யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

22/8/16

உள்ளாட்சி தேர்தல் நடத்த தேர்தல் அதிகாரிகள் நியமனம்

சென்னை:ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல் நடத்தும் அதிகாரிகளை நியமிக்க, மாவட்ட கலெக்டர்களுக்கு, தேர்தல் கமிஷன் அதிகாரம் வழங்கியுள்ளது.


இதுகுறித்து, மாநில தேர்தல் கமிஷன் வெளியிட்டு உள்ள அறிக்கை:உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்காக, ஊரக வளர்ச்சி துறை இயக்குனர், நகராட்சி நிர்வாக இயக்குனர், பேரூராட்சி இயக்குனர் ஆகியோர், மாநில தேர்தல் அலுவலர்களாக நியமிக்கப்பட்டனர்.

அதன்பின், அந்தந்த மாவட்ட கலெக்டர்கள், மாவட்ட தேர்தல் அலுவலர்களாக நியமிக்கப்பட்டனர்; சென்னைக்கு மட்டும் மாநகராட்சி கமிஷனர், தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். வாக்காளர் பதிவு அலுவலர்களாக, வட்டார வளர்ச்சி அலுவலர், மாநகராட்சி மற்றும் நகராட்சி கமிஷனர்கள், பேரூராட்சி செயலர்கள் நியமிக்கப்பட்டனர்.

தற்போது, மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களை நியமிக்க, மாவட்ட கலெக்டர்களுக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது.
அதன்படி, மாவட்ட கவுன்சிலர் தேர்தல் நடத்தும் அதிகாரியாக, மாவட்ட ஊரக வளர்ச்சி துறை இணை இயக்குனர் அல்லது மாவட்ட வருவாய் அலுவலரை நியமிக்க வேண்டும்; உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியாக, ஊரக வளர்ச்சி துறை உதவி இயக்குனர், வருவாய் கோட்ட அலுவலரை நியமிக்க வேண்டும்.

ஒன்றிய கவுன்சிலர் தேர்தல் நடத்துவதற்கு, ஊரக வளர்ச்சி துறை உதவி இயக்குனர் அல்லது வருவாய் கோட்ட அலுவலரை நியமிக்க வேண்டும்; உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியாக,
வட்டார வளர்ச்சி அலுவலர் அல்லது வட்டாட்சியரை நியமிக்க வேண்டும்.ஊராட்சி தலைவர் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தல் நடத்துவதற்கு, வட்டார வளர்ச்சி அலுவலரையும், உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியாக துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அல்லது
துணை வட்டாட்சியரை நியமிக்க வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

ஆசிரியர் சங்க தலைவர் 'சஸ்பெண்ட்':அனைத்து சங்கங்களும் கடும் எதிர்ப்பு

அரசு பள்ளியில் பணியாற்றும், கலை ஆசிரியர் சங்கத் தலைவரை, பள்ளிக் கல்வித்துறை அதிரடியாக, 'சஸ்பெண்ட்' செய்துள்ளது; இதற்கு, ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
ராமநாதபுரம் மாவட்டத்தில், 'வாட்ஸ் ஆப்' சமூக வலைதளத்தில் தகவல்கள் பரிமாறியதால், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் மற்றும் தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தைச் சேர்ந்த, மூன்று ஆசிரியர்களுக்கு, 'மெமோ' தரப்பட்டது.


இந்நிலையில், நீலகிரி மாவட்டம், தும்மானாட்டி அரசு மேல்நிலைப் பள்ளியின் ஓவிய ஆசிரியர் எஸ்.ஏ.ராஜ்குமார், திடீரென சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். கலை ஆசிரியர்கள் நலச் சங்கத்தின் மாநிலத் தலைவராக உள்ள இவர், அதிகாரிகளின் விதிமீறல்கள் தொடர்பாக, நீதிமன்றத்தில் வழக்குகள் நடத்தி வருகிறார்; 19 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி, போராட்டமும் நடத்தி வருகிறார். இவருக்கான சஸ்பெண்ட் உத்தரவில், பத்திரிகைகளுக்கு தவறான செய்திகளை தருவதாக, நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி டி.கணேஷ்மூர்த்தி தெரிவித்து உள்ளார்; இந்த நடவடிக்கைக்கு, ஆசிரியர் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துஉள்ளனர்.

அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் வகையில், அதிகாரிகளின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன. சங்கத்தினர் போராடவும், பத்திரிகைகளிடம் பேசவும் அரசியலமைப்பு சட்டம் உரிமை அளித்துள்ளது.

பி.சங்கரநாராயணன்
தலைவர், அகில இந்திய அனைத்து ஆசிரியர்கள் சங்கம்.
சங்க நிர்வாகிகள் மீதும், ஆசிரியர்கள் மீதும் அடக்குமுறை நடவடிக்கை கூடாது. இயக்க நலன்கள், இயக்க உறுப்பினர்களுக்கு பாதிப்பு
ஏற்பட்டால், சங்க நிர்வாகிகள் தான் குரல் கொடுக்க முடியும்; அதை தடுப்பது சரியல்ல.
பி.இளங்கோவன்
ஒருங்கிணைப்பாளர், ஜாக்டோ ஆசிரியர் கூட்டமைப்பு.
அதிகாரிகள் தவறே செய்யாமல் இருக்கின்றனரா; அதை சங்கங்கள் தான் வெளிக்கொண்டு
வருகின்றன. அதனால், இது போன்ற அடக்குமுறை
நடவடிக்கைகளை எடுக்கின்றனர். உடனடியாக, சஸ்பெண்ட் உத்தரவை வாபஸ் பெற வேண்டும்.
எஸ்.சி.கிப்சன்
பொதுச் செயலர், தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் (டாடா).
ஓவியம், கலை ஆசிரியர்களின் நலனுக்காக செயல்படும், சங்க நிர்வாகி மீது, விதிகளை மீறி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்; இது, அதிகாரிகளின் பழி வாங்கும் செயல்.
நல்ல.காசிராஜன்
தலைவர், தமிழ்நாடு ஓவிய ஆசிரியர் கூட்டமைப்பு.

2,100 ஆசிரியர்களுக்கு விருப்ப இடமாறுதல்

சென்னை;முதுகலை ஆசிரியர்களுக்கான கவுன்சிலிங்கில், இரண்டு நாட்களில், 2,100 பேருக்கு விருப்ப இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.அரசு தொடக்கப் பள்ளி மற்றும் பள்ளிக் கல்வி ஆசிரியர்களுக்கு, இம்மாதம், 3ம் தேதி முதல், விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங் நடந்து வருகிறது. இந்த ஆண்டு, ஆசிரியர் காலியிடங்களை மறைக்காமல்,
வெளிப்படையாக, கவுன்சிலிங் நடத்துவதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். நேற்று முன்தினம், 1,277 முதுகலை ஆசிரியர்களுக்கு, ஒரே மாவட்டத்திற்குள் இடமாறுதல் வழங்கப்பட்டது; நேற்று, 826 ஆசிரியர்களுக்கு, மாவட்டம் விட்டு மாவட்டத்திற்கு, இடமாறுதல் அளிக்கப்பட்டதாக, பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வு: ஒருவருக்கு மட்டும் இடமாறுதல், 61 பேர் ஏமாற்றம்

திருவண்ணாமலையில் சனிக்கிழமை நடைபெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுவதற்கான கலந்தாய்வில் ஒருவர் மட்டும் மாறுதல் பெற்றார். மற்ற 61 பேர் ஏமாற்றம் அடைந்தனர்.


தமிழகம் முழுவதும் தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் மற்றும் பணிநிரவல் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு (மாவட்டம் விட்டு மாவட்டம்) இணையதளம் வாயிலாக சனிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ராஜேந்திரன் தலைமையில், திருவண்ணாமலை டேனிஸ் மிஷன் மேல்நிலைப் பள்ளியில் இந்த கலந்தாய்வு நடைபெற்றது. இதில், 62 ஆசிரிய - ஆசிரியைகள் கலந்துகொண்டு வெளி மாவட்டங்களுக்குச் செல்ல காத்திருந்தனர்.

ஆனால், தாங்கள் விரும்பிய மாவட்டத்தில் விரும்பிய ஒன்றியத்தில் தமிழ், ஆங்கிலம், சமூக அறிவியல் பாட ஆசிரியர்களுக்கான காலிப் பணியிடம் இல்லாததால் 61 ஆசிரிய - ஆசிரியைகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

ஒருவருக்கு மட்டும் மாறுதல்: 62 பேரில் ஒரே ஒரு ஆங்கில ஆசிரியர் மட்டும் வேலூர் மாவட்டத்துக்கு இடமாறுதல் பெற்றார். இதேபோல, வேலூர் மாவட்டத்தில் இருந்து 2 பட்டதாரி ஆசிரியர்கள் திருவண்ணாமலை மாவட்டத்துக்கு இடமாறுதல் பெற்றுள்ளனர்.

இன்று கலந்தாய்வு நிறைவு: இடைநிலை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு (மாவட்டம் விட்டு மாவட்டம்) ஞாயிற்றுக்கிழமை (ஆக.21) நடைபெறுகிறது. இத்துடன் தொடக்கக் கல்வித் துறை ஆசிரியர்களுக்கு 2016-17ஆம் ஆண்டுக்கான இடமாறுதல் கலந்தாய்வு நிறைவு பெறுகிறது

பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற மாணவ, மாணவிகளுக்கு பயிற்சிப் பட்டறை

வாலாஜாபேட்டையை அடுத்த சுமைதாங்கியில் உள்ள நாக்  கல்விக் குழுமத்தில் பயிலும் 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவதற்கான பயிற்சி பட்டறை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.


முகாமுக்கு, பள்ளித் தாளாளர் எஸ்.சி.பிள்ளை தலைமை வகித்தார். முதன்மைச் செயலாளர் பார்வதிநாதன் முன்னிலை வகித்தார். இதில், தேசிய பயிற்சியாளர் சிவசுப்பிரமணியன் கலந்துகொண்டு, அரசுப் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவது எப்படி என்பது குறித்து மாணவ, மாணவிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

 காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்ற இந்த பயிற்சி பட்டறையில், 350-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

இதில், முதன்மை நிர்வாக அலுவலர் சி.நாகராஜன், சிபிஎஸ்இ பள்ளி முதல்வர் சந்திரா கைலாசம், மெட்ரிக். பள்ளி முதல்வர் பாவைகார்த்திகேயன், மேல்நிலைப்பள்ளி ஒருங்கிணைப்பாளர் சுந்தரபாண்டியன், பயிற்சியாளர்கள் ரகுநாதன், என்.டி.சீனிவாசன், மக்கள் தொடர்பு அலுவலர் சுந்தர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தரம் குறைந்த பள்ளிகளை சீரமைக்க வேண்டும்: கல்வி இயக்க மாநாட்டில் தீர்மானம்

தமிழ்நாட்டில் தரம் குறைந்த பள்ளிகளை சீரமைக்க வேண்டும் என தமிழ்நாட்டு கல்வி இயக்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாட்டுக் கல்வி இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு மாநாடு வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டையை அடுத்த அம்மூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.


கூட்டத்துக்கு தமிழ்நாட்டு கல்வி இயக்க ஒருங்கிணைப்பாளர் பொழிலன் தலைமை வகித்தார். மாநாட்டில் திரைப்பட நடிகரும், இயக்குநருமான சமுத்திரகனி, சட்டப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் வணங்காமுடி ஆகியோர் தாய் மொழிக் கல்வியின் அவசியம் குறித்து விளக்கினர்.

அதனைத் தொடர்ந்து, அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளின் திறன்மேம்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்ட பேச்சு, கட்டுரைப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அரிபரந்தாமன் கலந்துகொண்டு பரிசு, சான்றிதழ்களை வழங்கினார்.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: மழலையர் கல்வி முதல் உயர்கல்வி வரை அனைத்துத் துறைகளிலும் தமிழே கல்வி மொழியாக்கப்பட வேண்டும். அரசு, தனியார் துறைகளில் அனைத்து வேலைவாய்ப்புகளிலும், மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயர்கல்வியிலும் தமிழ்வழியில் படித்தோருக்கே முன்னுரிமை அளித்து 100 விழுக்காடு ஒதுக்கீடு செய்யவேண்டும். தமிழ்நாட்டில் தரமற்று இருக்கும் அரசுப் பள்ளிகளை தரப்படுத்தி அனைவருக்கும் இலவசக் கல்வியை அளிக்க வேண்டும். அரசுப் பள்ளி ஆசிரியர்களின் பிள்ளைகள், அரசு ஊழியர்களின் பிள்ளைகள் அனைவரும் அரசுப் பள்ளிகளிலேயே பயில வேண்டும். இந்திய அரசின் வேலைவாய்ப்புகள், உயர்கல்வி உள்ளிட்ட அனைத்து நுழைவுத் தேர்வுகளையும் தமிழிலேயே எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

அரசுப் பள்ளிகளுக்கு ரூ. 6 கோடியில் புதிய கட்டடங்கள்: அமைச்சர் அடிக்கல்

மொளச்சூர், மதுரமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு ரூ.6 கோடியில் புதிய கட்டடங்கள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.


ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம், மொளச்சூர், மதுரமங்கலம் ஆகிய பகுதிகளில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு நபார்டு திட்டத்தின் கீழ், தலா 22 வகுப்பறைகள், அறிவியல் ஆய்வுக் கூடம், கழிப்பறை கட்டடங்கள் கட்ட, தலா ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. புதிய கட்டடங்கள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா அந்தந்த பள்ளி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீபெரும்புதூர் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பழனி தலைமை வகித்தார், முன்னாள் எம்எல்ஏக்கள் வாலாஜாபாத் பா.கணேசன், மொளச்சூர் ரா.பெருமாள், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியக்குழுத் தலைவர் சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி கல்வித்துறை அமைச்சர் பா.பெஞ்சமின் கலந்துகொண்டு புதிய கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

இதில், ஒன்றியச் செயலாளர் எறையூர் முனுசாமி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஜோசப், பாலமுருகன், சிங்கிலிப்பாடி ஊராட்சிமன்றத் தலைவர் ராமசந்திரன், பள்ளி தலைமையாசிரியர்கள் கலந்துகொண்டனர்.

நாடு முழுவதும் 10 லட்சம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: மத்திய அமைச்சர்

நாடு முழுவதும் பள்ளி, கல்லூரி, உயர் கல்வி நிலையங்களில் சுமார் 8 முதல் 10 லட்சம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் மகேந்திர நாத் பாண்டே தெரிவித்தார்.

உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில் அகில பாரதிய பிராமண மகாசபை நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:


நமது நாட்டில் கல்விக் கொள்கை முறையாக அமல்படுத்தப்படவில்லை. அடுத்தடுத்து அமைந்த அரசுகளும் அதனை முறையாக மறுஆய்வு செய்யவில்லை. முக்கியமாக 1976-ஆம் ஆண்டுக்குப்பிறகு கல்விக்கொள்கை மறுஆய்வு செய்யப்படவே இல்லை. இப்போதைய அரசு கல்வித் துறையில் உள்ள சவால்களை எதிர்கொள்ளும் வகையில் புதிய கல்விக் கொள்கையை வடிவமைத்து வருகிறது.

உயர் கல்வியைப் பொறுத்தவரையில் பல்கலைக்கழகங்களில் இணைக்கப்படும் கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் கல்வித் தரத்தைப் பேண முடிவதில்லை என்ற பிரச்னை உள்ளது. இதனைத் தீர்க்கும் வகையில் ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும்தான் கல்லூரிகளை இணைக்க வேண்டும் என்ற யோசனையை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. உயர் கல்வியில் தரத்தைப் பேணுவதற்கு மத்திய அரசு கூடுதல் முன்னுரிமை அளித்து வருகிறது. செயற்கைக்கோள்கள் மூலம் சர்வதேச கல்வி நிலையங்களுடன் நமது மாணவர்களை இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நமது நாட்டில் ஆசிரியர்கள் எண்ணிக்கை போதுமான அளவில் இல்லை என்பது உண்மைதான். பல ஆண்டுகளாக நியமனத்தில் ஏற்பட்ட தாமதத்தால், நாடு முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரி உள்ளிட்ட அனைத்து கல்வி நிலையங்களிலும் சுமார் 8 முதல் 10 லட்சம் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இந்தப் பணியிடங்களை விரைவாக நிரப்ப மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார் மகேந்திர நாத் பாண்டே.

மத்திய அரசு தனது கல்விக் கொள்கையை வெளியிட்டிருக்கிறது.



அதில் ஒன்றுதான்.. ஆசிரியர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தகுதித் தேர்வு நடத்தப்படும் என்ற ஒரு அறிவிப்பு.

மிக நல்ல திட்டம்தானே என்று பலரும் வரிந்து கட்டிக் கொண்டு பாய்ந்து வருவீர்கள்..

ஆசிரியர்கள் மாணவர்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்கு எப்போதும் தயாராக இருக்க வேண்டும்.

காலத்திற்கு ஏற்றார் போல் தன்னைப் புதுப்பித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

தகுதியற்ற ஆசிரியர்களே இருக்கக்கூடாது. 

அவ்வாறு இருப்பின் அது மாணவர்கள் சமுதாயத்தையேப் பாதித்துவிடும்.

எனவே 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆசிரியர்களுக்குத் தகுதித் தேர்வு வைத்தால் என்ன தப்பு?

அதுமாத்திரமா.. வாத்திமார்கள் எங்க சார் பள்ளிக்கூடத்துக்கு ஒழுங்கா வேலைக்குப் போறாங்க? எவன் சார் ஒழுங்காப் பாடம் நடத்துறாங்க? வெட்டிப் பயலுக சார்.. பள்ளிக்கூடத்துல போய் தூங்குறாங்க.. வட்டிக்கு விடுதாங்க.. 

இவனுகளை எல்லாம் தூக்குல போடணும் சார்..

என்றுகூட சொல்வதற்கு இச்சமூகத்தில் பலரும் ஆயத்தமாகவே இருக்கின்றார்கள்..

இதில் எவ்வளவு உண்மை இருக்கிறது?

சர்தார்ஜிக்களைப் பற்றி எப்படி ஒரு மாயத் தோற்றம் இருக்கிறதோ, அதைப் போலத்தான் ஆசிரியர்களைப் பற்றியும் ஒரு எதிர்மறைக் கருத்து சினிமாக்கள் வழியாக.. கதைகள் வழியாக.. நகைச்சுவைத் தோரணங்கள் வழியாக..ஒவ்வொருவர் மனதிலும் ஆழமாகப் பதிந்துவிட்டது.. 

ஆசிரியர்கள் அத்தனை பேரும் அயோக்கியர்கள் என்றால் அந்த தேசத்தில் குழந்தைகள் கல்வி கற்றுத் தேர்வது எப்படி?

கோடிக்கணக்கான குழந்தைகள் பள்ளிக்குத் தினமும் சென்று கொண்டுதானே இருக்கின்றார்கள்?

ஆசிரியர்கள் சரியாகச் செயல்படாத கல்வி நிறுவனத்திற்கு உங்கள் குழந்தைகளை எப்படி அனுப்புகின்றீர்கள்?

இல்ல சார்.. என் பிள்ளை படிக்கும் பள்ளிக்கூடத்துல ஆசிரியர்கள் எல்லோரும் ஒழுங்காக வேலை பார்க்கிறார்கள்..

ஓ.. அப்ப எந்த ஆசிரியர் ஒழுங்காக வேலை பார்ப்பதில்லை?

அதுவா.. அது.. அன்னைக்கு ஒரு பேப்பர்ல போட்டிருந்தாங்களே..

எந்த ஊர்ல?

ம்..ம்..அது எதுக்கு சார்? பொதுவா வாத்திமார் யாரும் ஒழுங்கா வேலை பார்ப்பதில்லை சார்.. அவ்ளோதான்..

இது என்ன மாதிரியான மனோபாவம்?

எனக்குக் கற்றுக் கொடுத்த ஆசிரியர்கள் நல்ல ஆசிரியர்கள்.. என் பிள்ளைக்குக் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்கள் நல்ல ஆசிரியர்கள் என்று ஒவ்வொருவரும் ஒத்துக் கொள்வார்கள்..

ஆக, பிழை எங்கிருக்கிறது என்றால்.. நமது உளவியலில் இருக்கிறது..

இவன்தான் காலையிலேயே வெள்ளையும் சொள்ளையுமா பள்ளிக்குப் போகிறான்.. சாயங்காலம் வீட்டுக்கு ஜம்முன்னு வருகிறான்..

இதைத் தினமும் பார்க்கும் பொழுது, நம்மையறியாமல் அவர்கள் மீது ஒரு எரிச்சல் வருகிறது.. பொறாமை வந்து விடுகிறது.. இது இயல்பு.

ஆகவேதான் 100ல் 1 ஆசிரியர் செய்யும் தவறுகளைப் பூதாகாரப் படுத்தி, அதை எல்லோர் முகத்திலும் பொறுத்திவைத்து மனம் மகிழ்கின்றான்..

தவறிழைக்கும் மனிதர்கள் சமூகமெங்கும் பரவிக்கிடக்கிறார்கள். இதில் விதிவிலக்கேக் கிடையாது.. சில ஆசிரியர்களும் அதில் உள்ளடக்கம்.

உங்கள் ஊரில் 100 ஆசிரியர்கள் இருப்பின், வட்டித் தொழில் செய்யும் ஆசிரியர் ஒருவராக இருப்பார். வகுப்பறையில் தூங்குபவராகவும் அவர் இருப்பார்..

இவரைத் தன் பூதாகர லென்ஸால் பார்க்கும் சமூகம், எஞ்சியுள்ள 99 பேரைக் கவனிக்கத் தவறுகிறது..

அதனுடைய வெளிப்பாடுதான் மத்தியமனித வளத் துறை அமைச்சரின் முடிவும்..

ஆசிரியர்களுக்குத் தகுதித் தேர்வு என்பதுவும்.. பிறகு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை திரும்பத் திரும்ப மறுதேர்வு என்பதுவும்..

எனக்குக் கற்றுக் கொடுத்த ஆசிரியர்கள் எவரும் தகுதித் தேர்வின்கீழ் வந்தவர்கள் அல்ல..

அய்யா அப்துல்கலாமின் ஆசிரியர்களும் தகுதித் தேர்வின் கீழ் வந்தவர்கள் அல்ல.. 

ஆனாலும், எல்லோரும் படித்தோம்.. நன்றாகவே..

என் பிள்ளைகளும் படிக்கிறார்கள்.. அவர்களின் ஆசிரியர்களும் தகுதித் தேர்வின் கீழ் வந்தவர்கள் அல்ல..

இன்றைக்கு இந்தியா முழுவதும் இருக்கிற IASகள், IPSகள், டாக்டர்கள், தலை சிறந்த சட்ட நிபுணர்கள், நீதிபதிகள், பொறியாளர்கள் யாரும் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற ஆசிரியர்களிடம் படித்து வர வில்லை..

ஒரு சாதாரண இளநிலை (BA) பட்டம் படித்து முடித்ததும் ஒரு தேர்வெழுதி IAS ஆகி, இந்திய அரசையே ஆட்சி செய்வதற்கு இங்கு முடிகிறது.

IAS ஆகத் தேர்வு செய்யப்பட்ட பிறகு அவர்களுக்கு ஒருத் தகுதித் தேர்வு இங்கு வைக்கப்படுவதில்லை. அவர்கள் யாரும் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறைத் தகுதித் தேர்வை வைப்பதில்லை. ஏனென்றால் அவர்கள் யாரும் முட்டாள்கள் இல்லை.

ஆனால், B.Sc முடித்து, M.Sc முடித்து.. ஆசிரியராகப் பணி புரிவதெற்கென்றேத் தனியாக இரண்டு ஆண்டுகள் படித்து, பயிற்சி முடித்து, தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெற்று இவர் ஆசிரியராகப் பணி புரியத் தகுதியானவர்தான் என்று ஒரு அரசே பட்டம் வழங்கிய பிறகும், அவர் தகுதியானவர்தானா என்று இன்னும் ஒரு தகுதித் தேர்வு வைப்போம் என்பதுவும், பிறகு அதுவும் போதாது என்று 5 ஆண்டுகளுக்கு ஒருமுறைத் தேர்வு வைத்துக் கொண்டே இருப்போம் என்பது மட்டும் எந்த வகையில் நியாயம்? 

காரணம், ஆசிரியர்கள் எல்லோரும் முட்டாள்கள் என்கிற எண்ணம் இந்த அரசிற்கு இருப்பதால்தான் இப்படியெல்லாம் யோசிக்க வைக்கிறது.

நாடு முழுவதும் 60 லட்சம் ஆசிரியர்கள் இருக்கின்றார்கள். அவர்களில் எத்தனை பேரைக் குற்றப்படுத்துகிறோம்?

6 பேரை?

60 பேரை?

600 பேரை?

6000 பேரை?

60000 பேரை?

600000 பேரை?

அல்லது..

6000000 பேரையுமா?

ஒரு மருத்துவருக்கு, ஒரு வழக்கறிஞருக்கு, ஒரு நீதிபதிக்கு, ஒரு இஞ்சினியருக்கு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறைத் தகுதித் தேர்வு தேவையில்லையா?

அவர்களும் தங்கள் நுண்ணறிவை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பித்துக் கொள்ள வேண்டாமா?

1970ல் மருத்துவம் படித்துப்பட்டம் பெற்ற ஒரு மருத்துவருக்கு இப்போதைய நவீன மருத்துவத்துறை பற்றி தேர்வினை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்த வேண்டியது அவசியம் இல்லையா?

ஒரு தகுதித் தேர்வு என்ற பெயரில், பிங்கிப் பிங்கி முறையில் டிக் அடித்துத் தேர்ச்சி பெறும் ஒருவரா சிறந்த ஆசிரியர்? 

ஒரு ஆசிரியருக்கு, மாணவர்கள் கவனத்தைத் தன்பால் ஈர்த்து, அவர்களுக்கு நன்கு புரியும்படி கற்றுக் கொடுக்கும் திறமைதானே மிக முக்கியம்?

அதை அளவிடாதத் தகுதித் தேர்வுகளும் ஒரு தேர்வா?

எதுவோ அரசாண்டால் எதையோத் தின்னும் சாத்திரங்கள் என்ற பாரதியின் வரிகளை மெய்ப்பித்துவிடாதிருங்கள்..

5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளியுங்கள்.. அவர்கள் தங்களைப் புதுப்பித்துக் கொள்வார்கள்..

தகுதியற்ற ஆசிரியர்களைப் பெற்றோர்களே ஒதுக்கிவிடுவார்கள்..

எவருக்கும் அதுபற்றிக் கவலை வேண்டாம்..

ஆசிரியர் கலந்தாய்வு: 1,277 முதுகலை ஆசிரியர்கள் மாறுதல் ஆணை பெற்றனர்

பள்ளிக் கல்வித் துறையில் நடைபெற்ற முதுகலை ஆசிரியர் கலந்தாய்வில், மாநிலம் முழுவதிலும் 1,277 ஆசிரியர்கள் மாவட்டத்துக்குள் பணியிட மாறுதல் ஆணை சனிக்கிழமை பெற்றனர்.

இது குறித்து பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

2016-17 கல்வி ஆண்டில், பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியர், ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.


இந்த நிலையில், அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு அனுமதிக்கப்பட்ட முதுகலை ஆசிரியர் பணியிடங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான மாவட்டத்துக்குள் மாறுதல் கலந்தாய்வு சனிக்கிழமை (ஆகஸ்ட் 20) நடைபெற்றது.

மொத்தம் 3,882 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் முதுகலை ஆசிரியர்கள் மாறுதலுக்கு விண்ணப்பித்து இருந்தனர். இணையதளம் மூலம் நடைபெற்ற இந்த கலந்தாய்வில் 1,277 பேர்களுக்கு மாறுதல் கிடைத்துள்ளது.

இந்தக் கலந்தாய்வுப் பணிகள் யாவும் பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர்களின் மேற்பார்வையின் கீழ் நடைபெற்றதாக அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெட்ரிக். பள்ளிகளுக்கு தனியாக தொடக்கக் கல்வி அலுவலரை நியமிக்கக் கோரிக்கை

மழலையர் மற்றும் மெட்ரிக் பள்ளிகளுக்கென தனியாக ஒரு கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலரை நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
 தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி நாமக்கல் மாவட்ட சிறப்பு செயற்குழுக் கூட்டம் துணைத் தலைவர் பொன்.வீரசிவாஜி தலைமையில் நாமக்கல்லில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாநில பொதுச் செயலர் க.செல்வராஜூ, மாவட்டச் செயலர் ரா.செல்வக்குமார் பேசினர். 

 நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: மழலையர் மற்றும் மெட்ரிக். பள்ளிகளுக்கென தனியாக ஒரு கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலரை நியமிக்க வேண்டும். பணி நிரவலில் ஒன்றியம் விட்டு ஒன்றியம் இடமாற்றம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் இட மாறுதல் கலந்தாய்வு முடிந்தவுடன் ஏற்படும் காலி இடங்களில் ஏற்கெனவே பணியாற்றிய ஒன்றியத்திலேயே மீண்டும் பணி வழங்க வேண்டும். 
 ஆங்கில வழிக் கல்வி நடைமுறையில் உள்ள அரசுப் பள்ளிகளில் கூடுதலாக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். மாணவர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு இரண்டு ஆசிரியர் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களில் ஒருவர் மாற்றுப் பணியில் வேறு பள்ளிக்கு மாற்றப்படுகிறார். 
 இச் செயல் இத்தகைய பள்ளிகளை மூடும் முயற்சியாகும். இதனால் ஒரு பள்ளிக்கு கட்டாயம் 2 ஆசிரியர்கள் இருக்க வேண்டும் என்று உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் உத்தரவிட வேண்டும்.
 பள்ளிக் குழந்தையின் பெற்றோர் விபத்தினால் இறந்தால் தமிழக அரசு ரூ.75,000 உதவித்தொகை வழங்குகிறது. விபத்து மட்டுமல்லாது, வேறு காரணத்தினால் வருவாய் ஈட்டும் பெற்றோர் இறந்தாலும் அத்தகைய குழந்தைக்கும் உதவித்தொகை கிடைத்திட அரசு நடவடிக்கையெடுக்க வேண்டும்.
 பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வில் ஏற்படும் காலி இடங்களில் அந்தந்த ஒன்றியங்களில் பணியாற்றும் தகுதியான இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு அளித்து பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும். 
 வாக்காளர் சேர்க்கை, நீக்கல் பணி தொடர் பணியாக உள்ளதால், ஆசிரியர்களின் கல்விப் பணி பாதிப்படைகிறது. இதனால் இப் பணிக்கு தனி அலுவலர்களை நியமிக்க வேண்டும். அரசின் புதிய மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில், ஆசிரியரின் பெற்றோர் பலன் பெறும் வகையில் நடைமுறை இல்லை. இதனை மாற்றி பெற்றோருக்கும் பலன் அளிக்கும் வகையில் அரசாணை வெளியிட வேண்டும்.

கற்பித்தல் தவிர வேறு பணி கூடாது : ஆசிரியர்களுக்கு தடை

பாடம் நடத்துவதை தவிர வேறு பணிகளில், ஆசிரியர்களை ஈடுபடுத்தக் கூடாது' என, மத்திய அரசு எச்சரித்துள்ளது.

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் கற்பித்தல் பணி தவிர, நிர்வாகம் சார்ந்த பல பணிகளிலும் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். தமிழகத்தில், அரசு பள்ளி ஆசிரியர்கள் வாக்காளர் கணக்கெடுப்பு, ஜாதி வாரி கணக்கெடுப்பு, மக்கள்தொகை கணக்கெடுப்பு, தேர்தல் பணி, அரசின் நலத்திட்டங்களை செயல்படுத்துதல்,
மாணவர்களுக்கு அரசின் இலவசங்களைப் பெற்று வழங்குதல் போன்ற பணிகளையும் செய்கின்றனர். 'தேர்தல் சார்ந்த பணிகள், மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் பேரிடர் மீட்பு பணிகள் தவிர, கற்பித்தல் அல்லாத பணிகளில் ஆசிரியர்களை பயன்படுத்தக் கூடாது' என, கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. 'இதை, பள்ளிகள் முறையாக கடைபிடிக்க வேண்டும்' என, மனிதவள மேம்பாட்டு துறை இணை அமைச்சர் உபேந்திர குஷ்வாஹா, பார்லிமென்டில் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.
அதனால், 'தமிழக பள்ளிக் கல்வித்துறை, அரசின், 14 வகை நலத் திட்டங்களுக்கு ஆசிரியரை பயன்படுத்தாமல், தனி ஊழியர்களை நியமிக்க வேண்டும்' என, தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் வலியுறுத்தி உள்ளன.

ஆதார் முகாம் நடத்துவதில் இழுபறி : தனியார் பள்ளி மாணவர்கள் அவதி

ஆதார் முகாம் நடத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், தனியார் பள்ளி மாணவர்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர். 
 பள்ளி மாணவர்களுக்கான, கல்வி உதவித்தொகை மற்றும் இலவச நலத்திட்ட உதவிகளை, ஆதார் எண் அடிப்படையில் வழங்க, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
பள்ளி மாணவ, மாணவியரின் எண்ணிக்கையை கணக்கிட்டு, அந்த தகவல்களை, பள்ளிக்கல்வி மின்னணு நிர்வாக திட்ட தொகுப்பு மையத்தில் இணைக்க அறிவுறுத்தப்பட்டது. பெரும்பாலான அரசு பள்ளிகளில், ஆதார் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. தனியார் பள்ளிகளில், 6ம் வகுப்புக்கு மேற்பட்ட மாணவ, மாணவியரின் ஆதார் எண்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. ஒன்றாம் வகுப்பு முதல், 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களின் ஆதார் எண்களை சேகரிப்பதில், சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, தனியார் பள்ளி நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: பள்ளிகளில், உள்ளாட்சி அமைப்பு மற்றும் வருவாய் துறையினர் மூலம், ஆதார் முகாம் நடத்தப்படும் எனக் கூறப்பட்டாலும், பெரும்பாலான பள்ளிகளில், இன்னும் முகாம் நடத்தப்படவில்லை. முகாமிற்கான ஆவணங்களை மாணவர்களிடம் பல முறை பெற்றும், முகாம் நடத்த அதிகாரிகள் உதவாததால், பெற்றோரையே ஆதார் எண்ணில் பதிவு செய்ய கட்டாயப்படுத்த வேண்டிஉள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்

ஆசிரியர்கள் அச்சம் தவிருமா? - மணி.கணேசன்..

முன்பொருகாலத்தில் ஆசிரியர்கள் மீது மாணவர்களுக்குப் பக்தி, மரியாதை, பயம் முதலியன மேலோங்கிக் காணப்பட்டன. 
ஆசிரியர்களை வழிகாட்டிகளாகவும் முன்மாதிரிகளாகவும் மாணவர்கள் எண்ணிய காலம் தற்போது மாறிப் போய்விட்டதாகவே படுகிறது.

தொடக்கக்கல்வி முதல் கல்லூரிக்கல்வி வரை பணியாற்றும் ஆசிரியப் பெருமக்கள் அண்மைக்காலமாக மாணவ-மாணவிகளுக்கு அஞ்சும் துர்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

கண்ணுக்குத் தெரிந்து தவறுகள் செய்யும் மாணவர்களை நேரடியாகக் கூப்பிட்டுக் கண்டிக்க முடியவில்லை. அப்படியே மாணவர்களின் நலன்கருதி கண்டிப்பில் ஈடுபடும் ஆசிரியர்களின் நிகழ்கால வாழ்வு அதோகதி நிலைக்குத் தள்ளப்பட்டு விடுகிறது. நான்காம் வகுப்பே படிக்கும் மாணவிக்குக்கூட இன்று கோபம் பொத்துக்கொண்டு வந்துவிடுகிறது.

ஆசிரியர்கள் தம் சொல்லாலும் செயலாலும் மாணவர்களுக்கு உடல் மற்றும் மன ரீதியாக எப்பொழுதிலும் எத்தகைய வழியிலும் துன்பம் தரக்கூடாது என்று இக்கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் இரும்புக்கரம் கொண்டு வலியுறுத்துகின்றது. இதன் விளைவு என்ன தெரியுமா?

இளைய பாரதமாகத் திகழும் மாணவ சமுதாயம் திசைமாறிச் செல்வதைத் தடுக்க வழியின்றி ஆசிரியர்கள் கைகளைப் பிசைந்துகொண்டு உணர்வின்றி வெறுமனே கூலிக்கு மாரடிக்கும் கூட்டமாக மாறிப்போய்விட்டனர்.நிதானம் தவறி வெற்று உணர்ச்சிகளுக்கு அடிமையாகி தம் இன்னுயிரைப்பற்றிக் கிஞ்சித்தும் கவலைப்படாமல் தம்மை மாய்த்துக்கொள்ள நினைக்கும் மாணவச்சமூகத்தைத் திருத்தி நல்வழிக்காட்டுவது ஆசிரியர்களின்றி வேறு யார்?

அச்சு,காட்சி ஊடகங்கள்,வளர்ந்துவரும் நவீனத் தொழில்நுட்பங்களான செல்பேசிகள்,இணையங்கள்,தெருவெங்கும் திறந்துகிடக்கும் மதுபானக்கடைகள்,மலிவான போதைப்பொருள்கள்,நலிவடைந்துபோன மனித மதிப்புகள்,அதிநுகர்வுக் கலாச்சார நோக்குகள் மற்றும் போக்குகள் போன்றவை பிஞ்சு உள்ளங்களைப் பெருமளவில் நஞ்சாக்கி வருவது கண்கூடு.

மேலும்,உடல் கவர்ச்சி மற்றும் எதிர்பால் ஈர்ப்புக் காரணமாகப் பதின்பருவ வயதினரிடையே இயல்பாக எழும் அன்பொழுக்கம் தவறாகத் திரிந்து காதலெனக் கூறப்பட்டு வகுப்பறைக்குள்ளும் வெளியேயும் சொல்ல நா கூசுமளவிற்குத் தகாத முறைகளில் நடைபெற்று வருவதை ஆசிரியர்கள் கண்டும் காணாமலும் ஒதுங்கிச்செல்லவே முற்படுகின்றனர்.இந்த இழிநிலைக்குக் காரணம் எது?

மாணவர்களுக்கு இரண்டாம் பெற்றோராக விளங்கும் ஆசிரியரின் கைக்கு விலங்கையும் வாய்க்குப் பூட்டையும் போடும் சட்டமா? பெற்றோரின் மாறிப்போன மனப்போக்கா? சமுதாயத்தின் ஒருதலைப்பட்சமான குறுகிய பார்வையா? பரபரப்பையும் விறுவிறுப்பையும் மட்டுமே குறிக்கோளாகக்கொண்டு செயல்படும் ஊடகங்களின் சமூக அக்கறையின்மையா? மாணவரிடையே மங்கிப்போன குருபக்தியா? இவ்வாறு ஒரு பெரும்விவாதமே நிகழ்த்தவியலும்.

தப்பித்தவறி தாய் உள்ளத்துடன் குடும்பநிலை மற்றும் வருங்காலம் குறித்து நல்லறிவு புகட்டத் துணியும் ஆசிரிய,ஆசிரியைகளுக்கு மிஞ்சுவது மிரட்டல்கள் மட்டுமே. ஆம். காதல்வயப்பட்ட அப்பாவிப் பள்ளிச்சிறுமி வெளிப்படையாகவே ஆசிரியர்கள்மீது அவதூறுகளைப் பரப்பி அவர்கள் வாழ்க்கையையே நாசப்படுத்திவிடும் கொடுமையை என்னவென்பது?

ஒருசார்பான தீர்ப்பினாலும் முடிவினாலும் அவ்வாசிரியரின் நல்லதோர் குடும்பம் வீண்பழியால் சிதைந்து சின்னாபின்னமாவது என்பது வெளிச்சத்திற்கு வராத பேருண்மையாகும்.இத்தகைய குரலற்றவர்களின் குரலைச் சற்றேனும் காதுகொடுத்து கேட்க இச்சமூகம் ஏனோ முன்வருவதில்லை.இருதரப்பு நியாயங்களை இனியாவது செவிமடுக்க முன்வருதல் எல்லோருக்கும் நல்லது.

அதுபோல,தாம் பணியாற்றும் பள்ளியை முழுத் தேர்ச்சி பெறவைக்கவும், தேர்ச்சிக்குரிய குறைந்த மதிப்பெண்கள் அடைவை எட்டாத மாணவ, மாணவியர்மீது தனிக்கவனம் செலுத்தி,சிறப்பு வகுப்புகள் நடத்தித் தேர்ச்சியுற வைக்கவும் முயலும் ஆற்றல்மிக்க ஆசிரிய, ஆசிரியைகள் படும்பாடுகள் சொல்லிமாளாதவை. மென்மையாகக்கூட மாணவ, மாணவிகளைக் கண்டிக்கவோ, தண்டிக்கவோ இயலவில்லை. ஒருபக்கம் அரசு மற்றும் அதிகாரிகளின் கெடுபிடிகள் மற்றும் கிடுக்கிப்பிடிகள். மறுபக்கம் சொல்பேச்சுக்கேளாத அடங்காப்பிள்ளைகள். இதைத்தவிர, வேறொருபக்கம் நன்குத் திட்டமிடப்பட்டு வேலைக்கு உலைவைக்கும் அச்சுறுத்தல்கள் மற்றும் அவப்பெயர்கள். அதிகம் போனால் பளார் அறைகள், கத்திக்குத்துகள், பாலியல் வன்கொடுமைப் புனைவுகள் எனப் பட்டியல் நீண்டுகொண்டே போகும்.

 தவிர, அண்மைக்காலமாக மாணவ, மாணவியரிடையே சில விரும்பத்தகாத நடவடிக்கைகள் பெருகிக் கிடப்பதை நன்கு அறிய முடிகின்றது. மேலும் சமூகத் தீங்குமிக்கப் பல்வேறு தகாத நடவடிக்கைகளும் மலிந்துள்ளன. கற்றல்-கற்பித்தல் நிகழ்வுகளின்போதே தவறு செய்யும் மாணவனைக்கண்டு உண்மையில் ஆசிரியர்கள் கண்டிக்கத் திராணியின்றி அஞ்சி வருந்தும் அவலநிலைதான் எதிர்காலச் சிற்பிகளை உருவாக்கும் வகுப்பறை நடப்பாக இருக்கின்றது.

தமிழகத்தின் ஒட்டுமொத்த வகுப்பறைகளும் மாணாக்கர்களும் இவ்வாறு உள்ளனர் என்று பொதுவாகக் குற்றம் சாட்டுவது இங்கு நோக்கமல்ல. நல்ல நெல்மணிகளாய் மாணவக் கண்மணிகள் பலர் பல்வேறிடங்களில் அறியக்கிடைக்கின்றனர் என்பது மறுப்பதற்கில்லை. எனினும், பதர்கள், முட்செடிகள், நச்சுக்களைகள் போலுள்ள தீயோரை அடையாளம் காட்டுவதென்பது சமுதாயக் கடமையாகும்.

 திசைமாறிப் பயணித்துக்கொண்டிருக்கும் மாணவ சமுதாயத்தை மீளவும் நல்வழிக்குக் கொணர பெற்றோர், சமுதாயம், அரசாங்கம், ஊடகங்கள் ஆகியவை ஆசிரியர்களுடன்  கைகோர்ப்பது சாலச்சிறந்தது. ஆசிரிய சமுதாயத்தைத் தவறாகச் சித்தரித்து கேலி,கிண்டல் செய்து இழிவாகக் கருதும் சமுதாய பொதுமனநிலை நிச்சயம் மாற்றம்பெற வைக்கவேண்டியது. அதற்கு ஆசிரியரின் தனிப்பட்ட நல்லொழுக்கப்பண்பும் மட்டுமல்லாது காலந்தோறும் சமுதாயத்திற்கு உதவக்கூடியவகையில் அமைந்த விழுமியகுணங்களும் முன்மாதிரி நடத்தைகளும் இன்றியமையாதவை.

ஆசிரியர்-மாணவர் உறவென்பது ஆண்டான்-அடிமை உறவல்ல.அதுவொரு நல்ல கருத்துப் பரிமாற்றம் உள்ளடக்கிய நட்புறவு.அதைப் போற்றிப் பேணிக்காத்தல் என்பது இருவரின் கடமையாகும். அப்போதுதான் வலியின்றிச் சுதந்திரமாக கல்வி மலரும். நாடும் நலமுடனும் வளமுடனும் ஒளிவீசித் திகழும்.

நன்றி : தினமணி
Labels: Article

FLASH NEWS: தொடக்கக்கல்வி செயல்முறைகள்- நாள்:21/8/16- சுற்றறிக்கை எண் 20- பணிவிடுவிப்பு சார்பு--ஈராசிரியர் பள்ளிகளில் மாறுதல் பெற்றவர்களை பதிலி ஆசிரியர் வந்த பின்தான் விடுவிக்கவேண்டும்

DSE PROCEEDING-2010-11 English Subject TRB Regularisation order

உள்ளாட்சி தேர்தல் 2016 - உள்ளாட்சி தேர்தல்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமனம் தொடர்பாக தமிழ்நாடு மாநிலம் தேர்தல் ஆணையம் ஆணை




இயற்கை மருத்துவம்

உங்களுக்கு என்ன நோய்?

உங்கள் கம்ப்யூட்டரை வைரஸ் தாக்கிவிட்டதா?

உங்கள் மொபைல் பேட்டரியை பராமரிக்க சில டிப்ஸ்

உங்கள் வீடு வாஸ்து படி உள்ளதா என்பதை அறிந்து கொள்வது எப்படி?

உணவு சாப்பிட்டவுடன் செய்யக்கூடாதவை

உறவுகள் மேம்பட A to Z

உலகில் மிகப் பெரியவை எவை?

எச்சரிக்கை! தங்கம் வாங்கினால் ஹால்மார்க் முத்திரையை மட்டும் பார்க்காதீர்கள்..!

21/8/16

DIET-SENIOR LECTURERS –PG-TRB-ENGLISH-IMPORTANT STUDY MATERIALS BY PART-1

எஸ்எம்எஸ்., மூலம் வருமான வரி விபரம்

புதுடில்லி: வருமான வரி செலுத்துபவர்களுக்கு, மாதந்தோறும் தங்களின்சம்பளத்தில் இருந்து கழிக்கப்படும் வரிதொகை குறித்த தகவலை எஸ்எம்எஸ்மூலம் தெரிவிக்கும் முறை விரைவில் அறிமுகம்
செய்யப்பட உள்ளது. 
வரி செலுத்துவோர் மற்றும் வருமான வரித்துறையினரிடையேநல்லுறவை ஏற்படுத்துவதற்காகவும், வரி செலுத்துவோருக்கு ஏற்படும்இடையூறுகளை போக்குவதற்காகவும் இந்த முறை அறிமுகம்செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இன்னும்ஒன்று அல்லது 2 மாதங்களில் இதற்கான திட்டம் தயார்செய்யப்பட்டு விடும் என மத்தியநேரடி வரித்துறை கழக தலைவர் ராணிசிங் நாயர் தெரிவித்துள்ளார்.

மேலும்அவர் கூறுகையில், நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யும்வருமான வரியை செலுத்துவதில்லை எனநிறைய புகார்கள் வருகின்றன. இத்தகைய குழப்பத்தை சரிசெய்வதற்காகவே எஸ்எம்எஸ் மூலம் தகவல் அனுப்பும்முறை கொண்டு வரப்பட உள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் பணியாளர்களுக்கு அவர்கள்சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும்வருமான வரித் தொகை, வருமானவரித்துறையிடம் போய் சென்றதா, இல்லையாஎன தெரிவிக்கப்படும். ஒருவேளை வரித் தொகைசெலுத்தப்படவில்லை என்றால் உங்கள் நிறுவனத்திடம்உடனடியாக கேட்டு விடலாம் என்றார்.

பெண் குழந்தைகளுக்கு அப்பாக்கள் சொல்லித்தர வேண்டிய விஷயங்கள்!!

1. நன்றாகயோசித்துப் பார்த்தால் வயது வந்த மகளுடன்தந்தையர் செலவிடும் நேரம் குறைவு. முக்கியமானவிஷயங்களை கேட்டறிய வேண்டும். அவர்கள் நம்முடன் பேசும்போதுநிறைய விஷயங்கள் தெரிய
வரும்.
2. உங்கள்மகளுடைய நட்பு வட்டத்தைப் பற்றிதெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள். நட்பு வட்டத்தில் தினமும்என்ன நடக்கிறது என்று கேட்டுத்தெரிந்து கொள்ளுங்கள். நமது நண்பர்களையே யார் நல்லவர் யார்கெட்டவர் என்று ஆராயும்போது மகள்யாருடன் பழகுகிறாள் அவர்களுடைய நடத்தை எப்படி என்றுதெரிந்துகொள்வது முக்கியம் அல்லவா?

3. கல்வியின்முக்கியத்துவத்தை எடுத்துச்சொல்லுங்கள். கல்வியில் அவருடைய சந்தேகங்களை கேட்டுவிளக்கம் கொடுங்கள்.

4. ஆண்களைப்பற்றிசொல்லுங்கள். ஆண்களின் குணங்கள், அவர்களால் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை விளக்குங்கள். நல்லவர்களை எப்படி அடையாளம் காண்பதுஎன்று விளக்குங்கள்!

5. வாழ்க்கையைப்பற்றி உங்கள் மகளிடம் பேசுங்கள். வாழ்க்கையில் என்னவாக விரும்புகிறார்? என்பதைகேளுங்கள். உரிய அறிவுரையுடன் நீங்கள்அவருக்கு உதவுவது எப்படி என்றுதிட்டமிடுங்கள்.

6. கடை, ஷாப்பிங் என்று அழைத்துச்செல்லுங்கள். பெண்கள் அந்தஇடங்களில் எப்படி நடந்து கொள்கிறார்கள், ஆண்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதைஅவர் அறியட்டும். பொது இடங்களில் கடைப்பிடிக்கும்நாகரீகம், எப்படி உடை அணிகிறார்கள்என்பதை அவருக்கு சொல்லிக்கொடுங்கள்.

7. பெண்களென்றால்வீட்டில்தான் சாப்பிடுவார்கள் என்றில்லை. வித விதமாக நாம்உண்பதைப்போல் மகளுக்கும் சிறந்த உணவகங்களுக்கு அழைத்துச்செல்லுங்கள். உணவு வகைகளை ருசிக்கும் அதேநேரம்உணவக பழக்கங்கள், எப்படிப் பரிமாறுகிறார்கள் என்ற விஷயமெல்லாம் தெரிந்துகொள்ளட்டும்.

8. நீங்கள்எவ்வளவுதூரம் உங்கள் மகளை நம்புகிறீர்கள், அவரைப்பற்றி எப்படி பெருமைப்படுகிறீர்கள், அவர் உங்களுக்குஎவ்வளவு முக்கியமான நபர் என்பதை அடிக்கடிஉணர்த்துங்கள். இது அவர்களுக்கு தன்னம்பிக்கையையும்மன உறுதியையும் கொடுக்கும்.

9. குடும்பத்தைப்பற்றி உங்கள் மகளிடம் எடுத்துச்சொல்லுங்கள். குடும்ப வரலாறை அவர் அறியட்டும். முன்னொர்களின் சிறப்புக்களையும் பற்றி அவர் தெரிந்துகொள்ளட்டும் .

10. உங்கள்வரலாற்றையும் கொஞ்சம் சொல்லுங்கள். நீங்கள்எப்படி, எங்கு படித்தீர்கள், உங்கள்இளமைக்காலம், உங்கள் பொழுது போக்குகள், நீங்கள் எப்படி இந்த நிலைக்குவந்தீர்கள், உங்கள் குடும்பம் அடையவேண்டிய இலக்கு ஆகியவற்றை அவருக்குதெளிவாக சொல்லுங்கள்.

11. புத்தகங்கள்படிக்கும் பழக்கத்தை இளம் வயதிலேயே பழக்கப்படுத்துங்கள். வீட்டில் புத்தகங்களை சேர்த்து சிறு நூலகமாக உருவாக்குங்கள். நூலகங்களிலிருந்து நல்ல நூல்களைக் கொண்டுவந்துகொடுங்கள்.

12. உடலளவிலும்மனதளவிலும் பலசாலியாக உருவாக்குங்கள். எந்த மாதிரி பிரச்சினைகள்வெளியுலகில் வரும் அதை எப்படிசமாளிப்பது என்று சொல்லிக்கொடுங்கள்.

13. இன்றையஉலகம் இயந்திரமயம். அடுத்தவர் கையை சிறு பிரச்சினைகளுக்கெல்லாம்எதிர் பார்க்க முடியாது. ஆண்கள்வரவேண்டும் என்று காத்திருக்கவும் கூடாது. வீட்டில் ஃபியூஸ் போடுவது போன்றசிறு சிறு வேலைகளைக் கற்றுக்கொடுங்கள்.


14. இவைஎல்லாவற்றையும் விட நீங்கள் ஒருஉதாரணமான வாழ்க்கை வாழுங்கள். உங்களைப் பற்றி உங்கள் மகள்பெருமைப்படட்டும். உங்கள் மனைவியை மதியுங்கள். உங்கள் மனைவி எப்படி உங்களைநடத்துகிறாரோ அதைத்தான் உங்கள் மகளும் தன்கணவனிடம் செயல்படுத்துவாள் !

கற்பித்தல் தவிர வேறு பணி கூடாது : ஆசிரியர்களுக்கு தடை

'பாடம்நடத்துவதை தவிர வேறு பணிகளில், ஆசிரியர்களை ஈடுபடுத்தக் கூடாது' என, மத்தியஅரசு எச்சரித்துள்ளது. அரசு மற்றும் தனியார்பள்ளிகளில் கற்பித்தல் பணி தவிர, நிர்வாகம்சார்ந்த பல பணிகளிலும் ஆசிரியர்கள்ஈடுபடுத்தப்படுகின்றனர். தமிழகத்தில், அரசு பள்ளி
ஆசிரியர்கள்வாக்காளர் கணக்கெடுப்பு, ஜாதி வாரி கணக்கெடுப்பு, மக்கள்தொகை கணக்கெடுப்பு, தேர்தல் பணி, அரசின்நலத்திட்டங்களை செயல்படுத்துதல், மாணவர்களுக்கு அரசின் இலவசங்களைப் பெற்றுவழங்குதல் போன்ற பணிகளையும் செய்கின்றனர்.

'தேர்தல்சார்ந்த பணிகள், மக்கள்தொகை கணக்கெடுப்புமற்றும் பேரிடர் மீட்பு பணிகள்தவிர, கற்பித்தல் அல்லாத பணிகளில் ஆசிரியர்களைபயன்படுத்தக் கூடாது' என, கட்டாயகல்வி உரிமை சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. 'இதை, பள்ளிகள் முறையாக கடைபிடிக்க வேண்டும்' என, மனிதவள மேம்பாட்டு துறைஇணை அமைச்சர் உபேந்திர குஷ்வாஹா, பார்லிமென்டில் தாக்கல் செய்த அறிக்கையில்தெரிவித்து உள்ளார்.

DSE ; BT TO PG PANEL FINAL AS ON TODAY ( 20/08/2016) RELEASED

மின் வாரிய தேர்வு 'ஹால் டிக்கெட்' வெளியீடு.

மின் வாரியம், உதவியாளர்உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப, எழுத்து தேர்வுக்கான, 'ஹால் டிக்கெட்டை' வெளியிட்டு உள்ளது.இதுகுறித்து, மின்
வாரிய செய்திக் குறிப்பு:


  இளநிலை உதவியாளர் - கணக்கு, நிர்வாகம்; தொழில்நுட்ப உதவியாளர், களப்பணி உதவியாளர் உள்ளிட்டபதவிகளுக்கான எழுத்து தேர்வு, இம்மாதம், 27 மற்றும், 28ம் தேதி நடக்கிறது. இந்த தேர்வுக்கு விண்ணப்பித்தோர், 'ஹால்டிக்கெட்டை'www.tangedcodirectrecruitment.inஎன்ற இணையதளத்தில் பதிவிறக்கம்செய்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு, 044 - 2235 8311, 2235 8312 என்ற தொலைபேசி எண்ணில்தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுஉள்ளது.

பதவி உயர்வு பட்டியல் வெளியிடாமல் கவுன்சலிங் : வரலாறு ஆசிரியர்கள் கொதிப்பு.

பதவி உயர்வு பட்டியல்வெளியிடாமல் கவுன்சலிங் தேதி அறிவிக்கப்பட்டதால் வரலாறுஆசிரியர்கள் குழப்பத்திலும், கொந்தளிப்பிலும் உள்ளனர்.தமிழகம் முழுவதும்அரசுப்பள்ளி ஆசிரியர்
இடமாறுதல், பதவி உயர்வு கவுன்சலிங்நடந்து வருகிறது.

          ஒவ்வொரு பாடத்திற்கும் பதவிஉயர்வு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பள்ளிகளில் சமூக அறிவியல் பாடத்தைபுவியியல் மற்றும் வரலாறு ஆசிரியர்கள்நடத்துகின்றனர். இதில் புவியியல் ஆசிரியர்களின்பதவி உயர்வு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், வரலாறு ஆசிரியர்களின் பதவிஉயர்வு பட்டியல் மட்டும் வெளியிடப்படவில்லை. வரும்22ம் தேதி வரலாறு ஆசிரியர்பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடக்க உள்ளதையடுத்து இப்பிரிவுஆசிரியர்கள் குழப்பத்தில் உள்ளனர்.இளங்கலை வரலாறுமுடித்து ஆசிரியர் பணியில் சேரும் பட்டதாரிஆசிரியர்கள், முதுகலை ஆசிரியராக பதவிஉயர்வு பெறும்போது 1:3 என்ற விகிதாச்சாரம் பின்பற்றப்படுகிறது. மொத்தமுள்ள வரலாறு ஆசிரியர் பதவிஉயர்வு பணியிடங்களில் இளங்கலை, முதுகலையில் வரலாறு படித்தவர்களுக்கு 1 பணியிடமும், இளங்கலையில் பிற பாடங்கள் படித்து, முதுகலையில் மட்டும் வரலாறு படித்தவர்களுக்கு(கிராஸ் மேஜர்) 3 பணியிடமும் ஒதுக்கப்படுகிறது. இதனால் இளங்கலை, முதுகலையில்வரலாறை முதன்மை பாடமாக படித்தஏராளமான ஆசிரியர்கள் பதவி உயர்வு கிடைக்காமல்பாதிக்கப்பட்டனர். இந்த விகிதாச்சார முறையைஎதிர்த்து ஐகோர்ட் மதுரை கிளையில்கடந்த 2012ல் தொடரப்பட்ட வழக்குநிலுவையில் உள்ளது. இருப்பினும் கடந்தஆண்டுகளில் முந்தைய நிலையிலேயே பதவிஉயர்வுவழங்கப்பட்டது. இந்த ஆண்டு கலந்தாய்வுக்குமுன் பதவி உயர்வு பட்டியலைவெளியிடாமல் கல்வித்துறை தாமதம் செய்து வருகிறது.


இதுகுறித்துதமிழ்நாடு வரலாறு ஆசிரியர் கழகமாநில பொதுச்செயலாளர் பழனியப்பன் கூறுகையில், ‘‘2012ல் தொடர்ந்த வழக்கில்பள்ளிக்கல்வித்துறைக்கு நோட்டீஸ் அனுப்பிய நீதிமன்றம், வரலாறு முதுகலை ஆசிரியர்பதவி உயர்வு என்பது இந்தவழக்கின் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டதுஎன உத்தரவிட்டது. ஆனாலும், கடந்த 3 ஆண்டுகளாகமுந்தைய நிலைப்படியேபதவி உயர்வு அளித்து வருகின்றனர். இந்த ஆண்டு எந்த அடிப்படையில்பதவி உயர்வு வழங்கப்படும் என்பதுபட்டியல் வெளியிடப்பட்டால் மட்டுமே தெரியும். அவ்வாறுதெரிந்து அடுத்தகட்ட நீதிமன்ற நடவடிக்கைக்கு செல்வதை தடுக்க வரலாறுஆசிரியர் பட்டியலை மட்டும் வெளியிடாமல் வைத்துள்ளனரோஎன சந்தேகம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக பட்டியலை வெளியிட வேண்டும்,’’ என்றார்.

DSE PROCEEDING-2010-11 English Subject TRB Regularisation order

எஸ்எம்எஸ்., மூலம் வருமான வரி விபரம்




 வருமான வரி செலுத்துபவர்களுக்கு, மாதந்தோறும் தங்களின் சம்பளத்தில் இருந்து கழிக்கப்படும் வரி தொகை குறித்த தகவலை எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்கும் முறை விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. 
வரி செலுத்துவோர் மற்றும் வருமான வரித்துறையினரிடையே நல்லுறவை ஏற்படுத்துவதற்காகவும், வரி செலுத்துவோருக்கு ஏற்படும் இடையூறுகளை போக்குவதற்காகவும் இந்த முறை அறிமுகம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் ஒன்று அல்லது 2 மாதங்களில் இதற்கான திட்டம் தயார் செய்யப்பட்டு விடும் என மத்திய நேரடி வரித்துறை கழக தலைவர் ராணி சிங் நாயர் தெரிவித்துள்ளார்.


மேலும் அவர் கூறுகையில், நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யும் வருமான வரியை செலுத்துவதில்லை என நிறைய புகார்கள் வருகின்றன. இத்தகைய குழப்பத்தை சரி செய்வதற்காகவே எஸ்எம்எஸ் மூலம் தகவல் அனுப்பும் முறை கொண்டு வரப்பட உள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் பணியாளர்களுக்கு அவர்கள் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும் வருமான வரித் தொகை, வருமான வரித்துறையிடம் போய் சென்றதா, இல்லையா என தெரிவிக்கப்படும். ஒருவேளை வரித் தொகை செலுத்தப்படவில்லை என்றால் உங்கள் நிறுவனத்திடம் உடனடியாக கேட்டு விடலாம் என்றார்.

20/8/16

பத்தாம் வகுப்பை தனித்தேர்வராக எழுதிய மாணவியை சட்டக் கல்லூரியில் சேர்க்க உயர் நீதிமன்றம் உத்தரவு

பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வை தனித் தேர்வராக எழுதிய மாணவிக்கு சட்டக் கல்லூரியில் பயில அனுமதி அளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.

திருச்சியைச் சேர்ந்த தாரணி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:


திருச்சி ஹோலிகிராஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 2007-ஆம் ஆண்டு 9-ஆம் வகுப்பு முடித்தேன். பின்னர் மன அழுத்தம் காரணமாக 10-ஆம் வகுப்பை பள்ளியில் படிக்காமல் தனித் தேர்வராக எழுதித் தேர்ச்சி பெற்றேன். தொடர்ந்து பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளை, ஹோலி கிராஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலேயே படித்தேன். 2013-இல் காட்சி தொடர்பியல்(விசுவல் கம்யூனிகேசன்) இளம் அறிவியல் பட்டம் பெற்றேன்.

இந்த நிலையில், சட்டம் (எல்எல்பி) பயில்வதற்காக, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பித்தேன். தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு கட் ஆஃப் மதிப்பெண்களாக 71.318 நிர்ணயிக்கப்பட்டிருந்தது. நான் 71.961 மதிப்பெண்கள் பெற்றிருந்தேன். தேர்வுப்பட்டியலில் எனது பெயர் இல்லை.

இதுதொடர்பாக விசாரித்தபோது, பத்தாம் வகுப்பை தனித்தேர்வராக எழுதியதால் அனுமதி வழங்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. பத்தாம் வகுப்புத் தேர்வை தனியாக எழுதி இருந்தாலும், அதைத் தொடர்ந்து பிளஸ் 2 மற்றும் பட்டப்படிப்பை முறையாக பயின்றதால் சட்டக் கல்லூரியில் சேர்க்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு, நீதிபதிகள் நூட்டி ராம்மோகனராவ், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், திறந்தநிலைப் பல்கலைக்கழகம் மூலமாக பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பயின்றவர்களுக்கே அனுமதி மறுக்கப்படும் என சட்டக் கல்வி விதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மனுதாரர் 10-ஆம் வகுப்பை தனியாக எழுதியிருந்தாலும், பிளஸ் 2 மற்றும் பட்டப்படிப்பை முறையாகப் பயின்றதால் அவருக்கு சட்டக் கல்லூரியில் பயில அனுமதியளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்

உறுப்பினர் செயலர் பதவியில் குளறுபடி : உயிர் பெறுமா உயர் கல்வி மன்றம்?

மாநில உயர் கல்வி மன்றத்தில், யார் தலைமை அதிகாரி என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளதால், திட்டங் கள் முடங்கியுள்ளன. அனைத்து கல்லுாரி மற்றும் பல்கலைகளில், புதுமையான திட்டங்களை கொண்டு வருதல், பேராசிரியர்களுக்கு பயிற்சி அளித்தல், மாணவர்கள் வெளிநாட்டில் படிக்க வாய்ப்பு வழங்குதல் உள்ளிட்ட பணிகளை, உயர் கல்வி மன்றம் செய்து வருகிறது.


இதன் தலைவராக, உயர் கல்வி அமைச்சரும், துணைத் தலைவராக, உயர் கல்வி செயலரும் உள்ளனர். மன்றத்தை செயல்படுத்தும் பொறுப்பு, உறுப்பினர் செயலரிடம் உள்ளது.
இந்த பொறுப்பில் இருந்த நாகராஜன், ஓராண்டுக்கு முன் ஓய்வு பெற்றார். அதன்பின், உறுப்பினர் செயலர் நியமிக்கப்படவில்லை. பல கோடி ரூபாயில், திட்டங்களை நிறைவேற்றும் இந்த மன்றத்தில், உறுப்பினர் செயலர் பொறுப்புக்கு கடும் போட்டி உள்ளதால், அதிகாரிகளுக்கு, உறுப்பினர் செயலர் பொறுப்பை கூடுதலாக வழங்கி, உயர் கல்வித் துறை சமாளித்து வருகிறது.
ஜூலை மாதம் வரை, கல்லுாரி கல்வி இயக்குனராக இருந்த சேகர், உயர் கல்வி மன்ற உறுப்பினர் செயலராக கூடுதல் பொறுப்பில் இருந்தார். அவர் இணை இயக்குனர் பதவிக்கு மாற்றப்பட்டதால், தொழில்நுட்பக் கல்வி இயக்குனர் மதுமதிக்கு, கூடுதலாக, கல்லுாரி கல்வி
இயக்குனர் பொறுப்பு தரப்பட்டுள்ளது. அதனால், இருவரில் யார் தற்போதைய உறுப்பினர் செயலர் என்ற குழப்பத்தால், மன்றத் தின் பணிகள் முடங்கி உள்ளன. எனவே, துணைவேந்தருக்கு இணையான பொறுப்பாக கருதப்படும் உறுப்பினர் செயலர் பொறுப்பில், தகுதியான ஆட்களை நியமிக்க வேண்டும் என, கல்லுாரி பேராசிரியர்கள், கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் திறனறித் தேர்வு - பயன்கள்

அன்பாசிரியர்களே 

முயற்சிப்போம் முன்னேற்றுவோம் ...

பள்ளி மாணவர்களுக்கு
அறிவியல் திறனறித் தேர்வு ...

இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் விஞ்ஞான் பிரச்சார் நிறுவனம், விபா நிறுவனம், என்.சி,இ,ஆர்,டி ( NCERT, GOVT.OF INDIA) இணைந்து தேசிய அளவிலான அறிவியல் விழிப்புணர்வுத் தேர்வை நடத்தி வருகிறது. அறிவியல் மனப்பான்மையை, மாணாக்கர்களிடம் வளர்ப்பதோடு அறிவியலில் ஆராய்ச்சித் துறையில் ஈடுபாட்டை அதிகரிக்கவும் இத்தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வு இந்தியா முழுவதும் ஒரே நாளில் நடைபெறுகிறது.


இத்தேர்வை யாரெல்லாம் எழுதலாம்

1) 6 முதல் 11 வகுப்பு வரை உள்ள மாணாக்கர்கள் இத்தேர்வை எழுதலாம்
2) 50 மாணாக்கர்களுக்கு மேல் பங்கேற்றால் அந்தந்த பள்ளியிலேயே தேர்வு எழுதலாம்.
3) தேர்வு ஆங்கிலம் மற்றும் தமிழில் இருக்கும்.
4) தேர்வுக் கட்டணமாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் 50 ரூபாயும், தனியார் பள்ளிகள் 100 ரூபாயும் செலுத்த வேண்டும். ( அதற்கு ஈடாக விஞ்ஞான் பிரச்சார் நிறுவனம் மூலம் இரண்டு புத்தகங்கள் பங்கேற்கும் அனைவருக்கும் வழங்கப்படும்)

என்ன பயன்கள்:

1) 6 முதல் 11ம் வகுப்பு வரை பங்கேற்கும் மாணாக்கர்களில் தமிழக அளவில் ஒவ்வொரு வகுப்பிலிருந்தும் 20 மாணாக்கர்கள் வீதமாக 120 மாணாக்கர்கள் தேர்வு செய்யப்படுவார்கள், அவர்களுக்கு இரண்டு நாட்கள் அறிவியல் சார் பயிற்சி பட்டறை நடைபெறும் . அதில் இந்திய அளவில் சிறந்த விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல் , குழுச் செயல்பாடுகள், வினாடி வினா ஆகிய நிகழ்வுகள் நடைபெறும். இதில் பங்கு பெறும் அனைவருக்கும் சான்றிதழ்கள் பரிசுகள் வழங்கப்படும்.
2) அந்த 120 மாணாக்கர்களில் ஒவ்வொரு வகுப்பில் இருந்தும் 3 மாணாக்கர்கள் வீதம் சிறந்த 18 மாணாக்கர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ஒவ்வொரு பிரிவிலும் உள்ள மாணாக்கர்களுக்கு முதல் பரிசாக ரூ.5000, இரண்டாம் பரிசாக ரூ.2000, மூன்றாம் பரிசாக ரூ.1000 மற்றும் கேடயம் சான்றிதழ்கள் வழங்கப்படும். அவர்கள் மாநில அளவில் வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவார்கள்.
3) அந்த 18 மாணாக்கர்களில் இருந்து ஒவ்வொரு வகுப்பிற்கும் 2 மாணாக்கர்கள் வீதம் 12 பேர் 2 நாட்கள் நடைபெறும் தேசிய அளவிலான அறிவியல் சார் நிகழ்வுக்கு அழைக்கப்படுவார்கள்.
4) அந்த நிகழ்வில் சிறப்பாக செயல்படும் மாணாக்கர்களில் ஒவ்வொரு வகுப்பில் இருந்தும் 3 மாணாக்கர்கள் தேர்வு செய்யப்பட்டு தேசிய அளவில் வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டு, அவர்களில் ஒவ்வொரு பிரிவில் உள்ள மாணாக்கர்களுக்கும் முதல் பரிசாக ரூ.10000, இரண்டாம் பரிசாக ரூ.7000, மூன்றாம் பரிசாக ரூ.5000 மற்றும் கேடயம் சான்றிதழ்கள் வழங்கப்படும். இவர்கள் தேசிய அளவிலான கல்விச் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்படுவதோடு, இவர்கள்இந்திய அரசின் குடியரசுத் தலைவரால் கெளரவிக்கப்படுவார்கள்

தேர்வு நடைபெறும் தேதி: நவம்பர் 13, 2016

விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 30.

இத்தேர்வை தமிழக அளவில் கலிலியோ அறிவியல் கழகம் ஒருங்கிணைக்கிறது. பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் தொடர்புக்கு …கலிலியோ அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான் 9942467764, இ மெயில்kannatnsfudt@gmail.com .தேர்வு பற்றிய விவரங்களை www.vvm.org.in என்ற இணையதளத்திலும் பார்வையிடலாம்.

ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் 21,609 பேர் விண்ணப்பிப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் நேற்று துவங்கிய நிலையில், 650 பணியிடங்களுக்கு, 21 ஆயிரத்து, 609 இளைஞர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டரங்கில், சென்னை ராணுவ ஆள்சேர்ப்பு இயக்குனரகம் மூலம், வரும், 31ம் தேதி வரை ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் நடக்கிறது. பொதுப்பணி, டெக்னிக்கல், நர்சிங் அசிஸ்டென்ட், டிரேட்ஸ் மேன், ஆகிய பணிகளுக்கு ஆட்கள் தேர்வு
செய்யப்படுகின்றனர். இதில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலுார், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலுார் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த, 21 ஆயிரத்து, 609 இளைஞர்கள் பங்கேற்க உள்ளனர். விண்ணப்பித்த இளைஞர்கள், எந்த நாளில் முகாமில் பங்கேற்க வேண்டும் என்ற விபரம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று துவங்கிய முகாமை, பார்வையிட்டனர். அப்போது, ராணுவ பிரிகேடியர் தால்வி, நிருபர்களிடம் கூறியதாவது: ராணுவத்தின் பல்வேறு பணியிடங்களுக்காக, 21 ஆயிரத்து, 609 இளைஞர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதில், 650 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். முதலில், உடற்தகுதி தேர்வு நடத்தப்பட்டு, இதில் தேர்வு பெறுவோருக்கு மருத்துவத் தேர்வு, எழுத்துத் தேர்வு இறுதியாக நடத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

32 ஆயிரம் மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி : ரூ.60 லட்சம் ஒதுக்கீடு

ராமநாதபுரம்: தமிழகத்தில் மாவட்டத்திற்கு ஆயிரம் மாணவிகள் வீதம், 32 ஆயிரம் மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சியளிக்க 60 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுஉள்ளது. அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குனர் பூஜா குல்கர்னி கூறியிருப்பதாவது:பெண் குழந்தைகளின் தற்காப்பிற்கு கராத்தே போன்ற கலைகள் அவசியமாகிறது.
அதனால் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், அரசுப்பள்ளிகளில் 6, 7, 8ம்வகுப்புகளில் படிக்கும் பெண் குழந்தைகளுக்கு கராத்தே பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
வரும் செப்டம்பர் முதல் ஜனவரி முடிய பயிற்சி அளிக்கப்படும். இதற்காக மாவட்டத்திற்கு 50 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு தலா ஆயிரம் மாணவிகள் வீதம் 32 மாவட்டங்களிலும் 32 ஆயிரம் மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.இதற்கென பெண் பயிற்சியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்காக 60 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.பள்ளி நாட்களில் தினமும் காலையில் ஒன்றரை மணி நேரம் பயிற்சி அளிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மனஉளைச்சலில் ஒரு லட்சம் ஆசிரியர் பட்டதாரிகள் : டி.இ.டி., தேர்வு நடக்காத பின்னணி என்ன

மதுரை: தமிழகத்தில் மூன்று ஆண்டுகளாக ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) நடக்காதததால், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் பட்டதாரிகள் மனஉளைச்சலில் உள்ளனர்.
தமிழகத்தில் 2011ல் தகுதித்தேர்வு அடிப்படையில், ஆசிரியர் நியமனம் நடக்கும் என உத்தரவிடப்பட்டது. 2012 மற்றும் 2013ல் டி.இ.டி., தேர்வுகள் நடத்தப்பட்டன. 2013 தேர்வில் தேர்ச்சி எண்ணிக்கை அதிகம் இருந்ததால், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் அமல்படுத்தப்பட்டது. இதை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டு, மூன்று ஆண்டுகளாக நிலுவையில் உள்ளன.

மேலும் '90 சதவீதம் மதிப்பெண் என்பதில் இருந்து ஐந்து சதவீதம் மதிப்பெண் சலுகை அளித்து, 85 சதவீதம் (அதாவது 82 மதிப்பெண்) பெற்றாலே தேர்ச்சி,' எனவும் அரசு அறிவித்தது. இதன் அடிப்படையில் 40 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். பலர் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணி நியமனம் பெற்றனர். ஆனால் இதற்கும் எதிரான வழக்குகளும் நிலுவையில் உள்ளன.
சலுகை மதிப்பெண் அறிவிப்பு அரசின் கொள்கை முடிவு. ஆனால் அதற்கு எதிராக தாக்கலான வழக்குகளில் கூட கவனம் செலுத்தி விரைவில் தீர்வுகாண, கல்வி அதிகாரிகள் நவடிக்கை எடுக்க ஆர்வம் காட்டவில்லை. இதனால் தான் டி.இ.டி., தேர்வையே மூன்று ஆண்டுகளாக நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
அச்சத்தில் 3 ஆயிரம் ஆசிரியர்: 23.8.2010க்கு பின் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு அரசு, உதவிபெறும் பள்ளிகளில் பணி நியமனம் பெற்ற 3100 ஆசிரியர்களுக்கு வரும் நவம்பருக்குள் டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும்
என நிபந்தனை உள்ளது. ஆனால் டி.இ.டி., தேர்வு நடத்தாததால் அவர்கள் அச்சத்தில் உள்ளனர்.
'அரசு சிறுபான்மையினர் பள்ளிகளில் ஆசிரியர் நியமனத்திற்கு டி.இ.டி., கட்டாயமில்லை,' என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியும் இதுவரை அரசாணை பிறப்பிக்காததாலும் குழப்பம் நீடிக்கிறது.
சிக்கலுக்கு தீர்வு என்ன: தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் முருகன் கூறியதாவது:
சலுகை மதிப்பெண் என்பது அரசின் கொள்கை முடிவு. இதற்கு எதிரான வழக்குகளை கையாள்வதில் அதிகாரிகள் ஆர்வம் காட்டாததால் தான் தேர்வு நடக்கவில்லை. ஆசிரியருக்கான 'வெயிட்டேஜ்' முறையை ரத்து செய்ய வேண்டும்.
23.8.2010க்கு பின் பணியில் சேர்ந்த 3100 பேருக்கும் டி.இ.டி., தேர்வில் விலக்கு அளிக்க வேண்டும். நீதிமன்ற அறிவுறுத்தல்படி சிறுபான்மையினர் பள்ளிகளுக்கான அரசாணை பிறப்பிக்க வேண்டும், என்றார்.

நம் கல்வி... நம் உரிமை!- கீழ்ப்படிய மட்டும் சொல்லும் கல்விக் கொள்கை

தனிப்பட்ட மனிதருக்கு மட்டுமல்ல, முழுச் சமுதாயத்துக்கும் பயன்படும்வகையில் அரசாங்கத்தின் விதிகளையும் வரையறைகளையும் உருவாக்குவதே பொதுக்கொள்கை என்பார் அமெரிக்கப் பேராசிரியர் டக்ளஸ் கொமெரி. சமுதாயத்தின் பல்வேறு சமூகக் குழுக்களையும் மனதில்கொண்டு அரசின் கொள்கைகளை உருவாக்கச் சிறப்பான வழி அதுவே. நமது நாட்டிலும் தேசிய கல்விக் கொள்கை 2016 -ஐ உருவாக்குவதற்கான கடைசிக்கட்டத்தில் நாம் இருக்கிறோம்.

தொடக்க கல்வித்துறை மற்றும் முதுநிலை ஆசிரியர்களுக்கு இன்று கவுன்சலிங்

முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்களுக்கு இன்று ஆன்ைலன் மூலம் பணியிட மாறுதல் கவுன்சலிங் நடக்கிறது. அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு கடந்த 15 நாட்களாக கவுன்சலிங் நடந்து வருகிறது. இந்நிலையில் மேனிலைப் பள்ளிகளில் பணியாற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான கவுன்சலிங் மாநில அளவில் ஆன்லைன் மூலம் இன்று நடக்கிறது.  

நீட்' தேர்வுக்கு சிறப்பு பயிற்சி : தனியார் பள்ளிகளில் துவக்கம்

அடுத்த ஆண்டு, 'நீட்' தேர்வு கட்டாயமாகும் நிலையில், தனியார் பள்ளிகளில், சிறப்பு பயிற்சி வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளன. எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்.,ஆகிய மருத்துவ படிப்புகளில் சேர, அனைத்து மாநிலங்களிலும், அடுத்த ஆண்டு முதல், 'நீட்' எனப்படும் தேசிய பொது நுழைவுத் தேர்வு நடத்துவது கட்டாயம் ஆகியுள்ளது.
இந்த ஆண்டு மட்டும், நீட் தேர்வை அனுமதிக்காத மாநிலங்களில், அரசு கல்லுாரிகளில், நீட் தேர்வு இல்லாமல், மாணவர்களை சேர்க்க அனுமதிக்கப்பட்டது. ஆனால், அடுத்த ஆண்டும் விதிவிலக்கு உண்டா என்பது தெரியவில்லை.எனவே, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும், அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், நீட் தேர்வு அடிப்படையில் தான், மாணவர்கள் சேர்க்கப்படுவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், தங்கள் பள்ளி மாணவர்கள், பிளஸ் 2வில் மட்டுமின்றி, நீட் தேர்விலும் நல்ல மதிப்பெண் பெற வேண்டும் என, தனியார் பள்ளிகள் விரும்புகின்றன. இதுதொடர்பாக, பல்வேறு பயிற்சி மையங்களுடன், தனியார் பள்ளிகள் ஒப்பந்தம் செய்துள்ளன.இந்த பயிற்சி மையங்களின் ஆசிரியர்கள், பள்ளிகளுக்கு சென்று, நீட் சிறப்பு வகுப்புகள் நடத்த துவங்கியுள்ளனர். சி.பி.எஸ்.இ., பள்ளிகள் மட்டுமின்றி, மெட்ரிக் பள்ளிகளும் இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளன. மேலும், நாமக்கல், ஈரோடு, திருச்சி, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளில், பிளஸ் 2 ரிசல்ட்டில் சிறப்பு கவனம் செலுத்தும் பள்ளிகளும், நீட் சிறப்பு வகுப்பை துவங்கியுள்ளன

பி.எஸ்.என்.எல்., 'சண்டே ஜாலி' சலுகை : இணையதள இணைப்புக்கு கிடையாது.

பி.எஸ்.என்.எல்., தொலைபேசி (தரைவழி) வாடிக்கையாளர்களுக்கான ஞாயிற்று கிழமைகளில் இலவச அழைப்பு சலுகை, அலைபேசி மற்றும் இணையதள இணைப்புகளுக்கு பொருந்தாது' என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தனியார் நிறுவனங்களின் வருகையால், பி.எஸ்.என்.எல்., தரைவழி இணைப்புகளின் பயன்பாடு குறைந்து விட்டது.தரைவழி இணைப்புகளை அதிகரிக்க செய்யும் நோக்கில், சலுகைகளை பி.எஸ்.என்.எல்., அளித்து வருகிறது. தினமும் இரவு 9:00 முதல் காலை 7:00 மணி வரை, தொலைபேசியில் இருந்து எந்த இணைப்புகளுக்கு பேசினாலும் கட்டணம் இல்லை. இதே போல ஆக.,15 முதல் புதிய சலுகை அறிவிக்கப்பட்டது. இதன்படி, ஞாயிற்று கிழமைகளில் தொலைபேசியில் இருந்து பேசும் அழைப்புகளுக்கு கட்டணம்இல்லை.இதுகுறித்து பி.எஸ்.என்.எல்., நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், 'வெளிநாடுகளில் வசிப்போருடன் பேசவும், இணையதள இணைப்புக்கும் இச்சலுகை கிடையாது. மற்ற விடுமுறை தினங்களுக்கும் பொருந்தாது. இத்திட்டத்தால்பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர்கள் அதிகரிப்பர்' என்றார்.

வீட்டுவசதி வாரிய வீடுகளுக்கு ஆன்-லைனில் இனிவிண்ணப்பிக்கலாம்: அமைச்சர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன் அறிவிப்பு.

வீட்டு வசதி வாரிய வீடுகள் ஒதுக்கீட்டுக்கு ஆன்-லைனில் விண்ணப்பிக்கும் புதிய முறை அறிமுகப்படுத்தப்படும் என்று வீட்டுவசதி-நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் அறிவித்தார்.சட்டப் பேரவையில், வீட்டுவசதி-நகர்ப்புற வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்கு பதிலளித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்புகள்:

பள்ளி மாணவர்களுக்கு எரிசக்தி சேமிப்பு : விழிப்புணர்வு ஓவிய போட்டி நடத்த உத்தரவு

பள்ளி மாணவர்களுக்கு, எரிசக்தி சேமிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஓவியப்போட்டி நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
மத்திய எரிசக்தி அமைச்சகத்தின் சார்பில் தேசிய அளவில் எரிசக்தி சேமிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி மாணவர்களுக்கான ஓவியப்போட்டிகள் நடத்தப்பட உள்ளன.மாவட்ட வாரியாக 4,5,6 மற்றும் 7,8, 9ம் வகுப்பு மாணவர்களை ஏ, பி என இரு பிரிவுகளாக பிரித்து போட்டிகளைநடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தர விட்டுள்ளது. பள்ளி அளவில் சிறந்ததாக தேர்வு செய்யப்படும் இரு படைப்புகளை, சென்னையில் உள்ள எரிசக்தி துறை அதிகாரிகளுக்கு, செப்., 30க்குள் கிடைக்கும்படி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேனி முதன்மை கல்வி அலுவலர் வாசு கூறுகையில், “பள்ளி அளவில் தேர்வு செய்யப்படும் சிறந்த இரண்டு படைப்புகள் தலைமை ஆசிரியர்கள் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. இதில் தேர்வாகும் மாணவர்கள் மாநில போட்டிகளிலும், அதனை தொடர்ந்து தேசிய போட்டிகளிலும் பங்கேற்க உள்ளனர். மாநில போட்டிகளில் முதலிடம் பிடிப்பவர்களுக்கு 20 ஆயிரம் ரூபாயும், இரண்டாமிடத்திற்கு 15 ஆயிரம் ரூபாயும், மூன்றாமிடத்திற்கு 10 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படவுள்ளன. ஆறுதல் பரிசாக 10 பேருக்கு 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்படவுள்ளது. தேசிய அளவில் முதலிடம் பிடிப்பவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும், ”என்றார்.

ஏழு ஆண்டுகளாகியும் ஊதிய உயர்வில்லை : ஆர்.எம்.எஸ்.ஏ., பணியாளர் புலம்பல்.

பணியில் சேர்ந்து ஏழு ஆண்டுகளாகியும் இதுவரை ஊதிய உயர்வு அளிக்கப்படவில்லை என, ஆர்.எம்.எஸ்.ஏ., பணியாளர்கள் புலம்புகின்றனர். 2009ல் ஆர்.எம்.எஸ்.ஏ.,எனப்படும் அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. 
இத்திட்டத்தை செயல்படுத்த தொகுப்பூதிய அடிப்படையில் பணியாளர்களை மாநில அரசே நியமிக்க உத்தரவிடப்பட்டது.மத்திய அரசு ஒதுக்கும் நிதியில் இருந்து சம்பளம் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன்படி 2009ல் மாவட்ட நிர்வாகங்கள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். கணக்கு மேலாளர்கள், டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர்கள், கட்டடப் பொறியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டனர். கணக்கு மேலாளர்களுக்கு ரூ.7,800, டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர்களுக்கு ரூ.6,000, கட்டடப்பொறியாளர்களுக்கு ரூ.12 ஆயிரம்சம்பளம் வழங்கப்பட்டது. ஆனால், ஏழு ஆண்டுகளைக் கடந்தும் ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை. இவர்களைப்போல் எஸ்.எஸ்.ஏ., எனப்படும் அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் பணியாற்றுவோருக்கு ஆண்டுதோறும் ஊதிய உயர்வு வழங்கப்படும் நிலையில், தங்களுக்கு மட்டும் ஏன் இந்த பாரபட்சம் என, புலம்புகின்றனர்

பத்தாம் வகுப்பை தனித்தேர்வராக எழுதிய மாணவியை சட்டக் கல்லூரியில் சேர்க்க உயர் நீதிமன்றம் உத்தரவு.

பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வை தனித் தேர்வராக எழுதிய மாணவிக்கு சட்டக் கல்லூரியில் பயில அனுமதி அளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.
திருச்சியைச் சேர்ந்த தாரணி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:திருச்சி ஹோலிகிராஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 2007-ஆம் ஆண்டு 9-ஆம் வகுப்பு முடித்தேன். பின்னர் மன அழுத்தம் காரணமாக 10-ஆம் வகுப்பை பள்ளியில் படிக்காமல் தனித் தேர்வராக எழுதித் தேர்ச்சி பெற்றேன். தொடர்ந்து பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளை, ஹோலி கிராஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலேயே படித்தேன். 2013-இல் காட்சி தொடர்பியல்(விசுவல் கம்யூனிகேசன்) இளம் அறிவியல் பட்டம் பெற்றேன்.இந்த நிலையில், சட்டம் (எல்எல்பி) பயில்வதற்காக, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பித்தேன். தாழ்த்தப்பட்டமாணவர்களுக்கு கட் ஆஃப் மதிப்பெண்களாக 71.318 நிர்ணயிக்கப்பட்டிருந்தது. நான் 71.961 மதிப்பெண்கள் பெற்றிருந்தேன். தேர்வுப்பட்டியலில் எனது பெயர் இல்லை.இதுதொடர்பாக விசாரித்தபோது, பத்தாம் வகுப்பை தனித்தேர்வராக எழுதியதால் அனுமதி வழங்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. பத்தாம் வகுப்புத் தேர்வை தனியாக எழுதி இருந்தாலும், அதைத் தொடர்ந்து பிளஸ் 2 மற்றும் பட்டப்படிப்பை முறையாக பயின்றதால் சட்டக் கல்லூரியில் சேர்க்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு, நீதிபதிகள் நூட்டி ராம்மோகனராவ், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், திறந்தநிலைப் பல்கலைக்கழகம் மூலமாக பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பயின்றவர்களுக்கே அனுமதி மறுக்கப்படும் என சட்டக் கல்வி விதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.மனுதாரர் 10-ஆம் வகுப்பை தனியாக எழுதியிருந்தாலும், பிளஸ் 2 மற்றும் பட்டப்படிப்பை முறையாகப் பயின்றதால் அவருக்கு சட்டக் கல்லூரியில் பயில அனுமதியளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்

சுதந்திர தினத்தன்று மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்காமல் காலதாமதமாக வந்து தேசியக் கொடி ஏற்றியதாக, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்துள்ள துரிஞ்சிக்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வளர்மதி என்பவர் தலைமை ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். சுதந்திர தினத்தன்று பள்ளிக்குதாமதமாக வந்த வளர்மதி, மாணவர்களுக்கும், அவர்களின் பெற்றோருக்கும் தகவல் தெரிக்காமல் தேசியக்கொடியை ஏற்ற முயற்சித்தார். இதையறிந்த ஊர் பொதுமக்கள் தேசியக் கொடியை ஏற்றவிடாமல் அவரைத் தடுத்து நிறுத்தி, இதுகுறித்து கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் சந்திரிகாவுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து, துரிஞ்சிக்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு வந்த கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் விசாரணை நடத்தினார். இதுதொடர்பாக மாவட்ட கல்வி அலுவலர் ராஜேந்திரனிடம் அறிக்கை அளிக்கப்பட்டது. அதன்பேரில், தலைமை ஆசிரியை வளர்மதியை பணியிடை நீக்கம் செய்து மாவட்டக் கல்வி அலுவலர் ராஜேந்திரன் உத்தரவிட்டார்.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 191 சிறப்பு அதிகாரி பணி: விண்ணப்பிக்க அழைப்பு.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 2016-ஆம் ஆண்டில் நிரப்பப்பட உள்ள 191 சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளம் www.pnbindia.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மொத்த காலியிடங்கள்:191

பணி:Specialist Officer

பணியிடம்: இந்தியா முழுவதும்

தகுதி: பட்டம்,முதுகலை பட்டம்,பி.இ,பி.டெக் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்குரூ.600மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.100கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:www.pnbindia.com என்ற இணையதளத்தின் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைன் விண்ணப்பிக்க தொடக்க தேதி:20.08.2016

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:09.09.2016

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி:2016நவம்பர்,டிசம்பர் மாதங்களில் நடைபெறலாம்.

மேலும் முழுமையான விவரங்கள் அறியwww.pnbindia.comஎன்ற இணையதளத்தை பார்க்கவும்..

நாமக்கல் மாவட்டத்தில் மாவட்ட மாறுதலுக்கான காலிப்பணியிடங்கள்.(வ.எண் 34,35,36&37 ஆகியபணியிடங்கள் உருது பணியிடங்கள்.)



TRB:் உதவி பேராசிரியர் பணிக்கு, விண்ணப்பித்தவர்களின் நிலை குறித்த பட்டியல் வெளியீடு.

இன்ஜி., கல்லுாரிகளில் உதவி பேராசிரியர் பணிக்கு, விண்ணப்பித்தவர்களின் நிலை குறித்த பட்டியலை, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., வெளியிட்டு உள்ளது.அரசு இன்ஜி., கல்லுாரிகளில், 192 உதவி பேராசிரியர் இடங்களுக்கு, அக்., 22ல் எழுத்துத்தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்கான விண்ணப்பங்கள், நேற்று முன்தினம் முதல், முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்களில் வழங்கப்படுகின்றன;வரும், 7ம் தேதி வரை, விண்ணப்பங்களை அளிக்கலாம். இந்த காலியிடங்களுக்கு ஏற்கனவே, 2014ம் ஆண்டு முதல் அறிவிப்பு வெளியானது; அப்போதும் ஏராளமானோர் விண்ணப்பித்தனர்; அவர்கள், மீண்டும் விண்ணப்பிக்க வேண்டாம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், 2014 விண்ணப்பங்களின் தற்போதைய நிலை குறித்த பட்டியலை, டி.ஆர்.பி., இணையதளத்தில் வெளியிட்டு உள்ளது

மஹாராஷ்டிரா வங்கியில் 1,315 அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்கு அழைப்பு!

புனேயை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் 'Bank of Maharadhtra' வங்கியில் நாடு முழுவதும் உள்ள கிளைகளில் நிரப்பப்பட உள்ள 1,315 அதிகாரி பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கபப்படுகின்றன.

பணி:General Officers officers MMGS-III - 100
பணி:General Officers officers MMGS-III -200
பணி:Security Officers officers MMGS-III -200
பணி:Clerks (Law) - 100
பணி:Clerks (Agri) - 200
பணி:Clerks (Non Conventional) - 200
பணி:Officer - 500

விண்ணப்பிக்கும் முறை:www.bankofmaharastra.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.09.2016

மேலும் தகுதி, அனுபவம், சம்பளம், அனுபவம் உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய www.bankofmaharastra.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

மாவட்ட மாறுதல் கலந்தாய்வு பதிவு மூப்பு பட்டியல் வெளியீடு.....

19/8/16

Success Acadamy Coaching centre-keys Modified TNTET Paper I , Paper II (MS) & (SS) Question and Answer

Vidiyal vellore-TRB TET PAPER - I ANSWER KEYS (REVISED) - TENTATIVE

TN TET PAPER – II SOCIAL SCIENCE ANSWER KEY (REVISED) - TENTATIVE - VIDIYAL CENTRE -VELLORE

TN TET PAPER – II MATHS & SCIENCE ANSWER KEY (REVISED) - TENTATIVE-VIDIYAL CENTRE -VELLORE

TNPSC - GROUP - IV - பொதுத் தமிழ் மற்றும் பொதுத் தேர்வு உத்தேசமான வினா - விடைகள் மற்றும் விளக்கங்கள்

Success Acadamy Coaching centre-keys Modified TNTET Paper I , Paper II (MS) & (SS) Question and Answer

Vidiyal vellore-TRB TET PAPER - I ANSWER KEYS (REVISED) - TENTATIVE

TN TET PAPER – II SOCIAL SCIENCE ANSWER KEY (REVISED) - TENTATIVE - VIDIYAL CENTRE -VELLORE

TN TET PAPER – II MATHS & SCIENCE ANSWER KEY (REVISED) - TENTATIVE-VIDIYAL CENTRE -VELLORE

TRB - TNTET 2013 - PAPER I and II - New Updated- TENTATIVE - ANSWER Keys

TNTET -2013 FINAL ANSWER KEYS

ஆசிரியர் நியமனத்திற்கு வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடுவது எப்படி?

TET WEIGHTAGE Click here ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு 60 சதவீத மதிப்பெண் (150–க்கு 90 மதிப்பெண்) எடுக்க வேண்டும்.

இடைநிலை ஆசிரியர்நியமனத்தைப்
பொருத்தவரையில், ஆசிரியர் நியமனம் தொடர்பான சுப்ரீம் கோர்ட்டு வழக்கில் தீர்ப்பு வரும்வரை தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் மாநில அளவிலான பதிவுமூப்பு அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்.

பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு, தகுதி தேர்வு மதிப்பெண், பிளஸ்–2 மதிப்பெண், பட்டப் படிப்பு மற்றும் பி.எட். மதிப்பெண் ஆகியவற்றின் அடிப்படையில் நியமனம் நடைபெறும்.

தகுதித்தேர்வுக்கு 60 மதிப்பெண்ணும், பிளஸ்–2 தேர்வுக்கு 15 மதிப்பெண்ணும், பட்டப் படிப்புக்கு 15 மதிப்பெண்ணும், பி.எட். படிப்புக்கு 15 மதிப்பெண்ணும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. மொத்தம் 100 மதிப்பெண். தகுதித்தேர்வில் ஒருவர் எடுக்கும் மதிப்பெண் 60–க்கு மாற்றப்படும். பிளஸ்–2, டிகிரி, பி.எட். தேர்வில் மதிப்பெண் ஒதுக்கீடு விவரம் பின்வருமாறு:–

12–ம் வகுப்பு

90 சதவீதம் மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் பெற்றிருந்தால் – 10 (அதிகபட்ச முழு மதிப்பெண்)
80 சதவீதம் முதல் 90 சதவீதத்திற்குள் – 8 மதிப்பெண்
70 சதவீதம் முதல் 80 சதவீதத்திற்குள் – 6 மதிப்பெண்
60 சதவீதம் முதல் 70 சதவீதத்திற்குள் – 5 மதிப்பெண்50 சதவீதம் முதல்
60 சதவீதத்திற்குள் – 2 மதிப்பெண்

பட்டப் படிப்பு

70 சதவீதம் மற்றும் அதற்கு மேல் – 15 மதிப்பெண் (முழு மதிப்பெண்)
50 சதவீதம் முதல் 70 சதவீதத்திற்குள் – 12 மதிப்பெண்
50 சதவீதத்திற்கு கீழ் – 10 மதிப்பெண்

பி.எட். படிப்பு

70 சதவீதம் மற்றும் அதற்கு மேல் – 15 மதிப்பெண் (முழு மதிப்பெண்)
50 சதவீதம் முதல் 70 சதவீதத்திற்குள் – 12 மதிப்பெண்

தகுதித்தேர்வு

90 சதவீதம் மற்றும் அதற்கு மேல் – 60 மதிப்பெண் (முழு மதிப்பெண்)
80 சதவீதம் முதல் 90 சதவீதத்திற்குள் – 54 மதிப்பெண்
70 சதவீதம் முதல் 80 சதவீதத்திற்குள் – 48 மதிப்பெண்
60 சதவீதம் முதல் 70 சதவீதத்திற்குள் – 42 மதிப்பெண்

TNTET:Tamil Nadu Teacher Eligibility Test 2013 - to know your Roll Number-Again Now published TRB.

TNTET - WEIGHTAGE - IN DETAIL

TNPSC TET வாக்கிய வகைகள்---TNPSC, TET

TET Online Model TEST (Free) - Key Answer - Click Here

TNPSC Group 2 & Group 4 & VAO Exam Study Materials

TET & PGTRB Study Material Collection - New -

tnpsc group-II & VAO Study Materials

Thursday, 18 August 2016

பிளஸ் 2 கணித வினாத்தாள் மாற்றம் !

பிளஸ் 2 கணித வினாத்தாள் மாற்றம் !
சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், பிளஸ் 2 கணித வினாத்தாள் மாற்றப்பட்டுள்ளது. எளிமையான வினாக்கள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.மத்திய அரசின் இடைநிலைக் கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு மற்றும்பிளஸ் 2 வினாத்தாள்கள், மிகவும் கடினமாக இருப்பதாக புகார்கள் வந்தன. இதுகுறித்து, கல்வியாளர்கள், மாணவர்களிடம் கருத்து கேட்கப்பட்டது; தனிக்குழுவும் அமைக்கப்பட்டது. இந்த குழு பரிந்துரைப்படி, வினாத்தாள் மாற்றப்பட்டு உள்ளது.அதன்படி வரும், 2017ல், பிளஸ் 2 கணித தேர்வுக்கான வினாத்தாள் மாதிரியை, சி.பி.எஸ்.இ., வெளியிட்டு உள்ளது. எளிமையான வினாக்கள், 20 சதவீதம்; சராசரி வினாக்கள், 60 சதவீதம் என நிர்ணயிக்கப்பட்டு, கடின வினாக்கள், 20 சதவீதம் என்ற அளவுக்கு மாற்றப்பட்டு உள்ளன.

அஞ்சல் துறையில் பணி: விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்க அழைப்பு.


இந்திய அஞ்சல் துறையின் தலைமை போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் அலுவலகத்தில் காலியாக உள்ள விளையாட்டு வீரர்களுக்கான பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 பணி - காலியிடங்கள் விவரம்:

பணி: Postal Assistant - 16பணி: Sorting Assistant - 07சம்பளம்: ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400.கல்வித்தகுதி: தொழிற்பிரிவு அல்லாத இதர பாடப்பிரிவுகளை முதன்மையாகக் கொண்டு பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.பணி: Postman - 28

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

 சம்பளம்: ரூ.5,200 - 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2,000.

வயதுவரம்பு: 24.08.2016 தேதியின்படி 18 - 27க்குள் இருக்க வேண்டும்.

பணி: Multi Tasking Staff - 15

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 24.08.2016 தேதியின்படி 18 - 25க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,800.

தேர்வு செய்யப்படும் முறை:கல்வித்தகுதி மற்றும் விளையாட்டுத்தகுதி மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். சம்பந்தப்பட்ட விளையாட்டு போட்டிகளில் தேசிய அளவில்/ சர்வதேச அளவில் பங்கேற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:ரூ.100. இதை Chief Postmaster General, Delhi என்ற பெயரில், புதுடெல்லியில் மாற்றத்தக்க வகையில் போஸ்டல் ஆர்டர் எடுக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:www.indiapost.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கணினியில் தட்டச்சு செய்து தேவையான விவரங்களை தெளிவாக பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பதிவு அஞ்சல் அல்லது விரைவு ஆஞ்சலில் அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முக�
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Assistant Director (R&E),O/o The Chief Post Master General,Delhi Circle,Meghdoot Bhawan,NEWDELHI- 110001.

விளையாட்டுத்தகுதி: சம்பந்தப்பட்ட விளையாட்டுத்துறையில் மாநில அளவில், தேசிய அளவில், பல்கலைக்கழக அளவில், சர்வதேச அளவில் தகுதி பெற்றிருக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 24.08.2016.

மேலும், வயதுவரம்பு சலுகை, விளையாட்டுத் தகுதிகள் தொடர்பான தகவல்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.indiapost.gov.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

kalviseithi.net
R.L 2016 

ஆகஸ்ட்
02.08.16 செவ்வாய் - ஆடிப்பெருக்கு
12.08.16 வெள்ளி -வரலஷ்மி விரதம்
18.08.15 வியாழன்- ரிக்உபகாரமா ,யஜூர் உபகர்மா 
19.08.15 வெள்ளி - காயத்ரிஜெபம் 

செப்டம்பர்

05.09.16 திங்கள் -சாமஉபகர்மா  12.09.16 திங்கள் - அர்பா  
13.09.2016 செவ்வாய் - ஓணம் பண்டிகை

அக்டோபர்

03.10.16 திங்கள்-ஹிஜ்ரி 1438ஆம் வருட பிறப்பு  
29.10.16 சனி-தீபாவளி நோன்பு 

நவம்பர்
02.11.16 புதன்-கல்லறைத் திருநாள் 04.11.16 திங்கள் - குரு நானக் ஜெயந்தி

டிசம்பர்
02.12.16 திங்கள் - திருக் கார்த்திகை தீபம் 
24.12.16 சனி- கிருஸ்துமஸ் ஈவ் 
31.12.16 சனி-நியூ இயர்ஸ்  ஈவ்

எந்த இறைச்சி சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்

ஐம்பது வகையான வீட்டுக்குறிப்புகள் - தெரிந்துகொள்வோம்

கணம்

காமராஜரைப் பற்றிய 111 அரிய

காய்கறி வாங்குவது எப்படி?

குடிதண்ணீரை பில்டர் செய்யக் கூடாது

கூந்தல் உதிர்வதை தடுக்கும் சூப்பர் உணவுகள்

சமத்துவம் சமதர்மம் என்ற வார்த்தைகள் மிகவும் அழகானவைகள்

சாதம் எப்படி சாப்பிடவேண்டும்?

சில பயனுள்ள இனையத்தளங்கள்!

சிலுவையை பற்றிய அரிய உண்மைகள்

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இலவச Wi-Fi

ஜன கண மன என சொல்லிடுவோம்!

டிரைவிங் லைசென்ஸ் அவசியத்தை புரிந்து கொள்வோம்

தந்தை மகனுக்கு என்ன சொல்லிக் கொடுக்க வேண்டும்

தன்னம்பிக்கை கதை

திருநீறு இட்டுக்கொள்வது ஏன்?

தூக்கம் வராமல் அவதிப்படும் கர்ப்பிணிகளுக்கு டிப்ஸ்

தேசிய கொடியை மதிக்க கற்று கொடுங்கள்

தொலைந்து போன ஆன்ட்ராய்ட் ஸ்மார்ட் போன் கண்டு பிடிப்பது மற்றும் ஒரு கையடக்க தொலைபேசியை உளவு பார்ப்பது எப்படி