யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

5/11/15

பெரியார் பல்கலை. தொலைநிலைக் கல்வி மாணவர் சேர்க்கை: யு.ஜி.சி-யின் உத்தரவுக்கு இடைக்கால தடை

சேலம் பெரியார் பல்கலைக்கழகத் தொலைநிலைக் கல்வியில் 2015-16-ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கை கூடாது என்று பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி) பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிதது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.இது தொடர்பாக பல்கலைக்கழகப் பதிவாளர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்:


2001-02-ஆம் ஆண்டில் தொலைதூரக் கல்வி தொடங்கப்பட்டது. இதில், பல்வேறு துறைகளில் 150 பாடப் பிரிவுகள் நடத்தப்படுகின்றன. இந்த நிலையில், 2015-16-ஆம் கல்வியாண்டில் தொலைநிலைக் கல்வியில் மாணவர்களைச் சேர்க்கக் கூடாது என்று ஆகஸ்ட் 27-இல் யு.ஜி.சி. உத்தரவிட்டது. இதற்கு தடை விதிக்காவிட்டால், ஆயிரக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்படுவர்.எனவே, உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிப்பதோடு, ரத்து செய்ய வேண்டும் என்றுகோரப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், யு.ஜி.சி. பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக