யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

14/11/15

பள்ளி, கல்லூரிகளுக்கு எல்லை பிரச்னை:மழை விடுமுறை அறிவிப்பில் குழப்பம்

சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்ட பள்ளி, கல்லுாரிகளுக்கு மழைக்கால விடுமுறை அறிவிப்பதில், எல்லைப் பிரச்னையால், பல குளறுபடிகள் ஏற்படுகின்றன.
சென்னையில், மாநகராட்சி கட்டுப்பாட்டுப் பகுதிகள், கலெக்டர் கட்டுப்பாட்டு பகுதிகள் என, இரு விதமான எல்லைகள் உள்ளன. 


பலபள்ளிகள், சென்னை முகவரியில் இருந்தாலும், அவை திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் வருவாய் மாவட்டக் கட்டுப்பாட்டில் வருகின்றன.உதாரணமாக, அம்பத்துார், சென்னையின் முக்கிய பகுதி. இது, திருவள்ளூர்மாவட்ட கலெக்டர் கட்டுப்பாட்டில் வருகிறது. சென்னையில் விடுமுறை என,அறிவித்தாலும், திருவள்ளூர்கலெக்டர் அறிவிக்காவிட்டால், அம்பத்துார் பள்ளிகளுக்கு விடுமுறை கிடைப்பதில்லை.இதே அம்பத்துார், சென்னை மாநகராட்சி எல்லைக்குள் உள்ளது. எனவே, திருவள்ளூர் கலெக்டர் விடுமுறை அளித்தாலும், மாநகராட்சி அறிவிக்க மறுத்தால்விடுமுறை இல்லை.தென் சென்னையில், கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பழையமகாபலிபுரம் சாலையில் உள்ள பல பகுதிகள், சென்னை மாநகராட்சி எல்லையில் இருக்கின்றன; ஆனால், மாவட்டம் என, வரும்போது, காஞ்சிபுரம்கலெக்டர் கட்டுப்பாட்டுக்கு போய் விடுகின்றன. எனவே, இங்குள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விடுவதிலும், நிர்வாக குழப்பம் உள்ளது.இதேபோல், கல்லுாரிகளுக்கு விடுமுறை அறிவிப்பதிலும், பிரச்னைகள் ஏற்படுகின்றன.சென்னையில் உள்ள கலை, அறிவியல் கல்லுாரிகள், சென்னை பல்கலை இணைப்பில் உள்ளன. விடுமுறை விஷயத்தில், சில கல்லுாரிகள், கலெக்டர் அறிவிப்பையும், மற்ற கல்லுாரிகள் பல்கலை அறிவிப்பையும் பின்பற்றுகின்றன. அதனால், பெற்றோரும், மாணவர்களும் குழப்பம் அடைகின்றனர்.

இது குறித்து, சமூக ஆர்வலர் சடகோபன் கூறும்போது, ''எல்லை பிரச்னைகள்தீர்க்கப்படாததால், மழைக்கால விடுமுறை அறிவிப்பு மட்டுமின்றி, வழக்கமான பணி நடைமுறையிலும் குளறுபடி ஏற்படுகிறது. இது பற்றி அரசோ, அதிகாரிகளோ கவலைப்படுவதில்லை; மக்கள் தான் அவதிப்படுகின்றனர்,'' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக