யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

22/6/17

திறந்தவெளி கழிப்பிடம்: அரசின் புள்ளிவிவரத்தில் சறுக்கல்!

மத்திய அரசு திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத கிராமங்கள் என்று அறிவித்ததில் 25 சதவிகிதக் கிராமங்களில் முழுவதுமாகக் கழிவறை கட்டி முடிக்கப்படவில்லை என்று மத்திய அரசின் ஒருங்கிணைந்த மேலாண்மை தகவல் அமைப்பு தெரிவித்துள்ளது.


இந்தியாவில் பெரும்பாலான கிராமங்களில் மக்கள் திறந்தவெளி கழிப்பிடத்தையே பயன்படுத்துகின்றனர். இதனால், மத்திய அரசு தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் 2019ஆம் ஆண்டுக்குள் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது. இதுகுறித்து நேற்று ஜூன் 19ஆம் தேதி ஒருங்கிணைந்த மேலாண்மை தகவல் அமைப்பு செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில், ‘நாட்டில் 6,05,828 கிராமங்களில் 33 சதவிகித கிராமங்களில் கழிவறைகள் கட்டப்பட்டு திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத கிராமங்களாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அண்மையில் மாநில அரசுகளிடமிருந்து பெறப்பட்ட புள்ளிவிவரங்களின்படி நாட்டில் மொத்தம் 2,00,959 கிராமங்களில் கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. அதில் 52,593 கிராமங்களில் 100 சதவிகிதம் கழிவறைகள் கட்டி முடிக்கப்படவில்லை என்று தெரியவந்துள்ளது. அதனால், அனைத்து மாவட்ட அலுவலர்களும் 100 சதவிகிதம் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத கிராமங்களாக மாற்ற தீவிரமாக செயல்பட வேண்டும்’ என்று அறிவுறுத்தியுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக