யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

6/12/16

முதல்வர் ஜெயலலிதா பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்.

கோமளவள்ளி என்ற பெயரை அவரே மறந்திருப்பார். பிறந்ததும் ஜெ.வுக்கு சூட்டிய பெயர் அது. ஆனால் சில காலத்தில் ஜெயலலிதா ஆகிப்போனார். ஜெயா, ஜெய், லில்லி எனப் பல பெயர்களில் பள்ளித்தோழிகளால் அழைக்கப்பட்டவர். ஆனால், அவரது அம்மாவுக்கு "அம்மு".அதிமுகவினருக்கு "அம்மா".

🌷 சர்ச் பார்க் பள்ளி மாணவி என்றுதான் பலருக்கும் தெரியும். ஆனால், மாம்பலம் ஹோலி ஏஞ்சல்ஸ் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை
படித்துவிட்டுத்தான் மெட்ரிக் வரை சர்ச் பார்க்கில் படித்தார். "இன்னொரு வாய்ப்பு கிடைத்தால் சர்ச் பார்க்கில் படிக்க வேண்டும்" என்பதை தனது ஆசையாகச் சொல்லியிருந்தார்.

🌷 போயஸ் கார்டன், சிறுதாவூர், ஹைதராபாத் திராட்சைத்தோட்டம், ஊட்டி கொடநாடு எஸ்டேட் ஆகிய நான்கும் ஜெ. மாறி மாறி தங்கும் இடங்கள். தற்போது ஹைதராபாத் செல்வதை நிறுத்திவிட்டார். இப்போதெல்லாம் திடீர் ஓய்வுக்கு சிறுதாவூர். மாதக்கணக்கில் தங்க வேண்டுமென்றால் கோத்தகிரியில் உள்ள கோடநாடு.

🌷 சினிமா காலத்தில் இருந்தே இவரை "வாயாடி"என்று அழைத்தவர் எம்.ஜி.ஆர். இதுபற்றி நிருபர் ஒருவர் ஜெ.விடம் கேட்டதுக்கு, "அவர் கலகல, நான் லொட லொட" என்றாராம் சிரித்தபடி.

🌷 உடல்நலனில் ஆரம்பகாலத்தில் அதிக அக்கறையுடன் இருந்தவர். தற்போது சில நிமிடங்கள் நடைப்பயிற்சி மட்டும் மேற்கொள்கிறார்.

🌷 இவர் நடித்த மொத்தப்படங்கள் 115.எம்.ஜி.ஆருடன் நடித்தவை 28. இருவரும் இணைந்து நடித்த முதல்படம் "ஆயிரத்தில் ஒருவன்".

🌷 "சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா"என்ற "அரசிளங்குமாரி" படப்பாடல் தான் எனக்கு எப்போதும் பிடித்த நல்ல பாடல் என்பார். அப்பாடலை எழுதிய பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனாரின் மனைவியிடம் 10 லட்சம் பணம் கொடுத்து அவரது எழுத்துக்களை நாட்டுடமையாக்கினார்.

🌷 "அரசியலில் நான் என்றைக்குமே குதிக்க மாட்டேன் "என்று பேட்டி கொடுத்தவர் ஜெயலலிதா. "நாடு போகிற போக்கை பார்த்தால் ஜெயலலிதா கூட முதலமைச்சராகி விடுவார் போல "என்று இவர் நடிக்க வந்த காலத்தில் பேட்டியளித்தார் முரசொலிமாறன்.

🌷 ஜெயலலிதா முதலில் குடியிருந்தது தி நகர் சிவஞானம் தெருவில். பிறகு அடையாறில் சிலகாலம் இருந்தார். படங்கள் குவிந்து நடிப்பில் கொடிகட்டிய காலத்தில் தான் போயஸ் வீடு கட்டப்பட்டது. அதன் ஒவ்வொரு செங்கல்லையும் பார்த்து கட்டியர் இவருடைய அம்மா சந்தியா. அதனால் "வீட்டுக்குள் என்ன மாற்றமும் செய்யலாம். ஆனால் அம்மா வைத்த. வாசலை மட்டும் மாற்றக்கூடாது எனக் கூறியிருக்கிறார்.

🌷 எப்போதும் அம்மா செல்லம்தான். அவருக்கு இரண்டு வயதாக இருக்கும்போது அப்பா இறந்துவிட அந்த நினைவுகள் இல்லை.

🌷 போயஸ் வீட்டுக்குள் நுழையும் இடத்தில் இவரது தாயார் சந்தியா, எம்.ஜி.ஆர்.ஆகிய இருவரின் படங்கள் மட்டுமே இருக்கும்.

🌷 எம்.ஜி.ஆர் ரசிகர் மன்ற விழாவில் ஆறடி உயரமுள்ள வெள்ளி செங்கோலை எம்.ஜி.ஆருக்கு ஜெயலலிதா வழங்கினார். இவருக்கு மிகவும் பிடித்த படம் இதுதான்.

🌷 பெருமாளை விரும்பி வணங்குகிறார். மன்னார்குடி இராஜகோபாலசாமி இதில் முதன்மையானது. மயிலை கற்பகாம்பாளையும்,கும்பகோணம் ஐயாவாசி பிரத்தியங்கிரா தேவியையும் சமீப காலமாக வணங்கி வருகிறார்.

🌷 தினமும் காலையில் நிஷாகாந்தி எனப்படும் இருவாட்சி மலர்களை பறித்து பூஜைக்கூடையில் தயார்நிலையில் வைத்திருப்பார்கள் கார்டன் பணியாளர்கள். அதை எடுத்தபடியே பூஜையறைக்குள் நுழைவார். சமீபமாக துளசியும் பூஜையில் தவறாமல் இடம்பெறுகிறது.

🌷 யாகம் வளர்ப்பதிலும், ஹோமத்தில் உட்காருவதிலும் ஜெயலலிதாவிற்கு ஈடுபாடு அதிகம். யாகத்தில் 6 மணிநேரம் வரை கூட உட்கார்ந்திருக்கிறார். அவசரமாக மந்திரம் சொன்னாலோ, தவறாக மந்திரம் சொன்னாலோ கண்டுபிடித்து நிறுத்தச் சொல்லும் அளவுக்கு வேதஞானம் உண்டு.

🌷 சிறுதாவூர் பங்களா இருக்குமிடம் மொத்தம் 116 ஏக்கர். அங்கு புறா, கிளி, காடை, கௌதாரி போன்றவற்றை வளர்த்து வந்தார்.இந்திரா,சந்திரா என்ற ஈமூக்களும் வளர்த்தார். இரண்டும் திடீரென இறந்துவிட ஈமு வளர்ப்பதையே விட்டுவிட்டார்.

🌷 பரதம்,ஓரிண்டல் டான்ஸ் இரண்டையும் முறைப்படி கற்று அரங்கேற்றம் செய்தவர். முதல்வராக இருந்தபோது ஒருமுறை ஊட்டியில் மேடையைவிட்டு இறங்கி வந்து ஆடினார்.

🌷 ஜெ.வின் 100-வது படத்துக்கான பாராட்டு விழாவில் அப்போதைய முதல்வர் கருணாநிதியால் *"நடிப்புக்கு இலக்கணம் வகுத்தவர் ஜெயலலிதா"* என்று பாராட்டப்பட்டவர்.

🌷 பழைய பாடல்கள் கேட்பதில் அதிக ஆர்வ முள்ளவர். ஜெயா டிவியில் வரும் பழைய பாடல்கள் அனைத்தும் இவருடைய விருப்பங்கள்.

🌷 ரயில் பயணம் பிடிக்காது. கார் மற்றும் ஹெலிகாப்டர் பயணங்கள்தான் அதிக விருப்பம்.

🌷 போயஸ் வீட்டில் எப்போதும் 7 நாய்க்குட்டிகள் இருக்கும். அவரது பிறந்தநாளை யொட்டி ஆண்டுதோறும் ஒரு குட்டி புதிதாக இணைந்து கொள்ளும். இந்த எண்ணிக்கை காலப்போக்கில் அதிகமானதால் சில குட்டிகள் சிறுதாவூர், கோடநாடு என அனுப்பி வைக்கப்படுகின்றன.

🌷 இந்தியாவில் உள்ள அத்தனை பிரபலங் களையும் தனது "வாக் அண்ட் டாக் "பேட்டிக்கு வரவழைத்த NDTV-யால் ஜெயலலிதாவின் மனதை மட்டும் மாற்றமுடியவே இல்லை.கடைசிவரை உறுதியாக இருந்து மறுத்துவிட்டார்.

🌷 ஓஷோவின் புத்தகங்களை மொத்தமாக வாங்கி படித்து வந்தார். இப்போது ரமணர் பற்றியே அதிகம் படிக்கிறார்.ரமணர் தொடர்பான முக்கிய புத்தகங்கள் அனைத்தும் சமீபகாலமாக அவர் மேஜையில் உள்ளன.

🌷 ஜெயலலிதாவின் முழு இருப்பும் போயஸ் கார்டனின் முதல் மாடியில்தான்.அங்கு சசிகலா, மற்றும் முக்கியப்பணியாளர்கள் தவிர யாருக்கும் அனுமதி இல்லை.

🌷 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநிலத்தின் முதல் மாணவியாக வந்தவர் ஜெயலலிதா!

🌷 திரைப்பட துறையை ஜெ. தெரிவு செய்திருந்தாலும் வழக்குரைஞராக வேண்டுமென்பதே அவரது லட்சியமாக இருந்தது. ஆனால் குடும்பச்சூழல் காரணமாக நடிப்புத்தொழிலை முன்னெடுக்கும் நிலை ஏற்பட்டது.

🌷 பாடசாலை மாணவி யாக இருக்கும்போதே ஜெயலலிதா பல்வேறு நாடகங்களில் நடித் துள்ளார். அதில் உன்று *TEA HOUSE* என்ற ஆங்கில நாடகம்.அதன் பின்னர் *THE EPISTLE* என்ற ஆங்கிலப்படத்திலும் நடித்துள்ளார்.

🌷 திரையிலகில் அதிக வெள்ளிவிழா திரைப்படங்களை வழங்கிய சாதனை ஜெவுக்கு உண்டு.அவர் நடித்துள்ள 92 தமிழ்படங்களில் 85 படங்கள் வெள்ளிவிழா கண்டவை.

🌷 *சிவாஜியுடன்* இவர் நடித்துள்ள *தங்கமகன்* திரைப்படம் தான் *ஆஸ்காருக்கு* பரிந்திரை செய்யப்பட்ட *முதல் தமிழ் படம்.*

🌷 *ஜெயலலிதா அறிமுகமான 5 மொழித் திரைப்படங்களும் பெரும் வெற்றிப் பெற்றவை.*


🌷 "நான் அனுசரித்துப் போகிறவள் தான்.ஆனால் எனக்கென்று சில சிந்தனைகள் உண்டு. அதை யாருக்காகவும் விட்டுத்தர மாட்டேன் என்று தன் கேரக்டருக்கு விளக்கம் அளித்துள்ளார்.
  

ALL FORMS FOR TEACHERS ONE PAGE:

1.     M.L FORMS
2.     C.L FORMS(H.M)
3.     C.L FORMS(GENERAL)
4.     E.L SURRENDER FORM
5.     HIGHER STUDY PERMISSION FORM
6.     FORM FOR AN NEW VEHICLE PURCHASE FORMAT
7.     FESTIVAL ADVANCE
8.     C.P.S.FORM
9.     GPF CLOSURE FORMAT
10. GPF TEM ADVANCE FORMAT
11. HOUSING QUATA FORMAT
12. PAY BILL PRINT (LEGAL)
13. VEHICLE ADVANCE FORMAT
14. V.R.S FORMAT
15. INFORMATION ACT FORUM FORMAT
16. NHIS FORM-WITH SPOUSE CERTIFICATE 2012
17. BIRTH CERTIFICATE FORMS (WORD)
18. BIRTH CERTIFICATE FORMS (PDF)
19. HIGH&HIGHER SECONDARY SCL TRS MPHIL/PHD PERMISSION - FORMAT

உப்பு குறைவாக சேர்த்துக் கொண்டாலும் ஆபத்து தான்!!!

உணவில் உப்பை குறைவாக சேர்த்துக் கொண்டாலும் உடலுக்கு தீங்கு தான் என சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறைவான உப்பால் தீங்கு : 
நாட்டிலேயே தமிழகத்தில் உள்ளவர்கள் தான் அதிக அளவில் உணவில் உப்பு சேர்த்துக் கொள்கிறார்கள். ஒருவர் ஒரு நாளைக்கு 5 கிராம உப்பு மட்டுமே சேர்த்துக் கொள்ள வேண்டும் என உலக சுகாதார மையமும் தெரிவித்துள்ளது.
இதயநோய் பாதிப்புக்களை தவிர்க்க உப்பின் அளவை குறைக்க வேண்டும் என டாக்டர்களும் மக்களை அறிவுறுத்தி வருகின்றனர். ஆனால் புதிய ஆய்வின்படி, குறைவாக உப்பு சேர்த்துக் கொள்வதும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
இதயநோய் அபாயம் : 
குறைவாக உப்பு சேர்த்துக் கொள்வதால் ஏற்படும் விளைவுகள் குறித்து 'தி லேன்செட்' நிறுவனம் இந்த ஆண்டு மே மாதம் ஆய்வு ஒன்றை நடத்தியது. 
இதில், சராசரியான அளவை விட குறைவாக உப்பு சேர்த்துக் கொள்பவர்களுக்கு மாரடைப்பு அல்லது வாத நோய் தாக்குதல் அபாயம் உண்டு என்பது தெரிய வந்துள்ளது. உப்பு குறைவாக சேர்த்து கொண்டால் தான் உடலுக்கு நல்லது என்ற கருத்து பொதுவாக நிலவி வருகிறது. ஆனால் குறைவாக உப்பு சேர்ப்பதால் எந்த பயனும் ஏற்படுவதில்லை. மாறாக, இதயநோய் பாதிப்புக்களே அதிகம் எனவும் ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
விழிப்புணர்வு தேவை :
உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் மட்டுமே அதிகப்படியான உப்பை தவிர்ப்பது நன்மையை ஏற்படுத்தும். ரத்த அழுத்தத்தை குறைக்க உப்பை குறைவாக சேர்த்துக் கொள்பவர்களுக்கு ஹார்மோன் பிரச்னைகளும் ஏற்படும் அபாயம் உண்டு. இந்த ஆய்வு அறிக்கை உண்மை என சென்னையை சேர்ந்த பல உணவுத்துறை நிபுணர்களும் தெரிவித்துள்ளனர். சரியான அளவில் உப்பு சேர்த்துக் கொள்வது தொடர்பான விழிப்புணர்வு மக்களிடம் ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். உணவில் உப்பு சேர்த்து கொள்வது தொடர்பான விழிப்புணர்வு சில டாக்டர்களிடமே இருப்பதில்லை எனவும் அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்

சர்வதேச விண்வெளி நிலையத்தை இனி உங்கள் ஊரில் இருந்தபடியே வானில் பார்க்கலாம

சர்வதேச விண்வெளி நிலையத்தை இனி உங்கள் ஊரில் இருந்தபடியே வானில் பார்க்கலாம்
பல நாடுகளின் கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி நிலையம், சிம்லாவில் புலப்பட்டதாக தகவல்கள் வெளியாகியது. இதனையடுத்து, சர்வதேச விண்வெளி நிலையத்தை பூமியில் இருந்து அனைவரும் பார்க்கமுடியும் என நாசா தெரிவித்துள்ளது. சிம்லாவில் புலப்பட்ட சர்வதேச விண்வெளி நிலையம்:  சர்வதேச விண்வெளி நிலையம், பூமியிலிருந்து சுமார் 400 கி.மீட்டர் தொலையில், விநாடிக்கு 7.6 கி.மீட்டர் வேகத்தில் விண்வெளியில் சுற்றி வருகிறது. இந்த விண்வெளி நிலையத்தில் தங்கி பல்வேறு நாடுகளின் விண்வெளி வீரர்கள், ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.    
                         சர்வதேச விண்வெளி நிலையத்தை நான்கு நிமிடங்கள் காணலாம்:                                    இந்நிலையில் விண்வெளியில் சுற்றிவரும் இந்த விண்வெளி நிலையத்தை, இமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவைச் சேர்ந்த ஒருவர் வானில் பார்த்தது மட்டும் இல்லாமல், அதனை வீடியோ எடுத்துள்ளார். அந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. சிம்லாவில் நவம்பர் மாதம் 28 ஆம் தேதி மாலை 6:27 மணிக்கு புலப்பட்டது.
இது ஒன்றும் அதிசயம் இல்லை சர்வதேச விண்வெளி நிலையத்தை பொதுவாக ஒரு நிமிடம் முதல் நான்கு நிமிடங்கள் வரை வெறும் கண்ணால் பார்க்க முடியும் என்றும் வேகமாக நகரும் விமானம் போல் இந்த காட்சிகள் புலப்படும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
விண்வெளி நிலையத்தை காண புதிய இணையதளம்:
சர்வதேச விண்வெளி நிலையம் நீங்கள் வசிக்கும் பகுதியை எப்போது கடந்து செல்லும் என்பதை தெரிவிப்பதற்காக https://spotthestation.nasa.gov/home.cfmஎன்ற இணையதளத்தை நாசா உருவாக்கியுள்ளது. இந்த இணையதளத்திற்குள் சென்று நீங்கள் இருக்கும் பகுதியை குறிப்பிட்டால், அந்த பகுதியை எப்போது விண்வெளி ஆராய்ச்சி மையம் கடந்து செல்லும் என்ற தகவல்கள் அளிக்கப்படும். இதனை கணக்கில் கொண்டு நீங்கள் வெறும் கண்ணால் சர்வதேச விண்வெளி நிலையம், ஒரு நட்சத்திரம் போல் உங்கள் பகுதியில் கடந்து செல்வதை பார்க்க முடியும். மேலும் இந்த இணையதளம் வழியாக, உங்கள் பகுதியை எப்போது சர்வதேச விண்வெளி மையம் கடந்து செல்லும் என்பதை உங்களுக்கு நியாபகப்படுத்துவதற்கான வசதியும் உண்டு.

தமிழக அரசுப்பதிவேட்டில் பெயர்மாற்றம் செய்துகொள்வதற்கான வழிமுறைகள்

தமிழக அரசுப்பதிவேட்டில் பெயர்மாற்றம் செய்துகொள்வதற்கான வழிமுறைகள்
இங்கே வீட்டில் ஒரு பெயர் வைத்திருப்பார்கள், விரும்புவது வேறு பெயராக இருக்கும். சிலர் பெற்றோர் வைத்த பெயரை மாற்ற நினைப்பதும் உண்டு.
தவிர, ஒருவர் தன் பெயரை நியூமராலஜிப்படியோ, ஜாதகப்படியோ அல்லது ஒரு நல்ல தமிழ்ப் பெயரையோ சூட்டிக்கொள்ளவும் விரும்பலாம்.
சரி, அதற்குரிய வழிமுறைகள் என்ன?
பெயர் மாற்றம்
செய்வதற்கான  தகுதிகள்:
தமிழ்நாட்டில் வசிக்கும் எவரும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர் 60 வயதுக்கு மேல் உள்ளவரானால் பதிவுபெற்ற மருத்துவரிடமிருந்து Life Certificate அசலாகப் பெற்று இணைக்க வேண்டும்.
தேவையான  ஆவணங்கள் :

பிறப்பு / கல்விச் சான்றிதழ் நகல் இணைக்க வேண்டும்.
பிறப்பு / கல்விச் சான்றிதழ் இல்லாதவர்கள் வயதை நிரூபிக்க அரசு மருத்துவரிடம் உரிய சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.
சமீபத்தில் எடுக்கப்பட்ட விண்ணப்பதாரரின் புகைப்படத்தை, அதற்கென அளிக்கப்பட்டுள்ள இடத்தில் ஒட்டி, தமிழக / மத்திய அரசின் அ மற்றும் ஆ பிரிவு அலுவலர்கள் / சான்று உறுதி அலுவலரிடமிருந்து சான்றொப்பம் பெறப்பட வேண்டும்.
பிற மாநிலத்தில் பிறந்து, தமிழ்நாட்டில் வசிப்பவர்கள் - தமிழ்நாட்டில் வசிப்பதற்கு ஆதாரமாக உணவுப் பங்கீட்டு அட்டை/கடவுச் சீட்டு/
வாக்காளர் அடையாள அட்டை/ வட்டாட்சியரிடமிருந்து பெறப்பட்ட இருப்பிடச் சான்றிதழ் இதில் ஏதேனும் ஒன்றின் சான்றிட்ட நகல் இணைக்க வேண்டும்.
தத்து எடுத்துக்கொண்டு, அதனால் பெயர் மாற்றம் செய்வோர் தத்துப்பத்திரத்
தின் சான்றிட்ட நகலை இணைக்க வேண்டும்.
மண முறிவு செய்து, அதனால் பெயர் மாற்றம் செய்வோர் நீதிமன்றத் தீர்ப்பை சான்றிட்ட நகலாக இணைக்க வேண்டும்.
கட்டணம்:
பொதுவாக பெயர் மாற்றக் கட்டணம் 9-2-2004 முதல் ரூ.415 மட்டும்.
தமிழில் பெயர் மாற்றக் கட்டணம் ரூ.50 மற்றும் அரசிதழ் & அஞ்சல் கட்டணம் ரூ.65.
செலுத்தும் முறை :
அலுவலகத்திற்கு நேரில் சென்று காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை, பிற்பகல் 2.00 மணி முதல் 3.00 மணி வரை பணமாகச் செலுத்தலாம்.
அஞ்சல் மூலம்  செலுத்த :
உதவி இயக்குநர் (வெளியீடுகள்),
எழுதுபொருள் அச்சுத் துறை ஆணையரகம்,
சென்னை-600 002
என்ற பெயரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி வரைவோலை மூலம்.
பண விடைத்தாள்/ அஞ்சல் ஆணைகள் ஏற்றுக் கொள்ளப்படாது.
விண்ணப்பிக்கும்  முன்
கவனிக்க  வேண்டியவை :
பெயர் மாற்றத்திற்கான காரணம் தெரிவிக்க வேண்டும்.
பழைய பெயர் ( ம ) புதிய பெயரில், என்கிற (Alias) என்று பிரசுரிக்க இயலாது.
பிரசுரம் செய்யப்பட்ட அரசிதழில் அச்சுப்பிழைகள் ஏதுமிருப்பின் அவற்றை ஆறு மாதங்களுக்குள் சரிசெய்து கொள்ள வேண்டும்.
அதற்குப்பின் பிழைகளை திருத்தம் செய்யக்கோரும் எவ்விதக் கோரிக்கையும் கண்டிப்பாக ஏற்கப்பட மாட்டாது.
பெயர் மாற்ற அறிவிக்கை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே.
அதற்கான உறுதிமொழியை உரிய இடத்தில் அளிக்க வேண்டும்.
விண்ணப்பத்துடன் இணைக்கும் அனைத்து நகல்களிலும் கெசட்டட் அலுவலரிடம் கையெழுத்துப் பெற்று இணைக்க வேண்டும்.
நிபந்தனைகள் :
விண்ணப்பதாரர் தவிர வேறு எவரும் எவ்வித தொடர்பும் கொள்ளக் கூடாது.
பணம் செலுத்துவது தொடர்பாக விண்ணப்பதாரருக்கு நினைவூட்டு ஏதும் அனுப்பப்பட மாட்டாது.
இத்துறையால் வழங்கப்பட்ட விண்ணப்பப் படிவம் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.
வெளியில் அச்சிட்ட அல்லது ஒளிப்பட நகல் படிவம் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
எப்படி  பெறுவது ?
அரசிதழை நேரில் பெற விருப்பம் தெரிவிப்பவர்கள், அரசிதழ் பிரசுரிக்கப்பட்ட 5 நாட்களுக்குள் நேரில் வந்து அரசிதழை பெற்றுக்கொள்ள வேண்டும்.
தவறினால் அரசிதழ் தபால் மூலம் உரிய நபருக்கு அனுப்பப்படும்.
தபால் மூலம் அனுப்பப்படும் அரசிதழ்கள், தபால்துறை மூலம் திருப்பப்படும் பட்சத்தில், அரசிதழ்கள், உரிய நபர்களுக்கு மீண்டும் தபால் மூலம் அனுப்பப்படமாட்டாது.
இது போன்ற நிகழ்வுகளில், உரிய நபர்கள் 6 மாதங்களுக்குள் நேரில் வந்து, தபால்துறை மூலம் திருப்பப்பட்ட, அவர்களுக்கான அரசிதழ்களைப் பெற்றுச் செல்லலாம்.
விண்ணப்பத்தில் கையெழுத்திடும்முன்:
சுவீகாரம் தொடர்பாக பெயர் மாற்றம் செய்யும் பட்சத்தில், சுவீகாரம் எடுத்துள்ள தந்தை (ம) தாயார் மட்டுமே, பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பித்து, படிவத்தில் உரிய இடத்தில் கையொப்பம் இட வேண்டும்.
விண்ணப்பத்தில் விண்ணப்பதாரர் மட்டுமே கையொப்பம் இடவேண்டும்.
விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடையாதவராக (Minor) இருந்தால், தந்தை, தாயார் அல்லது பாதுகாப்பாளர் மட்டுமே கையொப்பம் இட வேண்டும்.
பாதுகாப்பாளராக இருப்பின் அவர் பாதுகாப்பாளராக நியமிக்கப்பட்டதற்கான ஆணை நகல் (Legal Guardianship Order) சான்றொப்பம் பெறப்பட்டு இணைக்கப்பட வேண்டும்.
கையொப்பத்தின்கீழ் உறவின் முறையை (Capital Letter-இல்) தந்தை/தாய்/ பாதுகாப்பாளர் பெயருடன் குறிப்பிட வேண்டும்.
# மேலும் #விவரங்களுக்கு:
உதவி இயக்குநர் (வெ), எழுதுபொருள் அச்சுத் துறை ஆணையரகம், சென்னை-2-இல் 044-2852 0038, 2854 4412 மற்றும் 2854 4413 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்
http://www.stationeryprinting.tn.gov.in/
servicetopublic.htm இத்தளத்திற்குச் சென்று மேலும் விவரங்கள் தெரிந்துகொள்ளலாம்.
http://
www.stationeryprinting.tn.gov.in/
forms.htm
விண்ணப்பப் படிவங்களை தரவிறக்கிக் கொள்ளலாம்.
தத்து எடுக்கும் பிள்ளைகளுக்கான பெயர் மாற்றம் செய்வோர் கவனத்திற்கு:
சுவீகாரத் தந்தை/தாய் இருப்பின் அவர்கள் சுவீகாரம் பதிவு செய்யப்பட்ட சுவீகாரப் பத்திர நகலில் சான்றொப்பம் பெறப்பட வேண்டும், பிறப்புச் சான்றிதழ் மற்றும் குடும்ப அட்டை நகல் இணைக்கப்பட வேண்டும்.
சுவீகாரம் கொடுக்கப்பட்ட மகன்/மகளின் சுவீகாரத் தந்தை/ தாய் இருவரும் காலம் தவறி இருப்பின் இதை அரசு வெளியீட்டில் பொது அறிவிக்கையாக மட்டுமே வெளியிட இயலும்.
இதற்கான ஆவணங்கள் பதிவு செய்யப்பட்ட சுவீகாரப் பத்திர நகலில் சான்றொப்பம் பெறப்பட வேண்டும், பிறப்புச் சான்றிதழ் நகல், குடும்ப அட்டை நகல் இணைக்கப்பட வேண்டும்

BREAKING NEWS : முதல்வர் ஜெயலலிதா காலமானார்!! அப்பல்லோ அறிவிப்பு


05.12.2016 அன்று இரவு 11.30 மணிக்கு காலமானார் செல்வி ஜெயலலிதா

அப்போலோ மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பலனின்றி காலமானார்.
அவருக்கு வயது 68. டிசம்பர் 5-ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு மருத்துவர்களின் தீவிர சிகிச்சை பலனின்றி ஜெயலலிதா காலமானதாக அப்போலோ மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

தமிழக முதல்வர் ஜெயலலிதா செப்டம்பர் மாதம் 22-ம் தேதி இரவு திடீர் உடல்நலக்குறைவு காரணமாக, சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல் என்று சொல்லி அனுமதிக்கப்பட்டவர் நுரையீரல் பிரச்னை, சுவாசக் கோளாறு, நோய்த் தொற்று என பல உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை குணமடையவேண்டி தமிழகம் முழுக்க அ.தி.மு.க. தொண்டர்கள் பல்வேறு வழிபாடுகளை நடத்தி வந்தனர்.

ஜெயலலிதா உடல்நிலை தேறிவருவதாக அப்போலோ மருத்துவர்கள் சொல்லிவந்த நிலையில், டிசம்பர் 4-ம் தேதி திடீரென அவருக்கு இதய முடக்கம் ஏற்பட்டதாகச் சொன்னார்கள். இதைத் தொடர்ந்து ஜெயலலிதா தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டதாகவும் தகவல் தெரிவித்தார்கள். இந்நிலையில் தொடர் தீவிர சிகிச்சை பலனளிக்காமல் டிசம்பர் 5-ந் தேதி இரவு 11:30 மணிக்கு காலமானார் ஜெயலலிதா.

தமிழகம் கடந்து உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மத்தியிலும் இந்திய அரசியல் அரங்கிலும் இந்தச் செய்தி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஜெயலலிதா மறைவு, தமிழர்களுக்கு மட்டுமல்லாது உலகம் முழுக்கவே அதிர்வலைகளை உண்டாக்கியிருக்கிறது.



திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவரங்கத்தை பூர்வீகமாகக் கொண்ட ஜெயலலிதா, 1948-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி கர்நாடக மாநிலம், மேல்கோட்டை எனும் கிராமத்தில் பிறந்தவர். பள்ளி செல்லும் பிராயத்திலேயே நடிக்கத் தொடங்கி, தமிழர்களின் அபிமான நடிகையாக தடம் பதித்தார். அவர் மனதுக்குப் பிடித்துதான் நடிப்புத் தொழிலை தேர்ந்தெடுத்தார் என்று சொல்வதற்கில்லை... ஆனால், அதில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து கொண்டார். தன் முழு உழைப்பையும் கொட்டினார். ஆம், இதுதான் அவர் இயல்பே!  எதையும் அவரால் அரை மனதுடன் செய்ய முடியாது. இதை அவர் ஒரு நேர்காணலிலும் பகிர்ந்திருக்கிறார்.

இதனால்தான்  தமிழ் மொழி மட்டுமல்லாது தெலுங்கு, கன்னட மொழி சினிமாக்களிலும் முத்திரைப் பதித்து 120-க்கும் மேற்பட்ட  திரைப்படங்களில் முன்னணிக் கதாபாத்திரங்களில், அவரால் நடிக்க முடிந்தது.



அரசியல் அரங்கில் அ.தி.மு.க உறுப்பினராக அடியெடுத்து வைத்த ஜெ. 1984-ஆம் ஆண்டு முதல் 1989-ஆம் ஆண்டு வரை தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிலும், அவர் மிளிர்ந்தார். அவரது பேச்சாற்றலை மூத்த ஊடகவியலாளர் குஷ்வந்த் சிங் பாராட்டி இருக்கிறார். தன் தாய் சந்தியாவுக்கு அடுத்து இந்திரா காந்தியை ஜெயா மிகவும் நேசித்தார். தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் இறப்புக்குப் பின்னர் அவரது அரசியல் வாரிசாக தொண்டர்களால் தேர்வு செய்யப்பட்டவர் ஜெயலலிதா. அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, இறக்கும்வரை அக்கட்சியின் நிரந்தரப் பொதுச்செயலாளராக இருந்தார்.



1989-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வுக்குக் கிடைத்த எதிர்க்கட்சி அந்தஸ்தின் மூலம் தமிழகத்தின் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவரானார். 1991 தேர்தலில் வெற்றி பெற்று, முதல் முறையாக முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதேபோல, 2001, 2011 மற்றும் 2016 ஆண்டு தேர்தல்களில் வெற்றி பெற்று தமிழக முதல்வராக தேர்வானார். 2001-’06 காலகட்டத்தில் டான்சி வழக்கு காரணமாக முதல்வர் பதவியிலிருந்து விலக நேர்ந்தது. மேல் முறையீட்டில் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டு மீண்டும் முதல்வரானார். அதே போல் 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, சிறை செல்ல நேர்ந்ததால், முதல்வர் பதவியை இழந்தார். பின்னர் அதிலிருந்து விடுவிக்கப்பட்டதால், 2015 மே மாதம், மீண்டும் தமிழக முதல்வரானார்.

2016 தேர்தலில் மீண்டும் தமிழக முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழக அரசியலில், எம்.ஜி.ஆர் காலத்துக்குப் பின்னர், ஒரு தலைவர் தொடர்ச்சியாக இருமுறை ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது என்றால், அது ஜெயலலிதாதான்!  தன்னம்பிக்கையும், மிகுந்த துணிச்சலும் கொண்ட ஜெயலலிதா தமிழகத்தின் முதல்வராக 6 முறை பதவி வகித்தவர். தற்போது முதல்வராக இருக்கும்போதே மரணமடைந்துள்ளார்.

‘புரட்சித் தலைவி’ என்றும், ‘அம்மா’ என்றும் அ.தி.மு.க-வினரால் கொண்டாடப்படும் செல்வி. ஜெ.ஜெயலலிதா உயிரிழந்தது அ.தி.மு.க. தொண்டர்களுக்கு நிச்சயம் ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.

பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாள் விடுமுறை அறிவிப்பு.

பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று முதல் 3 நாட்களுக்கு விடுமுறை:

 தமிழக அரசு அறிவிப்புமரியாதைக்குரிய தமிழகத்தின் இரும்பு பெண்மணி ஜெ.ஜெயலலிதா "அம்மா" காலமானார்., இரவு 11:30 மணிக்கு (05-12-2016) உயிர் பிரிந்ததாக அப்போல்லோ மருத்துவமனை அதிகாரப்பூர்வ அறிவிப்பு.
முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக நேற்றிரவு 11.30 மணி அளவில் இயற்கை எய்தினார். இதையடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று முதல் 3 நாட்களுக்கு விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகின்றன வியாழக்கிழமை வரை அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்றாவது முறையாக தமிழக முதல்வராக பதவியேற்றுக் கொண்டார் ஓ.பன்னீர் செல்வம்

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைப் பலன் இன்றி காலமானார்.


இதையடுத்து தமிழகத்தின் அடுத்த முதல்வராக ஓ.பன்னீர் செல்வத்தை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில்  தேர்ந்தெடுத்தனர். பின்னர். மூன்றாவது முறையாக தமிழக முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் பதவியேற்றுக் கொண்டார்.

அவருக்கு தமிழக பொறுப்பு ஆளுநர் வித்தியா சாகர் ராவ் புதிய முதல்வர் பன்னீர் செல்வத்திற்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். முதல்வராக பன்னீர் செல்வம் உறுதி மொழி ஏற்றார்.

ஓ.பன்னீர் செல்வத்தைத் தொடர்ந்து 31 அமைச்சர்களும் பதவியேற்று வருகின்றனர்.

முதல்வரின் மறைவையொட்டி 7 நாட்களுக்கு துக்கம் அனுசரிப்பு.

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் காலமானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இதையடுத்து  தமிழகம் முழுவதும் தேசிய கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்கும் என அறிவிக்கப்பட்ட்டுள்ளது, முதல்வரின் மறைவையொட்டி 7 நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளாது. .

காலை 4.30 மணி முதல் ராஜாஜி அரங்கில் ஜெயலலிதா உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு.


எம்.ஜி.ஆர்., நினைவிடத்துக்கு ஜெயலலிதா உடல் நல்லடக்கம் இன்று நடைபெற வாய்ப்பு?

முதல்வர் ஜெயலலிதாவுக்கு சென்னை கடற்கரை சாலையில் உள்ள எம்.ஜி.ஆர்., நினைவிடத்துக்கு அருகிலேயே நினைவிடம் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இதற்காக கடலோர ஒழுங்கு முறை சட்டத்தில் இருந்து போதிய விலக்குப் பெற்று நினைவிடம் அமைக்கப்பட இருப்பதாக உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல்வர் ஜெயலலிதா மரணம் அடைந்ததாக திங்கள்கிழமை இரவு 11.30 மணிக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, அவரது உடல் அவரின் போயஸ் தோட்ட இல்லத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதன்பின்பு, சென்னை அரசினர் தோட்டத்துக்கு அருகேயுள்ள ராஜாஜி ஹாலில் பொது மக்களின் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்படும் எனத் தெரிகிறது.

நாடு முழுவதும் உள்ள முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள், கட்சியினர், பொது மக்களின் அஞ்சலிக்குப் பிறகு அவரது உடல் சென்னை கடற்கரை சாலையில் நினைவிடம் அமைக்கப்பட்டு அங்கே வைக்கப்படும் எனத் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

மன்னிப்பு கோரினார் ரங்கராஜ் பாண்டே

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் இன்று மாலை நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் காலமானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அவரது உடல்  பொதுமக்களின் அஞ்சலிக்காக  ஓமாந்தூரார் தோட்டத்தில் உள்ள ராஜாஜி ஹாலில் வைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொதுமக்களின் அஞ்சலிக்கு பின்னர் இன்று மாலை அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாக தெரிகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றன.  தமிழகத்தில் பதவியில் இருக்கும் போது உயிரிழந்த மூன்றாவது முதல்வர் ஜெயலலிதா ஆவார்.

CCE-WORKSHEET -தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை

கல்வி கட்டண கமிட்டி காலி; தொடருது கண்ணாமூச்சி!!

காமராஜர் பல்கலையில் இட ஒதுக்கிடு விவகாரம்; உயர்கல்வித்துறை செயலருக்கு நோட்டீஸ்; தேசியதாழ்த்தப்பட்டோர் ஆணையம் அனுப்பியது

BREAKING NEWS : முதல்வர் ஜெயலலிதா காலமானார்!! அப்பல்லோ அறிவிப்பு Posted: 05 Dec 2016 12:46 PM PST 05.12.2016 அன்று இரவு 11.30 மணிக்கு காலமானார் செல்வி ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 68. டிசம்பர் 5-ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு மருத்துவர்களின் தீவிர சிகிச்சை பலனின்றி ஜெயலலிதா காலமானதாக அப்போலோ மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழக முதல்வர் ஜெயலலிதா செப்டம்பர் மாதம் 22-ம் தேதி இரவு திடீர் உடல்நலக்குறைவு காரணமாக, சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல் என்று சொல்லி அனுமதிக்கப்பட்டவர் நுரையீரல் பிரச்னை, சுவாசக் கோளாறு, நோய்த் தொற்று என பல உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை குணமடையவேண்டி தமிழகம் முழுக்க அ.தி.மு.க. தொண்டர்கள் பல்வேறு வழிபாடுகளை நடத்தி வந்தனர். ஜெயலலிதா உடல்நிலை தேறிவருவதாக அப்போலோ மருத்துவர்கள் சொல்லிவந்த நிலையில், டிசம்பர் 4-ம் தேதி திடீரென அவருக்கு இதய முடக்கம் ஏற்பட்டதாகச் சொன்னார்கள். இதைத் தொடர்ந்து ஜெயலலிதா தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டதாகவும் தகவல் தெரிவித்தார்கள். இந்நிலையில் தொடர் தீவிர சிகிச்சை பலனளிக்காமல் டிசம்பர் 5-ந் தேதி இரவு 11:30 மணிக்கு காலமானார் ஜெயலலிதா. தமிழகம் கடந்து உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மத்தியிலும் இந்திய அரசியல் அரங்கிலும் இந்தச் செய்தி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஜெயலலிதா மறைவு, தமிழர்களுக்கு மட்டுமல்லாது உலகம் முழுக்கவே அதிர்வலைகளை உண்டாக்கியிருக்கிறது. திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவரங்கத்தை பூர்வீகமாகக் கொண்ட ஜெயலலிதா, 1948-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி கர்நாடக மாநிலம், மேல்கோட்டை எனும் கிராமத்தில் பிறந்தவர். பள்ளி செல்லும் பிராயத்திலேயே நடிக்கத் தொடங்கி, தமிழர்களின் அபிமான நடிகையாக தடம் பதித்தார். அவர் மனதுக்குப் பிடித்துதான் நடிப்புத் தொழிலை தேர்ந்தெடுத்தார் என்று சொல்வதற்கில்லை... ஆனால், அதில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து கொண்டார். தன் முழு உழைப்பையும் கொட்டினார். ஆம், இதுதான் அவர் இயல்பே! எதையும் அவரால் அரை மனதுடன் செய்ய முடியாது. இதை அவர் ஒரு நேர்காணலிலும் பகிர்ந்திருக்கிறார். இதனால்தான் தமிழ் மொழி மட்டுமல்லாது தெலுங்கு, கன்னட மொழி சினிமாக்களிலும் முத்திரைப் பதித்து 120-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் முன்னணிக் கதாபாத்திரங்களில், அவரால் நடிக்க முடிந்தது. அரசியல் அரங்கில் அ.தி.மு.க உறுப்பினராக அடியெடுத்து வைத்த ஜெ. 1984-ஆம் ஆண்டு முதல் 1989-ஆம் ஆண்டு வரை தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிலும், அவர் மிளிர்ந்தார். அவரது பேச்சாற்றலை மூத்த ஊடகவியலாளர் குஷ்வந்த் சிங் பாராட்டி இருக்கிறார். தன் தாய் சந்தியாவுக்கு அடுத்து இந்திரா காந்தியை ஜெயா மிகவும் நேசித்தார். தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் இறப்புக்குப் பின்னர் அவரது அரசியல் வாரிசாக தொண்டர்களால் தேர்வு செய்யப்பட்டவர் ஜெயலலிதா. அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, இறக்கும்வரை அக்கட்சியின் நிரந்தரப் பொதுச்செயலாளராக இருந்தார். 1989-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வுக்குக் கிடைத்த எதிர்க்கட்சி அந்தஸ்தின் மூலம் தமிழகத்தின் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவரானார். 1991 தேர்தலில் வெற்றி பெற்று, முதல் முறையாக முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதேபோல, 2001, 2011 மற்றும் 2016 ஆண்டு தேர்தல்களில் வெற்றி பெற்று தமிழக முதல்வராக தேர்வானார். 2001-’06 காலகட்டத்தில் டான்சி வழக்கு காரணமாக முதல்வர் பதவியிலிருந்து விலக நேர்ந்தது. மேல் முறையீட்டில் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டு மீண்டும் முதல்வரானார். அதே போல் 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, சிறை செல்ல நேர்ந்ததால், முதல்வர் பதவியை இழந்தார். பின்னர் அதிலிருந்து விடுவிக்கப்பட்டதால், 2015 மே மாதம், மீண்டும் தமிழக முதல்வரானார். 2016 தேர்தலில் மீண்டும் தமிழக முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழக அரசியலில், எம்.ஜி.ஆர் காலத்துக்குப் பின்னர், ஒரு தலைவர் தொடர்ச்சியாக இருமுறை ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது என்றால், அது ஜெயலலிதாதான்! தன்னம்பிக்கையும், மிகுந்த துணிச்சலும் கொண்ட ஜெயலலிதா தமிழகத்தின் முதல்வராக 6 முறை பதவி வகித்தவர். தற்போது முதல்வராக இருக்கும்போதே மரணமடைந்துள்ளார். ‘புரட்சித் தலைவி’ என்றும், ‘அம்மா’ என்றும் அ.தி.மு.க-வினரால் கொண்டாடப்படும் செல்வி. ஜெ.ஜெயலலிதா உயிரிழந்தது அ.தி.மு.க. தொண்டர்களுக்கு நிச்சயம் ஈடு செய்ய முடியாத இழப்பாகும். பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாள் விடுமுறை அறிவிப்பு. Posted: 05 Dec 2016 12:47 PM PST பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று முதல் 3 நாட்களுக்கு விடுமுறை: தமிழக அரசு அறிவிப்புமரியாதைக்குரிய தமிழகத்தின் இரும்பு பெண்மணி ஜெ.ஜெயலலிதா "அம்மா" காலமானார்., இரவு 11:30 மணிக்கு (05-12-2016) உயிர் பிரிந்ததாக அப்போல்லோ மருத்துவமனை அதிகாரப்பூர்வ அறிவிப்பு. முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக நேற்றிரவு 11.30 மணி அளவில் இயற்கை எய்தினார். இதையடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று முதல் 3 நாட்களுக்கு விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகின்றன வியாழக்கிழமை வரை அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது முறையாக தமிழக முதல்வராக பதவியேற்றுக் கொண்டார் ஓ.பன்னீர் செல்வம் Posted: 05 Dec 2016 12:48 PM PST தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைப் பலன் இன்றி காலமானார். இதையடுத்து தமிழகத்தின் அடுத்த முதல்வராக ஓ.பன்னீர் செல்வத்தை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தேர்ந்தெடுத்தனர். பின்னர். மூன்றாவது முறையாக தமிழக முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு தமிழக பொறுப்பு ஆளுநர் வித்தியா சாகர் ராவ் புதிய முதல்வர் பன்னீர் செல்வத்திற்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். முதல்வராக பன்னீர் செல்வம் உறுதி மொழி ஏற்றார். ஓ.பன்னீர் செல்வத்தைத் தொடர்ந்து 31 அமைச்சர்களும் பதவியேற்று வருகின்றனர். ஜெயலலிதா இறப்பு அறிக்கை - முழு விபரம். Posted: 05 Dec 2016 12:59 PM PST தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் அகால மரணத்தையடுத்து அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் 12 மணியளவில் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அவ்வறிக்கையின் தமிழ் சாரம் இது: தமிழக முதல்வர் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா இன்று (5.12.16) இரவு 11.30 மணி அளவில் இயற்கை எய்தினார் என்பதை சொல்லவியலா துயரத்தோடு பகிர்ந்துகொள்கிறோம். மாண்புமிகு புரட்சித்தலைவி செல்வி ஜெயலலிதா காய்ச்சல், நீர்ப்போக்கு உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு 22.9.2016 அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மாண்புமிகு முதல்வருக்கு தொடர்ந்து அளிக்கப்பட்ட பல்நோக்கு சிகிச்சை காரணமாக அவரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. வாய் வழியே உணவு எடுத்துக்கொள்ளும் அளவிற்கு உடல்நிலை சீரடைந்து வந்தது. இதனடிப்படையில் மாண்புமிகு முதல்வர் மேம்படுத்தப்பட்ட தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து உயர் சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டார். அங்கே எங்களின் மருத்துவ நிபுணர் குழு அவரின் உடல்நிலையை தீவிரமாக கண்காணித்து வந்தது. இந்நிலையில், திடீரென டிசம்பர் 4, 2016-ல் துரதிர்ஷ்டவசமாக மாண்புமிகு முதல்வர் இதய துடிப்பு முடக்கத்தால் பாதிக்கப்பட்டார். அருகிலேயே தீவிர சிகிச்சைப் பிரிவு மருத்துவர் இருந்ததால், முதல்வருக்கு உடனே சர்வதேச அளவில் மிகவும் மேம்படுத்தப்பட்ட முறையான எக்மோ முறையில் சிகிச்சையளிக்கப்பட்டது. அவரின் உயிரைக் காப்பாற்ற முடிந்த அளவில் முயற்சி செய்து சிறந்த சிகிச்சை முறைகள் பின்பற்றப்பட்டன. ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று (5.12.2016) இரவு 11.30 மணியளவில் அவர் உயிரிழந்தார். அப்போலோ குழுமத்தின் ஒவ்வொரு உறுப்பினரும், ஊழியரும், மருத்துவரும் தங்களால் இயன்ற அளவிற்கு மாண்புமிகு முதல்வரை அக்கறையாக பார்த்துக்கொண்டார்கள். நவீன சிகிச்சை முறைகளையும், தொழில்நுட்பங்களையும் கொண்டு மாண்புமிகு முதல்வரை ஆற்றுப்படுத்த ஓய்வின்றி உழைத்தோம். இந்திய தேசத்திற்கும், தமிழக மக்களுக்கும் நேர்ந்த இந்த அளவுகடந்த துயரத்தில் நாங்களும் கனத்த இதயத்தோடு பங்கெடுத்துக் கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. முதல்வரின் மறைவையொட்டி 7 நாட்களுக்கு துக்கம் அனுசரிப்பு. Posted: 05 Dec 2016 12:49 PM PST தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் காலமானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகம் முழுவதும் தேசிய கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்கும் என அறிவிக்கப்பட்ட்டுள்ளது, முதல்வரின் மறைவையொட்டி 7 நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளாது. காலை 4.30 மணி முதல் ராஜாஜி அரங்கில் ஜெயலலிதா உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு. Posted: 05 Dec 2016 01:49 PM PST பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக ஜெயலலிதா உடல் காலை 4.30 மணி முதல் ராஜாஜி அரங்கில் வைக்கப்படுகிறது. ராஜாஜி அரங்கில் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர்., நினைவிடத்துக்கு ஜெயலலிதா உடல் நல்லடக்கம் இன்று நடைபெற வாய்ப்பு? Posted: 05 Dec 2016 01:44 PM PST முதல்வர் ஜெயலலிதாவுக்கு சென்னை கடற்கரை சாலையில் உள்ள எம்.ஜி.ஆர்., நினைவிடத்துக்கு அருகிலேயே நினைவிடம் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதற்காக கடலோர ஒழுங்கு முறை சட்டத்தில் இருந்து போதிய விலக்குப் பெற்று நினைவிடம் அமைக்கப்பட இருப்பதாக உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல்வர் ஜெயலலிதா மரணம் அடைந்ததாக திங்கள்கிழமை இரவு 11.30 மணிக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, அவரது உடல் அவரின் போயஸ் தோட்ட இல்லத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதன்பின்பு, சென்னை அரசினர் தோட்டத்துக்கு அருகேயுள்ள ராஜாஜி ஹாலில் பொது மக்களின் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்படும் எனத் தெரிகிறது. நாடு முழுவதும் உள்ள முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள், கட்சியினர், பொது மக்களின் அஞ்சலிக்குப் பிறகு அவரது உடல் சென்னை கடற்கரை சாலையில் நினைவிடம் அமைக்கப்பட்டு அங்கே வைக்கப்படும் எனத் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எம்.ஜி.ஆர் வழியில் ஏழைகளின் ஏந்தலாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா! Posted: 05 Dec 2016 01:06 PM PST "மக்களால் நான், மக்களுக்காகவே நான்" - இந்த தாரக மந்திரச் சொல்லைக் கேட்டதுமே, தமிழக மக்கள் அனைவர் மனதிலும் நிழலாடும் உருவமாகத் திகழ்ந்தவர் முதலமைச்சர் ஜெயலலிதாதான். திரைத்துறையிலும், அரசியல் வாழ்விலும் தனக்கென ஒரு தனியிடத்தைக் கொண்டு, இறுதி மூச்சு உள்ளவரை, எண்ணற்ற சாதனைகளைப் படைத்தவர் ஜெயலலிதா. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை எம்.ஜி.ஆர், கடந்த 1972-ம் ஆண்டு தொடங்கியது முதல், கோடிக்கணக்கான எம்.ஜி.ஆர் ரசிகர்களும், சாமான்ய மற்றும் ஏழை-எளிய மக்களும், குறிப்பாக தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான பெண்களும் எம்.ஜி.ஆரின் பின்னால் அணிவகுத்து, அவருக்கு மகத்தான ஆதரவை அளித்தனர். ஏழை-எளிய மக்களும், ரசிகர்களும் அளித்த பேரன்பு, எம்.ஜி.ஆரே எதிர்பார்க்காதது. திரையுலகில் அளித்த பேராதரவைக் காட்டிலும், அரசியலில் தம்மை திக்குமுக்காடச் செய்யும் அளவுக்கு அன்பையும், ஆதரவையும் தொடர்ந்து அளித்த சாமான்ய மக்களுக்கு என்ன கைம்மாறு செய்யப்போகிறோம்? என்று பல நாட்கள் இரவு, பகலாக எம்.ஜி.ஆர் யோசித்ததன் விளைவாகவே, தமிழகத்தில் எம்.ஜி.ஆர் ஆட்சியின்போது பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. சத்துணவுத்திட்டம், வீட்டில் உள்ள ஒருவருக்கு அரசு வேலை, ஏழை மக்களுக்கு இலவச காலணி வழங்கும் திட்டம், விவசாயிகளுக்கு தடையில்லா இலவச மின்சாரம் என்று, தம்மை முதல்வர் பதவியில் அமர்த்தி வைத்த, சாமான்ய மக்களின் நலனில் அன்றாடம் அக்கறை கொண்டு, தமிழக முதல்வர் பதவியை அலங்கரித்தவர் எம்.ஜி.ஆர். கடந்த 1977-ல் ஆட்சியைப் பிடித்தது முதல், 1987-ல் எம்.ஜி.ஆர் மறையும் வரை, தொடர்ந்து முதல்வராகப் பதவியில் இருந்தவர் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆரை, தனது அரசியல் ஆசானாகக் கொண்டு, அரசியலில் அவரது வழியைப் பின்பற்றி ஏழை-எளிய மக்களின் வாழ்வை மேம்படுத்துவதற்காகவும், மகளிர் வாழ்வில் தன்னம்பிக்கையுடனும், துணிவுடனும் திகழ்வதற்காகவும் பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தியவர் முதல்வர் ஜெயலலிதா. தமது 68-வது வயதில், சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார் ஜெயலலிதா. கடந்த 75 நாட்களாக, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டும், அவரது உடல்நிலைலயில் முன்னேற்றம் ஏற்படவில்லை. நேற்று மாரடைப்பு ஏற்பட்டு, தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், அவரை மருத்துவர்களால் காப்பாற்ற முடியவில்லை. எம்.ஜி.ஆர் வழியில், செயல்பட்ட முதல்வர் ஜெயலலிதா, 'எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும், இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்' என்று தனது ஒவ்வொரு உரையின் போதும், ஜெயலலிதா தவறாமல் குறிப்பிடுவார். ஏழை மக்கள் எல்லாமும் பெற வேண்டும் என்பதற்காக, எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி, அல்லும், பகலும் ஏழை மக்கள் நல்வாழ்விற்காக அயராது பாடுபட்டு வந்த, ஏற்றமிகு ஏந்தலான முதல்வர் ஜெயலலிதா என்னும் ஒளிவிளக்கு இப்போது அணைந்து விட்டது. ஏழை மக்களுக்கு என்றென்றும் அரணாக விளங்கிய ஜெயலலிதா-வின் ஆன்மா அவர் ஒவ்வொரு அ.தி.மு.க தொண்டன் மறைவின்போதும், தெரிவிப்பது போன்ற, இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறட்டும். ஏழைகள் வாழ்வில், ஜெயலலிதா தொடங்கி வைத்த எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்கள், என்றென்றும் நீடிக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. மன்னிப்பு கோரினார் ரங்கராஜ் பாண்டே Posted: 05 Dec 2016 12:55 PM PST ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து தவறான செய்தியை ஒளிபரப்பியதற்காக, தந்தி தொலைக்காட்சியின் தலைமைச் செய்தியாளர் ரங்கராஜ் பாண்டை மன்னிப்பு கோரியுள்ளார். இது குறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது, தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் இன்று மாலை நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல். Posted: 05 Dec 2016 12:49 PM PST தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் காலமானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக ஓமாந்தூரார் தோட்டத்தில் உள்ள ராஜாஜி ஹாலில் வைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொதுமக்களின் அஞ்சலிக்கு பின்னர் இன்று மாலை அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாக தெரிகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் பதவியில் இருக்கும் போது உயிரிழந்த மூன்றாவது முதல்வர் ஜெயலலிதா ஆவார். Flash News:முதல்வர் உடல்நிலை குறித்த தகவல் தவறான செய்தி - அப்போலோ மறுப்பு Posted: 05 Dec 2016 05:09 AM PST முதல்வருக்கு தொடர்ந்து சிகிச்சை நடைபெற்று வருகிறது. முதல்வர் உடல்நிலை குறித்த தகவல் தவறான செய்தி - அப்போலோ விளக்கம். முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை கவலைக்கிடம்: அப்பல்லோ புதிய அறிக்கை Posted: 05 Dec 2016 12:16 AM PST சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது என்றும் அப்போலோ மருத்துவமனை புதிய அறிக்கை வெளியிட்டு உள்ளது. மேலும் முதல்வருக்கு மருத்துவ நிபுணர்களால் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என அப்போலோ மருத்துவமனை தெரிவித்துள்ளது. CCE-WORKSHEET -தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை Posted: 05 Dec 2016 07:54 AM PST G.O NO - 449,dt-29.11.2016-CCE-WORKSHEET -தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை CLICK HERE-TO DOWNLOAD CCE- G.O முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை மிகவும் மோசமாக உள்ளது: ரிச்சர்ட் பீலே Posted: 05 Dec 2016 02:55 AM PST முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை மிகவும் மோசமாக உள்ளது. முடிந்த வரை சிறப்பான சிகிச்சை அளித்துவிட்டோம் என்று மருத்துவ நிபுணர் ரிச்சர்ட் பீலே தெரிவித்துள்ளார். முதல்வர் ஜெயலலிதா கடந்த 22-ந்தேதி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப் பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பல்வேறு பிரிவுகளின் சிறப்பு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். இந்நிலையில் நேற்று இரவு திடீர் என மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து முதல்வர் ஜெயலலிதாவுக்கு மருத்துவ நிபுணர்களால் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது என்றாலும் சர்வதேச தரத்தில் சிகிச்சை அளித்தும் முதல்வரின் உடல் நிலை மோசமாக உள்ளது. என்று மருத்துவ நிபுணர் ரிச்சர்ட் பீலே தெரிவித்துள்ளார். CCE 4th Week Tamil - Answer Keys (1 to 10th std) Posted: 04 Dec 2016 11:46 PM PST கல்வி கட்டண கமிட்டி காலி; தொடருது கண்ணாமூச்சி!! Posted: 04 Dec 2016 10:32 PM PST காமராஜர் பல்கலையில் இட ஒதுக்கிடு விவகாரம்; உயர்கல்வித்துறை செயலருக்கு நோட்டீஸ்; தேசியதாழ்த்தப்பட்டோர் ஆணையம் அனுப்பியது Posted: 04 Dec 2016 10:29 PM PST ''நீட்'' தேர்விலும் குஜராத்தி மொழிக்கு அனுமதி

புதுச்சேரி தனியார் பள்ளிகளில் ஸ்வைப் மெஷின்’ மூலம் கல்விக் கட்டணம்: கல்வித் துறை விரைவில் நடவடிக்கை.

புதுச்சேரியில் உள்ள தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை ‘ஸ்வைப் மெஷின்’ மூலம் பெற்றுக்கொள்ள வேண்டும்என உத்தரவிட்டு கல்வித் துறை மூலம் அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட உள்ளது.பண மதிப்பு நீக்கம் செய்யப் பட்டு 25 நாட்களுக்கு மேல் ஆகி யும் வங்கிகள் மற்றும் ஏடிஎம் மையங்களில் கூட்டம் இன்னும் குறையவில்லை. 
புதுச்சேரியில் தற்போது கடும் பணத் தட்டுபாடு பிரச்சினை நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் பணமில்லா பரிவர்த்தனைக்கு மாற வேண்டும் என துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அறிவுறுத்தியுள்ளார்.இந்நிலையில், புதுச்சேரியில் உள்ள தனியார் பள்ளிகள் அனைத் தும் கல்விக் கட்டணத்தை ரொக்க மாக செலுத்த வேண்டும் என பெற்றோரை கட்டாயப்படுத்தி வருவதாக புகார் எழுந்தது. இதை யடுத்து கல்விக் கட்டணத்தை ‘ஸ்வைப் மெஷின்’ மூலம் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று உத்தர விட்டு கல்வித் துறை மூலம் அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட உள்ளது.

பணத் தட்டுப்பாடு

புதுச்சேரி மாநிலத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் என மொத்தம் 731 பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதில் அரசுஉதவிபெறும் பள்ளிகள் 33, தனியார் பள்ளிகள் 268 என மொத்தம் 301 பள்ளிகள் உள்ளன. அரசுப் பள்ளிகளைவிட தனியார் பள்ளிகளிலேயே அதிகமான மாணவர்கள் பயின்று வருகின்றனர். தற்போது புதுச்சேரியில் ஏற்பட் டுள்ள பணத்தட்டுப்பாடு காரண மாக பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்ற னர். குறிப்பாக, வீட்டின் அத்தியா வசிய தேவைகளுக்குக் கூட பணம் இல்லாமல் தவித்து வருகின்றனர்.

பெற்றோர் புகார்

இந்நிலையில், தனியார் பள்ளி கள் கல்விக் கட்டணத்தை ரொக்கமாக செலுத்த வேண்டும் என தொடர்ந்து பெற்றோர்களுக்கு அழுத்தம் கொடுத்து வந்தன. இது தொடர்பாககல்வித் துறை அமைச்சர் மற்றும் கல்வித் துறை இயக்குநருக்கு பெற்றோர் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்தே இந்த முடிவை கல்வித்துறை எடுத்துள்ளது.

சுற்றறிக்கை

இதுகுறித்து கல்வித் துறை அதிகாரியிடம் கேட்டபோது, “தற் போது நிலவி வரும் பணத் தட் டுப்பாடு பிரச்சினையால் கல்விக் கட்டணத்தை ரொக்கமாக செலுத்து வதில் சிரமம் உள்ளது. எனவே, தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை காசோலையாக பெற்றுக்கொள்ள வேண்டும். ஸ்வைப் மெஷினை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தப்படும். இது தொடர்பான சுற்றறிக்கை அனைத்து தனியார் பள்ளி நிர் வாகத்துக்கும் 5-ம் தேதி (இன்று) கல்வித் துறை மூலம் அனுப்பப் படும்” என்றார்.

5/12/16

TNPSC - MAY 2016 BULLETIN...

பள்ளிகளுக்கு அருகில் தின்பண்ட கடைகளுக்கு தடை

 பள்ளிகளுக்கு அருகில் சுகாதாரமற்ற தின்பண்டங்களைவிற்க, தடை
விதிக்கப்பட்டுள்ளது.

       இது தொடர்பாக, பள்ளிக்கல்வி இயக்குனர், கண்ணப்பன், அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும்அனுப்பியுள்ள கடிதம்:பள்ளியில் வழங்கப்படும்சத்துணவு, முற்றிலும் துாய்மையாக சமைக்கப்பட வேண்டும்.
அரிசி, பருப்பு மற்றும் காய்கறிகள் உள்ளிட்டஉணவு பொருட்கள், துாய்மையான நீரில் சுத்தம் செய்யப்படவேண்டும். சமையல் கூடம், உணவுஅருந்தும் இடத்தை சுத்தமாக பராமரிக்கவேண்டும்.
மதிய உணவை, துாய்மையான முறையில்வினியோகம் செய்ய வேண்டும். மாணவர்கள்உணவு அருந்தும் தட்டு, டம்ளர் போன்றவற்றை, கழுவி சுத்தமாக பயன்படுத்த அறிவுறுத்த வேண்டும். உணவு சமைத்தல் மற்றும்பரிமாறும் முறைகளை, தலைமை ஆசிரியர், தினமும்கண்காணிப்பது அவசியம்.
விழா நாட்களில், தன்னார்வ நிறுவனங்கள் வெளியிலிருந்து கொண்டு வரும், உணவின்தரத்தை சோதித்த பின்பே, மாணவர்களுக்குவழங்க வேண்டும்.பள்ளி வளாகத்திற்கு அருகில்விற்கப்படும், சுகாதாரம் இல்லாத தின்பண்டங்களை உண்ணக்கூடாது என, மாணவர்களுக்கு, தினமும்அறிவுறுத்த வேண்டும்.
பள்ளிகளின்முன், சுகாதாரமற்ற உணவு விற்கும் கடைகளைஅனுமதிக்க கூடாது; முற்றிலும் தடைசெய்ய வேண்டும்.

இவ்வாறுஅதில் கூறப்பட்டு உள்ளது.

தயிர் அதிகம் உட்கொண்டால் மார்பகப் புற்று நோயை தடுக்கலாம்

Periyar University - B.Ed Part time - ( 3 years) Notification

CCE WORKSHEET TAMIL KEY ANSWERS - 4 week 1 to 5 std

G.O NO -449-DT-29.11.2016-CCE-WORKSHEET -தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை-

4/12/16

ஆசிரியர் காலி பணியிடம் ; 3 மாதங்களில் நிரப்ப அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

NMMS-ONLINE- -ல் பதிவேற்றம் செய்யும் போது Phone No., Mobile No., Email – ID அவசியம் பதிவேற்றம் செய்ய வேண்டும்.ஏற்கனவே வழங்கப்பட்ட USER ID/PASSWORD-ஐ பயன்படுத்தி 14.12.2016-குள் ONLINE-ல் பதியவும் -இயக்குநர் அறிவுரை


கடலூர் மாவட்ட அனைவருக்கும் கல்வி திட்ட அதிகாரி தற்காலிக பணிநீக்கம்

பள்ளி சென்று இடையில் நின்றமாணவர்களின் கல்வியை தொடரவும், அனைவருக்கும்கல்வி கிடைக்கவும், அனைவருக்கும் கல்வி திட்டம்
மூலம்பல்வேறு திட்டங்களை மத்திய அரசு  செயல்படுத்தி வருகிறது.

இதற்குஉதாரணமாக மாணவ மாணவிகளுக்கு உபகரணங்கள், பள்ளிகளுக்கு கூடுதல் கட்டிடங்கள், மாணவமாணவிகளுக்கு ஊக்கத் தொகை, மாற்றுத்திறனாளிமாணவ மாணவிகளுக்கு கூடுதல் ஊக்கத் தொகைஇப்படிப்பட்ட செலவினங்களுக்காக பல கோடிகளை ஒதுக்கிசெலவிடுகிறது மத்திய அரசு.

இந்த திட்டத்தின்படி கடலூர் மாவட்டத்தில் அனைவருக்கும்கல்வி திட்டத்தில் செயல்பாடுகளில் முறைகேடு நடப்பதாக புகார்கள் சென்றதையடுத்து திட்ட இயக்குநர் உஷாராணிதலைமையிலான குழு, இரண்டு நாட்கள்கடலூரில் முகாமிட்டு விசாரணை செய்ததன் அடிப்படையில்நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக இத்திட்டத்தின் உதவித் திட்ட அலுவலர்வெங்கடேசனை தற்காலிக பணிநீக்கம் செய்து திட்ட இயக்குநர்உத்தரவிட்டார்..

CPS NEWS:PFRDAவால் நியமிக்கப்பட்ட ஓய்வூதிய நிதி மேலாளரான UTI தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வரம்பிற்குள் வராது என்று RTI கடிதத்திற்கு பதில் வழங்க மறுப்பு.

மத்தியஅரசில் Cpsல் ஓய்வு பெற்றவர்களின் ஓய்வூதியவிபரங்கள்
வழங்க மறுக்கும் நிதிமேலாளர்கள். 

PFRDAவால் நியமிக்கப்பட்ட ஓய்வூதிய நிதி மேலாளரான UTI
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வரம்பிற்குள் வராது என்று RTI கடிதத்திற்கு பதில் வழங்க மறுப்பு.


பதில் வழங்க மறுக்கும் காரணம்அறிவீரோ?


திண்டுக்கல்எங்கெல்ஸ்

பள்ளிக் கல்வி - டிசம்பர் - 7 கொடிநாள் கொண்டாடுவது குறித்த இயக்குனர் செயல்முறைகள்!!!

மருத்துவப் படிப்புகளுக்கான, 'நீட்' நுழைவுத்தேர்வுக்கு, அடுத்த வாரம் முதல் விண்ணப்பப் பதிவு துவங்க உள்ளது. மத்திய, மாநில அரசு மருத்துவக் கல்லுாரிகளில், மத்திய அரசு ஒதுக்கீட்டு இடங்களில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில் சேர, 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

நீட்' தேர்வு: அடுத்த வாரம் விண்ணப்பபதிவு
அத்துடன், 'மாநில அரசு மற்றும் தனியார்மருத்துவ கல்லுாரி களிலும், மாணவர்களை சேர்க்க, நீட் தேர்வு தேர்ச்சிகட்டாயம்' என, உச்ச
நீதிமன்றம், கடந்த ஆண்டு உத்தரவிட்டது. இதற்கு, தமிழகம் உட்பட பல மாநிலங்கள், கடும் எதிர்ப்பு தெரிவித்தன. எனவே, தமிழகம், ஆந்திராஉள்ளிட்ட சில மாநிலங்களிலுள்ள, அரசுகல்லுாரிகளில், மாநில அரசின் ஒதுக்கீட்டுஇடங்களில், கடந்த ஆண்டு சேர்க்கைக்கு, 'நீட்' தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது.
அதே நேரத்தில், தனியார் கல்லுாரி இடங்களை, 'நீட்' தேர்ச்சி பெற்றவர்களை கொண்டே நிரப்ப உத்தரவிடப்பட்டது. இந்த ஆண்டு, அரசு மற்றும்தனியார் கல்லுாரி களுக்கும், 'நீட்' தேர்வு கட்டாயம்என்ற நிலையே உள்ளது.

கடைசி நேரத்தில், மாநில அரசு ஒதுக்கீட்டுஇடங்களுக்கு, 'நீட்' தேர்வில் விலக்குஅளிக்கப்படலாம். இந்நிலையில், வரும் கல்வி ஆண்டுக்கான, 'நீட்' தேர்வுக்கு, அடுத்த வாரம் முதல், ஆன்லைன் விண்ணப்பப் பதிவு துவங்கும் என, தெரிகிறது. ஜன., முதல் வாரம்வரை, விண்ணப்பத்தை பதிவு செய்ய, அவகாசம்வழங்கப்படலாம். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., ஒரு வாரத்திற்குள் வெளியிடும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

அரசு பணியில் சேரும்போது சொத்து விபரம் வழங்க உத்தரவு

அரசு பணிகளில் சேருவோர், தங்கள் முழு சொத்துவிபரங்களை அளிக்க வேண்டும்' என, கேரள அரசு உத்தரவிட்டு உள்ளது.கேரள மாநிலத்தில்,
மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த, பினராயிவிஜயன் முதல்வராக உள்ளார்.

வருமானத்துக்குஅதிகமாக சொத்துக்களை சேர்க்கும் அரசு ஊழியர்களை கண்டறியும்வகையில், அரசு பணியில் புதிதாகசேருவோர், தங்கள் சொத்து விபரங்களைவழங்க வேண்டும் என, மாநில அரசுஉத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்துவெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அனைத்து அரசு துறைகளிலும்உள்ள காலிப் பணியிடங்களுக்கு தேர்வுசெய்யப்படுவோர் அனைவரும், அவர்களது சொத்து விபரங்களை அறிவிக்கவேண்டும். அவர்களது பணிப் பதிவேட்டின் ஒருபகுதியில் அசையும், அசையா சொத்துக்களின் விபரங்களைஎழுத வேண்டும். இவ்வாறு செய்வதால், பணியில்சேர்ந்த பின், ஒருவர் வருமானத்திற்குஅதிகமாக சொத்து சேர்ப்பதை எளிதில்கண்டுபிடித்து, உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியும். இவ்வாறுஅதில் கூறப்பட்டுள்ளது.

அரசு பள்ளிகளில் 'அட்மிஷன்' அபாரம்! எப்படி நடந்தது இந்த 'மாஜிக்?'

கோவை மாவட்ட அரசு துவக்கப்பள்ளிகளில்உள்ள ஆங்கில வழிப்பிரிவில், மாணவர்சேர்க்கை அதிகரித்து வருகிறது. கடந்த சில
ஆண்டுகளாக, அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வீழ்ச்சிஅடைய துவங்கியதால், சுதாரித்துக் கொண்டது அரசு. ஆங்கிலவழிக்கல்வித் திட்டத்தை துவங்கி, அரசுப்பள்ளிகள் மீண்டும் எழுந்து நிற்பதற்கான நடவடிக்கைகளைஎடுத்தது.
இதன் விளைவால், இன்று கோவை மாவட்டஅரசு துவக்கப்பள்ளிகளில் உள்ள ஆங்கில வழிப்பிரிவில், மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது. கடந்த, 2012 - 2013ல், ஆங்கில வழிப்பிரிவுதுவங்கப்பட்டபோது, ஒன்று முதல் எட்டாம்வகுப்பு வரை வெறும், 107 ஆகஇருந்த மாணவர் எண்ணிக்கை, 2016 -2017 ல், 29 ஆயிரத்து837 ஆக உயர்ந்துள்ளது. 2013 -2014 ல், 248 பள்ளிகளில் ஆங்கிலவழிக்கல்வியை துவங்கியபோது, முதல் வகுப்பில், 4,455 மாணவர்கள், இரண்டாம் வகுப்பில் 101 மாணவர்கள், ஆறாம் வகுப்பில், 298 பேர்என மொத்தம், 4,864 பேர் சேர்ந்தனர். அதற்கடுத்தஇரண்டு ஆண்டுகளில், 21 ஆயிரத்து 132 ஆக உயர்ந்த எண்ணிக்கை, 2016 -2017 ம் ஆண்டில் ஒன்று முதல்எட்டாம் வகுப்பு வரை, 29 ஆயிரத்து837 மாணவர்களாக உயர்ந்துள்ளது.

'டி.சி.,' கட்டாயமில்லை மாவட்டதொடக்கக்கல்வி அலுவலர் கூறுகையில், ''மாவட்டத்தில், 611 பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்விப்பிரிவுதுவங்கப்பட்டுள்ளது.தனியார் பள்ளிகளில் இருந்து, கல்வியாண்டின் நடுவே மாணவர்கள் வந்தாலும், மறுக்காமல் சேர்த்துக் கொள்கிறோம்;'டி.சி.,' கட்டாயமில்லை,'' என்றார். ஆசிரியர்கள் கூறுகையில், 'இன்று அனைத்து ஆரம்பப்பள்ளிகளிலும், 'டெட்' உட்பட, அனைத்து தகுதித்தேர்விலும்தேர்ச்சி பெற்ற, ஆசிரியர்கள் பணியில்உள்ளனர்.எங்கள் அர்ப்பணிப்பு மிக்கபயிற்சியுடன், எஸ்.எஸ்.ஏ., அளித்துள்ள செயல்வழி கல்வி அட்டைகள், பயிற்சிகள், கல்வி உபகரணங்களும் சேர்க்கை உயர காரணம். அரசுப்பள்ளிகளில்வழங்கப்படும்விலையில்லா பொருட்களும், தனியார்பள்ளிகளின், கல்விக் கட்டணமும் ஒருகாரணம் என்பதை மறுப்பதற்கில்லை'என்றனர்.

CPS:18 ஆயிரம் கோடி ரூபாய் என்னாச்சு : அரசு ஊழியர் சங்கம் கேள்வி

அரசு ஊழியர்களிடமிருந்து பிடித்தம்செய்யப்பட்ட சம்பள பணம் 18 ஆயிரம்கோடி ரூபாய் எந்த கணக்கில்உள்ளது, என தமிழ்நாடு அரசு
ஊழியர் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழ்நாடுஅரசு ஊழியர் சங்க பொதுச்செயலர்கிருஷ்ணன், மாநில துணைத்தலைவர் மெய்யப்பன்ஆகியோர் ராமநாதபுரத்தில் கூறியதாவது: தலைமை செயலகம், சட்டசபைஉள்பட 143 அரசு துறைகள் தமிழகத்தில்உள்ளன. இவற்றில் 6,49,201 நிரந்தரம், 4,12, 214 தற்காலிக ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். சட்டசபை தேர்தலில் அளித்தவாக்குறுதிபடி புதிய பங்களிப்பு ஓய்வூதியதிட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். அரசுத்துறைகளை தனியார்மயமாக்கும் போக்கை மத்திய, மாநிலஅரசுகள் கைவிட வேண்டும்.
கடந்த2003 ஏப்., 1 முதல் ஊழியர்களிடமிருந்து பிடித்தம்செய்யப்பட்ட சம்பள பணம் 18 ஆயிரம்கோடி ரூபாய் எந்த கணக்கில்உள்ளது என்பதை அரசு தெளிவுபடுத்தவேண்டும். எட்டாவது ஊதியக்குழு அமைத்து மத்திய அரசுஊழியர்களுக்கு இணையான சம்பளம், இதரசலுகைகள் வழங்க வேண்டும். 15 ஆண்டுகளுக்குமேலாக அரசு துறைகளில் காலியாகஉள்ள 3 லட்சம் பணியிடங்களை நிரப்பவேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, ஊராட்சி செயலர்கள், வருவாய்கிராம உதவியாளர்கள், ஊரக நுாலகர்களுக்கு வறையறுக்கப்பட்டஊதியம் வழங்க வேண்டும். கம்ப்யூட்டர்ஆப்பரேட்டர், தட்டச்சர், இளநிலை உதவியாளர் உள்படஇதர தொகுப்பூதிய பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கவேண்டும்.

இவ்வாறுகூறினர்.

கிராம புற மாணவர்களின் நலன் கருதி அனைத்து அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும்.

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும்  கணினி ஆசிரியர்களை  நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதனால் கல்வி துறையில் மாபெரும் மாற்றம் உருவாகும் மேலும் கல்வித்துறையில் மாணவர்கள் கணினியில் 
கற்க உதவும். கணினி ஆசிரியர்களை  நியமிப்பதால் பல குடும்பங்ககளின் வாழ்வாதாரங்கள் காக்கப்படும்.அலுவலக சார்ந்த படிவங்கள் மற்றும் கடிதங்கள் விரைவாக முடியும்.

மாணவர்களின் கணினி சார்ந்த அறிவு வளம் பெருகும்.அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை பல மடங்கு  உயரும்.......பள்ளிகளின் தரமும்  உயரும்.

கிராம புற மாணவர்களின் நலன் கருதி 

இது குறித்து தமிழக அரசு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நன்றி-திரு-சேவியர் ஜோஸப் கென்னடி -தமிழக ஆசிரியர் மன்றம்-மாநில துணை பொதுச் செயலாளர் -திண்டுக்கல் 

மரணத்திற்கு பின் என்ன நடக்கிறது ஆராய்ச்சியில் அதிர்ச்சி தகவல்!!

மரணத்திற்குப் பின்  வாழ்க்கைஉண்டா, மரணத்திற்கு பின் என்ன நடக்கிறதுஎன்ற கேள்வியைப்போல் சிக்கலான ஒரு கேள்வி
வேறொன்றுமில்லை.

மனிதனின் மனதை உலுக்கியெடுக்கிற இந்தக்கேள்வி இன்றுவரை ஒலித்துக்கொண்டிருக்கிறது.

    விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் கூறும்போது மூளை உயிருடன் இருக்கும்வரைதான் எல்லாமே. அது செயலிழந்து விட்டால்அனைத்தும் முடிந்து போய் விடும். அதன்பிறகு எதுவுமே கிடையாது. மரணம்தான்இறுதியானது. சொர்க்கமும் கிடையாது, நரகமும் கிடையாது, மறுபிறவியும்கிடையாது.என்கிறார்.

இருந்தாலும்ஒவ்வோரு நாட்டிலும் மரணத்திற்கு பின் என்ன என்பதற்கான்ஆராய்ச்சிகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
கடந்த2011 ஆம் வருடம். இங்கிலாந்து நாட்டில்உள்ள ஒரு பெரிய மருத்துவமனையில்இதய நோய் காரணமாக ஒருநோயாளியை ஐ.சி.யூவில்வைத்து சிகிச்சை பார்த்து கொண்டிருந்தார்கள் மருத்துவர்கள்.

அப்போதுதிடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட, மருத்துவர்களில் முயற்சியால்அவர் காப்பாற்றப்பட்டார். பின்னர் மயக்கத்திலிருந்து அவர்சொன்ன வார்த்தைகள் அனைத்தும் கேட்பவர்களை நடுநடுங்க வைத்தது.
அதாவது, மாரடைப்பு ஏற்பட்டவுடன் தன் உடலிலிருந்து தான்வெளியில் வந்ததாகவும், இந்த அறையின் ஓரத்தில்நின்று கொண்டு தனக்கு வழுக்கைத்தலைமருத்துவர் ஒருவர் சிக்கிச்சையளிப்பதை தானேபார்த்ததாகவும் கூறியுள்ளார்.

அவர் வீட்டிலிருந்து மயக்கநிலையில் வந்து மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். பின்னர் எப்படி அவர் சரியாகமருத்துவரை பற்றி கூறியுள்ளார் பார்த்தீர்களா? அதான் ஆச்சரியம்!

இன்னொருசம்பவம், கடந்த 1977 ஆம் ஆண்டில் அமெரிக்காவில்ஒரு பெண்ணுக்கு கடுமையான மாரடைப்பு வந்து இதயதுடிப்பு நின்றவரைஉயிர்ப்பிக்கும் முயற்சியில் மருத்துவர்கள் இருந்தபோது, நடந்ததை பற்றி அவரேகூறுகிறார்,என் உடலைவிட்டு நான் அப்படியே மேலேபோனேன், மருத்துவமனை மொட்டை மாடியில் ஒருசெருப்பும், பூக்களும் இருப்பது எனக்கு தெரிந்தது எனஅவர் கூறினார். அங்கு போய் மருத்துவர்கள்பார்த்த போது உண்மையிலேயே அங்குஅந்த பொருட்கள் இருந்துள்ளது.
இது போல பல உண்மைசம்பவங்கள் உலகெங்கிலும் இங்கொன்றுமாக, அங்கொன்றுமாக நடந்து கொண்டிருப்பதாக மருத்துவஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

இது சம்மந்தமாக மாரடைப்பு வந்து செத்துப் பிழைத்த101 நோயாளிகளிடம் ஓர் ஆராய்ச்சி நடத்தப்பட்டது. மாரடைப்பு வரும் நேரத்தில், இதயம்கொஞ்ச நேரம் துடிக்காமல் பின்னர்இயங்க ஆரம்பிக்கும். அந்த நேரத்தில் விலங்குகள்அல்லது செடிகொடிகளை பார்த்தல், அவர்கள் அறைகளில் நடப்பதுதெரிவது, அவர்கள் வாழ்க்கையில் நடந்தஒரு சம்பவம் மறுபடி நடத்தல்போன்ற பல விஷயங்கள்  தாங்கள் உணர்ந்ததாக அவர்கள்கூறியுள்ளார்கள்.

இப்படியானபல தனி மனித உதாரணங்கள், பல மருத்துவ விஞ்ஞானிகள் ஆராய்ச்சிகள் நடந்து வந்தாலும், இறந்தவர்கள்அதன் பின்னர் என்ன ஆவார்கள்என்பதை முற்றிலுமாக யாராலும் கணிக்கமுடியவில்லை என்பதே நிதர்சன உண்மையாகும்.

தமிழக கல்வித்துறை வணிகமயமாக மாறி வருகிறது: திருநாவுக்கரசர் குற்றச்சாட்டு !!

தமிழக கல்வித்துறை என்பதுவணிகமயமாக மாறி வருவதாக தமிழககாங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திருநாவுக்கரசர் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டஅறிக்கையில், ''6 முதல் 14
வயது நிரம்பிய அனைவருக்கும்நாடு முழுவதும் கட்டாயக் கல்வி உரிமை வழங்கும்சட்டத்தை கடந்த மத்திய  காங்கிரஸ் கூட்டணி அரசு 2006-ல்நிறைவேற்றியது. இச்சட்டத்தின்படி, அனைத்து தனியார் பள்ளிகளும்ஒவ்வொரு வகுப்பிலும் 25 சதவீத இடங்களில் ஏழைமாணவர்களை சேர்க்க வேண்டுமென ஆணைபிறப்பிக்கப்பட்டது.

கடந்த 2013-14-ம் கல்வி ஆண்டில்25 சதவீத ஒதுக்கீட்டின்படி, தமிழகத்தில் மொத்தம் ஒதுக்கப்பட வேண்டியஇடங்கள் 1 லட்சத்து 43 ஆயிரம். ஆனால், 16 ஆயிரத்து194 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. 25 சதவீத ஒதுக்கீடுவழங்க வேண்டிய தனியார் பள்ளிகள்8.8 சதவீதம்தான் ஒதுக்கியிருந்தன.
எல்லாவற்றையும்மிஞ்சுகிற கொடுமை என்னவெனில், தமிழகத்தில்உள்ள 10,758 தனியார் பள்ளிகளில் 25 சதவீதஒதுக்கீட்டின் படி சேர்க்க வேண்டியமாணவர்களில் ஒரே ஒரு மாணவர்தான்சேர்க்கப்பட்டுள்ளார். இந்நிலையில், 2015-16-ம் கல்வியாண்டில் மாணவர்கள்சேர்க்கை உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக கல்வியமைச்சர் கூறியிருக்கிறார். எனவே, கல்வி உரிமைச் சட்டப்படிஎவ்வளவு மாணவர்கள் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்டனர்என்ற விவரத்தை கல்வியமைச்சர் வெளியிட வேண்டும்.
மேலும், தமிழகத்தில் படிக்கிற மாணவர்களின் தரம் குறித்து செய்யப்பட்டஆய்வறிக்கை மிகுந்த அதிர்ச்சியை தரும்வகையில் உள்ளது. இந்த அறிக்கையின்படிகிராமப்புற பள்ளிகளில் முதல் வகுப்பு முதல்எட்டாம் வகுப்புவரை படிக்கிற மாணவர்களில் 21 சதவீதத்தினர்தான் முதல் வகுப்பு பாடங்களையேபடிக்க திறனுள்ளவர்களாகவும், இரண்டாம் வகுப்பு பாடத்தை 30 சதவீதமாணவர்கள்தான் படிக்க முடிகிறது என்கிறஆய்வறிக்கையின் கூற்றை கண்டு அதிர்ச்சியடையாதவர்கள்இருக்க முடியாது.
ஆனால், மத்திய பாடத்திட்டம், மெட்ரிக் பள்ளிகளில் படிக்கிற மாணவர்களின் கல்வித்திறன், அரசு பள்ளிகளில் படிக்கிறமாணவர்களைவிட மிகுந்ததாக இருப்பதால், தமிழக மாணவர்களிடையே கல்வியறிவில்மிகப்பெரிய ஏற்றத்தாழ்வு உருவாகி வருகிறது. இந்நிலையின்காரணமாக தமிழக கல்வித்துறை என்பதுவணிகமயமாக மாறி வருகிறது.

அரசுப்பள்ளிகளில் தரமான கல்வி வழங்கப்படாததால்தனியார் பள்ளிகளுக்கு மாணவர்கள் படையெடுக்கிற நிலை ஏற்பட்டுள்ளது. இதைஉடனடியாக தடுத்து நிறுத்த தமிழகஅரசு தீவிர நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். அரசு பள்ளிகளில் மாணவர்சேர்க்கையை ஊக்குவிக்கும் வகையில் ஆசிரியர்களின் தரம்உயர்த்தப்பட்டு, கற்பிக்கும் திறன் மேம்படுத்தப்பட வேண்டும்'' என்று திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

3/12/16

G.O NO.562 DATED :28.10.1998 30 ஆண்டுகாலம் பதவி உயர்வு இல்லாமல் ஒரே பணியில் இருந்தால் Bonus increment பெறலாம்

கார்டுக்கு பதிலாக ஆதார் பரிவர்த்தனை.மத்திய அரசு தீவிரம்.

டெபிட், கிரெடிட் கார்டுகளுக்கு மாற்றாக ஆதார் எண்அடிப்படையில் பரிவர்த்தனையை மேற்கொள்ள மத்திய அரசு தீவிரம்காட்டி  வருகிறது.  டிஜிட்டல்பரிவர்த்தனையாக டெபிட்கார்டு, கிரெடிட் கார்டு, இணைய
வங்கிசேவைகள், மொபைல் வாலட்கள் எனபின் நம்பர்  மற்றும்பாஸ்வேர்டு
அடிப்படையிலான
பரிவர்த்தனைகளுக்குமாற்றாக ஆதார் அடிப்படையில் கொண்டுவரதிட்டமிடப்பட்டுள்ளது.

  கடைக்காரரிடம் ஆதார் எண்ணை குறிப்பிட்டு, ரேகை வைத்தால் பணம் பரிவர்த்தனை ஆகிவிடும்.  இதற்கானபொதுவான மொபைல் ஆப்  ஏற்படுத்தப்பட உள்ளது.

 இதுகுறித்து இந்திய தனித்துவ அடையாளஆணையத்தின் தலைமை செயல் அதிகாரிஅஜய் பூஷன் பாண்டே நேற்றுகூறுகையில், ‘‘ஆதார்  அடிப்படையிலானபரிவர்த்தனைகள் நேற்று மட்டும் 1.31 கோடிமேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த பரிவர்த்தனை எண்ணிக்கையைபடிப்படியாக  அதிகரித்துநாள் ஒன்றுக்கு 40 கோடியாக்க தி்ட்டமிட்டுள்ளோம். தற்போது 10 கோடி பரிவர்த்தனைகளை இந்தஅடிப்படையில் மேற்கொள்ள  முடியும்’’ என்றார்.

 நிதி ஆயோக் தலைமைசெயல் அலுவலர் அமிதாப் காந்த்கூறுகையில், ‘‘பணமற்ற பரிவர்த்தனையை ஊக்குவிக்கஉதவும் வகையில்,  கைரேகைஅல்லது கண் கருவிழியை அடையாளம்காணும் மொபைல் போன்களை உருவாக்ககேட்டுக்கொண்டுள்ளோம்’’ என்றார்.

* 108,39,95,782 பேருக்குஆதார் வழங்கப்பட்டுள்ளது. இதில் 99 சதவீதம் பேர் 18 வயதுக்குமேற்பட்டோர்.
* சுமார்36 லட்சத்துக்கும் மேற்பட்ட வங்கி கணக்கில் ஆதார்எண் இணைக்கப்பட்டுள்ளது.

* ஆதார்பரிவர்த்தனைக்கு புதிதாக மொபைல் ஆப்ஏற்படுத்தப்பட உள்ளது.

DSE PROCEEDINGS- TRB Appointment 2011-12,2012-13 & 2014-15 -Social Science BT Regularization order

தொடக்கக் கல்வி - விருது - சிறந்த பொது நிர்வாகத்திற்கான "பிரதமர் விருது" - 2015-16ஆம் ஆண்டுக்கான தகுதியுடையோர் விண்ணப்பங்கள் அனுப்ப கோரி இயக்குனர் உத்தரவு

TNPSC - VAO counselling shedule 19-12-16 to 23-12-16

தொடக்கக் கல்வி - சிறுபான்மையினர் நலம் - கிராமபுறங்களில் வசிக்கும் சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் மாணவர்களின் விவரங்களை 06.12.2016க்குள் அனுப்ப இயக்குனர் உத்தரவு

ஜனவரி 1 முதல் அனைத்து பணபரிவர்த்தனைகளுக்கும் ஆதார் அவசியம்

ஜனவரி 1ம் தேதிமுதல் அனைத்து பணபரிவர்த்தனைகளுக்கும் ஆதார் அட்டைஅவசியமாகிறது.  2017 ஜூன்30ம் தேதிக்குள் ஆதார் வழி
பரிவர்த்தனைக்குஏற்பாடு செய்ய கால அவகாசம்தரப்பட்டுள்ளதாக  ரிசர்வ்வங்கி தெரிவித்துள்ளது. மேலும் ஆதார் வழிபண பரிவர்த்தனையை அமல்படுத்துவது தொடர்பாக ரிசர்வ் வங்கி  இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

டெபிட்,கிரெடிட் கார்ட்களில் பரிவர்த்தனைகளுக்கும் ஆதார் வழி மட்டுமேபணப் பரிவர்த்தனை செய்ய முடியும் என்றும்  பரிவர்த்தனைக்குஎலக்ட்ரானிக் சிப் அட்டை, ரகசியஎண், பயோ மெட்ரிக் அடையாளம்ஆகியவை கட்டாயமாக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதார் அடையாளங்களை உறுதிசெய்யும் கருவிகளை வைத்து  இருக்கவும்வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. ஆதார் வழி பணப் பரிவர்த்தனையைஎப்பொழுது அமல்படுத்துவது என்பது குறித்து பின்னர்அறிவிக்கப்படும் எனவும் ரிசர்வ் வங்கிதெரிவித்துள்ளது.

கணித திறன் தேர்வு டிச., 18க்கு மாற்றம்

பள்ளி மாணவர்களுக்கு, நாளை நடக்கவிருந்த, கணிததிறன் தேர்வு, வரும், 18க்குமாற்றப்பட்டு உள்ளது. இது குறித்து, தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையசெயல் இயக்குனர், அய்யம் பெருமாள்
வெளியிட்டுள்ளஅறிவிப்பில்,

'பெரியார்அறிவியல் தொழில்நுட்ப மையத்தில், பள்ளி மாணவர்களுக்கு, நாளைகாலை, 11:00 மணிக்கு நடக்கவிருந்த கணிததிறன் தேர்வு, மோசமான வானிலைகாரணமாக, வரும், 18க்கு மாற்றப்பட்டு உள்ளது' என, கூறப்பட்டு உள்ளது.

TNPSC குரூப் 1 தேர்வுக்கு டிசம்பர் 8-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்: டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு

குரூப்1 தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் 8-ஆம் தேதிகடைசி என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,)
அறிவித்துள்ளது.
குரூப்1 தொகுதியில் 85 காலியிடங்களை நிரப்புவற்கான தேர்வு அடுத்த ஆண்டுபிப்ரவரி 19-இல் நடைபெறுகிறது.
தேர்வுக்குவிண்ணப்பிக்க வரும் 8-ஆம் தேதிகடைசியாகும். வங்கி-அஞ்சலகத்தில் தேர்வுக்கட்டணம் செலுத்த டிசம்பர் 10 கடைசியாகும். தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் நீட்டிக்கப்படமாட்டாது. எனவே விண்ணப்பதாரர்கள் தேர்வுக்குவிண்ணப்பிக்க கடைசி நாள் வரைகாத்திருக்காமல் அதற்கு முன்னரே விண்ணப்பிக்கவேண்டும்.
கவனமாகபதிவு செய்ய வேண்டும். விண்ணப்பம்சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் சில விவரங்களைவிண்ணப்பதாரர்கள் மாற்ற முடியாது.
எனவே இணையவழி விண்ணப்பத்தினை பூர்த்திசெய்து சமர்ப்பிக்கும் முன்னர் தாங்கள் அளித்துள்ளவிவரங்கள் சரியானதுதான் என்பதை உறுதி செய்துசமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் விண்ணப்ப விவரங்களைமாற்றக் கோரி பெறப்படும் கோரிக்கைகள்மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது.

உண்மையைமறைத்து தேர்வுக் கட்டணச் சலுகையை பயன்படுத்திதேர்வுக் கட்டணம் செலுத்தாமல் இருக்கும்விண்ணப்பதாரர்களின் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.

பள்ளிகளில் சத்துணவு மையங்கள் தூய்மையாக செயல்படுவது குறித்து -வழிகாட்டும் நெறிமுறைகள்

எட்டாம் வகுப்பு-தனிதேர்வர்களுக்கான தக்கல் திட்டம்.விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு 7.12.2016 -கடைசி

CCE WORKSHEET EVALUATION - 1முதல் 10 வரையிலான வகுப்புக்கான - 4 வது வாரத்திற்கான வினாத்தாள்கள்.

SSA - உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு 5 நாட்கள் NON - RESIDENTIAL TRAINING - இயக்குனர் செயல்முறைகள்












பாடத்திட்ட தரத்தை மேம்படுத்தக்கோரி வழக்கு:

பள்ளிக்கல்வி, உள்துறைக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
தமிழகத்தில்1 முதல் 10-ம் வகுப்பு வரையிலானபாடத்திட்டத்தின் தரத்தை மேம்படுத்தக்கோரிய வழக்கில்உள்துறை, பள்ளிக்கல்வித்துறை பதில்
மனுத் தாக்கல்செய்த தலைமை நீதிபதி அமர்வுஉத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில்கிராமப்புறங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில்கல்வி மற்றும் கல்விக்கான வசதிகள்முழுமையாக வழங்கப்படுவதில்லை. இதனால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே கால மாற்றத்துக்கு ஏற்பபாடத்திட்டங்களில் உரிய மாற்றம் கொண்டுவரவேண்டும் என அண்மையில் ஊடகங்களில்செய்தி வெளியானது.இந்த செய்தியின் அடிப்படையில்உயர் நீதிமன்ற மதுரை கிளை பதிவாளர்(ஜூடிசியல்) பொதுநலன் வழக்கு ஒன்றை தாக்கல்செய்தார். அதில் தமிழகத்தில் 1 முதல்10-ம் வகுப்பு வரையில்அறிமுகம் செய்யப்பட்டுள்ளஒரே மாதிரியான பாடத்திட்டத்தின் தரத்தை உயர்த்தவும், முறைப்படுத்தவும்தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு தலைமை நீதிபதிஎஸ்.கே.கவுல், நீதிபதிஎஸ்.நாகமுத்து அமர்வில் இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்குவந்தது.மனுவை விசாரணைக்கு ஏற்றஅமர்வு, உள்துறை, கல்வித்துறை முதன்மை செயலர்கள், தொடக்கக்கல்வித்துறை, பள்ளிக்கல்வி துணைச் செயலர்கள், பள்ளிக்கல்வி, தொடக்கக் கல்வி இயக்குனர்கள் ஆகியோர்4 வாரத்தில் பதில் மனுத் தாக்கல்செய்ய உத்தரவிட்டது.

'வாட்ஸ் ஆப்' வேணுமா போனை மாத்துங்க!

தகவல் பரிமாற்றத்துக்கு பயன்படும், 'வாட்ஸ் ஆப்'பை, பழைய மென்பொருட்களில் இயங்கும் மொபைல் போன்களில் பயன்படுத்த
முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
'வாட்ஸ்ஆப்' அறிமுகமாகி, ஏழு ஆண்டுகளுக்குள், உலகெங்கும், 100 கோடி பேர் இதில் இணைந்துள்ளனர். இது, புதிய தொழில்நுட்பத்துக்கு மாறஉள்ளது. இதனால், பழைய மென்பொருட்களில்இயங்கும் மொபைல் போன்களில், இனி, வாட்ஸ் ஆப் பயன்படுத்த முடியாது.முதல்கட்டமாக, பழைய விண்டோஸ், ஆண்ட்ராய், ஆப்பிள் மென்பொருட்களில் செயல்படும் போன்களில், வாட்ஸ் ஆப்பை இந்தஆண்டு இறுதி வரை மட்டுமேபயன்படுத்த முடியும்.

அடுத்தஆண்டு, ஜூன் வரை, பிளாக்பெரி, நோக்கியா ஏ - 40, நோக்கியா சிம்பியான்எஸ் - 60 மென்பொருள் உடைய போன்களில், வாட்ஸ்ஆப் பயன்படுத்த முடியும். தொடர்ந்து, வாட்ஸ் ஆப் பயன்படுத்தவேண்டுமானால், மொபைல் போனை மாற்றுவதைதவிர வேறு வழி இல்லை.