யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

26/8/16

TNPSC TET PDG TRB கம்பராமாயணம்

TNPSC GROUP-4 பொதுத்தமிழ் பகுதி-3

'டயட்' என்ற பெயரில் காலை உணவை தவிர்க்க வேண்டாம்!

Bank account balance தெரிந்து கொள்ள ATM card தேவையில்லை

Cellphone Doubts Sensors!

PGTRB- TAMIL தேவாரத் திருமுறைகள்

TNPSC GROUP 4, TET எட்டாம் வகுப்பு தமிழ் பகுதி 2

பள்ளிக்கூடம் என்ற பெயர் வைக்கப்பட்டிருக்கிறது என்று தெரியுமா?

பாரதி பிறந்த தினம்

புதியதாக மொபைல் போன்

பெண்களின் பருவ மாற்றங்களும்

பெண்கள் மனஅழுத்தத்தை குறைக்க சில வழிகள்

பேய் உண்டாஇல்லையா?

வங்கி இருப்பு குறித்து அறிய !!! அனைவரும் பயன் உள்ள தகவல்

25/8/16

தேவையை விட அதிக ஆசிரியர்கள்கவுன்சிலிங்கில் 4,000 பேர் ஏமாற்றம்

தென் மாவட்டங்களில், தேவையை விட, பல மடங்கு ஆசிரியர்கள் பணியாற்றுவதால், கவுன் சிலிங்கில் மாறுதல் கிடைக்காமல், 4,000 ஆசிரியர்கள் ஏமாற்றமடைந்து உள்ளனர்.


அரசு பள்ளிகளில், திருநெல்வேலி, கன்னியா குமரி, துாத்துக்குடி, விருதுநகர், மதுரை உள்ளிட்ட, தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர் களே, அதிகளவில் ஆசிரியர்களாக பணியாற்று கின்றனர்.

அதனால், இடமாற்றத் திற்கான கவுன்சிலிங்கில், தென் மாவட்ட காலியிடத் திற்கு, 100 ஆசிரியர் கள் போட்டி போடுவது வழக்கம். இதனால், காலியிடங்களின் விபரம் மறைக்கப்படுவதும் உண்டு. சிபாரிசு, பரிந்துரைஅடிப்படையில், இந்த மாவட்டங்களுக்கு மட்டும், இடமாறுதல் வழங்கப்பட்டு வந்தது.இந்த ஆண்டு, ஆசிரியர் கவுன்சிலிங்கில், எந்த காலிடமும் மறைக்கப்படாது என, அறிவிக்கப்பட் டது. அதனால், தென் மாவட்டத்தில் பணியாற்ற வாய்ப்பு கிடைக்கும் என, ஆசிரியர்கள் நினைத்தனர்.அதற்கு மாறாக, 'தென் மாவட்டங்களில் காலியிடங் களே இல்லை' என, அறிவிக்கப்பட்டுள்ளதால், ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

இரு நாட்களுக்கு முன் நடந்த, இடைநிலை ஆசிரியர் களுக்கான, மாவட்டம் விட்டு மாவட்டம் மாறும் கவுன்சிலிங்கில், 4,745 இடைநிலை ஆசிரியர்கள் மற்றும், 11 உடற்கல்வி ஆசிரியர்கள்மாறுதல் கேட்டனர்.அவர்களில், 641 இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் இரண்டு உடற்கல்வி ஆசிரியர்களுக்கு மட்டுமே, விரும்பிய இடங்களுக்கு மாறுதல் கிடைத்தது; மீத முள்ள, 4,000க்கும்மேற்பட்ட ஆசிரியர்களுக்கு இடங்கள் கிடைக்கவில்லை. இவர்களில் பெரும் பாலானோர், தென் மாவட்டங்களுக்கு மாறுதல்கேட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து, அதிகாரிகளிடம் கேட்ட போது, 'தென் மாவட்டங்களில், ஒவ்வொரு அரசு பள்ளி களிலும், மாணவர் எண்ணிக்கையை விட, பல மடங்கு அதிகமாக ஆசிரியர்கள் உள்ளதால், அங்குள்ள ஆசிரியர்களையே, வேறு மாவட்டங்களுக்கு மாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது' என்றனர்.

கட்டாய இடமாற்றம்: ஆசிரியர்கள் பதற்றம்

ஆசிரியர்கள் இடமாறுதல் கவுன்சிலிங், முடிவு கட்டத்தை எட்டியுள்ளது. வரும், 27ம் தேதி கட்டாய இடமாற்றம் நடக்கிறது; இதில், ஆசிரியர்கள், பல்வேறு மாவட்டங்களுக்கு அதிரடியாக மாற்றப்பட உள்ளனர். அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆண்டுக்கு ஒருமுறை விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங் நடக்கிறது. கடந்த, 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, இந்த ஆண்டு கவுன்சிலிங்கில், முக்கிய காலியிடங்கள் மறைக்கப்படாமல், ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். 

சிறுபான்மை பள்ளிகளுக்கு TET கிடையாது' - வழக்கு முழு விபரம்

தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை மட்டுமே, ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என்ற உத்தரவு, சிறுபான்மை பள்ளிகளுக்கு பொருந்தாது' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு உதவி பெறும் சிறுபான்மை பள்ளிகளில், அனுமதிக்கப்பட்ட இடங்களுக்கு, ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். 

பிளஸ் 2வுக்கு செப்டம்பர், 8ல் காலாண்டு தேர்வு

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, செப்., 8 முதல், 23ம் தேதி வரை, காலாண்டு தேர்வுகள் நடக்கும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது. 
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, ஆண்டு இறுதி பொதுத் தேர்வை போல, காலாண்டு, அரையாண்டு தேர்வுகளை, அனைவருக்கும் பொதுவான வினாத்தாளுடன் நடத்த, பள்ளிகளுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. செப்., 8ல், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, காலாண்டு தேர்வு துவங்குகிறது.


பிளஸ் 2வுக்கு, செப்., 8 முதல், 12 வரை, மொழி பாடங்களுக்கும்; மற்ற தேர்வுகள், செப்., 14 முதல், 23 வரையிலும் நடத்தப்பட உள்ளன. பத்தாம் வகுப்புக்கு, செப்., 8 முதல், 14 வரை மொழி பாட தேர்வுகளும்; மற்ற தேர்வுகள், செப்., 15 முதல், 23 வரையிலும் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே நாளில் 3 தேர்வு: பட்டதாரிகள் குழப்பம்

உயர் நீதிமன்றம், மின் வாரியம் மற்றும் தொழில்நுட்ப துறை தேர்வு என, ஒரே நாளில் மூன்று தேர்வுகள் நடக்கின்றன. இதனால், மூன்றுக்கும் விண்ணப்பித்தவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். மின் வாரியம் சார்பில் இளநிலை உதவியாளர், கள உதவியாளர், தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வு, வரும், 27 மற்றும், 28ம் தேதிகளில் நடக்க உள்ளது.

தமிழக தொழில்நுட்ப கல்வித்துறையின் சார்பில் தட்டச்சு தேர்வும், 27 மற்றும், 28ல் நடக்கிறது. அதே நாட்களில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., சார்பில், உயர் நீதிமன்ற நீதிபதிகளின் உதவியாளர், தட்டச்சர் பணியிடங்களுக்கும் தேர்வு நடக்கிறது.
இந்த மூன்று தேர்வுகளுக்கும், பலர் விண்ணப்பித்துள்ளனர். இதனால், எந்த தேர்வை எழுதுவது என தெரியாமல், தேர்வர்கள் தவிக்கின்றனர்.

இதுகுறித்து தேர்வர்கள் கூறியதாவது: மின் வாரிய தேர்வு பல மாதங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கல்வித்துறை தேர்வும், ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. ஆனால்,
டி.என்.பி.எஸ்.சி., தேர்வு தான் மிக குறுகிய காலத்தில் அறிவித்து நடத்தப்படுகிறது.
டி.என்.பி.எஸ்.சி.,யை பொறுத்தவரை, மற்ற துறைகளின் தேர்வுகளை கணக்கிடாமல், தேர்வு தேதியை குழப்பமாக அறிவிப்பது தொடர்கிறது. சில குறிப்பிட்ட துறைகள் தேர்வை அறிவித்து விட்ட நிலையில், அதேநாளில் டி.என்.பி.எஸ்.சி.,யும் தேர்வை அறிவிக்காமல் தவிர்த்தால், அது தேர்வர்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

3 ஆசிரியர்களுக்கு சி.பி.எஸ்.இ., நல்லாசிரியர் விருது

தமிழகத்தில், மூன்று தனியார் பள்ளி ஆசிரியர்கள் உட்பட, 34 பேருக்கு, சி.பி.எஸ்.இ., நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளை ஒட்டி, செப்., 5ம் தேதி, ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. அந்நாளில், சிறந்த ஆசிரியர்களுக்கு, மத்திய, மாநில அரசுகள் தனித்தனியாக விருதுகள் அறிவிக்கின்றன.

இதில், சி.பி.எஸ்.இ., விருது கள், நேற்று அறிவிக்கப்பட்டன. நாடு முழுவதும், 34 பேருக்கு நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்பட உள்ளன. தமிழகத்தில், சென்னை, அடையாறு இந்து சீனியர் செகண்டரி பள்ளி துணை முதல்வர் ஏ.காசி விஸ்வநாதன்; ஈரோடு மாவட்டம், திண்டல், வேளாளர் வித்யாலயா முதல்வர் ஏ.வி.புவனேஸ்வரி; சேலம் மாவட்டம், ஜாகிரம்மா பாளையம், செந்தில் பப்ளிக் பள்ளி முதல்வர் சி.சீனிவாசன் ஆகியோர், விருது பட்டியலில் இடம் பெற்று உள்ளனர்.

பணியிடம் மறைக்கப்பட்டதாகப் புகார்: இடமாறுதல் கலந்தாய்வில் இடைநிலை ஆசிரியர்கள் திடீர் போராட்டம்

திருநெல்வேலி மாவட்ட பள்ளிக் கல்வித் துறை சார்பில் ஆசிரியர்களுக்காக  நடைபெறும் கலந்தாய்வில், இடைநிலை ஆசிரியர்கள் செவ்வாய்க்கிழமை புறக்கணிப்பு செய்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருநெல்வேலி மாவட்ட பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் அனைத்து நிலை ஆசிரியர்களுக்கும் பணியிட மாறுதலுக்காக ஒவ்வொரு தேதியில் கலந்தாய்வு நடத்தப்பட்டு வருகிறது. பாளையங்கோட்டை சாராள் தக்கர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வரும் இந்தக் கலந்தாய்வில்,
செவ்வாய்க்கிழமை இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் சிறப்பாசிரியர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது. முதன்மை கல்வி அலுவலர் இரா. சுவாமிநாதன் முன்னிலையில், கணினி மூலம் உள்மாவட்ட மாறுதல் கோரும் நபர்களுக்கான பணியிடங்கள் அறிவிக்கப்பட்டன. மாறுதல் கோரி 111 பேர் வந்திருந்தனர். 33 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டன. இதில், இடைநிலை ஆசிரியர்களுக்கு பத்மநேரி அரசு உயர்நிலைப் பள்ளி, கலிங்கப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி, பாவூர்சத்திரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, தென்மலை அரசு மேல்நிலைப் பள்ளி, புளியரை அரசு மேல்நிலைப் பள்ளி ஆகிய  5 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டன.

இதனை ஏற்க இடைநிலை ஆசிரியர் சங்கம் மறுத்துவிட்டது. திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தம் 11 பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும், இதில், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, செங்கோட்டை, நெடுவயல் அச்சன்புதூர், சீவலப்பேரி, நான்குனேரி ஆகிய 7 இடங்கள் மறைக்கப்பட்டிருப்பதாகவும் புகார் கூறினர்.

மொத்தமுள்ள 11 இடங்களையும் அறிவித்து கலந்தாய்வு நடத்தினால் மட்டுமே பங்கேற்போம் எனக் கூறி கலந்தாய்வை புறக்கணித்து வெளியேறினர். அதோடு மட்டுமன்றி கலந்தாய்வு நடைபெற்ற பள்ளி வளாகத்தில் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க முன்னாள் பொதுச்செயலர் இசக்கியப்பன், மாவட்டச் செயலர் சரவணன் மற்றும் கலந்தாய்வுக்கு வந்திருந்த இடைநிலை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பணியிட மறைப்புக்கு கண்டனம் தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர்.

இதையடுத்து, சிறப்பாசிரியர்களான தையல் ஆசிரியர், ஓவிய ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர் ஆகியோருக்கான கலந்தாய்வு நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக இடைநிலை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வும் நடைபெற்றது. பிற்பகல் வரை புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள், பின்னர் கலந்தாய்வில் கலந்துகொண்டனர். 14 பேருக்கு உடனடியாக பணியிட மாறுதல் உத்தரவு வழங்கப்பட்டது. இதில், 6 இடைநிலை ஆசிரியர்கள், ஓர் ஓவிய ஆசிரியர், 7 உடற்கல்வி ஆசிரியர்கள் இடமாறுதல் உத்தரவு பெற்றனர். இதேபோல, புதன்கிழமையும் கலந்தாய்வு நடைபெறுகிறது. இதில், மாவட்டம்விட்டு மாவட்டம் மாறுதல் கோரும் இடைநிலை ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள் பங்கேற்கவுள்ளனர்.

ஒளிவுமறைவற்ற கலந்தாய்வு: சிஇஓ

திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெறும் ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு ஒளிவுமறைவற்ற வகையில் நடந்து வருகிறது என முதன்மை கல்வி அலுவலர் இரா. சுவாமிநாதன் தெரிவித்தார்.

இதுதொடர்பாக, அவர் கூறியது: திருநெல்வேலி மாவட்டத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கான காலியிடங்கள் 5 மட்டுமே இருந்தன. எனவே, அவற்றை அறிவித்தோம். ஆனால், 11 இடங்கள் இருப்பதாக ஒரு சிலர் புகார் தெரிவித்தனர். உபரி பணியிடங்களையும் கணிக்கிட்டு 11 இடங்கள் எனக் கூறுகின்றனர். குறைந்த மாணவர்கள் உள்ள இடங்களில் கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க முடியாது. அந்த இடங்களுக்கு ஊதியம் பெற்று வழங்கவும் முடியாது. உபரி பணியிடங்கள் இருந்தால் அவை பள்ளிக் கல்வித் துறை வசம் ஒப்படைப்பு செய்ய வேண்டும். அதன்பிறகே பணிநிரவல் முறையிலோ, இடமாறுதல் முறையிலோ ஆசிரியரை நியமனம் செய்ய முடியும். ஆனால், உபரி பணியிடங்களைக் கணக்கிட்டு கூடுதல் இடங்கள் உள்ளதாக பொய்யான குற்றச்சாட்டை கூறினர். இதுதொடர்பாக, ஆசிரியர்களிடம் விளக்கி கூறியதைத் தொடர்ந்து அனைவரும் கலந்தாய்வில் பங்கேற்று மகிழ்ச்சியுடன் இடமாறுதல் உத்தரவை பெற்றுச் சென்றனர் என்றார் அவர்.

அரசுப் பள்ளியில் "கை சுத்தம் செய்யும் அறை' திறப்பு

ஆரணியை அடுத்த இராமசாணிக்குப்பம் அரசு தொடக்கப் பள்ளியில் மாணவர்களிடம் சுகாதாரத்தை வளர்க்கும் விதமாக குழாயுடன் கூடிய கை சுத்தம் செய்யும் அறை புதன்கிழமை திறக்கப்பட்டது.


இராமசாணிக்குப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவ, மாணவிகள் உணவு உண்பதற்கு முன்பும், உணவு உண்ட பின்பும் கையை கழுவி சுத்தமாக வைத்துக்கொள்ளும் பழக்கத்தை பள்ளி பருவத்தில் இருந்து ஏற்படுத்தும் நோக்கத்தோடு தன்னார்வலர்கள் மூலம் ரூ.ஒரு லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் முன்மாதிரியாக கட்டி முடிக்கப்பட்ட கை சுத்தம் செய்யும் அறையை மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ராஜேந்திரன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

இந்த அறையில் டைல்ஸ் கற்கள் பதிக்கப்பட்டு, 20 குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் கை கழுவ சோப்பு, கையை துடைக்க துண்டு ஆகியவை வைக்கப்பட்டுள்ளன. மதிய நேரத்தில் மாணவ, மாணவிகள் முகமலர்ச்சியுடன் வகுப்பறைகளுக்கு செல்ல முன்மாதிரியான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இங்கு மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியாக கழிவறைகள் கட்டி பயன்பாட்டில் உள்ளதுடன், பள்ளி வளாகத்தில் பூங்காவில் உள்ளது போன்று செடிகள், மரக்கன்றுகள் நடப்பட்டு, சுற்றுச்சுவர் அமைத்து சிறந்த முறையில் பராமரிக்கப்படுகிறது.

மேலும், இந்தப் பள்ளி காமராஜர் விருது உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் பெற்று சிறந்து விளங்குவதாகவும், தமிழக அளவில் சிறந்த முன்மாதிரி பள்ளியாக வருவதற்கு வாய்ப்புள்ளதாகவும் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ராஜேந்திரன் தெரிவித்தார்

ரிலையன்ஸ் -ஜியோ இன்று வரை,. முழூநீளப்பதிவு.இலவச சிம்மை பெற முழுவதுமாக படியுங்கள் ..

அறிமுகம் 4ஜி VO-LTE
4 ஜி என்பது நான்காவது தலைமுறைக்கான அலைக்கற்றை சொல்லாடல். தற்போது LTE என்ற தொழில்நுட்பம் 4G க்கு தகுதியானதாக உள்ளது. ஏர்டெல் வோடபோன் போன்ற நிறுவனங்களும் இந்த LTE தொழில்நுட்பத்தில்தான் சேவைகளை வழங்குகின்றன. ஆனால் LTE ன் குறை என்னவெனில் வாய்ஸ் சப்போர்ட் இல்லாதது, எனவே 4G டேட்டாவுக்கும். வாய்ஸ் சப்போர்ட்க்கு 3G தொழில்நுட்பத்தையும் அந்த நிறுவனங்கள் பயன்படுத்தின. எனவே ரிலையன்ஸ் நிறுவனம் VO- LTE அதாவது Voice Over Long Term Evaluation தொழில்நுட்பத்தை கையில் எடுத்தது. இதில் வாய்ஸ் மற்றும் வீடியோ காலிங் பேச முடியும், 

இந்த புதிய நுட்பத்தை வெகு எளிதாக தனது பழைய CDMA டவர்களை எல்லாம் Volte க்கு மாற்றியது ரிலையன்ஸ். 800 MHz, 1800 MHz, 2300 Mhz என்ற அலைவரிசைகளில் இந்தியா முழுவதும் 22 சர்க்கிள்களில் லைசென்ஸ் பெற்றுள்ளது, எனவே 95 % கவரேஜ் கிடைக்க வாய்ப்புள்ளது. ரிலையன்ஸ் தனது ஜியோ 4ஜி சேவைகளை கடந்த டிசம்பர் 2015 ல் தொடங்கியது. ஆரம்பத்தில் தனது நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு அன்லிமிடெட் டேட்டா மற்றும் வாய்ஸ் வீடியோ கால்களுடன் மொபைலை வழங்கியது.
சோதனை ஓட்டம் Beta Testing
கடந்த ஜூலை மாதம் முதல் சாம்சங் உயர்வகை போன்களுக்கு(எ.கா) s6,s7) இலவச சிம்கார்டை 3 மாத அன்லிமிடெட் டேட்டா ,வீடியோ, வாய்ஸ் கால்களுடன் வழங்கியது ஜியோ நிறுவனம்.
LYF Mobile Volte சப்போர்ட்
ஜியோ நிறுவனம் LYF VOLTE மொபைல்களை ரூ. 3000 முதல் வழங்குகிறது, வாங்குபவர்களுக்கு 3 மாத அன்லிமிடெட் டேட்டா , வாய்ஸ் வீடியோ கால்கள் இலவசமாக கிடைக்கிறது.
JIofi2 மோடம்
ஜூலை மாதம் முதல் HP வாடிக்கையாளர்களுக்கு ரூ,2899 ல் Jio modem வழங்கப்பட்டது , இந்த மோடம் ஒரு Wifi Hotspot போல செயல்படும். ஒரே நேரத்தில் 32 Device களை இணைக்க முடியும், இதில் 6 மணிநேரம் செயல்படும் பேட்டரி உள்ளது, சிறியதாக உள்ளதால் நாம் பாக்கெட்டில் எளிதாக எடுத்து செல்லலாம்.
இந்த மோடம் ஆகஸ்டு 1 முதல் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்கப்படுகிறது, இதற்கும் 3மாத அன்லிமிடெட் டேட்டா, வாய்ஸ் மற்றும் வீடியோ கால் இலவசம், வாய்ஸ் மற்றும் வீடியோ கால் செய்ய JioJoin என்ற App ஐ Download செய்து அதிலிருந்து பயன்படுத்தலாம்.
இலவச சிம் எப்படி பெறுவது?
கடந்த ஆகஸ்ட் 20 முதல் Samsung J series, A series , Micromax, LG, ASUS, Panasonic, Yu, TCL & Alcatel போன்ற மொபைல்களுக்கும் இலவச சிம்கார்டு வழங்கப்படுகிறது .
சிம்கார்டை இலவசமாக பெற உங்கள் மொபைல் , 2 போட்டோ, ID Proof ஆகியவற்றை எடுத்துக்கொண்டு உங்கள் மொபைலில் MyJio என்ற Appஐ Download செய்து அதில் Get Jio sim என்ற லிங்கை க்ளிக் செய்து உங்கள் பெயர் மற்றும் போன் நம்பர் , ஊர் ஆகியவற்றை பதிவு செய்யுங்கள் , உங்கள் மொபைலுக்கு வரும் OTP ஐ பதிவு செய்யுங்கள், Coupon Code என்று ஒரு எண்ணை காட்டும் . பிறகு அந்த Coupon Code ஐ அருகிலுள்ள ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோரில் காட்டி சிம்கார்டு வாங்கிகொள்ள வேண்டும் . ஆக்டிவேசன் ஆக 4 நாட்கள் வரை ஆகலாம்.
ஆக்டிவேசன்
ஆக்டிவேசனின் போது உங்கள் alternative Mobile எண்ணுக்கு Your Sim is Ready for Tele Verification என்று மெசேஸ் வந்தவுடன் உங்கள் சிம்மை போனில் போடலாம். உங்கள் Network Setting ல் 
LTE/3G/2G Auto connect அல்லது LTE only என்று வைக்க வேண்டும். Jio 4g என்று டவர் கிடைக்கும், இப்போது உங்கள் மொபைலில் இருந்து 1977க்கு கால் செய்யுங்கள். கால் போகாவிட்டால் உங்கள் மொபைல் True 4G Support இல்லை என்று அர்த்தம். எனவே Wifi மூலமாக இன்டர்நெட் Connect செய்து Jio join என்ற Appஐ Download செய்யவும். அது ஒரு Dialer & Sms App, அதிலிருந்து நீங்கள் 1977க்கு கால் செய்யலாம், உங்கள் Id proof ன் கடைசி 4 இலக்கங்களை டயல் செய்யுங்கள், ஆக்டிவேசன் முடிந்தது, Jio Join Download செய்தவர்கள் கால் செய்ய எப்போதும் அதையே உபயோகப்படுத்துங்கள்.
My jio App ல் உள்ள எல்லா Appகளையும் download செய்து கொள்ளுங்கள் . Live tv, video in demand , Magazines, Security போன்ற சேவைகளையும் 3 மாதம் இலவசமாக பெறலாம், Speed test 
.net என்ற ஆப் மூலம் உங்கள் ஏரியாவில் என்ன ஸ்பீடு என்பதை தெரிந்து கொள்ளலாம். எங்கள் கறம்பக்குடியில் 23 MBPS.
இப்போது உங்களுக்கு ஒரு கேள்வி வரலாம், 3 மாதத்திற்கு பிறகு என்னவாகும் என்று. 1GBக்கு தற்போது 255 வரை செலவாகும் நிலையில் ஜியோ நிறுவனம் 10 ஜிபி டேட்டாவை 97 க்கு வழங்க இருக்கிறது. எனவே கவலை வேண்டாம்.
முடிந்தவரை எவ்வளவு டேட்டா வேண்டுமானாலும் உபயோகிக்கலாம். எவ்வளவு வாய்ஸ் மற்றும் வீடியோ கால்கள் இலவசமாக தற்போது பேசிக்கொள்ளலாம்.
தகுதியான போன்கள்
Free sim Samsung Devices
Grand Prime 4G, Galaxy J1, Galaxy J2, Galaxy J7, Galaxy J5, Galaxy S5 Plus, Galaxy A5, Galaxy A7, Galaxy Core Prime 4G, Galaxy S6, Galaxy J3 (2016), ON7, Galaxy A8, Galaxy S6 Edge, ON5, Galaxy Note 5, Galaxy Note 4, Galaxy Alpha, Galaxy S6 Edge Plus, Galaxy Note 4 Edge, Galaxy Note 5 Duos, Galaxy S5 Neo, S7, Galaxy A5 (2016), Galaxy A7 (2016), S7 Edge, A8 VE, J5 (2016), J7 (2016), ON5 Pro, ON7 Pro, Galaxy J2 (2016), J Max, Galaxy A9, Galaxy A9 Pro, Galaxy C5, Galaxy C7, Galaxy J2 Pro, Galaxy Note 7.
Micromax devices: 
Canvas Pulse 4G, Canvas Nitro 4G, Canvas Knight 2, Canvas 5, Canvas Evok, Canvas 6 Pro,Canvas 6, Canvas Blaze 4G, Canvas Fire 4G, Canvas Fire 4G plus, Canvas Xpress 4G, Canvas Blaze 4G Plus, Canvas Pace 4G, Canvas Mega 4G, Bolt Selfie, Canvas Mega 2, Canvas Unite 4, Canvas Fire 6, Canvas Sliver 5, Canvas Juice 4G, Canvas 5 Lite, Canvas 5 Lite Special Edition, Unite 4 Pro, Canvas Play 4G, Canvas Amaze 4G, Unite 4 Plus, Canvas Tab
LG devices:
K332 (K7 LTE), K520DY (Stylus 2), K520DY, H860 (LG G5), K500I (X Screen), K535D (Stylus 2 Plus), LGH630D (G4 Stylus 4G) & LGH 442 (LGC70 Spirit LTE)
ASUS devices:
ZenFone 2 Laser (ZE550KL), Zenfone 2 (ZE551ML), Zenfone Max (ZC550KL), Zenfone 2 Laser 5.0 (ZE500KL), Zenfone 2 (ZE550ML), Zenfone Selfie( ZD551KL), Zenfone 2 Laser (ZE601KL), Zenfone Zoom(ZX551ML), Zenfone Go 5.0 LTE (T500), Zenfone 3 ZE552KL, Zenfone 3 Laser( ZC551KL), Zenfone 3( ZE520KL), Zenfone 3( ZS570KL), Zenfone 3( ZU680KL)
Panasonic devices:
ELUGA L, ELUGA Switch, ELUGA Icon, T45, ELUGA I2 ( 1GB ), ELUGA L2, ELUGA Mark, ELUGA Turbo, ELUGA Arc, ELUGA I2 2GB, ELUGA I2 3GB, ELUGA I3, ELUGA Icon 2, ELUGA A2, ELUGA Note, P55 Novo 4G, ELUGA Arc 2, P77
Alcatel devices:
POP3, POP Star, POP4, OneTouch X1, Pixi 4 -5
TCL devices:
TCL 560, Pride T500L, FIT 5.5, TCL 562
Yu devices:
Yu Yuphoria, Yu Yureka, Yu Yutopia, Yunique, Yuphoria, Yureka Plus, YU Note, Yureka S, Yunicorn
சந்தேகங்களை கமென்டில் தெரிவியுங்கள் .

ராணுவ தொழிற்சாலையில் வேலை

இந்திய ராணுவத்திற்கு தேவையான தளவாட பொருட்களை உற்பத்தி செய்யும் பல்வேறு தொழிற்சாலைகள் இயங்குகின்றன. உத்தரகாண்ட் மாநிலம் ராய்ப்பூரில் செயல்படும் ராணுவ தளவாட தொழிற்சாலையில் தற்போது செமிஸ்கில்டு டிரேட்ஸ்மேன் மற்றும் லேபரர் போன்ற 'குரூப்-சி'பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆப்டிக்கல் ஒர்க்கர்,டர்னர், பிட்டர், மெஷினிஸ்ட், பெயிண்டர்,கிரைண்டர், எலக்ட்ரீசியன், கார்பெண்டர்,மில்ரைட், மாசன் போன்ற பணிகள் உள்ளன. மொத்தம் 122 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது தவிர லேபர் பணிக்கு 16 இடங்கள் உள்ளன.
மெட்ரிகுலேசன் தேர்ச்சியுடன், பயிற்சி சான்றிதழ் பெற்றவர்களுக்கு பணிகள் உள்ளன. விருப்பம் உள்ளவர்கள் அறிவிப்பில் இருந்து 21 நாட்களுக்குள் ஆன்லைன் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். பின்னர் பூர்த்தியான விண்ணப்பத்தை கணினிப் பிரதி எடுத்து, அடுத்த 7 நாட்களுக்குள் சென்றடையும்படி குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

இது பற்றிய அறிவிப்பு ஆகஸ்டு 13-19தேதியிட்ட எம்ப்ளாய்மென்ட் நியூஸ் இதழில் வெளியாகி உள்ளது. விரிவான விவரங்களை www.ofdun.asrb2014.orgஎன்ற இணையதள முகவரியில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம்.

ஐ.ஐ.டி.யில் வேலை

புகழ்பெற்ற கல்வி நிறுவனமான தேசிய தொழில்நுட்ப மையம் (ஐ.ஐ.டி.) பல்வேறு இடங்களில் செயல்படுகிறது. கான்பூரில் செயல்படும் ஐ.ஐ.டி. மையத்தில் பதிவாளர், இணை பதிவாளர், மருத்துவ அதிகாரி, கவுன்சலர், ஜூனியர் டெக் சூப்பிரண்டன்ட், ஜூனியர் அசிஸ்டன்ட் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 94 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

10-ம் வகுப்பு, பட்டப்படிப்பு, டிப்ளமோ படிப்பு, முதுநிலை படிப்பு என அனைத்து தரப்பு படிப்பு படித்தவர்களுக்கும் பணியிடங்கள் உள்ளன.அந்தந்த பணிக்கான கல்வித் தகுதி, வயது வரம்பை இணையதளத்தில் பார்க்கலாம்.
விருப்பம் உள்ளவர்கள் 30-8-2016-ந் தேதிக்குள் இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.7-9-2016-ந் தேதிக்குள் நகல் விண்ணப்பம் சென்றடைய வேண்டும். இது பற்றிய விவரங்களைwww.iitk.ac.in/infocell/recruitment என்ற இணைய 'லிங்'கில் பார்க்கலாம்.

கப்பல் தளத்தில் 1125 பணியிடங்கள்டிப்ளமோ என்ஜினீயர்களுக்கு வாய்ப்பு

கப்பல் தளத்தில் 1125 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. டிப்ளமோ என்ஜினீயர்களுக்கும், 8-ம் வகுப்பு படித்தவர்களுக்கும் இந்த பணிகளில் வாய்ப்பு உள்ளது.

இது பற்றிய விவரம் வருமாறு:-
மும்பையில் செயல்படும் பொதுத்துறை கப்பல்தளம் மசாகான் டாக் ஷிப்பில்டர்ஸ் லிமிடெட். கடற்படைக்குத் தேவையான கப்பல்களை கட்டுமானம் செய்தல் மற்றும் பழுதுபார்க்கும் பணிகள் இங்கு நடைபெறுகின்றன. தற்போது இந்த நிறுவனத்தில் டெக்னிக்கல் ஸ்டாப் மற்றும் ஆபரேட்டிவ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 1125 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
குறிப்பாக பிட்டர் பணிக்கு 158 இடங்கள்,பேப்ரிகேட்டர் பணிக்கு 133 இடங்கள்,பைப் பிட்டர் பணிக்கு 130 இடங்கள்,எலக்ட்ரீசியன் பணிக்கு 144 இடங்கள்,கம்போசிட் வெல்டர் பணிக்கு 138பணிகள், செமி ஸ்கில்டு பணிகளுக்கு168 இடங்கள் உள்ளன. ஜூனியர் குவாலிட்டி கண்ட்ரோல் இன்ஸ்பெக்டர்,ஸ்டோர் கீப்பர், ரிகர், பெயிண்டர் போன்ற பணிகளுக்கும் கணிசமான இடங்கள் உள்ளன.
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்கள் வருமாறு:-
வயது வரம்பு :
விண்ணப்பதாரர்கள் 1-8-2016 தேதியில்33 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஓ.பி.சி. பிரிவினருக்கு 3ஆண்டுகளும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 5ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படுகிறது. மாற்றுத் திறனாளிகள் மற்றும் முன்னாள் படைவீரர்களுக்கும் வயது வரம்பு தளர்வு விதிகளின்படி அனுமதிக்கப்படும்.
கல்வித்தகுதி:
மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல்,எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் டெலி கம்யூனிகேசன்,இன்ஸ்ட்ருமென்டேசன், கம்ப்யூட்டர் என்ஜினீயரிங் போன்ற பிரிவுகளில் 3ஆண்டு டிப்ளமோ படிப்பு படித்தவர்களுக்கு பணி வாய்ப்பு உள்ளது. 8-ம் வகுப்பு தேர்ச்சியுடன்,தேசிய அப்ரண்டிஸ் பயிற்சி சான்றிதழ் பெற்றவர்களுக்கும் பணிகள் உள்ளன. அந்தந்த பணிக்கான கல்வித் தகுதியை இணையதளத்தில் பார்க்கலாம்.
தேர்வு செய்யும் முறை:
எழுத்து தேர்வு மற்றும் திறமைத் தேர்வு இவற்றில் பணிக்கு அவசியமான தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
கட்டணம் :
விண்ணப்பதாரர்கள் ரூ.100 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் படைவீரர்கள் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் ஏ4காகிதத்தில் குறிப்பிட்ட மாதிரியில் விண்ணப்ப படிவம் தயாரிக்க வேண்டும். அதில் விவரங்களை நிரப்பி, புகைப்படம் ஒட்டி, தேவையான சான்றுகளை இணைத்து அனுப்ப வேண்டும். விண்ணப்பங்கள் DGM (HR&Rec&NE), Recruitment Cell, Service Block 3rd Floor, Mazagon Dock Shipbuilders Limited, Dockyard Road, Mumbai 400010 என்ற முகவரிக்கு 1-9-2016-ந் தேதிக்குள் சென்றடையும் படி அனுப்பப்பட வேண்டும்.
இது பற்றிய விரிவான விவரங்களைwww.mazagondock.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்..

சோர்வு ஏற்படுவது ஏன் தவிர்ப்பது எப்படி?

ஜன கண மன என சொல்லிடுவோம்!

டிஎன்பிஎஸ்சி குரூப் - IV அறிவியல் வினா - விடை 22

டிஎன்பிஎஸ்சி குரூப் IV பொதுத் தமிழ் வினா

தகவல் துளி புயல்கள் எப்படி உருவாகின்றன

தமிழில் டைப் செய்ய இனிய தமிழ்

தமிழ்நாடு registration number விபரங்கள் பின்வருமாறு

தொலைந்து போன ஆன்ட்ராய்ட் ஸ்மார்ட் போன் கண்டு பிடிப்பது மற்றும் ஒரு கையடக்க தொலைபேசியை உளவு பார்ப்பது எப்படி?

நமது உடல்

நீங்கள் கையெழுத்துப் போடும் ஸ்டைலில் உங்கள் கேரக்டரைக் கண்டு பிடித்துவிட முடியும் தெரியுமா?

பனிரெண்டா?

பள்ளிக்கூடம் என்ற பெயர் வைக்கப்பட்டிருக்கிறது என்று தெரியுமா?

பாரதி பிறந்த தினம்

புதியதாக மொபைல் போன்

பெண்களின் பருவ மாற்றங்களும்

பெண்கள் மனஅழுத்தத்தை குறைக்க சில வழிகள்

பேய் உண்டாஇல்லையா?

வங்கி இருப்பு குறித்து அறிய !!! அனைவரும் பயன் உள்ள தகவல்

வாழ வைக்கும் வைட்டமின்கள்

24/8/16

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு Bio-Metric வருகைப் பதிவேடு முறை அறிமுகம் முதல்வர் அறிவிப்பு




உயர்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப் படும் நடுநிலை பள்ளிகளின் பெயர் பட்டியல்

IGNOU - BED Prospectus for January 2017

Directorate of Government Examinations - HSE September 2016 - Private Candidate Instruction for Online Registration





DGE - HSE September 2016 - Examination Time Table

23/08/2010 முதல் 23/08/2016 வரை ! RTE act ல் சிக்கித் தவிக்கும் TET நிபந்தனை ஆசிரியர்களின் எதிர்பார்ப்பு தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற எதிர்பார்ப்பு

2016 ஜுலைஆகஸ்டு செப்டம்பர் மாதங்களில்
நடந்துகொண்டுள்ள தமிழக சட்டப் பேரவையில்TET நிபந்தனைகளுடன் பணி புரியும் பட்டதாரிஆசிரியர்களின் கண்ணீருக்கு தீர்வு கிடைக்கும் என்றுஎதிர்பார்த்து சுமார் மூவாயிரம் ஆசிரியர்கள்மற்றும் அவர்களின்
குடும்பங்கள் காத்துக் கொண்டு உள்ளனர்.

எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ் 2 மாணவ- மாணவிகளுக்கு செல்போன் அப்ளிகேஷன் மூலம் பாடம் படிக்கும் திட்டம்;

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 மாணவ-மாணவிகள் செல்போன்‘அப்ளிகேஷன்’ மூலம் பாடம் படிக்கும்புதிய திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன் உபயோகம்குறித்து ஆசிரியர்களுக்கு
செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

ஆசிரியர்களுக்குசெயல்விளக்கம்
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பாட திட்டத்தில் சிலவற்றைதேர்ந்தெடுத்து நவீன தொழில்நுட்பம் மூலம்மாணவ-மாணவிகள் படிக்க செல்போன் ‘அப்ளிகேஷன்’ ஒன்றை தமிழக அரசின் பள்ளிக்கல்விதுறை தயார் செய்துள்ளது. இதன்உபயோகம் குறித்து ஆசிரியர்கள் தெரிந்து கொள்ள காணொலி காட்சிமூலம் செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ளடி.பி.ஐ. வளாகத்தில்இருந்தபடி, 32 மாவட்டங்களில் உள்ள 32 மாவட்ட ஆசிரியர்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனமையங் கள், 16 அரசு மேல்நிலைப்பள்ளிகளில்செயல்விளக்கம் வழங்கப்பட்டது.

பதிவிறக்கம்செய்யலாம்
இது குறித்து மாநில கல்வியியல் ஆராய்ச்சிமற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர்ராமேஸ்வர முருகன் கூறியதாவது:-
தமிழக அரசின் பள்ளிக்கல்வி துறைமூலம் ‘ TN SC-H-O-O-LS LI-VE ’ என்ற அப்ளிகேஷனை செல்போனின் ‘பிளே ஸ்டோரில்’ சென்றுபதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், இது தொடர்பாக சி.டி.யிலும்நாங்கள் பதிவு செய்து ஒவ்வொருபள்ளிகளுக்கும் வழங்கி இருக்கிறோம். மாணவ-மாணவிகள் தேவைப்பட்டால் அதை கேட்டு பெற்றுக்கொண்டுதங்களுடைய செல்போனில் பதிவேற்றம் செய்து கொள்ளலாம். இந்தஅப்ளிகேஷனை கொண்டு பாடத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபகுதியின் படத்தின் மீது வைத்தால் அந்தபடம் முப்பரிமாண தோற்றத்தில் (3-டி) காட்சி அளிக்கும்.


141 பாடங்கள்
பின்புஅந்த படத்தின் மூலம் மாணவ-மாணவிகள்தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்துவிளக்கங்களையும் அதில் பெற்று படித்துகொள்ளலாம். இதுவரை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த அப்ளிகேஷனை பதிவிறக்கம்செய்து இருக்கிறார்கள். எஸ்.எஸ்.எல்.சி. அறிவியல் புத்தகத்தில்57 பாடங்களையும், கணித புத்தகத்தில் 6 பாடங்களையும், பிளஸ்-2 இயற்பியல் புத்தகத்தில் 5 பாடங்களையும், வேதியியல் புத்தகத்தில் 16 பாடங்களையும், உயிரியியல் புத்தகத்தில் 20 பாடங்களையும், கணித புத்தகத்தில் 7 பாடங்களையும், கணினி அறிவியல் புத்தகத்தில் 10 பாடங்களையும், விலங்கியல் புத்தகத்தில் 20 பாடங்களையும் என மொத்தம் 141 பாடங்களைபடித்து தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறுஅவர் கூறினார்.

இடமாறுதல் பெற்ற ஆசிரியர்களுக்கு திடீர் தடை

தமிழக அரசின் தொடக்கக் கல்வித்துறையில் உள்ள, அரசு பள்ளிஆசிரியர்களுக்கு, ஆக., 3ம் தேதிகவுன்சிலிங் துவங்கி, நேற்று முன்தினம் முடிந்தது. இதில் பங்கேற்று இடமாறுதல் பெற்ற ஆசிரியர்கள், புதியஇடங்களில் சேர, தொடக்கக் கல்விஇயக்குனரகம் திடீர் தடை
விதித்துள்ளது.

இதுகுறித்து, தொடக்கக் கல்வி இயக்குனர் இளங்கோவன்அனுப்பியுள்ள சுற்றறிக்கை:


ஐந்தாம்வகுப்பு வரையிலான தொடக்கப் பள்ளிகளில், இரு ஆசிரியர்கள் உள்ளபள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், இடமாறுதல் பெற்றிருந்தாலும், உடனடியாக அங்கிருந்து மாறி செல்லக்கூடாது. அந்தஇடத்திற்கு மாற்றப்பட்ட ஆசிரியர் பணியில் சேர்ந்தால் மட்டுமே, ஆசிரியர்கள் விடுவிக்கப்பட வேண்டும்கிருஷ்ணகிரி, விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் தர்மபுரி மாவட்டங்களில், ஆசிரியர் பணியிடம், அதிகளவில் காலியாக உள்ளதால், இந்தமாவட்டங்களில் இருந்து மாறுதல் பெற்றஆசிரியர்களும், தங்கள் இடத்திற்கு, வேறுஆசிரியர் வரும் வரை காத்திருக்கவேண்டும்.இவ்வாறு அவர் குறிப்பிட்டுஉள்ளார்.

மாணவர் எண்ணிக்கை குறைவு: கலக்கத்தில் 3 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள்

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்கள்எண்ணிக்கை குறைந்ததால், பட்டதாரி ஆசிரியர்களின் 'சர்பிளஸ்' எண்ணிக்கை
அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது.

 இவர்களை மாவட்ட பள்ளிகளுக்குமாற்றம் செய்ய, கல்வித்துறை பரிசீலிப்பதால், 3 ஆயிரம் பேர் கலக்கத்தில் உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும், ஆக.,1 நிலவரப்படி அரசுமற்றும் உதவி பெறும் பள்ளிகளில்மாணவர் எண்ணிக்கை கணக்கெடுக்கப்படும். இந்தாண்டு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், மாணவர்கள் எண்ணிக்கை அதிர்ச்சி அளிக்கும் வகையில் குறைந்துள்ளது.

ஆங்கிலவழி வகுப்பு களிலும், மாணவர்கள்எண்ணிக்கை இரட்டை இலக்கத்தை தொடவில்லை. இதனால் மாணவர் - ஆசிரியர்விகிதாசாரம் அடிப்படையில், மாநில அளவில் 3 ஆயிரம்பட்டதாரி ஆசிரியர்கள் கூடுதலாக இருப்பது தெரியவந்துள்ளது.

காரணம்என்ன : ஐந்து ஆண்டுகளில், ஏராளமான புதிய தொடக்க பள்ளிதுவங்கப்பட்டன. நடுநிலை- உயர்நிலையாகவும், உயர்நிலை- மேல்நிலையாகவும் தரம் உயர்த்தப்பட்டன. அங்கு, அனைவருக்கும் கல்வித் திட்டம் (எஸ்.எஸ்.ஏ.) மற்றும்அனைவருக்கும் இடைநிலை கல்வி (ஆர்.எம்.எஸ்.ஏ.,) திட்டத்தில், புதிய பணியிடம் உருவாக்கப்பட்டன.
இப்பள்ளிகளில், வரும் காலங்களில் மாணவர் எண்ணிக்கை அதிகரிக்கும்என அரசு எதிர்பார்த்தது. மாறாககுறைந்ததால் ஆசிரியர் 'சர்பிளஸ்' ஏற்பட்டது. மேலும் ஆங்கில வழிகல்வியிலும் குறைந்தபட்சம், 15 மாணவர் இல்லாத வகுப்புகளின்ஆசிரியர்களும், 'சர்பிளஸ்' பட்டியலில் சேர்க்கப்பட்டனர்.

ஜூனியர்கள்எதிர்ப்பு : 'சீனியர்' ஆசிரியர்கள் பெரும்பாலும் ஒரே பள்ளியில் தொடர்ந்து, 10 ஆண்டுகளுக்கும் மேல் பணியில் உள்ளனர். பணி நிரவல் என்றால் முதலில்பாதிப்பது, 'ஜூனியர்'கள் தான். 'பல ஆண்டுகளாக பணியாற்றும் சீனியர்கள், ஏன் மாணவர் சேர்க்கையில்அக்கறை செலுத்த வில்லை,' எனஜூனியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அவர்கள்கூறுகையில், 'வெளி மாவட்டங்களில் பணியாற்றியநாங்கள், பல லட்சம் ரூபாய்'இழந்து' தான் சொந்த மாவட்டங்களுக்குமாற்றலாகினோம். மாணவர் எண்ணிக்கை குறைவால், 'சர்பிளஸ்' கணக்கில் வரும் நாங்கள் ஒவ்வொருஆண்டும் மாற்றப் படுகிறோம். எங்களுக்கும் குடும்பசூழ்நிலை உள்ளது' என்றனர்.


ஆசிரியர்சங்க நிர்வாகிகள் கூறியதாவது: அதிகாரிகள் சிலர் தங்கள் 'தேவை' கருதி, குறைந்த மாணவர் எண்ணிக்கைஉள்ள பள்ளிகளிலும், ஆசிரியர்களுக்கு மாறுதல் வழங்கி உத்தரவுபிறப்பித்தனர். மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்க, அரசு போதிய கவனம் செலுத்தாமல், 'தும்பை விட்டு வாலை பிடிக்கும்' கதையாக தற்போது ஆசிரியர்களை அலைக்கழிக்கமுடிவு செய்துள்ளது. 'சர்பிளஸ்' ஆசிரியர்களை மாறுதல் செய்வதற்கு பதில்அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்கநடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

பள்ளிகளில் அமலாகிறது 'பயோ மெட்ரிக்' வருகை பதிவு

அரசு பள்ளிகளில், 'பயோ மெட்ரிக்' வருகைப்பதிவுதிட்டத்தை, தமிழக அரசு அறிமுகப்படுத்தஉள்ளது அரசு பள்ளி ஆசிரியர்களுக்குகிடுக்குப்பிடி போட முடிவு செய்துவிட்டதுதமிழக அரசு. அதற்கான அறிவிப்பையும் நேற்று  110 விதியின் கீழ் வெளியிட்டுள்ளார் முதல்வர்.தமிழகத்தில்ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசுஉதவிபெறும் பள்ளிகள் உள்ளன. தமிழகத்தில் பேருந்துபோகாத பல கிராமங்களில் கூடஅனைவருக்கும் கல்வி என்ற நோக்கத்தோடுஅரசு
துவக்கப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. தொடக்கப் பள்ளிகளுக்கு இடைநிலை ஆசிரியர்களும், நடுநிலைப்பள்ளிகளுக்குபட்டதாரி ஆசியர்களும் தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அரசுப்பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்றி வரும் பலர் நகர்ப்புறபகுதிகளில்தான் வசித்து வருகின்றனர். பெரும்பாலானதுவக்கப்பள்ளிகள் கிராமப்பகுதிகளில் இருக்கும் நிலையில், நகர் பகுதியில் இருந்துஆசிரியர்கள் தாங்கள் பணியாற்றும் பள்ளிக்குச்சென்று வருவதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள்உள்ளன. பல கிராமங்களில் இருக்கும்தொடக்கப்பள்ளிகள் ஓர் ஆசிரியர் பள்ளிகளாகதான் இருக்கின்றன. இது பல ஆசிரியர்களுக்குவசதியாகிவிட்டது. காலை ஓன்பது மணிக்குபள்ளியில் இருக்கவேண்டிய ஆசிரியர்கள், பதினோரு மணிக்கு பள்ளிக்குவரும் அவல நிலைகள் தமிழககிராமங்களில் இன்றும் நிலவி வருகிறது.

அதே போல் இரண்டு ஆசிரியர்பணிபுரியும் பள்ளிகளிலும் இதே நிலை தான்உள்ளது. பெண்கள் ஆசிரியர்களாக இருந்தால், இந்த நிலை இன்னும் மோசமாகஉள்ளது. குறித்த நேரத்திற்கு பள்ளிக்குவருவது என்பது பல அரசுஆசிரியர்களிடம் வழக்கொழிந்த விஷயமாக மாறிவிட்டது. ஏற்கனவேஅரசு பள்ளிகள் மீது மக்களுக்கு இருக்கும், அவநம்பிக்கையை இது மேலும் அதிகரிப்பதாகஉள்ளது. தென் மாவட்டத்தில் கடைக்கோடியில்இருக்கும் பள்ளி ஒன்றிற்கு பாடவேளைதுவங்குவதே காலை பன்னிரெண்டு மணிக்குதான். காரணம் அந்த பள்ளியில் ஆசிரியர்களாகஇருக்கும் இரண்டு ஆசிரியர்களும் அருகில்இருக்கும் நகரத்தில் இருந்து வருகிறார்கள். அந்தகிராமத்திற்கு இரண்டு பேருந்துகள் மட்டுமேஉள்ளன.

அதில் ஒரு பேருந்து அவர்கள்வசிக்கும் நகரில் எட்டு மணிக்குபுறப்பட்டு ஒன்பது மணிக்கு அந்தகிராமத்திற்கு வந்தடையும். அதை தவிர்த்து விட்டுபத்து மணி பேருந்தில் தான், இவர்கள் பள்ளிக்கு வருகின்றார்கள். இதனால் இந்த பள்ளியின்வேலை நேரம் பதினோரு மணிக்கு  மேல்தான் ஆரம்பிக்கிறது. ஆனால் தங்களது வருகைபதிவேட்டில் இவர்கள் ஒன்பது மணிக்குவந்துவிட்டதாக கையெழுத்திடுகின்றார்கள். இதே நிலைதான் தமிழகத்தின்பல கிராமங்களில் உள்ள அரசு பள்ளிகளின்நிலையாக உள்ளது. பல கிராமங்களில்ஆசிரியர்கள் பள்ளிக்கே வருவதை தவிரத்துவிட்டு, அந்தகிராமத்தில் பட்டப்படிப்பு படித்தவர்களை இவர்கள் குறைந்த ஊதியம்கொடுத்து ஆசிரியர்களாக இவர்களே நியமிக்கும் கொடுமைகள்எல்லாம் தமிழகத்தில் நடந்தேறி வருகிறது.

அரசுப்பள்ளிகளில் அதிகாரிகள் ஆய்வுகள் குறைந்து இருப்பதும், மாணவர்கள் குறைவாக இருப்பதும் இதுபோன்றகாலம்தாழ்த்தி வரும் ஆசிரியர்களுக்கு வசதியாகிவிட்டது. இது குறித்து தொடர்ந்து கல்வித் துறைக்கு புகார்கள்வந்தவண்ணம் இருந்தால், இதற்கு மாற்றுத் தீர்வுகாண அதிரடி உத்தரவை தமிழகஅரசு பிறப்பித்துள்ளது. இன்று முதல்வர் உயர்கல்வி, மற்றும் பள்ளி கல்வி துறைகுறித்து 110 விதியின் கீழ் இருபத்தி நான்குஅறிவிப்புகளை வெளியிட்டார். அதில் ஒரு அறிவிப்பில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகைப்பதிவேட்டை கையாளுவதில் தற்போது உள்ள கையெழுத்திடும்முறையை மாற்றி, பயோமெட்ரிக் முறையில்வருகைபதிவு செய்யும் புதிய முறை கொண்டுவரப்படஉள்ளது. இதற்காக 45.57 கோடி ஒதுக்கபடுவதாக அறிவித்துள்ளார்.

பயோமெட்ரிக்முறையில் வருகையை பதிவு செய்யும்போது, குறித்த நேரத்தில் பள்ளிக்குவரவேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதே போல் பள்ளிமுடிந்து செல்லும்போது கைரேகையை வைத்து பதிவு செய்யும்நிலை இருப்பதால், நினைத்த நேரத்திற்கு பள்ளியைவிட்டு கிளம்பவும் முடியாது. மேலும் வருகைநேரத்தை தாண்டிவருகைப்பதிவேட்டில்  பதிவுசெய்தால், அவர்களது ஊதியம் குறையும் வாய்ப்புஇருப்பதால், கால தாமதத்தை இனிதொடர முடியாத நிலைக்கு ஆசிரியர்கள்தள்ளப்பட்டுள்ளனர்.


கிராமத்துதொடக்கப் பள்ளிகளிலும், இனி ஒன்பது மணிக்கேஆசிரியர்கள், ஆஜர் ஆகிவிடுவார்கள்  என எதிர்பார்க்கலாம்.

19 ஆயிரம் கிளார்க் வேலை: பொதுத்துறை வங்கிகள் அறிவிப்பு வெளியீடு.

பொதுத்துறை வங்கிகளில் கிளார்க் ஆக பணிபுரிய விரும்பும்பட்டதாரி இளைஞர்கள், ஐ.பி.பீ.எஸ்., எனப்படும் ‘இன்ஸ்டிடியூட்ஆப் பேங்கிங்
பர்சனஸ் செலக்சன்’ நடத்தும்தேர்வை எழுதலாம்!

மொத்தப்பணியிடங்கள்:19,243 (தமிழகத்தில் மட்டும் 1,032)
வயது வரம்பு:20 வயதிலிருந்து 28 வயதுக்குள் இருத்தல் வேண்டும். வயது வரம்பு சலுகையும்உண்டு.
கல்வித்தகுதி:அங்கீகரிக்கப்பட்ட பல்கலை அல்லது கல்லூரிகளில்ஏதேனும் ஒரு பாடப் பிரிவில்இளநிலை பட்டம்பெற்றிருக்க வேண்டும்.
கம்ப்யூட்டர்அறிவு:கணினி அறிவியல் பாடத்தைசான்றிதழ் அல்லது டிப்ளமோ படிப்பாகபடித்திருக்க வேண்டும். அல்லதுபட்டப் படிப்பில் கணினி அறிவியல் பாடத்தைஒரு பாடமாக பயின்றிருக்க வேண்டும். கணினியில் பணியாற்றும் திறன் பெற்றிருப்பதும் அவசியம். மாற்றுத்திறனாளி மாணவர்களும்இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
பங்கேற்கும்வங்கிகள்:அலகாபாத் வங்கி, கனரா வங்கி, இந்தியன் வங்கி, சிண்டிகேட் வங்கி, ஆந்திரா வங்கி, சென்ட்ரல் பாங்க்ஆப் இந்தியா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி,யூகோ(யு.சி.ஒ.,) வங்கி, பேங்க் ஆப் பரோடா, கார்ப்பரேஷன்வங்கி, யூனியன் பேங்க் ஆப்இந்தியா, ஓரியண்டல் பேங்க் ஆப் இந்தியா, பேங்க் ஆப் இந்தியா, தேனாவங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, பேங்க் ஆப் மகாராஷ்டிரா மற்றும்விஜயா வங்கி.
தேர்வுமுறை:பிரிலிமினரி தேர்வு மற்றும் மெயின்தேர்வு என இருநிலைகளைக் கொண்டுள்ளது.
பிரிலிமினரிதேர்வு:முதல் நிலைத் தேர்வானதுஆன்லைனில் அப்ஜெக்டிவ் அடிப்படையில் 100 மதிப்பெண்களுக்கு, ஆங்கிலம், நியூமரிக்கல் அபிலிட்டி மற்றும் ரீசனிங் அபிலிட்டிபோன்ற திறன்கள் பரிசோதிக்கப்படும். இத்தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் மெயின் தேர்வுக்கு தகுதிபெறுவர்.
மெயின்தேர்வு:இந்த இரண்டாம் நிலைத்தேர்வு, அப்ஜெக்டிவ் அடிப்படையில் 200 மதிப்பெண்களுக்கு, ரீசனிங், குவான்டிடேடிவ் ஆப்டிடியூட், வங்கித்துறை சார்ந்த பொதுஅறிவு, கணினிஅறிவு மற்றும் ஆங்கில மொழியறிவுஉள்ளிட்ட பகுதிகளில் விண்ணப்பதாரர்களின் திறன்கள் சோதிக்கப்படும்.
முன்தேர்வுபயிற்சி:எஸ்.சி., மற்றும்எஸ்.டி., பிரிவினர்களுக்கு, வங்கிகள்சார்பில் சென்னை, புதுச்சேரி, கோவை, திருச்சி மற்றும் மதுரை உள்ளிட்டநகரங்களில் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.
விண்ணப்பிக்ககடைசி நாள்:செப்டம்பர் 19

மேலும்விவரங்களுக்கு:www.ibps.in

மாணவர்களுக்கு விளையாட்டில் ஆர்வம்...குறைகிறது! பள்ளிகளில் ஊக்கமளிக்காததால் விபரீதம்-DINAMALAR

கடலுார்: பள்ளிகளில் மாணவ மாணவியர்களுக்கு வழங்கப்படும்விளையாட்டு நேரம்  வெகுவாககுறைந்துவிட்டதால் போட்டிகளில்
ஜொலிக்க முடியாத நிலைஏற்பட்டுள்ளது.

'மாலை முழுவதும் விளையாட்டு' என்று பாரதி பாடினார். அதன்படிஇன்றைய கல்விக்கொள்கையில் பள்ளிகளில் விளையாட்டை யாரும் கடைபிடிப்பதாக தெரியவில்லை. உலகளவில் மக்கள் தொகையில் இரண்டாவதுஇடத்திலுள்ள இந்தியா ஒலிம்பிக்கில் 2 பதக்கத்துடன்திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது.
விளையாட்டுவீரர்கள், வீராங்கனைகள் அடிப்படையில் பள்ளிகளில் இருந்து தான் உருவாகவேண்டும். காலை, மாலை எனஎந்த நேரமும் படிப்பு, மார்க்என மாணவ மாணவியர்களை கசக்கிபிழியும் கல்வி நிறுவனங்கள் வியாபித்துவிட்டதால்விளையாட்டு என்பது பின்னுக்கு தள்ளப்படும்நிலைதான் தொடர்ந்து நீடிக்கிறது.
அரசு தொடக்கப் பள்ளியில் இருந்து மேல்நிலை பள்ளிகள்வரை பிள்ளைகள் விளையாடி மகிழ விளையாட்டு உபகரணங்களைவாங்க பள்ளிகளுக்கு அரசு நிதி உதவிவழங்குகிறது. இதை தலைமை ஆசிரியர்கள்முறையாக செலவிடுவதில்லை. கல்வியாண்டு துவக்கத்தில் விளையாட்டு பொருட்கள் வாங்கியதாக 'பில்' வைக்கப்படுகிறது. இறுதியாண்டில்பொருட்கள் பழசாகிவிட்டதால் ஏலம் விட்டதாக கணக்கெழுதப்படுகிறது. இதை கல்வி அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை.
இதனால்மாணவர்களுக்கு விளையாட்டு நேரத்தையே குறைத்துவிட்டனர். பெயர் அளவில் நேரம்ஒதுக்கப்பட்டாலும், அந்த பீரியடையும் 'சிலபசை' முடிப்பதற்காக ஆசிரியர்கள் எப்போது கேட்பார்கள் எனஉடற்கல்வி ஆசிரியர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
பி.இ.டி., பீரியடில்மாணவர்களுக்கு விளையாட்டை கற்றுத்தருவதில்லை. தனியார் பள்ளிகளில் விளையாட்டைபற்றி கவலை கொள்ளாமல் மதிப்பெண்ணேபிரதானமாக கொள்ளப்படுகிறது.
இதன் காரணமாக கடலுார் மாவட்டத்தில்அனைத்து வசதிகளுடன் கூடிய மிகப்பெரிய அண்ணாவிளையாட்டு மைதானம் இருந்தும் மாநிலஅளவிலான போட்டிகளில் பெரிய அளவில் வெற்றிபெற முடியாமல் போய்விடுகிறது.
அண்மையில்கடலுாரில் நடந்த தடகளப்போட்டியில் ஒருசிலவற்றில் மட்டும்தான் பரிசு பெற முடிந்தது. பெரிய அளவில் சாதிக்க முடியவில்லை. அதிகமான பரிசுகளை வென்றது காஞ்சிபுரம், சென்னைமாவட்டத்தை சேர்ந்தவர்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேநிலைதான்பிற மாவட்டங்களிலும் உள்ளது. எனவே மாணவமாணவியர்களை பள்ளிகளிலேயே ஊக்கமளித்தால்தான் திறமையானவர்களை கண்டறிய முடியும் என்பதைஆசிரியர்கள் உணர வேண்டும். அப்போதுதான்நாம் உலக அளவில் ஜொலிக்கமுடியும்

தமிழை எளிதில் கற்க 'வீடியோ' பாடம்:தொடக்க பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சி

தமிழ் பாடத்தை எளிதில் கற்றுக்கொடுக்கும் வகையில், ஒன்று முதல் 5ம்வகுப்பு வரை உள்ள, தமிழ்புத்தக பாடல்களின் வீடியோவை,
இணையதளத்தில் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டு உள்ளது.

தமிழக பள்ளிக் கல்வித்துறையின் ஒருபிரிவாக செயல்படும், மாநில கல்வியியல் ஆராய்ச்சிமற்றும் பயிற்சி நிறுவனமான, எஸ்.சி.இ.ஆர்.டி., மாணவர்களுக்கு கற்றல்சார்ந்த தொழில் நுட்பங்களை அறிமுகப்படுத்திவருகிறது.


செயல்வழிகற்றல், கணினி வழி கற்றல்போன்ற பல திட்டங்களில், மொழியைஎளிதாக கற்று கொடுக்கும் திட்டத்தையும்அறிமுகம் செய்துள்ளது.

முதற்கட்டமாக,10ம் வகுப்பு மற்றும்பிளஸ் 2 மாணவர்கள்,தங்களின் அறிவியல் பாடபடங்க ளை, நான்கு பரிமாணத்தில்பார்த்து படிக்கும், புதிய, 'சிடி' கடந்தமாதம் வெளியானது. இந்த வீடியோ படம், தமிழ்நாடு கல்வித்துறை என்ற பெயரில், 'யூ- டியூப்'பில் இணைக்கப்பட்டு, பலஆயிரம் பேர் பயன்படுத்தி வருகின்றனர். மேலும், 'கூகுள் பிளே ஸ்டோர்ஆப்' மூலம், புதிய அப்ளிகேஷன்வசதியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அடுத்தகட்டமாக, தொடக்கக் கல்வியில், தாய்மொழியை எளிதாக படிக்கும் வகையில், ஒன்று முதல் 5ம் வகுப்புவரை, புத்தகத்தில் உள்ள, 40 பாடல்கள், வீடியோவாக மாணவர்களின் நடனத் துடன் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த வீடியோ பதிவுகள், யூ-டியூப்பில், தமிழ்நாடு எஸ்.சி.இ. ஆர்.டி., சேனல் என்றபிரிவில், 'தாயெனப்படுவது தமிழே' என்ற பெயரில், பதிவு செய்யப்பட்டு உள்ளன.

ஒரு வாரத்தில், அதை, 30 ஆயிரம் பேர்பார்த்துள்ளனர். மேலும், 35 ஆயிரம் தொடக்க பள்ளி

களுக்கு, இலவசமாக இந்த, 'சிடி' அனுப்பப்படஉள்ளதாக, எஸ்.சி.இ.ஆர்.டி., இயக்குனர்ராமேஸ்வர முருகன் கூறினார்.

ஆசிரியர்களிடம், மாணவர்கள் அதிகப்பற்றுடன் நடந்து கொள்ள வேண்டும்: சகாயம் அறிவுரை

கம்மாபுரம்: 'நல்லாசிரியர்கள் வழிகாட்டுதலின் பேரில் படிக்கும் மாணவர்கள்அனைவரும் தனியார் பள்ளிக்கு இணையாகதேர்ச்சி பெற முடியும்' எனஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் பேசினார். கம்மாபுரம்அடுத்த இருப்பு அரசு மேல்நிலைப்பள்ளியில், மக்கள் பாதை இயக்கம்சார்பில்
மாணவர்கள் விழிப்புணர்வு மற்றும் நலத்திட்டம் வழங்கும்விழா நடந்தது. மாவட்ட முதன்மை கல்விஅலுவலர் பாலமுரளி, துணை சேர்மன் கனகசிகாமணி, ஊராட்சித் தலைவர் கதிரொளி, மக்கள்பாதை இயக்க நிர்வாகி கேசவபெருமாள்முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் ராஜேந்திரன்வரவேற்றார். நிர்வாகிகள் சண்முகம், புஷ்பராஜ், கதிர்வேல் உட்பட பலர் பங்கேற்றனர்.

உலகின் டாப் 10 பணக்கார நாடுகள்: இந்தியா 7வது இடம் - கனடா, ஆஸ்திரேலியாவை முந்தியது

டெல்லி: உலகில் 10 பணக்கார நாடுகள் பட்டியலில்இந்தியாவுக்கு 7வது இடம் கிடைத்துள்ளது. இந்தியாவின் சொத்து மதிப்பு 5,600 பில்லியன்
அமெரிக்க டாலர் என கணக்கிடப்பட்டுள்ளது.

தென் ஆப்ரிக்காவை சேர்ந்த 'நியூ வேர்ல்ட் வெல்த்' என்ற அமைப்பு நடத்திய ஆய்வில்இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில்அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.



நியூ வேர்ட்ல் வெல்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்உலக அளவில் டாப் 10 பணக்காரநாடுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. மொத்த தனிநபர் சொத்துக்கள்விவரங்களின் படி இந்த மதிப்பீடுசெய்யப்பட்டுள்ளதாக நியூ வேர்ல்ட் வெல்த்அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
அமெரிக்கா48,900 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் முதலிடத்திலும், சீனா, 17,400 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் இரண்டாம்இடத்திலும், ஜப்பான் 15,155 பில்லியன் டாலர்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளது.
இங்கிலாந்து9,200 பில்லியன் டாலர்களுடன் 4வது இடத்திலும், ஜெர்மனி9,100 பில்லியன் டாலர்களுடன் 5வது இடத்திலும் உள்ளது.
பிரான்ஸ்6,600 பில்லியன் அமெரிக்க டாலர்களுடன் 6வது இடத்திலும், இந்தியா5,600 பில்லியன் டாலர்களுடன் 7வது இடத்தை பிடித்துள்ளது.
கனடா 8வது இடத்தில் உள்ளது. அந்நாட்டின் சொத்து மதிப்பு 4,700 பில்லியன்அமெரிக்க டாலர் என கணக்கிடப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா 4500 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்துக்களுடன் 9வதுஇடத்திலும், இத்தாலி 4,400 அமெரிக்க டாலர் சொத்துக்களுடன் 10வதுஇடத்திலும் உள்ளது.

நபர்களின்நிகர சொத்து மதிப்பு என்றஅளவுகோலில் இது கணக்கிடப்பட்டுள்ளது. இதில் அவரதுஅசையும் சொத்துக்கள், ரொக்கம், பங்குகள், மற்றும் பிற வர்த்தகவருவாய்கள் அடங்கும். இதிலிருந்து கடன்கள் கழிக்கப்படுகின்றன. அரசுநிதிகளை கணக்கில் சேர்க்கவில்லை.

இந்தியாடாப் 10ல் 7வது இடத்தில்இருக்கக் காரணம் அதன் மக்கள்தொகையே என்கிறது நியூ வேர்ல்ட் வெல்த்அறிக்கை. 22 மில்லியன் மக்கள் தொகையே கொண்டஆஸ்திரேலியா டாப் 10ல் இடம்பெற்றிருப்பதுகவனிக்கத்தக்கது.

கடந்த5 ஆண்டுகளாக, டாலர் சொத்து வளர்ச்சியில்சீனாவே அதிவேக வளர்ச்சி பொருளாதாரமாகவிளங்குகிறது என்கிறது இந்த அறிக்கை.
ஆஸ்திரேலியாவும்இந்தியாவும் நல்ல வளர்ச்சி பெற்றுள்ளது. ஆஸ்திரேலியா, இந்தியா, கனடா ஆகிய நாடுகள்இத்தாலியை கடந்த 12 மாதங்களில் முந்தியுள்ளது என அந்த ஆய்வில்கூறப்பட்டுள்ளது.

கடந்த12 ஆண்டுகளில், இந்தியா, ஆஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகள்இத்தாலியை பின்னுக்குத் தள்ளியுள்ளன.

LAST DATE- 30.09.2016

தேசிய 'ஸ்காலர்ஷிப்' பதிவு விறுவிறு

மத்திய அரசு நிறுவனங்களில், கல்வி உதவித் தொகை பெற, பதிவு செய்தோர் எண்ணிக்கை, 67 லட்சமாக உயர்ந்துள்ளது.கல்வி உதவித் தொகையில் முறைகேடுகளை தடுக்கவும், மாணவர்களுக்கு நேரடியாக உதவித் தொகை சென்று சேரவும், மத்திய அரசின் சார்பில், 'ஆன்லைன்'
பதிவு திட்டம் துவங்கப்பட்டுள்ளது.இதன்படி, தேசிய கல்வி உதவித் தொகை இணையதளத்தில் (http://scholarships.gov.in), இதுவரை, 65 லட்சம் பேர் பதிவு செய்திருந்தனர். கடந்த, இரு தினங்களில், இரண்டு லட்சம் பேர் கூடுதலாக பதிவு செய்து, 67 லட்சமாக, உதவித் தொகை கேட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது

ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற பட்டதாரி ஆசிரியர் பணி நிரவலை இரத்து செய்ய வேண்டும். Tngtf மாநிலத் தலைவர் ஆனந்த கணேஷ் கோரிக்கை. இன்றைய தின இதழ்

3 விஷயங்கள் யாருக்காகவும் காத்திருப்பது இல்லை

Bank account balance தெரிந்து கொள்ள ATM card தேவையில்லை

BSNL USSD Codes for Balance and Validit1

குழந்தைகளை தவறான வார்த்தைகளால் திட்டாதீங்க

பேஸ்புக் ரகசியங்கள் !

கொத்தமலலியின் மருத்துவ குணங்கள்

வழுக்கைவிழுவதுஏன்?

இந்த உணவுகளில் எல்லாம் கொலஸ்ட்ரால் இல்லை என்பது உங்களுக்குத் தெரியுமா?

INTERNET

MOBILE INTERNET SERVICE SPECIAL ARTICLE

Some tips about Memory Card

SPECIAL ARTICLE ABOUT WOMEN

SPECIAL NEWS FOR EYES

USES OF GREEN TEA

ஆசிரியர் பொன்மொழிகள்

ஆரோக்கிய வாழ்விற்கு சில டிப்ஸ்

ஆள்காட்டி விரலில் வைக்கப்படும் அழியாத மையின் சுவையான வரலாறு

இன்று ஒரு தகவல்

தினம் 14

23/8/16

தொடக்கமற்றும் நடுநிலைப் பள்ளிகளில் படிக்கும்மாணவர்களில் இதுவரை ஆதார் அட்டைவழங்காதமாணவர்களுக்கு செப்டம்பர் 25ம் தேதிக்குள் வழங்கதொடக்ககல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. தொடக்க மற்றும்நடுநிலைப் பள்ளிகளில்படிக்கும் மாணவர்களுக்கு

ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுவருகிறது. அவர்களில்விடுபட்டவர்களுக்கு விரைவில் ஆதார் அட்டை வழங்கதொடக்ககல்வித்துறை முடிவு செய்துள்ளது.

இதற்கானபதிவுகளை மாவட்ட தொடக்க கல்விஅலுவலர்கள்பொறுப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இன்றுகாணொலி காட்சிமூலம் ஆலோசனை வழங்கப்பட உள்ளது.இதில் மாவட்ட தொடக்க கல்விஅலுவலர்கள் கலந்து கொள்ளவேண்டும். அப்போது விடுபட்ட மாணவர்களின் பட்டியல்களைதொகுத்து வழங்க வேண்டும், ஆதார்பதிவு ெசய்யும்மையங்கள் அமைக்க வேண்டும் என்றுதொடக்க கல்வித்துறைஇயக்குநர் தெரிவித்துள்ளார்.


மேலும், விடுபட்ட அனைத்து மாணவர்களுக்கும் செப்டம்பர்25ம்தேதிக்குள் ஆதார் எண் பதிவுகள்மேற்கொள்ள வேண்டும்.ஒவ்வொரு நாளும் தொடக்ககல்வித்துறையில் ஆதார்விவரங்களை ஒன்றியம்வாரியாக தொடக்க கல்வித்துறைஇயக்ககத்துக்குமின்னஞ்சல் மூலம் தெரிவிக்கவேண்டும்என்றும் தொடக்க கல்வித்துறைஇயக்குநர்தெரிவித்துள்ளார்.

தமிழ் நாடு அரசின் அகில இந்திய குடிமைப்பணி தேர்வுப் பயிற்சி மையம் மூலம் 2017 ஆண்டு முதல் நிலைத் தேர்வுக்கான பயிற்சி - விண்ணப்பிக்க கடைசி தேதி 22.9.2016. தேர்வு நாள் 13.11.2016



அரசு பள்ளி மாணவர்களுக்கு செப்.25க்குள் ஆதார் அட்டை: கல்வித்துறை உத்தரவு

தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் இதுவரை ஆதார் அட்டை வழங்காத மாணவர்களுக்கு செப்டம்பர் 25ம் தேதிக்குள் வழங்க தொடக்க கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது. அவர்களில் விடுபட்டவர்களுக்கு விரைவில் ஆதார் அட்டை வழங்க தொடக்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது.


இதற்கான பதிவுகளை மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள் பொறுப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இன்று காணொலி காட்சி மூலம் ஆலோசனை வழங்கப்பட உள்ளது. இதில் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள் கலந்து கொள்ள வேண்டும். அப்போது விடுபட்ட மாணவர்களின் பட்டியல்களை தொகுத்து வழங்க வேண்டும், ஆதார் பதிவு ெசய்யும் மையங்கள் அமைக்க வேண்டும் என்று தொடக்க கல்வித்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

மேலும், விடுபட்ட அனைத்து மாணவர்களுக்கும் செப்டம்பர் 25ம் தேதிக்குள் ஆதார் எண் பதிவுகள் மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாளும் தொடக்க கல்வித்துறையில் ஆதார் விவரங்களை ஒன்றியம் வாரியாக தொடக்க கல்வித்துறை இயக்ககத்துக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்க வேண்டும் என்றும் தொடக்க கல்வித்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

Advertisement for Admission in B.Ed(IGNOU) for January 2017



தமிழக சட்டப்பேரவையில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா விதி எண் 110-ன் கீழ் பள்ளிகல்விதுறை அறிவிப்புகளை வெளியிட்டார்.


அதில் முக்கியமானதாக, பல காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் அட்டெண்டன்ஸ் எனும் வருகை பதிவேடு முறை ஒழிக்கப்படுகிறது. இதற்கு பதிலாக எம்.என்.சி.நிறுவனங்களில் உள்ளது போல கைரேகை பதிக்கும் முறை கொண்டு வரப்பட்டுள்ளது.

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகை பதிவேடு கையாள்வதில் தற்போது உள்ள கையெழுத்திடும் நடைமுறையை மாற்றி புதிய தொழில்நுட்ப உத்தியின் அடிப்படையில் பயோ-மெட்ரிக் கருவிகளை கொண்டு வருகை பதிவு முறை முதன்முறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக 45 கோடியே 57 லட்சம் ரூபாய் செலவாகும் என்றும் முதலமைச்சர் அறிவித்தார்.

சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களை பாராட்டும் வகையில் நல்லாசிரியர் விருதும், 5000 ரூபாய் ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. நல்லாசிரியர்களை மேலும் ஊக்கப்படுத்தும் வகையில் ரொக்கப்பரிசாக 10,000 ரூபாயாக உயர்த்தப்படும்.

5 புதிய தொடக்கப்பள்ளிகள் தொடங்கப்படும். 3 தொடக்கப்பள்ளிகள் நடுநிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். 19 நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைபள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டு அதற்கான ஆசிரியர்கள் பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும். இதற்கு 28.55 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் 28 கோடியே 55 லட்சம் செலவில் செய்யப்படும்                        

பள்ளிகளில் இணையதளம் மூலம் கல்வியை நடைமுறைப்படுத்த பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனை மேலும் ஊக்குவிக்கும் விதமாக அரசு பள்ளிகளில் பயிலும் 6,7 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு 555 நடுநிலைப்பள்ளிகளில் 3 கணினிகள் கொண்ட கணினிவழி கற்றல் மையங்கள் உருவாக்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார்

ஊராட்சி தலைவர் தேர்தல் நடத்துவது எப்படி?

தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகள், ஊரகம், நகர்ப்புறம் என, இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஊரக பகுதிகளில், மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய, நான்கு பதவிகளுக்கு நேரடி தேர்தல் நடக்கிறது; இதில், மாவட்ட கவுன்சிலர் மற்றும்
ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு மட்டும் கட்சி ரீதியாக தேர்தல் நடக்கிறது. தமிழகத்தில் மொத்தம், 12 ஆயிரத்து, 524 ஊராட்சி தலைவர் பதவிகள்; 99 ஆயிரத்து, 324 வார்டு உறுப்பினர் பதவிகள் உள்ளன. இதில், ஊராட்சி தலைவர் பதவிக்கு, இந்த முறை கட்சி ரீதியாக தேர்தல் நடத்துவதற்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது. கட்சி ரீதியாக தேர்தல் நடந்தால், அரசியல் குறுக்கீடுகள் அதிகரிக்கும் என்பதால் பொதுமக்கள் பயந்தனர். இந்நிலையில், ஊராட்சி தலைவர் பதவிக்கு வழக்கம் போல் கட்சி சார்பற்ற தேர்தல் நடத்தப்படும் என, மாநில தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது

பிளஸ் 2 துணை தேர்வு மறுகூட்டல் 'ரிசல்ட்'

சென்னை: பிளஸ் 2 துணைத் தேர்வுக்கான, மறுகூட்டல் முடிவுகள், இன்று வெளியாகின்றன.
பிளஸ் 2 மாணவர்களுக்கான, சிறப்பு துணைத் தேர்வு, ஜூன், ஜூலையில் நடந்தது; இதில், 54 ஆயிரத்து, 893 பேர் பங்கேற்றனர். இவர்களில் பலர், தேர்வு முடிவுக்கு பின், விடைத்தாள் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடுக்கு விண்ணப்பித்தனர்.'இதற்கான முடிவுகள், இன்று பிற்பகல்,

2:00 மணிக்கு மேல், www.tndge.in என்ற இணையதளத்தில் வெளியாகும்' என, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

புதிய கல்விக்கொள்கை – இந்தத் திட்டத்தில் உள்ளபடியே- செயல்பாட்டுக்கு வந்தால் மேல்தட்டு வர்க்கத்தவர்க்கு மட்டுமே இனி உயர்கல்வி கிடைக்கும்; உயர்கல்வி இனி, ஏழைக்கு எட்டாக்கனியாகவே போய்விடும்!

கல்வி எதற்காக?

கல்வி அறிவுக்கானது என்பதை மாற்றி, மதி்ப்பெண்ணுக்கானது என்றும், கல்வி முன்னேற்றத்துக்கானது என்பதை மாற்றி, வேலைவாய்ப்புக்கானது என்றும், கல்வி சமூகமாற்றத்துக்கானது என்பதை மாற்றி, வணிகத்துக்கே என்றும் ஆக்கப்பட்டுள்ள கொடுமையான இன்றைய சூழலில் இந்தப் புதிய தேசியக் கல்விக்கொள்கை ‘குதிரை கீழே தள்ளியதும் அல்லாமல், குழியும் பறித்த கதையாக’வே தோன்றுகிறது.கல்வியை சேவையாகக் கருதிய காலம் மலையேறிவிட்டது. இப்போது, ‘கல்வி வள்ளல்’ என்றால் நிச்சயமாக கல்வி வணிகர் என்பதே பொருள்!அண்ணாமலையார், பச்சையப்பர், அழகப்பர் இன்ன பிற சான்றோரும், கிறித்துவ மிஷினரியினரும் கல்வியை மக்கள் சேவையாகவும் மக்களோடு தொடர்புகொள்ளும் அறவழியாகவும் பார்த்த காலம் இப்போது இல்லையே!கவிஞர் தங்கம் மூர்த்தி சொல்வது போல,

பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வு: ஒருவருக்கு மட்டும் இடமாறுதல், 61 பேர் ஏமாற்றம்

திருவண்ணாமலையில் சனிக்கிழமை நடைபெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுவதற்கான கலந்தாய்வில் ஒருவர் மட்டும் மாறுதல் பெற்றார். மற்ற 61 பேர் ஏமாற்றம் அடைந்தனர்.
தமிழகம் முழுவதும் தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் மற்றும் பணிநிரவல் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு (மாவட்டம் விட்டு மாவட்டம்) இணையதளம் வாயிலாக சனிக்கிழமை நடைபெற்றது.மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ராஜேந்திரன் தலைமையில், திருவண்ணாமலை டேனிஸ் மிஷன் மேல்நிலைப் பள்ளியில் இந்த கலந்தாய்வு நடைபெற்றது. இதில், 62 ஆசிரிய - ஆசிரியைகள் கலந்துகொண்டு வெளி மாவட்டங்களுக்குச் செல்ல காத்திருந்தனர்.ஆனால், தாங்கள் விரும்பிய மாவட்டத்தில் விரும்பிய ஒன்றியத்தில் தமிழ், ஆங்கிலம், சமூக அறிவியல் பாட ஆசிரியர்களுக்கான காலிப் பணியிடம் இல்லாததால் 61 ஆசிரிய - ஆசிரியைகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

ஒருவருக்கு மட்டும் மாறுதல்: 62 பேரில் ஒரே ஒரு ஆங்கில ஆசிரியர் மட்டும் வேலூர் மாவட்டத்துக்கு இடமாறுதல் பெற்றார். இதேபோல, வேலூர் மாவட்டத்தில் இருந்து 2 பட்டதாரி ஆசிரியர்கள் திருவண்ணாமலை மாவட்டத்துக்கு இடமாறுதல் பெற்றுள்ளனர்.

இன்று கலந்தாய்வு நிறைவு: இடைநிலை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு (மாவட்டம் விட்டு மாவட்டம்)ஞாயிற்றுக்கிழமை (ஆக.21) நடைபெறுகிறது. இத்துடன் தொடக்கக் கல்வித் துறை ஆசிரியர்களுக்கு 2016-17ஆம்ஆண்டுக்கான இடமாறுதல் கலந்தாய்வு நிறைவு பெறுகிறது.

தேசிய 'ஸ்காலர்ஷிப்' பதிவு விறுவிறு

மத்திய அரசு நிறுவனங்களில், கல்வி உதவித் தொகை பெற, பதிவு செய்தோர் எண்ணிக்கை, 67 லட்சமாக உயர்ந்துள்ளது.கல்வி உதவித் தொகையில் முறைகேடுகளை தடுக்கவும், மாணவர்களுக்கு நேரடியாக உதவித் தொகை சென்று சேரவும், மத்திய அரசின் சார்பில், 'ஆன்லைன்'பதிவு திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இதன்படி, தேசிய கல்வி உதவித் தொகை இணையதளத்தில் (http://scholarships.gov.in), இதுவரை, 65 லட்சம் பேர் பதிவு செய்திருந்தனர். கடந்த, இரு தினங்களில், இரண்டு லட்சம் பேர் கூடுதலாக பதிவு செய்து, 67 லட்சமாக, உதவித் தொகை கேட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது

உள்ளாட்சி தேர்தல் நடத்த தேர்தல் அதிகாரிகள்நியமனம்

சென்னை:ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல் நடத்தும் அதிகாரிகளை நியமிக்க, மாவட்ட கலெக்டர்களுக்கு, தேர்தல் கமிஷன் அதிகாரம் வழங்கியுள்ளது.இதுகுறித்து, மாநில தேர்தல் கமிஷன் வெளியிட்டு உள்ள அறிக்கை:
உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்காக, ஊரக வளர்ச்சி துறை இயக்குனர், நகராட்சி நிர்வாக இயக்குனர், பேரூராட்சி இயக்குனர் ஆகியோர், மாநில தேர்தல் அலுவலர்களாக நியமிக்கப்பட்டனர்.


அதன்பின், அந்தந்த மாவட்ட கலெக்டர்கள், மாவட்ட தேர்தல் அலுவலர்களாக நியமிக்கப்பட்டனர்; சென்னைக்கு மட்டும் மாநகராட்சி கமிஷனர், தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். வாக்காளர் பதிவு அலுவலர்களாக, வட்டார வளர்ச்சி அலுவலர், மாநகராட்சி மற்றும் நகராட்சி கமிஷனர்கள், பேரூராட்சி செயலர்கள் நியமிக்கப்பட்டனர்.தற்போது, மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களை நியமிக்க, மாவட்ட கலெக்டர்களுக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது.அதன்படி, மாவட்ட கவுன்சிலர் தேர்தல் நடத்தும் அதிகாரியாக, மாவட்ட ஊரக வளர்ச்சி துறை இணை இயக்குனர் அல்லது மாவட்ட வருவாய் அலுவலரை நியமிக்க வேண்டும்; உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியாக, ஊரக வளர்ச்சி துறைஉதவி இயக்குனர், வருவாய் கோட்ட அலுவலரை நியமிக்க வேண்டும்.

ஒன்றிய கவுன்சிலர் தேர்தல் நடத்துவதற்கு, ஊரக வளர்ச்சி துறை உதவி இயக்குனர் அல்லது வருவாய் கோட்ட அலுவலரை நியமிக்க வேண்டும்; உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியாக,வட்டார வளர்ச்சி அலுவலர் அல்லது வட்டாட்சியரை நியமிக்க வேண்டும்.ஊராட்சி தலைவர் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தல் நடத்துவதற்கு, வட்டார வளர்ச்சி அலுவலரையும், உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியாக துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அல்லதுதுணை வட்டாட்சியரை நியமிக்க வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

2,100 ஆசிரியர்களுக்கு விருப்ப இடமாறுதல்

முதுகலை ஆசிரியர்களுக்கான கவுன்சிலிங்கில், இரண்டு நாட்களில், 2,100 பேருக்கு விருப்ப இடமாற்றம்வழங்கப்பட்டுள்ளது.அரசு தொடக்கப் பள்ளி மற்றும் பள்ளிக் கல்வி ஆசிரியர்களுக்கு, இம்மாதம், 3ம் தேதி முதல், விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங் நடந்து வருகிறது. 
இந்த ஆண்டு, ஆசிரியர் காலியிடங்களை மறைக்காமல்,வெளிப்படையாக, கவுன்சிலிங் நடத்துவதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். நேற்று முன்தினம், 1,277 முதுகலை ஆசிரியர்களுக்கு, ஒரே மாவட்டத்திற்குள் இடமாறுதல் வழங்கப்பட்டது; நேற்று, 826 ஆசிரியர்களுக்கு, மாவட்டம் விட்டு மாவட்டத்திற்கு, இடமாறுதல் அளிக்கப்பட்டதாக, பள்ளிக் கல்வி இயக்குனர்கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

தரம் குறைந்த பள்ளிகளை சீரமைக்க வேண்டும்: கல்வி இயக்க மாநாட்டில் தீர்மானம்.

தமிழ்நாட்டில் தரம் குறைந்த பள்ளிகளை சீரமைக்க வேண்டும் என தமிழ்நாட்டு கல்வி இயக்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.தமிழ்நாட்டுக் கல்வி இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு மாநாடு வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டையை அடுத்த அம்மூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு தமிழ்நாட்டு கல்வி இயக்க ஒருங்கிணைப்பாளர் பொழிலன் தலைமை வகித்தார். மாநாட்டில் திரைப்பட நடிகரும், இயக்குநருமான சமுத்திரகனி, சட்டப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் வணங்காமுடி ஆகியோர் தாய் மொழிக் கல்வியின் அவசியம் குறித்து விளக்கினர்.அதனைத் தொடர்ந்து, அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளின் திறன்மேம்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்ட பேச்சு, கட்டுரைப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அரிபரந்தாமன் கலந்துகொண்டு பரிசு, சான்றிதழ்களை வழங்கினார்.மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: மழலையர் கல்வி முதல் உயர்கல்வி வரை அனைத்துத் துறைகளிலும் தமிழே கல்வி மொழியாக்கப்பட வேண்டும். அரசு, தனியார் துறைகளில் அனைத்து வேலைவாய்ப்புகளிலும், மருத்துவம்,பொறியியல் உள்ளிட்ட உயர்கல்வியிலும் தமிழ்வழியில் படித்தோருக்கே முன்னுரிமை அளித்து 100 விழுக்காடு ஒதுக்கீடு செய்யவேண்டும்.

தமிழ்நாட்டில் தரமற்று இருக்கும் அரசுப் பள்ளிகளை தரப்படுத்தி அனைவருக்கும் இலவசக் கல்வியை அளிக்க வேண்டும். அரசுப் பள்ளி ஆசிரியர்களின் பிள்ளைகள், அரசு ஊழியர்களின் பிள்ளைகள் அனைவரும் அரசுப் பள்ளிகளிலேயே பயில வேண்டும். இந்திய அரசின் வேலைவாய்ப்புகள், உயர்கல்வி உள்ளிட்ட அனைத்து நுழைவுத் தேர்வுகளையும் தமிழிலேயே எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

பிளஸ்-2 பாடத்திட்டத்தை மாற்றாவிட்டால் ‘நீட்’ தேர்வில் வெற்றிபெறுவது சிரமம் கல்வியாளர்கள் ஆதங்கம்.

பிளஸ்-2 பாடத்திட்டத்தை மாற்றாவிட்டால் ‘நீட்’ தேர்வில் மாணவர்கள் வெற்றி பெறுவது சிரமம். இதற்காக சிறப்பு வகுப்புகள் நடத்துவதால் எந்தவித மாற்றமும் வராது என்று கல்வியாளர்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.

மருத்துவ நுழைவுத்தேர்வு

சமீபத்தில் ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வு, ‘நீட்’ எனப்படும் அகில இந்திய மருத்துவ பொது நுழைவுத்தேர்வு ஆகியவை நடத்தப்பட்டன. இந்ததேர்வுகளில் தமிழகத்தை சேர்ந்த மாணவர்களில் சி.பி.எஸ்.இ. படித்தவர்கள் ஓரளவு பங்கேற்றனர். மாநில கல்வி திட்டத்தில் படித்தவர்களில் வெகுசிலர் மட்டுமே கலந்துகொண்டனர்.ஆனால் ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் அந்த மாநில அரசு பின்பற்றும் பிளஸ்-1, பிளஸ்-2 பாடத்திட்டங்களில் படித்த மாணவ-மாணவிகள் அதிக எண்ணிக்கையில் நுழைவுத்தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.

தமிழக மாநில கல்வி திட்டத்தில் படித்த மாணவர்களும் ‘நீட்’ தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவதற்கு என்ன செய்யவேண்டும்? என்று கேட்டதற்கு தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்க மாநில தலைவர் சாமி சத்தியமூர்த்தி கூறியதாவது:-

பாடத்திட்டத்தை மாற்றவேண்டும்

தமிழகத்தில் இப்போது நடைமுறையில் உள்ள பிளஸ்-1, பிளஸ்-2 பாடத்திட்டம் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு தயாரித்தது. இன்றைய சூழ்நிலை, தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப உடனடியாக புதிய பாடத்திட்டத்தை தயாரிக்க வேண்டும். தமிழ்நாட்டில் பிளஸ்-1 பாடங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதே இல்லை. ஆனால் ‘நீட்’ தேர்வில் பிளஸ்-1 வகுப்பில் இருந்துதான் அதிக கேள்விகள் கேட்கப்படுகின்றன.தமிழ்நாட்டில் பெயர் அளவில் தான் பிளஸ்-1 வகுப்புகள்நடத்தப்பட்டு, தேர்வுகளும் நடத்தப்படுகின்றன. எனவே பிளஸ்-1, பிளஸ்-2 பாடத்திட்டத்தை உடனே மாற்றவேண்டும். பாடத்திட்டத்தை மாற்றாதவரை ‘நீட்’ தேர்விலும், ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்விலும் தமிழகத்தை சேர்ந்த மாநில கல்விமுறையில் படித்த மாணவ-மாணவிகள் வெற்றிபெறுவது சிரமம்.

சிறப்பு வகுப்புகள்

பள்ளிக்கல்வி இயக்குனரகம் ‘நீட்’ தேர்வுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தினாலும் வெற்றிபெறுவது சிரமம். சிறப்பு வகுப்புகளால் எந்த மாற்றமும் வராது.இவ்வாறு சாமி சத்தியமூர்த்தி தெரிவித்தார். இதே கருத்தை தமிழக கல்வியாளர்கள் பலரும் தெரிவித்துள்ளனர்.

TNPSC:குரூப்-2 மெயின் தேர்வு: 10 ஆயிரம் பேர் எழுதினர்- 2 ஆயிரம் பேர் தேர்வெழுத வரவில்லை.

துணை வணிகவரி அதிகாரி, சார்-பதிவாளர், தொழிலாளர் உதவி ஆய்வாளர், வருவாய் உதவியாளர் உள்ளிட்ட பணிகளில் 1094 காலியிடங்களை நிரப்புவதற்காக கடந்த ஆண்டு ஜூலை மாதம் டிஎன்பிஎஸ்சி குரூப்-2 முதல்நிலைத்தேர்வு நடந்தது.இத்தேர்வை 4 லட்சத்து 78 ஆயிரம் பேர் எழுதினர். 
இதைத்தொடர்ந்து, அடுத்த கட்ட தேர்வான மெயின் தேர்வுக்கு12 ஆயிரத்து 337 பேர் தேர்வுசெய்யப்பட்டனர். விரி வாக விடையளிக்கும் வகையி லான மெயின் தேர்வு சென்னை, கோவை, சிதம்பரம், மதுரை, சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி ஆகிய 8 மையங்களில் நேற்று நடைபெற்றது.சென்னையில் மாநில பெண்கள் மேல்நிலைப்பள்ளி, எம்எம்டிஏ காலனி அரசு மேல்நிலைப்பள்ளி, கோபாலபுரம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, எம்ஜிஆர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளி உள்பட 10 இடங்களில் தேர்வு நடந்தது. மெயின் தேர்வை தமிழகம் முழுவதும் ஏறத்தாழ 10 ஆயிரம் பேர் எழுதினர். 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தேர்வெழுத வரவில்லை. குரூப்-2 மெயின் தேர்வில் 80 சதவீதம் பேர் கலந்துகொண்டதாகவும் 20 சதவீதம் பேர் ஆப்சென்ட் ஆனதாகவும் டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாடு முழுவதும் 10 லட்சம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: மத்திய அமைச்சர்.

நாடு முழுவதும் பள்ளி, கல்லூரி, உயர் கல்வி நிலையங்களில் சுமார் 8 முதல் 10 லட்சம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் மகேந்திர நாத் பாண்டேதெரிவித்தார்.
உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில் அகில பாரதிய பிராமண மகாசபை நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:நமது நாட்டில் கல்விக் கொள்கை முறையாக அமல்படுத்தப்படவில்லை. அடுத்தடுத்து அமைந்த அரசுகளும் அதனை முறையாக மறுஆய்வு செய்யவில்லை. முக்கியமாக 1976-ஆம் ஆண்டுக்குப்பிறகு கல்விக்கொள்கை மறுஆய்வு செய்யப்படவே இல்லை. இப்போதையஅரசு கல்வித் துறையில் உள்ள சவால்களை எதிர்கொள்ளும் வகையில் புதிய கல்விக் கொள்கையை வடிவமைத்து வருகிறது.உயர் கல்வியைப் பொறுத்தவரையில் பல்கலைக்கழகங்களில் இணைக்கப்படும் கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் கல்வித் தரத்தைப் பேண முடிவதில்லை என்ற பிரச்னை உள்ளது.

இதனைத் தீர்க்கும் வகையில் ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும்தான் கல்லூரிகளை இணைக்க வேண்டும் என்ற யோசனையை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. உயர் கல்வியில் தரத்தைப் பேணுவதற்கு மத்திய அரசு கூடுதல் முன்னுரிமை அளித்து வருகிறது. செயற்கைக்கோள்கள் மூலம் சர்வதேச கல்வி நிலையங்களுடன் நமது மாணவர்களை இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.நமது நாட்டில் ஆசிரியர்கள் எண்ணிக்கை போதுமான அளவில்இல்லை என்பது உண்மைதான்.

பல ஆண்டுகளாக நியமனத்தில் ஏற்பட்ட தாமதத்தால், நாடு முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரி உள்ளிட்ட அனைத்து கல்வி நிலையங்களிலும் சுமார் 8 முதல் 10 லட்சம் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இந்தப் பணியிடங்களை விரைவாக நிரப்ப மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார் மகேந்திர நாத் பாண்டே..

தமிழ் நாடு அரசின் அகில இந்திய குடிமைப்பணி தேர்வுப் பயிற்சி மையம் மூலம் 2017 ஆண்டு முதல் நிலைத் தேர்வுக்கான பயிற்சி - விண்ணப்பிக்க கடைசி தேதி 22.9.2016. தேர்வு நாள் 13.11.2016