யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

24/8/16

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு Bio-Metric வருகைப் பதிவேடு முறை அறிமுகம் முதல்வர் அறிவிப்பு




உயர்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப் படும் நடுநிலை பள்ளிகளின் பெயர் பட்டியல்

IGNOU - BED Prospectus for January 2017

Directorate of Government Examinations - HSE September 2016 - Private Candidate Instruction for Online Registration





DGE - HSE September 2016 - Examination Time Table

23/08/2010 முதல் 23/08/2016 வரை ! RTE act ல் சிக்கித் தவிக்கும் TET நிபந்தனை ஆசிரியர்களின் எதிர்பார்ப்பு தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற எதிர்பார்ப்பு

2016 ஜுலைஆகஸ்டு செப்டம்பர் மாதங்களில்
நடந்துகொண்டுள்ள தமிழக சட்டப் பேரவையில்TET நிபந்தனைகளுடன் பணி புரியும் பட்டதாரிஆசிரியர்களின் கண்ணீருக்கு தீர்வு கிடைக்கும் என்றுஎதிர்பார்த்து சுமார் மூவாயிரம் ஆசிரியர்கள்மற்றும் அவர்களின்
குடும்பங்கள் காத்துக் கொண்டு உள்ளனர்.

எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ் 2 மாணவ- மாணவிகளுக்கு செல்போன் அப்ளிகேஷன் மூலம் பாடம் படிக்கும் திட்டம்;

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 மாணவ-மாணவிகள் செல்போன்‘அப்ளிகேஷன்’ மூலம் பாடம் படிக்கும்புதிய திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன் உபயோகம்குறித்து ஆசிரியர்களுக்கு
செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

ஆசிரியர்களுக்குசெயல்விளக்கம்
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பாட திட்டத்தில் சிலவற்றைதேர்ந்தெடுத்து நவீன தொழில்நுட்பம் மூலம்மாணவ-மாணவிகள் படிக்க செல்போன் ‘அப்ளிகேஷன்’ ஒன்றை தமிழக அரசின் பள்ளிக்கல்விதுறை தயார் செய்துள்ளது. இதன்உபயோகம் குறித்து ஆசிரியர்கள் தெரிந்து கொள்ள காணொலி காட்சிமூலம் செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ளடி.பி.ஐ. வளாகத்தில்இருந்தபடி, 32 மாவட்டங்களில் உள்ள 32 மாவட்ட ஆசிரியர்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனமையங் கள், 16 அரசு மேல்நிலைப்பள்ளிகளில்செயல்விளக்கம் வழங்கப்பட்டது.

பதிவிறக்கம்செய்யலாம்
இது குறித்து மாநில கல்வியியல் ஆராய்ச்சிமற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர்ராமேஸ்வர முருகன் கூறியதாவது:-
தமிழக அரசின் பள்ளிக்கல்வி துறைமூலம் ‘ TN SC-H-O-O-LS LI-VE ’ என்ற அப்ளிகேஷனை செல்போனின் ‘பிளே ஸ்டோரில்’ சென்றுபதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், இது தொடர்பாக சி.டி.யிலும்நாங்கள் பதிவு செய்து ஒவ்வொருபள்ளிகளுக்கும் வழங்கி இருக்கிறோம். மாணவ-மாணவிகள் தேவைப்பட்டால் அதை கேட்டு பெற்றுக்கொண்டுதங்களுடைய செல்போனில் பதிவேற்றம் செய்து கொள்ளலாம். இந்தஅப்ளிகேஷனை கொண்டு பாடத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபகுதியின் படத்தின் மீது வைத்தால் அந்தபடம் முப்பரிமாண தோற்றத்தில் (3-டி) காட்சி அளிக்கும்.


141 பாடங்கள்
பின்புஅந்த படத்தின் மூலம் மாணவ-மாணவிகள்தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்துவிளக்கங்களையும் அதில் பெற்று படித்துகொள்ளலாம். இதுவரை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த அப்ளிகேஷனை பதிவிறக்கம்செய்து இருக்கிறார்கள். எஸ்.எஸ்.எல்.சி. அறிவியல் புத்தகத்தில்57 பாடங்களையும், கணித புத்தகத்தில் 6 பாடங்களையும், பிளஸ்-2 இயற்பியல் புத்தகத்தில் 5 பாடங்களையும், வேதியியல் புத்தகத்தில் 16 பாடங்களையும், உயிரியியல் புத்தகத்தில் 20 பாடங்களையும், கணித புத்தகத்தில் 7 பாடங்களையும், கணினி அறிவியல் புத்தகத்தில் 10 பாடங்களையும், விலங்கியல் புத்தகத்தில் 20 பாடங்களையும் என மொத்தம் 141 பாடங்களைபடித்து தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறுஅவர் கூறினார்.

இடமாறுதல் பெற்ற ஆசிரியர்களுக்கு திடீர் தடை

தமிழக அரசின் தொடக்கக் கல்வித்துறையில் உள்ள, அரசு பள்ளிஆசிரியர்களுக்கு, ஆக., 3ம் தேதிகவுன்சிலிங் துவங்கி, நேற்று முன்தினம் முடிந்தது. இதில் பங்கேற்று இடமாறுதல் பெற்ற ஆசிரியர்கள், புதியஇடங்களில் சேர, தொடக்கக் கல்விஇயக்குனரகம் திடீர் தடை
விதித்துள்ளது.

இதுகுறித்து, தொடக்கக் கல்வி இயக்குனர் இளங்கோவன்அனுப்பியுள்ள சுற்றறிக்கை:


ஐந்தாம்வகுப்பு வரையிலான தொடக்கப் பள்ளிகளில், இரு ஆசிரியர்கள் உள்ளபள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், இடமாறுதல் பெற்றிருந்தாலும், உடனடியாக அங்கிருந்து மாறி செல்லக்கூடாது. அந்தஇடத்திற்கு மாற்றப்பட்ட ஆசிரியர் பணியில் சேர்ந்தால் மட்டுமே, ஆசிரியர்கள் விடுவிக்கப்பட வேண்டும்கிருஷ்ணகிரி, விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் தர்மபுரி மாவட்டங்களில், ஆசிரியர் பணியிடம், அதிகளவில் காலியாக உள்ளதால், இந்தமாவட்டங்களில் இருந்து மாறுதல் பெற்றஆசிரியர்களும், தங்கள் இடத்திற்கு, வேறுஆசிரியர் வரும் வரை காத்திருக்கவேண்டும்.இவ்வாறு அவர் குறிப்பிட்டுஉள்ளார்.

மாணவர் எண்ணிக்கை குறைவு: கலக்கத்தில் 3 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள்

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்கள்எண்ணிக்கை குறைந்ததால், பட்டதாரி ஆசிரியர்களின் 'சர்பிளஸ்' எண்ணிக்கை
அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது.

 இவர்களை மாவட்ட பள்ளிகளுக்குமாற்றம் செய்ய, கல்வித்துறை பரிசீலிப்பதால், 3 ஆயிரம் பேர் கலக்கத்தில் உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும், ஆக.,1 நிலவரப்படி அரசுமற்றும் உதவி பெறும் பள்ளிகளில்மாணவர் எண்ணிக்கை கணக்கெடுக்கப்படும். இந்தாண்டு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், மாணவர்கள் எண்ணிக்கை அதிர்ச்சி அளிக்கும் வகையில் குறைந்துள்ளது.

ஆங்கிலவழி வகுப்பு களிலும், மாணவர்கள்எண்ணிக்கை இரட்டை இலக்கத்தை தொடவில்லை. இதனால் மாணவர் - ஆசிரியர்விகிதாசாரம் அடிப்படையில், மாநில அளவில் 3 ஆயிரம்பட்டதாரி ஆசிரியர்கள் கூடுதலாக இருப்பது தெரியவந்துள்ளது.

காரணம்என்ன : ஐந்து ஆண்டுகளில், ஏராளமான புதிய தொடக்க பள்ளிதுவங்கப்பட்டன. நடுநிலை- உயர்நிலையாகவும், உயர்நிலை- மேல்நிலையாகவும் தரம் உயர்த்தப்பட்டன. அங்கு, அனைவருக்கும் கல்வித் திட்டம் (எஸ்.எஸ்.ஏ.) மற்றும்அனைவருக்கும் இடைநிலை கல்வி (ஆர்.எம்.எஸ்.ஏ.,) திட்டத்தில், புதிய பணியிடம் உருவாக்கப்பட்டன.
இப்பள்ளிகளில், வரும் காலங்களில் மாணவர் எண்ணிக்கை அதிகரிக்கும்என அரசு எதிர்பார்த்தது. மாறாககுறைந்ததால் ஆசிரியர் 'சர்பிளஸ்' ஏற்பட்டது. மேலும் ஆங்கில வழிகல்வியிலும் குறைந்தபட்சம், 15 மாணவர் இல்லாத வகுப்புகளின்ஆசிரியர்களும், 'சர்பிளஸ்' பட்டியலில் சேர்க்கப்பட்டனர்.

ஜூனியர்கள்எதிர்ப்பு : 'சீனியர்' ஆசிரியர்கள் பெரும்பாலும் ஒரே பள்ளியில் தொடர்ந்து, 10 ஆண்டுகளுக்கும் மேல் பணியில் உள்ளனர். பணி நிரவல் என்றால் முதலில்பாதிப்பது, 'ஜூனியர்'கள் தான். 'பல ஆண்டுகளாக பணியாற்றும் சீனியர்கள், ஏன் மாணவர் சேர்க்கையில்அக்கறை செலுத்த வில்லை,' எனஜூனியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அவர்கள்கூறுகையில், 'வெளி மாவட்டங்களில் பணியாற்றியநாங்கள், பல லட்சம் ரூபாய்'இழந்து' தான் சொந்த மாவட்டங்களுக்குமாற்றலாகினோம். மாணவர் எண்ணிக்கை குறைவால், 'சர்பிளஸ்' கணக்கில் வரும் நாங்கள் ஒவ்வொருஆண்டும் மாற்றப் படுகிறோம். எங்களுக்கும் குடும்பசூழ்நிலை உள்ளது' என்றனர்.


ஆசிரியர்சங்க நிர்வாகிகள் கூறியதாவது: அதிகாரிகள் சிலர் தங்கள் 'தேவை' கருதி, குறைந்த மாணவர் எண்ணிக்கைஉள்ள பள்ளிகளிலும், ஆசிரியர்களுக்கு மாறுதல் வழங்கி உத்தரவுபிறப்பித்தனர். மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்க, அரசு போதிய கவனம் செலுத்தாமல், 'தும்பை விட்டு வாலை பிடிக்கும்' கதையாக தற்போது ஆசிரியர்களை அலைக்கழிக்கமுடிவு செய்துள்ளது. 'சர்பிளஸ்' ஆசிரியர்களை மாறுதல் செய்வதற்கு பதில்அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்கநடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

பள்ளிகளில் அமலாகிறது 'பயோ மெட்ரிக்' வருகை பதிவு

அரசு பள்ளிகளில், 'பயோ மெட்ரிக்' வருகைப்பதிவுதிட்டத்தை, தமிழக அரசு அறிமுகப்படுத்தஉள்ளது அரசு பள்ளி ஆசிரியர்களுக்குகிடுக்குப்பிடி போட முடிவு செய்துவிட்டதுதமிழக அரசு. அதற்கான அறிவிப்பையும் நேற்று  110 விதியின் கீழ் வெளியிட்டுள்ளார் முதல்வர்.தமிழகத்தில்ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசுஉதவிபெறும் பள்ளிகள் உள்ளன. தமிழகத்தில் பேருந்துபோகாத பல கிராமங்களில் கூடஅனைவருக்கும் கல்வி என்ற நோக்கத்தோடுஅரசு
துவக்கப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. தொடக்கப் பள்ளிகளுக்கு இடைநிலை ஆசிரியர்களும், நடுநிலைப்பள்ளிகளுக்குபட்டதாரி ஆசியர்களும் தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அரசுப்பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்றி வரும் பலர் நகர்ப்புறபகுதிகளில்தான் வசித்து வருகின்றனர். பெரும்பாலானதுவக்கப்பள்ளிகள் கிராமப்பகுதிகளில் இருக்கும் நிலையில், நகர் பகுதியில் இருந்துஆசிரியர்கள் தாங்கள் பணியாற்றும் பள்ளிக்குச்சென்று வருவதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள்உள்ளன. பல கிராமங்களில் இருக்கும்தொடக்கப்பள்ளிகள் ஓர் ஆசிரியர் பள்ளிகளாகதான் இருக்கின்றன. இது பல ஆசிரியர்களுக்குவசதியாகிவிட்டது. காலை ஓன்பது மணிக்குபள்ளியில் இருக்கவேண்டிய ஆசிரியர்கள், பதினோரு மணிக்கு பள்ளிக்குவரும் அவல நிலைகள் தமிழககிராமங்களில் இன்றும் நிலவி வருகிறது.

அதே போல் இரண்டு ஆசிரியர்பணிபுரியும் பள்ளிகளிலும் இதே நிலை தான்உள்ளது. பெண்கள் ஆசிரியர்களாக இருந்தால், இந்த நிலை இன்னும் மோசமாகஉள்ளது. குறித்த நேரத்திற்கு பள்ளிக்குவருவது என்பது பல அரசுஆசிரியர்களிடம் வழக்கொழிந்த விஷயமாக மாறிவிட்டது. ஏற்கனவேஅரசு பள்ளிகள் மீது மக்களுக்கு இருக்கும், அவநம்பிக்கையை இது மேலும் அதிகரிப்பதாகஉள்ளது. தென் மாவட்டத்தில் கடைக்கோடியில்இருக்கும் பள்ளி ஒன்றிற்கு பாடவேளைதுவங்குவதே காலை பன்னிரெண்டு மணிக்குதான். காரணம் அந்த பள்ளியில் ஆசிரியர்களாகஇருக்கும் இரண்டு ஆசிரியர்களும் அருகில்இருக்கும் நகரத்தில் இருந்து வருகிறார்கள். அந்தகிராமத்திற்கு இரண்டு பேருந்துகள் மட்டுமேஉள்ளன.

அதில் ஒரு பேருந்து அவர்கள்வசிக்கும் நகரில் எட்டு மணிக்குபுறப்பட்டு ஒன்பது மணிக்கு அந்தகிராமத்திற்கு வந்தடையும். அதை தவிர்த்து விட்டுபத்து மணி பேருந்தில் தான், இவர்கள் பள்ளிக்கு வருகின்றார்கள். இதனால் இந்த பள்ளியின்வேலை நேரம் பதினோரு மணிக்கு  மேல்தான் ஆரம்பிக்கிறது. ஆனால் தங்களது வருகைபதிவேட்டில் இவர்கள் ஒன்பது மணிக்குவந்துவிட்டதாக கையெழுத்திடுகின்றார்கள். இதே நிலைதான் தமிழகத்தின்பல கிராமங்களில் உள்ள அரசு பள்ளிகளின்நிலையாக உள்ளது. பல கிராமங்களில்ஆசிரியர்கள் பள்ளிக்கே வருவதை தவிரத்துவிட்டு, அந்தகிராமத்தில் பட்டப்படிப்பு படித்தவர்களை இவர்கள் குறைந்த ஊதியம்கொடுத்து ஆசிரியர்களாக இவர்களே நியமிக்கும் கொடுமைகள்எல்லாம் தமிழகத்தில் நடந்தேறி வருகிறது.

அரசுப்பள்ளிகளில் அதிகாரிகள் ஆய்வுகள் குறைந்து இருப்பதும், மாணவர்கள் குறைவாக இருப்பதும் இதுபோன்றகாலம்தாழ்த்தி வரும் ஆசிரியர்களுக்கு வசதியாகிவிட்டது. இது குறித்து தொடர்ந்து கல்வித் துறைக்கு புகார்கள்வந்தவண்ணம் இருந்தால், இதற்கு மாற்றுத் தீர்வுகாண அதிரடி உத்தரவை தமிழகஅரசு பிறப்பித்துள்ளது. இன்று முதல்வர் உயர்கல்வி, மற்றும் பள்ளி கல்வி துறைகுறித்து 110 விதியின் கீழ் இருபத்தி நான்குஅறிவிப்புகளை வெளியிட்டார். அதில் ஒரு அறிவிப்பில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகைப்பதிவேட்டை கையாளுவதில் தற்போது உள்ள கையெழுத்திடும்முறையை மாற்றி, பயோமெட்ரிக் முறையில்வருகைபதிவு செய்யும் புதிய முறை கொண்டுவரப்படஉள்ளது. இதற்காக 45.57 கோடி ஒதுக்கபடுவதாக அறிவித்துள்ளார்.

பயோமெட்ரிக்முறையில் வருகையை பதிவு செய்யும்போது, குறித்த நேரத்தில் பள்ளிக்குவரவேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதே போல் பள்ளிமுடிந்து செல்லும்போது கைரேகையை வைத்து பதிவு செய்யும்நிலை இருப்பதால், நினைத்த நேரத்திற்கு பள்ளியைவிட்டு கிளம்பவும் முடியாது. மேலும் வருகைநேரத்தை தாண்டிவருகைப்பதிவேட்டில்  பதிவுசெய்தால், அவர்களது ஊதியம் குறையும் வாய்ப்புஇருப்பதால், கால தாமதத்தை இனிதொடர முடியாத நிலைக்கு ஆசிரியர்கள்தள்ளப்பட்டுள்ளனர்.


கிராமத்துதொடக்கப் பள்ளிகளிலும், இனி ஒன்பது மணிக்கேஆசிரியர்கள், ஆஜர் ஆகிவிடுவார்கள்  என எதிர்பார்க்கலாம்.

19 ஆயிரம் கிளார்க் வேலை: பொதுத்துறை வங்கிகள் அறிவிப்பு வெளியீடு.

பொதுத்துறை வங்கிகளில் கிளார்க் ஆக பணிபுரிய விரும்பும்பட்டதாரி இளைஞர்கள், ஐ.பி.பீ.எஸ்., எனப்படும் ‘இன்ஸ்டிடியூட்ஆப் பேங்கிங்
பர்சனஸ் செலக்சன்’ நடத்தும்தேர்வை எழுதலாம்!

மொத்தப்பணியிடங்கள்:19,243 (தமிழகத்தில் மட்டும் 1,032)
வயது வரம்பு:20 வயதிலிருந்து 28 வயதுக்குள் இருத்தல் வேண்டும். வயது வரம்பு சலுகையும்உண்டு.
கல்வித்தகுதி:அங்கீகரிக்கப்பட்ட பல்கலை அல்லது கல்லூரிகளில்ஏதேனும் ஒரு பாடப் பிரிவில்இளநிலை பட்டம்பெற்றிருக்க வேண்டும்.
கம்ப்யூட்டர்அறிவு:கணினி அறிவியல் பாடத்தைசான்றிதழ் அல்லது டிப்ளமோ படிப்பாகபடித்திருக்க வேண்டும். அல்லதுபட்டப் படிப்பில் கணினி அறிவியல் பாடத்தைஒரு பாடமாக பயின்றிருக்க வேண்டும். கணினியில் பணியாற்றும் திறன் பெற்றிருப்பதும் அவசியம். மாற்றுத்திறனாளி மாணவர்களும்இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
பங்கேற்கும்வங்கிகள்:அலகாபாத் வங்கி, கனரா வங்கி, இந்தியன் வங்கி, சிண்டிகேட் வங்கி, ஆந்திரா வங்கி, சென்ட்ரல் பாங்க்ஆப் இந்தியா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி,யூகோ(யு.சி.ஒ.,) வங்கி, பேங்க் ஆப் பரோடா, கார்ப்பரேஷன்வங்கி, யூனியன் பேங்க் ஆப்இந்தியா, ஓரியண்டல் பேங்க் ஆப் இந்தியா, பேங்க் ஆப் இந்தியா, தேனாவங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, பேங்க் ஆப் மகாராஷ்டிரா மற்றும்விஜயா வங்கி.
தேர்வுமுறை:பிரிலிமினரி தேர்வு மற்றும் மெயின்தேர்வு என இருநிலைகளைக் கொண்டுள்ளது.
பிரிலிமினரிதேர்வு:முதல் நிலைத் தேர்வானதுஆன்லைனில் அப்ஜெக்டிவ் அடிப்படையில் 100 மதிப்பெண்களுக்கு, ஆங்கிலம், நியூமரிக்கல் அபிலிட்டி மற்றும் ரீசனிங் அபிலிட்டிபோன்ற திறன்கள் பரிசோதிக்கப்படும். இத்தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் மெயின் தேர்வுக்கு தகுதிபெறுவர்.
மெயின்தேர்வு:இந்த இரண்டாம் நிலைத்தேர்வு, அப்ஜெக்டிவ் அடிப்படையில் 200 மதிப்பெண்களுக்கு, ரீசனிங், குவான்டிடேடிவ் ஆப்டிடியூட், வங்கித்துறை சார்ந்த பொதுஅறிவு, கணினிஅறிவு மற்றும் ஆங்கில மொழியறிவுஉள்ளிட்ட பகுதிகளில் விண்ணப்பதாரர்களின் திறன்கள் சோதிக்கப்படும்.
முன்தேர்வுபயிற்சி:எஸ்.சி., மற்றும்எஸ்.டி., பிரிவினர்களுக்கு, வங்கிகள்சார்பில் சென்னை, புதுச்சேரி, கோவை, திருச்சி மற்றும் மதுரை உள்ளிட்டநகரங்களில் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.
விண்ணப்பிக்ககடைசி நாள்:செப்டம்பர் 19

மேலும்விவரங்களுக்கு:www.ibps.in

மாணவர்களுக்கு விளையாட்டில் ஆர்வம்...குறைகிறது! பள்ளிகளில் ஊக்கமளிக்காததால் விபரீதம்-DINAMALAR

கடலுார்: பள்ளிகளில் மாணவ மாணவியர்களுக்கு வழங்கப்படும்விளையாட்டு நேரம்  வெகுவாககுறைந்துவிட்டதால் போட்டிகளில்
ஜொலிக்க முடியாத நிலைஏற்பட்டுள்ளது.

'மாலை முழுவதும் விளையாட்டு' என்று பாரதி பாடினார். அதன்படிஇன்றைய கல்விக்கொள்கையில் பள்ளிகளில் விளையாட்டை யாரும் கடைபிடிப்பதாக தெரியவில்லை. உலகளவில் மக்கள் தொகையில் இரண்டாவதுஇடத்திலுள்ள இந்தியா ஒலிம்பிக்கில் 2 பதக்கத்துடன்திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது.
விளையாட்டுவீரர்கள், வீராங்கனைகள் அடிப்படையில் பள்ளிகளில் இருந்து தான் உருவாகவேண்டும். காலை, மாலை எனஎந்த நேரமும் படிப்பு, மார்க்என மாணவ மாணவியர்களை கசக்கிபிழியும் கல்வி நிறுவனங்கள் வியாபித்துவிட்டதால்விளையாட்டு என்பது பின்னுக்கு தள்ளப்படும்நிலைதான் தொடர்ந்து நீடிக்கிறது.
அரசு தொடக்கப் பள்ளியில் இருந்து மேல்நிலை பள்ளிகள்வரை பிள்ளைகள் விளையாடி மகிழ விளையாட்டு உபகரணங்களைவாங்க பள்ளிகளுக்கு அரசு நிதி உதவிவழங்குகிறது. இதை தலைமை ஆசிரியர்கள்முறையாக செலவிடுவதில்லை. கல்வியாண்டு துவக்கத்தில் விளையாட்டு பொருட்கள் வாங்கியதாக 'பில்' வைக்கப்படுகிறது. இறுதியாண்டில்பொருட்கள் பழசாகிவிட்டதால் ஏலம் விட்டதாக கணக்கெழுதப்படுகிறது. இதை கல்வி அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை.
இதனால்மாணவர்களுக்கு விளையாட்டு நேரத்தையே குறைத்துவிட்டனர். பெயர் அளவில் நேரம்ஒதுக்கப்பட்டாலும், அந்த பீரியடையும் 'சிலபசை' முடிப்பதற்காக ஆசிரியர்கள் எப்போது கேட்பார்கள் எனஉடற்கல்வி ஆசிரியர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
பி.இ.டி., பீரியடில்மாணவர்களுக்கு விளையாட்டை கற்றுத்தருவதில்லை. தனியார் பள்ளிகளில் விளையாட்டைபற்றி கவலை கொள்ளாமல் மதிப்பெண்ணேபிரதானமாக கொள்ளப்படுகிறது.
இதன் காரணமாக கடலுார் மாவட்டத்தில்அனைத்து வசதிகளுடன் கூடிய மிகப்பெரிய அண்ணாவிளையாட்டு மைதானம் இருந்தும் மாநிலஅளவிலான போட்டிகளில் பெரிய அளவில் வெற்றிபெற முடியாமல் போய்விடுகிறது.
அண்மையில்கடலுாரில் நடந்த தடகளப்போட்டியில் ஒருசிலவற்றில் மட்டும்தான் பரிசு பெற முடிந்தது. பெரிய அளவில் சாதிக்க முடியவில்லை. அதிகமான பரிசுகளை வென்றது காஞ்சிபுரம், சென்னைமாவட்டத்தை சேர்ந்தவர்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேநிலைதான்பிற மாவட்டங்களிலும் உள்ளது. எனவே மாணவமாணவியர்களை பள்ளிகளிலேயே ஊக்கமளித்தால்தான் திறமையானவர்களை கண்டறிய முடியும் என்பதைஆசிரியர்கள் உணர வேண்டும். அப்போதுதான்நாம் உலக அளவில் ஜொலிக்கமுடியும்

தமிழை எளிதில் கற்க 'வீடியோ' பாடம்:தொடக்க பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சி

தமிழ் பாடத்தை எளிதில் கற்றுக்கொடுக்கும் வகையில், ஒன்று முதல் 5ம்வகுப்பு வரை உள்ள, தமிழ்புத்தக பாடல்களின் வீடியோவை,
இணையதளத்தில் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டு உள்ளது.

தமிழக பள்ளிக் கல்வித்துறையின் ஒருபிரிவாக செயல்படும், மாநில கல்வியியல் ஆராய்ச்சிமற்றும் பயிற்சி நிறுவனமான, எஸ்.சி.இ.ஆர்.டி., மாணவர்களுக்கு கற்றல்சார்ந்த தொழில் நுட்பங்களை அறிமுகப்படுத்திவருகிறது.


செயல்வழிகற்றல், கணினி வழி கற்றல்போன்ற பல திட்டங்களில், மொழியைஎளிதாக கற்று கொடுக்கும் திட்டத்தையும்அறிமுகம் செய்துள்ளது.

முதற்கட்டமாக,10ம் வகுப்பு மற்றும்பிளஸ் 2 மாணவர்கள்,தங்களின் அறிவியல் பாடபடங்க ளை, நான்கு பரிமாணத்தில்பார்த்து படிக்கும், புதிய, 'சிடி' கடந்தமாதம் வெளியானது. இந்த வீடியோ படம், தமிழ்நாடு கல்வித்துறை என்ற பெயரில், 'யூ- டியூப்'பில் இணைக்கப்பட்டு, பலஆயிரம் பேர் பயன்படுத்தி வருகின்றனர். மேலும், 'கூகுள் பிளே ஸ்டோர்ஆப்' மூலம், புதிய அப்ளிகேஷன்வசதியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அடுத்தகட்டமாக, தொடக்கக் கல்வியில், தாய்மொழியை எளிதாக படிக்கும் வகையில், ஒன்று முதல் 5ம் வகுப்புவரை, புத்தகத்தில் உள்ள, 40 பாடல்கள், வீடியோவாக மாணவர்களின் நடனத் துடன் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த வீடியோ பதிவுகள், யூ-டியூப்பில், தமிழ்நாடு எஸ்.சி.இ. ஆர்.டி., சேனல் என்றபிரிவில், 'தாயெனப்படுவது தமிழே' என்ற பெயரில், பதிவு செய்யப்பட்டு உள்ளன.

ஒரு வாரத்தில், அதை, 30 ஆயிரம் பேர்பார்த்துள்ளனர். மேலும், 35 ஆயிரம் தொடக்க பள்ளி

களுக்கு, இலவசமாக இந்த, 'சிடி' அனுப்பப்படஉள்ளதாக, எஸ்.சி.இ.ஆர்.டி., இயக்குனர்ராமேஸ்வர முருகன் கூறினார்.

ஆசிரியர்களிடம், மாணவர்கள் அதிகப்பற்றுடன் நடந்து கொள்ள வேண்டும்: சகாயம் அறிவுரை

கம்மாபுரம்: 'நல்லாசிரியர்கள் வழிகாட்டுதலின் பேரில் படிக்கும் மாணவர்கள்அனைவரும் தனியார் பள்ளிக்கு இணையாகதேர்ச்சி பெற முடியும்' எனஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் பேசினார். கம்மாபுரம்அடுத்த இருப்பு அரசு மேல்நிலைப்பள்ளியில், மக்கள் பாதை இயக்கம்சார்பில்
மாணவர்கள் விழிப்புணர்வு மற்றும் நலத்திட்டம் வழங்கும்விழா நடந்தது. மாவட்ட முதன்மை கல்விஅலுவலர் பாலமுரளி, துணை சேர்மன் கனகசிகாமணி, ஊராட்சித் தலைவர் கதிரொளி, மக்கள்பாதை இயக்க நிர்வாகி கேசவபெருமாள்முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் ராஜேந்திரன்வரவேற்றார். நிர்வாகிகள் சண்முகம், புஷ்பராஜ், கதிர்வேல் உட்பட பலர் பங்கேற்றனர்.

உலகின் டாப் 10 பணக்கார நாடுகள்: இந்தியா 7வது இடம் - கனடா, ஆஸ்திரேலியாவை முந்தியது

டெல்லி: உலகில் 10 பணக்கார நாடுகள் பட்டியலில்இந்தியாவுக்கு 7வது இடம் கிடைத்துள்ளது. இந்தியாவின் சொத்து மதிப்பு 5,600 பில்லியன்
அமெரிக்க டாலர் என கணக்கிடப்பட்டுள்ளது.

தென் ஆப்ரிக்காவை சேர்ந்த 'நியூ வேர்ல்ட் வெல்த்' என்ற அமைப்பு நடத்திய ஆய்வில்இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில்அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.



நியூ வேர்ட்ல் வெல்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்உலக அளவில் டாப் 10 பணக்காரநாடுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. மொத்த தனிநபர் சொத்துக்கள்விவரங்களின் படி இந்த மதிப்பீடுசெய்யப்பட்டுள்ளதாக நியூ வேர்ல்ட் வெல்த்அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
அமெரிக்கா48,900 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் முதலிடத்திலும், சீனா, 17,400 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் இரண்டாம்இடத்திலும், ஜப்பான் 15,155 பில்லியன் டாலர்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளது.
இங்கிலாந்து9,200 பில்லியன் டாலர்களுடன் 4வது இடத்திலும், ஜெர்மனி9,100 பில்லியன் டாலர்களுடன் 5வது இடத்திலும் உள்ளது.
பிரான்ஸ்6,600 பில்லியன் அமெரிக்க டாலர்களுடன் 6வது இடத்திலும், இந்தியா5,600 பில்லியன் டாலர்களுடன் 7வது இடத்தை பிடித்துள்ளது.
கனடா 8வது இடத்தில் உள்ளது. அந்நாட்டின் சொத்து மதிப்பு 4,700 பில்லியன்அமெரிக்க டாலர் என கணக்கிடப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா 4500 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்துக்களுடன் 9வதுஇடத்திலும், இத்தாலி 4,400 அமெரிக்க டாலர் சொத்துக்களுடன் 10வதுஇடத்திலும் உள்ளது.

நபர்களின்நிகர சொத்து மதிப்பு என்றஅளவுகோலில் இது கணக்கிடப்பட்டுள்ளது. இதில் அவரதுஅசையும் சொத்துக்கள், ரொக்கம், பங்குகள், மற்றும் பிற வர்த்தகவருவாய்கள் அடங்கும். இதிலிருந்து கடன்கள் கழிக்கப்படுகின்றன. அரசுநிதிகளை கணக்கில் சேர்க்கவில்லை.

இந்தியாடாப் 10ல் 7வது இடத்தில்இருக்கக் காரணம் அதன் மக்கள்தொகையே என்கிறது நியூ வேர்ல்ட் வெல்த்அறிக்கை. 22 மில்லியன் மக்கள் தொகையே கொண்டஆஸ்திரேலியா டாப் 10ல் இடம்பெற்றிருப்பதுகவனிக்கத்தக்கது.

கடந்த5 ஆண்டுகளாக, டாலர் சொத்து வளர்ச்சியில்சீனாவே அதிவேக வளர்ச்சி பொருளாதாரமாகவிளங்குகிறது என்கிறது இந்த அறிக்கை.
ஆஸ்திரேலியாவும்இந்தியாவும் நல்ல வளர்ச்சி பெற்றுள்ளது. ஆஸ்திரேலியா, இந்தியா, கனடா ஆகிய நாடுகள்இத்தாலியை கடந்த 12 மாதங்களில் முந்தியுள்ளது என அந்த ஆய்வில்கூறப்பட்டுள்ளது.

கடந்த12 ஆண்டுகளில், இந்தியா, ஆஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகள்இத்தாலியை பின்னுக்குத் தள்ளியுள்ளன.

LAST DATE- 30.09.2016

தேசிய 'ஸ்காலர்ஷிப்' பதிவு விறுவிறு

மத்திய அரசு நிறுவனங்களில், கல்வி உதவித் தொகை பெற, பதிவு செய்தோர் எண்ணிக்கை, 67 லட்சமாக உயர்ந்துள்ளது.கல்வி உதவித் தொகையில் முறைகேடுகளை தடுக்கவும், மாணவர்களுக்கு நேரடியாக உதவித் தொகை சென்று சேரவும், மத்திய அரசின் சார்பில், 'ஆன்லைன்'
பதிவு திட்டம் துவங்கப்பட்டுள்ளது.இதன்படி, தேசிய கல்வி உதவித் தொகை இணையதளத்தில் (http://scholarships.gov.in), இதுவரை, 65 லட்சம் பேர் பதிவு செய்திருந்தனர். கடந்த, இரு தினங்களில், இரண்டு லட்சம் பேர் கூடுதலாக பதிவு செய்து, 67 லட்சமாக, உதவித் தொகை கேட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது

ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற பட்டதாரி ஆசிரியர் பணி நிரவலை இரத்து செய்ய வேண்டும். Tngtf மாநிலத் தலைவர் ஆனந்த கணேஷ் கோரிக்கை. இன்றைய தின இதழ்

3 விஷயங்கள் யாருக்காகவும் காத்திருப்பது இல்லை

Bank account balance தெரிந்து கொள்ள ATM card தேவையில்லை