யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

29/3/17

ஆசிரியர் தகுதி தேர்வுக்கு குழப்பம் இல்லை என்றும் தேர்வுக்கு தயாராக போதிய அவகாசரம் தரப்பட்டுள்ளதாகவும் பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்துவதில் எந்த குழப்பமும் இல்லை.. பதில்
சென்னை: ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து எதிர்க் கட்சித் தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கைக்கு, தேர்வு நடத்துவதில் அவசரமோ,
குழப்பமோ இல்லை என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்..
ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், வேலையில்லா திண்டாட்டம் இளைஞர்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிற நேரத்தில் மூன்று வருடங்களாக 'ஆசிரியர் தகுதித் தேர்வை' நடத்தாத அதிமுக அரசு, இப்போது அவசர அவசரமாக 2017ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்துவதற்கான அறிவிக்கையை வெளியிட்டிருக்கிறது.'

கட்டாய கல்வியுரிமைச் சட்டத்தின்கீழ் நடத்தப்படும் இந்த ஆசிரியர் தகுதித் தேர்வு வருகிற ஏப்ரல் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் கால அட்டவணையை வெளியிட்டிருக்கிற இந்த நேரத்தில், ஆசிரியர் கல்வி பயின்றவர்கள் எல்லாம் ஏகப்பட்ட குழப்பத்தில் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதுஒருபுறமிருக்க, ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு அச்சடிக்கப்பட்ட 15 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்களில் பிழை ஏற்பட்டு, அதற்குப் பதிலாக இப்போது புதிய விண்ணப்பங்கள் அச்சடிக்கப்படுவதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிப்பதாக அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில், ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்துவதில் அவசரமோ, குழப்பமோ இல்லை என்று மு.க.ஸ்டாலினுக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு தயாராவதற்காக போதிய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும், படித்துவிட்டு வேலைக்காக காத்திருப்பவர்களின் நலனை கருத்தில்கொண்டே, தற்போதைய ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்துவதற்கான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.


மேலும், நீதிமன்ற ஆணையின்படியே தேர்வுக்கான தேதி ஏப். 29, 30 என அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் செங்கோட்டையன் தெரிவித்தார்.

SBI SGSP (State government salary package) A/C Benefit's-தமிழில்

*Minimum balance தேவையில்லை.*

~ கணக்கில் உள்ள தொகை automatic-ஆக fixed deposit-கு
சென்றுவிடும்.

[குறைந்தபட்ச தொகையையும் (Ex:ரூ.1000-க்கு மேல் உள்ள பணம் முழுவதும் MOD A/C-ல் fixed deposit செய்யவும்) &

மாதந்தோறும் fixed deposit-க்கு பணம் எடுக்க வேண்டிய தேதியினையும் நாம் தான் தெரிவிக்க வேண்டும்]



*கணக்கில் உள்ள பணத்திற்கு Fixed deposit வட்டி கிடைக்கும்.*

ATM-ல் தேவைப்படும் பொழுது எப்பொழுதும் போல் பணம் எடுக்கலாம் fixed doposit-ல் (MOD) உள்ளதே பணம் வருமா வராதா என்ற பயம் வேண்டாம்.

எத்தனை நாட்கள் MOD-ல் உள்ளதோ அத்தனை நாட்களுக்கான வட்டி கிடைக்கும்.

*~ வேறு கிளையில் இலவசமாக பாஸ் புக் பிரிண்ட் செய்யலாம்.*

*~ வங்கியில் பெற்ற கடனுக்கு வட்டி விகிதத்தில் சலுகை.*

*~ இலவச ATM card.*

*~ கட்டணமில்லா காசோலை புத்தகம் (multi city cheques)*

*~ இறப்பின் பொழுது காப்பீட்டுத் தொகை.*

(*நிபந்தனைகளுக்கு உட்பட்டது)

~ 2 மாத ஊதியத்தினை முன்பணமாக பெற்று 6 மாத கால தவணைகளில் திருப்பி செலுத்தும் வசதி. (*நிபந்தனைகளுக்கு உட்பட்டது)

👆👆👆 Source: https://www.sbi.co.in/…/per…/state-government-salary-package

2010 முதல் நான் SGSP A/C பயன்படுத்திவருகிறேன்.

[Salary certificate (HM கையெழுத்து போதுமானது) + ID card இருந்தால் போதும், நமது SBI சேமிப்புக் கணக்கினை SGSP A/C ஆக வங்கிக் கிளைக்கு நேரடியாக சென்று மாற்றிடலாம்]

*SGSP A/C ஆக நமது சேமிப்புக் கணக்கினை மாற்றிய பிறகு ATM & SMS-ல் balance குறைவாக காட்டினால் பயப்பட வேண்டாம்.*

உங்களது பணம் MOD-ல் இருக்கும்..

உங்களுக்கு தேவையான தொகை MOD-ல் இருந்தாலும் ATM-ல் எடுக்கலாம்.

Mini statement-ல்MOD balance பார்க்க இயலாது.

ஆனால் internet banking, mobile banking, passbook print & ATM-ல் balance check செய்யும் பொழுது Available balance தனியாகவும், MOD balance தனியாகவும் காட்டும்.


இதேபோல் மற்ற வங்கிகளிலும் salary package சலுகைகள் உள்ளன. இணையத்தில் தெரிந்துகொள்ளலாம்.

ANNAMALAI UNIVERSITY -DDE - Examination Results - December 2016-Results Published on 24-03-2017

ஆசிரியர் தகுதித்தேர்வுகள் வெறும் கண்துடைப்பு தான்! கலங்கி நிற்கும் ஆசிரியர்கள்

ஒவ்வொரு ஆண்டும் பல்கலைக்கழக மானிய குழுவால் நடத்தப்படும் தேசிய தகுதித்தேர்வு, தமிழ்நாட்டில் மாநில அளவில் நடத்தப்படும் மாநில அளவிலான தகுதித்தேர்வு மற்றும் பள்ளி ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வுகள் போன்றவை வெறும் கண்துடைப்பாகத்தான்
நடத்தப்படுகின்றன. இந்தத் தேர்வுகளால் ஒரு பயனும் இல்லை' என்கிறார்கள் இத்தேர்வில் தேர்ச்சி பெற்று வேலை வாய்ப்புக்காகக் காத்திருப்பவர்கள். என்ன காரணம்? ஏராளமானோர் படித்து வேலை வாய்ப்புக்காகக் காத்திருக்கும் நிலையில் தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்கத்தானே தேர்வு நடத்தப்படுகிறது. இதில் என்ன தவறு இருக்கிறது, எதற்காக எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்ற கேள்விகளோடு சந்தித்தோம்.

"எந்தவிதமான அடிப்படை வசதியும் இல்லாமல் பெயர் அளவுக்குத்தான் பெரும்பாலான பி.எட் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. தமிழ்நாட்டில் வருடத்தில் 60 ஆயிரம் பேர் பி.எட். முடித்து வருகிறார்கள். இதனை எல்லாம் கணக்கில் எடுத்துக்கொண்டு தான் ஆசிரியர் தகுதித்தேர்வினை கொண்டு வந்தார்கள். ஆனால், அதிலும் சரியான நெறிமுறைகள் கடைப்பிடிக்கப்படுவதில்லை. ஆசிரியர் காலியிடங்கள் அதிகம் உள்ள அரசு உதவி பெறும் சிறுபான்மைப் பள்ளிகளில் ஆசிரியர் தகுதித்தேர்வு அடிப்படையில் ஆசிரியர் நிரப்புவதில் இருந்து விலக்கு பெற்றிருக்கிறார்கள். இதனை எதிர்த்து தமிழக அரசு எந்தவித எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. சிறுபான்மையினர் பள்ளியில் தகுதியான ஆசிரியர்கள் தேவையில்லை என்கிறார்களா? என்று தெரியவில்லை. தற்போது அரசு உதவிப்பெறும் சிறுபான்மையினத்தவர் நடத்தும் பள்ளிகளைத் தவிர இதர பள்ளிகளில் காலியிடங்கள் மிகவும் குறைவு என்கிறார்கள். இந்த நிலையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு எப்படி வேலை வாய்ப்பினை வழங்குவார்கள் என்று தெரியவில்லை" என்கிறார் நெட்-ஸ்லெட் தேர்வுகளின் தேர்ச்சி பெற்றவர்களுக்கான அமைப்பின் ஆலோசகருமான பேராசிரியருமான சுவாமிநாதன்.


காருண்யா பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணியாற்றி 
 தகுதித்தேர்வு செல்வகுமார்

வரும் பா. மோசே செல்வகுமார் "ஏப்ரல் மாதம் இறுதியில் நடக்க இருக்கிற தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு ஆசிரியர் பயிற்சி முடித்த 2,72,000 பேரும், பட்டப்படிப்புடன் பி.எட். முடித்தவர்கள் 5,28,000 பேர் என எட்டு லட்சத்துக்கு அதிகமானோர் விண்ணப்பித்து இருக்கிறார்கள். ஆனால், இதுவரை எவ்வளவு ஆசிரியர்கள் காலியிடம் இருக்கிறது என்ற விவரங்கள் வெளியிடவில்லை. ஏற்கெனவே தகுதித்தேர்வில் வெற்றி பெற்று 35 ஆயிரம் பேர் மேல் காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு உரிய பதிலும் இல்லை. தற்போது நடைபெற உள்ள தேர்வில் ஐம்பதாயிரம் பேருக்கு மேல் தேர்ச்சி பெறும்போது அவர்களுக்கு எப்படி வேலைவாய்ப்பினை வழங்குவார்கள் என்று தெரியவில்லை.

2011-ம் ஆண்டு நவம்பர் மாதம் தமிழக அரசு பிறப்பித்த 181-வது அரசாணையின் மூன்றாவது பிரிவில் ‘அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் அடுத்த 5 ஆண்டுகளில் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்’ எனக் குறிப்பிட்டு இருக்கிறது. ஆனால், தனியார் பள்ளிகளில் தகுதித்தேர்வை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் சொற்ப சம்பளத்தில் அவர்களுக்குப் பிடித்தவர்களுக்கு பணி வழங்குகிறார்கள். தனியார் பள்ளிகளில் தகுதித்தேர்வின் அடிப்படையில் பணி வழங்கப்பட்டிருந்தால் தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 35,000 பேருக்கும் வேலை கிடைத்திருக்கும். அடுத்தடுத்த ஆண்டுகளின் தேர்வினை நடத்தி ஏராளமானவர்களுக்கு வேலையும் வழங்கி இருக்கலாம். ஆனால் நடக்கவில்லை.
பெரும்பாலான தனியார் பள்ளிகளில் அளவுக்கு அதிகமாக மாணவர்களிடமிருந்து கட்டணம் பெறுகிறார்கள். ஆனால், சரியான சம்பளத்துடன் தகுதியான ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதில்லை. பெரும்பாலான பள்ளி மாணவர்களுக்குச் சரியாக எழுதப் படிக்கத் தெரிவதில்லை என ஆய்வுகள் கூறுகின்றன. ஒரு பக்கம் ஆசிரியர் பணியில் சேரக் கடுமையான போட்டியும், இன்னொரு புறம் பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்குச் சரியாக படிக்கத் தெரியவில்லை என்பது நமது குழந்தைகளின் கல்வி முறையும், தரமும் கேள்விக்குறியாகவே உள்ளது.
பள்ளிக் கல்வியில் இப்படி என்றால் கல்லூரிக் கல்வியில் இதைவிட மோசம். பள்ளிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்கிறார்கள். ஆனால், கல்லூரியில் பல்கலைக்கழக மானியக்குழு யூஜிசி நெட் தேர்விலும், மாநில அரசு நடத்தும் ஸ்லெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களைத்தான் ஆசிரியர் பணிக்கு தேர்ந்தெடுக்க வேண்டும் என்று பல முறை வலியுறுத்தியும் தமிழக அரசு இதுவரை கண்டுகொள்ளவே இல்லை. ஆனால், வருடத்தில் இரண்டு முறை யூஜிசி நெட் தேர்வும், வருடத்தில் ஒரு முறை மாநில அரசு தகுதித்தேர்வினை நடத்துகிறது.
தமிழ்நாட்டில் 2011-ம் ஆண்டு நடத்திய ஸ்லெட் தேர்வில் 1395 பேரும், 2012-ம் ஆண்டு 5495 பேரும், 2016-ம் ஆண்டு 8550 பேர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் வேலை வாய்ப்பை வழங்கி இருந்தால் உயர்கல்வியில் காலியிடமே இருக்காது. ஆனால் வேறு அப்படி எதுவும் நடக்கவில்லை. இந்தநிலையில் இந்த ஆண்டும் ஸ்லெட் தேர்வு நடக்க இருக்கிறது. ஒரு லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் தேர்வு எழுத விண்ணப்பித்து இருக்கிறார்கள்.
இந்தத் தேர்வு எதற்காக நடத்தப்படுகிறது? இதன் நோக்கம் என்ன? தேர்ச்சி பெற்றவர்கள் எந்தளவுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது? என்ற கேள்விகளுக்கு எல்லாம் பதிலே இல்லை. ஒவ்வொரு முறையும் லட்சம் பேருக்கு மேல் தேர்வு எழுதுவதன் மூலம் பெரும் தொகை கிடைக்கிறது என்பதற்காக நடத்துகிறார்களா என்று தெரியவில்லை. எல்லாம் ஒரு கண் துடைப்புக்காகவே தகுதித்தேர்வினை நடத்துகிறார்கள்.
பல்கலைக்கழகங்களில் உள்ள காலியிடங்களுக்கு பல வித குளறுபடிகள் மூலமாகவும், கல்லூரியில் உள்ள காலியிடங்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்தின் மூலம் நிரப்புகிறார்கள். 2012-ம் ஆண்டு 2012ல் அறிவிக்கப்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை, அறிவியல் கல்லூரிகளில் 3120 உதவி பேராசிரியர் பணியிடங்களில் காலியாக உள்ளதாக அறிவித்தார்கள். ஆனால், இதுவரை நிரப்பப்படவில்லை. கடந்த ஒராண்டுக்கும் மேலாக ஐந்து பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் இல்லாமல் இருக்கிறார்கள். துணைவேந்தர் இல்லாததால் பலரும் படித்த படிப்புக்கான பட்டத்தையே பெற முடியாமல் இருக்கிறார்கள். இப்படி இருக்கும்போது கல்வித் தரத்தை பற்றி என்ன செல்வது என்று தெரியவில்லை" என்று முடித்தார் .


நெட்-ஸ்லெட் அசோசியேசன் அமைப்பின் செயலாளர் ஏ.ஆர். நாகராஜன்  "
தகுதித்தேர்வு நாகராஜன் நெட்-ஸ்லாட் அசோசியேசன்

ஒவ்வொரு ஆண்டும் எவ்வளவு பேர் நேர்முகத் தேர்வுக்கு என்ன தகுதியோடு வருகிறார்கள் என்ற தகவலில் அடிப்படையிலேயே ஸ்லெட் தேர்வு நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும். ஆனால், இங்கு தேர்ச்சி பெற்றவர்கள் ஏராளமானவர்கள் இருந்தும் திரும்பத் திரும்ப நடத்துகிறார்கள். இதில் முடிவினை அறிவிக்கும்போது பல்கலைக்கழக மானியக்குழு விதிமுறையினையும் கடைப்பிடிப்பதில்லை. ஆசிரியர்களை நியமிக்கும்போது தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றதையும் கண்டுகொள்வதில்லை. எந்த விதிமுறையும் கடைபிடிப்பதில்லை. இதனை நீதிமன்றத்தின் கவனத்துக்கு எடுத்துச்சென்றாலும், நீதிமன்றத்தின் அறிவுறுத்தலுக்கு வருவதற்கு முன்பாக தகுதியில்லாதவர்கள் நியமித்து விடுகிறார்கள். இந்த நிலையில் கல்வித் தகுதியினை எங்குப் போய் தேடுவது என்று தெரியவில்லை" என்கிறார்.
தகுதித்தேர்வில் இவ்வளவு குளறுபடிகள் இருப்பதைப் பார்க்கும்போது திகைப்பாய் இருக்கிறது. அரசு மாற்றத்தை ஏற்படுத்துமா அல்லது குளறுபடிகளின் ஒட்டுமொத்த உருவமாக மாறுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

http://www.vikatan.com/news/tamilnadu/84781-teacher-eligibility-test-is-just-another-eyewash-slams-teachers.html

CPS-வல்லுநர்குழு அறிக்கை தாக்கல் தாமதம் அரசு ஊழியர்- ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு.

No automatic alt text available.

பிளஸ் 2 பாடத்திட்டம் வருகிறது புது மாற்றம்

நீட்நுழைவுத் தேர்வை எதிர்கொள்ளும் வகையில், தமிழக
பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்படும்,'' என, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டத்தை, இரு மாதங்களில் மாற்ற முடியாது.
ஆனால், பாடத்திட்டத்தில் தேவையில்லாத பகுதிகளை அகற்றிவிட்டு, புதிய பகுதிகள் இணைக்க முடியும். அதற்காக, கல்வியாளர்கள், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் குழுவுடன், ஆலோசனை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வான, 'நீட்' தேர்வை சிரமமின்றி மாணவர்கள் எதிர்கொள்ளும் அளவுக்கு, பாடத்திட்டத்தில், சில மாற்றங்கள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

'பள்ளிக்கல்வியின் இந்த அறிவிப்பால், எதிர்காலத்தில், 'நீட்' தேர்வு போன்ற நுழைவுத் தேர்வுகளை, அரசு பள்ளி மாணவர்களும் எழுதி, உயர்கல்வி வாய்ப்புகளை பெற முடியும்' என, பெற்றோர் தெரிவித்தனர்.

போலி நியமன ஆணை: 4 ஆசிரியர்கள் சிக்கினர்

திருவண்ணாமலை மாவட்டத்தில், போலி நியமன ஆணை கொடுத்து
ஆசிரியர் பணியில் சேர்ந்த, நான்கு பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு, மகேஸ்வரி, 36, என்ற ஆசிரியை பணி இடமாற்றத்திற்கான நியமன ஆணையுடன் நேற்று முன்தினம் சென்றார். அவர், அளித்த நியமன ஆணையை சரிபார்த்த தலைமை ஆசிரியைக்கு சந்தேகம் எழுந்தது.


இதுகுறித்து முதன்மை கல்வி அலுவலகத்திடம் கேட்டார். அப்போது, மகேஸ்வரி கொடுத்த ஆணை போலியானது என்பது தெரியவந்தது. இது குறித்து, வந்தவாசி தெற்கு போலீசில் தலைமை ஆசிரியை புகார் அளித்தார். போலீசார் விசாரணையில், அவர் அளித்த, இடமாறுதலுக்கான ஆணையில் இருந்த, அனைத்து தகவல்களும் போலியானவை என்பது தெரிய வந்தது.இதையடுத்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்டத்தில் உள்ள, அனைத்து பள்ளிகளிலும் ஆசிரியர்களின் சான்றிதழை சரிபார்க்குமாறு, அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு நேற்று உத்தரவிட்டார்.


அதனடிப்படையில் விசாரணை நடத்தியதில், மேலும், மூன்று ஆசிரியர்கள் போலி ஆணை கொடுத்து பணியில் சேர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்கள், மூன்று பேரும் தற்போது தலைமறைவாகி விட்டனர்.இதுகுறித்து, திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயகுமார் கூறியதாவது:-மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆசிரியர்களின் பணி ஆணை உத்தரவு, கல்வி சான்றிதழ்களின் உண்மை தன்மை குறித்து ஆய்வு செய்ததில், தற்போது பணிபுரியும் மூன்று பேர், பணியில் சேர முயன்ற ஒருவர் என, நான்கு பேர் போலி சான்று வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மீது துறை ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.பணியில் சேர்ந்த நாள் முதல், தற்போது வரை அவர்கள் பெற்ற ஊதியத்தை திரும்ப பெறவும், குற்றப்பிரிவு போலீசார் மூலம் வழக்கு பதிவு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

பள்ளி கல்வித்துறை மவுனம் : 'TET' தேர்வு குழப்பம் நீடிப்பு

ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வில், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு விலக்கு வழங்குவது குறித்து, பள்ளிக்
கல்வித்துறை முடிவு எடுக்காததால், ஆசிரியர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
 ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வு, ஏப்., 29, 30ல் நடக்கிறது. தேர்வுக்கான விண்ணப்பங்கள், மார்ச், 23 வரை பெறப்பட்டு, பரிசீலனை நடக்கிறது.

இந்த தேர்வில், அரசு பள்ளி ஆசிரியர்களாக, 2010 ஆக., 23க்கு பின் நியமனம் பெற்றவர்கள், தேர்ச்சி பெற வேண்டும். இல்லாவிட்டால், அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவர்' என, பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதற்கு, அரசு பள்ளி ஆசிரியர்கள் தரப்பில் எதிர்ப்பு எழுந்தது. தமிழகத்தில், 2011 நவ., 15ல் தான், 'டெட்' தேர்வே அறிமுகமானது. அப்படியிருக்கையில், அதற்கு முன் பணி நியமனம் பெற்றவர்களுக்கு, 'டெட்' தேர்வு எப்படி கட்டாயமாகும் என, ஆசிரியர் சங்கத்தினர் கேள்வி எழுப்பியுள்ளனர். இதுதொடர்பாக, பள்ளிக் கல்வி செயலர் மற்றும் இயக்குனர் ஆகியோருக்கு, பல்வேறு சங்கத்தினர் மனு அளித்து உள்ளனர். அதற்கு, கல்வித் துறை அதிகாரிகள், விளக்கமளிக்கவில்லை.

பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொது செயலர் பேட்ரிக் ரைமண்ட் கூறியதாவது: சிறுபான்மை அந்தஸ்து பெற்ற, பள்ளி ஆசிரியர்களுக்கு, 'டெட்' தேர்ச்சி தேவையில்லை என, உச்ச நீதிமன்றம் விலக்கு அளித்துள்ளது. அரசாணைக்கு முந்தைய தேதியில், பணி நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு, 'டெட்' தேர்ச்சியை கட்டாயம் ஆக்க முடியாது. அவர்களுக்கு, ஆண்டுக்கு ஒரு முறை புத்தாக்க பயிற்சி வகுப்பு நடத்தி கொள்ளலாம் என்றே கூறப்பட்டுள்ளது.எனவே, 2010 ஆகஸ்ட்டுக்கு பின், 2011 நவம்பருக்கு முன் நியமிக்கப்பட்ட, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சி அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

750 PP NEWS - தனிஊதியம் 750ஐ பதவி உயர்வின் போது எப்படிநிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்று நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் ஒன்றிய உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் தமிழக தொடக்கக் கல்வி இயக்குனரை கோரியதற்கு திருச்சி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்வழியாக தொடக்க கல்வி இயக்குனர் இடமிருந்து கிடைக்கப்பெற்ற ஆணை நகல். புதியது..



JIO வின் அடுத்த சலுகை

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், புதிய சலுகை ஒன்றை அறிவித்துள்ளது.ஜியோ சிம் கார்டு வைத்துள்ளவர்கள், பிரைம் திட்டத்தில் சேர்ந்து வருகின்றனர். 
இவர்களுக்கான இலவச சேவை சலுகை, வரும், 31ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த சூழ்நிலையில் புதிய சலுகையை அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன்படி, ரூ.149 பிரீபெய்டு திட்டத்தின் கீழ் ரீசார்ஜ் செய்பவர்களுக்கு,2ஜிபி கூடுதல் டேட்டா வழங்கப்படும். ரூ.303க்கு ரீசார்ஜ் செய்யபவர்களுக்கு, 5 ஜிபி கூடுதல் டேட்டாவும், ரூ.499க்கு மேல் ரீசார்ஜ் செய்பவர்களுக்கு, 10 ஜிபி கூடுதல் டேட்டா அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

16 மதிப்பெண்களுக்கு எதிர்பாராத வினாக்கள் :கணிதத்தில் 'சென்டம்' குறையும்

பிளஸ் 2 கணிதத்தேர்வில், மொத்தம் 16 மதிப்பெண்களுக்கு, எதிர்பாராத வினாக்கள் கேட்கப்பட்டதால், 'சென்டம்' எடுப்போர் எண்ணிக்கை குறையும் வாய்ப்புள்ளது என, மாணவர்கள் தெரிவித்தனர்.
நேற்று நடந்த தேர்வு குறித்து அவர்களின் கருத்துஎஸ்.கற்குவேல் கார்த்திகேயன், மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, முத்துத்தேவன்பட்டி, தேனி: பகுதி இரண்டில் ஆறு மதிப்பெண் வினாவில் கட்டாய கேள்விகள் 55 - ஏ, 55-பி, இரண்டுமே எதிர்பாராததாக இருந்தது. இந்த வினாக்கள் இதுவரை கேட்கப்படாதவை. 53வது வினாவில் 1வது பிரிவு வினா 10.5 பயிற்சி கேட்கப்பட்டுள்ளது. இது பெரும்பாலும் வராது என படிக்காமல் விடப்படும். 10 மதிப்பெண் கட்டாய வினாவில் இரு வினாக்களும் எதிர்பாராதவை. எல்லா பயிற்சிகளும் முழுமையாக படித்தவர்கள் மட்டுமே இதற்கு விடையளிக்கலாம். மற்ற வினாக்கள் எளிமை என்பதால் சராசரி மாணவரும் நல்ல மதிப்பெண் பெறுவர். எதிர்பாராத வினாக்களால் 'சென்டம்'எடுப்போர் எண்ணிக்கை குறையும்.எளிமை - ஜெ.பிரித்திகா சென், என்.எஸ்.கே.பி.,மேல்நிலைப்பள்ளி, கூடலுார்: கணிதம் வினாத்தாள் மிகவும் எளிமையாக இருந்தது. கட்டாய வினாவில் 6 மதிப்பெண் கேள்வி, சற்று சிரமமாக இருந்தது. அதே வேளையில் 10 மதிப்பெண் வினா மிகவும் எளிமையாக இருந்தது. அதில் கடந்த ஆண்டு வந்த அதிகம் கேள்விகள் இருந்தன. புத்தகத்தில் இருந்த வினாக்கள் மட்டுமே கேட்கப்பட்டன. அதற்காக பள்ளியில் அளிக்கப்பட்ட பயிற்சி பயன்தந்தது.

ஒரு மதிப்பெண் வினா அனைத்தும் மிக எளிமை.சிறிது குழப்பம் - டி.முத்துக்குமரநாயகி, ஆசிரியை, மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, முத்துத்தேவன்பட்டி: ஒரு மதிப்பெண்வினாக்களில் 9 வினாக்கள் பெற்றோர் ஆசிரியர் கழகம் வழங்கிய புத்தகத்தில் இருந்தும், 31வினாக்கள் 'புக்பேக்' பகுதியில் இருந்து கேட்கப்பட்டுள்ளன. 6 மதிப்பெண்ணுக்கான 45வது வினாவில் கலப்பு எண்கள் வினா 'கிரியேட்டிவ்' ஆக கேட்டுள்ளனர். இதனால் மாணவர்களுக்கு சிறிது குழப்பம் இருந்திருக்கும். பத்து மதிப்பெண்ணில் 69வதுதாக கேட்கப்பட்ட நிகழ் தகவு பரவல் வினாவை மாணவர்கள் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். பத்து மதிப்பெண்ணுக்கான கட்டாய வினாவில் 'ஏ 'வினா வகை நுண்கணிதம் மற்றும் அவற்றின் பயன்பாடு பற்றியும், பி.வினா டிபிரன்சியல் ஈக்குவேஷன் கேட்கப்பட்டுள்ளது.

இந்த பயிற்சி கணக்கில் 8.5, 8.6 பயிற்சியை மாணவர்கள் நன்கு படிப்பார்கள்.ஆனால் 8.2வது பயிற்சியில் வினா கேட்கப்பட்டுள்ளதால், பலர் இந்த வினாவை சரியாக எழுதியிருக்க மாட்டார்கள். நன்கு படிக்கும் மாணவர்கள் மட்டுமே எழுதியிருப்பார்கள். கணித தேர்வில் மொத்தம் 16 மதிப்பெண்கள் எதிர்பாராத வினாக்களாக வந்துள்ளது.இதனால் 200க்கு 200 மதிப்பெண் எடுப்பவர் எண்ணிக்கைகுறையும். மற்றபடி சராசரியாக படிக்கும் மாணவரும் நல்ல மதிப்பெண் பெறுவர்.

மதிய உணவு திட்டத்தில் 4.4 லட்சம் போலி மாணவர்கள்: அம்பலப்படுத்திய ஆதார் !!

மதிய உணவுத் திட்டத்திற்கு ஆதார் எண் கட்டாயம் என அறிவிக்கப்பட்டதால் 3 மாநிலங்களில் சுமார் 4.4 லட்சம் போலியான மாணவர்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நாடுமுழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இலவசமாக மதிய உணவுஅளிக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் சுமார் 10 கோடி மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். மேலும், மத்திய அரசு ஆண்டு தோறும் பல கோடி ரூபாய்களை இத்திட்டத்திற்காக ஒதுக்கீடு செய்கிறது.மதிய உணவு திட்டத்தில் பயன்பெறும் மாணவர்கள் தங்களதுஆதார் எண்ணை பள்ளியில் சமர்பிக்க வேண்டும் என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தது. மத்திய அரசின் இந்த உத்தரவுக்குபல்வேறு அரசியல் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.இந்நிலையில், மத்திய அரசின் உத்தரவை அடுத்து ஜார்கண்ட், மணிப்பூர், ஆந்திரா ஆகிய மூன்று மாநிலங்களில் மட்டும் சுமார் 4.4 லட்சம் மாணவர்கள் மதிய உணவு திட்டத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். அதாவது, மேற்கண்ட மூன்று மாநிலங்களிலும் இதற்கு முன்னர், மதிய உணவு உட்கொள்ளும் மாணவர்களுடன், மதிய உணவு உட்கொள்ளாத மாணவர்களையும் சேர்த்து போலியான பெயர்ப் பட்டியல் தயார் செய்து ஆண்டு தோறும் அரசுக்கு அதிகாரிகள் அனுப்பி வந்துள்ளனர்.

ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டு விட்டதால் போலியான மாணவர்களை சேர்க்க முடியாது என்பதால், தற்போது மேற்கண்ட 3 மாநிலங்களிலும் சேர்த்து சுமார் 4.4 லட்சம் மாணவர்களின் பெயர்களை பட்டியலில் இருந்து நீக்கியுள்ளனர்.3 மாநிலங்களில் மட்டுமே 4 லட்சத்திற்கும் மேற்பட்ட மதிய உணவு உட்கொள்ளாத போலி மாணவர்கள் இருந்துள்ள நிலையில், நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் உள்ள போலியான மாணவர்கள் கண்டறியப்பட்டால், அரசுக்கு பெரும் தொகை மிச்சமாகும் என்பதில் ஐயமில்லை.

10-ம் வகுப்பு தேர்வு எழுத கூடுதல் நேரம் கோரியமாணவியை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்ததில் உள்நோக்கம் இல்லை: தருமபுரி மாவட்ட ஆட்சியர் விளக்கம்.

தருமபுரியில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவி ஒருவர் மாவட்ட ஆட்சியர் மீது புகார் அளித் துள்ள நிலையில், ‘சம்பந்தப்பட்ட மாணவியை மருத்துவ பரிசோத னைக்கு அழைத்ததில் உள்நோக்கம் எதுவும் இல்லை’ என மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார்.
தருமபுரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி. இவரது மகள், தருமபுரியில் உள்ள அரசுப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது பொதுத் தேர்வை அவர் எழுதி வருகிறார். இந்நிலையில், ‘தேர்வை சரிவர எழுத முடியாதபடி மாவட்ட ஆட்சியர் தனக்கு சிரமம் தருகிறார். இதற்குத் தீர்வு ஏற்படுத்த வேண்டும்’ என இந்த மாணவி தருமபுரி ‘சைல்டு லைன்’ அமைப்பிடம் சில நாட்களுக்கு முன்பு புகார் அளித்திருந்தார்.இதுகுறித்து மாணவி கூறிய தாவது: பிறவியிலேயே எனக்கு வலது கை நரம்பில் பாதிப்பு இருந்ததால் இடது கையில் எழுத பழகிக் கொண்டேன். இருப்பினும் இடது கையால் மற்றவர்களைப்போல வேகமாக எழுத இயலாத தால், பொதுத் தேர்வின் போது ஒரு மணி நேரம் கூடுதல் நேர அவகாசம் வேண்டுமென முறைப்படி மருத்துவ சான்றுகளுடன் விண்ணப்பித்தேன்.இதையடுத்து அரசு தேர்வுகளுக்கான வேலூர் மண்டல இணை இயக்குநர் மூலம் எனக்கு தேர்வு எழுத 1 மணி நேரம் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டது. கடந்த 23-ம் தேதி இரவு 8 மணிக்கு எனக்கு மருத்துவக் கல்லூரி மூலம் ஒரு சம்மன் அனுப்பப்பட்டது. மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரிலான மருத்துவ பரிசோதனைக்கு 24-ம் தேதி மருத்துவக் குழு முன்பு ஆஜராக வேண்டுமென அந்த சம்மனில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தேர்வு நேரம் என்பதால் என்னால் ஆஜராக முடியவில்லை. மேலும், இதுபோன்ற நடவடிக்கைகளால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள் ளேன். ஆட்சியரின் உத்தரவு எனக் கூறி சிலர் தரும் சிரமங்களால் என்னால் நிம்மதியாக தேர்வு எழுத முடியவில்லை’ என கூறியுள்ளார்.இதுகுறித்து மாணவியின் தாயார் மகேஸ்வரி கூறும்போது, ‘எனது மகளுக்கு தேர்வு சமயத்தில் தேவையற்ற நெருக்கடி கொடுக்கப்படுகிறது. இதனால், தேர்வில் அவரால் போதிய கவனம் செலுத்த முடியவில்லை. என் மகள் என்பதற்காக இவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறதா என்றும் தெரியவில்லை’ என்றார்.இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் விவேகானந்தனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: தேர்வை கண்காணிக்கும் பறக்கும் படையின ருக்கு அந்த மாணவியின் எழுதும் திறனில்சில சந்தேகங்கள் ஏற்பட்டுள் ளன. அவரது கை பாதிப்பின் அளவு குறித்து சந்தேகம் நிலவுவதாக பறக்கும் படை குழுவினர் கோட் டாட்சியர் கவனத்துக்கு கொண்டு வந்தனர். அவர் மூலமாக இந்த தகவல் எனக்கு தெரியவந்தது.

தருமபுரி மாவட்டத்தில் விதிமுறை களுக்கு உட்பட்டு தேர்வை நடத்து வதோடு, முறைகேடுகள் எதுவும் பதிவாகிவிடாதபடி பொதுத் தேர்வை நடத்த வேண்டியது மாவட்ட நிர்வாகத்தின் கடமை.அந்த வகையில் இந்த மாணவி விவகாரம் தொடர்பாக அரசு தேர்வு கள் துறை இயக்குநருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. அதேபோல, சம்பந்தப்பட்ட மாணவியின் மாற்றுத் திறன் சதவீதம் குறித்து ஆய்வு செய்து மருத்துவ அறிக்கை அளிக் கும்படி தருமபுரி மருத்துவக் கல்லூரி முதல்வருக்கும் உத்தரவிடப்பட் டது. மருத்துவக் கல்லூரி நிர்வாகம் தேர்வு நேரத்திலேயே சோதனைக்கு ஆஜராகும்படி கூறி சிரமப்படுத்தி விட்டதா என தெரியவில்லை.அதேநேரம், அந்த மாணவி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவல ரின்மகள் என்பது இறுதியில்தான் எனக்கு தெரியும்.

தேர்வுகள் தொடர் பான வழக்கமான நடவடிக்கை கள்தான் இந்த விவகாரத்தில் மேற் கொள்ளப்பட்டதே தவிர, இதற்கு வேறு உள்நோக்கம் எதுவும் இல்லை என்று அவர் கூறினார்.கடந்த 23-ம் தேதி இரவு எனக்கு மருத்துவக் கல்லூரி மூலம் ஒரு சம்மன் அனுப்பப்பட்டது. மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரிலான மருத்துவ பரிசோதனைக்கு 24-ம் தேதி மருத்துவக் குழு முன்பு ஆஜராக வேண்டுமென அந்த சம்மனில் குறிப்பிடப்பட்டிருந்தது.

நீட் தேர்வுக்கு படிக்க தமிழ் உள்ளிட்ட 8 மாநிலமொழிகளில் பாடப் புத்தகங்கள் இல்லாத நிலை: தாய்மொழியில் தேர்வு எழுதும் மாணவர்கள் பாதிப்பு.

நீட் தேர்வுக்கு படிக்க ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் மட்டுமே பாடப் புத்தகங்கள் உள்ளன. தமிழ் உள்ளிட்ட 8 மாநில மொழி களில் பாடப் புத்தகங்கள் இல்லாத தால், தாய்மொழியில் தேர்வு எழுத உள்ள மாணவர்கள் பாதிக்கப் பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரி கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங் களில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் உள்ளன. இந்த மருத்துவப் படிப்பு களுக்கு 2017-18-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET - நீட்) வரும் மே மாதம் 7-ம் தேதிநடைபெறுகிறது. மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நடத்தும் நீட் தேர்வுக்கு நாடு முழுவதும் 11 லட்சத்து 35 ஆயிரத்து 104 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத் தில் மட்டும் 88 ஆயிரத்து 478 மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர். தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சி, நாமக்கல், திருநெல்வேலி, வேலூர் உட்பட நாடு முழுவதும் 103 நகரங்களில் 2,200 மையங்களில் நீட் தேர்வு நடைபெறுகிறது.நீட் தேர்வு கடந்த ஆண்டு ஆங்கி லத்தில் மட்டும் நடத்தப்பட்டது. இந்த ஆண்டு தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு கன்னடம், குஜராத்தி, மராத்தி உள்ளிட்ட 10 மொழிகளில் நீட் தேர்வு நடைபெற உள்ளன. ஆனால் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டும் நீட் தேர்வுக்கு படிப்பதற்கான பாடப் புத்தகங்கள் இருக்கின்றன. தமிழ் உள்ளிட்ட 8 மாநில மொழிகளில் பாடப் புத்தகங்கள் இல்லை. இதனால் மாநில மொழிகளான தங்களுடைய தாய்மொழியில் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வேண்டாம் நீட் தேர்வு

இது தொடர்பாக அரசு மருத்து வர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தின் (எஸ்டிபிஜிஏ - SDPGA) மாநில அமைப்புச் செயலாளர் டாக்டர் ஏ.ராமலிங்கம் கூறியதாவது:நாடு முழுவதும் பல்வேறு பாடத்திட்டங்கள் உள்ளன. நீட் தேர்வு சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படுகிறது. நீட் தேர்வுக்கு படிப்பதற்கான சிபிஎஸ்இ பாடப் புத்தகங்கள் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் மட்டுமே உள்ளன. அப்படி இருக்கும் போது, தமிழ் உள்ளிட்ட மாநில மொழியில் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள மாணவர்களால் எப்படி தேர்வுக்கு தயாராக முடியும். படிப்பதற்கு பாடப் புத்தகங்களே இல்லாமல், தமிழில் தேர்வு எழுதலாம் என்று சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது. நீட் தேர்வால் மாநில மொழிகளில் தேர்வு எழுத உள்ள கிராமப்புற, ஏழை எளிய, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி மாணவர்கள் பாதிக்கப் பட்டுள்ளனர். நாடு முழுவதும் ஒரே மாதிரியான பாடத்திட்டத்தை கொண்டு வந்த பிறகு நீட் தேர்வை நடத்த வேண்டும். நீட் தேர்விலிருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றார்.

தமிழகத்தில் மே 14-ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல்?

உள்ளாட்சி தேர்தலுக்காக வார்டு வாரியாக வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி தமிழகம் முழுவதும் நடந்து வருவதாக உயர் நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கிராம பஞ்சாயத்து தலை வர் பதவிக்கு முனியப்பா என்பவர் தாக்கல் செய்த வேட்புமனு நிரா கரிக்கப்பட்டது. இதுதொடர்பாக உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப் பட்டது. இந்த மனு மீதான விசாரணை நேற்று காலை நீதிபதி என்.கிருபாகரன் முன்பு நடந்தது.

அப்போது நீதிபதி, ‘‘உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக நான் ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவு எந்த அளவில் அமல்படுத்தப்பட்டுள்ளது என்றும், உள்ளாட்சி தேர்தலை நடத்தும் எண்ணம் மாநில தேர்தல் ஆணையத்துக்கு இருக்கிறதா, இல்லையா? என்றும் கேட்டு தெரிவிக்க வேண்டும்’’ என்று மாநில தேர்தல் ஆணைய வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு விசாரணையை பிற்பகலுக்கு தள்ளிவைத்தார்.

பிற்பகல் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது மாநில தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.நெடுஞ்செழியன், ‘‘உள்ளாட்சி தேர்தலை நடத்தத் தேவையான பணிகளை மாநில தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. தமிழகம் முழுவதும் வார்டு வாரியாக வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி தற்போது மும்முரமாக நடக்கிறது’’ என்று தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதி, ‘‘தமிழகத்தில் மே 14-ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்குமாறு உயர் நீதிமன்றம் ஏற்கெனவே அவகாசம் வழங்கியுள்ளது. எனவே இந்த வழக்கு விசாரணையை வரும் ஏப்ரல் 3-ம் தேதிக்கு தள்ளிவைக்கிறேன்.

இந்த வழக்கில் என்ன முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை அன்றைய தினம் தெரிவிக்க வேண்டும்’’என்று உத்தரவிட்டார்.

விடுபட்ட 12 லட்சம் குழந்தைகளுக்கு 4 நாளில் ரூபெல்லா தடுப்பூசி.

தமிழகத்தில் விடுபட்ட 12 லட்சம் குழந்தைகள் மற்றும் சிறுவர் களுக்கு 4 நாட்களில் தட்டம்மை-ரூபெல்லா தடுப்பூசி போடப்படும் என்று பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துகள் துறை இயக்குநர் (டிபிஎச்) டாக்டர் க.குழந்தைசாமி தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:
தமிழகத்தில் தட்டம்மை-ரூபெல்லா தடுப்பூசி முகாம் முடிவடைந்தது. விடுபட்டவர் களுக்கு வரும் 31-ம் தேதி வரை தடுப்பூசி போடப்படும். இதுவரை 1 கோடியே 64 லட்சம் குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இன்னும் 4 நாட்களில் விடுபட்ட 12 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுவிடும். அதன்பின் தேசிய தடுப்பூசி திட்டத்தில் உள்ள தட்டம்மை தடுப்பூசி நீக்கப்பட்டு, தட்டம்மை-ரூபெல்லா தடுப்பூசி சேர்க்கப்படும். 9 மாதம் முதல் 12 மாதம் மற்றும் 16 மாதம் முதல் 24 மாதம் என இருகட்டங்களாக குழந்தைகளுக்கு தட்டம்மை-ரூபெல்லா தடுப்பூசி போடப்படும்.

பத்திரப்பதிவுக்கு விதிக்கப்பட்ட தடை தளர்வு: நீதிமன்றம்.

தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, பத்திரப்பதிவுக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் தளர்த்தியுள்ளது.

தடை உத்தரவுக்கு முன் பதிவு செய்யப்பட்ட வீட்டு மனைகளை மறுபதிவு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதாவது, 2016ம் ஆண்டு அக்டோபர் 23ம் தேதிக்கு முன் வாங்கியிருந்த நிலத்தை பத்திரப்பதிவு செய்யலாம் என்று தடை உத்தரவை தளர்த்தியுள்ளது.

தமிழக அரசு தரப்பு வழக்குரைஞர் வைத்த கோரிக்கை ஏற்று சென்னை உயர் நீதிமன்றம் இன்று புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

மேலும், பதிவு செய்யப்படும் நிலத்தில், சாலைக்கு 22 அடி இடம் விட வேண்டும் என்ற விதியை மீறக் கூடாது என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

சாலை, கழிவுநீர் குழாய் பதிக்க போதிய இடம் வசதி இல்லாத நிலங்களை முறைப்படுத்த போதிய கால அவகாசம் அளித்தும், அங்கீகாரமில்லாத வீட்டு மனைகள் தொடர்பாக அரசின் கொள்கை முடிவை ஏப்ரல் 7ம் தேதிக்குள் தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

வழக்கின் பின்னணி:
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர் யானை ராஜேந்திரன் தொடர்ந்த பொது நல மனு விவரம்: விவசாய விளை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றுவதற்கு முறைப்படி அனுமதி கிடையாது. ஆனால் சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உரிய அனுமதியின்றி  விளை நிலங்கள் அனைத்தும் அங்கீகாரமில்லாத வீட்டு மனைகளாக மாற்றியுள்ளனர்.

இதனால் விளை நிலப்பரப்பு வெகுவாக குறைந்து விவசாயமும் பாதித்துள்ளது. சென்னையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பிற்கு இதுவும் முக்கியமான காரணம். சுற்றுச்சூழலும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே முறையற்ற முறையில் விளை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றுவதற்கு தடை விதிக்க வேண்டும். அதுபோல அங்கீகாரமில்லாத வீட்டு மனைகளை பதிவு செய்யக்கூடாது என பத்திரப்பதிவுத் துறைக்கும் உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி அடங்கிய முதல் அமர்வு முன்பு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி, இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், -விளை நிலங்களை வீட்டு மனைகளாக -லே-அவுட்- போட்டு அங்கீகாரமில்லாமல் விற்பனை செய்யும்போது அந்த நிலத்தையோ அல்லது அதில் உள்ள கட்டிடத்தையோ பத்திரப்பதிவுத்துறையினர் எந்த வித காரணம் கொண்டும் பதிவு செய்யக்கூடாது- என்று உத்தரவிட்டது.

அடேயப்பா இவ்வளவு சலுகையா அரசு ஊழியர் சம்பளக்கணக்குக்கு மாற்றினால் மிஸ் பண்ணாம படிங்க ...

SALARY ACCOUNTS UNDER STATE GOVERNMENT SALARY PACKAGE (SGSP)

Salary Accounts under SGSP a gamut of privileges and other value added services to the employees of State Government, Union Territories and their Boards/Corporations. 
Salary Accounts under this package are available in four variants, namely Silver, Gold, Diamond and Platinum depending on the designation of the personnel.

Benefits to the Employer
Convenient way to manage salaries across a large number of centers through Core Power and the Bank's award winning Corporate Internet Banking
Reduces employer's paperwork and salary administration cost.
No charges for uploading of salaries
Employees receive instant credit of salaries
Benefit to the Employee

Convenience of Anywhere Banking at
The largest network of more than 16,000 Core Banking Branches
Extensive alternative channels.
53,000 plus ATMs of State Bank Group
Free Internet Banking, Mobile Banking
Complete gamut of Banking Services including:-
Unique Lifetime Account Number
Zero Balance Account facility with no penal charges for non-maintenance of minimum balance

Auto sweep (in & out) facility (on request)-Surplus amount in Savings bank account beyond threshold balance is transferred automatically into Term Deposits (multi option deposits) in multiple of Rs.1000/- and vice versa

Facility for Auto Sweep Switch On/Off through Internet Banking
Free Personal Accident Insurance (Death) Cover to Primary Salary Package Account*
Free personalized Multi City Cheques
RTGS/NEFT
Free Core Power: Anywhere banking facility with the widest network of more than 16,000 branches. Free updating of pass-books at any branch
Easy overdraft up to 2 months' salary repayable within 6 months*
SMS Alerts

Free Debit Cards : Domestic cards for Silver Accounts, Gold Debit cards for Gold and Diamond Accounts and Platinum Debit Card for Platinum Accounts.
Maximum daily withdrawal of Rs. 40,000 on Domestic Cards, Rs. 50,000 on Gold Cards and Rs. 1,00,000 on Platinum Cards.
Various Personal loans like Home loan/ Auto loan/ Xpress Credit loan, etc. at attractive terms
Demat facility, 3-in 1 Trading Account available
Systematic Investment Plan in Mutual funds
Range of other value added benefits

SBI SGSP (State government salary package) A/C Benefit's

~ Minimum balance தேவையில்லை.*

~ கணக்கில் உள்ள தொகை automatic-ஆக fixed deposit-கு சென்றுவிடும்.

[குறைந்தபட்ச தொகையையும் (Ex:ரூ.1000-க்கு மேல் உள்ள பணம் முழுவதும் MOD A/C-ல் fixed deposit செய்யவும்) &

மாதந்தோறும் fixed deposit-க்கு பணம் எடுக்க வேண்டிய தேதியினையும் நாம் தான் தெரிவிக்க வேண்டும்]

*கணக்கில் உள்ள பணத்திற்கு Fixed deposit வட்டி கிடைக்கும்.*

ATM-ல் தேவைப்படும் பொழுது எப்பொழுதும் போல் பணம் எடுக்கலாம் fixed doposit-ல் (MOD) உள்ளதே படம் வருமா வராதா என்ற பயம் வேண்டாம்.

எத்தனை நாட்கள் MOD-ல் உள்ளதோ அத்தனை நாட்களுக்கான வட்டி கிடைக்கும்.

*~ வேறு கிளையில் இலவசமாக பாஸ் புக் பிரிண்ட் செய்யலாம்.*

*~ வங்கியில் பெற்ற கடனுக்கு வட்டி விகிதத்தில் சலுகை.*

*~ இலவச ATM card.*

*~ கட்டணமில்லா காசோலை புத்தகம் (multi city cheques)*

*~ இறப்பின் பொழுது காப்பீட்டுத் தொகை.*
(*நிபந்தனைகளுக்கு உட்பட்டது)

~ 2 மாத ஊதியத்தினை முன்பணமாக பெறுதல் நமக்கு பொருந்தாது.

 Source: https://www.sbi.co.in/portal/web/personal-banking/state-government-salary-package

*[Salary certificate (HM கையெழுத்து போதுமானது) + ID card இருந்தால் போதும், நமது SBI சேமிப்புக் கணக்கினை SGSP A/C ஆக வங்கிக் கிளைக்கு நேரடியாக சென்று மாற்றிடலாம்]*

இதே போல் மற்ற வங்கிகளிலும் salary package சலுகைகள் உள்ளன. இணையத்தில் தெரிந்துகொள்ளலாம்.

விடுப்பு எடுக்காத மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்க பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு

பள்ளிக்கல்வி - 2016-17ஆம் கல்வியாண்டில் விடுப்பு எடுக்காத மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்க விவரம் கோரி இயக்குநர் உத்தரவு

மார்ச் 31- வரை நீட் தேர்வு மையங்களை மாற்றிக் கொள்ளலாம்: சிபிஎஸ்இ அறிவிப்பு

நீட் தேர்வு எழுதும் மையத்தை மாற்ற நேற்று கடைசி நாளான அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் இம்மாதம் மார்ச் 31- வரை தேர்வு மையங்களை மாற்றிக் கொள்ளலாம் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

மருத்துவ பட்டப்படிப்புக்கான தேசிய தகுதி நுழைவுத் தேர்வான "நீட்' தேர்வை மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான (சிபிஎஸ்இ) நாடுமுழுவதும் ஆண்டு தோறும் நடத்துகிறது.

 இந்த நுழைவுத் தேர்வில் இருந்து சில மாநிலங்களுக்கு கடந்த ஆண்டு விலக்கு அளித்திருந்த நிலையில், நடப்பாண்டில் இது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

கடந்த வருடம் 8,02,594 மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், இந்த வருடம் 11,35, 104 பேர் விண்ணப்பித்துள்ளனர். மார்ச் 24 முதல் மார்ச் 27( நாளை) வரை http://cbseneet.nic.in என்ற இணையதளத்தில் தேர்வு மையத்தை தெரிவு செய்து கொள்ளலாம் என தெரிவித்திருந்த நிலையில் தேர்வு மையத்தை மார்ச் 31-ம் தேதிவரை மாற்றிக்கொள்ளலாம் என சிபிஎஸ்சி அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் ஏற்கனவே தேர்வு மையங்களாக சென்னை, கோவை, மதுரை, சேலம் மற்றும் திருச்சி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது கூடுதலாக, நாமக்கல், நெல்லை மற்றும் வேலூர் சேர்க்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மருத்துவ நுழைவுத்தேர்வான நீட் தேர்வு மே 7ஆம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. 

பிளஸ் 2 கணிதம், விலங்கியல் ‘கட் ஆப்’ மதிப்பெண் குறையும்: முதுகலை ஆசிரியர்கள் கருத்து

''பிளஸ் 2 கணிதம் மற்றும் விலங்கி யல் தேர்வு வினாத்தாள்கள் நேற்று ஓரளவு கடினமாக இருந்தன. மாண வர்கள் பெறும் கட் ஆப் மதிப்பெண் குறையும்” என, ஆசிரியர்கள் கருத்து தெரிவித்தனர்.

கணிதத் தேர்வு குறித்து, தூத்துக்குடி எம்.தங்கம்மாள்புரம் அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை கணித ஆசிரியர் ஞா.சேகர் கூறியதாவது:
பிளஸ் 2 கணிதத் தேர்வில் ஒரு மதிப்பெண் கேள்விகள் 40, ஆறு மதிப்பெண் கேள்விகள் 10, பத்து மதிப்பெண் கேள்விகள்10 கேட்கப்படும். நேற்று நடந்த தேர்வில் ஒரு மதிப்பெண் கேள்வி கள் மிகவும் எளிதாக இருந்தன. புத்தகத்தின் பின் பகுதியிலிருந்து 30 கேள்விகளும், பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் வெளியிடப் பட்ட வினாத் தொகுப்பிலிருந்து 10 கேள்விகளும் கேட்கப்பட்டி ருந்தன.வழக்கமாக கேட்கப்படும் கேள்விகள் என்பதால், இவற்றுக்கு மாணவர்கள் எளிதாக பதிலளித்திருப்பார்கள்.இதேபோல் 10 மதிப்பெண் கேள்விகளும் மிகவும் எளி தாகவே இருந்தன. 14 கேள்வி கள் கொடுக்கப்பட்டு, 9 கேள்வி களுக்கு பதில் எழுதுமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது. இதில் 69-வது கேள்வி மட்டும் சற்று கடினமாக இருந்தது. யோசித்து எழுதினால் தான் இதற்கு சரியான விடையை கண்டுபிடிக்க முடியும்.கடினமான வினாக்கள்கட்டாயம் பதில் எழுத வேண்டிய கடைசி வினா எளிதாக இருந்ததால், சாதாரண மாணவர்களும் சரியாக எழுதியிருப்பார்கள். எனவே, 10 மதிப்பெண்களுக்கான கேள்வி யில் மாணவர்கள் அதிக எண் ணிக்கையில் முழு மதிப்பெண் பெற வாய்ப்புள்ளது.6 மதிப்பெண் வினாக்களில் சில சற்று கடினமாக இருந்தன. வழக் கமாக கேட்கப்படாத, முக்கியத் துவம் இல்லை என ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த பகுதியிலிருந் தும் வினாக்கள் வந்திருந்தன. சுமாராகப் படிக்கும் மாணவர்கள் சற்று திணறியிருப்பார்கள்.எனவே, முழு மதிப்பெண்கள் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது. அதேநேரம், பலரும் 120 மதிப்பெண்களை எளிதில் எடுக்க முடியும்” என்றார் அவர்.

விலங்கியல்

விலங்கியல் தேர்வு குறித்து, கன்னியாகுமரி மாவட்டம் மேல்பாலை புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர் பி.எஸ்.ஜோசப் சேவியர் கூறியதாவது:விலங்கியல் தேர்வில் 10 மற்றும் 5 மதிப்பெண்களுக்கான வினாக்கள் எளிமையாகவே இருந்தன. 3 மதிப்பெண் வினாக்கள் சராசரி மாணவர்களுக்கு சற்று சிரமம் அளிக்கும் வகையில் இருந்தன. 1 மதிப்பெண்ணுக்கான 30 வினாக்களில் வினா தொகுப்பிலிருந்து 17 கேள்விகள் மட்டுமே கேட்கப்பட்டிருந்தன. தெளிவாக அனைத்து பாடங்களையும் படித்திருந்தால் மட்டுமே விடை அளித்திருக்க முடியும். 10 மதிப்பெண்களுக்கான வினாக்கள் 6-வது பாடத்திலிருந்துகேட்பதற்கு பதில், 5-வது பாடத்திலிருந்து கேட்கப்பட்டிருந்தன.

தற்போதைய சூழலை மையமாகக் கொண்டு, கழிவு மேலாண்மை, சுற்றுச்சூழல் ஏற்படுத்தும் தாக்கம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து 10 மதிப்பெண் வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன. இதனால் விலங்கியலில் தேர்ச்சி விகிதம் குறையாது. அதே நேரம் கட் ஆப் மதிப்பெண் குறைய வாய்ப்புள்ளது என்றார்.

28/3/17

உயர்கல்வியின் அடிப்படையில் உயர்பணிக்கு விண்ணப்பித்துக் கொள்ள / போட்டித் தேர்வுகளில் பங்கெடுப்பதற்கான தடையின்மைச் சான்று படிவங்கள்






அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் வங்கி கணக்கில் இருப்புத்தொகை ரூ.5000/- பராமரிப்பு செய்ய வேண்டுமா? இல்லையெனில் அபராதம் விதிக்கப்படுமா? என்பது குறித்து கருவூல அலுவலகத்திற்கு "பாரத ஸ்டேட் வங்கி" அளித்துள்ள பதில்...




மூன்றாம் பருவத்தேர்வு மாதிரி வினாத்தாள் வகுப்பு : 1 - 5 வகுப்புகளுக்கு மட்டும் தமிழ் வழி மட்டும்

ஆசிரியர் தகுதித் தேர்வை தள்ளி வைக்க வேண்டும் ! தி.மு.க.செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் !!



ஆசிரியர் தகுதித் தேர்வு தேதியை தள்ளி வைக்க வேண்டும் - திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின். பெரும் குழப்பம் நிலவுவதாக ஆசிரியர் தகுதித் தேர்வு தேதியை தள்ளி வைக்க
வேண்டுமென்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்
வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
வேலையில்லாத் திண்டாடம் இளைஞர்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கின்ற நேரத்தில்
மூன்று வருடங்களாக “ஆசிரியர் தகுதித் தேர்வை” நடத்தாத அதிமுக அரசு இப்போது அவசரஅவசரமாக 2017ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்துவதற்கான அறிவிக்கையை வெளியிட்டிருக்கிறது. கட்டாயக் கல்வியுரிமைச் சட்டத்தின் கீழ்
நடத்தப்படும் இந்த ஆசிரியர் தகுதித் தேர்வு வருகின்ற ஏப்ரல் 29 மற்றும் 30ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் கால அட்டவணையை வெளியிட்டிருக்கின்ற இந்த நேரத்தில் ஆசிரியர் கல்வி பயின்றவர்கள் எல்லாம் ஏகப்பட்ட குழப்பத்தில் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இது ஒருபுறமிருக்க,
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு அச்சடிக்கப்பட்ட 15 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்களில் பிழை ஏற்பட்டு, அதற்கு பதிலாக இப்போது புதிய விண்ணப்பங்கள் அச்சடிக்கப்படுவதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது. அரசு பணம் எப்படியெல்லாம் வீணடிக்கப்படுகிறது என்பதற்கு “குற்றவாளி வழிகாட்டும்” அரசின்
நிர்வாக குழப்பங்களே காரணம் என்பதை நினைக்கும் போது தமிழக அரசு நிர்வாகம் இன்னும் எந்த அளவிற்கு மோசமாகப் போகிறதோ என்ற கவலையே ஏற்படுகிறது. சிறுபான்மையினர் நடத்தும் அரசு உதவி பெறும்(Aided) மற்றும் அரசு உதவி பெறாத
(non government aided) கல்வி நிறுவனங்களுக்கும் கட்டாயக் கல்வியுரிமைச் சட்டத்திலிருந்து உச்சநீதிமன்றமே விலக்களித்துள்ள நிலையில், இந்த கல்வி நிறுவனங்களுக்கும் ஆசிரியர் தகுதித் தேர்வு பொருந்துமா என்பது குறித்து “2017 அறிவிக்கையில்” தெளிவான விளக்கங்கள் ஏதுமில்லை TET லிருந்து பணியில் உள்ள
ஆசிரியர்களுக்கு விலக்கு பற்றிய அறிவிப்புகள் ஏதும் இல்லை என்பது
கவலையளிக்கிறது. இதற்கு முன்பு எல்லாம் வழக்கமாக ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் தான் ஆசிரியர் தகுதித் தேர்வு தமிழகத்தில் நடைபெற்றது. ஆனால் இந்த முறை ஏப்ரல் மாதத்திலேயே
ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கல்வியாண்டின் இறுதி நாளான ஏப்ரல் 20ஆம் தேதியிலிருந்து 9 நாட்களுக்குள், அதாவது ஏப்ரல் 29ஆம் தேதியே தேர்வு எழுத வேண்டும் என்பது ஆசிரியர்களாக பணியாற்றும் பலருக்கும் குறிப்பாக அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு பெரும் இடைஞ்சலாக இருக்கும். இறுதி வேலைநாளுக்குப் பிறகு தேர்வுத்தாள் திருத்தும் பணியைச் செய்வதா அல்லது
ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதுவதா என்ற குழப்பம் ஆசிரியர்களாக
இருப்பவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு அவர்களால் உரிய முறையில் தயாராகி தேர்வு எழுத முடியாத சூழல் உருவாகியுள்ளது.ஆகவேமூன்று வருடங்கள் காலத்தைக் கடத்திவிட்ட அதிமுக அரசு, பள்ளிக்
கல்வித்துறை அமைச்சராக செங்கோட்டையன் பொறுப்பேற்றவுடன் அவசர அவசரமாக தேர்வை .நடத்துவதில் பல சந்தேகங்கள் எழுகிறது. ஆகவே ஆசிரியர்களுக்கும் இந்த தேர்வு
பயன்படும் வகையில் ஆசிரியர் தகுதித் தேர்வு தேதியை ஜூன் அல்லது ஜூலை மாதத்திற்கு தள்ளி வைக்க வேண்டும். சி.பி.எஸ்.இ. நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு கல்வியில் இளநிலை பட்டம் பெற்ற வணிகவியல் பட்டதாரிகள் கூட ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத அனுமதிக்கப்படுகிறார்கள். கடந்த காலங்களில் கணினிப் பட்டதாரிகளைக் கூட ஆசிரியர் தேர்வு வாரியம் இந்த தகுதித் தேர்வை எழுத அனுமதி கொடுத்திருக்கிறது.ஆனால் இப்போது வெளியிடப்பட்டுள்ள ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிக்கையில் கல்வியில் இளநிலை பட்டம் பெற்றிருக்கும் அனைத்து பட்டதாரிகளும் “ஆசிரியர் தகுதித் தேர்வு” எழுத முடியுமா என்பது தெளிவாக்கப்படவில்லை. ஆகவே கல்வியில் இளநிலை பட்டம் பெற்ற அனைத்து பட்டதாரிகளும் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதுவதற்கு அதிமுக அரசு அனுமதிப்பதுதான் பட்டதாரிகள் அனைவருக்கும் சம நீதி வழங்கியதாக அமையும். ஆசிரியர் தகுதித் தேர்வில் பங்கேற்றவர்களுக்கு இட ஒதுக்கீட்டின்படி 5மதிப்பெண் வழங்கும் அரசு ஆணையையும், இடைநிலை ஆசிரியர்களுக்கும், பட்டதாரி ஆசிரியர்களுக்கும் அவர்கள் பெற்ற கல்வியின் அடிப்படையில் வழங்கும் 40
“வெயிட்டேஜ்” மதிப்பெண்களையும் உச்சநீதிமன்றம் அனுமதித்திருந்தாலும்,வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து விட்டு நீண்ட காலமாக காத்திருப்போருக்கு நீதி வழங்கும் பொருட்டும், சமூகநீதியின் உண்மையான நோக்கம் வேலை தேடும் அனைவருக்கும் கிடைக்கும் வகையிலும் ஆசிரியர் பணி கிடைப்பதற்கு ஏற்ற வகையில் ஒரு கொள்கை முடிவை இந்த அரசு எடுக்க வேண்டும். அதற்காக துணை வேந்தர்கள் உள்ளிட்ட சிறந்த கல்வியாளர்கள் தலைமையில் ஒரு நிபுணர் குழுவை அமைத்து அப்படியொரு ஆக்கபூர்வமான கொள்கை முடிவை எடுத்து ஆசிரியர் கல்வி படித்து விட்டு காத்திருக்கும் அனைவரையும் பாதுகாக்க அரசு முன்வர வேண்டும்.ஆசிரியர் தகுதித் தேர்வை ஆண்டிற்கு இரு முறை நடத்துவது, மற்ற மாநிலங்களில் உள்ளது போல் வகுப்பு வாரியாக மதிப்பெண் உச்சவரம்பை குறைப்பது, பழைய பாடத்திட்டத்தின்படி படித்த மாணவர்களுக்கும், புதிய பாடதிட்டத்தின்படி படித்தவர்களுக்கும் இடையில் மதிப்பெண்களில் சலுகை வழங்குவது, நீண்ட காலமாக வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து விட்டு காத்திருப்பவர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் முன்னுரிமை அளிப்பது போன்றவற்றையும் ஆராய்ந்து ஆசிரியர் கல்வி படித்து விட்டு வேலைக்காக காத்திருக்கும் அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்கும் வகையில் இந்த ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான வரம்புகளை மாற்றி அமைப்பது குறித்து மாநில அரசு தீவிர பரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். ஏற்கனவே ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டுள்ளவர்களை ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்ற ஒரே காரணத்திற்காக வீட்டுக்கு அனுப்பிவிடக் கூடாது என்றும், அவர்கள் அந்த தேர்வில் வெற்றி பெற போதிய வாய்ப்புகள் மற்றும் பணியில் உள்ள TET நிபந்தனை ஆசிரியர்களுக்கு முழு விலக்கும்
வழங்கப்பட வேண்டும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

JIO வின் அடுத்த சலுகை

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், புதிய
சலுகை ஒன்றை அறிவித்துள்ளது.

ஜியோசிம் கார்டு வைத்துள்ளவர்கள், பிரைம் திட்டத்தில் சேர்ந்து வருகின்றனர். இவர்களுக்கான இலவச சேவை சலுகை, வரும், 31ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த சூழ்நிலையில் புதிய சலுகையை அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.


அதன்படி, ரூ.149 பிரீபெய்டு திட்டத்தின் கீழ் ரீசார்ஜ் செய்பவர்களுக்கு,2ஜிபி கூடுதல் டேட்டா வழங்கப்படும். ரூ.303க்கு ரீசார்ஜ் செய்யபவர்களுக்கு, 5 ஜிபி கூடுதல் டேட்டாவும், ரூ.499க்கு மேல் ரீசார்ஜ் செய்பவர்களுக்கு, 10 ஜிபி கூடுதல் டேட்டா அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு நடுநிலைப் பள்ளிக்கு நிரந்தர இடைநிலை/பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க "மாநில குழந்தைகள் உரிமைகள் ஆணையம்" பள்ளிக்கல்வி இயக்குநருக்கு உத்தரவு - ஆனை

பழையகோட்டைப்புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு உடனடியாக ஆசிரியர்களை நியமிக்க ஆவன செய்யுமாறு குழந்தைகள் உரிமைகள்
பாதுகாப்பு ஆணையத்தின் செயலாளர் திரு. ஆர்.லால்வேனா இ.அ.ப அவர்கள் பள்ளிக் கல்வி இயக்குநர் முனைவர் வி.சி.இராமேஸ்வரமுருகன் அவர்களுக்கு நேர்முகக் கடிதம் எழுதியுள்ளார்.

அரசு நடுநிலைப் பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை -தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தகவல்

No automatic alt text available.

முக்கியச் செய்தி-2016 அக்டோபர் முன்னர் பதிவு செய்யப்பட்ட வீட்டுமனைகளை மீண்டும் பத்திர பதிவு செய்யலாம்.சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

2016 அக்டோபர் முன்னர் பதிவு செய்யப்பட்ட வீட்டுமனைகளை மீண்டும் 
பத்திர பதிவு செய்யலாம்.சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
Image may contain: text

சென்னை: அக்.,23க்கு முன்பு பத்திரப்பதிவு செய்யப்பட்ட வீட்டுமனையை மறுபதிவு செய்ய சென்னை ஐகோர்ட் அனுமதி வழங்கியுள்ளது.

தமிழகத்தில் விவசாய நிலங்களை வீட்டு மனைகளாக மாற்ற தடை விதிக்க கோரி, வழக்கறிஞர் ராஜேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட், அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளை பத்திரப்பதிவு செய்ய தடை விதித்தது.இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது ரியல் எஸ்டேட் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் கூறுகையில், 8 மாதமாக தடை நீடிப்பதால் வாங்கிய நிலங்களை பத்திரப்பதிவு செய்ய முடியவில்லை தெரிவிக்கப்பட்டது.
வழக்கை தொடர்ந்த ராஜேந்திரன் கூறுகையில், அனுமதியில்லாத மனைகளை பத்திர பதிவு செய்யவே எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறினார்.

மீறக்கூடாது:
இதனைதொடர்ந்து நீதிபதிகள், கடந்த 2016 அக்., 23க்கு முன்பு பத்திரப்பதிவு செய்யப்பட்ட வீட்டுமனையை மறுபதிவு செய்யலாம். சாலைக்கு 22 அடி இடம் விட வேண்டும் என்ற விதியை மீறக்கூடாது. விளை நிலங்கள் விவகாரத்தில் தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும் எனக்கூறினர்.

ஒத்திவைப்பு:
தொடர்ந்து நிலங்களை வரைமுறைப்படுத்த மேலும் கால அவகாசம் வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. இதனையடுத்து வழக்கை ஏப்ரல் 7 ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்

Genuineness not necessary for Selection Grade..

அலுவலகத்தில் மதியம் தூங்கினால் படைப்பாற்றல் அதிகரிக்கும்

அலுவலகத்தில் மதிய வேளையில் போடும் ஒரு குட்டித்தூக்கம் படைப்பாற்றல் திறனை அதிகரிக்கும் என இங்கிலாந்து பல்கலைக்கழக
ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
தினமும் மதிய வேளையில் அலுவல்களுக்கு நடுவே ஒரு 20 நிமிடம் தூங்கினால் வேலை செய்வோரின் திறன் அதிகரிப்பதாக இங்கிலாந்து லீட் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தூக்கம் ஊழியர்களின் படைப்பாற்றல் திறனை அதிகரிப்பதுடன் முடிவெடுக்கும் திறனையும் அதிகரிப்பதாக நிருபிக்கப்பட்டுள்ளது. மதிய நேர குட்டித் தூக்கங்களில் மன அழுத்தம் குறைவதுடன் இதய நோய் பாதிப்புகள், சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் ஆகியவை வருவதற்கான சாத்தியக் கூறுகள் குறைவு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்போ, உங்க பாஸிடம் நல்ல பேர் வாங்க தினமும் மதியம் ஒரு குட்டித்தூக்கம் போடுங்க பாஸ்.

TNTET சைக்காலஜி 500 கேள்விகள் - PART 1 கல்வியியல்

1 உடல் வளர்ச்சி வேகமாக நடைபெறும் பருவம் எது? சிசுப்பருவம் 
2 வளர்ச்சி ஹார்மோன் அளவுக்கு அதிகமாக பிட்யூட்டரி சுரப்பியில் சுரக்கும்போது…… ஏற்படுகிறது அசாதாரண உடல் வளர்ச்சி
3 குழந்தையின் சுதந்திர உணர்வுக்கு மதிப்பளிக்கும் போது தானே தொடங்கும் திறன் ……. வயதில் ஏற்படுகிறது 2-3 ஆண்டுகள் 
4 பியாஜேயின் "ஒருவருடைய அறிவுசார்" என்ற சொல் கீழ்க்கண்ட ஒன்றை குறிக்க பயன்படுத்தப்படுகிறது ஸ்கீமா
5 எரிக்சனின் கூற்றுப்படி மனிதனின் சமூக கோட்பாடு எத்தனை நிலைகளைக் கொண்டுள்ளது? 8 நிலை
6 கவனவீச்சு அறிய உதவும் கருவி டாச்சிஸ்டாஸ் கோப்
7 ஒருவரின் ஆளுமைக் கோளாறுகளுக்கு அடிப்படையாக அமைவது மனவெழுச்சி அதிர்வுகள்
8 ஒழுக்க வளர்ச்சியை பற்றி கூறிய உளவியல் அறிஞர் பியாஜே
9 நுண்ணறிவு இரு காரணிகளால் ஆனது என கூறிய உளவியல் அறிஞர் ஸ்பியர்மென்
10 நுண்ணறிவு ஈவு என்பது நு.ஈ. = மனவயது (M.A) / கால வயது (C.A) X 100
11 பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மையை …….. எனலாம் தர்ம சிந்தனை
12 கற்றல் வகைகளில் பொருந்தாத ஒன்று மனப்பாடம் செய்து கற்றல்
13 குழந்தையை குழந்தையாக கருத வேண்டும் என்று கூறியவர் ரூசோ
14 தன்னிச்சையாக எழும் துலங்கலைச் சார்ந்த ஆக்கநிலையுறுத்தக் கற்றல் சோதனையில் ஸ்கின்னர் பயன்படுத்திய விலங்கு எலி
15 இவற்றுள் பொருத்தமான ஜோடியை கூறு ஸ்கின்னர் கற்றல் விதி
16 சிக்கலான பொதுமைக் கருத்து சிறிய நீல நிற சதுர கட்டை
17 கற்றலுக்கு உதவாத காரணி தனிப்பட்ட காரணி
18 மொழியில்லா சோதனை …………...….... வகை சோதனையைச் சாரும் ஆக்கச் சிந்தனை
19 அறிவுசார் கற்றல் அணுகுமுறை அல்லாதது மனப்பாடம் செய்வித்தல்
20 குழந்தைகளுக்கான "கற்கும் உரிமை"யை ஐ.நா. சபை எப்பொழுது பிரகடனப்படுத்தியது 1959 நவம்பர் 20
21 தார்ண்டைக்கின் பயிற்சி விதி எதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி கூறுகிறது மறுபடி செய்தல்
22 கற்றலின் முக்கிய காரணி ஒன்று கவனித்தல்
23 வெகுநாட்கள் நமது நினைவில் இருப்பவை பல்புலன் வழிக்கற்றல்
24 கற்றலின் அடைவு திறன்
25 நடத்தை கோட்பாட்டின் அடிப்படை தூண்டல்-துலங்கல்
26 பியாஜேயின் கோட்பாடு குழந்தைகளின் அறிவு வளர்ச்சி பற்றியது
27 சராசரி நுண்ணறிவு ஈவு 90-109
28 ஒரு குழந்தையின் முதல் ஆசிரியர் பெற்றோர்
29 தர்க்கரீதியான சிந்தனை என்பது விரி சிந்தனை
30 நினைவாற்றல்’ என்ற நூலின் முதல் பிரதியை வெளியிட்டவர் எபிங்கஸ்
31 தன்னெறிப்படுத்தும் அறிவுரைப் பகர்தலை பிரபலப்படுத்தியவர் கார்ல்ரோஜர்ஸ்
32 கனவுகள் ஆய்வு’ என்ற நூலை வெளியிட்டவர் சிக்மண்ட் பிராய்டு
33 மனப்போராட்டங்களின் வகைகள் 3
34 கற்பித்தலின் முதல் படிநிலை திட்டமிடுதல்
35 கருவுறுதலின்போது ஆணிடமிருந்து பெறப்படும் குரோமோசோம் Y
36 நுண்ணறிவு சார்ந்த பன்முகக்காரணிக் கோட்பாட்டினை அளவிட தாண்டைக் கூறும் வழி யாது? CAVD
37 தூண்டல்-துலங்கல் ஏற்படக் காரணம் புலன் உறுப்புகள்
38 குமரப் பருவம் ஒரு சிக்கலான அமைதியற்ற பருவம் எனக் கூறியவர் ஸ்டான்லி ஹால்
39 உடல் செயல்பாடுகள் மற்றும் உளச் செயல்பாடுகள் இரண்டினையும் சீராகச் செயல்பட உதவும் முக்கிய நாளமில்லாச் சுரப்பி பிட்யூட்டரி சுரப்பி
40 நம்முடைய மூதாதையர்களிடமிருந்து தொடர்ந்து வழி வழியாக உடல், உளப்பண்புகள் பின் சந்ததிகளுக்கு ஜீன்களின் மூலமாக வருதலை ........ என அழைக்கின்றோம் உயிரியல் மரபு நிலை
41 ஒரு கரு இரட்டையர்கள் ஒரே சூழலில் வளர்ந்தபோது, இவர்களிடையே நுண்ணறிவு ஈவு r = 0.87
42 பியாஜேயின் அறிதல் திறன் வளர்ச்சியின் மூன்றாம் நிலை ....... கண்கூடாக பார்ப்பதை வைத்துச் சிந்தித்து செயல்படும் நிலை
43 உட்காட்சி மூலம் கற்றலை முதன் முதலில் விளக்கியவர் கோலர்
44 தவறு செய்யும் மாணவனை திருத்த ஏற்றது நல்வழி காட்டுதல்
45 நுண்ணறிவு முதிர்ச்சி பொதுவாக முழுமை பெரும் வயது 15-16
46 ஆக்கதிறன் பற்றிய மின்னசோடா சோதனையின் (மொழி மற்றும் மொழியில்லாச் சோதனை) உருப்படிகள் எத்தனை 10
47 அகமுகன், புறமுகன் ஆகியோரது இயல்புகளை விளக்கியவர் யுங்
48 ஆளுமையை அளவிடப் பயன்படும் மிகப் பொருத்தமான முறை சுயசரிதை
49 மிகை நிலை மனம் என்ற நிலை எந்த வயதினருக்கு ஏற்படுகிறது 3-6
50 ஹல்ஸ் என்பவரது கற்றல் கொள்கையினை குறிக்கும் சூத்திரம் யாது SER = DXSHR x K - I
51 மூளையில் ஏற்படும் நினைவிற்கு மிக முக்கிய காரணமாக இயங்கும் வேதிப்பொருள் ஆர்.என்.ஏ.
52 கால வயது 8, மன வயது 7 மற்றும் கால வயது 7, மன வயது 8 உள்ள இவ்விருவரின் நுண்ணறிவு ஈவு யாது? 87.5 & 114.5
53 ஹிலி என்பவர் 1909ஆம் ஆண்டு நிறுவிய குழந்தைகள் உள நல மருத்துவ விடுதி எங்கு அமைந்துள்ளது சிக்காகோ
54 கவனவீச்சு அறிய உதவும் கருவி டாச்சிஸ்டாஸ் கோப்
55 ராபர்ட் காக்னே என்பவரது கூற்றுப்படி கற்றல் என்பது ............படிநிலைகளை கொண்டது 8
56 நினைவின் முக்கிய இரண்டு வகைகள் STM & LTM
57 VIBGYORஎன்பது ................ என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு நினைவு சூத்திரங்கள்
58 புரூஸ் டக்மானின் ஆசிரியர் தர அளவு கோலினைப் பயன்படுத்தி கீழ்க்குறிப்பிடப்பட்டுள்ள எப்பண்பினை ஆசிரியரிடம் அளவீடு செய்யலாம் ஆசிரியரின் நடத்தை மற்றும் ஆக்கப்பண்பு,ஆசிரியரின் பரிவு மற்றும் ஏற்பு,ஆசிரியரின் இயங்கும் பண்பு மற்றும் நடத்தை
59 கற்றலின் முக்கிய காரணி ஒன்று - கவர்ச்சி
60 கற்றல் என்பது - அடைதல், திறன், அறிவு, மனப்பான்மை
61 பிரயாஜெயின் ( (பியாஜே)) கோட்பாடு குழந்தைகளின் - அறிவு வளர்ச்சி பற்றியது
62 தர்க்க ரீதியான சிந்தனை என்பது - ஆராய்தல்
63 கற்றலுக்கு உதவாத காரணி - குழுக் காரணி
64 மொழியில்லா சோதனை - ஆக்கச் சிந்தனை வகை
65 அறிவுசார் கற்றல் அணுகுமுறை அல்லாதது - செய்து கற்றல்
66 குழந்தையை குழந்தையாக கருத வேண்டும் என்று கூறியவர் - ரூசோ
67 தார்ண்டைக்கின் பயிற்சி விதி எதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி கூறுகிறது பரிசு
68 ஒழுக்க வளர்ச்சியை பற்றி கூறிய உளவியல் அறிஞர் - மக்டூகல்
69 நுண்ணறிவு இரு காரணிகளால் ஆனது என கூறிய உளவியல் அறிஞர் - ஸ்பியர் மென்.
70 நாம் கவனம் செலுத்தும் பொருளினின்றும் நம் கவனத்தை வேறு பக்கம் இழுத்து இடையூறு செய்பவை கவனச் சிதைவு
71 புலன் காட்சிகள் அடிப்படை கவனம்
72 நமது மன வாழ்க்கையுடன் எப்போதும் இணைந்து காணப்படுகிறது கவனித்தல்
73 சமூக மனவியல் வல்லுநர் பாவ்லாவ்
74 உளவியல் என்பது மனது பற்றியது என்று கூறியவர் கான்ட்
75 சாதனை ஊக்கக் கொள்கையை விரிவாக்கியவர் மெக்லீலாண்ட்
76 ஒரு கரு இரட்டையர் சோதனை நிகழ்ந்த இடம் எது அயோவா
77 ஒத்த இயல்பு ஒத்த இயல்பினை உருவாக்கும் எனக் கூறியவர் மெண்டல்
78 புகழ்பெற்ற அமலா, கமலா சகோதரிகளின் ஆய்வு எதை வலியுறுத்துகின்றது சூழ்நிலை
79 நடத்தையை உற்று நோக்கல், பதிவு செய்தல், ஆய்வு செய்தல், பொதுமைப் படுத்துதல் போன்ற படிகளைக் கொண்ட உளவியல் முறை உற்று நோக்கல் முறை.
80 தர்ஸ்டனின் நுண்ணறிவுக் கொள்கையில் உள்ள மனத்திறன்களின் எண்ணிக்கை எத்தனை ஏழு
81 அடிப்படை உளத்திறன்கள் கோட்பாடு என்ற நுண்ணறிவுக் கோட்பாட்டினைக் உருவாக்கியவர் எல். தர்ஸ்டன்.
82 பிறந்த குழந்தையின் மனவெழுச்சி வளர்ச்சி எதனுடன் அதிகம் தொடப்புடையது உடல் தேவை
83 ஒரு குழந்தை தான் கண்கூடாகப் பார்த்து, சிந்தித்து செயல்படும் நிலை அறிவு வளர்ச்சித் திறனாகும் என பியாஜே குறிப்பிடுகின்றார். இது அறிவு வளர்ச்சியின் எத்தனையாவது நிலை மூன்றாம் நிலை.
84 சிந்தித்தல், தீர்மானித்தல் போன்ற மனச் செயல்களின் மையமாகத் திகழ்வது பெரு மூளை
85 மன உணர்வுகள் மேலோங்கிய நிலைக்கு என்ன பெயர் மனவெழுச்சி
86 மனச் செயல்களினால் ஏற்படும் மாற்றம் அறிவுத்திறன் வளர்ச்சி.
87 ஆக்க நிலையுத்தல் மூலம் கற்றலை உருவாக்கியது பால்லாவ்
88 கோஹலரால் தனது பரிசோதனையில் பயன்படுத்தப்பட்ட குரங்கின் பெயர் சுல்தான்
89 உட்காட்சி வழிக் கற்றலை உருவாக்கியவர் கோஹலர்
90 ரூஸோ அவர்களால் எழுதப்பட்ட எமிலி புத்தகத்தின் ஒரு பாத்திரம் சோபி
91 சூழ்நிலை பற்றி ஆராய்ந்த மனநிலை ஆய்வாளர் டார்வின்
92 மனவெழுச்சி எழுவதற்கான காரணம் என்ன மனவெழுச்சி நீட்சி
93 குழப்பமான கோட்பாடுடைய புத்தி கூர்மை என்பதைத் தெரிவித்தவர் தார்ண்டைக்
94 தேர்வுகள் எதற்காக என்ற எண்ணம் கொண்டவர் ஏ.எஸ். நீல்
95 முதன்முதலில் ஆர்வத்தின் நிலை என்னும் தத்துவத்தை அறிமுகப்படுத்தியவர் மெக்லிலாண்டு
96 மனநோயை ஹிப்னாடிசம் மூலம் குணப்படுத்தலாம் என்றவர் ஃபிராய்டு
97 மாஸ்லோவின் தேவைகள் படி நிலைகளுள் முதல்படி எதைக் குறிக்கும் அடிப்படைத் தேவைகள்
98 தன் நிறைவு தேவை கொள்கையை எடுத்துரைத்தவர் மாஸ்லோ
99 முன்பருவக் கல்வியுடன் தொடர்பியல்லாதவர் ஜான்டூயி
100 டோரனஸ் என்பவர் தந்துவவாதி.
101 புலன் பயிற்சிக் கல்வி முறையை புகுத்தியவர் மாண்டிசோரி
102 ஒரு நல்ல சமூக அமைப்புக்கான நுண்ணறிவின் பங்கைப் பற்றி ஆராய்வதற்காக உதவும் முறை பரிசோதனை முறை
103 தேர்வு அடைவுச் சோதனையில் நுண்ணறிவின் பங்கைப் பற்றி ஆராய்வதற்காக உதவும் முறை பரிசோதனை முறை
104 பிறப்பிலிருந்து முதுமை வரைக்கும் ஒருவரது கற்றல் அனுபவங்களை விவரிப்பதுதான் கல்வி உளவியல் என்று கூறியவர் ஏ.குரோ, சி.டி.குரோ
105 வாக்கெடுப்பு எந்த உளவியல் முறையின் ஒர் வகை வினாவரிசை முறை
106 இரண்டு குழந்தைகளில் ஒரு குழந்தை நன்கு தூங்கிய குழந்தை, மற்றொன்று தூங்காத குழந்தை இவர்களின் கற்றலை ஒப்பிடுவதற்கு உதவும் முறை கட்டுப்படுத்தப்பட்ட உற்று நோக்கல் முறை
107 நாம் கோபத்தில் இருக்கும்போது நமது முகம் சிவப்பாகிறது, இந்த நடத்தையின் தன்மைகளை அறிய உதவும் முறை அகநோக்கு முறை
108 எவ்விதக் கருவியும் இன்றிப் பிறருடைய நடத்தையை அறிந்துகொள்ள உதவும் முறை போட்டி முறை
109 உளவியல் என்பது மனிதனின் நடத்தை, மனித உறவு முறைகளைப் பற்றியப் படிப்பாகும் எனக் கூறியவர் குரோ, குரோ
110 உளவியல் என்பது ஆன்மா பற்றியது அல்ல என்று கூறியவர் கான்ட்
111 ''உளவியல் என்பது நனவு நிலை பற்றியது'' இதனை வலியுறுத்தியவர் வாட்சன்
112 மனிதனின் புலன் உறுப்புகள் அறிவின் வாயில்கள்
113 புலன்காட்சியை முறைப்படுத்தும் நியதிகள் எத்தனை ஐந்து
114 ஒப்புடைமை விதி என்பது குழுவாக எண்ணுதல்
115 ADOLESENCE என்ற ஆங்கிலச் சொல்லின் அடிப்படைப் பொருள் என்ன வளருதல்
116 பிராட்பென்ட் என்பவரது கோட்பாடு தற்காலச் செய்திக் கோட்பாடுகள்
117 சில சமயங்களில் நமது கவனத்தைக் கவரும் பொருள்களின் தன்மைகளை பொருள்கள் காரணிகள்
118 தொடர்ந்து ஒரு பொருளின் மீது 10 விநாடிகளுக்கு மேல் நாம் கவனம் செலுத்த முடியாது கவன மாற்றம்
119 முதிர்ச்சியடைந்த ஒருவனின் கவனம் 7
120 குமாரப் பருவத்தில் நடத்தையை பெருமளவு நிர்ணயிப்பது ஒப்பார் குழு
121 குழந்தைகளின் இரண்டாம் பிறப்பு எனப்படுவது குமாரப்பருவம்
122 ஸ்கீமா எனப்படுவது முந்தைய அறிவு
123 மனிதன் ஒரு சமூக விலங்கு என்று கூறியவர் அரிஸ்சாட்டில்
124 குழந்தை காதால் கேட்கும் மொழியின் அளவும், தரமும் குழந்தையின் அறிதல் திறன் செயல்பாடுகளுக்கு நேர் விகிதத்தில் இருக்கின்றன என்று கூறியவர் நெஸ் மற்றும் ஷிப்மேன்
125 தனியாள் வேற்றுமைப் பண்புகள் மாறுபடக் காரணம் நாளமில்லாச் சுரப்பிகளின் மாறுபட்ட செயல்கள்
126 தீவிர மனநோய்க்கு எடுத்துக்காட்டு மனச்சிதைவு
127 தன்னையே ஆராயும் முறை என்பது அகநோக்கு முறை
128 உன்னையே நீ அறிந்து கொள் என்று கூறியவர் சாக்ரடீஸ்
129 ஒருவனது உள்ளத்தில் உள்ளவற்றை தானே விருப்பு வெறுப்பின்றி ஆராய்ந்து முடிவுக்கு வரும் முறை உற்றுநோக்கல் முறை
130 மாணவனின் முழு வளர்ச்சிக்கு பொறுப்பு ஏற்பது ஆசிரியர்
131 மனிதனின் வளர்ச்சியையும், நடத்தையும் நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிப்பது மரபுநிலையும், சூழ்நிலையும்
132 ஆக்கச் சிந்தனையில் எத்தனை படிகள் உள்ளதாக கிரகாம் வாலஸ் தெரிவித்தார் நான்கு
133 நுண்ணறிவு ஏழு வகையானது என்றவர் வெஸ்ச்லர்
134 பிறக்கும் குழந்தை பெற்றோர்களை ஒத்திருக்கும் ஒத்திருக்கும் விதி
135 ஒத்த இயல்பு ஒத்தியல்பினை உருவாக்கும் என்ற கோட்பாட்டினை கூறியவர் கிரிகோர் மெண்டல்
136 ஒரு தாயின் இரு குழந்தைகளில் ஒருவன் நல்லவனாகவும், ஒருவன் தீயவனாகவும் இருப்பது வேற்றுமுறை விதி.
137 மேதைகள் மேதைகளிடமிருந்து தான் உருவாகின்றனர் என்பதை ஆய்வு செய்தவர் கால்டன்
138 கார்ல் பியர்சன் ஏழு தலைமுறைகளில் ஆராய்ந்த நண்பர்களின் எண்ணிக்கை 1260
139 அறிவு வளர்ச்சிக்கு காரணமாக உள்ளவை சமூகம், வானொலி, தொலைக்காட்சி, ஆசிரியர்
140 அறிதல் திறன் வளர்ச்சிக்கு ஒரு எடுத்துக்காட்டு சிந்தனை
141 ஆரம்பக் கல்வி வயதினர் பின் குழந்தைப் பருவம்
142 ஒப்பர் குழு என்பது சமவயது குழந்தைகள்
143 அகநோக்கு முறையின் ஆய்வுக்களம் என்பது உள்ளம்.
144 உளவியல் கற்காத ஆசிரியர் கற்பிக்கும் போது மாணவர்களின் கற்றலில் ஏற்படுவன பயம் மற்றும் வெறுப்பு, கழிவு, தேக்கம்
145 குழந்தைகளிடம் உயர்வான தன் மதிப்பீட்டை உருவாக்க ஆசிரியர் செய்ய வேண்டியது பாராட்டும், ஊக்கமும்
146 தன்னைப் பற்றி குழந்தை என்ன நினைத்துக் கொண்டிருக்கிறது என்பது தன் தூண்டல்
147 சிக்கலான மனவெழுச்சி பொறாமை
148 மன உணர்வுகள் மேலோங்கி நிற்கும் நிலை மனவெழுச்சி
149 மிகை நிலை மனம் ஏற்படும் வயது 3-6
150 அடிப்படை மனவெழுச்சி சினம்
151 அகநோக்கு முறையின் மூலம் தங்களது நடத்தையினை அளந்தறிய முடியாதவர்கள் மாணவர்கள், மனநிலை குன்றியவர்கள், நெறிபிறழ் நடத்தையுள்ளவர்கள்
152 வாய், நாக்கு, தொண்டை இவைகளில் அசைவுகள் ஏற்படுத்துவது பேசுதல்
153 மொழி வளர்ச்சிக்கு அடிப்படையான திறன்களை வரிசைப்படுத்துக கேட்டல், பேசுதல், படித்தல், எழுதுதல்
154 பியாஜேயின் அறிதல் திறன் வளர்ச்சியில் தொட்டு உணரும் பருவம் எனப்படுவது பிறப்பிலிருந்து 18 மாதம் வரை
155 குழந்தைகள் தன் சமூகத்திலிருந்து எதிர்பார்ப்பது - அன்பும், அரவணைப்பும்.
156 மன உணர்வுகளை வெளிப்படுத்த கற்றுக் கொள்ளும் பருவம் - குமரப்பருவம்
157 வயதின் அடிப்படையில் பல்வேறு படிநிலைகள் அமைவது - ஒழுக்க வளர்ச்சி.
158 குழந்தைகள் எதிர்பார்ப்பது - நிபந்தனையற்ற அன்பு
159 சிறு குழந்தைகள் சமூகவியல்பு பெறுவதற்கு முக்கிய இடம் வகிப்பது - குடும்பம்.
160 குழந்தைகளின் அறிவாற்றலின் வளர்ச்சி குறித்து ஆராய்ச்சி செய்தவர்களில் முக்கியமானவர் - பியாஜே.
161 அறிவு வளர்ச்சியின் நான்காம் நிலை 12 வயதிற்கு மேல் எனப்படும் முறையான செயல் நிலையானது கூறியவர் பியாஜே
162 அக நோக்கி முறை என்பது - மனிதனின் சொந்த அனுபவங்களின் சுய வெளிப்பாடு.
163 அகநோக்கு முறையானது - அகவய தன்மை கொண்டது.
164 மனித நடத்தையை அளந்தறிய பயன்படும் உளவியல் முறைகளில் பிறரால் சரிபார்க்க முடியாத முறை - அகநோக்கு முறை
165 உற்றுநோக்கல் முறையின் முதற்படி - உற்று நோக்குதல்
166 தேசிய கலைத் திட்டம் அறிமுகப்படுத்ப்பட்ட ஆண்டு - 2005
167 மனிதனின் வளர்ச்சியை எத்தனை பருவங்களாக பிரிக்கலாம் - 8
168 சிசுப் பருவம் என்பது - 0-1 ஆண்டுகள்
169 குறுநடைப் பருவம் என்பது - 1- 3 ஆண்டுகள்
170 பள்ளி முன் பருவம் என்பது 3-6 ஆண்டுகள்
171 பள்ளிப்பருவம் என்பது - 6- 10 ஆண்டுகள்
172 குமாரப் பருவம் என்பது - 10-20 ஆண்டுகள்
173 கட்டாய இலவசக் கல்வி வழங்கப்படுவது - 14 ஆண்டுகள் வரை
174 ஒரு குழந்தை வரிசைத் தொடர் கிராமப்படி சிந்திக்கத் தொடங்கும் காலம் - 7-8 ஆண்டுகள்
175 குழந்தைகள் தர்க்க முறை சிந்தனை வளர்ச்சியை எதன் மூலம் ஆரம்பிக்கின்றார்கள் - அனுமானம்
176 குழந்தை இவ்வுலகத்தை புரிந்து கொள்ள உதவுவது - இடைவினை ஆற்றல் மற்றும் உள்ள முதிர்ச்சி
177 குழந்தை வெளியுலகத்தில் இருந்து பிரிந்து தன்னை அடையாளம் கண்டு கொள்வது. தன்னடையாளம்
178 தன்னடையாள உணர்வு ஒவ்வொரு வளர்ச்சி நிலையிலும் மாறுபடுவது என்று கூறியவர் - எரிக்சன்
179 குழந்தைகள் தானே தொடங்கும் திறனை பெறுவது - 4-6 ஆண்டுகளில்
180 உடலால் செய்யும் செயல்கள் - நடத்தல், நீந்துதல்
181 நடத்தையைப் பற்றி ஆராயும் இயல் உளவியல்
182 வெகுநாட்கள் வரை நமது மனச்சுவட்டில் இருப்பவை - பல்புலன் வழிக்கற்றவை
183 பாடம் கற்பித்தலின் முதல் படி - ஆயத்தம்
184 புலன் உணர்வும் பொருளை அறிதலும் சேர்ந்து உருவானது - புலன் காட்சி
185 நினைவு கூர்தலின் முதல் நிலையாக கருதப்படுவது - கற்றல்
186 தவறுகள் செய்யும் மாணவனை திருத்த ஏற்றது - நல்வழி காட்டுவது
187 பெற்றோர், ஆசிரியர்கள் குழந்தைகளுக்கு முன் உதாரணமாகத் திகழ்வது - பின்பற்றிக் கற்றல்
188 செயல் வழிக் கற்றல் என்பது - தொடர் கற்றல்
189 மனிதனின் முதல் செய்தல் - ஆராய்ச்சி
190 இயக்கமுள்ள உள்ளார்ந்த செயல் கற்றல்
191 கருத்தியல் நிலை தோன்றுவது - 10 வயதுக்கு மேல்
192 ஒழுக்க வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பது - பற்றுகள்
193 நல்லொழுக்கத்திற்கான விதைகள் நன்கு ஊன்ற கூடிய நிலை - ஆரம்பக் கல்வி.
194 கற்கும் பொருளுக்கு வளமாக அமைவது - இயற்கை பொருட்கள்
195 வடிவமைப்புக் கோட்பாட்டை உருவாக்கியவர் - டிட்ச்னர் (Edward Bradford Titchener)
196 மானிட உளவியல் Humanistic Psychology - கார்ல் ரோஜர்ஸ், மாஸ்கோ
197 உளவியல் பரிசோசனைகள் - வெபர் (E.H.Weber)
198 உள இயற்பியல் (PSYCHOPHYSICS) - ஃபெச்சனர் (Gustav.T.Fechner)
199 முதல் உளவியல் ஆயாவகத்தை உருவாக்கியவர் - வல்கம் வுண்ட் Wilhelm Wundt
200 தனியாள் வேறுபாடுகளை அளவிட்டவர் - சர். பிரான்ஸிஸ் கால்டன், ஆர்.பி.காட்டல்
201 மருத்துவ உளவியல் முறைகள் - மெஸ்மர்
202 அறிதல் திறன் வளர்ச்சிக் கோட்பாடு (Congnitive Development) பியாஜே Jean Piaget, புரூணர் Jerome S.Bruner.
203 நுண்ணறிவுச் சோதனைகள் - பினே Alfred Binet, சைமன் Theodore Simon
204 கருவிசார் (அ) செயல்பாடு ஆக்காநிலையிறுத்தக் கற்றல் - ஸ்கின்னர் (B.F.Skinner)
205 மறைமுக அறிவுரைப் பகர்தல் (நெறி சாரா அறிவுரைப் பகர்தல் - கார்ல் ரோஜர்ஸ் (Carl .R. Rogers)
206 சமரச அறிவுரைப் பகர்தல் - F.C. தார்ன் F.C.Thorne
207 முழுமைக்காட்சிக் கோட்பாடு - கெஸ்டால்ட் Gestalt. இது ஒரு ஜெர்மன் சொல் உளவியல் அறிஞர் பெயர் அல்ல. கெஸ்டால்ட் Gestalt.
208 ஆக்க நிலையிறுத்தக் கற்றல் - பாவ்லவ் Irvan petrovich Pavlov பாவ்லவ் Irvan petrovich Pavlov
209 முயன்று தவறிக் கற்றல் - தார்ண்டைக்
210 நடத்தையியல் (Behaviourism) - வாட்சன், டோல்மன், ஸ்கின்னர், ஹப்
211 உந்தக் குறைப்புக் கற்றல் கோட்பாடு - ஹல்
212 உட்காட்சி மூலம் கற்றல் - கோலர்
213 நுண்ணறிவுச் சோதனையின் தந்தை - ஆல்பிரட் பீனே
214 நுண்ணறிவுச் கட்டமைப்பு கோட்பாடு - ஜே.பி.கில்போர்டு
215 நுண்ணறிவு படிநிலைக் கோட்பாடு - ஸிரில் பர்ட் - வெர்னன்
216 நுண்ணறிவு பலகாரணிக் கொள்கை - தார்ண்டைக்
217 நுண்ணறிவு குழுகைரணிக் கொள்கை - எல்.எல்.தார்ஸ்டன்
218 நுண்ணறிவு இரு காரணிக் கொள்கை - ஸ்பியர்மென் (Charles Spearman)
219 இயல்பூக்கக் கொள்கை - வில்லியம் மக்டூகல், வில்லியம் ஜேம்ஸ்
220 குறிக்கோள் கோட்பாடு - பாக்லி W.C.Bagley
221 பொதுமைப் படுத்தல் கோட்பாடு - ஜட்
222 ஒத்தக்கூறு (அ) ஒத்த குணங்கள் கோட்பாடு - தார்ண்டைக்
223 மறத்தல் சோதனை - எபிங்காஸ் - H.Ebbinhaus
224 மறத்தல் கோட்பாடு - பார்ட்லட்
225 அடைவூக்கம் டேவிட் மெக்லிலெண்ட்
226 படிநிலைக் கற்றல் கோட்பாடு - காக்னே
227 களக்கோட்பாடுக் கற்றல் கொள்கை - குர்த் லெவின்
228 அவாவு நிலை அல்லது விருப்ப அளவு - டெம்போ (Dembo)
229 பார்வைத் திரிபுக் காட்சி - முல்லர், லயர்
230 முதன்மைக் கற்றல் விதிகள் - தார்ண்டைக்
231 நவீன உளவியலின் தந்தை - பிராய்டு
232 குமரப்பருவத்தினரின் பிரச்சனைகள் - ஸ்டான்லி ஹால்
233 கட்டுப்பாடற்ற இணைத்தறிச் சோதனை - யூங்
234 பொருளறிவோடு இணைத்தறிச் சோதனை - முர்ரே - மார்கன்.
235 மைத்தடச் சோதனை - ஹெர்மான் ரோர்சாக்
236 பகுப்பு உளவியல் - கார்ல் ஜி யூங்
237 தனி நபர் உளவியல் - ஆட்லர்
238 உளப்பகுப்புக் கோட்பாடு - சிக்மண்ட் பிராய்ட்
239 வளர்ச்சி ஆளுமைக் கொள்கை - சிக்மண்ட் பிராய்டு, ஆட்லர், யூங்
240 வகைப்பாடு - அடிப்படைக் கூறு ஆளுமைக் கொள்கை - ஐசன்க்(H.J.Eysenck)
241 அடிப்படைக் கூறு ஆளுமைக் கொள்கை - G.W.ஆல்போர்ட் , R.B.காட்டல்
242 வகைப்பாடு ஆளுமை கொள்கை - ஹிப்போக்ரைட்ஸ், கிரெட்சுமர், ஷெல்டன்.
243 மனப்பாண்மை அளவிடும் முறையை உருவாக்கியவர்கள் - தர்ஸ்டன், லிக்கர்ட்
244 தொழில் ஆர்வ மனப்பான்மை அளவுகோலை உருவாக்கியவர் - பிரெஸ்ஸி
245 தொழில் ஆர்வ பட்டியலை உருவாக்கியவர் - ஸ்டிராங்
246 தொழில் ஆர்வ வரிசைப் பதிவேட்டை உருவாக்கியவர் - கூடர் (G.F.Kuder)
247 இயல்பூக்கக் கொள்கை - வில்லியம் மக்டூகல், வில்லியம் ஜேம்ஸ்
248 படிநிலைத் தேவைகள் கோட்பாடு - மாஸ்லோ
249 அடவூக்கம் - டேவிட் மெக்லிலெண்ட்
250 மறத்தல் கோட்பாடு - பார்ட்லட்
251 மறத்தல் சோதனை - எபிங்காஸ்
252 ஒத்தக்கூறு (அ) ஒத்த குணங்கள் கோட்பாடு - தார்ண்டைக்
253 பொதுமைப் படுத்துதல் கோட்பாடு - ஜட்
254 குறிக்கோள் கோட்பாடு - பாக்லி
255 படிநிலைக் கற்றல் கோட்பாடு - காக்னே
256 குமரப் பருவனத்தினரின் பிரச்சனைகள் - ஸ்டான்லி ஹால்
257 நவீன உளவியலின் தந்தை - பிராய்டு
258 முதன்மைக் கற்றல் விதிகள் - தார்ண்டைக்
259 அவாவு நிலை அல்லது விருப்ப அளவு - டெம்போ
260 களக்கோட்பாடுக் கற்றல் கொள்கை - குர்த் லெவின்
261 ஒழுக்கம் சார்ந்த சார்பு நோக்கத்தை அடைய தேவையான வயது - 11-12
262 ஒரு கரு இரட்டையர் சோதனை நிகழ்ந்த இடம் எது? - அயோவா
263 உளவியல் என்பது மனிதனின் நடத்தை, நடத்தையின் காரணங்கள், நிபந்தனைகள் ஆகியவற்றைப் பற்றிப் படிப்பதாகும் எனக் கூறியவர் - மக்டூகல்
264 தற்கால உளவியல் கோட்பாடு என்ன? - மனிதனின் நடத்தைக் கோலங்கள் பற்றியதாகும்.
265 உளவியல் என்பது மனிதனின் நனவற்ற நிலையே எனக் கூறியவர் - சிக்மண்ட் பிராய்டு.
266 உளவியல் என்பது மன அறிவியல் அல்ல என்று கூறியவர் - வாட்சன்.
267 பண்டைக் காலத்தில் உளவியல் என்ற சொல்லின் பொருள் - ஆன்மா.
268 பண்டைக் காலத்தில் ஒருவரது நடத்தைகளை அறிந்து கொள்ள நம்பகமான முறை- அகநோக்குமுறை.
269 மாணவர்களின் கற்றல் அடைவுகளை அறிந்துகொள்ள நம்பகமான முறை - மதிப்பீட்டு முறை
270 வகுப்பில் மாணவர்களின் நடத்தைகளை அறிந்து கொள்ள நம்பகமான முறை - உற்று நோக்கல் முறை
271 உயிரினங்களின் நடத்தைகளை அறிந்து கொள்ள நம்பகமான முறை - பரிசோதனை முறை
272 அறிவு வளர்ச்சிக்குக் காரணமாக இருப்பது - மரபு + சூழ்நிலை
273 கோபம், மகிழ்ச்சி, கவலை, பயம் இவை எதனால் செய்யப்படும் செயல்கள் - மனவெழுச்சி வளர்ச்சி.
274 சிந்தித்தல், கற்பனை போன்றவை எதனால் செய்யப்படும் செயல்கள் - அறிவுத் திறனால்.
275 உடலால் செய்யப்படும் செயல்கள் எது? - நீந்துதல்.
276 அறிதல் திறன் வளர்ச்சிக் கொள்கையை உருவாக்கியவர் - பியாஜே
277 மரபின் முக்கியத்துவம் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்டவர் யார? - கால்டன்.
278 வாழ்க்கையில் சிற்ப்பாக வெற்றி பெறுவதற்கு உதவும் உளவியல் காரணி எது? - நுண்ணறிவு.
279 கற்றல் - கற்பித்தல் நிகழ்வுகளை விவரிக்கும் உளவியல் பிரிவு கல்வி உளவியல்
280 பிறரைப் பற்றி அறிந்துகொள்ளப் பயன்படும் உளவியல் முறை - அகநோக்கு முறை.
281 தர்க்கவியல் எந்த இயலின் ஒரு பகுதியாகும் - மெய்விளக்கவியல்.
282 உன்னையே நீ அறிவாய்' எனக் கூறியவர் - சாக்ரடீஸ்
283 உற்றுநோக்கலின் படிகள் - ஏழு
284 உற்றுநோக்கலின் இறுதிப்படி - நடத்திய ஆய்வு செய்தல்
285 வாழ்க்கைச் சம்பவத் துணுக்கு முறை எந்த முறையுடன் அதிக தொடர்புடையது? - உற்று நோக்கல் முறை.
286 மனிதன் சிந்தனை செய்வதன் வாயிலாக பல வாழ்வியல் உண்மைகளைக் கண்டுபிடிக்க முடியும் என்று கூறுவது - தர்க்கவியல்
287 அனிச்சைச் செயல்கள் நிறைந்த பருவம் - தொட்டுணரும் பருவம்.
288 குற்றம் புரியும் இயல்பு பரம்பரைப் பண்பாகும் எனக் கூறியவர் - கார்ல் பியர்சன்
289 அடலசன்ஸ் எனப்படும் சொல் எந்தமொழிச் சொல் - இலத்தீன் மொழிச் சொல்
290 குரோமோசோம்களில் காணப்படுவது - ஜீன்ஸ்
291 குழந்தைகளை நல்ல சூழலில் வளர்க்கும்போது நுண்ணறிவு ஈவு கூடியது எனக் கூறியவர் - லிப்டன்
292 திரிபுக் காட்சி அல்லது தவறான புலன்காட்சி ஏற்படுத்துவதற்குக் காரணம் - சூழ்நிலை
293 ஒருவர் புளிய மரத்தின் மீது பேய்கள் நடமாடுவது போன்று எண்ணுதல் - இல்பொருள் காட்சி
294 புலன்காட்சிவழி முதலில் தோற்றுவித்த ஒருபொருள் அன்றியே அப்பொருள் பற்றிய உணர்தலை ....... என்கிறோம். மனபிம்பம்
295 பொதுமைக் கருத்து என்பதின் பொருள் என்ன - புத்தகம்.
296 புருனரின் பொதுமைக் கருத்து உருவாகும் படிநிலைக் கோட்பாட்டு நிலைகள் எத்தனை - மூன்று நிலைகள்.
297 ஜீன் பிலாஹே என்பவர் எந்த நாட்டு அறிஞர் - சுவிட்சர்லாந்து
298 புலன்களின்றும் மறைக்கப்பட்டவை, மறக்கப்படுகின்றன. பிறந்து 10 மாதங்கள் சென்றபின் - பொருள்களின் நிலைத்தனமை பற்றி குழந்தை அறிகிறது.
299 குழந்தைகளின் மொழி வளர்ச்சி தங்கள் தேவைகளை பிறருக்குத் தெரிவிக்க - பேச்சுக்கு முந்தைய நிலை
300 கற்பனை பிம்பங்கள் அல்லது சாயல்களின் துணைக்கொண்டு திகழும் சிந்தனை - கற்பனை
301 ஒருவன் புலன்காட்சி வழியே அறிந்த ஒன்றன் பிரதியாக இருப்பின் யாது? - மீள் ஆக்கக் கற்பனை.
302 நம் கற்பனையில் உதவி கொண்டு நாமே ஒரு சிறுகதை அல்லது கவிதையைப் படைத்தாலோ அது - படைப்புக்கற்பனை.
303 ஒர் இலக்கை அடைய முயலும் ஒருவனுக்கு அவ்விலக்கை அடைய முடியாதபடி அவனுக்கெதிரே சில தடைகள் குறுக்கிடுமானால் அது - பிரச்சனை
304 எரிக்கன் சமூகவியல்பு வளர்ச்சிப் படிநிலைகள் - எட்டு.
305 கற்றலின் முக்கிய காரணிகளில் ஒன்று - கவர்ச்சி
306 வெகுநாட்களாக நமது நினைவில் இருப்பவை - பல்புலன் வழிக்கற்றல்.
307 தர்க்கவியல் Logic எந்த இயலின் ஒரு பகுதியாகும் - உளவியல்
308 கற்றல் - கற்பித்தல் நிகழ்வுகளை விவரிக்கும் உளவியல் பிரிவு - கல்வி உளவியல்
309 உளவியல் என்பது - மனித நடத்தையை ஆராயும் அறிவியல்.
310 உற்று நோக்கலின் படி - நான்கு
311 லாகஸ் என்பது - ஆராய்தலைக் குறிக்கும் சொல்.
312 சைக்கி என்பது - உயிரைக் குறிக்கும் சொல்
313 சைக்காலஜி (PSYCHOLOGY) எனும் சொல் எந்த மொழிச் சொல் - கிரேக்க மொழிச் சொல்.
314 உற்றுநோக்கலின் இறுதிப்படி - நடத்தையைப் பொதுமைப் படுத்துதல்
315 கல்வி உளவியலின் பரப்பெல்லைகள் - மாணவர், கற்றல் அனுபவம், கற்றல் முறை, கற்ரல் சூழ்நிலை.
316 பரிசோதனை முறைக்கு வேறுபெயர் - கட்டுப்பாட்டுக்குட்பட்ட உற்று நோக்கல்.
317 மாணவர்களின் கற்ரல் அடைவுகளை அறிந்துகொள்ள நம்பகமான முறை - தேர்ச்சி முறை
318 வாழ்க்கைச் சம்பவத்துணுக்கு முறை எந்த முறையுடன் அதிகத் தொடர்புடையது - உற்றுநோக்கல் முறை.
319 கல்விநிலையங்களில் மாணவர்கலின் நடத்தையைப் பற்றி அறிந்து கொள்வதற்கு உதவும் மிக முக்கியமானப் பதிவேடு - திறன் பதிவேடு.
320 அண்டம் (சினை முட்டை) விந்தணுவைப் போன்று எத்தனை மடங்கு பெரியது - 8500 மடங்கு.
321 அனிச்சை செயல் எந்த வயது வரை நடைபெறும் - பிறப்பு முதல் 18 மாதங்கள் வரை.
322 மழலைப் பேச்சு எந்த வயது வரை இருக்கும் - 4-5 வயதுவரை
323 எந்தக் குழந்தைகள் 2-6 வயதுவரை தொடர்ந்து பேசுவது இல்லை - திக்கி பேசும் குழந்தைகள்.
324 எது மனப்பிறழ்வுகளுக்கு வழி வகுப்பதில்லை - அடக்கி வைத்தல்.
325 குழப்பம், கூச்சம், பொறாமை, தற்பெருமை, குற்ற உணர்வு போன்ற உணர்வுகளை எவ்வாறு அழைக்கலாம் - சிக்கலான மனவெழுச்சிகள்.
326 மரபின் தாக்கம் எப்போது தெரிகிறது - பிறப்பின்போது.
327 சூழ்நிலையின் தாக்கம் எப்போது தெரிகிறது - வளரும்போது.
328 உடல் பெருக்கம் என்பது - உடலின் எடையும் உயரமும் அதிகரித்தல்.
329 உடல் உறுப்புகள் தாமகவே வளர்ந்து பக்குவமடைவதற்கு என்ன பெயர் - முதிர்ச்சி.
330 வளர்ச்சிநிலை எந்த வயதில் ஒரு திரளாக உடல் பெருகுகிறது - 6வது வயதில்
331 பிறக்கும் பொழுது குழந்தையின் சராசரி எடை - 3.0 கிலோ
332 முன்பருவ கல்வி வயது என்பது - 3 - 5 வயது.
333 மனித வாழ்க்கையின் காலகட்டத்தின் முதல் வளர்ச்சிசார் பருவம் - குழவிப் பருவம்.
334 தலைமுறை இடைவெளி' எந்தப்பருவனத்தினருக்குரிய பிரச்சனையாகும் - பின் குமரப்பருவம்.
335 குமரப் பருவம் புயலும், அலையும் நிறைந்த பருவம் எனக் கூறியவர் - ஸ்டான்லி ஹால்
336 தனிமனித வேறுபாட்டின் முக்கிய காரணிகள் - மரபு, சூழ்நிலைகள்.
337 எந்த வயதில் ஒர் குழந்தையானது பாட்டி மற்றும் அம்மா இவர்களிடையே வேறுபாடு காண்கிறது - 12வது மாதத்தில்.
338 வளர்ச்சி நிலையில் மிக முக்கியமான பருவம் …………..ஏனெனில் மனக்குமறலும் கொந்தளிப்பும் நிறைந்த பருவம். குமரப் பருவம்.
339 மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை நிகழும் வளர்ச்சிக்கும் நடத்தைக்கும் காரணமாக அமைவது - சூழ்நிலை.
340 பிறந்த பெண் குழந்தைக்கு நாடித்துடிப்பு எண்ணிக்கை எவ்வுளவு - 144
341 பிறந்த ஆண் குழந்தைக்கு நாடித்துடிப்பு எண்ணிக்கை எவ்வுளவு - 130
342 மூன்று வயதில் ஆண் குழந்தைக்கு நாடித் துடிப்பு - 95
343 மூன்று வயதில் பெண் குழந்தைக்கு நாடித்துடிப்பு - 90
344 உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் எந்தப் பருவத்தினர் - முன் குமரப் பருவம்.
345 கல்லூரிக் கல்வி கற்பவர்கள் எந்தப் பருவத்தினர் - பின் குமரப் பருவம்.
346 முடியரசுக் கொள்கை என அழைக்கப்படுவது எது - ஒற்றைக் காரணி நுண்ணறிவுக் கோட்பாடு.
347 சிறப்பியலல்பு மாணவர்களை எதன் அடிப்படையில் வகைப்படுத்துகிறோம் - நுண்ணறிவு ஈவு
348 ஒவ்வொரு மனிதனும் தனித்தன்மைப் பெற்று மற்றவர்களிடமிருந்து வேறுபட்டுக் காணப்படுவதற்குப் பெயர் - தனியாள் வேற்றுமை
349 தொடர்ச்சியாக ஏற்படும் மாற்றங்கள் ஒழுங்கான முறையில் முதிர்ச்சியை நோக்கி ஏற்படும் மாற்றங்கள் என்று கூறியவர் - ஹார்லாக்
350 ஜூக்ஸ் குடும்பங்களை ஆராய்ச்சி செய்தவர் - டக்டேல்.
351 காலிகொக் குடும்பங்களை ஆராய்ச்சி செய்தவர் - கட்டார்டு
352 பியாஜேயின் அறிதல் திறன் வளர்ச்சிக் கோட்பாட்டினை எந்த உளவியல் அறிஞரின் அறிதல் திறன் வளர்ச்சி கோட்பாட்டுடன் ஒப்பிடலாம் - பூரூணர்
353 சூழ்நிலைக்கு மற்றொரு பெயர் - செயற்கை.
354 மரபுக்கு மற்றொரு பெயர் - இயற்கை
355 பிறவிலேயே தோன்றும் மனவெழுச்சி - அச்சம்.
356 குமரப் பருவம் மனித வாழ்க்கையில் ஆரம்ப நிலையின் தொகுப்பு ஆகும் - ராஸ்
357 ஏன்? ஏதற்கு? எப்படி? என்ற கேள்விகள் எந்தப் பருவத்தில் ஏற்படுகின்றன - குழவிப் பருவம்.
358 ஒர் குழந்தை தன் தாயை எத்தனை மாதங்களுக்கு பின்னர் அடையாளம் கண்டு சிரிக்கும் - 3 - 4 மாதங்கள்.
359 பொதுவாக ஆண் குழந்தை பெண் குழந்தையை விட சற்று உயரமாகவும், கனமா?

கனரா வங்கியில் சிறப்பு அதிகாரி பணி

பொதுத்துறை வங்கிகளில் பெங்களூருவைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் கனரா வங்கிக்கு நாடு முழுவதும் கிளைகள் உள்ளது.
நவீன வங்கிச் சேவை, நாடு தழுவிய கிளைகள் என்று பிரசித்தி பெற்ற கனரா வங்கியில் ஸ்பெஷலிஸ்ட் அதிகாரிகள் பிரிவில் காலியாக உள்ள 101 இடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணியின் பெயர்கள்:

சர்டிபைடு எதிகல் ஹாக்கர்ஸ் பிரிவில் 2,சைபர் பாரன்சிக் அனலிஸ்டில் 2,அப்ளிகேஷன் செக்யூரிடி டிஸ்டம்சில் 4,மேனேஜர் (சி.ஏ.,)வில் 27,மேனேஜர் (பினான்ஸ்) பிரிவில் 5,டேடா அனலிடிக்ஸ் மேனேஜரில் 4,பினான்ஸ் அனலிஸ்டில் 3,எகனாமிஸ்டில் 2,அப்ளிகேஷன்/வெப் செக்யூரிடி பெர்சானல் இன்பர்மேஷன் செக்யூரிடி அட்மினிஸ்ட்ரேடரில் தலா 1,பிஸினஸ் அனலிஸ்ட் டேடா வேர்ஹவுஸ் ஸ்பெஷலிஸ்டில் இ.டி.எல்., ஸ்பெஷலிஸ்ட்பி.ஐ., ஸ்பெஷலிஸ்டில் டேடா மைனிங் எக்ஸ்பர்டில் 2,செக்யூரிடி மேனேஜரில் 19,மேனேஜர் (பினான்ஸ்) பிரிவில் 11,சீனியர் மேனேஜர் (பினான்ஸ்)-2 

கல்வித் தகுதி: விண்ணப்பிக்கும் பிரிவைப் பொறுத்து கல்வித் தகுதி மற்றும் அனுபவம் தேவை. விபரங்களை அறிய இணையதளத்தைப் பார்க்கவும்.


தேர்வுசெய்யும் முறை: எழுத்துத் தேர்வு, குழுவிவாதம் மற்றும் நேர்காணல் என்ற முறைகளில் தேர்ச்சி இருக்கும்.


விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பங்களை ஆன்லைன் மற்றும் ஆப்லைன் என்ற இரண்டு முறைகளிலும் சமர்ப்பிக்கலாம்.


 விண்ணபிக்க  கடைசி நாள்: 05.04.2017


மேலூம் கூடுதல் விபரங்களுக்கு   https://www.canarabank.in/ என்ற இணையதள முகவரி பார்த்து தெரிந்து கொள்ளவும்.