யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

5/11/15

தனியார் பள்ளிகளில், 2016 - 17ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை 'ஓவர்?'

வரும், 2016 - 17ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையை, பொது உத்தரவு துறை வெளியிடுவதற்கு முன்பே, பல தனியார் கல்வி நிறுவனங்கள் முடித்து விட்டதாக அறிவித்துள்ளன. இது, பெரும்பாலான பெற்றோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வழக்கமாக, கல்வி நிறுவனங்களில் கல்வி உரிமை சட்டத்தின் - ஆர்.டி.ஐ., கீழ் ஒதுக்கப்படும் இடங்கள் நிர்ணயிக்கப்பட்டவுடன், அடுத்த கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை குறித்த உத்தரவை, பொது உத்தரவு துறை - டி.பி.ஐ., டிசம்பர் அல்லது ஜனவரியில் வெளியிடும். அதன் பின்னரே மாணவர் சேர்க்கை துவக்கப்படும்.
ஆனால், பல கல்வி நிலையங்களில், டி.பி.ஐ., உத்தரவு வருவதற்கு முன்னரே, வரும் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை முடிவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டிருப்பது, பெற்றோரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாணவர் சேர்க்கைக்காக, இணையதளம் மூலம் விண்ணப்பிக்க கோரி, பல கல்வி நிறுவனங்கள் அறிவிப்பு வெளியிட்டிருந்தன. ஒரே ஒரு நாள் மட்டுமே அந்த அறிவிப்பு காணப்பட்டது. இதை பார்த்தவர்கள், தங்கள் குழந்தைகளுக்கான விண்ணப்பங்களை கொடுத்து, தங்கள் குழந்தைகளை சேர்த்து விட்டனர். இதனால், பல பெற்றோர் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.
பல கல்வி நிலையங்களில் பொதுவான கால அட்டவணையோ, தொடர்பு முறைகளோ இல்லாததால், மாணவர் சேர்க்கை குறித்து முறையாக அறிவிப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
இதுமட்டுமின்றி அடுத்த கல்வியாண்டிற்கான கட்டணமும், 15 முதல், 30 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.
டிசம்பர், ஜனவரியில் மாணவர் சேர்க்கை நடத்த அனுமதி கேட்ட கல்வி நிறுவனங்களிடம், ஆர்.டி.ஐ., இடஒதுக்கீடு மார்ச்சில் வெளியான பின்னரே, மாணவர் சேர்க்கையை துவக்க வேண்டும் என்று பொது உத்தரவு துறை அறிவுறுத்தியிருந்தது.
ஆனால், அந்த கால கட்டத்தில், ஆண்டுத் தேர்வுகள் நடக்கும் என்பதால், பல கல்வி நிலையங்கள், அடுத்த கல்வி ஆண்டுக்
கான மாணவர் சேர்க்கையை முன் கூட்டியே முடித்துவிட்டன.
பள்ளிகளில், 'சிசிடிவி' கேமரா அமைப்பது உட்பட பல முக்கிய அடிப்படை தேவைகளை நிறைவேற்றவுள்ளோம். அந்த நேரத்தில் பெற்றோரிடம் நிதி கேட்பது முறையல்ல என்பதால், கல்வி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
சசிகுமார், பொது செயலர், கர்நாடக தனியார் பள்ளிகள் சங்கம்
அடுத்த கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை, தனியார் கல்வி நிலையங்கள், முன்கூட்டியே முடித்து விட்டது குறித்து, ஆதாரங்களுடன் புகார் செய்தால், உரிய நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளோம்.
அஜய்சேத், முதன்மை செயலர், துவக்க மற்றும் இடைக்கல்வி துறை

வேலைவாய்ப்பு பதிவு மூப்பு: கட்-ஆஃப் தேதி விவரங்கள் இணையதளத்தில் வெளியீடு

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களின் பதிவு மூப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்படும் பணியிடங்களுக்கான கட்-ஆஃப் தேதி விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களின் மூலம் அவ்வப்போது நிரப்பப்படும் பணியிடங்களுக்கான பதிவு மூப்பு கட்-ஆஃப் தேதி விவரங்கள்www.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
எட்டாம் வகுப்பு முதல் பட்ட மேற்படிப்பு வரை படித்துவிட்டு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்யலாம். அவர்கள் வேலைவாய்ப்புக்குப் பதிவு செய்த தேதியின் அடிப்படையில் பதிவு மூப்பு வழங்கப்படும். இதில் 2015 ஆகஸ்ட் மாத நிலவரப்படி, நடத்துநர், தட்டச்சர், வாட்ச்மேன், உதவியாளர் உள்ளிட்டப் பணியிடங்கள் வாரியாக பதிவு மூப்பு கட்-ஆஃப் தேதி விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள் 4.94 லட்சம் பேரும், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 60 லட்சம் பேரும் வேலைவாய்ப்புக்காக பதிவு செய்துள்ளனர்.

கணினி அறிவியல் ஆசிரியர்கள் 8.11.2015 அன்று தருமபுரி கலெக்டர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம்

தமிழக அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்திற்க்கு முக்கியத்துவம்
தரவேண்டும்...
அரசு பள்ளியில் பயிலும்
மாணவர்களின் நலனுக்காக
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் கிராமப்புற ஏழை,எளிய,
மாணவர்கள் கல்வித் தரத்தை உயர்ந்தும் நோக்கிலும் அரசு பள்ளி மற்றும் மாணவர்களின் எதிர் காலத்தை கருத்தில் கொண்டு "ஆரம்ப கல்வி முதல் ஒன்றாம் வகுப்பிலிருந்து பத்தாம்வகுப்பு வரை கணினி கல்வியாக கட்டாயக்கல்வியாக கொண்டுவர வேண்டும்.
மெட்ரிக் ,CBSE பாடத்திட்டத்தில் ஆரம்ப கல்வியிலே கணினி அறிவியல் பாடம். தமிழகத்தை தவிர மற்ற மாநிலங்கள் அரசு பள்ளிகளில் கணினி கல்வி கட்டாய பாடமாக உள்ளது .
கேரளத்தில் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற கணிதம்,அறிவியல் போன்று கணினி அறிவியல் பாடத்திலும் தேர்ச்சி பெற வேண்டும்.
தமிழகம் தகவல்
தொழில்நுட்பத்தில் இன்று பல புரட்சி செய்து வந்த போதிலும் கணினி கல்விக்கு முக்கியத்துவம் தராதது வேதனைக்குறியது.
சமச்சீர் கல்வியில் கணினி அறிவியல் பாடம் காரணமின்றி கைவிடப்பட்டது ....
தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசின் கல்வித்திட்டம் இருக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில்
2011 ஆம் கல்வியாண்டில்
சமச்சீர் கல்வியில் 6 ,7,8,10 ஆகிய வகுப்புகளுக்கு கணினி அறிவியல் பாடம் அறிமுகப் படுத்தப்பட்டு புத்தகங்கள் அச்சிடப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. மாணவர்கள்,பெற்றோர்கள் மத்தியில் பெறும் வரவேற்ப்பை பெற்றது ஆனால் காரணம் ஏதுமின்றி அந்த புத்தகங்கள் மாணவர்களுக்கு விநியோகிக்கப்படாமல் முடக்கி வைக்கப்பட்டது. சில மாதத்தில் கணினி அறிவியல் பாடம் கைவிடப்பட்டது.
தற்போது அனைத்து தனியார் பள்ளிகளிலும் கணினி அறிவியல் பாடம் கட்டாயப்பாடமாக உள்ளது.
கணினி அறிவியல் பாடத்தை நடைமுறைப்படுத்தக் கோரி.
ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதால்
ஆசிரியர்கள்,ஆசிரியர் சங்கங்கள்,கணினி ஆசிரியர்கள் அனைவரும் ஆதரவு தாரீர்
இடம்:
தருமபுரி கலெக்டர் அலுவலகம் அருகில்
நாள்
8.11.2015
காலை 10 மணி.
வெ.குமரேசன்
மாநில செயலாளர்.
9626545446
தமிழ்நாடு கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்

15 ஆயிரம் ஆசிரியர்களுக்கான ஊதியம் வழங்க அரசாணை வெளியீடு

தமிழகம் முழுவதும் சுமார் 15 ஆயிரம் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவதற்கான தொடர் நீட்டிப்பு ஆணை புதன்கிழமை வெளியிடப்பட்டது. அரசு ஆணை எண் 110, 120, 175, 193, 212 ஆகியவற்றின் கீழ் 20 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள் ஊதியம் பெறுகின்றனர். ஆனால், இந்த ஆசிரியர்களுக்கான ஊதிய தொடர் நீட்டிப்பு ஆணை இதுவரை வழங்கப்படவில்லை என தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் புகார் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், 15 ஆயிரம் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவதற்கான தொடர் நீட்டிப்பு ஆணை புதன்கிழமை வெளியிடப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

நவ. 8-இல் தேசிய திறனாய்வுத் தேர்வு 1.50 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்

தமிழகம் முழுவதும் 387 தேர்வு மையங்களில் நடைபெறும் தேசிய திறனாய்வுத் தேர்வை (என்.டி.எஸ்.இ.) 1.50 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். இந்தத் தேர்வு வருகிற ஞாயிற்றுக்கிழமை(நவ.8) நடைபெறுகிறது. பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு உயர் கல்விக்கான உதவித் தொகை வழங்குவதற்காக இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது.
முதல் கட்டமாக மாநில அளவிலும், அடுத்த கட்டமாக அகில இந்திய அளவிலும் இந்தத் தேர்வு நடத்தப்படும்.
தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு உயர் கல்விக்கான மாதாந்திர கல்வி உதவித் தொகை வழங்கப்படும் என தகவல்கள் தெரிவித்தன.
இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
தேசிய திறனாய்வுத் தேர்வில் 6,766 பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பங்கேற்கின்றனர்.
இந்தத் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை வரும் நவம்பர் 7-ஆம் தேதி வரை www.tndge.in என்ற இணையதளத்திலிருந்து தலைமை ஆசிரியர், முதல்வர் மூலம் பதிவிறக்கம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதுவரை தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு பெறாத மாணவ, மாணவியர் தாங்கள் பயிலும் பள்ளியின் தலைமையாசிரியர், முதல்வரை உடனே அணுகி பெற்றுக் கொள்ள வேண்டும்.
இந்தத் தேர்வில் இரண்டு தாள்கள் உள்ளன. "மேட்' எனப்படும் முதல் தாள் நவம்பர் 8-ஆம் தேதி காலை 9.30 மணி முதல் 11 மணி வரையும், "சாட்' எனப்படும் இரண்டாம் தாள் அன்றைய தினம் காலை 11.30 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையும் நடைபெறும்.
"மேட்' என்பது "மென்டல் எபிலிட்டி டெஸ்ட்', "சாட்' என்பது "ஸ்காலஸ்டிக் ஆப்டிடியூட் டெஸ்ட்' ஆகும்.
தேர்வு தொடங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்னதாகவே தேர்வு மையங்களுக்கு மாணவர்கள் வர வேண்டும்.
மாணவர்களின் நலன் கருதி, கடந்த ஆண்டு தேசிய திறனாய்வுக்கான "மேட்', "சாட்' வினாத்தாள்கள் www.tndge.inஎன்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் குறைந்த அரசு பள்ளிகளில் பகுதிநேர சிறப்பாசிரியர்கள் இடமாற்றம்: தேனியில் 58 பள்ளி மாணவர்கள் பாதிப்பு

மாணவர் எண்ணிக்கை குறைந்த பள்ளிகளில் பணியாற்றிய பகுதி நேர சிறப்பாசிரியர்கள் பணிநிரவல் மூலம் மாறுதல் செய்யப்படுகின்றனர்.கடந்த 2012 ம் ஆண்டில் அனைவருக்கும் கல்வி திட்டம் சார்பில், அரசு பள்ளிகளில் 6,7,8 ம் வகுப்புகளுக்கு உடற்கல்வி, ஓவியம், தொழிற்கல்வி பாடங்களுக்கு மாநிலம் முழுவதும் 16, 549 பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். 


இவர்களுக்கு வாரத்தில் 3 அரைநாட்கள் வீதம், மாதத்தில் 12 அரை நாட்கள் பணியும், மாத சம்பளம் ரூ.5ஆயிரமும் வழங்கப்பட்டது.தற்போது இவர்களுக்கு மாத சம்பளம் ரூ.7ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. மாணவர்கள் எண்ணிக்கை குறைந்த பள்ளிகளில் உள்ள பகுதிநேர சிறப்பு ஆசிரியர்களுக்கு பணிநிரவல் மூலம் இடமாறுதல் வழங்கப்படுகிறது. ஒரு பள்ளியில் 71 மாணவர்களுக்கு கீழ் உள்ள சிறப்பு ஆசிரியர் பணியிடம் ரத்து செய்யப்பட்டு, அவர் 101 மாணவர்கள் எண்ணிக்கை உள்ள பள்ளிக்கு மாறுதல் செய்யப்பட்டுவருகிறார்.இதனால் பணியிடம் ரத்து செய்யப்பட்ட பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் ஓவியம், உடற்கல்வி, தொழிற்கல்வி பாடங்களில் மாணவர் கற்றல் திறன் பாதிக்கப்பட்டுள்ளது.தேனி மாவட்டத்தில் மாணவர் எண்ணிக்கை குறைந்த 58 பள்ளிகளில் பணியாற்றிய சிறப்பு ஆசிரியர்கள், நிரவல் மூலம் வேறு பள்ளிக்கு மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.

ஜாதி, வருமான சான்றிதழ் பள்ளிகளில் மையங்கள்

பள்ளி மாணவர் களுக்கு, ஜாதி, வருமான மற்றும் இருப்பிட சான்றிதழ் வழங்க, தாலுகாவுக்கு, நான்கு பள்ளிகளில் ஒருங்கிணைந்த மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.கடந்த சில ஆண்டுகளாக, பள்ளிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு,சான்றிதழ் வழங்கப்பட்டன.


முகாமைத் தவறவிடும் மாணவர்கள், கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், தாசில்தார் ஆகியோரிடம் கையொப்பம் பெற்று, சான்றிதழ் வாங்கி வந்தனர்.தற்போது, தாலுகாவுக்கு, நான்கு பள்ளிகளில், ஒருங்கிணைந்த சான்றிதழ் வழங்கும் மையங்கள் அமைக்கப்படுகின்றன. இனி, தாலுகா அலுவலகங்களுக்கோ, இ-சேவை மையங்களுக்கோ மாணவர்கள் அலைய வேண்டியதில்லை; சம்பந்தப்பட்ட மையங்களுக்கு சென்று விண்ணப்பித்து, சான்றிதழ் பெறலாம் என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியம் வழங்க தமிழக அரசு ஆணை

'அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் கடந்த 5 மாதங்களாக ஊதியமின்றி பணிபுரியும் கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியம் வழங்கப்பட உள்ளது.தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் பேராசிரியர்கள் பற்றாக்குறையைப் போக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் 10 மாதங்களுக்கு மட்டும் கௌரவ விரிவுரையாளர்கள் பணியில் அமர்த்தப்படுவர். 


பின்னர் அடுத்த ஆண்டில் புதிதாக நியமனம் செய்துகொள்ளப்படுவர்.கல்லூரிகளில் ஷிஃப்ட்-1-இல் 1,683 பேரும், ஷிஃப்ட்-2-இல் 1,500 பேரும் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு ரூ.10 ஆயிரம் தொகுப்பூதியம் அளிக்கப்படுகிறது. இந்த நிலையில், ஷிஃப்ட்-1-இல் பணியாற்றும் 1683 பேருக்கு இதுவரை ஊதியம் வழங்கப்படாமல் இருந்தது. தொடர் கோரிக்கைகளுக்குப் பின்னர், இவர்களுக்கு ஊதியம் அளிக்க தமிழக அரசு ஆணை (அரசாணை எண் 458) பிறப்பித்துள்ளது. இதன்படி, இவர்களின் 10 மாத பணிக்கான ஊதியத் தொகையாக ரூ.16.83 கோடிக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் மன்றப் பொதுச் செயலர் சிவராமன் கூறியது: கௌரவ விரிவுரையாளர்களுக்கு தீபாவளி பரிசாக கிடைத்துள்ளது. இந்தத் தொகை பண்டிகைக்கு முன்னதாக கிடைக்கும் வகையில், கல்லூரிகளுக்கு தொகையைப் பிரித்தளிக்கும் பணிகளை கல்லூரி கல்வி இயக்குநர் அலுவலகம் விரைவுபடுத்த வேண்டும் என்றார்.

10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்கள் உளவியல் ரீதியாக தயாராக வேண்டும்.

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களை, உளவியல் ரீதியாக தயார்படுத்த வேண்டும்' என, அனைத்து பள்ளிகளையும், தேர்வுத்துறை இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார்.தமிழகத்தில், சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படிக்கும், அரசு, மெட்ரிக் மற்றும் ஆங்கிலோ இந்தியன் பள்ளி மாணவர்களுக்கு, அடுத்த ஆண்டு மார்ச்சில் பொதுத்தேர்வு நடக்கும்.


சுற்றறிக்கை

இதற்கான முன் தயாரிப்பு பணிகளில், அரசுத் தேர்வுத்துறை இயக்குனரகம் ஈடுபட்டுள்ளது. பொதுத்தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்த, தற்போதே தீவிர பயிற்சி வழங்கவும், சந்தேகங்களை தீர்க்கவும், அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.அதன் விவரம்:புத்தகத்தில் உள்ள கருத்துக்களை முழுமையாக படித்து, புரிந்து தேர்வுக்கு தயாராவதற்கு பதில், கடந்த பருவங்களில் வெளியான வினாக்களின் தொகுப்பைமட்டும் படித்தால், முழு மதிப்பெண் பெறலாம் என்ற தவறான எண்ணம் மாணவர்களிடம் தென்படுகிறது. அதனால், வினா கட்டமைப்புக்கு உட்பட்டு, புத்தகத்தில் உள்ள கருத்துக்களை உள்ளடக்கி, வினாக்கள் கேட்கப்படும் போது, மாணவர்களிடம் அச்சம் ஏற்படுகிறது.தன்னம்பிக்கைஇந்த அச்சத்தை களைய, அனைத்து வினாக்களையும், தன்னம்பிக்கையுடனும், முழு புரிதலுடனும் பதிலளிக்கஏதுவாக, புத்தகத்தில் உள்ள கருத்துக்களை முழுமையாக கற்றறிய வேண்டும் என, மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பட்டியல் தயாரிக்க உத்தரவு

பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியல் தயாரிப்பு பணி துவங்கியுள்ளது. மாணவர் பெயர் உள்ளிட்ட விவரங்களை உறுதிமொழி படிவத்துடன் பட்டியலாக தயாரிக்க, தலைமை ஆசிரியர்களுக்கு, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவி உத்தரவிட்டுள்ளார்.இப்பணிகளை, நவ., 16க்குள் முடித்து, தேர்வுத்துறை அறிவிக்கும் நாளில், தேர்வுத்துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என,அறிவுறுத்தப் பட்டுள்ளது.

பள்ளிகளில் டெங்குத் தடுப்பு நடவடிக்கை: ஆசிரியர்களுக்கு கல்வி அதிகாரி அறிவுறுத்தல்

பள்ளிகளில் டெங்கு பாதிப்பு தடுப்பு நடவடிக்கையில் ஆசிரியர்கள் தீவிரகவனம் செலுத்தவேண்டும் என மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி கூறினார்.மதுரை மாநகராட்சி மற்றும் ஊரகப் பகுதிகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 


இந்தநிலையில் மாவட்டத்தில் பள்ளிகளிலும் டெங்கு தடுப்பு நடவடிக்கையை முதன்மைக் கல்வி அலுவலர் தீவிரப்படுத்தியுள்ளார்.இதுகுறித்து இன்று அவர் கூறியதாவது: பள்ளிகளில் ஆசிரியர்கள் மாணவர்களிடம் தினமும் டெங்கு பாதிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும். பள்ளி வளாகங்களில் மழை நீர் தேங்காதவாறு பார்த்துக்கொள்ளவேண்டும். குடிநீர் தொட்டிகளை சுத்தமாக வைத்திருப்பதுடன், கொசு தங்காமலிருக்க தேவையான நடவடிக்கையை எடுத்திருக்கவேண்டும்.மாணவர்கள் உடல் நலம் குறித்து அறிந்து காய்ச்சல் பாதிப்பிருப்பின், பெற்றோர் மூலம் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யவேண்டும். நீண்டநாள் விடுமுறையில் இருக்கும் மாணவர், மாணவி குறித்து விசாரித்து, அவர்களுக்கு டெங்கு பாதிப்பிருக்கிறதா? என அறிந்து சிகிச்சைக்கான ஆலோசனை வழங்கவேண்டும்.

வீடுகளில் தேவையற்ற பொருள்கள் இருந்து தண்ணீர் தேங்கியிருக்கிறதா? என மாணவ, மாணவியர் மூலம் அறிந்து, டெங்கு தடுப்பு நடவடிக்கையில் மாணவ,மாணவியரையும் ஈடுபடுத்தவேண்டும் என ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என்றார்.

பெரியார் பல்கலை. தொலைநிலைக் கல்வி மாணவர் சேர்க்கை: யு.ஜி.சி-யின் உத்தரவுக்கு இடைக்கால தடை

சேலம் பெரியார் பல்கலைக்கழகத் தொலைநிலைக் கல்வியில் 2015-16-ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கை கூடாது என்று பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி) பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிதது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.இது தொடர்பாக பல்கலைக்கழகப் பதிவாளர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்:


2001-02-ஆம் ஆண்டில் தொலைதூரக் கல்வி தொடங்கப்பட்டது. இதில், பல்வேறு துறைகளில் 150 பாடப் பிரிவுகள் நடத்தப்படுகின்றன. இந்த நிலையில், 2015-16-ஆம் கல்வியாண்டில் தொலைநிலைக் கல்வியில் மாணவர்களைச் சேர்க்கக் கூடாது என்று ஆகஸ்ட் 27-இல் யு.ஜி.சி. உத்தரவிட்டது. இதற்கு தடை விதிக்காவிட்டால், ஆயிரக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்படுவர்.எனவே, உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிப்பதோடு, ரத்து செய்ய வேண்டும் என்றுகோரப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், யு.ஜி.சி. பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.

"பிளஸ் 2 மாணவர்களுக்கு இரு மாதங்களுக்குள் மடிக்கணினிகள்'

நிகழாண்டில் (2015-16) பிளஸ் 2 பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா மடிக் கணினிகள் இரு மாதங்களில் வழங்கப்பட்டுவிடும் என கல்வித் துறை அதிகாரிகள் கூறினர். அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 2 படிக்கும் 5 லட்சம் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் விலையில்லா மடிக் கணினி வழங்கப்படுகிறது. 


இதில்,2014-15ஆம் கல்வியாண்டு பயிலும் மாணவர்களுக்கான மடிக் கணினி விநியோகம் அண்மையில் நிறைவடைந்தது.இதையடுத்து, நிகழாண்டில் படிக்கும் மாணவர்களுக்கான மடிக்கணினி விநியோகம் தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஜெய்கோபால் கரோடியா அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில், 511 மாணவிகளுக்கு மடிக் கணினிகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி. வீரமணி,சமூக நலத்துறை அமைச்சர் பா.வளர்மதி ஆகியோர் வழங்கினர். விழாவில் பள்ளிக் கல்வித் துறைச் செயலர் சபிதா, சைதாப்பேட்டை எம்எல்ஏ ஜி.செந்தமிழன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். "மாணவர்களுக்கு இரண்டு மாதங்களில்மடிக் கணினிகள் முழுமையாக வழங்கப்படும். இதற்காக, 90 சதவீத மடிக் கணினிகள் கொள்முதல் செய்யப்பட்டு மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. விரைவில் விநியோகம் செய்யப்படும்' என அதிகாரிகள் தெரிவித்தனர்

ஆசிரியர்களை கேவலமாக சித்தரிக்கும் பள்ளிக்கூடம் போகாமலே படத்துக்கு தடைவிதிக்க வேண்டும்

ஆசிரியர் பணியை கேவலப்படுத்தும் வகையில் எடுக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கூடம்போகாமலே படத்தை எதிர்த்து சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆவடியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் கல்யாண சுந்தரம்சிட்டி சிவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:


கடந்த 31ம் தேதி சென்னையில் உள்ள ஒரு தியேட்டரில் பள்ளிக்கூடம் போகாமலே என்ற படத்தைப் பார்த்தேன். அதில் அதிர்ச்சியளிக்கும் வகையில் ஆசிரியரால் மாணவர்கள் பாதிக்கப்படுவதாக பல்வேறு காட்சிகள் வருகின்றன. உன்னதமான ஆசிரியர் பணியை மிகவும் கொச்சைப்படுத்தும் வகையில், இந்த படத்தில் காட்சிகள் வருகின்றன. நன்றாக படிக்கும் மாணவர்களை விட்டு, படிக்காத மாணவர்களுக்கு தண்டனை தருவது போலவும் காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.மாணவர்களுக்கு எதிர்காலத்தை போதிக்கும் ஆசிரியர் பணியை மோசமாக சித்தரிக்கும் காட்சிகள் ஆசிரியர்களுக்கு உள்ள மேன்மைத் தன்மையை குலைக்கும் முயற்சியாகும். ஆசிரியர்களுக்கு மக்களிடையேயும், மாணவர்களிடையேயும் உள்ள மரியாதையை முழுவதுமாக சீர்குலைக்கும் வகையில் உள்நோக்கத்துடன் எடுக்கப்பட்ட இந்த படத்திற்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு இன்னும் ஓரிரு தினங்களில் முதலாவது சிட்டி சிவில் நீதிமன்றத்தில்விசாரணைக்கு வரவுள்ளது. சென்னை, நவ.4: ஆசிரியர் பணியை கேவலப்படுத்தும் வகையில் எடுக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கூடம் போகாமலே படத்தை எதிர்த்து சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆவடியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் கல்யாண சுந்தரம் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:கடந்த 31ம் தேதி சென்னையில் உள்ள ஒரு தியேட்டரில் பள்ளிக்கூடம் போகாமலே என்ற படத்தைப் பார்த்தேன். அதில் அதிர்ச்சியளிக்கும் வகையில் ஆசிரியரால் மாணவர்கள் பாதிக்கப்படுவதாக பல்வேறு காட்சிகள் வருகின்றன. உன்னதமான ஆசிரியர் பணியை மிகவும் கொச்சைப்படுத்தும் வகையில், இந்த படத்தில் காட்சிகள் வருகின்றன. நன்றாக படிக்கும் மாணவர்களை விட்டு, படிக்காத மாணவர்களுக்கு தண்டனை தருவது போலவும் காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.
மாணவர்களுக்கு எதிர்காலத்தை போதிக்கும் ஆசிரியர் பணியை மோசமாக சித்தரிக்கும் காட்சிகள் ஆசிரியர்களுக்கு உள்ள மேன்மைத் தன்மையை குலைக்கும் முயற்சியாகும். ஆசிரியர்களுக்கு மக்களிடையேயும், மாணவர்களிடையேயும் உள்ள மரியாதையை முழுவதுமாக சீர்குலைக்கும் வகையில் உள்நோக்கத்துடன் எடுக்கப்பட்ட இந்த படத்திற்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு இன்னும் ஓரிரு தினங்களில் முதலாவது சிட்டி சிவில் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.

தீபாவளிக்கு முதல் நாள் நவ., 9ம் தேதி, பள்ளிகளுக்கு விடுமுறை உண்டா?

தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாளான, நவ., 9ம் தேதி, பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும்' என, மாணவர், பெற்றோர் மற்றும்ஆசிரியர் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.வரும், 10ம் தேதியான செவ்வாய் கிழமை அன்று, தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. 


தீபாவளிக்கு சொந்த ஊருக்கு செல்வோர் வசதிக்காக, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து, தமிழகத்தின் பல பகுதி களுக்கும், சிறப்பு ரயில்கள் மற்றும் பஸ்கள் இயக்கப்படுகின்றன. தீபாவளிக்கு முன், சனி, ஞாயிறு என, இரு நாட்கள் பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை; திங்கள் கிழமை பணி நாள்; செவ்வாய் கிழமை, தீபாவளி விடுமுறை என, உள்ளது. அதனால், வெளியூர் செல்வோர், திங்கள் கிழமை வேலை நாளுக்காக, சொந்த ஊர் செல்வதை தவிர்த்து, தாங்கள் வசிக்கும் ஊர்களில் இருக்க வேண்டிய நிலை உள்ளது.

எனவே, திங்கள் கிழமை ஒருநாள் மட்டும், 'ரிலிஜியஸ் லீவ்' எனப்படும், மதச்சார்பு விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.இதுகுறித்து, பெற்றோர், ஆசிரியர் தரப்பில் கூறியதாவது:சனி, ஞாயிறு விடுமுறை நாளாக இருந் தும், ஊருக்குச் செல்ல முடியாத தர்ம சங்கட மானசூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, பள்ளிக் கல்வித் துறை மற்றும் பொதுத் துறை விதிகளின் படி, மதச்சார்பு விடுமுறையை அரசு அறிவித்தால், மாணவர்களுக்கு, நான்கு நாட்கள் விடுமுறை கிடைக்கும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

சிறை செல்லும் போராட்டம்'ஜாக்டோ' கூட்டுக்குழு முடிவு.

பதினைந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, டிசம்பரில், தடையை மீறிமறியல் மற்றும் சிறை செல்லும் போராட்டம் நடத்த, ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான, 'ஜாக்டோ' முடிவு செய்துள்ளது.ஆசிரியர்களின், 24 சங்கங்கள் இணைந்த, ஜாக்டோ கூட்டு நடவடிக்கை குழுவின், உயர்நிலைக்குழுக் கூட்டம் சென்னையில் நடந்தது. 


இந்தக் கூட்டத்தில், அரசின் கவனத்தை ஈர்க்க, தொடர் போராட்டம், மாநாடு மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என, முடிவு செய்யப்பட்டது.இதன்படி, வரும், 16ல் அமைச்சர், செயலர் மற்றும்உயரதிகாரிகளை சந்தித்து மனு அளிக்கப்படும். டிச., 5, 6ல் மாவட்ட அளவில் மாநாடு; டிச., 12, 13ல் வட்டார அளவில் ஆயத்த மாநாடு; டிச., 28, 29, 30ம் தேதிகளில், தமிழகம் முழுதும் கலெக்டர் அலுவலகங்கள் முன், தடையை மீறி தொடர் மறியல் போராட்டம் நடத்தப்படும்.இதுகுறித்து, ஜாக்டோ உயர்மட்டக்குழு உறுப்பினரும், தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர் சங்க பொதுச் செயலருமான சாமி சத்தியமூர்த்தி கூறும்போது, ''ஆசிரியர்களின் கோரிக்கைகள் ஏற்கப்படும் வரை, ஜாக்டோ கூட்டுக்குழுவின் போராட்டம் தொடரும். மறியல் போராட்டத்தில் ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டால்,சிறை செல்லவும் தயாராக உள்ளோம்,'' என்றார்.

ரயிலில் பெண் பயணிகளின் பாதுகாப்புக்கு ‘மொபைல் அப்ளிகேஷன்’ விரைவில் அறிமுகம்

ரயிலில் பயணம் செய்யும் பெண் பயணிகளின் பாதுகாப்புக்காக விரைவில் மொபைல் ஆப் (செயலி) அறிமுகப்படுத்தப்படும் என மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு கூறினார்.இதுகுறித்து, அவர் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:


ரயில்களில் பயணம் செய்யும் பெண் பயணிகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதற்காக விரைவில் மொபைல் ஆப் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்காக அகில இந்திய அளவிலான மொபைல் அப்ளிகேஷன் சேவை உருவாக்கப்படும். இதன் மூலம்,பெண் பயணிகள் ரயில்வே பாதுகாப்பு படையின் உதவியை விரைவாக பெற முடியும்.சமூக விரோதிகள் கைவரிசையைக் காட்ட ரயில்கள் எளிதான இலக்காக உள்ளன. எனவே, இத்தகைய அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள ரயில்வே பாதுகாப்பு படையில் நுண்ணறிவுப் பிரிவை ஏற்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதற்கான நிதியுதவி ரயில்வே பாதுகாப்பு படைக்கு வழங்கப்படும்.பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்பவர்களை பிடிப்பதற்காக ஏற்கெனவே நாடு தழுவிய அளவில் சிறப்பு தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டுள்ளது. ரயில்வே பாதுகாப்பு படை போலீஸார், மாநில போலீஸாருடன் இணைந்து பணியாற்றி குற்றங்களைத் தடுக்க வேண்டும். இது தொடர்பாக, அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளேன்.இவ்வாறு அமைச்சர் சுரேஷ் பிரபு கூறினார்.

சென்னை கோட்ட ரயில்வே எஸ்.பி. விஜயகுமார் கூறும்போது, ‘‘ரயில் பயணிகள் அவசர உதவிக்கு 1512 என்ற இலவச அழைப்பு எண்ணிலும், 9962500500 என்ற செல்போன் எண்ணிலும் 24 மணி நேரமும் தொடர்புகொள்ளலாம். மேலே குறிப்பிடப்பட்டுள்ள செல்போன் எண்ணில் ‘வாட்ஸ் அப்' மூலமும் புகார் தெரிவிக்கலாம்.

இப்போது பெண்களின் வசதிக்காக புதிய ஆப் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் புகார் கொடுக்கும்போது, அவர்கள் பயணம் செய்யும் ரயிலின் விவரம், சம்பவ இடம் மற்றும் விவரங்கள் உடனடியாக காவல் துறைக்கு தெரியவரும். இதனால் ஓரிருநிமிடங்களில் போலீஸின் உதவி அவர்களுக்கு கிடைக்கும். குற்றவாளிகளை பிடிக்கவும், குற்றங்களை தடுக்கவும் புதிய ஆப் உதவியாக இருக்கும்’’ என்றார்.

போலி தொலைபேசி அழைப்புகளால் பாலிசிதாரர்கள் ஏமாற வேண்டாம்: எல்.ஐ.சி. நிறுவனம் எச்சரிக்கை

எல்.ஐ.சி. தொடர்பாக வரும் போலி தொலை பேசி அழைப்புகளால் பாலிசிதாரர்கள் ஏமாற வேண்டாம் என அந்நிறுவனம் எச்சரித்து உள்ளது.சமீபகாலமாக எல்.ஐ.சி. நிறுவனத்தில் பாலிசி எடுத்திருக்கும் பாலிசிதாரர்களுக்கு தொலை பேசி மூலம் ஒரு அழைப்பு வருகிறது. அதில் பேசும் பெண் ஒருவர் தான் எல்ஐசி நிறுவனத் தில் இருந்து பேசுவதாகக் கூறி சம்மந்தப்பட்ட பாலிசிதாரர்களிடம் அவருடைய பாலிசி எண் ணைத் தெரிவித்து, நீங்கள் எல்.ஐ.சி. நிறுவனம் பெயரில் 12 ஆயிரத்து 546 ரூபாய்க்கு காசோலை அனுப்பினால், உங்களுக்கு போனஸ் தொகையாக ரூ.60 ஆயிரம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.


உண்மையில், அப்பெண் பேசியது ‘லைட் இன்பர்மேஷன் கன்சல்டன்ட்’ என்ற நிறுவனத்தில் இருந்து. பாலிசிதாரர்களிடம் இருந்து காசோலைகளை பெறும் போது தனது நிறுவனத் தின் முழுப் பெயரை தெரிவிக்காமல் சுருக்கமாக ‘எல்ஐசி’ எனக் கூறியுள்ளார். இதன் மூலம், அவர் கள் மோசடியில் ஈடுபட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.இந்நிலையில், இதுபோன்ற தொலைபேசி அழைப்புகளை நம்பி ஏமாற வேண்டாம் என எல்.ஐ.சி. நிறுவனம் எச்சரித்துள்ளது. இது குறித்து, அந்நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:பாலிசிதாரர்கள் பிரீமியம் உள்ளிட்ட அனைத்து விதமான பரிவர்த்தனைகளுக்கு காசோலை மூலமாக பணம் செலுத்த வேண்டும். அவ்வாறு காசோலை வழங்கும் போது ‘எல்ஐசி ஆப் இந்தியா’ என்று முழு பெயரை குறிப்பிட வேண்டும். காசோலையின் பின்புறம் பாலிசி எண்ணை குறிப்பிட வேண்டும்.

பணமாக செலுத்தும்பட்சத்தில் எல்ஐசி அலுவலகங்களில் மட்டுமே செலுத்த வேண்டும். பணம் செலுத்திய உடன் வழங்கப்படும் ரசீதை சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.மேலும், பாலிசிதாரர்கள் தங்களுடைய பாலிசியின் நிலை குறித்து www.licindia.in என்ற இணையதள முகவரி மூலம் அவ்வப்போது சரிபார்த்துக் கொள்ள வேண்டும். எல்ஐசி நிறுவனம் எக்காரணம் கொண்டும் பாலிசிதாரர்களிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பிரீமியம் கட்டுவது, போனஸ் வழங்குவது குறித்து பேசுவது கிடையாது. எனவே, பாலிசிதாரர்கள் எல்ஐசி நிறுவனம் பெயரில் வரும் போலி தொலைபேசி அழைப்புகளைக் கண்டு ஏமாற வேண்டாம்.

அதேபோல், முதிர்வடைந்த பாலிசி களுக்கான தொகை, போனஸ் உள்ளிட்டவை பாலிசிதாரர்களுக்கு அவர்களுடைய வங்கிக் கணக்கில் தேசிய மின்னணு பண பரிவர்த்தனை (NEFT) மூலம் மட்டுமே வழங்கப்படுகிறது.எனவே, பாலிசிதாரர்கள் தங்களுடைய மின்னணு பண பரிவர்த்தனை குறித்த விவரங்களைசம்மந்தப்பட்ட எல்ஐசி நிறுவனத்தின் கிளையில் நேரில் சென்றோ அல்லது தபால் மூலமோ தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு எல்ஐசி நிறுவனம் தெரி வித்துள்ளது.

மாணவர்கள் ஆதார் அட்டை மாவட்ட ஆட்சியர் விளக்கம்

மாணவர்களுக்கு வழங்கப்படும் ஆதார் படிவத்தில் தேவையான விவரங்களை பெற்றோர்வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப் பில் கூறியிருப்பதாவது:


தேசிய மக்கள் தொகை பதிவேடு கணக்கெடுப்பின்படி, சென்னை மாவட்டத்தில் 2 லட்சம் மாணவ, மாணவியருக்கு ஆதார் எடுக்க வேண்டியுள்ளது. சென்னை மாவட்டத்தில், அரசு, மாநகராட்சி, அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிகுலேஷன்மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஆதார் அட்டைக்கான பணிகள் பள்ளிகளில் அக்டோபர் முதல் நடந்து வருகிறது.முதல்கட்டமாக 36 பள்ளிகளில் இப்பணி நடக்கிறது. பள்ளிகளில் ஆதார் அட்டை உடற்கூறு பதிவு நாள் குறித்த தகவல் 3 நாட்களுக்கு முன்பே மாணவர்களுக்கு அளிக்கப் படுகிறது. பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் ஆதார் படிவங்களில் தேவையான விவரங்களை பெற்றோர் அளிக்க வேண்டும்.ஆதார் அட்டை பணிகள் நடக்கும் பள்ளிகளில், பள்ளி வேலை நேரத்தை தவிர்த்து மற்ற நேரங்கள், விடுமுறை நாட்களில், மாணவர்களின் பெற்றோர், பள்ளி அமைந்துள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், ஆதார் அட்டைக்கான புகைப்படம் எடுக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தீபாவளிக்கு முதல் நாள் 'ரிலிஜியஸ் லீவ்' -பெற்றோர், ஆசிரியர் கோரிக்கை

தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாளான, நவ., 9ம் தேதி, பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும்' என, மாணவர், பெற்றோர் மற்றும் ஆசிரியர் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.


வரும், 10ம் தேதியான செவ்வாய் கிழமை அன்று, தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. தீபாவளிக்கு சொந்த ஊருக்கு செல்வோர் வசதிக்காக, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து,தமிழகத்தின் பல பகுதி களுக்கும், சிறப்பு ரயில்கள் மற்றும் பஸ்கள் இயக்கப்படுகின்றன.தீபாவளிக்கு முன், சனி, ஞாயிறு என, இரு நாட்கள் பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை; திங்கள் கிழமை பணி நாள்; செவ்வாய் கிழமை, தீபாவளி விடுமுறை என, உள்ளது. அதனால், வெளியூர் செல்வோர், திங்கள் கிழமை வேலை நாளுக்காக, சொந்த ஊர் செல்வதை தவிர்த்து, தாங்கள் வசிக்கும் ஊர்களில் இருக்க வேண்டிய நிலை உள்ளது.எனவே, திங்கள் கிழமை ஒருநாள் மட்டும், 'ரிலிஜியஸ் லீவ்' எனப்படும், மதச்சார்பு விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து, பெற்றோர், ஆசிரியர் தரப்பில்கூறியதாவது:சனி, ஞாயிறு விடுமுறை நாளாக இருந் தும், ஊருக்குச் செல்ல முடியாத தர்ம சங்கட மான சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, பள்ளிக் கல்வித் துறை மற்றும் பொதுத் துறை விதிகளின் படி, மதச்சார்பு விடுமுறையை அரசு அறிவித்தால், மாணவர்களுக்கு, நான்கு நாட்கள் விடுமுறை கிடைக்கும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

4/11/15

டெங்கு பயம் இனி வேண்டாம்; இருக்கிறது 8 வழிமுறைகள்

'மழைக்காலம் வந்துவிட்டாலே டெங்கு காய்ச்சல் பீதியும் அதிகரித்துவிடுகிறது. டெங்கு காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு இன்னமும் தமிழகத்தில் குறைவாகவே இருக்கிறது. டெங்கு காய்ச்சலை தடுக்க கீழ்க்கண்ட எட்டு வழிகளை பின்பற்றினால் 'டெங்கு' அபாயத்தில் இருந்து தற்காத்து கொள்ள முடியும்.


1. 'ஏடிஸ் எஜிப்டி' என்ற கொசுதான் டெங்கு காய்ச்சலுக்கு காரணம். இந்த கொசு அசுத்த நீர் நிலைகளில் வாழாது. நல்ல நீர்நிலைகளில் மட்டுமே வாழும். தேங்காய் ஓடுகள், சரடுகள், பிளாஸ்டிக் பொருட்கள், பாலித்தீன் பைகள் போன்றவற்றின் மழை நீர் தேங்குவதால்தான், அவ்விடங்களில் டெங்குவை பரப்பும் கொசுக்கள் உருவாகின்றன. எனவே வீட்டை சுற்றி இந்த பொருட்கள் இருந்தால் உடனடியாக அகற்றுங்கள்.


2. சித்த மருத்துவத்தில் டெங்குவை தடுக்க எளிமையான் வழிகள் இருக்கிறது. நிலவேம்பு கஷாயம், ஆடாதோடா இலை குடிநீர், பப்பாளி இலைச்சாறு போன்றவை டெங்குவின் பாதிப்பில் இருந்து காக்கும். இவற்றை நாட்டு மருந்து கடைகளில் அல்லது அரசு மருத்துவமனைகளில் உள்ள சித்த மருத்துவமனை பிரிவில் வாங்கி பயன்படுத்தலாம்.

3. மழைக்காலத்தில் நோய்களை தடுக்க மூலிகை டீ உதவும். சுக்கு, பனங்கற்கண்டு, துளசி, மாதுளை பழத்தோல், கறிவேப்பிலை, சீரகம், மஞ்சள் தூள் போன்றவற்றில் என்னென்ன பொருட்கள் இருக்கிறதோ அவற்றில் கொஞ்சம் எடுத்து குடிநீரில் சேர்த்து கொதிக்கவைத்து வடிகட்டி பருகலாம். காபி, டீக்கு பதில் வீட்டிலேயே மூலிகை டீ செய்து குடியுங்கள்.

4. டெங்குவை பரப்பும் கொசு சற்று பெரிதாக இருக்கும். இது மாலை இறங்கும் வேளையில் மற்றும் அதிகாலை வேளைகளில்தான் அதிகளவு ஊர் சுற்றுகிறதாம். எனவே தினமும் மாலை 4 மணிக்கெல்லாம் வீட்டில் உள்ள ஜன்னல்களை அடைத்து விடுங்கள். காலை ஏழு மணிக்கு மேல் ஜன்னலை திறக்கவும்.

5 வீட்டை மற்றுமல்ல மனிதர்களும் சுத்தமாக இருக்க வேண்டும். எனவே தினமும் குளிப்பது அவசியம். சளி, காய்ச்சல் இருப்பவர்கள் வேண்டுமானால் மருத்துவர் பரிந்துரைப்படி குளிக்காமல் இருக்கலாம். ஆனால் மற்றவர்கள் மழைக்காலத்தில் சுடுதண்ணீரிலோ, குழாய் நீரிலோ கண்டிப்பாக குளிக்க வேண்டும். ஏனெனில் வியர்வை வாடை அதிகமாக இருக்கும் இடங்களில்தான் கொசுக்கள் தேங்குகிறது.

6. காலை, மாலை, இரவு என ஒவ்வொரு வேளையும் புதிதாக சமைத்து உண்ணுங்கள். பச்சை காய்கறிகள், கீரைகள், பழங்கள் போன்றவற்றை நன்றாக கழுவி பயன்படுத்தவும். மசால் பூரி, பானி பூரி, பஜ்ஜி, சூப் போன்றவற்றை ரோட்டோரக்கடைகளில் சாப்பிடுவதை அறவே தவிருங்கள்.

7. முதியவர்கள், குழந்தைகள் ஆகியோரைதான் டெங்கு பாடாய் படுத்துகிறது. ஏனெனில் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சரிவிகித உணவுகளைச் சாப்பிட வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பது முன் கூட்டியே தெரிந்தால் மருத்துவர் பரிந்துரைப்படி மாத்திரை,மருந்துகள் எடுத்துக்கொள்ளலாம்.

8. வீட்டை ச்சுற்றி தண்ணீர் தேங்கவிடாதீர்கள். வீட்டுச் சுவர்களின் வெளிப்புறத்தில் டி.டி.டி மருத்துகளை தெளிக்கவும். கைகால்கள் போன்றவற்றை முழுவதுமாக மறைக்கும் வகையிலான உடைகளை அணியுங்கள். குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் தண்ணீரை நன்றாக கொதிக்க விட்டு ஆற வைத்து பருகுங்கள்.

டெங்கு காய்ச்சலுக்கு என பிரத்யேக மருந்துகள் இல்லை. ஆனால் டெங்குவை நம்மால் ஒழிக்க முடியும் என்பதை மனதில் வைத்து செயல்படுவோம்.