யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

20/11/17

விபத்தில் உயிரை காப்பாற்றுபவர்களுக்கு பரிசு!!!

                                       
விபத்தில் சிக்கியவர்களை வேடிக்கை பார்க்காமல் காப்பாற்றினால்
ரூ.2000 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என்று டெல்லி அரசு அறிவித்துள்ளது.

சாலை விபத்துகளில் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பதைக் காட்டிலும் விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவ முன் வராததால் ஏற்படும் கால தாமதம் காரணமாக பலர் உயிரிழக்கின்றனர்.இதனால் மனித நேய அடிப்படையில் விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்ற டெல்லி அரசு ஒரு புதிய திட்டத்தை கொண்டுவந்துள்ளது.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நேற்று (நவம்பர் 18) நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்தியேந்திர ஜெயின், “ டெல்லியில் சாலை விபத்தில் பலியாவோர் எண்ணிக்கையைக் குறைக்க மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கும் வகையில் மாநில அரசு புதிய திட்டத்தைச் செயல்படுத்தவுள்ளது.

அதன்படி சாலை விபத்துகளில் சிக்கி உயிருக்குப் போராடுபவர்களை மருத்துவமனையில் அனுமதித்து உயிரைக் காப்பாற்றுபவர்களுக்கு டெல்லி அரசு சார்பில் ரூ. 2 ஆயிரம் பணம் பரிசாக வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்று கூறினார்.

இந்தத் திட்டத்தின் மூலம் மக்கள் விபத்தில் சிக்கியவர்களை தயங்காமல் காப்பாற்றுவார்கள். அதன்மூலம் பலி எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளார். இந்தத் திட்டம் மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக