யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

22/6/17

கோடிகளில் ஊதியம் வழங்கும் இன்ஃபோசிஸ்!!! !!

இந்தியாவில் பணியாற்றும் ஊழியர்களை விட வெளிநாடுகளில் பணியாற்றும் ஊழியர்கள் பலருக்கு இன்ஃபோசிஸ் நிறுவனம் கோடிகளில் ஊதியம் வழங்குவது தெரியவந்துள்ளது.

இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஐ.டி. நிறுவனமாக இன்ஃபோசிஸ் உள்ளது. அடுத்த 2 ஆண்டுகளில் அமெரிக்காவில் 10 ஆயிரம் 
பணியாளர்களை வேலைக்கு எடுக்கப்போவதாக இந்நிறுவனம் சமீபத்தில் அறிவித்திருந்தது. இந்நிலையில், இந்நிறுவனத்தின் இந்திய அலுவலகங்களில் பணியாற்றுபவர்களை விட வெளிநாடுகளில் பணியாற்றும் ஊழியர்களுக்குக் கோடிக் கணக்கில் சம்பளம் வழங்கப்படுவது தரவு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது. வெளிநாடுகளில் பணியாற்றும் ஊழியர்களில் 1,800க்கும் மேற்பட்டவர்களுக்கு ரூபாய் ஒரு கோடிக்கும் அதிகமாக அந்நிறுவனம் ஊதியம் வழங்குகிறது. இதில், 150 ஊழியர்களைக் கடந்த நிதியாண்டில் அந்நிறுவனம் பணியில் அமர்த்தியது குறிப்பிடத்தக்கது.

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இந்திய அலுவலகங்களில் 1,51,956 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இவர்களில் 50 பேருக்கு மட்டுமே ரூ.1 கோடிக்கு அதிகமாக ஊதியம் வழங்கப்படுகிறது. ஆனால் வெளிநாடுகளில் பணிசெய்யும் 48,400 ஊழியர்களில் 1,800 பேர் ரூ.1 கோடிக்கும் அதிகமாக ஊதியம் பெறுகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக