யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

31/12/18

மனசே, மனசே குழப்பம் என்ன!: பகிர்ந்து கொள்வதே பாதுகாப்பை தரும்!



மன அழுத்தம் என்பதற்கான சரியான அர்த்தத்தை புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். காரணம், தினசரி வாழ்க்கையில், அந்தந்த நேரத்தில், யார் மீதேனும் கோபம், எதன் மீதாவது வெறுப்பு, ஏமாற்றம் வந்தால், உடனே, 'பயங்கர டிப்ரஷ்ன்னா இருக்கு' என்று சொல்வது சகஜமாகி விட்டது. இவையெல்லாம், வெளிக்காரணிகளால், தற்காலிகமாக ஏற்படும் எதிர்மறை உணர்வுகள்.
மருத்துவ ரீதியில், மன அழுத்தம் என்பது இதைக் காட்டிலும், சிக்கலான, உடனடியாக கவனிக்க வேண்டிய விஷயம். நமக்கு நெருக்கமானவர்கள், சோகமாக, கவலையாக இருந்தால், என்ன காரணம் என்பதை அக்கறையாக விசாரிக்க வேண்டியது முக்கியம். 
பகிர்ந்து கொள்ளுவதே, பாதுகாப்பு உணர்வைத் தரும். தொடர்ந்து, இரண்டு நாட்களுக்கு, இதே மனநிலையில் இருந்து, உடல் நிலையிலும் ஏதாவது மாற்றங்கள் தெரிந்தால், கண்டிப்பாக மனநல ஆலோசனை பெறுவது அவசியம்.

மன அழுத்தத்திற்கான பொதுவான அறிகுறிகள்

* வெளியில் செல்லாமல், வீட்டிலேயே அடைந்து கிடப்பது.

* எதிலும் ஆர்வம் இல்லாமல், நண்பர்கள், குடும்பத்தினருடன் விலகியே இருப்பது.

* கவனமின்மை; வழக்கமாகச் செய்யும் பொழுதுபோக்குகளை தவிர்ப்பது.

* குற்ற உணர்வு, எரிச்சல், சோகம், விரக்தி, தன்னம்பிக்கை இல்லாமல் இருப்பது.

* உடல் ரீதியில் சோர்வு, தலைவலி, தசைகளில் வலி, இறுக்கம், துாக்கமின்மை, செரிமானப் பிரச்னை, காரணம் இல்லாமல் உடல் எடை குறைவது.
இவற்றில் ஒன்றோ, ஒன்றுக்கு அதிகமான பிரச்னைகளோ மன அழுத்தத்தின் அறிகுறிகளாக இருக்கலாம்.


என்ன செய்ய வேண்டும்?

மன அழுத்தம் இருப்பது உறுதி செய்யப்பட்டால், மனநல ஆலோசனையுடன் மருந்துகளும் தேவைப்படும். 
மன அழுத்தம், எந்த அளவு தங்களை பாதிக்கிறது என்பதை வெளிப்படுத்தும் விதமாக அல்லது அதே வலியை உடலிலும் உணர விரும்பி, கிள்ளுவது, அடிப்பது என்று தங்களைத் தாங்களே காயப்படுத்திக் கொள்வர். இதை புரிந்து, அந்த மனநிலையில் இருந்து வெளியில் வர அவர்களுக்கு உதவ வேண்டியது அவசியம்.
மனநலம் தொடர்பான எந்த பிரச்னை வந்தாலும், இது குறித்து, வெட்கப்படுவதற்கு ஒன்றும் இல்லை.

 இதயத்தில் பிரச்னை என்றால், எந்தத் தயக்கமும் இல்லாமல், உடனடியாக டாக்டரைப் பார்க்கிறோம். மன அழுத்தம் என்பது, மூளையில் சுரக்கும் வேதிப் பொருட்களில் ஏற்படும் மாற்றத்தால் வரும் பிரச்னை.
முறையான ஆலோசனை, மருத்துவ சிகிச்சையோடு, யோகா, தியானம், வாழ்க்கை முறை, உணவுப் பழக்கத்தில் அவசியமான மாற்றங்களை செய்தால், மன அழுத்தத்தில் இருந்து, முற்றிலும் வெளியில் வரலாம்.

டாக்டர் அன்னா சாண்டி
மனநல ஆலோசகர், 
லிவ் லவ் லைப் பவுண்டேஷன், பெங்களூரு.

கல்வித்துறையில் சீர்திருத்தம் என்ற பெயரில் பள்ளிகளை இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்




 பள்ளிக் கல்வித்துறையில் சீர்திருத்தம் என்ற பெயரில், தொடக்கப் பள்ளிகளை அருகில் உள்ள பள்ளிகளுடன் இணைக்கும் திட்டத்தை அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு ஊழியர்கள்  ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் வெளியிட்ட அறிக்கை:

பள்ளிக் கல்வித்துறையில் இருந்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு 26ம் தேதி  ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், உயர்நிலை மற்றும் மேனிலைப்பள்ளிகளின் அருகில் உள்ள தொடக்க  மற்றும் நடுநிலைப் பள்ளிகளை கண்டறிந்து, பள்ளிக்கல்வி முதன்மைச் செயலாளருக்கு பட்டியல் அனுப்ப வேண்டியுள்ளதால், 28ம் தேதிக்குள் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் பட்டியல்களை மாவட்ட முதன்மைக் கல்வி   அலுவலர்கள் உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்மாதிரிப் பள்ளிகள் என்ற பெயரில் எல்கேஜி முதல் 10ம் வகுப்பு, எல்கேஜி முதல் பிளஸ் 2 வரை ஒரே பள்ளியாக இணைக்க அரசு முடிவு செய்துள்ளது. இது கிராம ஏழை மாணவர்களை மிகவும் பாதிக்கும். ஒரே பள்ளியாக  இணைத்தால், 5 கிலோ மீட்டருக்கு ஒரு பள்ளிதான் இயங்கும் நிலை ஏற்படும். இதனால் சிறுவர்கள் தொலை தூரம் செல்ல முடியாத நிலை ஏற்படும். தற்ேபாதுள்ள நிலையில், ஆசிரியர்கள் வீடுவீடாக சென்று பள்ளிகளுக்கு மாணவர்களை சேர்க்கும் நிலை உள்ளது.

ஒன்றாக இணைத்தால் பெற்றோர் தங்கள்  குழந்தைகளை தொலை தூர பள்ளிகளுக்கு அனுப்புவார்களா என்ற கேள்வி எழுகிறது. மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் ஒரு கிலோ மீட்டருக்குள் இருக்க வேண்டும். ஒன்றாக இணைக்கும் திட்டத்தி–்ன் மூலம் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்துக்கு  எதிரானதாக அமைந்துவிடும். மேலும் இடைநிற்றலும் அதிகரிக்கும். இது ஏழை, எளிய மாணவர்களுக்கு துரோகம் இழைக்கும் செயலாகிவிடும்.

இது  தவிர அரசுப் பள்ளிகளை ஒன்றாக இணைத்தால் அது தனியார் பள்ளிகளுக்கு சாதகமாக அமையும். அதனால் இந்த திட்டத்தை திரும்ப பெறவேண்டும். சீர் திருத்தம் என்ற பெயரில் ஆசிரியர்கள் பணியிடத்தை குறைக்க அரசு  துடிக்கிறது. இது மாணவர்கள் எதிர்காலத்தை பாதிக்கும்.  எனவே உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளில் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளை இணைக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும்

6வது ஊதியக்குழுவில் ஊதிய முரண்பாடுகளை களையப்பட அமைக்கப்பட்ட ஒரு நபர்குழு இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதியம் மறுக்கப்பட்டதற்கு கூறிய காரணம்

                         

6வது ஊதியக்குழுவில் ஏற்பட்டுள்ள ஊதிய முரண்பாடுகளை களையப்பட அமைக்கப்பட்ட திரு.ராஜீவ்ரஞ்சன் ஒரு நபர்குழு தனது அறிக்கையில் இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கிணையான ஊதியம் மறுக்கப்பட்டதற்கு கூறிய காரணம்...

1.எண்ணிக்கையில் அதிகமாக இருக்கிறார்கள்... (அதற்காக, அவர்கள் செய்யும் வேலைக்கும், தகுதிக்கும், திறமைக்குந்தான் ஊதியமே தவிர எண்ணிக்கைக்கு அல்ல.)

2.கல்வித்தகுதி 10 ம் வகுப்புடன் கூடிய ஆசிரியர் பயிற்சி... 12 ம் வகுப்பு படிக்கவில்லை அதனால் பத்தாம் வகுப்பு கல்வித் தகுதிக்குறிய ஊதியம் 5200-2800 போதும்...


(கலந்தாய்வில் எங்களது PLUS TWO CERTIFICATE ஆ VERIFY பண்ணித்தானே பணியில் சேர்த்தீர்கள்.)

மேலும் இடைநிலை ஆசிரியர்கள் கிராமப்புறத்தில் வேலை செய்கிறார்கள் அங்கு விலைவாசி குறைவு அதனால் அவர்களுக்கு அந்த ஊதியம் போதும்... அட அட அட என்னாவொரு விளக்கம்..... அற்புதம். கிராமப்புறக் கடையில் கூட இடைநிலை ஆசிரியரா என்று கேட்டுத்தான் அவர்களுக்கு மட்டும் விலை குறைவாக கொடுப்பார்கள் போல.....

இடைநிலை ஆசிரியர்கள் 12 ம் வகுப்பு படிக்கவில்லை அதனால் 5200-2800 இந்த ஊதியம் போதும் என்று சொல்லியிருக்கிறது அறிக்கை...

அதற்கு ஆசிரியர் சங்கங்கள் என்ன பண்ணியிருக்கனும்... தொலைபேசியிலே தொடர்பு கொண்டு பேசும் அளவிற்கு சர்வ வல்லமை படைத்திருப்பவர்களும், இயக்குநர் அலுவலகத்தில் நமக்கு மட்டும் தனி மரியாதை என்று கூறிக் கொள்பவர்களும் (அரசுக்கு உண்மை நிலையினை எடுத்துக்கூறி கோரிக்கையை வென்று கொடுத்திருப்பது என்ன அவ்வளவு கஷ்டமான வேலையா என்ன)


திரு.ராஜீவ்ரஞ்சனை நேரில் சந்தித்து நீங்கள் அறிக்கையில் கூறியிருப்பது மிகவும் தவறு இடைநிலை ஆசிரியர்களின் கல்வித்தகுதி 10 Th,12Th டன் கூடிய Diploma in Teacher Education, So அவர்களுக்கு 9300-4200 மத்திய அரசுக்கிணையான ஊதியம் மறுக்கப்பட்டிருக்கிறது . அவர்களுக்கு சரியான ஊதியத்தை வழங்கிடுங்கள் என்று அமைச்சர் மற்றும் முதல்வரை சந்தித்துக் கூறி அல்லது வலுவான போராட்டத்தினை முன்னெடுத்து கோரிக்கையை நிறைவேற்றி தந்திருந்தால் நாங்கள் எதுக்கு இப்படி தன்னந்தனியாக (எண்ணிக்கையில் 100000 பேர் இருந்தும்) 9300-4200 கூட கேட்காமல் 8370 கொடுத்தால் கூட போதும் என்று 6 நாட்களாக போராடப் போகிறோம்...


இறுதியாக ஒன்று இடைநிலை ஆசிரியர்களை கடந்த 6 நாட்களாக கடும் பனிப்பொழிவில், கொசுக்கடியில், நடுவீதியில் உறங்கவிட காரணமாக இருந்த அனைவருக்கும் சரியான நேரத்தில் பதில் சொல்வோம்.... இனி ஜனவரி 7 ம் தேதி நடக்கப் போவதையாவது அலசி ஆராய்ந்து என்ன நடக்கப் போகிறது, யாருக்கு பலன் கிடைக்கப் போகிறது , இடைநிலை ஆசிரியர்களுக்கு என்ன கிடைக்கிறது என்று நடப்பதை உற்றுநோக்கி விழித்துக் கொள்ளுங்கள்       

மூடப்படும் அபாயத்திலிருந்து பிழைத்தெழுமா அரசுப் பள்ளிகள்?




சமூகத்தின் அரசியல், பொருளியல், கல்வி செயல்பாடுகளில், சமூகத்தின் அரசியல், பொருளியல், கல்வி செயல்பாடுகளில், சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், சமயச் சார்பின்மை, சமூக, அரசியல், பொருளாதார நீதி போன்றவை பிணைந்திருக்க வேண்டும். அறநெறிகளையும், விழுமியங்களையும் கல்வியின் மூலமே பயிற்றுவிக்க முடியும். ஆனால், நமது கல்வி அமைப்பில் இந்த நோக்கங்கள் படிப்படியாக தேய்ந்து வருகின்றன.

அனைத்து துறைகளிலுமான தனியாரின் வளர்ச்சியின் விளைவே அரசுப் பள்ளிகள் மூடப்படுவதும், தனியார் பள்ளிகள் பெருகுவதற்குமான காரணம்" என்கிறார் கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளரும், திருப்பூர் மாவட்ட அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியருமான சு.மூர்த்தி.

ஜனநாயகத்தின் விளை நிலங்களான அரசுப் பள்ளிகள் மூடப்படும் சூழல் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பியபோது, சற்றும் யோசிக்காமல் பதில் அளிக்கிறார் சு.மூர்த்தி.

கட்டாய இலவச கல்வி உரிமைச் சட்டம் எந்த அளவில் நடைமுறையில் உள்ளது?

2009-ல் குழந்தைகளுக்கான இலவச, கட்டாய கல்வி உரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டு, 6 முதல் 14 வரையுள்ள குழந்தைகள் கல்வி பெறுவது அடிப்படை உரிமை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இது தனியார் பள்ளிகளில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்திவிடவில்லை. மழலையர் வகுப்புக்கே ஒன்றிரண்டு லட்சங்கள் வரை கல்விக் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகளும் உள்ளன. 

கல்வி உரிமைச் சட்டம் காகிதச் சட்டமாகவே உள்ளது. மதிப்பெண் மட்டுமே படிப்புக்கான அளவீடாக பார்க்கும் சூழலில், தனியார் பள்ளியில் படித்தால் மட்டுமே அதிக மதிப்பெண் பெற முடியும் என்ற கருத்து நிலைபெற்றுள்ளது. பிளஸ் 2 வகுப்புக்கு மட்டும் பொதுத் தேர்வு என்றிருந்த நிலையில், தனியார் சுயநிதிப் பள்ளிகள் பிளஸ் 1 வகுப்புப் பாடங்களே அவசியமில்லை எனக் கைவிடப்பட்டது எவ்வளவு பெரிய அபத்தம்?

அரசுப் பள்ளிகளோ, நிர்வாகச் சீர்கேடு, வசதிக் குறைபாடு, மாணவர் எண்ணிக்கை குறைவு என தொடர் தாக்குதல்களில் அகப்பட்டு,ஒவ்வொன்றாக மூடப்பட்டு வருகின்றன. நடப்பு கல்வியாண்டில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் 812 கணினி ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. இந்த மாணவர்கள் பொதுத் தேர்வில் எப்படி தேர்ச்சி பெற முடியும்? இதுபோன்ற காரணங்களே தனியார் பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்க்கவேண்டிய கட்டாயத்துக்கு பெற்றோரை உள்ளாக்குகின்றன.

அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்கப்பட்ட பின் மாணவர் எண்ணிக்கை உயர்ந்துள்ளதா?

நிச்சயமாக இல்லை. தமிழ் வழியில் சேரும் மாணவர்கள் சிலர், ஆங்கில வழிக்கு மாற்றப்பட்டுள்ளனர். வீட்டிலும், வெளியிலும் பயன்படுத்தாத ஆங்கில மொழி மூலம் கற்பிப்பதால், புரிந்துகொள்ளுதல் இல்லாமல், மனப்பாடம் மட்டுமே நிகழ்கிறது. புதிதாக ஒரு தனியார் பள்ளி திறக்கப்பட்டால், சுற்றியுள்ள 10, 15-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறையும்.

ஆனால், தனியார் பள்ளிகளோ, 20, 30 கிலோமீட்டர் தொலைவில் இருந்தும் வாகனங்களில் குழந்தைகளை அழைத்து வந்து விடுகின்றனர். கல்வி உரிமைச் சட்டம் 2009-ன்படி, தனியார்பள்ளிகளில் நுழைவு வகுப்புகளில் 25 சதவீதம் ஏழைக் குழந்தைகளைச் சேர்க்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற காரணங்களால் மாணவர் எண்ணிக்கை குறைந்து, அரசுப்பள்ளிகள் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது.

அரசுப் பள்ளிகளை காக்க என்ன வழிகள் உள்ளன?

அனைத்து குழந்தைகளுக்கும், தரமான, சமவாய்ப்பிலான கல்வியை, அவரவர் தாய்மொழியில் கட்டணமின்றி கிடைக்கச் செய்வதே அரசின் கடமை என்பதை எல்லா அரசியல் கட்சிகளும் உணரவேண்டும். நாட்டின் பாதுகாப்புக்கு பட்ஜெட்டில் 12 % வரை நிதி ஒதுக்கப்படுகிறது. இதில் பாதிகூட கல்விக்கு ஒதுக்கப்படுவதில்லை. எனவே, நிதி ஒதுக்கீட்டை அதிகரித்து, நவோதயாபோல, மாவட்டந்தோறும் மாதிரிப் பள்ளிகளை அமைப்பதால் மட்டும் பயனில்லை. அரசுப் பள்ளிகள் அனைத்துமே மாதிரிப் பள்ளி நிலைக்கு உயர வேண்டும்.
 - சு.மூர்த்தி.

தாய் மொழிக் கல்வி, ஆளுமைகளை உருவாக்குமா?

ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை, பள்ளி இறுதி வகுப்பு வரை தமிழ் வழியில் படித்துவிட்டு, கல்லூரிபடிப்பை மட்டுமே ஆங்கில வழியில் படிக்கும் நிலைதான் இருந்தது. அரசுப் பள்ளிகளில் ஆங்கிலத்தை மொழிப் பாடமாகப் படித்த பலர், அனைத்து துறைகளிலும் பெரிய ஆளுமைகளாக உருவாகினர்.அப்துல் கலாம், விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, இஸ்ரோ தலைவர் கே.சிவன் ஆகியோர் தமிழ் வழிக் கல்வி மூலம் படித்தவர்களே. இவற்றை மக்களிடம் எடுத்துக்கூறி, விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது கல்வித் துறைதான்.

அரசுப் பள்ளிகள் குறைவதற்கு வேறு காரணங்கள் என்ன?

அதிகாரம் உள்ளவர்களின் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்காததே சீர்கேட்டுக்கு வழியமைத்தது. ஆட்சியாளர்கள், அரசு ஊழியர்கள் அனைவரும், தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில்தான் சேர்க்க வேண்டுமென 2015-ல் அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சமத்துவம், சமூக நீதி பேசுவோரும், அரசுப்பள்ளிகளை மூடக்கூடாது என்று அறிக்கை விடுவோரும், இந்த தீர்ப்பை நடைமுறைப்படுத்த வலியுறுத்திப் போராட வேண்டும்.

10 குழந்தைகளுக்கு குறைவாக உள்ள பள்ளிகளாக இருந்தாலும் மூடக்கூடாது என்று சிலர் கோரிக்கை வைக்கின்றனர். இது, சரியான நிர்வாக முறையல்ல. அரசு செலவழிக்கும் பணம், மக்களின் வரிப்பணமே. எனவே, குறைந்தபட்சம் வகுப்புக்கு ஒரு ஆசிரியர், பாடத்துக்கு ஒரு ஆசிரியர், கல்வி இணைச் செயல்பாடுகளுக்கு முழு நேர ஆசிரியர்கள், முழுநேரத் துப்புரவுப் பணியாளர் மற்றும் பாதுகாப்பான குடிநீர், சுகாதாரமான கழிப்பிடம், விளையாட்டு மைதானம் உள்ளிட்டவற்றுடன், மூன்று கிலோமீட்டருக்கு ஒரு நடுநிலைப் பள்ளி அமையும் வகையில், மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளை இணைப்பது சரியான தீர்வாக இருக்கும்.

போக்குவரத்து நெரிசல் மிகுந்த இந்த காலகட்டத்தில் ஒரு கிலோமீட்டர் தொலைவுக்கு அப்பால் இருந்து வரும் குழந்தைகளுக்கு அரசின் பொறுப்பில் வாகன வசதி செய்துதர வேண்டும். வளர்ந்த முன்னேறிய நாடுகளில் பின்பற்றப்படும் அருகாமைப் பள்ளி முறை மற்றும் பொதுப் பள்ளி முறைகளைப் பின்பற்றுவதே அனைத்துச் சிக்கல்களுக்கும் நிரந்தரத் தீர்வாக அமையும். தனியார் பள்ளிகளை இந்த முறைக்குள் கொண்டுவர புதிய கல்விச் சட்டம் இயற்ற வேண்டும்.

முக்கிய நூல்கள் ஆசிரியர்



* கம்பராமாயணம்-கம்பர்
* கந்தபுராணம்- கச்சியப்பர்
* பெரியபுராணம் -சேக்கிழார்.
*நளவெண்பா-- புகழேந்திப்புலவர்
* வில்லிபாரதம்- வில்லிபுத்தூரார்
* திருப்பாவை - ஆண்டாள்
* மூவருலா - ஒட்டக்கூத்தர்
,* தக்கயாகப்பரணி- ஒட்டக்கூத்தர்
* தேம்பாவணி,- வீரமாமுனிவர்
* குற்றால குறவஞ்சி,- திரிகூடராசப்பக் கவிராயர்
* திருப்புகழ்- அருணகிரிநாதர்
* பெருங்கதை- கொங்கு வேளிர்
* சீறாப்புராணம் உமறுப்புலவர்
*  திருவிளையாடல் புராணம்-
 பரஞ்சோதி முனிவர்
* திருவாசகம்-  மாணிக்கவாசகர்

ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம். சவுச்சவ் ஆச்சரியப்படுத்தும் உடல்நல நன்மைகள். . .


சவுச்சவ் இதய நொய்யாளிகளுக்கு  நல்லது, மற்றும் புற்றுநோய் வராமல் காக்கும்.

சவுச்சவ் பொதுவாக ஒரு காய்கறி போன்றே தயார் செய்ய படுகிறது என்றாலும், அது உண்மையில் ஒரு பழம் ஆகும். இதில் மிகவும் முறுமுறுப்பான சதை பற்று இருப்பதால் இதைல் சமைத்தும் சாப்பிடலாம், பச்சையாகுவும் சாப்பிடலாம்.

1. இதயத்திற்கு நல்லது. . .

(Homocystein) ஒரு அமினோ ஆஸிட் ஆகும், இது இரத்தத்தில் அதிகமா இருந்தால் இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன, இப்படிப்பட்ட அமினோ ஆஸிட் வளர்வதை 'B' விடமின் தடுக்கிறது. இந்த Folate எனப்படும் 'B' விடமின் சவுச்சவ்வில் நிறைந்து இருக்கிறது.

2.புற்றுநோயை தடுக்க உதவுகிறது(வைட்டமின் சி) . . .

வைட்டமின் சி, ஒரு சக்திவாய்ந்த ஆண்டி-ஆக்ஸிடெஂட்ஸ்(antioxidants) ஆகும். இந்த சாரம் நம் உடலில் ஏற்படும் திசு சிதைவுகளை சரிசேய்யும் அது மற்றும் இன்றி இந்த ஆண்டி-ஆக்ஸிடெஂட்ஸ் மெதுவாக அல்லது சாத்தியமான வகையில் புற்றுநோய் வளர்ச்சியை தடுக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. சவுச்சவ்வில் வைட்டமின் சி ஒரு நல்ல மூலமாகும், இது . 17% வழங்கும்.

3. உடலின் ஆற்றல்/சக்தி உற்பத்தியை அதிகரிக்கும் (Manganese). . .

சவுச்சவ் முட்டை போடிமாஸ்யை காலை உணவாக உன்ணுங்காள், நாள் முழுவதும் உங்கள் உடல் ஆற்றல் / சக்தியுடன் இருக்கும். இதில் மாங்கனீசு உள்ளடக்கம் அதிகம் உள்ளத்தால் அந்த நாளில் உண்ணும் உணவில் இருந்து கிடைக்கும் புரதம் மற்றும் கொழுப்பை எநர்ஜீ(Energy) ஆகா மாற்றும்.

4. மலச்சிக்கலை தடுக்க உதவுகிறது (Fiber). . .

குடல்பகுதியை முறைப்படுத்தி ஊக்குவிக்க, உங்கள் உணவில் சவுச்சவ்வை தினமும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

5. தைராய்டு(thyroid) ஆரோக்கியமாக வைத்திருக்கும் (Copper). . .

தைராய்டு வளர்சிதையை கட்டுப்படுத்தும் அயோடின்க்கு, தாமிரம்(Copper) உதவுகிறது. அயோடின் என்பது தைராய்டு வளர்சிதை பரிணாமத்துடன் சம்பந்தப்பட்டு இருக்கும் ஒரு தாது குறிப்பாக ஹார்மோன் உற்பத்தியில் மற்றும் உட்கிரகிப்பிற்கும்.

6. ஆண்மை அதிகரிக்க மற்றும் முகப்பரு தடுக்க உதவுகிறது (Zinc). . .

சவுச்சவ் துத்தநாகம்(.) ஒரு நல்ல மூலமாகும். தோல் எண்ணெய் உற்பத்தி கட்டுப்படுத்தும் ஹார்மோன்கலை ஊக்குவிக்கும். ஆண்மை அதிகரிக்க மற்றும் மலட்டுத் தன்மையை போக்கும்.

7. எலும்பு இழப்பு தடுக்க உதவுகிறது (Vitamin K). . .

உங்கள் வீட்டில் இருக்கும் வயதானவர்களை சவுச்சவ் சாப்பிட சொல்லுங்கள், அதில் இயற்கை வைட்டமின் கே இருக்கிறது. வைட்டமின் கே மற்றும் எலும்பு இடையே ஒரு தொடர்பு இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

8. இரத்த அழுத்தம் குறைக்க உதவுகிறது (Potassium). . .

சவுச்சவ் உங்கள் உடலின் தினசரி படாஸீயம் தெவயை பூர்த்தி செய்யும், இந்த தாது இரத்த அழுத்த அளவுகளை குறைக்க உதவுகிறது.

9. மூளை வார்சிக்கு நல்லது (Vitamin B6). . .

ஆய்வின் பங்கேற்பாளர்கள் சில குறிப்பிட்ட வயதில் உள்ளவர்களுக்கு மூளை நினைவக திறனை ஊக்குவிக்கும் என்று நம்புகிறார்கள்

10. கால் தசைப்பிடிப்புக்கலை தடுக்க உதவுகிறது (Magnesium). . .

ஒரு எலக்ட்ரோலைட் மற்றும் கனிமம் தசைப்பிடிப்புப்பை தடுக்கும் உதவும்.

30/12/18

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றத்திற்கு மரண தண்டனை - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் 2012ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. அதன்படி, 1⃣8⃣ வயதிற்குட்பட்டவர்கள் சிறார்களாக கருதப்பட்டு, அவர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு, அதிகபட்சமாக ஆயுள் தண்டனை வழங்கும் வகையில் இருந்து வந்தது. இந்நிலையில், இத்தகைய குற்றங்களுக்கு, கடுமையான தண்டனை வழங்க வேண்டும், என பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை எழுந்தது. இதனையடுத்து, போக்சோ சட்டத்தின் கீழ், அதிகபட்சமாக மரண தண்டனை வழங்கும் வகையில் திருத்தப்பட்டது. இதற்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.

இதெல்லாம் நடக்கும் என்று 100,101 G.O வெளிவந்த போதே யூகித்தோம். அதனால் தான் அதனை எதிர்த்தோம்.அடுத்து...........நடுநிலைப்பள்ளிகளை இணைத்தால் ஆசிரியர் பற்றாக்குறையே இருக்காது.போதுமான பட்டதாரி ஆசிரியர்கள் கிடைப்பார்கள்.BEO அலுவலகங்களையும் மூடி விட்டால் ஊழியர் பற்றாக்குறையும் இருக்காது. பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு போடுவார்,Ceo,Deo க்கள் Mail ல் போடுவர்.தலைமை ஆசிரியர்கள் Mail பார்த்து Particulars அனுப்புவர். நிர்வாகம் சுலபம்,நிர்வாக செலவுகள் மிகவும் குறையும்.ஆசிரியர், ஆசிரியரல்லா பணியாளர் நியமனமே குறைந்தது 10 ஆண்டுகளுக்கு செய்யப்போவதில்லை.(மாணவர்கள் இருந்தால் Appointment செய்வோம் என மக்களை ஏமாற்றலாம்) சீர்திருத்தம் என்ற பெயரில் இலவசக்கல்விக்கான நிதி ஒதுக்கீட்டைக் குறைத்து கல்வித்துறையை படிப்படியாக தனியாருக்கு முற்றிலும் தாரை வார்ப்பதுதான் Plan. வழக்கம்போல இது அரசின் முடிவு.நாமென்ன செய்ய முடியும்?என ஆசிரிய சமூகம் வாளாயிருந்தால் பாதிக்கப்படுவது நாம் மட்டுமல்ல நமது தலைமுறையினர் அனைவரும் என்பதை உணர்வீர்.

ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம்(28.12.2018) மாலை 3 மணி அளவில் சென்னையில் நடைபெற்றது.



கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் ஒரு மனதாக இயற்றப்பட்டது.

1. 07.01.2018   அன்று அரசு வழியிலோ அல்லது உயர் நீதிமன்றம் வழியிலோ இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாட்டை நீக்காவிடில் 07.01.2018 அன்று மதுரை மாநகரில் ஜாக்டோ- ஜியோ உயர்மட்டக்குழு கூடி போராட்டத்தை அறிவிக்கும் எனவும் முடிவு செய்யப்பட்டது.

2. பள்ளிகள் இணைப்பு என்ற போர்வையில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளை ஒன்றிணைக்கும் முடிவை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும். இத்திட்டத்திற்கு ஜாக்டோ - ஜியோ மாண்புமிகு கல்வித்துறை அமைச்சர் மற்றும் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு கண்டனம் தெரிவிக்கிறது.

 25 மாணவர்களுக்கும் குறைவான பள்ளிகளில் சத்துணவு மையங்கள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ள ஆணையை உடனடியாக இரத்து செய்ய வேண்டும்.

மேலும் பல்வேறு தீர்மானங்கள் இயற்றப்பட்டது.

தொலைநிலைக் கல்விக் கட்டணம்: அதிரடியாக உயர்த்த சென்னைப் பல்கலை. முடிவு


தொலைநிலைக் கல்வி நிறுவன படிப்புகளுக்கான விண்ணப்பம் மற்றும் கல்விக் கட்டணங்களை அதிரடியாக உயர்த்த சென்னைப் பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. இதற்கு, பல்கலைக்கழக ஆட்சிக் குழுவும் ஒப்புதல் அளித்துள்ளது


தொலைநிலைக் கல்வி நிறுவன படிப்புகளுக்கான விண்ணப்பக் கட்டணம், தேர்வுக் கட்டணம் ஆகியவை இப்போது உள்ளதைக் காட்டிலும் பன்மடங்கு உயர்த்தப்பட உள்ளது


குறிப்பாக ரூ. 100க்கும் குறைவாக இருந்த கட்டணங்கள் ரூ. 500 என்ற அளவுக்கு உயர்த்தப்பட்டிருப்பதாக பேராசிரியர்கள் தெரிவித்தனர்


இதுகுறித்து பல்கலைக்கழகத் துணைவேந்தர் துரைசாமி கூறுகையில், மற்ற பல்கலைக்கழகங்களில் உள்ளதைப் போல, சென்னைப் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி நிறுவன கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன என்றார்

29/12/18

JEE மெயின் தேர்வு 2019 - முழு விவரம் :

தேசிய தேர்வு முகமை அதிகாரிகள் JEE முக்கியத் தேர்வு -2019 குறித்த அடிப்படை முறைமையை அறிவித்துள்ளனர். அதில், தேர்வு நடத்தப்படும் முறை, தேர்வு முறை, கேள்விகளைக் குறிப்பிடுவது, குறிக்கோள் திட்டம் ஆகியவை பற்றி விளக்கமாகக் கூறப்பட்டுள்ளது. ஜே.இ.இ. முதன்மை தேர்வு என்பது தேசிய அளவிலான தேர்வு ஆகும். இது என்ஐடி, ஐ.ஐ.டி மற்றும் ஐ.ஐ.ஐ.டி. போன்ற கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படுகிறது. அதன்படி, தாள் 1 மற்றும் தாள் 2 என இரண்டு தேர்வுகள் நடத்தப்படும். JEE Main exam pattern தாள் 1 முற்றிலும் கணினி அடிப்படையிலான முறையில் நடைபெறும். தாள் 2 கம்ப்யூட்டர் அடிப்படையிலும், (கணிதம் மற்றும் திறனாய்வு சோதனை) மற்றும் பேனா மற்றும் காகித அடிப்படையில் (வரைதல் தேர்வு) நடத்தப்படும். ஜே.இ.இ.மெயின் - 2019 தேர்வு முறை - தாள் 1 (B.Tech/ B.E.)

ஜெ.இ.இ. பிரதான 2019 தேர்வு ஆன்லைன் முறையில் நடைபெறும். ஜனவரி 9 ஆம் தேதி முதல் 12ம் தேதி வரையிலும், பிறகு ஏப்ரல் மாதம் 6ம் தேதி முதல் 20ம் தேதி வரையிலும் இந்த தேர்வு நடைபெறும். இது கம் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் என மூன்று பாகங்களைக் கொண்டிருக்கும். ஒவ்வொரு பிரிவிலும் 30 கேள்விகள் இருக்கும். கேள்விகள் அப்ஜெக்டிவ் வகைகளாக இருக்கும். தேர்வுக்கு 3 மணி நேரம் ஒதுக்கப்படும். அனைத்து தேர்வு மையங்களிலும் கேள்வி தாள்கள் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் இருக்கும். ஒவ்வொரு கேள்வியும் 4 மதிப்பெண்கள் கொண்டவை. தவறான பதிலுக்கு ஒரு மதிப்பெண் குறைக்கப்படும். பதிவு செய்யப்படாத கேள்விகளுக்கு மதிப்பெண் வழங்கப்படாது. மொத்தக் கேள்விகள் 90. இயற்பியல், வேதியியல், கணிதப் பாடத்தில் இருந்து தலா 30 கேள்விகள் கேட்கப்படும். இவற்றுக்கு ஒரு கேள்விக்கு 4 மதிப்பெண் என மொத்தம் 360 மதிப்பெண்கள். JEE முதன்மை 2019 தேர்வு முறை - தாள் II (B.Arch. / B.Plan)

ஜேஇஇ தேர்வின் இரண்டாம் தாள் கணினி மற்றும் பேனா - காகித முறையில் நடத்தப்படும். தாள் II க்கான தேர்வு முறை (ஆன்லைன்) மற்றும் வரைதல் கேள்விகள் (ஆஃப்லைன்) அடங்கும். இந்த தாள் UG கட்டமைப்பு பாடநெறிகளுக்கான நுழைவாயில் ஆகும். பகுதி I கணித வகை கேள்விகள்), பகுதி II (ஜெனரல் ஆப்டியூட்) மற்றும் பகுதி III (வரைபடத்தை அடிப்படையாகக் கொண்ட கேள்விகள்) ஆகியவற்றில் இருந்து 82 கேள்விகள் கேட்கப்படும். தேர்வுக்கு 3 மணி நேரம் வழங்கப்படும். இந்த கேள்வித் தாள் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் இருக்கும். கணிதம் மற்றும் பொருந்திய பிரிவுகளின் அனைத்து கேள்விகள் ஒவ்வொன்றும் 4 மதிப்பெண்கள் கொண்டவை. ஒவ்வொரு தவறான பதிலுக்கும் 1 மதிப்பெண் கழிக்கப்படும். ஜேஇஇ பிரதான வரைபட சோதனைக்கு, மாணவர்களின் திறமையின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும். கணிதம் பாடத்தில் 30 கேள்விகளும், ஆப்டிடியூட்டில் 50 கேள்விகளும், வரைபடம் தொடர்பாக 2 கேள்விகள் என மொத்தம் 82 கேள்விகள் கேட்கப்படும். கணிதம் பாடத்துக்கு 120 மதிப்பெண்களும், ஆப்டிடியூட் தேர்வுக்கு 200 மதிப்பெண்களும், வரைபடத்தக்கு 70 மதிப்பெண்களும் என மொத்தம் 82 கேள்விகளுக்கு 390 மதிப்பெண்கள் வழங்கப்படும். ஜே.இ.இ பிரதானத் தேர்வு NTA எனப்படும் தேசிய தேர்வு முகமையால் ஒரு வருடத்தில் இருமுறை நடத்தப்படுகிறது. ஜே.இ.இ பிரதான தேர்வில், முதல் தாள் தேர்வு ஜனவரி 9, 10, 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் நடைபெறும். ஜனவரி 8 ம் தேதி இரண்டு நேரங்களில் தாள் -2க்கான தேர்வு நடைபெறும், அதே சமயம் ஏப்ரல் 6 முதல் 20 வரை இரண்டாவது முறையாக ஜேஇஇ தேர்வு நடைபெறும்.

இது மொபைல் போனை விட லேசானது, வீட்டிலிருந்து எடுத்துச் செல்வோம்- விடை கொடுப்போம் நெகிழி பைகளுக்கு.

அப்படி என்ன ஊதிய முரண்பாடு இடைநிலை ஆசிரியர்களுக்கு?

அப்படி என்ன ஊதிய முரண்பாடு இடைநிலை ஆசிரியர்களுக்கு?
இதை புரிந்துக் கொள்ளுங்கள்!!!
9300 grade pay 4200 வாங்க வேண்டிய இடைநிலை ஆசிரியர்கள்
5200-2800 என்ற பத்தாம்வகுப்பு கல்வித்தகுதிக்கான ஊதிய கட்டில் வைக்கப்பட்ட தேதி

1-06-2009.
ஆனால் 2008 ல் பணிநியமனம் செய்யப்பட்டவர்களும் இதே ஊதியத்தில் வைக்கப்பட்ட போதும் அவர்களின் ஊதிய விகிதம் 1.86 ஆல் பெருக்கித்தரப்பட்டது.
இதனால் 2008 ல் பணிநியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களின் ஊதியம் 9300-4200 என்ற நிலையை கடந்தது ஆனால் அவர்களின் தற்போதைய கிரேடு பேவும் 2800 தான்.
அதற்கு பிறகு பணிநியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் அதாவது 2009 ஜீனில் 5200-2800 பத்தாம் வகுப்பு கல்வித்தகுதிக்கான ஊதியத்தில் வைக்கப்பட்டு கேவலப்படுத்தப்பட்டார்கள்.அவர்களின் கிரேடு பத்தாம் வகுப்புக்கான கிரேடு ஆகும்.
இதுமட்டுமின்றி 2008 ல் பணிநியமனம் பெற்ற ஆசிரியர்களின் அடிப்படை ஊதியம் 12000
( DA இல்லாமல்)
2009 ல் பணிநியமனம் பெற்றவர்களின் அடிப்படை ஊதியம் வெறும் 5200+2800= 8000
ஆகவே அடிப்படை ஊதியத்திலேயே இழப்பு கிட்டதட்ட
ரூ 4000...
இதற்கான அகவிலைப்படியோடு சேர்த்து 2009 இடைநிலை ஆசிரியர்களின் மொத்த ஊதிய இழப்பு அதே 2009 ல் 8000.
தற்போதைய முரண்பாடு( 2008 க்கும் 2009 க்கும் இடையே)
11000 க்கும் மேல்...
பிறகு பணிநியமனம் பெற்ற 2012 ,2014 இடைநிலை ஆசிரியர்களுக்கு 13000 ஊதிய இழப்பு.
இது தான் ஊதிய முரண்பாடு.
இந்த ஊதிய இழப்புக்கான முக்கிய காரணம்

1) டிப்ளோமா கல்வித்தகுதிக்கான 9300-4200 என்ற ஊதிய கட்டில் இடைநிலை ஆசிரியர்கள் வைக்கப்படாமல் பத்தாம் வகுப்பு கல்வித்தகுதிக்கான ஊதிய கட்டில் 5200-2800 வைக்கப்பட்டது
( பத்தாம் வகுப்பு கல்வித்தகுக்கான சில பணியிடங்களும் அதன் ஊதியமும்
இரண்டாம் நிலை காவலர் கிரேடு 1900, பள்ளி இரவு காவலர் 1900,இளநிலை உதவியாளர் 2400,
ஆய்வக உதவியாளர் 2400)
அப்போது பத்தாம் வகுப்பு கல்வித்தகுதிக்கு 5200-2400 வரை ஊதியம் என்றால் இடைநிலை ஆசிரியர்கள் படித்த
+2 க்கு ,டிப்ளோமாவிற்கு ஊதியம் எங்கே???
அல்லது அவர்கள் டிப்ளோமா படிக்கவே இல்லையா????
இது அரசுக்கு தெரியாதா?
தமிழ்நாட்டில் டிப்ளோமா முடித்துள்ள அனைத்து துறை ஊழியர்களுக்கும் தற்போது 9300-4200 கொடுக்கப்படுக்கிறது,
Diploma in teacher education படித்த இடைநிலை ஆசிரியர்களுக்கு மட்டும் ஏன் மறுக்கப் படுகிறது!

அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கு 2019 ஆம் ஆண்டிற்கான பள்ளி வேலை நாட்கள் மற்றும் விடுமுறை நாட்கள் விவரம் :

இடைநிலை ஆசிரியர்கள் ஜன., 7ம் தேதி வரை போராட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் : கல்வித்துறை இயக்குநர் கோரிக்கை:

ஊதிய முரண்பாடுகளை நீக்க வலியுறுத்தி சென்னையில் 3வது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தொடக்க கல்வித்துறை இயக்குனர் கருப்பசாமி, இடைநிலை ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் ராபர்ட் மற்றும் நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் சுமூக முடிவு எட்டப்படவில்லை. இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் இடைநிலை ஆசிரியர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து பேசிய தொடக்க கல்வித்துறை இயக்குனர் கருப்பசாமி, சித்தக் குழு அறிக்கையை பொருத்தே நடவடிக்கை எடுக்க முடியும் என்பதால் ஜன., 7ம் தேதி வரை போராட்டத்தை ஒத்திவைக்க வலியுறுத்தியுள்ளார்.

கிராம தபால் ஊழியருக்கு விருப்ப ஓய்வு திட்டம் :

கிராம தபால் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டத்தை, தபால்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.நாடு முழுவதும் உள்ள, 1.55 லட்சம் தபால் நிலையங்களில், 1.39 லட்சம் தபால் நிலையங்கள் புறநகரங்களில் செயல்படுகின்றன.இதில், கிராம் தபால் ஊழியர்களாக, 2.50 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர். பணி நிரந்தரம், நிரந்தர பணியாளர்களுக்கான பணப்பயன், ஓய்வூதியம் உள்ளிட்ட சலுகைகளை நிறைவேற்றக்கோரி பல ஆண்டுகளாக, கிராம தபால் ஊழியர்கள் போராடி வருகின்றனர்.இந்நிலையில், கமலேஷ் சந்திரா தலைமையிலான குழு அறிக்கை அடிப்படையில், அனைத்து வகை கிராம தபால் ஊழியர்களுக்கும் விருப்ப ஓய்வு திட்டத்தை தபால்துறை அமல்படுத்தியுள்ளது.இதன்படி, 20 ஆண்டு சேவைக்காலம் முடித்த கிராம தபால் ஊழியர்கள், நிரந்தர பணியாளர்களைப் போல, விருப்ப ஓய்வில் செல்லலாம். மேலும், மருத்துவ காரணங்களால் உடல்நலம் குன்றி பணியாற்ற முடியாத ஊழியர்கள், 10 ஆண்டு சேவை முடித்திருந்தால், 'இன்வேலிடேசன்' அடிப்படையில் ஓய்வு வழங்கப்படும். விருப்பு ஓய்வு எடுக்கும் ஊழியர்களுக்கு, பணிக்கொடை உள்ளிட்ட சலுகைகள் எந்தப்பாதிப்பும் இல்லாமல், சேவைக் காலத்தை கணக்கிட்டு கொடுக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளில் ஆதார் எண் கட்டாயமில்லை உத்தரவை திருத்த கல்வி துறை முடிவு:

பள்ளி மாணவர்களிடம், ஆதார் எண் பெறுவது கட்டாயம் என்ற உத்தரவு, மாற்றப்பட உள்ளது. ஆதார் ஆணைய உத்தரவின்படி, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.நாடு முழுவதும், பல்வேறு துறைகளில், பொதுமக்கள் மற்றும் நுகர்வோரிடம், ஆதார் எண்கள் கேட்கப்படுகின்றன.மத்திய - மாநில அரசின் திட்டங்களில் முறைகேட்டை தடுக்க, ஆதார் எண்களை பெற்று, அதன்படி பயனாளிகள் தேர்வு செய்யப்படுகின்றனர்.மேலும், வங்கிகள், உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் பள்ளிகளும், ஆதார் எண்களை சேகரித்து வருகின்றன.இதனால், ஆதார் எண்கள் பல இடங்களில் கசிந்து, தனிநபர் பாதுகாப்புக்கு சிக்கல்ஏற்படுகிறது.இதுகுறித்து,
உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசின் திட்டங்களுக்கு மட்டும், ஆதார் எண்ணை சேகரிக்க, உத்தரவிடப்பட்டுள்ளது.அதனால், மத்திய அரசின், நீட், ஜே.இ.இ., போன்ற நுழைவு தேர்வுகளுக்கு, மாணவர்களின் ஆதார் எண் கட்டாயமில்லை என, அறிவிக்கப்பட்டது.ஆனால், பள்ளி களில் மாணவர் சேர்க்கை மற்றும் தேர்வு பணிகள் நடக்கும் நிலையில், ஆதார் எண் கட்டாயம் வேண்டும் என, பெற்றோர் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.இதுதொடர்பாக, ஆதார் ஆணையத்துக்கு, பெற்றோர் புகார் அனுப்பினர்.புகாரை விசாரித்த ஆதார் ஆணையம், பள்ளிகள், கல்லுாரிகள், மாணவர்களிடம் ஆதார் எண்ணை கேட்டு, கட்டாயப்படுத்த கூடாது என, உத்தரவிட்டுள்ளது.இந்த உத்தரவைத் தொடர்ந்து, தமிழக பள்ளி களிலும், ஆதார் எண் கட்டாயம் என்ற உத்தரவு மாற்றப்பட உள்ளது. தமிழக பள்ளி கல்வியில், 'எமிஸ்' என்ற, கல்வி மேலாண்மை தகவல் அமைப்பின் சார்பில், ஆதார் எண் பெறப்படுகிறது.'அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு, இலவச நல திட்டங்கள் அமல்படுத்துவதால், அதற்கு மட்டும் ஆதார் எண்ணை கட்டாயம் ஆக்கலாம்.'மற்ற தனியார் பள்ளி மாணவர்களுக்கு, விருப்பப்பட்டால் மட்டுமே, ஆதார் எண்ணை வழங்கலாம்' என, திருத்தம் செய்யப்பட உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அண்ணா பல்கலை ஊழியர்கள் விரைவில் கூண்டோடு மாற்றம்:

வினாத்தாள், 'லீக்' ஆன விவகாரத்தில், தேர்வுத் துறை ஊழியர்களை இடமாற்றம் செய்ய, பல்கலைநிர்வாகம் முடிவெடுத்து உள்ளது.அண்ணா பல்கலையில் நடந்த முறைகேடுகள், உயர் கல்வி துறைக்கும், இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கும், நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தில், தலைசிறந்த அரசு நிறுவனமாக பெயர் எடுத்த, அண்ணா பல்கலையில், தேர்வு முறைகேடுகளும், விடைத்தாள் மதிப்பீட்டு முறைகேடுகளும், அதன் மாணவர்களுக்குவேலை வாய்ப்பு வழங்கும் நிறுவனங்களை, அதிர்ச்சி அடையவைத்துள்ளன.அண்ணா பல்கலையின், தேர்வு கட்டுப்பாட்டு துறை நடத்திய தேர்வுகளில், மறுமதிப்பீட்டில், அதிக மதிப்பெண் வழங்கிய விவகாரம், ஏற்கனவே, லஞ்ச ஒழிப்பு துறை விசாரணையில் உள்ளது.உயர் பொறுப்பில் உள்ள தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியே, இந்த வழக்கில் சிக்கினார். டிச., 3ல் நடந்த, 'செமஸ்டர்' தேர்வில், கணித வினாத்தாள், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி அலுவலகத்தில் இருந்தே, லீக் ஆகியுள்ளது.இந்த முறைகேட்டை, சி.பி., -சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வருகின்றனர். இன்ஜி., மாணவர்கள்இருவர் கைது செய்யப்பட்டனர்.தேர்வு கட்டுப்பாட்டு அலுவலக ஊழியர்,காஞ்சனா என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இதை இப்படியே விட்டால், அண்ணா பல்கலையின் தரமும், ஆராய்ச்சி மதிப்பும், சர்வதேச அரங்கில், பெரும் சரிவை சந்திக்கும் என, கல்வியாளர்கள் கருதுகின்றனர்.எனவே, பல்கலையின் முக்கிய துறைகளில், ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய, கல்வியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.அதிகாரத்தை கையில் வைத்துள்ள சில பேராசிரியர்களால், பல்கலைக்கு இனியும் கெட்ட பெயர் ஏற்பட கூடாது என, உயர் கல்வி அதிகாரிகளும் அறிவுறுத்திஉள்ளனர்.இதையடுத்து, முதற்கட்டமாக, தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி அலுவலகம் மற்றும் அதன் பிரிவு அலுவலகங்களில், ஊழியர்கள் இடமாற்றம் செய்யப்பட உள்ளனர்.இதுகுறித்து, பட்டியல் எடுக்க, பல்கலைநிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.தற்காலிக பணியாளர், நிரந்தர பணியாளர் ஆகிய, இரண்டு தரப்பினரையும், 'டிரான்ஸ்பர்' செய்ய வேண்டும் என, பேராசிரியர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது. எனவே, அண்ணா பல்கலை ஊழியர்கள் விரைவில், கூண்டோடு மாற்றப்பட உள்ளனர்.


வினாத்தாள், 'லீக்' ஆன விவகாரத்தில், தேர்வுத் துறை ஊழியர்களை இடமாற்றம் செய்ய, பல்கலைநிர்வாகம் முடிவெடுத்து உள்ளது.அண்ணா பல்கலையில் நடந்த முறைகேடுகள், உயர் கல்வி துறைக்கும், இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கும், நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தில், தலைசிறந்த அரசு நிறுவனமாக பெயர் எடுத்த, அண்ணா பல்கலையில், தேர்வு முறைகேடுகளும், விடைத்தாள் மதிப்பீட்டு முறைகேடுகளும், அதன் மாணவர்களுக்குவேலை வாய்ப்பு வழங்கும் நிறுவனங்களை, அதிர்ச்சி அடையவைத்துள்ளன.அண்ணா பல்கலையின், தேர்வு கட்டுப்பாட்டு துறை நடத்திய தேர்வுகளில், மறுமதிப்பீட்டில், அதிக மதிப்பெண் வழங்கிய விவகாரம், ஏற்கனவே, லஞ்ச ஒழிப்பு துறை விசாரணையில் உள்ளது.உயர் பொறுப்பில் உள்ள தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியே, இந்த வழக்கில் சிக்கினார். டிச., 3ல் நடந்த, 'செமஸ்டர்' தேர்வில், கணித வினாத்தாள், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி அலுவலகத்தில் இருந்தே, லீக் ஆகியுள்ளது.இந்த முறைகேட்டை, சி.பி., -சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வருகின்றனர். இன்ஜி., மாணவர்கள்இருவர் கைது செய்யப்பட்டனர்.தேர்வு கட்டுப்பாட்டு அலுவலக ஊழியர்,காஞ்சனா என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இதை இப்படியே விட்டால், அண்ணா பல்கலையின் தரமும், ஆராய்ச்சி மதிப்பும், சர்வதேச அரங்கில், பெரும் சரிவை சந்திக்கும் என, கல்வியாளர்கள் கருதுகின்றனர்.எனவே, பல்கலையின் முக்கிய துறைகளில், ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய, கல்வியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.அதிகாரத்தை கையில் வைத்துள்ள சில பேராசிரியர்களால், பல்கலைக்கு இனியும் கெட்ட பெயர் ஏற்பட கூடாது என, உயர் கல்வி அதிகாரிகளும் அறிவுறுத்திஉள்ளனர்.இதையடுத்து, முதற்கட்டமாக, தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி அலுவலகம் மற்றும் அதன் பிரிவு அலுவலகங்களில், ஊழியர்கள் இடமாற்றம் செய்யப்பட உள்ளனர்.இதுகுறித்து, பட்டியல் எடுக்க, பல்கலைநிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.தற்காலிக பணியாளர், நிரந்தர பணியாளர் ஆகிய, இரண்டு தரப்பினரையும், 'டிரான்ஸ்பர்' செய்ய வேண்டும் என, பேராசிரியர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது. எனவே, அண்ணா பல்கலை ஊழியர்கள் விரைவில், கூண்டோடு மாற்றப்பட உள்ளனர்.

வேலை வாய்ப்பு பதிவுகள் மாயம் புதுப்பிக்க பட்டதாரிகள் திணறல்:

வேலைவாய்ப்புக்கு பதிவு செய்தோரின் விபரங்களை, ஆன்லைனில் பதிவேற்றுவதில் நடந்துள்ள குளறுபடியால், பதிவை புதுப்பிக்க முடியாமல், பட்டதாரிகள் திணறி வருகின்றனர்.தமிழக அரசின் பல்வேறு துறைகளில், காலி பணியிடங்களுக்கு, வேலைவாய்ப்பு துறையின் வழியாக, புதிய ஆட்கள் நியமிக்கப்படுகின்றனர். 

பெரும்பாலான துறைகளின் காலியிடங்களுக்கு, டி.என்.பி.எஸ்.சி., - டி.ஆர்.பி., போன்றவை வழியே, போட்டி தேர்வுகள் நடத்தப்படுகின்றன.இந்த தேர்வுகளில் தேர்ச்சி பெற்றாலும், மதிப்பெண், இட ஒதுக்கீடு மட்டுமின்றி, வேலை வாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையிலும், இறுதி பட்டியல் தயாரிக்கப்படுகிறது. அதேபோல, தமிழக அரசின் வழியாக, தனியார் வேலை வாய்ப்புக்கும், இந்த பதிவுகள் பயன்படுத்தப்படுகின்றன. எனவே, வேலை வாய்ப்புகளுக்கு, பதிவு மூப்பு முக்கிய தேவையாக உள்ளது.தற்போது, வேலை வாய்ப்பு பதிவு மற்றும் புதுப்பித்தல் பணிகள் கணினி மயமாகியுள்ளன. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள், மண்டல அலுவலகங்கள் போன்றவற்றில், நேரடியாக புதுப்பித்தல் மற்றும் பதிவு பணிகள் நடப்பதில்லை. பட்டதாரிகள், தங்களின் பதிவு மற்றும் புதுப்பித்தலை, ஆன்லைனில் மேற்கொள்ள அறிவுறுத்தப் பட்டுள்ளனர்.


தற்போது, 2011 முதல் புதுப்பிக்க விடுபட்டோருக்கு, ஜன., 24க்குள், பழைய பதிவு மூப்பின்படி புதுப்பிக்க சலுகை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், ஆயிரக்கணக்கான பட்டதாரிகளால், ஆன்லைனில் புதுப்பிக்க முடியவில்லை. பலரது பதிவு விபரங்கள், ஆன்லைனில் இருந்து மாயமாகியுள்ளதே இதற்கு காரணம்.மாயமான பதிவு விபரங்களின் நிலை என்னவென, வேலை வாய்ப்பு துறைக்கு தெரியவில்லை. பல மாவட்ட அலுவலகங்களில், பதிவு எண் விபரங்களை, டிஜிட்டலில் சேர்த்த போது, பலரது விபரங்கள் விடுபட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. எனவே, விடுபட்டோரின் விபரங்களை, மீண்டும் பதிவேற்றாவிட்டால், அவர்களின் பதிவு மூப்பு, பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. - நமது நிருபர் -

பள்ளிக்கல்வி - அரசுப்பள்ளி ஏழை மாணவர்களுக்கு மேற்படிப்பு முழு உதவி - இயக்குநர் செயல்முறைகள்




4-வது நாளாக தொடரும் இடைநிலை ஆசிரியர்களின் நீர் அருந்தா உண்ணாவிரதம் : பலரது உடல்நிலை பாதிப்பு

தண்ணீர் மற்றும் உணவு இன்றி சென்னையில் போராட்டம் நடத்தி வரும் இடைநிலை ஆசிரியர்கள் பலரது உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.


சமவேலைக்கு சமஊதியம் வழங்க கோரி  ஆசிரியர்கள் நடத்தி வரும் போராட்டம் 4-வது நாளாக இன்றும் தொடர்கிறது. உணவு, தண்ணீர் இன்றி அவர்கள் போராட்டம் நடத்தி வருவதால் நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயக்கமடைந்துள்ளனர். பலரது உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் போராட்டத்தை தொடர்வதில் ஆசிரியர்கள் உறுதியாக உள்ளனர். இது பற்றி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் கூறுகையில், தாங்கள் செய்யும் வேலைக்கு சரியான ஊதியத்தை மட்டுமே கேட்பதாகவும் மிகையாக கேட்கவில்லை எனவும் தெரிவித்தனர்.

தாங்கள் நியாயமான கோரிக்கையை முன்வைத்து போராடுவதால், அரசு தங்களது கோரிக்கை பரிசீலிக்குமாறு கேட்டு கொள்வதாக கூறினர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண் ஆசிரியர்கள் கூறுகையில் 4,000-க்கும் மேற்பட்ட பெண்கள் இங்கே குழுமியுள்ளதாகவும், ஆனால் இயற்கை உபாதைகள் உள்ளிட்டவற்றிற்கு மிகுந்த சிரமப்படுவதாகவும் கூறினர். இடைநிலை ஆசிரியர்களின் உண்ணாவிரத போராட்டம் 4-வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர போலீசார் பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகின்றனர். ஆனால் தங்களது கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை என இடைநிலை ஆசிரியர்கள் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர். தமிழகத்தில் 2009ம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட ஆறாவது ஊதியக் குழுவின் மூலம் பள்ளி ஆசிரியர்களுக்கு ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டதில், இடைநிலை ஆசிரியர்களில் இரு வேறு ஊதிய வேறுபாடு ஏற்பட்டுள்ளது.  குறிப்பாக 31.5.2009க்கு முன்பு தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.8370 என்றும், அதற்கு அடுத்த நாள் 1.6.2009ம் தேதி பணி நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.5200 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த இரண்டு ஊதியத்தில் வேறுபாடு ரூ.3170 வருகிறது. இரண்டாவதாக பணி நியமனம் பெற்ற மேற்கண்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு இந்த இழப்பு ஏற்பட்டுள்ளது. அதனால், ஒரு கல்வித்தகுதி, ஒரே வகையான பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு இரு வேறு ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும், சம ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்று கேட்டும் பதிவு மூப்பு இடைநிலை ஆசிரியர்கள் அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அரசுத் தரப்பில் இறுதி முடிவு எடுக்காத நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஆண்டு இவர்கள் நடத்திய போராட்டத்தை அடுத்து, அவர்களுக்கு உரிய ஊதியத்தை நிர்ணயம் செய்ய பள்ளிக் கல்வித்துறை அரசுக்கு பரிந்துரை அளித்தது.

ஆனால் அரசு அதன்மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால், டிசம்பர் 24ம் தேதி தொடர் உண்ணா விரதம் இருக்கப் போவதாக அறிவித்தனர். அரசு உடனடியாக பேச்சு வார்த்தைக்கு அழைத்தது.

நேற்று முன்தினம் நடந்த பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தததால், சுமார் 5 ஆயிரம் ஆசிரியர்கள் டிபிஐ வளாகத்தில் முற்றுகையிட்டு  நீர் அருந்தா உண்ணா விரதம் மேற்கொள்ள வந்தனர். அவர்களை போலீசார் கைது செய்து, ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் அடைத்தனர். இருப்பினும், ஆசிரியர்கள் ஸ்டேடியத்துக்குள்ளே நீர் அருந்தா உண்ணா விரதம்  இருக்கின்றனர். இதில் 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயக்கமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

200 ஆசிரியர்கள் உடல்நிலை பாதிப்பால் பதற்றத்தில் பள்ளிக்கல்வி வளாகம் நாளை அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு வார்த்தைக்கு வாய்ப்பு!!


                                                

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பலருக்கும் உடல்நலக் குறைவு  ற்பட்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி, 175 பேருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலரும் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற்று திரும்பி, மீண்டும் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் போராட்டத்திற்கு,  எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்து தரப்படவில்லை என ஆசிரியர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். தங்களின் கோரிக்கைகளை அரசு பரிசீலிக்கும் வரை போராட்டம் தொடரும் என அவர்கள் உறுதியாக தெரிவித்துள்ளனர். ஆசிரியர்கள் உடல்நிலை பாதிப்பால் பதற்றத்தில் 
பள்ளிக்கல்வி வளாகம் நாளை அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு வார்த்தைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நேரம் குறைப்பு: அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் தகவல்!

12ம் வகுப்பு பொதுத்தேர்வில் சில முக்கிய பாடங்களுக்கான தேர்வு நேரங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக அரசு தேர்வுகள் துறை இயக்குநர் இன்று தெரிவித்துள்ளார்.


வருகிற மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் 12ம் பொதுத்தேர்வு நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி,வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல், உயிரியல், வரலாறு, இயற்பியல். வணிகக்கணிதம், அலுவலக மேலாண்மை, கணக்குப்பதிவியல் உள்ளிட்ட பாடங்களுக்கான நேரம்மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு10 முதல் 1.15 மணி வரை நடைபெற்ற தேர்வு, தற்போது 10 மணி முதல் 12.45 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு மொத்தம் 1200 மதிப்பெண்களாக இருந்தது தற்போது 600 மதிப்பெண்களாக (6 பாடத்திற்கு தலா 100 மதிப்பெண்கள்) குறைக்கப்பட்டது குறிப்பித்தக்கது.

பத்து மாணவர்களுக்கும் குறைவாக உள்ள, அரசுப் பள்ளிகளை மூடும் எண்ணம் இல்லை,'' -பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் அவர் கூறியதாவது:பா.ம.க., நிறுவனர், ராமதாஸ் கூறுவது போல் பள்ளிகளை மூடும் எண்ணம் இல்லை.

10 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள பள்ளிகளில், மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டோம்.அடுத்த கல்வி ஆண்டில், அங்கன்வாடி மையங்களில், 50 ஆயிரம் குழந்தைகளுக்கு, எல்.கே.ஜி., - -யூ.கே.ஜி., வகுப்புகள் துவங்கப்பட உள்ளன.

தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளிலும் எட்டாம் வகுப்பு வரை, இரு வண்ணங்களில் சீருடை வழங்கப்படும்.'நீட்' தேர்வு எழுதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு, நிபுணர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படும்; உணவு, தங்குமிடம் இலவசம்.இவ்வாறு அவர் கூறினார்

3 நாட்களில் டி.என்.பி.எஸ்.சி., ஆண்டு தேர்வுகளுக்கான திட்ட அட்டவணை

'டி.என்.பி.எஸ்.சி., ஆண்டு தேர்வுகளுக்கான திட்ட அட்டவணையை, மூன்று நாட்களில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது,'' என, செயலர் நந்தகுமார் தெரிவித்தார்.

அரசு வேலை வாய்ப்பை எதிர்நோக்கி, லட்சக்கணக்கான தேர்வர்கள் பயிற்சி களை தொடர்ந்து வருகின்றனர். ஆண்டு தோறும் வெளியிடப்படும், ஆண்டு தேர்வு அட்டவணையை மையமாக வைத்து, பயிற்சிகளை மேற்கொள்வர். ஒவ்வொரு ஆண்டும், இந்த அட்டவணை, மார்ச் மாதமே வெளியாகி வந்தது.

இந்நிலையில், 2019ம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணை, புத்தாண்டு துவங்கும் முன்னரே வெளிவரவுள்ளதால், தேர்வர்கள் பயிற்சிகளின் போக்கை, முன்கூட்டியே திட்டமிட்டு செயல்பட இயலும்.

இது குறித்து, டி.என்.பி.எஸ்.சி., செயலர் நந்தகுமார் கூறுகையில், ''வரும் ஆண்டுக்கான தேர்வு அட்டவணை தயார் நிலையில் உள்ளது. ஒப்புதல் பெற்றதும், மூன்று நாட்களுக்குள் வெளியிட திட்டமிட்டுள்ளோம்,'' என்றார்

ஜனவரி முதல் மாதிரி தேர்வு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி

அரசு பள்ளி மாணவர்களுக்கு, ஜனவரி முதல், தினமும் மாதிரி தேர்வு நடத்தி, பொது தேர்வுக்கு தயார்படுத்த, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.


தமிழக பாட திட்டத்தில், பத்தாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை பொது தேர்வு நடத்தப்படுகிறது.மார்ச் 1ல், பொது தேர்வுகள் துவங்க உள்ளன. 25 சதவீதம்தனியார் பள்ளிகளில், பத்தாம் வகுப்பு மற்றும், பிளஸ் 2 பாடங்கள் முடிக்கப்பட்டு, பாடங்களின் திருப்புதல் நடந்து வருகிறது.

அரசு பள்ளிகளில், 25 சதவீத பாடங்கள் மட்டும் பாக்கி உள்ளன. புத்தாண்டு விடுமுறை முடிந்து, வரும், 2ம்தேதி பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இதையடுத்து, பொது தேர்வு மாணவர்களுக்கு, தினமும் மாதிரி தேர்வுகள் நடத்தி, சிறப்பு பயிற்சி அளிக்க, தலைமைஆசிரியர்களுக்கு, பள்ளி கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டுஉள்ளனர்.ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு பாடத்திலும், சில பகுதிகளுக்கு தேர்வு வைத்து, அவற்றை உடனே திருத்தி, மாணவர்களின் மதிப்பெண்ணை தெரிவிக்க வேண்டும். இதன்மூலம், பொது தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்கும் வகையில், மாணவர்கள் கூடுதல் நேரம் படித்து, சிறப்பு பயிற்சி பெற முடியும்.

வார விடுமுறை

இந்த திட்டங்களை, தலைமை ஆசிரியர்கள், தாமாகவே முன்வந்து அமல்படுத்த வேண்டும். மேலும், வார விடுமுறை நாட்களிலும், காலை மற்றும் மாலை வேளைகளிலும் கூடுதல் வகுப்புகள் நடத்தி, மாணவர்களை தயார் செய்ய ஆலோசனை தரப்பட்டு உள்ளது. பொது தேர்வில், வெறும் தேர்ச்சி என்ற இலக்கை தாண்டி, அதிக மதிப்பெண் பெறவும் மாணவர்களை தயார் செய்ய, ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்

ஊதிய முரண்பாடுகளை களையக்கோரி ஆசிரியர்கள் போராட்டம் 4வது நாளாக நீடிப்பு: 180 பேர் மயங்கினர் SOURCE:DINAKARAN

♦ஊதிய முரண்பாடுகள் தொடர்பாக இடைநிலை ஆசிரியர்கள் 4வது  நாளாக நடத்தி வரும் போராட்டத்தில் இதுவரை 180 பேர் மயக்கமடைந்து  மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

♦ மருத்துவ குழுவினர் நேரடியாக  டிபிஐ வளாகத்துக்கு வந்து உதவி வரும் நிலையில் போராட்டம் இன்னும்  தீவிரமாகும் என்று ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர்.

♦சமவேலைக்கு சம ஊதியம் கேட்டு இடைநிலை ஆசிரியர்கள் 4 நாட்களாக சென்னை  டிபிஐ வளாகத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

♦நேற்று முன்தினம் காலையில் இருந்து டிபிஐ வளாகத்தில் உண்ணாவிரதம்  இருந்துவரும் ஆசிரியர்களில் இதுவரை 180 பேர் மயக்கம் அடைந்து  மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

♦இதனால்  ஆசிரியர்களின் போராட்டம் மேலும் தீவிரமடைந்துள்ளது.

♦டிபிஐயில் இரவு  பகலாக நீர் அருந்தாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களுக்கு  ஆதரவு தெரிவித்து பல்வேறு அமைப்புகள் குரல் கொடுத்து வருகின்றன. அரசியல்  தலைவர்களும் நேரில் வந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

♦இதற்கிடையே  பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப்யாதவ் பேச்சுவார்த்தை  நடத்தி ஜனவரி 7ம் தேதி வரை போராட்டத்தை ஒத்தி வைக்க கேட்டுக் கொண்டுள்ளார்.  அதில் சமாதானம் அடையாத ஆசிரியர்கள் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தி  உள்ளனர்.

♦இந்நிலையில், நேற்று மாலை வரை மயங்கி விழுந்த ஆசிரியர்களின் எண்ணிக்கை  180 ஆக உயர்ந்தது. அவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள். போராட்டம்  நடக்கும் இடத்தில் அதிக அளவில் ஆசிரியர்கள் குவிந்துள்ளதால், 108  ஆம்புலன்ஸ் குழுவினர் நேரடியாக டிபிஐ வளாகத்துக்கு வந்து ஆசிரியர்களுக்கு  மருத்துவ உதவிகள் செய்து வருகின்றனர்.

♦இந்நிலையில், அரசு ஊதிய உயர்வு  தொடர்பாக ஆணை பிறப்பிக்கும் வரை போராட்டம் தொடரும் என்று அவர்கள்  தெரிவித்தனர். போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்களை அங்கிருந்து  அப்புறப்படுத்த போலீசார் கடும் முயற்சி எடுத்து வருகின்றனர்.

♦ஆனால் தமிழகம்  முழுவதும் இருந்து தினந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ரயில், பஸ்   மற்றும் வேன்களில் வந்துக் ெகாண்டே இருக்கின்றனர். இதனால் போலீசார்  ஆசிரியர்களை கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கின்றனர்.

♦மேலும், டிபிஐ வளாக  கழிப்பறையை ஆசிரியர்கள் பயன்படுத்தி வருவதால், அதற்கான தண்ணீர்  சப்ளையை அரசு நிறுத்திவிட்டது. இதனால் ஆசிரியர்கள் மேலும் அவதிப்பட்டு  வருகின்றனர்.

வேலைவாய்ப்பு பதிவில் திருத்தம்: அதிகாரிகளுக்கு உத்தரவு

சென்னை, ஆன்லைன் பிரச்னை உள்ள பதிவு எண்களுக்கு, பிழைகளை திருத்தி, புதிய எண்கள் வழங்க, மாவட்ட வேலை வாய்ப்பு அதிகாரிகளுக்கு, கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.தமிழக அரசு துறைகளில் உள்ள காலி பணியிடங்களுக்கு, வேலைவாய்ப்பு துறை வழியாக, புதிய ஆட்கள் நியமிக்கப்படுகின்றனர். டி.என்.பி.எஸ்.சி., - டி.ஆர்.பி., போன்றவை வழியாக, போட்டித் தேர்வு நடத்தப்பட்டாலும், தேர்வு மதிப்பெண், பதிவு மூப்பு பட்டியல் ஆகியவற்றையும் பரிசீலித்து, இறுதி பட்டியல் தயாரிக்கப்படுகிறது.எனவே, எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை முடிப்பவர்கள், வேலைவாய்ப்பு துறையில் பதிவு செய்வதும், பதிவு மூப்பை தொடர்வதும் முக்கிய தேவையாக உள்ளது. வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு, மாணவர்களும், பட்டதாரிகளும் நேரில் அலைவதை தவிர்க்க, பதிவு மற்றும் புதுப்பித்தல் பணிகள், ஆன்லைனுக்கு மாற்றப்பட்டுள்ளன.இந்நிலையில், பதிவுகளை டிஜிட்டலுக்கு மாற்றியதில், சில பதிவு எண்கள் விடுபட்டதாக புகார்கள் எழுந்துள்ளன. அவ்வாறு விடுபட்டவர்கள், ஆன்லைனில் பதிவை புதுப்பிக்க முடியவில்லை. இதுகுறித்து, நமது நாளிதழில், நேற்று செய்தி வெளியானது.அதனால், அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும், விடுபட்ட பதிவு எண்களை கணக்கெடுத்து, அவற்றின் பிழைகளை நீக்க, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை கமிஷனர், ஜோதி நிர்மலாசாமி உத்தரவிட்டுஉள்ளார்.ஆன்லைனில், பதிவு எண் விடுபட்டிருந்தால், அவர்களுக்கு தொழில்நுட்ப பிழைகளை நீக்கி, பதிவு மூப்பு மாறாமல், புதிய எண் வழங்க வேண்டும் என, கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.

22/12/18

பாலிடெக்னிக்கில் தகுதி தேர்வு இல்லை!

சென்னை, 'டிப்ளமா' இன்ஜி., மாணவர்களுக்கு, தகுதி தேர்வு நடத்தும் திட்டம் இல்லை என, அறிவிக்கப்பட்டுள்ளது.பாலிடெக்னிக் கல்லுாரிகளில், டிப்ளமா இன்ஜினியரிங் படிக்கும் மாணவர்களுக்கு, இறுதி ஆண்டு தேர்வுக்கு பின், தகுதி தேர்வு நடத்த உள்ளதாக, தகவல்கள் வெளியாகின.இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே, டிப்ளமா சான்றிதழ் கிடைக்கும் என்றும் கூறப்பட்டது. இந்த தகவல், உண்மைக்கு மாறானது என, ஏ.ஐ.சி.டி.இ., என்ற, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அறிவித்துள்ளது.அந்த நிறுவனத்தின் துணை தலைவர், புனியா வெளியிட்ட அறிவிப்பில், 'டிப்ளமா மாணவர்களுக்கு, கல்லுாரி தேர்வுகளை தவிர, வேறு எந்த தேர்வும் புதிதாக நடத்தப்படாது' என, தெரிவித்துள்ளார்.

ராணுவ வீரர் நிதியுதவி இரு மடங்காக உயர்வு

சென்னை :கடலோர காவல் படை வீரர்கள், பணியின் போது இறந்தாலோ, காயமடைந்தாலோ, ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படுவது போல், நிதியுதவி வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த நிதியுதவி, இரு மடங்காகவும் உயர்த்தப்பட்டுள்ளது.எல்லை பாதுகாப்பு பணி வீரர்கள், எதிரிகள் தாக்குதலில் இறந்தால், அவர்களின் குடும்பத்திற்கு, தமிழக அரசின், கார்கில் நிதியிலிருந்து, நிதியுதவி வழங்கப்படுகிறது. அதேபோல், காயமடைந்தோருக்கும் வழங்கப்படுகிறது.வீர மரணமடையும் ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு, இதுவரை, 10 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. இதை, 20 லட்சமாக உயர்த்தி வழங்க, அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல், முழுமையாக ஊனமடைந்த, இரண்டு கைகளை இழந்த, பார்வை இழந்த வீரர்களுக்கு, இதுவரை, ஏழு லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. இதை, 15 லட்சம் ரூபாயாக உயர்த்தவும், ஒரு கை இழந்தாலோ, ஒரு கண் இழந்தாலோ, ஐந்து லட்சம் ரூபாயை, 10 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கவும், அரசு உத்தரவிட்டுள்ளது.அதேபோல, கடலோர காவல் படையினர், பணியின் போது இறந்தாலும், ஊனமடைந்தாலும், ராணுவ வீரர்களுக்கு வழங்குவது போல, நிதியுதவி வழங்கவும், தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மத்திய தொழிற்சங்கங்கள் அடுத்த மாதம், 'ஸ்டிரைக்'

சென்னை மத்திய தொழிற்சங்கங்கள், அடுத்த ஆண்டு, ஜனவரி, 8, 9ம் தேதிகளில், நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளன.மத்திய போக்குவரத்து தொழிற்சங்கங்களான, தொ.மு.ச., - சி.ஐ.டி.யு., - ஏ.ஐ.டி.யு.சி., - எச்.எம்.எஸ்., உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட சங்கங்களின் ஆலோசனை கூட்டம், நேற்று சென்னையில் நடந்தது.
இதில், ஜன., 8, 9ம் தேதிகளில், வேலை நிறுத்தம் செய்ய தீர்மானிக்கப்பட்டது.இது குறித்து, தொழிற்சங்கத்தினர் கூறியதாவது:மத்திய அரசு நிறைவேற்ற உள்ள, மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தை கைவிட வேண்டும். அரசு போக்குவரத்துக் கழகங்களில், பஸ்களின் எண்ணிக்கையை குறைப்பதை கைவிட வேண்டும். பணியாளர் எண்ணிக்கையை குறைத்து, தனியார் மயமாக்குவதை தவிர்க்க வேண்டும்.பழைய ஓய்வூதிய திட்டத்தை, மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜன., 8, 9ம் தேதிகளில், நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில், நாங்கள் ஈடுபட உள்ளோம்.அதற்கான ஆயத்த கூட்டங்கள், இன்று முதல், தமிழகம் முழுவதும் நடத்தப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

2.8 லட்சம் அரசு பள்ளிகளை இணைக்க முடிவு. ஆசிரியர்கள், கல்வியாளர்கள் எதிர்ப்பு!!!

நீண்ட விடுப்பு எடுக்கும் ஆசிரியர்கள், 'டிஸ்மிஸ்'

அனுமதி இன்றி, விடுப்பு எடுக்கும் ஆசிரி யர்களையும், நீண்ட நாள் பள்ளிக்கு வராத ஆசிரியர்களையும், பணி நீக்கம் செய்ய, தமிழக அரசுஉத்தரவிட்டுள்ளது.

பள்ளி கல்வி துறையில், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களில் சிலர், உரியஅனுமதியின்றி, நீண்ட கால விடுப்பு எடுத்துவிட்டு, சில ஆண்டுகள் கழித்து, மீண்டும் பணியில் சேர்கின்றனர்.நீண்ட விடுப்பில் இருக்கும் சிலர், திடீரென இறந்து விடுகின்றனர்.அவர்களின் குடும்பத்தினர், தங்களுக்கு ஓய்வூதியம் மற்றும் பண பலன்கள் கேட்டு, அரசிடம் விண்ணப்பிக்கின்றனர்.


ஆனால், அரசு வேலையே செய்யாமல், ஒழுங்கீனமாக நடந்தவர்களுக்கு, எதற்கு நிதியுதவி என, நிதித்துறையில் கேள்வி எழுப்பப்படுகிறது.'சம்பந்தப்பட்ட நபர்களிடம் விளக்கம் கேட்டு, உரிய காலத்தில், ஒழுங்கு நடவடிக்கை எடுத்திருந்தால், இந்த பிரச்னை ஏற்பட்டிருக்காது' என்றும், நிதித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இதையடுத்து, முதன்மை கல்வி அதிகாரி களுக்கு, பள்ளி கல்வி செயலகம், அவசர சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

அதில், கூறியிருப்பதாவது:

அனுமதியின்றி விடுப்பில் உள்ளவர்கள் மற்றும் ஒழுங்கீன அரசு பள்ளி ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் மீது, காலதாமதம் இன்றி, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு நடவடிக்கை எடுத்தால், வேலையேசெய்யாதவர்களுக்கு, அரசின் இழப்பீடு வழங்க வேண்டிய தேவை ஏற்படாது. எனவே, வேலைக்கு வராதவர்கள் மீது, பணி நீக்கம் உள்ளிட்ட, ஒழுங்குநடவடிக்கைகள் உடனே எடுக்கப்பட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அங்கன்வாடி குழந்தைகளுக்கு சீருடை வழங்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படும் சீருடையை போல் அங்கன்வாடி குழந்தைகளுக்கும் வரும் கல்வி ஆண்டு முதல் சீருடை வழங்கப்படும் என கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். 

 ஈரோடு மாவட்டம் கோபியில் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

 ஒன்றாம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் சீருடையை ேபான்றே அங்கன்வாடி குழந்தைகளுக்கும் வரும் கல்வி ஆண்டு முதல் சீருடை வழங்கப்படும்.தனியார் பங்களிப்பு நிதி மூலம் 122 பள்ளிகளில்ஸ்மார்ட்  வகுப்பறை அமைக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு முதல் பிளஸ்-2 பாடத்திட்டம் மாற்றியமைக்கப்படும்.

புதிதாக தொடங்கப்பட உள்ளஎல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி. வகுப்புகளில் ஆங்கில வழி கல்வி கற்றுத்தரப்படும்.  கோபி அருகே உள்ள கொளப்பலூரில் அரசு சார்பில் புதிய டெக்ஸ்டைல் பார்க் அமைக்க விரைவில் அடிக்கல் நாட்டப்படும். கோபி தொகுதியில் குடிசை மாற்று வாரியம் மூலம் 1,840 வீடு கட்டப்பட்டு வருகிறது. மேலும் 2,800 வீடு  கட்ட ஏற்பாடு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

வருகைப்பதிவு, செய்ய முடியாத பள்ளிகளின் பெயர்களை கல்வித்துறை பட்டியலிடுகிறது.

கிராமப்புற பள்ளிகளில், 'நெட்வொர்க்', பிரச்னையால், மாணவர்களின் வருகையை, ஆன்லைனில் பதிவு செய்வது சிக்கலாகியுள்ளது.உடுமலை கல்வி மாவட்டத்தில், 254 அரசு பள்ளிகள் உள்ளன.

*அரசு பள்ளி மாணவர்களின் வருகையை, 'ஆன்லைன்' மூலம் பதிவு செய்யும் நடைமுறை செப்., மாதம் முதல் நடைமுறைப் படுத்தப்பட்டது.


*வகுப்பு ஆசிரியர்கள், அவர்களது, 'ஆன்ட்ராய்ட்', மொபைல்போனில், வருகை பதிவு செயலியை பதிவிறக்கம்செய்து, அதில், மாணவர்கள் வருகையை பதிவிட வேண்டும்.

*கிராமப்பகுதிகளில் உள்ள ஆசிரியர்கள், 'ஆன்ட்ராய்ட்' மொபைல்கள் வைத்திருந்தாலும், 'நெட்வொர்க்' பிரச்னையால், பலரும் சாதாரண 'மொபைல்போன்'களை பயன்படுத்துகின்றனர்.

*தற்போது, கல்வித்துறை உத்தரவால், 'நெட்வொர்க்', இல்லாத பள்ளிகளில், 'ஆன்லைன்' வருகை பதிவுக்கு ஆசிரியர்கள் பெரிதும் சிரமத்துக்குள்ளாகின்றனர்.

*பள்ளிகள் அமைந்திருக்கும் கிராமங்களில், 'நெட்வொர்க்', இருக்கும் இடங்களுக்கு சென்று, செயலியில், வருகையை பதிவேற்றம் செய்கின்றனர்.

*இப்பிரச்னை இருக்கும் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு வேறு ஆலோசனையும் வழங்கப்பட்டது.

*வீட்டில் 'ஆன்லைன்' செயலியை துவக்கிக்கொண்டு, பள்ளிக்கு வந்தவுடன் வருகை பதிவு செய்துகொள்ளலாம்.

*மீண்டும் 'நெட்வொர்க்', உள்ள இடத்துக்கு செல்லும்போது வருகைப்பதிவை தானாக பதிவாகிவிடும் என ஆலோசனை வழங்கப்பட்டது.

*ஆனால், பலரும் இதனை முயற்சி செய்தும், நேரம் மாறி காட்டுவதாகவும், சில நாட்களில், பதிவு ஆகாமல் போய்விடுவதாகவும் ஆசிரியர்கள் புகார் கூறுகின்றனர்.தற்போது, கல்வித்துறை 'ஆன்லைன்' வருகைப் பதிவை தீவிரமாக கண்காணிக்கிறது.

*இப்பிரச்னையால் வருகைப்பதிவு, இப்பதிவை செய்ய முடியாத பள்ளிகளின் பெயர்களை தொடர்ந்து கல்வித்துறை பட்டியலிடுகிறது.

*இத்தகைய வருகை பதிவு செய்வதில் உள்ள சிக்கலுக்கு தீர்வு காணாமல் கல்வித்துறை பள்ளிநிர்வாகங்களை புகார் கூறுவதால், ஆசிரியர்கள் செய்வதறியாது குழப்பத்தில் உள்ளனர்.

பள்ளிகளில் செயல்வழி கற்றலில் தெர்மாகோல் பயன்படுத்தக்கூடாது: தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை:

பிளாஸ்டிக் தடை எதிரொலியாக பள்ளிகளில் செயல்வழி கற்றலில் தெர்மாகோல் பயன்படுத்தக் கூடாது என தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஜனவரி 1 முதல்பிளாஸ்டிக் தடை திட்டத்தை அமல்படுத்த உள்ளதாக, தமிழக அரசு அறிவித்துள்ளது.அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள், பொது இடங்கள் உள்ளிட்ட இடங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை அமலுக்குவருகிறது.


ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக், பாலிதீன் மற்றும் மறுசுழற்சியில் வராத, மக்காத பிளாஸ்டிக் பொருட்களின் உபயோகம், இந்த திட்டத்தில் தடை செய்யப்படுகிறது. இதற்காக துறை வாரியாக, விழிப்புணர்வு கூட்டங்கள்  நடத்தப்படுகின்றன. அதன்படி, மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் உள்ளிட்டோர், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை எடுத்து வரக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் நொறுக்கு தீனி, மதிய உணவு போன்றவற்றை பிளாஸ்டிக்  டப்பாக்களில் எடுத்து வரக்கூடாது.

மறுசுழற்சி செய்ய முடியாத, தெர்மாகோல் போன்றவற்றை, வகுப்பறை செய்முறை கற்றலில் பயன்படுத்தக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வரும்1ம் தேதி முதல், பள்ளி வளாகத்தில், பிளாஸ்டிக் இல்லாத, பசுமை  வளாகமாக மாற்ற வேண்டும் என தலைமைஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

அரையாண்டு விடுமுறையிலும் மாணவர்கள் பள்ளி செல்ல வேண்டும்!...

அரையாண்டு தேர்வு விடுமுறை நாட்களில் NEET சிறப்பு வகுப்புகள் நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது!
தமிழக பள்ளிகளில் நடைபெற்று வரும் அரையாண்டு தேர்வு வரும் 22-ஆம் தேதி நிறைவடையும் நிலையில், வரும் 23 முதல் 31-ஆம் தேதி வரை உள்ள விடுமுறை நாட்களில் NEET சிறப்பு வகுப்புகளை நடத்த தமிழக பள்ளிக்கல்விதுறை திட்டமிட்டுள்ளது.


அதன்படி தமிழகத்திலுள்ள 413 மையங்களிலும் NEET சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேப்போல் 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் அரையாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புக்கள் நடத்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. பொதுத்தேர்வுகளை கருத்தில்கொண்டு செய்முறை வகுப்புகள் மற்றும் மீதம் இருக்கக்கூடிய பாடங்களை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தகுந்த கால அட்டவணையை தயார் செய்து, திட்டமிட்டு செயலாற்ற வேண்டும் எனவும் NEET சிறப்பு வகுப்புகள் நடத்தும் விவரங்களை பெற்றோர்களுக்கு தெரிவித்து கடிதத்தில் கையெழுத்து பெற்று வரவேண்டும் எனவும் பள்ளிக்கல்வி துறை குறிப்பிட்டுள்ளது. மேலும் சிறப்பு வகுப்புகளின் போது அரையாண்டு தேர்வுக்கான திருத்தப்பட்ட விடைத்தாள்கள் மாணவர்களுக்கு வழங்க வேண்டும் எனவும் அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எழுத ,வாசிக்க தெரியாத மாணவர்கள் எவரும் இல்லை என்ற நிலையினை உருவாக்க வேண்டும்: அரசுத் தேர்வுத்துறை இணை இயக்குநர் செ.அமுதவல்லி

புதுக்கோட்டை மாவட்ட த்தில்  எழுத ,வாசிக்க தெரியாத மாணவர்கள் எவரும் இல்லை என்ற நிலையினை உருவாக்க வேண்டும்: அரசுத் தேர்வுத்துறை இணை இயக்குநர் செ.அமுதவல்லி

புதுக்கோட்டை,டிச.21: புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ்,ஆங்கிலம் எழுத ,வாசிக்கத் தெரியாத மாணவர்கள் எவரும் இல்லை என்ற நிலையினை உருவாக்க வேண்டும் என அரசுதேர்வுத்துறை இணைஇயக்குநர்(பணியாளர்தொகுதி) செ.அமுதவல்லி பேசினார்.
புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில்  அரசு தேர்வுத்துறை இணைஇயக்குநரும்(பணியாளர்தொகுதி), மண்டல ஆய்வு அலுவலருமான செ.அமுதவல்லி தலைமையில் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கான மீளாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு தலைமை வகித்துஅரசு தேர்வுத்துறை இணைஇயக்குநரும்(பணியாளர்தொகுதி) ,மண்டல ஆய்வு அலுவலருமான செ.அமுதவல்லி பேசியதாவது: பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களை தினமும் காலை,மதியம்  இருவேளைகளிலும் மாணவர்களின் வருகைப்பதிவினை இணையதளத்தில் பதிவு செய்ய அறிவுறுத்த வேண்டும்..மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு முடிந்து பள்ளி திறக்கும் முதல் நாளன்றே மூன்றாம் பருவத்திற்கான பாடப்புத்தகங்கள்,குறிப்பேடுகள் ,மாணவர்களின் நலத்திட்டங்களை வழங்க வேண்டும்.கல்வித் துறையின் சார்பில் கேட்கப்படும் புள்ளி விபரங்களை வட்டாரக் கல்வி அலுவலர்கள் உடனுக்குடன் வழங்கிட வேண்டும்.மாணவர்களின் நலன் கருதி மதிய உணவு சாப்பிடும் குழந்தைகளின் எண்ணிக்கையை குறுந்தகவலில் அனுப்ப தலைமையாசிரியர்களை  வட்டாரக்கல்வி அலுவலர்கள் அறிவுறுத்த வேண்டும்.புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் உள்ள மாணவர்கள்  தமிழ்,ஆங்கிலம் எழுத ,வாசிக்க தெரிந்திருக்க வேண்டும்,கணிதத்தில் அடிப்படை செயல்பாடுகளை தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்றார்.



கூட்டத்தின் போது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்  இரா.வனஜா,இலுப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் க.குணசேகரன்,புதுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் கே.அண்ணாமலை ரஞ்சன்,அறந்தாங்கி மாவட்டக் கல்வி அலுவலர் (பொறுப்பு ) கு.திராவிடச் செல்வம்,மற்றும் பள்ளித் துணை ஆய்வாளர்கள்,வட்டாரக் கல்வி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து புதுக்கோட்டையில் புதியதாக தொடங்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் துறை உதவிஇயக்குநர் அலுவலகத்தையும், புதுக்கோட்டை வருவாய் மாவட்ட பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள் விநியோகம் செய்யும் அலுவலகத்தினையும் பார்வையிட்டு ஆய்வு செய்து அறிவுரைகள் வழங்கினார்..ஆய்வின் போது   புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா,மாவட்டக்கல்வி அலுவலர்கள் இலுப்பூர் க.குணசேகரன்,புதுக்கோட்டை கே.அண்ணாமலைரஞ்சன்,அறந்தாங்கி(பொ)கு.திராவிடச்செல்வம், அரசுத்தேர்வுகள் துறை உதவிஇயக்குநர் அ.பிச்சைமுத்து, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாவட்ட உதவித்திட்ட ஒருங்கிணைப்பாளர்  சி.பழனிவேலு உள்ளிட்ட பலர்  உடன் இருந்தனர்.

முன்னதாக திருக்கோகர்ணம் அரசினர் மேல்நிலைப்பள்ளி,திருக்கோகர்ணம் அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி ஆகியவற்றை  பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
<img src="http://feeds.feedburner.com/~r/kalvikural/CPsd/~4/atfXKXZTChI?utm_source=feedburner&utm_med
...

கூகுள்' நிறுவனம் நடத்திய, 'ஆன்லைன்' தேர்வில் ஒரே அரசுப் பள்ளியை சேர்ந்த 50 மாணவர்கள் தேர்ச்சி:

கூகுள்' நிறுவனம் நடத்திய, 'ஆன்லைன்' தேர்வில், உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்கள், 50 பேர், தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இணைய தேடுபொறியான, 'கூகுள்' நிறுவனம், பள்ளி மாணவ - மாணவியரிடையே, 'அனிமேஷன்' செய்ய தேவையான அடிப்படை குறித்து, ஆண்டுதோறும், ஆன்லைன் தேர்வு நடத்துகிறது.ஆண்டு இறுதியில், நவம்பர் மாதம் நடைபெறும் இத்தேர்விற்கு, நாடு முழுவதும் ஏராளமான மாணவ - மாணவியர் பங்கேற்கின்றனர்.அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பயிலும், 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்கள், 50 பேர் பங்கேற்றனர்.கடந்த நவம்பரில் நடைபெற்ற இத்தேர்வுக்கான முடிவுகள், இரு நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது.


இதில், உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலிருந்து பங்கேற்ற, 50 மாணவ - மாணவியரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.முழுவதும் கணினி மயமாக்கப்பட்ட இப்பள்ளியில் பயிலும், ஏழைமாணவர்கள், 'கூகுள்' நிறுவன தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது, மாணவர்கள் மற்றும் பெற்றோரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அரசு பள்ளிகளில், இனி கட்டாயமாக ஆங்கிலம் பேச வேண்டும்!! அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி!

கோபி, நாமக்கல்பாளையத்தில் நடந்த சிறப்பு மனு நீதி நாள் முகாமில் கலந்துகொண்ட கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம், "பன்னிரெண்டாம் வெறுப்பு முடிந்தவுடனே மாணவ, மாணவிகளுக்கு வேலை கிடைக்குமாறு புதிய பாட திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.


மேலும், அங்கன்வாடி பள்ளியுடன் இணைந்து 4 வயதுக்கு மேற்பட்ட அனைத்து குழந்திங்க்ளுக்கும் எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி. வகுப்பு தொடங்க இருக்கின்றோம். இதனை தொடர்ந்து இக்குழந்தைகளுக்கு ஆங்கிலம் சரளமாக பேச பயிற்சியும் வழங்க இருக்கின்றோம். அதனுடன், அனைத்து அரசு பள்ளிகளிலும் ''மெய் நிகர்''(ஸ்மார்ட் க்ளாஸ்) வகுப்பறை அமைக்கப்படும்.' என்றும் கூறியுள்ளார்.

இப்பாடத்திட்டம் அவர்களின் அறிவுத்திறனை வளர்க்கும் விதத்தில் இருக்கும். மேலும், மாணவர்களுக்கு புதிய வகையான சீருடைகளை அறிமுகப்படுத்தியுள்ளோம் என்றும் கூறினார்.

நாடு முழுவதும் உள்ள மாணவர் சேர்க்கை குறைந்த 2.8 லட்சம் அரசு பள்ளிகளை இணைக்க முடிவு: ஆசிரியர்கள், கல்வியாளர்கள் எதிர்ப்பு!

நாடு முழுவதும் மாணவர் சேர்க்கை குறைந்த 2.8 லட்சம் பள்ளிகளை அருகே உள்ள பள்ளிகளுடன் இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி தமிழகத்தில் மட்டும் 3,400 பள்ளிகள் மூடப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கு கல்வியாளர்கள், ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.தமிழகத்தில் தொடக்கக் கல்வித்துறை இயக்ககத்தின்கீழ் 27,895 ஆரம்பப் பள்ளிகள், 9,134 நடுநிலைப் பள்ளிகள் இயங்குகின்றன. இதில் 28 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர். மேலும், 1.12 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.
தமிழக அரசு சார்பில் பல இலவச திட்டங்கள் அறிவித்தும் ஆரம்பப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்ந்து சரிவில் பயணித்து வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாத ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரத்தின்படி மாநிலத்தில் 3,400 தொடக்கப் பள்ளிகளில் 20-க்கும் குறைவான மாணவர்களே உள்ளனர். இதையடுத்து முதல்கட்டமாக 10 மாணவருக்கும் குறைவாக உள்ள 1,324 பள்ளிகளை அருகே உள்ள பள்ளிகளுடன் இணைக்க திட்டமிட்டு பள்ளிக் கல்வித் துறை செயலாற்றி வருகிறது. அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதற்கு கல்வியாளர்கள், ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பள்ளிக் கல்வி அதிகாரிகள் கூறியதாவது:சமகிர சிக் ஷா திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு வழங்கும் முறை மாற்றி அமைக்கப்பட்டது. 15-க்கும் குறைந்த மாணவர் சேர்க்கை கொண்ட பள்ளிகளுக்கு நிதி வழங்கப்படாது. அதாவது பலவீனமான கட்டிடங்கள்மற்றும் மாணவர், ஆசிரியர் பற்றாக்குறையுள்ளபள்ளிகளை, அருகே உள்ள பள்ளிகளுடன் இணைக்க மத்திய அரசு நிர்பந்தம் செய்கிறது.இதனால் நாடு முழுவதும் 2.8 லட்சம் பள்ளிகள்மூடப்படும் நிலை உருவாகியுள்ளது. தமிழ கத்தில் மட்டும் 3,400 பள்ளிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட் டுள்ளது. மத்திய அரசின் அழுத்தம் காரணமாக முதல்கட்டமாக 10-க் கும் குறைந்த மாணவர்களை கொண்ட 1,324 பள்ளிகளை, அருகே உள்ள மற்ற பள்ளிகளு டன் இணைக்க அரசு முடிவு எடுத்துள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சங்க மாநில செயலாளர் ராபர்ட் கூறியது:

கல்வித்துறையை சேவை யாகப் பார்க்க மத்திய, மாநில அரசுகள் தவறி வருகின்றன. சேர்க்கை குறைவதற்கான காரணத்தை ஆராய்ந்து சரிசெய்யாமல், பள்ளிகளை மூடுவதால் எதிர்காலத்தில் கல்வி முழுவதும் தனியார் வசம் சென்றுவிடும். பள்ளியில் கட்டமைப்பு வசதிகளையும், கல்வித்தரத்தையும் மேம்படுத் தினாலே மாணவர் சேர்க்கை அதிகரிக்கும்.அதற்கு மாறாக இலவச கட்டாய கல்வித் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர்களை அரசே சேர்க்கிறது. இதற்காக மட்டும் ஆண்டுக்கு சராசரியாக ரூ.200 கோடி செலவாகிறது. பெரும்பாலான அரசுப் பள்ளிகளில்முறையான ஆய்வகம், கழிப்பறை உட்பட அடிப்படை வசதிகள்கூட கிடை யாது. தனியார் பள்ளிக்கு தரும் நிதியை, அரசுப் பள்ளிக்கு பயன்படுத்தினால் சேர்க்கை அதிகரிக்கும்.தொடக்கப் பள்ளிகள் மூடப் பட்டால் ஏழை மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவர்.

இது தவிர தொடக்கக் கல்வி இயக்குநர கத்தையும் கலைத்துவிட்டு பள்ளிக் கல்வித் துறையுடன் இணைக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் தொடக்கக் கல்வி எதிர்காலம் கேள்விக்குறியாகும்.இவ்வாறு அவர் கூறினார்.

2018-19தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கான ஊதிய ஆணை வெளியீடு

MPART வழிமுறைகள் தமிழில்... செயல்திட்டம் செய்வது எப்படி? பார்க்க /பதிவிறக்க கீழே உள்ள லிங்க்கைத் தொடவும் 👇

கடற்படையில் செய்லர் வேலை வேண்டுமா? விண்ணப்பங்கள் வரவேற்பு:

இந்திய கடற்படையில் காலியாக காலியாக உள்ள 2500 செய்லர் பணிக்கு பிளஸ் டூ தேர்ச்சி பெற்ற திருமணமாகாத ஆண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Sailor (Senior Secondary Recruit (SSR)) காலியிடங்கள்: 2500 சம்பளம்: மாதம் ரூ.21,700 - 69,100 வயதுவரம்பு: 01.08.1998க்கும் - 31.07.2002க்கும் இடைப்பட்ட தேதிக்குள் (இரு தேதிகள் உள்பட) பிறந்திருக்க வேண்டும். தகுதி: கணிதம், இயற்பியல் பாடங்கள் அடங்கிய பாடப்பிரிவில் படித்து பிளஸ் டூ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். உடற்தகுதி: குறைந்தபட்சம் 157 செ.மீ உயரமும், மார்பளவு 5 செ.மீ சுருங்கி விரியும் தன்மையும் பெற்றிருக்க வேண்டும்.
உடற்திறன் தகுதி: 7 நிமிடங்களில் 1.6 கி.மீ தூரத்தை ஓடி கடக்க வேண்டும். மேலும் கடற்படை வீரருக்கு ஏற்ற ஆரோக்கியமான உடற்தகுதி மற்றும் தெளிவான பார்வை திறனும் பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: கடற்படையால் நடத்தப்படும் ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, உடற் தகுதி திறன் தேர்வு, மருத்துவ தகுதி அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வு வினாத்தாள்கள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் அமைந்திருக்கும். ஆங்கிலும், அறிவியல், கணிதம் மற்றும் பொது அறிவு பாடங்களில் 100 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும். விண்ணப்பக் கட்டணம்: ரூ.205. இதனை ஆன்லைனில் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் செலுத்த வேண்டாம். விண்ணப்பிக்கும் முறை: www.joinindiannavy.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.12.2018 மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.joinindiannavy.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். இந்திய கடற்படையில் காலியாக காலியாக உள்ள 2500 செய்லர் பணிக்கு பிளஸ் டூ தேர்ச்சி பெற்ற திருமணமாகாத ஆண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

இந்திய கடற்படையில் காலியாக காலியாக உள்ள 2500 செய்லர் பணிக்கு பிளஸ் டூ தேர்ச்சி பெற்ற திருமணமாகாத ஆண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Sailor (Senior Secondary Recruit (SSR)) காலியிடங்கள்: 2500 சம்பளம்: மாதம் ரூ.21,700 - 69,100 வயதுவரம்பு: 01.08.1998க்கும் - 31.07.2002க்கும் இடைப்பட்ட தேதிக்குள் (இரு தேதிகள் உள்பட) பிறந்திருக்க வேண்டும். தகுதி: கணிதம், இயற்பியல் பாடங்கள் அடங்கிய பாடப்பிரிவில் படித்து பிளஸ் டூ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். உடற்தகுதி: குறைந்தபட்சம் 157 செ.மீ உயரமும், மார்பளவு 5 செ.மீ சுருங்கி விரியும் தன்மையும் பெற்றிருக்க வேண்டும். உடற்திறன் தகுதி: 7 நிமிடங்களில் 1.6 கி.மீ தூரத்தை ஓடி கடக்க வேண்டும். மேலும் கடற்படை வீரருக்கு ஏற்ற ஆரோக்கியமான உடற்தகுதி மற்றும் தெளிவான பார்வை திறனும் பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: கடற்படையால் நடத்தப்படும் ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, உடற் தகுதி திறன் தேர்வு, மருத்துவ தகுதி அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வு வினாத்தாள்கள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் அமைந்திருக்கும். ஆங்கிலும், அறிவியல், கணிதம் மற்றும் பொது அறிவு பாடங்களில் 100 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும். விண்ணப்பக் கட்டணம்: ரூ.205. இதனை ஆன்லைனில் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் செலுத்த வேண்டாம். விண்ணப்பிக்கும் முறை: www.joinindiannavy.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.12.2018 மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.joinindiannavy.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
பணி: Sailor (Senior Secondary Recruit (SSR))
காலியிடங்கள்: 2500
சம்பளம்: மாதம் ரூ.21,700 - 69,100

வயதுவரம்பு: 01.08.1998க்கும் - 31.07.2002க்கும் இடைப்பட்ட தேதிக்குள் (இரு தேதிகள் உள்பட) பிறந்திருக்க வேண்டும்.
தகுதி: கணிதம், இயற்பியல் பாடங்கள் அடங்கிய பாடப்பிரிவில் படித்து பிளஸ் டூ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
உடற்தகுதி: குறைந்தபட்சம் 157 செ.மீ உயரமும், மார்பளவு 5 செ.மீ சுருங்கி விரியும் தன்மையும் பெற்றிருக்க வேண்டும்.
இந்திய கடற்படையில் காலியாக காலியாக உள்ள 2500 செய்லர் பணிக்கு பிளஸ் டூ தேர்ச்சி பெற்ற திருமணமாகாத ஆண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Sailor (Senior Secondary Recruit (SSR)) காலியிடங்கள்: 2500 சம்பளம்: மாதம் ரூ.21,700 - 69,100 வயதுவரம்பு: 01.08.1998க்கும் - 31.07.2002க்கும் இடைப்பட்ட தேதிக்குள் (இரு தேதிகள் உள்பட) பிறந்திருக்க வேண்டும். தகுதி: கணிதம், இயற்பியல் பாடங்கள் அடங்கிய பாடப்பிரிவில் படித்து பிளஸ் டூ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். உடற்தகுதி: குறைந்தபட்சம் 157 செ.மீ உயரமும், மார்பளவு 5 செ.மீ சுருங்கி விரியும் தன்மையும் பெற்றிருக்க வேண்டும். உடற்திறன் தகுதி: 7 நிமிடங்களில் 1.6 கி.மீ தூரத்தை ஓடி கடக்க வேண்டும். மேலும் கடற்படை வீரருக்கு ஏற்ற ஆரோக்கியமான உடற்தகுதி மற்றும் தெளிவான பார்வை திறனும் பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: கடற்படையால் நடத்தப்படும் ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, உடற் தகுதி திறன் தேர்வு, மருத்துவ தகுதி அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வு வினாத்தாள்கள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் அமைந்திருக்கும். ஆங்கிலும், அறிவியல், கணிதம் மற்றும் பொது அறிவு பாடங்களில் 100 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும். விண்ணப்பக் கட்டணம்: ரூ.205. இதனை ஆன்லைனில் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் செலுத்த வேண்டாம். விண்ணப்பிக்கும் முறை: www.joinindiannavy.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.12.2018 மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.joinindiannavy.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
உடற்திறன் தகுதி: 7 நிமிடங்களில் 1.6 கி.மீ தூரத்தை ஓடி கடக்க வேண்டும். மேலும் கடற்படை வீரருக்கு ஏற்ற ஆரோக்கியமான உடற்தகுதி மற்றும் தெளிவான பார்வை திறனும் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: கடற்படையால் நடத்தப்படும் ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, உடற் தகுதி திறன் தேர்வு, மருத்துவ தகுதி அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்துத் தேர்வு வினாத்தாள்கள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் அமைந்திருக்கும். ஆங்கிலும், அறிவியல், கணிதம் மற்றும் பொது அறிவு பாடங்களில் 100 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.205. இதனை ஆன்லைனில் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் செலுத்த வேண்டாம்.
இந்திய கடற்படையில் காலியாக காலியாக உள்ள 2500 செய்லர் பணிக்கு பிளஸ் டூ தேர்ச்சி பெற்ற திருமணமாகாத ஆண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Sailor (Senior Secondary Recruit (SSR)) காலியிடங்கள்: 2500 சம்பளம்: மாதம் ரூ.21,700 - 69,100 வயதுவரம்பு: 01.08.1998க்கும் - 31.07.2002க்கும் இடைப்பட்ட தேதிக்குள் (இரு தேதிகள் உள்பட) பிறந்திருக்க வேண்டும். தகுதி: கணிதம், இயற்பியல் பாடங்கள் அடங்கிய பாடப்பிரிவில் படித்து பிளஸ் டூ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். உடற்தகுதி: குறைந்தபட்சம் 157 செ.மீ உயரமும், மார்பளவு 5 செ.மீ சுருங்கி விரியும் தன்மையும் பெற்றிருக்க வேண்டும். உடற்திறன் தகுதி: 7 நிமிடங்களில் 1.6 கி.மீ தூரத்தை ஓடி கடக்க வேண்டும். மேலும் கடற்படை வீரருக்கு ஏற்ற ஆரோக்கியமான உடற்தகுதி மற்றும் தெளிவான பார்வை திறனும் பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: கடற்படையால் நடத்தப்படும் ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, உடற் தகுதி திறன் தேர்வு, மருத்துவ தகுதி அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வு வினாத்தாள்கள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் அமைந்திருக்கும். ஆங்கிலும், அறிவியல், கணிதம் மற்றும் பொது அறிவு பாடங்களில் 100 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும். விண்ணப்பக் கட்டணம்: ரூ.205. இதனை ஆன்லைனில் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் செலுத்த வேண்டாம். விண்ணப்பிக்கும் முறை: www.joinindiannavy.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.12.2018 மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.joinindiannavy.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிக்கும் முறை: www.joinindiannavy.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.12.2018
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.joinindiannavy.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
இந்திய கடற்படையில் காலியாக காலியாக உள்ள 2500 செய்லர் பணிக்கு பிளஸ் டூ தேர்ச்சி பெற்ற திருமணமாகாத ஆண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Sailor (Senior Secondary Recruit (SSR)) காலியிடங்கள்: 2500 சம்பளம்: மாதம் ரூ.21,700 - 69,100 வயதுவரம்பு: 01.08.1998க்கும் - 31.07.2002க்கும் இடைப்பட்ட தேதிக்குள் (இரு தேதிகள் உள்பட) பிறந்திருக்க வேண்டும். தகுதி: கணிதம், இயற்பியல் பாடங்கள் அடங்கிய பாடப்பிரிவில் படித்து பிளஸ் டூ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். உடற்தகுதி: குறைந்தபட்சம் 157 செ.மீ உயரமும், மார்பளவு 5 செ.மீ சுருங்கி விரியும் தன்மையும் பெற்றிருக்க வேண்டும். உடற்திறன் தகுதி: 7 நிமிடங்களில் 1.6 கி.மீ தூரத்தை ஓடி கடக்க வேண்டும். மேலும் கடற்படை வீரருக்கு ஏற்ற ஆரோக்கியமான உடற்தகுதி மற்றும் தெளிவான பார்வை திறனும் பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: கடற்படையால் நடத்தப்படும் ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, உடற் தகுதி திறன் தேர்வு, மருத்துவ தகுதி அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வு வினாத்தாள்கள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் அமைந்திருக்கும். ஆங்கிலும், அறிவியல், கணிதம் மற்றும் பொது அறிவு பாடங்களில் 100 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும். விண்ணப்பக் கட்டணம்: ரூ.205. இதனை ஆன்லைனில் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் செலுத்த வேண்டாம். விண்ணப்பிக்கும் முறை: www.joinindiannavy.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.12.2018 மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.joinindiannavy.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.