யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

4/12/15

Flash News - கனமழை : 6 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (04/12/2015) விடுமுறை அறிவிப்பு.

*விழுப்புரம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
*நாகை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
*திருவள்ளுர் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை 
*சென்னை பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் 6ம் தேதி வரை விடுமுறை விடுமுறை 
*காஞ்சிபுரம் பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் 6ம் தேதி வரை விடுமுறை
*கடலூர் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
*புதுச்சேரி,காரைக்கால் பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் 6ம் தேதி வரை விடுமுறை  

சென்னை மழைக்கு பூமி வெப்பம் அடைந்ததே காரணம்: பாரீஸ் மாநாட்டில் நிபுணர்கள் தகவல்:

சென்னை மழைக்கு பூமி வெப்பம் அடைந்ததே காரணம்: பாரீஸ் மாநாட்டில் நிபுணர்கள் தகவல்:
சென்னையில் கடந்த மாதம் தொடர்ந்து 10 நாட்கள் பலத்த மழை கொட்டியது. கடந்த 2 நாட்களாகவும் இதேபோல் சென்னையில் பலத்த பெய்து வருகிறது.
வரலாறு காணாத இந்த மழைக்கு பூமி வெப்பம் அடைந்து வருவதே காரணம் என்று பாரீசில் நடந்து வரும் பருவநிலை மாற்றம் குறித்த உச்சி மாநாட்டில் நிபுணர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
இந்த மாநாட்டில் கலந்துகொண்ட டெல்லி அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் துணை தலைமை இயக்குனர் சந்திரபூஷண் கூறுகையில், சென்னை நகரில் பெய்து வரும் இடைவிடாத பலத்த மழைக்கு இந்த பூமி வெப்பமயமாகி வருவதுதான் காரணம். இத்தனைக்கும் பூமியில் ஒரு செல்சியசுக்கும் குறைவான அளவு வெப்பமே அதிகரித்து இருக்கிறது. அதற்கே இந்த மழை என்றால் 2 செல்சியஸ் வெப்பம் அதிகரித்தால் என்ன நடக்கும் என்பதை சிந்தித்து பாருங்கள்என்றார்.
ஆக்ஷன் எய்ட் அமைப்பின் ஹர்ஜித்சிங் கூறும்போது, “காஷ்மீர் முதல் உத்தரகாண்ட் வரை கடந்த 5 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள நிலைமையை பார்க்கும்போது, இது நிச்சயமாக பூமியின் பருவநிலை மாற்றத்தால்தான் ஏற்பட்டது என்பதை தெளிவாக புரிந்துகொள்ள முடிகிறது என்று குறிப்பிட்டார்.

தமிழக சிறப்பு மருத்துவ இடங்கள் தமிழக மாணவர்களுக்கே வழங்க வேண்டும்: டாக்டர்கள் சங்கம் தீர்மானம்:

தமிழக சிறப்பு மருத்துவ இடங்கள் தமிழக மாணவர்களுக்கே வழங்க வேண்டும்: டாக்டர்கள் சங்கம் தீர்மானம்:
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள சிறப்பு மருத்துவ இடங்களை தமிழக மருத்துவர்களே வழங்கிடும் முறை தொடர வேண்டும் என சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.இது குறித்து சென்னையில் அண்மையில் நடைபெற்ற கருத்தரங்கில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:சிறப்பு மருத்துவ இடங்கள் (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் டிசம்பர் 2-ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. இதில் தமிழகத்தில் உள்ள சிறப்பு மருத்துவ இடங்கள் தமிழக மருத்துவர்களே என்ற நிலையை தமிழக அரசு எடுத்து வைக்க வேண்டும்.
 தமிழகத்துக்கு உள்ள நியாயமான உரிமைகளை காப்பாற்ற வேண்டும்.
 தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இளநிலை, முதுநிலை மருத்துவ இடங்களை அகில இந்திய ஒதுக்கீட்டு வழங்கும் முறையை கைவிட வேண்டும். 
 இதற்கென்று தனிச்சட்டம் இயற்ற வேண்டும். அந்தச் சட்டத்தில் நீதிமன்றங்கள் தலையிடாமல் இருப்பதற்கு அரசியல் சட்டப்பிரிவின் அட்டவணையில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 மருத்துவக் கல்வி வணிகமயமாவதைத் தடுக்க வேண்டும். இந்தியாவின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மருத்துவக் கல்லூரிகளை மாநில அரசுகள் தொடங்கிட வேண்டும். இதற்கு மத்திய அரசு நிதியுதவி அளிக்க வேண்டும். 
 குறிப்பாக வடகிழக்கு மாநிலங்கள், உத்தரப்பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களிலும் மருத்துவக் கல்லூரிகளை போதிய அளவில் தொடங்கிட வேண்டும் என்பன உள்ளிட்டக் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.

வங்ககடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை அதே இடத்தில் இருக்கிறது: தமிழகத்தில் மேலும் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் கடலோர மாவட்டங்களில் 4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை:

வங்ககடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை அதே இடத்தில் இருக்கிறது: தமிழகத்தில் மேலும் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் கடலோர மாவட்டங்களில் 4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை:
வங்ககடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுநிலை தொடர்ந்து அதே இடத்தில் நீடிப்பதால், தமிழகத்தில் மேலும் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்றும், கடலோர மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு மிக கனமழை இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காற்றழுத்த தாழ்வுநிலை
தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய வடகிழக்கு பருவமழை தமிழகம் முழுவதும் பரவலாக பெய்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள கடல்பகுதியில் நிலைகொண்ட காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்தது.
பின்னர், அந்த காற்றழுத்த தாழ்வுநிலை இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நேற்று முன்தினம் நிலைகொண்டது. இதனால் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் மிக கனமழை பெய்தது.
இந்த நிலையில், வங்ககடல் பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுநிலை தொடர்ந்து அதே இடத்தில் இருக்கிறது என்றும், இதன் மூலம் தமிழகத்தில் மேலும் 5 நாட்களுக்கு மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதே இடத்தில் நீடிக்கிறது
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
இலங்கை மற்றும் வட தமிழக கடலோர மாவட்டங்களை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்ககடல் பகுதியில் நிலைக்கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுநிலை, தொடர்ந்து அதே இடத்தில் நீடிக்கிறது. வடமாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் ஆகிய மாவட்டங்களில் அதிக மழை பெய்துள்ளது.
அதிகபட்சமாக தாம்பரத்தில் 49 செ.மீ., செம்பரம்பாக்கத்தில் 47 செ.மீ. மழை பெய்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தவரையில் (இன்று), தமிழகம், புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களிலும், ஓரிரு இடங்களில் கன மற்றும் மிக கனமழையும் பெய்யும்.
5 நாட்களுக்கு மழை
காற்றழுத்த தாழ்வுநிலை மட்டும் அல்லாது, தமிழகத்தின் உள்மாவட்டங்களில் தற்போது நிலவியுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக, டெல்டா பகுதிகள், கோவை, நீலகிரி போன்ற மலைப்பகுதிகளில் மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.
வங்ககடலில் நிலைகொண்டுள்ள இந்த காற்றழுத்த தாழ்வுநிலையினால், தமிழகத்தில் மேலும் 5 நாட்களுக்கு, அதாவது டிசம்பர் 7–ந் தேதி வரை மழை இருக்கும். கடலோர மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு மிக கனமழை இருக்கும், அதன் பிறகு படிப்படியாக மழை குறைவதற்கான வாய்ப்பு இருக்கிறது. மீனவர்கள் கடலுக்குள் செல்லும் போது மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும்.
சென்னையை பொறுத்தவரையில், வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். விட்டு விட்டு மழை வரும். ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்பும் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அதிகபட்சமாக தாம்பரத்தில் ஒரே நாளில் 49 செ.மீ. மழை
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு மாவட்டங்களில் நேற்று முன்தினம்(செவ்வாய்க்கிழமை) பரவலாக நல்ல மழை பெய்தது. நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு வருமாறு:–
*தாம்பரம் – 49 செ.மீ.
*செம்பரம்பாக்கம் – 47 செ.மீ.
*மரக்காணம் – 42 செ.மீ.
*செங்கல்பட்டு, பொன்னேரி – தலா 39 செ.மீ.
ஸ்ரீபெரும்புதூர், செய்யூர் ஆகிய இடங்களில் தலா 38 செ.மீ., சென்னை மீனம்பாக்கம் 35 செ.மீ., மகாபலிபுரம், பூந்தமல்லி ஆகிய இடங்களில் தலா 34 செ.மீ., செங்குன்றம், அண்ணா பல்கலைக்கழகம் தலா 32 செ.மீ., தரமணி 30 செ.மீ., சோழவரம், நுங்கம்பாக்கம் ஆதலா 29 செ.மீ., தாமரைப்பாக்கம், மதுராந்தகம் தலா 28 செ.மீ., சென்னை டி.ஜி.பி. அலுவலகம் 27 செ.மீ., திருவள்ளூர், புதுச்சேரி 22 செ.மீ., பூண்டி, உத்திரமேரூர் தலா 19 செ.மீ. மழை பெய்துள்ளது.
சென்னைக்கு கனமழைக்கான வாய்ப்பு எப்படி?
வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் கூறியதாவது:–
இலங்கை மற்றும் வட தமிழக கடலோர மாவட்டங்களில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை நிலவுவதால், கடலோர மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்றும், இதன் தொடர்ச்சியாக உள்மாவட்டங்களில் நிலவும் மேலடுக்கு சுழற்சியினால் மலைப்பகுதிகளில் மழை இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளோம்.
இந்த நிலையில், சென்னையை நோக்கி கிழக்கில் இருந்து நிறைய மேகக்கூட்டங்கள் வந்து கொண்டு இருக்கிறது. இதன் காரணமாக சென்னையில் விட்டு விட்டு மழை பெய்யும். கனமழையும் பெய்யும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழகம் இதுவரை பெற்ற சராசரி மழை அளவு 57 செ.மீ.
தமிழகம் வடகிழக்கு பருவமழை காலத்தில் (அக்டோபர்–டிசம்பர்) சராசரியாக 44 செ.மீ. மழை அளவை பெறும். இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 28–ந்தேதி தொடங்கியது.
இதுவரை தமிழகத்தில் பெய்த மழை அளவை வைத்து பார்க்கும் போது, சராசரியாக 57 செ.மீ. மழை அளவை பெற்றுள்ளது. இது சராசரி அளவை விட 13 செ.மீ. அதிகம் ஆகும். சென்னையை பொறுத்தவரையில், இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் இதுவரை சென்னை நுங்கம்பாக்கத்தில் 154 செ.மீ., மீனம்பாக்கத்தில் 175 செ.மீ. மழை பெய்து உள்ளது.
மிக கனமழை, கனமழை பெய்த மாவட்டங்கள் எவை?
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நேற்று முன்தினம்(செவ்வாய்க்கிழமை) நல்ல மழை பெய்தது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவல் படி, நேற்று முன்தினம் முற்பகல் வரை பதிவான மிக கனமழை, கனமழை, மிதமான மழை பெய்த மாவட்டங்களின் விவரம் பின்வருமாறு:–
மிக கனமழை – கடலூர், காஞ்சீபுரம், புதுச்சேரி, விழுப்புரம்.
கனமழை – நாகப்பட்டினம், தஞ்சை, திருவள்ளூர், வேலூர்.
மிதமான மழை – அரியலூர், சென்னை, கோவை, தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, காரைக்கால், கரூர், கிருஷ்ணகிரி, நாமக்கல், நீலகிரி, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, திருநெல்வேலி, திருப்பூர், திருவண்ணாமலை, திருவாரூர், தூத்துக்குடி, திருச்சி, விருதுநகர்.
மழை பெய்யாத மாவட்டங்கள் – மதுரை, தேனி.

சென்னையில் 114 வருடங்களுக்கு பிறகு பெய்த அதிக மழை ஒரே நாளில் 27 செ.மீ. கொட்டித் தீர்த்தது:

சென்னையில் 114 வருடங்களுக்கு பிறகு பெய்த அதிக மழை ஒரே நாளில் 27 செ.மீ. கொட்டித் தீர்த்தது:
சென்னையில் நேற்று முன்தினம் விடிய, விடிய மழை கொட்டித் தீர்த்தது. நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் சென்னையில் சராசரியாக 27 செ.மீ. (275 மி.மீ.) மழை பதிவானதாக சென்னை வானிலை மைய அதிகாரிகள்
தெரிவித்தனர். தெரிவித்தனர். வடகிழக்கு பருவமழை காலமான டிசம்பர் மாதத்தில் ஒரே நாளில் பெய்த அதிக அளவு மழை இதுவாகும்.
இந்த மழை அளவை வைத்து பார்க்கும் போது, கடந்த 1901–ம் ஆண்டு டிசம்பர் மாதம் 10–ந்தேதி ஒரே நாளில் 26 செ.மீ. (261 மி.மீ.) பெய்த மழை அளவே அதிக மழையாக இருந்தது. தற்போது அந்த மழை அளவை நேற்று முன்தினம் பெய்த மழை அளவு தாண்டி விட்டது.
ஏற்கனவே கடந்த 2005–ம் ஆண்டு டிசம்பர் 3–ந்தேதி ஒரே நாளில் 23 செ.மீ. (234 மி.மீ.) பெய்து இருந்தது. இது 2–வது அதிகபட்சமான மழை அளவாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் 114 வருடங்களுக்கு பிறகு பெய்த அதிக மழை ஒரே நாளில் 27 செ.மீ. கொட்டித் தீர்த்தது:

சென்னையில் 114 வருடங்களுக்கு பிறகு பெய்த அதிக மழை ஒரே நாளில் 27 செ.மீ. கொட்டித் தீர்த்தது:
சென்னையில் நேற்று முன்தினம் விடிய, விடிய மழை கொட்டித் தீர்த்தது. நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் சென்னையில் சராசரியாக 27 செ.மீ. (275 மி.மீ.) மழை பதிவானதாக சென்னை வானிலை மைய அதிகாரிகள்
தெரிவித்தனர். தெரிவித்தனர். வடகிழக்கு பருவமழை காலமான டிசம்பர் மாதத்தில் ஒரே நாளில் பெய்த அதிக அளவு மழை இதுவாகும்.
இந்த மழை அளவை வைத்து பார்க்கும் போது, கடந்த 1901–ம் ஆண்டு டிசம்பர் மாதம் 10–ந்தேதி ஒரே நாளில் 26 செ.மீ. (261 மி.மீ.) பெய்த மழை அளவே அதிக மழையாக இருந்தது. தற்போது அந்த மழை அளவை நேற்று முன்தினம் பெய்த மழை அளவு தாண்டி விட்டது.
ஏற்கனவே கடந்த 2005–ம் ஆண்டு டிசம்பர் 3–ந்தேதி ஒரே நாளில் 23 செ.மீ. (234 மி.மீ.) பெய்து இருந்தது. இது 2–வது அதிகபட்சமான மழை அளவாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 68–ஆக உயர்வு 2 பெண் உள்பட மேலும் 6 பேர் சாவு:

சென்னையில் மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 68–ஆக உயர்வு 2 பெண் உள்பட மேலும் 6 பேர் சாவு:
சென்னை நகரின் மழையால் நேற்றும், நேற்று முன்தினம் இரவும் 2 பெண்கள் உள்பட மேலும் 6 பேர் உயிர்ப்பலியானார்கள். இதையொட்டி மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 68–ஆக உயர்ந்துள்ளது.
வெள்ளமோ வெள்ளம்
சென்னை நகரில் மழை ஒரு பக்கம் கொட்டோ, கொட்டு என்று கொட்டுகிறது. இன்னொரு பக்கம் செம்பரம்பாக்கம் ஏரி, புழல் ஏரி, பூண்டி ஏரி போன்றவற்றிலிருந்து உபரி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இந்த தண்ணீரும் வெள்ளமாக சென்னை நகரின் அனைத்து சாலைகளிலும் ஓடுகிறது.
குறிப்பாக தென்சென்னை பகுதி முழுவதும் சாலைகளில் 10 அடிக்கு மேல் மழை தண்ணீர் வெள்ளமாக கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் நேற்றும் சென்னை நகர சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
68 பேர் பலி
நேற்று முன்தினம் இரவிலும், நேற்று பகலிலும் 2 பெண்கள் உள்பட மழையால் மேலும் 6 பேர் பலி ஆனார்கள் இதனால் சாவு எண்ணிக்கை 68–ஐ தொட்டது.
நேற்று முன்தினம் இரவு ஆழ்வார்பேட்டையில் நடிகர் கமலஹாசன் அலுவலகத்தின் அருகே உள்ள எல்டாம்ஸ் சாலையில் ஜான்சன்(வயது 28) என்பவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். திடீரென்று சாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அருகிலுள்ள வங்கி அலுவலகத்திற்குள் அவர் நுழைந்தார். அலுவலக வாசலில் உள்ள கிரில் கதவை தொட்டபோது அதில் மின்சாரம் பாய்ந்து ஜான்சன் பரிதாபமாக இறந்து போனார். அந்த வங்கி அலுவலகத்தில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது.
ஜெனரேட்டர் மூலம் மின் இணைப்பு கொடுக்கப்பட்டிருந்தது. அதில் மின்சார கசிவு ஏற்பட்டு கிரில் கதவில் மின்சாரம் பாய்ந்துள்ளது. அதைத் தொட்ட ஜான்சன் அங்கேயே சுருண்டு விழுந்து இறந்துபோனார்.
பெண்கள் பலி
பல்லாவரம் தர்கா ரோட்டை சேர்ந்த கவிதா (33) என்ற பெண் நேற்று முன்தினம் இரவு ஆட்டோவில் சென்றுகொண்டிருந்தார். ரவி என்பவர் ஆட்டோவை ஓட்டிச்சென்றார். அந்த பகுதியில் உள்ள வேம்புலி அம்மன் கோவில் தெருவில் செல்லும்போது ஆட்டோ மீது திடீரென்று மரம் ஒன்று விழுந்து விட்டது. அதில் ஆட்டோ நசுங்கி கவிதா பரிதாபமாக இறந்து போனார். ஆட்டோ டிரைவர் ரவி அதிசயமாக உயிர் தப்பினார்.
தாம்பரத்தில் தங்கவேலு (57) என்பவர் வீட்டில் மின்சார விளக்கு சுவிட்ச்சை போட்ட போது மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தார். சென்னை மயிலாப்பூர் விசாலாட்சி தோட்டத்தில் லட்சுமி (65) என்ற மூதாட்டி வீட்டில் நுழைந்த மழைத்தண்ணீருக்குள் சிக்கி உட்கார்ந்த நிலையிலேயே பரிதாபமாக இறந்து விட்டார்.
நேற்று பகலில் கீழ்ப்பாக்கத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் மாண்டு போனதாக தகவல் வெளியானது. அவரது பெயர் விவரம் உடனடியாக தெரியவில்லை. நேப்பியர் பாலம் அருகில் கூவம் ஆற்று வெள்ளத்திலும் ஒருவர் பிணமாக கிடந்தார். அவரது பெயர் விவரங்களும் தெரியவில்லை.

சென்னை விமான நிலையம் டிசம்பர் 6-ம் தேதி வரையில் மூடப்படுகிறது:

சென்னை விமான நிலையம் டிசம்பர் 6-ம் தேதி வரையில் மூடப்படுகிறது:
சென்னை விமான நிலையம் டிசம்பர் 6-ம் தேதி வரையில் மூடப்படுகிறது என்று இந்திய விமான நிலைய ஆணையம் அறிவித்து உள்ளது. 
சென்னையில் பெய்த கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. பலத்த மழையின் காரணமாக சென்னையில் இருந்து விமான போக்குவரத்து அடியோடு முடங்கியது. நாளை காலை 6 மணி வரை சென்னை விமானநிலையத்தில் இருந்து எந்த விமானமும் புறப்பட்டு செல்லாது என்று அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையே வங்கக்கடல் பகுதியில் நிலைக்கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுநிலை தொடர்ந்து அதே இடத்தில் இருக்கிறது என்றும், இதன் மூலம் தமிழகத்தில் மேலும் 5 நாட்களுக்கு மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சென்னை விமான நிலையம் டிசம்பர் 6-ம் தேதி வரையில் மூடப்படுகிறது என்று இந்திய விமான நிலைய ஆணையம் அறிவித்து உள்ளது. 

வண்டலூர் பூங்காவில் பாதிப்பு! வன விலங்குகளால் தொடரும் அச்சம்:

வண்டலூர் பூங்காவில் பாதிப்பு! வன விலங்குகளால் தொடரும் அச்சம்:
சென்னை, வண்டலுார் உயிரியல் பூங்காவில், உடைந்த சுற்றுச்சுவர்களை சரிசெய்யும் பணி பலத்த மழையால் தடைபட்டுள்ளது. அதனால், பாதுகாப்பு கருதி, வனத்துறையினர் ரோந்து பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். 
காஞ்சிபுரம் மாவட்டம், வண்டலுார், அறிஞர் அண்ணா உயிரியல் 
 அந்த பூங்காவின் அமைப்பிடங்களுக்குள், 2,000க்கும் மேற்பட்ட விலங்குகளும், அதைச் சுற்றியுள்ள காப்புக்காட்டு பகுதியில் மான், நரி போன்ற சுதந்திரமாக சுற்றித் திரியும் உயிரினங்களும் வாழ்வதால், அதிகாரிகள் கலக்கம் அடைந்தனர். இதனால், சென்னையில் இருந்து வனத்துறையின் உயர் அதிகாரிகள், போக்குவரத்து தடைகளையும் மீறி அங்கு விரைந்தனர்.
பூங்காவில், வெள்ள நீரின் அளவு அதிகரித்தபடியே இருந்ததை காரணம் காட்டி, பூங்காவுக்கு, நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதைப் பயன்படுத்தி, சுற்றுச்சுவரை சரி செய்ய ஊழியர்கள் முயன்றனர். ஆனால், மழை இடையூறு செய்ததால் அப்பணியை மேற்கொள்ள இயலவில்லை. அதனால், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, உயிரியல் பூங்கா மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில், வனத்துறையினர் ரோந்து பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

அரையாண்டு தேர்வுகள் ஜனவரிக்கு ஒத்திவைத்து முதலமைச்சர் உத்தரவு:

அரையாண்டு தேர்வுகள் ஜனவரிக்கு ஒத்திவைத்து முதலமைச்சர் உத்தரவு:
தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.கன மழை காரணமாக அரையாண்டுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகின்றன. வழக்கமாக பள்ளிகளில் டிசம்பர் மாதத்தில் அரையாண்டுத் தேர்வுகள் நடத்தப்படும்.ஆனால், தமிழகத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக 3 வாரங்களாக பள்ளிகள் செயல்படாமல் விடுமுறை அறிவிக்கப்பட்டது.இதனால், டிசம்பர் 7ம் தேதி முதல் நடக்கவிருந்த அரையாண்டுத் தேர்வுகள் அனைத்தும் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் நடைபெறும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

3/12/15

அறிவியல் விருது தேதி நீட்டிப்பு

அறிவியல் நகரம் சார்பில், 2014ம் ஆண்டுக்கான, 'தமிழ்நாடு இளம் அறிவியல் ஆய்வாளர் விருது' மற்றும், 'தமிழ்நாடு வாழ்நாள் அறிவியல் சாதனையாளர் விருது' பெற, விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், டிச., 4ம் தேதி வரை, அறிவியல் நகரத்தில் பெறப்படும் என, அறிவிக்கப்பட்டிருந்தது.


தற்போது கனமழை காரணமாக, காலக்கெடு, 14ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பப் படிவம், விதி மற்றும் விவரம்,அறிவியல் நகரம் இணையதளத்தில் www.sciencecitychennai.in \வெளியிடப்பட்டுள்ளது.

3 நாட்களுக்கு கனமழை தொடரும் BBC கணிப்பு 50 செ.மீ.,

வங்க கடலில், நேற்று முன்தினம் உருவான குறைந்த காற்று அழுத்த தாழ்வு நிலையால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இன்னும், மூன்று நாட்களுக்கு கனமழை தொடரும்' என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.'தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில், (இன்று) புதன்கிழமை, மிக, மிக கனமழை பெய்யும்' என, எச்சரிக்கப்பட்டு உள்ளது. வானிலை ஆய்வு மையம், நேற்று வெளியிட்டஅறிக்கை:


தென் மேற்கு வங்க கடலில், உருவான குறைந்த காற்று அழுத்த தாழ்வு நிலை, இலங்கை அருகே, வட தமிழகத்துக்கும், புதுச்சேரிக்கும் இடையே நிலை கொண்டு உள்ளது.இதனால், டிச., 5 வரை 3 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்யும்.டிச., 2: தமிழகம், புதுச்சேரியில் கனமழை பெய்யும்.டிச., 3: தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரியில் மிக, மிக கனமழை பெய்யும். தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் கனமழை பெய்யும்.டிச., 4, 5: தமிழகம், புதுச்சேரியில் மிக கனமழை பெய்யும்.சென்னையில் அடுத்த, 48 மணி நேரத்துக்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். பரவலாக, மிக கனமழை பெய்யும். காற்று மிக பலமாக வீசும். கடல் சீற்றம் அதிகமாக இருப்பதால், மீனவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை 8:30 மணி வரை, 4 செ.மீ., மழை பெய்தது. காலை, 8:30 மணி முதல், மாலை, 6:00 மணி வரை, 14 செ.மீ., மழை பதிவானது. சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில், குறைந்தபட்ச வெப்ப நிலை, 23 டிகிரி செல்சியஸ். சமவெளி பகுதியில், தர்மபுரியில் மிக குறைவான வெப்ப நிலை பதிவானது. அங்கு அதிகபட்ச வெப்பநிலையே, 19 டிகிரி செல்சியஸ் தான். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

பி.பி.சி., அறிக்கை:

லண்டன் பி.பி.சி., செய்தி நிறுவனம், சென்னை மழை குறித்து, நேற்று வெளியிட்ட அறிக்கையில், 'டிச., 1, 2ல், சென்னையில் கனமழை பெய்யும். இந்த, இரண்டு நாட்களில் மட்டும், 50 செ.மீ., மழை, சென்னை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் பதிவாகும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்-நினோ ஆபத்தா? 100 ஆண்டுகளுக்கு பிறகு வெளுத்துவாங்குகிறது மழை : மேலும் 4 நாட்களுக்கு கொட்டும்

வட கிழக்கு பருவக் காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால், அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும். சென்னையில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் மேற்கு வங்கக் கடலில் கடந்த நான்கு நாட்களாக நிலை கொண்டு இருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மேற்கு நோக்கி நகர்ந்ததால் தமிழக கடலோரத்தில் கனமழை பெய்யத் தொடங்கியுள்ளது. 


நேற்று முன்தினம் மாலையில் இருந்தே மழை பெய்யத் தொடங்கி படிப்படியாக அதிகரித்து நேற்று முன்தினம் இரவில் கொட்டித் தீர்த்தது. நேற்று பகலிலும் கனமழை கொட்டியது.

அதிகபட்சமாக பரங்கிப்பேட்டையில் 160 மிமீ மழை பெய்துள்ளது.மரக்காணம் 150 மிமீ, செங்கல்பட்டு, மதுராந்தகம் 130 மிமீ, பொன்னேரி, சோழவரம் 110 மிமீ, சிதம்பரம், செய்யூர், கடலூர் 100 மிமீ, வானூர் 90 மிமீ, தரங்கம்பாடி, நெய்வேலி, சீர்காழி, பள்ளிப்பட்டு 80 மிமீ, அரக்கோணம், திருத்தணி, பண்ருட்டி, திருவள்ளூர், மாமல்லபுரம், மயிலம், தாமரைப்பாக்கம், கலவாய், திருவிடைமருதூர், மயிலாடுதுறை, காட்டுமன்னார் கோயில், விழுப்புரம் 70 மிமீ, சென்னை விமான நிலையம், செம்பரம்பாக்கம்,விருத்தாசலம், ஆர்.கே.பேட்டை, திண்டிவனம், கும்பகோணம், கொடவாசல்,பூந்தமல்லி 60 மிமீ, சென்னை அண்ணா பல்கலைக் கழகம், காஞ்சிபுரம், பெரும்புதூர், நன்னிலம், பாபநாசம், சென்னை டிஜிபி அலுவலகம், காவேரிப்பாக்கம், செஞ்சி, செம்பரம்பாக்கம், திருவாலங்காடு 50 மிமீ மழை பெய்துள்ளது. இதுதவிர தமிழகத்தின் பெரும்பாலான இடங்களிலும் மழை பெய்துள்ளது. இந்நிலையில், வட கிழக்கு பருவமழை காலம் முடிய இன்னும் 30 நாட்கள் உள்ள நிலையில் பசிபிக் கடல் பரப்பில் வெப்பம் அதிகரித்ததால் (எல்-நினோ) மாற்றம் அடைந்து திடீரென குளிர்காற்றின் தாக்கம் அதிகரித்துள்ளது. இது கடல் அலைகள் போல எழுந்தும், தாழ்ந்தும் வீசத் தொடங்கியுள்ளது. இதனால் நேற்று முன்தினம் இரவு முதல் வங்கக் கடல் பகுதியில் வட கிழக்கு பருவக் காற்று சற்று வேகமாக வீசத் தொடங்கியுள்ளது. இந்த காற்றில் ஈரப்பதம் அதிக அளவில் காணப்படுகிறது. இதுபோன்ற சூழல் டிசம்பர் 15ம் தேதி வரை நீடிக்கும் என்பதால் தமிழகத்தில் தொடர்ச்சியாக மழை பெய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தரைக்காற்று வீசத் தொடங்கும். இரவில் கடுங்குளிர் காற்று வீசும். இந்த நிகழ்வின் காரணமாக தெற்கு அந்தமான் கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி உருவாகி, திரள் மேகங்கள் தெற்மேற்கு வங்கக் கடலில் பரவியுள்ளது. கடந்த சில நாட்களாக தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வு நிலை இலங்கை மற்றும் வட தமிழக கடலோரப் பகுதியில் நிலை கொண்டு இருப்பதால் அடுத்த நான்கு நாட்களுக்கு தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும். ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யும். உள் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும். சென்னையில் மழை தொடரும் நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் அதிக கனமழை பெய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.

வட கிழக்கு பருவக் காற்று வேகமாக வீசத் தொடங்கும் பட்சத்தில் அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை வடக்கு நோக்கி நகர்ந்து செல்லும்போது மழை குறையவும் வாய்ப்புள்ளது. 3 மாதத்துக்கான பருவமழை காலத்தில் பெய்ய வேண்டிய இயல்பு அளவான 44 செமீ மழை என்பது கடந்த 20 நாட்களில் 53 செமீ அளவுக்கு பெய்துவிட்டது. இது இயல்பு நிலையைவிட கூடுதலானது. கடந்த 100ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தமிழகத்தில் அதிக அளவு மழை பெய்துள்ளது. வரும் நாட்களில் மழையானது தொடருமானால், இந்த ஆண்டில் சராசரியாக 500 மிமீ வரை மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக வட கிழக்கு பருவமழைக் காலங்களில் புயல் போன்ற நிகழ்வுகள் ஏற்படும் போது காற்றுடன் கூடிய மழை பெய்யும். அது பெய்து கொண்டே சென்றுவிடும். ஆனால், இந்த ஆண்டில் தொடர்ச்சியாக காற்றழுத்தங்கள் ஏற்பட்டு, மெதுவாக நகரும் போக்குள்ளதால் மழை நின்று நிதானமாக பெய்கிறது.நேற்றைய நிலவரப்படி கணினி கணக்கின்படி அடுத்த 72 மணி நேரத்தில் அரபிக் கடல் மற்றும் வங்கக் கடலில் புயல் உருவாகும் வாய்ப்புகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையை பொறுத்தவரையில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழையால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் மழை நீரால் சூழப்பட்டு மீண்டும் பெரும் பாதிப்புகளை சந்திக்க தொடங்கியுள்ளது.

புறநகர் பகுதிகளில் தாம்பரம், சோழிங்கநல்லூர், செம்மஞ்சேரி, மேடவாக்கம், பள்ளிக் கரணை, வேளச்சேரி, ஆலந்தூர், நங்கநல்லூர், பல்லாவரம், குரோம்பேட்டை, நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், துரைப்பாக்கம், கொட்டிவாக்கம், திருவான்மியூர், பெசன்ட் நகர், அடையாறு, மந்தைவெளி, மயிலாப்பூர், சைதாப்பேட்டை, தி.நகர், எழும்பூர், தேனாம்பேட்டை, ஆழ்வார்பேட்டை, வட சென்னை என சென்னையின் அனைத்து பகுதிகளும் மழை நீரில் தத்தளிக்கின்றன. இதற்கிடையே நேற்று இரவு கடல் பகுதியில் இருந்து வீசும் காற்றில்அதிக அளவில் ஈரப்பதம் காணப்பட்டதால் நள்ளிரவில் மாதவரம், அம்பத்தூர், நொளம்பூர், நெற்குன்றம், மதுரவாயல், வளசரவாக்கம், ராமநாதபுரம், நந்தம்பாக்கம், ராமாபுரம், பரங்கிமலை ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்தது. தவிரவும் புறநகரில் பல இடங்களில்பலத்த மழை பெய்தது. சென்னையின் முக்கிய சாலைகளான வடபழனி 100அடி சாலை, கோயம்பேடு சாலை, ஆற்காடு சாலை, அண்ணாசாலை, சர்தார்பட்டேல் சாலை என அனைத்து முக்கிய சாலைகளிலும் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சில சாலைகளில் திடீர் பள்ளங்கள் ஏற்பட்டதால் சாதாரண வாகனங்கள் முதல் கனரக வாகனங்கள் வரை செல்ல முடியாமல் தவித்தன. இதனால் 3 முதல் 5 மணி நேரம் வரை போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

CTET: பிப்., 21ம் தேதிஆசிரியர் தகுதி தேர்வு

மத்திய அரசின், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், தனியார், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், ஆசிரியர் பணியில் சேர, மத்திய அரசின், 'சிடெட்' என்ற ஆசிரியர் தகுதித் தேர்வில், தேர்ச்சி பெற வேண்டும். மாநில பள்ளிகளில் பணியாற்ற, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., நடத்தும், 'டெட்' எனப்படும், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.


இதில், மத்திய அரசு தேர்வில் வெற்றி பெற்றவர்களால், மாநில அரசு பள்ளிகளில் பணியில் சேர முடியும். வரும், 2016க்கான, 'சிடெட்' தேர்வுக்கு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. முதல் தேர்வு, பிப்., 21ம் தேதியும், இரண்டாவது தேர்வு, செப்., 18ம் தேதியும் நடக்கிறது. தமிழக அரசின், 'டெட்' தேர்வு, இரண்டு ஆண்டுகளாக நடக்கவில்லை. எனவே, மத்திய அரசின் தேர்வில், தமிழகத்தை சேர்ந்த பட்டதாரிகள், அதிக அளவில் பங்கேற்கலாம் என, தெரியவந்துள்ளது

பொது விடுமுறை நாட்கள் 2016 ல் எவ்வளவு; அரசு அறிவிப்பு


* வங்கிகள் ஆண்டு கணக்கு முடிப்பு விடுமுறை, தமிழகத்தில் உள்ள வணிக வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கு மட்டும் பொருந்தும்.


* தமிழக அரசு கட்டுப்பாட்டில் உள்ள, அனைத்து அலுவலகங்களுக்கும், அனைத்து சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமை விடுமுறை.
* அரசு பொது விடுமுறை நாள், நான்கு ஞாயிற்றுக் கிழமையிலும், இரண்டு சனிக்கிழமையிலும் வருகிறது.
* பொங்கல் பண்டிகைக்கு, தொடர்ந்து மூன்று நாள் விடுமுறை
* அக்டோபரில், தொடர்ந்து மூன்று நாட்கள் உட்பட, 5 நாட்கள் விடுமுறை வருகிறது.
* 2015ம் ஆண்டு, 24 நாட்கள் அரசுபொது விடுமுறை நாட்கள்; 2016க்கு, 23 நாட்கள் மட்டுமே. அதிலும், வங்கி கணக்கு முடிப்பு நாள், நான்கு ஞாயிறு, இரண்டு சனிக்கிழமை, ஆகியவற்றை நீக்கினால், 16 நாட்கள் மட்டுமே, பொது விடுமுறை நாட்களாக உள்ளது.

நாடு முழுவதும் மதிய உணவு திட்டத்திற்கு காமராஜர் பெயர் சூட்டவேண்டும்: பிரதமருக்கு 2 ஆயிரம் மாணவர்கள் கடிதம்

மும்பை, டிச.2-நாடு முழுவதும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் செயல்படுத்தப்படும் மதிய உணவு திட்டத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் பெயரை சூட்டக்கோரி பிரதமருக்கு மும்பையில் உள்ள காந்தி நினைவு ஆங்கிலஉயர்நிலைப்பள்ளியில் பயிலும் 2 ஆயிரம் மாணவர்கள் கடிதம் எழுதி உள்ளனர். 


அந்த கடிதங்கள் மத்திய மந்திரியிடம் சேர்ப்பிக்கப்பட்டது.ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்களின் பசிப்பிணியை போக்கவும், பள்ளிக்கு மாணவர்களின் வருகை விகிதத்தை அதிகப்படுத்தவும் இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் அப்போதைய முதல் அமைச்சராக இருந்த பெருந்தலைவர் காமராஜர் மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார்.அந்த திட்டம் இன்று பல மாநிலங்களில் பல்வேறு பெயர்களில் சிற்சில மாற்றங்களுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பள்ளிக் குழந்தைகளுக்காகஇந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவது பெருமையே ஆனாலும், வெவ்வேறு பெயர்களில் செயல்படுவதை தவிர்த்து இந்த திட்டத்திற்கான முன்னோடி என்றவகையிலும், நாட்டிற்காக உண்மையிலேயே சிந்தித்து உழைத்த பெருந்தலைவர் காமராஜரின் பெயர் என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் என்ற எண்ணத்திலும் நாடு முழுவதும் இந்த திட்டத்திற்கு ‘காமராஜர் மதியம் உணவு திட்டம்‘ என பெயரை சூட்டி நடைமுறைப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாட்டுங்கா லேபர் கேம்பில் உள்ள காந்தி நினைவு ஆங்கில உயர்நிலைப்பள்ளியின் அரசியல் பிரிவு மாணவர்கள் அந்த கடிதங்களின் வாயிலாக பிரதமருக்கு வலியுறுத்தி உள்ளனர்.

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) நடத்தும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு (சி.டி.இ.டி.) டிசம்பர் 4 முதல் 28-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா, நவோதயா, அரசு உதவி பெறும் பள்ளிகள், அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகள், சைனிக் உள்ளிட்ட பள்ளிகளில் ஆசிரியர்களை நியமிப்பதற்காக சி.டி.இ.டி. தேர்வு நடத்தப்படுகிறது.


தேர்வு நடைபெறும் தேதி:
2016-ஆம் ஆண்டு பிப்ரவரி 21-இல் காலை 9.30 முதல் 12 மணி வரையிலும் தாள்-2 தேர்வும், பிற்பகல்2 முதல் 4.30 மணி வரை தாள்-1 தேர்வும் நடத்தப்படும்.

ஒன்றாம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை பணிபுரிய விரும்புபவர்கள்முதல் தாளையும், 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை ஆசிரியராகப் பணிபுரிய விரும்புபவர்கள் இரண்டாம் தாளையும் எழுத வேண்டும். இரண்டு நிலைகளிலும் பாடம் நடத்த விரும்புவோர் இரு தாள்களும் எழுத வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:இதற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.ctet.nic.in என்ற இணையதளத்தில் டிசம்பர் 4 முதல்28-ஆம் தேதிக்குள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.

தேர்வறை அனுமதிச் சீட்டு:ஜனவரி 25-ஆம் தேதி சி.டி.இ.டி இணையகளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.

கல்வித் தகுதி:5-ஆம் வகுப்பு வரியிலான ஆசிரியர்களாகப் பணியாற்ற விரும்புபவர்கள் பிளஸ் 2 தேர்வில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி, 2 ஆண்டு தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு முடித்திருக்க வேண்டும். 8-ஆம் வகுப்பு வரை ஆசிரியராகப் பணிபுரிய விரும்புபவர்கள்பட்டப்படிப்புடன் 2 ஆண்டு தொடக்கக் கல்வி பட்டய படிப்பு மேற்கொண்டிருக்க வேண்டும் அல்லது பட்டப் படிப்புடன், பி.எட். படிப்பையும் முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்:ஒரு தாள் மட்டும் எழுதும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600, இரு தாள்களையும் எழுதுவோர் ரூ.1000-த்தையும் செலுத்த வேண்டும்.எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத்திறனாளிகள் ஒரு தாள் மட்டும் எழுத ரூ. 300-ஐயும், இரண்டு தாள்களையும் எழுத ரூ. 500-ம் செலுத்தினால் போதுமானது.

மேலும் கூடுதல் விவரங்கள் அறியwww.ctet.nic.inஎன்ற இணையதளத்தை பார்க்கவும்.

கனமழை எதிரொலி: தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை? - அரசுதலையிட முடியாது என அறிவிப்பு

கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் நிலையில், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், வங்கி ஊழியர்கள் பணிக்கு வரமுடியாமல் சிரமப்படுகின்றனர்.இந்த மழைவெள்ளத்தில் எப்படி பணிக்கு சென்றுவர முடியும் ? இதர அரசு மற்றும் தனியார்நிறுவனங்களுக்கும் விடுமுறைஅறிவிக்கவேண்டும் அவர்களுக்கு விடுமுறை அளிப்பது குறித்து அரசு உத்தரவிடுமா என கேட்டபோது, தமிழக அரசின் பொதுத்துறை செயலர் யதீந்திரநாத் ஸ்வைன் கூறியதாவது:


''அரசு ஊழியர்களில் அத்தியாவசியத் துறைகளில் பணியாற்றுவோர் தவிர மற்றவர்கள்சூழல் கருதி விடுப்பு எடுத்துக் கொள்கின்றனர். அவர்களுக்கான விடுப்பும் அனுமதிக்கப்படுகிறது.தனியார் துறையினர், வங்கி ஊழியர்களுக்கு சூழல் கருதி அந்த நிறுவனங்கள் விடுமுறை அளிக்கலாம். அதில் அரசு தலையிட முடியாது'' என்றார்.

அடுத்த 48 மணிநேரத்திற்கு மிக, அதிக கனமழை பெய்யும் - எம்.எஸ். ரத்தோர் அறிவிப்பு!

*.தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும் என்றாலும் அடுத்த 48 மணிநேரத்திற்கு மிக, அதிக கனமழை பெய்யும் என இந்திய வானியல் நிலைய இயக்குநர் - எம்.எஸ். ரத்தோர் அறிவிப்பு!
*.கர்நாடகா ரூ.5 கோடி நிதி உதவி
*.இலவச பி.எஸ்.என்.எல் சேவை ஒரு வாரத்திற்கு: -

சென்னையில் மழைவெள்ளம்: வாடிக்கையாளர்களுக்கு ஒரு வாரம் இலவச சேவை வழங்கும் பி.எஸ்.என்.எல்.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு உள்ள சென்னையில் அரசு பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். ஒரு வாரத்திற்கு இலவச சேவையை வழங்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.இதுகுறித்து மத்திய தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைமந்திரி ரவிசங்கர் பிரசாத் பேசுகையில், 


“சென்னையில் வெள்ளம் காரணமாக இன்றில் இருந்து ஒருவார காலம் பி.எஸ்.என்.எல். தனது வாடிக்கையாளர்களுக்கு இலவச சேவையை வழங்க முடிவு செய்துள்ளது. இதுவரையில் கட்டணம் செலுத்தாமல் இருந்தாலும், அவர்களுக்கான சேவையை துண்டிக்காமல் இருக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.சென்னையில் தொலைத் தொடர்பு துண்டிக்கப்படாது. சென்னையில் உயரமான டவர்கள் மற்றும் தொடர்புகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்” என்றார்.இதேபோல் ரிலையன்ஸ், வோடபோன் நிறுவனங்களும் இலவச அழைப்புகளை வழங்கியுள்ளது.