யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

8/11/16

பிழைப்பு ஊதியமும் 'கட்:' தலைவருக்கு சிக்கல்

கல்வித் துறையால், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட, கலை ஆசிரியர் சங்க தலைவருக்கு, இரு மாதங்களாக, பிழைப்பு ஊதியம் வழங்காததால், போராட்டம் நடத்துவது குறித்து, சங்க நிர்வாகிகள் ஆலோசித்து வருகின்றனர். தமிழ்நாடு கலை ஆசிரியர்கள் நலச்சங்க மாநில தலைவர், எஸ்.ஏ.ராஜ்குமார். இவர், கல்வித் துறையின் பல பிரச்னைகள் குறித்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது, உயரதிகாரிகளிடம் மனு அளிப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.
அதனால், இரு மாதங்களுக்கு முன், நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியால், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
பத்திரிகைகளுக்கு தவறான தகவல் தருவதாகவும், இவர் மீது, கல்வித் துறை அதிகாரிகள் குற்றஞ்சாட்டினர்.இந்நிலையில், ஆசிரியர் ராஜ்குமார், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட பின், விதிகளின்படி ஊதியத்தில், 50 சதவீதத்தை பிழைப்பு ஊதியமாக வழங்க வேண்டும்; அதுவும், வழங்கப்படாமல் நிறுத்தப்பட்டு உள்ளது. 'பிழைப்பு ஊதியமாவது வழங்க வேண்டும்' எனக்கோரி, ராஜ்குமார் சார்பில், நீலகிரி மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டு உள்ளது.
அத்துடன், சென்னை வந்த அவர், முதல்வரின் தனிப்பிரிவிலும், பள்ளிக்கல்வி செயலரிடமும் மனு அளித்துள்ளார். இதேநிலை தொடர்ந்தால், சங்க உறுப்பினர்களை திரட்டி போராட்டம் நடத்த, சங்க நிர்வாகிகள் ஆலோசித்து வருகின்றனர். 

ஓய்வூதிய திட்ட வல்லுனர் குழு அறிக்கை தாக்கல் எப்போது?

பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக நியமிக்கப்பட்ட, வல்லுனர் குழுவின் பதவிக்காலம், ஒரு வாரத்திற்கு முன் முடிந்து விட்டது. அதனால், குழுவினர் விரைவில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தில், புதிதாக பணியில் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு, பழைய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு, மத்திய அரசு ஆலோசனைப்படி, பங்களிப்புடன் கூடிய புதிய ஓய்வூதிய திட்டம், 2003ல் அமலுக்கு வந்தது. இதற்கு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

வல்லுனர் குழு : 'பழைய ஓய்வூதிய திட்டமே தொடர வேண்டும்' என, வலியுறுத்தி, பல போராட்டங்களையும் நடத்தினர். அரசு ஊழியர்களின் கோரிக்கையை சமாளிக்க, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய, சட்டசபை தேர்தலுக்கு முன், வல்லுனர் குழுவை தமிழக அரசு நியமித்தது. தேர்தலில் வெற்றி பெற்று, மீண்டும் அ.தி.மு.க., அரசு அமைந்ததும், வல்லுனர் குழுவின் செயல்பாடுகள் துவங்கின. செப்டம்பரில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்க பிரதிநிதிகளிடம், வல்லுனர் குழு கருத்து கேட்டது. அக்டோபர், 28ம் தேதியுடன், வல்லுனர் குழுவின் பதவிக்கலாம் முடிவடைந்து விட்டது. அதனால், குழுவினர் தங்களின் அறிக்கையை விரைவில் சமர்ப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. 
ஆசிரியர்கள் உறுதி : இது குறித்து, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொது செயலர், பேட்ரிக் ரைமண்ட் கூறியதாவது: ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சங்க பிரதிநிதிகளிடம் கருத்து கேட்டு, இரண்டு மாதங்களாகிறது; இன்னும் குழுவின் முடிவு தெரியவில்லை. பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் தொடரக்கூடாது என்பதில், ஆசிரியர்கள் உறுதியாக உள்ளனர். பழைய ஓய்வூதிய திட்டத்தை விரைவில் அமல்படுத்த வேண்டும். அதற்கு முன், உயிரிழந்த மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்கள், ஆசிரியர்கள் குடும்பத்திற்கு, இடைக்கால ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். 

ஒன்றுக்கு மேற்பட்ட மனைவி இருந்தால் டி.என்.பி.எஸ்.சி., தேர்வு எழுத தடை

ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியர் இருந்தால், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி.,யின் தேர்வுகள் எழுத அனுமதி கிடையாது' என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
டி.என்.பி.எஸ்.சி., சார்பில், தேர்வர்களுக்கான புதிய அறிவுரைகள், 85 பக்கங்களில் வெளியிடப்பட்டு உள்ளன.
அதன் முக்கிய அம்சங்கள்:


* தேர்வர்கள் யாரும், சிபாரிசுக்காக, தேர்வாணைய தலைவர், செயலர், உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோரை சந்திக்கக் கூடாது. சந்திக்க முயற்சித்தால், அவர்கள் தேர்வு எழுத தடை விதிக்கப்படும்

* விடைத்தாளில் பெயர், பதிவெண் போன்றவற்றை நேரடியாகவோ, குறிப்பாகவோ, தேவையற்ற இடங்களில் எழுதினால், எதிர்காலத்தில் தேர்வு எழுத தடை விதிக்கப்படும்* அனுமதிக்கப்பட்ட பேனாவை தவிர, பென்சில், வண்ண பென்சில், வண்ண பேனா கிரயான்கள், ஒயிட்னர், ஸ்கெட்ச் உள்ளிட்டவற்றை பயன்படுத்தக் கூடாது

* வினாத்தாள் மற்றும் விடைத்தாளில், பொது அறிவுரையில் குறிப்பிட்டபெயர், சுருக்கொப்பம், முகவரி தவிர, மற்ற பெயர், கையொப்பம், சுருக்கொப்பம், தொலைபேசி, மொபைல் போன் எண், முகவரி மற்றும் மதம் சார்ந்த குறியீடு இடுதல் கூடாது

* விடைத்தாளில், பரிவு தேடும் விதத்தில், கெஞ்சி கேட்டு எழுதுவது கூடாது. கேள்விக்கு தொடர்பில்லாத பாடம், பதில்கள் மற்றும் தன் அடையாளத்தை வெளியிடும் வகையில் எழுதக் கூடாது

* கறுப்பு அல்லது நீலம் இரண்டு வகை பேனாவில், ஏதாவது ஒன்றை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இரண்டிலும், மாற்றி, மாற்றி எழுதினால், அந்த விடைத்தாள் தகுதி நீக்கம் செய்யப்படும்

* தேர்வர்கள் மின்னணு தகவல்கள் அடங்கிய, ஸ்மார்ட் வாட்ச்,மோதிரம், கம்யூனிகேஷன் சிப், மொபைல் போன், பல விபரங்கள் உடைய கால்குலேட்டர்களை, தேர்வில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது* தேர்வர்கள், ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியர் உடையவராக இருத்தல் கூடாது.
விண்ணப்பதாரர் பெண்ணாக இருந்தால், ஏற்கனவே மனைவியுடன் வாழும் ஒருவரை திருமணம் செய்திருக்கக் கூடாது.இவ்வாறு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டு உள்ளன.


ஒரு மொழியில்மட்டும் எழுதலாம்


தேர்வர்கள் விடைத்தாளில், தமிழ் அல்லது ஆங்கிலம் என, இரண்டில் எதில் வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால், இரண்டிலும் மாற்றி, மாற்றி ஒவ்வொரு பக்கத்திலும் எழுதக் கூடாது. விதிகளை மீறுவோர், ஐந்து ஆண்டுகள் வரை தேர்வு எழுத தடை விதிக்கப்படும் என, முந்தைய விதிகளில் இருந்தது. தற்போது, எந்த காலம் வரை தடை என்பதை, டி.என்.பி.எஸ்.சி., முடிவு செய்யும் என, குறிப்பிடப்பட்டு உள்ளது.

சிடெட்' ஆசிரியர் தகுதி தேர்வு 'ரிசல்ட்'

சென்னை: மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பள்ளி ஆசிரியர் பணிக்கான, 'சிடெட்' தகுதித் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. மத்திய அரசு பள்ளி, தனியார் சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், ஆசிரியர் பணியில் சேர, 'சிடெட்' என்ற, மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
இந்த ஆண்டுக்கான தேர்வு, செப்., 18ல் நடந்தது.மொத்தம், 91 நகரங்களில், 851 மையங்களில், 6.53 லட்சம் பேர் தேர்வு எழுதினர். அதற்கான முடிவுகள், http:/www.ctet.nic.in/ என்ற இணையதளத்தில், நேற்று வெளியிடப்பட்டன.

கம்ப்யூட்டரில் தேர்வு எழுதி உடனடியாக மதிப்பெண் பார்க்கும் முறை சென்னை பல்கலைக்கழகத்தில் அடுத்த கல்வி ஆண்டில் அறிமுகம்

சென்னை, கம்ப்யூட்டரில் தேர்வு எழுதி உடனடியாக மாணவர்கள் மதிப்பெண்களை பார்க்கும் முறை அடுத்த கல்வி ஆண்டு முதல் சென்னை பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்துகிறது.

சென்னை பல்கலைக்கழகம் சென்னை பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களை சேர்ந்த அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி கலை அறிவியல் கல்லூரிகள் 129 உள்ளன. இதில் தன்னாட்சி கல்லூரிகள் 23 உள்ளன. இந்த கல்லூரிகளில் 2 லட்சத்து 76 ஆயிரத்து 512 மாணவ–மாணவிகள் படிக்கிறார்கள்.


இந்த கல்லூரிகள் தவிர தொலை தூரக்கல்வி நிறுவனமும் உள்ளது. இந்த நிறுவனத்தின் மூலம் இந்தியா உள்பட 80 நாடுகளில் உள்ள மாணவ–மாணவிகள் படிக்கிறார்கள்.

தேர்வில் சீர்த்திருத்தம்
சென்னை பல்கலைக்கழக தேர்வில் சீர்த்திருத்தம் கொண்டுவரப்படுகிறதா? என்று சென்னை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டாளர் எஸ்.திருமகனிடம் கேட்டதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:–

சென்னை பல்கலைக்கழகம் மற்றும் சென்னை பல்கலைக்கழக தொலை தூரகல்வி நிறுவனத்தில் படித்தால் நல்ல பெயர் உள்ளது. குறிப்பாக எம்.பி.ஏ. படிப்பை தொலை தூரக்கல்வியில் படித்தாலும் நல்ல வரவேற்பு இந்தியாவில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் உள்ளது.

வெளிநாடுகளில் சென்னை பல்கலைக்கழகதொலை தூரக்கல்வி நிறுவனத்தில் படிப்போருக்கு தேர்வு நடத்தும்போது வினாத்தாள்கள் ஆன்லைன் மூலம் தான் அனுப்பப்படுகின்றன. ஒவ்வொரு நாட்டு பல்கலைக்கழகத்துடனும் ஒப்பந்தம் செய்துள்ள நிறுவனத்திற்கு வினாக்கள் ஆன்லைன் மூலம் அனுப்பப்படும். அவர்கள் அதை ஜெராக்ஸ் எடுத்து மாணவ–மாணவிகளிடம் வழங்குவார்கள்.

தேர்வு ஆன்லைனில் நடத்தப்படுவதில்லை. அவர்கள் தாளில்தான் எழுதுகிறார்கள். அவர்கள் எழுதி ஒப்படைத்த விடைத்தாள்கள் ஒரு வாரத்திற்குள் கூரியர் மூலம் சென்னை பல்கலைக்கழகத்திற்கு வந்து சேர்கிறது.

ஆன்லைன் மூலம் தேர்வு
இப்போது சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்ட கலை அறிவியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு நடத்த அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன.

அவ்வாறு ஆன்லைனில் முதல் கட்டமாக 2 தாள்களுக்கு தேர்வு நடத்தப்படுகிறது. அவை ஆப்ஜெக்டிவ் டைப் ஆக இருக்கும். அதாவது ஒரு கேள்விக்கு 4 பதில்கள் இருக்கும். 4 பதிலில் ஒன்று சரியாக இருக்கும். 3 தவறாக இருக்கும். மாணவ–மாணவிகள் காப்பி அடிக்காமல் இருக்க கேள்விகளின் நம்பரில் மாற்றம் இருக்கும். ஆனால் கேள்விகள் ஒன்றாக தான் இருக்கும்.

உடனடியாக மதிப்பெண் தெரியும் முறை
2 மணி 45 மணிக்கு குறைவாக எந்த ஒரு மாணவரும் தேர்வு எழுத முடியாது. ஆன்லைனில் தேர்வு எழுதி முடிக்கும் போது அவர்கள் எழுதிய தேர்வு கம்ப்யூட்டரில் மதிப்பீடு செய்யப்பட்டு மதிப்பெண் உடனடியாக தெரியும்.

அதாவது தேர்வு எழுதி முடிக்கும்போது மதிப்பெண் தெரிந்து விடும். இந்த புதிய முறை அடுத்த கல்வி ஆண்டில் (2017–2018–ம் ஆண்டு) சென்னை பல்கலைக்கழகத்தில் அறிமுகப்படுத்தப்படும்.

இந்த முறை நன்றாக இருந்தால் தொலை தூரக்கல்வியிலும் அறிமுகப்படுத்தப்படும். இந்த புதிய முறை செனட், சிண்டிகேட் கூட்டத்தின் அனுமதி பெற்று பின்னர் கொண்டுவரப்படுகிறது. ஆன்லைனில் கம்ப்யூட்டரில் தேர்வு நடத்தும்போது எந்த கல்லூரியிலாவது கம்ப்யூட்டர் வசதி இல்லாவிட்டால் பல்கலைக்கழகம் மூலம் கம்ப்யூட்டர் கொடுக்கப்படும். இந்த முறையில் விடைத்தாள் திருத்த ஆசிரியர்கள் தேவை இல்லை.  இவ்வாறு எஸ்.திருமகன் தெரிவித்தார்.

ராணுவத்தில் பிளஸ்-2 படித்தவர்களை சேர்க்க அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பயிற்சியில் சேர்ந்து தேர்ச்சி பெறுபவர்கள் அதிகாரியாக பணி நியமனம் பெறலாம். இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:- இந்திய ராணுவத்தில், தகுதியான இளைஞர்கள் பல்வேறு சிறப்பு பயிற்சி நுழைவின் அடிப்படையில் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். நாட்டிற்கு சேவை செய்வதுடன், மக்கள் மத்தியில் நல்ல கவுரவத்தையும் உருவாக்கித் தரும் பணிகள் என்பதால் இளைஞர்களும் ராணுவப் பணிகளில் சேருவதை பெருமையாக கருதுகிறார்கள். தற்போது 37-வது தொழில்நுட்ப நுழைவுத் திட்டத்தில் (‘டி.இ.எஸ்’-37, ஜூலை 2017) பிளஸ்-2 படித்தவர்களை சேர்க்க அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் சேருபவர்கள் குறிப்பிட்ட கால பயிற்சிக்குப் பின் பணி நியமனம் பெறலாம். இந்த 37-வது நுழைவில் 90 பேர் சேர்க்கப்படுகிறார்கள். இதில் சேருவதற்கான தகுதிகளை இனி பார்க்கலாம்... வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 16½ வயது முதல் 19½ வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அதாவது 1-1-1998 மற்றும் 1-1-2001 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் விண்ணப்பதாரர் பிறந்திருக்க வேண்டும். இவ்விரு தேதிகளில் பிறந்தவர்களும் விண்ணப்பிக்க தகுதி உடையவர்களே. கல்வித்தகுதி: பிளஸ்-2 (10+2 முறையில்) படித்து தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இவர்கள் இயற்பியல், வேதியியல், கணிதவியல் ஆகிய பாடங்கள் அடங்கிய பிரிவை தேர்வு செய்து படித்து இந்தப் பாடங்களில் 70 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யும் முறை: சர்வீஸ் செலக்சன் போர்டு (எஸ்.எஸ்.பி.) நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஸ்டேஜ்-1, ஸ்டேஜ்-2 என இருநிலைகளில் தேர்வுகள் நடைபெறும். குறிப்பிட்ட உடல் தகுதி பெற்றிருக்க வேண்டும். மருத்துவ பரிசோதனை நடத்தப்படும். தகுதி படைத்தவர்கள் பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். விண்ணப்பிக்கும் முறை: இணையதளம் வழியாகவே இந்த பயிற்சியில் சேர விண்ணப்பிக்க முடியும். நாளை (8-11-2016) முதல் இதற்கான விண்ணப்பம் செயல்பாட்டிற்கு வரும். 7-12-2016-ந் தேதிக்குள் இணையதள விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம். இறுதியில் பூர்த்தியான விண்ணப்பத்தை கணினிப் பிரதி எடுத்து வைத்துக் கொள்ளவும். மேலும் விரிவான விவரங்களை www.joinindianarmy.nic.in என்ற இணைய தளத்தில் பார்க்கலாம்.

சென்னை, தனியார் பள்ளிகளுக்கு நிலம் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகளை நிர்ணயம் செய்வது தொடர்பாக அமைக்கப்பட்ட நிபுணர்கள் குழுவில் 3 கல்வியாளர்களை நியமித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை ஐகோர்ட்டில், மாற்றம் இந்தியா அமைப்பின் இயக்குனர் பாடம் ஏ.நாராயணன் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:–


தற்காலிக அங்கீகாரம்
தமிழகத்தில் உள்ள 746 பள்ளிகள் அரசு நிர்ணயித்துள்ள எந்தவொரு அடிப்படை தகுதிகளையும் கடை பிடிக்காமல், கடந்த 2004–ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகளுக்கு தமிழக அரசும், ஒவ்வொரு ஆண்டும் தற்காலிக அங்கீகாரத்தை வழங்கி வருகின்றன.

இறுதியாக கடந்த மே மாதம் 31–ந்தேதி வரை ஒரே ஒருமுறை என்ற அடிப்படையில் தற்காலிக அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளன.

அதன்பிறகு பல பள்ளிகள் தேவையான நிலம் உள்ளிட்ட விதிமுறைகளை பூர்த்தி செய்யாமல் செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட அங்கீகாரத்தை நீட்டிக்க கூடாது.

செயலாளர் ஆஜர்
சம்பந்தப்பட்ட பள்ளிகளை மூடவும், அங்கீகாரம் பெறாத இந்த பள்ளிகளின் விவரங்களை பொதுமக்களுக்கு தெரிவிக்கும் விதமாக விளம்பரப்படுத்தவும் அரசுக்கு உத்தரவிட வேண்டும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் முன்பு விசாரணையில் இருந்து வருகிறது. இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் சபீதா நேரில் ஆஜரானார். அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் ஆஜராகி, ஒரு வகுப்புக்கு எவ்வளவு நிலம் தேவை? என்பது தொடர்பான ஒரு அறிக்கையை தாக்கல் செய்தார்.

கால அவகாசம்
பின்னர் அவர், ‘ஒரு வகுப்பிற்கு தேவைப்படும் நிலத்தின் அளவை தீர்மானித்து, இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால், அனைத்து பள்ளிகளிலும், ஒவ்வொரு வகுப்புகளுக்கும் 5 பிரிவுகள் வரை உள்ளன. இந்த பள்ளிகளுக்கு எவ்வளவு நிலம் தேவைப்படும்? என்பதையும் கணக்கிட்டுள்ளோம். இந்த அறிக்கையை சம்பந்தப்பட்ட நிபுணர்கள் குழு முன்பு வைத்து, ஒப்புதல் பெற்ற பின் உத்தரவு பிறப்பிக்கப்படும். இதற்கு கால அவகாசம் வேண்டும்’ என்று கூறினார்.

கல்வியாளர் நியமனம்
இதை ஏற்க மறுத்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:–

அரசு அமைத்த நிபுணர்கள் குழுவில் கல்வியாளர்கள் யாரும் இல்லை. அரசு அதிகாரிகள் தான் உள்ளனர். கல்வியாளர்களை நியமித்தால் மட்டுமே குழுவின் நோக்கம் நிறைவேறும். எனவே கல்வியாளர்கள் எஸ்.எல்.சிட்டிபாபு, லலிதா, எஸ்.எஸ்.ராஜகோபால் ஆகியோரை அரசு நியமித்த நிபுணர்கள் குழுவில் சேர்த்து உத்தரவிடுகிறோம்.

இந்த குழுவில் உள்ளவர்கள், கும்பகோணம் கோர விபத்து சம்பவம் மற்றும் சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே பிறப்பித்த உத்தரவுகளை மனதில் வைத்து ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்.

ஆலோசிக்கவேண்டும்
நிலம் தொடர்பான விதிமுறைகளை சரியாக கணிக்க வேண்டும். இந்த குழுவில் இடம் பெற்ற நிபுணர்களுடன், தமிழக அரசு ஆலோசித்து 4 வாரத்தில் தகுந்த முடிவு எடுக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணையை வருகிற டிசம்பர் 20–ந்தேதிக்கு தள்ளிவைக்கிறோம்.  இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.

பிளஸ்-2 படித்தவர்கள் ராணுவத்தில் சேர்ப்பு

ராணுவத்தில் பிளஸ்-2 படித்தவர்களை சேர்க்க அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பயிற்சியில் சேர்ந்து தேர்ச்சி பெறுபவர்கள் அதிகாரியாக பணி நியமனம் பெறலாம்.

இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-

இந்திய ராணுவத்தில், தகுதியான இளைஞர்கள் பல்வேறு சிறப்பு பயிற்சி நுழைவின் அடிப்படையில் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். நாட்டிற்கு சேவை செய்வதுடன், மக்கள் மத்தியில் நல்ல கவுரவத்தையும் உருவாக்கித் தரும் பணிகள் என்பதால் இளைஞர்களும் ராணுவப் பணிகளில் சேருவதை பெருமையாக கருதுகிறார்கள்.


தற்போது 37-வது தொழில்நுட்ப நுழைவுத் திட்டத்தில் (‘டி.இ.எஸ்’-37, ஜூலை 2017) பிளஸ்-2 படித்தவர்களை சேர்க்க அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் சேருபவர்கள் குறிப்பிட்ட கால பயிற்சிக்குப் பின் பணி நியமனம் பெறலாம். இந்த 37-வது நுழைவில் 90 பேர் சேர்க்கப்படுகிறார்கள். இதில் சேருவதற்கான தகுதிகளை இனி பார்க்கலாம்...

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 16½ வயது முதல் 19½ வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அதாவது 1-1-1998 மற்றும் 1-1-2001 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் விண்ணப்பதாரர் பிறந்திருக்க வேண்டும். இவ்விரு தேதிகளில் பிறந்தவர்களும் விண்ணப்பிக்க தகுதி உடையவர்களே.

கல்வித்தகுதி:

பிளஸ்-2 (10+2 முறையில்) படித்து தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இவர்கள் இயற்பியல், வேதியியல், கணிதவியல் ஆகிய பாடங்கள் அடங்கிய பிரிவை தேர்வு செய்து படித்து இந்தப் பாடங்களில் 70 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை:

சர்வீஸ் செலக்சன் போர்டு (எஸ்.எஸ்.பி.) நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஸ்டேஜ்-1, ஸ்டேஜ்-2 என இருநிலைகளில் தேர்வுகள் நடைபெறும். குறிப்பிட்ட உடல் தகுதி பெற்றிருக்க வேண்டும். மருத்துவ பரிசோதனை நடத்தப்படும். தகுதி படைத்தவர்கள் பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

இணையதளம் வழியாகவே இந்த பயிற்சியில் சேர விண்ணப்பிக்க முடியும். நாளை (8-11-2016) முதல் இதற்கான விண்ணப்பம் செயல்பாட்டிற்கு வரும். 7-12-2016-ந் தேதிக்குள் இணையதள விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம். இறுதியில் பூர்த்தியான விண்ணப்பத்தை கணினிப் பிரதி எடுத்து வைத்துக் கொள்ளவும்.

மேலும் விரிவான விவரங்களை www.joinindianarmy.nic.in என்ற இணைய தளத்தில் பார்க்கலாம்.

பட்டதாரிகளுக்கு மத்திய அமைச்சரவை செயலகத்தில் பணி

மத்திய அமைச்சரவை செயகத்தில் 2016-2017-ஆம் ஆண்டிற்கான 11 Despatch Officer, Attache பணியிடத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 11

பணியிடம்: புதுதில்லி
பணி - காலியிடங்கள் விவரம்:
பணி: Deputy Director - 01
சம்பளம்: மாதம் ரூ.15600 - 39100/- + தர ஊதியம் ரூ.7600/5400
பணி: Joint Deputy Director - 01
சம்பளம்: மாதம் ரூ.15600 - 39100 + தர ஊதியம் 7600/5400
பணி: Senior Para Despatch Officer - 01
சம்பளம்: மாதம் ரூ.15600 - 39100 + தர ஊதியம் 7600/5400
பணி: Para Despatch Officer - 02
சம்பளம்: மாதம் ரூ.15600 - 39100 + தர ஊதியம் 7600/5400
பணி: Junior Para Despatch Officer - 03
சம்பளம்: மாதம் ரூ.15600 - 39100 + தர ஊதியம் 7600/5400
பணி: Assistant Fire Officer - 01
சம்பளம்: மாதம் ரூ.15600 - 39100 + தர ஊதியம் 7600/5400
பணி: Attache (Junior Time Scale) - 02
சம்பளம்: மாதம் ரூ.15600 - 39100 + தர ஊதியம் 7600/5400
தகுதி: அரசு அதிகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் இளங்கலை, முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 56க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:   அதிகாரப்பூர்வ இணையதளமான www.cabsec.nic.in-ல் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களில் அட்டெஸ்ட் பெற்று கீழ் வரும் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Assistant Director (Pers B), Post Box no. 3003, Lodhi Road Post Office, New Delhi - 110003.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 30.11.2016
மேலும் விவரங்கள் அறிய http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_58101_47_1617b.pdf, http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_58101_45_1617b.pdf என்ற இணையதள லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

CENTRAL TEACHER ELIGIBILITY TEST (CTET) - SEP 2016 மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு - தேர்வு முடிவு வெளீயீடு ( Result Announced CTET-SEP 2016 )

ஓய்வூதிய திட்ட வல்லுனர் குழு அறிக்கை தாக்கல் எப்போது?

பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக நியமிக்கப்பட்ட, வல்லுனர் குழுவின் பதவிக்காலம், ஒரு வாரத்திற்கு முன் முடிந்து விட்டது. அதனால், குழுவினர் விரைவில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தில், புதிதாக பணியில் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு, பழைய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு, மத்திய அரசு ஆலோசனைப்படி, பங்களிப்புடன் கூடிய புதிய ஓய்வூதிய திட்டம், 2003ல் அமலுக்கு வந்தது. இதற்கு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 


வல்லுனர் குழு : 'பழைய ஓய்வூதிய திட்டமே தொடர வேண்டும்' என, வலியுறுத்தி, பல போராட்டங்களையும் நடத்தினர். அரசு ஊழியர்களின் கோரிக்கையை சமாளிக்க, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய, சட்டசபை தேர்தலுக்கு முன், வல்லுனர் குழுவை தமிழக அரசு நியமித்தது. தேர்தலில் வெற்றி பெற்று, மீண்டும் அ.தி.மு.க., அரசு அமைந்ததும், வல்லுனர் குழுவின் செயல்பாடுகள் துவங்கின. செப்டம்பரில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்க பிரதிநிதிகளிடம், வல்லுனர் குழு கருத்து கேட்டது. அக்டோபர், 28ம் தேதியுடன், வல்லுனர் குழுவின் பதவிக்கலாம் முடிவடைந்து விட்டது. அதனால், குழுவினர் தங்களின் அறிக்கையை விரைவில் சமர்ப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. 
ஆசிரியர்கள் உறுதி : இது குறித்து, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொது செயலர், பேட்ரிக் ரைமண்ட் கூறியதாவது: ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சங்க பிரதிநிதிகளிடம் கருத்து கேட்டு, இரண்டு மாதங்களாகிறது; இன்னும் குழுவின் முடிவு தெரியவில்லை. பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் தொடரக்கூடாது என்பதில், ஆசிரியர்கள் உறுதியாக உள்ளனர். பழைய ஓய்வூதிய திட்டத்தை விரைவில் அமல்படுத்த வேண்டும். அதற்கு முன், உயிரிழந்த மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்கள், ஆசிரியர்கள் குடும்பத்திற்கு, இடைக்கால ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். 

ஆசிரியர் பணியை உதறிவிட்டு விவசாயத்தில் சாதிக்கும் பெண்

ஆசிரியர் பணியை உதறிவிட்டு விவசாயத்தில் இளம்பெண் சாதனை நிகழ்த்தி வருகிறார்.சாயல்குடி அருகே குதிரைமொழி கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீதேவி,28. டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி முடித்துள்ளார். 

இவரது கணவர் விவசாயி விக்னேஷ் ராம்,33. இவர்களுக்கு 2 மகள் 1 மகன் உள்ளனர். இவர்களுக்கு அதே பகுதியில் 5 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. கடற்கரையை ஒட்டியுள்ள பகுதி என்பதால் விவசாயம் நிலம் உவர்ப்பு தன்மை உடையதாக உள்ளது.


இருந்தும் மனம் தளராத தம்பதியினர் இருவரும் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத் துறையினரிடம் ஆலோசனைகள் பெற்று அந்த நிலத்தை பொன் விளையும் பூமியாக மாற்றியுள்ளனர். மா, புளி, முந்திரி, கொய்யா, எலுமிச்சை, சப்போட்டா, நார்த்தங்காய், கொடுக்காப்புளி, நாவல், தென்னை, தேக்கு உள்ளிட்ட பலன்தரும் மரங்களை நடவு செய்துள்ளனர். ஊடு பயிராக கால்நடைகளுக்கான கட்டைப்புல் சாகுபடி செய்துள்ளனர். பயிர்களுக்கு இயற்கை உரம் மட்டுமே பயன்படுத்துகின்றனர். மரங்கள் பலனளிக்க துவங்கியுள்ளதால் தம்பதியினர் நல்ல வருமானத்தை ஈட்டி வருகின்றனர்.

விவசாயி ஸ்ரீதேவி கூறுகையில்,“ ஆசிரியர் பயிற்சி முடித்த பின்னர், கிடைத்த அரசு வேலையை உதறிவிட்டு கணவருடன் இணைந்து விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறேன். கடந்த 10 ஆண்டுகளில் வகை, வகையான பலன்தரும் மரங்களை நட்டு அதன் மூலம் வருமானம் ஈட்டிவருகிறோம். விவசாயத்திற்கு பயன்படாத உவர் மண்ணை, மண் மாதிரி மூலம் ஆய்வு செய்து, அதிகளவில் மக்கிய இயற்கை உரங்களான கால்நடை கழிவுகள், மண்புழு உரம் இவற்றின் மூலம் நுண்ணுாட்டம் செய்து விவசாயத்திற்கு உகந்ததாக மாற்றியுள்ளோம். 

இங்கு 15 அடியில் நல்ல தண்ணீர் கிடைப்பதால், கிணற்று பாசனத்தில் மகசூல் ஈட்ட முடிகிறது. பெரும்பாலான நேரங்களை விவசாயத்தில் செலவிடுகிறேன். மாலையில் அருகில் உள்ள பள்ளி குழந்தைகளுக்கு வகுப்புகள் எடுக்கிறேன். இதுவரை வேளாண்மைத்துறையின் மூலம் எந்தவித உதவிகளும், இலவச மின்சாரம், மானியமும் பெறவில்லை. அரசு ஊக்குவித்தால், என்னைப்போன்ற படித்த பெண்களுக்கு உதவிகரமாக இருக்கும்,” என்றார்.

1தண்ணீர் நிறைய குடியுங்கள்

SABL ஏற்கக் கூடிய ஒன்றா?

தீபாவளி

ஆதார் எண் வங்கியுடன் இணைத்து இருந்தால் இலவச இருப்பு தொகை அறியலாம் Get Your Bank Mini Statements on Your Mobile Without the Internet

ஆன்மிகத்தில் ஒளிந்திருக்கும் 10 அறிவியல் உண்மைகள்

இன்றைய மருத்துவ பலன்

ஈ. வெ. ராமசாமி

எதிர்மறை எண்ணங்களை களைவது எப்படி?

ஒரு அரசு பள்ளிக்கூடத்தில் மாணவர்களை சோதனை

ஒரு பகுத்தறிவுவாதிக்கும்

குங்குமப்பூ

குழந்தை வளர வளர எவ்வளவு பாலூட்ட வேண்டும்

சங்கடங்களை போக்க சம்மணமிடுங்கள்

சித்தர்கள் சமாதியான இடம்

சின்ன சின்ன கை வைத்தியங்கள்

சொந்தமாக ரயில் வைத்திருந்த தமிழரைப் பற்றி தெரியுமா?

வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து வைத்தியம் செய்யும் முறை

தோலுக்கு மினு மினுப்பை தரும் சைவ

நடைப்பயிற்சியின் நன்மைகள்

நாம் - முதல் தலைமுறை,

படிக்க அடம்பிடிக்கும் குழந்தைகள்

படுத்தவுடன் தூக்கம் வர ‘பளிச்’ டிப்ஸ்!

மனம் கலங்காதிருக்க

மேட்டுர் அணை வரலாறு

வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து வைத்தியம் செய்யும் முறை

வீட்டில் விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா

ஹெல்மெட்டின் பணி என்ன?

7/11/16

பள்ளிகளில் செல்போன் பயன்படுத்துவது தவிர்த்தல் சார்பான இயக்குநரின் செயல்முறைகள்

புதிய கல்விக் கொள்கை நாட்டின் வளர்ச்சிக்கானது - எந்தவித அரசியலும் இல்லை: ஜாவடேகர்

புதிய கல்விக் கொள்கை நாட்டின் வளர்ச்சிக்கானது. இதில் எந்தவித அரசியலும் இல்லை என்று மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் பேசினார். சென்னையில் பாரதிய ஜெயின் சங்காதனா (Bharatiya jain sanghatana) அமைப்பின் சார்பில், -இந்தியாவின் பள்ளி கல்வியில் உள்ள சவால்கள்- என்ற தலைப்பிலான இரண்டு நாள் தேசிய மாநாடு சனிக்கிழமை தொடங்கியது.

இந்த மாநாட்டை தொடங்கி வைத்து மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் பேசியதாவது: நமது நாட்டின் கல்வி முறையில் புதுமையான முறைகள் அவசியமாகும். எல்லா துறைகளிலும், தரமான வளர்ச்சியை அடைய வேண்டும் என்பதே பிரதமரின் முக்கிய நோக்கமாகும்.

குறிப்பாக, நமது நாட்டின் கல்வி முறையை மேலும் சிறப்பானதாக உருவாக்கவும், அதன் தரத்தை மேம்படுத்தவும் மத்திய அரசு முயன்று வருகிறது.
அரசியல் இல்லை...
கல்வியை அடுத்த நிலைக்கு முன்னெடுத்து செல்லும் நோக்கில், புதிய கல்வி கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கொள்கை நாட்டின் வளர்ச்சிக்கானது. இவற்றில் எந்தவித அரசியலும் இல்லை. நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்காக, புதிய கல்விக் கொள்கையின் அவசியம் ஏற்பட்டுள்ளது.
எந்த விதத்திலும் அரசியலமைப்பு சட்டத்தில், சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்ட உரிமைகள் சிதைக்கப்படாது. கல்விக் கொள்கைக்கான வரையறை அறிக்கையில், ஒரு பகுதி மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. இது, இறுதியானது அல்ல.
நாடு முழுவதும் உள்ள மாநிலங்கள், பல்வேறு தரப்பினருடன் விவாதிக்கப்பட்டு, அவர்கள் அளிக்கும் கருத்துகளையும் கவனத்தில் கொண்டே இறுதி செய்யப்படும். ஆனால், தமிழகம், கேரளத்தில் சரியான புரிதல் இல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது அவசியமற்றது.
நவம்பர் 10-ஆம் தேதி அனைத்து எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் அனைத்து மாநிலத்திலுள்ள நிர்வாகிகள் தெரிவிக்கும் கருத்துகளும் கவனத்தில் கொள்ளப்படும்.
ஜாதி, மதம் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டு, நல்ல மனித நேயத்தை வளர்க்கவும், புதிய கல்வி கொள்கை வழிவகுக்கும். மேலும் சக மனிதர்களை, மனிதர்களாக மதிக்கவும் பயன்படும் என்றார்.

புதிய விதிப்படி ஐ.ஐ.டி., 'அட்மிஷன்' மாணவர் சேர்க்கை கமிட்டி அமைப்பு

புதிய விதிப்படி, உயர் கல்வி நிறுவனமான, ஐ.ஐ.டி.,க்களில் மாணவர் சேர்க்கையை நடத்துவதற்கான கமிட்டியை, மத்திய அரசு அமைத்துள்ளது.

மத்திய அரசின், ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., மற்றும் மத்திய அரசின் நிதி உதவி பெறும் தொழில்நுட்ப கல்லுாரிகளில், ஜே.இ.இ., எனப்படும், ஒருங்கிணைந்த நுழைவு தேர்வுப்படி, மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். கடந்த ஆண்டு வரை, இத்தேர்வில், பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற அனைவரும் பங்கேற்கலாம் என்ற முறை இருந்தது.


இந்த ஆண்டு முதல், புதிய விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதாவது, பிளஸ் 2 பொதுத்தேர்வில், குறைந்த பட்சம், 75 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் மட்டுமே, ஜே.இ.இ., தேர்வில் பங்கேற்க முடியும். பட்டியலின தலித் மற்றும் பழங்குடியின மாணவர்கள், 65 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

அதேபோல, ஜே.இ.இ., தேர்வு முடிந்து, அதன் தரவரிசை பட்டியலில், ஏற்கனவே இருந்தது போல், பிளஸ் 2 மதிப்பெண்ணை, வெயிட்டேஜ் மதிப்பெண்ணாக சேர்க்கும் முறை ரத்து செய்யப்படுகிறது. அத்துடன், புதிய முறைப்படி மாணவர் சேர்க்கையை நடத்துவதற்கான கமிட்டியையும், 
மத்திய அரசு அமைத்துள்ளது. 

கமிட்டியில், மத்திய மனிதவள மேம்பாட்டு துறை, என்.ஐ.டி.,க்கள் மற்றும் ஐ.ஐ.டி.,க்களுக்கான இயக்குனர்கள், தேசிய தகவல் மைய உறுப்பினர், மத்திய இடை நிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., சார்பில் ஒருவர், அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் வுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., அதிகாரி உள்ளிட்டோர் இடம் பெறுவர் என, அறிவிக்கப்பட்டுள்ளது

கணினி பட்டதாரிகளுக்கு ஆசிரியர் பணி கிடைக்குமா?

ஆசிரியர் பணி நியமனத்தில் முன்னுரிமை அளிக்காமல், கணினி அறிவியல் பட்டதாரிகள், வேலைவாய்ப்பு இல்லாமல் திணறுகின்றனர்.தமிழக அரசு பள்ளிகளில், 1992ல், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில், கணினி அறிவியல் பாடங்கள் அறிமுகமாகின. அப்போது, கணினி பட்டப்படிப்பு இல்லாததால், கணினி பற்றி அடிப்படை தகவல்கள் தெரிந்தவர்களை ஆசிரியர்களாக அரசு நியமித்தது. பின், கணினி அறிவியல் பாடத்தில், பி.எஸ்சி., - எம்.எஸ்சி., மற்றும் பி.எட்., படிப்புகள் துவங்கப்பட்டன. இதில், இதுவரை, 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், பி.எஸ்சி., - பி.எட்., பட்டம் பெற்று, ஆசிரியர் வேலை இன்றி, திணறி வருகின்றனர்.

கணினி அறிவியல் படிப்பை, ஆசிரியர் தேர்வு வாரியம் இன்னும் அங்கீகரிக்கவில்லை. அதனால், 'டெட்' என்ற ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத முடியாமல், ஆசிரியர் பணிக்கு செல்ல முடியாமல், கணினி பட்டதாரிகள் தவிக்கின்றனர்.'அரசு விரைந்து முடிவு எடுத்து, கணினி பட்டதாரிகளுக்கு, அரசு பணி வழங்க முன்வர வேண்டும்' என, கணினி பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை பல்கலை சிண்டிகேட் தேர்தல்:கல்வி துறை இயக்குனர்கள் புறக்கணிப்பு

சென்னை பல்கலை சிண்டிகேட் உறுப்பினர் தேர்தலில், வரலாற்று துறை பேராசிரியர் சுந்தரம் வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் ஓட்டளிக்காமல், அரசு அதிகாரிகள் புறக்கணித்தனர்.சென்னை பல்கலையின் நிர்வாக பணிகளை முடிவு செய்யும், உயர்ந்த அதிகார அமைப்பாக, சிண்டிகேட் செயல்படுகிறது. இதில், செனட் உறுப்பினர்கள் ஆறு பேர், பல்கலை இணைப்பு கல்லுாரிகள் அங்கம் வகிக்கும், அகாடமிக் கவுன்சில் சார்பில், நான்கு கல்லுாரி முதல்வர்களும் உறுப்பினர்களாக இருப்பர்.

மூன்று இடம் காலி
மேலும், சென்னை பல்கலையில் பணியாற்றுவோரில், மூத்த உதவி பேராசிரியர் மற்றும் இணை பேராசிரியர்களில் தலா, ஒருவர், சென்னை பல்கலை துறைத் தலைவர்களில், மூத்தவர்களில் தலா, மூன்று பேர் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் எட்டு பேரும் உறுப்பினர்களாக இருப்பர். இதில், துறை தலைவர்களுக்கான மூன்று இடங்கள் காலியாக உள்ளன.
செனட் பிரதிநிதிகளில் ஒருவரான பேராசிரியர் ஸ்ரீமன் நாராயணன், ஜூனில் ஓய்வு பெற்றார். அந்த காலியிடத்திற்கு, பல்கலை செனட் கூட்டத்தில், நேற்று முன்தினம் தேர்தல் நடந்தது. சென்னை பல்கலை ஆங்கில துறை தலைவர், ஆர்ம்ஸ்ட்ராங், வரலாற்று துறை தலைவர்எஸ்.எஸ்.சுந்தரம் இருவரும் போட்டியிட்டனர்.
பதிவான, 114 ஓட்டுகளில், 74 ஓட்டுகள் பெற்று, பேராசிரியர் சுந்தரம் வெற்றி பெற்றார். புதிய சிண்டிகேட் உறுப்பினரின் பதவிக்காலம், மூன்று ஆண்டுகள். சிண்டிகேட் உறுப்பினர் தேர்தலில் ஓட்டளிக்க, 128 செனட் உறுப்பினர்கள் தகுதி பெற்றனர். ஆனால், 114 ஓட்டுகளே பதிவாகின. 
ஓட்டளிக்கவில்லை
இதில், செனட் உறுப்பினர்களான, உயர் கல்வி செயலர் கார்த்திக், கல்லுாரி கல்வி இயக்குனர் மற்றும் தொழில்நுட்ப கல்வி இயக்குனர் ராஜேந்திர ரத்னு, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன், சட்டப்படிப்புகள் துறை இயக்குனர், மருத்துவ கல்வி இயக்குனர் உள்ளிட்ட, எட்டு அரசு உயர் அதிகாரிகள் ஓட்டளிக்கவில்லை. அரசு அதிகாரிகளே தேர்தலை புறக்கணித்தது, மாணவர்கள் மத்தியில் தேர்தல் மீதான நம்பிக்கையை குறைப்பதாக உள்ளது

5,451 அரசு வேலைக்கு 'குரூப் - 4' தேர்வு எழுதியவர்கள்... 12.60 லட்சம் பேர்!:10ம் வகுப்பு முதல் இன்ஜி., படித்தவர்கள் வரை பங்கேற்பு;ஆறு மாதத்தில் முடிவு வெளியாகும் என அறிவிப்பு

5,451 அரசு வேலைக்கு 'குரூப் - 4' தேர்வு எழுதியவர்கள்... 12.60 லட்சம் பேர்!:10ம் வகுப்பு முதல் இன்ஜி., படித்தவர்கள் வரை பங்கேற்பு;ஆறு மாதத்தில் முடிவு வெளியாகும் என அறிவிப்புசெப்., 14 வரை நீட்டிக்கப்பட்டது. திட்டமிட்டபடி, நேற்று காலையில், எழுத்துத் தேர்வு நடந்தது. 10ம் வகுப்பு முதல், பட்டப் படிப்பு, பிஎச்.டி., மற்றும் இன்ஜினியரிங் படித்தவர்கள் வரை, மொத்தம், 15.64 லட்சம் பேர் தேர்வு எழுத தகுதி பெற்றிருந்தனர்; அவர்களில், 80.5 சதவீதமாக, 12.60 லட்சம் பேர் தேர்வு எழுதினர்.


* சென்னை உட்பட, 301தாலுகாக்களில், 5,296 தேர்வு அறைகளில் தேர்வு நடந்தது. முதன்மை கண்காணிப்பாளர்கள், தேர்வுக்கூட ஆய்வு அதிகாரிகள், தேர்வுக்கூட கண்காணிப்பாளர்கள் என, மொத்தம், 88 ஆயிரத்து, 810 பேரும்; பறக் கும் படை அதிகாரிகள், 218 பேரும், தேர்வை நடத்தும் பணியில் ஈடுபட்டனர்

* தேர்வுக்கு வந்தவர்களுக்கு, கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மொபைல் போன், ஸ்மார்ட் வாட்ச், கைப்பை உள்ளிட் டவை, தேர்வறையில் அனுமதிக்கப் படவில்லை. 

'ரிசல்ட்' எப்போது?

சென்னையில் தேர்வு நடைபெற்ற மையங் களை,டி.என்.பி.எஸ்.சி.,தலைவர் அருள்மொழி, தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஷோபனா ஆகி யோர் பார்வையிட்டனர். பின், அருள்மொழி அளித்த பேட்டி:

டி.என்.பி.எஸ்.சி., சார்பில், ஓராண்டில், 15 எழுத்துத் தேர்வுகளும், 13 நேர்முகத் தேர்வு களும் நடத்தப்பட்டு; 22 முடிவுகள் அறிவிக்கப் பட்டுள்ளன. ஜூன், 16 வரை நடந்த அனைத்து தேர்வுகளுக்கான முடிவுகளும்அறிவிக்கப்பட்டு விட்டன. மாவட்ட கல்வி அலுவலர் பதவிக்கான தேர்வு முடிவு, வரும் வாரத்தில் வெளியாகும்.

சப் - கலெக்டர், டி.எஸ்.பி., உட்பட, உயர் பதவிகளில் காலியாக உள்ள, 85 பணிஇடங் களை நிரப்புவதற்கான, 'குரூப் - 1' தேர்வு, வரும், 9ல், அறிவிக்கப்படும். தேர்வாணையத் தின் திருத்தப்பட்ட அறிவுரைகள், இன்று வெளியிடப்படும். இந்த விதிகள், அடுத்து வரும் தேர்வுகள் அனைத்துக்கும் பொருந்தும். 'குரூப் - 4' தேர்வு முடிவுகள், ஆறு மாதங்களுக் குள் வெளியாகும்.இவ்வாறு அவர் கூறினார்.

தேர்வில் புதுமண தம்பதி 

தர்மபுரியைச் சேர்ந்த மணமக்கள் மணிமாறன் - சித்ரா ஆகியோர், நல்லம்பள்ளி அரசு பள்ளி மற்றும் தர்மபுரி குட்ஷெப்பர்டு மேல்நிலைப் பள்ளியில், மணக்கோலத்தில் தேர்வு எழுதினர். 
மணமகன் மணிமாறன் கூறியதாவது:

பி.இ., படித்த எனக்கும், எம்.எஸ்சி., - பி.எட்., படித்த சித்ராவுக்கும், திருமணம் நிச்சயம் செய்யும் முன்னரே, இருவரும், 'குரூப் - 4' தேர்வுக்கு விண்ணப்பித்துஇருந்தோம். தேர்வு நாளில், எங்கள் திருமணத்தை நடத்த, பெரியோர்கள் முடிவு செய்தனர். 

அதனால், அதிகாலை, 5:00 மணிக்கு திருமணம் முடிந்ததும்,இருவரும் அவரவர் தேர்வு மையத் தில், தேர்வில் பங்கேற்றோம்; தேர்ச்சி பெற்று, இருவரும் அரசு வேலையில் சேருவோம் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். 

பின்தங்கிய மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி திட்டம்

அரசு பள்ளிகளில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வில், பின்தங்கிய மாணவர்களுக்கு, சிறப்பு பயிற்சி திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.அரசு பள்ளிகளில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வில், 100 சதவீதம் தேர்ச்சி அடையும் வகையில், சிறப்பு திட்டத்தை, தமிழக கல்வித்துறை மேற்கொண்டுஉள்ளது. 

இதன்படி, பல்வேறு மாவட்டங்களில், மாவட்ட அதிகாரிகளின் தனிப்பட்ட முயற்சியில், பல முன்னோடி பயிற்சி திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.சென்னையில், 'பெஸ்ட்;' சிவகங்கை, ராமநாதபுரத்தில்,'எலைட்' திட்டம் போன்றவை இவற்றில் அடங்கும். தர்மபுரி மாவட்டத்தில், காலாண்டு தேர்வில் தோல்வியடைந்த, 5,000 மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 
இதற்காக, தனி பயிற்சி அட்டவணை தயாரிக்கப்பட்டு உள்ளது.மாணவர்களின் பெற்றோரை தொடர்பு கொண்டு, அவர்கள் பள்ளி முடிந்து வீட்டுக்கு சென்ற பின், பாடங்கள் படிக்கும் முறை குறித்து கேட்டறிய, ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்கள் எந்த நேரத்திலும், விளக்கம் கேட்கும் வகையில், ஆசிரியர்களின் மொபைல் போன் எண்கள் தரப்பட்டு உள்ளன

10 தேர்வுகளுக்கான முடிவுகள் விரைவில் வெளியீடு: டி.என்.பி.எஸ்.சி. தலைவர்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தப்பட்ட 10 தேர்வுகளுக்கான முடிவுகளை விரைவில் வெளியிடப்படும் என்று அதன் தலைவர் அருள்மொழி தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு துறைகளில் இளநிலை உதவியாளர், வரைவாளர், நில அளவர், தட்டச்சர், சுருக்கெழுத்தர் ஆகிய பிரிவுகளில் காலியாகவுள்ள 5,451 பணியிடங்களுக்கான குரூப்-4 தேர்வை டி.என்.பி.எஸ்.சி. ஞாயிற்றுக்கிழமை நடத்தியது. இதில், தமிழகம் முழுவதும் 5,296 மைங்களில் 15 லட்சத்துக்கும் அதிகமானோர் தேர்வெழுதினர்.

இந்த நிலையில், சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள என்.கே.டி. மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அமைந்திருந்த தேர்வு மையத்தை அருள்மொழி ஆய்வு செய்தார். அப்போது அவர் அளித்த பேட்டி:-
இந்தத் தேர்வை எழுத, முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு 15 லட்சத்து 64 ஆயிரத்து 471 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டது. இவர்களில் 2,291 பேர் மாற்றுத்திறனாளிகள். விண்ணப்பித்தவர்களில் 80 சதவீதம் பேர் தேர்வில் பங்கேற்றனர்.
முறைகேடுகளைத் தடுக்கும் வகையில், 5,296 தலைமை கண்காணிப்பாளர்கள் தலைமையில் 78,216 கண்காணிப்பாளர்கள், 566 பறக்கும்படை ஆகியோர் மேற்பார்வையில் தேர்வு நடத்தப்பட்டது.
இந்த வாரத்தில் டி.இ.ஒ. தேர்வு முடிவு: டி.என்.பி.எஸ்.சி. சார்பில் கடந்த 12 மாதங்களில் மட்டும் 15 எழுத்துத் தேர்வுகளும், 13 நேர்முகத் தேர்வுகளும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.
2009, 2012, 2014 ஆகிய ஆண்டுகளில் அறிவிக்கை செய்யப்பட்டு, பல்வேறு காரணங்களால் தாமதமாகி வந்த உடற்கல்வி இயக்குநர், மோட்டார் வாகன ஆய்வாளர், நூலகர் ஆகிய மூன்று போட்டித் தேர்வுகளுக்கான முடிவுகள் மாதங்களில் வெளியிடப்பட்டிருக்கின்றன.
2014-இல் அறிவிக்கை செய்யப்பட்ட 11 காலிப் பணியிடங்களுக்கான மாவட்ட கல்வி அலுவலர் பணியிடத்துக்கானத் தேர்வு முடிவு மட்டும் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்த வாரத்துக்குள் இந்த முடிவும் அறிவிக்கப்பட்டுவிடும்.
10 தேர்வுகளுக்கான முடிவு:மேலும், 2016 ஜூன் மாதம் வரை நடந்து முடிந்த மாவட்ட கல்வி அலுவலர் பதவிக்கான தேர்வைத் தவிர, மற்ற அனைத்துத் தேர்வுகளுக்கான முடிவுகளும் அறிவிக்கப்பட்டுவிட்டன. இன்னும் 10 தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியிடப்பட வேண்டும். இவை அனைத்தும் 2016 ஜூன் மாதத்துக்குப் பிறகு நடத்தப்பட்டவையாகும்.
இந்த 10 தேர்வுகளுக்கான முடிவுகளை விரைவில் வெளியிடுவதற்கான பணிகளும், தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதற்கிடையே, உயர்நீதிமன்ற பணியாளர்களுக்கான எழுத்துத் தேர்வு கடந்த ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்டு, முடிவுகளும் வெளியிடப்பட்டுவிட்டன. வரும் 14, 15 தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு, நேர்முகத் தேர்வுகளும் நடத்தப்பட உள்ளன.
திருத்திய வரையறை இன்று வெளியீடு: டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளுக்கு சில வரையறைகள் வகுக்கப்பட்டு பின்பற்றப்பட்டு வருகின்றன. இதில் இப்போது திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்தத் திருத்திய வரையறை டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் திங்கள்கிழமை (நவ.7) பதிவேற்றம் செய்யப்படும். இவற்றைத் தேர்வர்கள் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம். இனி அனைத்துப் போட்டித் தேர்வுகளுக்கும், இந்த திருத்திய வரையறையே பின்பற்றப்படும்.
நவம்பர் 9-இல் குரூப்-1 தேர்வு அறிவிக்கை: துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பணிகளில் 81 காலி இடங்களுக்காக 2016 ஆம் ஆண்டுக்கான குரூப்-1 தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கான அறிவிக்கை நவம்பர் 9-இல் வெளியிடப்பட உள்ளது என்றார் அவர். 

பள்ளி, கல்லூரிகளில் துப்புரவு பணியாளர்: காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நவ., 15 கடைசி

விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி விடுதிகளில் காலியாக உள்ள துப்புரவு பணியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நவ., 15 கடைசி என பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் தனலிங்கம் தெரிவித்துள்ளார்.

 அவரது அறிக்கையில் கூறியிருப்பதாவது: விருதுநகர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை கீழ் இயங்கும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவி கள் விடுதிகளில் காலியாக உள்ள 2 பெண் முழு நேர துப்புரவு பணியாளர்கள், தலா 9 ஆண் பெண் பகுதிநேர துப்புரவு பணியாளர் பணியிடங் கள் சுழற்சி முறையில் நிரப்பப்பட உள்ளன. தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். 2016 நவ., 1 தேதியில் ஆதி திராவிடர் மற்றும் பழஙங்குடியினருக்கு 18 முதல் 35 வயதிற் குள் இருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபி னருக்கு 18 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். இதர பிரிவினர் 30 வயது மிகாமல் இருக்க வேண்டும். தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் பெயர் மற்றும் முகவரி, கல்வி தகுதி, ஜாதி, முன்னுரி மை விபரம், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு, குடும்ப அடடை முதலான நகல்கள் மற்றும் இரண்டு புகைப்படத்துடன் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், விருதுநகர் என்ற முகவரிக்கு நவ., 15 க்குள் அனுப்ப வேண்டும். தகுதி யானவர்களுக்கு நேர்கானல் நடைபெறும் என அதில் தெரிவித்துள்ளார். 

டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கான திருத்திய வரையறை வெளியீடு: அருள்மொழி

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தப்படும் தேர்வுகளில் பங்கேற்பவர்களுக்கான வரையறைகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, திங்கள்கிழமை முதல் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட உள்ளது என டி.என்.பி.எஸ்.சி. தலைவர் அருள்மொழி கூறினார்.


இந்த திருத்திய வரையறைகள் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியிடப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

தமிழக அரசுத் துறைகளில் இளநிலை உதவியாளர், வரைவாளர், நில அளவர், தட்டச்சர், சுருக்கெழுத்தர் ஆகிய 5,451 காலிப் பணியிடங்களுக்கான குரூப்-4 தேர்வை டி.என்.பி.எஸ்.சி. ஞாயிற்றுக்கிழமை நடத்தியது. தமிழகம் முழுவதும் 5,296 மைங்களில் நடத்தப்பட்டத் இந்தத் தேர்வில் 15 லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்று தேர்வெழுதினர்.

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள என்.கே.டி. மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அமைந்திருந்த தேர்வு மையத்தை அருள்மொழி ஆய்வு செய்தார். அப்போது அவர் அளித்த பேட்டி:

தமிழகம் முழுவதும் 5,296 மையங்களில் நடத்தப்பட்ட இந்த குரூப்-4 தேர்வை எழுத, முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு 15 லட்சத்து 64 ஆயிரத்து 471 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டது. இவர்களில் 2,291 பேர் மாற்றுத்திறனாளிகள். இதில் 80 சதவீதம் பேர் தேர்வில் பங்கேற்றுள்ளனர்.

முறைகேடுகளைத் தடுக்கும் வகையில், 5,296 தலைமை கண்காணிப்பாளர்கள் தலைமையில் 78,216 கண்காணிப்பாளர்கள், 566 பறக்கும்படை ஆகியோர் மேற்பார்வையில் தேர்வு நடத்தப்பட்டது.

இந்த வாரத்தில் டி.இ.ஒ. தேர்வு முடிவு:

டி.என்.பி.எஸ்.சி. சார்பில் கடந்த 12 மாதங்களில் மட்டும் 15 எழுத்துத் தேர்வுகளும், 13 நேர்முகத் தேர்வுகளும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.

2009, 2012, 2014 ஆகிய ஆண்டுகளில் அறிவிக்கை செய்யப்பட்டு, பல்வேறு காரணங்களால் தாமதமாகி வந்த உடற்கல்வி இயக்குநர், மோட்டார் வாகன ஆய்வாளர், நூலகர் ஆகிய மூன்று போட்டித் தேர்வுகளுக்கான முடிவுகள் இந்த 12 மாதங்களில் வெளியிடப்பட்டிருக்கின்றன.

2014 இல் அறிவிக்கை செய்யப்பட்ட 11 காலிப் பணியிடங்களுக்கான மாவட்ட கல்வி அலுவலர் பணியிடத்துக்கானத் தேர்வு முடிவு மட்டும் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்த வாரத்துக்குள் இந்த முடிவும் அறிவிக்கப்பட்டுவிடும்.

மேலும்,  2016 ஜூன் மாதம் வரை நடந்து முடிந்த மாவட்ட கல்வி அலுவலர் பதிவிக்கான தேர்வைத் தவிர, மற்ற அனைத்துத் தேர்வுகளுக்கான முடிவுகளும் அறிவிக்கப்பட்டுவிட்டன. இன்னும் 10 தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியிடப்பட வேண்டும். இவை அனைத்தும் 2016 ஜூன் மாதத்துக்குப் பிறகு நடத்தப்பட்டவையாகும்.

இந்த 10 தேர்வுகளுக்கான முடிவுகளை விரைவில் வெளியிடுவதற்கான பணிகளும், தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கிடையே, உயர்நீதிமன்ற பணியாளர்களுக்கான எழுத்துத் தேர்வு கடந்த ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்டு, முடிவுகளும் வெளியிடப்பட்டுவிட்டன. வரும் 14, 15 தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு, நேர்முகத் தேர்வுகளும் நடத்தப்பட உள்ளன.

திருத்திய வரையறை: 

டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளுக்கு சில வரையறைகள் வகுக்கப்பட்டு பின்பற்றப்பட்டு வருகின்றன. இதில் இப்போது திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்தத் திருத்திய வரையறை டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் திங்கள்கிழமை (நவ.7) பதிவேற்றம் செய்யப்படும். இவற்றைத் தேர்வர்கள் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.
தேர்வாணையத்தால் திங்கள்கிழமை முதல் அறிவிக்கப்படும் அனைத்துப் போட்டித் தேர்வுகளுக்கும், இந்த திருத்திய வரையறையே பின்பற்றப்படும்.

குரூப்-1 தேர்வு அறிவிக்கை:

துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பணிகளில் 81 காலி இடங்களுக்காக 2016 ஆம் ஆண்டுக்கான குரூப்-1 தேர்வு நடத்தப்பட உள்ளது. 
இதற்கான அறிவிக்கை நவம்பர் 9 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது என்றார் அவர்.

தமிழ்நாட்டில் 3975 குறுவளமையங்களில் அறிவியல் கண்காட்சி நடத்த உத்தரவு

ராஷ்டிரிய அவிஸ்கார் அபியான் திட்டம் சார்பில், தமிழ்நாட்டில் உள்ள 3975 குறுவளமையங்களில் அறிவியல் கண்காட்சி நடத்த அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி உத்தரவிட்டுள்ளார். இதற்காக ஒவ்வொரு குறுவளமையத்திற்கும் தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.397.50 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.


இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார வளமைய மேற்பார்வையாளர் எஸ்.மாடசாமி  வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

ராஷ்டிரிய அவிஸ்கார் அபியான் (RAA) திட்டமானது மாணவர்கள் அறிவியல் மற்றும் கணித கற்றலை மகிழ்ச்சியான கற்றலாக அமைப்பதற்கும், புதுமை செய்வதில் கவனம் செலுத்தவும், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவும் அமைக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் திட்டத்தின் நோக்கத்தினை மாணவர்கள் பெறும் வகையில், அறிவியல் கண்காட்சிகள் குறுவளமைய அளவில் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. 

இந்த ஆண்டு இந்த கண்காட்சிக்கான தலைப்பு தேசிய வளர்ச்சியில் அறிவில், தொழில்நுட்பம் மற்றும் கணிதத்தின் பங்கு (Science, Technology and Mathematics for Nation Building) ஆகும்.

இத் தலைப்பில் உடல்நலம், தொழிற்துறை, போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு, நிலையான சுற்றுச் சூழலுக்கான புதுப்பிக்கத்தக்க வளங்களை கண்டுபிடித்தல், உணவு உற்பத்தி மற்றும் உணவு பாதுகாப்பில் புதுமைகள், அன்றாட வாழ்வில் கணிதம் அடிப்படையிலான தீர்வுகள் ஆகியவை உட்கருத்துப் பொருட்களை உள்ளடக்கிய அறிவியல் கண்காட்சிக்கான மாதிரிகள் (Models) மற்றும் திட்டங்களை (Projects) மாணவர்கள் தயார் செய்ய வேண்டும்.

குறுவளமையம் அமைந்துள்ள பள்ளியிலே அறிவியல் கண்காட்சி நடத்தப்படும். மாநிலத்தில் 3975 குறுவளமையங்களில் நடைபெறும் இக் கண்காட்சிக்கு பள்ளிக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.397.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 134 குறுவளமையங்களில் நவம்பர் 25-ம் தேதிக்குள் இந்த அறிவியல் கண்காட்சி நடத்தி முடிக்கப்படும்.

தொடக்கப் பள்ளிகள் (1 முதல் 5 வகுப்பு) 2 மாதிரிகளும், நடுநிலைப் பள்ளிகளில் (1-5 வகுப்பு 2 மாதிரிகளும் 6-8 வகுப்பு 2 மாதிரிகளும்) 4 மாதிரிகள் தயார் செய்ய வேண்டும். உயர்நிலைப் பள்ளி/மேல்நிலைப் பள்ளிகளில் 6-8 வகுப்பு மாணவர்கள் இரு மாதிரிகளும் தயார் செய்ய வேண்டும்.

பள்ளிகளுக்கு ஒதுக்கப்பட்ட மாதிரிகள் மற்றும் திட்டங்களின் எண்ணிக்கைத் தவிர்த்து, மாணவர்கள் தாங்களாக முன் வந்து செய்யும் மாதிரிகள் ஊக்குவிக்கப்படும். இதற்காக ஆசிரியர்கள் விலையில்லா மற்றும் விலைகுறைந்த பொருட்களைப் பயன்படுத்தி மாதிரிகள் செய்ய மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும்.

மலரும் இளம் விஞ்ஞானிகளை ஊக்குவிக்கும் விதமாகவும், அவர்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் விதமாகவும், குறுவளமையம் அளவில் சிறந்த மூன்று மாதிரிகள் நடுவர் குழு தேர்வு செய்து முறையே ரூ.400, ரூ.300, ரூ.200 வழங்கும்.

சிறப்பாக பங்கேற்ற பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களின் படைப்பாற்றல், திறமை, ஈடுபாட்டினை ஊக்குவிக்கும் வகையில் சிறந்த பள்ளியினை நடுவர் குழு தேர்வு செய்து அவர்களின் கூட்டு முயற்சிக்காக ரூ.500 மதிப்புள்ள கேடயம் பரிசாக வழங்கும்.

கண்காட்சியை கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர்கள், உதவி திட்ட அலுவலர்கள், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள், உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் உள்ளிட்டோர் பார்வையிடுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

புதிய கல்விக் கொள்கை நாட்டின் வளர்ச்சிக்கானது - எந்தவித அரசியலும் இல்லை: ஜாவடேகர்

சென்னை,புதிய கல்விக் கொள்கை நாட்டின் வளர்ச்சிக்கானது. இதில் எந்தவித அரசியலும் இல்லை என்று மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் பேசினார்.
சென்னையில் பாரதிய ஜெயின் சங்காதனா (Bharatiya jain sanghatana) அமைப்பின் சார்பில், -இந்தியாவின் பள்ளி கல்வியில் உள்ள சவால்கள்- என்ற தலைப்பிலான இரண்டு நாள் தேசிய மாநாடு சனிக்கிழமை தொடங்கியது.
இந்த மாநாட்டை தொடங்கி வைத்து மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் பேசியதாவது: நமது நாட்டின் கல்வி முறையில் புதுமையான முறைகள் அவசியமாகும். எல்லா துறைகளிலும், தரமான வளர்ச்சியை அடைய வேண்டும் என்பதே பிரதமரின் முக்கிய நோக்கமாகும்.

குறிப்பாக, நமது நாட்டின் கல்வி முறையை மேலும் சிறப்பானதாக உருவாக்கவும், அதன் தரத்தை மேம்படுத்தவும் மத்திய அரசு முயன்று வருகிறது.
அரசியல் இல்லை...
கல்வியை அடுத்த நிலைக்கு முன்னெடுத்து செல்லும் நோக்கில், புதிய கல்வி கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கொள்கை நாட்டின் வளர்ச்சிக்கானது. இவற்றில் எந்தவித அரசியலும் இல்லை. நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்காக, புதிய கல்விக் கொள்கையின் அவசியம் ஏற்பட்டுள்ளது.
எந்த விதத்திலும் அரசியலமைப்பு சட்டத்தில், சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்ட உரிமைகள் சிதைக்கப்படாது. கல்விக் கொள்கைக்கான வரையறை அறிக்கையில், ஒரு பகுதி மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. இது, இறுதியானது அல்ல.
நாடு முழுவதும் உள்ள மாநிலங்கள், பல்வேறு தரப்பினருடன் விவாதிக்கப்பட்டு, அவர்கள் அளிக்கும் கருத்துகளையும் கவனத்தில் கொண்டே இறுதி செய்யப்படும். ஆனால், தமிழகம், கேரளத்தில் சரியான புரிதல் இல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது அவசியமற்றது.
நவம்பர் 10-ஆம் தேதி அனைத்து எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் அனைத்து மாநிலத்திலுள்ள நிர்வாகிகள் தெரிவிக்கும் கருத்துகளும் கவனத்தில் கொள்ளப்படும்.
ஜாதி, மதம் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டு, நல்ல மனித நேயத்தை வளர்க்கவும், புதிய கல்வி கொள்கை வழிவகுக்கும். மேலும் சக மனிதர்களை, மனிதர்களாக மதிக்கவும் பயன்படும் என்றார்.

போலி 10 ரூபாய் காயின் வலம் வருகிறது... கவனமாக இருங்க..

27/10/16

வெளிநாட்டு பல்கலை., கூடாது: தமிழக அரசு எதிர்ப்பு

நாட்டின் சமூக கட்டமைப்புக்கு முரண்பாடாக அமையும் என்பதால், வெளிநாட்டு பல்கலைக் கழங்களை,இந்தியாவில் அமைக்கஅனுமதிக்க கூடாது' என, தமிழக அரசு தெரிவித்துள்ளது. டில்லியில், நேற்று நடந்த, மத்திய அரசின் கல்வி வாரிய ஆலோசனைக் கூட்டத்தில், தமிழக அரசின் சார்பில் பங்கேற்ற, உயர் கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் பேசியதாவது:

தமிழகம் ஏற்காது

தமிழகத்தில், மீன்வளம், விவசாயம், கல்வி, சட்டம், இசை, கலை, விளையாட்டு என, ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே பல்கலைக் கழகங்கள் உள்ளன. 

எனவே, அனைத்தையும் ஒருங்கிணைக்கும் வகை யிலான, பல்நோக்கு முனைப்புடன் கூடிய, மத்திய அரசின் அணுகுமுறையை தமிழகம் ஏற்காது.

அனுபவம் வாய்ந்த கல்வியாளர்களுக்கு, உயர் கல்வி நிறுவனங்களில் தற்போது அளிக்கப்பட்டு வரும் வாய்ப்புகள் நீடிக்க வேண்டும். 

இந்த நடை முறையில் மாறுதல்கள் கூடாது. எனவே, 'இந்திய கல்விச் சேவை' என்ற மத்திய அரசின் கருத்துரு வாக்கத்தை தமிழகம் எதிர்க்கிறது. 

தேவையில்லை

உயர் கல்வி நிறுவனங்களில் காணப்படும் பிரச்னைகளை களைவதற்கு, தமிழகத்தில், ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையிலான, இரு கமிட்டிகள் ஏற்கனவே உள்ளன; புதியதீர்ப்பாயம் அமைக்க தேவையில்லை. 

வெளிநாட்டு பல்கலைக் கழகங்களுக்கு, அனுமதி வழங்குவதை மத்திய அரசு ஊக்குவிக்கக் கூடாது. வெளிநாட்டு பல்கலைக் கழகங்களில் சமூக கண்ணோட்டத்தை காட்டி லும், வர்த்தக நோக்கமே பெரிதாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார். 

கிராமப்புற பள்ளிகளில் கழிப்பறை வசதி; ஆய்வு செய்ய வக்கீல் குழு நியமனம், ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு

Why the DA from July 2016 is not announced yet?

All the Central Government Employees wonder why there is so much delay in announcing the DA from July 2016, the first instalment of Dearness Allowance in 7th CPC. The silence of the Federations in the Dearness Allowance issue is not understandable. The way the present Government deal with the issues related to central government Employees is unacceptable. But it seems that the Staff Associations lost its vigour to fight with the Government to settle the genuine issues pertaining to Central Government Employees.


Already the fate of the Allowances is not known. To Everyone’s Surprise, the Government is not ready to say anything about Dearness Allowance, as there is none to ask them about why the DA has not been announced. If the Federation know the reason for the delay of announcing the DA from July 2016, they bound to tell the CG Staffs the reason behind the inordinate delay. Whether it is 3% or 2% whatever it may be , but Dearness Allowance announcement should be made in time. The morale of the employee should not be let down. Because low morale can lead to poor cooperation, low productivity.

தீபாவளிக்கு முன் சம்பளம் கிடைக்குமா ? என்ன சொல்கிறது அரசு அறிக்கை!

தீபாவளிப் பண்டிகை அக்டோபர் 29-ம் தேதி கொண்டாடப்படுகிறது. 'மாத கடைசியில் தீபாவளி வருகின்றதே... செலவுக்குப் பணத்துக்கு என்ன செய்வது... ' என்ற வருத்தத்தில் அரசு ஊழியர்கள் இருந்தனர். இந்நிலையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் அரசுக்கு ஒரு கோரிக்கை வைக்கப்பட்டது.
அக்டோபர் மாத சம்பளத் தொகையை தீபாவளிக்கு முன்னரே வழங்கவேண்டும் என்று  கேட்டனர். அதனைத் தொடர்ந்து இந்த மாதம் தீபாவளிக்கு முன்பே சம்பளம் வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது.

அக்டோபர் 25-ம்  தேதி, தமிழக அரசின் நிதித்துறை செயலாளர் க. சண்முகம் வெளியிட்ட அரசாணை 277-ல், 'இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 29-ம் தேதி அன்று வருவதால், தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் மாத ஊதியத்தை தீபாவளிப் பண்டிகைக்கு முன்பாக வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் அக்டோபர் 21-ம் தேதி கோரிக்கை விடுத்தது.


தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் கோரிக்கையை பரிசீலனை செய்து 2016-ம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அக்டோபர் மாதத்துக்கான ஊதியத்தை 28.10.16 அன்று வழங்க சம்பந்தப்பட்ட சம்பளம் வழங்கும் அலுவலர்களுக்கு உரிய தெளிவுரையை வழங்க முதன்மைச் செயலர் கருவூல கணக்கு ஆணையருக்கு அணுமதி அளித்து ஆணை வெளியிடப்படுகிறது’ என்று உத்தரவிடப்பட்டு இருந்தது. 

இந்த அறிவிப்பு வெளியானவுடன் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். "புதிய அகவிலைப்படியை 1.7.16 முதல் வழங்கவில்லை என்றாலும், இந்த மாத சம்பளத்தையாவது தீபாவளிக்கு முன்பு தர ஆணையிட்டுள்ளது சற்று ஆறுதலாக இருக்கிறது" என்று கூறி வந்தனர். ஊழியர்களின் சந்தோஷத்துக்கு வேட்டு வைப்பது போல,  நிதித்துறை  வெளியிட்ட அரசாணை  எண் 277-ஐ அமல்படுத்த வேண்டாம் என்று அவசர அவசரமாக கருவூலத்துறை ஆணையரகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. தனது, கிளை கருவூலங்களுக்கும், "அக்டோபர் மாத சம்பளத்தை வழக்கம் போல் இம்மாதமும் 31-ம் தேதி அரசு ஊழியர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தவேண்டும்" என்று அறிவித்துள்ளனர். அரசுத் துறையிலேயே குழப்பமாக இரண்டு அறிவிப்புகளை வெளியிட்டிருப்பது, அரசு ஊழியர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

கருவூல கணக்குத் துறை அதிகாரிகளிடம் விசாரித்தபோது “மாதத்தின் இறுதி நாட்கள் விடுமுறை தினமாக இருந்தால் மட்டுமே அதற்கு முந்தின வேலைநாளன்று சம்பள விநியோகம் செய்யலாம். ஆனால் இந்த மாதம் 31-ம் தேதி அலுவல் நாளாக உள்ளது. கருவூல கணக்கு சட்டப்படி, இறுதி நாள் பணிநாளாக இருந்தால், அந்த நாளில் தான் சம்பளம் போட வேண்டும். தீபாவளி அன்று விடுமுறை, அதற்கு மறுதினம் ஞாயிற்றுக் கிழமை. ஆனால் திங்கள் கிழமை அன்று வேலைநாள். அன்று தான் மாதத்தின் கடைசி நாள். ஆனால் நிதித்துறை 28-ம் தேதி வெள்ளியன்று சம்பளம் போட அறிவித்தது. ஆனால் சட்டப்படி அந்தநாளில் அப்படி போட முடியாது என்பதால் தான், நாங்கள் எங்கள் அலுவலர்களுக்கு, 28-ம் தேதி சம்பளம் போட வேண்டாம். அரசாணை 277-ஐ அமல்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளோம்” என்றனர். 

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் தமிழ்செல்வி கூறுகையில் “மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போல தமிழக அரசு ஊழியர்களுக்கு ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைத்துள்ள புதிய ஊதியமும் இதுவரை வழங்கவில்லை. அகவிலைப்படி உயர்வும் தரவில்லை. எங்களது கோரிக்கையை ஏற்று, இந்த மாத சம்பளத்தை அக்டோபர் 28-ம் தேதி போடுவதாக அறிவிப்பு வந்தது. ஆனால் அதற்கு கருவூலத்துறை முட்டுக்கட்டை போட்டுவிட்டது. அரசாங்கம் நினைத்தால் முன்கூட்டியே சம்பளம் போடலாம். ஆனால் அவர்கள் அதைபற்றி யோசிக்கவில்லை. நிதித்துறை அனுமதி அளித்தும், அவர்களுக்கு கீழ் செயல்படும் கருவூலத்துறை உயர் அதிகாரிகளின் பிடிவாதத்தால், 18 லட்சம் அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் குடும்பத்தின் தித்திக்கும் தீபாவளிக் கொண்டாட்டத்தை, கசக்க வைத்து விட்டனர். இதற்கு தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் ” என்று கேட்டுகொண்டார்.  

அரசுத் துறைகளின் இந்த மோதலால், தீபாவளிப்பண்டிகை அரசு ஊழியர்களுக்கு தீபா’வலி’   ஆகிவிடுமோ ? 

- எஸ்.முத்துகிருஷ்ணன்.

பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிப்பது எப்படி? மாணவர்களுக்கு ஆசிரியர்கள் அறிவுறுத்த வலியுறுத்தல்

பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிப்பது குறித்தும், தீ பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள் தினமும் சுமார் 5 நிமிஷங்கள் மாணவர்களிடம் பேச வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.


இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தீபாவளி பண்டிகை அக்டோபர் 29-இல் கொண்டாடப்பட உள்ளது. இத்தகைய மகிழ்ச்சிகரமான நன்னாளில் கவனக்குறைவாக பட்டாசு வெடிப்பதால் சில இடங்களில் தீ விபத்து ஏற்பட்டு குடிசைப் பகுதிகளில் உயிர், பொருள்சேதங்கள் ஏற்படுகின்றன. மேலும், மாணவர்களுக்கு தீக்காயங்களும் சில நேரங்களில் பார்வை இழப்பும் ஏற்படுகிறது. இத்தகைய நிகழ்வுகளை தவிர்ப்பதும் தடுப்பதும் முக்கிய கடமையாகும். முறையாக கவனமாக பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.

தவறுதல் காரணமாக தீ விபத்துகள் ஏற்பட ஏதுவாக உள்ளது. எனவே, விபத்துகள் அற்ற மகிழ்ச்சி நிறைந்த தீபாவளி கொண்டாட மாணவர்கள் அறியுமாறு செயல்முறை விளக்கம் செய்திட வேண்டும். பட்டாசுகளை கொளுத்தும்போது தளர்வான ஆடைகள் உடுத்துவதை மாணவர்கள் தவிர்க்கவும். டெரிகாட்டன், டெர்லின் ஆகிய எளிதில் பற்றக் கூடிய ஆடைகளை அணியக் கூடாது. ஒரு வாளி தண்ணீர் வைத்துகொண்டோ பட்டாசு வெடிக்க வேண்டும். கொளுத்தி கையில் வைத்துக்கொண்டோ அல்லது உடலுக்கு அருகில் வெடிக்காமல் பாதுகாப்பான தொலைவில் வைத்தே வெடியுங்கள். பெற்றோர்களின் முன்னிலையில் அவர்களது பாதுகாப்பின் கீழ் குழந்தைகள் வெடிக்க வேண்டும்.

மருத்துவமனைக்கு அருகில் பட்டாசுகளை வெடிக்காதீர்கள். விலங்குகளை துன்புறுத்தும் வகையிலும் பட்டாசுகளை வெடிக்காதீர்கள். இரவு 10 முதல் காலை 6 மணிவரை பட்டாசுகளை வெடிக்காதீர்கள். உடலையும் மனநிலையையும் பாதிக்கும் வகையில், அதிக சப்தமுள்ள பட்டாசுகளை வெடிக்க வேண்டாம். ஒரு நாள் கொண்டாட்டத்துக்காக வாழ்நாள் முழுவதும் துன்பப்பட வேண்டாம்.

மகிழ்ச்சி நிறைந்த விபத்துகளற்ற தீபாவளி கொண்டாடும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது. நாள்தோறும் பள்ளியின் காலை இறைவணக்கத்துக்கு பின்னரோ அல்லது அணி திரளும்போதோ சுமார் 5 நிமிஷங்களுக்கு முன்னதாக தீ பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள் பேச வேண்டும். விபத்தில்லா வகையில் எவ்வாறு கொண்டாடுவது என்பது குறித்து மாணவர்களின் அறிவுக்கூர்மையை சோதித்து பார்த்தல், ஒரு குறிப்பிட்ட இடைவெளி நேரத்தில் 5 முதல் 10 நிமிஷம் தீ பாதுகாப்பு குறித்து நிகழ்ச்சி நடத்துதல், வரைபடபோட்டி நடத்தி பரிசளித்தல் உள்ளிட்ட விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.

7வது ஊதியக்குழுவில் அடிப்படை ஊதியவிகித்தை மாற்றக் கோரிக்கை

சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவு...

சிறுநீரகத்தில் கற்கள் உள்ளவர்கள் உணவு கட்டுபாட்டை மேற்கொள்வது அவசியம். எந்த உணவுகளை சாப்பிடவேண்டும் என்பதை தெரிந்து கொண்டு சாப்பிட்டால் சிறுநீரககல் பிரச்சனையை சரிசெய்து விடலாம். எந்தெந்த உணவுகளை சாப்பிடலாம் என்பதை பார்க்கலாம்.


காரட், பாகற்காய், இளநீர்: இதில் பொட்டாசியம், மெக்னீஷியமும் அதிகம் உள்ளன. இவை சிறுசீரகக் கற்களின் முன்னோடிகளான படிகங்களைக் கரைத்து படிய விடாமல் தடுக்கும் சக்தியுடையது. கேரட்,பாகற்காய்களில் பொதுவாக சிறுநீரகக் கற்களின் படிகங்களை தடுக்கும் பலவித தாது உப்புக்கள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

வாழைப்பழம், எலுமிச்சை: இவற்றில் விட்டமின் ஙி6 சத்தும், சிட்ரேட் (citrate) சத்தும் அதிகம் உள்ளன. இவை சிறுநீரகக் கற்களின் ஒரு முக்கிய அங்கமான ஆக்சலேட் (Oxalate) என்ற இரசாயனத்துடன் சேர்த்து அதைச் சிதைத்து படிய விடாமல் தடுத்து சிறுநீரகக் கற்கள் உருவாகாமல் தடுக்க வல்லவை.

அன்னாச்சி பழம்: இதில் சிறுநீரக கற்களின் கருவாக இருக்கும் ஃபைப்ரின்(Fibrin) எனப்படும் சத்தை சிதைக்கும் நொதிகள் (Enzymes) உள்ளன. இது சிறுநீரக கற்களை கறைக்கும் தன்மை கொண்டுள்ளது.

கொள்ளு, பாதாம் பருப்பு, பார்லி ஓட்ஸ்: கொள்ளில் உள்ள சில நீர்ப் பொருட்கள் சிறுநீரகக் கற்கள் உருவாவதை தடுக்கும் திறன் கொண்டவை. நார்ச்சத்து உள்ள உணவுகள். பாதாம் பருப்பு, பார்லி ஓட்ஸ் போன்றவற்றில் சிறுநீரக கற்கள் வராமல் தடுக்கும் பலவித சத்துகள் உள்ளன. பொதுவாக சில காய்கறிகள், பழங்களைத் தவிர தினமும் உணவில் நார்சத்து உள்ள காய்கறிகள், பழங்கள், முழு தானியங்களை அதிகமாக சேர்த்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.கற்கள் வருவதையும் தடுக்கும்.

உப்பு: உணவில் உப்பையும் பெருமளவு குறைத்துக் கொள்வது சிறுநீரில் கால்சியம் சத்து வெளியாவதை தடுத்து சிறுநீரகக் கற்கள் வரும் வாய்ப்பை குறைப்பதாக இப்போது கண்டறியப்பட்டுள்ளது.

அகவிலைப்படி உயர்வை தீபாவளிக்கு முன்பாக வழங்கக்கோரி அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


 புதுக்கோட்டையில்வருகின்ற தீபாவளிக்கு முன்பாக அகவிலைப்படி உயர்வைஅறிவித்து வழங்க வேண்டும் என்பனஉள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் புதுக்கோட்டைமாவட்டத்தில் 60-க்கும் மேற்பட்ட இடங்களில்புதன் கிழமையன்று
ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.

புதுக்கோட்டைமாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கமாவட்டத் தலைவர் கே.ஜெயபாலன்தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலாளர்சி.கோவிந்தசாமி, பொருளாளர் கே.நாகராஜன் மற்றும்நிர்வாகிகள் கு.சத்தி, மலர்விழி, ரெங்கசாமி, மு.முத்தையா, ஆர்.சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தீபாவளிக்குமுன்பாக அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும். ஊதியக்குழுவை உடனடியாக அமைக்க வேண்டும். சிபிஎஸ்திட்டத்தை ரத்துசெய்ய வேண்டும். முதல்வர் அறிவித்தபடி மகப்பேறு விடுப்பை 9 மாதமாக அமுல்படுத்த வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்துசெய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறுகோரிக்கைகள்

எழுப்பப்பட்டன.

அரசு ஊழியர்களுக்கு உரிமைகளும், ஊதியமும் தருவதில் குழப்பம் ஏன்? பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம்

தீபஒளிதிருநாளையொட்டி அரசு ஊழியர்களுக்கான அக்டோபர்மாத ஊதியம் 28-ஆம் தேதி வழங்கப்படும்என அறிவித்த தமிழக அரசு, சிறிது
நேரத்தில் அதை திரும்பப்பெற்றது கண்டிக்கத்தக்கதுஎன பாமக நிறுவனர் ராமதாஸ்கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“தமிழகஅரசின் செயல்பாடுகள் எந்த அளவுக்கு தடுமாற்றத்தில்உள்ளன என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் அரசு ஊழியர்களுக்கானஊதியத்தை முன்கூட்டியே வழங்குவதில் நிகழ்ந்த குழப்பங்கள் தான். தீபஒளி திருநாளையொட்டிஅரசு ஊழியர்களுக்கான அக்டோபர் மாத ஊதியம் 28-ஆம்தேதி வழங்கப்படும் என அறிவித்த தமிழகஅரசு, சிறிது நேரத்தில் அதைதிரும்பப்பெற்றது கண்டிக்கத்தக்கது.

நடப்பாண்டிற்கானதீபஒளி திருநாள் இம்மாத இறுதியில் 29-ஆம்தேதி வருவதால், அதைக் கொண்டாட வசதியாகஇம்மாத ஊதியத்தை முன்கூட்டியே வழங்குமாறு தமிழ்நாடு அரசு ஊழியர் அமைப்புகள்பலவும் கோரிக்கை விடுத்திருந்தன. புதுச்சேரியில் தீபஒளி திருநாளையொட்டி நேற்றேஊதியம் வழங்கப்பட்டதால் தமிழக அரசு ஊழியர்களிடையேஇக்கோரிக்கை தீவிரமடைந்தது. இந்தக் கோரிக்கையில் உள்ளநியாயத்தை உணர்ந்த தமிழக அரசு, அதன் ஊழியர்கள் அனைவருக்கும்  அக்டோபர்மாத ஊதியம் நாளை மறுநாள்28-ஆம் தேதி வழங்கப்படும் எனநேற்று மாலை ஆணை பிறப்பித்தது. இதனால் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியடைந்தநிலையில் அந்த அரசாணையை ரத்துசெய்த அரசு, ஊழியர்களுக்கு நாளைமறுநாள் ஊதியம் வழங்கப்படாது; வழக்கம்போல மாதக் கடைசி நாளான31-ஆம் தேதி தான் ஊதியம்வழங்கப்படும் என்று புதிய அரசாணையை  வெளியிட்டது.

தமிழக அரசின் இந்தக் குளறுபடியால்அரசு பணியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எவ்வளவு ஊதியம் ஈட்டினாலும், மாதத்தின் கடைசி வாரத்தை கடன்வாங்கி கழிப்பது தான் தமிழக அமைப்புசார்ந்த பணியாளர்களில் பெரும்பாலானோரின் வழக்கமாக உள்ளது. இதைக் கருத்தில்கொண்டு தான் பாட்டாளி மக்கள்கட்சி ஆட்சிக்கு வந்தால் மாதத்திற்கு இருமுறைஊதியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்றுதேர்தல் வாக்குறுதி அளித்திருந்தோம்.  தீபஒளிதிருநாளுக்கு  புத்தாடைஎடுத்தல், பட்டாசுகள் மற்றும் இனிப்பு வாங்குதல்மற்றும் பிற செலவுகளுக்காக கூடுதல்பணம் தேவைப்படும் என்பதால் தான் முன்கூட்டியே ஊதியம்தேவை என்ற கோரிக்கை எழுந்தது.

இக்கோரிக்கையைஏற்றுக்கொண்ட தமிழக அரசு, திடீரெனபின்வாங்கியது ஏன் என்பது மர்மமாகவேஉள்ளது. எது எப்படி இருந்தாலும்தமிழக அரசின் இந்த அணுகுமுறைஎந்த வகையிலும் நல்லதல்ல.
ஊதியத்தைமுன்கூட்டியே வழங்க வேண்டும் என்றகோரிக்கை தவறானதோ, நிறைவேற்றுவதற்கு சாத்தியமற்றதோ இல்லை. அண்டை மாநிலமானபுதுச்சேரியில் அக்டோபர் ஊதியம் கடந்த 25-ஆம்தேதி வழங்கப்பட்டு விட்டது. அவ்வாறு இருக்கும் போதுதமிழகத்தில் இது ஏன் சாத்தியமில்லைஎன்பது தெரியவில்லை. ஒருவேளை சாத்தியமற்றதாக இருந்தால்கூட அதை சாத்தியமாக்குவது தான்நிர்வாகத்தின் பணியாக இருக்க வேண்டுமேதவிர, அறிவித்ததை திரும்பப்பெறுவது அழகல்ல.

இத்தனைக்கும்இதில் பெரிய சலுகை எதுவும்இல்லை. வழக்கத்தை விட ஒரே ஒருவேலை நாள் முன்கூட்டியே ஊதியம்வழங்கினால் போதுமானது. ஒருவேளை தீபஒளி திருநாள்இம்மாதம் 31-ஆம் தேதி கொண்டாடப்பட்டால்அதற்கு முந்தைய வேளைநாளான 28-ஆம்தேதியே ஊதியம் வழங்கப்பட்டு இருக்கும். அதேபோல், இப்போதும் ஊதியம் வழங்குவதில் எந்தசிக்கலும் இல்லை. ஆனாலும், ஊதியம்வழங்கப்படாததற்கு அரசு ஊழியர்கள் மீதுஆட்சியாளர்களுக்கு உள்ள வெறுப்பு தான்காரணமாகும்.

ஊதியத்தைமுன்கூட்டியே வழங்குவதில் மட்டுமின்றி மற்ற விஷயங்களிலும் தொழிலாளர்விரோத போக்கைத் தான் தமிழக அரசுகடைபிடித்து வருகிறது. ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகள்மத்திய அரசு ஊழியர்களுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டு, நிலுவைத் தொகை ஒரே தவணையில்வழங்கப்பட்டு விட்டது. ஆனால், தமிழகத்தில் ஏழாவதுஊதியக்குழு பரிந்துரைகளை செயல்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதுமட்டுமின்றி, மத்திய அரசு ஊழியருக்குகடந்த ஜூலை முதல் அகவிலைப்படிஉயர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவரும் நிலையில், தமிழக அரசு ஊழியர்களுக்குஅகவிலைப்படி உயர்வும் வழங்கப்படாதது செய்யாத தவறுக்கு கிடைத்தஇரட்டை தண்டனையாகும்.


எனவே, அரசு ஊழியர்களின் நலனைக்கருத்தில் கொண்டு அவர்களுக்கான அக்டோபர்ஊதியத்தை  நாளைமறுநாள் வழங்க அரசு முன்வரவேண்டும். அதுமட்டுமின்றி, 7-ஆவது ஊதியக்குழு பரிந்துரை,  அகவிலைப்படிஉயர்வு, பழைய ஓய்வூதியத் திட்டத்தைசெயல்படுத்துதல் உள்ளிட்ட தமிழ்நாடு அரசு ஊழியர்களின் கோரிக்கைகளையும்  உடனடியாகநிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்”  இவ்வாறு கூறியுள்ளார்.

தீபாவளிக்கு முதல் நாள் பள்ளிகளுக்கு விடுமுறை?

தீபாவளிக்கு முதல் நாள், பள்ளிவேலை நாளாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால், பல பள்ளிகள், உள்ளூர்விடுமுறை எடுக்க முடிவு செய்துள்ளன. தீபாவளி பண்டிகை, அக்., 29ல் கொண்டாடப்படுகிறது. ஆனால், ஆயுத பூஜை பண்டிகைமுதலே, தீபாவளி பண்டிகைக்கான முன்தயாரிப்புகள் துவங்கி உள்ளன. தீபாவளிபண்டிகை, சனிக்கிழமை வருவதால், அதற்கு முதல் நாளானவெள்ளிக்கிழமை வரையும்,
அதேபோல், அக்., 31, திங்கள் கிழமையும் வழக்கம்போல், பள்ளிகள் இயங்கும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால், பல தனியார் பள்ளிகள், வரும் வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவித்துள்ளன. ஆனால், அரசு பள்ளிகளுக்குவிடுமுறை அறிவிக்கவில்லை. எனவே, ஆசிரியர், மாணவர், பெற்றோர் வேண்டுகோள்படி, பல மாவட்டங்களில், உள்ளூர்விடுமுறை எடுத்து கொள்ள, தலைமைஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர்.

சில பள்ளிகள், வெள்ளிக்கிழமை மதியம் வரை, பள்ளிகளைஇயக்க முடிவு செய்துள்ளன. வரும்வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவித்தால், அதற்கு பதில், வரும்வாரங்களில் விடுமுறை நாளான சனிக்கிழமையில், ஈட்டுவகுப்பு நடத்த வேண்டும் என, தலைமை ஆசிரியர்களை, மாவட்ட கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

அரசு ஊழியருக்கு ஓய்வூதியம் ரூ.770 : உண்மைதான்... நம்புங்க!

மத்திய அரசின் வருமானவரித்துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஊழியர்ஒருவரின் ஓய்வூதியம், தமிழக அரசு வழங்கும்முதியோர் ஓய்வூதியத்தை விட குறைவாக உள்ளது.மதுரையில், மத்திய அரசின் வருமானவரித்துறை அலுவலகத்தில், பெண் ஊழியர் ஒருவர்1990ல் தினக்கூலியாக சேர்ந்தார்; 1993ல் பகுதிநேர பணியாளராகநியமிக்கப்பட்டார்.பின், 2008 ல் பணி நிரந்தரம்செய்யப்பட்டு, 2015 மே மாதம் ஓய்வுபெற்றார். அப்போது, அவரது பணப்பலனில் 60 சதவீதம்
வழங்கப்பட்டது. மீத தொகையை (ரூ.ஒரு லட்சத்து 33 ஆயிரத்து33) ஓய்வூதியத்திற்காக எல்.ஐ.சி., 'ஜீவன் அக் ஷயா -6' திட்டத்தில்டிபாசிட் செய்யப்பட்டது. இதையடுத்து, எல்.ஐ.சி., சார்பில் அந்த ஊழியருக்கு பத்திரம்கொடுத்துள்ளனர். அதில், 'டிபாசிட் செய்யப்பட்டபணத்திற்கு மாத ஓய்வூதியமாக ரூ.770 வழங்கப்படும்' என குறிப்பிடப்பட்டுள்ளது.தமிழகத்தில் முதியோர்ஓய்வூதியம் பெறும் ஆதரவற்றவர்களுக்கு, மாதம்ரூ.1,000 வழங்கப்படுகிறது; ஆனால், மத்திய அரசின்வருமான வரித்துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஊழியருக்கு, மாத ஓய்வூதியம் ரூ.770 தான் கிடைக்கிறது.

திண்டுக்கல்லைசேர்ந்த ஏங்கல்ஸ் கூறியதாவது: மத்திய அரசில் 25 ஆண்டுகளாகபணிபுரிந்து, ஒரு லட்சத்து 33 ஆயிரத்தைடிபாசிட் செய்தவருக்கு, மாதம் ரூ.770 தான்என்பது வேதனைக்கு உரியது. இந்தத் தொகையும், 20 ஆண்டுகள் ஆனாலும் உயரப்போவது இல்லை. புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழையதிட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றார்.

26/10/16

டிபாசிட்' பணம் கிடைக்குமா? : நிபுணர்களுடன் ஆலோசனை

தமிழகத்தில், உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை, அக்., 17, 19ல், நடத்த, மாநில தேர்தல் கமிஷன் முடிவு செய்தது. இதற்கான அறிவிப்பு, செப்., 25ல் வெளியானது. வேட்பு மனு தாக்கல் மறுநாள் துவங்கி, அக்., 3ல் முடிந்தது. தேர்தலில் போட்டியிட, 4.97 லட்சம் பேர் மனு தாக்கல் செய்தனர். இவர்களிடம் இருந்து, 10 கோடி ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்பட்டது. ஆனால், இட ஒதுக்கீட்டை முறையாக பின்பற்றவில்லை எனக் கூறி, சென்னை உயர் நீதிமன்றம், தேர்தலை ரத்து செய்தது. அதனால், ஏற்கனவே மனு தாக்கல் செய்தவர்கள், டிபாசிட் பணம் திரும்ப கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.


இதுகுறித்து, மாநில தேர்தல் கமிஷன் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'உள்ளாட்சி தேர்தல் வழக்கை, சுமுகமாக முடிக்க கவனம் செலுத்தி வருகிறோம். மனு தாக்கல் செய்தவர்களுக்கான டிபாசிட் பணம் திரும்ப தருவது குறித்து, சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்' என்றார்.

அறிவித்த தேதியில் குரூப் - 4 தேர்வு : டி.என்.பி.எஸ்.சி., உறுதி

அரசு துறையில் காலியாக உள்ள, 5,451 இடங்களுக்கான, குரூப் - 4 தேர்வு திட்டமிட்டபடி நடக்கும்' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. தமிழக அரசு துறைகளில், இளநிலை உதவியாளர், வரி வசூலிப்பாளர், வரைவாளர், தட்டச்சர் உட்பட, 5,451 காலி பணியிடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான, டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 4 எழுத்து தேர்வு, நவ., 6ல் நடக்கிறது. 10 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

தேர்வுக்கு, 15 நாட்களுக்கு முன், டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில், ஹால் டிக்கெட் வெளியாகும். தேர்வுக்கு, 10 நாட்களே உள்ள நிலையில், ஹால் டிக்கெட் வெளியிடப்படாததால், தேர்வு தள்ளிப்போகுமா என, தேர்வர்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து, தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஷோபனா கூறுகையில், ''தேர்வுக்கு விண்ணப்பிக்க, கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டதால், விண்ணப்ப பரிசீலனை காலம் நீண்டு விட்டது. திட்டமிட்டபடி, நவ., 6ல் தேர்வு நடக்கும். இரு தினங்களில் ஹால் டிக்கெட் வெளியிடப்படும்,'' என்றார். 

தொடக்கக் கல்வி - சேலம் மாவட்டம் - 28.10.2016 அன்று அனைத்து தொடக்க / நடுநிலைப் பள்ளிகளுக்கு முழு வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது.

கருவூலக் கணக்குத்துறை - தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் மாத ஊதியத்தை 28.10.2016 அன்று வழங்க அரசு உத்தரவு

சுடுநீரில் தேன் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம்!

ஆதிகாலத்தில் இருந்தே நம் உடல் சார்ந்த பல வகையான பிரச்சனைகளுக்கு சிறந்த மருந்தாக தேன் பயன்படுகிறது. தேனில் நம் உடல் ஆரோக்கித்திற்கு தேவையான சத்துக்களும், விட்டமின்களும் அதிக அளவில் நிறைந்துள்ளது. காலையில் தினமும் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து குடிப்பதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கிறது.

வெந்நீரில் தேன் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
நாம் தினமும் வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து குடித்து வந்தால், சளி மற்றும் காய்ச்சலில் இருந்து விடுபட்டு தொண்டையில் புண் மற்றும் வறட்டு இருமல் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.
தேன் கலந்த சுடுநீரை தினமும் குடித்து வந்தால், நம் உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, செரிமான மண்டலத்தின் இயக்கத்தை மேம்படுத்துகிறது.
தேன் கலந்த நீரில் நொதிகள், விட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகமாக உள்ளது. எனவே இவை நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி, தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களிடமிருந்து நம் உடலைப் பாதுகாக்கிறது.
வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து தொடர்ந்து குடித்து வருவதால், நம் உடம்பில் ஏற்படும் அலர்ஜி போன்ற பிரச்சனைகளைத் தடுக்கிறது.
தேன் கலந்த நீரில் உள்ள சத்துக்கள் நம் உடலின் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைத்து, ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி, இதய நோய் வராமல் தடுக்கிறது.

TNTET:ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்கின் இறுதி வாதங்கள் நிறைவு - விரைவில் தீர்ப்பு!

தமிழக ஆசிரியர் நியமன தகுதி தேர்வு விவகாரம் தொடர்பான வழக்கில் இறுதி வாதங்கள் முடிவடைந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

அரசாணை
தமிழக அரசின் சார்பில் வெளியிடப்பட்ட அரசாணை எண் 25–ல் ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதும் அனைத்து வகையான இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கும் 5 சதவிகித மதிப்பெண் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.அத்துடன் அரசாணை 71–ல் ‘வெயிட்டேஜ்’ முறையும் பணிநியமனத்தின்போது கருத்தில் கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆனால், மதிப்பெண் விலக்கை எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினருக்கு மட்டுமே வழங்க வேண்டும் என விதிகள் இருக்கும்போது அனைவருக்கும் வழங்குவது சரியல்ல; வெயிட்டேஜ் முறை பின்பற்றப்படுவதால் 5 முதல் 10 ஆண்டுகளுக்கு முன்பாக படிப்பை முடித்தவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என கூறி, சென்னை ஐகோர்ட்டிலும், அதன் மதுரை கிளையிலும் சிலர் வழக்கு தொடர்ந்தனர்.

ஐகோர்ட்டு தீர்ப்பு

இந்த விவகாரம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசின் அரசாணையில் அறிவிக்கப்பட்டுள்ளது சரி என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.ஆனால் இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு கிளை, தமிழக அரசின் முடிவு தேர்வு எழுதுபவர்களுக்கு பாதகமாக இருப்பதாகவும், அரசாணைக்கு தடை விதிப்பதாகவும் உத்தரவு பிறப்பித்தது.

சுப்ரீம் கோர்ட்டு விசாரணை

இதைத் தொடர்ந்து ஆசிரியர் தகுதித்தேர்வு தொடர்பான ஒரே வழக்கில் சென்னை ஐகோர்ட்டு, அதன் மதுரை கிளை ஆகிய இரு வேறு அமர்வுகளின் கருத்து வேறுபாடு அச்சத்தை தருவதாக இருப்பதாகவும், எனவே, சுப்ரீம்கோர்ட்டு தலையிட்டு அனைத்து பிரிவினருக்கும் 5 சதவீத மதிப்பெண் விலக்கு மற்றும் ‘வெயிட்டேஜ்’ முறையை ரத்து செய்ய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் கோரி இந்த தேர்வில் கலந்து கொண்ட லாவண்யா உள்ளிட்டோர் சுப்ரீம்கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர்.இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் சிவகீர்த்தி சிங், ஆர்.பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.அரசாணை செல்லும்மனுதாரர்கள் தரப்பில் மூத்த வக்கீல்கள் நளினி சிதம்பரம், அஜ்மல்கான், சுப்ரீம் கோர்ட்டு வக்கீல் சிவபாலமுருகன், தமிழக அரசு தரப்பில் மூத்த வக்கீல் பி.பி.ராவ் ஆகியோர் ஆஜரானார்கள்.தமிழக அரசு தரப்பில் வாதாடிய பி.பி.ராவ், ‘வெயிட்டேஜ்’ முறையை அமல்படுத்த மாநில அரசுக்கு அரசியல் சட்டத்தின் அடிப்படையில் அதிகாரம் உள்ளது. 5 சதவிகிதம் ‘வெயிட்டேஜ்’ அளித்தும், இடஒதுக்கீட்டில் நிரப்புவதற்காக 625 இடங்கள் காலியாக இருக்கின்றன. எனவே, தமிழக அரசு ‘வெயிட்டேஜ்’ முறையில் இடங்களை நிரப்புவது தவறு கிடையாது. தமிழக அரசு பிறப்பித்த அரசாணை செல்லும் என்று வாதிட்டார்.

தீர்ப்பு ஒத்திவைப்பு

மனுதாரர் தரப்பில், ‘தேர்வு முடிவுகள் வெளிவந்த பிறகுதானே நிரப்ப வேண்டிய இடங்கள் குறித்து அரசுக்கு தெரியும்? அதற்கு முன்பே இது குறித்து எப்படி முடிவு எடுக்கப்பட்டது? தேர்வு முடிவுகள் வெளிவந்து சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும் தருணத்தில் இந்த 5 சதவிகித ‘வெயிட்டேஜ்’ பற்றி அரசாணை வெளியிடுகிறது. இதனால் மனுதாரர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். எனவே, அனைத்து பிரிவினருக்கும் 5 சதவிகித மதிப்பெண் விலக்கு மற்றும் வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’ என்று வாதங்கள் முன்வைக்கப்பட்டன.அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.

'ஸ்மார்ட்' ரேஷன் கார்டுக்கு 'ஆதார்' விபரம் தர 'கெடு'

ரேஷன் கடைகளில், 'ஆதார்' விபரம் தர, காலக்கெடு நிர்ணயிக்க, உணவு துறை முடிவு செய்துள்ளது. தமிழகத்தில், பழைய ரேஷன் கார்டுக்கு பதில், 'ஸ்மார்ட் கார்டு' வழங்க, உணவு துறை முடிவு செய்துள்ளது. இதற்காக, ரேஷன் கடைகளுக்கு, 'பாயின்ட் ஆப் சேல்' என்ற கருவி வழங்கப்பட்டு, அதில், ரேஷன் கார்டுதாரின், ஆதார் விபரங்கள் பெறப்படுகின்றன.
மொத்தம் உள்ள, 2.04 கோடி ரேஷன் கார்டுகளில், 7.76 கோடி பயனாளி கள் உள்ளனர். நேற்று வரை, 4.76 கோடி மட்டுமே, ஆதார் விபரங்களை பதிவு செய்து உள்ளனர். மற்றவர்களும் அந்த விபரத்தை தராததால், ஸ்மார்ட் கார்டு வழங்குவது, தாமதமாகியுள்ளது.


இதுகுறித்து, உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: மக்கள் சிரமப்படுவர் என்பதால், ஆதார் விபரம் தர காலக்கெடு நிர்ணயிக்காமல் இருந்தோம். ஆனால், ஆதார் கார்டு வைத்துள்ள பலரும், ரேஷன் கடைகளில் பதிவு செய்யாமல் அலட்சியமாக உள்ளனர். இதனால், ஸ்மார்ட் ரேஷன் கார்டு பணி பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே, ரேஷன் கடைகளில், ஆதார் விபரம் தர, நவ., 30 கடைசி நாள் என, காலக்கெடு நிர்ணயிக்க உள்ளோம். இதற்கு, அரசிடம் ஒப்புதல் கோரப்பட்டு உள்ளது. அதற்குள், ஆதார் விபரம் வழங்கியவர்களுக்கு, ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும்.

அதன்பின், ஆதார் விபரம் தருவதற்கு ஏற்ப, ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும். தற்போது, ஆதார் மையங்களில் கூட்டம் குறைவாக உள்ளதால், இதுவரை ஆதார் கார்டு பெறாதோர், விண்ணப்பித்து, ரேஷனில், விரைவாக பதிய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

G.O.NO:277- தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் மாத சம்பளம் 28.10.2016 அன்று வழங்க - அரசு உத்தரவு

ஊதிய அரசாணை;277 செல்லாது. வழக்கம் போல் இம்மாதம் 31 வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும்.---கருவூலத்துறை அறிவிப்பு

புதிய கல்விக் கொள்கை - தில்லியில் தமிழக அரசு எதிர்ப்பு!

மத்தியஅரசின் புதிய கல்விக் கொள்கைகுறித்து விவாதிக்க மத்திய, மாநில அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் பங்கேற்கும் மத்திய கல்வி
ஆலோசனைக்குழு கூட்டம் தலைநகர் தில்லியில்இன்று நடந்தது.


புதிய வரைவு கல்விக் கொள்கையைஉருவாக்க மத்திய அரசின் சார்பில், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி டி.எஸ்.ஆர்.சுப்ரமணியன்தலைமையில் குழு அமைக்கப்பட்டது. நாடுமுழுவதும் பல்வேறு இடங்களில் இந்தக்குழுவினர் கருத்துக் கேட்புக்களை நடத்தினர். அதன் பின்னர் “புதியகல்விக் கொள்கை வரைவு” ஒன்றைமத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்துக்குஅனுப்பினர்.

புதிய கல்விக் கொள்கை குறித்துவிவாதிக்க மத்திய, மாநில அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் பங்கேற்கும் மத்திய கல்வி ஆலோசனைக்குழு கூட்டம் தலைநகர் தில்லியில்இன்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் அனைத்துமாநில கல்வி அமைச்சர்கள் பங்கேற்றனர். புதிய கல்விக் கொள்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளமுக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்த மாநாட்டில் கவனத்தில் கொள்ளவேண்டிய முக்கிய தீர்மானங்களாக 8-ம்வகுப்பு வரை உள்ள "ஆல்-பாஸ்' முறையை திரும்பபெற்று மீண்டும் கட்டாய தேர்வு முறையைகொண்டு வருவது, சமஸ்கிருத பாடத்திட்டம்மற்றும் கல்வியல் தேர்ச்சி பெறாத தனியார் பள்ளிஆசிரியைகளுக்கான தடை போன்றவை பேசப்பட்டது.

இதில்8-ம் வகுப்பு வரையிலான ஆல்-பாஸ் ரத்து திட்டத்துக்குதமிழக அரசின் சார்பில் கலந்துகொண்டதமிழக பள்ளிக்கல்விதுறை அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன் கடும்எதிர்ப்பு தெரிவித்தார். இது குறித்து அவரிடம்பேசினோம்.

 " இரண்டு முக்கியமான அம்சங்கள்இன்று முடிவு செய்யப்பட்டது. முதலாவதாகஇந்த 8-ம் வகுப்பு ஆல்-பாஸ் திட்டம் ரத்துஎன்பதை பல்வேறு மாநிலங்களின் எதிர்ப்பினைதொடர்ந்து மத்திய அரசு கைவிட்டுள்ளது.

அந்த முடிவினை எடுக்கும் அதிகாரத்தினை மாநில அரசுகளுக்கு வழங்கமுடிவு செய்துள்ளது. கல்வி உரிமைச்சட்ட பரிந்துரைப்படி2015 டிசம்பர் வரை மட்டுமே முறையானகல்வி தேர்ச்சி அற்றவர்கள் ஆசிரியர்களாக பணியாற்றலாம் என இருந்தது. தமிழகத்தில்அப்படியான ஆசிரியர்கள் குறைவு என்ற போதிலும்2020-ம் ஆண்டு வரை அப்படியானஆசிரியர்கள் பணியாற்ற மத்திய அரசு ஒப்புதல்அளித்துள்ளது. அதே போல சமஸ்கிருதபாடத்திட்டத்தை அமுல்படுத்த ஒரு கருத்துரு முன்வைக்கப்பட்டது. வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் சார்பில்எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அப்போது இது இறுதிமுடிவு அல்ல. இப்படியான கருத்துக்கள்எங்களுக்கு ஆயிரக்கணக்கில் வந்துள்ளது. அதில் 143 கருத்துருக்களை உங்கள் முன் வைத்துள்ளோம். உங்களின் கருத்துக்களையும் கவனத்தில் கொள்வோம் என தெரிவித்துள்ளனர்." என்று கூறினார்.

வங்கக் கடலில் உருவாகியுள்ள புயலுக்கு பெயர் சூட்டப்பட்டது

வங்கக் கடலில் விசாகப்பட்டினம் அருகே உருவாகியுள்ள புயலுக்கு கியான்ட் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் தமிழகத்துக்கு மிக அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக உருவாகி வடமேற்காக நகர்ந்து சென்று தற்போது உருவாகியுள்ள புயலுக்கு கியான்ட் என்று பெயரிடப்பட்டுள்ளது.


இது வடக்கு - வடமேற்கு நோக்கி நகர்ந்து வருவதாகவும், இதனால் இந்தியாவின் ஒடிசா உள்ளிட்ட கிழக்கு மாநிலங்களில் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த புயல் வியாழக்கிழமை இரவு முதல் சனிக்கிழமைக்கு இடைப்பட்ட நேரத்தில் பூரி - காக்கிநாடா இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வங்கக் கடலில் உருவாக இந்த புயலுக்கு மியான்மரின் கியான்ட் என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது.

முதன் முதலாக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு விலை இல்லா வாய்ப்பாடு.இம்மாத இறுதிக்குள் வழங்க ஏற்பாடு

அரசு பள்ளிகளில் படிக்கும் 3–வது வகுப்பு, 4–வது வகுப்பு, 5–வது வகுப்பு மாணவ–மாணவிகளுக்கு வாய்ப்பாடு புத்தகம், விலை இன்றி முதல் முதலாக வழங்கப்படுகிறது. இந்த புத்தக வினியோகம் தொடங்கியது. இந்த மாத இறுதிக்குள் கொடுத்து முடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அரசு பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பாடு

தமிழக அரசு பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் உள்பட14 வகையான கல்வி கற்க தேவையானவற்றை விலை இன்றி தமிழக அரசு வழங்கி வருகிறது. இந்த நிலையில் அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் படிக்கும் 3–வது, 4–வது, 5–வது வகுப்பு மாணவ–மாணவிகளுக்கு வாய்ப்பாடு புத்தகம் விலை இன்றி வழங்க முடிவு செய்யப்பட்டது.அந்த வாய்ப்பாடு புத்தகத்தில் பெருக்கல் வாய்ப்பாடு, கூட்டல் வாய்ப்பாடு, கழித்தல் வாய்ப்பாடு, பெருக்கல் அட்டவணை, வட்டம், சதுரம், செவ்வகம், முக்கோணம், அறுகோணம், உருளை, கனச்சதுரம், கனச்செவ்வகம், கூம்பு ஆகியவை இடம் பெற்றுள்ளன. மேலும் அடிப்படை அளவுகள், கொள்ளளவு, நிறுத்தல் அளவு ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.மேலும் வருடத்திற்கு எத்தனை நாட்கள், லீப் வருடத்திற்குஎத்தனை நாட்கள், வருடத்திற்கு எத்தனை மாதங்கள், எத்தனை வாரங்கள், வாரத்திற்கு எத்தனை நாட்கள் உள்ளிட்ட காலங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த வாய்ப்பாடு புத்தகங்கள் அரசு பள்ளிகளில் 3–வது, 4–வது, 5–வது படிக்கும் மாணவ–மாணவிகள் அனைவருக்கும் வழங்கப்பட்டு கொடுக்கப்படுகிறது. அதற்காக அனைவருக்கும்கல்வி திட்டத்தின் கீழ் 7 லட்சத்து 70 ஆயிரம் வாய்ப்பாடு புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு அந்தந்த மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு உள்ளன. அவை பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.

பணி தொடங்கியது

அனுப்பப்பட்ட பள்ளிகளில் இந்த வாய்ப்பாடு கொடுக்கும் பணி தொடங்கி உள்ளது. சென்னை எழும்பூரில் உள்ள மாநில மகளிர் நடுநிலைப்பள்ளியில் நேற்று வாய்ப்பாடு வினியோகம் தொடங்கியது. அனைவருக்கும் கல்வி திட்ட உதவி அதிகாரி லட்சுமிபதி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர்.பரமேஸ்வரி, பள்ளிக்கூட தலைமை ஆசிரியர் சாவித்ரி ஆகியோர் வழங்கினார்கள்.அதிகாரி ஒருவர் கூறுகையில் இந்த மாத இறுதிக்குள் அனைத்து மாணவ–மாணவிகளுக்கும் வாய்ப்பாடு புத்தகம் வழங்கப்பட்டு விடும் என்றார்.

G.O.276 Dated 24.10.2016 PROVIDENT FUND– General Provident Fund (Tamilnadu) – Rate of interest for the period01.10.2016 to 31.12.2016 – Orders – Issued.

கேரளாவில் 10 ஆயிரம் ஆரம்ப பள்ளிகளில் வைபை வசதி ஏற்படுத்த திட்டம்.

கேரளாவில் 10 ஆயிரம் ஆரம்ப பள்ளிகளில் வைபை வசதி ஏற்படுத்தி தரும் திட்டத்தை அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அதே போல், 5 ஆயிரம் உயர்நிலை பள்ளிகளுக்கு பிராட்பேண்ட் வசதி அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. 


கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரிகள் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. கல்வியை மேம்படுத்த புதிய திட்டங்களை செயல்படுத்த அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

இதன் ஒரு கட்டமாக, பள்ளிகளில் வைபை வசதி, இணையதள வசதியை ஏற்படுத்தி தர முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, கேரளாவில் உள்ள 10 ஆயிரம் ஆரம்ப பள்ளி மற்றும் நடுநிலை பள்ளிகளில் வைபை வசதியை பிஎஸ்என்எல் நிறுவனம் தொடங்க உள்ளது. கேரள மாநிலம் உருவான நாளான நவம்பர் 1ம் தேதியன்று இத்திட்டம் தொடங்கப்படுகிறது. 

இதுகுறித்து கல்வி அமைச்சர் ரவீந்திரநாத் கூறுகையில், ''ஆரம்ப பள்ளிகளில் டிஜிட்டல் வசதியை மேம்படுத்தவும், உயர்நிலை பள்ளிகளில் அதை விரிவாக்கவும் செய்யும் திட்டமிடப்பட்டுள்ளது. 8 முதல் 12ம் வகுப்பு வரையிலான வகுப்பறைகள் டிஜிட்டல் மயப்படுத்தப்பட உள்ளன. இந்த திட்டத்தின் மூலம் பள்ளி ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் கட்டணத்தில் சேவை வழங்கப்படும்'' என்றும் தெரிவித்தார்.

ரிலையன்ஸ் ஜியோ: இலவச 4ஜி சேவையை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரையில் நீட்டிக்க முடிவு.

கடந்த செப்டம்பர் 1-ம் தேதி ரிலையன்ஸ் அறிமுகப்படுத்திய ஜியோ சிம், தொலைத்தொடர்பு உலகில் பெரும் புரட்சியை ஏற்படுத்தி வருகிறது. நாடு முழுவதும் ஏராளமான சலுகைகளை வழங்கி ஏகோபித்த வரவேற்பை பெற்ற ஜியோ சிம்மால்மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கலக்கமடைந்தன. 
அத்துடன், ஜியோவின் இந்த அறிவிப்புகளை எதிர்த்து மேல் முறையீடு செய்தன. கடந்த வாரம் இதனை விசாரித்த டிராய், ஜியோவின் இலவச வாய்ஸ் கால் சலுகை டிசம்பர் 3 வரை மட்டுமே செல்லுபடியாகும் என அறிவித்தது.

இந்நிலையில் ஜியோ தன்னுடைய பயனாளர்களை மேலும் அதிகரிக்கும் வகையில் இலவச 4ஜி சேவையை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரையில் நீட்டிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலவச சேவைக்கான கால அவகாசம் மூன்று மாதங்கள் மட்டுமே என டிராய் அறிவித்துள்ளதால் வெல்கம் ஆபர் என பெயரை மாற்றி இந்த சேவையை தொடர ரிலையன்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளதாகவும், ஜியோவின் டேட்டா சேவைகள் ஜிபி ஒன்றிற்கு ரூ.130-140 வரை இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

தீபாவளி பண்டிகை: அரசு ஊழியர்களுக்கு இனிப்பான செய்தி.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு இந்த மாதம் ஊதியம் வரும் 28ம் தேதியே வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு அரசாரணையை வெளியிட்டுள்ளது.


தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் மாத ஊதியத்தை முன்கூட்டியே வழங்குமாறு அரசு ஊழியர் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

அரசு ஊழியர்கள் தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில் அக்டோபர் மாத ஊதியம் 28ம் தேதியே வழங்கப்பட உள்ளது.

அக்டோபர் மாத சம்பளம் 28.10.2016 அன்று கிடைக்காததற்கு காரணம்?

31.10.2016. அன்று சம்பளம் வழங்குவதற்கு Reserve Bank of India வங்கிகளுக்கு Cutt of date நிர்ணயித்த நாள் 26.10.2016. காலை 10 மணி.அதாவது இன்று மாலை ECS கணக்கினை TREASURY முடித்தால் மட்டுமே 26.10.2016 காலை யில் BATCH அனுப்ப இயலும்.
ஆனால் அரசாணை 25.10.2016 மதியத்திற்கு மேல் தான் கிடைக்கப்பெற்றது.

நேற்றே GO வந்திருந்தால் இது சாத்தியம்.