யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

5/12/15

நிவாரண பணிகளுக்கு ரூ.2 கோடி நிதி: கே.வி. வங்கி அறிவிப்பு.

வெள்ள நிவாரண பணிகளுக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.2 கோடி வழங்கப்படும் என்று கரூர் வைஸ்யா வங்கி அறிவித்துள்ளது. இது தொடர்பாக கரூர் வைஸ்யா வங்கியின் நிர்வாக இயக்குநர் வெங்கட்ராமன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:


அரசுக்கு பக்கபலமாக..

சென்னையில் எதிர்பாராத அளவுக்கு பெய்த மழையால் சென்னை உட்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

இத்தகைய பாதிப்புகளின்போது அரசுக்கு பக்கபலமாக நிற்க வேண்டும் என்ற அடிப்படையில் முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்கு கரூர் வைஸ்யா வங்கி ரூ.2 கோடி வழங்கவுள்ளது.

இந்த தொகையை விரைவிலேயே அரசு அதிகாரிகளிடம் அளிக்கவுள்ளோம்.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக