யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

22/6/17

ஐ.நா.,வின் டி.ஐ.ஆர்., கூட்டமைப்பில் இணைந்தது இந்தியா!!!

ஐ.நா.,வின், டி.ஐ.ஆர்., கூட்டமைப்பில், 71வது நாடாக, இந்தியா இணைந்துள்ளது.

ஐ.நா.,வின் சர்வதேச சாலை போக்குவரத்து கூட்டமைப்பான, ஐ.ஆர்.யு., சர்வதேச தரத்தில், சரக்கு போக்குவரத்தை கையாள்வதற்கான, டி.ஐ.ஆர்., விதிமுறைகளை உருவாக்கி, செயல்படுத்தி வருகிறது.


இது குறித்து, ஐ.ஆர்.யு., செகரட்டரி ஜெனரல் உம்பர்டோ டி பிரிட்டோ கூறுகையில், ''தரமான சரக்கு போக்குவரத்தை ஊக்குவித்து, வர்த்தக வளர்ச்சிக்கும், தெற்காசிய நாடுகளின் முன்னேற்றத்திற்கும், டி.ஐ.ஆர்., உதவுகிறது. இக்குடும்பத்தில், இந்தியா ஐக்கியமாகி உள்ளதை வரவேற்கிறேன்,'' என்றார்.

இந்த ஒப்பந்தம் மூலம், மியான்மர், தாய்லாந்து, வங்கதேசம், பூடான், நேபாளம் ஆகிய நாடுகளுடன், ஒருங்கிணைந்த சரக்கு போக்குவரத்து வசதிகளை, இந்தியா பெறும். அத்துடன், ஈரானின் சபஹர் துறைமுகம் மூலம், ஆப்கானிஸ்தான் மற்றும் யூரேஷியா பிராந்தியங்களுக்கும், சுலபமாக சரக்குகளை அனுப்ப முடியும். சீனா, 2016 ஜூலையில், டி.ஐ.ஆர்., விதிமுறைகளை பின்பற்றும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, அதன் உறுப்பு நாடாக சேர்ந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக