யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

21/12/15

மிலாது நபி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழாக்கள்: பள்ளிகளுக்கு 24-ந் தேதி முதல் ஜனவரி 1-ந் தேதி வரைவிடுமுறை; பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவிப்பு

மிலாது நபி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழாக்களையொட்டி 24-ந் தேதி முதல் ஜனவரி 1-ந் தேதி வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என்று பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் தெரிவித்தார்.

மழை வெள்ள பாதிப்பு

மழை வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு 33 நாட்கள் விடுமுறை விடப்பட்டது. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டது.இந்த நிலையில்,
24-ந் தேதி மிலாது நபி, 25-ந் தேதி கிறிஸ்துமஸ், ஜனவரி 1-ந் தேதி புத்தாண்டு ஆகியவை வருகின்றன. இந்த 3 நாட்களும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுமா? என்ற குழப்பத்தில் ஆசிரியர்களும், மாணவர்களும் இருந்தனர்.

இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

24-ந் தேதி முதல் விடுமுறை2015-2016-ம் கல்வி ஆண்டுக்கான பள்ளிக்கூட விடுமுறைகள் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு அச்சிடப்பட்டு உள்ளது. அதன்படி தமிழ்நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் 24-ந் தேதி முதல் ஜனவரி 1-ந் தேதி வரை விடுமுறைவிடப்பட்டுள்ளது. மிலாது நபி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழாக்கள் இந்த விடுமுறையில் அடங்கும். சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், கடலூர் ஆகிய 4 மாவட்டங்களில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் 24, 25, 27, ஜனவரி 1-ந் தேதி ஆகிய 4 நாட்கள் மட்டும் நடத்தக்கூடாது. மற்ற நாட்களில் சிறப்பு வகுப்புகள் இந்த 4 மாவட்டங்களில் மட்டும் நடத்தப்பட வேண்டும்.

இவ்வாறு ச.கண்ணப்பன் தெரிவித்தார்.

பள்ளிக்கல்வி CALENDER படி பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை

கணினி பாடங்கள்யு.ஜி.சி., உத்தரவு

சி.பி.எஸ்.இ.,யின், புதிய மூன்று கணினி பாடங்களில் தேர்ச்சி பெறுவோரை, இளங்கலை படிப்புக்கு அனுமதிக்குமாறு, அனைத்து பல்கலைகளுக்கும், பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., உத்தரவிட்டு உள்ளது.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் என்ற, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், நடப்பு கல்வியாண்டில், மூன்று புதிய கணினி பாடப் பிரிவுகள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன. 

கணினி அறிவியல், தகவல் தொடர்பு செயல்முறை மற்றும் இணைய ஊடக தொழில்நுட்பம் ஆகிய பாடங்கள், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2வில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன.
இந்த பாடங்களுக்கு, எழுத்து தேர்வுக்கு, 70 சதவீதம்; செய்முறைக்கு, 30 சதவீதம் மதிப்பெண் வழங்கப்படும். எனவே, தேர்ச்சி பெறும் மாணவர்களின், கணினி பாட மதிப்பெண் படி, இளங்கலை பட்டப்படிப்பில், மாணவர் சேர்க்கை நடத்தலாம் என, யு.ஜி.சி., தெரிவித்து உள்ளது.

விடுமுறை நாட்களில்ஆசிரியர்களுக்கு பயிற்சி

பள்ளி நாட்களில், பயிற்சிக்கு வர, ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், 'விடுமுறை நாட்களில் பயிற்சிக்கு வர வேண்டும்' என கல்வித்துறை உத்தரவிட்டுஉள்ளது.பள்ளிக்கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, அனைவருக்கும் கல்வி இயக்ககமான, எஸ்.எஸ்.ஏ., மற்றும் அனைவருக்கும் இடைநிலைக் கல்வி 

இயக்ககமான, ஆர்.எம்.எஸ்.ஏ., மூலம், ஆசிரியர்களுக்கு பணி குறித்த சிறப்பு பயிற்சி வழங்கப்படுகிறது.இந்த பயிற்சிக்கு, ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்; பாடம் நடத்தக் கூட நேரம் இல்லாத நிலையில், 
பயிற்சிக்கு அழைப்பதாக குற்றஞ்சாட்டினர்.இதையடுத்து, கிறிஸ்துமஸ், புத்தாண்டு தொடர் பண்டிகை விடுமுறை நாட்களில், மூன்று நாட்கள் பயிற்சிக்கு வர உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னையில், டிச., 28 முதல், 30ம் தேதி வரை, 6 - 8ம் வகுப்பு வரையிலான ஆசிரியர்களுக்கு கணித பாடப் பயிற்சி நடத்தப்படும். இதில், ஆசிரியர்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும் என, கல்வித் துறை உத்தர விட்டுள்ளது.

10ம் வகுப்பு தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம்

சென்னை:பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு, தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.இதுகுறித்து, அரசு தேர்வுகள் துறை இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:'மார்ச் மாதம் நடக்க உள்ள, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விரும்பும் தனித்தேர்வர்கள், டிச., 24ம் தேதி வரை, 'ஆன்லைனில்' விண்ணப்பிக்கலாம்' என, அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், டிச., 24ம் தேதி மிலாதுன் நபி பண்டிகையை முன்னிட்டு, தனித்தேர்வர்கள் விண்ணப்பிப்பதற்கான அவகாசம், டிச., 29ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.தேர்வுத் துறையின் ஆன்லைன் சேவை மையங்களில், சரியாக பதிவுப்பணி நடக்கவில்லை என, சில இடங்களில் புகார் எழுந்துள்ளது. எனவே, முதன்மை கல்வி அதிகாரிகள் உள்ளிட்ட, கல்வி அதிகாரிகள், சேவை மையங்களை நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என, தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தராதேவி 
உத்தரவிட்டு உள்ளார்.

ஜே.இ.இ., 3ம் கட்ட நுழைவு தேர்வு தேதி அறிவிப்பு

மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில், இன்ஜி., படிப்பதற்கான நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம், டிச., 31ம் தேதியுடன் முடிகிறது.
மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களான, ஐ.ஐ.டி., - ஐ.ஐ.எஸ்., - என்.ஐ.டி., - ஐ.ஐ.ஐ.டி., போன்றவற்றில், பி.இ., - பி.டெக்., - பி.ஆர்க்., - பி.எஸ்., உள்ளிட்ட இன்ஜி., படிப்புகளில் சேர, ஒருங்கிணைந்த நுழைவு தேர்வு எனப்படும் ஜே.இ.இ., தேர்வு எழுத வேண்டும்.

வரும் கல்வி ஆண்டுக்கு, ஜே.இ.இ., முதன்மை தேர்வு, எழுத்து தேர்வாக ஏப்., 3; 'ஆன்லைனில்,' ஏப்., 9, 10ல் நடக்கிறது. இதற்கான, 'ஆன்லைன்' விண்ணப்பப்பதிவு, jeemain.nic.in என்ற இணைய தளத்தில், டிச., 1ல் துவங்கியது. விண்ணப்பிக்க கடைசி நாள் டிச., 31.
*ஜே.இ.இ., முதன்மை தேர்வு முடிவு ஏப்., 27ல் வெளியாகும். இதில் தேர்ச்சி பெறுவோர், ஐ.ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., போன்ற கல்வி நிறுவனங்களில் சேரலாம். ஆனால், ஐ.ஐ.டி.,யில் சேர, அடுத்த கட்டமான, ஜே.இ.இ., அட்வான்ஸ்ட் தேர்வை எழுத வேண்டும்.
இந்த தேர்வுக்கு, முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும், ஏப்., 29 முதல் மே, 4க்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த தேர்வு, மே 22ல், இரு தாள்களாக நடக்கும். இதன் முடிவுகள் ஜூன், 12ல் வெளியாகும். இதில் தேர்ச்சி பெறுவோருக்கு, ஐ.ஐ.டி., நிறுவனங்களில், இடஒதுக்கீடு செய்து, பி.இ., - பி.டெக்., பாடங்களில் சேர்க்கப்படுவர்.* பி.ஆர்க்., போன்ற வடிவமைப்பு படிக்க விரும்புவோர், மூன்றாம் கட்டமாக, 'ஆர்கிடெக்ட்' திறனறி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வு, ஜூன், 15ல் நடக்கிறது. இதற்கு, ஜே.இ.இ., தேர்வின், இரண்டு கட்ட தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும், ஜூன், 12 முதல், 13க்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதன் முடிவு ஜூன், 19ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.'நாட்டா' தேர்வு அறிவிப்பு
ஐ.ஐ.டி., அல்லாமல் மற்ற ஆர்கிடெக்ட் கல்லுாரிகளில் பி.ஆர்க்., படிக்க விரும்புவோர், இந்திய ஆர்கிடெக் கவுன்சில் நடத்தும் தேசிய ஆர்கிடெக் திறனறி தேர்வான, 'நாட்டா' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வு ஏப்., 1ல் நடக்கும்; ஜன., 1 முதல் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

நன்கொடை வசூலிக்கும்இன்ஜி., கல்லூரி அங்கீகாரம் ரத்து

மாணவர் சேர்க்கைக்கு நன்கொடை கட்டணம் வசூலிக்கும் இன்ஜி., கல்லுாரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்' என, அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., எச்சரித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள இன்ஜி., கல்லுாரிகளில், எட்டு லட்சம் இடங்கள் காலியாக உள்ளன. எனினும், பல அரசு கல்லுாரிகள் மற்றும் குறிப்பிட்ட தனியார் கல்லுாரிகளில் இடங்கள் இல்லாமல், மாணவர்கள் வேறு கல்லுாரிகளை தேடும் நிலை உள்ளது.

இதுகுறித்து, ஏ.ஐ.சி.டி.இ., விசாரித்ததில், சரியான தேர்ச்சி காட்டாத கல்லுாரிகளில், அதிக இடங்கள் காலியாக உள்ளன. தேர்ச்சி காட்டிய தனியார் கல்லுாரிகள், மாணவர்களிடம், அதிகளவுக்கு மறைமுக கட்டணமும், நன்கொடை கட்டணமும் வசூலிப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. இது தொடர்பாக, மத்திய மனிதவள அமைச்சகத்தின் உத்தரவுப்படி, அனைத்து தொழில்நுட்பக் கல்வி பல்கலைகளுக்கும், ஏ.ஐ.சி.டி.இ., சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
அதில், 'மத்திய அரசு அமைத்த ஸ்ரீ கிருஷ்ணா கட்டண கமிட்டியின் அறிவுறுத்தல்படி, தனியார், அரசு தொழில்நுட்பக் கல்லுாரிகள் நன்கொடை கட்டணம் வசூலிக்கக் கூடாது. இதை மீறும் நிறுவனங்கள் குறித்து, ஏ.ஐ.சி.டி.இ.,க்கு, இ - மெயில் மூலம் புகார் அளிக்கலாம். புகார் நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட கல்லுாரிக்கு அங்கீகாரம் ரத்து செய்யப்படும்' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை பல்கலை: தேர்வு தேதி மாற்றம்

சென்னை, :மிலாதுன் நபி பண்டிகை தேதி மாற்றத்தால், சென்னை பல்கலையின் தேர்வு தேதியும் மாற்றப்பட்டு உள்ளது.
'டிச., 23ல் கொண்டாடப்பட இருந்த மிலாதுன் நபி பண்டிகை, டிச., 24ம் தேதிக்கு மாற்றப்பட்டு, அரசு விடுமுறையும் மாற்றப்பட்டு உள்ளது. எனவே, டிச., 24ல் நடக்க இருந்த தேர்வு, ஜன., 5ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது'
என, சென்னை பல்கலை பதிவாளர் டேவிட் ஜவஹர் அறிவித்து உள்ளார்

ஐஏஎஸ், ஐபிஎஸ் முதன்மைத் தேர்வு: 15 ஆயிரம் பேர் எழுதினர்

ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் முதன்மைத் தேர்வை 15 ஆயிரம் எழுதினர்.

ஐஏஎஸ்,. ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் முதன்மைத் தேர்வு இந்தியா முழுவதும் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது.


முதல்நிலைத் தேர்வு கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற   நிலையில், முதன்மைத் தேர்வு இந்தியா முழுவதும் இன்று நடைபெற்றது.

இந்த தேர்வை நாடு முழுவதும் உள்ள 153 தேர்வு மையங்களில் 15 ஆயிரம் பேர் எழுதினர்.

தமிழகம், புதுச்சேரியைச் சேர்ந்த மாணவர்களுக்கு சென்னை காயிதே மில்லத் கல்லூரியில் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்தது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 864 பேர் தேர்வை எழுதினர். 1200 பணியிடங்களை நிரப்புவதற்கான இந்த தேர்வு இன்று தொடங்கி வரும் 9 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

மார்ச் மாதம் தேர்வு முடிவுகள் வெளிடப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கான நேர்முகத் தேர்வு ஆகஸ்ட் மாதம் நடைபெறுகிறது.

24-ந் தேதி முதல் ஜனவரி 1-ந் தேதி வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை: பள்ளிக்கல்வி இயக்குனர்

மிலாது நபி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழாக்களையொட்டி 24-ந் தேதி முதல் ஜனவரி 1-ந் தேதி வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என்று பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.


மேலும் இதுகுறித்து அவர் கூறியதாவது:- 2015-2016-ம் கல்வி ஆண்டுக்கான பள்ளிக்கூட விடுமுறைகள் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு அச்சிடப்பட்டு உள்ளது. அதன்படி தமிழ்நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் 24-ந் தேதி முதல் ஜனவரி 1-ந் தேதி வரை விடுமுறைவிடப்பட்டுள்ளது. மிலாது நபி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழாக்கள் இந்த விடுமுறையில் அடங்கும்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் ஆகிய 4 மாவட்டங்களில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் 24, 25, 27, ஜனவரி 1-ந் தேதி ஆகிய 4 நாட்கள் மட்டும் நடத்தக்கூடாது. மற்ற நாட்களில் சிறப்பு வகுப்புகள் இந்த 4 மாவட்டங்களில் மட்டும் நடத்தப்பட வேண்டும் என்று ச.கண்ணப்பன் கூறினார்

சிபிஎஸ்சி பாட புத்தகங்கள் இலவசமாக ஆன்லைனில் வெளியிட திட்டம்: ஸ்மிருதி இரானி

மத்திய பள்ளி கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்சி) அனைத்து பாட புத்தகங்களையும் இலவசமாக ஆன்லைனில் வெளியிட உள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கிழக்கு தில்லியின் கிச்சிரிப்பூர் பகுதியில் அமைந்துள்ள கேந்திரீய வித்யாலயா பள்ளியில் நடந்த புதிய கட்டிட திறப்பு விழாவில் நிகழ்ச்சியில் பங்கேற்று அவர் மேலும் பேசியதாவது:


தொடக்க கல்வியையும், தொழிற்கல்வியையும் வழங்கிவரும் தேசியக் கல்வி ஆராய்ச்சி, பயற்சிக் குழுவின் புத்தகங்கள் ஒரு மாதத்துக்கு முன்பு இலவச மின்னணு புத்தகமாகவும், செல்போன் செயலிகள் மூலமாகவும் ஆன்லைனில் வெளியிடப்பட்டது. இதேபோல, சிபிஎஸ்சி புத்தகங்களும் ஆன்லைனில் விரைவில் வெளியிடப்படும்.

சிறார்கள் மாநாடுகளை (பால சபா) நடந்த மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும். இந்த மாநாடுகள், பல்வேறு துறை சார்ந்த நபர்களுடன் மாணவர்கள் கலந்துரையாடும் வகையில் அமையும்.

கேந்திரீய வித்யாலயா பள்ளிகளில் "சாலா தர்பன்', "சாரணாஸ்' என்று இரண்டு சேவைகளை தொடக்க இருக்கிறோம். "சாலா தர்பன்' மூலம் மாணவர்களின் வருகைப் பதிவேடு குறுஞ்செய்தி மூலம் பெற்றோர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

"சாரணாஸ்' சேவை மூலம் மற்ற மாவட்ட, மாநில மாணவர்கள் பாடரீதியாக பெற்ற மதிப்பெண்களுடன், தங்களது மகன் அல்லது மகள் பெற்ற மதிப்பெண்களை பெற்றோர்கள் ஒப்பீடு செய்து பார்க்க முடியும் என்றார் ஸ்மிருதி இரானி.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், தில்லி துணை முதல்வருமான மணீஷ் சிசோடியா கூறுகையில், சிறந்த மனிதர்களாக மாணவர்களை உருவாக்கும் பொறுப்பை கல்வி நிறுவனங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றார்.

"தமிழகத்தில் கல்வித் தரம் உயர்ந்துள்ளது'

மாணவ, மாணவிகளுக்காக முதல்வர் ஜெயலலிதா நிறைவேற்றிய பல்வேறு நலத்திட்டங்களால் தமிழகத்தில் கல்வித் தரம் உயர்ந்து வருகிறது என சட்டப்பேரவை உறுப்பினர் செ.தாமோதரன் தெரிவித்தார்.
 கிணத்துக்கடவு சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட முத்துக்கவுண்டனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 46 மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா நடைபெற்றது.
மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கி சட்டப்பேரவை உறுப்பினர் செ.தாமோதரன் பேசியது:  இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. மாணவர்கள் பயன்பெறும் வகையில் விலையில்லா பாடப்புத்தகம், கல்வி உபகரணங்கள், விலையில்லா சைக்கிள் உள்ளிட்ட முதல்வர் ஜெயலலிதா நிறைவேற்றிய பல்வேறு நலத்திட்டங்களால் தமிழகத்தில் கல்வித் தரம் உயர்ந்து வருகிறது என்றார். நிகழ்ச்சியில், அதிமுக நிர்வாகிகள் ராஜமாணிக்கம், மணிமுருகேசன், மூர்த்தி, குயில்சாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

18/12/15

லேப்-டாப் கணக்கெடுப்பு: தலைமை ஆசிரியர்கள் அதிர்ச்சி.

அரசு பள்ளிகளில் வினியோகிக்க வழங்கிய அரசின் இலவச லேப்- டாப் பதுக்கப்படுவதாக எழுந்த தகவலால் கணக்கெடுக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பிளஸ் 2 மாணவர்களுக்கு 2011 முதல் அரசின் இலவச லேப்- டாப் வழக்கப்படுகிறது. ஒவ்வொரு கல்வியாண்டிலும், பிளஸ் 2 முடித்தவர்களுக்கு வழங்கப்பட்டது. 

2015-16ல் மட்டும் படித்துகொண்டிருக்கும்போதே லேப்- டாப்களை வழங்க அரசு உத்தரவிட்டது. தேவையான லேப்-டாப்கள் கொள்முதல் செய்து, மாவட்டம் வாரியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 2015 நவம்பருக்குள் வினியோகித்து முடிக்க, தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியிருந்தது.

இந்நிலையில், சில பள்ளிகளில் இலவச லேப்-டாப் பதுக்கப்படுவதாக புகார் எழுந்தது. இதனையடுத்து மாவட்டந்தோறும் கணக்கெடுக்க உத்தரவிட்டுள்ளனர். சி.இ.ஓ.,அலுவலகபணியாளர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். ஓரிரு இடங்களில் மாணவர் களுக்கு வினியோகித்தது போக எஞ்சிய லேப் டாப்களை திரும்பி ஒப்படைக்காமல் வைத்திருக்கும் தலைமை ஆசிரியர்களுக்கு இந்த உத்தரவு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக கல்வித்துறை ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

வி.ஏ.ஓ., தேர்வு தேதி மாற்றம்

சென்னை:வி.ஏ.ஓ., தேர்வு, பிப்., 28க்கு மாற்றப்பட்டுள்ளது.இதுகுறித்து, அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்ட அறிவிப்பு:கிராம நிர்வாக அதிகாரி எனப்படும், வி.ஏ.ஓ., பதவிக்கான தேர்வு, 2016 பிப்., 14ல் நடக்க இருந்தது. மழை காரணமாக, பிப்., 28க்கு மாற்றப்பட்டு உள்ளது.

நெடுஞ்சாலை துறையில், 213 உதவி பொறியாளர் (கட்டடவியல்) காலி பணியிடங்களுக்கு, செப்., 6ல் நடந்த தேர்வில், 424 பேர் தற்காலிகமாக சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு, டிச., 28 முதல், 30ம் தேதி வரை சரிபார்ப்பு நடக்கும். அழைப்பாணை விவரம், தேர்வாணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது

தேசிய உதவித்தொகை தகுதி தேர்வு ஜன. 23ல் நடக்கிறது

விருதுநகர்,:எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, தேசிய வருவாய் வழி படிப்பு உதவி தொகை தகுதித்தேர்வு ஜன.,23ல் நடக்கிறது.ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை தேசிய வருவாய் வழி படிப்பு உதவித்தொகை திட்டத்தின் கீழ், மாணவர்களுக்கு மாதந்தோறும் 500 ரூபாயை மத்திய அரசு வழங்குகிறது. இத்திட்டத்தில் உதவி பெற, தகுதித் தேர்வு ஜன.,23ல் நடக்கிறது.

இத்தேர்வு எழுதும் மாணவர்கள் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் தற்போது எட்டாம் வகுப்பு படித்து கொண்டிருக்க வேண்டும். ஏழாம் வகுப்பு இறுதி தேர்வில் 55 சதவீதம் பெற்றிருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் 1.50 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
மாணவர்கள், தலைமை ஆசிரியரிடம் விண்ணப்ப படிவத்தை பெற்று, 50 ரூபாய் தேர்வு கட்டணமாக செலுத்த வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை டிச.,24க்குள் தலைமை ஆசிரியரிடம் வழங்க வேண்டும்.

தேர்வுத்துறைக்கு புதிய இயக்குனர்

சென்னை: தமிழக அரசு தேர்வு துறையின் புதிய இயக்குனராக, வசுந்தரா தேவி நியமிக்கப்பட்டுள்ளார்.அரசுத் தேர்வுத்துறையின் இயக்குனராக பணியாற்றிய தேவராஜன், கடந்த ஜூலையில் ஓய்வுபெற்றதை அடுத்து, காலியாக இருந்த பதவிக்கு, தமிழ்நாடு ஆசிரியர் வாரிய உறுப்பினர் செயலர் வசுந்தரா தேவி நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் ஏற்கனவே, தேர்வுத்துறை இயக்குனராக பணியாற்றியுள்ளார்.ஆசிரியர் தேர்வு வாரிய இணை இயக்குனராக இருந்த உமா, பதவி உயர்வு பெற்று, ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் ஆகியுள்ளார்.

புத்தகங்கள் இழந்தோருக்கு 'டிஜிட்டல்' பாடம்

சமீபத்திய மழை, வெள்ளத்தால், சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்ட மாணவ, மாணவியர், தங்களின் பாட புத்தகம், நோட்டு போன்றவற்றை இழந்துள்ளனர். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு மட்டும், இலவசமாக புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. 

ஆனால், தனியார் பள்ளி மாணவர்களுக்கு, புத்தகம் கிடைக்காத நிலை உள்ளது. இந்நிலையில், 6ம் வகுப்பு முதல், 8ம் வகுப்பு வரையிலான கணிதம், அறிவியல் மற்றும் ஆங்கில பாடப் புத்தகங்களை, 'நம்ம ஊரு அறக்கட்டளை' அமைப்பு சார்பில், 'நம்ம கல்வி' என்ற பெயரில், இலவசமாக கணினியில் வெளியிடப்பட்டுள்ளது.அறக்கட்டளைநம்ம ஊரு அறக்கட்டளையின், http://clsl.cu/ என்ற இணையதள இணைப்பில், இந்த புத்தகங்களை, ஆன் - லைனில் பார்க்க முடியும். 

இதுகுறித்து, அறக்கட்டளை நிறுவனர் நடராஜன் கூறியதாவது:வெறும் வாசித்தல் என்ற முறைக்கு கூடுதலாக, மாணவர்களுக்கு ஆர்வம் அதிகரிக்கும் வகையில், பாடங்களை விளக்கும் பின்னணி குரலுடன், பாட வரிகள் மற்றும் படங்களை, 'வீடியோ' மூலம் திரையில் விளக்கும் வகையில், கணினி வழியில் வெளியிட்டுள்ளோம்.எளிதில் படிக்கலாம்

பாடம் முடிந்ததும், பாடம் குறித்து மாணவர்கள் புரிந்து கொண்டது குறித்த கேள்விகளும், விடைகளும், கணினி திரையில் இடம் பெறுகிறது. சமச்சீர் பாட புத்தகத்தின் அம்சங்களில், எந்த மாற்றமும் இன்றி, இந்த கணினி வழி பாடங்களை பதிவேற்றம் செய்து உள்ளதால், புத்தகம் உள்ளவர்களும், இல்லாதவர்களும் எளிதில் படிக்கலாம்.

தமிழ் மற்றும் ஆங்கில வழியில், 6 முதல் 8ம் வகுப்பு வரை, புத்தகங்கள் பதிவேற்றப்பட்டுள்ளன. கணினி இல்லாதவர்கள், எங்கள் சிறப்பு அப்ளி கேஷனை மொபைல் போனில், பதிவிறக்கம் செய்து, பாடங்களை படிக்கலாம். விரைவில், 9ம் வகுப்பு முதல் பிளஸ் 1 வரையிலான பாடங்களை வெளியிட உள்ளோம். எங்கள் தளத்தை பயன்படுத்த, எந்த கட்டணமும் கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்

கிறிஸ்துமஸ் விடுமுறைபள்ளிகளுக்கு உண்டா?

சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்ட, மழை விடுமுறையை கணக்கில் கொண்டு, அரையாண்டு தேர்வு, ஜனவரிக்கு மாற்றப்பட்டது. அதன் பின், தேர்வு மற்றும் விடுமுறை குறித்து, எந்த அறிவிப்பும் இல்லை.இந்நிலையில், நான்கு மாவட்டங்களில், 14ம் தேதி முதல், வகுப்புகள் துவங்கியுள்ளன.
எனவே, கிறிஸ்துமஸ், மீலாடி நபி மற்றும் புத்தாண்டு விடுமுறை உண்டா என, பள்ளிகள் எதிர்பார்ப்பில் உள்ளன. ஏற்கனவே, மழை விடுமுறை அறிவிப்பில், முன்கூட்டியே திட்டமிடாமல், தினமும் விடுமுறை அறிவித்த கல்வித்துறை, தற்போது, திட்டமிடப்பட்ட பண்டிகை கால விடுமுறை அறிவிப்பிலும், மெத்தனமாக உள்ளது.
இதுகுறித்து, பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் பேட்ரிக் ரைமண்ட் கூறியதாவது: வெள்ளம் பாதித்த மாவட்டங்களை தவிர மற்ற, 28 மாவட்டங்களில், திட்டமிட்ட படி பாடங்கள் முடிக்கப்பட்டுள்ளன. எனவே, கல்வி ஆண்டின் படி, 22ம் தேதி செவ்வாய் கிழமையுடன், 2ம் பருவ மற்றும் அரையாண்டு வேலை நாட்கள் முடிகின்றன. 23 முதல் ஜனவரி, 1 வரை, மீலாடி நபி, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை என, கல்வி ஆண்டுக்கான காலண்டரில் அறிவிக்கப்பட்டுள்ளது.ஆனால், அரையாண்டு தேர்வு தள்ளிவைப்பை அறிவித்த கல்வித்துறை, விடுமுறை குறித்து எந்த முடிவும் அறிவிக்காமல் உள்ளதால், குழப்பம் நீடிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

பிளஸ் 2, 10ம் வகுப்புக்கு விரைவில் தேர்வு?

நடப்பு கல்வியாண்டு, பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொது தேர்வுகளை, முன்கூட்டியே நடத்த, கல்வித் துறை அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.வரும், 2016ல், தமிழக சட்டசபை தேர்தல் வருவதால், பொதுத் தேர்வுகளை, முன்கூட்டியே நடத்த, கல்வித் துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
தமிழகத்தில், சென்னை உட்பட, 32 வருவாய் மாவட்டங்களில், பிளஸ் 2க்கு, 2,400; 10ம் வகுப்புக்கு, 3,500 மையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டு, அதற்கான பள்ளிகளை இறுதி செய்யும் பணி நடந்து வருகிறது.பிளஸ் 2 தேர்வில், தனித்தேர்வர்கள் உட்பட, 8.5 லட்சம் பேர்; 10ம் வகுப்பு தேர்வில், 10.5 லட்சம் பேர் பங்கேற்கலாம் என தெரிகிறது. இதேபோல், வினாத்தாள் தயாரிப்பு, பார் கோடுடன் கூடிய விடைத்தாள் மற்றும் முகப்பு சீட்டு தயாரிப்பு போன்ற பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதால், விரைவில், தேர்வு தேதி அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்
படுகிறது. இதுகுறித்து, கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:மழை வெள்ளத்தால், நடப்பாண்டு, அரையாண்டு தேர்வு நடப்பதில் சிக்கல் உள்ளது. ஆனாலும், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, ஏற்கனவே பாடங்கள் நடத்தி முடித்துவிட்டனர். அதனால், முன்கூட்டியே தேர்வு நடத்தினால், மாணவர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள்; எனினும், அது குறித்து ஆலோசித்து வருகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஆசிரியர்களின் தொடர் மறியல் ஒத்திவைப்பு

வெள்ள பாதிப்பைக் கருத்தில்கொண்டு, ஆசிரியர் இயக்கங்கள் டிசம்பர் 28, 29, 30 ஆகிய தேதிகளில் நடத்தப்படவிருந்த தொடர் மறியல் போராட்டம் ஜனவரி 30, 31-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவின் (ஜாக்டோ) மாநிலத் தொடர்பாளர் இளங்கோவன் தெரிவித்தார்.

 மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகிறது. இந்த நிலையில், வெள்ள பாதிப்புக்காக போராட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்துள்ளது.
 மேலும், வெள்ளம் பாதித்த பகுதிகளில் நீண்ட நாள்களாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்ததால், சிறப்பு வகுப்புகள் நடத்தவும் "ஜாக்டோ'வின் பொதுக்குழுக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக இளங்கோவன் தெரிவித்தார்.