யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

5/12/15

தமிழக ஆரம்பப்பள்ளிஆசிரியர் கூட்டணியின் உதவிக்கரம் தந்து மீட்போம்

வரலாறு காணாத கனமழையால் பாதிக்கப்பட்டு வீட்டை இழந்து, உடமைகள் அனைத்தையும் இழந்து உண்ண. உணவின்றி, உறங்க இடமின்றி,குழந்தைக்குபால் இல்லாமல், கொடுக்க பிஸ்கட் கூட இல்லாமல் இன்னும் கொஞ்சம் பொறுத்துக்கோ யாராவது உதவ வருவார்கள் என்று தன் பிள்ளையின் வயிற்றுப்பசியை மட்டுப்படுத்தி தண்ணீரில் முகம் பார்த்து காத்துக் கொண்டிருக்கும் தாய்கள் எத்தனையோபேர், கடலூரிலும், சென்னையிலும் காத்திருக்கிறார்கள் நாமோ இங்கு உதவ மனமிருந்தும் வழிதெரியாமல் கரைந்திருக்கிறோம்.


கடவுள்கள் கண்ணசந்துவிட்டனர்
நம் சொந்தத்தை நாமே கைகொடுத்து மீட்போம்
இயக்க கண்மனிகளே மாவட்ட பொறுப்பாளர்களின் மேற்பார்வையில் வட்டார. பொறுப்பாளர்கள் தங்கள் பகுதியில் உள்ள அனைவரிடமும் உணவுப் பொருள்கள், மருந்துகள், பெட்ஷீட்டுகள், பேஸ்ட்டு, சோப்பு, பாய்கள் ஆடைகள் என உங்களால் எவ்வளவு பெற முடியுமோ பெற்று அதனை உடனே கடலூர், சென்னை அலுவலகத்திற்கு அனுப்பிவையுங்கள்.
இப்படிக்கு  
இரா.தாஸ், பொதுச்செயலாளர், 
தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கூட்டணி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக