யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

22/6/17

இனி கணிதம் விருப்பப் பாடம்: நீதிமன்றம் பரிந்துரை!!

பெரும்பாலான மாணவர்கள் கணிதப் பாடத்தை வெறுக்கின்றனர். இதனால், பத்தாம் வகுப்பிற்குப் பின் மாணவர்கள் கணிதப் பாடம் இல்லாத பிரிவுகளையே தேர்வு செய்கின்றனர். ஒருசில மாணவர்கள் கணிதம் காரணமாகப் பள்ளிக்கு செல்வதை நிறுத்துகின்றனர்.

இந்நிலையில், கல்வி வாரியங்கள் பத்தாம் வகுப்பில் கணிதத்தை விருப்பப் பாடமாக கருதுமாறு மும்பை 
உயர்நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. பல மாணவர்கள் தேர்வில் தேர்ச்சி பெறவும், உயர் கல்வி பெறவும் இது உதவும். குறிப்பாக இளங்கலை பட்டப் படிப்புகள்,போன்றவற்றிற்கு கணித பாட அறிவு தேவையில்லை என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

மும்பை உயர்நீதிமன்றத்தில் மனநல மருத்துவர் ஹரீஷ் ஷெட்டி பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்தார். அதில், கற்றல் குறைபாடுகள் கொண்ட மாணவர்களுக்கு உதவுவதற்குப் பள்ளிகள் முன்வர வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனு கடந்த திங்கள்கிழமை( ஜூன் 19) நீதிபதி வி.எம். கனடே மற்றும் நீதிபதி எம்.ஏ.பாதர் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, சிறப்பு பள்ளிகளில் கைவிடப்படக் கூடிய பாடங்கள் குறித்தும் ஆராயப்பட்டது. கலை மற்றும் பிற தொழிற்கல்வி படிப்புகள் போன்ற பட்டப்படிப்புகளில் கணிதம் போன்ற பாடங்கள் தேவையில்லை. கணிதத்தை ஒரு விருப்பப் பாடமாக மாணவர்களுக்கு கொடுக்கப்பட்டால், அது அவர்கள் முழுமையாகப் பட்டப்படிப்பை முடிக்க உதவும். கணிதம் மற்றும் மொழிப் பாடங்களில் தேர்ச்சி பெற முடியாத காரணத்தால், பெரும்பாலான மாணவர்கள் பத்தாம் வகுப்பு படிப்பை பாதியிலேயே நிறுத்தி விடுகின்றனர். ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு, மாநில கல்வி வாரியங்கள் கணிதத்துக்கு பதிலாக சமஸ்கிருதத்தை தேர்வு செய்ய அனுமதித்தனர்.

மாணவர்கள் கணிதத்தை படிக்காமல் பிற பாடங்களைப் படித்திருந்தாலும், பட்டப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்பட்டனர் என நீதிபதி வி.எம். கனடே தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக