யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

9/12/18

வேளாண் முதுநிலை பாடங்களுக்கு மீண்டும் இருபருவம்':

வேளாண் முதுநிலைபாடங்களுக்கு, அடுத்த கல்வியாண்டு முதல் மீண்டும் இருபருவ கல்வி முறை அறிமுகப்படுத்தப்படுகிறது.வேளாண் உயர்கல்வியின் தரத்தை உறுதிசெய்யும் வகையில், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் (ஐ.சி.ஏ.ஆர்.,), வேளாண் பல்கலை, அதன் உறுப்பு கல்லுரிகள், பாடப்பிரிவுகள்குறித்து ஆய்வு செய்து அங்கீகாரம் வழங்குகிறது.

வேளாண் பல்கலையில், கடந்த ஜூன் மாதம், தேசிய வேளாண் கல்வி அங்கீகாரக் குழு ஆய்வு நடத்தியது.இதில், வேளாண் பல்கலையின், ஒன்பது உறுப்பு கல்லுாரிகளில், ஏழு பாடப்பிரிவுக்களுக்கு, ஐ.சி.ஏ.ஆர்., அங்கீகாரம் ஐந்தாண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டது.ஆனால், ஐ.சி.ஏ.ஆர்., விதிகளை மீறி, முதுகலை மற்றும் முனைவர் பாடப்பிரிவுகளுக்கு, முப்பருவ கல்வி முறை பின்பற்றப்பட்டதால், அங்கீகாரம் வழங்கப்படவில்லை. கடந்த, மூன்று ஆண்டுகளாக முதுகலை படிப்புகளுக்கு அங்கீகாரம் இல்லாத நிலை நீடிக்கிறது.இது குறித்து, பல்கலை துணைவேந்தர் குமார் கூறுகையில், ''வேளாண் பல்கலை மாணவர்கள், இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் (ஐ.ஏ.ஆர்.ஐ.,) மேற்படிப்பை தொடருவதற்கு, உதவியாக முதுநிலை படிப்புகளுக்கு, முப்பருவக் கல்வி முறை பின்பற்றப்பட்டது.


ஐ.சி.ஏ.ஆர்., விதிகளின்படி, இருபருவ கல்வி பின்பற்ற, நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளது. இகுகுறித்து, ஜனவரியில் தேசிய வேளாண் அங்கீகாரக்குழு பல்கலையில் ஆய்வு செய்ய உள்ளனர். அடுத்த கல்வியாண்டு முதல், முதுகலை படிப்புகளுக்கு மீண்டும் இருபருவக் கல்விமுறை பின்பற்றப்படும்,'' என்றார்.

6 மாதங்களில் இலவச வீட்டுமனைப் பட்டா"புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் மக்களுக்கு அடித்தது அதிஷ்டம்.!!

புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் மக்களுக்கு 6 மாதங்களில் 3 சென்ட் இலவச வீட்டு மனைகளை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டிருக்கும் ஆணையில், நீர்நிலை, மேய்க்கால் மற்றும் சாலைகள் போன்ற ஆட்சேபகரமான புறம்போக்கு நிலங்களில் நீண்ட காலம் ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்களை அப்புறப்படுத்த குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த மக்களுக்கு மாற்று இடம் தேர்வு செய்து பயனாளிகளின் தகுதியின் அடிப்படையில், இலவச வீட்டுமனை பட்டா வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 ஆண்டுகளுக்கு மேலாக ஆக்கிரமிப்பு செய்துள்ள நபர்களை அப்புறப்படுத்தி வீட்டுமனைப் பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்திருக்கும் தமிழக அரசு, மேய்க்கால் மற்றும் சாலை போன்ற மற்ற ஆட்சேபனையுள்ள புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்களுக்கு குடிசை மாற்று வாரியம் மூலம் அடுக்குமாடி குடியிருப்புகளில் குடியமர்த்தவும் ஆணையிட்டுள்ளது. இந்த திட்டம் 6 மாதத்திற்குள் அமல்படுத்தப்படும் என்றும் தமிழக அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜாக்டோ - ஜியோ (C.P.S. solution)



உடற்கல்வி சிறப்பு ஆசிரியர் நியமன நடைமுறைகள் ரத்து : அறிவிப்பில் தெளிவில்லை என ஐகோர்ட் கிளை அதிரடி

மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டியைச் சேர்ந்த மணிகண்டபிரபு, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:கடந்த 26.7.2017ல் சிறப்பு ஆசிரியர் பிரிவில் காலியாகவுள்ள 632 உடற்கல்வி ஆசிரியர் பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியானது. இதற்கான தேர்வில் 70 மதிப்பெண் பெற்றேன். பணி வழங்குவதற்கான சீனியாரிட்டி எனக்கு கிடைத்தது. இதன்படி சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றேன். அப்போது, உடற்கல்வி ஆசிரியர் பணிக்கான கல்வியில் உயர்தகுதி பெற்றதற்கான சான்றிதழ் பெறவில்லை என கூறினர்.


 ஓராண்டு வகுப்பான இந்த படிப்பு கடந்த 2004ல் கைவிடப்பட்டது என்பதை விளக்கினேன். இதன்பிறகு வெளியான தேர்வானவர்களின் பட்டியலில் என் பெயர் இல்லை. உரிய கல்வித்தகுதி பெறவில்லையென அதில் கூறப்பட்டுள்ளது. உரிய தகுதி இருந்தும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. எனவே, நீதிமன்றம் தலையிட்டு முடிவுகள் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டும். கவுன்சலிங்கிற்கு என்னை அழைக்கவும், எனக்கு உடற்கல்வி சிறப்பு ஆசிரியர் பணி வழங்கவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இதேபோல், மேலும் பலர் மனு செய்திருந்தனர். இந்த மனுக்களை நேற்று விசாரித்த நீதிபதி ஜி.ஜெயசந்திரன், உடற்கல்வி சிறப்பு ஆசிரியர் பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு தெளிவாக இல்லை. அறிவிப்பில் முரண்பாடு உள்ளது. எனவே, உடற்கல்வி சிறப்பு ஆசிரியர் நியமனம் தொடர்பான  ஒட்டுமொத்த நடைமுறைகளும் ரத்து செய்யப்படுகிறது என உத்தரவிட்டுள்ளார்

8/12/18

தற்காலிக கணினி ஆசிரியர்கள் நியமனம் செய்ய அரசாணை வெளியிடு..

Add caption

Add caption
 







வங்கக் கடலில் புதிய புயல்..?? அடுத்த 2 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் எல்லாம் அடித்து வெளுக்கப் போகுது மழை !!

கடந்த மாதம் 15 ஆம் தேதி வங்க கடலில் உருவான கஜா புயல் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை மற்றும் புதுக்கோட்டையில் பெரும் சேதத்தை ஏற்படுத்தி சென்றது.

இந்த புயலால் புதுச்சேரியிலும் பாதிப்பு ஏற்பட்டது. காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் பெரும் பாதிப்பினை கஜா புயல் ஏற்படுத்தி சென்றது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கி போனது.


இந்த நிலையில் , வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாக உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

இதனை அடுத்து டிசம்பர் 7, 8 ஆகிய தேதிகளில் அதாவது நாளையும்இ நாளை மறுநாளும் தென் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் குமரிக்கடல் , மன்னார் வளைகுடா , தென்மேற்கு வங்க கடலுக்கு அடுத்த 3 நாட்களுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது .


இதே போல் காற்றழுத்த தாழ்வு சுழற்சி நகர்ந்துள்ளதால் தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தனியார் வானிலை ஆய்வாளர் செல்வகுமார் தெரிவித்துள்ளார்.


இந்திய பெருங்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த சுழற்சி தற்போது, இலங்கையின் கொழும்பு அருகே நிலை கொண்டுள்ளது. அதேசமயம், தெற்கு ஆந்திரா மற்றும் தெற்கு கர்நாடகாவில் நிலவி வந்த மற்ற இரண்டு காற்றழுத்த சுழற்சிகள் மறைந்து விட்டன.


இதனால் வட தமிழகத்தில் நேற்று பெய்த மழை இன்று குறைந்துள்ளது. இந்த இரு சுழற்சிகள் தான் வட தமிழகம் வரை காற்றை ஈர்த்து வழங்கி வந்தது. தற்போது அதற்கு வாய்ப்பில்லை என்பதால் சென்னை உட்பட வட தமிழகத்துக்கு மழை குறைந்துள்ளது.

அதேசமயம், தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும். இந்த மழை 6-ம் தேதி வரை நீடிக்கும் என கணிக்கப்பட்டது. ஆனால் தற்போது அது 8-ம் தேதி வரை நீடிக்கும் என தெரிகிறது எனவும், மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய தென் மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் செல்வகுமார் தெரிவித்துள்ளார்..


டிசம்பர் 12-ம் தேதியையொட்டி புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளது. அது சற்று வலிமையாக இருக்கும் என கணிக்கப்படுகிறது. அதன்போக்கை பொறுத்து டிசம்பர் 12-ம் தேதிக்கு பிறகு மழை அதிகரிக்க வாய்ப்புள்ளது.


இதனிடையே சென்னையில் நேற்று மாலை முதல் பரவலாக மழை பெய்தது. கிண்டி, எழும்பூர், ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, வேளச்சேரி, திருவான்மியூர், திருவொற்றியூர், ராயபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்தது.

அந்தமான் நிகோபார் தீவுகளின் ஆசிரியர்களுக்குப் பயிற்சி வழங்க தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையின் சார்பாக கருத்தாளர்கள் மற்றும் பாட வல்லுநர்கள் அனுப்பி வைக்க SCERT திட்டம் :

கல்விச் சேவைகளை பரிமாறிக் கொள்வது தொடர்பாக தமிழக பள்ளிக் கல்வித்துறை, அந்தமான் நிகோபார் கல்வித்துறை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வித் துறைஅமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் முன்னிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இந்த ஒப்பந்தம் வியாழக்கிழமை கையெழுத்தானது.இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, தமிழ்நாடு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (எஸ்சிஇஆர்டி), அந்தமான் நிகோபார் யூனியன் பிரதேசத்தில் பணியாற்றும் ஆசிரியர்களுக்குத் திறன்மேம்பாடு, கல்வியியல், ஆராய்ச்சி மற்றும் பயிற்சிகளை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், அந்தமான் நிகோபார் தீவுகளில் பயிலும் மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய அடைவுத் தேர்வுகளின் முடிவுகளை ஆய்வு செய்தல் மற்றும் மாணவர்களுக்கு குறைதீர் பயிற்சிஅளிக்க உதவுதல், பாடநூல்கள் தயாரித்தல் ஆகிய பணிகளில், தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை சார்பாக தக்க ஆதரவு வழங்கப்படும்.
இணைய வளங்களைப் பகிர்ந்தளிக்க... அந்தமான் நிகோபார் தீவுகளில் பயிலும் மாணவர்களின் நலன் கருதி, தமிழ்நாடுமாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தயாரித்து இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ள பாடங்கள் சார்ந்த காணொலிக் காட்சிகள் மற்றும் விரைவுத் துலக்கக் குறியீடுகளின் வாயிலாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள இணைய வளங்கள்ஆகியவைகளைஅவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் வகைசெய்யும்.
அந்தமான் நிகோபார் தீவுகளின் ஆசிரியர்களுக்குப் பயிற்சி வழங்கத் தேவையான கருத்தாளர்கள் மற்றும் பாட வல்லுநர்கள்,தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையின் சார்பாக, அவ்வப்போது, தேவையின் அடிப்படையில் அனுப்பிவைக்கப்படுவர். தேவைப்பட்டால் அங்குள்ளஆசிரியர்கள் தமிழ்நாட்டிற்கு வரவழைக்கப்பட்டும் பயிற்சிகள் வழங்கப்படும்.
இந்த ஒப்பந்தத்தில் எஸ்சிஇஆர்டி இயக்குநர் க.அறிவொளி, அந்தமான் பள்ளிக் கல்வித்துறை அதிகாரி மேமன் தாமஸ் ஆகியோர் கையெழுத்திட்டனர்

தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு: டிச.11 முதல் தத்கலில் விண்ணப்பிக்கலாம்

தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தவறியவர்கள் டிச.11 முதல் சிறப்பு அனுமதித் திட்டத்தின் (தத்கல்) விண்ணப்பிக்கலாம்.
தமிழகத்தில் வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு கடந்த நவ.26-ஆம் தேதி முதல் டிச.5-ஆம் தேதி வரை விண்ணப்பிக்க தனித்தேர்வர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. இந்த நாள்களில் விண்ணப்பிக்கத் தவறியவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
2019 ஜனவரி 1 அன்று பனிரெண்டரை வயது பூர்த்தி அடைந்த தனித் தேர்வர்கள் தத்கல் திட்டத்தின் மூலம் டிச.11, 12, 13 ஆகிய மூன்று நாள்களுக்கு மட்டும் www.dge.tn.gov.in  என்ற இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள சேவை மையங்களுக்கு(Nodal Centre) சென்று ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணம் ரூ.125, சிறப்புக் கட்டணம் ரூ.500, ஆன்லைன் விண்ணப்பக் கட்டணம் ரூ.50 என மொத்தம் ரூ.675-ஐ தனித்தேர்வர்கள் சேவை மையங்களிலேயே நேரடியாகச் செலுத்தலாம்.
ஆன்லைன் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். தபால் வழி பெறப்படும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். இந்தத் தேர்வுக்கான விரிவான தகவல்களை www.dge.tn.gov.in  என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்கும் தேர்வர்கள் டிச.13-ஆம் தேதி மாலை 5 மணி வரை சேவை மையங்களில் பதிவு செய்யலாம் என அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்

இந்த விவரம் உங்களுக்காக Case No. 23928 of 2018 court No.1 Advocate Name : Mr. Shaji Chellan Advocte Chamber No. 88 ஜாக் டோ - ஜியோ ஜாக் டோ - ஜியோ வழக்கு 10.12.2018 பிற்பகல் சென்னை உயர் நீதிமன்றம் மதுரைக்கிளையில் கோர்ட் எண் 1 இல் விசாரணைக்கு வருகிறது. நீதி மன்றத்துக்குள் நுழைய துறையால் வழங்கப்பட்ட அடையாள அட்டை கொண்டு வர வேண்டும். Department ID இல்லையென்றால் visitor pass வாங்க வேண்டும். visitor pass வாங்க ஏதேனும் ஒரு அடையாள அட்டை எடுத்து வர வேண்டும். Voter Id. ஆதார் Id Pan Card etc., படம் 1. Department ID படம் 2. visitor pass வாங்க விண்ணப்பம் படம் 3. நீதி மன்றத்தால் வழங்கப்பட்ட visitor pass


ஜாக்டோ - ஜியோ வழக்கு: நீதிமன்றத்தை நேரடியாக பார்வையிட விரும்புகிறீர்களா?

இந்த விவரம் உங்களுக்காக
Case No. 23928 of 2018
court No.1
Advocate Name : Mr. Shaji Chellan
Advocte Chamber No. 88
ஜாக் டோ - ஜியோ
ஜாக் டோ - ஜியோ வழக்கு 10.12.2018 பிற்பகல்
சென்னை உயர் நீதிமன்றம் மதுரைக்கிளையில் கோர்ட் எண் 1 இல் விசாரணைக்கு வருகிறது.
நீதி மன்றத்துக்குள் நுழைய துறையால் வழங்கப்பட்ட அடையாள அட்டை கொண்டு வர வேண்டும்.
Department ID இல்லையென்றால் visitor pass வாங்க வேண்டும்.
visitor pass வாங்க ஏதேனும் ஒரு அடையாள அட்டை எடுத்து வர வேண்டும்.
Voter Id.
ஆதார் Id
Pan Card
etc.,
படம் 1. Department ID
படம் 2. visitor pass வாங்க விண்ணப்பம்
படம் 3. நீதி மன்றத்தால் வழங்கப்பட்ட visitor pass

சிந்தனையாற்றலுடன் மாணவர்களை உருவாக்க பள்ளி ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி 10ம் தேதி தொடங்குகிறது :

சிந்தனையாற்றலுடன் செயல்திறன்மிக்க மாணவர்களை உருவாக்க நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு வரும் 10ம் தேதி சிறப்பு பயிற்சி தொடங்குகிறது.இதுகுறித்து மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:வகுப்பறை செயல்பாடுகளை மாற்றியமைத்து சிறந்த சிந்தனையாற்றலுடன் செயல்திறன் மிக்க மாணவர்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதாவது மேம்பட்ட கற்றலுக்கு வழிவகை செய்யும் கற்றல் விளைவுகள் மற்றும் தேசிய அடைவு ஆய்விற்கு பிந்தைய செயல்பாடுகள் சார்பாக மாவட்ட கருத்தாளர்களுக்கான மாநில அளவிலான இரண்டு நாள் பயிற்சி சென்னையில் நடக்க உள்ளது. 2வது கட்டமாக தொடக்கநிலை வகுப்புகளுக்கும் மாநில அளவிலான மாவட்ட கருத்தாளர் பயிற்சி வரும் 17ம் மற்றும் 20ம் தேதிகளில் நடக்க உள்ளது.
இதற்கிடையில் மாநில அளவிலான பயிற்சியில் கலந்து கொண்ட கல்வியாளர்கள் மற்றும் ஆசிரிய பயிற்றுனர்களை மட்டுமே கருத்தாளர்களாக கொண்டு மாவட்டங்களில் ஒன்றிய அளவில் நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளி ஆசிரியர்களுக்கு வரும் 10ம் தேதி முதல் நடத்த வேண்டும். இந்த பயிற்சியும் 2 நாட்கள் நடத்த வேண்டும்.பயிற்சியை திங்கள், செவ்வாய் ஆகிய இருநாட்களில் ஒரு சுற்றும், புதன் வியாழன் ஆகிய இரு நாட்களில் மற்றொரு சுற்றும் என தொடர்ந்து நடத்தி அனைத்து ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்க வேண்டும். இந்த பயிற்சியினை 2வது பருவத்தேர்வு நாட்களிலும் தொடர்ந்து நடத்திட ஏதுவாக தலைமையாசிரியர்கள் தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.
ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கும்போது ஒரு ஒன்றியத்தில் ஒரு பாடம் வீதம், 5 ஒன்றியங்களில் இப்பயிற்சியினை தனித்தனியாக பாடவாரியாக நடத்த வேண்டும். ஒரு சுற்றிற்கு ஒரு பாடத்திற்கு 50 ஆசிரியர்கள் என எண்ணிக்கையில் தொடர்ந்து அனைத்து ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்க வேண்டும். கஜா புயல் பாதிப்பிற்கு உள்ளான மாவட்டங்களில், ஒன்றியங்களில் நிலைமை சீரடைந்த பின்னர் பயிற்சியினை நடத்துவதற்கு ஏதுவாக முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட ஆசிரியர் கல்வி நிறுவன முதல்வர் தக்க நடவடிக்கையினை சூழலுக்கு தகுந்தவாறு முடிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறியிருந்தது.

விரைவில் ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்க புதிய வசதி..!

ஏடிஎம் மையங்களில் கார்டுகளைப் பயன்படுத்தி
மட்டுமே பணம் எடுக்க முடியும் என்ற நிலையை மாற்றி விரைவில் ஸ்மார்ட்ஃபோன் மூலம் பணம் எடுக்கும் முறையை வங்கிகள் அறிமுகம் செய்ய உள்ளன.
ஆம், விரைவில் ஏடிஎம் மையங்களில் ஸ்மார்ட்ஃபோன்களில் பயன்படுத்தப்பட்டு வரும் யூபிஐ செயலியில் உள்ள QR குறியீட்டை ஸ்கான் செய்து பணம் எடுத்துக்கொள்வதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

இதற்கு வங்கி வாடிக்கையாளர்கள் சம்மந்தப்பட்ட வங்கிகளின் யூபிஐ செயலி அல்லது மொபைல் வங்கி செயலிகளைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

வாடிக்கையாளர்கள் ஏடிஎம் கணினி திரையில் தோன்றும் QR குறியீட்டினை யூபிஐ செயலி மூலம் ஸ்கேன் செய்து அதற்கான பாதுகாப்பு பின் எண்ணை உள்ளீட்டு வங்கி கணக்கை அணுகி அதில் உள்ள பணத்தினை எடுத்துக்கொள்ள முடியும். வங்கிகள் இந்தப் புதிய சேவையினை அறிமுகம் செய்ய பெரிய செலவுகள் எதுவும் ஆகாது.

யூபிஐ செயலியினை உருவாக்கிய இந்திய தேசிய கொடுக்கல் நிறுவனம் (NPCI - National Payments Corporation of India) இதற்கு இன்னும் அனுமதி அளிக்கவில்லை. இந்த முயற்சிக்கு எப்போது அனுமதி கிடைக்கும் மற்றும் செயல்பாட்டிற்கு வரும் என்ற விவரங்களும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

உங்களுக்கு சர்க்கரை நோய் வருமா? வராதா ? தெரிந்து கொள்ளுங்கள்!

இளம்வயது சர்க்கரை நோய் ஆண், பெண் இருபாலரையும் சமமாகவே பாதிக்கிறது. முதிர்வயது சர்க்கரை ஆண்களை விட பெண்களைச் சற்றே அதிகமாகப் பாதிக்கிறது.

ஜீன் குறைபாடு இருந்தால் அவர்களுக்கு சர்க்கரை நோய் வரும் வாய்ப்புகள் அதிகம். தைராய்டு சுரப்பது குறைவாக இருந்தால், அவர்களுக்கு சர்க்கரை நோய் வரும் வாய்ப்புகள் உண்டு. குழந்தை பிறக்கும் போது அந்த குழந்தை 4.5 கிலோவிற்கு அதிகமாக இருந்தால், அந்த தாயிக்கு பிற்காலத்தில் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்று மருத்துவம் கூறுகின்றது. கர்ப்பப்பையில் நீர்க்கட்டி, ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனில் சீரற்ற நிலை ஏற்பட்டால், சர்க்கரை நோய் வரும் வாய்ப்புகள் உள்ளது. பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும் வயதை நெருங்கும் போது சர்க்கரை வரும் வாய்ப்பு அவர்களுக்கு மிகமிக அதிகமாகிறது.
புகையிலை, மது ஆகியவற்றை அளவுக்கு அதிகமாக உபயோகிப்பவர்களுக்கும் சர்க்கரை நோய் வரும் வாய்ப்பு அதிகமாகிறது. மது கல்லீரலைப் பாதிப்பதால் குளுக்கோஸ் சேமித்து வைக்கப்படுவதும், தேவைக்கு ஏற்ப இரத்தத்தில் சேருவதுமான பணிகள் பாதிக்கப்படுகின்றன. கலோரி குறைந்த உணவைக் கூட அளவுக்கு அதிகமாக உண்பவர்களுக்கும் நீரிழிவு நோய் அதிகம் வருகிறது. மன அழுத்தம், மன இறுக்கம் ஆகியவை அதிகம் உள்ளவர்களுக்கு சர்க்கரை நோய் மிகக் குறைந்த வயதிலேயே வந்து விடுகிறது.

ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு சர்க்கரைநோய் வருவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது. புகையிலை, மது ஆகியவற்றை அளவுக்கு அதிகமாக உபயோகிப்பவர்களுக்கும் சர்க்கரை நோய் வரும் வாய்ப்பு அதிகமாகிறது. பெண்கள் மாதவிடாய் நிற்கும் வயதை நெருங்கும் போது சர்க்கரை வரும் வாய்ப்பு அவர்களுக்கு மிகமிக அதிகமாகிறது. இந்தக் கால கட்டத்தில் உடலில் நிகழும் பல வகையான இயக்க நீர் மாற்றங்கள் இதற்கு காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது

பொதுத்தேர்வு எழுத, வயது பற்றாக்குறை உள்ள மாணவர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலகத்தில், தடை ஆணை பெற விண்ணப்பிக்கலாம் :

பொதுத்தேர்வு எழுத, வயது பற்றாக்குறை உள்ள மாணவர்கள், மாவட்ட கல்வி அலுவலகத்தில், தடை ஆணை பெற விண்ணப்பிக்கலாம்.பொதுத்தேர்வு எழுதும் பத்தாம் வகுப்பு மாணவர்கள், 14 வயது கொண்டவர்களாக இருக்க வேண்டும். வயது குறைவாக உள்ள மாணவர்கள், தடை ஆணை பெற்றால் தான் தேர்வு எழுத முடியும். இதற்கு, பள்ளிக்கல்வி இயக்குனரகத்துக்கு, பெற்றோர் அலைக்கழிக்கப்படும் நிலை உள்ளது.
இத்தடை ஆணையை, மாவட்ட கல்வி அலுவலகங்களில் பெற்று கொள்ளலாம் என, இணை இயக்குனர் (பணியாளர் தொகுதி) அமுதவல்லி அறிவித்துள்ளார்.பொதுத்தேர்வு எழுதும் நாளில், 14 வயது கொண்டவர்கள், ஓரிரு மாதங்கள் குறைவாக உள்ளவர்கள், தடை ஆணை பெறலாம். இதற்கு, அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகங்களில், விண்ணப்பிக்க வேண்டும்.

ஏழாவது ஊதியக்குழுவில் உள்ள ஊதிய முரண்பாடுகளை களைய அமைக்கப்பட்ட திரு.சித்திக்(IAS) தலைமையிலான குழுவின் அறிக்கை இன்றோ அல்லது நாளையோ அரசிடம் சமர்ப்பிக்க வாய்ப்புகள் உள்ளதாக தகவல்!!


ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல் பாடம் நடத்தி அசத்திய புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்: இரா.வனஜா:

அன்னவாசல்,டிச.7: இலுப்பூர்கல்வி மாவட்டம் அன்னவாசல்  அருகே உள்ள மண்ணவேளாம்பட்டி அரசினர் மேல்நிலைப்பள்ளியில்  ஆண்டாய்வு நடைபெற்றது..

ஆண்டாய்வின் போது புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா திடீரென 6 ஆம் வகுப்புக்குள் சென்று  அறிவியல் பாடத்தில் காற்று என்கிற தலைப்பில் பாடம் நடத்தினார்..பாடம் நடத்தும் பொழுது இடையிடையே மாணவர்களிடம் கேள்வி கேட்டு உற்சாகப்படுத்தினார்..மாணவர்களும் ஆர்வமாக பதில் அளித்தனர்..

ஆண்டாய்வின் போது முதன்மைக்கல்வி அலுவலக பணியாளர்கள் இருவர்,மாவட்ட கல்வி அலுவலக பணியாளர் ஒருவர் என மூவர் அலுவலக பதிவேடுகள் சரியாக உள்ளதா என சரிபார்ப்பார்ப்பார்கள் அதனை முதன்மைக் கல்வி அலுவலர் ஆய்வு செய்வார் .அத்துடன் மாவட்ட கல்வி அலுவலர்,பள்ளி துணைஆய்வாளர்,தலைமையாசிரியர்கள்,ஆசிரிய பயிற்றுநர்கள் அடங்கிய குழுவினர்கள்  ஆசிரியர்கள் பாடம் நடத்துவதை மேற்பார்வை செய்வதையும்   ஆய்வு செய்வதோடு, தலைமைஆசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்கள் 11 ,12 ஆம் வகுப்பு   மாணவர்களுக்கு பாடம் கற்பிப்பதையும் ஆய்வு செய்வார்.ஆனால் இன்று யாரும் எதிர்பாராத வகையில்  திடீரென ஆறாம்  வகுப்பிற்குள் சென்று மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் பாடம் எடுத்தது கண்டு அப்பள்ளி தலைமையாசிரியர்கள்,ஆசிரியர்கள் வியப்பில் ஆழ்ந்தனர்..

 பின்னர் முதன்மைக் கல்வி அலுவலர்  பாடம் நடத்தும் முறை குறித்தும் அரசுத் தேர்வு எழுதும் மாணவர்களின் தேர்ச்சி விழுக்காட்டினை அதிகரிக்கவும் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் அறிவுரை வழங்கி பள்ளி வளாகத்தில் மரக்கன்றினை நட்டுச் சென்றார்..

ஆய்வின் போது இலுப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் க.குணசேகரன்,பள்ளி துணைஆய்வாளர் கி.வேலுச்சாமி,மருதாந்தலை பள்ளி தலைமையாசிரியர் பாரதி விவேகானந்தன்,அன்னவாசல் பள்ளி தலைமையாசிரியர் சுவாமிநாதன்,மாங்குடி தலைமையாசிரியர் கண்ணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

7/12/18

School Morning Prayer Activities - 07.12.2018

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:




திருக்குறள் : 99

இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது.

உரை:
இனிய சொற்கள் இன்பம் பயத்தலைக் காண்கின்றவன், அவற்றிற்கு மாறான வன்சொற்களை வழங்குவது என்ன பயன் கருதியோ?.

பழமொழி:

Eat to live: do not live to eat

வாழ்வதற்காக சாப்பிடு; சாப்பிடுவதற்காக வாழாதே

பொன்மொழி:

பிறர் குற்றங்களை மன்னிக்கும் குணம், குற்றம் இல்லாத நல்லவர்களிடம் மட்டுமே இருக்கும்.

- பாரதியார்

இரண்டொழுக்க பண்பாடு :

1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .

2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .

பொது அறிவு :


1) 1 ஸ்கோர் என்றால் என்ன?
20 பொருட்கள்

2) நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் வருடம்?
லீப் வருடம்

நீதிக்கதை :


தங்க இறகு







பண்ணைபுரம் என்ற ஊரில் விவசாயி ஒருவன் இருந்தான். அவன் எவ்வளவு கடுமையாக உழைத்தாலும் அவனது வயலில் விளைச்சல் பெருகவே இல்லை. “விவசாயி கணக்குப் பார்த்தால் உழக்குக் கூட மிஞ்சாது’ என்ற பழமொழிப்படி பல ஆண்டுகளாகப் பாடுபட்டும்கூட அவன் வறுமையிலேயே வாடிக் கொண்டிருந்தான்.

ஒருநாள் வயலில் ஏர் உழுது விட்டு வரும் போது தகதகவென ஜொலித்த பறவை ஒன்று அங்கிருந்த மரத்தில் அமர்ந்திருந்தது. அதைப் பார்த்த விவசாயி, “இந்தப் பறவை நம் வயலைக் காக்கும் தேவதையாக இருக்கக் கூடும். இத்தனை நாள் நாம் இதை வணங்காமல் போனதால்தான் நம்முடைய வயலில் விளைச்சல் பெருகவில்லை. இன்று முதல் இதை நாம் வணங்குவோம்’ என்று தீர்மானித்தான்.

“”எனது வயலைக் காத்து வரும் தேவதையே! இவ்வளவு நாட்கள் உன்னைக் கவனிக்காமல் இருந்ததற்காக என்னை மன்னித்துவிடு. உனக்கு என் வீட்டில் இருந்து பழங்கள் எடுத்து வந்துள்ளேன். சாப்பிட்டு என்னை ஆசீர்வதிப்பாயாக,” என்று கூறி பாத்திரத்தை வைத்து விட்டுச் சென்றான் விவசாயி.

மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது பாத்திரத்தில் ஒரு தங்க இறகு இருந்தது. மகிழ்ச்சியுடன் அதை எடுத்துச் சென்றான் விவசாயி.

நாள்தோறும் மாலை வேளைகளில் விவசாயி பாத்திரத்தை வைத்துவிட்டு வருவான். மறுநாள் காலையில் ஒரு தங்க இறகு இருக்கும். இவ்விதம் மகிழ்ச்சியாகக் காலந்தள்ளிக் கொண்டிருந்த விவசாயி ஒருநாள் வெளியூருக்குச் செல்ல வேண்டியிருந்தது. தனது மகனைக் கூப்பிட்டு அவனிடம் பறவைக்கு பழம் வைத்து விட்டு வருமாறு கூறினான்.

விவசாயி மகனும் தந்தை சொல்லியவாறே அன்று மாலை பழங்களை வைத்து விட்டுச் சென்றான்.

மறுநாள் காலையில் வந்து பார்க்கும்போது அந்தப் பாத்திரத்தில் ஒரு தங்க இறகு இருந்தது. அதைப் பார்த்த விவசாயியின் மகன், “இந்தப் பறவையைப் பிடித்து தங்க இறகுகளை வேண்டிய மட்டும் பிய்த்துக் கொள்வோம். எப்படியும் பறவைக்கு தங்க இறகு முளைத்துவிடும். மீண்டும் பிய்க்கலாம்,’ என்று நினைத்து அவன் மறுநாள் ஒளிந்திருந்து பறவை பழம் சாப்பிடும் போது பிடித்துக் கொண்டான். அதன் இறகை பிய்க்க முயன்றபோது பறவை அவன் கண்களை குத்தி குருடாக்கி விட்டுச் சென்றது.


விவசாயியின் மகன் பேராசையின் காரணமாக பார்வையற்றவன் ஆனான். கிடைப்பதை கொண்டு திருப்தி அடையணும். அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சுதான் 


இன்றைய செய்தி துளிகள் : 


1.மேகதாது அணை கட்ட அனுமதி அளித்ததற்கு எதிரான தீர்மானம்: சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்


2.கஜா புயலால் பாதித்த  4 மாவட்டங்களுக்கு மின்கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு  

3.தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை நீடிக்க வாய்ப்பு: இந்திய வானிலை மையம் தகவல்

4.அரசு புறம்போக்கு நிலங்களில் இருப்பவர்களுக்கு மூன்று சென்ட் இலவச வீட்டுமனைப் பட்டா - அரசாணை வெளியீடு

5.உலகக் கோப்பை ஹாக்கி: நெதர்லாந்தை வீழ்த்தியது ஜெர்மனி

FORWARD மெசேஜ்களுக்கு ப்ரேக் .!புதிய அப்டேட் தகவல்களை வெளியிட்டது வாட்ஸ்அப்..!

வாட்ஸ்அப் மூலம் இனி பகிரப்படும் மெசேஜ்களை previewக்கான வசதிகளை வாட்ஸ் அப் அப்டேட் செய்துள்ளது. 

இது குறித்து தெரிவித்த வாட்ஸ்அப் மேசேஜ் அல்லது மீடியா பைல்களை வாட்ஸ்அப் பயன்படுத்தி ஷேர் செய்யும் போது அதனை preview பார்க்கும் வகையில் வாட்ஸ்அப் புதிய அப்டேட் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த வசதி முதலில் ஆண்ட்ராய்டு மொபைல்களில் beta வெர்ஷன் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

மேலும் கூடுதலாக GIF ஸ்டிக்கர்ஸ் அனுப்புவதற்காக கூடுதல் வசதியும் ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்காக புதியதாக அப்டேட் செய்ய வாட்ஸ்அப் தயாராகி வருகிறது.மேலும் மற்ற apps-களிலுருந்து அனுப்பப்படும் தகவல்களைப் பகிரும் போது preview வை பயனாளர்கள் பார்த்துக்கொள்ளலாம். 

android பயனாளர்கள் மற்றும் மெசேஜ் அல்லது லிங்க் என எது அனுப்பினாலும் அதனை preview பார்க்கலாம்.இந்த புதிய அப்டேட் மூலம் பயனாளர் ஒரு செய்தியை ஒரு நபர் அல்லது அதற்கு மேற்பட்டவருக்கு பகிர்ந்து கொண்டாலும் Preview பார்த்துக் கொள்ளலாம். இந்த feature ஆனது வாட்ஸ்அப் மூலம் பரவுகின்ற பொய் செய்திகளைத் தடுக்க உதவி செய்யும் என்று தெரிகிறது. தற்போது அப்பேட் ஆன இந்தப் புதிய அப்டேட் உடன் கூடிய வாட்ஸ்அப் மற்றும் Google play beta programme மூலம் இதனை பதிவிறக்கம் செய்யலாம். இதனை அடுத்து எல்லோராலும் விரும்ப்படும் GIF stickers பயன்பாட்டை எளிதாக்க கூடிய முயற்சியில் வாட்ஸ்அப் ஈடுபட்டுள்ளது என்ற தகவல் தெரிவிக்கின்றது.

ஏடிஎம் மையங்களில் கார்டுகளைப் பயன்படுத்தி மட்டுமே பணம் எடுக்க முடியும் என்ற நிலையை மாற்றி விரைவில் ஸ்மார்ட்ஃபோன் மூலம் பணம் எடுக்கும் முறையை வங்கிகள் அறிமுகம் செய்ய உள்ளன.

விரைவில் ஏடிஎம் மையங்களில் ஸ்மார்ட்ஃபோன்களில் பயன்படுத்தப்பட்டு வரும் யூபிஐ செயலியில் உள்ள QR குறியீட்டை ஸ்கான் செய்து பணம் எடுத்துக்கொள்வதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

இதற்கு வங்கி வாடிக்கையாளர்கள் சம்மந்தப்பட்ட வங்கிகளின் யூபிஐ செயலி அல்லது மொபைல் வங்கி செயலிகளைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

வாடிக்கையாளர்கள் ஏடிஎம் கணினி திரையில் தோன்றும் QR குறியீட்டினை யூபிஐ செயலி மூலம் ஸ்கேன் செய்து அதற்கான பாதுகாப்பு பின் எண்ணை உள்ளீட்டு வங்கி கணக்கை அணுகி அதில் உள்ள பணத்தினை எடுத்துக்கொள்ள முடியும். வங்கிகள் இந்தப் புதிய சேவையினை அறிமுகம் செய்ய பெரிய செலவுகள் எதுவும் ஆகாது.

யூபிஐ செயலியினை உருவாக்கிய இந்திய தேசிய கொடுக்கல் நிறுவனம் (NPCI - National Payments Corporation of India) இதற்கு இன்னும் அனுமதி அளிக்கவில்லை. இந்த முயற்சிக்கு எப்போது அனுமதி கிடைக்கும் மற்றும் செயல்பாட்டிற்கு வரும் என்ற விவரங்களும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

04-10-2018 அன்று தற்செயல் விடுப்பு போராட்டத்தில் பங்கேற்ற அரசு ஊழியர்களின் ஒரு நாள் சம்பளம் பிடித்தம் செய்ததை உறுதி செய்துகொள்ள கருவூல கணக்கு ஆணையர் கடிதம்


நீதிக்கதை :---சிந்தனை கதைகள்

தங்க இறகு



பண்ணைபுரம் என்ற ஊரில் விவசாயி ஒருவன் இருந்தான். அவன் எவ்வளவு கடுமையாக உழைத்தாலும் அவனது வயலில் விளைச்சல் பெருகவே இல்லை. “விவசாயி கணக்குப் பார்த்தால் உழக்குக் கூட மிஞ்சாது’ என்ற பழமொழிப்படி பல ஆண்டுகளாகப் பாடுபட்டும்கூட அவன் வறுமையிலேயே வாடிக் கொண்டிருந்தான்.

ஒருநாள் வயலில் ஏர் உழுது விட்டு வரும் போது தகதகவென ஜொலித்த பறவை ஒன்று அங்கிருந்த மரத்தில் அமர்ந்திருந்தது. அதைப் பார்த்த விவசாயி, “இந்தப் பறவை நம் வயலைக் காக்கும் தேவதையாக இருக்கக் கூடும். இத்தனை நாள் நாம் இதை வணங்காமல் போனதால்தான் நம்முடைய வயலில் விளைச்சல் பெருகவில்லை. இன்று முதல் இதை நாம் வணங்குவோம்’ என்று தீர்மானித்தான்.

“”எனது வயலைக் காத்து வரும் தேவதையே! இவ்வளவு நாட்கள் உன்னைக் கவனிக்காமல் இருந்ததற்காக என்னை மன்னித்துவிடு. உனக்கு என் வீட்டில் இருந்து பழங்கள் எடுத்து வந்துள்ளேன். சாப்பிட்டு என்னை ஆசீர்வதிப்பாயாக,” என்று கூறி பாத்திரத்தை வைத்து விட்டுச் சென்றான் விவசாயி.

மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது பாத்திரத்தில் ஒரு தங்க இறகு இருந்தது. மகிழ்ச்சியுடன் அதை எடுத்துச் சென்றான் விவசாயி.

நாள்தோறும் மாலை வேளைகளில் விவசாயி பாத்திரத்தை வைத்துவிட்டு வருவான். மறுநாள் காலையில் ஒரு தங்க இறகு இருக்கும். இவ்விதம் மகிழ்ச்சியாகக் காலந்தள்ளிக் கொண்டிருந்த விவசாயி ஒருநாள் வெளியூருக்குச் செல்ல வேண்டியிருந்தது. தனது மகனைக் கூப்பிட்டு அவனிடம் பறவைக்கு பழம் வைத்து விட்டு வருமாறு கூறினான்.

விவசாயி மகனும் தந்தை சொல்லியவாறே அன்று மாலை பழங்களை வைத்து விட்டுச் சென்றான்.

மறுநாள் காலையில் வந்து பார்க்கும்போது அந்தப் பாத்திரத்தில் ஒரு தங்க இறகு இருந்தது. அதைப் பார்த்த விவசாயியின் மகன், “இந்தப் பறவையைப் பிடித்து தங்க இறகுகளை வேண்டிய மட்டும் பிய்த்துக் கொள்வோம். எப்படியும் பறவைக்கு தங்க இறகு முளைத்துவிடும். மீண்டும் பிய்க்கலாம்,’ என்று நினைத்து அவன் மறுநாள் ஒளிந்திருந்து பறவை பழம் சாப்பிடும் போது பிடித்துக் கொண்டான். அதன் இறகை பிய்க்க முயன்றபோது பறவை அவன் கண்களை குத்தி குருடாக்கி விட்டுச் சென்றது.


விவசாயியின் மகன் பேராசையின் காரணமாக பார்வையற்றவன் ஆனான். கிடைப்பதை கொண்டு திருப்தி அடையணும். அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சுதான் 

வங்கக் கடலில் புதிய புயல்..?? அடுத்த 2 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் எல்லாம் அடித்து வெளுக்கப் போகுது மழை !!

கடந்த மாதம் 15 ஆம் தேதி வங்க கடலில் உருவான கஜா புயல் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை மற்றும் புதுக்கோட்டையில் பெரும் சேதத்தை ஏற்படுத்தி சென்றது.

இந்த புயலால் புதுச்சேரியிலும் பாதிப்பு ஏற்பட்டது. காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் பெரும் பாதிப்பினை கஜா புயல் ஏற்படுத்தி சென்றது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கி போனது.


இந்த நிலையில் , வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாக உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

இதனை அடுத்து டிசம்பர் 7, 8 ஆகிய தேதிகளில் அதாவது நாளையும்இ நாளை மறுநாளும் தென் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் குமரிக்கடல் , மன்னார் வளைகுடா , தென்மேற்கு வங்க கடலுக்கு அடுத்த 3 நாட்களுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது .


இதே போல் காற்றழுத்த தாழ்வு சுழற்சி நகர்ந்துள்ளதால் தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தனியார் வானிலை ஆய்வாளர் செல்வகுமார் தெரிவித்துள்ளார்.


இந்திய பெருங்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த சுழற்சி தற்போது, இலங்கையின் கொழும்பு அருகே நிலை கொண்டுள்ளது. அதேசமயம், தெற்கு ஆந்திரா மற்றும் தெற்கு கர்நாடகாவில் நிலவி வந்த மற்ற இரண்டு காற்றழுத்த சுழற்சிகள் மறைந்து விட்டன.


இதனால் வட தமிழகத்தில் நேற்று பெய்த மழை இன்று குறைந்துள்ளது. இந்த இரு சுழற்சிகள் தான் வட தமிழகம் வரை காற்றை ஈர்த்து வழங்கி வந்தது. தற்போது அதற்கு வாய்ப்பில்லை என்பதால் சென்னை உட்பட வட தமிழகத்துக்கு மழை குறைந்துள்ளது.

அதேசமயம், தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும். இந்த மழை 6-ம் தேதி வரை நீடிக்கும் என கணிக்கப்பட்டது. ஆனால் தற்போது அது 8-ம் தேதி வரை நீடிக்கும் என தெரிகிறது எனவும், மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய தென் மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் செல்வகுமார் தெரிவித்துள்ளார்..


டிசம்பர் 12-ம் தேதியையொட்டி புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளது. அது சற்று வலிமையாக இருக்கும் என கணிக்கப்படுகிறது. அதன்போக்கை பொறுத்து டிசம்பர் 12-ம் தேதிக்கு பிறகு மழை அதிகரிக்க வாய்ப்புள்ளது.


இதனிடையே சென்னையில் நேற்று மாலை முதல் பரவலாக மழை பெய்தது. கிண்டி, எழும்பூர், ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, வேளச்சேரி, திருவான்மியூர், திருவொற்றியூர், ராயபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்தது.

ஆசிரியர்களின் அசல் சான்றிதழ்கள் திருப்பி தர உத்தரவு :

தனியார் பல்கலை பேராசிரியர் ஒருவர் தற்கொலை எதிரொலியாக, அசல் சான்றிதழ்களை, பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களிடம் திருப்பி தர, ஏ.ஐ.சி.டி.இ., உத்தரவிட்டுள்ளது.தனியார் பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளில் பணியாற்றும் பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் கல்வி தகுதிக்கான, அசல் சான்றிதழ்களை, நிர்வாகங்கள் வாங்கி வைத்து கொள்கின்றன. சென்னையைச் சேர்ந்த, தனியார் பல்கலை பேராசிரியர், அண்ணா பல்கலையின், எம்.ஐ.டி., கல்லுாரியில் பணிக்கு சேர்ந்தார். அவருக்கு, தனியார் பல்கலையில் இருந்து, அசல் சான்றி தழ் கிடைக்கவில்லை.இதனால், மனம் உடைந்த அவர், தற்கொலை செய்தார்.
இந்த பிரச்னை, நீதிமன்றத்திற்கும், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ.,க்கும் சென்றுள்ளது.இதையடுத்து, அனைத்து பல்கலைகளும், கல்லுாரி களும், பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் அசல் சான்றிதழ்களை திருப்பி தர வேண்டும் என, ஏ.ஐ.சி.டி.இ., உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து, ஏ.ஐ.சி.டி.இ., நேற்று வெளியிட்ட அறிவிப்பு:பல பல்கலைகளும், கல்லுாரிகளும், பேராசிரி யர்கள் மற்றும் ஊழியர்களின் சான்றிதழ்களை வாங்கி வைத்து, வேறு வேலைக்கு செல்ல முடியாமல் தடுக்கின்றன. அதனால், சிறந்த பணிகளுக்கு செல்ல முடியாமல் தடுக்கப்படுகின்றனர். சான்றிதழ் கிடைக்காத அதிர்ச்சியில், தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் நடந்துள்ளது; இது, மிகவும் வருந்தத்தக்கது.எனவே, எந்த பல்கலையும், கல்லுாரியும், பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களின், அசல் சான்றிதழ்களை வாங்கி வைக்க கூடாது. வாங்கி வைத்திருந்தால், உடனடியாக திருப்பி தர வேண்டும். இதுகுறித்து, புகார்கள் வந்தால், கல்வி நிறுவனங்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

வைப்புநிதி கணக்குடன் ஆதார் இணைக்க டிச.10 வரை கெடு :

மதுரை வருங்கால வைப்புநிதி மண்டல அலுவலகத்தில் ஏப்., 2018 முதல் வைப்புநிதி வேண்டி 70 ஆயிரம் ஆன்லைன் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. ஆதார், வங்கி கணக்கை வருங்கால வைப்புநிதி கணக்குடன் இணைத்தால் மட்டுமே ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியும்,'' என, மண்டல வைப்புநிதி கமிஷனர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.அவர் தெரிவித்துள்ளதாவது: வருங்கால வைப்பு நிதி கணக்கில் இருந்து முன் பணம், கணக்கை முடிக்க விரும்பும் சந்தாதாரர்கள் தங்கள் கே.ஒய்.சி., விவரங்களை நிறுவனம் மூலம் ஒப்புதல் அளித்திருந்தால் தாங்களே ஆன்லைனில் படிவமாக சமர்ப்பிக்கலாம். பெரும்பாலான சந்தாதாரர்கள் தங்கள் ஆதார், வங்கி கணக்கை வைப்பு நிதி கணக்கு எண்ணுடன் (யு.ஏ.என்) இணைக்கவில்லை. இதை இணைக்க www.epfindia.gov.in என்ற இணையத்தளத்திற்கு சென்று யு.ஏ.என்.,னை 'ஆக்டிவேட்' செய்யலாம்.ஆதார் விவரம் இவ்வலுவலக சந்தாதாரர் விவரங்களுடன் பொருந்தி இருக்க வேண்டும். சந்தாதாரர்களுக்கு உதவி செய்ய ஒவ்வொரு நிறுவனத்திலும் போதுமான ஏற்பாடு செய்துள்ளோம். டிச., 10க்குள் பணியாளர்களின் ஆதார் விவரங்களை இணைக்க நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஸ்மார்ட் போன் வைத்திருப்போர் 'யூமாங்' ஆப் பதிவிறக்கம் செய்து வைப்புநிதி சார்ந்த விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என்றார்.

எஸ்.சி., எஸ்.டி., மாணவருக்கு ஐஐஎம் நுழைவுத் தேர்வு பயிற்சி: புதிய விதிமுறைகள் வெளியீடு:

ஐஐஎம் போன்ற கல்வி நிறுவனங்களில் எம்.பி.ஏ., படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வை தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவ-மாணவிகள் எதிர்கொள்வதற்கான பயிற்சிகளை அளிப்பதற்கு புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான உத்தரவை தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் நலத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஒட்டெம் டாய் வெளியிட்டுள்ளார். அதன் விவரம்:

ஐ.ஐ.எம்., போன்ற கல்வி நிறுவனங்களில் எம்.பி.ஏ., போன்ற மேற்படிப்பு படிக்க பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெறும் வகையில் ஆண்டுக்கு 100 தகுதியுள்ள மாணவ-மாணவிகள் தேர்வு செய்யப்படுவர்.
அவர்களுக்கு பொது நுழைவுத் தேர்வு பயிற்சி அளிப்பதில் தலைசிறந்த பயிற்சி நிறுவனங்களில் பயிற்சி அளிக்கப்படும். ஒரு மாணவருக்கு ரூ.50 ஆயிரம் வீதம் 100 பேருக்கு ஆண்டுக்கு ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கப்படும்.
இந்த நிலையில், ஒரு பயிற்சி நிறுவனத்தைத் தேர்வு செய்து ஒரே இடத்தில் மாணவர்களுக்கு இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவது நடைமுறை சாத்தியமில்லாதது என ஆதிதிராவிடர் நல இயக்குநரகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, பொது நுழைவுத் தேர்வு பயிற்சி அளிக்கும் திட்டத்துக்கான விதிகளுடன், கூடுதலாக விதிமுறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
புதிய விதிகள் என்ன?: ஒரே நிறுவனத்தைத் தேர்வு செய்வதற்குப் பதிலாக பல்வேறு நிறுவனங்களைத் தேர்வு செய்யலாம். பயிற்சியை ஒரே நகரத்தில் மட்டும் மேற்கொள்ளாமல், திருச்சி, மதுரை, கோவை, சென்னை ஆகிய நகரங்களிலும் நடத்தலாம். ஒவ்வொரு நகரத்திலும் பல்வேறு நிறுவனங்களை அங்கீகாரம் செய்யலாம். இப்போதுள்ள சந்தை விலை விகிதங்களை அடிப்படையாகக் கொண்டு பாடத்திட்டம், பயிற்சிக்கான கட்டணங்களை நிர்ணயம் செய்யலாம்.
பொது நுழைவுத் தேர்வுக்கான பயிற்சியை அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் சேரும் ஆதிதிராவிடர் பயிற்சியாளர்களுக்கும் இந்தத் திட்டத்தின் கீழ் நிதியுதவி அளிக்கலாம். பயிற்சியாளர்களுக்கு முறையான பயிற்சி அளிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக தாட்கோவால் நிதி அளிக்கப்படும் மாணவ-மாணவிகள் பயிற்சி நிறுவனங்களின் வழக்கமான வகுப்புகளில் கலந்து கொள்ள வேண்டும். தரமான பயிற்சியை அளிக்கும் வகையிலும், பயிற்சியாளர்களின் வருகையில் குறைபாடு ஏற்படாமல் இருக்கவும் தனி வகுப்புகளுக்கு அனுமதிக்கக் கூடாது.
மாணவர்கள் வழக்கமான வகுப்புகளில் சேர்க்கப்பட வேண்டும். இணையதளம் அல்லது விரைவாக முடிக்கும் வகுப்புகளாக இருக்கக் கூடாது. பயிற்சியின் காலம் குறைந்தபட்சம் 100 மணி நேரம் இருக்க வேண்டும். பயிற்சிக்கான கட்டணம் பயிற்சி நிறுவனத்தின் கட்டணம் அல்லது ரூ.50 ஆயிரம் ஆகியவற்றில் எது குறைவோ அந்தத் தொகை அளிக்கப்பட வேண்டும் என்று ஒட்டெம் டாய் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்

வனத்துறை தேர்வு இன்று துவக்கம் :

தமிழகத்தில், 139 மையங்களில், வனவர், வனக் காப்பாளர் பணியிடங்களுக்கான, 'ஆன்லைன்' தேர்வு, இன்று துவங்குகிறது.தமிழகத்தில், 300 வனவர் பணியிடங்களுக்கு, 1.10 லட்சம் பேரும், 878 வனக் காப்பாளர் பணியிடங்களுக்கு, 98 ஆயிரத்து, 801 பேரும் விண்ணப்பித்து உள்ளனர். இவர்களுக்கான தேர்வு, ஆன்லைன் முறையில் நடைபெறும் என, வனத் துறை அறிவித்துள்ளது.இதில், வனவர் பணியிடங்களுக்கான தேர்வு, 139 மையங்களில், இன்று துவங்குகிறது. வரும், 9ம் தேதி வரை, இத்தேர்வு நடைபெறும். வனக் காப்பாளர் தேர்வு, 122 மையங்களில், வரும், 10, 11 தேதிகளில் நடைபெறும்.இதற்கான விண்ணப்பதாரர்களுக்கு, தேர்வு வழிமுறை விபரங்கள், தனித் தனியாக அனுப்பப்பட்டு உள்ளதாக, தமிழ்நாடு வன சீருடை பணியாளர் தேர்வு குழுமம் அறிவித்துள்ளது.
8ம் வகுப்பு : தனி தேர்வர்களுக்கு, எட்டாம் வகுப்பு தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுஉள்ளது.அரசு தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:தனி தேர்வர்களாக, எட்டாம் வகுப்பு பொது தேர்வு எழுத விரும்புவோருக்கு, 2019 ஜன., 21 முதல், 25 வரை தேர்வு நடக்கும். தேர்வுக்கான அட்டவணை, www.dge.tn.gov.in என்ற, இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது

ஐ.ஏ.எஸ்., தேர்வான 180 பேரில் 11 பேர் தமிழகத்திற்கு ஒதுக்கீடு:

கடந்த 2017 ல் யு.பி.எஸ்.சி., தேர்வெழுதியவர்களில் 180 பேர் ஐ.ஏ.எஸ்., ஆக தேர்வானார்கள். இவர்களில் 11 பேர் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளனர். அவர்கள் விவரம்(அடைப்புக்குறிக்குள் சொந்த மாநிலம்):மதுபாலன் (தமிழ்நாடு), ஜோதிசர்மா (டில்லி), சிவகுருபிரபாகரன் (தமிழ்நாடு), அங்கிடமிஸ்ரா (உ.பி.,), பாலசந்தர் (தமிழ்நாடு), சிவகிருஷ்ணமூர்த்தி (தமிழ்நாடு), நிஷாந்த்கிருஷ்ணா (ஜார்கண்ட்), புனித்கெலாட் (ம.பி.,)ஆனந்தமோகன் (கேரளா), மோனிகா ராணா (உத்தரகாண்ட்) மற்றும் வர்ஷா மினா (ராஜஸ்தான்).தமிழகத்தைச் சேர்ந்த கீர்த்திவாசன் -- ஒடிசா, நித்யா -ராஜஸ்தான், லட்சுமணபெருமாள் -மேற்கு வங்கம், உகேஷ்குமார் -கர்நாடக மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்டுஉள்ளனர்.

ஒரு லட்சம் பள்ளி மாணவர்களுக்கு, உணவுப் பொருட்களில் கலப்படம் குறித்த விழிப்புணர்வுக் கல்வி மற்றும் பயிற்சி!!

கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு லட்சம் மாணவர்களுக்கு, உணவுப் பொருட்களில் கலப்படம் குறித்த விழிப்புணர்வு கல்வியை, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் வழங்கினர்.

முதற்கட்டமாக சத்தான உணவுகள், அவற்றை உட்கொள்ளும் விதம் குறித்து, மாணவர்களுக்கு விளக்க, மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. இரண்டாம் கட்டமாக, பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு, உணவில் உள்ள கலப்படத்தை கண்டறியவும், தவிர்க்கவும் பயிற்சி வழங்கப்பட்டது.


மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை கூறுகையில், ''தலைமை ஆசிரியர்கள், 197 பேருக்கும், ஒரு லட்சம் குழந்தைகளுக்கும், பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. பயிற்சி தொடரும்,'' என்றார்.

தேசிய திறனாய்வு: இறுதி விடைக்குறிப்பு இன்று வெளியீடு :

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்காக நடத்தப்பட்ட தேசிய திறனாய்வுத் தேர்வு (என்டிஎஸ்இ) தொடர்பான இறுதி விடைக் குறிப்பு www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் வியாழக்கிழமை முதல் வெளியிடப்படவுள்ளது என அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி புதன்கிழமை தெரிவித்துள்ளார்

ஓய்வூதியர் உயிர்வாழ்சான்றிதழ் பதியலாம் :

தொழிலாளர் ஓய்வூதிய திட்டம் 1995ன் கீழ் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியர்கள் தங்கள் மின்னணு உயிர்வாழ் சான்றிதழை ஓய்வூதியம் பெறும் வங்கிகளில் பதிவு செய்ய வேண்டும்.2019 -20ம் ஆண்டில் தொடர்ந்து ஓய்வூதியம் பெற இந்தாண்டு டிசம்பருக்குள் உயிர் வாழ் சான்றிதழை பதிவு செய்ய வேண்டும். ஓய்வூதியரின் கைரேகை பதிவில் தொழில்நுட்ப பிரச்னை இருந்தால் உயிர்வாழ் சான்றிதழை காகித வடிவில் வங்கியில் சமர்பித்து வங்கி மேலாளர் சான்றுடன் மதுரை வருங்கால வைப்பு நிதி அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். விபரங்களுக்கு 83005 81483 அலைபேசியில் அழைக்கலாம் என வருங்கால வைப்பு நிதி உதவி கமிஷனர் சுனில் தெரிவித்துள்ளார்.

தொடக்கப் பள்ளிகளை திடீர் ஆய்வு செய்ய Flying Squads உருவாக்கம் - CEO Proceedings

10 ஆம் வகுப்பு தேர்வு எழுத வயது வரம்பு குறித்த அரசு தேர்வுகள் இயக்குனர் அவர்களின் செயல்முறைகள்!!

பேட்டரிக்கு பாதுகாப்பு: வாட்ஸ்ஆப்பில் வருகிறது டார்க் மோட்!!

வாட்ஸ்ஆப்பில் வரவிருக்கும் டார்க மோட்டால்
அதனை பயன்படுத்துவது எளிதாக மாற உள்ளது. மேலும் இதனால் வழக்கத்தை விட குறைவான அளவில் பேட்டரி பவர் குறையும்.

வாட்ஸ்ஆப் செயலியில் தொடர்ந்து பல வசதிகள் வந்த வண்ணம் உள்ளன. இதனால் வாட்ஸ்ஆப்பை பயன்படுத்துவது மேலும் எளிதாகி உள்ளது.
இந்நிலையில் தற்போது புதிய வசதி ஒன்று வாட்ஸ்ஆப்பில் வர உள்ளது. டார்க் மோட் என கூறப்படும் இந்த அப்டேட்டால் வாட்ஸ்ஆப்பில் முக்கியமான வசதிகள் வர உள்ளன. இந்த வசதி தற்போது விண்டோஸ் 10 கணினி மற்றும் நோட்புக்குகளில் வந்துள்ளன. மேலும் ஐஓஎஸ் 10 கொண்ட ஐபோன்களில் இந்த வசதியை பெற முடியும்.

மற்ற டிவைஸ்களுக்கு இந்த வசதி இன்னும் வரவில்லை. டார்க் மோட்டில் வாட்ஸ்ஆப் இருக்கும் போது வழக்கத்தை விட குறைவான பவரை எடுத்துக்கொள்கிறது. மேலும் வாட்ஸ்ஆப் பேக்ரவுண்ட்டில் அடர்த்தியான வண்ணங்கள் இருப்பதால்  பார்ப்பதற்கு புது லுக்கும், கண்களுக்கு இதமாகவும் இருக்கும்

நம்மை நாமே பாசிட்டிவாக வைத்துக் கொள்வது எப்படி?

1. பாசிட்டிவாக இருப்பவர்களோடு பழகுங்கள் :

நம்மைச் சுற்றி எப்போதுமே பாசிட்டிவ் வைப்ரேஷன் இருந்தால் நாம் இயல்பாகவே அதிக முனைப்போடு ஒரு விஷயத்தை செய்வோம்.

எனவே எதிர்மறை எண்ணத்தோடு ஒரு செயலை செய்பவர்களை எப்போதும் பக்கத்தில் வைத்து கொள்ளாதீர்கள்.

"தெரியாது"  "நடக்காது" "முடியாது"  "கிடைக்காது" என சொல்பவர்களை விரட்டி விடுங்கள்

2. உற்சாகமாக இருங்கள் :


சோகத்தை விட்டொழியுங்கள். எப்போதும் உற்சாகம் கொப்பளிக்க வேலையையும் செய்யுங்கள்.

இந்த வேலையைச் செய்ய வேண்டுமே என செய்து முடிக்காமல், இந்த வேலையை நம்மை விட வேறு யாரும் இவ்வளவு சிறப்பாக செய்துவிட முடியாது என்பதை மற்றவர்களுக்கு உணர்த்த வேண்டும் என எண்ணி வேலை பாருங்கள்.

3. பவர்ஃபுல்லாக உணருங்கள் :

உடல் வலிமை, பண வலிமை எல்லாவற்றையும் தாண்டி மனவலிமை மிக முக்கியம்.

உங்களை போல இந்த உலகத்தில் பவர்ஃபுல்லானவர் யாருமில்லை. உடனே சிரிக்காதீர்கள்.

இதுதான் நிஜம். உங்களின் பெஸ்ட் எது என்பது உங்களுக்கே இன்னும் தெரியவில்லை.

உங்கள் வலிமையை உணர்ந்து செயலாற்றினால் நீங்கள் வேற லெவல் ஆள் பாஸ்.

4. நேசியுங்கள் :
உங்களை நீங்களே நேசியுங்கள்.

இந்த உலகத்தில் தன்னை நேசிக்காத மனிதனால் வெற்றியடையவே முடியாது.

உங்களை உங்களுக்கு பிடிக்க, உங்களை எப்படி மாற்ற வேண்டுமோ அப்படி மாற்றுங்கள்.

உங்கள் மீது நீங்களே அன்பு செலுத்துங்கள். நீங்கள் புறப்பட்டு எழுந்தால் உங்களை வெல்ல யாருமே இல்லை என்பதை உங்கள் மனதுக்கு புரியவையுங்கள்.

உங்களை போல அழகானவர் யாரும் இல்லை, உங்களை போல திறமையானவர் யாரும் இல்லை என்பதை மீண்டும் மீண்டும் உங்களுக்கே நினைவு படுத்திக் கொள்ளுங்கள்.

 5. பயணப்படுங்கள் :
வாழ்க்கை ஒரு பயணம். அடுத்த நிமிடம் உங்களுக்கு என்ன நடக்கும் என உங்களுக்கே தெரியாது.

இந்த நீண்ட நெடும் பயணத்தில் ஒரு சிலருக்கு வெற்றிகள் எளிதில் வரும், சிலருக்கு தாமதமாக வரும்.

அதற்காக சோர்ந்து விடக்கூடாது. வெற்றிக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை ஆராய்ந்து அதை தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டே இருங்கள்.

வாழ்க்கை நிரந்தரம் இல்லாதது.

ஆனால் பாசிட்டிவ் எண்ணத்துடன் தொடர்ந்து பயணம் செய்தால் உங்களுக்கு வெற்றி கிடைக்கிறதோ இல்லையோ,
உங்கள்  பயணம் மகிழ்ச்சியாகவும், உங்களுக்கு பிடித்தமானதாகவும் இருக்கும்.

6/12/18

நீதிக்கதை :--சிந்தனை கதைகள்



முதல் முட்டாள்!


அரேபிய தேசத்திலிருந்து, குதிரை வணிகன் ஒருவன் ஆக்ராவுக்கு வந்திருந்தான். அரபிக் குதிரைகள் என்றால், அக்பர் சக்கரவர்த்திக்கு மிகவும் பிரியம். இதை அறிந்து, சிறந்த குதிரைகள் கொண்டு வந்துள்ளதாக கூறினான் வணிகன். மிக உற்சாகத்துடன், குதிரை லாயத்திற்கு சென்று பார்த்தார், அக்பர்.

எல்லா குதிரைகளையும் பிடித்து விட்டது; அனைத்தையும் விலை கொடுத்து வாங்கினார். மேலும், பல குதிரைகள் கொண்டு வர சொல்லி, முன் பணமாக, 1000 தங்க நாணயங்களை கொடுத்தனுப்பினார்.

சில நாட்கள் கடந்தன. ஒரு நாள்- 
''பீர்பால் எவ்வளவோ அறிவாளிகளை ஆதரித்து வருகிறோம். அப்படியிருந்தும் கூட, நாட்டில் முட்டாள்கள் அதிகம் இருப்பதாக அறிகிறேன். 

''நாளை, நாட்டில் உள்ள முட்டாள்களின் பட்டியல் தயாரித்து தர வேண்டும்; அவர்களை, எப்பாடுபட்டாவது திருத்தி விடலாம்...'' என்றார் அக்பர்.
அடுத்த நாள், முட்டாள்கள் பெயர் பட்டியலை, கொடுத்தார் பீர்பால். அதில், முதல் பெயராக, அக்பர் சக்கரவர்த்தி என்று இருந்தது.

இதை கண்ட அக்பர் கோபத்துடன், ''என்ன பீர்பல், என்னையும் ஒரு முட்டாளாக எழுதியிருக்கிறாயே... என்ன ஆணவம் உனக்கு... நான் என்ன முட்டாளா...'' என்று கேட்டார்.
''அரசே... தயவு செய்து சினம் கொள்ளாமல் இருக்க வேண்டும். தங்களை உண்மையிலேயே மிகச் சிறந்த அறிவாளியாகத்தான் மதித்து வந்தேன். சில நாட்களுக்கு முன், ஒரு காரியம் செய்தீர்கள். அதை பார்த்த பின் தான், உங்கள் பெயரையும், பட்டியலில் சேர்த்தேன்...'' 

''முட்டாள் தனமான செயலை செய்தேனா... வியப்பாக இருக்கிறதே... அது என்னவென்று சொல்...'' 
''அரசே... எங்கிருந்தோ ஒரு குதிரை வியாபாரி வந்தான். அவன் பெயர் தெரியாது; ஊர் தெரியாது; அவனை நம்பி, முன் பணமாக, 1000 தங்க நாணயங்களை, கொடுத்தனுப்பினீரே... இம்மாதிரி செயலை, மிகச் சாதாரண முட்டாள் கூட செய்ய மாட்டான்...'' 
''ஆமாம்... ஆமாம்... நீ சொல்வது உண்மை தான். அவன் பெயரையும், ஊரையும் அறியாமல், 1000 தங்க நாணயங்கள் கொடுத்தனுப்பியது, முட்டாள் தனமான செயல் தான். ஆனால், அவன் குதிரைகளை கொண்டு வந்து விட்டால்...'' 

''கொண்டு வந்தால் என்ன... உங்கள் பெயரை அடித்து விட்டு, அவன் பெயரை எழுதிவிட்டால் போகிறது...'' என்று சிரித்தபடியே பதிலளித்தார், பீர்பால்.
''ஆம்... இனி எவராயிருப்பினும், தீர விசாரிக்காமல், முன் பணம் தரமாட்டேன்...'' என்ற அக்பர், முட்டாள்கள் பற்றிய விவரங்களை அடியோடு மறந்து விட்டார்.


குட்டீஸ்... துணிச்சலுடன் உண்மையை, சொல்ல பழகுங்கள்.

டாக்டர் அம்பேத்கர் அவரகளின் நினைவு தினம். (டிசம்பர் 6)பொதுஅறிவுகட்டுரை


 -----------------------------------------------
தந்தை பெரியார் அவர்களின் அறிக்கை
-----------------------------------------------
இந்தியாவின் சிறந்த அறிஞர்களின் முன்னணியிலுள்ள அறிஞரும் ஏராளமான விஷயங்களைக் கற்றுத் தேர்ந்த கலாநிதியுமான அம்பேத்கர் அவர்கள் முடிவெய்தி விட்டார் என்ற செய்தி கேட்டவுடன் திடுக்கிட்டுப் பதறிவிட்டேன்.

உண்மையில் சொல்ல வேண்டுமானால், டாக்டர் அம்பேத்கருடைய மறைவு என்னும் ஒரு குறைபாடானது எந்த விதத்திலும் சரிச் செய்ய முடியாத ஒரு மாபெரும் நஷ்டமேயாகும்.

அவர் சிறப்பாக தாழ்த்தப்பட்ட சமுதாயத்துக்குத் தலைவர் என்றுச் சொல்லப்பட்டாலும், பகுத்தறிவுக்கு எடுத்துக்காட்டாகவுள்ள ஒரு பேரறிஞராக விளங்கினார்.

எப்படிப்பட்டவரும் - எடுத்துச் சொல்லப் பயப்படும்படியான புரட்சிகரமான விஷயங்களை யெல்லாம் வெகு சாதாரணத் தன்மையில் எடுத்துச் சொல்லும்படியான வீரராகவும் விளங்கினார்.

உலகத்தாரால் மதிக்கப்படும் மாபெரும் தலைவரான காந்தியாரை வெகு சாதாரணமாக மதித்ததோடு, அவருடைய பல கருத்துக்களைச் சின்னா பின்னமாகும்படி மக்களிடையில் விளக்கும் மேதாவியாக இருந்தார்.

இந்து மதம் என்பதான ஆரிய ஆஸ்திக மதக் கோட்பாடுகளை வெகு அலட்சியமாகவும், ஆபாசமாகவும் அர்த்தமற்றதாகவும் மக்கள் கருதும்படியாகப் பேசியும் எழுதியும் வந்தார். உதாரணம் சொல்ல வேண்டுமென்றால், காந்தியாரையே ஒரு பத்தாம் பசலி பிற்போக்குவாதியென்றும், அவரால் பிரமாதமாக நடிக்கப்பட்டு வந்த " கீதையை முட்டாள்களின் உளறல்கள்" என்றும் சொன்னதோடு, காந்தியாரின் "கடவுளான ராமனை மகா கொடியவன் என்றும், ராமாயண காவியம் எரிக்கத் தகுந்தது என்றும் சொல்லி," பல்லாயிரக்கணக்கான மக்களிடையில் ராமாயணத்தை சுட்டு எரித்து சாம்பலாக்கிக் காட்டினார்.

இந்துமதம் உள்ள வரையிலும் தீண்டாமையும், ஜாதிப் பிரிவும், அவற்றால் ஏற்பட்ட கொடுமையும் ஒழியவே ஒழியாது என்றும் ஓங்கி அறைந்தார்.

மேற்கண்ட இந்தக் கருத்துக்கள் தவழும்படியாக ஏராளமான புத்தகங்களை எழுதி வெளியிட்டார்.

இப்படியாக அநேக அரிய காரியங்களைச் செய்த ஒரு மாபெரும் பகுத்தறிவுவாதியும், ஆராய்ச்சி நிபுணரும் சீர்திருத்த புரட்சி வீரருமான டாக்டர் அம்பேத்கர் முடிவு எய்தினது இந்தியாவுக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், பகுத்தறிவு வளர்ச்சிக்கும் எளிதில் பரிகரிக்க முடியாத பெரியதொரு குறைவே ஆகும்.

அம்பேத்கரின் மறைவு என்னும் செய்தி திடீரென்று மொட்டையாக வெளியானதிலிருந்து அவருடைய மரணத்துக்குப் பின்னால் சில இரகசியங்கள் இருக்கலாமென்று கருதுகிறேன்.

அதாவது காந்தியார் மரணத்துக்கு உண்டான காரணங்களும், அதற்கு ஆதாரமான பல சங்கதிகளும் டாக்டர் அம்பேத்கர் மரணத்துக்கும் இருக்கக் கூடும் என்பதே ஆகும்.

10th Standard - Best Collection---கல்விச் செய்திகள்




🔰 10th Half Yearly Exam 2018 - Time Table
https://goo.gl/VAq1FB


🔰 10th Half Yearly Exam 2018 - Syllabus
https://goo.gl/N7GZMW


🔰 10th Half Yearly Exam 2018 - Original Questions & Answer Keys Download
https://goo.gl/NwygfC


🔰 10th Centum Coaching Team Questions
https://goo.gl/vXtDGM


🔰 10th Creative Questions
https://goo.gl/4fgXAe


🔰 10th Study Materials
https://goo.gl/ywQuhL


🔰 10th One Marks Free Online Tests (Tamil Medium)
https://goo.gl/fYx1Ta


🔰 10th One Marks Free Online Tests (English Medium)
https://goo.gl/WPofQh


📳 10th Quiz - Android App
https://goo.gl/RtWJmC


📳 10th Study Materials - Android App
https://goo.gl/tQJ3mE


📳 10th Public Exams Question Papers - Android App
https://goo.gl/PpFW8t

11th Standard - Padasalai's Best Collection---கல்விச் செய்திகள்




✅ 11th Half Yearly Exam 2018 - Syllabus
https://goo.gl/KvJaHw


✅ 11th Half Yearly Exam 2018 - Time Table
https://goo.gl/r8BSwz


✅ 11th Half Yearly Exam 2018 - Original Question Papers & Answer Keys Download
https://goo.gl/mifecv


✅ 11th Centum Question Papers 2018 - from Padasalai.Net Team
https://goo.gl/z1B9jc


✅ 11th Padasalai.Net's - Creative Questions Collection
https://goo.gl/HT9DRJ


✅ 11th Study Materials (Tamil Medium)
https://goo.gl/foDJ3H


✅ 11th Study Materials (English Medium)
https://goo.gl/qbroy9


✅ 11th Books Download
https://goo.gl/ynsMn1


✅ 11th QR Codes & Digi Links
https://goo.gl/wqZi87


✅ 11th Official Model Questions
https://goo.gl/RYqq6d


✅ 11th Padasalai's Own Special Model Questions
https://goo.gl/ag9USW


✅ 11th Free Online Tests (Tamil Medium)
https://goo.gl/yQFVdL


✅ 11th Free Online Tests (English Medium)
https://goo.gl/y8iKbd

12th Standard - Half Yearly Exam 2018 Collection---கல்விச் செய்திகள்




📍  12th Half Yearly Exam 2018 - Time Table
https://goo.gl/V3sA7B


📍 12th Half Yearly Exam 2018 -  Syllabus
https://goo.gl/nMGCFR


📍 12th Half Yearly Exam 2018 - Original Question Papers & Answer Keys Download
https://goo.gl/i4DxQb


📍 12th Half Yearly Exam - Previous 7 Year Question Collection
https://goo.gl/qe7x7y


📍 12th Public Exam - Previous Year Questions Collection
https://goo.gl/fm9Esh


📍 12th Official Model Questions
https://goo.gl/yues4d


📍 12th Padasalai's Special - Centum Questions
https://goo.gl/4g5nLv


📍 12th Padasalai's Own Special Model Questions
https://goo.gl/dDTnc3


📍 12th Unit Wise - Creative Questions Collection
https://goo.gl/SQo9Q1


📍 12th Free Online Tests ( English Medium)
https://goo.gl/DQPWsx


📍 12th Free Online Tests (Tamil Medium)
https://goo.gl/1cSLb2


📍 12th Study Materials (Tamil Medium & English Medium)
https://goo.gl/gfdBF9


📳 Android Apps for 12th Study Materials
https://goo.gl/CMUY2r


📳 Android App for 12th Public Questions
https://goo.gl/qXNyPm




⏩ Share This Useful Information to Your Friends Groups

மாரடைப்பு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?---உடல்நலம் மருத்துவம்



வயது வித்தியாசமின்றி மனித குலத்தை அச்சுறுத்துவது மாரடைப்பு நோய். இந்த நோய் பற்றியும், அதன் விளைவுகள், சிகிச்சை முறை பற்றியும் அறிந்து கொள்ளலாம்.

இன்றைய சூழ்நிலையில் நமது உணவு பழக்க வழக்கம், இதர காரணிகளால் வயது வித்தியாசமின்றி மனித குலத்தை அச்சுறுத்துவது மாரடைப்பு நோய். மருத்துவ வளர்ச்சியால் இந்த நோய்க்கு உயர் சிகிச்சை முறைகள் வந்துவிட்டாலும், இந்த நோய் பற்றிய விழிப்புணர்வு நம்மில் பலருக்கு இல்லை என்பதே உண்மை.


இந்த நோய் பற்றியும், அதன் விளைவுகள் மற்றும் சிகிச்சை முறை பற்றியும் விளக்குகிறார் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இதய சிகிச்சை பிரிவு நிபுணர் சிதம்பரம்.

ரத்த நாளங்கள் இதயத்திற்கு வேண்டிய ரத்தம், ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துகளை கொடுக்கின்றன. இதயம், இடைவிடாது துடிப்பதற்கு வேண்டிய சக்தியை ரத்தநாளங்கள் மூலமே பெறுகிறது. இதில் அடைப்பு ஏற்பட்டால், இதய தசைகளுக்கு தேவையான ரத்தமும், ஆக்ஸிஜனும் கிடைக்காது. இதனால் ரத்த ஓட்டத்தில் பாதிப்பு ஏற்பட்டு, மாரடைப்பு உண்டாகிறது.

நெஞ்சுவலி என்பது நீண்டகாலமாக இருக்கக்கூடிய நிலையான வலி என்றும் புதிய அல்லது சிறிது சிறிதாக அதிகரித்து கொண்டே இருக்கும் நிலையற்ற வலி என்றும் கூறலாம். மூன்றாவது வலியாக ரத்தநாளத்தை சுற்றியுள்ள தசையில் ஏற்படும் திடீர் சுருக்கத்தால் தோன்றும் மாறுபட்ட நெஞ்சுவலி ஆகும். ரத்த நாளத்தில் தோன்றும் ரத்த உறைகட்டிக்கும் இதற்கும் தொடர்பு இல்லை.

முதல்வகை மருந்துகளின் மூலம் குணப்படுத்தலாம். 2-வது வகை வலி ஏற்பட்டால் ஆஸ்பத்திரியில் மருத்துவரின் நேரடி கண்காணிப்பில் சிகிச்சை பெற வேண்டும். மாறுபட்ட நெஞ்சுவலியின் அறிகுறிகள். உணர்ச்சி வயப்பட்ட அழுத்தம், குளிர் தாக்குதல், புகை பிடித்தல் ஆகிய காரணங்களால் கூட ஏற்படலாம். இந்த வலி சிறிது நேரமே இருப்பதோடு பொதுவாக உறக்கம் கலையும் விதத்தில் இரவு நேரத்தில் ஏற்படும். ரத்த ஒட்டம் தடைபடும் போது ஒழுங்கற்ற நாடித்துடிப்பும் ஏற்படலாம்.

மாரடைப்பு நிகழ்கின்ற நேரத்தில் ரத்த ஓட்டத்தில் எந்தவிதமான அறிகுறியை கூட காட்டாமலும் இருக்க வாய்ப்பு உண்டு. இதில் ரத்த ஓட்டத்தில் குறைபாடு இருப்பவர்களுக்கு எவ்வித அறிகுறியும் தெரிவதில்லை. சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு நரம்புகள் பாதிப்படைவதால் வலியை உணரும் தன்மை குறைந்திருக்கும். சில சமயம் இருதயம் பாதிப்படைகின்ற போது உடல் அசதியும், படுக்கும் போது மூச்சுத்திணறலும் ஏற்படலாம்.

ரத்த நாளத்தில் நிரந்தரமாகவோ, 30 நிமிடங்கள் முதல் 2 மணிநேரம் வரையோ அடைப்பு நீடித்தால் மாரடைப்பு ஏற்படுகிறது. மாரடைப்பு ஏற்படும் போது, பொதுவாக 15 நிமிடங்கள் வரை கடுமையான நெஞ்சுவலியை ஏற்படுத்தும், சில நேரத்தில் எவ்வித அறிகுறியும் இல்லாமல் அமைதியாகவும் வரவும் வாய்ப்புண்டு. உடைந்த அல்லது விரிசலான ரத்த நாள கொழுப்பு கட்டிகள் இருக்கும் இடத்தில் ரத்த உறைவு, அடைப்பு ஏற்படுவதால் மாரடைப்பு வருகிறது. இந்த உறைக்கட்டியை கரைக்கும் மருந்துகளை மாரடைப்பு நோய் சிகிச்சை முறையின்போது பயன்படுத்துகிறோம்.

இந்த நோயால் இருதய தசைகள் மீண்டும் செயல்படமுடியாத அளவுக்கு சேதமடைதல், நாடிதுடிப்புகளில் பாதிப்பு ஏற்படுவதாலும் மரணம் ஏற்படுகிறது. இருப்பினும் சிலர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையின் மூலம் மரணத்திலிருந்து உயிர் பிழைத்து வருகிறார்கள்.

கடுமையான மற்றும் நீண்ட நேரம் நீடிக்கக்கூடிய நெஞ்சுவலி, இடது தோளுக்கும், இடது பக்க முதுகுக்கும் சில சமயம் இடது தாடைக்கும் பரவும், வயிற்றின் மேல்பகுதியில் வலி, மூச்சுத்திணறல், மயக்கம், குமட்டல் மற்றும் வாந்தி, அதிகமாக வியர்த்தல், அடிக்கடி நெஞ்சுவலி ஏற்படும்.

இந்த சூழ்நிலையில் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும். முடிந்தால் மென்று சாப்பிடுகிற ஆஸ்ப்ரின் மாத்திரையையும், சப்பி சாப்பிடுகிற சார்பிட்ரேட் மாத்திரையையும் உடனே சாப்பிடவேண்டும்.

நம்முடன் இருக்கும் நபருக்கு மூச்சு நின்றுவிட்டால், உடனே இருதய நுரையீரல் முதலுதவி செய்யவேண்டும். மூச்சுநின்ற சில விநாடிகள் மட்டுமே ஒருவர் உயிர்த்திருக்க முடியும். எனவே, இந்த குறுகிய நேரத்திற்குள் இதை செய்யவேண்டும். எனவே, அனைவரும் இதில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.

மாரடைப்பு ஏற்பட்ட ஒருமணி நேரத்திற்குள் மருத்துவ உதவி பெறுவது மிக, மிக அவசியம். அவ்வாறு செய்தால் உயிரைக்காப்பாற்றலாம்.

இவ்வாறு டாக்டர் சிதம்பரம் கூறினார்.

டாக்டர் சிதம்பரம்


மாத்திரையின்றி ஜலதோஷத்தை எப்படி குணப்படுத்தலாம்..---உடல்நலம் மருத்துவம்




குளிர் காலம் ஆரம்பிச்சாச்சு. அடுத்து வீட்டில் ஒவ்வொருவராய் மாறி மாறி சளி, காய்ச்சல் என வந்து குளிரோடு உடல் நிலையும் பாதித்து இம்சை பண்ணும்.

 குளிர்கால தட்பவெப்பம் கிருமிகள் பெருக்கத்திற்கு ஏதுவான காலமென்பதால் விரைவில் நமது உடலில் புகுந்து நோய்களை உண்டாக்குகின்றன.

சளி பிடித்தால், நமது உடலிலுள்ள வெள்ளையணுக்களே அக்கிருமிகளுடன் சண்டையிடும்.

 அவற்றை பூஸ்ட் அப் செய்வது போல் நமது மூலிகைகளைய அவற்றிற்கு தரும் போது வெள்ளையணுக்கள் பலம் பெற்று கிருமிகளை வெளியேற்றும்.

 இது நடப்பதற்கு குறைந்தது 3 -5 நாட்களாகும்.

இப்படி இயற்கையாக நடக்கும் நிகழ்வுகளை நாம் மாத்திரைகள் கொண்டு தடுக்கும்போது, வெள்ளையணுக்கள் எதிர்த்து போரிடாமல் சோம்பேறியாகும்.

 நமது உடல் எல்லாவ்ற்றிற்கும் மாத்திரைகளையே எதிர்பார்க்கும்.

 ஆகவே முடிந்தாரை மாத்திரைகளை தவிர்த்து இயற்கை வைத்தியங்களை முயற்சியுங்கள்.

🍏குறிப்பு 1 :

கொய்யாப்பழத்தை மிளகுத் தூள் தொட்டு சாப்பிட, நுரையீரலில் உள்ள சளி வெளியேறி, இருமல் பிரச்சனையில் இருந்து தீர்வு கிடைக்கும்.

🍋குறிப்பு 2

ஆரஞ்சு ஜூஸில் தேன் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கலந்து குடித்தால், சளி, இருமல், தொண்டை வலி போன்றவற்றில் இருந்து விடுபடலாம்.

🍍குறிப்பு 3 ;

ஒரு டம்ளர் அன்னாசிச்சாறுடன் மிளகுத்தூள் சேர்த்து தினமும் அருந்தி வந்தால் உடல் சோர்வு மறையும் சளித்தொல்லை குணமாகும்.

🍎குறிப்பு-4 :

வெங்காயத்தை தீயில் சுட்டு சாப்பிடுவதன் மூலம், இருமல் மற்றும் சளியில் இருந்து விடுதலை கிடைக்கும்.

🥛குறிப்பு- 5 :

மாட்டுப் பாலை நன்கு கொதிக்க வைத்து, அதில் தேன் கலந்து குடிப்பதன் மூலமும் சளி, இருமல் தொல்லையில் இருந்து விடுபடலாம்.

🥗குறிப்பு- 6 :

கற்பூரவள்ளி இலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்நீரைக் குடிப்பதன் மூலமும் விரைவில் சளித் தொல்லை நீங்கும்.

🥙குறிப்பு- 7 :

வெற்றிலையை சாறு எடுத்து, தேன் கலந்து குடித்தாலும், இருமலில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.