யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

5/12/15

தமிழகத்தை மிரட்டி வரும் கனமழை டிச., 8ல் நிற்குமா?

வங்க கடலில் தொடரும் காற்றழுத்த தாழ்வு நிலையால், விழுப்புரம், கடலுார், டெல்டா மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும். கன்னியகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் கனமழை பெய்யும்' என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.இந்த எச்சரிக்கை 7ம் தேதி வரை மட்டும் விடப்பட்டுள்ளதால், 8ம் தேதிக்கு பிறகு மழை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இதுகுறித்து, வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன், நேற்று கூறியதாவது: வங்க கடலின் தென்மேற்கே, இலங்கை அருகே, நேற்று முன்தினம் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, தொடர்ந்து அப்பகுதியிலேயே நீடிப்பதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், டிச., 7 வரை மழை நீடிக்கும்.

தேதி வாரியாக முன்னெச்சரிக்கை:
டிச., 5: விழுப்புரம், கடலுார், டெல்டா மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மிக கனமழை பெய்யும். கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும்.
டிச., 6, 7: தமிழக தென் கடலோர மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும். தமிழக வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியின் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும்.

சென்னை:

சென்னையில், அடுத்த, 48 மணி நேரத்துக்கு, வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில், மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.நேற்று காலை, 8:30 மணி வரை, தமிழகத்தில், அதிகபட்சமாக நாகப்பட்டினம், கடலுார் - 9; விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் - 5; திருவாரூர் மாவட்டம், நன்னிலம், திருத்துறைபூண்டி, தேனி மாவட்டம், பெரியாறு - 4; திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி, சென்னை டி.ஜி.பி., அலுவலகம்; அரியலுார் மாவட்டம், ஜெயங்கொண்டம்; கன்னியாகுமரி மாவட்டம், குளித்துறை - 3 செ.மீ., மழை பெய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

டிச., 8ல் நிற்குமா?

வானிலை ஆய்வு மையம், நேற்று முதல், டிச., 8 வரையிலான வானிலை முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில், 7ம் தேதி வரை, மிக கனமழை மற்றும் கனமழை பெய்யும் பகுதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. 8ம் தேதிக்கான எச்சரிக்கை இல்லை என தெரிவித்துள்ளது. எனவே, தமிழகத்தை மிரட்டி வரும் மழையின் தீவிரம், 8ம் தேதியில் இருந்து குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக