யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

30/3/17

அரசு ஊழியர்களுக்கு ஸ்டேட் வங்கியில் விதிவிலக்கு: தமிழக அரசு தகவல்

பாரதஸ்டேட் வங்கியின் மின்னணு வங்கிச் சேவை வழியாக மாத ஊதியம் பெறும் அரசு ஊழியர்களுக்கு வங்கிக் கணக்கு இருப்பு
கட்டுப்பாட்டில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான தகவல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

பாரதஸ்டேட் வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் வரும் 1 ஆம் தேதி முதல் தங்களது கணக்குகளில் ரூ.5 ஆயிரம் (பெருநகரம்), ரூ.3 ஆயிரம் (நகரங்கள்), ஆயிரம் ரூபாய் (கிராமங்கள்) வரை இருப்பு வைக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது. இருப்புத் தொகையை குறைவாக வைத்திருப்போருக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது. இந்த நிலையில், பாரத ஸ்டேட் வங்கியின் மின்னணு வங்கிச் சேவை மூலமாக மாத ஊதியம் பெறும் அரசு ஊழியர்களுக்கும் இந்தக் கட்டுப்பாடு பொருந்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.


இதற்கு தமிழக அரசு சார்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கம்: மாத ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு சிறப்புத் திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்கப்பட்டு ஊதியம் அதில் போடப்படுகிறது. எனவே, ஊழியர்கள் குறித்த அடிப்படை விவரங்களை வங்கியில் சமர்ப்பித்து வங்கி விதித்துள்ள கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கு பெறலாம். குறிப்பாக, ஊழியரின் பெயர், வங்கிக் கணக்கு எண், வருமான வரிக் கணக்கு எண், ஆதார் எண் ஆகிய விவரங்களை கடிதம் மூலம் தெரிவிக்க வேண்டும். இவற்றை வங்கியில் சமர்ப்பித்த பிறகு, அவை வங்கியால் ஆய்வு செய்யப்படும். பின்பு, குறைந்தபட்ச இருப்புத் தொகையாக ரூ.5 ஆயிரம், ரூ.3 ஆயிரம், ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை வங்கிக் கணக்கில் வைப்பதில் இருந்து அவர்களுக்கு விலக்கு அளிக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.

ஜியோவின் உறுப்பினர்களை அதிகரிக்கும் ஒரு முயற்சியாக 120ஜிபி வரை இலவச டேட்டா வழங்கும் திட்டத்தை ரிலையன்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ சிம் இலவசமாக அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், நாட்டில் பல கோடி வாடிகையாளர்கள் அதனை
பயப்படுத்தினர். இந்த மாத இறுதியுடன் அதன் இலவச திட்டம் நிறைவடவதால் வாடிக்கையாளர்களை கவர பல முக்கிய திட்டங்களை ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் படி ரூ. 149 திட்டத்திற்கு ரீசார்ஜ் செய்தால் 2ஜிபி டேட்டாவும் கூடுதலாக 1ஜிபி இலவச டேட்டாவும் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.
ரூ. 303 திட்டத்திற்கு 5ஜிபி இலவச டேட்டாவும், ரூ. 499 திட்டத்திற்கு அடிப்படையாக 56 ஜிபி டேட்டாவும் கூடுதலாக 10ஜிபி இலவச டேட்டாவும் வழங்கப்படும். இந்த கூடுதல் இலவச டேட்டா முதல் ஒரு மாதத்திற்கு மட்டுமே வழங்கப்படும் எனவும் ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்டுள்ளது.
ரூ. 999 ரீசார்ஜ் செய்தால் முதல் 60 நாட்களுக்கு 20 ஜிபி டேட்டாவும், ரூ.1,999 ரீசார்ஜ் செய்தால் 90 நாட்களுக்கு 30 ஜிபி இலவச டேட்டாவும் அடுத்த மூன்று மாதங்களுக்கு 60 ஜி.பி. டேட்டாவும் வழங்கப்படும்.
மேலும் ரூ. 9,999 ரூபாய்க்கு ரீட்சார்ஜ் செய்தால் 360 நாட்களுக்கு 120ஜிபி அடிபடை டேட்டாவும் கூடுதலாக 750 ஜிபி டேட்டாவும் வழங்கப்படும் என ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மார்ச் மாதம் 31ம் தேதிக்குள் பிரைம் வாடிக்கையாளர்கள் திட்டத்தின் கீழ் சேருபவர்கள்ளுக்கு மட்டுமே இந்த சலுகைகள் வழங்கபடும் எனவும் ரிலையன்ஸ் நிறுவனம் அதிரடியாக அறிவித்துள்ளது

ஸ்மார்ட் கார்டு’ வாங்கும் இடம் செல்போனில் அறிவிக்கப்படும்

தமிழ்நாடு முழுவதும் ஸ்மார்ட் ரே‌ஷன் கார்டு 1-ந்தேதி வழங்கப்பட
உள்ளது.

இதுபற்றி உணவு வழங்கல் துறை செயலாளர் பிரதீப் யாதவ் கூறியதாவது:-

பழையரே‌ஷன் கார்டுகளுக்கு பதில் ‘ஸ்மார்ட்’ ரே‌ஷன் கார்டுகள் வழங்க பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இதுவரை சுமார் 50 லட்சம் ஸ்மார்ட் கார்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் ரே‌ஷன் கார்டுகள் வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 1-ந்தேதி கொரட்டூரில் தொடங்கி வைக்கிறார்.

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுவதால் தேர்தல் நடத்தை விதி காரணமாக சென்னையில் ஸ்மார்ட் ரே‌ஷன் கார்டுகளை 1-ந்தேதி வழங்க இயலாது. அதனால் சென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் 1-ந்தேதி ஸ்மார்ட் ரே‌ஷன் கார்டுகள் வழங்கப்பட உள்ளது.

ஸ்மார்ட் ரே‌ஷன் கார்டு வாங்க பொதுமக்கள் முண்டியடிக்க தேவையில்லை. குடும்ப அட்டைதாரர்கள் ஒவ்வொருவரும் செல்போன் எண்களை தந்துள்ளதால் ஸ்மார்ட் கார்டு தயாரானதும் அவர்களுக்கு செல்போனில் தகவல் தெரிவிக்கப்படும்.

அதில் ஸ்மார்ட் கார்டை எந்த தேதியில், எங்கு சென்று வாங்க வேண்டும் என்று ‘மெசேஜ்’ வரும். அதன் பிறகு மக்கள் வந்தால் போதும்.

மெசேஜ் வராதவர்களுக்கு இன்னும் கார்டு ‘பிரிண்ட்’ ஆகவில்லை என்று அர்த்தம். ஸ்மார்ட் கார்டு தயாரிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால் அது கிடைக்கும் வரை பழைய ரே‌ஷன் கார்டுகளையும் 2 மாதத்துக்கு பயன்படுத்தி கொள்ள கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் கார்டில் திருத்தம் இருந்தால் இ.சேவை மையத்துக்கு சென்று திருத்தம் செய்து கொள்ளலாம். ஸ்மார்ட் போனிலும் ஆப் டவுன்லோடு செய்து ஓ.டி.பி. நம்பர் மூலம் திருத்தம் செய்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்கள் சிலர் போட்டோ கொடுக்காதது உள்பட பல்வேறு காரணத்தால் பிரிண்ட் செய்வதில் காலதாமதம் ஆனது. இப்போது அது நிவர்த்தி செய்யப்பட்டு பணிகள் வேகமாக நடைபெறுகிறது.

எனவேகார்டு கிடைக்கவில்லை என்று பொதுமக்கள் பதட்டப்பட வேண்டாம். கார்டு தயாரானதும் உங்கள் செல்போனுக்கு கண்டிப்பாக மெசேஜ் வரும். அதன் பிறகு ரே‌ஷன் கடைக்கு வந்தால் போதும்.

இவ்வாறு அவர் கூறினார்.

டெட்' தேர்வுக்கு 7.40 லட்சம் பேர் விண்ணப்பம்

ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வு எழுத, 7.40 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.தமிழகத்தில் மூன்று ஆண்டுகளுக்கு பின்,
'டெட்' தேர்வு, ஏப்., 29, 30ல் நடத்தப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்கள், மார்ச் 6 முதல், 23 வரை பெறப்பட்டன. மொத்தம், எட்டு லட்சத்து, 47 ஆயிரத்து, 241 பேர் விண்ணப்பம் பெற்றனர்.இவர்களில், முதல் தாள் தேர்வுக்கு, 2.37 லட்சம் பேர், இரண்டாம் தாள் தேர்வுக்கு, 5.03 லட்சம் பேர் என, 7.40 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர்.விண்ணப்பம் பெற்றும், 1.07 லட்சம் பேர் விண்ணப்பிக்கவில்லை. விண்ணப்பங்களை, 50 ரூபாய்க்கு விற்றதன் மூலம், டி.ஆர்.பி.,க்கு, 4.24 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.

TNTET - 2017:மாணவர்களை ஸ்டாலின் குழப்புகிறாரா?- அமைச்சர் செங்கோட்டையனுக்கு தங்கம் தென்னரசு பதிலடி.

ஆசிரியர் தகுதித் தேர்வு விவகாரத்தில் ஸ்டாலின் மாணவர்களை
குழப்பவில்லை. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்தான் மாணவர்களை குழப்புகிறார் என்று திமுக எம்.எல்.ஏ தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

பணி மாறுதல் தாமதத்தால் பறிபோகும் சீனியாரிட்டி: ஆசிரியர் பயிற்றுனர்கள் வேதனை

PG TRB - எழுத்து தேர்வு மூலம் 2,100 முதுகலை ஆசிரியர்கள் விரைவில் நியமனம் - விரைவில் அறிவிப்பு வெளியாகிறது. (30.03.2017 நாளிதழ் தகவல்)

சென்னை:

தமிழ்நாடு முழுவதும் 3 ஆயிரத்து 600 அரசு மேல்நிலைப்பள்ளிகள்
உள்ளன. இந்த பள்ளிகளில் 2,100 முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் உள்ளன.

இந்த பணியிடங்களை நிரப்ப வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் 3 முறை பள்ளிக்கல்வித்துறை சார்பில் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.

இதையொட்டி 2,100 ஆசிரியர்களை எழுத்து தேர்வு மூலம் நியமிப்பது குறித்த அறிவிப்பை வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் தயாராக இருந்தது.

ஆனால் அதற்குள் ஆசிரியர் தகுதி தேர்வை விரைவில் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டதால் முதுகலை பட்டதாரி ஆசிரியர் எழுத்துதேர்வு அறிவிப்பை நிறுத்தி வைத்து விட்டு, ஆசிரியர் தகுதி தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்தநிலையில் தற்போது முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் எழுத்து தேர்வு நடத்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து டி.பி.ஐ. வளாக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் எழுத்து தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளது. அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். முதுகலை பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்க ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறத்தேவை இல்லை.

தற்போது 100 அரசுஉயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட உள்ளன. அப்போது 1,000 பணியிடங்கள் கூடுதலாக உருவாகும். இதில் பதவி உயர்வு போக 500 பணியிடங்கள் எழுத்து தேர்வு மூலம் நியமிக்கப்படும்.

இவ்வாறு அதிகாரி தெரிவித்தார்.

மாத சம்பளக்காரர்கள் கணக்கு தாக்கல் செய்ய எளிய படிவம் அறிமுகம்

வருமான வரிக்கு உட்பட்ட சம்பளதாரர்கள் ஆண்டுதோறும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்கின்றனர். தற்போது இந்த படிவத்தில் 18
பகுதிகள் உள்ளன. ஆனால், 2017-18 கணக்கீட்டு ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஏப்ரல் 1ம் தேதி முதல் புதிய படிவம் அறிமுகப்படுத்தப்படுகிறது. கட்டாயம் நிரப்பப்பட வேண்டிய சில பகுதிகளை மட்டும் வைத்துக்கொண்டு, பெரும்பாலான பிரிவுகள் நீக்கப்பட்டுள்ளன. இபைலிங் செய்பவர்களுக்கு இது மிக எளிமையாக இருக்கும். கணக்கு தாக்கல் படிவம் சிக்கலாக இருப்பதால், வரி வரம்புக்குள் உள்ள 29 கோடி பேரில் 6 கோடி பேர்தான் தாக்கல் செய்கின்றனர். இந்த எண்ணிக்கையை அதிகரிக்க எளிமையான படிவம் கொண்டுவரப்படுவதாக வருமான வரி அதிகாரிகள் கூறினர்.

இறுக்கமான சூழலிலும் இடிபாட்டு மனநிலையில் இறுதித் தேர்வுக்கு தயாராகும் TNTET நிபந்தனை ஆசிரியர்களின் வாழ்க்கை - தமிழக அரசின் கருணைப் பார்வைக்கு காத்திருக்கும் (23/08/2010) அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள்

இறுக்கமான சூழலிலும் இடிபாட்டு மனநிலையில் இறுதித் தேர்வுக்கு
தயாராகும்
TNTET நிபந்தனை ஆசிரியர்களின் வாழ்க்கை - தமிழக அரசின் கருணைப் பார்வைக்கு
காத்திருக்கும் (23/08/2010) அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள்
தமிழக
அரசுஉதவி பெறும் பள்ளிகளில்
பணியில் உள்ள
பட்டதாரி ஆசிரியர்களின் பணியும் , வாழ்க்கையும் கேள்விக்குறியாவதைத் தடுக்க
பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் உதவினாலும்
TNTET கடைசி வாய்ப்பு என
கடந்த வாரம் வந்த கல்வித் துறையின் இயக்குனர் சுற்றறிக்கையால் அரசு உதவி
பெறும் பள்ளிகளில் பணியில் உள்ள
பட்டதாரி ஆசிரியர்களின் பணியும், வாழ்க்கையும் கேள்விக்குறியாகி மிகுந்த மன
உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.
அரசுமற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களாக 23/08/2010
ற்குப் பிறகு பணிநியமனம் பெற்றவர்கள் நிலை இது.
மிகமனம் வருந்தும் நிலை இதில் யாதெனில் ஆறு வருடங்களுக்கு மேலாக பணியில்
ஜொலித்த இவர்கள் தகுதியற்ற ஆசிரியர்கள் என முத்திரை குத்தப்பட்டு
கட்டாயப்படுத்தி வெளியேற்றப்படுவார்கள் என்ற அறிவிப்பு எவ்வாறு
செயல்படுத்தப்படும் என்பதே!
23/08/2010 க்குப் பிறகு (தெரிந்தோ தெரியாமலோ முழு தகுதி இருந்தும்) பணியில்
சேர்ந்த ஒரே காரணத்தினால் இவர்கள் தகுதியற்றவர்கள் என எப்படி வரும் காலம்
நிரூபிக்க உள்ளது என்ற கேள்விகளுக்கு பதில் இல்லை.
இவர்களில்
பணியில் சேர்ந்த நாள்முதல் இன்று வரை மாணாக்கர்களின் படிப்பு,
நலன், அக்கறை, முன்னேற்றம், தேர்ச்சி, ஒழுக்கம், அணுகுமுறை....
போன்றவைகளில் எத்தனை ஆசிரியர்கள் மீது தவறு குற்றம் கண்டறியப்பட்டுள்ளது..?
"அ முதல் ஃ வரை...!
கற்பித்தலுடன் சேர்த்து
அரசுஅவ்வப்போது கொடுக்கும் பணியிடைப் பயிற்சிகள் முலம் மாணாக்கர்களுக்கு
தேவையானவற்றை மிகுந்த உற்சாகத்துடனும் சுணக்கம் இன்றியும் போதிக்கவில்லை" என
நிரூபிக்க யாரால் இயலும்?
கல்வி மற்றும் பள்ளி சார்ந்த அனைத்து பணிகளையும் சிறப்பாக செய்து தேர்ச்சி
சதவீதமும் உயர்த்தி கடந்த 4 முதல் 6 ஆண்டுகளாக பணியில் உள்ள இந்த ஆசிரியர்கள்
அடுத்த வரும் ஆசிரியர் தகுதித்தேர்வை காரணம் காட்டி தகுதியற்ற ஆசிரியர்கள் என
முத்திரை குத்தி வெளியேற்றிவிட்டால் அவர்களின் வாழ்வாதாரம் என்ன ஆகும் என
யோசிக்கவும், மன இறுக்க சூழலையும் இன்று வரை காது கொடுத்து கேட்க யாரும் இல்லை.
கடந்த 3 ½ ஆண்டுகளிலா பலசட்ட சிக்கல்கள் விளைவாக ஆசிரியர் தகுதித் தேர்வு
நடைபெறவில்லை.
இனிநடக்கும் TNTETல் முழுவதும் பயின்று வெற்றி பெற சாத்தியமான சூழலும்,
தெளிவான மனநிலையும் மங்கிய நிலைக்கு தற்போதைய கட்டாயத் தேர்ச்சி பெற்றாக
வேண்டும் என்ற சுற்றறிக்கை மேலும் காயப்படுத்தியுள்ளது.
இந்தஆசிரியர்கள் பணிப்பாதுகாப்பு காரணமாக TNTET லிருந்து முழுவதும் விலக்கு
கேட்டு கோரிக்கைகளை அனைத்து ஆசிரியர்கள் சங்கங்களின் வாயிலாக வைத்து வந்த
நிலையில் 3/10 வாய்ப்புகள் மட்டுமே கொடுத்து விட்டு தற்போது வரும் TNTET கடைசி
வாய்ப்பு என்ற கட்டாயத்தால் கழுத்தில் கத்தி உள்ளது போல தினம் தினம்
இறுக்கமான சூழலில் மிகவும்வேதனையில் அரசு பொதுத் தேர்வுகள் , விடைத்தாள்
திருத்தம், தேர்தல் பணி இவற்றையும் சேர்த்து பள்ளிக் கல்விப் பணியும்
புரிந்து வருகின்றனர்.
இவர்களின் நிலை பற்றிய செய்திகள் அவ்வப்போது தொலைக்காட்சி, செய்தித்தாள், மின்
ஊடகங்கள் வழியாக வந்தாலும் அதை அரசியல்வாதிகள், கல்வி அதிகாரிகளின் கவனத்தில்
கொண்டு செல்லவும், எவரும் கண்டுகொள்வதும் இல்லை என்பதுடன், ஆறுதல் கூறக் கூட
ஆட்கள் இல்லை என்பது இவர்களின சொல்ல இயலாத துயரம்.
இவ்வளவு காலம் பட்டதாரி ஆசிரியர்களாக சிறப்பாக பணி புரிந்தும் முறையான
அங்கீகாரம் இல்லாதது போல இன்று வரை பயணிக்கும் இந்த ஆசிரியர்கள் பல வழிகளில்
அரசின் கவனத்தை ஈர்க்கும் முயற்சிகள் மேற்கொண்டு உதவ பல அரசு உதவி பள்ளி
நிர்வாகங்கள் முன் வருவது இல்லை.
TNTET நிபந்தனை ஆசிரியர்க் குடும்பங்கள் வாழ்வாதாரம், பணிப் பாதுகாப்பு
காரணமாக ஆசிரியர் தகுதித் தேர்விலிருந்து ஏற்கெனவே சிறுபான்மையினர் பள்ளிகள்
ஆசிரியர்களுக்கு விலக்கு அளித்தது போல இவர்களுக்கும் விலக்கு அளித்து, ஒரு
நல்லமுடிவினை தற்போது தமிழக அரசு எடுக்கும் பட்சத்தில் அரசிற்கு முழுவதும்
நன்றிக்கடன் பற்று இருப்பார்கள் என்பது உண்மை.
இந்தபட்டதாரி ஆசிரியர்கள் நிலையை நல்உள்ளத்துடன் பார்க்க முற்பட்டு விரைவில்
தீர்வு கண்டால் இனிவரும் நாட்களிலாவது நிம்மதியுடன் ஆசிரியப் பணியை அறப்பணியாக
மகிழ்ச்சியுடன் செய்வார்கள்.
தமிழக அரசின் கீழ் உள்ள தமிழக TET நிபந்தனை ஆசிரியர்கள் சார்பில் தமிழக

அரசுக்கு மிகவும் நன்றி....!

முக்கிய அரசாணைகள் -


 (1)- பெண் அரசு ஊழியர்களை அலுவலக நேரத்திற்கு முன்னும், பின்னும் அவசியமிருந்தாலொழிய நிறுத்தி வைத்து வேலை வாங்கக்கூடாது (RG. 1984.P.278)   

                                                       (2)- கலப்பு திருமணம் செய்து கொள்பவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு பெற்றோரின் விருப்பப்படி எவரேனும் ஒருவரின் ஜாதி அடிப்படையில் ஜாதி சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம். (அரசாணை எண். 477/ சமூக நலத்துறை, நாள் - 27.6.1975)    

                                           
 (3)- அரசு ஊழியர்களின் மனைவி, கணவர், மக்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பெயரில் அவர்களுடைய சொந்த வருமானத்தை கொண்டு (அரசு ஊழியரின் வருமானம் இன்றி) சொத்து வாங்க அனுமதி தேவையில்லை. பணிப்பதிவேட்டில் குறிக்கப்பட்ட வேண்டியதுமில்லை. (அரசாணை எண். 3158/பொதுப்பணியாளர்கள் /துறை. நாள்-27.9.1974)    

                                               (4)- அரசு பணியாளர்கள் நடத்தை விதிகள்படி அரசு ஊழியர்கள் அசையாச் சொத்து, அசையும் சொத்து ஆகியவற்றை கடனாக மற்றும் பரிசுப் பொருட்களாக வாங்கும்போது மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்த ஆணைகள் (பதுத ஆணை எண். 45679/A2/1996, நாள்-17.4.1996)   

              
   (5)- மகப்பேறு விடுப்பிலிருந்து திரும்பும் பணியாளரை முடிந்தவரை அதே இடத்தில் பணி அமர்வு செய்ய வேண்டும். (அரசு கடித எண். 2290/93-1,நிர்வாகத்துறை, நாள் - 18.6.1993)    

                                                        (6)- அரசு ஊழியர் ஒருவர் Private Study பயில்வதற்கு துறைத் தலைவர் அனுமதி பெற வேண்டும். (G. O. Ms - 362,P&A. R, DT - 4.11.1992)   

                                                          (7)- தன் சொந்த செலவில் உயர்கல்வி பயில விரும்பும் அரசு ஊழியர் மாவட்ட அளவிலான உயர் அதிகாரியிடம் அனுமதி பெற வேண்டும். (அரசாணை எண். 362, நிர்வாகத்துறை, நாள். 4.11.1992, மற்றும் அரசு கடித எண் 99147/பணி-ஏ/93,நாள் - 22.6.1993)    

                                                        (8)- மாலை நேரக் கல்வி பயில துறைத்தலைவரின் அனுமதி தேவை. (அரசாணை எண் 1341,பொது, நாள் - 27.8.1993 மற்றும் அரசு கடித எண். 98189/84-8, நிர்வாகத்துறை, நாள் - 13.8.1983)        

                                                    (9)-  அரசு ஊழியர் ஒருவர் மாலை நேரக் கல்லூரி மற்றும் தபால் மூலம் கல்வி (Correspondence Course) பயில அனுமதி கோரி விண்ணப்பித்த நாளிலிருந்து 15 நாட்களுக்குள் எவ்வித பதிலும் கிடைக்கப்பெறாவிட்டால் அனுமதி கிடைத்ததாக கருதி கல்வியினை தொடரலாம். (அரசாணை எண். 200,நிர்வாக சீர்திருத்ததுறை, நாள் - 19.4.1996)       
    
 (10)-  பரம்பரை சொத்துகளிலிருந்து பாகம் கிடைத்தாலோ அல்லது சொத்து ஒன்று பரம்பரையாக அரசு ஊழியருக்கு கிடைக்க நேர்ந்தாலோ அதற்கு எவ்வித அனுமதியும் தேவையில்லை. சொத்து அறிக்கையில் மட்டும் காண்பிக்க வேண்டும். (அரசாணை எண். 7143/பணி/ஏ/85-6,நிர்வாகத்துறை, நாள் - 14.5.1985)

பள்ளிக்கு செல்லாதோரை பட்டதாரி ஆக்கிய நிலவொளிபள்ளி

பள்ளிப்படிப்பை பாதியில் விட்டவர்களுக்காகவும், பள்ளிக்கே செல்லாதவர்களுக்காகவும் கல்வி கற்க, காஞ்சிபுரத்தில், நிலவொளிப் பள்ளிசெயல்பட்டு வருகிறது. இங்கு படித்த பலர், இன்று மத்திய, மாநில அரசு பணிகளிலும், பல தனியார் நிறுவனங்களிலும் பணி புரிகின்றனர்.
கடந்த, 1997ல், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக இருந்த வெ.இறையன்பு, காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதிக்கு சென்ற போது, பள்ளி செல்லும் சிறுவர்கள், பட்டு நெசவில் ஈடுபட்டிருந்ததை கண்டார். இதையடுத்து, 1997 டிசம்பரில், பிள்ளையார்பாளையத்தில், 188 மாணவ, மாணவியரைக் கொண்டு, தமிழகத்திலேயே, முதன்முறையாக, நிலவொளிப் பள்ளியை துவக்கினார். அதன் பின், 32 பள்ளிகளாக வளர்ச்சி அடைந்தது.இப்பள்ளியில் பயின்ற மாணவ, மாணவியர், இவர்களது குடும்பத்தில்முதல் பட்டதாரிகளாக உள்ளனர். ஒரு மாணவர், ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கு படித்து வருகிறார். பல மாணவர்கள், பல்வேறு தொழில்நுட்ப படிப்பு மற்றும் பட்டப்படிப்பு பயின்று தேர்ச்சி பெற்றுள்ளனர். உயர்கல்விக்கு பின், டி.என்.பி.எஸ்.சி.,பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று சாதனை புரிந்ததோடு, மத்திய, மாநில அரசு பணிகளில் சேர்ந்துள்ளனர்.

இப்பள்ளியில் படித்த மாணவர்களில் சிலர், தற்போது, இப்பள்ளியின் ஆசிரியர்களாக பாடம் நடத்தி வருகின்றனர். இவர்களின் வாழ்வாதாரம் உயர்ந்திருந்தாலும்,பழையதை மறக்காமல், தங்கள் வாழ்க்கை பாதையை மாற்றி யமைத்து, வாழ்வின் முன்னேற்றத்திற்கு வழிவகுத்த, ஐ.ஏ.எஸ்.அதிகாரி வெ.இறையன்புவை, நன்றியுடன் நினைவு கூர்கின்றனர்.

மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை:லோக்சபாவில் தகவல்

நாடு முழுவதும், மத்திய அரசு, மாநில அரசுகள் ஏற்றுக் கொள்ளும் வகையில், மாற்றுத்திறனாளிகளுக்கு, தனிப்பட்டஅடையாள அட்டை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக, மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சர் தாவர்சந்த் கெலாட், லோக்சபாவில் கூறினார்.
இதுகுறித்து, கெலாட் கூறியதாவது:நாடு முழுவதும், 2.68 கோடி மாற்றுத் திறனாளிகள் உள்ளனர். அவர்களுக்கென தனிப்பட்ட அடையாள அட்டை, இதுவரை வழங்கப்படவில்லை. அதனால், அரசின் நலத்திட்ட உதவிகளையும், வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு பெறுவதிலும், அவர்கள் சிரமப்படுகின்றனர்.

இதை கருத்தில் வைத்து, மாற்றுத்திறனாளிகளுக்கு, தனிப்பட்ட அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது. இதை பயன்படுத்தி, மத்திய, மாநில அரசுகளில், அவர்களுக்கான சலுகைகளை எளிதில் பெற முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

கலெக்டர் - சி.இ.ஓ., மோதல் : பரபரப்பு பின்னணி அம்பலம்

தர்மபுரி: ''என் மகள் தேர்வு எழுதிய போது, அவருக்கு மனதளவில் பாதிப்பை ஏற்படுத்திய கலெக்டர் விவேகானந்தன் மீது, மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்துள்ளேன்,'' என, சி.இ.ஓ., மகேஸ்வரி கூறினார்.
தர்மபுரி மாவட்ட, முதன்மை கல்வி அதிகாரி மகேஸ்வரியின்மகள் சங்கமப்பிரியா, இலக்கியம்பட்டி அரசு மகளிர் பள்ளியில், 10ம் வகுப்பு படிக்கிறார்; அதே பள்ளியில், 8ம் தேதி பொதுத்தேர்வு எழுதினார். அப்போது, தேர்வு மையத்துக்கு வந்த வருவாய் துறையினர், அவரை புகைப்படம்எடுத்ததாகவும், தொடர்ந்து, 23ம் தேதி தர்மபுரி மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு வரும்படி, சம்மன் அனுப்பியதாகவும் கூறினார். மேலும், தன் தாய், சி.இ.ஓ., மகேஸ்வரி மீது உள்ள வஞ்சத்தால், தன்னை கலெக்டர் பழி வாங்குவதாகவும், குற்றஞ்சாட்டினார்.

இது குறித்து, சி.இ.ஓ., மகேஸ்வரி கூறியதாவது: தர்மபுரி மாவட்ட சி.இ.ஓ.,வான நான், மாவட்ட தேர்வு அதிகாரியாகவும்உள்ளேன். சங்கமப்பிரியா மீது ஏற்பட்டுள்ள சந்தேகம் குறித்து, கலெக்டர் விவேகானந்தன் என்னிடம் தகவல் தெரிவிக்கவில்லை. இதை, துறை ரீதியாக அணுக உள்ளேன். சங்கமப்பிரியாவின் பெற்றோர் என்ற முறையில், கலெக்டர் விவேகானந்தன் மீது, மனித உரிமை ஆணையத்துக்கு புகார் அனுப்பியுள்ளேன், என்றார்கல்வி துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது: கடந்த, 2015- 16ல், மெல்ல கற்கும் மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்த, மாநில சமச்சீர் வளர்ச்சி நிதியில், தர்மபுரி மாவட்டத்துக்கு, 64 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. கடந்தாண்டு வழங்கிய நிதியை, கலெக்டர்விவேகானந்தன் இதுவரை வழங்கவில்லை.இந்நிலையில், 2016 - 17ம் ஆண்டுக்கும், 64 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதில், இந்த பணியின் செயல்பாடுகள்குறித்து, வீடியோ எடுத்த வகையில், 15 லட்சம் ரூபாயை வீடியோ கிராபருக்கு வழங்க, சி.இ.ஓ., மகேஸ்வரி கையெழுத்திடும்படி, கலெக்டர் விவேகானந்தன் பரிந்துரை செய்துள்ளார்.ஆனால், ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டிய நிதியை இதுவரை வழங்காததால், மகேஸ்வரி கையெழுத்து இட மறுத்து விட்டார். இதனால், ஆத்திரம் அடைந்த கலெக்டர் விவேகானந்தன், சி.இ.ஓ.,வை பழிவாங்க, சங்கமப்பிரியா மீதுநடவடிக்கை எடுத்துள்ளார். இதுதான் மோதலுக்கான காரணம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

கலெக்டர் விவேகானந்தனை தொடர்பு கொள்ள முயன்ற போது, அவரது உதவியாளர், 'இது தொடர்பாக, கலெக்டர் நேற்றே நிருபர்களை சந்தித்து விட்டார். தற்போது, மீட்டிங்கில் உள்ளதால், அவரை தொடர்பு கொள்ள முடியாது' என்றார்.

செட்' தேர்வு: 14 பாடங்களை தமிழில் எழுத அனுமதி.

உயர் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, உதவி பேராசிரியர் பணிக்கான, 'செட்' தேர்வில், மொழி பாடங்கள் உட்பட, 14 பாடங்களுக்கு, தமிழில் தேர்வு நடத்த, அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
உதவி பேராசிரியர் பணியில் சேர, முதுநிலை பட்டதாரிகள், மத்திய அரசின், 'நெட்' அல்லது மாநில அரசின், 'செட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இதில், நெட் தேர்வு ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் நடத்தப்படும். அதனால், மாநில மொழிகளில் நடத்தப்படும் செட் தேர்வையே, தென் மாநில பட்டதாரிகள் விரும்புகின்றனர்.இந்த ஆண்டுக்கான செட் தேர்வு, ஏப்., 23ல் நடக்கிறது. தேர்வுக்கான பதிவு முடிந்து, விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படுகின்றன.

 தமிழக அரசின் சார்பில், கொடைக்கானல் தெரசா மகளிர் பல்கலை சார்பில், செட் தேர்வு நடத்தப்படுகிறது.செட் தேர்வு எப்போதும், தமிழ்மற்றும் ஆங்கிலத்தில் நடத்தப்படும். ஆனால், இந்த ஆண்டு, மொழி பாடங்கள், அந்தந்த மாநில மொழிகளிலும், மற்றபாடங்கள், ஆங்கிலத்திலும் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, தமிழில் தேர்வு நடத்தக் கோரி, மதுரை உயர் நீதிமன்ற கிளையில், வழக்கு தொடரப்பட்டது. விசாரணையின் போது, தமிழில் தேர்வு நடத்தப்படும்என, தெரசா பல்கலை உறுதியளித்தது.மொத்தம் உள்ள, 25 பாடங்களில், தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, சமஸ்கிருதம் ஆகிய, ஐந்து பாடங்களுக்கும், அந்தந்த மொழிகளில் நடக்க உள்ளது. பொது தாள், வணிகவியல், பொருளியல், கல்வியியல், புவியியல், வரலாறு, மனையியல், ஊடகவியல், சட்டம், மேலாண்மை, அரசியல் அறிவியல், மனோதத்துவவியல், சமூகவியல், சமூகப்பணி ஆகிய பாடங்களுக்கு மட்டும், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தேர்வு நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

 வேதி அறிவியல், கணினி அறிவியல், எலக்ட்ரானிக்ஸ், வாழ்க்கை அறிவியல், கணித அறிவியல், உடற்கல்வி அறிவியல், புவி அமைப்பியல், கடல் மற்றும் கோளரங்க அறிவியல் போன்ற பாடங்களுக்கு, ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வு நடக்க உள்ளது.

10ம் வகுப்பு சமூக அறிவியல் தேர்வில் மாணவர்களை குழப்பிய 'ஷில்லாங்'

சமூக அறிவியல் தேர்வில், அதிக மழை பொழியும் இடம் குறித்த கேள்வி, மாணவர்களை குழப்பியது. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, நேற்று சமூக அறிவியல் பாடத் தேர்வு நடந்தது. இதில், 10.38 லட்சம் பேர் பங்கேற்றனர். 
இறுதி தேர்வு என்பதால், வினாத்தாள் கடினமாக இருக்கும் என, மாணவர்கள் பதற்றமாக இருந்தனர்; ஆனால், எளிதாக இருந்தது.ஏற்கனவே, முந்தைய தேர்வுகளில் இடம் பெற்ற வினாக்களாக இருந்தன. பல மாணவர்கள், 'சென்டம்' எடுக்க வாய்ப்புள்ளது. சில மாணவர்களுக்கு, ஒரு மதிப்பெண் வினாவால், திடீர் குழப்பம் ஏற்பட்டது.அதாவது, 'பொருத்துக' பகுதியில், அதிக மழை பொழியும் இடம் தொடர்பான கேள்வி இடம் பெற்றது. அதில், 'ஷில்லாங்' என்ற விடை, இடம் மாறி கொடுக்கப்பட்டிருந்தது. புத்தகத்தில்,அதிக மழை பொழியும் இடம், 'மவ்சின்ராம்' என்ற பகுதியாக, மாணவர்கள் படித்துள்ளனர். அந்த மவ்சின்ராம் கிராமம், மேகாலயா மாநிலத்தில், ஷில்லாங் நகரத்திற்கு அருகில் இருப்பதால், வினாத்தாளில், 'ஷில்லாங்' என்ற பெயரே இடம் பெற்றிருந்தது. அதனால், மாணவர்கள் குழப்பம் அடைந்தனர். நேற்றைய தேர்வில், இரு மாணவர்கள் உட்பட, 18பேர், காப்பியடித்து பிடிபட்டனர்.பழைய திட்ட குழு தவறான கேள்வி : இந்தியாவில், 1950ல், முன்னாள் பிரதமர் நேருவால் திட்டக் குழு ஏற்படுத்தப்பட்டது. குழுவின் தலைவராக, பிரதமர் இருப்பார்.

இந்நிலையில், 2014ல், பா.ஜ., ஆட்சி வந்ததும், திட்டக் குழு கலைக்கப்பட்டு, 'நிதி ஆயோக்' என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. ஆனால், 2014க்கு பின், 10ம் வகுப்பு பாடத்திட்டம் மாற்றப்படவில்லை. அதனால், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, திட்டக் குழு குறித்த பாடம் இன்னும் உள்ளது. எனவே,நேற்றைய தேர்வில், 'திட்டக் குழுவின் தலைவர் யார்' என்றகேள்வி இடம் பெற்றது. மாணவர்களுக்கு, இதில் எந்த குழப்பமும் ஏற்படவில்லை.

SSLC பொதுத்தேர்வு நேற்றுடன் முடிவடைந்தது: விடைத்தாள் மதிப்பீடு ஏப்ரல் 1-ல் ஆரம்பம்.

எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு நேற் றுடன் (செவ்வாய்க்கிழமை) முடி வடைந்தது. இதைத் தொடர்ந்து, விடைத்தாள் மதிப்பீடு ஏப்ரல் 1-ம் தேதி தொடங்குகிறது.10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 8-ம் தேதி தொடங்கியது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தேர்வெழுதினர். தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் பாடங்களுக்கான தேர்வுகள் முடி வடைந்த நிலையில், கடைசி தேர் வான சமூக அறிவியல் தேர்வு நேற்று நடந்தது. தேர்வு எளிதாக இருந்த தாக பெரும்பாலான மாணவ-மாணவிகள் தெரிவித்தனர். நேற் றுடன் பொதுத்தேர்வு முடிவடைந்து விட்டதால், தேர்வுக் கூடத்தை விட்டு வெளியே வந்த மாணவ-மாணவிகள் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர்.இந்த காட்சியை சென்னை நகரில் பல பள்ளிகளில் பார்க்க முடிந்தது. ஒருசில மாணவர்கள் உற்சாக மிகுதியில் பாடப் புத்தகத்தை மேலே தூக்கி வீசியும் அது கீழே விழும்போது ஓடிச்சென்று பிடித்தும் மகிழ்ந்தனர். சக மாணவர்களை கட்டிப்பிடித்தும் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர்.

தேர்வு முடிந்துவிட்ட நிலையில், அடுத்து என்ன செய்யப்போகிறீர்கள் என்று மாணவர்களிடம் கேட்டபோது, கோடைவிடுமுறையை உற்சாக மாக கழிக்கப்போகிறோம் என்று மகிழ்ச்சி பொங்க தெரிவித்தனர். இன்னும் சிலர் விடுமுறையில் தட்டச்சு, கணினி போன்ற ஏதேனும் ஒரு பயிற்சியில் சேர விரும்புவதாக கூறினர்.10-ம் வகுப்பு மொழி சிறுபான்மை மாணவர்களுக்கான விருப்ப மொழித்தாள் தேர்வு நாளை (வியா ழக்கிழமை) நடைபெறுகிறது. இது கட்டாய தேர்வு கிடையாது. விருப் பப்பட்ட மாணவர்கள் மட்டும் தேர்வெழுதலாம். எஸ்எஸ்எல்சி விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 1-ம் தேதி தொடங்குகிறது.

தமிழகம் முழுவதும் 78 மையங்களில் இப்பணி நடைபெற உள்ளது.10-ம் வகுப்பு மொழி சிறுபான்மை மாணவர்களுக்கான விருப்ப மொழித்தாள் தேர்வு நாளை (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. இது கட்டாய தேர்வு கிடையாது. விருப்பப்பட்ட மாணவர்கள் மட்டும் தேர்வெழுதலாம்.

TET - குழப்பம் இல்லை - அமைச்சர் செங்கோட்டையன்

ஆசிரியர் தகுதி தேர்வுக்கு குழப்பம் இல்லை என்றும் தேர்வுக்கு தயாராக போதிய அவகாசரம் தரப்பட்டுள்ளதாகவும் பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.

பள்ளி கல்வித்துறை மவுனம் : 'TET' தேர்வு குழப்பம் நீடிப்பு

ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வில், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு விலக்கு வழங்குவது குறித்து, பள்ளிக்கல்வித்துறை முடிவு எடுக்காததால், ஆசிரியர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வு, ஏப்., 29, 30ல் நடக்கிறது. தேர்வுக்கான விண்ணப்பங்கள், மார்ச், 23 வரை பெறப்பட்டு, பரிசீலனை நடக்கிறது.'இந்த தேர்வில், அரசு பள்ளி ஆசிரியர்களாக, 2010 ஆக., 23க்கு பின் நியமனம் பெற்றவர்கள், தேர்ச்சி பெற வேண்டும். இல்லாவிட்டால், அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவர்' என, பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன்எச்சரிக்கை விடுத்துள்ளார். இதற்கு, அரசு பள்ளி ஆசிரியர்கள் தரப்பில் எதிர்ப்பு எழுந்தது. தமிழகத்தில், 2011 நவ., 15ல் தான், 'டெட்' தேர்வே அறிமுகமானது.

அப்படியிருக்கையில், அதற்கு முன் பணி நியமனம் பெற்றவர்களுக்கு, 'டெட்' தேர்வு எப்படி கட்டாயமாகும் என, ஆசிரியர் சங்கத்தினர் கேள்வி எழுப்பியுள்ளனர். இதுதொடர்பாக, பள்ளிக் கல்வி செயலர் மற்றும் இயக்குனர் ஆகியோருக்கு, பல்வேறு சங்கத்தினர் மனு அளித்து உள்ளனர். அதற்கு, கல்வித் துறை அதிகாரிகள், விளக்கமளிக்கவில்லை.

பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொது செயலர் பேட்ரிக் ரைமண்ட் கூறியதாவது: சிறுபான்மை அந்தஸ்து பெற்ற, பள்ளி ஆசிரியர்களுக்கு, 'டெட்' தேர்ச்சி தேவையில்லை என,உச்ச நீதிமன்றம் விலக்கு அளித்துள்ளது. அரசாணைக்கு முந்தைய தேதியில், பணி நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு, 'டெட்' தேர்ச்சியை கட்டாயம் ஆக்க முடியாது.

அவர்களுக்கு, ஆண்டுக்கு ஒரு முறை புத்தாக்க பயிற்சி வகுப்பு நடத்தி கொள்ளலாம் என்றே கூறப்பட்டுள்ளது.எனவே, 2010 ஆகஸ்ட்டுக்கு பின், 2011 நவம்பருக்கு முன் நியமிக்கப்பட்ட, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சி அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

உயர் நீதிமன்ற உத்தரவின்படியே ஏப்ரல் இறுதிக்குள் ஆசிரியர் தகுதித் தேர்வு: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் செங்கோட்டையன் பதில்

சென்னை உயர் நீதிமன்ற உத்தர வின் படிதான் ஏப்ரல் இறுதிக்குள் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டுக்குப் பள்ளிக் கல்வி அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன் பதில் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக நேற்று இரவு அவர் வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆசிரியர் தகுதித் தேர்வு அவசர அவசரமாக நடத்தப்படுவதாகவும், தேர்வு நடத்துவதில் குழப்பம் உள்ளதாகவும், கடந்த 3 ஆண்டு களாக தகுதித்தேர்வு நடத்தப்பட வில்லை என்றும் சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளி யிட்டுள்ளார். தகுதித் தேர்வு தேர்ச் சிக்கு இடஒதுக்கீட்டுப் பிரிவின ருக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை அளிக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் பட்டது. வழக்கு நிலுவையில் இருந்த காரணத்தினால் கடந்த 3 ஆண்டுகளாக தகுதித்தேர்வு நடத்த இயல வில்லை.தமிழக அரசு எடுத்த தொடர் முயற்சியின் காரணமாக இந்த வழக்கு முடிவுக்கு வந்தது. இன்னொரு வழக்கில் சென்னை உயர் நீதி்மன்றம், ஏப்ரல் மாதத்துக்குள் தகுதித்தேர்வு நடத்த வேண்டும் என்று ஆணை வழங்கியது. அதைத்தொடர்ந்து ஏப்ரல் 29, 30 ஆகிய தேதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதற்கான அறிவிப்பு கடந்த பிப்வரி 24-ம் தேதி வெளியிடப்பட்டது. ஜுன் 1-ம் தேதிக்குள் ஆசிரியர் காலி யிடங்களை நிரப்ப வேண்டியுள்ளது. எனவே, மேற்குறிப்பிட்ட தேதி களில் தகுதித் தேர்வு நடத்தப்படுகி றது. இத்தேர்வுக்காக 10 லட்சம் இளைஞர்கள் தீவிரமாக படித்துக் கொண்டிருக்கும் நிலையில், அவர்களை குழப்பும் வகையில் எதிர்க்கட்சி தலைவர் இதுபோன்று அறிக்கை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

TNTET - 2017:மாணவர்களை ஸ்டாலின் குழப்புகிறாரா?- அமைச்சர் செங்கோட்டையனுக்கு தங்கம் தென்னரசு பதிலடி.

ஆசிரியர் தகுதித் தேர்வு விவகாரத்தில் ஸ்டாலின் மாணவர்களை குழப்பவில்லை. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்தான் மாணவர்களை குழப்புகிறார் என்று திமுக எம்.எல்.ஏ தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த ஸ்டாலின் வெளியிட்ட விவரங்கள் பொதிந்த அறிக்கைக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் விரக்தியுடன் பதில் கூறியிருப்பது விந்தையும், வேடிக்கையும் நிறைந்ததாக இருக்கிறது.ஸ்டாலினின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள கருத்துக்கள் அனைத்தும் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து விட்டு பல வருடங்களாக ஆசிரியர் பணிக்காக காத்துக் கொண்டிருப்பவர்களின் நலனையும், தேர்வு எழுதுபவர்களுக்கு போதிய கால அவகாசம் அளித்து தேர்வு நடத்தப்பட வேண்டும் என்பதையும் சார்ந்தவை என்பதை பள்ளிக் கல்வித்துறை அமைச்சருக்குப் புரியாமல் போனது ஆச்சர்யமாக இல்லை என்றாலும், ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதுவோருக்கு உண்மை நிலை தெரிய வேண்டும் என்பதற்காக சில விளக்கங்களை மட்டும் இந்த அறிக்கையின் வாயிலாக தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான உச்ச நீதிமன்ற வழக்கை மூன்று வருடங்கள் கவனிப்பாரற்று நிலுவையில் போட்டு வைத்தது அதிமுக அரசுதான். அதற்கு முக்கியக் காரணம் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்களை 2011ல் இருந்தே அடிக்கடி மாற்றிக் கொண்டிருந்த வினோத நிகழ்வுதான் என்பதை கற்றறிந்த கல்வியாளர்கள் முதல் கடைக்கோடியில் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத விரும்புவோர் வரை அனைவரும் தெளிவாக அறிந்தே வைத்துள்ளார்கள்.ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை அமைச்சர் ஆவதற்கான வாய்ப்பே இல்லாமல் அவதிப்பட்ட கே.ஏ. செங்கோட்டையன் திடீர் விபத்து போல் பள்ளிக் கல்வித்துறைக்கு வந்திருப்பதால் கல்வி இலாகாவில் உள்ள அனைத்து பிரச்சினைகளையும் அவர் இன்னும் முழுமையாக ஆராய்ந்து தெரிந்து கொள்ளாமல் இருக்கிறார் என்று நினைக்கிறேன். அதற்கு ஸ்டாலின் நிச்சயம் பொறுப்பேற்க முடியாது.உயர் நீதிமன்ற உத்தரவின்படியே ஏப்ரல் 2017-க்குள் ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்துகிறோம் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ஒப்புவித்துள்ளார். நீதிமன்றங்களின் உத்தரவை சிரமேற்கொண்டு நிறைவேற்றி நீதியரசர்களுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்ற உயர்ந்த சிந்தனையுள்ள கருணாநிதியின் வழி வந்த ஸ்டாலினும் எப்போதும் நீதிமன்ற உத்தரவுகளுக்கு மதிப்பு அளிப்பவர் என்பதை அமைச்சர் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.அதே நேரத்தில் மக்கள் நலப் பணியாளர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றமே உத்தரவிட்டும் உதாசீனப்படுத்தியது அதிமுக அரசு; உள்ளாட்சி தேர்தலை 2016 டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் நடத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தும் இன்றுவரை அந்த தேர்தலை நடத்தாமல் சென்னை உயர் நீதிமன்றத்தில் அந்த வழக்கு விசாரணை வரும் போதெல்லாம் நீதிமன்ற கண்டனத்தை பெற்றுக் கொண்டிருப்பது இந்த பினாமி அரசு.ஆகவே ஆசிரியர் பணியிடங்களுக்கு போட்டியிடுவோரின் நலன்களையும், உயர் நீதிமன்ற உத்தரவையும் தேவையில்லாமல் வம்புக்கு இழுத்து பதில் சொல்லும் முன்பு, ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத காத்திருக்கும் ஆசிரியர்களின் எதிர்காலத்தை அமைச்சர் கொஞ்சம் நினைத்துப் பார்க்க வேண்டும்.

 கல்வி இறுதியாண்டு முடிந்தவுடன் தேர்வு என்றுவைக்காமல், கால அவகாசம் கொடுத்து தேர்வை நடத்த வேண்டும் என்பதே ஸ்டாலின் அறிக்கையின் சாரம்சம் என்பதை அமைச்சர் புரிந்து கொள்ள வேண்டும்.'மாணவர்களை ஸ்டாலின் குழப்புகிறார்' என்று இன்னொரு விதண்டாவாதத்தை எடுத்து வைத்துள்ளார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர். நேற்றைய தினம் பத்தாம் வகுப்புக்கான சமூக அறிவியல் பாடத்தில் 'இந்திய திட்டக்குழுவின் தலைவர் யார்' என்று கேட்கப்பட்ட கேள்வியைப் பார்த்து மாணவர்கள் எல்லாம் திடுக்கிட்டுப்போய் விட்டார்கள். ஏனென்றால் திட்டக்குழு 1.1.2015 அன்றே கலைக்கப்பட்டு அதற்கு பதில் 'நிதி அயோக்' என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது கூட தெரியாமல் பினாமி அரசின் கீழ் உள்ள பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் துறை தயாரித்த கேள்வித்தாளில் 'திட்டக்குழு தலைவர்' பற்றி கேள்வி கேட்டிருப்பதுதான் மாணவர்களை ஒட்டுமொத்தமாக குழப்பும் செயல்.ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் இரண்டாவது இடத்திற்காவது வருவோமா என்ற குழப்பம், அந்த தேர்தலுக்குப் பிறகு அமைச்சர் பதவியில் நாம் நீடிப்போமா என்ற குழப்பம், ஆட்சியை போனாலும் கட்சி தலைமையை கைப்பற்ற என்ன முயற்சி எடுக்கலாம் என்பதில் குழப்பம்- இப்படி பல்வேறு குழப்பத்தில் சிக்கித் தவிக்கும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ஸ்டாலினைப் பார்த்து 'மாணவர்களை குழப்புகிறார்' என்பது விரக்தி நிறைந்த அறிக்கையாக இருக்கிறது.ஆகவே ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையை நன்கு படித்துப் பார்த்துவிட்டு, , அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள பல்வேறு குழப்பங்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தீர்வு காண முன் வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

குறிப்பாக ஆசிரியர் தேர்வுக்காக காத்திருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து, இந்த ஆசிரியர் தகுதித் தேர்வை போதிய கால அவகாசம் கொடுத்து நடத்த வேண்டும் என்று மீண்டும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்'' என்று தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

TNTET - 2017 :ஆசிரியர் தகுதித் தேர்வை தள்ளிவைக்கக் கோருவதுமனிதாபிமானமற்ற செயல்: தங்கம் தென்னரசுவுக்கு வைகைச்செல்வன் பதிலடி

ஆசிரியர் தகுதித் தேர்வை தள்ளிவைக்க கோருவது மனிதாபிமானற்ற செயல் என்று திமுக எம்.எல்.ஏ. தங்கம் தென்னரசுவுக்கு பள்ளிக் கல்வித்துறையின் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் பதில் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான தேர்ச்சியில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகையை தமிழக அரசு அளித்தது. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளாகதகுதித்தேர்வு நடத்தப்படாததற்கு இந்த வழக்குதான் காரணம். இந்த வழக்கை எவ்வளவு விரைவுபடுத்த முடியுமோ அவ்வளவு விரைவுபடுத்தி வழக்கை முடிக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டது.

தற்போது வேலையில்லாத பட்டதாரிகள் வேலை பெறும் நோக்கில் தமிழக அரசு விரைந்து தகுதித்தேர்வை நடத்த முயற்சி செய்து வரும் நிலையில், தேர்வை தள்ளிவைக்கக் கோருவது மனிதாபிமானற்ற செயல். ஆனால், முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, தகுதித் தேர்வு வழக்கை தமிழக அரசுதான் நிலுவையில் வைத்திருந்தது என்று அபாண்டமாக குற்றம்சாட்டுகிறார். நீதிமன்றத்தில் நாமாக ஒரு வழக்கை நிலுவையில் வைக்க முடியாது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், திமுகவினருக்கு ஏன் தெரியவில்லை.தகுதித் தேர்வை ஏப்ரல் மாதத்துக்குப் பதில் ஜூலை அல்லதுஆகஸ்டு மாதம் நடத்த வேண்டும் என்பதும் தேவையற்றது. தனியார் சுயநிதி பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் தகுதித் தேர்வை ஏப்ரல் மாதத்தில் எதிர்கொள்வது அவர்களுக்கு வசதியாக இருக்கும். ஏனென்றால் கல்வி ஆண்டு முழுவதும் பயிற்சி அளித்த அந்த ஆசிரியர்கள் தங்கள் பாடங்களில் போதுமான பயிற்சி பெற்றிருப்பார்கள்.

தகுதித் தேர்வு தேர்ச்சியில் வகுப்பு வாரியான மதிப்பெண் குறைப்பு (5 சதவீதம்) என்பது தமிழகத்தில் நடைமுறையில் உள்ளது. பட்டதாரிகளின் கோரிக்கையை ஏற்று முதல்வர் ஜெயலலிதா அனைத்து இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கும் 5 சதவீத மதிப்பெண் சலுகையை வழங்கி ஆணை பிறப்பித்தார். அந்த ஆணையை எதிர்த்து தொடரப்பட்டே வழக்குதான் தகுதித் தேர்வு நடத்துவதில் ஏற்பட்ட காலதாமதத்துக்கு காரணமே தவிர, தமிழக அரசு காரணம் அல்ல'' என்று வைகைச்செல்வன் தெரிவித்துள்ளார்..

29/3/17

பள்ளிக்கல்வி - 2016-17ஆம் கல்வியாண்டில் விடுப்பு எடுக்காத மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்க விவரம் கோரி இயக்குநர் உத்தரவு

பி.எட் (கல்வியியல்) கற்பித்தல் பயிற்சிக்கு அனுமதி கோரும் விண்ணப்பம்

அடேயப்பா இவ்வளவு சலுகையா அரசு ஊழியர் சம்பளக்கணக்குக்கு மாற்றினால் மிஸ் பண்ணாம படிங்க ...SALARY ACCOUNTS UNDER STATE GOVERNMENT SALARY PACKAGE (SGSP)

Salary Accounts under SGSP a gamut of privileges and other value added services to the employees of State Government,
Union Territories and their Boards/Corporations. Salary Accounts under this package are available in four variants, namely Silver, Gold, Diamond and Platinum depending on the designation of the personnel.

Benefits to the Employer
Convenient way to manage salaries across a large number of centers through Core Power and the Bank's award winning Corporate Internet Banking
Reduces employer's paperwork and salary administration cost.
No charges for uploading of salaries

  Employees receive instant credit of salaries
Benefit to the Employee


Convenience of Anywhere Banking at
The largest network of more than 16,000 Core Banking Branches
Extensive alternative channels.
53,000 plus ATMs of State Bank Group
Free Internet Banking, Mobile Banking
Complete gamut of Banking Services including:-

Unique Lifetime Account Number
Zero Balance Account facility with no penal charges for non-maintenance of minimum balance
Auto sweep (in & out) facility (on request)-Surplus amount in Savings bank account beyond threshold balance is transferred automatically into Term Deposits (multi option deposits) in multiple of Rs.1000/- and vice versa
Facility for Auto Sweep Switch On/Off through Internet Banking
Free Personal Accident Insurance (Death) Cover to Primary 

Salary Package Account*
Free personalized Multi City Cheques
RTGS/NEFT
Free Core Power: Anywhere banking facility with the widest network of more than 16,000 branches. Free updating of pass-books at any branch
Easy overdraft up to 2 months' salary repayable within 6 

months*

SMS Alerts

Free Debit Cards :

 Domestic cards for Silver Accounts, Gold Debit cards for Gold and Diamond Accounts and Platinum Debit Card for Platinum Accounts.

Maximum daily withdrawal of Rs. 40,000 on Domestic Cards, Rs. 50,000 on Gold Cards and Rs. 1,00,000 on Platinum Cards.
Various Personal loans like Home loan/ Auto loan/ Xpress Credit loan, etc. at attractive terms
Demat facility, 3-in 1 Trading Account available
Systematic Investment Plan in Mutual funds
Range of other value added benefits

தமிழக அளவிலான தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாம்

அன்புள்ள பள்ளி தாளாளர்களே,முதல்வர்களே மற்றும் தலைமை ஆசிரியர்களே, வருகின்ற ஏப்ரல் 2ம் தேதி
(SUNDAY)கல்வித்திருவிழா மற்றும் MAM COLLEGE OF EDUCATION இணைந்து நடத்தும் தமிழக அளவிலான ஆசிரியர்களுக்கான பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாம் திருச்சியில் நடைபெறுகின்றது.இதில் சுமார் திருச்சி,கரூர்,புதுகோட்டை,பெரம்பலூர்,அரியலூர்,தஞ்சாவூர்,நாகப்பட்டினம்,விழுப்புரம்,திருவண்ணாமலை,மதுரை,சிவகங்கை மாவட்டங்களில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளில் வேலை தேடும் ஆசிரியர்கள் சுமார் பத்தாயிரம் பேர் பங்கேற்கின்றனர்.மேலும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து Bed கல்லூரி மாணவர்களும் பங்குகொள்கின்றனர்.தினமலர்,தினத்தந்தி,தினகரன் உள்ளிட்ட அனைத்து பத்திரிககள் மூலம் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.LOCAL CHANNELS மூலமும் விளம்பரம் செய்யபடுகின்றது.எனவே தங்கள் பள்ளிக்கு தேவையான ஆசிரியர்களை நீங்கள் நேரிடையாக தேர்வு செய்யும் பொருட்டு தங்களுக்கு அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.DEMO CLASS FACILITY IS AVAILABLE.எனவே தங்களுக்கு தேவையான ஆசிரியர்களை தாங்கள் நேரில் வந்து தேர்வு செய்யுமாறு தங்களை கேட்டுகொள்கிறோம்.நேரில் வர இயலாதவர்கள் இந்த ஈமெயில் இணைக்கப்பட்டுள்ள TEACHERS REQUIREMENT FORM-FILL செய்து அனுப்பவும்.தங்களுக்கு ஈமெயில் மூலமாக RESUMES 2017-2018 வரை அனுப்பப்படும்.மேலும் இணையதளத்தில் ஒரு USER ID மற்றும் PASSWORD கொடுக்கப்படும்.அதில் பதிவு செய்துள்ள ஆசிரியர்களை நீங்களே SELECT செய்து கொள்ளலாம்.மேலும் வேலை தேடும் ஆசிரியர்கள் கீழே உள்ள லிங்க்கை click செய்து தங்களது பெயரை register செய்யவும்.
www.kalvithiruvila.net
http://kalvithiruvila.net/kalvi/
UG/PG AND WITH B Ed AND WITHOUT B Ed AND THE
SUBJECTS:
TAMIL.ENGLISH,PHYSICS,CHEMISTRY,MATHS,BIOLOGY COMPUTERSCIENCE,COMMERCE,ECONOMICS,ACCOUNTANCY,BUSINESS MATHS,BOTANY,ZOOLOGY,HISTORY
SPECIAL TEACHERS:YOGA,HINDHI,ARABI,PHYSICAL EDUCATION
FEATURES:
1) SEPERATE CLASS ROOMS ALOTTED FOR UG(2 CLASS ROOMS ) AND PG(2 CLASS ROOMS AND PG WITH BEd-2 AND 2 CLASS ROOMS FOR DEMO).
IF YOU WANT TO SEE THE DEMO FROM THE CANDITATE FACILITY IS ALSO AVAILABLE.
2)ONLY2 PERSONS ALLOWED FOR RECRUITING FROM THE SCHOOLSIDE
3). FOOD WILL BE PROVIDED TO THE SCHOOLPERSONS
4)THE INTERVIEW TIME IS 9.00AM TO EVENING UPTO 5PM .
5)THE SCHOOLS NEED TO REGISTERED ON OR BEFORE 3௦th MARCH.
6)ENROLLED SCHOOLS ONLY ALLOWED TO PARTICIPATE THE JOB FAIR.
7)SCHOOLS NEED TO FILL YOUR REQUIREMENT FORM
8)CAR PARKING IS AVAILABLE
VENUE:MAM COLLEGE OF EDUCATION,
SIRUGANUR,TRICHY TO CHENNAI MAIN ROAD,
BUS STOP MAM COLLEGE
Thanks and Regards
Selvakumar.B
9442568675
9788829179
www.kalvithiruvizha.com
www.kalvithiruvizha.co.in
www.kalvithiruvizha.in
www.kalvithiruvizha.online
www.kalvithiruvizha.website
Kalvi Thiruvila
kalvi,leanerkey,hsc question paper,sslc question paper, anna university question paper and material, tet material,tnpsc material,10th material,
KALVITHIRUVILA.NET
Kalvi Thiruvila
kalvi,leanerkey,hsc question paper,sslc question paper, anna university question paper and material, tet material,tnpsc material,10th material,

KALVITHIRUVILA.NET

தேர்வுகளில் கலந்துகொள்ள தற்செயல் விடுப்பை துய்க்கலாமா ? தகவல்கள் சம்பந்தப்பட்ட துறையில் பணியாற்றும் அனைவருக்கும் ஏற்புடையதா?

ORDERS FROM RIGHT TO INFORMATION ACT

1.    மேற்படிப்புகளுக்கான தேர்வுகளில் கலந்துகொள்ள தற்செயல்  
       விடுப்பை துய்க்கலாமா ? 

2.    தகவல்களை துறை அலுவர்கள் நடைமுறைபடுத்தலாமா ?

3.    தகவல்கள் சம்பந்தப்பட்ட துறையில் பணியாற்றும் அனைவருக்கும் 
       ஏற்புடையதா?
இதற்கு பெறப்பட்ட தகவல்களை பதிவிறக்கம் செய்ய கிளிக் செய்யவும்

ஆசிரியர் தகுதி தேர்வுக்கு குழப்பம் இல்லை என்றும் தேர்வுக்கு தயாராக போதிய அவகாசரம் தரப்பட்டுள்ளதாகவும் பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்துவதில் எந்த குழப்பமும் இல்லை.. பதில்
சென்னை: ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து எதிர்க் கட்சித் தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கைக்கு, தேர்வு நடத்துவதில் அவசரமோ,
குழப்பமோ இல்லை என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்..
ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், வேலையில்லா திண்டாட்டம் இளைஞர்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிற நேரத்தில் மூன்று வருடங்களாக 'ஆசிரியர் தகுதித் தேர்வை' நடத்தாத அதிமுக அரசு, இப்போது அவசர அவசரமாக 2017ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்துவதற்கான அறிவிக்கையை வெளியிட்டிருக்கிறது.'

கட்டாய கல்வியுரிமைச் சட்டத்தின்கீழ் நடத்தப்படும் இந்த ஆசிரியர் தகுதித் தேர்வு வருகிற ஏப்ரல் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் கால அட்டவணையை வெளியிட்டிருக்கிற இந்த நேரத்தில், ஆசிரியர் கல்வி பயின்றவர்கள் எல்லாம் ஏகப்பட்ட குழப்பத்தில் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதுஒருபுறமிருக்க, ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு அச்சடிக்கப்பட்ட 15 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்களில் பிழை ஏற்பட்டு, அதற்குப் பதிலாக இப்போது புதிய விண்ணப்பங்கள் அச்சடிக்கப்படுவதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிப்பதாக அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில், ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்துவதில் அவசரமோ, குழப்பமோ இல்லை என்று மு.க.ஸ்டாலினுக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு தயாராவதற்காக போதிய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும், படித்துவிட்டு வேலைக்காக காத்திருப்பவர்களின் நலனை கருத்தில்கொண்டே, தற்போதைய ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்துவதற்கான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.


மேலும், நீதிமன்ற ஆணையின்படியே தேர்வுக்கான தேதி ஏப். 29, 30 என அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் செங்கோட்டையன் தெரிவித்தார்.

SBI SGSP (State government salary package) A/C Benefit's-தமிழில்

*Minimum balance தேவையில்லை.*

~ கணக்கில் உள்ள தொகை automatic-ஆக fixed deposit-கு
சென்றுவிடும்.

[குறைந்தபட்ச தொகையையும் (Ex:ரூ.1000-க்கு மேல் உள்ள பணம் முழுவதும் MOD A/C-ல் fixed deposit செய்யவும்) &

மாதந்தோறும் fixed deposit-க்கு பணம் எடுக்க வேண்டிய தேதியினையும் நாம் தான் தெரிவிக்க வேண்டும்]



*கணக்கில் உள்ள பணத்திற்கு Fixed deposit வட்டி கிடைக்கும்.*

ATM-ல் தேவைப்படும் பொழுது எப்பொழுதும் போல் பணம் எடுக்கலாம் fixed doposit-ல் (MOD) உள்ளதே பணம் வருமா வராதா என்ற பயம் வேண்டாம்.

எத்தனை நாட்கள் MOD-ல் உள்ளதோ அத்தனை நாட்களுக்கான வட்டி கிடைக்கும்.

*~ வேறு கிளையில் இலவசமாக பாஸ் புக் பிரிண்ட் செய்யலாம்.*

*~ வங்கியில் பெற்ற கடனுக்கு வட்டி விகிதத்தில் சலுகை.*

*~ இலவச ATM card.*

*~ கட்டணமில்லா காசோலை புத்தகம் (multi city cheques)*

*~ இறப்பின் பொழுது காப்பீட்டுத் தொகை.*

(*நிபந்தனைகளுக்கு உட்பட்டது)

~ 2 மாத ஊதியத்தினை முன்பணமாக பெற்று 6 மாத கால தவணைகளில் திருப்பி செலுத்தும் வசதி. (*நிபந்தனைகளுக்கு உட்பட்டது)

👆👆👆 Source: https://www.sbi.co.in/…/per…/state-government-salary-package

2010 முதல் நான் SGSP A/C பயன்படுத்திவருகிறேன்.

[Salary certificate (HM கையெழுத்து போதுமானது) + ID card இருந்தால் போதும், நமது SBI சேமிப்புக் கணக்கினை SGSP A/C ஆக வங்கிக் கிளைக்கு நேரடியாக சென்று மாற்றிடலாம்]

*SGSP A/C ஆக நமது சேமிப்புக் கணக்கினை மாற்றிய பிறகு ATM & SMS-ல் balance குறைவாக காட்டினால் பயப்பட வேண்டாம்.*

உங்களது பணம் MOD-ல் இருக்கும்..

உங்களுக்கு தேவையான தொகை MOD-ல் இருந்தாலும் ATM-ல் எடுக்கலாம்.

Mini statement-ல்MOD balance பார்க்க இயலாது.

ஆனால் internet banking, mobile banking, passbook print & ATM-ல் balance check செய்யும் பொழுது Available balance தனியாகவும், MOD balance தனியாகவும் காட்டும்.


இதேபோல் மற்ற வங்கிகளிலும் salary package சலுகைகள் உள்ளன. இணையத்தில் தெரிந்துகொள்ளலாம்.

ANNAMALAI UNIVERSITY -DDE - Examination Results - December 2016-Results Published on 24-03-2017

ஆசிரியர் தகுதித்தேர்வுகள் வெறும் கண்துடைப்பு தான்! கலங்கி நிற்கும் ஆசிரியர்கள்

ஒவ்வொரு ஆண்டும் பல்கலைக்கழக மானிய குழுவால் நடத்தப்படும் தேசிய தகுதித்தேர்வு, தமிழ்நாட்டில் மாநில அளவில் நடத்தப்படும் மாநில அளவிலான தகுதித்தேர்வு மற்றும் பள்ளி ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வுகள் போன்றவை வெறும் கண்துடைப்பாகத்தான்
நடத்தப்படுகின்றன. இந்தத் தேர்வுகளால் ஒரு பயனும் இல்லை' என்கிறார்கள் இத்தேர்வில் தேர்ச்சி பெற்று வேலை வாய்ப்புக்காகக் காத்திருப்பவர்கள். என்ன காரணம்? ஏராளமானோர் படித்து வேலை வாய்ப்புக்காகக் காத்திருக்கும் நிலையில் தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்கத்தானே தேர்வு நடத்தப்படுகிறது. இதில் என்ன தவறு இருக்கிறது, எதற்காக எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்ற கேள்விகளோடு சந்தித்தோம்.

"எந்தவிதமான அடிப்படை வசதியும் இல்லாமல் பெயர் அளவுக்குத்தான் பெரும்பாலான பி.எட் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. தமிழ்நாட்டில் வருடத்தில் 60 ஆயிரம் பேர் பி.எட். முடித்து வருகிறார்கள். இதனை எல்லாம் கணக்கில் எடுத்துக்கொண்டு தான் ஆசிரியர் தகுதித்தேர்வினை கொண்டு வந்தார்கள். ஆனால், அதிலும் சரியான நெறிமுறைகள் கடைப்பிடிக்கப்படுவதில்லை. ஆசிரியர் காலியிடங்கள் அதிகம் உள்ள அரசு உதவி பெறும் சிறுபான்மைப் பள்ளிகளில் ஆசிரியர் தகுதித்தேர்வு அடிப்படையில் ஆசிரியர் நிரப்புவதில் இருந்து விலக்கு பெற்றிருக்கிறார்கள். இதனை எதிர்த்து தமிழக அரசு எந்தவித எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. சிறுபான்மையினர் பள்ளியில் தகுதியான ஆசிரியர்கள் தேவையில்லை என்கிறார்களா? என்று தெரியவில்லை. தற்போது அரசு உதவிப்பெறும் சிறுபான்மையினத்தவர் நடத்தும் பள்ளிகளைத் தவிர இதர பள்ளிகளில் காலியிடங்கள் மிகவும் குறைவு என்கிறார்கள். இந்த நிலையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு எப்படி வேலை வாய்ப்பினை வழங்குவார்கள் என்று தெரியவில்லை" என்கிறார் நெட்-ஸ்லெட் தேர்வுகளின் தேர்ச்சி பெற்றவர்களுக்கான அமைப்பின் ஆலோசகருமான பேராசிரியருமான சுவாமிநாதன்.


காருண்யா பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணியாற்றி 
 தகுதித்தேர்வு செல்வகுமார்

வரும் பா. மோசே செல்வகுமார் "ஏப்ரல் மாதம் இறுதியில் நடக்க இருக்கிற தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு ஆசிரியர் பயிற்சி முடித்த 2,72,000 பேரும், பட்டப்படிப்புடன் பி.எட். முடித்தவர்கள் 5,28,000 பேர் என எட்டு லட்சத்துக்கு அதிகமானோர் விண்ணப்பித்து இருக்கிறார்கள். ஆனால், இதுவரை எவ்வளவு ஆசிரியர்கள் காலியிடம் இருக்கிறது என்ற விவரங்கள் வெளியிடவில்லை. ஏற்கெனவே தகுதித்தேர்வில் வெற்றி பெற்று 35 ஆயிரம் பேர் மேல் காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு உரிய பதிலும் இல்லை. தற்போது நடைபெற உள்ள தேர்வில் ஐம்பதாயிரம் பேருக்கு மேல் தேர்ச்சி பெறும்போது அவர்களுக்கு எப்படி வேலைவாய்ப்பினை வழங்குவார்கள் என்று தெரியவில்லை.

2011-ம் ஆண்டு நவம்பர் மாதம் தமிழக அரசு பிறப்பித்த 181-வது அரசாணையின் மூன்றாவது பிரிவில் ‘அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் அடுத்த 5 ஆண்டுகளில் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்’ எனக் குறிப்பிட்டு இருக்கிறது. ஆனால், தனியார் பள்ளிகளில் தகுதித்தேர்வை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் சொற்ப சம்பளத்தில் அவர்களுக்குப் பிடித்தவர்களுக்கு பணி வழங்குகிறார்கள். தனியார் பள்ளிகளில் தகுதித்தேர்வின் அடிப்படையில் பணி வழங்கப்பட்டிருந்தால் தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 35,000 பேருக்கும் வேலை கிடைத்திருக்கும். அடுத்தடுத்த ஆண்டுகளின் தேர்வினை நடத்தி ஏராளமானவர்களுக்கு வேலையும் வழங்கி இருக்கலாம். ஆனால் நடக்கவில்லை.
பெரும்பாலான தனியார் பள்ளிகளில் அளவுக்கு அதிகமாக மாணவர்களிடமிருந்து கட்டணம் பெறுகிறார்கள். ஆனால், சரியான சம்பளத்துடன் தகுதியான ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதில்லை. பெரும்பாலான பள்ளி மாணவர்களுக்குச் சரியாக எழுதப் படிக்கத் தெரிவதில்லை என ஆய்வுகள் கூறுகின்றன. ஒரு பக்கம் ஆசிரியர் பணியில் சேரக் கடுமையான போட்டியும், இன்னொரு புறம் பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்குச் சரியாக படிக்கத் தெரியவில்லை என்பது நமது குழந்தைகளின் கல்வி முறையும், தரமும் கேள்விக்குறியாகவே உள்ளது.
பள்ளிக் கல்வியில் இப்படி என்றால் கல்லூரிக் கல்வியில் இதைவிட மோசம். பள்ளிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்கிறார்கள். ஆனால், கல்லூரியில் பல்கலைக்கழக மானியக்குழு யூஜிசி நெட் தேர்விலும், மாநில அரசு நடத்தும் ஸ்லெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களைத்தான் ஆசிரியர் பணிக்கு தேர்ந்தெடுக்க வேண்டும் என்று பல முறை வலியுறுத்தியும் தமிழக அரசு இதுவரை கண்டுகொள்ளவே இல்லை. ஆனால், வருடத்தில் இரண்டு முறை யூஜிசி நெட் தேர்வும், வருடத்தில் ஒரு முறை மாநில அரசு தகுதித்தேர்வினை நடத்துகிறது.
தமிழ்நாட்டில் 2011-ம் ஆண்டு நடத்திய ஸ்லெட் தேர்வில் 1395 பேரும், 2012-ம் ஆண்டு 5495 பேரும், 2016-ம் ஆண்டு 8550 பேர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் வேலை வாய்ப்பை வழங்கி இருந்தால் உயர்கல்வியில் காலியிடமே இருக்காது. ஆனால் வேறு அப்படி எதுவும் நடக்கவில்லை. இந்தநிலையில் இந்த ஆண்டும் ஸ்லெட் தேர்வு நடக்க இருக்கிறது. ஒரு லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் தேர்வு எழுத விண்ணப்பித்து இருக்கிறார்கள்.
இந்தத் தேர்வு எதற்காக நடத்தப்படுகிறது? இதன் நோக்கம் என்ன? தேர்ச்சி பெற்றவர்கள் எந்தளவுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது? என்ற கேள்விகளுக்கு எல்லாம் பதிலே இல்லை. ஒவ்வொரு முறையும் லட்சம் பேருக்கு மேல் தேர்வு எழுதுவதன் மூலம் பெரும் தொகை கிடைக்கிறது என்பதற்காக நடத்துகிறார்களா என்று தெரியவில்லை. எல்லாம் ஒரு கண் துடைப்புக்காகவே தகுதித்தேர்வினை நடத்துகிறார்கள்.
பல்கலைக்கழகங்களில் உள்ள காலியிடங்களுக்கு பல வித குளறுபடிகள் மூலமாகவும், கல்லூரியில் உள்ள காலியிடங்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்தின் மூலம் நிரப்புகிறார்கள். 2012-ம் ஆண்டு 2012ல் அறிவிக்கப்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை, அறிவியல் கல்லூரிகளில் 3120 உதவி பேராசிரியர் பணியிடங்களில் காலியாக உள்ளதாக அறிவித்தார்கள். ஆனால், இதுவரை நிரப்பப்படவில்லை. கடந்த ஒராண்டுக்கும் மேலாக ஐந்து பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் இல்லாமல் இருக்கிறார்கள். துணைவேந்தர் இல்லாததால் பலரும் படித்த படிப்புக்கான பட்டத்தையே பெற முடியாமல் இருக்கிறார்கள். இப்படி இருக்கும்போது கல்வித் தரத்தை பற்றி என்ன செல்வது என்று தெரியவில்லை" என்று முடித்தார் .


நெட்-ஸ்லெட் அசோசியேசன் அமைப்பின் செயலாளர் ஏ.ஆர். நாகராஜன்  "
தகுதித்தேர்வு நாகராஜன் நெட்-ஸ்லாட் அசோசியேசன்

ஒவ்வொரு ஆண்டும் எவ்வளவு பேர் நேர்முகத் தேர்வுக்கு என்ன தகுதியோடு வருகிறார்கள் என்ற தகவலில் அடிப்படையிலேயே ஸ்லெட் தேர்வு நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும். ஆனால், இங்கு தேர்ச்சி பெற்றவர்கள் ஏராளமானவர்கள் இருந்தும் திரும்பத் திரும்ப நடத்துகிறார்கள். இதில் முடிவினை அறிவிக்கும்போது பல்கலைக்கழக மானியக்குழு விதிமுறையினையும் கடைப்பிடிப்பதில்லை. ஆசிரியர்களை நியமிக்கும்போது தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றதையும் கண்டுகொள்வதில்லை. எந்த விதிமுறையும் கடைபிடிப்பதில்லை. இதனை நீதிமன்றத்தின் கவனத்துக்கு எடுத்துச்சென்றாலும், நீதிமன்றத்தின் அறிவுறுத்தலுக்கு வருவதற்கு முன்பாக தகுதியில்லாதவர்கள் நியமித்து விடுகிறார்கள். இந்த நிலையில் கல்வித் தகுதியினை எங்குப் போய் தேடுவது என்று தெரியவில்லை" என்கிறார்.
தகுதித்தேர்வில் இவ்வளவு குளறுபடிகள் இருப்பதைப் பார்க்கும்போது திகைப்பாய் இருக்கிறது. அரசு மாற்றத்தை ஏற்படுத்துமா அல்லது குளறுபடிகளின் ஒட்டுமொத்த உருவமாக மாறுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

http://www.vikatan.com/news/tamilnadu/84781-teacher-eligibility-test-is-just-another-eyewash-slams-teachers.html

CPS-வல்லுநர்குழு அறிக்கை தாக்கல் தாமதம் அரசு ஊழியர்- ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு.

No automatic alt text available.

பிளஸ் 2 பாடத்திட்டம் வருகிறது புது மாற்றம்

நீட்நுழைவுத் தேர்வை எதிர்கொள்ளும் வகையில், தமிழக
பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்படும்,'' என, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டத்தை, இரு மாதங்களில் மாற்ற முடியாது.
ஆனால், பாடத்திட்டத்தில் தேவையில்லாத பகுதிகளை அகற்றிவிட்டு, புதிய பகுதிகள் இணைக்க முடியும். அதற்காக, கல்வியாளர்கள், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் குழுவுடன், ஆலோசனை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வான, 'நீட்' தேர்வை சிரமமின்றி மாணவர்கள் எதிர்கொள்ளும் அளவுக்கு, பாடத்திட்டத்தில், சில மாற்றங்கள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

'பள்ளிக்கல்வியின் இந்த அறிவிப்பால், எதிர்காலத்தில், 'நீட்' தேர்வு போன்ற நுழைவுத் தேர்வுகளை, அரசு பள்ளி மாணவர்களும் எழுதி, உயர்கல்வி வாய்ப்புகளை பெற முடியும்' என, பெற்றோர் தெரிவித்தனர்.

போலி நியமன ஆணை: 4 ஆசிரியர்கள் சிக்கினர்

திருவண்ணாமலை மாவட்டத்தில், போலி நியமன ஆணை கொடுத்து
ஆசிரியர் பணியில் சேர்ந்த, நான்கு பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு, மகேஸ்வரி, 36, என்ற ஆசிரியை பணி இடமாற்றத்திற்கான நியமன ஆணையுடன் நேற்று முன்தினம் சென்றார். அவர், அளித்த நியமன ஆணையை சரிபார்த்த தலைமை ஆசிரியைக்கு சந்தேகம் எழுந்தது.


இதுகுறித்து முதன்மை கல்வி அலுவலகத்திடம் கேட்டார். அப்போது, மகேஸ்வரி கொடுத்த ஆணை போலியானது என்பது தெரியவந்தது. இது குறித்து, வந்தவாசி தெற்கு போலீசில் தலைமை ஆசிரியை புகார் அளித்தார். போலீசார் விசாரணையில், அவர் அளித்த, இடமாறுதலுக்கான ஆணையில் இருந்த, அனைத்து தகவல்களும் போலியானவை என்பது தெரிய வந்தது.இதையடுத்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்டத்தில் உள்ள, அனைத்து பள்ளிகளிலும் ஆசிரியர்களின் சான்றிதழை சரிபார்க்குமாறு, அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு நேற்று உத்தரவிட்டார்.


அதனடிப்படையில் விசாரணை நடத்தியதில், மேலும், மூன்று ஆசிரியர்கள் போலி ஆணை கொடுத்து பணியில் சேர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்கள், மூன்று பேரும் தற்போது தலைமறைவாகி விட்டனர்.இதுகுறித்து, திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயகுமார் கூறியதாவது:-மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆசிரியர்களின் பணி ஆணை உத்தரவு, கல்வி சான்றிதழ்களின் உண்மை தன்மை குறித்து ஆய்வு செய்ததில், தற்போது பணிபுரியும் மூன்று பேர், பணியில் சேர முயன்ற ஒருவர் என, நான்கு பேர் போலி சான்று வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மீது துறை ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.பணியில் சேர்ந்த நாள் முதல், தற்போது வரை அவர்கள் பெற்ற ஊதியத்தை திரும்ப பெறவும், குற்றப்பிரிவு போலீசார் மூலம் வழக்கு பதிவு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

பள்ளி கல்வித்துறை மவுனம் : 'TET' தேர்வு குழப்பம் நீடிப்பு

ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வில், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு விலக்கு வழங்குவது குறித்து, பள்ளிக்
கல்வித்துறை முடிவு எடுக்காததால், ஆசிரியர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
 ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வு, ஏப்., 29, 30ல் நடக்கிறது. தேர்வுக்கான விண்ணப்பங்கள், மார்ச், 23 வரை பெறப்பட்டு, பரிசீலனை நடக்கிறது.

இந்த தேர்வில், அரசு பள்ளி ஆசிரியர்களாக, 2010 ஆக., 23க்கு பின் நியமனம் பெற்றவர்கள், தேர்ச்சி பெற வேண்டும். இல்லாவிட்டால், அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவர்' என, பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதற்கு, அரசு பள்ளி ஆசிரியர்கள் தரப்பில் எதிர்ப்பு எழுந்தது. தமிழகத்தில், 2011 நவ., 15ல் தான், 'டெட்' தேர்வே அறிமுகமானது. அப்படியிருக்கையில், அதற்கு முன் பணி நியமனம் பெற்றவர்களுக்கு, 'டெட்' தேர்வு எப்படி கட்டாயமாகும் என, ஆசிரியர் சங்கத்தினர் கேள்வி எழுப்பியுள்ளனர். இதுதொடர்பாக, பள்ளிக் கல்வி செயலர் மற்றும் இயக்குனர் ஆகியோருக்கு, பல்வேறு சங்கத்தினர் மனு அளித்து உள்ளனர். அதற்கு, கல்வித் துறை அதிகாரிகள், விளக்கமளிக்கவில்லை.

பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொது செயலர் பேட்ரிக் ரைமண்ட் கூறியதாவது: சிறுபான்மை அந்தஸ்து பெற்ற, பள்ளி ஆசிரியர்களுக்கு, 'டெட்' தேர்ச்சி தேவையில்லை என, உச்ச நீதிமன்றம் விலக்கு அளித்துள்ளது. அரசாணைக்கு முந்தைய தேதியில், பணி நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு, 'டெட்' தேர்ச்சியை கட்டாயம் ஆக்க முடியாது. அவர்களுக்கு, ஆண்டுக்கு ஒரு முறை புத்தாக்க பயிற்சி வகுப்பு நடத்தி கொள்ளலாம் என்றே கூறப்பட்டுள்ளது.எனவே, 2010 ஆகஸ்ட்டுக்கு பின், 2011 நவம்பருக்கு முன் நியமிக்கப்பட்ட, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சி அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

750 PP NEWS - தனிஊதியம் 750ஐ பதவி உயர்வின் போது எப்படிநிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்று நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் ஒன்றிய உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் தமிழக தொடக்கக் கல்வி இயக்குனரை கோரியதற்கு திருச்சி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்வழியாக தொடக்க கல்வி இயக்குனர் இடமிருந்து கிடைக்கப்பெற்ற ஆணை நகல். புதியது..



JIO வின் அடுத்த சலுகை

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், புதிய சலுகை ஒன்றை அறிவித்துள்ளது.ஜியோ சிம் கார்டு வைத்துள்ளவர்கள், பிரைம் திட்டத்தில் சேர்ந்து வருகின்றனர். 
இவர்களுக்கான இலவச சேவை சலுகை, வரும், 31ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த சூழ்நிலையில் புதிய சலுகையை அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன்படி, ரூ.149 பிரீபெய்டு திட்டத்தின் கீழ் ரீசார்ஜ் செய்பவர்களுக்கு,2ஜிபி கூடுதல் டேட்டா வழங்கப்படும். ரூ.303க்கு ரீசார்ஜ் செய்யபவர்களுக்கு, 5 ஜிபி கூடுதல் டேட்டாவும், ரூ.499க்கு மேல் ரீசார்ஜ் செய்பவர்களுக்கு, 10 ஜிபி கூடுதல் டேட்டா அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

16 மதிப்பெண்களுக்கு எதிர்பாராத வினாக்கள் :கணிதத்தில் 'சென்டம்' குறையும்

பிளஸ் 2 கணிதத்தேர்வில், மொத்தம் 16 மதிப்பெண்களுக்கு, எதிர்பாராத வினாக்கள் கேட்கப்பட்டதால், 'சென்டம்' எடுப்போர் எண்ணிக்கை குறையும் வாய்ப்புள்ளது என, மாணவர்கள் தெரிவித்தனர்.
நேற்று நடந்த தேர்வு குறித்து அவர்களின் கருத்துஎஸ்.கற்குவேல் கார்த்திகேயன், மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, முத்துத்தேவன்பட்டி, தேனி: பகுதி இரண்டில் ஆறு மதிப்பெண் வினாவில் கட்டாய கேள்விகள் 55 - ஏ, 55-பி, இரண்டுமே எதிர்பாராததாக இருந்தது. இந்த வினாக்கள் இதுவரை கேட்கப்படாதவை. 53வது வினாவில் 1வது பிரிவு வினா 10.5 பயிற்சி கேட்கப்பட்டுள்ளது. இது பெரும்பாலும் வராது என படிக்காமல் விடப்படும். 10 மதிப்பெண் கட்டாய வினாவில் இரு வினாக்களும் எதிர்பாராதவை. எல்லா பயிற்சிகளும் முழுமையாக படித்தவர்கள் மட்டுமே இதற்கு விடையளிக்கலாம். மற்ற வினாக்கள் எளிமை என்பதால் சராசரி மாணவரும் நல்ல மதிப்பெண் பெறுவர். எதிர்பாராத வினாக்களால் 'சென்டம்'எடுப்போர் எண்ணிக்கை குறையும்.எளிமை - ஜெ.பிரித்திகா சென், என்.எஸ்.கே.பி.,மேல்நிலைப்பள்ளி, கூடலுார்: கணிதம் வினாத்தாள் மிகவும் எளிமையாக இருந்தது. கட்டாய வினாவில் 6 மதிப்பெண் கேள்வி, சற்று சிரமமாக இருந்தது. அதே வேளையில் 10 மதிப்பெண் வினா மிகவும் எளிமையாக இருந்தது. அதில் கடந்த ஆண்டு வந்த அதிகம் கேள்விகள் இருந்தன. புத்தகத்தில் இருந்த வினாக்கள் மட்டுமே கேட்கப்பட்டன. அதற்காக பள்ளியில் அளிக்கப்பட்ட பயிற்சி பயன்தந்தது.

ஒரு மதிப்பெண் வினா அனைத்தும் மிக எளிமை.சிறிது குழப்பம் - டி.முத்துக்குமரநாயகி, ஆசிரியை, மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, முத்துத்தேவன்பட்டி: ஒரு மதிப்பெண்வினாக்களில் 9 வினாக்கள் பெற்றோர் ஆசிரியர் கழகம் வழங்கிய புத்தகத்தில் இருந்தும், 31வினாக்கள் 'புக்பேக்' பகுதியில் இருந்து கேட்கப்பட்டுள்ளன. 6 மதிப்பெண்ணுக்கான 45வது வினாவில் கலப்பு எண்கள் வினா 'கிரியேட்டிவ்' ஆக கேட்டுள்ளனர். இதனால் மாணவர்களுக்கு சிறிது குழப்பம் இருந்திருக்கும். பத்து மதிப்பெண்ணில் 69வதுதாக கேட்கப்பட்ட நிகழ் தகவு பரவல் வினாவை மாணவர்கள் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். பத்து மதிப்பெண்ணுக்கான கட்டாய வினாவில் 'ஏ 'வினா வகை நுண்கணிதம் மற்றும் அவற்றின் பயன்பாடு பற்றியும், பி.வினா டிபிரன்சியல் ஈக்குவேஷன் கேட்கப்பட்டுள்ளது.

இந்த பயிற்சி கணக்கில் 8.5, 8.6 பயிற்சியை மாணவர்கள் நன்கு படிப்பார்கள்.ஆனால் 8.2வது பயிற்சியில் வினா கேட்கப்பட்டுள்ளதால், பலர் இந்த வினாவை சரியாக எழுதியிருக்க மாட்டார்கள். நன்கு படிக்கும் மாணவர்கள் மட்டுமே எழுதியிருப்பார்கள். கணித தேர்வில் மொத்தம் 16 மதிப்பெண்கள் எதிர்பாராத வினாக்களாக வந்துள்ளது.இதனால் 200க்கு 200 மதிப்பெண் எடுப்பவர் எண்ணிக்கைகுறையும். மற்றபடி சராசரியாக படிக்கும் மாணவரும் நல்ல மதிப்பெண் பெறுவர்.

மதிய உணவு திட்டத்தில் 4.4 லட்சம் போலி மாணவர்கள்: அம்பலப்படுத்திய ஆதார் !!

மதிய உணவுத் திட்டத்திற்கு ஆதார் எண் கட்டாயம் என அறிவிக்கப்பட்டதால் 3 மாநிலங்களில் சுமார் 4.4 லட்சம் போலியான மாணவர்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நாடுமுழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இலவசமாக மதிய உணவுஅளிக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் சுமார் 10 கோடி மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். மேலும், மத்திய அரசு ஆண்டு தோறும் பல கோடி ரூபாய்களை இத்திட்டத்திற்காக ஒதுக்கீடு செய்கிறது.மதிய உணவு திட்டத்தில் பயன்பெறும் மாணவர்கள் தங்களதுஆதார் எண்ணை பள்ளியில் சமர்பிக்க வேண்டும் என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தது. மத்திய அரசின் இந்த உத்தரவுக்குபல்வேறு அரசியல் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.இந்நிலையில், மத்திய அரசின் உத்தரவை அடுத்து ஜார்கண்ட், மணிப்பூர், ஆந்திரா ஆகிய மூன்று மாநிலங்களில் மட்டும் சுமார் 4.4 லட்சம் மாணவர்கள் மதிய உணவு திட்டத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். அதாவது, மேற்கண்ட மூன்று மாநிலங்களிலும் இதற்கு முன்னர், மதிய உணவு உட்கொள்ளும் மாணவர்களுடன், மதிய உணவு உட்கொள்ளாத மாணவர்களையும் சேர்த்து போலியான பெயர்ப் பட்டியல் தயார் செய்து ஆண்டு தோறும் அரசுக்கு அதிகாரிகள் அனுப்பி வந்துள்ளனர்.

ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டு விட்டதால் போலியான மாணவர்களை சேர்க்க முடியாது என்பதால், தற்போது மேற்கண்ட 3 மாநிலங்களிலும் சேர்த்து சுமார் 4.4 லட்சம் மாணவர்களின் பெயர்களை பட்டியலில் இருந்து நீக்கியுள்ளனர்.3 மாநிலங்களில் மட்டுமே 4 லட்சத்திற்கும் மேற்பட்ட மதிய உணவு உட்கொள்ளாத போலி மாணவர்கள் இருந்துள்ள நிலையில், நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் உள்ள போலியான மாணவர்கள் கண்டறியப்பட்டால், அரசுக்கு பெரும் தொகை மிச்சமாகும் என்பதில் ஐயமில்லை.

10-ம் வகுப்பு தேர்வு எழுத கூடுதல் நேரம் கோரியமாணவியை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்ததில் உள்நோக்கம் இல்லை: தருமபுரி மாவட்ட ஆட்சியர் விளக்கம்.

தருமபுரியில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவி ஒருவர் மாவட்ட ஆட்சியர் மீது புகார் அளித் துள்ள நிலையில், ‘சம்பந்தப்பட்ட மாணவியை மருத்துவ பரிசோத னைக்கு அழைத்ததில் உள்நோக்கம் எதுவும் இல்லை’ என மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார்.
தருமபுரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி. இவரது மகள், தருமபுரியில் உள்ள அரசுப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது பொதுத் தேர்வை அவர் எழுதி வருகிறார். இந்நிலையில், ‘தேர்வை சரிவர எழுத முடியாதபடி மாவட்ட ஆட்சியர் தனக்கு சிரமம் தருகிறார். இதற்குத் தீர்வு ஏற்படுத்த வேண்டும்’ என இந்த மாணவி தருமபுரி ‘சைல்டு லைன்’ அமைப்பிடம் சில நாட்களுக்கு முன்பு புகார் அளித்திருந்தார்.இதுகுறித்து மாணவி கூறிய தாவது: பிறவியிலேயே எனக்கு வலது கை நரம்பில் பாதிப்பு இருந்ததால் இடது கையில் எழுத பழகிக் கொண்டேன். இருப்பினும் இடது கையால் மற்றவர்களைப்போல வேகமாக எழுத இயலாத தால், பொதுத் தேர்வின் போது ஒரு மணி நேரம் கூடுதல் நேர அவகாசம் வேண்டுமென முறைப்படி மருத்துவ சான்றுகளுடன் விண்ணப்பித்தேன்.இதையடுத்து அரசு தேர்வுகளுக்கான வேலூர் மண்டல இணை இயக்குநர் மூலம் எனக்கு தேர்வு எழுத 1 மணி நேரம் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டது. கடந்த 23-ம் தேதி இரவு 8 மணிக்கு எனக்கு மருத்துவக் கல்லூரி மூலம் ஒரு சம்மன் அனுப்பப்பட்டது. மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரிலான மருத்துவ பரிசோதனைக்கு 24-ம் தேதி மருத்துவக் குழு முன்பு ஆஜராக வேண்டுமென அந்த சம்மனில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தேர்வு நேரம் என்பதால் என்னால் ஆஜராக முடியவில்லை. மேலும், இதுபோன்ற நடவடிக்கைகளால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள் ளேன். ஆட்சியரின் உத்தரவு எனக் கூறி சிலர் தரும் சிரமங்களால் என்னால் நிம்மதியாக தேர்வு எழுத முடியவில்லை’ என கூறியுள்ளார்.இதுகுறித்து மாணவியின் தாயார் மகேஸ்வரி கூறும்போது, ‘எனது மகளுக்கு தேர்வு சமயத்தில் தேவையற்ற நெருக்கடி கொடுக்கப்படுகிறது. இதனால், தேர்வில் அவரால் போதிய கவனம் செலுத்த முடியவில்லை. என் மகள் என்பதற்காக இவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறதா என்றும் தெரியவில்லை’ என்றார்.இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் விவேகானந்தனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: தேர்வை கண்காணிக்கும் பறக்கும் படையின ருக்கு அந்த மாணவியின் எழுதும் திறனில்சில சந்தேகங்கள் ஏற்பட்டுள் ளன. அவரது கை பாதிப்பின் அளவு குறித்து சந்தேகம் நிலவுவதாக பறக்கும் படை குழுவினர் கோட் டாட்சியர் கவனத்துக்கு கொண்டு வந்தனர். அவர் மூலமாக இந்த தகவல் எனக்கு தெரியவந்தது.

தருமபுரி மாவட்டத்தில் விதிமுறை களுக்கு உட்பட்டு தேர்வை நடத்து வதோடு, முறைகேடுகள் எதுவும் பதிவாகிவிடாதபடி பொதுத் தேர்வை நடத்த வேண்டியது மாவட்ட நிர்வாகத்தின் கடமை.அந்த வகையில் இந்த மாணவி விவகாரம் தொடர்பாக அரசு தேர்வு கள் துறை இயக்குநருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. அதேபோல, சம்பந்தப்பட்ட மாணவியின் மாற்றுத் திறன் சதவீதம் குறித்து ஆய்வு செய்து மருத்துவ அறிக்கை அளிக் கும்படி தருமபுரி மருத்துவக் கல்லூரி முதல்வருக்கும் உத்தரவிடப்பட் டது. மருத்துவக் கல்லூரி நிர்வாகம் தேர்வு நேரத்திலேயே சோதனைக்கு ஆஜராகும்படி கூறி சிரமப்படுத்தி விட்டதா என தெரியவில்லை.அதேநேரம், அந்த மாணவி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவல ரின்மகள் என்பது இறுதியில்தான் எனக்கு தெரியும்.

தேர்வுகள் தொடர் பான வழக்கமான நடவடிக்கை கள்தான் இந்த விவகாரத்தில் மேற் கொள்ளப்பட்டதே தவிர, இதற்கு வேறு உள்நோக்கம் எதுவும் இல்லை என்று அவர் கூறினார்.கடந்த 23-ம் தேதி இரவு எனக்கு மருத்துவக் கல்லூரி மூலம் ஒரு சம்மன் அனுப்பப்பட்டது. மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரிலான மருத்துவ பரிசோதனைக்கு 24-ம் தேதி மருத்துவக் குழு முன்பு ஆஜராக வேண்டுமென அந்த சம்மனில் குறிப்பிடப்பட்டிருந்தது.

நீட் தேர்வுக்கு படிக்க தமிழ் உள்ளிட்ட 8 மாநிலமொழிகளில் பாடப் புத்தகங்கள் இல்லாத நிலை: தாய்மொழியில் தேர்வு எழுதும் மாணவர்கள் பாதிப்பு.

நீட் தேர்வுக்கு படிக்க ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் மட்டுமே பாடப் புத்தகங்கள் உள்ளன. தமிழ் உள்ளிட்ட 8 மாநில மொழி களில் பாடப் புத்தகங்கள் இல்லாத தால், தாய்மொழியில் தேர்வு எழுத உள்ள மாணவர்கள் பாதிக்கப் பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரி கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங் களில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் உள்ளன. இந்த மருத்துவப் படிப்பு களுக்கு 2017-18-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET - நீட்) வரும் மே மாதம் 7-ம் தேதிநடைபெறுகிறது. மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நடத்தும் நீட் தேர்வுக்கு நாடு முழுவதும் 11 லட்சத்து 35 ஆயிரத்து 104 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத் தில் மட்டும் 88 ஆயிரத்து 478 மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர். தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சி, நாமக்கல், திருநெல்வேலி, வேலூர் உட்பட நாடு முழுவதும் 103 நகரங்களில் 2,200 மையங்களில் நீட் தேர்வு நடைபெறுகிறது.நீட் தேர்வு கடந்த ஆண்டு ஆங்கி லத்தில் மட்டும் நடத்தப்பட்டது. இந்த ஆண்டு தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு கன்னடம், குஜராத்தி, மராத்தி உள்ளிட்ட 10 மொழிகளில் நீட் தேர்வு நடைபெற உள்ளன. ஆனால் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டும் நீட் தேர்வுக்கு படிப்பதற்கான பாடப் புத்தகங்கள் இருக்கின்றன. தமிழ் உள்ளிட்ட 8 மாநில மொழிகளில் பாடப் புத்தகங்கள் இல்லை. இதனால் மாநில மொழிகளான தங்களுடைய தாய்மொழியில் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வேண்டாம் நீட் தேர்வு

இது தொடர்பாக அரசு மருத்து வர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தின் (எஸ்டிபிஜிஏ - SDPGA) மாநில அமைப்புச் செயலாளர் டாக்டர் ஏ.ராமலிங்கம் கூறியதாவது:நாடு முழுவதும் பல்வேறு பாடத்திட்டங்கள் உள்ளன. நீட் தேர்வு சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படுகிறது. நீட் தேர்வுக்கு படிப்பதற்கான சிபிஎஸ்இ பாடப் புத்தகங்கள் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் மட்டுமே உள்ளன. அப்படி இருக்கும் போது, தமிழ் உள்ளிட்ட மாநில மொழியில் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள மாணவர்களால் எப்படி தேர்வுக்கு தயாராக முடியும். படிப்பதற்கு பாடப் புத்தகங்களே இல்லாமல், தமிழில் தேர்வு எழுதலாம் என்று சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது. நீட் தேர்வால் மாநில மொழிகளில் தேர்வு எழுத உள்ள கிராமப்புற, ஏழை எளிய, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி மாணவர்கள் பாதிக்கப் பட்டுள்ளனர். நாடு முழுவதும் ஒரே மாதிரியான பாடத்திட்டத்தை கொண்டு வந்த பிறகு நீட் தேர்வை நடத்த வேண்டும். நீட் தேர்விலிருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றார்.

தமிழகத்தில் மே 14-ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல்?

உள்ளாட்சி தேர்தலுக்காக வார்டு வாரியாக வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி தமிழகம் முழுவதும் நடந்து வருவதாக உயர் நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கிராம பஞ்சாயத்து தலை வர் பதவிக்கு முனியப்பா என்பவர் தாக்கல் செய்த வேட்புமனு நிரா கரிக்கப்பட்டது. இதுதொடர்பாக உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப் பட்டது. இந்த மனு மீதான விசாரணை நேற்று காலை நீதிபதி என்.கிருபாகரன் முன்பு நடந்தது.

அப்போது நீதிபதி, ‘‘உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக நான் ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவு எந்த அளவில் அமல்படுத்தப்பட்டுள்ளது என்றும், உள்ளாட்சி தேர்தலை நடத்தும் எண்ணம் மாநில தேர்தல் ஆணையத்துக்கு இருக்கிறதா, இல்லையா? என்றும் கேட்டு தெரிவிக்க வேண்டும்’’ என்று மாநில தேர்தல் ஆணைய வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு விசாரணையை பிற்பகலுக்கு தள்ளிவைத்தார்.

பிற்பகல் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது மாநில தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.நெடுஞ்செழியன், ‘‘உள்ளாட்சி தேர்தலை நடத்தத் தேவையான பணிகளை மாநில தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. தமிழகம் முழுவதும் வார்டு வாரியாக வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி தற்போது மும்முரமாக நடக்கிறது’’ என்று தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதி, ‘‘தமிழகத்தில் மே 14-ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்குமாறு உயர் நீதிமன்றம் ஏற்கெனவே அவகாசம் வழங்கியுள்ளது. எனவே இந்த வழக்கு விசாரணையை வரும் ஏப்ரல் 3-ம் தேதிக்கு தள்ளிவைக்கிறேன்.

இந்த வழக்கில் என்ன முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை அன்றைய தினம் தெரிவிக்க வேண்டும்’’என்று உத்தரவிட்டார்.

விடுபட்ட 12 லட்சம் குழந்தைகளுக்கு 4 நாளில் ரூபெல்லா தடுப்பூசி.

தமிழகத்தில் விடுபட்ட 12 லட்சம் குழந்தைகள் மற்றும் சிறுவர் களுக்கு 4 நாட்களில் தட்டம்மை-ரூபெல்லா தடுப்பூசி போடப்படும் என்று பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துகள் துறை இயக்குநர் (டிபிஎச்) டாக்டர் க.குழந்தைசாமி தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:
தமிழகத்தில் தட்டம்மை-ரூபெல்லா தடுப்பூசி முகாம் முடிவடைந்தது. விடுபட்டவர் களுக்கு வரும் 31-ம் தேதி வரை தடுப்பூசி போடப்படும். இதுவரை 1 கோடியே 64 லட்சம் குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இன்னும் 4 நாட்களில் விடுபட்ட 12 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுவிடும். அதன்பின் தேசிய தடுப்பூசி திட்டத்தில் உள்ள தட்டம்மை தடுப்பூசி நீக்கப்பட்டு, தட்டம்மை-ரூபெல்லா தடுப்பூசி சேர்க்கப்படும். 9 மாதம் முதல் 12 மாதம் மற்றும் 16 மாதம் முதல் 24 மாதம் என இருகட்டங்களாக குழந்தைகளுக்கு தட்டம்மை-ரூபெல்லா தடுப்பூசி போடப்படும்.

பத்திரப்பதிவுக்கு விதிக்கப்பட்ட தடை தளர்வு: நீதிமன்றம்.

தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, பத்திரப்பதிவுக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் தளர்த்தியுள்ளது.

தடை உத்தரவுக்கு முன் பதிவு செய்யப்பட்ட வீட்டு மனைகளை மறுபதிவு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதாவது, 2016ம் ஆண்டு அக்டோபர் 23ம் தேதிக்கு முன் வாங்கியிருந்த நிலத்தை பத்திரப்பதிவு செய்யலாம் என்று தடை உத்தரவை தளர்த்தியுள்ளது.

தமிழக அரசு தரப்பு வழக்குரைஞர் வைத்த கோரிக்கை ஏற்று சென்னை உயர் நீதிமன்றம் இன்று புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

மேலும், பதிவு செய்யப்படும் நிலத்தில், சாலைக்கு 22 அடி இடம் விட வேண்டும் என்ற விதியை மீறக் கூடாது என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

சாலை, கழிவுநீர் குழாய் பதிக்க போதிய இடம் வசதி இல்லாத நிலங்களை முறைப்படுத்த போதிய கால அவகாசம் அளித்தும், அங்கீகாரமில்லாத வீட்டு மனைகள் தொடர்பாக அரசின் கொள்கை முடிவை ஏப்ரல் 7ம் தேதிக்குள் தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

வழக்கின் பின்னணி:
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர் யானை ராஜேந்திரன் தொடர்ந்த பொது நல மனு விவரம்: விவசாய விளை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றுவதற்கு முறைப்படி அனுமதி கிடையாது. ஆனால் சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உரிய அனுமதியின்றி  விளை நிலங்கள் அனைத்தும் அங்கீகாரமில்லாத வீட்டு மனைகளாக மாற்றியுள்ளனர்.

இதனால் விளை நிலப்பரப்பு வெகுவாக குறைந்து விவசாயமும் பாதித்துள்ளது. சென்னையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பிற்கு இதுவும் முக்கியமான காரணம். சுற்றுச்சூழலும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே முறையற்ற முறையில் விளை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றுவதற்கு தடை விதிக்க வேண்டும். அதுபோல அங்கீகாரமில்லாத வீட்டு மனைகளை பதிவு செய்யக்கூடாது என பத்திரப்பதிவுத் துறைக்கும் உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி அடங்கிய முதல் அமர்வு முன்பு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி, இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், -விளை நிலங்களை வீட்டு மனைகளாக -லே-அவுட்- போட்டு அங்கீகாரமில்லாமல் விற்பனை செய்யும்போது அந்த நிலத்தையோ அல்லது அதில் உள்ள கட்டிடத்தையோ பத்திரப்பதிவுத்துறையினர் எந்த வித காரணம் கொண்டும் பதிவு செய்யக்கூடாது- என்று உத்தரவிட்டது.

அடேயப்பா இவ்வளவு சலுகையா அரசு ஊழியர் சம்பளக்கணக்குக்கு மாற்றினால் மிஸ் பண்ணாம படிங்க ...

SALARY ACCOUNTS UNDER STATE GOVERNMENT SALARY PACKAGE (SGSP)

Salary Accounts under SGSP a gamut of privileges and other value added services to the employees of State Government, Union Territories and their Boards/Corporations. 
Salary Accounts under this package are available in four variants, namely Silver, Gold, Diamond and Platinum depending on the designation of the personnel.

Benefits to the Employer
Convenient way to manage salaries across a large number of centers through Core Power and the Bank's award winning Corporate Internet Banking
Reduces employer's paperwork and salary administration cost.
No charges for uploading of salaries
Employees receive instant credit of salaries
Benefit to the Employee

Convenience of Anywhere Banking at
The largest network of more than 16,000 Core Banking Branches
Extensive alternative channels.
53,000 plus ATMs of State Bank Group
Free Internet Banking, Mobile Banking
Complete gamut of Banking Services including:-
Unique Lifetime Account Number
Zero Balance Account facility with no penal charges for non-maintenance of minimum balance

Auto sweep (in & out) facility (on request)-Surplus amount in Savings bank account beyond threshold balance is transferred automatically into Term Deposits (multi option deposits) in multiple of Rs.1000/- and vice versa

Facility for Auto Sweep Switch On/Off through Internet Banking
Free Personal Accident Insurance (Death) Cover to Primary Salary Package Account*
Free personalized Multi City Cheques
RTGS/NEFT
Free Core Power: Anywhere banking facility with the widest network of more than 16,000 branches. Free updating of pass-books at any branch
Easy overdraft up to 2 months' salary repayable within 6 months*
SMS Alerts

Free Debit Cards : Domestic cards for Silver Accounts, Gold Debit cards for Gold and Diamond Accounts and Platinum Debit Card for Platinum Accounts.
Maximum daily withdrawal of Rs. 40,000 on Domestic Cards, Rs. 50,000 on Gold Cards and Rs. 1,00,000 on Platinum Cards.
Various Personal loans like Home loan/ Auto loan/ Xpress Credit loan, etc. at attractive terms
Demat facility, 3-in 1 Trading Account available
Systematic Investment Plan in Mutual funds
Range of other value added benefits

SBI SGSP (State government salary package) A/C Benefit's

~ Minimum balance தேவையில்லை.*

~ கணக்கில் உள்ள தொகை automatic-ஆக fixed deposit-கு சென்றுவிடும்.

[குறைந்தபட்ச தொகையையும் (Ex:ரூ.1000-க்கு மேல் உள்ள பணம் முழுவதும் MOD A/C-ல் fixed deposit செய்யவும்) &

மாதந்தோறும் fixed deposit-க்கு பணம் எடுக்க வேண்டிய தேதியினையும் நாம் தான் தெரிவிக்க வேண்டும்]

*கணக்கில் உள்ள பணத்திற்கு Fixed deposit வட்டி கிடைக்கும்.*

ATM-ல் தேவைப்படும் பொழுது எப்பொழுதும் போல் பணம் எடுக்கலாம் fixed doposit-ல் (MOD) உள்ளதே படம் வருமா வராதா என்ற பயம் வேண்டாம்.

எத்தனை நாட்கள் MOD-ல் உள்ளதோ அத்தனை நாட்களுக்கான வட்டி கிடைக்கும்.

*~ வேறு கிளையில் இலவசமாக பாஸ் புக் பிரிண்ட் செய்யலாம்.*

*~ வங்கியில் பெற்ற கடனுக்கு வட்டி விகிதத்தில் சலுகை.*

*~ இலவச ATM card.*

*~ கட்டணமில்லா காசோலை புத்தகம் (multi city cheques)*

*~ இறப்பின் பொழுது காப்பீட்டுத் தொகை.*
(*நிபந்தனைகளுக்கு உட்பட்டது)

~ 2 மாத ஊதியத்தினை முன்பணமாக பெறுதல் நமக்கு பொருந்தாது.

 Source: https://www.sbi.co.in/portal/web/personal-banking/state-government-salary-package

*[Salary certificate (HM கையெழுத்து போதுமானது) + ID card இருந்தால் போதும், நமது SBI சேமிப்புக் கணக்கினை SGSP A/C ஆக வங்கிக் கிளைக்கு நேரடியாக சென்று மாற்றிடலாம்]*

இதே போல் மற்ற வங்கிகளிலும் salary package சலுகைகள் உள்ளன. இணையத்தில் தெரிந்துகொள்ளலாம்.

விடுப்பு எடுக்காத மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்க பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு

பள்ளிக்கல்வி - 2016-17ஆம் கல்வியாண்டில் விடுப்பு எடுக்காத மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்க விவரம் கோரி இயக்குநர் உத்தரவு

மார்ச் 31- வரை நீட் தேர்வு மையங்களை மாற்றிக் கொள்ளலாம்: சிபிஎஸ்இ அறிவிப்பு

நீட் தேர்வு எழுதும் மையத்தை மாற்ற நேற்று கடைசி நாளான அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் இம்மாதம் மார்ச் 31- வரை தேர்வு மையங்களை மாற்றிக் கொள்ளலாம் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

மருத்துவ பட்டப்படிப்புக்கான தேசிய தகுதி நுழைவுத் தேர்வான "நீட்' தேர்வை மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான (சிபிஎஸ்இ) நாடுமுழுவதும் ஆண்டு தோறும் நடத்துகிறது.

 இந்த நுழைவுத் தேர்வில் இருந்து சில மாநிலங்களுக்கு கடந்த ஆண்டு விலக்கு அளித்திருந்த நிலையில், நடப்பாண்டில் இது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

கடந்த வருடம் 8,02,594 மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், இந்த வருடம் 11,35, 104 பேர் விண்ணப்பித்துள்ளனர். மார்ச் 24 முதல் மார்ச் 27( நாளை) வரை http://cbseneet.nic.in என்ற இணையதளத்தில் தேர்வு மையத்தை தெரிவு செய்து கொள்ளலாம் என தெரிவித்திருந்த நிலையில் தேர்வு மையத்தை மார்ச் 31-ம் தேதிவரை மாற்றிக்கொள்ளலாம் என சிபிஎஸ்சி அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் ஏற்கனவே தேர்வு மையங்களாக சென்னை, கோவை, மதுரை, சேலம் மற்றும் திருச்சி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது கூடுதலாக, நாமக்கல், நெல்லை மற்றும் வேலூர் சேர்க்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மருத்துவ நுழைவுத்தேர்வான நீட் தேர்வு மே 7ஆம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. 

பிளஸ் 2 கணிதம், விலங்கியல் ‘கட் ஆப்’ மதிப்பெண் குறையும்: முதுகலை ஆசிரியர்கள் கருத்து

''பிளஸ் 2 கணிதம் மற்றும் விலங்கி யல் தேர்வு வினாத்தாள்கள் நேற்று ஓரளவு கடினமாக இருந்தன. மாண வர்கள் பெறும் கட் ஆப் மதிப்பெண் குறையும்” என, ஆசிரியர்கள் கருத்து தெரிவித்தனர்.

கணிதத் தேர்வு குறித்து, தூத்துக்குடி எம்.தங்கம்மாள்புரம் அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை கணித ஆசிரியர் ஞா.சேகர் கூறியதாவது:
பிளஸ் 2 கணிதத் தேர்வில் ஒரு மதிப்பெண் கேள்விகள் 40, ஆறு மதிப்பெண் கேள்விகள் 10, பத்து மதிப்பெண் கேள்விகள்10 கேட்கப்படும். நேற்று நடந்த தேர்வில் ஒரு மதிப்பெண் கேள்வி கள் மிகவும் எளிதாக இருந்தன. புத்தகத்தின் பின் பகுதியிலிருந்து 30 கேள்விகளும், பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் வெளியிடப் பட்ட வினாத் தொகுப்பிலிருந்து 10 கேள்விகளும் கேட்கப்பட்டி ருந்தன.வழக்கமாக கேட்கப்படும் கேள்விகள் என்பதால், இவற்றுக்கு மாணவர்கள் எளிதாக பதிலளித்திருப்பார்கள்.இதேபோல் 10 மதிப்பெண் கேள்விகளும் மிகவும் எளி தாகவே இருந்தன. 14 கேள்வி கள் கொடுக்கப்பட்டு, 9 கேள்வி களுக்கு பதில் எழுதுமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது. இதில் 69-வது கேள்வி மட்டும் சற்று கடினமாக இருந்தது. யோசித்து எழுதினால் தான் இதற்கு சரியான விடையை கண்டுபிடிக்க முடியும்.கடினமான வினாக்கள்கட்டாயம் பதில் எழுத வேண்டிய கடைசி வினா எளிதாக இருந்ததால், சாதாரண மாணவர்களும் சரியாக எழுதியிருப்பார்கள். எனவே, 10 மதிப்பெண்களுக்கான கேள்வி யில் மாணவர்கள் அதிக எண் ணிக்கையில் முழு மதிப்பெண் பெற வாய்ப்புள்ளது.6 மதிப்பெண் வினாக்களில் சில சற்று கடினமாக இருந்தன. வழக் கமாக கேட்கப்படாத, முக்கியத் துவம் இல்லை என ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த பகுதியிலிருந் தும் வினாக்கள் வந்திருந்தன. சுமாராகப் படிக்கும் மாணவர்கள் சற்று திணறியிருப்பார்கள்.எனவே, முழு மதிப்பெண்கள் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது. அதேநேரம், பலரும் 120 மதிப்பெண்களை எளிதில் எடுக்க முடியும்” என்றார் அவர்.

விலங்கியல்

விலங்கியல் தேர்வு குறித்து, கன்னியாகுமரி மாவட்டம் மேல்பாலை புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர் பி.எஸ்.ஜோசப் சேவியர் கூறியதாவது:விலங்கியல் தேர்வில் 10 மற்றும் 5 மதிப்பெண்களுக்கான வினாக்கள் எளிமையாகவே இருந்தன. 3 மதிப்பெண் வினாக்கள் சராசரி மாணவர்களுக்கு சற்று சிரமம் அளிக்கும் வகையில் இருந்தன. 1 மதிப்பெண்ணுக்கான 30 வினாக்களில் வினா தொகுப்பிலிருந்து 17 கேள்விகள் மட்டுமே கேட்கப்பட்டிருந்தன. தெளிவாக அனைத்து பாடங்களையும் படித்திருந்தால் மட்டுமே விடை அளித்திருக்க முடியும். 10 மதிப்பெண்களுக்கான வினாக்கள் 6-வது பாடத்திலிருந்துகேட்பதற்கு பதில், 5-வது பாடத்திலிருந்து கேட்கப்பட்டிருந்தன.

தற்போதைய சூழலை மையமாகக் கொண்டு, கழிவு மேலாண்மை, சுற்றுச்சூழல் ஏற்படுத்தும் தாக்கம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து 10 மதிப்பெண் வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன. இதனால் விலங்கியலில் தேர்ச்சி விகிதம் குறையாது. அதே நேரம் கட் ஆப் மதிப்பெண் குறைய வாய்ப்புள்ளது என்றார்.