யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

22/6/17

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் பாஸ்போர்ட் சேவை!!

தமிழகத்தில் சேலம் மற்றும் வேலூர் தலைமை தபால் நிலையங்களில் கடந்த மார்ச் மாதம் பாஸ்போர்ட் செவை மையங்கள் தொடங்கப்பட்டன.

இந்நிலையில், தமிழகத்தில் மேலும் 11 மாவட்ட தபால் நிலையங்களில் பாஸ்போர்ட் சேவை மையங்கள் திறக்கப்படும் எனச் சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் நேற்று (ஜூன்,19) அறிவித்துள்ளது.


இதுகுறித்து சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம், ‘பாஸ்போர்ட் சேவைக்காகப் பொதுமக்கள் இடைத்தரகர்களை இனி நாடத் தேவையில்லை. எளிதில் பாஸ்போர்ட் சேவையை பெறுதற்கு வசதியாக மத்திய அரசு நாடெங்கும் 149 அஞ்சல் அலுவலக பாஸ்போர்ட் சேவை மையங்களைத் திறக்க முடிவு செய்துள்ளது. அதன்படி, முதற்கட்டமாக 86 தபால் நிலையங்களில் பாஸ்போர்ட் சேவை மையங்கள் திறக்க முடிவு செய்யப்பட்டது. அதில், 52 பாஸ்போர்ட் சேவை மையங்கள் ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ளன. இந்நிலையில், தமிழகத்தில் கடலூர், திண்டுக்கல், நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, திருப்பூர், விழுப்புரம், விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய 11 மாவட்ட தபால் நிலையங்களில் பாஸ்போர்ட் சேவை மையங்கள் திறக்கப்படவுள்ளன. அதேபோல், புதுச்சேரியில் காரைக்கால் மாவட்டத்தில் பாஸ்போர்ட் சேவை மையம் திறக்கப்படவுள்ளது’ எனத் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள 800 மாவட்டத் தலைமை தபால் நிலையங்களில், 2 ஆண்டுகளுக்குள் பாஸ்போர்ட் வழங்கும் சேவை தொடங்கப்படும் என வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி.கே.சிங் ஜூன்,13 ஆம் தேதி தெரிவித்திருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக