யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

5/11/17

13 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை

கடலோரத்தில் உள்ள, 13 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில், சில இடங்களில் கனமழை பெய்யும்' என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.வட கிழக்கு பருவமழை குறித்து, நேற்று, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர், பாலச்சந்திரன் அளித்த பேட்டி:

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தமிழக கடலோர மாவட்டங்களை ஒட்டி, இலங்கை அருகே நிலை கொண்டுள்ளது. அதனால், மாநிலம் முழுவதும் மழை தொடரும். வரும், 24 மணிநேரத்தில், அதாவது, சனிக்கிழமை காலை, 8:3௦ மணி வரை, தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவையில், சில இடங்களில் கனமழை பெய்யும். ஓரிரு இடங்களில், மிக கனமழைபெய்யும். உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. கடலோர மாவட்டங்களை பொறுத்தவரை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலுார், நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம்.துாத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில், கடலோர பகுதிகளில், சில இடங்களில் கன மழை பெய்யும். புதுச்சேரி, காரைக்காலில் சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

PP 750ஐ அடிப்படை ஊதியத்துடன் சேர்த்து ஊதிய நிர்ணயம் செய்யபடாது - விளக்கம்

ஊதிய குழு அரசாணை 303, பக்கம் 4 ல் S.No. 14 - இல் PP 750 ஐ அடிப்படை ஊதியத்துடன் சேர்த்து ஊதிய நிர்ணயம் செய்ய படாது என குறிப்பிடப்பட்டுள்ளது .
வ.எ.14 ல் Junior Assistants/Accountants க்கு PP 60 shall be absorbed while fixing the pay in the revised pay structure என உள்ளது.

எனவே அவர்களுக்கு PP 60 அடிப்படை ஊதியத்துடன் சேர்த்துக் கொள்ளப்படும்.
அதற்காகவே IF PP IS eligible for Revision add with Basic pay என உள்ளது.
இந்த PP 60 ஐ குறிப்பிட்டு வ.எ.14 ல் கூறப்பட்டுள்ளது.

ஆனால் பொதுவாக PP ஐ பக்கம் 9 ல் 3(i) existing basic pay means என குறிப்பிடும்போது மற்றும் 3(viii) ல் basic pay in the revised pay structure means என குறிப்பிட்டு விளக்கியுள்ளதிலும் கணக்கில் கொள்ளப்படாததாகவே குறிப்பிடப்பட்டுள்ளது.

நமது PP 750 ஐ அடிப்படை ஊதியத்துடன் இணைக்க குறிப்பிட்டு ஆணை வந்தால்தான் இணைத்திட முடியும்.
Epay roll ல் குறிப்பிடப்பட்ட்டுள்ளது இந்த PP 60 என்பதே ஆகும்.

 அதனையே if possible என குறிப்பிட்டுள்ளது
( பக்கம் 4 ல் PP 60 possible என்பதற்கான விளக்கம் உள்ளது )

4/11/17

கணினி ஆசிரியர்கள் காலிப்பணியிடம் பொதுத்தேர்வு மாணவர்களுக்கு சிக்கல்....

வி.ஏ.ஓ., தனி தேர்வு இல்லை முடிவுக்கு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் எதிர்ப்பு

காரைக்குடி: வி.ஏ.ஓ., பதவிக்கு தனித்தேர்வு இல்லை என்ற டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்புக்கு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

அச்சங்க சங்க மாநில பொது செயலாளர் 
செல்வம் கூறியது: டி.என்.பி.எஸ்.சி., சார்பில் வி.ஏ.ஓ., பதவிக்கு தனியாக தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வில் வி.ஏ.ஓ., பதவியில் பராமரிக்கப்படும் கிராம கணக்குகளும் நடைமுறைகளும் என்ற தலைப்பில் 25 கேள்விகள் கேட்கப்படும். தற்போதைய அறிவிப்பில் இந்த கேள்விகள் இடம்பெறாது.
10-ம் வகுப்பையே கல்வி தகுதியாக கொண்டு இரண்டு தேர்வையும் இணைத்து நடத்துவது வி.ஏ.ஓ.,க்களை மேன்மைபடுத்துவதற்கு பதில் குறைக்கும் செயல். குரூப் 4 தேர்வுக்கு 18 வயது நிரம்பினால் போதும். ஆனால், வி.ஏ.ஓ.,வுக்கு 21 வயது நிரம்பி இருக்க வேண்டும். மண்ணையும் மனிதனையும் அடையாளம் காட்டும் அடிப்படை அலுவலராக வி.ஏ.ஓ., உள்ளார். பொதுமக்களிடம் நேரடி தொடர்புள்ள பதவிக்கு 21 வயது என்பது தான் சரியாக இருக்கும். அதை விடுத்து 18 வயது என அரசு நிர்ணயம் செய்திருப்பது, வயதுக்கு மீறிய பதவியில் அமர்த்தும் செயலாகும்.
வி.ஏ.ஓ.,வுக்கு தனி தேர்வு நடத்தினால் 12 லட்சம் பேர் விண்ணப்பிக்கின்றனர். ஒவ்வொரு நபரும் விண்ணப்ப 
கட்டணம் தனியாக செலுத்துகின்றனர். அதன் மூலமே தேர்வு நடத்தப்படுகிறது. ஆனால், இத்தேர்வினால் அரசுக்கு ரூ.15 கோடி செலவாகிறது என்று கூறுவது முற்றிலும் தவறானது. இந்து சமய அறநிலைய துறை செயல் அலுவலருக்கும் 10-ம் வகுப்பு தான் கல்வி தகுதி. எனவே அதையும் சேர்த்து நடத்தலாம். இப்படி அனைத்தையும் சேர்த்து தேர்வு வைத்தால் செலவு மிச்சமாகி கொண்டே போகும், தரம் தாழ்ந்து விடும்.
அரசுக்கு 15 கோடி செலவு தான் பிரச்னை என்றால், இதற்கான கல்வி தகுதியை பட்டப்படிப்பாக்கி சார்பதிவாளர் உள்ளிட்டோருக்கு நடத்தப்படும் சி.எஸ்.எஸ்.இ.,-2 தொகுதி 2-ல் நேர்முகத்தேர்வு அல்லாத தேர்வாக நடத்தலாம். வி.ஏ.ஓ.,வாக இருப்பவர்கள் 98 சதவீதம் பேர் பட்டதாரிகள் தான்.
எனவே, டி.என்.பி.எஸ்.சி., எடுத்துள்ள வி.ஏ.ஓ., மற்றும் குரூப் 4 ஆகியவற்றை இணைத்து தேர்வு நடத்தும் முறையை கைவிட வேண்டும். இல்லையேல் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் மாநில அளவிலான போராட்டத்தில் ஈடுபடுவோம், என்றார்.

தேசிய திறனாய்வு தேர்வு தேதி மாற்றம்

சென்னை: இன்று நடக்கவிருந்த, தேசிய திறனாய்வு தேர்வு, நவ., ௧௮க்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

மத்திய அரசின் கல்வி உதவித்தொகையை பெற, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, முதற்கட்ட தேசிய திறனாய்வு தேர்வு, தமிழகம் முழுவதும், இன்று நடப்பதாக இருந்தது. மழை வெள்ளத்தால், பல்வேறு மாவட்டங்களில், பள்ளிகளுக்கு விடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், இன்று நடக்கவிருந்த தேசிய திறனாய்வு தேர்வு, ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த தேர்வு, நவ., ௧௮ல் நடத்தப்படும் என, தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

போலி சான்றிதழ்: தலைமை ஆசிரியை 'சஸ்பெண்ட்'

தஞ்சை அருகே, போலி ஜாதி சான்றிதழ் கொடுத்து, 20 ஆண்டுகளாக பள்ளியில் பணியாற்றிய பெண் தலைமை ஆசிரியை, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.

தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை அடுத்த நரியனுார் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், தலைமை ஆசிரியையாகபணியாற்றியவர் கிறிஸ்டினாள் பேபி, 50.பிற்படுத்தப்பட்டோர் பிரிவைச் சேர்ந்த இவர், பழங்குடியின ஜாதி சான்றிதழ் கொடுத்து, 1997ம் ஆண்டு ஆசிரியர் பணியில் சேர்ந்து, 20 ஆண்டு களாக பணிபுரிந்தது தெரிந்தது.இதையடுத்து, நேற்று முன்தினம், கிறிஸ்டினாள் பேபியை, கல்வி துறை அதிகாரிகள், சஸ்பெண்ட் செய்தனர்.

பொறியியல் உள்ளிட்ட தொழில் நுட்ப படிப்புகளை தொலை தூர வழி கல்வியில் நடத்த கல்வி நிறுவனங்களுக்கு தடை

வழக்கு ஒன்றை விசாரித்த சுப்ரீம் கோர்ட், பொறியியல் உள்ளிட்ட தொழில் நுட்ப படிப்புகளை தொலை தூர வழி கல்வியில் நடத்த கல்வி
நிறுவனங்களுக்கு தடை விதித்ததுடன் இது தொடர்பாக பஞ்சாப் - அரியானா மாநில ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவை உறுதி செய்தது.இரண்டு ஆண்டுகளுக்கு முன் வழக்கு ஒன்றை விசாரித்த பஞ்சாப் - அரியானா மாநில ஐகோர்ட், கணிப்பொறி அறிவியல் படிப்பை கல்லூரி சென்று படித்தவர்களும், தொலைவழிக் கல்வியில் படித்தவர்களையும் சமமாக கருத முடியாது என உத்தரவு பிறப்பித்திருந்தது.

DEE PROCEEDINGS-தமிழ்நாட்டில் இயங்கிவரும் சுயநிதி தனியார் தொடக்க/நடுநிலைப்பள்ளிகள் -மழலையர் தொடக்கப்பள்ளிகள்-சுயநிதி மெட்ரிக் பள்ளிகளில் பணிபுரியும் தகுதி பயிற்சி பெறாத ஆசிரியர்கள் தேசிய திறந்தநிலை பயிற்சி நிறுவனத்தில்(NIOS) சேர 07.11.2017 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது -சார்பு




இனி ஒவ்வொரு மாதமும் முதல் சனிக்கிழமை தொடக்க/நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கூட்டம்


ஜாக்டோ-ஜியோ நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எங்கு வரும் ?எப்போது வரும்?

ஜாக்டோ-ஜியோ போராட்டத்தை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் (23.10.2017) வரும் என்று நேற்று வரை எதிர்பார்க்கப்பட்ட நிலையில் துரதிஷ்டவசமாக தள்ளிபோனது.

இந்நிலையில் வழக்கினை விசாரித்த நீதிபதிகளான மதிப்புமிகு சசிதரன் அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ளார். ( உயர் நீதிமன்ற விதிப்படி மூன்று மாதத்திற்கு ஒருமுறை நீதிபதிகள் இடமாறுதல்) மற்றும் நீதியரசர் திரு. சுவாமிநாதன் அவர்கள் தற்போதும் மதுரை உயர்நீதிமன்றத்தில் இருக்கிறார்.

மதுரை உயர்நீதிமன்ற கிளையில் உள்ள வழக்கினை சென்னை உயர்நீதி மன்றத்திற்கு மாற்றப்பட்டுவிட்டது. நீதியரசர் திரு.ஜி.ஆர்.சவாமி நாதன் சென்னை நீதிமன்றத்திற்கு வரும் தேதி தெரிந்தவுடன் இந்த வழக்கு விசாரணைக்கு வரும் அநேகமாக இந்த வார இறுதிக்குள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் உள்ள ஜாக்டோ ஜியோவின் மூத்த வழக்கறிஞர் அவர்கள் வழக்கை விரைந்து கொண்டு வர தீவிர முயற்சி செய்து வருகிறார்கள் என்றும் தகவல்கள் வெளியாகின்றன.

பயனுள்ள தகவல்


கேஸ் இணைப்பு – பெயர் மாற்றம் செய்வது எப்படி?
கேஸ் இணைப்பில் பெயர் மாற்றுவது மிகவும் எளிது.
கேஸ் யாருடைய பெயரில் உள்ள‍தோ அவர் ஆணாக இருப்பின் அவரிடம், அந்த பெயரை மாற்ற ஆட்சேபனை இல்லாத சான்று ஒன்றும், இதே அவர் திருமணமான பெண்ணாக இருந்தால், அந்த மகளிடமும், அவரது கணவரிடம் என இருவரிடமிருந்தும் உங்கள் பெயருக்கு மாற்ற‍ ஆட்சேபனை இல்லாத சான்று தனித் தனியாக‌ பெறவேண்டும்.
வாங்கிய இந்த சான்றினை, உங்கள் குடும்ப அட்டையின் நகலுடன் சேர்த்து உங்கள் கேஸ் இணைப்பு உள்ள அலுவலகத்தில் தரவேண்டும்.
அதன்பிறகு விநியோகஸ்தர் அலுவலகத்தில் உள்ளவர், உங்களுடைய பெயர் அல்லது உங்களின் குடும்ப உறுப்பினர் பெயரில் வேறு ஏதாவது கேஸ் இணைப்பு உள் ளதா என்பதை நேரில் ஆய்வு செய்வார்கள்.
இதில் எந்தப் பிரச்னையும் இல்லை யென்றால் கேஸ் இணைப்பை உங்கள் பெயருக்கு மாற்றித்தருவார் கள். இக்காலகட்டத்தில் உங்களுக்கு கேஸ் விநியோகம் செய்யப்பட மாட்டார்கள்.
ஒரு வேளை இணைப்பு யாருடைய பெயரில் வாங்கினீர்களோ அவர் இறந்து விட்டால், அவரது இறப்புச் சான்றிதழின் நகல் மற்றும் வாரிசுச் சான்றிதழின் நகல் ஆகிய இரண்டையும் கேஸ் இணைப்பு தரும் அலுவலகத்தில் சமர்ப்பிக்க‍ வேண்டும்.
இது இந்தியன் ஆயில் நிறுவனத்தில் இருந்து அளிக்கப்பட்ட பதில்

தேசிய திறனாய்வு தேர்வுக்கு 'ஹால் டிக்கெட்' பெற வசதி!!!

சென்னை: பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், வரும் ஆண்டுகளில் கல்வியை 
தொடர, மத்திய அரசு உதவித்தொகை வழங்குகிறது. இதை பெறுவதற்கான, தேசிய திறனாய்வு தேர்வு, நாளை நடக்கிறது.
தமிழகத்தில், ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், தேர்வை எழுத உள்ளனர். இதற்கான ஹால் டிக்கெட்டை, பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், பதிவிறக்கம் செய்யலாம் என, அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

மத்திய அரசு ஊழியர்களின் கல்வி செலவு படி அதிகரிப்பு!!!

புதுடில்லி: மத்திய அரசு ஊழியர்களின், மாற்றுத் திறனாளி குழந்தைகளின் 
கல்விக்காக வழங்கப்படும் படியை உயர்த்தி, அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றும் ஊழியர்களின், குழந்தைகளின் கல்வி செலவுக்காக, ஒரு குறிப்பிட்ட தொகை, சிறப்பு படியாக வழங்கப்படுகிறது.
அரசு ஊழியர்களின் மாற்றுத் திறனாளி குழந்தைகளின் கல்வி செலவுக்காக, ஆண்டுக்கு, 30 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்ட நிலையில், அந்த தொகையை, 54 ஆயிரம் ரூபாயாக மத்திய அரசு உயர்த்தி உள்ளது; இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, மத்திய அரசு ஊழியர்கள், தங்கள் மாற்றுத் திறனாளி குழந்தைகளின் கல்விக்காக செலவு செய்த தொகையில், 54 ஆயிரம் ரூபாய் வரை திரும்ப பெற முடியும்.
மாற்றுத் திறனாளி குழந்தைகளின் பெற்றோர் இருவரும், மத்திய அரசு ஊழியராக இருந்தால், அவர்களில் யாரேனும் ஒருவர் மட்டுமே இந்த தொகை கோரி விண்ணப்பிக்க முடியும்.

அரசு அலுவலர்களுக்கு தமிழில் எழுத பயிற்சி நவ.9ல் துவக்கம்!!!

திண்டுக்கல், நவ. 2: அரசு அலுவலர்கள் ஆவணங்களை தமிழில்
கையாள்வதற்கான பயிற்சி திண்டுக்கல்லில் வரும் 9ம் தேதி துவங்க உள்ளது.
அரசு அலுவலகங்களில் தமிழ் பயன்பாட்டை அதிகரிக்கவும், ஆவணங்களை தமிழிலேயே கையாளும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் மாநிலம் முழுவதும் ஆட்சி மொழிப் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக ஒவ்வொரு மாவட்டத் தலைநகரங்களில் இது போன்ற நிகழ்ச்சி நடத்தப்படுவது வழக்கம்.

திண்டுக்கல் மாவட்டத்திற்கான பயிலரங்கம் வரும் 9 மற்றும் 10ம் தேதிகளில் நடைபெற உள்ளது. காலை 10 முதல் மாலை 5.45 மணி வரை கலெக்டர் அலுவலகத்தில் இந்த பயிலரங்கம் நடைபெறும். இதில் தமிழ் வளர்ச்சித்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ற உள்ளனர்.

தமிழில் பதிவேடுகளை கையாளும் விதம், ஆங்கில தொழில்நுட்ப வார்த்தைக்கான சரியான தமிழ் வார்த்தைகள், தமிழுக்கான அரசாணை, அலுவல் விதிமுறை உள்ளிட்ட பல்வேறு விபரங்கள் இதில் விளக்கப்படும். இதற்காக ஒவ்வொரு துறை அலுவலகத்தில் இருந்தும் அலுவலர் அல்லது கண்காணிப்பாளர் நிலையில் ஒருவரும், உதவியாளர் அல்லது இளநிலை உதவியாளர் நிலையில் ஒருவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று தமிழ் வளர்ச்சி உதவிஇயக்குநர் சந்திரா கேட்டுக் கொண்டுள்ளார்.

கனமழை காரணமாக அண்ணா பல்கலை கழக தேர்வுகள் ஒத்திவைப்பு

சென்னை: இன்று நடைபெற இருந்த அண்ணா பல்கலை கழக தேர்வுகள் 
ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று மாலை துவங்கிய மழை இடிமின்னலுடன் விடியவிடிய பெய்தது. இதனால் சென்னை நகர சாலைகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கியதால் பஸ், கார், ஆட்டோ போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. இந்நிலையில் அண்ணா பல்கலை கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊட்டச்சத்து குறைபாடு: முதலிடத்தில் இந்தியா!!!

                                                  
புதுடில்லி: உலகளவில், ஊட்டச் சத்து குறைபாடுள்ள குழந்தைகளின் எண்ணிக்கையில், இந்தியா 
முதலிடத்தில் உள்ளதாக, தனியார் அமைப்புகள் நடத்திய ஆய்வில் தெரிய வந்து உள்ளது.

'அசோசெம்'

இந்திய வர்த்தக மற்றும் தொழில் கூட்டமைப் பான, 'அசோசெம்' மற்றும் லண்டனைச் சேர்ந்த,
தனியார் அமைப்பு இணைந்து, உலகம் முழுவதும், ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் குறித்து ஆய்வு நடத்தி, அறிக்கை வெளியிட்டன.

அதன் விபரம்:கடந்த, 2005 - 15 வரை, பச்சிளம் குழந்தைகள்மற்றும், 5 வயதுக்குட்பட்ட குழந்தை களிடம் நடத்திய ஆய்வில், இறப்பு எண்ணிக்கை குறைந்தாலும், ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்து உள்ளது.

50 சதவீதம்

உலகளவில், ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தை கள் எண்ணிக்கையில், 50 சதவீதம் இந்தியாவில் உள்ளது. 2015ல், இந்த எண்ணிக்கை 40 சதவீதமாக இருந்தது. நகரங்களில் வசிக்கும் குழந்தைகளை விட, கிராமங்களில் வசிக்கும் குழந்தைகள் தான், ஊட்டச்சத்து விஷயத்தில் பின்தங்கி உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெரியவர்களை பொறுத்தவரை, நீரிழிவு எனும் சர்க்கரை நோயாளிகள் எண்ணிக்கையில், உலகின் தலைநகர் எனக் கூறும் வகையில், இந்தியா முதலிடத்தில் உள்ளது.'நாடு முழுவதும், 6.92 கோடி பேர், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர்' என, கூறபட்டுள்ளது.

அலட்சிய ஊழியர்களால் அப்பாவி மக்கள் உயிரிழந்தால்...'டிஸ்மிஸ்'

                                               
மின் விபத்தால் உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்க, அலட்சியமாக செயல்படும் பொறியாளர்களை,
மின் வாரியம், 'டிஸ்மிஸ்' செய்ய முடிவு செய்துள்ளது.புதிய மின் இணைப்புக்கு லஞ்சம், பணியில் அலட்சியம் உள்ளிட்ட, ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் ஊழியர்கள், பொறியாளர்கள் மீது, மின் வாரியம், இடமாறுதல், 'சஸ்பெண்ட்' ஆகிய நடவடிக்கைகளை எடுக்கிறது. சஸ்பெண்ட் செய்யும் நபர், அரசியல் சிபாரிசுடன், சில தினங்களில், மீண்டும் பணியில் சேர்ந்து விடுகிறார். இதனால், நடவடிக்கை என்பது, கண்துடைப்பு நாடகமாக இருப்பதாக, மக்கள் கருதுகின்றனர்.

சென்னை, கொடுங்கையூரில், நேற்று முன்தினம் நடந்த மின் விபத்தில் சிக்கி,


இரு சிறுமியர் உயிரிழந்தது, பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.அதற்கு காரணமான, மூன்று பொறியாளர்கள், ஐந்து ஊழியர்களை, மின் வாரியம் சஸ்பெண்ட் செய்தது. இதற்கு, பலரும் எதிர்ப்பு தெரிவித்து, 'டிஸ்மிஸ்' செய்யும்படி, அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
சென்னை, தலைமை செயலகத்தில், கொடுங்கையூர் மின் விபத்து தொடர்பாக, மின் துறை அமைச்சர், தங்கமணி மற்றும் மின் வாரிய அதிகாரிகளுடன், நேற்று, முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அதில், மின் விபத்தால் உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்க, அலட்சியமாக செயல்படும் பொறியாளர்களை, 'டிஸ்மிஸ்' செய்ய, மின் வாரியத்திற்கு, அரசு தரப்பில் ஒப்புதல் அளித்ததாக தெரிகிறது.

இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:

தண்டனைகள் கடுமையாக இருந்தால் தான், தவறுகள் குறையும். ஆனால், மின் வாரியத் தில், சஸ்பெண்ட் செய்யும் நபர், ஆட்சியாளர் களின் உதவியுடன், இரு தினங்களில்
வேலைக்கு வந்து விடுகிறார். அந்த விபரம், பலருக்கு தெரியாது.இதனால், வழக்கம்போல் பலர் அலட்சியமாக உள்ளனர். இதனால், வாரியத்திற்கு அவப்பெயர் ஏற்படுகிறது. இதை தவிர்க்க, மின் விபத்தால் உயிரிழப்பு ஏற்பட காரணமாகும் பொறியாளர், ஊழியர்கள் மீது, உச்சபட்ச தண்டனையாக, 'டிஸ்மிஸ்' செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

அறிக்கை கேட்கிறது ஐகோர்ட்:

சென்னை, கொடுங்கையூரில், மழைநீரில் மின் வினியோக பெட்டி மூழ்கி இருந்தது. அதில் ஏற்பட்ட மின் கசிவால், மழைநீரில் மின்சாரம் பாய்ந்தது. இது தெரியாமல், மழைநீரில் நடந்து சென்ற, பாவனா மற்றும் யுவஸ்ரீ என்ற சிறுமியர், மின்சாரம் தாக்கி, பரிதாபமாக உயிரி ழந்தனர். இந்த சம்பவம் குறித்து, தலைமை நீதிபதி, இந்திரா பானர்ஜி, நீதிபதி, எம்.சுந்தர் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், வழக்கறிஞர், ஜார்ஜ் வில்லியம்ஸ் முறையிட்டார்.

இதையடுத்து, 'அரசு என்ன நடவடிக்கை எடுத்து உள்ளது?' என, முதல் பெஞ்ச் கேள்வி எழுப்பியது. அதற்கு, சிறப்பு பிளீடர், ராஜகோபாலன், ''மின் வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் என, 8 பேர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டு உள்ளனர். பலியான சிறுமியரின் குடும்பத்துக்கு, இழப்பீடு வழங்கப்படுகிறது,'' என்றார்.
அதைத் தொடர்ந்து, நீதிபதிகள், 'மனித உயிர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதை, அரசு உறுதி செய்ய வேண்டும். இழப்பீடு வழங்குவது உட்பட, சம்பவம் குறித்து அறிக்கை அளிக்க வேண்டும்' என, அரசுக்கு உத்தரவிட்டனர். விசாரணை, இன்றும் தொடர்கிறது.

எஸ்.பி.ஐ., கடன் – டிபாசிட் வட்டி குறைப்பு!!!

புதுடில்லி : எஸ்.பி.ஐ., எனப்­படும், ஸ்டேட் பேங்க் ஆப்
இந்­தியா, வீடு மற்­றும் வாகன கடன்­க­ளுக்­கான வட்­டியை, 0.5 சத­வீ­தம் குறைத்­துள்­ளது. அதே சம­யம், பல்­வேறு, ‘டிபா­சிட்’களுக்­கான வட்டி, 0.25 சத­வீ­தம் குறைக்­கப்­பட்டு உள்­ளது.

கட­னுக்­கான வட்டி:
இவ்­வங்­கி­யின் வீட்­டு­வ­சதி கட­னுக்­கான வட்டி, 8.30 சத­வீ­த­மாக குறைந்­துள்­ளது. வாகன கட­னுக்­கான வட்டி, 8.70 சத­வீ­த­மாக குறைக்­கப்­பட்டு உள்­ளது. இவ்­வங்­கி­யில் தான், வீட்­டு­வ­சதி கட­னுக்­கான வட்டி, மிகக் குறை­வாக நிர்­ண­யிக்­கப்­பட்டு உள்­ளது. மாத ஊதி­யம் பெறு­வோ­ருக்கு, 30 லட்­சம் ரூபாய் வரை­யி­லான வீட்­டு­வ­சதி கடன், 8.30 சத­வீத வட்­டி­யில் கிடைக்­கும். கார் கட­னுக்­கான வட்டி, 8.75 – 9.25 சத­வீ­த­மாக இருந்­தது. இது, தற்­போது, 8.70 – 9.20 சத­வீ­த­மாக குறைக்­கப்­பட்டு உள்­ளது.
‘வாடிக்­கை­யா­ள­ரின் கடன் தகுதி, கடன் வரம்பு உள்­ளிட்ட அம்­சங்­களை பொறுத்து, வட்டி விகி­தம் இருக்­கும்’ என, எஸ்.பி.ஐ., வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யில் கூறப்­பட்­டுள்­ளது.

‘டிபாசிட்’
குறைக்­கப்­பட்ட புதிய வட்டி விகி­தம், நவ., 1 முதல் அம­லுக்கு வந்­துள்­ள­தாக, இவ்­வங்கி தெரி­வித்­துள்­ளது. எஸ்.பி.ஐ., பல்­வேறு, ‘டிபா­சிட்’களுக்­கான வட்­டியை, 0.25 சத­வீ­தம் குறைத்­துள்­ளது. இதன்­படி, ஓராண்டு, ‘டிபா­சிட்’டிற்கு வழங்­கப்­பட்டு வந்த, 6.50 சத­வீத வட்டி, தற்­போது, 6.25 சத­வீ­த­மாக குறைத்து நிர்­ண­யிக்­கப்­பட்டு உள்­ளது. அது போல, மூத்த குடி­ம­கன்­களின், ‘டிபா­சிட்’களுக்கு வழங்­கப்­பட்டு வந்த வட்டி, 7 சத­வீ­தத்­தில் இருந்து, 6.75 சத­வீ­த­மாக குறைக்­கப்­பட்டு உள்­ளது. ‘டிபா­சிட்’களுக்­கான வட்டி குறைப்பு, நவ., 1 முதல், அம­லுக்கு வந்­துள்­ளது.

சென்னையில் மழை வெளுத்து வாங்கும் - நார்வே வானிலை மையம் எச்சரிக்கை

                                                    

                                    
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ளது. இதில் 
சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் பகல் மற்றும் இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது.இன்னும் 2 அல்லது 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்கும் என வானிலை மைய அறிக்கைகள் தெரிவித்துள்ளன.  
சென்னையில் நேற்று மாலை மற்றும் இரவு நேரங்களில் அதிக மழை பொழிவு இருந்தது. அதன் காரணமாக, பல பகுதிகள் நீரால் சூழப்பட்டுள்ளது. மீஞ்சூர், வேளச்சேர், கோவிளம்பாக்கம் பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் நேற்று இரவு அலுவலகத்திலிருந்து வீடு திரும்பியவர்கள் மிகவும் சிரமம்பட்டனர்.  
இந்நிலையில், நேற்று போல் இன்றும் மாலை நேரத்தில் சென்னையில் மழை பெய்யும் என நார்வே வானிலை மையம் எச்சரித்துள்ளது. மாலை 6 மணிக்கு தொடங்கி விடிய விடிய மழை நீடிக்கும் எனவும்,பகல் நேரத்தில் லேசானது முதல் மிதமானது வரை மழை நீடிக்கும் எனவும் அந்த வானிலை மையம் தெரிவித்துள்ளது. நேற்று மாலை சென்னையில் கனமழை பெய்யும் என நார்வே வானிலை மையம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

கல்வி உதவித்தொகை இருமடங்கு உயர்வு!!!