யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

15/3/18

1.36 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!

இந்தியாவின் முன்னணி 8 துறைகளில் ஜூலை - செப்டம்பர் காலாண்டில் சுமார் 1.36 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாகத் தொழிலாளர் பணியகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தொழிலாளர் பணியகம் வெளியிட்டுள்ள காலாண்டு வேலைவாய்ப்பு ஆய்வறிக்கையில், ‘இந்தியா முழுவதும் 8 துறைகளில் ஜூலை - செப்டம்பர் காலாண்டில் மொத்தம் 1.36 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

உற்பத்தித் துறையில் 89,000 வேலைவாய்ப்புகளும், கல்வித் துறையில் 21,000 வேலைவாய்ப்புகளும், போக்குவரத்துத் துறையில் 20,000 வேலைவாய்ப்புகளும், வர்த்தகத் துறையில் 14,000 வேலைவாய்ப்புகளும், சுகாதாரத் துறையில் 11,000 வேலைவாய்ப்புகளும், தங்கும் விடுதி மற்றும் உணவகத் துறையில் 2,000 வேலைவாய்ப்புகளும், ஐடி/பிபிஓ துறையில் 1,000 வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளன.

கட்டுமானத் துறையில்தான் பின்னடைவாக 22,000 பணியிழப்புகள் நடந்துள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.ஜூலை - செப்டம்பர் காலாண்டில் உருவாக்கப்பட்ட 1.36 லட்சம் வேலைவாய்ப்புகளில் ஆண்கள் 62,000 பேரும், பெண்கள் 74,000 பேரும் வேலைவாய்ப்புப் பெற்றுள்ளனர் என்றும் தொழிலாளர் பணியகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மத்திய தொழிலாளர் அமைச்சகத்தின் ஒரு அங்கமான இந்தத் தொழிலாளர் பணியகம் 2016ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதம் முதலே ஒவ்வொரு காலாண்டின் முடிவிலும் வேலைவாய்ப்பு உருவாக்கம் குறித்த விவரங்களை ஆய்வறிக்கையாக வெளியிட்டு வருகிறது. விவசாயம் தவிர்த்து இதர எட்டு துறைகளை மையமாக வைத்து இந்த ஆய்வறிக்கை தயாரிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக