யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

15/11/15

வீட்டில் இன்வர்ட்டர் உபயோகிக்கிறீர்களா? ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்!

வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது

வீட்டில் தொந்தரவு தரும் எலி, பல்லி, கரப்பான் பூச்சி வராமல் தடுக்க சில வழிகள்!!!

ஈட்டிய விடுப்பு (EL) பற்றிய முழு விளக்கங்கள்:

>தகுதிகாண்பருவத்தில்உள்ளவர்கள் EL எடுத்தால்probation periodதள்ளிப்போகும்.

>பணியில்சேர்ந்து ஒருவருடம்முடிந்ததும் ஈட்டியவிடுப்பினை ஒப்படைத்து பணமாகப்பெறலாம். ஆண், பெண்இருவரும். தகுதிகாண்
பருவம்முடிக்கும்முன்பு (பணியில் சேர்ந்து2வருடங்களுக்குள்)மகப்பேறு விடுப்பு எடுத்தால்அந்த வருடத்திற்கானEL -ஐஒப்படைக்க முடியாது. ELநாட்கள் மகப்பேறு விடுப்புடன்சேர்த்துக்கொள்ளப்படும்.(உதாரணமாக - அவரதுகணக்கில் 10 நாட்கள் EL உள்ளது என்றால் மகப்பேறுவிடுப்பில் அந்த 10 நாட்களை கழித்துவிட்டு (180-10=170) மீதம் உள்ள170 நாட்கள் மட்டுமே வழங்கப்படும்.எனவே மகப்பேறுவிடுப்பு எடுக்கும்முன்பே கணக்கில்உள்ள EL-ஐஎடுத்துவிடுவது பயனளிக்கும்)

>வருடத்திற்கு17 நாட்கள் EL.அதில் 15நாட்களை ஒப்படைத்து பணமாகப்பெறலாம்.

>மீதமுள்ள2 நாட்கள்சேர்ந்துகொண்டே வரும்அதை ஓய்வுபெறும்பொழுதுஒப்படைத்து பணமாகப்பெறலாம்.

>21 நாட்கள்ML எடுத்தால்ஒரு நாள் EL கழிக்கப்படும்.

>வருடத்திற்கு மொத்தம் 365நாட்கள்.இதை17ஆல் (EL)வகுத்தால்365/17=21.

>எனவே21 நாட்கள் MLஎடுத்தால் ஒரு நாள் EL என்றகணக்கில்கழிக்கப்படுகிறது.

>மகப்பேறுவிடுப்பு எடுத்தவருடத்தில் ஈட்டிய விடுப்பு ஒப்படைக்கும் பொழுது, மகப்பேறு விடுப்பு எடுத்த 6 மாதங்கள் , மற்றும்ML எடுத்த நாட்கள்தவிர்த்து மீதம்வேலை செய்தநாட்களை 21 ஆல் வகுத்து EL கணக்கிடப்படும்.ML & EL எடுத்தது போகமீதம் உள்ளவேலை செய்தநாட்களுக்கு மட்டுமே EL கணக்கிடப்படும்.(CL & RH கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது)

>ஒருநாள் மட்டும்ELதேவைப்படின்எடுத்துக்கொள்ளலாம்.

>அரசுஊழியர்களுக்கு மட்டும்வருடத்திற்கு 30 நாட்கள்EL(ஆசிரியர்களுக்கு 17 நாட்கள்மட்டுமே). அதில் 15நாட்களை ஒப்படைக்கலாம்.மீதம்உள்ள 15 நாட்கள்சேர்ந்துகொண்டேவரும்..அதிகபட்சமாக240 நாட்களைச்சேர்த்து வைத்து ஒப்படைக்கலாம்.அதற்கு மேல்சேருபவைஎந்தவிதத்திலும்பயனில்லை.

மாறுதல் / பதவி உயர்வு/⚡பணியிறக்கம்/ நிரவல் போன்றநிகழ்வுகளின்போது பழையஇடத்திற்கும்புதியஇடத்திற்குமிடையே குறைந்தது 8கி.மீ (ரேடியஸ்) இருந்தால்அனுபவிக்காதபணியேற்பிடைக்காலம்ELகணக்கில் சேர்த்துக்கொள்ளப்படும். இதற்கு30நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 90 நாட்களுக்குள் கணக்கில்சேர்க்கப்பட வேண்டும். (குறைந்தது 5நாட்கள். 160 கி.மீக்கு மேற்படின்அட்டவணைப்படிநாட்களின்எண்ணிக்கை அதிகரிக்கும்)

>ஒருமுறைசரண்டர் செய்தஅதேதேதியில் தான்ஆண்டுதோறும்செய்யவேண்டும் என்ற கட்டாயம்இல்லை.கணக்கீட்டிற்கு வசதியாகஇருக்கவும்Pay Rollல் விவரம்குறிக்க எளிமையாகஅமையவும்ஒரே தேதியில்ஆண்டுதோறும்அல்லதுஇரண்டாண்டுகளுக்கு ஒருமுறை சரண்செய்வதுசிறந்தது.
எவ்வாறாயினும் ஒரு ஒப்படைப்புநாளுக்கும்அடுத்தஒப்படைப்பு நாளுக்குமிடையே 15நாட்கள் ஒப்படைப்பெனில்ஓராண்டு/ 30 நாட்கள்ஒப்படைப்பெனில்இரண்டாண்டு இடைவெளி இருக்கவேண்டும்.

>ஒப்படைப்புநாள் தான்முக்கியமேதவிரவிண்ணப்பிக்கும்தேதியோ,அலுவலர் சேங்க்ஷன்செய்யும்தேதியோ, ECS ஆகும்தேதியோ அடுத்தமுறைஒப்படைப்பு செய்யும்போது குறிக்கப்படவேண்டியதில்லை.

>EL ஒப்படைப்புநாளின்போது குறைந்தஅளவு அகவிலைப்படியும்பின்னர்முன்தேதியிட்டு DAஉயர்த்தப்படும்போது ஒப்படைப்புநாளில்அதிக அகவிலைப்படியும்இருந்தால் DA நிலுவையுடன்சரண்டருக்குரியநிலுவையையும்சேர்த்துசுதந்தரித்துக்கொள்ளலாம். ஊக்க ஊதியம்முன்தேதியிட்டுப்பெற்றாலும்நிலுவைக் கணக்கீட்டுக்காலத்தில்ஒப்படைப்பு தேதி வந்தால்சரண்டர்நிலுவையும் பெறத்தகுதியுண்டு.

>பணிநிறைவு/ இறப்பின்போது இருப்பிலுள்ள ELநாட்களுக்குரிய(அதிகபட்சம்240) அப்போதைய சம்பளம்மற்றும்அகவிலைப்படிவீதத்தில்கணக்கிடப்பட்டு திரள்தொகையாகஒப்பளிக்கப்படும்.


>அதிகபட்சம்தொடர்ந்து 180 நாட்கள் ஈட்டிய விடுப்பு எடுக்கலாம். அதனைத் தொடர்ந்துமருத்துவ விடுப்புஎடுக்கலாம்.180 நாட்களுக்குமேற்பட்ட விடுப்புக்குவீட்டுவாடகைப்படி கிடைக்காது

பொது அறிவு கேள்வி பதில்கள்(1-100)

பொது அறிவு கேள்வி பதில்கள்(1-100)
1.உலக விலங்குகள் தினமாக அழைக்கப்படுவது அக்டோபர் 3-ம் தேதி
2.தேசியக் கவி எனப் போற்றப்பட்டவர் பாரதியார்
3.முத்தமிழ்க்காப்பியம் என்று குறிப்பிடப்படும் நூல் சிலப்பதிகாரம்
4.பாவேந்தர் எனப் போற்றப்படுபவர் பாரதிதாசனார்
5.வள்ளலார் என்று போற்றப்பட்டவர் இராமலிங்க அடிகள்
6.கல்லூரி-பெயர்ச்சொல்லின் வகை தேர்க? இடப்பெயர்
7.பூ பெயர்ச்சொல்லின் வகை தேர்க? சினைப்பெயர்
8.உழுதல் பெயர்ச்சொல்லின் வகை தேர்க? தொழிற்பெயர்
9.மார்கழி-பெயர்ச்சொல்லின் வகை தேர்க? காலப்பெயர்
10.முதுமக்கள்-இலக்கணக்குறிப்பு தருக? பண்புத்தொகை 
11.மாநகர்-இலக்கணக்குறிப்புத் தருக? உரிச்சொல் தொடர்
12.மொழித்தேன் -என்பதன் இலக்கணக் குறிப்பு? உருவகம்
13.வாய்ப்பவளம்- என்பதன் இலக்கணக்குறிப்பு? உருவகம்
14.தாய் உணவை உண்டாள்-இது எவ்வகை வினை? தன்வினை
15.போட்டியில் எல்லாரும் வெற்றி பெற முடியாது- இது எவ்வகை வினை? எதிர்மறை
16.போட்டியில் சிலர்தான் வெற்றி பெற முடியும் -எவ்வகை வாக்கியம்? உடன்பாடு
17.இந்தியாவில் பின்பற்றப்படும் வங்கி வீதம்? கழிவு வீதம்
18.தமிழகத்தில் எந்த மாவட்டம் ஆண்-பெண் விகிதாச்சாரத்தில் முதலிடம் வகிக்கிறது? தூத்துக்குடி
19.அயினி அக்பரி என்ற நூலின் ஆசிரியர் அபுல் ஃபாசல்
20.மிசா சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு 1971
21.உச்சநீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது? 65 வயது
22.இந்திய அரசியல் அமைப்பின் 8வது அட்டவணையில் சேர்க்கப்படாத மொழி யாது? ஆங்கிலம்
23.1944ல் எங்கு நடைபெற்ற மாநாட்டில், நீதிக்கட்சியானது திராவிடர் கழகமாக உருவாக்கப்பட்டது? சேலம்
24.திட்டக்குழுவின் உபதலைவர் எந்த நிலையில் இருப்பார்? காபினெட் மந்திரி அந்தஸ்த்தில் இருப்பார்
25.உலக சுகாதார நிறுவனத்தின் தலைமைச் செயலகம் எங்கு உள்ளது? ஜெனிவா
26.பிற்காலச் சோழர்களின் கடைசி அரசர் யார்? மூன்றாம் ராஜேந்திரன்
27.மனிதன் ஒரு சமூகப்பிராணி-என்பதை யார் கூறியது? அரிஸ்டாடில்
28.நீதிக்கட்சியை நிறுவியவர்களில் ஒருவர் பி.டி.ராஜன்
29.இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்ட நாள் 26 நவம்பர்,1949
30.யூனியன் பிரதேசத்தின் மூலம் லோக்சபாவிற்கு எத்தனை பிரதிநிதிகளை அனுப்புகின்றனர்?20
31.இந்திய ஜனாதிபதி எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப்படுகிறார்? 5 ஆண்டுகள்
32.மக்களவையில் சபாநாயகர் இல்லாத காலத்தில் அவரது பணிகளை மேற்கொள்பவர் யார்? துணை சபாநாயகர்
33.டெல்லியை ஆண்ட முதல் முஸ்லீம் அரசர் யார்? குத்புதின் ஐபெக்
34.தேசிய அருங்காட்சியகம் டெல்லியில் எப்பொழுது ஏற்படுத்தப்பட்டது?1949
35.அற இயல் கற்பிப்பது ஒழுக்கக் கொள்கை
36.அளவையியல் என்பது உயர்நிலை விஞ்ஞானம்
37.இயற்கை கவிதை தத்துவ அறிஞர் ரவிந்திரநாத் தாகூர்
38.ஒருங்கிணைந்த அத்வைதத்தை போதித்தவர் ஸ்ரீஅரவிந்தர்
39.தில்லையில் வாழ்ந்த சமயத்துறவி திருநீலகண்டர்
40.சுதந்திர தொழிலாளர்கள் கட்சியை ஆரம்பித்தவர் அம்பேத்கார்
41.அஜந்தா குகை அமைந்துள்ள மாநிலம் மஹாராஷ்டிரா
42.இந்தியாவில் மிக நீளமான இருப்புப்பாதை கௌஹாத்தி-திருவனந்தபுரம்
43.பெரியார் வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ள மாநிலம் கேரளா
44.இந்தியாவில் முதன்முதலாகக் காப்பி சாகுபடி நடைபெற்ற மாநிலம் கர்நாடகம்
45.1983ல் தொடங்கப்பட்ட பல்கலைக்கழகம் எது? அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்
46.இந்தியாவில் தலசுயஆட்சி தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு எது?1916
47.தமிழக முதல்வர்களில் சத்துணவுத் திட்டத்தை தொடங்கி வைத்தவர் யார்? எம்.ஜி.இராமச்சந்திரன்
48.சென்னைப் பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு எது?1857
49.தமிழ்நாட்டில் விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்ற நிலையம் உள்ள இடம் கோயம்புத்தூர்
50.உடுக்கை இழந்தவன் கை போல என்னும் உவமை மூலம் விளக்கப் பெறும் கருத்து யாது?கையறுநிலை
51.குந்தித் தின்றால் குன்றும் மாளும்-இவ்வுவமை விளக்கும் கருத்தைத் தேர்க? சோம்பல்
52.இளமையில் கல்- எவ்வகை வாக்கியம்? கட்டளை வாக்கியம்
53.மாண்பு பெயர்ச் சொல்லின் வகை அறிக? பண்புப்பெயர்
54.வாழ்க இலக்கணக்குறிப்பு?வியங்கோள் வினைமுற்று
55.தடந்தோள் இலக்கணக்குறிப்பு?உரிச்சொற்றொ
டர்
56.ஆடு கொடி இலக்கணக்குறிப்பு காண்க? வினைத்தொகை
57.முடைந்தவர் இலக்கணக்குறிப்பு? வினையாலணையும் பெயர்
58.வள்ளுவரைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே எனக்கூறியவர் பாரதிதாசன்
59.பதினெட்டு உறுப்புகள் கலந்து வரப் பாடப்படும் நூல் கலம்பகம்
60.தொண்டர் சீர் பரவுவார் எனப் பாராட்டப்படும் சான்றோர்? சேக்கிழார்
61.தமிழ்மறை என அழைக்கப்படும் நூல் திருக்குறள்
62.இந்தியாவில் தொல்லுயிர் தாவரங்களின் ஆராய்ச்சி நிலையம் உள்ள இடம் போபால்
63.மேட்டூர் அணையின் வேறு பெயர் ஸ்டான்லி அணை
64.சுதந்திர இந்தியாவில் முதல் பெண் மாநில கவர்னர் திருமதி சரோஜினி நாயுடு
65.ஒரு குழந்தை ஆணா பெண்ணா என்று நிர்ணயிப்பது? ஒய்-குரோமோசோம்
66.டல்காட் பார்சனின் புகழ்பெற்ற புத்தகம்? சமூக அமைப்பின் கூறுகள்
67.ஆற்காடு நவாபுகளுள் யார் வாலாஜா என அழைக்கப்பட்டார்? தோஸ்த் அலி
68.200 நாட்களுக்கு பனியற்ற நாட்கள் தேவைப்படும் பயிர்? மக்காச் சோளம்
69.உலகின் பரந்த மீன் பிடிக்கும் பகுதி? வடமேற்கு அட்லாண்டிக்
70.பாரதியார் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட ஆண்டு 1982
71.எந்த வட்டமேசை மாநாட்டில் இந்திய தேசிய காங்கிரஸ் கலந்து கொண்டது? இரண்டாவது
72.காந்தியடிகள் சபர்மதி ஆஸ்ரமத்தை துவக்கிய ஆண்டு 1915
73.இரண்டாவது பொதுத் தேர்தல் நடத்தப்பட்ட ஆண்டு 1957
74.தி.மு.கவை நிறுவியவர் யார்? அண்ணாதுரை
75.தமிழ்நாட்டில் இரயத்வாரி முறையைக் கொண்டு வந்தவர் சர் தாமஸ் மன்றோ
76.சிறுகதையின் தந்தை என்று அழைக்கப்படுபவர் புதுமைப்பித்தன்
77.கண்ணதாசன் வெளியிட்ட இதழ்களுள் ஒன்று வானம்பாடி
78.தண்ணீர் தண்ணீர் என்னும் நாடகத்தின் ஆசிரியர் யார்? கோமல் சுவாமிநாதன்
79.ஆனந்த விகடன் வெள்ளிவிழா பரிசு பெற்ற சிறுகதை எது? குளத்தங்கரை அரச மரம்
80.குடிமக்கள் காப்பியம் என்னும் அடைமொழியால் குறிக்கப்பெற்ற நூல் சிலப்பதிகாரம்
81.தாய்சேய் இலக்கணக்குறிப்பறிக? உம்மைத் தொகை
82.மலர்க்காரம் என்னும் சொல்லின் இலக்கண குறிப்பு? உவமைத் தொகை
83.கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற தொடரைக் கூறியவர்? அறிஞர் அண்ணா
84.பரம்பிற் கோமான் என்று அழைக்கப்பெற்றவர் பாரி
85.நல்வழி இலக்கணக்குறிப்பு- பண்புத்தொகை
86.சூரியனின் வெப்பநிலை காண உதவும் விதி ஸ்டீஃபனின் நான்மடி விதி
87.தசைகளில் இரத்த ஓட்டம் நடைபெறுவது இரத்தத்தின் பாகுநிலையால்
88.எக்ஸ்-கதிர்கள் செல்லும் திசைவேகம் எதற்குச் சமம்? ஒளி
89.அதிக அளவில் ஆல்கஹால் உட்கொள்வதால் பாதிக்கப்படும் உறுப்பு கல்லீரல்
90.நைட்ரஜன் அடங்கிய ஒரு பொதுவான உரம் யூரியா
91.பசுமையான உணவு மற்றும் பழங்களில் உள்ள சத்து எது? வைட்டமின்கள்
92.தீப்பெட்டியின் பக்கங்களில் உள்ள பொருள் சிவப்பு பாஸ்பரஸ்
93.பெனிசிலின் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது?அலெக்சாண்டர் ஃப்ளெமிங்
94.பெரும்பாலான பருப்பு வகை தாவரங்கள் உள்ள குடும்பம் பேபேஸி
95.மலேரியா நோயை உண்டாக்குபவை புரோட்டோசோவா
96.அயோடின் குறைபாடு ஏற்படுத்துவது முன்கழுத்துக் கழலை
97.புகையிலையில் உள்ள நச்சுத் தன்மையுள்ள பொருள் நிகோட்டின்
98.சிறுநீரில் வெளியேற்றப்படும் பொருள் கிரியேடின்
99.பாக்டீரியோபேஜ் என்பது பாக்டீரியாவைத் தாக்கி அழிக்கும் ஒரு வைரஸ்
100.கௌதம புத்தர் முதன்முதலில் போதித்த இடம் சாரநாத்

14/11/15

பிளஸ் 2 தனித் தேர்வு: நவம்பர் 16 முதல் விண்ணப்பிக்கலாம்

பிளஸ் 2 தனித் தேர்வு: நவம்பர் 16 முதல் விண்ணப்பிக்கலாம்
      பிளஸ் 2 தனித்தேர்வுக்கு நவம்பர் 16 (திங்கள்கிழமை) முதல் 27 வரை விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் மேலும் கூறியிருப்பதாவது:
     கல்வி மாவட்டம் வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களில், தனித்தேர்வர்கள் நேரில் தங்களது விண்ணப்பத்தைப் பதிவு செய்ய வேண்டும். நேரடித் தனித்தேர்வர்கள் கட்டணமாக ரூ.187, மறுமுறை தேர்வு எழுதுவோர் ஒவ்வொரு பாடத்துக்கும் ரூ.50, இதரக் கட்டணமாக ரூ.35 செலுத்த வேண்டும். அதோடு இணையதளப் பதிவுக் கட்டணமாக ரூ.50 செலுத்த வேண்டும்.
மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பத்தைப் பதிவு செய்த பிறகு, தனித்தேர்வர்களுக்கு ஒப்புகைச் சீட்டு வழங்கப்படும். அதில் குறிப்பிட்டுள்ள விண்ணப்ப எண்ணைப் பயன்படுத்தியே தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளைப் பதிவிறக்கம் செய்ய இயலும். எனவே, இதைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.
சேவை மையங்களின் விவரங்கள், தேர்வர்களுக்கான அறிவுரைகள் ஆகியவற்றை www.tndge.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.
மதிப்பெண், பள்ளி மாற்றுச் சான்றிதழ்களின் நகல்கள், பத்தாம் வகுப்பு அல்லது அதற்குச் சமமான தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் உள்ளிட்டவற்றை தேர்வர்கள் சேவை மையத்துக்கு எடுத்து வர வேண்டும் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

151 பள்ளி கட்டடம் இடிக்க வேலூர் கலெக்டர் உத்தரவு

151 பள்ளி கட்டடம் இடிக்க வேலூர் கலெக்டர் உத்தரவு
           வேலுார் மாவட்டத்தில், பயன்பாட்டில் இல்லாத, 151 பள்ளி கட்டடங்களை இடிக்க, கலெக்டர் நந்தகோபால் உத்தரவிட்டுள்ளார். வேலுார் மாவட்டத்தில், அரசு பள்ளிகளில் உள்ள கட்டடங்கள் இடிந்து விழும் நிலையிலும், பாழடைந்தும் காணப்படுகின்றன. கட்டடங்களின் மேற்கூரைகள் இடிந்து பல மாணவர்கள் காயமடைந்தனர். எனவே, பழுதடைந்த கட்டடங்களை அடையாளம் காணும் பணி நடந்தது.

           வேலுார் மாவட்டத்தில், 743 பஞ்சாயத்துகளில், அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பயன்பாட்டிற்கு இல்லாத, 151 பாழடைந்த பள்ளி கட்டடங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. பள்ளி கட்டடங்களை இடிக்க, ஊரக வளர்ச்சி துறையினர், கலெக்டருக்கு பரிந்துரை செய்தனர். பரிந்துரையை ஏற்ற கலெக்டர் நந்தகோபால், அரசின் அனுமதி பெற்று, பாழடைந்த பள்ளி கட்டடங்களை இடிக்க உத்தரவிட்டார்

கல்வியியல் கல்லூரி பல இருந்தும் திறமையான ஆசிரியர் இல்லையே: NCERT மண்டல இயக்குனர் வேதனை

கல்வியியல் கல்லூரி பல இருந்தும் திறமையான ஆசிரியர் இல்லையே: NCERT மண்டல இயக்குனர் வேதனை
       'தமிழகத்தில் கல்வியியல் கல்லுாரிகள் பல இருந்தும் திறமையான ஆசிரியர்கள் உருவாவதில்லையே' என, என்.சி.இ.ஆர்.டி., மண்டல இயக்குனர் வேதனை தெரிவித்தார்.காந்தி கிராம பல்கலை கல்வியியல்துறை, தேசிய தேர்வு சேவை மையம் இணைந்து நடத்திய 'தேர்வு முறையில் சீர்திருத்தங்கள்' என்ற தேசிய கருத்தரங்கு நேற்று துவங்கியது.
         தேசிய தேர்வு சேவை மைய தலைவர் பாலகுமார் முன்னிலை வகித்தார். பல்கலை பதிவாளர் பாலசுப்ரமணியம் தலைமை வகித்து பேசுகையில், “கற்றல் திறன் குறைபாடுகளால் ஐ.ஐ.டி., போன்ற கல்வி நிறுவனங்களில் தமிழக மாணவர்கள் 4.6 சதவீதமே படிக்கின்றனர். ஆந்திரா, உ.பி., ம.பி., பீஹார் மாநிலத்தவர் அதிகம் படிக்கின்றனர். தமிழக மாணவர்கள் நுழைவதற்கு மனப்பாட முறையே தடையாக உள்ளது”, என்றார்.
திரும்ப திரும்ப தேர்வுதேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன (என்.சி.இ.ஆர்.டி.,) மைசூர் மண்டல இயக்குனர் ராவ் பேசியதாவது: பாடத்திட்டம், கற்பித்தல், தேர்வு முறைகள், மதிப்பிடுதல் தொடர்பாக ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சிகள் வழங்க வேண்டும். ஒருங்கிணைந்த தேர்வு முறைகள் உருவாக்கப்பட வேண்டும். பாடம் குறித்த புரிதல் ஏற்படும் வரை திரும்ப திரும்ப மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்த வேண்டும்.
பள்ளிகளில் மாணவர்களுக்கு அறிவியல் சோதனை முறைகள், ஆய்வுக்கூடங்களில் கற்றுத்தரப்படுவது இல்லை. இது எதிர்காலத்தில் மாணவர்களின் கண்டுபிடிப்புத் திறனை பாதிக்கும்.
இசை, நடனம், ஓவியம், நடிப்பு சார்ந்த தனித்திறன்களை மதிப்பிடப்பட வேண்டும். அப்பொழுதுதான் மாணவர்களுக்கு கற்றலில் உற்சாகம் பிறக்கும். தமிழகத்தில் ஆசிரியர்களை உருவாக்கும் கல்வியியல் கல்லுாரிகள் நிறைந்துள்ளன. ஆனால் அங்கிருந்து திறமையான ஆசிரியர்கள் வெளியேறுவது இல்லை. ஆசிரியர்களின் சிறந்த கற்பித்தல் முறைகளே தேர்ந்த மாணவர்களை உருவாக்கும், என்றார். கருத்தரங்க ஏற்பாடுகளை துறைத்தலைவர் ஜாகிதாபேகம், உதவிப் பேராசிரியர் முருகன் செய்திருந்தனர்.

10 ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ்பாடம் கட்டாயம் - கூட்டுத்தொகையிலும் மாற்றம்

10 ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ்பாடம் கட்டாயம் - கூட்டுத்தொகையிலும் மாற்றம்
           இக்கல்வி ஆண்டு முதல், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு பகுதி- 1ல் தமிழ் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளதால், பிறமொழிப்பாடங்களின் மதிப்பெண், கூட்டுத்தொகையில் சேர்க்கப்படாது.தமிழகத்தில் தமிழ் கற்பிக்கும் சட்டம் 2006ல் அமலுக்கு வந்தது. 2006-- 07 கல்வி ஆண்டில் ௧ம் வகுப்பு மாணவர்களுக்கு, தமிழ் முதல் மொழிப்பாடமாக கற்பிக்கப்பட்டது. 
         பின் அடுத்தடுத்த வகுப்புகளுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டது.தமிழ் கட்டாயம்அதன்படி, இக்கல்வி ஆண்டில் (2015-16) பத்தாம் வகுப்புக்கு கட்டாயம் ஆக்கப்பட்டது. மார்ச்சில் நடக்க உள்ள பொதுத்தேர்வில் பகுதி-1ல் முதல் மொழிப்பாடமாக தமிழை எழுத வேண்டும்.
கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:கடந்த கல்வி ஆண்டு வரை பத்தாம் வகுப்பில் கன்னியாகுமரி, கோவை, நீலகிரி, திருவள்ளூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட எல்லையோர மாவட்டங்களில் இந்தி, உருது, மலையாளம், தெலுங்கு, கன்னடம், சமஸ்கிருதம், பிரஞ்சு ஆகிய மொழிப்பாடங்களை பகுதி-1ல் மாணவர்கள் எழுதிவந்தனர். ஆனால் இக்கல்வி ஆண்டில் பகுதி-1ல் தமிழ் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. 
கூட்டுத்தொகைபகுதி- 2ல் ஆங்கிலம், பகுதி- 3ல் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்குப்பின், பகுதி- 4ல் இதர மொழிப்பாடங்களுக்கான தேர்வு எழுத உள்ளனர். அவர்களின் மதிப்பெண் பட்டியலில் மொழிப்பாடங்களுக்கான மதிப்பெண் இருக்கும். ஆனால் கூட்டுத்தொகையில் சேர்க்கப்படாது. இக்கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ.,- ஐ.சி.எஸ்.இ., பாடத்திட்டத்திலும் ௧ம் வகுப்பில் தமிழ் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது, என்றார்.

டீ குடிப்பது கேன்சரை தடுக்கும்; இந்திய தேயிலை சங்க கருத்தரங்கில் அமெரிக்க ஆராய்ச்சியாளர் தகவல்:

டீ குடிப்பது கேன்சரை தடுக்கும்; இந்திய தேயிலை சங்க கருத்தரங்கில் அமெரிக்க ஆராய்ச்சியாளர் தகவல்:
கருப்பு மற்றும் கிரீன் டீயை அருந்துவதால் புற்றுநோய் அபாயத்தை தடுக்கலாம் என அமெரிக்காவின் விஸ்கான்சின் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் ஹசன் முக்தார் தெரிவித்தார்.
இந்திய தேயிலை சங்கம் சார்பில் கொல்கத்தாவில் நடந்த கருத்தரங்கில் கலந்து கொண்ட அவர் இதுகுறித்து வெளியிட்ட பயனுள்ள தகவல்கள் பின்வருமாறு:-
டீ உலகம் முழுவதும் பரவலாக பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு அற்புதமான உற்சாக பானம். டீயில் பல மருத்துவ பயன்கள் இருக்கின்றன. கேன்சர் வராமல் தடுக்கும் பல எதிர்ப்பு சக்திகள் டீயில் இருக்கிறது. நீரழிவு மற்றும் இதய சம்பந்தப்பட்ட நோய்களையும் வராமல் தடுக்கும் ஆன்டி-ஆக்ஸிடென்டுகள் டீயில் அதிகம் உள்ளன. வழக்கமாக டீ குடிக்கும் பழக்கமுள்ளவர்களிடம் நடத்திய ஆராய்ச்சியில் அவர்களுக்கு மற்றவர்களை விட கேன்சர் வரும் அபாயம் குறைவாக உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
கேன்சரை ஊக்குவிக்கும் செல்கள் உற்பத்தியாவதை டீ தடுக்கிறது. இதனால், தோல், கல்லீரல், புராஸ்டேட், நுரையீரல் மற்றும் மார்பகங்களில் கேன்சர் உருவாவது தடுக்கப்படுகிறது. மேற்கத்திய நாடுகளை விட அதிக அளவில் டீ அருந்தும் பழக்கம் ஜப்பான், சீனா நாடுகளில் உண்டு. மருத்துவ பயன்கள் அதிகம் கொண்ட ஒரே உற்சாக பானம் டீ மட்டுமே என்பதை நாம் அங்கீகரிக்க வேண்டும். நிறுவனங்கள் பிரம்மாண்ட அளவில் விளம்பரம் செய்து டீயின் மருத்துவ பயன்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பிளஸ் 2 தனித் தேர்வு: நவம்பர் 16 முதல் விண்ணப்பிக்கலாம்

பிளஸ் 2 தனித்தேர்வுக்கு நவம்பர்16 (திங்கள்கிழமை) முதல் 27 வரைவிண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம்அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம்வெள்ளிக்கிழமை
வெளியிட்ட அறிவிப்பில் மேலும் கூறியிருப்பதாவது:
கல்வி மாவட்டம் வாரியாகஅமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களில், தனித்தேர்வர்கள் நேரில்தங்களது விண்ணப்பத்தைப்பதிவு செய்யவேண்டும். நேரடித்தனித்தேர்வர்கள் கட்டணமாக ரூ.187, மறுமுறை தேர்வுஎழுதுவோர் ஒவ்வொருபாடத்துக்கும் ரூ.50, இதரக்கட்டணமாக ரூ.35 செலுத்தவேண்டும். அதோடுஇணையதளப் பதிவுக்கட்டணமாக ரூ.50 செலுத்த வேண்டும்.மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்துவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.விண்ணப்பத்தைப் பதிவுசெய்த பிறகு, தனித்தேர்வர்களுக்கு ஒப்புகைச் சீட்டுவழங்கப்படும். அதில் குறிப்பிட்டுள்ள விண்ணப்பஎண்ணைப் பயன்படுத்தியேதேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளைப் பதிவிறக்கம் செய்யஇயலும். எனவே, இதைப் பாதுகாப்பாகவைத்திருக்கவேண்டும்.

சேவை மையங்களின் விவரங்கள், தேர்வர்களுக்கான அறிவுரைகள் ஆகியவற்றைwww.tndge.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.மதிப்பெண், பள்ளிமாற்றுச் சான்றிதழ்களின்நகல்கள், பத்தாம்வகுப்பு அல்லதுஅதற்குச் சமமானதேர்வில் தேர்ச்சிபெற்றதற்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் உள்ளிட்டவற்றைதேர்வர்கள் சேவை மையத்துக்கு எடுத்து வரவேண்டும் எனசெய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறையில் 188 காலி பணியிடங்கள் : சம்பளம்: ரூ.9,300 - 34,800 - 4200

தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறையில் காலியாக உள்ள 188 இளநிலை வரை தொழில் அலுவலர் (Junior Draughting Officer) பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி:
Junior Draughting Officer:
188 இடங்கள்.
சம்பளம்:
ரூ.9,300 - 34,800.
வயது வரம்பு:
1.7.2015 தேதிப்படி 18 முதல் 30க்குள். அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி., எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி மற்றும் எம்பிசியினருக்கு 2 வருடங்களும் தளர்வு அளிக்கப்படும்.
கல்வித் தகுதி:
சிவில் இன்ஜினியரிங் பாடத்தில் டிப்ளமோ தேர்ச்சி. நேர்முகத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
மாதிரி விண்ணப்பத்தை www.tnhighways.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து விவரங்களை பூர்த்தி செய்து அனுப்பவும். ஒரு விண்ணப்பதாரர் ஒரு விண்ணப்பம் மட்டுமே அனுப்ப வேண்டும். விண்ணப்பத்துடன் கல்வித் தகுதி, வயது, ஜாதி உள்ளிட்ட சான்றிதழ்களின் நகல்களை கையெழுத்திட்டு பதிவுத் தபாலில் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:
இணை இயக்குநர் (நிர்வாகம்),
முதன்மை இயக்குநர் அலுவலகம் (நெடுஞ்சாலைத் துறை),
பொதுப் பணித்துறை வளாகம், சேப்பாக்கம்,
சென்னை- 600005.
விண்ணப்பங்கள் சென்றடைய வேண்டிய கடைசி தேதி: 18.11.2015.

குழந்தைகள் தின வாழ்த்துக்கள்.


TNPSC : 813 வி.ஏ.ஓ. பணியிடங்களுக்கு பிப்ரவரி 14-ல் போட்டித்தேர்வு: தமிழ்வழி படித்தவர்களுக்கு 20 சதவீத இடங்கள் ஒதுக்கீடு

கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.) பதவியில் 813 காலியிடங்களை நிரப்புவதற்காக பிப்ரவரி 14-ம் தேதி போட்டித் தேர்வு நடத்தப்படும்என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் ஊழியர்களும், அலுவலர் களும் டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வு மூலமாக தேர்வுசெய் யப்படுகிறார்கள். 


நேர்முகத் தேர்வு இல்லாத பணிகளில் 1,934 காலியிடங்களுக்காக குரூப்-2ஏ தேர்வுக்கு ஆன் லைனில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இதற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி நவம்பர் 18-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.இந்த நிலையில், 813 விஏஓ காலியிடங்களை நிரப்பு வதற்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி போட்டித் தேர்வு நடத்தப்படும் என்று டிஎன்பிஎஸ்சி இணைய தளத்தில் நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, விஏஓ பணிக்கு எஸ்எஸ்எல்சி தேர்ச்சி பெற்றவர்கள் ஆன் லைனில் (www.tnpsc.gov.in) விண்ணப்பிக்கலாம். வயது 21 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். பொதுப் பிரிவினர் நீங்கலாக இதர இட ஒதுக் கீட்டுப் பிரிவினருக்கும், ஆதரவற்ற விதவைகளுக்கும் வயது வரம்பு 40 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழ்வழியில் படித்தவர்களுக்குதமிழ்வழியில் படித்தவர் களுக்கு அரசுப் பணியில் 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப் படுகிறது. இந்த உத்தரவு விஏஓ பணிக்கும் பொருந் தும் என்பதால் மொத்த காலி யிடங்களில் 20 சதவீத இடங்கள் தமிழ்வழியில் எஸ்எஸ்எல்சி முடித்தவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும்.ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போதே இதுகுறித்து குறிப்பிட வேண்டும்.எழுத்துத் தேர்வு அடிப்படை யில் பணிநியமனம் நடை பெறும். நேர்முகத் தேர்வு எதுவும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. எழுத்துத் தேர்வில் பொது அறிவு, திறனறிவு, கிராம நிர்வாக நடைமுறைகள், பொது தமிழ்அல்லது பொது ஆங்கிலம் ஆகிய பகுதிகளில் இருந்து 200 கேள்விகள் கேட்கப்படும். மொத்த மதிப் பெண் 300. எழுத்துத் தேர்வுக் கான பாடத்திட்ட விவரங் கள் டிஎன்பிஎஸ்சி இணைய தளத்தில் வெளியிடப்பட் டுள்ளன. எழுத்துத் தேர்வில் வெற்றிபெற்றாலே பணி உறுதி. தகுதியுள்ள விண் ணப்பதாரர்கள் டிசம்பர் 14-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித் துள்ளது.

விஏஓ பணியில் சேரு வோருக்கு சம்பளம் ஏறத்தாழ ரூ.17 ஆயிரம் அளவுக்குகிடைக்கும். 7-வது ஊதியக்குழு பரிந்துரை அமல்படுத்தப்படும் பட்சத்தில் சம்பளம் கணிசமாக உயரும் வாய்ப்புள்ளது. 6 ஆண்டு பணியை முடித்தவர்கள் துறைத்தேர்வுகளில் தேர்ச்சிபெற்றால் வருவாய்த் துறையில் உதவியாளர் ஆகலாம். அதன்பின்பு அவர்கள் வருவாய் ஆய்வாளர், துணை வட்டாட்சியர், வட்டாட்சியர் என படிப்படியாக பதவி உயர்வு பெறலாம்என்பது குறிப்பிடத்தக்கது.

பள்ளி, கல்லூரிகளுக்கு எல்லை பிரச்னை:மழை விடுமுறை அறிவிப்பில் குழப்பம்

சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்ட பள்ளி, கல்லுாரிகளுக்கு மழைக்கால விடுமுறை அறிவிப்பதில், எல்லைப் பிரச்னையால், பல குளறுபடிகள் ஏற்படுகின்றன.
சென்னையில், மாநகராட்சி கட்டுப்பாட்டுப் பகுதிகள், கலெக்டர் கட்டுப்பாட்டு பகுதிகள் என, இரு விதமான எல்லைகள் உள்ளன. 


பலபள்ளிகள், சென்னை முகவரியில் இருந்தாலும், அவை திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் வருவாய் மாவட்டக் கட்டுப்பாட்டில் வருகின்றன.உதாரணமாக, அம்பத்துார், சென்னையின் முக்கிய பகுதி. இது, திருவள்ளூர்மாவட்ட கலெக்டர் கட்டுப்பாட்டில் வருகிறது. சென்னையில் விடுமுறை என,அறிவித்தாலும், திருவள்ளூர்கலெக்டர் அறிவிக்காவிட்டால், அம்பத்துார் பள்ளிகளுக்கு விடுமுறை கிடைப்பதில்லை.இதே அம்பத்துார், சென்னை மாநகராட்சி எல்லைக்குள் உள்ளது. எனவே, திருவள்ளூர் கலெக்டர் விடுமுறை அளித்தாலும், மாநகராட்சி அறிவிக்க மறுத்தால்விடுமுறை இல்லை.தென் சென்னையில், கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பழையமகாபலிபுரம் சாலையில் உள்ள பல பகுதிகள், சென்னை மாநகராட்சி எல்லையில் இருக்கின்றன; ஆனால், மாவட்டம் என, வரும்போது, காஞ்சிபுரம்கலெக்டர் கட்டுப்பாட்டுக்கு போய் விடுகின்றன. எனவே, இங்குள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விடுவதிலும், நிர்வாக குழப்பம் உள்ளது.இதேபோல், கல்லுாரிகளுக்கு விடுமுறை அறிவிப்பதிலும், பிரச்னைகள் ஏற்படுகின்றன.சென்னையில் உள்ள கலை, அறிவியல் கல்லுாரிகள், சென்னை பல்கலை இணைப்பில் உள்ளன. விடுமுறை விஷயத்தில், சில கல்லுாரிகள், கலெக்டர் அறிவிப்பையும், மற்ற கல்லுாரிகள் பல்கலை அறிவிப்பையும் பின்பற்றுகின்றன. அதனால், பெற்றோரும், மாணவர்களும் குழப்பம் அடைகின்றனர்.

இது குறித்து, சமூக ஆர்வலர் சடகோபன் கூறும்போது, ''எல்லை பிரச்னைகள்தீர்க்கப்படாததால், மழைக்கால விடுமுறை அறிவிப்பு மட்டுமின்றி, வழக்கமான பணி நடைமுறையிலும் குளறுபடி ஏற்படுகிறது. இது பற்றி அரசோ, அதிகாரிகளோ கவலைப்படுவதில்லை; மக்கள் தான் அவதிப்படுகின்றனர்,'' என்றார்.

பங்களிப்பு ஓய்வூதிய நிதி கிடைக்குமா?? குளறுபடி தகவலால் புது குழப்பம்

அண்ணா பல்கலை. தேர்வுகள் மேலும் 2 நாள் ஒத்திவைப்பு

தொடர் மழை பெய்ததன் காரணமாக மேலும் இரண்டு நாள்கள் நடைபெற இருந்தத் தேர்வுகளையும் அண்ணா பல்கலைக்கழகம் ஒத்தி வைத்துள்ளது.

சென்னை உள்பட கடலோர மாவட்டங்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் பெய்து வரும் தொடர் மழை காரணமாக கடலூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை அங்கு பாதிக்கப்பட்டுள்ளது.


இந்த பாதிப்பு காரணமாக, வியாழக்கிழமையன்று நடைபெற இருந்தத் தேர்வுகளை அண்ணா பல்கலைக்கழகம் ஒத்திவைத்தது.

இந்த நிலையில், வெள்ள பாதிப்பு அடைந்த பகுதிகள் முழுமையாக சீரடைந்து மாணவர்கள் எந்தவித சிரமுமின்றி தேர்வெழுத வரும் வகையில் மேலும் இரண்டு நாள் தேர்வுகளை பல்கலைக்கழகம் இப்போது ஒத்தி வைத்துள்ளது.

அதாவது நவம்பர் 12, 13, 14 ஆகிய மூன்று நாள் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

ஒத்திவைக்கப்பட்ட இந்த தேர்வுகள் பல்கலைக்கழகத் துறைகளில் (கிண்டி பொறியியல் கல்லூரி, எம்ஐடி, அழகப்பா தொழில்நுட்ப கல்லூரி, கட்டடவியல் பள்ளி) படிக்கும் மாணவர்களுக்கு டிசம்பர் 2, 3, 4 ஆகிய தேதிகளில் நடத்தப்பட உள்ளன.

இதுபோல் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் இணைப்புக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு நவம்பர் 12-இல் நடைபெற இருந்த தேர்வு டிசம்பர் 21 ஆம் தேதியும், நவம்பர் 13 இல் நடைபெற இருந்த தேர்வு டிசம்பர் 22 ஆம் தேதியும், நவம்பர் 14 இல் நடத்தப்பட இருந்த தேர்வு டிசம்பர் 24 ஆம் தேதியும் நடத்தப்பட உள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு பல்கலைக்கழகத்தின் இணையதளத்தை பார்க்கவும்.

மாணவியருக்கு தொல்லை கல்லூரிகளுக்கு எச்சரிக்கை

மாணவ, மாணவியர் இடையே பாலின பாகுபாடு மற்றும் பாலியல் பிரச்னைகளை தீர்க்க, கமிட்டி அமைக்காத கல்லுாரிகளுக்கு, மத்திய அரசின் பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கல்லுாரி மற்றும் பல்கலைகளில், மாணவ, மாணவியர் இடையே, பாலின ரீதியான வேறுபாடுகளை போக்கவும், பாலியல் பிரச்னைகளை தீர்க்கவும், தனி கமிட்டிகள் அமைக்கப்பட வேண்டும்; புகார் பெட்டிகள் வைக்க வேண்டும் என, இரு மாதங்களுக்கு முன், யு.ஜி.சி., உத்தரவிட்டிருந்தது.

இதுவரை, தமிழகம் உட்பட பெரும்பாலான மாநில கல்லூரிகள் மற்றும் பல்கலைகளில், கமிட்டிகள் அமைக்கவில்லை. கல்லுாரி வளாகங்களில், பாலியல் பிரச்னை குறித்து புகார் தெரிவிக்க, பதிவேடுகளும் வைக்கப்படவில்லை; விசாரணை அதிகாரியும் நியமிக்கவில்லை.
இது தொடர்பாக, யு.ஜி.சி.,க்கு புகார் சென்றதை அடுத்து, அனைத்து பல்கலை மற்றும் கல்லுாரிகளுக்கு, 'கமிட்டி அமைக்கப்படாவிட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன

மத்திய அரசு விதிமுறைகளுக்குசத்துணவு பணியாளர்கள் எதிர்ப்பு

குழந்தைகள் பள்ளி செல்வதை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டை நீக்கவும், தமிழகத்தில், 1982ல், சத்துணவு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. 43 ஆயிரம் சத்துணவு மையங்களில், 55 லட்சம் மாணவ, மாணவியருக்கு, இலவச மதிய உணவு வழங்கப்படுகிறது.ஒரு மாணவருக்கு, 5ம் வகுப்பு வரை, தலா, 100 கிராம் அரிசியும்; 6 முதல், 10 வரை, 150 கிராம் அரிசியும் ஒதுக்கப்படுகிறது. ஒன்றாம் வகுப்பு முதல், 8ம் வகுப்பு வரை மத்திய அரசும்; 9 மற்றும், 10ம் வகுப்புக்கு, மாநில அரசும், அரிசி செலவை ஏற்கின்றன. மளிகை பொருட்கள்

உள்ளிட்ட மற்ற செலவுகளில், 75 சதவீதத்தை மத்திய அரசும், 25 சதவீதத்தை தமிழக அரசும் வழங்குகின்றன. முட்டை செலவை, தமிழக அரசே ஏற்கிறது.

இந்நிலையில், உணவு பாதுகாப்பு சட்டப்படி, புதிய விதிமுறைகளை, மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்டது. அதில் கூறியிருப்பதாவது:உணவு தானியம், எரிபொருள், சமையல் பணியாளர் இல்லை போன்ற காரணத்தால், ஏதாவது ஒரு நாள் மதிய உணவு வழங்கப்படாவிட்டால், அடுத்த மாதம், 15ம் தேதிக்குள், அதற்கான தொகையை, குறிப்பிட்ட பள்ளிக்கு மாநில அரசு வழங்க வேண்டும்

தரத்தை உறுதிப்படுத்த, சத்துணவை பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்; இதற்காக, மாதம் ஒரு பள்ளியை தேர்வு செய்ய வேண்டும்

ஒவ்வொரு பள்ளியிலும், சுகாதாரமான சமையல் அறை வசதி ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.இந்த விதிமுறைகளை அமல்படுத்த, சத்துணவு அமைப்
பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இது குறித்து, சத்துணவு அமைப்பாளர் சங்க தலைவர்
பழனிச்சாமி கூறியதாவது:மதிய உணவு வழங்காத நாளில், அதற்கான செலவு தொகையை, பள்ளிக்கு ஒதுக்க வேண்டும்; அந்த தொகையை, மாணவர்களுக்கு செலவிட வேண்டும் என, கூறப்பட்டுள்ளது. ஆனால், அந்தத் தொகையை, பள்ளிக்கு வழங்குவதில், ஊழல் நடக்கிறது; ஊழல் செய்வதற்காகவே, வேண்டுமென்றே சமையல் செய்யாமலிருக்க வாய்ப்பு உள்ளது. இதனால், சத்துணவு திட்டம் பாதிக்கப்படும். மேலும், பணம் கொடுக்கப்பட்டதா, இல்லையா என்பதை மாணவர்களால் தெரிந்து கொள்ள முடியாது. அதிகாரிகளும், ஆசிரியர்களும் சேர்ந்து, ஊழல் செய்ய வாய்ப்பு அதிகம். எனவே, மத்திய அரசின் புதிய விதிமுறைகள், நடை
முறைக்கு சாத்தியமில்லை.இவ்வாறு அவர் கூறினார்

தொடர் மழை காரணமாக நாளை(14.11.15) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..

1.சென்னை (பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை)
2.திருவள்ளுர் (பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை)

3.காஞ்சிபுரம் (பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை)