யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

5/11/15

ஆசிரியர்களை கேவலமாக சித்தரிக்கும் பள்ளிக்கூடம் போகாமலே படத்துக்கு தடைவிதிக்க வேண்டும்

ஆசிரியர் பணியை கேவலப்படுத்தும் வகையில் எடுக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கூடம்போகாமலே படத்தை எதிர்த்து சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆவடியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் கல்யாண சுந்தரம்சிட்டி சிவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:


கடந்த 31ம் தேதி சென்னையில் உள்ள ஒரு தியேட்டரில் பள்ளிக்கூடம் போகாமலே என்ற படத்தைப் பார்த்தேன். அதில் அதிர்ச்சியளிக்கும் வகையில் ஆசிரியரால் மாணவர்கள் பாதிக்கப்படுவதாக பல்வேறு காட்சிகள் வருகின்றன. உன்னதமான ஆசிரியர் பணியை மிகவும் கொச்சைப்படுத்தும் வகையில், இந்த படத்தில் காட்சிகள் வருகின்றன. நன்றாக படிக்கும் மாணவர்களை விட்டு, படிக்காத மாணவர்களுக்கு தண்டனை தருவது போலவும் காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.மாணவர்களுக்கு எதிர்காலத்தை போதிக்கும் ஆசிரியர் பணியை மோசமாக சித்தரிக்கும் காட்சிகள் ஆசிரியர்களுக்கு உள்ள மேன்மைத் தன்மையை குலைக்கும் முயற்சியாகும். ஆசிரியர்களுக்கு மக்களிடையேயும், மாணவர்களிடையேயும் உள்ள மரியாதையை முழுவதுமாக சீர்குலைக்கும் வகையில் உள்நோக்கத்துடன் எடுக்கப்பட்ட இந்த படத்திற்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு இன்னும் ஓரிரு தினங்களில் முதலாவது சிட்டி சிவில் நீதிமன்றத்தில்விசாரணைக்கு வரவுள்ளது. சென்னை, நவ.4: ஆசிரியர் பணியை கேவலப்படுத்தும் வகையில் எடுக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கூடம் போகாமலே படத்தை எதிர்த்து சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆவடியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் கல்யாண சுந்தரம் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:கடந்த 31ம் தேதி சென்னையில் உள்ள ஒரு தியேட்டரில் பள்ளிக்கூடம் போகாமலே என்ற படத்தைப் பார்த்தேன். அதில் அதிர்ச்சியளிக்கும் வகையில் ஆசிரியரால் மாணவர்கள் பாதிக்கப்படுவதாக பல்வேறு காட்சிகள் வருகின்றன. உன்னதமான ஆசிரியர் பணியை மிகவும் கொச்சைப்படுத்தும் வகையில், இந்த படத்தில் காட்சிகள் வருகின்றன. நன்றாக படிக்கும் மாணவர்களை விட்டு, படிக்காத மாணவர்களுக்கு தண்டனை தருவது போலவும் காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.
மாணவர்களுக்கு எதிர்காலத்தை போதிக்கும் ஆசிரியர் பணியை மோசமாக சித்தரிக்கும் காட்சிகள் ஆசிரியர்களுக்கு உள்ள மேன்மைத் தன்மையை குலைக்கும் முயற்சியாகும். ஆசிரியர்களுக்கு மக்களிடையேயும், மாணவர்களிடையேயும் உள்ள மரியாதையை முழுவதுமாக சீர்குலைக்கும் வகையில் உள்நோக்கத்துடன் எடுக்கப்பட்ட இந்த படத்திற்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு இன்னும் ஓரிரு தினங்களில் முதலாவது சிட்டி சிவில் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக