், மாணவனின் சரித்திரமே, அந்த பள்ளிக்கு தெரிய வரும்.பயோ மெட்ரிக் முறையாக, பள்ளிக்குள் மாணவன் நுழைந்ததும், அதுகுறித்து பெற்றோருக்கு, குறுஞ்செய்தி சென்றுவிடும்

பள்ளிகளில் இனிமேல் வருகைப்பதிவேடு தேவையில்லை. 'உள்ளேன் ஐயா' என்பதே, வகுப்பறையில் இனி தேவைஇல்லை

மாணவன் பள்ளிக்குள் நுழையும் போதே, அனைத்து விபரங்களும் பதிவாகி விடும். எங்களுக்கும், லேப் டாப் வேண்டும் என ஆசிரியர்கள் கேட்கின்றனர். இதுகுறித்து, மத்திய அரசிடம் பேசி வருகிறோம்
ஆசிரியர்களுக்கும், லேப் டாப் கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.ஆறு முதல், எட்டாம் வகுப்பினருக்கு டேப் வழங்கப்படும். இதன் மூலம், இரு மொழிகளில் கற்றுத்தரப்படும்


 கம்ப்யூட்டர் ஆசிரியர்களில்,ரூ  7,500 சம்பளத்தில், 800 பேரை நியமிக்க, அரசு ஆணை பிறப்பித்துள்ளது.இவ்வாறு அவர் பேசினார்


பின், நிருபர்களிடம், அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது.


*பொதுத்தேர்வுக்கான மையங்கள் குறித்து நாளை அறிவிக்கப்படும். 'கஜா' புயலால் பாதித்த மாவட்டங்களில், நடத்தப்படும் தேர்வை, மாற்றி அமைப்பதில், சிரமம் இருப்பதாக துறையினர் தெரிவித்துள்ளனர்*


 *இருந்தாலும், அதையும் அரசு பரிசீலித்து வருகிறது. 10 முதல், பிளஸ் 2 வகுப்பு வரை, பொதுத்தேர்வு உள்ளது

 *இதில் எந்த மாற்றமும் இல்லை. ஆசிரியர் போராட்டம் குறித்து முதல்வரிடம் பேசி, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அவர் கூறினார்*

SOURCE :DINAMALAR WEBSITE

Flash News : 10th PUBLIC EXAM - NOMINAL ROLL DATE EXTEND UP TO 14/12/2018 :

10-12 -18 முதல் உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு இரண்டு நாட்கள் பயிற்சி :


அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் நக்சலைட்டுகளா ? எச்.ராஜா அவர்களின் கருத்திற்கு ஆசிரியர்கள் கண்டனம்

EMIS-10 ஆம் வகுப்பு மாணவர்களின் கூடுதல் விவரங்களை பதிவேற்றம் செய்வதற்கு கால நீட்டிப்பு வழங்கி உத்தரவு