யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

9/8/16

இந்திய வரலாறு - ஒரு குறிப்பு--கட்டுரைகள்,---பொதுஅறிவுகட்டுரை,


கிமு 3500-1500 - சிந்து வெளி நாகரிகம்
கிமு 1000 - கங்கை நதிக்கரையில் ஆரியர்கள் குடியேறுதல்கிமு
900 - மகாபாரதப் போர்
கிமு 800 - இராயமாயனத்தின் முதல் பகுதி துவக்கம். மகாபாரதத்தின் முதல் பகுதி வங்காளத்திற்குஆரியர்கள் இடம் பெயர்தல்
கிமு 550 - உபநிஷங்கள் தொகுப்புகிமு
554 - புத்தரின் நிர்வாணம்
கிமு 518 - பாரசீகர்களின் ஆதிக்கத்தில் இந்தியா
கிமு 326 - அலெக்சாண்டர் இந்தியாவின் மீது படையெடுப்பு
கிமு 321 - பாடலிபுரத்தில் சந்திரகுப்தர் மெளரிய வம்சத்தை நிறுவுதல்
கிமு 272-232 - அசோகர் ஆட்சி
கிமு 185 - புருஷ்யமித்திரன் சங்க சாம்ராஜ்யத்தை நிர்மாணித்தல்
கிமு 58 - விக்கரம் ஆண்டு
கிமு 30 - தெற்கில் பாண்டியர் சாம்ராஜ்யம்
கிபி 40 - சாகர்கள் சிந்து பகுதியில் ஆட்சி
கிபி 52 - புனித தாமஸ் இந்தியா வருகை
கிபி 78 - சகா சகாப்தம் ஆரம்பம்
கிபி 98-117 - கனிஷ்கரின் காலம்
கிபி 320 - குப்த சாம்ராஜ்யம் உருவாதல்
கிபி 380-143 - சந்திரகுப்த விக்கிரமாதித்தன் காலம், காளிதாசர் காலம், இந்து மதம் உயர்வடைந்தது
கிபி 405-411 - பாகியான் வருகை
கிபி 606 - ஹர்ஷவர்த்தனர் ஆட்சி
கிபி 609 - சாளுக்கிய வம்சம் தோற்றம்
கிபி 622 - ஹீஜிரா வருடம் துவக்கம்
கிபி 629-645 - யுவான் சுவாங் வருகை
கிபி 712 - முகமது பின் காசிம் படையெடுப்பு
கிபி 985 - ராஜராஜன் சோழன் காலம்
கிபி 1001-1026 - முகமது கஜினி இந்திய படையெடுப்பு சோமநாதர் ஆலயம் அழிப்பு
கிபி 1191 - முதலாம் தரைன் யுத்தம்
கிபி 1192 - இரண்டாம் தரைன் யுத்தம்
கிபி 1206 - டில்லியில் அடிமை வம்சத்தை உருவாக்குதல்
கிபி 1221 - ஜென்கின்கான் படையெடுப்பு
கிபி1232 - குதும்பினார் கட்டப்பட்டது
கிபி1298 - மார்க்கபோலோ இந்தியா வருகை
கிபி1333 - இப்னுபத்துக் இந்தியா வருகை
கிபி1336 - தென்னிந்தியாவில் விஜய நகரப் பேரரசு உதயம்
கிபி1347 - பாமினி அரசு துவக்கம்
கிபி1398 - தைமூரின் இந்திய படையெடுப்பு
கிபி1424 - டில்லியில் பாமினி வம்சம்
கிபி1451 - லோடி வம்சம்
கிபி1496 - குருநானக் பிறப்பு
கிபி1498 - வாஸ்கோடகாமா கடல் வழியாக இந்தியா (கோழிக் கோடு வருகை)
கிபி1516 - போர்த்துக்கீசியர் கோவாவை கைப்பற்றுதல்
கிபி1526 - முதலாம் பானிபட் யுத்தம்
கிபி1539 - குருநானக் இறப்பு
கிபி1556 - ஆக்கப் பதவி ஏற்பு - இரண்டாம் பானிபட் யுத்தம்
கிபி1564-65 - கானிகோட்டா யுத்தம்
கிபி1576 - ஹால்டி காந்தி யுத்தம்
கிபி1600 - கிழக்கிந்திய கம்பெனி இந்தியா வருகை
கிபி1604 - சீக்கியரின் ஆதிகிரந்தம் வெளியிடப்பட்டது
கிபி1631 - தாஜ்மகால் கட்டப்பட்டது
கிபி1639 - சென்னையில் புனித ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது
கிபி1658 - டெல்லி சக்கரவர்த்தி ஒளரங்கசீப்
கிபி1739 - நாதர்ஷா இந்தியாவில் ஊடுருவல், ஈரானுக்கு 6 விலாசனத்தை கொண்டு செல்லுதல்
கிபி1748 - முதல் ஆங்கிலேய - பிரஞ்சுப் போர்
கிபி1757 - பிளாசிப் போர்
கிபி1761 - மூன்றாம் பானிபட் போர்
கிபி1764 - பாக்ஸர் போர்
கிபி1790-92 - மைசூர் போர்
கிபி1799 - நான்காம் மைசூர் போர்
கிபி1803 - ஆங்கிலேய மராத்திய போர்
கிபி1805 - மராத்தியர் தோல்வி
கிபி1835 - ஆங்கிலேய கல்வி முறை ஆரம்பம்
கிபி1845 -1846 - ஆங்கிலேயர் - சீக்கியர் போர்
கிபி1853 - முதல் இந்திய ரயில் பாதை (பம்பாய் - தானே)
கிபி1857 - முதல் இந்திய சுதந்திரப் போர் (தென் இந்தியாவில் நெல்லை சீமையில் முதலில் ஆரம்பமானது)
கிபி1858 - கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி முடிவு
கிபி1885 - இந்திய தேசிய காங்கிரஸ் உதயம்
கிபி1906 - முஸ்லீம் லீக் உதயம்
கிபி1909 - மின்டோ - மார்லி சீர்திருத்தம்
கிபி 1914-18 - முதலாம் உலகப் போர்
கிபி1919 - மாண்டேகு செம்ஸ் போர்டு சீர்திருத்தம்
கிபி1920 - காங்கிரஸ் ஒத்துழையாமை இயக்கம்
கிபி1921 - பிரின்ஸ் ஆக்கப் வேல்ஸ் இந்திய வருகை
கிபி1922 - ஒத்துழையாமை இயக்கம் கைவிடப்பட்டது
கிபி1928 - சைமன் கமிஷன் வருகை
கிபி1931 - காந்தி - இர்வின் ஒப்பந்தம்
கிபி1934 - சட்டமறுப்பு இயக்கம் வாபஸ் வாங்கப்பட்டது
கிபி1938 - காங்கிரஸ் அமைச்சரவை ராஜினமா
கிபி1942 - வெள்ளையனே வெளியேறு போராட்டம்
கிபி1945 - ஜப்பான் துணையுடன் நேதாஜியின் இந்தியன் நேஷனல் ஆர்மி பிரிட்டிஷாரிடம்தோல்வி

கிபி1947 - இந்தியா விடுதலையானது.


நன்றி
Muthanna Brte

நவம்பர் 14. குழந்தைகள் தினம்!===பொதுஅறிவுகட்டுரை


இந்தியா விடுதலைப்பெற்ற பின் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக பதவி வகித்த ஜவஹர்லால் நேருவின் பிறந்த தினமான நவ.ம்பர் 14 ம் தேதி நம் நாட்டில் தேசிய குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. ஜவஹர்லால் நேரு குழந்தைகள் மீது அதீத அன்பும், பாசமும் கொண்டிருந்தார். அதே போல் குழந்தைகளும் நேருவின் மீது பற்று வைத்திருந்தனர். குழந்தைகளால் அவர் நேரு மாமா என செல்லமாக அழைக்கப்பட்டார்.
பண்டிட் ஜவஹர்லால் நேரு 1889ம் ஆண்டு உ.பி.,யிலுள்ள அலகாபாத்தில் பிறந்தார் பிறகு இங்கிலாந்தில் உயர் கல்வியை முடித்துவிட்டு சுதந்திர போராட்டத்தில் மகாத்மா காந்தியுடன் துணை நின்றார் இந்தியா சுதந்திரம் பெற்றதும் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஆனார். அவர் குழந்தைகள் மீதும், ரோஜா மலர்கள் மீதும் நேரு அளவு கடந்த பற்றுதலை கொண்டிருந்தார். நேருவின் ஆட்சியில் இந்தியா முழுவதும் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் நலம், அவர்களின் கல்வி, முன்னேற்றம் குறித்து பல்வேறு திட்டங்கள் இவரது ஆட்சியின் போது நிறைவேற்றப்பட்டன. மேலும் தொழிற்நுட்ப கல்லூரிகளும் எய்ம்ஸ் போன்ற சர்வதேச தரத்திலான உயர் கல்வி நிறுவனங்களும் இந்தியாவில் துவக்கப் பட்டன. தனது அலுவலக பணிகளுக்கு மத்தியிலும் குழந்தைகளை சந்தித்து அவர்களுடன் உரையாடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.
ஒவ்வொரு நாட்டின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும் முக்கியமான அடித்தளமாக விளங்குவது குழந்தைகளே என்பதை யாராலும் மறுக்க முடியாது சிறு வயதில் அவர்கள் கற்றுக்கொள்ளும் விஷயங்களை பொறுத்தே அவர்கள் பெரியவர்களானதும் அதன் விளைவுகள் தெரியவரும். எனவே சிறு வயது முதலே அவர்களுக்கு நல்லொழுக்கத்தை கற்றுக்கொடுக்க வேண்டிய பொறுப்பு பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நிறையவே உண்டு. முக்கியமாக பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மை மற்றும் அன்பு செலுத்துதல், சகிப்புத்தனமை மற்றும் பொறுமை போன்ற பல நல்ல பழக்கங்களை தங்களது குழந்தைகளுக்கு நாம் கற்றுக்கொடுக்க வேண்டும்
ஆண்டுதோறும் கொண்டாடப்படும் குழந்தைகள் தினத்தின் போது அனைத்து பள்ளிகளிலும் குழந்தைகளுக்கான சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள் ஆனால் அச்சமயத்தில் ஆதரவற்ற அனாதை குழந்தைகளை எவரும் கண்டுகொள்வதில்லை. இந்நிலை மாறி இந்த குழந்தைகள் அனைவரையும் ஒன்றுதிரட்டி அவர்களுக்கு இத்தினத்தில் சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தி இனிப்புகள் வழங்கி அவர்களை மகிழ்விக்க வேண்டும். இது போன்ற ஆதரவற்ற குழந்தைகளை அரவணைத்து கொண்டாடப்படும் கொண்டாட்டம்தான் நேரு நினைத்த உண்மையான குழந்தைகள் தின கொண்டாட்டமாக இருக்க முடியும்.

ஏ.பி.ஜே அப்துல்கலாம் வாழ்க்கை வரலாறு :---பொதுஅறிவுகட்டுரை




இந்தியாவின் தலைசிறந்தவிஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர், மிகப்பெரிய பொருளாளர், இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர், இந்திய ஏவுகணை நாயகன்,இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை, சிறந்த ஆசிரியர் மற்றும்
Image result for abdul kalam quotes
அனைவராலும் மதிக்கதக்க அற்புதமான பேச்சாளர், வருங்கால இளைஞர்களின் முன்மாதிரியாக கருதப்படும் நம் எல்லோருக்கும் தெரிந்த ஏ.பி.ஜே அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றை பற்றி மேலும் தெரிந்துகொள்ள மேலும் படியுங்கள். பிறப்பு: அக்டோபர் 15, 1931 இடம்: இராமேஸ்வரம் (தமிழ் நாடு) பிறப்பு: 1931 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 15

ஆம் நாள் ஜைனுலாப்தீனுக்கும், ஆஷியம்மாவுக்கும் மகனாக இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில், பாம்பன் தீவில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறிய நகராட்சியான இராமேஸ்வரத்தில்பிறந்தார். இவர் ஒரூ இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்தவர்.
இளமைப் பருவம்:
அப்துல் கலாம், இராமேஸ்வரத்திலுள்ள தொடக்கப்பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை தொடங்கினார்.ஆனால் இவருடைய குடும்பம் ஏழ்மையில் இருந்ததால், இளம் வயதிலே இவர் தன்னுடைய குடும்பத்திற்காக  வேலைக்குச் சென்றார். பள்ளி நேரம் போக மற்ற நேரங்களில் இவர் செய்தித்தாள்கள் விநியோகம் செய்தார். இவருடைய பள்ளிப்பருவத்தில் இவர் ஒரு சராசரி மாணவனாகவே வளர்ந்தார். கல்லூரி வாழ்க்கை: தன்னுடைய பள்ளிப்படிப்பை முடித்தபிறகு, திருச்சிராப்பள்ளியிலுள்ள “செயின்ட் ஜோசப் கல்லூரியில்” இயற்பியல் பயின்றார். 1954ஆம் ஆண்டு, இயற்பியலில் இளங்கலை பட்டம் பெற்றார். ஆனால், இயற்பியல் துறையில் ஆர்வம் இல்லை என உணர்ந்த இவர், 1955 ஆம் ஆண்டு தன்னுடைய “விண்வெளி
பொறியில் படிப்பை” சென்னையிலுள்ள எம்.ஐ.டி-யில் தொடங்கினார். பின்னர் அதே கல்லூரியில் முதுகலைப் பட்டமும் பெற்றார். விஞ்ஞானியாக ஏ.பி.ஜே அப்துல் கலாம்: 1960 ஆம் ஆண்டு வானூர்தி அபிவிருத்தி அமைத்தல் பிரிவில்
(DRDO) விஞ்ஞானியாக தன்னுடைய ஆராய்ச்சி வாழ்க்கையைத் தொடங்கிய அப்துல் கலாம், ஒரு சிறிய ஹெலிகாப்டரை இந்திய ராணுவத்திற்காக  வடிவமைத்து கொடுத்தார். பின்னர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில்
(ISRO) தனது ஆராய்ச்சிப்பணிகளைத் தொடர்ந்த அவர், துணைக்கோள் ஏவுகணைக் குழுவில் (SLV) செயற்கைக்கோள் ஏவுதலில் முக்கிய  பங்காற்றினார். 1980 ஆம் ஆண்டு SLV -III ராக்கெட்டைப் பயன்படுத்தி ரோகினி-I என்ற துணைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவச்செய்தார். இது அவருக்கு மட்டுமல்லாமல்,இந்தியாவிற்கே ஒரு சாதனையாக அமைந்தது. இத்தகைய வியக்கதக்க செயலைப் பாராட்டி மத்திய அரசு இவருக்கு 1981 ஆம் ஆண்டு இந்தியாவின் மிகப் பெரிய விருதான “பத்ம பூஷன்” விருது வழங்கி கௌரவித்தது. 1963 ஆம் ஆண்டு முதல் 1983 ஆம் ஆண்டு வரை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் பல பணிகளை சிறப்பாக செய்த இவர், 1999 ஆம் ஆண்டு “பொக்ரான் அணு ஆயுத சோதனையில்” முக்கிய பங்காற்றியுள்ளார். இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக மாற்றிய ஏ.பி.ஜே அப்துல் கலாம், இதுவரை ஐந்து ஏவுகணை திட்டங்களில் பணிபுரிந்துள்ளார். அவர், அனைவராலும் இந்திய ராணுவ ராக்கெட் படைப்பின் பிதாவாக போற்றப்படுகிறார். குடியரசுத் தலைவராக ஏ.பி.ஜே அப்துல் கலாம்:
2002 ஆம் ஆண்டு நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று,
இந்தியாவின் 11 வது குடியரசு தலைவராக ஜூலை 25 ஆம் நாள் 2002
ல் பதவியேற்றார். குடியரசு தலைவராவதற்கு முன், இந்தியாவின் மிகப்பெரிய விருதான “பாரத ரத்னா விருது” மத்திய அரசு இவருக்கு வழங்கி கௌரவித்தது. மேலும், “பாரத ரத்னா” விருது பெற்ற மூன்றாவது குடியரசு தலைவர் என்ற பெருமையைப் பெற்றார். 2007 ஆம் ஆண்டு வரை குடியரசுத் தலைவராக இருந்த இவர் “மக்களின் ஜனாதிபதி” என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார். 2007 ஆம் ஆண்டு குடியரசுத் தேர்தலில் மீண்டும் போட்டியிட நினைத்த கலாம், பிறகு பல காரணங்களால் அந்த தேர்தலில் போட்டியிட போவதில்லை என முடிவு செய்து விலகினார்.
விருதுகள்:
1981 – பத்ம பூஷன்
1990 – பத்ம விபூஷன்
1997 – பாரத ரத்னா
1997 – தேசிய ஒருங்கிணைப்பு
இந்திராகாந்தி விருது
1998 – வீர் சவர்கார் விருது
2000 – ராமானுஜன் விருது
2007 – அறிவியல் கவுரவ டாக்டர் பட்டம்
2007 – கிங் சார்லஸ்-II பட்டம்
2008 – பொறியியல் டாக்டர் பட்டம்
2009 – சர்வதேச வோன் கார்மான்
விங்ஸ் விருது
2009 – ஹூவர் மெடல்
2010 – பொறியியல் டாக்டர் பட்டம்
2012 – சட்டங்களின் டாக்டர்
2012 – சவரா சம்ஸ்க்ருதி புரஸ்கார்
விருது
ஏ.பி.ஜே அப்துல் கலாம் எழுதிய
நூல்கள்:
அக்னி சிறகுகள்
இந்தியா 2012
எழுச்சி தீபங்கள்
அப்புறம் பிறந்தது ஒரு
புதிய குழந்தை
இறுதிவரைக்கும் பிரம்மச்சாரியாக வாழ்ந்த ஏ.பி.ஜே அப்துல் கலாமின்
எளிமையான வாழ்க்கையும், அவரது இனிமையான பேச்சும் எல்லோரையும் கவர்ந்தது என்றால் வியப்பில்லை. ‘எதிர்கால இந்திய இளைஞர்கள் கையில்’ என்ற அவர் “கனவு காணுங்கள்! அந்த கனவை நினைவாக்க பாடுபடுங்கள்”
என்னும் வாக்கியத்தை இளைஞர்களின் மனதில் வேரூன்ற செய்தவர்.
உலகம் போற்றும் விஞ்ஞானியான கலாம் தன்னுடைய பொன்மொழிகளாலும்,கவிதைகளாலும், வாசகங்களாலும் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

குடியரசு என்றால் என்ன?---பொதுஅறிவுகட்டுரை,


இந்தியாவில் சுமார் 200 நுற்றாண்டுகளுக்கும் மேல் நீடித்து வந்த ஆங்கில ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், தேசிய அளவிலும், மாநில அளவிலும், பல கழகங்களையும், புரட்சிகளையும், அகிம்சை வழியில் பலப் போராட்டங்களையும் நிகழ்த்தி தன்னுடைய குருதியையும்,
தேகங்களையும் தமது தாய் நாட்டிற்காக அர்பணித்த தேசத் தலைவர்களையும், வீரர்களையும், புரட்சியாளர்களையும் நினைவுக்கூரும் நாள், ‘குடியரசு தினம்’ ஆகும்.

ஆரம்ப காலத்தில் நமது மன்னர்கள் ஒற்றுமையாக இல்லாமல், இந்தியாவை சிறு சிறு மாநிலங்களாகப் பிரித்து ஆட்சி செய்து கொண்டிருந்ததால், வணிகம் செய்வதற்காக இந்தியாவில் நுழைந்த பிரிட்டிஷ்காரர்கள், படிப்படியாகத் தங்களுடைய ஆதிக்கத்தை ஏற்படுத்தி, இந்தியா முழுவதும் கொடுங்கோல் ஆட்சியை அரங்கேற்றினர். அத்தகைய கொடுங்கோல் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்து, 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் இந்தியா விடுதலைப் பெற்றது. இந்திய விடுதலைக்குப் பிறகு, மக்களாட்சி மட்டுமே ஒரு நாட்டின் சிறப்பான வளர்ச்சிக்கு அடையலாம் எனக் கருதி, டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் தலைமையில் இந்திய அரசியல் சட்டம் நிறைவேற்றப்பட்டு, 1950 ஜனவரி 26 முதல் குடியரசு தினமாகக் கொண்டாடப்படுகிறது. மேலும், அத்திருநாளில் தமது தாய் நாட்டினை அந்நியர்களின் பிடியிலிருந்து காப்பாற்றி, பாரத மண்ணில் ஒவ்வொரு மனிதனும் சுதந்திரக் காற்றை சுவாசிக்க பாடுபட்ட தியாகிகளை நினைவுக்கூரும் வகையில் விடுமுறை அளிக்கப்பட்டு, நாடெங்கும் அனைத்து பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், அலுவகங்களிலும் தேசிய கீதம் பாடி கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டு வருகிறது. அத்தகைய சிறப்புமிக்க திருநாளான குடியரசு தினம் என்றால் என்ன? அதை கொண்டாடப்படுவதற்கான முதற்காரணம் என்ன? என்பதை விரிவாகக் காண்போம்.ஆங்கிலேயரின் ஆட்சி

ஐரோப்பாவைச் சேர்ந்த போர்ச்சுகீசிய மாலுமியான வாஸ்கோடகாமா என்பவர், கடல்வழிப் பயணமாக 1948 ஆம் ஆண்டு இந்தியாவைக் கண்டறிந்தார். அதன் பிறகு, இந்தியாவின் வளமையைக் கண்ட ஐரோப்பியர்கள் வணிகம் செய்யும் நோக்கத்துடன், இந்தியாவில் குடியேறினர். அதன் அடிப்படையில் போர்ச்சுகீசியர்கள், முதன் முதலாக இந்தியாவின் கடலோரப் பகுதிகளான கோவா, டியூ, டாமன் மற்றும் பாம்பே போன்ற இடங்களில் தங்களது வாணிக முகாம்களை அமைத்தனர். இவர்களைத் தொடர்ந்து, டச்சுக்காரர்கள், பிரிட்டிஷ்காரர்கள், பிரெஞ்சுகாரர்களும் என இந்தியாவில் வணிக முகாம்களை ஏற்படுத்திக்கொண்டு வாணிபத்தில் ஈடுபட்டனர். இந்தியாவில் குடியேறிய அனைத்து ஐரோப்பியர்களும், வணிகத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்பட்டாலும், பிரிட்டிஷ்காரர்கள் மட்டும் ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனி என்ற ஒன்றை நிறுவி நிரந்தரமாக வணிகத்தில் ஈடுபட்டனர். நாளடைவில் இந்திய மன்னர்களிடம் இருந்த ஒற்றுமையின்மையை நன்றாகப் பயன்படுத்தி, படிப்படியாக தங்களுடைய ஆதிக்கத்தை விரிவுபடுத்தி, இந்தியாவை முழுமையாகத் தன்னுடைய ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்தார்கள். குறுகிய காலத்திற்குள் இந்தியாவைத் தன்னுடைய ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்த பிரிட்டிஷ்காரர்கள், இந்திய வளத்தை சுரண்டியது மட்டுமல்லாமல், மக்களை அடிமையாக்கி கொடுங்கோல் ஆட்சி புரியத் தொடங்கினார்கள்.இந்தியா சுதந்திரம் அடைதல்ஆங்கிலேயர்களின் அடக்குமுறையைக் கண்டு வெகுண்ட மக்கள் நாளுக்கு நாள் போராட்டங்கள், கழகங்கள், புரட்சிகள் எனத் தொடங்கி, பிரிட்டிஷ்காரர்களை இந்தியாவை விட்டே விரட்ட எண்ணினர். அதன் அடிப்படையில் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், பிரித்தானிய இந்தியாவில் தேசியவாத உணர்வுகள், காட்டுத் தீ போல் இந்திய மக்களிடையே பரவத்தொடங்கியது. ‘இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி’ என்னும் அமைப்பில் ஒன்றிணைந்த இந்திய மக்கள், ‘மின்டோ-மார்லி சீர்திருத்தம்’, ‘மாண்டேகு செமஸ் போர்டு சீர்திருத்தம்’, ‘காங்கிரஸ் ஒத்துழையாமை இயக்கம்’, ‘சட்ட மறுப்பு இயக்கம்’, ‘சைமன் கமிஷனுக்கு எதிர்ப்பு’, ‘வெள்ளையனே வெளியேறு இயக்கம்’, ‘உப்பு சத்தியாகிரகம்’ எனப் பல போராட்டங்களை ஆங்கில ஆட்சிக்கு எதிராக அரங்கேற்றினர். இறுதியில், 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் விடுதலை இந்தியா என்ற புதிய பாரதம் உதயமானது.இந்தியக் குடியரசு தினம் கொண்டாடப்படுவதற்கான காரணம்1929 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் லாகூரில் கூடிய அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில், அனைத்துத் தலைவர்களாலும் “பூரண சுயராஜ்யம்” (முழுமையான சுதந்திரம் என்பது பொருள்) என்பதே நமது நாட்டின் உடனடியான லட்சியம், என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் பிறகு, காந்தியால் இந்தியத் தன்னாட்சிக்கான சாற்றல் உருவாக்கப்பட்டது. அதன் அடிப்படையில் 1930 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் நாள் முதற்கட்டமாக “சுதந்திர நாளாகக்” கொண்டாடப்பட வேண்டும் எனக் ட்டுக்கொள்ளப்பட்டது.

இந்தியக் குடியரசு தினம்1946 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9 ஆம் நாள் காங்கிரஸ் கட்சியால் இந்திய அரசியல் நிர்ணய சபை கூட்டப்பட்டு, அதன் தற்காலிகத் தலைவராக சச்சிதானந்த சின்கா என்பவரை நியமித்தது. ஆகஸ்ட் 15 1947 இந்திய விடுதலைக்குப் பிறகு, இந்திய அரசியல் நிர்ணய சபைத் தலைவராக டாக்டர் ராஜேந்திரப் பிரசாத் நியமிக்கப்பட்டார். அவரே விடுதலை இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராகவும் பொறுப்பேற்றார். அதன் பிறகு, இந்திய அரசியலமைப்பு வரைவுக்குழு அமைக்கப்பட்டு, டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் தலைமையில் இந்திய அரசியல் அமைப்பு சாசன் எழுதப்பட்டது. முகவுரை, விதிகள், அட்டவணைகள், பிற்சேர்க்கை, திருத்த மசோதாக்கள் போன்ற சிறப்பு அம்சங்களைக் கொண்டு நீண்ட ஆவணமாக எழுதப்பட்ட இந்த சாசனம், இந்திய அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, மக்களாட்சியைக் குறிக்கோளாகக் கொண்டு நிறைவேற்றப்பட்டதால், 1930 ஜனவரி 26 ஆம் நாளை நினைவுகூரும் வகையில் 1950 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் நாளை இந்திய தேசிய குடியரசு தினமாக நடைமுறைப்படுத்தப்பட்டது.குடியரசு என்பதன் பொருள்

குடியரசு என்பதன் பொருள் “மக்களாட்சி” ஆகும். அதாவது, தேர்தல் மூலம் மக்கள் விரும்பிய ஆட்சியாளர்களைத் தேர்தேடுத்துகொள்ளும் முறைக்கு குடியாட்சி எனப்படுகிறது. “மக்களுக்காக, மக்களுடைய மக்கள் அரசு” என மிகச்சரியாக குடியரசு என்ற வார்த்தைக்கு இலக்கணம் வகுத்துத் தந்தவர், அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன். அத்தகைய மக்களுக்கான அரசை இந்தியாவில் ஏற்படுத்தினால்தான், இந்தியா முழு சுதந்திரம் பெற்ற நாடாக ஏற்றுக்கொள்ளப்படும் எனக் கருதி உருவாக்கப்பட்டது தான் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம்.குடியரசு தினக் கொண்டாட்டம்இந்திய விடுதலைக்குப் பிறகு 1950 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் நாளை இந்திய தேசிய குடியரசு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள், இந்திய மூவண்ணக் கொடியை ஏற்றி, இந்த குடியரசுதினக் கொண்டாட்டத்தை ஆரம்பித்து வைத்தார். அன்று முதல் ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் நாள் தம்முடைய தாய் திருநாட்டை காக்க தமது இன்னுயிரையும் நீத்த தியாகிகளை நினைவுகூரும் வகையில் விடுமுறை அளிக்கப்பட்டு, நாடெங்கும் அனைத்து பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், அலுவகங்களிலும் தேசிய கீதம் பாடி கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல், ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று சிறந்த சேவை புரிந்தோருக்கும், வீரதீர சாகசம் புரிந்தவர்களுக்கும் விருதுகள், பாராட்டுகள், பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்படுகிறது. சுதந்திரம் பெற்ற பிறகு சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் என்ற சிறப்பு பெற்ற ஜவர்ஹலால் நேரு அவர்களின் முன்னிலையில் முதல் குடியரசு தின அணிவகுப்பு நடைபெற்றது. மேலும், அன்றைய நாள் புது தில்லியில் குடியரசுத்தலைவர் முன்னிலையில் முப்படைகளின் அணிவகுப்பும், அதைத் தொடர்ந்து, ஒவ்வொரு மாநிலங்களின் சார்பிலும் அவர்களின் சாதனை அலங்கார ஊர்த்தி அணிவகுப்பு நடைபெறும்.

இன்றைய பொழுதில் இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு, என்பதில் பெருமைக் கொள்கிறோம் என்றால் அதன் பின்னணியில் லட்சக்கணக்கான போராளிகளின் குருதியும், ஆயிரக்கணக்கான தேசத் தலைவர்களின் தியாகமும் மறைந்திருக்கிறது என்றால் யாராலும் மறுக்க இயலாது. சுமார் 100 கோடிக்கும் மேல் மக்கள் தொகையைக் கொண்ட நாடாக இருந்தாலும், சாதி, மதம், மொழி எனப் பல வேறுபாடுகள் இருந்தாலும் அனைவரும் இந்தியர் என்பதில் பெருமைகொள்ளுவோம்.

வாழ்க பாரதம்!!!! ஜெய்ஹிந்த்

முக்கியமான மற்றும் அவசியமான தொடர்பு எண்கள்---தகவல் துளிகள்,

வற்றிப் போகும் வாத்தியார்----தகவல் துளிகள்,

8/8/16

நான்கு பரிமாண முறையில் அறிவியல் பாட படங்கள்

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்கள், அறிவியல் பாடங்களை எளிதில் புரிந்து கொள்ளும் வகையில், நான்கு பரிமாண முறையில் படங்களை காட்டும், 'மொபைல் போன் ஆப்' வெளியிடப்பட்டுள்ளது. பள்ளிகளில் பாடங்களை எளிதில் புரிய வைக்கும் வகையில், பல புதிய முயற்சிகளை பள்ளிக் கல்வித்துறை மேற்கொண்டுள்ளது.



இந்த வரிசையில், நான்கு பரிமாணங்களில் படங்களை காட்டும்,மொபைல் போன் ஆப் மற்றும் காணொலி காட்சி குறுந்தகடுகளை, மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த ஆப், ஆண்ட்ராய்ட் போனில், tnschools live என்ற பெயரில், கூகுள் பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து, பயன்படுத்தலாம். இதுகுறித்து, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர், ராமேஸ்வர முருகன் கூறியதாவது:இந்த மொபைல் போன், 'அப்ளிகேஷனை' கேமரா மொபைல் போனில் பயன்படுத்தும் போது, அந்த கேமரா மூலம் புத்தகத்தில் உள்ள அறிவியல் பாட படங்கள் நான்கு பரிமாணமாக தெரியும்.

10ம் வகுப்பில் அறிவியல், பிளஸ் 2வில் இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் பாடங்களில், 141 படங்கள் இந்த தொழில்நுட்பத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதன் மூலம், 13 ஆயிரம் பள்ளிகளைச் சேர்ந்த, 17 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர்.இது தொடர்பான, காணொலி காட்சி குறுந்தகடுகள், 6,000 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு உள்ளன. நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கற்பிப்பது குறித்து, ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

அரசு உதவிபெறும் பள்ளிகளில்உபரி ஆசிரியர் இடமாறுதல்கவுன்சலிங் எப்போது?

அரசு உதவி பெறும் தொடக்க மற் றும் நடு நி லை பள் ளி க ளில் உபரி ஆசி ரி யர் களுக்கு பணி இட மா று தல் கவுன் ச லிங் நடத்த வேண் டும் என்று ஆசி ரி யர் கள்எதிர் பார்க் கின் ற னர். அரசு மற் றும் அரசு உதவி பெறும் பள் ளி க ளில், தேவையான ஆசி ரி யர் க ளின் எண் ணிக் கையை விட கூடு த லாக உபரி ஆசி ரி யர் களை நியம னம் செய் வது வழக் கம்.


           
தனி யார் பள் ளி க ளு டன் ஒப் பி டு கை யில், அரசுமற் றும் அரசு உதவி பெறும் பள் ளி க ளில் ஒவ் வொரு ஆண் டும் மாண வர் சேர்க்கைகுறைந்து வரு கி றது. தமி ழ கத் தில் பள்ளி மாண வர் க ளின் எண் ணிக் கைக்குஏற் றார் போல், ஒவ் வொரு ஆண் டும் உபரி ஆசி ரி யர் க ளுக்கு பணி இட மா று தல்வழங் கப் பட்டு வரு கி றது.ஆனால் அரசு உதவி பெறும் தொடக்க மற் றும் நடு நி லைப் பள் ளி க ளில் கடந்த சிலஆண் டு க ளாக இந்த பணி இட மா று தல் வழங் கப் ப ட வில்லை. இத னால் உபரி ஆசி ரியர் கள் அந் தந்த பள் ளி க ளில், எந்த வேலை யும் செய் யா மல் சம் ப ளம் வாங்கும் நிலை உள் ளது. இதை சிலர் சாத க மாக பயன் ப டுத் திக் கொள் கின் ற னர் ஒரேசம யத் தில் இரண்டு இடங் க ளில் வேலை செய் கி றார் கள். இத னால் கோடிக் க ணக்கில் அரசு பணம் வீணா கி றது.ஆனால் பெரும் பா லான ஆசி ரி யர் கள் பணி இட மா று தலை எதிர் பார்க் கின் றனர்.

அரசு தரப் பில் இது வரை பணி யிட மாறு தல் வழங் கப் ப டா த தால் பலர்விரக்தி அடைந் துள் ள னர். வேறு பள் ளி க ளுக்கு இட மா று தல் வழங் கப்பட்டால், அரசு உதவி பெறும் பள் ளி க ளில் படிக் கும் மாண வர் க ளின் எண் ணிக்கைகூடும். அதன் மூ லம் தமி ழ கத் தில் கல் வித் த ரம் மேலும் உயர்த்த முடி யும்என்று ஆசி ரி யர் கள் தெரி விக் கின் ற னர்.

பணி விடுவிப்பு சான்றிதழ்



மருத்துவம் சார் பட்டப்படிப்பு 18,000 பேர் விண்ணப்பம்

பி.எஸ்சி., நர்சிங் உள்ளிட்ட, மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகளில் உள்ள, 7,745 இடங்களுக்கு, 18 ஆயிரத்து, 324 பேர் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில், பாரா மெடிக்கல் என்ற,
பி.பார்ம்., - பி.எஸ்சி., நர்சிங் உள்ளிட்ட, ஒன்பது வித மருத்துவப் படிப்புகளுக்கு, அரசு கல்லுாரிகளில், 555 இடங்கள்; சுயநிதி கல்லுாரிகளில், மூன்று வித படிப்புகளுக்கு, 7,190 இடங்கள் என, 7,745 இடங்கள் உள்ளன. 20 ஆயிரத்து, 247 பேர் விண்ணப்பங்கள் பெற்றிருந்தனர். விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க, நேற்று முன்தினம் கடைசி நாள். மொத்தம், 18 ஆயிரத்து, 324 பேர் விண்ணப்பங்கள் வந்துள்ளன. 'அடுத்த வாரம் தர வரிசை பட்டியல் வெளியிடப்படும்; இம்மாத இறுதியில் கலந்தாய்வு நடத்தப்படும்' என, மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது

7-வது மத்திய ஊதிய ஆணையம் அளித்த பரிந்துரை- சிறப்பம்சங்கள்:

ஊதியம் மற்றும் ஓய்வூதியப் பயன் களுக்காக 7-வது மத்தியஊதிய ஆணையம் அளித்த பரிந்துரைகளை செயல்படுத்த மத்திய அரசால் ஒப்புதல் அளிக்கப் பட்டது. இது 1.1.2016 முதல் அமல்படுத்தப் படுகிறது.

*கடந்த காலங்களில், 5-வது மத்திய ஊதிய ஆணையத்தின்போது, ஆணையத்தின் பரிந்துரைகளை செயல்படுத்த ஊழியர்கள் 19 மாதங்களுக்கு காத்திருக்க வேண்டியிருந்தது. 6-வது மத்திய ஊதிய ஆணைய பரிந்துரைகளை செயல்படுத்த 32 மாதங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. எனினும், இந்த முறை, 7-வது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைகள்,  அவகாசம் முடிந்து 6 மாதங்களுக்குள் அமல்படுத்தப்படுகிறது.

*ஊதிய மற்றும் ஓய்வூதியப் பலன்களின் நிலுவைகளை (அரியர்ஸ்) ஊழியர்களுக்கு நடப்பு நிதியாண்டு காலத்திலேயே (2016-17) வழங்குவது எனவும் மத்திய  அமைச்சரவை முடிவுசெய்துள்ளது. இந்தப் பரிந்துரைகள் மூலம், ஒரு கோடிக்கும் மேற்பட்ட ஊழியர்கள்  பயனடைவார்கள். இதில், 47 லட்சத் துக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 53 லட்சம் ஓய்வூதிய தாரர்கள் உள்ளனர்.

சிறப்பம்சங்கள்:

*    தற்போது நடைமுறையில் உள்ள சம்பள விகிதம் மற்றும் தர ஊதியத்தை, ஆணையம் பரிந்துரைத்துள்ள புதிய ஊதிய கணக்கீட்டின்படி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஊழியரின் நிலை,  அதாவது தர ஊதியம் நிர்ணயிக்கப்படுவது என்பது, தற்போது ஊதிய கணக்கீட்டு அளவுப்படி நிர்ணயிக்கப்படும். அரசு துறையில் இருப்பவர்கள், பாதுகாப்புப் படையினர், ராணுவ செவிலிலியர் பணியில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு தனித்தனியாக ஊதிய கணக்கீடு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கணக்கீடுகளின் கொள்கை ஒரே மாதிரியானது.

*    நடைமுறையில் உள்ள அனைத்து அளவுகளும், புதிய கட்டமைப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. புதிய அளவு எதுவும் உருவாக்கப்படவில்லை.அதேபோல, எந்த அளவும் நீக்கப்பட வில்லை. ஒவ்வொரு பதவியிலும் பணியில் அதிகரிக்கும் பங்களிப்பு, பொறுப்பு, நம்பகத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிப்பதற்காக சீரான குறியீட்டை பின்பற்ற ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

*    குறைந்தபட்ச ஊதியம் மாதத்துக்கு ரூ.7000-லிலிருந்து ரூ.18,000-மாக உயர்த்தப் பட்டுள்ளது. புதிதாக பணியில் சேர்க்கப் படும் ஊழியரின் குறைந்தபட்ச ஊதியம் ரூ.18,000-மாக இருக்கும். அதாவது, கீழ்நிலையில் முதல்முறையாக சேரும் ஊழியரைவிட, நேரடியாக தேர்வுசெய்யப்படும் முதல் வகுப்பு அதிகாரிக்கு மூன்று மடங்கு ஊதியம் கிடைக்கும்.

*    ஊதியம் மற்றும் ஓய்வூதிய மாற்றத்துக் காக, தகுதிநிலைகாரணி (fitness factor) 2.57-ஆக இருக்கும். அதாவது, ஊதியம் 2.57 மடங்காக உயரும். இது அனைத்து மட்டத்துக்கும் பொருந்தும்.

*    ஊதிய உயர்வு விகிதம், 3%-ஆக நீடிக்கும். எனினும், அடிப்படை ஊதியம் அதிகரிக்கப்பட்டுள்ளதால், எதிர்காலத்தில் ஊழியர்களுக்கு தற்போது கிடைப்பதைவிட 2.57 மடங்காக ஊதிய உயர்வு கிடைக்கும்.

* பாதுகாப்புத் துறையினருக்கான ஊதிய கணக்கீட்டில், கூடுதல் பிரிவுகளை சேர்க்கவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

*    பணிக்கொடைக்கான (Gratuity)  வரம்பு ரூ.10 லட்சத்திலிலிருந்து ரூ. 20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அகவிலைப்படி50% உயரும்போதெல்லாம், பணிக்கொடையின் வரம்பு 25% அதிகரிக்கும்.

*    அரசு ஊழியர் மற்றும் பாதுகாப்புப் படையினர் உயிரிழந்தால், அவர்களின் குடும்பத்தினருக்கு ஒரே கட்டமாக வழங்கப்படும் நிவாரண நிதி, பல்வேறு பிரிவுகளில்தற்போதுள்ள ரூ.10 லட்சம்  ரூ.20 லட்சம் என்பது, ரூ.25 லட்சம்  ரூ.45 லட்சமாக இருக்கும்.

*    மருத்துவமனை விடுப்பு, சிறப்பு உடல்ஊன விடுப்பு, உடல்நலக் குறைபாட்டு விடுப்பு ஆகியவை ஒரே பெயரில், அதாவது, பணி தொடர்பான உடல்நலக் குறைபாடு மற்றும் காய விடுப்பு (Work Related Illness and Injury Leave) என்று அழைக்கப்படும். இந்த விடுப்பு எடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அனைத்து ஊழியர்களுக்கும், மருத்துவமனையில் இருக்கும் காலம் முழுமைக்கும் முழு ஊதியம் மற்றும் படிகள் வழங்கப்படும்.*    தொழிலாளர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக, ஏற்கனவே நடைமுறையில் உள்ள 4 வகையான வட்டியில்லா முன்பணம் தொடரும். அதாவது, மருத்துவ சிகிச்சை,சுற்றுலா அல்லது பணிமாற்றத்துக்கான போக்குவரத்துப்படி, உயிரிழந்த ஊழியர் களின் குடும்பத்தினருக்கு போக்குவரத்துப்படி, எல்.டி.சி. ஆகியவை தொடர்ந்து வழங்கப்படும். மற்ற வட்டி இல்லாத முன்பணங்கள் அனைத்தும் நீக்கப்படுகிறது.

*    மத்திய அரசு ஊழியர்களுக்கான குழு காப்பீட்டுத் திட்டத்தில் (CGEGIS)  ஊழியர்களின் மாதாந்திர பங்களிப்பை அதிகரிக்க வேண்டும் என்ற ஊதிய ஆணையத்தின் பரிந்துரையை ஏற்றுக் கொள்வதில்லை என்று அமைச்சரவை முடிவுசெய்துள்ளது.

*    ஓய்வூதியம் மற்றும் அதுதொடர்பான பலன்களுக்காக ஆணையம் வழங்கியுள்ள பொதுவான பரிந்துரைகளுக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. ஓய்வூதியத்தை மாற்றியமைப்பது தொடர்பாக ஆணையம் வழங்கிய அனைத்து பரிந்துரைகளும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. அதனை அமல்படுத்துவதற்கான வாய்ப்புகள் அடிப்படையில் முடிவுசெய்யப்படும்.

*    ஓய்வூதிய மாற்றம் தொடர்பான இரண்டாவது பரிந்துரையான 2.57 மடங்கு அளவுக்கு வழங்க வேண்டும் என்ற பரிந்துரை, உடனடியாக அமல் படுத்தப்படும். முதலாவது வழிமுறையை பின்பற்றுவதில் உள்ள பிரச்சினைகளைத் தீர்க்க குழு அமைக்கப்படும்.

*    இந்தக் குழு தனது அறிக்கையை 4 மாதங்களில் அளிக்கும்.அதில், முதலாவது வழிமுறையை அமலாக்கும் வாய்ப்பு இருப்பது தெரியவந்தால், அது அமல்படுத்தப்படும்.

*    ஊழியர்களுக்கு ஏற்கனவே நடைமுறையில் உள்ள 196 வகையான படிகளையும் ஆணையம் ஆய்வுசெய்தது. இதனை சீராக்கும் வகையில், 51 படிகளை நீக்கவும்,37 வகையான படிகளாக ஒன்றிணைக்கவும் பரிந்துரைத்து உள்ளது. இதனை அமல்படுத்துவதற்காக ஏற்கனவே உள்ள விதிமுறைகளில் மாற்றங்களைக் கொண்டுவர வேண்டியிருப்பதால், படிகள் தொடர்பாக 7-வது ஊதிய ஆணையம் அளித்துள்ள பரிந்துரைகளை விரிவாக ஆய்வுசெய்ய நிதித்துறை செயலாளர் தலைமையிலான குழுவை அமைக்க அமைச்சரவை முடிவுசெய்துள்ளது. இந்தக் குழு தனது பணியை குறிப்பிட்ட காலத்துக்குள் முடித்து, 4 மாதங்களில் அறிக்கையை தாக்கல் செய்யும்.இறுதி முடிவு எடுக்கப்படும் வரை, தற்போது நடைமுறையில் உள்ள படிகள் அனைத்தும், தற்போதைய அளவிலேயே வழங்கப்படும்.

*    இரண்டு தனிப்பட்ட குழுக்களை அமைக்கவும் மத்திய அமைச்சரவை முடிவுசெய்துள்ளது. இதில், ஒன்று, தேசிய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதை ஒழுங்குபடுத்துவதற்கான பரிந்துரை களை வழங்கும். இரண்டாவது, 7-வது ஊதிய ஆணையத்தின் பரிந்துரைகளை செயல்படுத்துவதால் எழும்பிரச்சினைகளை ஆராயும்.

   * ஊதியம், ஓய்வூதியம் மற்றும் பிறபரிந்துரைகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளதுடன், நிர்வாக அடிப்படையில், தனிநபர் பதவி விவகாரங்களில் எழும் பிரச்சினைகளை அந்தந்த அமைச்சகங்களே ஆய்வுசெய்வது என மத்திய அமைச்சரவை முடிவுசெய்துள்ளது. ஏனெனில், இந்த விவகாரத்தில் ஊதிய ஆணையத்தால் ஒருமித்த கருத்தை எட்ட முடியவில்லை.

*    ஏழாவது மத்திய ஊதிய ஆணையத்தின் அனைத்து பரிந்துரைகளையும் அமல்படுத்துவதால், 2016-17-ம் நிதியாண்டில் மத்திய அரசுக்கு ரூ.1,02,100 கோடி கூடுதல் செலவு ஏற்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. 2015-16-ஆம் நிதியாண்டில் இரண்டு மாதங்களுக்கு ஊதியம்மற்றும் ஓய்வூதிய நிலுவைத் தொகையை வழங்குவதால், ரூ.12,133 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும்.

தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வில் பணி நிரவலின் போது பொறுப்பாளர்கள் கூர்ந்து கவனிக்க வேண்டிய விதிகள்.


தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வில் இயக்குநர் அறிவுறுத்தலின்படி பணி நிரவல் கட்டாயமாக செய்ய உள்ளார்கள்.

அதில்
1)மாவட்டம் விட்டு மாவட்டம் பணிநிரவல் கிடையாது.

2)பணி நிரவலில் பணி நிரவல் செய்யப்பட வேண்டிய ஆசிரியர்களை ஒன்றியத்திற்குள் காலிப்பணியிடம் இருப்பின் ஒன்றியத்திற்குள் பணி நிரவல் செய்வார்கள்.
3)பணி நிரவல் செய்யப்பட வேண்டிய ஆசிரியர்களுக்கு ஒன்றியத்திற்குள் காலிப்பணியிடம் இல்லை எனில் ஒன்றியம்விட்டு ஒன்றியம் பணி நிரவல் செய்வார்கள்.
4)ஒன்றியம் விட்டு ஒன்றியம் பணி நிரவல் செய்யும் நிலை ஏற்பட்டால் அந்த ஒன்றியத்தில் மிகவும் இளையவர் எவரோ (block level service junior) அவரையே பணி நிரவலில் அதே மாவட்டத்தில் பிற ஒன்றியத்திற்கு நிரவல் செய்ய வேண்டும்.
5)ஒன்றியத்திற்குள் பணி நிரவல் எனும்போது எந்த பள்ளியில் பணி நிரவல் ஏற்படுகிறதோ அந்த பள்ளியில் பணி ஏற்றதில் யார் இளையவரோ ( station junior ) அவரே பணி நிரவல் செய்யப்பட வேண்டும்.பணி நிரவல் செய்யப்பட வேண்டியவர் மாற்று திறனாளி எனில் அவரை  விட்டுவிட்டு அந்த பள்ளியில் அவருக்குமுன் பணியில் சேர்ந்தவரை பணி நிரவல் செய்ய வேண்டும்.
6)பணி நிரவல் 30.09.2015 அன்றுஉள்ள மாணவர்கள் பதிவின் அடிப்படையில் செய்யப்பட உள்ளது.இதில் சிறு விதி தளர்வும் உள்ளது.

உதாரணமாக ஒரு பள்ளியில் 3 ஆசிரியர்கள் பணியில் இருந்து 30.09.2015ல் மாணவர்கள் பதிவு 55 எனில் ஒரு ஆசிரியர் பணியிடத்தினை நிரவல் செய்வார்கள்.அதே பள்ளியில் 01.08.2016ல் 61 மாணவர்கள் பதிவு உள்ளது எனில் விதி தளர்வு தந்து பணியிடத்தினை நிரவல் செய்யக்கூடாது.அது போலவே ஒரு பள்ளியில் 3 ஆசிரியர்கள் பணியில் இருந்து 30.09.2015ல் 61 மாணவர்கள் பதிவு இருந்து 01.08.2016ல் 55 மாணவர்கள் பதிவு உள்ளது என்றாலும் பணி நிரவல் செய்யக்கூடாது. இவற்றை நன்கு புரிநதுகொண்டு பொறுப்பாளர்கள் விழிப்போடு செயல்படுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.பணி நிரவலின்போது ஏதேனும் விதி மீறல்கள் ஏற்பட்டால் உடனே சங்க பொருப்பாளர்களை தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கும்படியும் கேட்டுக்கொள்கிறேன்.

பள்ளியில் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள்

 பள்ளியில் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள்...நாமும் தெரிந்துகொள்ள வேண்டிய விவரங்கள்


1.ஆசிரியர் வருகைப் பதிவேடு
2.மாணவர் வருகைப் பதிவேடு
3.மாணவர் சேர்க்கை நீக்கல் பதிவேடு
4.சேர்க்கை விண்ணப்பங்கள் தொகுப்பு 

5.பதிவுத்தாட்கள் உண்மை நகல்
6.அளவைப் பதிவேடு
7.நிறுவனப்பதிவேடு
8.பள்ளி தளவாடச் சாமான்கள் பதிவேடு
9.தணிக்கைப் பதிவேடு
10.பார்வையாளர் பதிவேடு

11.பள்ளி விவரப் பதிவேடு (school profile )
12.ஊதியப்பட்டியல் பதிவேடு
13.ஊதிய செல்லுப் பட்டியல் பதிவேடு
14.மதிப்பெண் பதிவேடு
15.தேக்கப் பட்டியல்
16.வருகைப்பட்டியல்
17.மாதாந்தர அறிக்கை தொகுப்பு பதிவேடு
18.வரத்தவறியவர் பதிவேடு
19.சிறுபான்மை மொழி பேசுவோர் பதிவேடு
20.மாணவர் தினசரி வருகைச் சுருக்கம் 

21.மக்கள் தொகை கணக்குப் பதிவேடு
22.சுற்றறிக்கைப் பதிவேடு
23.பொறுப்பு ஏற்புப் பதிவேடு
24.தலைமையாசிரியர் கூட்ட விவரப் பதிவேடு
25.தற்செயல் விடுப்பு
26.மருத்துவ விடுப்பு மற்றும் ஈட்டிய விடுப்பு பதிவேடு
27.தலைமையாசிரியர் கண்காணிப்பு பதிவேடு
28.ஆதிதிராவிட மாணவியர் ஊக்கத்தொகை வழங்கும் பதிவேடு
29.வாசிப்புத்திறன் பதிவேடு
30.அஞ்சல் பதிவேடு
31.தொலைக்காட்சி, வானொலி வகுப்புப் பதிவேடு
32.அறிவியல் உபகரணங்கள் இருப்புப் பதிவேடு
33.கணினி ,மடிக்கணினி இருப்புப் பதிவேடு
34.Inspire விருது பதிவேடு
35.கிராமக்கல்விக்குழு பதிவேடு
36.பெற்றார் ஆசிரியர் கழக்க் கூட்டப்பதிவேடு
37.அன்னையர் குழு பதிவேடு
38.பள்ளி மேலாண்மைக் குழு பதிவேடு
39.மன்றப் பதிவேடுகள்
a.தமிழ் இலக்கிய மன்றப் பதிவேடு
b.கணித மன்றம்
c.அறிவியல் மன்றம்
d.செஞ்சிலுவைச் சங்கம்
e.சுற்றுச்சூழல் மன்றம்
40.கால அட்டவணை
41.வகுப்பு வாரியான பாடவேளை பணிமுடிப்பு பதிவேடு (work done)
42.சாதிச்சான்றிதழ் வழங்கிய பதிவேடு
43.பாடத்திட்டம் ,கால �
[3:59 AM, 8/7/2016] +91 96552 99169: ட்டவணையுடன்
44.பிறப்புச் சான்றிதழ் பதிவேடு
45.பள்ளி சுகாதாரக் குழு பதிவேடு (school health club )
46.S.S.A பொருட்கள் இருப்புப் பதிவேடு
47.S.S.A வரவு செலவுப் பதிவேடு
48.வங்கி கணக்குப் புத்தகம்
49.பள்ளி மான்யம் மற்றும் பராமரிப்பு மான்யம் வரவு செலவு இரசீது பதிவேடு
50.E.E.R பதிவேடு
51.S.S.A பார்வையாளர் பதிவேடு

52.நலத்திட்டப் பதிவேடுகள்

1.விலையில்லா பாடநூல்கள் வழங்கிய பதிவேடு
2.விலையில்லா நோட்டுப் புத்தகங்கள் வழங்கிய பதிவேடு
3.விலையில்லா புத்தகப்பை வழங்கிய பதிவேடு
4.விலையில்லா சீருடை வழங்கிய பதிவேடு
5.மதிய உணவுத் திட்டம் பயனடைவோர் பதிவேடு
6.விலையில்லா காலனி வழங்கிய பதிவேடு
7.விலையில்லா பயணச்சீட்டு பயனடைவோர் பதிவேடு
8.விலையில்லா வண்ணப் பென்சில்கள் வழங்கிய பதிவேடு
9.விலையில்லா கணித உபகரணப் பெட்டி வழங்கிய பதிவேடு
10.விலையில்லா புவியியல் வரைபட நூல் வழங்கிய பதிவேடு
11.வருவாய் ஈட்டும் தாய் தந்தையரை இழந்த குழந்தைக்கு கல்வி உதவித்தொகை பதிவேடு
அன்பு நண்பர்களே

தொடக்க கல்வித்துறை யில் பணி நிரவல்,ஒன்றிய அளவில்  பள்ளியில் சேர்ந்த தேதியில் இளையோர் பணி நிரவல் செய்யப்பட்ட வேண்டும்.  .

இயக்குனரின் செயல்முறைகள் 024064 நாள் 22.7.2016 ந் படிதான் செய்யப்பட்ட வேண்டும்.

surplus proceeding படிதான் நடத்த வேண்டும் என வலியுறுத்துங்கள்.

7/8/16

பிளஸ் 2 துணை தேர்வு விடைத்தாள் நகல் வெளியீடு

பிளஸ் 2 துணை தேர்வில், விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்தவர்கள், இன்று முதல்பதிவிறக்கம் செய்யலாம். இதுகுறித்து, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடந்த ஜூன், ஜூலையில் நடந்த துணை தேர்வின் விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்த வர்கள், இன்று பிற்பகல், 2:00 மணிக்கு மேல், scan.tndge.in என்ற இணையதளத்தில், தங்களின் விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்யலாம்.

இதே இணையதளம் மூலம், மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டலுக்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம். ஆக., 9 காலை, 10:00 முதல், 10ம் தேதி மாலை, 5:00 மணிக்குள், முதன்மை கல்வி அதிகாரியான, சி.இ.ஓ., அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தலைமை ஆசிரியர்களுக்கு தலைமை பண்பு பயிற்சி

அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தில், அரசு பள்ளிகளைச் சேர்ந்த, 1,000 தலைமை ஆசிரி யர்களுக்கு, தலைமை பண்பு பயிற்சி அளிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டமான, ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டத்தில், உயர்நிலை பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதி, மாணவர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுத்தல், தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களின் திறனை வளர்த்தல் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
இதில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி களின் தலைமை ஆசிரியர்கள், 1,000 பேருக்கு, சிறப்பு தலைமை பண்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. சென்னையில் இந்த பயிற்சிக்கு, 30 தலைமை ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, முதற்கட்ட பயிற்சி துவங்கியுள்ளது.

நீட்' தேர்வு விடைத்தாள் 'ஆன்லைனில்' பார்க்கலாம்

அகில இந்திய மருத்துவ நுழைவுத்தேர்வான, 'நீட்' விடைத்தாள்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன. எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான, நீட் தேர்வு, மே 1 மற்றும் ஜூலை 24ல், இரு கட்டங்களாக நடந்தது; ஐந்து லட்சம் பேர் பங்கேற்றனர்.


இந்நிலையில், தேர்வரின் கணினி பயன்பாட்டு விடைத்தாள் மற்றும் விடைக்குறிப்புகள், இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டன. இன்று மாலை வரை, மாணவர்கள், தங்கள் உள்ளீட்டு எண்ணை பயன்படுத்தி, அவற்றை பார்க்கலாம். மேலும், நீட் இணையதளம் மூலம், மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ.,க்கு கருத்துக்களை தெரிவிக்கலாம். கூடுதல் விபரங்களை, http://www.aipmt.nic.in/ என்ற இணையதளத்தில் அறியலாம்.

சித்தா, ஆயுர்வேத கல்லூரிகள் மாணவர் சேர்க்கையில் சிக்கல்

அரசு கல்லுாரிகளுக்கு அனுமதி கிடைப்பது தாமதம் ஆவதால், சித்தா, ஆயுர்வேத படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை உடனே துவங்குவதில், சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய மருத்துவப் படிப்புகளுக்கு, சென்னை, மதுரை, பாளையங்கோட்டை என, ஆறு அரசு மருத்துவக் கல்லுாரிகளில், 356 இடங்கள்; 21 சுயநிதி கல்லுாரிகளில், 1,000 இடங்கள் உள்ளன. இதற்கு, 5,702 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.


எப்போது கலந்தாய்வு நடக்கும் என்ற, எதிர்பார்ப்பில் உள்ளனர். கல்லுாரிகளை ஆய்வு செய்து, மாணவர் சேர்க்கை நடத்த, இந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கான, 'ஆயுஷ் கவுன்சில்' அனுமதி அளிக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள, இந்திய மருந்துவம் சார்ந்த, ஆறு அரசு மருத்துவக் கல்லுாரிகளுக்கும், மாணவர் சேர்க்கை நடத்த, இதுவரை ஆயுஷ் கவுன்சில் அனுமதி தரவில்லை. இதனால், கலந்தாய்வு தேதி அறிவிப்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குனரக அதிகாரிகள் கூறுகையில், 'மாணவர் சேர்க்கை நடத்தி முடிக்க, அக்., மாதம் வரை அவகாசம் உள்ளது. ஆயுஷ் கவுன்சில் முறையான ஆய்வு நடத்தி வருகிறது; விரைவில், அனுமதி கிடைத்து விடும். குறித்த காலத்திற்கு முன்னரே, கலந்தாய்வு நடத்தி முடிக்கப்படும்' என்றார். 

தணிக்கை - ஆசிரியர் சேம நலநிதிக் கணக்குகள் - 01.04.2014க்குப் பின்னர் அரசு தகவல் தொகுப்பு, விவர மைய அலுவலகத்திலிருந்து, மாநில கணக்காயர் அலுவலகத்திற்கு மாற்றம் செயதல் - 31.03.2014 வரை நிலுவை இருப்பின் நடவடிக்கை தொடர கோரி இயக்குனர் உத்தரவு Posted: 05 Aug 2016 10:55 PM PDT அரசு பள்ளிகளில் சிறப்பு வகுப்பு: இலவச 'ஸ்நாக்ஸ்' கிடைக்குமா?

அரசு பள்ளிகளில், பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், மாநில, 'ரேங்க்' எடுக்கும் முயற்சியாக, காலை, மாலை நேரங்களில், ஒரு மணி நேரம் வரை, சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. சென்னை உட்பட மற்ற மாநகராட்சி பள்ளிகளில், சிறப்பு வகுப்புகளில் மாணவர்களை ஊக்கப்படுத்த, பிஸ்கட், சுண்டல் போன்றவை வழங்கப்படுகின்றன.


அரசு பள்ளிகளில், சிற்றுண்டி வழங்கப்படுவது இல்லை. மேலும் காலை, 8:00 மணிக்கு சிறப்பு வகுப்புக்கு வரும் மாணவர்கள், வீட்டிலிருந்து, 7:00 மணிக்கே புறப்பட வேண்டும். மாலையில், சிறப்பு வகுப்பு முடித்து, 6:00 மணிக்கு தான் வீட்டுக்கு செல்ல முடிகிறது. இதனால், காலை உணவும் உண்ண முடியாமல், மாலையிலும் நீண்ட நேரம் பள்ளி யில் இருக்க வேண்டி யுள்ளதால், மாணவர்கள் மயங்கி விழும் சம்பவங்கள் நடக்கின்றன.

இதுகுறித்து, ஆசிரி யர் முன்னேற்ற சங்க தலைவர் கு.தியாகராஜன் கூறியதாவது: சிறப்பு வகுப்பு நடத்தும் முன், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் பிரதிநிதிகளிடம், கல்வி அதிகாரி கள் கருத்து கேட்டிருக்கலாம். மாணவர்கள் மயங்கி விழும் போது, ஆசிரியர்கள், தங்கள் பணத்தில் பிஸ்கட் வாங்கி கொடுக்கின்றனர். தனியார் பள்ளிகளில், சிறப்பு வகுப்பு செல்லும் மாணவர்களுக்கு, அவர்களது பெற்றோர், தரமான, 'ஸ்நாக்ஸ்' கொடுத்து அனுப்புகின்றனர். பள்ளி கேன்டீனில் வாங்க, பணமும் கொடுத்து அனுப்புகின்றனர். ஆனால், அரசு பள்ளி மாணவர்களுக்கு, இந்த வசதிகள் இல்லை. எனவே, அரசு பள்ளிகளில் நடக்கும் சிறப்பு வகுப்பு மாணவர்களுக்கு, அரசு சிற்றுண்டி வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

CPS-கருத்தரங்கம் -தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் சார்பில் காஞ்சிபுரத்தில் இன்று (6.8.2016)சென்னை மண்டல பயிலரங்கில் -நடைபெற்றது .

இன்று(6.8.2016)-திரு.பிடரிக் ஏங்கல்ஸ்-திண்டுக்கல் அவர்கள் -பேசிய போது எடுத்த புகைப்படம்


தமிழ் எழுத்துக்களுக்கு இணையாக 'சைகை' முறை கண்டுபிடிப்பு : எளிதாக கற்பிக்க ஏற்பாடு

தொடக்கபள்ளிகளில் மாணவர்கள் தமிழ் எழுத்துக்களை எளியமுறையில் உச்சரிக்கவும், பிழையின்றி எழுதுவதற்கும் 30 வகையான புதிய 'சைகை' முறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பான
'சிடி'க்கள் தொகுப்பைமாநில கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி பயிற்சிநிறுவனம் (எஸ்.சி.இ.ஆர்.டி.,) தயாரித்துள்ளது. தமிழில் பேசுவதற்கும், எழுதுவதற்கும் 'மயங்கொலிகள்' எனப்படும் 'ல, ள, ழ, ர, ற, ந, ண, ன' ஆகிய எட்டு எழுத்துக்கள்அதிகம் பயன்படுகின்றன.
ஆனால் பேச்சு வழக்கில் இந்தஎழுத்துக்களின் தன்மை குறைந்து உச்சரிப்புமருவி விடுகிறது. இதன் காரணமாக தமிழ்எழுத்துக்களை உரிய ஓசை, ஏற்றஇறக்கத்துடன் உச்சரிக்க, எழுத மாணவர்கள் சிரமப்படுகின்றனர். சைகை முறை: இதை தவிர்க்கவும், தமிழ் எழுத்துக்களை உரிய வடிவில் எழுதுவதற்கும், 30 நாட்களில் சரியான உச்சரிப்புடன் பேசவும், பிழையின்றி எழுதும் வகையில் அரசுப்பள்ளி ஆசிரியர்களால் அனைத்து உயிரெழுத்து மற்றும்மெய் எழுத்துக்களுக்கு உரிய 'சைகை' முறைகள்உருவாக்கப்பட்டு வருகின்றன.
இப்பணியில்எஸ்.சி.இ.ஆர்.டி., யின் மொழிப்புல(லாங்குவேஜ் செல்) ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். 1 - 5 வகுப்பு வரை உள்ள தமிழ்பாடநுாலின் அனைத்து பாடங்களையும் 'தாயெனப்படுவதுதமிழ்' என்ற தலைப் பில்சி.டி., தொகுப்பை ஆக.,2ல் முதல்வர் ஜெயலலிதாவெளியிட்டார். இவ்வாரத்தில் பள்ளிகளுக்கு 'சிடி'க்கள் வழங்கப்படஉள்ளன. தொழில்நுட்ப இயக்குனர் அமலம் ஜெரோம் கூறியதாவது:
எஸ்.சி.இ.ஆர்.டி., உதவியுடன் காதுகேளாத, வாய் பேசாத மாணவர்களுக்குகற்பித்தல், பரத நாட்டியத்தின் முத்திரைகள், உளவியல் மற்றும் உடல் மொழிரீதியிலான 'சைகைகளை' அடிப்படையாக கொண்டு சரியான உச்சரிப்புடன்எழுத்துக்களை எளிதில் புரிய வைத்துபிழையின்றி எழுதுவதற்கு 'சைகைகளை' உருவாக்கி உள்ளோம். எழுத்துக்களை மிக துல்லியமாக புரிந்துகொள்ளபின்னணி காட்சிகள், நவீன தொழில் நுட்பஉத்திகளுடன் 'சிடி' க்கள் தயாரிக்கப்பட்டுள்ளன, என்றார்

ஆசிரியர்கள் மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்துமிடம் ஏற்பாடுகள் ,பாதுகாப்பு பற்றிய இயக்குநர் செயல்முறைகள்



தலைமை ஆசிரியர்களுக்கு தலைமை பண்பு பயிற்சி.

அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தில், அரசு பள்ளிகளைச் சேர்ந்த, 1,000 தலைமை ஆசிரி யர்களுக்கு, தலைமை பண்பு பயிற்சி அளிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டமான, ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டத்தில், உயர்நிலை பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதி, மாணவர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுத்தல், தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களின் திறனை வளர்த்தல் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி களின் தலைமை ஆசிரியர்கள், 1,000 பேருக்கு, சிறப்பு தலைமை பண்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. சென்னையில் இந்த பயிற்சிக்கு, 30 தலைமை ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, முதற்கட்ட பயிற்சி துவங்கியுள்ளது.

CPS account slip 2009. முதல் பிப்ரவரி 2016 வரை பதிவிறக்கம் செய்யலாம் Posted: 06 Aug 2016 05:36 AM PDT CLICK HERE இணையதளம் சென்றதும் உங்கள் CPS no மற்றும் பிறந்தநாள் பதிவு செய்து (உதாரணமாக 20/10/1971) login செய்யவும். பின் annual account slip ல் சொடுக்கவும் பின் 2014 -15 வருடத்தை select செய்து submit செய்யவும் . ஆசிரியர் பயிற்றுநர்கள் உயர்கல்வி பின்னேற்பு -பள்ளிக்கல்வி இணை இயக்குநர் தெளிவுரை

6/8/16

பட்டதாரி ஆசிரியர் பணிநிரவல் தொடர்பான தகவல்:

RTE 2009-ன் படி, புதிய பணியிடம் தோற்றுவிக்க 

கணக்கு / அறிவியல் = 1

ஆங்கிலம் / தமிழ் = 1

சமூக அறிவியல் = 1

அறிவியல் / கணக்கு = 1

தமிழ் / ஆங்கிலம் = 1

சமூக அறிவியல் = 1

இவ்வாறு இருத்தல் வேண்டும்.  


பணிநிரவலுக்குக் கீழிருந்து செல்ல வேண்டும்.

ஒரு சமூகஅறிவியல் பணி இருக்க வேண்டும்.

மொழிப்பாடம் ஒன்று இருக்க வேண்டும். இதில் 2 மொழி பாடம் இருந்தால் அதில் இளையவர் பணிநிரவல் செய்ய வேண்டும்.

அதே போல், அறிவியல் மற்றும் கணக்கு பாடத்தில் இளையவர் பணிநிரவல் செய்யப்படுவர்.

நடுநிலைப் பள்ளியில் 6 - 8-ம் வகுப்பு வரை 30 - 130 மாணவர்கள் வரை இருப்பின் ஆசிரியர்கள் எண்ணிக்கை 1+3.

*அரசு ஊழியர்கள் கணவன்-மனைவி இருவரும் பணிபுரிபவர்கள் -OBC-NON CREAMY LAYER -CERTIFICATE பெற மத்திய அரசின் தெளிவுரை கடிதம்

முக்கிய குறிப்புகள் -

1.அரசு ஊழியர்களின் ஊதியத்தை வருமானமாக கருதக்கூடாது.

2.விவசாயம் மூலம் வரும் வருமானத்தை வருமானமாக கணக்கிடக்கூடாது .

3.அரசு ஊழியர்கள் கணவன்-மனைவி இருவரும் பணிபுரிபவர்களாக இருந்தால் நேரடியாக இருவரும்  Grade B  நிலையில் நியமனம் 
பெற்றிருக்கக் கூடாது.

4.ஒருவர் மட்டும் பணிபுரிந்தால்   நேரடியாக  Grade A  நிலையில் நியமனம் பெற்றிருக்கக் கூடாது. அல்லது Grade B-ல் நியமனம் பெற்று 40 வயதிற்குள்    Grade A நிலைக்கு பதவி உயர்வு பெற்றிருக்கக் கூடாது.

5.பொதுத் துறைகளில் பணிபுரிவர்களுக்கு இது பொருந்தாது 

5.இந்த கடிதத்தை பயன்படுத்தி தங்கள் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு பயன்படுத்துங்கள் ....**

தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வில் இயக்குநர் அறிவுறுத்தலின்படி பணி நிரவல் கட்டாயமாக செய்ய உள்ளார்கள்.அதில்

1)மாவட்டம் விட்டு மாவட்டம் பணி நிரவல் கிடையாது.
2)பணி நிரவலில்  பணி நிரவல் செய்யப்பட வேண்டிய ஆசிரியர்களை ஒன்றியத்திற்குள் காலிப்பணியிடம் இருப்பின் ஒன்றியத்திற்குள் பணி நிரவல் செய்வார்கள்.
3)பணி நிரவல் செய்யப்பட வேண்டிய ஆசிரியர்களுக்கு ஒன்றியத்திற்குள் காலிப்பணியிடம் இல்லை எனில் ஒன்றியம் விட்டு ஒன்றியம் பணி நிரவல் செய்வார்கள்.
4)ஒன்றியம் விட்டு ஒன்றியம் பணி நிரவல் செய்யும் நிலை ஏற்பட்டால் அந்த ஒன்றியத்தில் மிகவும் இளையவர் எவரோ (block level service junior) அவரையே பணி நிரவலில் அதே மாவட்டத்தில் பிற ஒன்றியத்திற்கு நிரவல் செய்ய வேண்டும்.
5)ஒன்றியத்திற்குள் பணி நிரவல் எனும்போது எந்த பள்ளியில் பணி நிரவல் ஏற்படுகிறதோ அந்த பள்ளியில் பணி ஏற்றதில் யார் இளையவரோ ( station junior ) அவரே பணி நிரவல் செய்யப்பட வேண்டும்.பணி நிரவல் செய்யப்பட வேண்டியவர் மாற்று திறனாளி எனில் அவரை விட்டுவிட்டு அந்த பள்ளியில் அவருக்குமுன் பணியில் சேர்ந்தவரை பணி நிரவல் செய்ய வேண்டும்.
6)பணி நிரவல் 30.09.2015 அன்று உள்ள மாணவர்கள் பதிவின் அடிப்படையில் செய்யப்பட உள்ளது.இதில் சிறு விதி தளர்வும் உள்ளது. உதாரணமாக ஒரு பள்ளியில் 3 ஆசிரியர்கள் பணியில் இருந்து 30.09.2015ல் மாணவர்கள் பதிவு 55 எனில் ஒரு ஆசிரியர் பணியிடத்தினை நிரவல் செய்வார்கள்.அதே பள்ளியில் 01.08.2016ல் 61 மாணவர்கள் பதிவு உள்ளது எனில் விதி தளர்வு தந்து பணியிடத்தினை நிரவல் செய்யக்கூடாது.அது போலவே ஒரு பள்ளியில் 3 ஆசிரியர்கள் பணியில் இருந்து 30.09.2015ல் 61 மாணவர்கள் பதிவு இருந்து 01.08.2016ல் 55 மாணவர்கள் பதிவு உள்ளது என்றாலும் பணி நிரவல் செய்யக்கூடாது

தொடக்கக் கல்வி - 2015-16ஆம் கல்வியாண்டில் மாறுதல் பெற்று பணியிலிருந்து விடுவிக்கப்படாமல் உள்ள ஆசிரியர்களை விடுவிக்க இயக்குனர் உத்தரவு

'வாட்ஸ் ஆப்' விவகாரம் : நடவடிக்கை நிறுத்தம்

'வாட்ஸ் ஆப்' பயன்படுத்திய ஆசிரியர்களுக்கு, 'நோட்டீஸ்' அனுப்பிய விவகாரத்தில், ஆசிரியர்கள் மீதான நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில், 'வாட்ஸ் ஆப்' சமூக வலைதளத்தில் விவாதம் நடத்தியதற்காக, நான்கு ஆசிரியர்களுக்கு, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியான சி.இ.ஓ., நோட்டீஸ் அனுப்பி, விளக்கம் கேட்டார்.

இதுகுறித்து, நமது நாளிதழில் செய்தி வெளியானது. இதை தொடர்ந்து, ஆசிரியர் சங்க நிர்வாகிகள், பள்ளிக் கல்வி அதிகாரிகளை சந்தித்து மனு அளித்துள்ளனர். இதையடுத்து, ஆசிரியர்கள் மீதான நடவடிக்கையை கைவிட உத்தரவிட்டுள்ளனர்.

5/8/16

தமிழக அரசு பட்ஜெட் ல் 7 வது ஊதிய குழு பற்றி ஆராய குழு அமைக்கப்படும்.என அறிவிக்கப்பட்டு உள்ளது.ஏற்கனவே தமிழக 6 ஊதிய குழுவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் 158 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக நிதித்துறை தெரிவித்துள்ளது.இந்த நிலையில் 6 வது ஊதிய குழு முறன்பாடு தீர்கப்பட வேண்டும்.அதன்பின் 7 வது ஊதிய குழு ஊதியம் நிர்னயம் செய்ய வேண்டும். எனவே தோழர்களே ஊதிய குழுகளை எப்படி எதிர்கொள்வது என்பது பற்றியும் ,,,,,CPS. திட்டம் ரத்து குழுவை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது பற்றி தங்கள் மாவட்டத்தில் ,,,வட்டாரத்தில் ,,,,கருத்தரங்கம் மற்றும் விழிப்புணர்வு கூட்டங்கள் சங்க பாகுபாடு இல்லாமல் நடத்திட ஆயத்தங்கள் செய்திடுங்கள்....இந்த பொண்னான காலத்தில் நாம் ஏனோ தானோ என்று இருந்தால் ஆயுள் முழுவதும் அவதியே......................

. தோழர்களே நமது உரிமைக்காக உரிமை மீட்கப்பட கருத்தரங்கம் நடத்தி விழிப்புணர்வை ஏற்படுத்திடுவோம்

பொது தேர்வு மாணவர்கள் சுற்றுலா செல்ல தடை

பொது தேர்வுக்கு படிக்கும் மாணவர்களை சுற்றுலா அழைத்து சென்று, நாட்களை வீணடிக்க வேண்டாம்' என, பள்ளிகளுக்கு, கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.
காலாண்டு தேர்வுக்கு முன், மாணவர்களை கல்விச் சுற்றுலா அழைத்துச்செல்ல பள்ளிகள் திட்டமிட்டுள்ளன. சில தனியார் பள்ளிகள், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களையும், சுற்றுலா அழைத்து செல்ல முடிவு செய்துள்ளன.
அது போன்ற பள்ளிகளுக்கு, 'பொதுத்தேர்வு மாணவர்கள், நல்ல முறையில் தேர்ச்சி பெற முயற்சிக்க வேண்டும்; சுற்றுலா அழைத்துச் சென்று நாட்களை வீணடிக்க வேண்டாம்' என, அறிவுறுத்தியுள்ளனர். சுற்றுலா செல்லும் பள்ளிகள், மாவட்ட கல்வி அதிகாரிகளிடம் அனுமதி பெற உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நாளை தொடக்கம்

அரசு, நகராட்சி உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள், இடைநிலை, சிறப்பாசிரியர்களுக்கு 2016-17ஆம் கல்வியாண்டுக்கான பொது மாறுதல், பதவி உயர்வு குறித்த கலந்தாய்வு சனிக்கிழமை (ஆக. 6) தொடங்குகிறது.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மாவட்டத்தில் உள்ள அரசு, நகராட்சிப் பள்ளி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு, திருவள்ளூர் முகமது அலி இரண்டாவது தெருவில் உள்ள ஸ்ரீலட்சுமி மேல்நிலை பள்ளியில் நடைபெறும்.
அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மாறுதல் குறித்த கலந்தாய்வு சனிக்கிழமை (ஆக. 6) நடைபெறும்.
ஆக. 7-இல் அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு குறித்தும், 13-ஆம் தேதி அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மாறுதல் (மாவட்டத்துக்குள் / மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல்) குறித்தும் கலந்தாய்வு நடைபெறும்.
20-ஆம் தேதி அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர்கள் மாறுதல் (மாவட்டத்துக்குள் மாறுதல்) குறித்த கலந்தாய்வும், 21-ஆம் தேதி அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாறுதல் குறித்த கலந்தாய்வும் நடைபெறும்.
22-ஆம் தேதி அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர்கள் பதவி உயர்வு குறித்தும், 23-ஆம் தேதி உடற்கல்வி ஆசிரியர்கள், கலை ஆசிரியர்கள், இசை ஆசிரியர்கள், தையல் ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் மாவட்டத்துக்குள் மாறுதல் குறித்தும் கலந்தாய்வு நடைபெறும்.
24-ஆம் தேதி உடற்கல்வி ஆசிரியர்கள், கலை ஆசிரியர்கள், இசை ஆசிரியர்கள், தையல் ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் குறித்த கலந்தாய்வு நடைபெறும்.
27-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை பட்டதாரி ஆசிரியர் பணி நிரவல் நடைபெறும்.
செப்டம்பர் 3-ஆம் தேதி பட்டதாரி ஆசிரியர் மாறுதல் (மாவட்டத்துக்குள்) குறித்தும், 4-ஆம் தேதி பட்டதாரி ஆசிரியர் மாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம்), 6-ஆம் தேதி இடைநிலை ஆசிரியர்கள், உடற்கல்வி, சிறப்பாசிரியர்கள் பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெறுதல் குறித்து கலந்தாய்வு நடைபெறும்.

ADW DEPARTMENT TRANSFER COUNSELING ANNOUNCED

கடந்தாண்டு பணியிட மாறுதல் கலந்தாய்வில் கலந்துகொண்டு மாறுதல் ஆணை பெற்று விடுவிக்கப்படாத ஆசிரியர்கள்*(ஈராசிரியர் பள்ளி ஆசிரியர்கள்)* 05.08.2016 முதல்விடுவிக்க அரசு உத்தரவு

காஞ்சிபுரம் மா.தொ.க. அலுவலர் உடனான தமிழ் நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட, வட்டாரப் பொறுப்பாளர்கள் சந்திப்பிற்குப் பின்னர் உறுதிப்படுத்தப்பட்டுள்ள பட்டதாரி ஆசிரியர் பணிநிரவல் தொடர்பான தகவல்:

RTE 2009-ன் படி, புதிய பணியிடம் தோற்றுவிக்க 

கணக்கு / அறிவியல் = 1

ஆங்கிலம் / தமிழ் = 1

சமூக அறிவியல் = 1

அறிவியல் / கணக்கு = 1

தமிழ் / ஆங்கிலம் = 1

சமூக அறிவியல் = 1

இவ்வாறு இருத்தல் வேண்டும்.  


பணிநிரவலுக்குக் கீழிருந்து செல்ல வேண்டும்.

ஒரு சமூகஅறிவியல் பணி இருக்க வேண்டும்.

மொழிப்பாடம் ஒன்று இருக்க வேண்டும். இதில் 2 மொழி பாடம் இருந்தால் அதில் இளையவர் பணிநிரவல் செய்ய வேண்டும்.

அதே போல், அறிவியல் மற்றும் கணக்கு பாடத்தில் இளையவர் பணிநிரவல் செய்யப்படுவர்.

நடுநிலைப் பள்ளியில் 6 - 8-ம் வகுப்பு வரை 30 - 130 மாணவர்கள் வரை இருப்பின் ஆசிரியர்கள் எண்ணிக்கை 1+3.

ஜிஎஸ்டி மசோதாவின் பயன்கள்:

ஜிஎஸ்டி என்றால் என்ன? எதனால் இது முக்கியம் பெறுகிறது என்பதற்கான பதிவு இது. 

இந்த வரி முறை முக்கியமாக மூன்று நிலைகளாக பிரிக்கப்பட்டு விளக்கப்பட்டுள்ளது.
1-முதல் நிலை உற்பத்தி
2-இரண்டாம் நிலை மொத்த விற்பனை
3-மூன்றாம் நிலை சில்லறை விற்பனை

முதல் நிலை:
ஒரு சட்டை தயாரிப்பு நிறுவனம் என்று வைத்துக் கொள்வோம் அவர் அதற்கான மூலப் பெருட்களை (துணி, நூல், பொத்தாங்கள் போன்றவை) 100 ரூபாய் மதிற்ப்பிற்கு வாங்குகிறார் என்று வைத்துக் கொள்வோம். அந்த நூறு ரூபாய்க்கான வரி தற்பொழுது இருக்கும் வரிகளின்படி 100க்கு 10 ரூபாய் அதில் சேர்த்து அவர் செலவிட்டிருப்பார்.
உற்பத்தி செய்து அதை மதிப்பு கூட்டி சட்டையாக கொண்டு வர அவருக்கு ஆகும் செலவு மற்றும் லாபம் கணக்கிட்டு 30 ரூபாய் என உற்பத்தியாளர் நிர்ணையத்து விற்கிறார் என்று வைத்துக் கொள்வோம். இப்பொழுது அந்த சட்டையின் ஒட்டு மொத்த மதிப்பு
130 + 13 (10% வரி) = 143 ரூபாய் (பழைய முறையில்)
ஆனால் ஜி எஸ் டி முறையில்...
130 + 3 (13-10) = 133ரூபாய் மட்டுமே
மூலப் பொருட்கள் வாங்கும் பொழுது அவர் செலுத்திய 10% (10 ரூபாய்) வரியை இதில் கழித்து மீதம் உள்ளதை மட்டுமே அவர் மொத்த மதிப்பில் கணக்கிடுவார்.

இரண்டாம் நிலை:
உற்பத்தி பொருட்கள் விற்பனைக்கு வரும் பொழுது அடுத்த நிலை என்பது மொத்த விற்பனையாளரிடமே.இப்பொழுது அவரிடம் அந்த சட்டை வந்தால் எப்படி வரி விதிக்கப்படும் என்பதை பார்ப்போம்.
உற்பத்தியாளரிடம் மொத்த விற்பனையாளர் வாங்கும் செலவு 133 ரூபாய். இவருக்கான லாபத்தோடு கணக்கிட்டு அந்த சட்டையை 20 ரூபாய் சேர்த்து 150 ரூபாய்க்கு விற்பனை விலையை நிர்ணையம் செய்வதாக எடுத்துக் கொள்வோம் இப்பொழுது அந்த சட்டையின் விலை 150ரூபாயாகிவிடும் .
பழைய முறையில்
150 + 15 (10% வரி) = 165 ரூபாய்.
இதையே ஜிஎஸ்டி முறையில் 
150 + 2 (15 - 13) = 152 ரூபாய்
மூலப் பொருட்கள் வாங்கும் பொழுது செலுத்தப்பட்ட வரியை எப்படி உற்பத்தியாளர் கழித்து மீதியை செலுத்தினாரோ அதே போல உற்பத்தியாளர் கட்டிய 13 ருபாயை கழித்தே மொத்த விற்பனையாளர் வரி செலுத்த வேண்டியிருக்கும்.

மூன்றாம் நிலை:
இதுதான் எந்த ஒரு பொருளுக்கும் கடை நிலை அதாவது சில்லறை வணிகம் இங்கிருந்து நுகர்வோருக்கு அந்த பொருட்கள் சென்றடையும். இரண்டு நிலைகளை பார்த்தோமல்லவா இது கடைநிலை மூன்றாம் நிலை...
உற்பத்தி மற்றும் மொத்த வியாபாரியிடம் இருந்து வரும் அந்த சட்டையின் இப்பொழுதைய விலை 152 ரூபாய். அவரின் நிர்வாக செலவு லாபம் கணக்கிட்டு அந்த சட்டையின் விலையை 160 ரூபாய் என நிர்ணையிப்பதாக வைத்துக் கொள்வோம்...
பழைய முறையில் 
160 + 16ரூபாய் (10% வரி) = 176 ரூபாய்
இதையே ஜிஎஸ்டி முறையில்
மொத்த விற்பனையாளரிடம் வாங்கிய பொழுது செலுத்திய 15 ரூபாய் வரியை கழித்து 1 ரூபாய் மட்டுமே இவர் செலுத்த வேண்டியிருக்கும் அதாவது
160 + 1 (16-15) = 161 ரூபாய்...
ஒருவேளை எந்த ஒரு மூலப் பொருட்களும் வாங்காத மொத்த விற்பனையினரிடம் வாங்காத சேவையாக இருப்பின் 10 + 3 + 2 + 1 = ரூபாய் 16 வரியாக நேரடியாக விதிக்கப்படும்...
இதுவரை இருந்த முறையில் கட்டிய வரிக்கும் சேர்த்து இன்னொரு வரி அதற்கும் இன்னொரு வரி என்று இருந்ததைதான் இந்த ஜிஎஸ்டி முறை மாற்றியமைக்கிறது.
இந்திய புகையிலை நிறுவனம்(ITC) இந்தியாவின் மொத்த சிகரெட் தேவைகளில் 80% பூர்த்திசெய்து சிகரெட் சந்தையில் தனிப் பெரும்  நிறுவனமாக சுமார் 100 ஆண்டுகளாக கொடிநாட்டி வருகிறது.
இதன் மொத்த பங்குகளில் 33.44% LIC(14.33%), BANKS, MUTUAL FUNDS  வசம் உள்ளது.இவை எல்லாமே கிட்டத்தட்ட அரசின் நிறுவனங்கள்.இந்நிறுவனங்கள் மட்டும் தமது பங்குகளை திரும்பப் பெற்றாலே ITC தனது உற்பத்தியில் பெரும் சரிவைச் சந்திக்கும்  என நான் உறுதியாக நம்புகிறேன். சொல்லப் போனால் இவங்க குடிக்கிறதுக்கு விக்கிறாங்கன்னா , அவங்க பிடிக்கிறதுக்கு சிகரட்ட தயாரிக்கிறாங்க. இதுல சுகாதாரத்துக்கு இத்தனை ஆயிரம் கோடின்னு வாய் கிழியப் பேசவும் செய்யுறாங்க.
தொட்டிலவும் ஆட்டிவிட்டுட்டு பிள்ளையவும் கிள்ளிவிடுறதுன்னு சொல்லுவாங்களே அதுக்கும் LIC நிறுவனம் தனது பங்குகளில் உரிமையை ITCயில் நிலைநாட்டுவதற்கும்்   என்ன   பெரிய   வித்தியாசம்ன்னு எனக்குத் தெரில.

இந்த விஷயம்  எனக்கு இன்னிக்குத்தெரியும்.(நம்ம எல்லாத்துலயும் கொஞ்சம் லேட்டுதான் போல 😁😁) ஓர் ஆசிரியன்  என்ற நிலையில் அல்லாமல் நாட்டின்  பற்றுமிக்க குடிமக்களில் ஒருவன்☺ என்ற முறையில் இதை சொல்லும் கடமை இருப்பதாகவே உணர்கிறேன்.
பொறுத்திருந்து பார்ப்போம். என்ன மாற்றம் வரப்போகுதுன்னு.

நன்றி#விக்கிபீடியா இணையதளம்.
QUARTERLY EXAM 2016
12.9.16 -  LANGUAGE I
13.9.16 - BUKIRT HOLIDAY
14.9.16 - LANGUAGE II
15.9.16 - ENGLISH I
16.9.16 - ENGLISH II
17.9.16 - COMMERCE
18.9.16 - SUNDAY
19.9.16 - MATHS/ZOOLOGY/ACCOUNTAN.CY
& AUDITING THEORY
20.9.16 - PHYSICS/ECONOMICS/ELECTRICAL MACHINE & APPLIANCE
21.9.16 - COMPUTER SCIENCE
22.9.16 - CHEMISTRY/ACCOUNTANCY 
23.9.16 - BIOLOGY/BOTANY/HISTORY/BUSINESS MATHS.


SSLC QUARTERLY 2016
14.9.16 - LANGUAGE I
15.9.16 - LANGUAGE II
16.9.16 - ENGLISH I
17.9.16 - ENGLISH II
19.9.16 - MATHS
21.9.16 - SCIENCE
22.9.16 - OPTIONAL SCIENCE
23.9.16 - SOCIAL SCIENCE

7வது சம்பள கமிஷன் நிலுவை தொகைக்கு வரி விலக்கைப் பெறுவது எப்படி?


உதாரணம் ஒருவரின் ஆண்டு சம்பளம் ரூ.9.50 லட்சம் என்று வைத்துக்கொள்ளுங்கள், நிலுவைத் தொகை ரூ.1 லட்சம் பெறுகிறார்கள் என்றால், அதில் பாதி ரூ.50,000 சென்ற நிதி ஆண்டிற்கானது. இந்த வருட மொத்த வருமானம் ரூ.10 லட்சம் பெற வேண்டும் ஆனால் ரூ.10.50 லட்சமாக நிலுவை தொகையுடன் பெறுவீர்கள்.


7வது சம்பள கமிஷன் மூலமாக மத்திய அரசு ஊழியர்கள் அனைவரும் விரைவில் அதிக சம்பளத்தை பெற இருக்கிறார்கள். இந்தச் சம்பள உயர்வு ஜனவரி 1, 2016 முதல் கணக்கிடப்படுவதால் 6 மாத நிலுவை தொகையை மொத்தமாக பெறவிருக்கும் நிலையில் மத்திய அரசு ஊழியர்கள் வருமான வரி செலுத்த வேண்டி வரும்.

30 சதவீதம் வரி ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை வருமானம் பெறுவோர் 30 சதவீதம் வருமான வரி செலுத்த வேண்டும். எனவே நீங்கள் ரூ. 10 லட்சத்திற்கும் மேலாக பெரும் போது வரி கட்ட வேண்டும். இதனால் கூடுதல் வரி செலுத்த வேண்டுமா? இல்லை, எப்படி என்று பார்ப்போம். நிலுவை தொகையை தாமதமாகப் பெறும் போது ஊழியர்களுக்கு வரி விலக்கு அளிப்பதற்கான விதிகள் உள்ளன.

பிரிவு 89(1) 
ஊழியர் மற்றும் குடும்பம் நிலுவை தொகையுடன் சம்பளம் அல்லது ஓய்வூதியம் பெறும் போது நிலுவைத் தொகைக்கு வரி செலுத்துவதில் இருந்து பிரிவு 89(1)-இன் கீழ் வரி விலக்கு பெறலாம். இந்தப் பிரிவின் கீழ் வரி தாக்கல் செய்ய வேண்டிய தொகையின் அளவைக் குறைக்கலாம். சென்ற வருடத்தை விட இந்த வருட வரியில் அதிகபடுத்தப்பட்டு இருக்கும் விகிதங்களால் இது சாத்தியம் ஆகிறது என்று க்ளியர் டாக்ஸ் நிறுவனத்தின் தலைமை பதிப்பாசிரியர் ப்ரீத்தி குரானா தெரிவித்துள்ளார்.

வரி விலக்கு எப்படிக் கணக்கிடப்படுகிறது? 
இரண்டு வருடத்திற்கும் பெற இருக்கும் நிலுவை தொகை மற்றும் இந்த வருடம் நீங்கள் பெற இருக்கும் நிலுவை தொகை என இரண்டையும் மறு கணக்கிடுவதன் மூலம் வரி விலக்கு பெற இயலும்.

கணக்கிடப்படும் முறை
1) இந்த வருடத்திற்குப் பெறப்பட்ட நிலுவை தொகையை தவிர்த்து மொத்த சம்பளத்தில் இருந்து செலுத்த வேண்டிய வரியைக் கணக்கிடவும். பின்னர் இரண்டையும் கழித்து வரும் தொகையை ‘A' என்று வைத்துக்கொள்ளுங்கள். 

2) ஒரு வருடத்திற்கான மொத்த சம்பளத்தில் நீங்கள் பெற்ற நிலுவை தொகை மற்றும் சென்ற வருடத்திற்குப் பெற்ற நிலுவை தொகையை தனித்தனியாகக் கணக்கிடவும். பின்னர் இதன் இரண்டையும் கழித்து வரும் தொகையை B என்று வைத்துக்கொள்ளுங்கள்.

3) B-ஐ விட A அதிகமாக இருந்தால் A தொகைக்குச் சமமாக வரிவிலக்கு பெறலாம்.

எப்படி உரிமை கோருவது? 
வரி விலக்கைப் பெற வருமான வரி சட்டத்தின் படி, ஃபார்ம் 10E படிவத்தைத் தாக்கல் செய்ய வேண்டும். பான் எண், நிலுவை தொகை முன்னெடுப்பு சம்பள விவரங்கள் போன்றவற்றை படிவத்தில் நிரப்பி வருமான வரித்துறை இணையதளத்தில் பதிவேற்றுவதன் மூலம் வரி விலக்கு பெறலாம்

டிப்ளமோ நர்சிங்: 9ம் தேதி கலந்தாய்வு
சென்னை: 'டிப்ளமோ இன் பார்மசி' படிப்புகளுக்கான, மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, வரும், 9ம் தேதி நடக்கிறது. டிப்ளமோ இன் பார்மசி படிப்புக்கு, மூன்று அரசு கல்லுாரிகளில், 240 இடங்கள் உள்ளன. டிப்ளமோ இன் பார்மசி முடித்தோர், இரண்டாம் ஆண்டில் நேரடியாக சேரும், பி.பார்ம்., மற்றும் டிப்ளமோ நர்சிங் முடித்தோர், இரண்டாம் ஆண்டில் நேரடியாக சேரும், 'போஸ்ட் பேசிக்' பி.எஸ்சி., படிப்புகளுக்கு, அரசு, சுயநிதி கல்லுாரிகளில், 1,300 இடங்களும் உள்ளன.

உடற்கல்வி ஆசிரியர் பற்றாக்குறையால் அரசுப் பள்ளி மாணவர்களின் விளையாட்டுத் திறன் பாதிப்பு.

கடலூர் மாவட்டத்தில் செயல்படும், அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் பற்றாக்குறையால் மாணவர்களின் விளையாட்டுத் திறன் பாதிக்கப்பட்டுள்ளது.மாவட்டத்தில் உள்ள கடலூர், விருத்தாசலம் கல்வி மாவட்டங்களில் 144 அரசு உயர்நிலைப் பள்ளிகள், 137 அரசுமேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 281 அரசுப் பள்ளிகள் உள்ளன.
இந்தப் பள்ளிகளில் உடற்கல்வி பிரிவில், மாணவர்களுக்கு தடகளம், கால்பந்து, கையுந்து பந்து, ஷட்டில், பேட்மிண்டன், செஸ், கோ-கோ, கபடி உள்ளிட்ட பல விளையாட்டுகள் பயிற்றுவிக்கப்பட வேண்டும்.ஆனால், மாவட்டத்தில் உள்ள மொத்த பள்ளிகளில், சுமார் 30க்கும் மேற்பட்ட உயர்நிலைப் பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியரே இல்லையாம். பல பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது.மேலும், மாணவர்கள் விளையாட தேவையான, அடிப்படை உபரணங்களான பேட்மிண்டன், செஸ், கால்பந்து, கையுந்து பந்து, ஷட்டில், வலை உள்ளிட்ட சாதனங்கள் இல்லாத நிலை தொடர்கிறது.பண்ருட்டி வட்டம், பேர்பெரியான்குப்பம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 400-க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர்.இங்கு உடற்கல்வி ஆசிரியர் பணியிடமே இதுவரை ஏற்படுத்தப்படவில்லையாம்.பள்ளி மாணவர்களிடையே குறுவட்ட, மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவிலான போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில், அரசுப் பள்ளி மாணவர்களைக் காட்டிலும் தனியார் பள்ளி மாணவர்களே ஆதிக்கம் செலுத்துகின்றனர்.உடற்கல்வி ஆசிரியர் பற்றாக்குறை, உபகரணங்கள் இல்லாமை என பல்வேறு காரணங்களால், அரசுப் பள்ளி மாணவர்களின் விளையாட்டுத் திறன் கேள்விக்குறியாக உள்ளது.அரசுப் பள்ளி மாணவர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்தும் வகையில், தமிழக அரசு, பள்ளிகளில் தேவையான உடற்கல்வி ஆசிரியர்களை நியமிக்கவும், விளையாட்டு மைதானம் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் அளிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.இதுகுறித்து ஓய்வு பெற்ற உடற்கல்வி இயக்குநர் ஒருவர் கூறியதாவது:பள்ளிகளில் விளையாட்டுக்கு என எந்த நிதியும் இல்லை. பொது நிதியிலிருந்து விளையாட்டுக்கு நிதி ஒதுக்க தலைமையாசிரியர்களும் முன் வருவதில்லை.

மாணவர்கள் கல்வியைப் பெறுவதோடு உடலையும் வலிமையாக்கிக் கொள்ள வேண்டும் என்கிற நோக்கத்தில்தான் பள்ளிகளில் உடற்கல்வி வகுப்புகளைக் கொண்டு வந்தது தமிழக அரசு.ஆனால், இப்போது அந்த நோக்கமெல்லாம் கானல் நீராகி வருகிறது என அவர் கூறினார்.இதுகுறித்து, கடலூர் முதன்மைக் கல்வி அலுவலகத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டதற்கு பதில் கூற மறுத்துவிட்டனர்.

உடற்கல்வி ஆசிரியர் பற்றாக்குறையால் அரசுப் பள்ளி மாணவர்களின் விளையாட்டுத் திறன் பாதிப்பு.

கடலூர் மாவட்டத்தில் செயல்படும், அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் பற்றாக்குறையால் மாணவர்களின் விளையாட்டுத் திறன் பாதிக்கப்பட்டுள்ளது.மாவட்டத்தில் உள்ள கடலூர், விருத்தாசலம் கல்வி மாவட்டங்களில் 144 அரசு உயர்நிலைப் பள்ளிகள், 137 அரசுமேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 281 அரசுப் பள்ளிகள் உள்ளன.
இந்தப் பள்ளிகளில் உடற்கல்வி பிரிவில், மாணவர்களுக்கு தடகளம், கால்பந்து, கையுந்து பந்து, ஷட்டில், பேட்மிண்டன், செஸ், கோ-கோ, கபடி உள்ளிட்ட பல விளையாட்டுகள் பயிற்றுவிக்கப்பட வேண்டும்.ஆனால், மாவட்டத்தில் உள்ள மொத்த பள்ளிகளில், சுமார் 30க்கும் மேற்பட்ட உயர்நிலைப் பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியரே இல்லையாம். பல பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது.மேலும், மாணவர்கள் விளையாட தேவையான, அடிப்படை உபரணங்களான பேட்மிண்டன், செஸ், கால்பந்து, கையுந்து பந்து, ஷட்டில், வலை உள்ளிட்ட சாதனங்கள் இல்லாத நிலை தொடர்கிறது.பண்ருட்டி வட்டம், பேர்பெரியான்குப்பம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 400-க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர்.இங்கு உடற்கல்வி ஆசிரியர் பணியிடமே இதுவரை ஏற்படுத்தப்படவில்லையாம்.பள்ளி மாணவர்களிடையே குறுவட்ட, மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவிலான போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில், அரசுப் பள்ளி மாணவர்களைக் காட்டிலும் தனியார் பள்ளி மாணவர்களே ஆதிக்கம் செலுத்துகின்றனர்.உடற்கல்வி ஆசிரியர் பற்றாக்குறை, உபகரணங்கள் இல்லாமை என பல்வேறு காரணங்களால், அரசுப் பள்ளி மாணவர்களின் விளையாட்டுத் திறன் கேள்விக்குறியாக உள்ளது.அரசுப் பள்ளி மாணவர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்தும் வகையில், தமிழக அரசு, பள்ளிகளில் தேவையான உடற்கல்வி ஆசிரியர்களை நியமிக்கவும், விளையாட்டு மைதானம் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் அளிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.இதுகுறித்து ஓய்வு பெற்ற உடற்கல்வி இயக்குநர் ஒருவர் கூறியதாவது:பள்ளிகளில் விளையாட்டுக்கு என எந்த நிதியும் இல்லை. பொது நிதியிலிருந்து விளையாட்டுக்கு நிதி ஒதுக்க தலைமையாசிரியர்களும் முன் வருவதில்லை.

மாணவர்கள் கல்வியைப் பெறுவதோடு உடலையும் வலிமையாக்கிக் கொள்ள வேண்டும் என்கிற நோக்கத்தில்தான் பள்ளிகளில் உடற்கல்வி வகுப்புகளைக் கொண்டு வந்தது தமிழக அரசு.ஆனால், இப்போது அந்த நோக்கமெல்லாம் கானல் நீராகி வருகிறது என அவர் கூறினார்.இதுகுறித்து, கடலூர் முதன்மைக் கல்வி அலுவலகத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டதற்கு பதில் கூற மறுத்துவிட்டனர்.

TNPSC:குரூப் - 4 பதவிக்கு 2ம் கட்ட கவுன்சிலிங்

அரசுத் துறையில், குரூப் - 4 பதவிகளுக்கு, 9ம் தேதி முதல், 12ம் தேதி வரை, இரண்டாம் கட்ட கவுன்சிலிங் நடக்கிறது. இதுகுறித்து, அரசு பணியாளர் தேர்வாணையமான,டி.என்.பி.எஸ்.சி., செயலர் விஜயக்குமார் அறிவிப்பு:
குரூப் - 4ல் அடங்கிய இளநிலை உதவியாளர், நில அளவர் மற்றும் வரைவாளர் பதவிகளுக்கு, நேரடி நியமனம் செய்ய, 2014 டிசம்பரில் எழுத்துத் தேர்வு நடந்தது. தேர்வு முடிவு, 2015 மே, 22ல் வெளியானது. இதில், முதல்கட்ட கவுன்சிலிங் முடிந்த நிலையில், மீதமுள்ள, 491 காலி இடங்களுக்கு, வரும், 9ம் தேதி முதல், 12ம் தேதி வரை, காலை, 10:00 மணிக்கு இரண்டாம் கட்ட கவுன்சிலிங் நடக்கும். இதற்கு தகுதியானவர்கள் விபரம், இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது; அழைப்புக் கடிதமும் அனுப்பப்பட்டுள்ளது.இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

அரசு ஒதுக்கீட்டில் காலியாகவுள்ள 1 லட்சம் பொறியியல் இடங்கள்: தனியார் கல்லூரி நிர்வாகமே நிரப்ப விரைவில் அனுமதி

அரசு ஒதுக்கீட்டில் காலியாக உள்ள ஒரு லட்சம் பொறியியல் இடங்களை தனியார் கல்லூரி நிர்வாகத்தினரே நிரப்பிக்கொள்ள தொழில்நுட்பக் கல்வித்துறை விரைவில் அனுமதி அளிக்க வுள்ளது.
தமிழகத்தில் உள்ள 523 பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் உள்ள ஒரு லட்சத்து 92 ஆயிரம் பிஇ, பிடெக் இடங்களை ஒற்றைச்சாளர முறையில் நிரப்ப ஜூன், ஜூலை மாதங்களில் கலந்தாய்வு நடத்தி முடிக்கப்பட்டது. கலந்தாய்வின் முடிவில் 90 ஆயிரம் இடங்கள் மட்டுமே நிரம்பின. எஞ்சிய ஒரு லட்சத்து 2 ஆயிரம் இடங்கள் காலியாக கிடக்கின்றன. இந்த காலியிடங்கள் அனைத்தும் சாதாரண கல்லூரிகள் என்று சொல்லப்படும் பொறியியல் கல்லூரிகளில்தான் அதிகம் உள் ளன. முதல் ஆண்டு மாணவர் களுக்கான வகுப்புகள் ஆகஸ்டு 1-ம் தேதி தொடங்கிவிட்டன.

அரசு ஒதுக்கீட்டில் காலியாகவுள்ள இடங்களை ஆகஸ்டு மாதம் 15-ம் தேதிக்குள் நிரப்ப வேண்டும் என்பது விதிமுறை.கலந்தாய்வின் முடிவில் காலியாகவுள்ள இடங்களை தனியார் கல்லூரி நிர்வாகத்தினரே நிரப்பிக்கொள்ள தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அனுமதி அளிக்கும். அந்த வகையில், நடப்பு கல்வி ஆண்டில் அரசு ஒதுக்கீட்டில் காலியாகவுள்ள இடங்களை கல்லூரி நிர்வாகத்தினரே நிரப்பிக்கொள்ள தொழில்நுட்பக் கல்வித்துறை விரைவில் அனுமதி அளிக்கும் என்று அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளர் எஸ்.கணேசன் தெரிவித்தார்.

அரசு ஒதுக்கீட்டில் நிரப்பப்படாத இடங்களைத்தான் ஆகஸ்டு15-ம் தேதிக்குள் நிரப்பலாமே தவிர, கலந்தாய்வு முடிந்த பின்னர் ஒப்பு தல் பெறப்பட்ட புதிய இடங்களை இதுபோன்று நிரப்ப முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

அரசு ஒதுக்கீட்டில் காலியாகவுள்ள 1 லட்சம் பொறியியல் இடங்கள்: தனியார் கல்லூரி நிர்வாகமே நிரப்ப விரைவில் அனுமதி

அரசு ஒதுக்கீட்டில் காலியாக உள்ள ஒரு லட்சம் பொறியியல் இடங்களை தனியார் கல்லூரி நிர்வாகத்தினரே நிரப்பிக்கொள்ள தொழில்நுட்பக் கல்வித்துறை விரைவில் அனுமதி அளிக்க வுள்ளது.
தமிழகத்தில் உள்ள 523 பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் உள்ள ஒரு லட்சத்து 92 ஆயிரம் பிஇ, பிடெக் இடங்களை ஒற்றைச்சாளர முறையில் நிரப்ப ஜூன், ஜூலை மாதங்களில் கலந்தாய்வு நடத்தி முடிக்கப்பட்டது. கலந்தாய்வின் முடிவில் 90 ஆயிரம் இடங்கள் மட்டுமே நிரம்பின. எஞ்சிய ஒரு லட்சத்து 2 ஆயிரம் இடங்கள் காலியாக கிடக்கின்றன. இந்த காலியிடங்கள் அனைத்தும் சாதாரண கல்லூரிகள் என்று சொல்லப்படும் பொறியியல் கல்லூரிகளில்தான் அதிகம் உள் ளன. முதல் ஆண்டு மாணவர் களுக்கான வகுப்புகள் ஆகஸ்டு 1-ம் தேதி தொடங்கிவிட்டன.

அரசு ஒதுக்கீட்டில் காலியாகவுள்ள இடங்களை ஆகஸ்டு மாதம் 15-ம் தேதிக்குள் நிரப்ப வேண்டும் என்பது விதிமுறை.கலந்தாய்வின் முடிவில் காலியாகவுள்ள இடங்களை தனியார் கல்லூரி நிர்வாகத்தினரே நிரப்பிக்கொள்ள தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அனுமதி அளிக்கும். அந்த வகையில், நடப்பு கல்வி ஆண்டில் அரசு ஒதுக்கீட்டில் காலியாகவுள்ள இடங்களை கல்லூரி நிர்வாகத்தினரே நிரப்பிக்கொள்ள தொழில்நுட்பக் கல்வித்துறை விரைவில் அனுமதி அளிக்கும் என்று அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளர் எஸ்.கணேசன் தெரிவித்தார்.

அரசு ஒதுக்கீட்டில் நிரப்பப்படாத இடங்களைத்தான் ஆகஸ்டு15-ம் தேதிக்குள் நிரப்பலாமே தவிர, கலந்தாய்வு முடிந்த பின்னர் ஒப்பு தல் பெறப்பட்ட புதிய இடங்களை இதுபோன்று நிரப்ப முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

அரசு ஒதுக்கீட்டில் காலியாகவுள்ள 1 லட்சம் பொறியியல் இடங்கள்: தனியார் கல்லூரி நிர்வாகமே நிரப்ப விரைவில் அனுமதி

அரசு ஒதுக்கீட்டில் காலியாக உள்ள ஒரு லட்சம் பொறியியல் இடங்களை தனியார் கல்லூரி நிர்வாகத்தினரே நிரப்பிக்கொள்ள தொழில்நுட்பக் கல்வித்துறை விரைவில் அனுமதி அளிக்க வுள்ளது.
தமிழகத்தில் உள்ள 523 பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் உள்ள ஒரு லட்சத்து 92 ஆயிரம் பிஇ, பிடெக் இடங்களை ஒற்றைச்சாளர முறையில் நிரப்ப ஜூன், ஜூலை மாதங்களில் கலந்தாய்வு நடத்தி முடிக்கப்பட்டது. கலந்தாய்வின் முடிவில் 90 ஆயிரம் இடங்கள் மட்டுமே நிரம்பின. எஞ்சிய ஒரு லட்சத்து 2 ஆயிரம் இடங்கள் காலியாக கிடக்கின்றன. இந்த காலியிடங்கள் அனைத்தும் சாதாரண கல்லூரிகள் என்று சொல்லப்படும் பொறியியல் கல்லூரிகளில்தான் அதிகம் உள் ளன. முதல் ஆண்டு மாணவர் களுக்கான வகுப்புகள் ஆகஸ்டு 1-ம் தேதி தொடங்கிவிட்டன.

அரசு ஒதுக்கீட்டில் காலியாகவுள்ள இடங்களை ஆகஸ்டு மாதம் 15-ம் தேதிக்குள் நிரப்ப வேண்டும் என்பது விதிமுறை.கலந்தாய்வின் முடிவில் காலியாகவுள்ள இடங்களை தனியார் கல்லூரி நிர்வாகத்தினரே நிரப்பிக்கொள்ள தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அனுமதி அளிக்கும். அந்த வகையில், நடப்பு கல்வி ஆண்டில் அரசு ஒதுக்கீட்டில் காலியாகவுள்ள இடங்களை கல்லூரி நிர்வாகத்தினரே நிரப்பிக்கொள்ள தொழில்நுட்பக் கல்வித்துறை விரைவில் அனுமதி அளிக்கும் என்று அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளர் எஸ்.கணேசன் தெரிவித்தார்.

அரசு ஒதுக்கீட்டில் நிரப்பப்படாத இடங்களைத்தான் ஆகஸ்டு15-ம் தேதிக்குள் நிரப்பலாமே தவிர, கலந்தாய்வு முடிந்த பின்னர் ஒப்பு தல் பெறப்பட்ட புதிய இடங்களை இதுபோன்று நிரப்ப முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

வருமான வரி கணக்கு தாக்கல்:

2015-16ஆம் நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கு வெள்ளிக்கிழமை கடைசி நாளாகும்.ஜூலை 29-இல் வங்கி ஊழியர்களின் ஒரு நாள் வேலைநிறுத்தம், 31-இல் வங்கி விடுமுறை ஆகிய காரணங்களால் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கான கெடு ஆகஸ்ட் 5-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
எனவே, அனைத்து வருமான வரி அலுவலகங்களிலும் வருமான வரிக் கணக்கை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 5) மாலை 5.30 வரை கணக்கை தாக்கல் செய்யலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்த நிலையில், வன்முறைச் சூழல் நிலவுவதால், ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்தவர்கள் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கான கெடுவை ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அனைத்து அரசு அலுவலர்களும் ஆசிரியர்களும் கவனமாக படிக்கவும். Be alert all govt staffs ,


நமது ஆதார் எண், வங்கி கணக்கு எண், PAN நம்பர் ஆகியவை நமது ECS WEB
PAYROLL ( ONLINE SERVICE RECORD-S.R.) மூலம் இணைக்கப்பட்டுள்ளது. நாம்
வாங்கும் சம்பளம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. ஆனால் அந்த
சம்பளத்தில் பிடிக்கப்படும் வருமானவரி நமது பான் கார்டில் கட்டாயம் வரவு
வைக்கப்பட வேண்டும். நம்மிடம் சம்பளத்தில் பிடிக்கப்படும் வருமான வரி
நமது அலுவலக TAN நம்பரில் சேர்ந்து இருக்கும்.  நமது அலுவலக DDO (TAN)
நம்பரில் இருக்கும் வருமான வரி பிடித்தத்தை PAN நம்பருக்கு மாற்ற
கட்டாயம் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை TDS-24Q ஒவ்வொரு காலண்டுக்கும்
தாக்கல் செய்ய வேண்டும். ஆண்டு முடிவில் Form-16 நாம் பெறவேண்டும். இதை
வலியுறுத்தி நமது தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் அரசாணை (G.O.880
DT:12.12.2014, G.O.843 DT; 15.12.2015) வெளியிட்டுள்ளது. இதுவரை நாம்
Form-16 வாங்கவில்லை எனில் நம்மிடம் பிடிக்கப்பட்ட வருமான வரி நமது
பெயரில் வரவு வைக்கப்படாமல் உள்ளது. அதாவது நாம் இதுவரை வருமான வரி
காட்டவில்லை என்று பொருள். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை TDS-24Q  தாக்கல்
செய்யாமல் தாமதிக்கப்படும் ஒவ்வொரு நாளுக்கும் ரூபாய் 200 அபராதம்
விதிக்கப்படும். இது சம்பளம் வாங்கும் அனைவருக்கும் பொருந்தும்.
அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகங்களில் இன்று 5 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றுகின்ற பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்களை வரவழைத்து உயர்நிலைப் பாள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெறவேண்டுமானால் பட்டதாரி ஆசிரியராக ஓராண்டு பணியாற்ற வேண்டும் என விருப்பக் கடிதம் வாங்கிக்கொண்டு இருக்கிறார்கள்........