யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

20/11/17

தமிழகத்தில் 1-12ம் வகுப்பு வரையிலான பள்ளி பாடத் திட்ட வரைவு: முதல்வர் வெளியிட்டார்....!*

பள்ளிகளுக்கான புதிய பாடத்திட்ட வரைவை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார்*

*பள்ளி மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டம் உருவாக்கப்படும் என்று ஜூலை 4 ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது*


*புதிய பாடத்திட்ட வரைவு பள்ளிக்கல்வித்துறை இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது*

*www.tnscert.org என்ற இணையதளத்தில் புதிய பாடத்திட்ட வரைவை முதலமைச்சர் வெளிட்டார்*

*இணையதளத்தில் வரைவு பாடத்திட்டங்கள் பற்றி 15 நாளில் பெற்றோர், கல்வியாளர்கள் உள்ளிட்டோர் கருத்து கூறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது*

*முதல் கட்டமாக இந்த ஆண்டு 1,6,9 மற்றும் 11ம் வகுப்புகளுக்கு பாடதிட்டம் மாற்றம் செய்யப்படுகிறது*

*அதைத்தொடர்ந்து அடுத்தாண்டு 2,7,10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பாடத்திட்டம் மாற்றப்படுகிறது*

DSE PROCEEDINGS-தமிழக மாணவர்களை அனைத்து விதமான போட்டி தேர்வுகளுக்கும் மற்றும் திறன் தேர்வுகளுக்கும் தயார் செய்வதற்கு பயிற்சி மையங்கள் அமைத்தது-2 வாரங்களுக்கான பயிற்சி வகுப்புகள் -விவரம் அனுப்புதல் சார்பு!!

SABL வகுப்புகள் ஒரு பள்ளியில் செயல்படுத்தப்படவில்லை எனில் வகுப்பாசிரியர் மட்டுமல்லாது தலைமையாசிரியரும் பொறுப்பேற்க வேண்டும் - RTI பதில்கள்

                                               

இணையதள மின் கட்டண சேவை ரத்து!!!

சென்னை:மின் நுகர்வோர், மின் கட்டணத்தை, மின் வாரிய கட்டண மையங்கள், 
தபால் நிலையம், அரசு 'இ - சேவை' மையங்கள், குறிப்பிட்ட சில வங்கிகளில் ரொக்க பணம், காசோலை, வரைவோலை என, ஏதேனும் ஒன்றில் செலுத்தலாம்.மின் வாரிய இணையதளம் மற்றும் மொபைல், 'ஆப்' எனப்படும், மொபைல் அப்ளிகேஷனிலும் கட்டணத்தை செலுத்த முடியும்.

இந்நிலையில், நேற்று இரவு, 10:00 முதல், இன்று மதியம், 3:00 மணி வரை, இணையதள மின் கட்டண சேவையை, பராமரிப்பு பணிக்காக, மின் வாரியம் நிறுத்தியுள்ளது. இந்த சமயத்தில், இணையதளம் வாயிலாக மின் கட்டணம் செலுத்த முடியாது.

சுகாதாரமற்ற கழிப்பிட பயன்பாட்டில் இந்தியா... முதலிடம்!!!

                                        
கொச்சி:நாடு முழுவதும், 73 கோடி பேர், சுகாதாரமற்ற
இடங்களில், இயற்கை உபாதைகள் கழிப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகிஉள்ளது. கழிப்பறை வசதி இல்லாததால், 35 கோடி பெண்கள், பாதுகாப்பற்ற இடங்களில் இயற்கை உபாதைகளை கழிப்பதாகவும், ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'வாட்டர் எய்டு' எனப்படும், சர்வதேச தொண்டு நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:தனிநபர் சுகாதாரம் மற்றும் கழிப்பறை பயன்பாடு குறித்து நடத்தப்பட்ட ஆய்வில், பல தகவல்கள் கிடைத்துள்ளன.உலக மக்கள் தொகையில், இரண்டாம் இடத்தில் உள்ள இந்தியாவில், திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்துவோர் அதிகம் உள்ளனர்.

சுகாதாரமற்ற இடங்களில் இயற்கை உபாதைகளை கழிப்போர் எண்ணிக்கையில், உலக அளவில், இந்தியா முதலிடத்தில் உள்ளது.

இந்தியாவில், 73 கோடி பேர், சுகாதாரமற்ற இடங்களில் இயற்கை உபாதைகளை கழிக்கின்றனர். 35 கோடி பெண்கள், திறந்தவெளியில், சுகாதாரமற்ற முறையில், இயற்கை உபாதைகளை கழிக்கின்றனர். இந்தியர்களில் பெரும்பாலானோர், முறையான கழிப்பறைகளை பயன்படுத்துவதில்லை.

உலக மக்கள் தொகையில், முதலிடம் வகிக்கும் சீனா, சுகாதாரமற்ற கழிப்பறை பயன்பாட்டில் இரண்டாம் இடம் வகிக்கிறது. இந்த நாட்டில், 34 கோடி பேர், சுகாதாரமற்ற கழிப்பிடங்களை பயன்படுத்துகின்றனர். ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியா, இந்த பட்டியலில், மூன்றாம் இடத்தில் உள்ளது.

உலகம் முழுவதும், 110 கோடி பேர், சுகாதாரமற்ற கழிப்பிடங்களை பயன்படுத்துகின்றனர். நீர் பற்றாக்குறை, குறைவான இட வசதி, மக்கள் நெருக்கடி போன்ற பல காரணங்களால் இந்த அவலம் நீடிக்கிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஐந்து கோடி கழிப்பறை

உலக அளவில், சுகாதாரமற்ற கழிப்பறைகளை பயன்படுத்துவோர் எண்ணிக்கையில், இந்தியா முதலிடம் வகிக்கும் நிலையில், சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் நாடுகளின் பட்டியலிலும், இந்தியா முன்னிலை வகிக்கிறது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின், துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ், அக்., 2014 முதல், நவ., 2017 வரை, 5.2 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.

சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், நாடு முழுவதும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம், பல கிராமங்கள், திறந்தவெளி கழிப்பிடம் இல்லாதவையாக மாறியுள்ளன. மிக விரைவில், நாடு முழுவதும் இந்த நிலையை ஏற்படுத்த, மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளதாக, அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சசி கும்பலின் தில்லாலங்கடிகளை போட்டுக் கொடுத்தது...'ஸ்லீப்பர் செல் '!

சசி கும்பலின் தில்லாலங்கடி வேலைகளை, 'ஸ்லீப்பர் செல்'கள்,
'போட்டு'க் கொடுத்ததால் தான், ஜெயலலிதா வசித்த, போயஸ் கார்டன் இல்லத்தில் சோதனை நடத்தப்பட்டது' என்ற, பகீர் தகவலை, வருமான வரித்துறையினர் வெளியிட்டுள்ளனர். கோடிக்கணக்கில் குவித்த சொத்துகளின், அசல் ஆவணங்கள் அங்கு இருந்ததால், சோதனை என்ற தகவல் பரவியதும், பின்னங்கால் பிடரியில் பட, இளவரசியின் மகன் விவேக், அங்கு ஓடி வந்துள்ளார். ஜெயலலிதாவின் அறை உட்பட, சில அறைகளில் சோதனை நடத்தக் கூடாது என, அவர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. அதேநேரத்தில், வருமான வரித்துறையினர் அடுத்து எங்கு, சோதனை நடத்தப் போகின்றனரோ என்ற கலக்கத்தில், சசிகலாவின் மன்னார்குடி உறவுகள் உள்ளன.
சசிகலா கும்பலைச் சேர்ந்தவர்களின் வீடுகள் மற்றும் நிறுவனங்கள் என, 215 இடங்களில் நவம்பர், 9ல், வருமான வரித்துறை சோதனை நடத்தியது. ஐந்து நாட்கள் தொடர்ந்த சோதனையின் முடிவில், முதற்கட்டமாக, 1,430 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வரி ஏய்ப்பு நடந்தது கண்டறியப்பட்டது.

ஆதாரங்கள் சிக்கின

மேலும், பல நுாறு கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்கள், பினாமி சொத்துகள்
மற்றும் போலி நிறுவன பரிவர்த்தனைகள் குறித்த ஆதாரங்களும் சிக்கின.தொடர்ந்து, ஜெ.,
உதவியாளர் பூங்குன்றன், இளவரசி மகன் விவேக், மகள்கள் கிருஷ்ணபிரியா, ஷகிலா உள்ளிட்ட பலரிடம், வரித்துறை விசாரணை நடத்தியது.

ஜெ., மறைவுக்குப்பின், அமைச்சர் விஜயபாஸ்கர், சேகர் ரெட்டி ஆகியோர், வரித்துறை சோதனையில் சிக்கியதை பார்த்து பீதியடைந்த சசிகலா கும்பல், 25 ஆண்டுகளாக குவித்த பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான
சொத்து ஆவணங்களை, நம்பிக்கையான இடங்களில் பதுக்கி, 'அப்பாடா...' என, நிம்மதி
பெருமூச்சு விட்டிருந்தது.ஆனால், வரி துறையோ, பாகிஸ்தான் மீது இந்திய ராணுவத்தின், துல்லிய தாக்குதல் போல் குறி வைத்து, 215 இடங்களில் சோதனை நடத்தியது. இதில், தங்கள் கும்பலின், 'ஜாதகமே' அவர்களிடம் சிக்கியதை அறிந்து, மன்னார்குடி கும்பல் ஆடிப்போனது.இதைத் தொடர்ந்து, யாரும் சற்றும் எதிர்பாராத வகையில், போயஸ் கார்டனில், நேற்று முன் தினம் இரவு, வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

சசிகலா மற்றும் விவேக் ஆகியோரின் அறைகளில், இந்த சோதனை நடந்தது. இரவு, 9:00 மணிக்கு துவங்கிய சோதனை,நள்ளிரவு, 1:30 மணிக்கு முடிந்தது. அதில், சசிகலா கும்பல்
வாங்கிக் குவித்த பல சொத்துகளின் அசல் ஆவணங்கள் மற்றும் போலி நிறுவனங்களில் செய்யப்பட்ட, பல கோடி ரூபாய் முதலீடுகள் குறித்த விபரங்கள் சிக்கியுள்ளன.

கடத்த திட்டம்

போயஸ் கார்டனில் நடந்த சோதனைக்கு, வரித்துறையினர் பல மாதங்களாக சேகரித்த தகவல்கள் ஆதாரமாக இருந்தாலும், சசிகலா கும்பலைச் சேர்ந்த சிலர், வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு, 'ஸ்லீப்பர் செல்'களாக செயல்பட்டு, பல விஷயங்களை, 'போட்டு'க் கொடுத்ததும், முக்கிய காரணமாகும்.அந்த, 'ஸ்லீப்பர் செல்'கள் வாயிலாகத்தான், போயஸ் கார்டனில் பதுக்கியுள்ள ஆவணங்களை, வேறு இடங்களுக்கு, சசி சொந்தங்கள் கடத்த திட்டமிட்டிருந்தது தெரிய வந்துள்ளது.

அதனால் தான், வருமான வரித்துறையினர், அதிரடி சோதனை நடத்தி உள்ளனர். இதை வருமான வரித்துறை வட்டாரங்கள் சிலவும், உறுதி செய்துள்ளன.வழக்கமாக, சசி கும்பலைச் சேர்ந்த தினகரன் பேட்டி அளிக்கும் போது, 'பழனிசாமி அணியில்,எங்களின், 'ஸ்லீப்பர் செல்'கள் பதுங்கி உள்ளனர். தகுந்த சமயத்தில், அவர்கள் செயல்படுவர்' என, கூறி வந்தார்.
ஆனால், அவரது கும்பலிலேயே, 'ஸ்லீப்பர் செல்'கள் இருப்பதை கண்டு பிடிக்க தவறி விட்டார்.போயஸ் கார்டன் இல்லத்தில், சோதனை நடந்தபோது, பின்னங்கால் பிடரியில் பட, விவேக் அங்கு ஓடி வந்தார். அதற்கு காரணம், 'மிக பாதுகாப்பான இடம்' என, அங்கு பல முக்கியத்துவம் வாய்ந்த ஆவணங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததே காரணம்.

215 இடங்கள்:

அதனால் தான், ஒப்பாரி
வைக்காத குறையாக, 'அது ஜெ., வாழ்ந்த கோவில்' எனக்கூறி, தினகரன் ஆதரவாளர்கள், திசை திருப்ப பார்த்தனர். ஆனால், முக்கிய ஆவணங்கள், இச்சோதனையில் வசமாக சிக்கிவிட்டன. வருமான வரித்துறையினர், ஒரே நாளில், 215 இடங்களில் சோதனை நடத்தி யதைத் தொடர்ந்து, ஜெ., வாழ்ந்த போயஸ் கார்டனிலும் சோதனை நடந்துள்ளது. அதனால், அடுத்த சோதனை எங்கு நடக்குமோ என, மன்னார்குடி உறவுகள் கலக்கம் அடைந்து உள்ளன.

சொத்து ஆவணங்கள் பறிமுதல்

வரித்துறை அதிகாரிகள் கூறியதாவது:

போயஸ் கார்டனில், சசிகலா கும்பல், ஏராள மான சொத்துகளின், அசல் ஆவணங்களை பதுக்கி வைத்திருந்தது. அதன் வாயிலாக, சொத்துகள் தொடர்பாக தெளிவான புரிதல் கிடைத்துள்ளது. அதேபோல, போலி கம்பெனி களின், பல முக்கிய பரிவர்த்தனைகள் தொடர் பான ஆவணங்கள், மின்னணு சாதனங்களில் சேகரித்து வைக்கப்பட்டு இருந்தன.

அத்துடன், சில கடிதங்களும் சிக்கி
உள்ளன. மேலும், சோதனையில் சிக்கிய, 'டேப்லெட், லேப்-டாப்' மற்றும் நான்கு, 'பென் - டிரைவ்'களில், குவிந்துள்ள தகவல்களை, அலசி, ஆராய்ந்து வருகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஐகோர்ட் அனுமதியா?

ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை நிர்வகிப்பது தொடர்பாக, ஐகோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது. அந்த வீட்டை அரசுடைமை யாக்க, மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நிலையில், வருமான வரித்துறையினர் அங்கு சோதனை நடத்தியது, பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தியது. அவர்கள், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுடன் தான், அங்கு நுழைந்ததாக தகவல் வெளியானது.

ஆனால், வரித்துறையினர் கூறுகையில், 'இது சசிகலா குடும்பத்தினர் வீடுகளில் நடந்த
சோதனையின் தொடர்ச்சி என்பதால், யாரிடமும் அனுமதி பெற தேவையில்லை. அதுதவிர, தேவைப்படும் இடத்தில், சோதனை நடத்த எங்களுக்கு அதிகாரம் உள்ளது' என்றனர்.

வேலைவாய்ப்பு: கனரா வங்கியில் பணி!

                                                   
கனரா வங்கியின் கீழ் செயல்பட்டுவரும் கேன்ஃபின் ஹோம்ஸ்
நிறுவனத்தில் காலியாக உள்ள மேலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 25

பணியின் தன்மை: மேலாளர், முதுநிலை மேலாளர் - 20

சம்பளம்: மேலாளர் பணிக்கு மாதம் ரூ.28,000 - 43,450/- முதுநிலை மேலாளர் பணிக்கு ரூ.33,300 - 47,700/-

வயது வரம்பு: 28 - 35க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை: நேர்முகத் தேர்வு மூலம் தேர்ச்சி நடைபெறும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100/-

கடைசித் தேதி: 23.11.2017

மேலும் விவரங்களுக்கு www.canfinhomes.com என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

இடைநிலை ஆசிரியகளின் ஊதிய முரண்பாடு மனுவுக்கு பதிலளிக்க ஊத்தரவு!!



ஏழாவது ஊதியக்குழுவின் முரண்பாடுகளை களைய வேண்டும் ஆசிரியர் பேரவை!!!

கறம்பக்குடி ஒன்றியத்தில் மட்டும் 70க்கும் மேற்பட்டோர் 7வது ஊதியக்குழு ஊதிய நிர்ணய விருப்ப படிவத்தை திரும்ப பெற உதவி தொ.க.அலுவலகத்தில் மனு!!!

அலுவலகங்களில் நடைபெறும் பணிகளை மேற்கொள்ள அதே ஒன்றியத்தில் பணிபுரியும் ஆசிரியர்களை ஈடுபடுத்திக் கொள்ளலாமா?தகவலறியும் உரிமைச் சட்டம் மூலம் பெற்ற தகவல்

விபத்தில் உயிரை காப்பாற்றுபவர்களுக்கு பரிசு!!!

                                       
விபத்தில் சிக்கியவர்களை வேடிக்கை பார்க்காமல் காப்பாற்றினால்
ரூ.2000 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என்று டெல்லி அரசு அறிவித்துள்ளது.

சாலை விபத்துகளில் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பதைக் காட்டிலும் விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவ முன் வராததால் ஏற்படும் கால தாமதம் காரணமாக பலர் உயிரிழக்கின்றனர்.இதனால் மனித நேய அடிப்படையில் விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்ற டெல்லி அரசு ஒரு புதிய திட்டத்தை கொண்டுவந்துள்ளது.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நேற்று (நவம்பர் 18) நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்தியேந்திர ஜெயின், “ டெல்லியில் சாலை விபத்தில் பலியாவோர் எண்ணிக்கையைக் குறைக்க மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கும் வகையில் மாநில அரசு புதிய திட்டத்தைச் செயல்படுத்தவுள்ளது.

அதன்படி சாலை விபத்துகளில் சிக்கி உயிருக்குப் போராடுபவர்களை மருத்துவமனையில் அனுமதித்து உயிரைக் காப்பாற்றுபவர்களுக்கு டெல்லி அரசு சார்பில் ரூ. 2 ஆயிரம் பணம் பரிசாக வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்று கூறினார்.

இந்தத் திட்டத்தின் மூலம் மக்கள் விபத்தில் சிக்கியவர்களை தயங்காமல் காப்பாற்றுவார்கள். அதன்மூலம் பலி எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளார். இந்தத் திட்டம் மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

வெளிமாநிலத்தவருக்குப் பணி: வைகோ கண்டனம்!

                                              
டி.என்.பி.எஸ்.சி தேர்வில் பிற மாநிலத்தவர்களும் விண்ணப்பிக்கலாம்
என்ற தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிப்புக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று (நவம்பர் 19) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 9351 காலிப் பணியிடங்களுக்கான தேர்வு பிப்ரவரி 11ல் நடத்தப்படுகிறது. இந்தப் போட்டித் தேர்வுக்கு மற்ற மாநிலத்தவரும் விண்ணப்பிக்கும் வகையில் கடந்த ஆண்டு விதிகளைத் திருத்தியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

தமிழ்நாட்டில் 80 லட்சம் பேர் படித்துவிட்டு வேலையில்லாமல் தவித்து வருகின்றனர். லட்சக்கணக்கான தமிழ்நாட்டு இளைஞர்கள் அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் தமிழ்நாடு அரசு வெளி மாநிலத்தவருக்கும் விண்ணப்பிக்க அனுமதி அளித்துள்ளது என்பது அதிர்ச்சியளிக்கிறது. குஜராத், கர்நாடகம், மராட்டிய மாநிலங்கள் எல்லாம் அம்மாநில மக்களுக்குத் தான் முன்னுரிமை அளிக்கின்றன. தமிழ்நாடு மட்டும் இந்த விதிகளில் திருத்தம் செய்திருப்பது முற்றிலும் நியாயமற்றது. கண்டனத்துக்குரியது. இந்த விதிகளை உடனடியாக திருத்தம் செய்ய வேண்டும்" என்றார்.

அரசாணை விபரமும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட சலுகைகளும்!!!

TET: வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய முடியாது!!!

                                              
தமிழகத்தின் பாடத்திட்ட மாற்றத்தை நாளை முதல்வர் பழனிசாமி
தொடங்கி வைக்க உள்ளதாகவும் மேலும் வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய முடியாது என்றும்,வெயிட்டேஜ் மதிப்பெண் முறையால் பணியில் சேர முடியாதவர்களுக்காக குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார்

தமிழகத்தில் 11 ஆண்டாக கிடப்பில் போடப்பட்டுள்ள சிறப்பாசிரியர் பாடத்திட்டம்

தமிழகத்தில் பள்ளி மாணவ, மாணவிகளின் திறன்களை வெளிக்கொண்டுவர
கடந்த 1972ம் ஆண்டு சிறப்பாசிரியர் பணியிடம் உருவாக்கப்பட்டது. இதில், ஓவியம், தையல், இசை உள்ளிட்ட பாடம் கற்பிக்கப்படுகிறது.
1972ம் ஆண்டு முதல் தொழில் ஆசிரியர் சான்றிதழ் பயிற்சியின்படியே ஆசிரியர்கள், மாணவர்களுக்கு சிறப்பு பாடங்கள் கற்பித்துவருகின்றனர்.இந்நிலையில், கடந்த 1987ம் ஆண்டு சிறப்பு ஆசிரியர்களுக்கான பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டது. இந்தபாடத்திட்டம் 2006ம் ஆண்டு வரை நடைமுறையில் இருந்தது. பின்னர், புதிய பாடத்திட்டம் தயாரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு சென்ைனயில் பணிமனை அமைக்கப்பட்டது. 2வது கட்ட பணிக்குபின், பாடத்திட்ட தயாரிப்பு பணிகள் முடிக்கப்பட்டது.

இந்த பாடதிட்டத்தில், 6ம் வகுப்புக்குபுள்ளி, கோடு, வடிவம் குறித்த பாடத்திட்டம், 7 மற்றும் 8ம் வகுப்புக்கு கற்பனை ஓவியங்கள் வரையும் பயிற்சி பாடத்திட்டம், 9ம் வகுப்புக்கு காகிதம் கொண்டு வெட்டி ஒட்டுதல் (கொலேஜ் வர்க்), சோப்பு கட்டிங் தயாரித்தல் பாடத்திட்டம், 10ம் வகுப்புக்கு வரலாற்று சின்னங்கள், குகை ஓவியங்கள், நாகரிக உடைகள் என்ற முறையில் பாடத்திட்டங்கள் தயாரிக்கப்பட்டது.ஒரு கல்வியாண்டில் மாணவர்களுக்கு 30 பாடங்களில், 20 பாடங்கள் வகுப்பு வேளைகளிலும், 10 பாடங்கள் வீட்டு பாடங்களாகவும் வரைந்து முடிக்கும் வகையில் இப்புதிய பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டது.

இப்புதிய பாடத்திட்டங்களுக்கு மதிப்பெண் வழங்கவும் கல்வித்துறை முடிவு செய்தது. ஆனால், இப்பாடத்திட்டம் பள்ளிகளில் செயல்படுத்தாமல் கிடப்பில் போடப்பட்டு விட்டது. 2006ம் ஆண்டு முதல் இதுவரை கடந்த 11 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் பாதிப்படைந்துள்ளனர். நீண்ட இழுபறிக்கு பிறகு சிறப்பாக தயாரிக்கப்பட்ட இப்பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே அனைத்து சிறப்பாசிரியர்களின் கோரிக்கையாக உள்ளது.

உங்க வங்கி கணக்கில் 10000 ரூபாய் இருக்க அப்ப நீங்க வறுமை கோட்டிற்கு கீழ் இருக்க தகுதியில்லை!!

ஒரு கோடி மதிப்புள்ள இடம் அரசுப்பள்ளிக்கு தானமாக வழங்கிய மாமனிதர்!!!

செல்போனில் சாதி பெயரைச் சொன்னாலும் சிறை!!!

பொது இடங்களில் செல்பேசியில் தாழ்த்தப்பட்டவர்க
ளை சாதி ரீதியில் திட்டினால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

பட்டியலினத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் சாதிரீதியாக போன் மூலம் மோசமாகப் பேசியதாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில் முதல் தகவலறிக்கைப் பதிவுசெய்யப்பட்டது. அதைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்ட நபர் மனுத் தாக்கல் செய்தார்.

கடந்த ஆகஸ்ட் 17 ஆம் தேதி,அலகாபாத் உயர் நீதிமன்றம் முதல் தகவலறிக்கையை ரத்து செய்ய மறுத்துவிட்டது. அந்த நபர் இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் ஜே செலமேஸ்வர் மற்றும் எஸ் அப்துல் நாசர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான விவேக் விஷ்னோய் என்ற வழக்கறிஞர், சம்பவ நடந்தபோது புகார் அளித்த பெண்ணும், தனது கட்சிக்காரரும் வெவ்வேறு இடங்களில் இருந்ததாகவும், செல்பேசி மூலமே பேசிக்கொண்டதாகவும் அதனால், அவர் மீது பதிவுசெய்யப்பட்ட முதல் தகவலறிக்கையை ரத்து செய்யவேண்டும் என்றும் வாதாடினார். ஆனால், அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய முடியாது என நீதிபதிகள் மறுப்புத் தெரிவித்தனர். மேலும், சாதிரீதியாக மோசமான கருத்துகளை செல்பேசி மூலம் தெரிவித்தாலும் குற்றம் என்றும் என்று உத்தரவிட்டனர்.

தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களை குறிவைத்து, சாதி ரீதியாக விமர்சிப்பதும், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஆட்சேபமான கருத்துகளை பதிவிடுவதும் தண்டனைக்குரிய குற்றம் என டெல்லி உயர்நீதிமன்றம் கடந்த ஜூலை மாதம் எச்சரிக்கை விடுத்தது நினைவுகூரத்தக்கது.

செல்போனில் சாதி பெயரைச் சொன்னாலும் சிறை!!!

பொது இடங்களில் செல்பேசியில் தாழ்த்தப்பட்டவர்க
ளை சாதி ரீதியில் திட்டினால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

பட்டியலினத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் சாதிரீதியாக போன் மூலம் மோசமாகப் பேசியதாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில் முதல் தகவலறிக்கைப் பதிவுசெய்யப்பட்டது. அதைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்ட நபர் மனுத் தாக்கல் செய்தார்.

கடந்த ஆகஸ்ட் 17 ஆம் தேதி,அலகாபாத் உயர் நீதிமன்றம் முதல் தகவலறிக்கையை ரத்து செய்ய மறுத்துவிட்டது. அந்த நபர் இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் ஜே செலமேஸ்வர் மற்றும் எஸ் அப்துல் நாசர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான விவேக் விஷ்னோய் என்ற வழக்கறிஞர், சம்பவ நடந்தபோது புகார் அளித்த பெண்ணும், தனது கட்சிக்காரரும் வெவ்வேறு இடங்களில் இருந்ததாகவும், செல்பேசி மூலமே பேசிக்கொண்டதாகவும் அதனால், அவர் மீது பதிவுசெய்யப்பட்ட முதல் தகவலறிக்கையை ரத்து செய்யவேண்டும் என்றும் வாதாடினார். ஆனால், அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய முடியாது என நீதிபதிகள் மறுப்புத் தெரிவித்தனர். மேலும், சாதிரீதியாக மோசமான கருத்துகளை செல்பேசி மூலம் தெரிவித்தாலும் குற்றம் என்றும் என்று உத்தரவிட்டனர்.

தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களை குறிவைத்து, சாதி ரீதியாக விமர்சிப்பதும், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஆட்சேபமான கருத்துகளை பதிவிடுவதும் தண்டனைக்குரிய குற்றம் என டெல்லி உயர்நீதிமன்றம் கடந்த ஜூலை மாதம் எச்சரிக்கை விடுத்தது நினைவுகூரத்தக்கது.