யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

14/11/15

தெற்கு அந்தமான் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை: சென்னை வானிலை ஆய்வு மையம்

தெற்கு அந்தமான் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


வரும் 14ஆம் தேதி தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


இதன் காரணமாக தென் மாவட்டங்களில் அநேக இடங்களிலும்,வட மாவட்டங்களில் சில இடங்களிலும் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.கடலோர மாவட்டங்களில் கனமழையை எதிர்பார்க்கலாம் எனவும் அது தெரிவித்துள்ளது.


கேரளாவில் நிலை கொண்டிருந்த மேலடுக்கு சுழற்சி தெற்கு நோக்கி நகர்ந்து லட்சத்தீவு அருகே காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலைகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக